ஆதார்: புதிய அம்சங்கள் முக்கியப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றன -ரூப குத்வா

 QR குறியீடு பயன்பாடு, என்பது தனியுரிமையை உறுதிசெய்து, குடிமக்களின் தரவு மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும்.


UIDAI ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இது விரைவில் QR குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தும். இந்த செயலியானது, மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை வீட்டிலிருந்தே புதுப்பிக்க அனுமதிக்கும். பெரும்பாலான புதுப்பிப்புகளை இணையவழியில் மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணை மாற்றுதல் போன்றவை இதில் அடங்கும். இருப்பினும், கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் இணையவழியில் மேற்கொள்ள முடியாது.


இந்த புதிய செயலியானது, நவம்பர் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது PAN, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் PDS மற்றும் MNREGA பதிவேடுகள் போன்ற சரிபார்க்கப்பட்ட அரசு தரவுத்தளங்களைப் பயன்படுத்தும்.  இந்த தரவுத்தளங்கள் பயனர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க உதவும். இந்த சரிபார்ப்பு அமைப்பில் மின்சார பில் தரவுத்தளங்களைச் சேர்ப்பது குறித்தும் அவர்கள் யோசித்து வருகின்றனர். இது காகிதப்பணிகளைக் குறைக்கும். இது போலி ஆவணங்களின் பயன்பாட்டை நிறுத்தவும் உதவும்.


இந்த செயலி QR குறியீடு அடிப்படையிலான ஆதார் பகிர்வையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் பயனர்கள் தங்கள் தரவை எப்போது, எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு ஹோட்டலில் தங்கும் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் முழு மின்-ஆதார் அல்லது மறைக்கப்பட்ட பதிப்பைப் பகிர்ந்து கொள்ளத் தேர்வுசெய்யலாம் மற்றும் பாதுகாப்பாக பகிர  முடியும். இந்தப் பகிர்வு வாடிக்கையாளரின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே நடக்கும்.


புதுப்பிப்புகளை எளிதாக்கவும், பாதுகாப்பாகவும், ஆதார் பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தவும் இது உறுதியளிக்கிறது.


மாற்றியமைக்கும் காரணி


பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் மிகவும் முக்கியமானது. இது இந்தியாவின் டிஜிட்டல் அடையாள அமைப்பின் முக்கிய பகுதியாகும். ஆதார் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை ஒரு தனித்துவமான 12 இலக்க பயோமெட்ரிக் ஐடியுடன் இணைக்கிறது. இது ஒரு மாற்றியமைக்கும் காரணியாக உள்ளது. ஆதார் இப்போது இந்தியர்களின் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இது மக்கள் பல சேவைகளை அணுக உதவுகிறது. இந்த சேவைகளில் ரேஷன், வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள், சிம் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் குறைந்த விலையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான அடித்தளத்தையும் ஆதார் உருவாக்குகிறது. இந்த உள்கட்டமைப்பு உலகம் முழுவதிலுமிருந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.


ஆதார் அமைப்பானது தரவு பாதுகாப்பு, விலக்கு மற்றும் பயன்பாட்டினைப் பற்றிய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதார் ஒரு புதிய கட்டத்திற்குள் நகரும்போது, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்துள்ளது. இந்த மேம்பாடுகள் வசதியை மட்டுமல்ல, நம்பிக்கையையும் மேம்படுத்தலாம்.


சிக்கல்கள்


பல ஆண்டுகளாக பயனர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டியுள்ள மூன்று முக்கிய சவால்கள் உள்ளன. இதன் ஒரு பெரிய பிரச்சனை, ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது ஆகும். சமீபத்திய ஆராய்ச்சி எதுவும் இல்லை என்றாலும், 2019இல் டால்பெர்க் மேற்கொண்ட ஆய்வு சில நுண்ணறிவுகளை அளிக்கிறது. தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க முயற்சித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அதை கடினமாகக் கண்டதாகக் கண்டறிந்தது. மேலும், அவர்களில் 20% பேர் புதுப்பிப்புக்கான செயல்முறையை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.


பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே முரண்பாடானது குறிப்பாக வலுவாக உள்ளது. வீடற்ற தனிநபர்கள் மற்றும் மூன்றாம் பாலின மக்கள் சேர்க்கைக்கு அதிக தடைகளையும், விலக்கப்படுவதற்கான அதிக ஆபத்தையும் எதிர்கொள்கின்றனர் டல்பெர்க் ஆய்வில், வீடற்ற மக்களில் சுமார் 30% பேருக்கு ஆதார் அட்டை இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், மூன்றாம் பாலினத்தவர்களில் 27% பேருக்கும் ஆதார் இல்லை. அவர்கள் பதிவு செய்யப்பட்டபோது கூட, பெரும்பாலும் செயல்முறை கடினமாக (process difficult) அவர்களுக்கு இருந்தது. அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாததால் இந்த சிரமம் பெரும்பாலும் ஏற்பட்டது. மூன்றாம் பாலினத்திற்கு, மற்றொரு சிக்கல் இருந்தது. அவர்களின் பாலின அடையாளம் பெரும்பாலும் தவறாகப் பதிவு செய்யப்பட்டது. பாலின அடையாளத்தை தவறாக வகைப்படுத்துவது மிகவும் பொதுவானது. இது சேவைகள் மறுக்கப்படுவதற்கும் முறையான விரக்திக்கும் வழிவகுத்தது.


டிஜிட்டல் ஐடி அமைப்புகள் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, மக்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. ஆதார் புதுப்பிப்புகளை டிஜிட்டல் மற்றும் பரவலாக்கப்பட்டதாக மாற்றுவதற்கான UIDAI-யின் முயற்சிகள் உதவியாக இருக்கும். இந்த மாற்றங்கள் நீண்டகால புகார்களுக்கு பதிலளிக்கின்றன. அவை வலுவான மற்றும் நெகிழ்வான அடையாள அமைப்பையும் உருவாக்குகின்றன.


இருப்பினும், தனியுரிமை (privacy) மற்றும் தவறான பயன்பாடு (misuse) பற்றிய கவலை உள்ளது. இந்த மையப்படுத்தப்பட்ட அமைப்பின் யோசனை-நலன்சார்ந்த பலன்கள் முதல் மொபைல் எண்கள் மற்றும் நிதிச் சேவைகள் வரை அனைத்தையும் ஒரே ஐடியுடன் இணைக்கிறது. இது மக்களை பாதுகாப்புகளில் அதிக கவனம் செலுத்த வைத்துள்ளது. இந்த பாதுகாப்புகள் சட்டப்பூர்வமாக மட்டுமல்லாமல் பயன்படுத்த எளிதாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.


சில வழிகளில், புதிய QR குறியீடு அடிப்படையிலான பயன்பாடு ஒரு முக்கியமான குறியீட்டு மாற்றமாகும். இது பயனர்களுக்கு அவர்களின் அடையாளத்தைக் கட்டுப்படுத்தவும், அணுகலைக் கட்டளையிடவும், தரவு வெளிப்பாட்டைக் குறைக்கவும் உதவுகிறது. நன்கு செயல்படுத்தப்பட்ட ஒப்புதலுக்கான கட்டமைப்பு பயனர் அமைப்பை வலுப்படுத்துவதோடு அதிக நம்பிக்கையையும் வளர்க்கும்.

டிஜிட்டல் அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்


ஆதாரின் டிஜிட்டல் அம்சங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளன. பல பயனர்கள் இ-ஆதாரை விட அசல் புகைப்பட நகல்களை நம்பியுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு குறைவாக உள்ளது. தகவல்தொடர்பு பிரச்சாரங்கள், ஆதரவு சேவைகள் மற்றும் மொபைல் கல்வியறிவு முயற்சிகள் ஆகியவற்றுடன் இல்லாவிட்டால், சிறந்த கருவிகள் கூட அணுக முடியாத நிலையில் இருக்கும். ஆஃப்லைன் முறையில் புதுப்பிப்புகளுக்கான எளிதான விருப்பங்களைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

எதிர்காலத்தைப் பார்க்கும்போது


ஆதாரின் கதை எப்போதும் ஒரு சமநிலைப்படுத்தும் செயலாக இருந்து வருகிறது. இது நுணுக்கத்துடன் அளவை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. இது மையப்படுத்தலை பரவலாக்கத்துடன் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. மற்றொரு சமநிலையானது லட்சியத்திற்கும், அனுதாபத்திற்கும் இடையில் உள்ளது.


ஆதாரில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் ஒரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றமாகும். இந்த மாற்றங்கள் விலக்கைக் குறைக்க முடியுமா என்பதைப் பொறுத்து வெற்றி அமையும். அவை நம்பிக்கையையும் அதிகரிக்க வேண்டும். மிக முக்கியமாக, அவை அனைத்து குடிமக்களுக்கும் சமமாக சேவை செய்ய வேண்டும். இதில் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் இதில் அடங்குவர்.


அடுத்த கட்டமாக, ஆதார் இணைக்கப்பட்ட தனிப்பட்ட தரவின் தனியுரிமை, ஒப்புதல் மற்றும் பொறுப்பான பயன்பாடு குறித்த விதிமுறைகளை வலுப்படுத்துவதாகும். அரசாங்கம் ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP) Act) சட்டம், 2023 உடன் இணைக்கப்பட உள்ளது.


இது பயனர்களுக்கு அவர்களின் தரவு மீது அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது. இது குறைவான தரவைச் சேகரிப்பது, மக்கள் தங்கள் தரவை நீக்க அனுமதிப்பது மற்றும் ஆதார் தரவை எவ்வாறு மீண்டும் பயன்படுத்தலாம் அல்லது பகிரலாம் என்பதில் கடுமையான விதிகளை வகுக்க கவனம் செலுத்துகிறது.


இந்தியா தனது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும்போது, ஆதார் அமைப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும், மேலும் புதிய யோசனைகள், கவலைகள் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக மாறும்.


எழுத்தாளர் ஒரு வணிகத் தலைவர் மற்றும் தொடக்க முதலீட்டாளர் ஆவர்.



Original article:

Share:

இந்தியா-சீன உறவுகளை மறுசீரமைத்தல்

 இவை தலாய் லாமாவின் வாரிசுரிமை மற்றும் சீனாவின் வர்த்தகம் மற்றும் வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகள் போன்ற வெளிப்புற காரணிகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.


வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் சீனாவில் இந்தியா-சீன உறவுகளின் ஒரு முக்கியமான நேரத்தில் இருக்கிறார். இதில் முக்கியமாக, நான்கு ஆண்டுகால எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) இராணுவ மோதலுக்குப் பிறகு இந்த உறவுகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation (SCO)) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்திற்காக ஜெய்சங்கர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கையின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் அவர் வழிநடத்தினார்.


இருநாடுகளின் உறவை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார். இதற்காக, பதட்டங்களைக் குறைப்பது போன்ற எல்லைப் பிரச்சினைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் தனது சீனப் பிரதிநிதி வாங் யீயிடம் கூறினார். பொதுவாக, இயல்புநிலை செயல்பாட்டில் வெளிப்புற தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதையே முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இந்த வெளிப்புற காரணிகளில் தலாய் லாமாவின் வாரிசுரிமை மற்றும் சீனாவின் வர்த்தகம் மற்றும் வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.


இருப்பினும், சில சிக்கல்கள் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா அளித்த ஆதரவு இந்திய-சீன உறவுகளை பாதித்துள்ளது. திபெத்தில் சீனாவின் வலுவான நிலைப்பாடும் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். சீன செய்தித் தொடர்பாளர் திபெத்தை உறவுகளில் ஒரு "முள்" (thorn) என்றும் இந்தியாவிற்கு ஒரு "சுமை" (burden) என்றும் கூறினார். அரியவகை மண் தாதுக்கள் மற்றும் உரங்கள் போன்ற முக்கியமான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சீனாவின் கட்டுப்பாடுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.


தலாய் லாமா ஒரு "பிரிவினைவாத" (separatist) அரசியல் தலைவர் மட்டுமல்ல என்பதை பெய்ஜிங் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், உலகம் அவ்வாறு நினைக்க வேண்டும் என்று விரும்புகிறது. இன்று அவர் மிகவும் மதிக்கப்படும் பௌத்தத் தலைவராகவும், சிலருக்கு கடவுளாகவும், மற்றவர்களுக்கு குருவாகவும் இருக்கிறார். மேலும் அவரது ஆதரவாளர்கள் நாடுகடந்தவர்களாகவும் உள்ளனர். தலாய் லாமாவை மதிக்கும் மில்லியன் கணக்கான பௌத்தர்கள் இந்தியாவில் உள்ளனர். இதன் காரணமாக, இந்தியா அவரது இருப்பை கவனமாகக் கையாளும்.


இந்தியா மதத்தையும் அரசியலையும் பிரிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இங்குள்ள அரசியல் தலைவர்கள் பொதுவாக மத விஷயங்களில், குறிப்பாக மத விவகாரங்கள் மற்றும் வாரிசுரிமை பற்றிய முடிவுகளில் தலையிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். இதை சம்பந்தப்பட்டவர்கள் கேட்கும்போது மட்டுமே நீதிமன்றங்கள் தலையிடுகின்றன.


தலாய் லாமாவின் வாரிசுரிமை விஷயத்தில், பெய்ஜிங்கை எதிர்க்க இந்தியா சூழ்நிலையைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதற்கு பதிலாக, ஒரு ஆன்மீகத் தலைவராகவும், ஒரு பெரிய மத சமூகத்தின் தலைவராகவும் தலாய் லாமாவுக்கு அவர் தகுதியான மரியாதையை வழங்க விரும்புகிறது. தனது வாரிசு யார் என்பதை தீர்மானிப்பதில் பௌத்தத்தை பின்பற்றுபவர்களின் தேர்வை இந்தியா ஏற்றுக்கொள்ளும்.


சீனா தனது சமூகத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை விரும்புகிறது, எனவே அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் கருத்தை அது புரிந்து கொள்ளவில்லை. தலாய் லாமாவுடனான இந்தியாவின் அணுகுமுறையை சீனா தொடர்ந்து அரசியல் ரீதியாக மட்டுமே பார்க்கிறது. திபெத்துக்கு அதிக சுயாட்சி மற்றும் திபெத்திய மக்களுக்கு பாதுகாப்பை மட்டுமே விரும்புவதாக தலாய் லாமா பலமுறை கூறியுள்ளார். இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் அவரது அறிக்கையும், இந்தியா அவரை எவ்வாறு பார்க்கிறது என்பதையும் இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்.



Original article:

Share:

உலகளாவிய புவிசார் அரசியலில் "பலமுனை உலகம்" (Multipolar World) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


  • பாலகிருஷ்ணனுடனான சந்திப்பிற்குப் பிறகு, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் "இதயத்தில்" சிங்கப்பூர் இருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். சிங்கப்பூரில் இருந்து, சீனாவுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார்.


  • கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது இந்தியா-சிங்கப்பூர் உறவுகள் (India-Singapore relations) ஒரு விரிவான இராஜதந்திர கூட்டுறவாக (strategic partnership) உயர்த்தப்பட்டது. "உலகம் தவிர்க்கமுடியாமல் பன்முகத்தன்மைக்கு மாறும்போது, ​​இதுபோன்ற வாய்ப்புகளின், முக்கிய துருவங்களில் ஒன்றாக இந்தியா பங்கு வகிக்கும்" என்று பாலகிருஷ்ணன் ஒரு சமூக ஊடகப்பதிவில் கூறினார்.

  • இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையின் மூன்றாவது கூட்டத்தை விரைவில் புதுதில்லியில்(இந்தியா) நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்தனர். பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றத்தின் மதிப்பாய்வு மற்றும் இரண்டாவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையின் விளைவுகள் பற்றி மதிப்பாய்வு செய்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


  • மோடியின் வருகையின் போது இந்தியா-சிங்கப்பூர் உறவுகளின் கவனம் மற்றும் அமைச்சர்களின் வட்டமேசை அமர்வில் முதலீடுகள், தொழில் பூங்காக்கள், குறைக்கடத்திகள், உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.


உங்களுக்குத் தெரியுமா? :


  • சிங்கப்பூரின் நான்காவது பெரிய சுற்றுலாத்தலமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது, 2006இல் 6,50,000க்கும் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளனர். இந்தியாவும் சிங்கப்பூரும் பல துறைகளில் இணைந்து செயல்படுகின்றன. இவற்றில் விமானப் போக்குவரத்து, விண்வெளி பொறியியல், விண்வெளித் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் ஆகியவை அடங்கும்.


  • சிங்கப்பூர் ஒரு வலுவான குறைக்கடத்தித் தொழிலைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் இந்தத் துறையில் ஆரம்பத்தில் தொடங்கியதே இந்த வெற்றிக்குக் காரணம் ஆகும். மேலும், இது அதன் முதல் பிரதமர் லீ குவான் யூவின் தொலைநோக்குப் பார்வையாலும் நிகழ்ந்தது.


  • 1980ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், எலக்ட்ரானிக்ஸ் துறையானது சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% மற்றும் அதன் உற்பத்தி வேலைகளில் கால் பங்காக ஏற்கனவே இருந்தது, மில்லர் குறிப்பிடுகிறார்.


  • இன்று, சிங்கப்பூர் உலகின் குறைக்கடத்திகளில் சுமார் 10% உற்பத்தி செய்கிறது. சிலிக்கான் வேஃபர்களை (silicon wafer) உருவாக்கும் உலகளாவிய திறனில் 5% ஐயும் கொண்டுள்ளது. (சிலிக்கான் வேஃபர் என்பது மிகவும் தூய சிலிக்கானின் ஒரு வட்டத் துண்டு, பொதுவாக 8 முதல் 12 அங்குல அகலம் கொண்டது, சிப்புகள் (chips) தயாரிக்கப் பயன்படுகிறது). சிங்கப்பூர் உலகின் குறைக்கடத்தி உபகரணங்களில் 20% உற்பத்தி செய்கிறது.


  • உலகின் தலைசிறந்த 15 குறைகடத்தி நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் சிங்கப்பூரில் அலுவலகங்களை அமைத்துள்ளன. மேலும், குறைக்கடத்தி துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.


  • குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த பாகங்களில் ஒருங்கிணைந்த சுற்று (integrated circuit (IC)) வடிவமைப்பு, அசெம்பிளி, பேக்கேஜிங் மற்றும் சோதனை ஆகியவை அடங்கும். அவை வேஃபர் உற்பத்தி மற்றும் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களின் உற்பத்தியிலும் செயல்படுகின்றன.


  • விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation Agreement (CECA)) என்பது சிங்கப்பூருக்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும். இது ஜூன் 29, 2005 அன்று கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.


  • CECA பல துறைகளிலும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. இதில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து, விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவை அடங்கும்.


  • சிங்கப்பூர் இந்தியா தனது உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவியுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. சிங்கப்பூர் இந்தியாவில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் (Special Economic Zone (SEZ)) அமைத்துள்ளது.



Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • பல முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளன. அவற்றில் 12 சதவீத வரி வரம்பை (slab) நீக்கும் முன்மொழிவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதில் சில பொருட்களை குறைந்த 5 சதவீத வரி வரம்பிற்கும், சில பொருட்களை அதிக 18 சதவீத வரி வரம்பிற்கும் மாற்றுவது அடங்கும். இது பல விகித கட்டமைப்பை எளிமையாக்கும் என்றாலும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒருங்கிணைத்து ரூ.70,000-80,000 கோடி குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று உயர்மட்ட வட்டாரங்கள்தெரிவித்தன.


  • சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பில் இப்போது ஏதேனும் மாற்றங்கள், குறிப்பாக எட்டு ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது நிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எளிதானதாக இருக்கப்போவதில்லை. பல காரணிகள் பரிசீலனையில் இருக்கும் மற்றும் வருவாய் இழப்பு ஒரு பெரிய காரணியாகும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, எந்த மாநிலமும் இந்த திட்டங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளாது. எனவே, உள்துறை அமைச்சர் முன்னதாகவே மாநிலங்களுடன் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நபர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.


  • உள்துறை அமைச்சர் ஏற்கனவே கடந்த வாரம் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


உங்களுக்குத் தெரியுமா?:


  • சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவின் மிகப்பெரிய மறைமுக வரி சீர்திருத்தமாகும். இது ஜூலை 2017இல் தொடங்கியது. இதில பல வரி விகிதங்கள் உள்ளன. அவை  0%, 5%, 12%, 18%, 28% என்ற விகிதங்களில் உள்ளது. மேலும், ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான கூடுதல் வரிகள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான சிறப்பு விகிதங்கள் இதில் அடங்கும்.


  • பாஜக மற்றும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் இந்த பல விகிதங்களில் மகிழ்ச்சியடையவில்லை. தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கான விகிதங்களை எளிதாக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சிகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டன. ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய மற்றும் மாநில உறுப்பினர்கள் உள்ளனர்.


  • ஜிஎஸ்டி விகிதங்களை நிர்ணயிப்பது குறித்த பேச்சுக்கள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. செப்டம்பர் 2021இல், லக்னோவில் நடந்த 45வது கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் விகிதங்களை எளிதாக்குவது மற்றும் தலைகீழ் வரி அமைப்பு (inverted duty structure) போன்ற சிக்கல்களை சரிசெய்வது பற்றி பேசியது. இது சர்ச்சைகளைக் குறைக்கவும் ஜிஎஸ்டி வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஜனவரி 2022ஆம் ஆண்டு முதல் ஜவுளி மற்றும் காலணி போன்ற துறைகளுக்கான சில விகிதங்களை அவர்கள் மாற்றியுள்ளனர்.


  • 2023-24ஆம் ஆண்டுக்கான தரவு, ஜிஎஸ்டி வருமானத்தில் 70-75% 18% விகிதத்திலிருந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. 12% விகிதம் வருமானத்தில் 5-6% ஐ வழங்குகிறது. 5% விகிதம் 6-8% ஐ வழங்குகிறது, மேலும், 28% விகிதம் 13-15% ஐ வழங்குகிறது.


  • டிசம்பர் 2024இல் ஜெய்சால்மரில் நடந்த 55வது கூட்டத்தில், கவுன்சில் சில பொருட்களின் விகிதங்களைக் குறைப்பது பற்றிப் பேசியது. ஆனால் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டு கட்டணங்களுக்கான வரி விகிதங்களைக் குறைப்பதற்கான முக்கிய முடிவை அவர்கள் ஒத்திவைத்தனர்.


  • 148 பொருட்களின் விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு (GoM) கூடுதல் நேரம் கேட்டது. இது அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.


Original article:

Share:

2024–25ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 சுற்றுலாப் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு வலுவான மீட்சி மற்றும் பல்வேறு சவால்களின் பின்னணியில், உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறை 2023இல் உலக பொருளாதாரத்திற்கு $10.9 டிரில்லியன் பங்களித்தது என்று உலக பயண மற்றும் சுற்றுலா சபை (World Travel & Tourism Council (WTTC)) தெரிவித்துள்ளது. WTTCஇன் 2024 பொருளாதார செயல்விளைவு நிலை அறிக்கை (Economic Impact Trends Report) இந்த தொழில்துறை முன்னேறும் பாதையில் இருப்பதைக் காட்டுகிறது. மேலும், உலக பொருளாதார மன்றம் இந்த துறை 2034ஆம் ஆண்டுக்குள் $16 டிரில்லியனை எட்டும் என்று கணித்துள்ளது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இந்தச் சூழலில், சுற்றுலாப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியா உலகளவில் எந்த இடத்தில் உள்ளது என்பதையும், 2024ஆம் ஆண்டு பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டின் (Travel and Tourism Development Index (TTDI)) சிறப்பம்சங்களையும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. உலக பயண மற்றும் சுற்றுலா சபையின் (World Travel & Tourism Council (WTTC)) அறிக்கையின் படி, அமெரிக்கா 2024இல் இருந்து உலகின் மிகப்பெரிய சுற்றுலா பொருளாதாரமாக இருந்து வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத $2.36 trillion பங்களிப்பை அளித்துள்ளது. இது அதன் அருகிலுள்ள போட்டியாளரை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமான அளவாகும். சீனா $1.3 டிரில்லியன் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த சுற்றுலாச் சந்தையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2. ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முதல் 10 இடங்களில் வலுவான இடங்களைப் பிடித்துள்ளன. இதற்கிடையில், ஹாங்காங், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகள் சுற்றுலாவில் விரைவாக வளர்ந்து வருகின்றன. ஜப்பான் தனித்து நின்று $297 பில்லியன் பங்களிப்புடன் 4-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.


3. இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது உலகளவில் எட்டாவது பெரிய சுற்றுலாப் பொருளாதாரமாக உள்ளது. இது $231.6 பில்லியன் பங்களிப்புடன், அதன் முந்தைய 10-வது இடத்திலிருந்து உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றம் இந்தத் துறையில் நாட்டின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் WTTC நான்காவது இடத்திற்கு உயரும் என்று கணித்துள்ளது.

2024-25ல் முதல் 10 பெரிய உலகளாவிய பயணப் பொருளாதாரங்கள்

தரவரிசை

நாடு

பொருளாதார பங்களிப்பு (US$, பில்லியன்)

1

அமெரிக்கா

$2,360B

2

சீனா

$1,300B

3

ஜெர்மனி

$487.6B

4

ஜப்பான்

$297B

5

ஐக்கிய இராச்சியம்

$295.2B

6

பிரான்ஸ்

$264.7B

7

மெக்சிகோ

$261.6B

8

இந்தியா

$231.6B

9

இத்தாலி

$231.3B

10

ஸ்பெயின்

$227.9B


4. தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது பல நாடுகள் சர்வதேச சுற்றுலா செலவினங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றங்களைக் கண்டுள்ளன. இதில் சவுதி அரேபியா (+91.3 சதவீதம்), துருக்கியே (+38.2 சதவீதம்), கென்யா (+33.3 சதவீதம்), கொலம்பியா (+29.1 சதவீதம்) மற்றும் எகிப்து (+22.9 சதவீதம்) ஆகியவை அடங்கும்.

உலக பயண மற்றும் சுற்றுலா சபையின் 2024ஆம் ஆண்டு பொருளாதார அறிக்கையின் முக்கிய குறிப்புகளை இப்போது பார்த்தோம். தற்போது ஒரு முக்கியமான உலகளாவிய பயணம் மற்றும் சுற்றுலா குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


2024ஆம் ஆண்டு பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டில் முதல் 5 நாடுகள்

தரவரிசை

நாடு

மதிப்பெண்

1

அமெரிக்கா

5.24

2

ஸ்பெயின்

5.18

3

ஜப்பான்

5.09

4

பிரான்ஸ்

5.07

5

ஆஸ்திரேலியா

5.00


5. தென்கிழக்கு ஆசியாவில், பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 39-வது இடத்தில் உள்ளது மற்றும் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. 2021ஆம் ஆண்டில், இது 54-வது இடத்தைப் பிடித்தது.


6. சர்ரே பல்கலைக்கழகத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த குறியீடு, இந்தியா பயணிகளுக்கு மிகவும் மலிவு விலையில் உள்ளது விலை போட்டித்தன்மையில் 18-வது இடம் மற்றும் நல்ல காற்று 26-வது இடம் மற்றும் தரைவழி போக்குவரத்தில் 25-வது இடத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.


7. குறிப்பாக, இந்தியாவின் வலுவான இயற்கை 6-வது இடம், கலாச்சார (9வது) மற்றும் வேலைக்கான பயணத்தில் 9-வது இடம் வளங்கள் பயணத்தை ஊக்குவிக்க உதவுகின்றன. மேலும், அனைத்து வளத் தூண்களிலும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்ற மூன்றில் ஒன்று மட்டுமே இந்தியா என்று உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum (WEF)) தெரிவித்துள்ளது.


ஸ்வதேஷ் தரிசன் 2.0 (Swadesh Darshan 2.0)


1. பல்வேறு கருப்பொருள் சார்ந்த சுற்றுலா சுற்றுகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக 2014-15ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலா அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்குகிறது.


2. இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட முக்கியமான சுற்றுலாப் பாதைகள் புத்த மதச் சுற்று, வடகிழக்கு சுற்று, இராமாயணச் சுற்று, வனவிலங்கு சுற்று, கிராமப்புறச் சுற்று போன்றவை அடங்கும். இருப்பினும், பல மாநிலங்கள் பணத்தையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்ததாலும், அதிகமான மக்கள் இதில் ஈடுபட்டிருந்ததாலும்,  இந்த திட்டம் திட்டமிட்டபடி செயல்படவில்லை.


3. எனவே, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் ஸ்வதேஷ் தரிசன் (Swadesh Darshan 2.0) கருத்தியல் உருவாக்கப்பட்டது.


4. அதிகாரப்பூர்வ ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 வலைத்தளத்தின்படி, "'உள்ளூர் மக்களுக்கான குரல்' (“With the mantra of ‘vocal for local’) என்ற குரல்களுடன், புதுப்பிக்கப்பட்ட திட்டம், சுதேச தரிசனம் 2.0, சுற்றுலா தலமாக இந்தியாவின் முழு திறனையும் உணர்ந்து 'தற்சார்பு இந்தியா' (Aatmanirbhar Bharat’) என்ற இலக்கை அடைய முயல்கிறது.  ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 என்பது ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இது சுற்றுலாவை முழுமையான மற்றும் சீரான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்குதல், சேவைகளை மேம்படுத்துதல், மக்களுக்கு பயிற்சி அளித்தல், இடங்களை சிறப்பாக நிர்வகித்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். சுற்றுலாவை நிலையானதாகவும் பொறுப்புணர்வுடனும்

மாற்றுவதற்கான கொள்கைகள் மற்றும் நிறுவன மாற்றங்களால் இந்த திட்டம் ஆதரிக்கப்படுகிறது.


Original article:

Share: