PM-KISAN திட்டத்தின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு : இந்திய விவசாயிகள் உண்மையிலேயே பயனடைகிறார்களா? -ராதேஷ்யாம் ஜாதவ்

 விநியோகங்கள் PM-KISAN போர்ட்டலில் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடன் இப்போது பணம் செலுத்துதல் கண்டிப்பாக இணைக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தகுதியற்ற பெறுநர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுப்பதற்கும் இது பொறுப்பாகும்.


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, PM-KISAN திட்டத்தின் கீழ் 19 தவணைகளில் ₹3.68 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. அவை, இந்த திட்டத்திற்கான நன்மைகள் உண்மையிலேயே, தேவைப்படும் விவசாயிகளைச் சென்றடைகிறதா? இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


               பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) பிப்ரவரி 2019-ல் தொடங்கப்பட்டது. இது சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைக் கொண்ட தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்குகிறது. ஆதார்-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT) மூலம் பணமானது மூன்று சம தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், சேர்க்கை விகிதத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருந்தது. இருப்பினும், சமீபத்திய போக்குகள் மிகவும் சிக்கலான மற்றும் சீரற்ற வடிவத்தைக் காட்டுகின்றன.


எழுச்சி மற்றும் சரிவு (The Surge and Decline)


இந்தத் திட்டம் வலுவாகத் தொடங்கியது. இரண்டாவது தவணையில் (ஏப்ரல்–ஜூலை 2019) பயனாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியது. இது 90% அதிகரித்து, 6 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை எட்டியது. அடுத்த இரண்டு தவணைகளில், சேர்க்கை விகிதம் 8 கோடியைத் தாண்டியது. 2020-ம் ஆண்டின் நடுப்பகுதியில், இது 9 கோடியைத் தாண்டியது. இந்த வேகமான வளர்ச்சி, குறிப்பாக தொற்றுநோய்க்கு முன்பு, ஆதார் அடிப்படையிலான தளங்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பின் ஆதரவுடன், அரசாங்கத்தின் தீவிர செயல்பாட்டுத் திறனைக் காட்டியது.


PM-KISAN 2022-ம் ஆண்டின் நடுப்பகுதியில் (ஏப்ரல்–ஜூலை) 10.48 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நிதியைப் பெற்றதன் மூலம் அதன் எல்லா நேரங்களிலும் இல்லாத உச்சத்தை எட்டியது. இது இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது கிராமப்புற குடும்பத்தையும் உள்ளடக்கியது. இருப்பினும், 12-வது தவணையிலிருந்து (ஆகஸ்ட்–நவம்பர் 2022) எண்ணிக்கை விரைவாகக் குறைந்தது. பயனாளிகள் ஒரு சுழற்சியில் 10.48 கோடியிலிருந்து 8.57 கோடியாகக் குறைந்தது, இது 18.3% சரிவாக உள்ளது.


    இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சரிவு அல்ல. அடுத்த பல சுழற்சிகளில், பயனாளிகளின் எண்ணிக்கை 8.1 முதல் 8.5 கோடி வரை இருந்தது. இதன் போக்கு, 16வது தவணையில் (டிசம்பர் 2023-மார்ச் 2024) மட்டுமே, 9.04 கோடியாக உயர்ந்தது. இந்த அதிகரிப்பு, நவம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்ட தீவிர செறிவூட்டல் இயக்கத்தின் சார்பாக, இது 1.5 கோடி புதிய தகுதியுள்ள விவசாயிகளைச் சேர்த்தது.


சரிபார்ப்பு மற்றும் விலக்கு (Verification and Exclusion)


கடுமையான டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறைகள் காரணமாக பயனாளிகளின் எண்ணிக்கை மாறுகிறது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செயல்முறைகளில் ஆதார் இணைப்பு, கட்டாய eKYC மற்றும் நிலப் பதிவு சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகள் மோசடியைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை என்று அரசாங்கம் நம்புகிறது. இருப்பினும், அவை அமைப்பில் உள்ள ஆழமான சிக்கல்களையும் வெளிப்படுத்தின. இதுவரை, சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்களிடமிருந்து ₹416 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் திட்டத்தில் தவறாகப் பதிவு செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் அடங்குவர்.


வேளாண் துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் சமீபத்தில் மக்களவையில், மானியங்கள் வழங்குவது PM-KISAN போர்ட்டலில் உள்ள சரிபார்க்கப்பட்ட தரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பொறுப்பாகும். மேலும், தகுதியற்ற பெறுநர்களிடமிருந்து நிதியை மீட்டெடுக்க வேண்டும்.


PM-KISAN கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. இது கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது மற்றும் வேளாண் பண்ணை உள்ளீடுகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளது. இது விவசாயிகளின் ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்தியுள்ளது. கூடுதலாக, இந்த திட்டம் விவசாய மற்றும் தற்செயலான செலவுகள் இரண்டையும் ஆதரித்தது. இது PM-KISAN ஐ இந்தியாவின் விவசாய சமூகத்திற்கு ஒரு மாற்றும் திட்டமாக மாற்றியுள்ளது.


டிஜிட்டல் பிளவு 


ஆனால், தளத்தில் விவசாயத் தலைவர்கள் ஆதங்கத்துடன் குரல் எழுப்புகின்றனர். இது “ஆண்டுக்கு ₹6,000 என்பது ஒரு பொதுவான அடையாளச் செயலாகும். இது நம் பிரச்சினைகளைத் தீர்க்காது," என்று ஷெட்காரி சங்கதனாவின் தலைவர் மது ஹர்னே கூறினார். மேலும், "நமது தேவை உள்கட்டமைப்பு, சந்தை அணுகல் மற்றும் தொழில்நுட்பம், அதிகாரத்துவ தடைகள் மற்றும் பெயரளவு செயல்பாடுகள் அல்ல," என்று அவர் மேலும் கூறினார்.


இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 9 கோடி முதல் கிட்டத்தட்ட 15 கோடி விவசாயிகள் உள்ளனர். இருப்பினும், விவசாயிகளில் பலர் PM-KISAN திட்டத்தின் பலன்களைப் பெறுவதில்லை என்று விவசாயிகள் தலைவர்கள் வாதிடுகின்றனர்.


தகுதியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் விடுபட்டுள்ளனர் என்று ஹார்னே சுட்டிக்காட்டினார். மேலும், மோசமான இணைய அணுகல் அல்லது தகுதிக்குத் தேவையான இணையவழிச் செயல்முறைகளை முடிக்க இயலாமை போன்ற டிஜிட்டல் தடைகள் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.


பணவீக்கத்திற்கான இணைப்பு


PM-KISAN தவணைத் தொகையை உயர்த்துமாறு பல விவசாய அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன. அவர்கள் அதை பணவீக்கத்துடன் இணைக்க விரும்புகிறார்கள். இந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் நிலைக்குழு இந்த விவகாரத்தை மதிப்பாய்வு செய்தது. 2024-25ஆம் ஆண்டிற்கான அதன் முதல் அறிக்கையில், PM-KISAN சம்மன் நிதித் தொகையைத் திருத்த ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று குழு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையிடம் கேட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை அவர்கள் குறிப்பாகக் குறிப்பிட்டனர். PM-KISAN திட்டத்தை பணவீக்கத்துடன் இணைக்க தற்போது எந்த திட்டமும் இல்லை என்று வேளாண் துறையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                     

Original article:
Share:

மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் சமநிலையான செயல்பாடு -அபிஜித் சிங்

 மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் இராஜதந்திரம் எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும். இருப்பினும், இப்போதைக்கு இது இராஜதந்திர ரீதியாக அல்ல, மாறாக இன்னும் ஈடுபாட்டுடன் உள்ளது.


இந்தியா ஆப்பிரிக்காவுடன் அதன் கடல்சார் நடவடிக்கைகளின் மீதான ஈடுபாட்டை அமைதியாக அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்திய கடற்படை ஆப்பிரிக்கா-இந்தியா முக்கிய கடல்சார் ஈடுபாடு (Africa-India Key Maritime Engagement (AIKEYME)) என்ற புதிய பயிற்சி தான்சானியா கடற்கரையில் தொடங்கியது. இதில் 10 ஆப்பிரிக்க நாடுகளின் கடற்படைகள் ஈடுபட்டன. மேலும், கிட்டத்தட்ட அதே நேரத்தில், இந்தியப் பெருங்கடல் கப்பல் (Indian Ocean Ship (IOS)) சாகர் என்றும் அழைக்கப்படும் INS சுனைனா, மேற்கு இந்தியப் பெருங்கடல் வழியாக ஒரு மாத காலப் பணியமர்த்தலைத் தொடங்கியது. இந்தக் கப்பல் இந்திய மற்றும் ஆப்பிரிக்க பணியாளர்களின் கலவையான குழுவினரை ஏற்றிச் சென்றது. இந்த நடவடிக்கைகள் இந்தியா தனது கடல்சார் இருப்பை விரிவுபடுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பு வழங்குநராக (regional security provider) அதன் பங்கை வலுப்படுத்துவதற்கும், ஆப்பிரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவதற்கும் மேற்கொண்ட பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.


இந்த அடையாளங்களுக்குப் பின்னால் உள்ள குறியீடு தெளிவாக உள்ளது. AIKEYME பயிற்சி மற்றும் IOS Sagar ஆகியவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) "விருப்பமான பாதுகாப்பு கூட்டணியாக" மாறுவதற்கான இந்தியாவின் இலக்கைக் காட்டுகின்றன. அவை, பிரதமர் மோடியின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான (Security and Growth for All in the Region (SAGAR)) தொலைநோக்குப் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பிராந்திய கடல்சார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும் உலகளாவிய தெற்கில் இந்தியாவின் தலைமையை எடுத்துக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய MAHASAGAR கட்டமைப்பையும் அவை பிரதிபலிக்கின்றன.


மொரிஷியஸ், சீஷெல்ஸ், கென்யா மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் IOS சாகரில் இருப்பது, இந்தியா தனிமையில் அல்ல, கூட்டாண்மையில் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவின் நடவடிக்கைகள் வளர்ந்துவரும் கடல்சார் உத்தியைக் காட்டுகின்றன. இந்தியப் பெருங்கடலின் இயக்கவியல் மிகவும் சிக்கலானதாகி வருகிறது. இந்த மாற்றங்கள் பாரம்பரிய பாதுகாப்பு கவலைகள் மற்றும் பாரம்பரியமற்ற சவால்கள் இரண்டாலும் பாதிக்கப்படுகின்றன. இந்த சவால்களில் கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் காலநிலை தொடர்பான இடையூறுகள் ஆகியவை அடங்கும்.


இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த செய்தியை இது அனுப்புகிறது. கடல்சார் அச்சுறுத்தல்கள் குறித்த பகிரப்பட்ட விழிப்புணர்வை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியா தனது கடற்படை அனுபவத்தையும் வழங்குகிறது. இந்தியா ஒரு முக்கியமான கடல்சார் சக்தியாகக் காணப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை அமைப்பதில் ஒத்துழைப்பு, நிலையான இருப்பு மற்றும் தலைமை மூலம் செல்வாக்கை நாடுகிறது.


இருப்பினும், அடையாளம் மற்றும் உத்தியின் வருவாய் எப்போதும் நேர்த்தியாக சீரமைப்பதில்லை. இந்த இராணுவ மற்றும் இராஜதந்திர முயற்சியின்கீழ், இந்த முயற்சி உண்மையில் எதை நோக்கமாகக் கொண்டுள்ளது? என்ற கடினமான கேள்வி உள்ளது. இது ஆப்பிரிக்க கடல்சார் வலிமையை உருவாக்குவது பற்றியதா, அல்லது இது முக்கியமாக மேற்கு இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்த இந்தியாவின் கவலைகளால் இயக்கப்படுகிறதா?


ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் சீனாவின் இருப்பு கணிசமாக வளர்ந்துள்ளது. துறைமுகங்களைக் கட்டுதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை அதிகரிப்பது ஆகியவை இதில் அடங்கும். 2024-ம் ஆண்டில் தான்சானியா மற்றும் மொசாம்பிக்குடன் அதன் அமைதி மற்றும் பாதுகாப்பு பயிற்சிகளைப் போலவே, ஆப்பிரிக்க நாடுகளுடனும் சீனா வழக்கமான கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சிகளில் சீன போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படையினர் ஆப்பிரிக்க இராணுவங்களுடன் இணைந்து பணியாற்றி, வலுவான இராஜதந்திர உறவுகளைக் காட்டுகின்றனர்.


இந்தியா இப்போது இந்த நாடுகளில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், அளவு, நிலையான முதலீடு மற்றும் நிறுவப்பட்ட இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனா இன்னும் சாதகமாக உள்ளது. இதற்கு மாறாக, இந்தியா இன்னும் இலக்கை எட்ட முயற்சிக்கிறது.


ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் கடல்சார் ஈடுபாடு மாற்று வழிகளை வழங்குவதற்கான முயற்சியாகும். இந்தியா நம்பகமான கூட்டணி நாடாக இருக்க முடியும் என்பதை ஆப்பிரிக்க நாடுகளுக்கு உறுதியளிப்பதே இதன் நோக்கம் ஆகும். இது, சீனாவின் செல்வாக்கிற்கு சாதகமான எதிர் சமநிலையாகவும் இந்தியா செயல்பட விரும்புகிறது.


இருப்பினும், தரையில் நிலைமை மிகவும் சிக்கலானது. ஆப்பிரிக்க நாடுகள் சித்தாந்த சீரமைப்பு அல்லது புவிசார் அரசியல் கூட்டணிகளில் ஆர்வம் காட்டவில்லை. உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் வர்த்தகத்தைக் கொண்டுவரும் நடைமுறை கூட்டாண்மைகளை அவர்கள் விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில், சீனாவுக்கு ஒரு நன்மை உண்டு. அதாவது, சீனா உறுதியான முடிவுகளை வழங்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


இந்தியா, அதன் இராஜதந்திர திறன்களைப் பெற்றிருந்தாலும், சீனாவின் ஈடுபாட்டின் அளவைப் பொருத்த நிதி ஆதாரங்களையோ அல்லது தேவையான நிறுவனங்களையோ இன்னும் கொண்டிருக்கவில்லை.


இந்தியாவின் இராஜதந்திரக் கண்ணோட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த இடைவெளி மிகவும் கவனிக்கத்தக்கது. இந்தியா பெரும்பாலும் தன்னை ஒரு "முதல் பதிலளிப்பவர்" (first responder) அல்லது "நிகர பாதுகாப்பு வழங்குநர்" (net security provider) என்று பார்க்கிறது. இது, இந்தியாவின் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளில் ஒரு பொதுவான யோசனையாகும். இருப்பினும், பல ஆப்பிரிக்க நாடுகள் எப்போதும் இந்தியாவை ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லை. அவர்கள் இந்தியாவின் நோக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள். மேலும், பெரும் சக்தியாக போட்டி நிறைந்த நாடுகளில் ஈடுபடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற வலுவான உறவுகளைக் கொண்ட நாடுகளில்கூட, இந்திய ஆதரவு திட்டங்கள் சில நேரங்களில் அரசியல் பின்னடைவை எதிர்கொண்டுள்ளன. மேலும், இராஜதந்திர எல்லை மீறல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.


நிலைத்தன்மை குறித்த பிரச்சினையும் உள்ளது. அதாவது, கடல்சார் இராஜதந்திரம் வளம் நிறைந்தது. இதில், கப்பல்களை நிலைநிறுத்துதல், கூட்டுப் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்குதல் ஆகியவை சுவாரஸ்யமாகத் தோன்றலாம். ஆனால், அவற்றுக்கு குறிப்பிடத்தக்க நேரம், பணம் மற்றும் தளவாடங்கள் தேவை. அரேபிய கடல், வங்காள விரிகுடா மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஏற்கனவே செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒரு கடற்படைக்கு, மேற்கு நாடுகளுக்கான இந்த தொடர்பு அதன் திறனை நீட்டிக்கக்கூடும். இதன் நிலைமை என்னவென்றால், இந்த ஈடுபாடுகள் வழக்கமானதாக மாறக்கூடும். இதற்கு தெளிவான உத்திக்கான இலக்கு இல்லாமல், தொடர்ச்சியைப் பராமரிக்க மீண்டும் மீண்டும் செய்யப்படலாம்.


ஆப்பிரிக்க கடற்கரை நாடுகளுடன் ஈடுபடுவதில் இருந்து இந்தியா பின்வாங்கக்கூடாது. உண்மையில், இந்த நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவது முக்கியம். இது நம்பிக்கையை வளர்க்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பொறுப்பான கடல்சார் நடத்தைக்கான விதிகளை உருவாக்கவும் உதவும். இருப்பினும், இந்த முயற்சி வாக்குறுதிகளை மட்டுமல்ல, யதார்த்தமான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சீனாவின் அணுகுமுறையை பின்பற்ற இந்தியா முயற்சிக்கக்கூடாது. அந்த வழியில் போட்டியிட அதே அளவிலான மையப்படுத்தப்பட்ட நிதி, பெருநிறுவன வலிமை அல்லது உள்கட்டமைப்பு அதற்கு இல்லை. இது புத்திசாலித்தனமான கூட்டாண்மைகளை உருவாக்க முடியும். இவை ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன்கூட இருக்கலாம். ஒன்றாக, அவர்கள் கூட்டுறவு கட்டமைப்புகளை உருவாக்க முடியும். இந்த கட்டமைப்புகள் பிரமாண்டமாக இருக்காது. ஆனால், அவை இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அவை பயனுள்ள மாற்றுகளை வழங்க முடியும்.


இந்தியா தனது செயல்பாட்டை செல்வாக்கு என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும் என்பது மிகவும் முக்கியமான ஆபத்தாகும். ஆப்பிரிக்க கடல்சார் விவகாரங்களில் அதன் வளர்ந்துவரும் இருப்பு உள்நாட்டு விவரிப்புகள் மற்றும் வெளிப்புறக் கருத்துக்களை ஆதரிக்கக்கூடும். இருப்பினும், காணக்கூடியதாக இருப்பது நீண்டகால இராஜதந்திர சக்தியை உருவாக்காது. விநியோகம், நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையால் ஆதரிக்கப்படாவிட்டால், இருப்பு மட்டுமே அதிகாரத்தை சமப்படுத்தாது.


இதேபோல், உலகளாவிய தெற்கு ஒற்றுமை (Global South solidarity) பற்றிய பேச்சு உணர்ச்சி ரீதியாக சக்தி வாய்ந்தது. ஆனால், அது உண்மையான நடவடிக்கையால் ஆதரிக்கப்பட வேண்டும். இந்தியா பிராந்தியத்தை வழிநடத்த விரும்புகிறது. இருப்பினும், அந்தத் தலைமையைப் பராமரிக்கத் தேவையான பொருளாதார மற்றும் நிறுவன ஆதரவைவிட அதன் முயற்சிகள் இன்னும் அதிகமாக உள்ளது.


மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ராஜதந்திரம் எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும். ஆனால் தற்போது, ​​அது ஒரு தெளிவான உத்தியைவிட ஒரு இலக்காகும். பிராந்தியத்தில் அதிகமான நாடுகள் ஈடுபடுகின்றன என்பதை இந்தியா அறிந்திருக்கிறது. இருப்பு மட்டுமே விளைவுகளை வடிவமைக்காது என்பதையும் அது அறிந்திருக்க வேண்டும்.


அபிஜித் சிங், புது தில்லியின் ORF-ல் உள்ள கடல்சார் கொள்கை முன்முயற்சியின் முன்னாள் தலைவர்.


Original article:
Share:

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவை மீட்டமைத்தல்

 வங்காளதேசத்தின் யூனுஸ் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பானது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தவில்லை. ஏனெனில், வர்த்தக நடவடிக்கைகள் தற்போதைய பதட்டங்களை வெளிப்படுத்துகின்றன.


இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸுக்கும் இடையிலான சந்திப்பு, புது தில்லிக்கும் டாக்காவிற்கும் இடையிலான நெருக்கமான உறவை மேம்படுத்தவில்லை. இருநாட்டு தரப்பினரும் எடுத்த வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த மதவெறி வன்முறை தொடர்பாக ஏற்பட்ட பதட்டமான இராஜதந்திர பரிமாற்றங்களிலிருந்து இது தெளிவாகிறது. இந்த ஆண்டு இதுவரை, வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்துடன் ஈடுபட இந்தியா இரண்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முதலாவது, வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை பேச்சுவார்த்தைக்காக டாக்காவிற்கு அனுப்புவதன் மூலம் நடைபெறும். இரண்டாவது, பாங்காக்கில் நடந்த பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கிடையே ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் என்ற வங்காளதேசத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து இருநாட்டு உறவுகளில் காணப்படும் கடுமையான பதட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இரு தரப்பினரும் முன்னேறிச் செல்லக்கூடிய இந்த இரண்டு சந்திப்புகள் வாய்ப்பாக அமைந்தன.


இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், சமீபத்திய வர்த்தக முடிவுகள் இருநாட்டு உறவுகளும் நெருக்கடியில் இருப்பதைக் காட்டுகின்றன. வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதிக்கான சரக்குகளை மாற்றுவதற்கான கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால ஏற்பாட்டை இந்தியா முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, டாக்கா பல நடவடிக்கைகளை எடுத்தது. நிலத் துறைமுகங்கள் வழியாக இந்தியாவிலிருந்து நூல் இறக்குமதியை நிறுத்தியது. மூன்று நிலத் துறைமுகங்களை மூடவும், நான்காவது இடத்தில் செயல்பாடுகளை நிறுத்தவும் திட்டமிட்டது. மேற்கு வங்க எல்லையில் உள்ள ஒரு முக்கிய சோதனைச் சாவடியில், டாக்கா இந்தியாவிலிருந்து பொருட்களை பதப்படுத்துவதை தாமதப்படுத்தும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.


வங்காளதேசத்தின் பராமரிப்பு நிர்வாகம் பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத்துடன் வலுவான வர்த்தக உறவுகளை நாடும் சூழலில் இந்த நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். சீனாவில் இருந்தபோது, ​​இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் புவியியல் தனிமைப்படுத்தலைப் பயன்படுத்தி சீன முதலீடுகளைத் தேடுவது போல் யூனுஸ் கருத்துக்களைத் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்கள் வங்காள விரிகுடாவை அணுகுவது குறித்த தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக டாக்காவுக்கு மேற்கொண்ட பயணம் பின்னர் தெளிவுபடுத்தியது. இருப்பினும், வடகிழக்கு மக்கள் இந்தப் பகுதியில் சீனாவின் எதிர்மறையான பங்கைப் பற்றி நீண்டகாலமாக நினைவில் வைத்திருக்கிறார்கள்.


இந்தியாவின் உணர்வுகளைப் புறக்கணித்து டாக்கா பெய்ஜிங்கை வெளிப்படையாக வரவேற்றுள்ளது. இது, புது தில்லியின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, வங்கதேசத்தில் சீனாவின் நீண்டகால வணிக மற்றும் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு அமைகிறது. பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவு கடந்தகால பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பன்முகத்தன்மை காரணமாக வேறுபட்டது. சமீபத்தில், வங்கதேச மற்றும் பாகிஸ்தான் இராணுவங்கள் உறவுகளை மேம்படுத்த விரைவாகச் செயல்பட்டன. இருப்பினும், 15 ஆண்டுகளில் முதல் வங்காளதேசம்-பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக பேச்சுவார்த்தையின்போது, ​​பொது மன்னிப்பு கேட்கவும், 1971 சொத்துக்களை திருப்பித் தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் டாக்கா வருகைக்கு தயாராகும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இது இரு நாடுகளுக்கும் முன்னால் உள்ள கடினமான பாதையைக் குறிக்கிறது.


பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத் உடனான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் புது தில்லிக்கு (இந்தியா) தீங்கு விளைவிக்கும் என்று டாக்கா நினைப்பது முட்டாள்தனமாக இருக்கும். புவியியல் மற்றும் வரலாறு இந்தியாவும் வங்காளதேசமும் பரஸ்பர நன்மைக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கடந்த இருபதாண்டுகளில் வங்காளதேசத்தின் வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் இந்தியாவுடனான அதன் நெருங்கிய உறவின் காரணமாகும். சிறந்த இணைப்பு, வர்த்தக வசதிகள் மற்றும் அதிகரித்த நம்பிக்கை முக்கியப் பங்கு வகித்தன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு எதிரான போராளிக் குழுக்களை (militant groups) வங்கதேசம் ஒடுக்கியது வடகிழக்கு மாநிலங்களை உறுதிப்படுத்த உதவியது. அதே நேரத்தில், எரிசக்தி மற்றும் வர்த்தக தொடர்புகள் வங்கதேசம் மற்றும் நிலத்தால் சூழப்பட்ட ஏழு இந்திய மாநிலங்களுக்கு பயனளித்தன. குறுகியகால அரசியல் ஆதாயத்திற்காக இந்த முன்னேற்றம் பாதிக்கப்படாமல் இருப்பதை டாக்கா மற்றும் புது தில்லி இரண்டும் உறுதி செய்ய வேண்டும்.


Original article:
Share:

தொழில்நுட்பம் எவ்வாறு அதிகார சமநிலையை பாதிக்கிறது மற்றும் இந்தியாவிற்கான படிப்பினை -பிரதாப் பானு மேத்தா

 நீங்கள் ஒரு தொழில்நுட்பத் தலைவராக இருக்க விரும்பினால், குறிப்பிட்ட துறைகளில் மேலாதிக்கத்தைப் பெறுவதில் குறைவாக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் பொது நோக்கத் தொழில்நுட்பங்களின் பரவலை அனுமதிக்கும் பரந்த அடிப்படையிலான கொள்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


சர்வதேச அமைப்பில் அதிகார சமநிலைகளில் மாற்றங்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் தற்போது சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பெரிய அதிகார போட்டியின் மையத்தில் உள்ளது. ஆனால் தொழில்நுட்பம் அதிகார சமநிலையை எவ்வாறு பாதிக்கிறது? இந்த கேள்வி எளிதாகப் புரியக்கூடியதல்ல. ஜெஃப்ரி டிங் (Jeffrey Ding) எழுதிய "Technology and the Rise of Great Powers" (பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பதிப்பகம்) என்ற புத்தகம் பல பாரம்பரிய அறிவுரைகளை தலைகீழாக மாற்றுகிறது.


வழக்கமான ஞானம் இப்படித்தான் செல்கிறது. முன்னணி துறைகள் என்று அழைக்கப்படும் நாடுகளில் முன்னேறுவதன் மூலம் நாடுகள் நன்மைகளைப் பெறுகின்றன. அவர்கள் புதுமைகளைப் புகுத்துகிறார்கள், முன்னிலை பெறுகிறார்கள். பின்னர், ஒரு குறுகிய காலத்திற்கு, முன்னணி தொழில்நுட்பங்களில் தங்கள் ஆதிக்கத்திலிருந்து முதல்-மூவர் நன்மை அல்லது ஏகபோக வாடகையைப் பெறுகிறார்கள். எனவே, தொழில்துறை புரட்சியின் போது, ​​ஜவுளி போன்ற தொழில்களில் முக்கியமான கண்டுபிடிப்புகளில் பிரிட்டன் முன்னணி இடத்தைப் பெற்றது. இரண்டாம் தொழிற்புரட்சியின் போது, ​​ஜெர்மனி பிரிட்டனை எதிர்த்துப் போராடியபோது, ​​வேதியியல் தொழில் போன்ற முன்னணித் துறைகளில் ஒரு நன்மையைப் பெறுவதன் மூலம் அவ்வாறு செய்தது.


1970-களின் பிற்பகுதியில், ஜப்பான் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் கார்கள் போன்ற தொழில்களில் ஆதிக்கம் செலுத்தியது என்ற உண்மையின் அடிப்படையில் ஜப்பான் அதன் பணத்திற்காக அமெரிக்காவிற்கு வெற்றியைத் தரும் என்று பலர் நினைத்தனர். தற்போது, ​​தொழில்நுட்பப் போட்டியைப் பின்பற்றுபவர்களும் முன்னணித் துறைகளில் ஆதிக்கத்தைப் பார்க்கிறார்கள். உதாரணமாக, மின்சார வாகனங்களில் சீனா மீளமுடியாத முன்னணியைப் பெறுமா?


உலகளாவிய அதிகார சமநிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கான விளக்கமாக முன்னணித் துறைகளில் கவனம் செலுத்துவது தவறானது என்று டிங் வாதிடுகிறார். ஒரு முன்னணித் துறையின் ஆதிக்கத்தால் பெரும் அதிகார அந்தஸ்து அடையப்படுவதில்லை. அதற்கு பதிலாக, அவர் பொது நோக்க தொழில்நுட்பங்கள் (General Purpose Technologies (GPT)) என்று அழைப்பதன் பரவலால் இது அடையப்படுகிறது. "எல்லா தொழில்நுட்பங்களும் சமமாக உருவாக்கப்படவில்லை" என்ற பழமொழி பொதுவானது. ஆனால், டிங்கின் வாதத்தை இயக்கும் குறிப்பிட்ட வேறுபாடு பொது நோக்க தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னணித் துறை தொழில்நுட்பங்களுக்கு இடையில் உள்ளது. முந்தைய தொழில்நுட்பங்கள், பெயர் குறிப்பிடுவது போல, அதிக எண்ணிக்கையிலான துறைகளில் உற்பத்தித்திறன் ஆதாயங்களை இயக்குவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மாற்றும் புதுமைகள் ஆகும்.


எனவே, முதல் தொழில்துறை புரட்சியின் போது, ​​பிரிட்டனின் வலிமையான ஜவுளித் துறையில் சிறந்து விளங்கியதால் வரவில்லை. மாறாக, பல தொழில்களில் பயன்படுத்தக்கூடிய இரும்பு சார்ந்த இயந்திரங்களை உருவாக்கி பரப்பும் திறனில் இருந்து வந்தது.  இன்று, செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இதே போன்ற ஒரு தொழில்நுட்பமாகும். இது பல துறைகளில் பயன்படுத்தப்படலாம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது. மறுபுறம், மின்சார வாகனங்களில் உள்ளது சிறியளவு நன்மை மட்டுமே. இருப்பினும், சில பரவலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதிக எண்ணிக்கையிலான துறைகளை மாற்றாது.


இந்த வேறுபாட்டை அடிப்படையாகப் பயன்படுத்தி, டிங் வழக்கமான பொருளாதார வரலாறு மற்றும் புவி-அரசியலை உயர்த்துகிறார். முதல் தொழில்துறை புரட்சியில் பிரிட்டன் வெற்றி பெற்றது ஒரு முன்னணி துறையின் காரணமாக அல்ல. மாறாக, பொறியியல் மற்றும் இயந்திர திறன்களின் பொதுவான பரவல் காரணமாக. இரண்டாவது புரட்சியில், ஜெர்மனி பெரும்பாலான முன்னணி துறைகளில் முன்னணியில் இருந்தது. ஆனால், பொறியியல் திறன்களைப் பரப்புவதன் மூலமும், தரநிலைகளை உருவாக்குவதன் மூலமும் அமெரிக்கா முன்னணியில் இருந்தது. இது மின்சாரம் போன்ற பொதுப் பயன்பாடு தொழில்நுட்பங்களை மிக வேகமாகப் பரப்ப அனுமதித்தது. மூன்றாம் தொழில்துறை புரட்சியில், நுகர்வோர் மின்னணுவியல் போன்ற சில முன்னணி துறைகளில் ஜப்பான் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கணினிமயமாக்கல் (computerisation) போன்ற GPT-களைப் பரப்பும் அதன் திறன் குறைவாகவே இருந்தது. இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா ஒரு சில துறைகளில் ஆதிக்கத்தை நம்பியிருக்கவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பல துறைகளை மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தின் அதிக பரவலை நம்பியிருந்தது.


இந்த தொழில்நுட்பங்களுக்கு இடையிலான வேறுபாட்டைப் பற்றிய டிங்கின் விவாதம் அதிநவீனமானது மற்றும் சோதனைக்குரிய கணிப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால், மையச் செய்தி தெளிவாக உள்ளது. நீங்கள் தொழில்நுட்பத் தலைவராக இருக்க விரும்பினால், குறிப்பிட்ட துறைகளில் மேலாதிக்கத்தைப் பெறுவதில் குறைவாக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் GPT-களின் பரவலை அனுமதிக்கும் பரந்த அடிப்படையிலான கொள்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்னணித் துறைகளில் புதுமைகளை உருவாக்குவது அல்லது லாபத்தை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள், முழு அளவிலான பயன்பாடுகளிலும் GPTகளைப் பரப்ப அனுமதிக்கும் நிறுவனங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. டிங்கின் செய்தியின் குறுகிய பதிப்பு: பரவல் என்பது விதி.


ஆனால், டிங்கின் முக்கிய கருத்து என்னவென்றால், பொருளாதார வரலாற்றாசிரியர்களும் அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்களும் பெரும்பாலும் ஒரே தவறைச் செய்கிறார்கள். அவர்கள் சில முக்கியமான தொழில்களில் (முன்னணித் துறை தொழில்நுட்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன) அதிக கவனம் செலுத்துகிறார்கள். அரசாங்கங்கள் ஒரு நன்மையைப் பெறுவதற்காக இந்தத் துறைகளை மற்றவற்றைவிட வலிமையானதாக மாற்ற முயற்சிக்கின்றன. ஆனால், இந்தத் துறைகளிலிருந்து கிடைக்கும் நன்மைகள் பொதுவாக நீண்டகாலம் நீடிக்காது. மற்ற நாடுகள் முன்னேறுவதைத் தடுக்கும் வரை மட்டுமே அவை நீடிக்கும். முன்னணி துறைகள் ஏற்றுமதி அல்லது வேலைவாய்ப்பு அடிப்படையில் பொருளாதாரத்திற்கு லாபத்தைக் கொண்டுவர முடியும். ஆனால், அவை தேசிய சக்தியைக் கட்டியெழுப்புவதற்கு நம்பகமான அடிப்படையாக இல்லை.


இந்த வாதம் வளர்ச்சி மற்றும் சர்வதேச அரசியல் இரண்டிற்கும் முக்கியமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு, முக்கிய செய்தி இதுதான்: சில தொழில்களுக்கு நாம் சிறப்புக் கொள்கைகளை உருவாக்கினாலும், உண்மையான தேசிய வலிமை பொது நோக்க தொழில்நுட்பங்களை (General Purpose Technologies (GPTs)) பரப்புவதன் மூலம் வரும்  இவை பல துறைகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள். அரசியல்வாதிகள் பெரும்பாலும் GPTs மீது கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில், அவை தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதில்லை. மேலும், GPTs பரப்புவதற்கு அமைப்பில் பெரிய மாற்றங்கள் தேவை. இதற்கு குறிப்பிட்ட முன்னணி துறைகளுக்கான மனித மூலதனத்தின் திறன் மேம்பாடு தேவையில்லை, மாறாக மனித மூலதனத்தின் பரவலான மேம்பாடு, நிறுவன தகவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் இயங்குதன்மையை எளிதாக்குதல் ஆகியவை தேவைப்படுகின்றன. இதற்குப் பணி முறையில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக நிலையான, பரவலான மற்றும் அடித்தள முதலீடுகள் தேவை.


சர்வதேச புவிசார் அரசியலுக்கு, டிங்கின் கருத்து முக்கியமானது. மின்சார கார்கள் போன்றவற்றை உருவாக்குவதில் சீனா மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அமெரிக்கா - முன்னாள் அதிபர் டிரம்ப் அமைப்பை முற்றிலுமாக உடைக்காவிட்டால் - GPTs-ஐ பரவலாகப் பயன்படுத்துவதில் இன்னும் நன்மை உண்டு என்று அவர் நம்புகிறார். டீப்சீக் போன்ற தொழில்நுட்பங்களை யார் கண்டுபிடிப்பார்கள் என்பது கேள்வி அல்ல. உண்மையான கேள்வி என்னவென்றால்: இந்த தொழில்நுட்பங்களை நாடு முழுவதும் யார் பரவலாகப் பரப்ப முடியும்?

இந்தக் கருத்தை இரண்டு வழிகளில் பார்க்க வேண்டும். முதலாவதாக, ஒரு சில முக்கியத் துறைகளில் முன்னேறுவதை விட, தொழில்நுட்பத்தைப் பரப்புவது அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியா? இரண்டாவதாக, சில தொழில்நுட்பங்களில் சீனா முன்னணியில் இருந்தாலும், சீனாவைவிட அமெரிக்கா GPT-களைப் பரப்புவதில் சிறந்ததா?


அமெரிக்காவிற்கு இன்னும் நன்மை இருப்பதாக டிங் நம்புகிறார். மேலும், அமெரிக்கா பொறியியல் அறிவைப் பரப்புவது போன்ற ஆதாரங்களை அவர் வழங்குகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை, பாடம் தெளிவாக உள்ளது. டிங் சொல்வது போல், பெரிய தொழில்நுட்ப மையங்களில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, சிறிய நிறுவனங்கள், சிறிய நகரங்கள், படைப்பாற்றல் மிக்க பொறியாளர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை முழு பொருளாதாரத்துடனும் இணைக்கும் அமைப்புகளை நாம் ஆதரிக்க வேண்டும். நாடு முழுவதும் அறிவு மற்றும் திறன்களைப் பரப்பி, நிறுவனங்களை ஆழமாக சீர்திருத்த வேண்டும்.


எழுத்தாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பங்களித்து வருகிறார்


Original article:
Share:

சம்பரண் சத்தியாகிரகம் -குஷ்பூ குமாரி

 1917-ஆம் ஆண்டின் சம்பரண் சத்தியாகிரகம் (Champaran Satyagraha) இந்தியாவில் காந்தியின் முதல் பெரிய இயக்கமாக அமைந்தது. 


தற்போதைய செய்தி:


சம்பரண் சத்தியாகிரகம் ஏப்ரல் 1917-ல் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு அதன் 108-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இது இந்தியாவில் காலனித்துவ தோட்டக்காரர்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக இந்திய விவசாயிகளின் விழிப்புணர்வாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும், இது காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவத்திலிருந்து உத்வேகம் பெற்றது.


முக்கிய அம்சங்கள்:


1. இர்ஃபான் ஹபீப்பின் கூற்றுப்படி, அவுரி (Indigo) இந்தியாவின் பிரபலமான ஒரு பொருளாகும். இது பல நூற்றாண்டுகளாக விவசாயிகளால் வளர்க்கப்பட்டு பதப்படுத்தப்பட்டது. ஆனால், 17-ஆம் நூற்றாண்டில், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஐரோப்பிய தோட்டங்களும் இதை உற்பத்தி செய்யத் தொடங்கின. ஆங்கிலேயர்கள் வங்காளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, ​​ஐரோப்பிய அவுரி தோட்டக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் உள்ளூர் நில உரிமையாளர்களிடமிருந்து (ஜமீன்தார்கள்) நிலத்தைக் கைப்பற்றி, விவசாயிகளை அவுரி வளர்க்க கட்டாயப்படுத்தினர். பின்னர், அது அவர்களின் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டது.


2. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், வெள்ளைத் தோட்ட முதலாளிகள் தற்போதைய வடமேற்கு பீகாரின் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை டீன்கதியா (teenkathia) என்று அழைக்கப்படும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தினர். இதன்கீழ் அவர்கள் தங்கள் நிலங்களில் 3/20 பங்கில் அவுரி வளர்க்க கடமைப்பட்டிருந்தனர்.


3. இருப்பினும், ஜெர்மனியில் பொருட்களைத் தயாரிக்க ஒரு புதிய தேசத்தின் மீது ஏற்பட்ட அழுத்தம், அடோல்ஃப் வான் பேயறை (1905-ஆம் ஆண்டில் வேதியியல் நோபல் பரிசு வென்றவர்) செயற்கை சாயத்தை உற்பத்தி செய்ய வழிவகுத்தது. இது பீஹாரி இண்டிகோவின் விலையையும் அதன் ஐரோப்பிய தோட்டங்களின் லாபத்தையும் குறைத்தது.


4. இர்ஃபான் ஹபீப் எழுதுகிறார், செயற்கை சாயத்தின் உற்பத்தி இந்தியாவின் அவுரி ஏற்றுமதியை 1894-95-ல் ரூ.4.75 கோடியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2.96 கோடியாக குறைந்தது. அவுரி விலைகளும் தோட்ட முதலாளிகளின் லாபங்களும் குறைந்ததால், தோட்ட முதலாளிகள் ஜமீன்தார்களாக தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் மீதான வாடகைச் சுமையை அதிகரிக்கத் தொடங்கினர்.


5. இந்த கொடுமைகளுடன், தோட்ட முதலாளிகள் பாரம்பரிய ஜமீன்தாரி வழக்கமான பேகார் (begar), கட்டாய வேலை அல்லது குறைந்த ஊதியம் கொடுக்கப்பட்ட வேலை (abwabs), விவசாயிகளின் கால்நடைகள், ஏர் மற்றும் வண்டிகளை தேவைப்படும்போது கைப்பற்றுதல், அல்லது அவர்களின் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை வழங்க கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை முழுமையாகப் பயன்படுத்தினர்.


6. இந்தியன் எக்ஸ்பிரஸில் அசுதோஷ் குமார் எழுதுகிறார், பிப்ரவரி 27, 1917 அன்று, சம்பரண் விவசாயிகள் சார்பாக ராஜ்குமார் சுக்லா மகாத்மா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் காந்தியை விவசாயிகள் வாழும் மோசமான நிலைமைகளைப் பார்வையிடச் சொல்லி கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டது. "நீங்கள் ஒவ்வொரு நாளும் மற்றவர்களின் கதைகளைக் கேட்கிறீர்கள், இன்று என் கதையைக் கேளுங்கள்" (‘Kissa sunte ho roj auron ke Aaj meri bhi daastan suno’) என்ற வரிகளுடன் அது தொடங்கியது. வட பீகாரில் உள்ள சம்பரண் விவசாயிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களைவிட அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்றும் அந்தக் கடிதம் குறிப்பிட்டுள்ளது.


7. காந்தி சம்பரண்-க்கு வந்தபோது, அதிகாரிகள் அவரை உடனடியாக வெளியேறச் சொன்னார்கள். ஆனால், அவர் மறுத்துவிட்டார். சட்டத்தை மீறுவதற்காக தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் அவர்களிடம் கூறினார். ஏப்ரல் 18, 1917 அன்று, மோதிஹாரி நீதிமன்ற அறையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.P.C.) பிரிவு 144-ன் கீழ் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிராக இளம் காந்தி தைரியமாக எழுந்து நின்றதாக சாஹித் அமீன் குறிப்பிடுகிறார். இந்திய அரசியலுக்குப் புதிதாக வந்த 48 வயதான காந்தி, சம்பரணை விட்டு வெளியேற மறுப்பதன் மூலம், ஏழை பிஹாரி விவசாயிகள் அநீதிக்கு எதிராகப் பேசுவதைத் தடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முயற்சியை சவால் செய்தார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்மையைச் சொல்லும் சக்தியை அவர் தன்னுடன் கொண்டு வந்தார்.


8. இது ஒரு புதிய தந்திரமாக (manoeuvre) இருந்தது மற்றும் உடனடியாக பலத்தைப் பயன்படுத்தத் தயாராக இல்லாத அரசாங்கம், ஒரு அடி பின்வாங்க முடிவு செய்தது. ஜூன் 5 அன்று, பீகார் மற்றும் ஒரிசாவின் லெப்டினன்ட் கவர்னர் இ.ஏ. கெய்ட் மற்றும் தலைமைச் செயலாளர் எச். மெக்பெர்சன் ஆகியோர் ராஞ்சியில் காந்தியுடன் சந்திப்பை நடத்தினர். கூட்டத்தின்போது, ​​அவர்கள் ஒரு தீர்வை உருவாக்கி ஒரு விசாரணைக் குழுவை அமைத்தனர். தோட்டக்காரர்கள், நில உரிமையாளர்கள் (ஜமீன்தார்கள்) மற்றும் மூன்று பிரிட்டிஷ் அதிகாரிகளின் பிரதிநிதிகளுடன் காந்தி ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


ஏழை சம்பரண் விவசாயிகளின் சாட்சியம்


9. காந்தி 8,000 விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை முன்வைத்து, டீன்கதியாவை (teenkathia) ஒழிப்பதற்கும், சட்டவிரோதமான வரிகளை (abwab) தடை செய்வதற்கும், சட்டவிரோதமாக பிடுங்கப்பட்ட கட்டணங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் மறுக்க முடியாத வழக்கை முன்வைத்தார். விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பரண் விவசாயச் சட்டம் (Champaran Agrarian Act, 1918)-ல் இயற்றப்பட்டது.


நீல் தர்பன்


திநபந்து மித்ரா 1860 செப்டம்பரில் நீல் தர்பன் (Neel Darpan) (சொல்லளவில், “நீல கண்ணாடி”) என்ற வங்காள நாடகத்தை வெளியிட்டார். இது அவுரி தோட்ட முதலாளிகளின் கொடூரங்களை மிகவும் துணிச்சலான வண்ணத்தில் சித்தரித்தது. இது வங்காளத்தில் 1859-60-ல் நடந்த அவுரி புரட்சியின் பின்னணியில் எழுதப்பட்டது.


மகாத் சத்தியாகிரகம்


1. போராட்டத்தின் கருவியாக சத்தியாகிரகம் சுதந்திரப் போராட்டத்தின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. காந்தியைத் தவிர்த்த ஒரு சத்தியாகிரகம், 1927-ல் நடந்த மகாத் சத்தியாகிரகம் (Mahad Satyagraha) ஆகும். தீண்டத்தகாதவர்கள், அனைவரும் பயன்படுத்தும் கிணறுகள் மற்றும் குளங்களை அணுகும் உரிமையை வலியுறுத்த பி.ஆர். அம்பேத்கர் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்.


2. இந்த இயக்கம் தலித் இயக்கத்தின் "அடிப்படை நிகழ்வாக" (foundational event) கருதப்படுகிறது. இது சமூகம் சாதி அமைப்பை நிராகரித்து மக்கள் தங்கள் மனித உரிமைகளை வலியுறுத்த கூட்டாக தீர்மானத்தைக் காட்டிய முதல் முறையாகும். மகாத் சத்தியாகிரகத்திற்கு முன்பு சாதி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்திருந்தாலும், அவை பெரும்பாலும் உள்ளூர் மற்றும் சிதறிய போராட்டங்களாக இருந்தன.


3. வரலாற்றாசிரியர் சுவப்னா எச் சமேலின் கூற்றுப்படி, மகாத் சத்தியாகிரகம் (மார்ச், 1927) - அது அப்போது சத்தியாகிரகம் அல்ல, "மாநாடு" (conference) என்று பெயரிடப்பட்டது.  இதில் சுமார் 2,500 "பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் தலைவர்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும்" கலந்து கொண்டனர். இதில் "15 வயது சிறுவர்கள் முதல் 70 வயது முதியவர்கள் இடம் பெற்றிருந்தனர். மார்ச் 10 அன்று, அம்பேத்கரின் தலைமையில் சவடார் குளத்திற்கு (Chavadar Tank) அவர்கள் ஒரு நீண்ட ஊர்வலம் தொடங்கினர். அங்கு அவர் குளத்தில் நுழைந்து கைகளால் அதன் தண்ணீரை எடுத்தார்.


4. இஷிதா பானர்ஜி எழுதுகிறார், "டிசம்பர் 25, 1927 அன்று மகாத் மாநாட்டில், தீண்டத்தகாத பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்புடன், அம்பேத்கர் மனுஸ்மிருதியின் (Manusmriti) ஒரு பிரதியை எரித்தார். இது பெண்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் இருவருக்கும் அதன் தாக்கங்களை நிராகரிக்கும் செயலாக இருந்தது. இவையனைத்தும் பெண்களுக்கு புதிய இடங்களைத் திறந்தன.


Original article:
Share:

பிரிவு 142-ன் வரம்புகள் என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, கடந்த ஆண்டு நவம்பரில் 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கிய தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை தவறானது மற்றும் சட்டவிரோதமானது என அறிவித்தது.


முக்கிய அம்சங்கள்:


- இந்திரா ஜெய்சிங் கூற்று : சட்டப்பிரிவுகள் 200 மற்றும் 201 பாக்கெட் வீட்டோவை செயல்படுத்தவில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு, நிலைமையை எவ்வாறு சரிசெய்வது என்பது கேள்வியாக இருந்தது. இங்குதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியலமைப்பிற்கு முரணான செயலற்ற தன்மையை பிரிவு 142-ஐப் பயன்படுத்தி சரிசெய்ய முடியும் என்று கூறி நீதிமன்றம் ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்தது, இது நீதிமன்றத்திற்கு "முழுமையான நீதியை" (complete justice) வழங்க அதிகாரம் அளிக்கிறது.


- தமிழ்நாடு அரசு vs தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகார சமநிலை மீட்டெடுக்கப்பட்டாலும், கேள்வி என்னவென்றால்: ஆளுநரின் நிலை என்ன? தனது கடமைகளைச் செய்வதில் செயலற்ற தன்மையால் அவருக்கு எந்த விளைவுகளும் ஏற்படவில்லையா? இங்குதான் தவறான நம்பிக்கைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.


— எழுப்ப வேண்டிய கேள்வி என்னவென்றால், தவறான செயல்கள் கண்டறியப்பட்டாலும் பதவியில் நீடிக்க ஆளுநருக்கு உரிமை உள்ளதா? அரசியல் பொறுப்புணர்வுக்கு (political accountability) வழிவகுக்கும் அவரது ராஜினாமாவுக்கு ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் ராஜினாமா செய்யவில்லை.


- உண்மையாகவே, அரசியலமைப்பு என்பது ஒரு குழப்பமான புதிர் அல்ல (labyrinth, not a maze) ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ​​அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தெளிவான மற்றும் இணைக்கப்பட்ட விதிகளின் தொகுப்பாகும். இது தற்செயலாகவோ அல்லது அதிர்ஷ்டத்தினாலோ நடக்கும் குழப்பமான புதிர் அல்ல.


- அலோக் பிரசன்ன குமார் குறிப்பிடுவது : தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரைப் போன்றவர்களின் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், தமிழ்நாடு மாநிலம் vs தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அறியாமலேயே (unwittingly) புதிய மற்றும் சிக்கலான அரசியலமைப்புச் சிக்கல்களை உருவாக்கியிருக்கலாம்.


- உச்ச நீதிமன்றத்தின் ஏப்ரல் 8 தீர்ப்பு மூன்று முக்கிய காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்தது. முதலாவதாக, ஒரு மசோதாவை அங்கீகரிக்காதபோது அல்லது அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாதபோது ஆளுநர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த தெளிவான விதிகளை நீதிமன்றம் வழங்கியது. ஆளுநர் தனது கடமையைச் செய்யாவிட்டால் அவரைச் செயல்பட உத்தரவிடலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.


- இரண்டாவதாக, சட்டப்பிரிவு 142-ன் கீழ் நீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் சட்டமாக மாறியது. மூன்றாவதாக, ஆளுநர் ஒரு மசோதா குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும்போது, ​​குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் தனக்குத்தானே வழங்கியுள்ளது.


- நீதிமன்றம் எடுத்த மூன்று புதிய நடவடிக்கைகளில், முதல் இரண்டு நடவடிக்கைகளும் நல்ல நடவடிக்கைகளாகக் காணப்படுகின்றன. அரசியலமைப்பைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஒரு காலனித்துவ ஆட்சியாளரைப் போல, ஆளுநர் நியாயமற்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க நீதிமன்றம் எடுத்த வழிமுறைகள் இவை.


- நீதிமன்றம் குடியரசுத்தலைவருக்கு நீதிப் பேராணைகள் (mandamus) செயல்பட உத்தரவிட்டால் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே குடியரசுத்தலைவர் செயல்படுகிறார் என்ற அரசியலமைப்பு நிலைப்பாட்டை நுட்பமாக மாற்றும். சில சூழ்நிலைகளில், குடியரசுத்தலைவரும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செயல்படுகிறார் என்பதே இதன் பொருள். இது பிரதமர் மற்றும் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையை புறக்கணிக்குமாறு நீதிமன்றம் குடியரசுத்தலைவருக்கு  உத்தரவிட முடியுமா எனும் கேள்வியை எழுப்புகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— பிரிவு 200, ஆளுநர் ஒரு மசோதாவை "கூடிய விரைவில்" (as soon as possible) திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்கவில்லை. தெளிவான காலக்கெடு இல்லையென்றால், அது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சரியாக செயல்படுவதைத் தடுக்கலாம். இந்தத் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. ஆளுநர்கள் மசோதாக்களை அழைப்பதற்கு அதிகபட்சமாக ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை கால அவகாசத்தை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.


— சர்க்காரியா ஆணையம், "பிரிவு 201-ன் கீழ் குறிப்புகளை திறம்பட அகற்றுவதற்கு திட்டவட்டமான காலக்கெடுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், புஞ்சி ஆணையம் பிரிவு 201-ல் ஒருகாலக்கெடுவை சேர்க்க பரிந்துரைத்தது.


Original article:
Share:

1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் நோக்கம் என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி : உச்சநீதிமன்றம் வக்ஃப் சட்டம், 2025-ன் மூன்று முக்கிய அம்சங்களை எச்சரித்து, அவற்றை நிறுத்தக்கூடும் என்று தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, ஒன்றிய அரசு வியாழக்கிழமை நீதிமன்றத்திடம், மே 5-ல் அடுத்த விசாரணை வரை வக்ஃப் வாரியங்களுக்கு எந்த நியமனங்களையும் செய்யப்படாது என்றும், அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட “பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப்” (Waqf-by-user) உட்பட வக்ஃப்களின் தன்மையை மாற்றப்படாது என்றும் தெரிவித்தது.

முக்கிய அம்சங்கள் :

 

— உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு ஒரு வாரம் கோரிய நிலையில், நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி கன்னா மே 13 அன்று ஓய்வு பெறுகிறார்.


— வக்ஃப் சொத்துக்களின் அறிவிப்பு நீக்கம், “பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப்” உட்பட, மற்றும் ஒன்றிய வக்ஃப் ஆணையங்கள் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்ப்பதற்கான ஏற்பாட்டை நிறுத்தி வைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் முன்மொழிவை ஒன்றிய அரசு எதிர்த்தது.


— நீதிப்பேராணை மனுக்களுக்கு (writ petitions) முதற்கட்ட பதில்/பதிலை தாக்கல் செய்ய இந்திய ஒன்றியம், மாநில அரசுகள் மற்றும் வக்ஃப் வாரியங்களுக்கு நீதிமன்றம் ஏழு நாட்கள் அவகாசம் அளித்தது. மேலும், அதன் சேவை தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பிரதிவாதிகளின் பதில்/பதிலுக்கான மறுபிரதிநிதித்துவ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யலாம் என்றும் அது உத்தரவிட்டது.


உங்களுக்குத் தெரியுமா?


அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 26, பகுதி 3-ன் கீழ் உள்ள ஓர் அடிப்படை உரிமை, குடிமக்களின் மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இது பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் போன்ற மூன்று கட்டுப்பாடுகளுக்கு மட்டுமே உட்பட்டது.

 

— "பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப்" (Waqf by use) என்ற கருத்தை ஒழித்தல்: "பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப்" என்பது நீண்ட காலமாக முஸ்லிம் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தால், அது அதிகாரப்பூர்வமாக ஒன்றாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும் கூட, அதை வக்ஃப் என்று கருதலாம்.


— 2025-ஆம் ஆண்டு சட்டம், புதிய நிலங்களுக்கு "பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப்" (காலப்போக்கில் முஸ்லிம் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிலம்) என்ற கருத்தை நீக்குகிறது. இது இப்போது ஏற்கனவே வக்ஃப்-ஆக பதிவுசெய்யப்பட்ட சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு பிரச்சனை இருந்தால் அல்லது நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்பட்டால், அது வக்ஃப் பயன்பாடாக என்று கருதப்படாது என்று கூறுகிறது.


— மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்கள்: வக்ஃபாகப் பயன்படுத்தப்படும் நிலங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்கள் தொடர்பான மற்றொரு ஏற்பாட்டையும் நிறுத்தி வைக்க பரிசீலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


— 2025 சட்டத்தின் கீழ், தற்போது வக்ஃப் ஆக பயன்படுத்தப்படும் நிலத்தை மாவட்ட ஆட்சியர் அரசு நிலமாக அடையாளம் கண்டால், நீதிமன்றம் சர்ச்சையை தீர்மானிக்கும்வரை அது வக்ஃப் நிலமாக இருக்காது. சட்டத்தின் பிரிவு 3(இ)-ன் முக்கிய நிபந்தனையில் இருந்து வரும் இந்த அதிகாரம், நீதிமன்றம் அதன் நிலையை தீர்மானிப்பதற்கு முன்பே வக்ஃப் நிலத்தின் நிலையை மாற்றக்கூடும்.


— வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்த்தல்: வக்ஃப் வாரியங்கள் மற்றும் வக்ஃப் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்கள் பங்கேற்க அனுமதிக்கும் 2025 சட்டம், அரசியலமைப்பின் சரத்துகள் 26(ஆ), 26(இ) மற்றும் 26(ஈ)-ஐ மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.


—வரம்புச் சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மை:: வக்ஃப் சொத்துக்கள் தொடர்பாக நெடுங்காலச் சட்டத்தின் (வரம்புச் சட்டம்) பொருந்துதன்மையை அனுமதிக்கும் 2025 சட்டத்தின் ஒரு விதியை சிபால் சவால் செய்தார். நெடுங்காலச் சட்டம் அடிப்படையில் குறிப்பிட்ட கால அளவு கடந்த பிறகு, அத்துமீறல் போன்றவற்றிற்கு எதிராக சட்டப்பூர்வ உரிமை கோருவதைத் தடுக்கிறது.


— 1995 வக்ஃப் சட்டம் குறிப்பாக வரம்புச் சட்டத்தின் (Limitation Act) பயன்பாட்டை விலக்கியது. இது வக்ஃப்கள் குறிப்பிட்ட கால வரம்பு இல்லாமல் அதன் சொத்துக்களில் அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதித்தது. 2025 சட்டம் அந்த விதிவிலக்கை நீக்கியது. இதற்கு, தலைமை நீதிபதி கன்னா, "வரம்புச் சட்டத்தில் நன்மைகளும் தீமைகளும் உள்ளன" என்றார்.


Original article:
Share:

இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து துறையில் கரிம நீக்க முயற்சியை (decarbonisation) வழிநடத்துதல் -ஷோபினி மண்டல், சஞ்சீவ் போஹித்

 உலகிலேயே மிகவும் கார்பன் செறிவு மிக்க துறைகளில் ஒன்றான இந்தியாவின் சரக்கு போக்குவரத்து துறை, பசுமை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்

வளர்ந்த இந்தியா (Viksit Bharat) வெறும் ஒரு பார்வை மட்டுமல்ல. இது 2047-ஆம் ஆண்டுக்குள் வலுவான, தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியாகும். இதன் மையமாக உள்ளாட்சி மேம்பாடு அமைந்துள்ளது. வளர்ச்சி ஒவ்வொரு குடிமகனையும், ஒவ்வொரு வணிகத்தையும், ஒவ்வொரு பகுதியையும் சென்றடைவதை உறுதி செய்கிறது. ஆனால் பெரிய, திறமையான மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள சரக்கு போக்குவரத்து துறை இல்லாமல் நாம் உண்மையிலேயே இந்த இலக்கை அடைய முடியுமா? தடையற்ற விநியோக சங்கிலிகள் முதல் கடைசி மைல் இணைப்பு வரை, திறமையான, விரிவுபடுத்தக்கூடிய சரக்கு போக்குவரத்து வலைப்பின்னல் சமமான மற்றும் நிலையான முன்னேற்றத்தின் வலிமையாகும்.

இந்த வளர்ச்சிப் பயணத்தில், உள்கட்டமைப்பு, திறன் மற்றும் அணுகல் ஆகியவை உள்ளடக்கிய சரக்கு போக்குவரத்து துறைக்கு முக்கியமானவை என்றாலும், இது கவனிக்கப்படாமல் இருக்க முடியாத ஒரு காரணியாக உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் அதன் முன்னுரிமை எதிர்காலத்திற்கு தயாரான, நெகிழ்திறன் கொண்ட சரக்கு போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்குவது முற்றிலும் அவசியமானது.  இப்போது உலகிலேயே மிகவும் கார்பன் செறிவு மிக்க துறைகளில் ஒன்றான இந்தியாவின் சரக்கு போக்குவரத்து துறை, பசுமை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை நோக்கி நாடு நகரும் நிலையில், போக்குவரத்து, கிடங்கு வசதி மற்றும் விநியோக சங்கிலி உமிழ்வுகளைக் குறைப்பது அவசியமாகும்.

இயக்கத்திற்கான கார்பன் செலவு

இந்தத் துறை தீவிர கார்பன் உமிழ்வுகளை உருவாக்குகிறது. முக்கியமாக எண்ணெய் சார்ந்த பயன்பாடுகளால் ஏற்படுகிறது. இது நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் சுமார் 13.5% பங்களிக்கிறது. சாலை போக்குவரத்து மட்டும் 88%-க்கும் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 90% மக்களின் பயணமும் 70% சரக்கு போக்குவரமும் சாலைகளில் மூலம் தான் நடக்கின்றன. கார்பன் உமிழ்வில் 38% லாரிகள் மட்டுமே காரணமாகின்றன

உள்நாட்டு விமானப் போக்குவரத்து உமிழ்வுகளில் சுமார் 4% பங்களிக்கிறது. கடலோர மற்றும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்தும் உமிழ்வை அதிகரிக்கிறது. அரசாங்கக் கொள்கைகள் 2030ஆம் ஆண்டுக்குள் விரைவான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளன. உள்நாட்டு நீர்வழிகளில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கடலோர கப்பல் போக்குவரத்து சரக்கு 1.2 மடங்கு அதிகரிக்கும். இந்த வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிக்கிறது மற்றும் அளவிடுதல் மற்றும் நிலைத்தன்மைக்கான இலக்குகளை அடைகிறது.

ஆனால், இந்தப் பிரச்சனை சாலையில் செல்லும் லாரிகளைப் பற்றியது மட்டுமல்ல. பொருட்களை நகர்த்த உதவும் கிடங்குகளும் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகள் ஒன்றாக இணைந்து நிலைமையை அவசரமாக்குகின்றன. வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இடையில் சரியான சமநிலையை நாம் கண்டறிய வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

எதிர்கால அணுகுமுறைகள் 

உலகளாவிய எடுத்துக்காட்டுகள் இந்த மாற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சரக்கு போக்குவரத்தை சாலையில் இருந்து ரயில்களுக்கு வெற்றிகரமாக மாற்றுகின்றன. ரயில் சரக்கு போக்குவரத்து சாலை போக்குவரத்தைவிட உமிழ்வுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது. சீனா தனது ரயில் வலைப்பின்னலை விரிவுபடுத்துவதில் கணிசமாக முதலீடு செய்துள்ளது. மேலும் ரயில்வேயின் பங்கு கிட்டத்தட்ட 50% ஆகும். அமெரிக்காவும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ரயில்வே ஆரம்பகால கார்பன் நீக்கம் செய்யப்பட்ட சரக்கு விருப்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா ரயில்கள் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். இது மாசுபாட்டை குறைத்து, செயல்திறனை மேம்படுத்தும். ரயில்கள் மின்மயமாக்கலை ஏற்கனவே பயன்படுத்துகின்றன. இது நிலைத்தன்மையான, கிட்டத்தட்ட பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் கொண்ட போக்குவரத்து முறையாகும்.

சாலை சரக்கு போக்குவரத்து மிகவும் முக்கியமானது மற்றும் அது தூய்மையானதாக மாற பெரிய மாற்றங்கள் தேவை. இந்த திசையில் இந்தியா ஒரு வலுவான நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கினார். மின்சார லாரிகளுக்கு  ஆற்றல் அளிக்க நெடுஞ்சாலைகளில் மேல்நிலை மின்சார கம்பிகளை நிறுவுதல். இந்த யோசனையின் முதல் சோதனை டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நடக்கிறது. இந்த திட்டம் லாரிகளிலிருந்து வரும் மாசுபாட்டைக் குறைக்க உதவும், அதே நேரத்தில் திறமையானதாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும்.

கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிகள் மாசுபாட்டைக் குறைக்க பெரிதும் உதவும். சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) 2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய கப்பல் வெளியேற்றத்தை 50% குறைக்க விரும்புகிறது (2008 நிலைகளுடன் ஒப்பிடும்போது). இதைச் செய்ய, கப்பல் துறை அம்மோனியா, ஹைட்ரஜன், LNG, உயிரி எரிபொருள்கள், மெத்தனால் மற்றும் மின்சாரம் போன்ற தூய்மையான எரிபொருட்களை நோக்கி நகர்கிறது. LNG மூலம் இயங்கும் கப்பல்கள், சூரிய சக்தியில் இயங்கும் மின்சார படகுகள் மற்றும் மின்சார அல்லது உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் படகுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியா தனது பசுமை முயற்சிகளை விரைவுபடுத்த முடியும். இந்த மாற்றங்கள் உமிழ்வைக் குறைக்கும் அதே வேளையில் பொருட்களை சீராகவும் நிலையானதாகவும் நகர்த்தும்.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை அதிகம் சார்ந்திருப்பதால், விமானப் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு கடினமான பகுதிகளில் ஒன்றாகும். அவை மாற்றுவதற்கு விலை அதிகம். இருப்பினும், புதிய நிலையான விமான எரிபொருள்கள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் சிறந்த எரிபொருள் திறன் ஆகியவை ஒட்டுமொத்த உமிழ்வைக் குறைக்க உதவும்.

கிடங்கு அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதால் உமிழ்வு அதிகரிக்கிறது. சூரிய சக்தி, காற்று மற்றும் புவிவெப்ப சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது கிடங்குகளின் கார்பன் வெளியீட்டை வெகுவாகக் குறைக்கும்.

முன்னோக்கி நகர்தல்

இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து துறையை கார்பன் நீக்கம் செய்வது என்பது மாசுபாட்டைக் குறைப்பதைவிட அதிகம். இது தொழில்துறையை வலுவாகவும், போட்டித்தன்மையுடனும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாற்றுவது பற்றியது. இந்தத் துறை பெரிய அளவில் மாற உள்ளது, மேலும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது நிலையான முறையில் வளர முக்கியமாகும்.

இந்தியா கீழ்கண்ட செயல்பாடுகள் மூலம் இதைச் செய்ய முடியும்:

- பொருட்களை நகர்த்துவதற்கு அதிக ரயில்களைப் பயன்படுத்துதல்,

- சாலைப் போக்குவரத்திற்கு மின்சார வாகனங்களுக்கு மாறுதல்,

- கப்பல்களுக்கு தூய்மையான எரிபொருட்களைப் பயன்படுத்துதல்,

- கிடங்குகள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துதல்.

இந்த நடவடிக்கைகள் திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு சிறந்த சரக்கு போக்குவரத்து துறை அமைப்பை உருவாக்க உதவும்.

பசுமையான எதிர்காலத்திற்கான பாதை தயாராக உள்ளது. இப்போது, ​​வேகமாக நகர வேண்டிய நேரம் இது.

சோவினி மொண்டல் புது தில்லியில் உள்ள தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலில் (NCAER) ஆராய்ச்சியாளராக உள்ளார். சஞ்சிப் போஹித் அதே அமைப்பில் பேராசிரியராக உள்ளார்.

Original article:
Share: