காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச நீதிமன்ற (ICJ) தீர்ப்பு ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்திகளில் ஏன்?


கடந்த வாரம், சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice (ICJ)) ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க நாடுகள் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளன என்று 15 நீதிபதிகள் கொண்ட குழு கூறியது. அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் பொறுப்பேற்கப்படலாம் மற்றும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கலாம். இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்தின் ஆலோசனையாக குறிப்பிட்டது. இது எந்த நாட்டையும் உடனடியாகப் பாதிக்காது. இருப்பினும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இது இன்னும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


முக்கிய அம்சங்கள் :


1. இந்த வழக்கு 3,00,000 மக்கள்தொகை கொண்ட பசிபிக் தீவு நாடான வனுவாட்டு-ஆல் (Vanuatu) தொடங்கப்பட்டது. மார்ச் 2023இல், சிறிய தீவு நாடுகளின் கூட்டணியை சர்வதேச நீதிமன்றத்திடம் (ICJ) இரண்டு கேள்விகளைக் கேட்க வழிவகுத்தது. அவை,


(i) காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்ய நாடுகள் சட்டப்பூர்வமாக என்ன செய்ய வேண்டும் மற்றும்


(ii) நாடுகள் இந்தக் கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால் என்ன நடக்கும்?


2. காலநிலை நடவடிக்கை என்பது நாடுகளுக்கான கொள்கை முடிவு மட்டுமல்ல என்பதை தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படும் உறுதிப்பாடாகும். இது வளரும் நாடுகளின் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. பணக்கார மற்றும் தொழில்மயமான உலகத்திலிருந்து வலுவான காலநிலை நடவடிக்கையை கோரும் அனைவரையும் இது ஆதரிக்கிறது.


3. குறிப்பாக, சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) கருத்து ஆலோசனைக்குரியது. அதாவது, இது ஐக்கிய நாடுகள் சபை அல்லது சிறப்பு நிறுவனங்களால் கோரப்பட்ட ஆலோசனைக் கருத்தின் பேரில் நீதிமன்றத்தால் வழங்கப்படும் பிணைக்கப்படாத சட்ட ஆலோசனையாகும். இருப்பினும், இது இந்த விஷயத்தில் சர்வதேச சட்டத்தின் மிகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையாகும். மேலும், உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் தங்கள் முன் வரும் வழக்குகளைத் தீர்மானிப்பதில் அதன் முடிவை நம்பியிருக்க வாய்ப்புள்ளது.


4. காலநிலை நடவடிக்கை என்பது ஒரு தேர்வு அல்லது விருப்பம் மட்டுமல்ல என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இது ஒரு சட்டப்பூர்வ கடமையாகும். பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் (greenhouse gas emissions) குறைக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


5. நாடுகளுக்கு உள்ள பல பொறுப்புகளையும் நீதிமன்றம் பட்டியலிட்டது. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுவது "சர்வதேச அளவில் தவறான செயல்" என்று கருதப்படும் என்று அது கூறியது. இந்தத் தோல்வி சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும். நாடுகள் பொறுப்பேற்கப்படலாம் மற்றும் காலநிலை பேரழிவுகள் அல்லது காலநிலை மாற்றத்தின் பிற விளைவுகளால் பாதிக்கப்படும் பிற நாடுகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்.


6. ICJ ஒரு முக்கியமான கருத்தை வழங்கியுள்ளது. அதாவது, காலநிலை பாதிப்புகளால் பாதிக்கப்படும் நாடுகள் "பாதிப்படைந்த நாடுகள்" (injured states) என்று அழைக்கப்படுகின்றன என்று கூறுகிறது. இந்த நாடுகள் இழப்பீட்டை விட அதிகமாக உரிமை பெற்றவை. அவர்களுக்கு முழு இழப்பீடு பெற உரிமை உண்டு. இது ஒரு பெரிய முன்னேற்றமாகும்.


7. உலகளாவிய தெற்கிலிருந்து சிறிய தீவு நாடுகள் மற்றும் பிற காலநிலையால்-பாதிக்கப்படும் நாடுகள் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் அந்தந்த திறன்களின் கொள்கையை (common but differentiated responsibilities and respective capabilities (CBDR-RC)) குறிப்பிட்டன. வளர்ந்த நாடுகள் காலநிலை நெருக்கடிக்கு அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அவர்கள் வாதிட்டனர். எனவே, இந்த நாடுகள் காலநிலை தணிப்பு மற்றும் நிதியுதவிக்கான பொறுப்பில் அதிக பங்கை ஏற்க வேண்டும்.


8. தீர்ப்பின் உண்மையான தாக்கம் எதிர்காலத்தில் மட்டுமே தெளிவாகத் தெரியும். காலநிலை தொடர்பான சட்ட வழக்குகளில் இது ஒரு முன்னுதாரணமாக எவ்வளவு அடிக்கடி குறிப்பிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது. அரசாங்கங்கள் தீர்ப்பை எவ்வாறு எதிர்கொள்கின்றன மற்றும் பயன்படுத்துகின்றன என்பதையும் இது சார்ந்துள்ளது.



காலநிலை மாற்றத்தின் நிலை குறித்து IPCC அறிக்கை நமக்கு என்ன சொல்கிறது?


1. காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) 1988-ல் நிறுவப்பட்டது. இது உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation (WMO)) மற்றும் UN சுற்றுச்சூழல் திட்டம் (UN Environment Programme (UNEP)) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. IPCC விரிவான மதிப்பீட்டு அறிக்கைகளை (assessment reports (AR)) உருவாக்குகிறது. இந்த அறிக்கைகள் காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் அறிவின் மிகவும் அதிகாரப்பூர்வமான ஆதாரமாகக் கருதப்படுகின்றன.


2. இதுவரை, IPCC ஆறு மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் இறுதி தொகுப்பு அறிக்கை மார்ச் 2023இல் வெளியிடப்பட்டது. IPCC இன் வலைத்தளத்தின்படி, அது இப்போது அதன் ஏழாவது மதிப்பீட்டு அறிக்கையில் இயங்கி கொண்டு வருகிறது. இந்த ஏழாவது சுழற்சி குறைந்தது 2029ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை.


3. ஆறாவது மதிப்பீட்டு அறிக்கைகள் மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டன. அவை மிகவும் தீவிரமான மற்றும் அடிக்கடி நிகழும் வெப்ப அலைகளை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் அதிகரிப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். கடல் மட்டங்கள் ஆபத்தான முறையில் உயர்ந்து வருகின்றன. வறட்சி நீடிக்கிறது. பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகி வருகின்றன.


4. அடுத்த இருபது ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பல பேரழிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அறிக்கைகள் எச்சரித்தன. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இந்த எச்சரிக்கை உண்மையாகவே உள்ளது.


5. அறிக்கையின்படி, 2030ஆம் ஆண்டுகளில் உலகம் 1.5 டிகிரி செல்சியஸ் புவி வெப்பமடைதல் வரம்பைக் கடக்க வாய்ப்புள்ளது. இது புவியின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும். இது மனிதர்களையும் பிற உயிரினங்களையும் கடுமையாக பாதிக்கும்.


6. இந்த பெரிய அளவிலான அழிவைத் தவிர்க்க இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் அறிக்கை கூறியது. ஆனால், இதற்கு மிகப்பெரிய உலகளாவிய முயற்சி தேவைப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும். 2050ஆம் ஆண்டுக்குள் அவை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்.


ICJ என்றால் என்ன, அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) எவ்வாறு வேறுபடுகிறது?


1. ICJ என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முதன்மை நீதித்துறை அமைப்பாகும். இது ஜூன் 1945-ல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தால் நிறுவப்பட்டது மற்றும் ஏப்ரல் 1946இல் பணியைத் தொடங்கியது. இது ஐ.நா.வின் ஆறு முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும்.


2. சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றத்தின் (Permanent Court of International Justice (PCIJ)) வாரிசு (successor) நீதிமன்றம் இதுவாகும். இது நாடுகளின் சங்கங்களின் மூலமாகவும், பிப்ரவரி 1922இல் நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள அமைதி அரண்மனையில் (Peace Palace) அதன் தொடக்க அமர்வை நடத்தியது.


3. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாடுகளின் சங்கங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் மாற்றப்பட்டது. சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றம் (PCIJ) சர்வதேச நீதிமன்றத்தால் (ICJ) மாற்றப்பட்டது. PCIJ போலவே, ICJ யும் ஹேக்கில் (Hague) உள்ள அமைதி அரண்மனையில் அமைந்துள்ளது. இது நியூயார்க் நகரில் இல்லாத ஐக்கிய நாடுகள் சபையின் ஒரே முக்கிய அமைப்பாகும்.


4. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நெதர்லாந்தின் ஹேக்கில் தலைமையகம் உள்ளது. இது 1998இல் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது "ரோம் சட்டம்" (Rome Statute) என்று அழைக்கப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து சுதந்திரமானது. இது சர்வதேச சமூகத்தைப் பற்றிய கடுமையான குற்றங்களை விசாரிக்கிறது. இவற்றில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றம் ஆகியவை அடங்கும்.


5. தற்போது, 123 நாடுகள் ஐ.சி.சி.யில் உறுப்பினர்களாக உள்ளன. இருப்பினும், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உறுப்பினர்கள் அல்ல. இந்தியா ரோம் சட்டத்தில் கையெழுத்திடவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை. ஆனால், இந்தியா ஐ.சி.ஜே.யில் உறுப்பினராக உள்ளது.


6. நாடுகளுக்கு இடையிலான தகராறுகளைக் கையாளும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) போலல்லாமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) தனிப்பட்ட நபர்களை விசாரணைக்கு உட்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் அவர்களை அதற்கு அனுப்பினால், ICC வழக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம்.



Original article:

Share:

இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் இரயிலை உருவாக்குவதற்கான தேடல் -ரோஷ்னி யாதவ்

 இந்திய இரயில்வே சமீபத்தில் தனது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல்  இரயில் பெட்டியை சோதித்த நிலையில், இந்தத் திட்டம் எதை உள்ளடக்கியது?, ஹைட்ரஜன் ஏன் எதிர்காலத்தின் எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


இந்த வார தொடக்கத்தில், இந்திய இரயில்வே சென்னையில் உள்ள அதன் ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory (ICF)) முதல் ஹைட்ரஜன் இயங்கும் இரயிலை வெற்றிகரமாக சோதித்தது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் இரயிலை (hydrogen-powered train) உருவாக்குவதற்கான தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் சோதனையில் இது ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது உலகின் சில இரயில்வே நிர்வாகங்கள் மட்டுமே முயற்சித்த ஒன்று மற்றும் பெரும்பாலான திட்டங்கள் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளன. இந்த சூழலில், இந்த திட்டம் மற்றும் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission) பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நாட்டின் இலக்கை ஆதரிப்பதால்,  ICF  திட்டம் இந்திய ரயில்வேக்கு முக்கியமானது. தூய்மையான எரிபொருளான ஹைட்ரஜனை அதிகமாகப் பயன்படுத்துவது புதைபடிவ எரிபொருட்களின் தேவையைக் குறைக்க உதவும்.


2. இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலம் இந்த திட்டத்தை 2020-21 ஆம் ஆண்டில் தொடங்கியது. இது இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில் இரண்டு வழக்கமான 1600 குதிரைத்திறன் (HorsePower (HP)) டீசல் என்ஜின்களை ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களில் இயக்க மாற்றுவது அடங்கும். இரண்டாவது பகுதியில் ஹரியானாவின் ஜிந்தில் ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை (refuelling station) அமைப்பதும் அடங்கும்.


3. திட்டத்தின் மொத்த செலவு தோராயமாக ரூ. 136 கோடி ஆகும். இதன் முதன்மையான வடிவமைப்பு, சரிபார்ப்பு மற்றும் சோதனை ஆகியவை இந்திய இரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (Research Design & Standards Organisation (RDSO)) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.


4. இந்த ஹைட்ரஜன் இரயில் ஹரியானாவில் உள்ள வடக்கு இரயில்வேயில் 356 கி.மீ தொலைவைக் கொணட ஜிண்ட் (Jind) மற்றும் சோனேபட் நிலையங்களுக்கு (Sonepat stations) இடையே இயங்கும். மேலும், இது இரண்டு சுற்று பயணங்களை மேற்கொள்ளும். ஜிண்டில் உள்ள ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதி 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.


5. இரயில்வேயில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் புதியது. மேலும், ஹைட்ரஜன் மிகவும் எரியக்கூடியது என்பதால் பல சவால்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்களுடன் வருகிறது. இந்த திட்டத்தில், இரண்டு டீசல் ரயில் பெட்டிகள் ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் இயங்கும் வகையில் மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியும் 220 கிலோ ஹைட்ரஜனை சிறப்பு சிலிண்டர்களில் கொண்டு செல்லும். அவை உயர் அழுத்தத்தில் (350 பார்) சேமிக்கப்படும். ஹைட்ரஜன் சிலிண்டர்கள் மற்றும் எரிபொருள் செல்களை வைத்திருக்கும் அமைப்பு மிகவும் முக்கியமானது. எனவே, இது பல முறை சோதிக்கப்படுகிறது.


6. ஹைட்ரஜன் மிகவும் இலகுவான தனிமம் ஆகும். இது நிறமற்றது, மணமற்றது, சுவையற்றது மற்றும் அதிக எரியக்கூடியது. அதன் பொதுவான பண்புகள் காரணமாக, ஹைட்ரஜனைக் கையாளும் போது பாதுகாப்பு நடவடிக்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


7. ஹைட்ரஜன் இரயிலில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும். இவற்றில் அழுத்தத்தை சரிசெய்யும் வால்வுகள், கசிவு கண்டறிதல் அமைப்புகள் மற்றும் நெருப்பு கண்டறியும் சென்சார்கள் ஆகியவை அடங்கும். இது வெப்பநிலை கண்டறிதல் அமைப்புகளையும் கொண்டிருக்கும். கூடுதலாக, இரயிலில் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட காற்றோட்டம் பொருத்தப்பட்டிருக்கும்.


8. பாதுகாப்பு தொடரபான தரங்களை உறுதி செய்வதற்காக ஒரு தனிபட்ட முறையில் மூன்றாம் தரப்பு பாதுகாப்பு தணிக்கையாளர் கொண்டுவரப்பட்டுள்ளார். இந்த தணிக்கையாளர் ஜெர்மனியைச் சேர்ந்த 'டெக்னிஷர் உபர்வாச்சுங்ஸ்வெரின் சுட்' (Technischer Überwachungsverein Süd’ (TUV-SUD)) ஆவார். பொறியியல் வடிவமைப்பு மற்றும் மாற்றும் பணி சென்னையின் ICF இல் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணியை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேதா சர்வோ டிரைவ்ஸ் (Medha Servo Drives) என்ற நிறுவனம் கையாள்கிறது.



எரிபொருளாக ஹைட்ரஜன்


1. இயற்கையில் மிகவும் பொதுவான தனிமமான ஹைட்ரஜன், மற்ற தனிமங்களுடன் இணைந்து மட்டுமே இருக்கும். மேலும், நீர் போன்ற இயற்கையாக நிகழும் சேர்மங்களிலிருந்து (இது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவின் கலவையாகும்) பிரித்தெடுக்கப்பட வேண்டும். இது ஒரு சுத்தமான மூலக்கூறு. ஆனால், அதைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆற்றல் மிகுந்தது.


2. சுத்தமான எரிபொருளாக ஹைட்ரஜனின் ஆற்றல் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக அறியப்படுகிறது. இருப்பினும், 1970ஆம் ஆண்டுகளின் எண்ணெய்யின் விலை உயர்வுக்கு பிறகுதான், ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்களை மாற்றும் என்று மக்கள் தீவிரமாக நினைத்தனர்.


3. ஹைட்ரஜனை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலங்கள் மற்றும் முறைகள் வண்ண லேபிள்களைப் பயன்படுத்தி வகைப்படுத்தப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கப்படும்போது, அது சாம்பல் ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. இன்று உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான ஹைட்ரஜன் இந்த வகையின் கீழ் வருகிறது.


4. ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பை (carbon capture and storage) உள்ளடக்கியது என்றால், அது நீல ஹைட்ரஜன் (blue hydrogen) என்று அழைக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் எலக்ட்ரோலைசர்களைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கப்படும்போது, அது பசுமை ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது.


5. பசுமை ஹைட்ரஜனுக்கு குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன :


(i) போக்குவரத்து, இரசாயனங்கள் மற்றும் இரும்பு மற்றும் எஃகு போன்ற பல்வேறு தொழில்களை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கப் பயன்படுத்தக்கூடிய தூய எரியும் மூலக்கூறாகும்.


(ii) புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம். இந்த ஆற்றல் கட்டத்தால் சேமிக்கவோ பயன்படுத்தவோ முடியாத அதிகப்படியான ஆற்றலாகும்.


தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்


1. தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission (NGHM)) 2023இல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா எரிசக்திக்கான சுதந்திரத்தை அடைய உதவுவதில் பசுமை ஹைட்ரஜனின் முக்கியத்துவத்தை இது அங்கீகரிக்கிறது. 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இந்தியாவின் இலக்கையும் இது ஆதரிக்கிறது.


2. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) ஆதரவுடன், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (NGHM), பசுமை ஹைட்ரஜனை இந்தியாவிற்கு வளர்ந்து வரும் மற்றும் நம்பிக்கைக்குரிய துறையாகக் கருதுகிறது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே இதன் குறிக்கோள் ஆகும்.


3. இந்த இலக்குகளை அடைய, 2030ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய போதுமான திறனை உருவாக்க இந்த திட்டத்தின் மூலம் திட்டமிட்டுள்ளது.



Original article:

Share:

மொத்த உள்நாட்டு உற்பத்தியை மறு மதிப்பீடு செய்தல் என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


ஜூலை 21 அன்று, நைஜீரியாவின் தேசிய புள்ளிவிவர பணியகம் (National Bureau of Statistics (NBS)) அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மறு மதிப்பீடு செய்தல் பயிற்சியின் (rebasing exercise) முடிவுகளை வெளியிட்டது. இந்தப் பயிற்சி 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை (base year) மற்ற மாற்றங்களுடன் புதுப்பித்தது. இதன் விளைவாக, 2024-ம் ஆண்டிற்கான நைஜீரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இப்போது பெயரளவு அடிப்படையில் $243 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) கணித்த $187 பில்லியனை விட அதிகம்.


ஒரு அடிப்படை ஆண்டை மாற்றுவது என்பது அந்த புதிய ஆண்டின் விலைகளைப் பயன்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதாகும். இந்த மாற்றம் மட்டும் எப்போதும் பொருளாதாரத்தை பெரிதாகக் காட்டாது. ஆனால், நைஜீரியாவின் திருத்தத்தில் பிற முக்கியமான மாற்றங்களும் அடங்கும். இருப்பினும், இந்த மாற்றங்கள் நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறையைப் பாதித்தன.


இதன் வழிமுறையின் நோக்கத்தை விரிவுபடுத்துவதும் இதில் அடங்கும். இது இப்போது டிஜிட்டல் சேவைகள், ஓய்வூதிய நிதி செயல்பாடுகள் மற்றும் மின் வணிக நடவடிக்கைகள் போன்ற முன்னர் குறைவாகக் கணக்கிடப்பட்ட துறைகளை உள்ளடக்கியது. NBS இதை "இதுவரை செய்த மிக விரிவான மறு மதிப்பீடு செய்தல்" (by far the most comprehensive rebasing) என்று அழைத்துள்ளது. NBS கூறியது போல், தொழில்நுட்ப மேம்பாடு, கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் "மொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவதில் பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் தரவு தற்போதைய பொருளாதார யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்" என்பதாகும்.


அடிப்படை ஆண்டு திருத்தம் காரணமாக நைஜீரியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவ்வளவு பெரிய அதிகரிப்பைக் கண்டது இது முதல் முறை அல்ல. ஒரு பத்தாண்டு காலத்திற்கும் மேலாக, 1990 முதல் 2010ஆம் ஆண்டு வரை அடிப்படை ஆண்டில் ஏற்பட்ட மாற்றம், 2014ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 சதவீதம் அதிகரிப்பு $510 பில்லியனாக அதிகரித்ததன் மூலம் நைஜீரியாவை ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நிலைக்கு உயர்த்த உதவியது.


உங்களுக்குத் தெரியுமா? :


மறுஅடிப்படை மாற்றம் நைஜீரியாவை 2030ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதற்கான அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு $50 பில்லியனை நெருங்கச் செய்தாலும், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நைஜீரிய நாணயமான நைரா (naira) கடுமையாக மதிப்பிழக்கச் செய்யப்பட்ட பிறகு இந்த இலக்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதன் விளைவாக, 2023இல் அமெரிக்க டாலருக்கு எதிராக நைரா 49 சதவீதமும், 2024இல் மேலும் 41 சதவீதமும் சரிந்தது.


மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மறு மதிப்பீடு செய்தல் நைஜீரிய பொருளாதாரத்தில் சில முக்கியமான மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த மாற்றங்கள் மிகவும் நேர்மறையானதாக இருக்காது. ஒன்று, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 2019ஆம் ஆண்டில் முந்தைய மதிப்பிடப்பட்ட 22 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 27.65 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் கடுமையாகக் குறைந்துள்ளது. மூன்றாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசாரா துறையின் பங்களிப்பு 41.4 சதவீதத்திலிருந்து 42.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இந்தியாவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் திருத்தங்களை நன்கு அறிந்திருக்கிறது. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படை ஆண்டை 2011-12 முதல் 2022-23ஆம் ஆண்டு வரை புதுப்பித்து வருகிறது. புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் பிப்ரவரி 2026இல் வெளியிடப்படும்.


இந்தியாவின் முக்கிய பொருளாதாரக் குறிகாட்டியானது, கடைசியாக 2015இல் ஒரு பெரிய திருத்தத்திற்கு உட்பட்டது. அப்போது 2013-14ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆரம்பத்தில் 4.7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தப்பட்ட பிறகு, இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) கூட எண்களின் துல்லியம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இது அப்போதைய ஆளுநரான இரகுராம் ராஜன், இந்திய மத்திய வங்கி "2013-2014 ஆம் ஆண்டில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதைப் பார்ப்பது கடினம்" என்று அவர் கூறினார்.



Original article:

Share:

மாநில நிதிநிலை அறிக்கைகள், பொருளாதாரம் பற்றி வெளிப்படுத்துவது என்ன? -அதிதி நாயர்

 மாநிலங்களின் மூலதன செலவினங்களை அதிகரிப்பதில் ஒன்றிய அரசின் உதவியானது முக்கிய பங்கு வகித்துள்ளது. இருப்பினும், மாநிலங்களின் கடன் வாங்கும் திறன் குறைவாக உள்ளது.


ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களின் நிதிநிலைமை ஒட்டுமொத்த பேரியல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இந்தக் கட்டுரையானது, 17 மாநில அரசாங்கங்களின் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் தவிர) பெரிய திட்ட மாதிரியின் நிதிப் போக்குகளை 2025 நிதியாண்டிற்கான பகுப்பாய்வு செய்கிறது மற்றும் நடப்பு நிதியாண்டு மற்றும் நடுத்தர காலத்திற்கு இந்தப் போக்குகள் எதைக் குறிக்கின்றன என்பதையும் இது ஆராய்கிறது. இந்த மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக, பட்ஜெட் மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது மாநிலங்களின் உண்மையான நிதி அளவீடுகளில் பரந்த மாறுபாடு காணப்படுகிறது. எனவே, முந்தைய ஆண்டின் உண்மையான நிலையுடன் ஒப்பிடும்போது 2025 நிதியாண்டிற்கான தற்காலிக உண்மைகள் (provisional actuals (PA)) வெளிப்படுத்திய போக்குகளில் இங்கு கவனம் செலுத்தப்படுகிறது.


2025 நிதியாண்டுக்கான பொது நிதிக் கணக்கெடுப்பானது, 17 மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை விரிவடைந்துள்ளதைக் காட்டுகிறது. இது ரூ.9.5 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.2 சதவீதமாகும். மேலும், இது நிதியாண்டு 2024இல் ரூ.7.8 டிரில்லியன் அல்லது GSDP இல் 2.9 சதவீதமாக இருந்தது. வருவாய் பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருந்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம். நிதியாண்டு 2024இல் ரூ.1.1 டிரில்லியன் (GSDP இல் 0.4 சதவீதம்) இலிருந்து நிதியாண்டு 2025 நிதியாண்டில் ரூ.2.1 டிரில்லியன் (GSDP இல் 0.7 சதவீதம்) ஆக உயர்ந்தது. மூலதனச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் ஒரு சிறிய பகுதியே மூலதனச் செலவின அதிகரிப்பால் ஏற்பட்டது. மூலதனச் செலவினம் ரூ.678 பில்லியன் அதிகரித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதம் ஆகும்.


2025 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, வருவாய் வரவுகளின் வளர்ச்சி வேகத்தில் ஏற்பட்ட மிதமான தன்மை காரணமாகும். இது 2024 நிதியாண்டில் 7.9 சதவீதத்திலிருந்து 2025 நிதியாண்டில் 6.3 சதவீதமாக அதிகரித்தது. அதே நேரத்தில், வருவாய் செலவினத்தில் ஆண்டுக்கு ஆண்டு நிலையான 9 சதவீத உயர்வு இருந்தது.


நிதியாண்டு 2025இல் மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்தது. அதாவது, இது வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்ட ஒன்றியத்திலிருந்து இது வேறுபட்டது. நிதிப் பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறையின் அதிக பங்கு மாநில நிதிக்கு நல்லதல்ல. மாநிலங்கள் வருவாய் செலவினங்களைச் செலுத்த தங்கள் வரையறுக்கப்பட்ட கடன் இடத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை இது காட்டுகிறது. வருவாய் செலவுகள் பொதுவாக மூலதனச் செலவினங்களை விட குறைவான உற்பத்தித் திறன் கொண்டவை. எடுத்துக்காட்டாக, 2025 நிதியாண்டில், 17 மாநிலங்களின் மொத்த மூலதனச் செலவு அவற்றின் நிதிப் பற்றாக்குறையில் 78% ஆக இருந்தது. இது 2022-24 நிதியாண்டின் போக்கை விடக் குறைவு, அப்போது நிதிப் பற்றாக்குறையில் 80-90% மூலதனச் செலவினங்களுக்கு (மூலதனச் செலவினத்திற்கு) பயன்படுத்தப்பட்டது.


17 மாநிலங்களின் ஒருங்கிணைந்த மூலதனச் செலவு நிதியாண்டு 2025இல் ரூ.7.4 டிரில்லியனாக இருந்தது. இந்தத் தொகை நிதியாண்டு 2024-ல் செலவினத்தை விட ரூ.678 பில்லியன் அதிகமாகும். இருப்பினும், நிதியாண்டு 2025இல் மூலதனச் செலவினத்தில் (மூலதனம்) ஏற்பட்ட அதிகரிப்பு, நிதியாண்டு 2022 முதல் நிதியாண்டு 2024 வரை காணப்பட்ட அதிகரிப்பை விட மிகக் குறைவு. இது ரூ. 910 பில்லியனில் இருந்து ரூ. 1,120 பில்லியனாக இருந்தது. மற்றொரு எதிர்மறையான போக்கு என்னவென்றால், மாநிலங்கள் மூலதனத்திற்காக அவற்றின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை (Revised Estimates (RE)) விட ரூ. 1.1 டிரில்லியன் குறைவாகச் செலவிட்டன. இது ஒன்றிய அரசிலிருந்து வேறுபட்டது. இது அதன் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட அதிகமாகச் செலவிட்டது.


பிப்ரவரி 2025 இறுதி வரை, மாநிலங்களின் மூலதனம் முந்தைய ஆண்டின் செலவினத்தை விடக் குறைவாக இருந்தது. ஆனால் மார்ச் 2025இல், மாநிலங்களின் மூலதனம் ஆண்டுக்கு ஆண்டு (year-on-year (YoY)) 42% கடுமையாக உயர்ந்து ரூ.2.2 டிரில்லியனாக உயர்ந்தது. இது மார்ச் 2024-ல் ரூ. 1.5 டிரில்லியனில் இருந்து அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு முக்கியமாக உத்தரபிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் அதிக செலவினங்களால் ஏற்பட்டது.


இந்த மாநிலங்களின் மொத்த வருடாந்திர மூலதனத்தில் சுமார் 30% மார்ச் 2025இல் நடந்தது. இது மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது மிக அதிகமான பங்காகும். மாநில அரசு பத்திரங்கள் மூலம் மாநிலங்கள் கடன் வாங்குவது மார்ச் மாதத்தில் அடிக்கடி அதிகரிப்பதற்கு இந்த பின்-முடிவு செலவினமும் ஒரு முக்கிய காரணமாகும்.


சமீபத்திய ஆண்டுகளில் மூலதனச் செலவு கடன் திட்டத்தின் மூலம் இந்திய அரசு (Government of India (GoI)) மாநிலங்களுக்கு சிறப்பு உதவியை வழங்கியுள்ளது. மூலதனத் திட்டங்களுக்கான செலவினங்களை அதிகரிப்பதில் இந்த உதவி முக்கியமானது. 2025 நிதியாண்டில் (FY2025), அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1.5 டிரில்லியன் மூலதனக் கடன்கள் வழங்கப்பட்டன. இந்தத் தொகை, நிதியாண்டு 2024இல் வழங்கப்பட்ட ரூ.1.1 டிரில்லியனை விட அதிகமாகும்.


கடந்த கால தரவுகளைப் பார்க்கும்போது, 17 மாநிலங்கள் நிதியாண்டு 2025இல் ரூ.1.13 டிரில்லியன் மூலதனக் கடன்களைப் பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதியாண்டு 2024இல் ரூ.0.8 டிரில்லியனில் இருந்து அதிகமாகும். மூலதனக் கடன்களின் அதிகரிப்பு, நிதியாண்டு 2025இல் இந்த 17 மாநிலங்களின் கூடுதல் மூலதனச் செலவினங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக ஈடுகட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது.


2026 நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளைப் பொறுத்தவரை, 17 மாநிலங்கள் ரூ.9.5 டிரில்லியன் மூலதனச் செலவினங்களைத் திட்டமிட்டுள்ளன. இந்தத் தொகை கடந்த ஆண்டை விட 29.2 சதவீதம் அதிகம். அதாவது, நிதியாண்டின் 2025 திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, நிதியாண்டின் 2026 நிதியாண்டில் கூடுதலாக ரூ.2.1 டிரில்லியன் செலவிடப்படும். இந்த அதிகரிப்பு நிதியாண்டின் 2022 முதல் நிதியாண்டின் 2024 வரை காணப்பட்ட சராசரி கூடுதல் மூலதனச் செலவான ரூ.1 டிரில்லியனை விட இரு மடங்கு அதிகம். இவ்வளவு பெரிய அதிகரிப்பு சற்று சாத்தியமில்லை.


2026 நிதியாண்டிற்கு அப்பால் பார்க்கும்போது, நிதி மற்றும் ஊதியக் குழுக்களின் பரிந்துரைகள் மாநில நிதிகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி தொடர்பான மாற்றங்களும் அவற்றைப் பாதிக்கும். அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புகள் மற்றும் நிதி பற்றாக்குறை இலக்குகளுக்குள் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க மாநிலங்களை ஊக்குவிக்கும் எந்தவொரு சலுகைகளும் மிகவும் உதவியாக இருக்கும்.


எழுத்தாளர் ICRA இன் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் Research & Outreach  அமைப்பின் தலைவர் ஆவார்.



Original article:

Share:

தமிழ்நாட்டில் அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசினார்: அது என்ன மற்றும் யாருக்கு பயனளிக்கும்? -அனிஷ் மொண்டல்

 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் (Amrit Bharat Station Scheme (ABSS)) இந்திய ரயில்வே வலையமைப்பில் உள்ள நிலையங்களை மேம்படுத்துவதைநோக்கமாகக் கொண்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு பயணம் செய்தபோது, நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலின் புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளதாகக் கூறினார். ஜூலை 26 அன்று தூத்துக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே மேம்படுத்தல் திட்டத்தில் தமிழ்நாடு ஒரு முக்கிய பகுதியாகும். அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 நிலையங்களை அரசு மறுவடிவமைப்பு செய்து வருகிறது என்றார்.


2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் இந்திய ரயில்வே வலையமைப்பில் உள்ள நிலையங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் ஒரு நீண்டகால தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. இதில் முக்கிய திட்டங்களை உருவாக்குதல், பல்வேறு வகையான இணைப்பை ஊக்குவித்தல், பயணிகளுக்கு சிறந்த ரயில் நிலைய அணுகல் போன்றவை அடங்கும்.

அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் ஏன் தொடங்கப்பட்டது?


ரயில் நிலையங்களை தூய்மையாகவும், வசதியாகவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாற்றுவதற்காக அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டது. மேம்படுத்தல்களுக்குப் பிறகு, ரயில் நிலையங்களில் சிறந்த திறந்தவெளிப் பகுதிகள், காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், மின்தூக்கி, மின்படிக்கட்டுகள், இலவச வைஃபை, ஓய்வறைகள், சந்திப்பு இடங்கள், தோட்டங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


ஒவ்வொரு நிலையத்திலும் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.


அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் எத்தனை ரயில் நிலையங்கள் உள்ளன?


ரயில்வே அமைச்சகம், அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், 1,300க்கும் மேற்பட்ட நிலையங்கள் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.


மே மாதத்தில், பிரதமர் மோடி 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் அமைந்துள்ள 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்து வைத்தார். இந்த நிலையங்கள் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.


மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்கள்


இந்த ரயில் நிலையங்கள் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன:


ஆந்திரப் பிரதேசம்  : சூல்லூர்பேட்டை

அசாம்                      : ஹைபர்கான்

பீகார்                        : பிர்பைண்டி, தாவே

சத்தீஸ்கர்                 : டோங்கர்கர், பானுபிரதாப்பூர், பிலாய், உர்குரா, அம்பிகாபூர்

குஜராத்                    : சமகியாலி, மோர்பி, ஹப்பா, ஜாம் வந்தலி, கனலஸ் சந்திப்பு, ஓகா, 

                மிதாபூர், ரஜூலா சந்திப்பு, சிஹோர் சந்திப்பு, பாலிதானா, மஹுவா, ஜாம் ஜோத்பூர், லிம்ப்டி, டெரோல், கரம்சாத், உத்ரான், கொசம்பா  சந்திப்பு, டாகோர்

ஹரியானா                : மண்டி டப்வாலி

இமாச்சல பிரதேசம்  : பைஜ்நாத் பப்ரோலா

ஜார்கண்ட்                 : சங்கர்பூர், ராஜ்மஹால், கோவிந்த்பூர் சாலை

கர்நாடகா                  : முனிராபாத், பாகல்கோட், கடக், கோகக் சாலை, தார்வாட்

கேரளா                      : வடகரா, சிராயின்கீழ்

மத்தியப் பிரதேசம்     : ஷாஜாபூர், நர்மதாபுரம், கட்னி தெற்கு, ஸ்ரீதம், சியோனி, ஓர்ச்சா

மகாராஷ்டிரா           : பரேல், சின்ச்போக்லி, வடலா சாலை, மாட்டுங்கா, ஷஹாத், 

                                    லோனந்த், கெட்கான், லாசல்கான், முர்திசாபூர் சந்திப்பு, தேவ்லாலி, 

                                    துலே, சவ்தா, சந்தா கோட்டை, NSCB இத்வாரி சந்திப்பு, அம்கான்

புதுச்சேரி                    : மாஹே

ராஜஸ்தான்            : ஃபதேபூர் ஷேகாவதி, ராஜ்கர், கோவிந்த் கர், தேஷ்னோக்,

கோகமேரி, மாண்டவர் மஹுவ சாலை, பூண்டி, மண்டல் கர்

தமிழ்நாடு              : சமல்பட்டி, திருவண்ணாமலை, சிதம்பரம், விருத்தாசலம் சந்திப்பு, 

                              மன்னார்குடி, போளூர், ஸ்ரீரங்கம், குளித்துறை, செயின்ட் தாமஸ் மவுண்ட்

தெலுங்கானா         : பேகம்பேட், கரீம்நகர், வாரங்கல்

உத்தரப்பிரதேசம்  : பிஜ்னோர், சஹாரன்பூர் சந்திப்பு, இத்கா ஆக்ரா சந்திப்பு, கோவர்தன், ஃபதேஹாபாத், கர்ச்சனா, கோவிந்த்புரி, பொக்ராயன், இஸ்ஸத்நகர், பரேலி  நகரம், ஹத்ராஸ் நகரம், உஜானி, சித்தார்த் நகர், சுவாமிநாராயண் சாப்பியா, மைலானி சந்திப்பு, கோலா கோகரநாத், ராம்காட் ஹால்ட், சுரைமான்பூர், பல்ராம்பூர்

மேற்கு வங்காளம்     : பனகர், கல்யாணி கோஷ்பரா, ஜாய்சண்டி பஹார்  போன்றவையாகும்.


Original article:

Share:

அரசியலமைப்பின் பிரிவு 143(1) என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலம் vs தமிழ்நாடு ஆளுநர் (The State of Tamil Nadu vs The Governor of Tamil Nadu) வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழும் குடியரசுத்தலைவரின் கேள்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வரவிருக்கும் விசாரணை மிக முக்கியமானது மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.


• நீதிமன்றத்தின் கருத்து சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை, ஆனால் எதிர்காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதில் அது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.


• தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் நீண்ட காலமாக தாமதம் செய்து வருவதை நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இந்த தாமதம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக ஒரு காலக்கெடுவை குறிப்பிடவில்லை என்றாலும், ஆளுநர் நியாயமாகவும் சரியான நேரத்திற்குள் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் விளக்கியது. அரசாங்க விதிகளின் அடிப்படையில், அரசாங்கத்தின் பரிந்துரையைப் பெற்ற மூன்று மாதங்களுக்குள் ஆளுநர் அல்லது குடியரசுத்தலைவர் ஒரு மசோதாவை முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


• ஆளுநரின் நடவடிக்கைகள் பற்றிப் பேசும்போது இந்தத் தீர்ப்பு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் குறித்த நீதிமன்றத்தின் நியாயமும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது குடியரசுத் தலைவர் நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்ற அதன் பரிந்துரையும் சிக்கலாக இருக்கலாம். நீதிமன்றம் தனது அதிகாரத்தை மீறுவது குறித்த கவலைகளை இது எழுப்புகிறது.


• அரசு அல்லது நாடாளுமன்ற முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது  (குறிப்பாக தேசிய அதிகார விஷயங்களில்) அரசியலமைப்பில் அதிகார சமநிலையை சீர்குலைப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. தமிழ்நாடு வழக்கில், நீதிமன்றங்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பு அரசாங்கத்திற்கு விட்டுச்செல்லும் பகுதிகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றமே கூறியது. நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரங்களை கவனமாகவும் சமநிலையான முறையிலும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சமீபத்தில் ஆதரித்தார்.


உங்களுக்குத் தெரியுமா?


• ஏப்ரல் 8 அன்று, நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்தது. மேலும், முதல் முறையாக, அத்தகைய பரிந்துரை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆளுநரால் பரிசீலிக்க ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அரசியலமைப்பின் பிரிவு 201இன் கீழ், குடியரசுத்தலைவரின் முடிவுக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.


• அரசியலமைப்பின் பிரிவு 143(1) இன் கீழ், எந்தவொரு சட்ட அல்லது உண்மை பிரச்சினையிலும் குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கலாம். இந்தக் கருத்து நீதிமன்றத் தீர்ப்பைப் போல பிணைக்கப்படவில்லை.


• இந்திய அரசுச் சட்டம், 1935ஆம் ஆண்டு பழைய இந்திய அரசுச் சட்டத்தின் விதியை விரிவுபடுத்தியது.  எனவே, இப்போது உச்ச நீதிமன்றம் சட்ட மற்றும் உண்மை கேள்விகள் இரண்டிலும் கருத்துக்களை வழங்க முடியும். சில கற்பனையான கேள்விகளுக்கு கூட பதிலளிக்க முடியும்.


• பிரிவு 143இன் கீழ் ஒரு கேள்வி “எழுந்திருந்தால் அல்லது எழ வாய்ப்பிருந்தால்", மற்றும் "இது மிகவும் இயல்புடையதாகவும் பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தால் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவது பொருத்தமானதாக இருந்தால்" குறிப்பிடப்படலாம்.


• பிரிவு 145(3)இன் படி, அத்தகைய எந்தவொரு பரிந்துரையையும் ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை கருத்துடன் அந்தக் குறிப்பை குடியரசுத்தலைவருக்கு திருப்பி அனுப்புகிறது.


• அரசியலமைப்பின் கீழ், அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் செயல்படுகிறார். ஆலோசனை அதிகார வரம்பு சில அரசியலமைப்பு விஷயங்களில் செயல்பட,  தன்னிச்சையான ஆலோசனையைப் பெற அவருக்கு வழிவகை செய்கிறது. இது 1950ஆம் ஆண்டு முதல் குறைந்தது 15 சந்தர்ப்பங்களில்  குடியரசுத்தலைவர் பயன்படுத்திய ஒரு அதிகாரமாகும்.



Original article:

Share: