மாநில நிதி நிலைமைகள் கவலைக்கிடமான போக்கை காட்டுகின்றன.

 மாநிலங்கள் தங்கள் நிலுவையில் உள்ள கடனைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


கோவிட்-க்குப் பிறகு ஒன்றிய அரசின் நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முன்னெடுப்பு, பெரும்பாலான மாநிலங்களால் ஈடுசெய்யப்படவில்லை. மருத்துவச் செலவுகள் மற்றும் பலவீனமான பொருளாதாரத்தை ஆதரிப்பு ஆகியவை நிதியாண்டு 2021 மற்றும் 2022 நிதியாண்டுகளில் அதிக பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஆனால், 2030-ம் ஆண்டுக்குள் அதன் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை கோவிட்-க்கு முந்தைய நிலைகளுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. மேலும், 2022 முதல் நிதிநிலைக்கு வெளியே கடன் வாங்குவதை நிறுத்தியுள்ளது. பல மாநிலங்கள் இதேபோன்ற விவேகத்தைக் காட்டவில்லை. மாநிலங்களில் கடன் அளவுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து கவலைகள் உள்ளன. சுகாதாரம் மற்றும் கல்விக்கு செலவிடுவதற்குப் பதிலாக, மாநிலங்கள் அதிக இலவசங்களை வழங்குகின்றன.


நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட தரவு, மாநில அரசுகள் நிதியாண்டு 2025-ம் ஆண்டில் நிதிநிலைக்கு வெளியே கடன்களில் (அரசு நிறுவனங்களால் எடுக்கப்பட்ட கடன்கள்) 38 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன, இது ₹29,335 கோடியாக உள்ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் எடுத்த கடன்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் உத்தரவாதங்களும் அதிகமாகவே உள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் முந்தைய ஆண்டைவிட FY26-ல் அதிக சந்தை கடன் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளன. FY22 முதல், ஒன்றிய அரசு மாநிலங்களின் இந்த நிதிநிலை அறிக்கை அல்லாத கடன்களை மொத்த மாநில கடன்களுடன் சேர்த்து வருகிறது. இந்த நிதிநிலை அல்லாத கடன்கள் கோவிட் தாக்கத்தின்போது, உச்சமான ₹67,181 கோடியிலிருந்து குறைந்திருந்தாலும், கடந்த நிதியாண்டில் அதிகரிப்பு காணப்பட்டது. இந்த உயர்வு, மாநிலங்கள் தங்கள் வருவாய் அனுமதிக்கும் அளவைவிட அதிகமாக செலவிடுகின்றன என்பதைக் குறிக்கிறது. தற்செயல் பொறுப்புகளான உத்தரவாதங்கள், மொத்த கடன் சுமையையும் அதிகரிக்கின்றன. தெலுங்கானா, ஆந்திரா மற்றும் இராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் தங்கள் மாநில GSDP-யில் 8-15 சதவீதத்திற்கு சமமான உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.


உத்தரவாதங்களைக் கணக்கிடாமல்கூட, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த கடன்-GSDP விகிதம் FY25-ல் 28.8 சதவீதமாக இருந்தது என்று RBI-ன் மாநில நிதி அறிக்கை தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிசா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே விருப்பமான 25 சதவீத அளவைவிடக் குறைவான கடன்-GSDP விகிதத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் 39-52 சதவீத விகிதங்களில் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்த கடன்களைக் கொண்டுள்ளன. பெரிய மாநிலங்களில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவை 2026 நிதியாண்டில் அதிக சந்தைக் கடன்களுக்கு பட்ஜெட் செய்வதால், கடனைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலான மாநிலங்களுக்கு முன்னுரிமையாக இல்லை என்று தெரிகிறது. அதிகரித்து வரும் வட்டி செலவுகள் வளர்ச்சி மற்றும் மூலதன செலவினங்களுக்கு கிடைக்கும் பணத்தைக் குறைக்கின்றன. எனவே, மாநிலங்களின் நிலுவையில் உள்ள கடனைக் குறைப்பது அவசரமானது. வரிவருவாயைத் திரட்டுவதில் மாநிலங்கள் குறைவான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும், அவை வரி அல்லாத வருவாயை உயர்த்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும். மாநில பயன்பாட்டு சேவைகளுக்கான மானியங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 2025 நிதியாண்டில் பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கு செலவிடப்படும் ₹1 லட்சம் கோடிக்கும் இது பொருந்தும். அதேபோல், 'பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு' (old pension scheme) மீண்டும் மாறுவது, அதைத் தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு இறுதியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.


வருவாய் பக்கத்தில், 2026-ம் நிதியாண்டுக்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி முடிவடையக்கூடும் என்பது மாநில பட்ஜெட்டுகளை பாதிக்கும். இருப்பினும், மாநிலங்களுக்கு கனிம உரிமைகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை உறுதி செய்து, இந்த வரியிலிருந்து பின்னோக்கிய கோரிக்கையை வசூலிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவு சில மாநிலங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மொத்தத்தில், மாநிலங்கள் தங்கள் செலவினங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தூய்மையான பரப்பரப்பு நடவடிக்கைகளை மெதுவாக்க வேண்டும்.



Original article:

Share:

இந்தியா பயனுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. -தீபன்ஷு மோகன்

 சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள், இந்தியாவின் போராடும் தொழிலாளர் தொகுப்பின் நிலையற்ற தன்மை, முறைசாரா தன்மை மற்றும் கண்ணுக்குத் தெரியாத யதார்த்தங்களை மறைக்கின்றன.


ஜூலை 24, 2025 அன்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலைச் அளித்தது. இதில், 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு 64.33 கோடியாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டது. இது 2017-18 ஆம் ஆண்டில் 47.5 கோடியாக இருந்தது. இதன் பொருள் கடந்த பத்தாண்டுகளில் 17 கோடி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.  முதல் பார்வையில், இந்த எண்ணிக்கையானது வியத்தகு ஒன்றாகத் தெரிகிகிறது. ஆனால் வேலைவாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட இந்த அதிகரிப்பின் உண்மையான தன்மை, வடிவம் மற்றும் அமைப்பு பற்றிய பல விவரங்களை இது மறைக்கிறது.


இந்த பெயரளவிலான புள்ளிவிவர அதிகரிப்புக்கு வழங்கும் எந்தவொரு ஆறுதலும் ஒரு நிபந்தனையுடன் வருகிறது. இந்த எண்ணிக்கை வீட்டு கணக்கெடுப்புகளிலிருந்து (household surveys) பெறப்படவில்லை. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் KLEMS தரவுத்தளத்திலிருந்து பெறப்பட்டது. இந்த தரவுத்தளம் ஒரு பெரிய பொருளாதார மாதிரி. இது தனிப்பட்ட தொழிலாளர்களை நேரடியாகக் கணக்கிடுவதில்லை. அதற்குப் பதிலாக, வெவ்வேறு துறைகளில் உற்பத்தி செய்யத் தேவையான உழைப்பின் அளவை இது மதிப்பிடுகிறது.


ஊதியம் பெறாத வேலை


இந்த கட்டமைப்பில், வேலைவாய்ப்பு நேரடியாகக் கவனிக்கப்படாமல் ஊகிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சரக்குகளை நிர்வகிக்க உதவும் ஒரு கடைக்காரரின் ஊதியம் பெறாத மகளை வேலை செய்பவர்களாகக் கணக்கிடலாம். ஒரு ஏக்கர் நிலத்தை மட்டுமே பயிரிடுகின்ற ஒரு சிறு விவசாயியையும் வேலை செய்பவர்களாகக் கணக்கிடலாம். இதேபோல், உள்ளூர் சந்தைக்காக வீட்டில் துணிகளைத் தைக்கும் ஒரு பெண்ணையும் வேலை செய்பவராகக் கணக்கிடப்படலாம். இந்த மாதிரியின் கணக்கியல் தர்க்கத்திற்குள் அவர்களின் வேலையின் உற்பத்தித் திறன் கொண்டதாகக் கருதப்பட்டால் இது நிகழ்கிறது.


ஒருவர் ஊதியமில்லா வேலையை வேலைவாய்ப்பு உருவாக்கமாகக் கருதினால் (அல்லது ஊகித்தால்), தற்போதைய அரசாங்கத்தின் முறையான மதிப்பீட்டில் உள்ளபடி, நமது பெருமளவிலான ‘வேலைவாய்ப்பு’ உருவாக்கத்தின் புரிதலில் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.


இது KLEMS மாதிரியில் ஒரு குறைபாடு அல்ல. ஆனால், அனைத்து பேரியல்-தரவுகளும் அதை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஆரம்பகாலத்தைப் பொறுத்தது என்பதைக் காட்டுகிறது. KLEMS மாதிரி (இது மூலதனம், உழைப்பு, ஆற்றல், பொருள் மற்றும் சேவைகள் உள்ளீடுகளைக் குறிக்கிறது) வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இது தொழிலாளர் சந்தை நிலைமைகளை நேரடியாக அளவிடுவதில்லை. இருப்பினும், தரவை மதிப்பிடுவதில் அல்ல, அவற்றை விளக்குவதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது மற்ற பெரிய பொருளாதார நிகழ்வுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைப் பாதிக்கிறது.


யார் எந்த நிலைமைகளின் கீழ், எவ்வளவு ஊதியத்திற்காக அல்லது எந்த நிலைத்தன்மையுடன் வேலை செய்கிறார்கள் என்பதை பொருட்படுத்தவில்லை. இது மொத்த தொழிலாளரின் உள்ளீட்டைக் கணக்கிடுகிறது. முறையான மற்றும் முறைசாரா, ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத, பாதுகாப்பான மற்றும் நிலையற்ற வேலைகளை ஒரே எண்ணிக்கையில் இணைக்கிறது.


இப்போது இதை இந்தியாவின் முதன்மை வீட்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பான, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்புடன் (Periodic Labour Force Survey (PLFS)) ஒப்பிடும்போது, இது மக்களிடம் அவர்களின் வேலை நிலை குறித்து நேரடியாகக் கேட்கப்படுகிறது. PLFS 2023-24-ன் படி, தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 58.2% ஆகும். இந்த சதவீதத்தை சுமார் 1.1 பில்லியன் மக்களின் மதிப்பிடப்பட்ட உழைக்கும் வயது மக்கள்தொகைக்கு நாம் பயன்படுத்தினால், KLEMS-ஆல் அறிவிக்கப்பட்ட மொத்தத்திற்கு நெருக்கமான ஒரு எண்ணைப் பெறுகிறோம். ஆனால் இந்த ஒற்றுமை தவறாக வழிநடத்தும். இரண்டு எண்களும் வெவ்வேறு முறைகளிலிருந்து வருகின்றன. இதன் காரணமாக, அவற்றை ஒப்பிடும்போது முக்கியமான விவரங்கள் தொலைந்து போகின்றன.


உண்மையான கேள்வி என்னவென்றால், 64 கோடி மக்கள் சில மாதிரியின் வரையறையின் அடிப்படையில் "வேலை செய்கிறார்கள்" என்பது மட்டுமல்ல. வேலை அர்த்தமுள்ளதா, பாதுகாப்பானதா, ஊதியம் பெறுகிறதா மற்றும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதுதான். அல்லது, மக்கள் அழுத்தத்தின் கீழ் வேலை செய்யும், அவர்களின் முயற்சிகள் தரவுகளில் மறைக்கப்பட்டிருக்கும், மேலும் இது தவறாக முன்னேற்றமாகக் கருதப்படும் ஒரு பெரிய பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகுமா?


இது இரண்டு அவசர கேள்விகளுக்கு நம்மைக் கொண்டுவருகிறது. முதலாவதாக, இப்போது அதிகமான பெண்கள் பணியிடத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் என்ன வகையான வேலையைச் செய்கிறார்கள்? இரண்டாவதாக, இந்தியாவின் இளைஞர்கள் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் மக்கள்தொகை ஈவுத்தொகைக்கும் பொருளாதார சரிவுக்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வேலை செய்கிறார்களா?


பங்கேற்பு ஆதாயங்களுக்குப் பின்னால் உள்ள நிச்சயமற்ற தன்மை


இந்திய தொழிலாளர் சந்தை அதிகரித்து வரும் பங்கேற்பைக் காட்டுகிறது. ஆனால், இது வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையையும் (நிச்சயமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை) காட்டுகிறது. இது இரண்டு குழுக்களில் மிகவும் தெளிவாக உள்ளது. அவை, பணியிடத்தில் நுழையும் பெண்கள் மற்றும் நாட்டின் இளைஞர்கள் நிச்சயமற்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். காகிதத்தில், இரு குழுக்களும் முன்பைவிட மிகவும் சுறுசுறுப்பாகத் தெரிகின்றன. ஆனால் மேற்பரப்பில், ஒரு கவலைக்குரிய முறை தோன்றுகிறது. இந்தியா அர்த்தமுள்ள வேலைகளை உருவாக்கவில்லை. மாறாக, அது உயிர்வாழும் அளவிலான வேலையை மட்டுமே அதிகரித்து வருகிறது.


2017-18 மற்றும் 2023-24-க்கு இடையில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 23.3 சதவீதத்திலிருந்து 41.7 சதவீதமாக உயர்ந்தது. ஆறு ஆண்டுகளில் இந்த 18.4 சதவீத புள்ளி உயர்வு புள்ளிவிவர ரீதியாக அசாதாரணமானது. ஆனால் எண்களால் மட்டும் ஒரு மாற்றத்தின் அமைப்பைப் பிடிக்க முடியாது. அதிகாரமளிப்பதாகத் தோன்றுவது உண்மையில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கக்கூடும்.


PLFS 2023-24-ன் படி, தொழிலாளர் தொகுப்பில் 73.5 சதவீத கிராமப்புற பெண்கள் சுயதொழில் செய்பவர்கள் ஆவர். அதே நேரத்தில், 7.8 சதவீதம் பேர் மட்டுமே வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளை பெற்றிருக்கிறார்கள். நகர்ப்புறங்களில், பெண்களிடையே ஊதியம் பெறும் வேலையின் பங்கு 49.4 சதவீதமாக உயர்கிறது. ஆனால், ஒட்டுமொத்த நகர்ப்புற பெண் LFPR 25.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த எண்கள் தொழிலாளர் சந்தை அதிக பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இது பெரும்பாலும் மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் குறைந்த பாதுகாக்கப்பட்ட வேலைகளில் உள்ளது.


வளர்ச்சியின் பொருளாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக இதை முறைசாரா தொழிலாளர்களின் பெண்ணியமயமாக்கல் என்று விவரித்துள்ளனர். இதன் பொருள் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு அல்லது ஆற்றல் உள்ளது என்று அர்த்தமல்ல. மாறாக, அவர்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.


பெண்கள் அதிக அளவில் ஊதியம் பெறாத, வீட்டு வேலை, பருவகால வேளாண் உதவி, துண்டு-விகித உற்பத்தி, முறைசாரா விற்பனை மற்றும் ஊதியம் பெறாத குடும்ப வணிகங்களில் குவிந்துள்ளனர். இவை 'வேலைகள்' என்று கணக்கிடப்படுகின்றன. மேலும் ஊதியம், ஒப்பந்தங்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது சலுகைகள் இல்லாமல், பெரும்பாலும் ஊதியம் இல்லாமல், இருப்பினும் அவை புள்ளிவிவர ரீதியாக வேலைவாய்ப்பாகவே பதிவு செய்யப்படுகிறது.


இன்னும் மோசமானது என்னவென்றால், இந்த வேலைகளில் பெரும்பாலானவை மாற்றிடை வேலைவாய்ப்பு (disguised employment) என்று அழைக்கப்படுகின்றன. "வேலைவாய்ப்பு" என்பதன் அர்த்தம் ஊதியம் இல்லாத மற்றும் உயிர்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது நிகழ்கிறது.


பொருளாதாரத்தில் முன்னேற்றம் போல் தோன்றுவது பெரும்பாலும் பெண்கள் பொருளாதார பிரச்சினைகளின் சுமையைச் சுமக்கிறார்கள் என்பதாகும். அவர்கள் விலைவாசி உயர்வு, ஆண்களுக்கான ஊதிய வீழ்ச்சி மற்றும் அரசாங்கத்தின் குறைவான ஆதரவை எதிர்கொள்கின்றனர். பெண்கள் பணியிடத்தில் சேர்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்புவதால் அல்ல, அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியிருப்பதால் இது நிகழ்கிறது. தேசிய புள்ளிவிவரங்கள் அவர்களின் பங்களிப்பைக் காட்டினாலும், கொள்கைகள் அவர்களின் கடினமான நிலைமைகளை அரிதாகவே நிவர்த்தி செய்கின்றன.


அதே நேரத்தில், ஒரு தெளிவான மற்றும் சத்தமான பிரச்சனை உள்ளது: இந்தியாவில் பல இளைஞர்கள் நல்ல வேலைகளில் இருந்து விலக்கப்படுகிறார்கள்.


PLFS-ன் தரவுகள், 15 முதல் 29 வயதுடையவர்களில், நகர்ப்புற பெண்களின் வேலையின்மை விகிதம் 20.1% ஆகவும், ஆண்களுக்கு இது 12.8% ஆகவும் இருப்பதாகக் காட்டுகிறது. இந்த எண்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்துறை கொள்கைகள் முறையான அளவில் தோல்வியடைவதைக் காட்டுகின்றன.


இந்திய இளைஞர்களுக்கு பெரிய கனவுகள் உள்ளன. ஆனால், அவர்கள் சரியான வேலைகளைக் கண்டுபிடிக்கவில்லை. பொருளாதாரம் அவர்களின் திறன்கள், தகுதிகள் அல்லது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற போதுமான வேலைகளை உருவாக்குவதில்லை. இது திறன் சார்புடைய வளர்ச்சிக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக அமைகிறது. அசெமோக்லு (Acemoglu) போன்ற பொருளாதார வல்லுநர்கள் இதை 'துருவமுனைப்பு விளைவு' (polarisation effect) என்று அழைக்கின்றனர். இதன் விளைவாக, வளர்ச்சியானது நடுத்தர திறமையான தொழிலாளர்களைவிட உயர் திறமையான மூலதனத்தை ஆதரிக்கிறது. இது நடுத்தர திறன் வேலைகள் மறைந்து போக காரணமாகிறது.


இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. திறன் இந்தியா திட்டம் (Skill India program) 2022-ம் ஆண்டுக்குள் 40 கோடி பேருக்கு பயிற்சி அளிப்பதாக உறுதியளித்தது. இருப்பினும், இது 3 கோடிக்கும் சற்று அதிகமானவர்களுக்கு பயிற்சி அளித்தது. பயிற்சி பெற்றவர்களில், 4 பேரில் ஒருவருக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கூலி வேலை கிடைத்தது.


இந்தியாவில் தயாரிப்போம் பிரச்சாரம் (Make in India campaign) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்தவும் 100 மில்லியன் வேலைகளை உருவாக்கவும் உருவாக்கப்பட்டது. ஒரு பத்தாண்டுகாலத்திற்குப் பிறகும், உற்பத்தி இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதமாக உள்ளது. மேலும், அதன் வேலைவாய்ப்புக்கான சாதகமானது கடுமையாகக் குறைந்துள்ளது. உற்பத்தி உயரக்கூடும், ஆனால் வேலைகள் தொடர்ந்து அதிகரிக்கவில்லை.


அதிகக் கவனத்தைப் பெற்ற புத்தொழில் இந்தியா இயக்கம் (Start-Up India movement), பரந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் போராடியுள்ளது. நாஸ்காமின் கூற்றுப்படி, பெரும்பாலான இந்திய புத்தொழில்கள் பத்துக்கும் குறைவானவர்களைப் பணியமர்த்துகின்றன. வேலை உருவாக்கம் பெரும்பாலும் பெரிய நகரங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தத் துறைகள் இனி பெரிய அளவிலான உள்ளடக்கத்தை வழங்குவதில்லை.


எனவே, இதன் காரணமாக வாய்ப்பின் கட்டமைப்பு ஒரு சரிவை கொண்டுள்ளது. இந்தியாவின் இளைஞர்களில் பெரும்பாலோர், நற்சான்றிதழ் பெற்றவர்கள், நகரும் திறன் கொண்டவர்கள் மற்றும் ஓய்வற்றவர்கள், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலைமை நாட்டிற்கு மக்கள்தொகை சவாலுக்கு வழிவகுக்கிறது.


எனவே, முரண்பாடு இப்போது தெளிவாகிறது. சுமார் 64 கோடி இந்தியர்களுக்கு வேலைகள் இருக்கலாம். ஆனால் இந்த வேலைகளில் பலவற்றில் நிலைத்தன்மை, பாதுகாப்பு அல்லது வளர வாய்ப்புகள் இல்லை. வேலை செய்பவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான வேலைகள் கண்ணுக்குத் தெரியாதவை, முறைசாரா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டவை. கொள்கைகள் சிறந்த வேலைகளை உருவாக்குவதில் அல்ல, அதிக வேலைகளை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினால், தொழிலாளர்களை உண்மையிலேயே வேலைக்கு அமர்த்தாமல், சோர்வடையச் செய்வதை நம்பியிருக்கும் ஒரு வகையான பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிக்கும் அபாயம் உள்ளது.


இது நாம் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கிய கேள்விக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏன் இன்னும் வலுவான மையம் இல்லை? அதிக உற்பத்தி மற்றும் அதிக மக்கள் வேலை செய்தாலும், பாதுகாப்பான, முறையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட வேலைகளைக் கண்டுபிடிப்பது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?


வெற்று வேலைவாய்ப்பு மையம்


இந்தியாவின் தொழிலாளர் பிரச்சினைகளின் மையத்தில் ஒரு கட்டமைப்பு முரண்பாடு உள்ளது. பொதுவாக, நாம் தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்தியுள்ளோம், ஆனால் அதை முறைப்படுத்தவில்லை. தாராளமயமாக்கலுக்குப் பிறகு, சீர்திருத்தங்கள் பாதுகாப்பைவிட நெகிழ்வுத்தன்மையில் அதிகக் கவனம் செலுத்தின. இது முறையான துறைக்குள்கூட முறைசாரா வேலை இருக்கும் ஒரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் இளம் பணியாளர்கள் இருந்தபோதிலும், அது ஒரு "உயர்-சாலை" (high-road) வேலைவாய்ப்பு முறையை உருவாக்கவில்லை. அத்தகைய அமைப்பில் தொழிலாளர்களுக்கு அமல்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள், நியாயமான ஊதியங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்புகள் இருக்கும்.


சர்வதேச அளவில், இந்தியா அசாதாரணமானது. ILO தரவுகளின்படி, 24.4% இந்தியர்கள் மட்டுமே குறைந்தது ஒரு சமூகப் பாதுகாப்பு நன்மையைப் பெற்றுள்ளனர். இதை ஒப்பிடுகையில், இலங்கையில் 66% மக்களும், சைப்ரஸில் 61.2% மக்களும், கஜகஸ்தான் மற்றும் இஸ்ரேலில் 100% மக்களும் அத்தகைய பாதுகாப்பைக் கொண்டுள்ளனர்.


உழைக்கும் வயதுடைய மக்களுக்கு, அவர்களின் பங்களிப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களால் 15.5% பேர் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளனர். வேலையில்லாதவர்களுக்கு, பாதுகாப்பு 0% ஆகும். இந்த எண்கள் தரவுகளில் உள்ள இடைவெளிகள் மட்டுமல்ல, ஆழமான வேலைவாய்ப்பு சார்ந்த கட்டமைப்பு சிக்கல்களைக் காட்டுகின்றன. 2024-25 மத்திய பட்ஜெட் இந்த புறக்கணிப்பை பிரதிபலிக்கிறது. இது நேரடி வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களுக்கு ₹1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே ஒதுக்குகிறது. அரசாங்கத்தின் நிதி முன்னுரிமைகள் இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது பணியாளர்களை மேம்படுத்துவதைவிட மூலதன மானியங்கள் மற்றும் பெருநிறுவன வரி தள்ளுபடிகளில் அதிகக் கவனம் செலுத்துகின்றன.


இதன் விளைவாக இரட்டை தொழிலாளர் பொருளாதாரம் (dualistic labour economy) உருவாகிறது. அங்கு மூலதன-தீவிர தானியங்கி பகுதிகள் பரந்த முறைசாரா உள்நாட்டால் சூழப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களுக்குள்கூட, முறைசாரா முறைப்படுத்தல் பரவலாக உள்ளது. நிலையான வேலைகள் தற்காலிக, கிக் அடிப்படையிலான அல்லது மூன்றாம் தரப்பு ஒப்பந்தங்களாக மறுசீரமைக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் முறையாகத் தோன்றினாலும் தொழிலாளர் பாதுகாப்பைக் குறைக்கின்றன. தொழிலாளர் தேவை ஒரு முக்கியப் பொருளாதார இலக்காக மாறாவிட்டால், இந்தியா தொடர்ந்து அதிக வளர்ச்சியைக் கொண்டிருக்கும், ஆனால் குறைந்த வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கும். வேலைகள் அதிகரிக்கக்கூடும், ஆனால் அமைப்பு நிலையற்றதாகவே இருக்கும்.


எழுத்தாளர் பொருளாதாரப் பேராசிரியராகவும், ஐடியாஸ் அலுவலகத்தின் இடைநிலை ஆய்வுகள் பிரிவில் டீனாகவும் உள்ளார். CNES-ல் ஆராய்ச்சி ஆய்வாளரான அங்கூர் சிங் இந்தப் பத்தியை எழுத உதவினார்.



Original article:

Share:

வேளாண் துறைக்கு மூலதனச் செலவு தேவை. -பி அல்லி

 வேளாண் துறையில் பொது முதலீடு என்பது ஒரு சவாலாகவே உள்ளது.


இந்தியா பல விவசாயத் திட்டங்களை, ஒருங்கிணைந்த குடை திட்டங்களாக (integrated umbrella programmes) இணைத்துள்ளதுடன், இது கொள்கை வகுப்பில் தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒத்திசைவை (coherence) மேம்படுத்துவது, நிர்வாகத்தை மிகவும் திறமையாக்குவது மற்றும் இதற்கான பலன்களை சிறப்பாக வழங்குவதே இதன் குறிக்கோளாகும். 2024–25-ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ₹1,22,529 கோடி ஒதுக்கீடு மற்றும் மொத்த மானியங்கள் ₹4.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பதை நிதி அமைச்சகம், 2024 அறிக்கையின்படி குறிப்பிட்டுள்ளது. இது விவசாயத்திற்கான வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அரசாங்கம் சமீபத்தில் பிரதம மந்திரி தன்யா யோஜனாவை அறிமுகப்படுத்தியது. இது ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (Rashtriya Krishi Vikas Yojana) மற்றும் கிருஷோன்னதி யோஜனா (Krishonnati Yojana) போன்ற பழைய திட்டங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த முயற்சிகள் கிராமப்புற வளர்ச்சிக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.


ஆனால் திட்டங்களை இணைப்பது விவசாயத் துறையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? அல்லது பொது முதலீடு இப்போது உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டுமா?


குடை திட்டங்கள் (umbrella schemes) அடிப்படை ஆதரவை வழங்கினாலும், பிரதம மந்திரி தன் தானியா யோஜனா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ₹4,000 கோடி போன்ற வருடாந்திர ஒதுக்கீடுகள், துறையின் பரந்த மற்றும் மாறுபட்ட தேவைகளுடன் ஒப்பிட வேண்டும். பல்வேறு வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களில் 146 மில்லியனுக்கும் அதிகமான செயல்பாட்டு நிலங்கள் பரவியுள்ள நிலையில், தேவையான முதலீட்டின் அளவு தற்போதைய திட்டங்கள் மட்டும் வழங்கக்கூடியதைவிட அதிகமாக உள்ளது.


மூலதன உருவாக்கம் புறக்கணிக்கப்பட்டது


இன்று விவசாயத்தில் பொது முதலீடு பெரும்பாலும் உள்ளீட்டு மானியங்களில் (input subsidies) கவனம் செலுத்துகிறது. இது பெரும்பாலும் நீண்டகால மூலதன உருவாக்கத்தைப் புறக்கணிக்கிறது. இதன் காரணமாக, இந்தத் துறை வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான வரையறுக்கப்பட்ட திறனைக் கொண்டுள்ளது. உதாரணங்களில் நீர்ப்பாசன வலையமைப்புகள் (irrigation networks), குளிர்பதன சேமிப்புச் சங்கிலிகள் (cold storage chains), கிராமப்புற சாலைகள் (rural roads) மற்றும் தளவாட அமைப்புகள் (logistics systems) ஆகியவை அடங்கும். இந்த சொத்துக்கள் உற்பத்திக்கும் சந்தைகளுடன் இணைப்பதற்கும் மிகவும் முக்கியம். விவசாயத்தில் இந்தியாவின் மொத்த மூலதன உருவாக்கம் (Gross Capital Formation (GCF)) வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15-17 சதவீதம் ஆகும். இது மிகவும் வளர்ந்த வேளாண் பொருளாதாரங்களில் காணப்படும் 30 சதவீதத்தை விட மிகக் குறைவு. (ஆதாரம்: நிதி ஆயோக், 2021)


குறைவான முதலீட்டின் ஒரு முக்கிய விளைவு அறுவடைக்குப் பிந்தைய இழப்பாகும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 15-20 சதவீதம் விளைபொருள்கள் இழக்கப்படுகின்றன. சேமிப்பு, போக்குவரத்து மற்றும் செயலாக்க வசதிகள் போதுமானதாக இல்லாததால் இது நிகழ்கிறது. இந்த இழப்புகள் கிட்டத்தட்ட ₹92,000 கோடி பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன (ICAR, 2022). இதை சரிசெய்ய, வேளாண் உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund (AIF)) உருவாக்கப்பட்டது. இது பத்து ஆண்டுகளுக்கு ₹1 லட்சம் கோடி திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பணம் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பரவ வேண்டும். இதன் பொருள் ஒவ்வொரு மாவட்டமும் ஆண்டுக்கு ₹15 கோடிக்கும் குறைவாகவே பெறுகிறது. இந்தத் தொகை இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானதாக இருக்காது.


வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development (R&D)) ஒரு முக்கியமான ஆனால் குறைவான ஆதரவுள்ள பகுதியாகவே உள்ளது. தற்போது, இந்தியா அதன் வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.3 சதவீதத்தை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விரிவாக்க சேவைகளுக்கு செலவிடுகிறது. இது FAO பரிந்துரைத்த 1 சதவீதத்தைவிட மிகக் குறைவு. இருப்பினும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் கிட்டத்தட்ட 14 ரூபாய் வருமானத்தை ஈட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (ICAR-NIAP, 2021). காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள், துல்லிய வேளாண் மற்றும் நீர்-திறனுள்ள தொழில்நுட்பங்களில் முதலீடுகள் உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்தும். குறிப்பாக, காலநிலை மற்றும் சந்தையின் தாக்கங்களை எதிர்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.


வேளாண் விரிவாக்க சேவைகளை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. கிருஷி விஞ்ஞான மையங்கள் (Krishi Vigyan Kendras (KVK)) மற்றும் டிஜிட்டல் தளங்கள் (digital platforms) நல்ல வளங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவை பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் திறனுடன் செயல்படுகின்றன.


புதுமையான மாதிரிகள்


பல மாநிலங்கள் புதிய மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான மாதிரிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த மாதிரிகள் மதிப்புமிக்க பாடங்களை வழங்குகின்றன. அதாவது, அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்த பஞ்சாப் AIF-ஐப் பயன்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ரிது பந்து திட்டம் (Rythu Bandhu scheme) விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் வருமான ஆதரவை வழங்குகிறது. வேளாண்  பண்ணைகளில் வளங்களை உருவாக்க உத்தரபிரதேசம் MGNREGA நிதியைப் பயன்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில், பைலட் திட்டங்கள் (pilot projects) AI அடிப்படையிலான துல்லியமான விவசாய கருவிகளைப் பயன்படுத்துகின்றன. தொழில்நுட்பம் விவசாயத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை இந்தத் திட்டங்கள் காட்டுகின்றன (MoAFW, 2023; NITI ஆயோக், 2022). உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உத்திகள், நிறுவனங்களால் முறையாக நிதியளிக்கப்பட்டு ஆதரிக்கப்படும்போது, உண்மையான முடிவுகளைத் தரும் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.


தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதில் பொது முதலீடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நபார்டு வங்கியின் (NABARD) கூற்றுப்படி, விவசாயக் கடன் நிதியாண்டு 2026-ம் ஆண்டுக்குள் ₹32 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வலுவான பொது உள்கட்டமைப்பு மற்றும் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகள் இருக்கும்போது இந்தக் கடன் சிறப்பாகச் செயல்படும்.


இந்தியாவின் வேளாண் கொள்கை காலப்போக்கில் நிறைய மாறிவிட்டது. இது சிதறிய திட்டங்களிலிருந்து ஒருங்கிணைந்த குடை திட்டங்களுக்கு மாறியுள்ளது. இப்போது, இந்த முன்னேற்றத்தை எதிர்காலத்தை மையமாகக் கொண்ட முதலீட்டு உத்தியை ஆதரிக்க வேண்டும்.


வாழ்வாதாரத்திலிருந்து நிலைத்தன்மைக்கு நகர, மானியங்கள் மூலதன முதலீடுகளுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். இந்த முதலீடுகள் மீள்தன்மையை உருவாக்கி போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக, உள்ளூர் நிறுவனங்களுக்கு நெகிழ்வான நிதியை வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இந்த நிதி அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதைச் செய்வது அடிநிலை மட்டத்தில் புதுமைகளைத் திறக்கும். e-NAM போன்ற டிஜிட்டல் தளங்கள் விவசாயிகளை சந்தைகள் மற்றும் சேவைகளுடன் இணைக்க உதவும். இருப்பினும், விவசாயிகள் தங்கள் டிஜிட்டல் திறன்களையும் மேம்படுத்தினால் இது சிறப்பாகச் செயல்படும்.


இறுதியில், வேளாண் ஆதரவை விரிவுபடுத்துவது மட்டும் முக்கியக் குறிக்கோளாக இருக்கக்கூடாது. விவசாயத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதே முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.


எழுத்தாளர் சென்னை விஐடியின் இணைப் பேராசிரியர் ஆவர்.



Original article:

Share:

திடீர் வெள்ளம் இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது? -ஆலிந்த் சௌஹான்

 இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் திடீர் வெள்ளத்தால் 5,000-க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். உலக வெப்பநிலை அதிகரிக்கும் போது, இந்த வெள்ளங்கள் அடிக்கடி நிகழும் என்றும், மேலும் கடுமையானதாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, அதிக ஆபத்தில் உள்ள பகுதிகளை எடுத்துக்காட்டுகிறது மற்றும் அதிகாரிகள் சேதத்தைக் குறைக்கக்கூடிய வழிகளைக் குறிக்கிறது.


இந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஜூலை 2024-ன் பிற்பகுதியில், கேரளாவின் வயநாட்டில் குறைந்தது 373 பேர் இறந்தனர். ஜூன் 2024-ல் லடாக்கில் ஐந்து வீரர்கள் இறந்தனர். அக்டோபர் 2023-ல் சிக்கிமில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.


இந்த நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தாலும், அவை அனைத்திற்கும் பொதுவான காரணம் ஒன்றுதான்: திடீர் வெள்ளம். ஒவ்வொரு ஆண்டும், 5,000-க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். மேலும், கனமழையால் ஏற்படும் இந்த திடீர் வெள்ளங்களால் உள்கட்டமைப்பு, விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதம் ஏற்படுகிறது. அதிகரித்துவரும் உலக வெப்பநிலை காரணமாக நிலைமை மோசமடைந்து வருகிறது, இது அடிக்கடி திடீர் வெள்ளங்களுக்கு வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, திடீர் வெள்ள நிகழ்வுகள் 2020-ல் 132-ஆக இருந்து 2022-ல் 184 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் 2023-ல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.


திடீரென ஏற்படும் வெள்ளம் மிகவும் பொதுவானதாகவும் ஆபத்தானதாகவும் மாறி வந்தாலும், எந்தப் பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ளன என்பதைக் கண்டறிய போதுமான ஆராய்ச்சி இல்லை. இது முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைப்பதை கடினமாக்குகிறது.


காந்திநகர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு இந்த இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜூலை 13 அன்று இயற்கை ஆபத்துகள் (Nature Hazards) இதழில் வெளியிடப்பட்ட, ‘Drivers of flash floods in the Indian sub-continental river basins’ என்ற தலைப்பிலான ஆய்வில், திடீர் வெள்ளம் பெரும்பாலும் இமயமலை, மேற்குக் கடற்கரை மற்றும் மத்திய இந்தியாவில் நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.


அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் தற்போது திடீர் வெள்ள அபாயத்தில் உள்ளன என்பதையும் இது காட்டுகிறது.


திடீர் வெள்ளத்திற்கு என்ன காரணம்? வெப்பமயமாதல் காலநிலை எவ்வாறு திடீர் வெள்ளங்களை அடிக்கடியும் அதிக சக்தியுடனும் ஏற்படுத்துகிறது? இந்தியாவில் திடீர் வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க அதிகாரிகள் எவ்வாறு தயாராகலாம்? இங்கே ஒரு கண்ணோட்டம் உள்ளது.


திடீர் வெள்ளத்திற்கான காரணிகள்


இந்தியாவில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்குகளில் 25% மட்டுமே கனமழையால் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பெரும்பாலானவை கனமழையின் கலவையாலும், மழை பெய்யும் முன்பே மண் எவ்வளவு ஈரமாக இருக்கிறதோ அதன் காரணமாகவும் ஏற்படுகின்றன.


ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான விஸ்மல் மிஸ்ரா, நிலம் ஏற்கனவே ஈரமாக இருந்தால், மீண்டும் மழை பெய்யும்போது மண் எளிதில் நிறைவுற்றதாகிவிடும் என்று விளக்கினார். இது மேற்பரப்பில் நீர் விரைவாகப் பாய காரணமாகிறது. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


கனமழை ஆறு மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கிறது என்றும், 23% நேரங்களில் மட்டுமே என்றும் ஆய்வு கூறுகிறது. பொதுவாக, பல நாட்களுக்கு தொடர்ச்சியாக பெய்யும் மழை லேசானதாக இருந்தாலும் சரி, கனமாக இருந்தாலும் சரி திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.


மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், பிற காரணிகளும் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்குக் கடற்கரை மற்றும் மத்திய இந்தியாவில், கனமழைக்குப் பிறகு துணைப் படுகைகள் (பெரிய நதிப் படுகைகளின் சிறிய பகுதிகள்) மிக விரைவாக தண்ணீரில் நிரம்புவதால் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. இந்தப் பகுதிகளில் நீர் தரையில் எவ்வளவு விரைவாக ஊறுகிறது என்பதையும் மண்ணின் வகை பாதிக்கிறது.


இமயமலையில், செங்குத்தான சரிவுகள் மற்றும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான உயரத்தில் பெரிய வேறுபாடுகள் போன்ற இயற்கை அம்சங்களும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.


பெரிய நதிப் படுகைகளின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, இமயமலைப் பகுதியிலும் கங்கை நதிப் படுகையின் தெற்குப் பகுதிகளிலும் திடீர் வெள்ள அபாயம் அதிகமாக உள்ளது. ஆனால், மத்திய கங்கை நதிப் படுகையின் துணைப் படுகைகள் குறைந்த ஆபத்தைக் கொண்டுள்ளன. நிலத்தின் வடிவம் மற்றும் வானிலை முறைகள் ஒரே நதி அமைப்பின் வெவ்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் எவ்வளவு சாத்தியம் என்பதைப் பாதிக்கின்றன என்பதை இது காட்டுகிறது.


காலநிலை மாற்றத்தின் பங்கு


உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கும் போது, திடீர் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன, மேலும் அவை மேலும் தீவிரமடைகின்றன. ஏனெனில் சராசரி வெப்பநிலையில் ஒவ்வொரு 1°C அதிகரிப்பிற்கும், வளிமண்டலம் சுமார் 7% அதிக ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இது அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது, இது திடீர் வெள்ளத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.


இந்தியாவில், 1981 முதல் 2020-ஆம் ஆண்டு வரை, பருவமழைக்கு முந்தைய காலத்தில் தீவிர மழை நிகழ்வுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. பருவமழை, பருவமழைக்குப் பிந்தைய மற்றும் குளிர்காலங்களில், தீவிர மழைப்பொழிவு முறையே 56%, 40% மற்றும் 12.5% அதிகரித்துள்ளது. 1980 மற்றும் 2018-ஆம் ஆண்டுக்கு இடையில் 75%-க்கும் மேற்பட்ட திடீர் வெள்ளங்கள் பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நிகழ்ந்தன.


1995-ஆம் ஆண்டு முதல், பிரம்மபுத்திரா நதிப் படுகையிலும், அதைத் தொடர்ந்து கங்கை மற்றும் கிருஷ்ணா நதிப் படுகைகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


மிஸ்ராவும் அவரது குழுவினரும், முன்னதாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படாத பல துணைப் படுகைகளில் வெப்பநிலை அதிகரிப்பால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அனைத்து இந்திய நதிப் படுகைகளிலும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படாத துணைப் படுகைகளில் 51% அதிக மழைப்பொழிவு காணப்படுவதாகவும், 66.5% ஓடைகளில் அதிக நீர் ஓட்டம் காணப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது. இருப்பினும், ஏற்கனவே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சில பகுதிகளில் இப்போது குறைவான மழைப்பொழிவு நேரங்கள் காணப்படுகின்றன.


தகவமைப்பு உத்திகள்


அதிக மழைப்பொழிவை மட்டுமல்ல, நில வடிவம் மற்றும் மண் வகை போன்ற உள்ளூர் அம்சங்களையும் கருத்தில் கொண்டு பிராந்திய-குறிப்பிட்ட திட்டங்களை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்பதை கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இது முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் தயார்நிலை மற்றும் நீண்டகாலத் திட்டமிடலை மேம்படுத்த உதவும்.


திடீர் வெள்ளத்தை எதிர்கொள்ளக்கூடிய புதிய பகுதிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து, தீவிர வானிலையை கையாளக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.


வெப்பநிலை அதிகரித்து மழைப்பொழிவு முறைகள் மாறும்போது, நிலம் மற்றும் வெள்ள திட்டமிடல் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை மேம்படுத்துவதும் முக்கியம்.



Original article:

Share:

பஞ்சம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • "காசா பகுதியில் இப்போது பஞ்சத்தின் மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்று ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு கட்ட வகைப்பாடு ( Integrated Food Security Phase Classification (IPC)) எச்சரிக்கை செய்துள்ளது. பரவலான பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் காரணமாக அதிகமான மக்கள் பசியால் இறந்து வருவதாக அது கூறியது. இருப்பினும், IPC இன்னும் அதிகாரப்பூர்வமாக பஞ்சத்தை அறிவிக்கவில்லை. அந்த முடிவை எடுக்க இப்போது ஒரு பகுப்பாய்வை மேற்கொள்ளும் என்று அது கூறியது.


  • IPC என்பது 21 உதவி நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஐ.நா. அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் ஒரு உலகளாவிய குழுவாகும். இது ஒரு மக்கள் தொகை பசியால் எவ்வளவு மோசமாக பாதிக்கப்படுகிறது என்பதை மதிப்பிடுகிறது.


  • காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன குழுவான ஹமாஸுக்கும் இடையே 22 மாதங்களாக போர் நடந்து வருகிறது. மனிதாபிமான நிலைமை குறித்த சர்வதேச விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சில பகுதிகளில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, மேலும் உதவிகளை உள்ளே அனுமதிக்கும் என்று இஸ்ரேல் கூறியது.


  • ஒரு பகுதி பஞ்சத்தை எதிர்கொள்ளும் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: மக்கள் தொகையில் குறைந்தது 20% பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டும். மூன்றில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு 10,000 பேரில் இருவர் ஒவ்வொரு நாளும் பசி அல்லது தொடர்புடைய நோய்களால் இறக்க வேண்டும்.


  • சமீபத்திய தகவல்களின்படி, காசாவின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை மற்றும் காசா நகரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு பஞ்சத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவை எட்டியுள்ளது. சுமார் 2.1 மில்லியன் மக்கள் இன்னும் இப்பகுதியில் வாழ்கின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா?


  • IPC நான்கு முறை பஞ்ச நிலைமைகளை அறிவித்துள்ளது: சோமாலியா (2011), தெற்கு சூடான் (2017 மற்றும் 2020), மற்றும் சூடான் (2024). IPC அதிகாரப்பூர்வமாக பஞ்சத்தை அறிவிக்கவில்லை. ஆனால், அரசாங்கங்களும் மற்றவர்களும் அந்த முடிவை எடுக்கக்கூடிய தரவை வழங்குகிறது.


  • பஞ்ச எச்சரிக்கைகளை மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்தும் IPCயின் பஞ்ச மறுஆய்வுக் குழு, செவ்வாயன்று காசாவிற்கான பஞ்ச எச்சரிக்கையை அங்கீகரித்தது.


  • காசா குறித்த கடைசி IPC அறிக்கை (மே 12 முதல்) செப்டம்பர் இறுதிக்குள், முழு மக்களும் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வர் என்றும், சுமார் 469,500 பேர் மிக மோசமான அளவிலான பசியை எதிர்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கணித்துள்ளது.


  • காசாவுக்குள் நுழையும் அனைத்து நுழைவுப் புள்ளிகளையும் இஸ்ரேல் கட்டுப்படுத்துகிறது. 11 வாரங்களுக்கு உதவியைத் தடுத்த பிறகு, மே 19 அன்று ஐ.நா. தலைமையிலான சில உதவிகள் மீண்டும் தொடங்கின. ஒரு வாரம் கழித்து, காசா மனிதாபிமான அறக்கட்டளை (இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் ஒரு புதிய அமெரிக்க அடிப்படையிலான குழு) உணவு உதவியை விநியோகிக்கத் தொடங்கியது.


  • இந்த வெவ்வேறு உதவி முயற்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் காசா மனிதாபிமான அறக்கட்டளை ஆகியவை ஹமாஸ் உதவிகளைத் திருடியதாக குற்றம் சாட்டுகின்றன. அதை ஹமாஸ் மறுக்கிறது. அதைத் தடுக்காததற்காக அவர்கள் ஐ.நா.வையும் விமர்சிக்கின்றனர். இருப்பினும், ஹமாஸ் அதிக அளவிலான உதவிகளைப் பெறுகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஐ.நா. கூறுகிறது.


  • IPC அறிக்கை காசாவிற்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 62,000 மெட்ரிக் டன் பிரதான உணவு தேவை என்று கூறுகிறது. ஆனால், இஸ்ரேலின் உதவி நிறுவனம் (COGAT) படி, மே மாதத்தில் 19,900 டன் உணவும் ஜூன் மாதத்தில் 37,800 டன் உணவும் மட்டுமே உள்ளே நுழைந்தன.


  • காசாவில் போர் அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கியது. அப்போது ஹமாஸ் தெற்கு இஸ்ரேலில் 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பணயக்கைதிகளை பிடித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை கிட்டத்தட்ட 60,000 பாலஸ்தீன இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Original article:

Share:

நிதி ஆரோக்கியம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:



  • மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி நிலை ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்தக் கட்டுரை 2024–25 நிதியாண்டுக்கான 17 மாநில அரசுகளின் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் தவிர) நிதிப் போக்குகளையும், தற்போதைய மற்றும் எதிர்கால நிதியாண்டுகளுக்கு அவை என்ன பரிந்துரைக்கின்றன என்பதையும் ஆராய்கிறது. இந்த 17 மாநிலங்களும் சேர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 90% ஆகும்.


  • கடந்த காலங்களில், மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டுகளில் திட்டமிட்டதற்கும் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தன. எனவே, இந்த பகுப்பாய்வு முந்தைய ஆண்டின் உண்மையான எண்களுடன் ஒப்பிடும்போது, 2025 நிதியாண்டிற்கான உண்மையான நிதி புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்துகிறது.


  • 2025 நிதியாண்டிற்கான தற்காலிக புள்ளிவிவரங்கள், இந்த 17 மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை, 2024 நிதியாண்டில் ₹7.8 டிரில்லியன் (GSDP-ல் 2.9%)-லிருந்து ₹9.5 டிரில்லியன் (அவற்றின் மொத்த வருமானத்தில் 3.2%) ஆக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம், அவற்றின் வருவாய் பற்றாக்குறை 2024 நிதியாண்டில் ₹1.1 டிரில்லியன் (GSDP-ல் 0.4%)-லிருந்து 2025-ல் ₹2.1 டிரில்லியன் (GSDP-ல் 0.7%) ஆக கிட்டத்தட்ட இரட்டிப்பாகியது. இந்த அதிகரிப்பின் ஒரு சிறிய பகுதி, அதிக மூலதனச் செலவினங்களிலிருந்தும் வந்தது. இது ₹678 பில்லியன் (GSDP-ல் 0.2%) அதிகரித்துள்ளது.



உங்களுக்குத் தெரியுமா?:


  • 2025 நிதியாண்டில், மாநில அரசுகள் தங்கள் வருவாய் பற்றாக்குறையில் உயர்வைக் கண்டன. இது மத்திய அளவில் நடந்ததற்கு நேர்மாறானது. மொத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையின் பெரும்பகுதி மாநில நிதிக்கு நல்லதல்ல. அதாவது, அவர்களின் வரையறுக்கப்பட்ட கடனில் ஒரு பகுதி நீண்ட கால முதலீட்டை விட அன்றாட செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 17 மாநிலங்கள் தங்கள் நிதியாண்டில் 78% நிதியாண்டில் மூலதனத் திட்டங்களுக்குச் செலவிட்டன. இது 2022–2024 நிதியாண்டில் செலவிடப்பட்ட 80–90%-ஐ விடக் குறைவு.


  • 2025 நிதியாண்டில் இந்த 17 மாநிலங்களின் மொத்த மூலதனச் செலவு ₹7.4 டிரில்லியன் ஆகும். இது 2024 நிதியாண்டைவிட ₹678 பில்லியன் அதிகம். இருப்பினும், 2022 மற்றும் 2024 நிதியாண்டிற்கு இடையில் காணப்பட்ட ₹910–1,120 பில்லியன் வருடாந்திர அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு மிகவும் சிறியது.


  • மற்றொரு கவலை என்னவென்றால், மாநிலங்கள் தங்கள் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் திட்டமிட்டதைவிட ₹1.1 டிரில்லியன் குறைவாக மூலதனத் திட்டங்களுக்குச் செலவிட்டன. அதே நேரத்தில் மத்திய அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமாகச் செலவிட்டது.


  • மார்ச் 2025-ல், மாநிலங்களின் மூலதனச் செலவு மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது 42% அதிகரித்து, ₹1.5 டிரில்லியனில் இருந்து ₹2.2 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய நாடுகளின் அதிக செலவினங்களே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம். மாநிலங்களின் வருடாந்திர மூலதனச் செலவினத்தில் சுமார் 30% மார்ச் 2025-ல் மட்டும் நிகழ்ந்தது. இது மார்ச் 2024-ல் செலவிடப்பட்டதைவிட மிக அதிகம். இந்தக் கடைசி நிமிடச் செலவுதான் மார்ச் மாதத்தில் மாநிலக் கடன் பொதுவாக அதிகரிப்பதற்கு ஒரு காரணம்.



Original article:

Share:

ஐரோப்பிய ஒன்றியம்-ஐக்கிய இராச்சியம் இடையேயான வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive Economic and Trade Agreement (CETA)) முக்கியத்துவமும் அதன் இலக்குகளிலிருந்தும் வருகிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements (FTAs)) உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) அதிகார எல்லைக்குள் வரும் பகுதிகளை மட்டும் உள்ளடக்குகின்றன அல்லது கையெழுத்திடுபவர்களிடையே வலுவான பொருளாதார கூட்டாண்மையை எளிதாக்குவதற்காக பல்வேறு தேசிய பொருளாதார கொள்கை விவகாரங்களில் ஒத்திசைவு மற்றும் உறுதிப்பாடுகளை ஆழமாக உள்ளடக்குகின்றன.


• CETA இந்த யோசனையை நன்றாகக் காட்டுகிறது. இரு அரசாங்கங்களும் CETA மிகவும் முக்கியமானது என்று கூறுகின்றன. ஏனெனில், இது வாய்ப்புகள் பாதுகாப்புகள் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் சமநிலை காரணமாகவும், இந்தியாவின் பார்வையில், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மற்றவர்களுக்கான வார்ப்புருவை (template) வரையறுக்கும் முக்கிய மேற்கத்திய கூட்டாளியுடனான முதல் விரிவான ஒப்பந்தமாகும்.


• CETA வேறொரு காரணத்திற்காகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரமாக இன்னும் இருக்கும் அதன் கட்டமைப்பாளர், பலதரப்பு வர்த்தக ஆட்சியை புறக்கணித்து வருவதால், இருதரப்பு மற்றும் பிராந்தியவாதத்தின் மீதான நம்பிக்கை வளர்ந்து வரும் நேரத்தில், உலகைப் போலவே இந்தியாவிலும் இது ஒரு முக்கியமான படியாகும்.


• அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வர்த்தக அமைப்பின் அடிப்படைக் கொள்கையை கைவிட்டுள்ளார். மற்ற துறைகளைப் போலவே, அமெரிக்கா தான் உருவாக்கிய அமைப்பை இனி பயனுள்ளதாகவோ அல்லது கவர்ச்சியாகவோ காணவில்லை. ட்ரம்ப் 2008-ம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின் (Global Financial Crisis (GFC)) பிறகு அமெரிக்காவில் அதிபர்கள் பராக் ஒபாமா, ட்ரம்ப் மற்றும் ஜோ பைடனின் தொடர்ச்சியான பதவிக்காலங்களில் வர்த்தக தயக்கம், விரோதம் இல்லாவிட்டாலும் மற்றும் பாதுகாப்புவாதத்தை நோக்கிய நீண்டகால போக்கை வேகப்படுத்தியுள்ளார். உலக வர்த்தக அமைப்பின் (WTO) கட்டுப்பாட்டு விதி உருவாக்கும் பாத்திரத்திற்கு அமெரிக்கா தனது இறையாண்மையை விட்டுக்கொடுக்காது என்பதில் இரு கட்சிகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. தற்போதைய உணர்வுகள் அமெரிக்க அரசியல் பொருளாதாரத்தை தொடர்ந்து வடிவமைக்கும்.


•அமெரிக்கா மற்றும் பரந்த அளவில் மேற்கு நாடுகளுக்கு, இந்தப் பிரச்சனை 1970-களில் தொடங்கி உலகளாவிய நிதி நெருக்கடி உச்சத்தை அடைந்த நேரத்தில் சமீபத்திய உலகமயமாக்கல் அலையின் விளைவுகளில் ஆழமான கட்டமைப்பு வேர்களைக் கொண்டுள்ளது. 1870 முதல் 1914 வரையிலான முதல் உலகமயமாக்கல் (globalisation) அலை, தொழில்மயமாக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் செழிப்பு மற்றும் அதிகாரத்தின் குவிப்புக்கும், அமெரிக்கா ஒரு பெரிய சக்தியாக எழுச்சிக்கும் வழிவகுத்தது.


உங்களுக்குத் தெரியுமா?


• அரசு தகவல் அலுவலகத்தின் படி, விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Comprehensive Economic and Trade Agreement (CETA)) இந்தியாவின் ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதியில் 99 சதவீதத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் வரிவிலக்கு அணுகலை வழங்குகிறது. இது 100% வர்த்தக மதிப்பை உள்ளடக்குகிறது. இதில் ஜவுளி, தோல், கடல் பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், மற்றும் பொம்மைகள் போன்ற தொழிலாளர்-தீவிர துறைகள் மற்றும் பொறியியல் பொருட்கள், இரசாயனங்கள், மற்றும் வாகன பாகங்கள் போன்ற உயர்-வளர்ச்சி துறைகள் அடங்கும். இது பெரிய அளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்து, கைவினைஞர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (Micro, Small and Medium Enterprises (MSME)) வலுப்படுத்தும்.


• இந்த ஒப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், நிதி மற்றும் தொழில்முறை சேவைகள், வணிக ஆலோசனை, கல்வி, தொலைத்தொடர்பு, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான தொகுப்பு அடங்கும். இது அதிக மதிப்புள்ள மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.


• இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்தின் முக்கிய பலமான பொருட்களைத் தாண்டி சேவைகளை நிவர்த்தி செய்கிறது. 2023-ஆம் ஆண்டில் இந்தியா 19.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சேவைகளை ஐக்கிய ராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளது, மேலும் இதை மேலும் விரிவுபடுத்த CETA உறுதியளிக்கிறது. ஐக்கிய ராச்சியம் முதன்முறையாக, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உள்ள நிபுணர்களுக்கான இயக்கம், ஒப்பந்த சேவை வழங்குநர்கள், வணிக பார்வையாளர்கள், நிறுவனங்களுக்குள் இடமாற்றம் பெறுபவர்கள், தன்னிச்சையாக இயங்கும் நிபுணர்கள் ஆகியோருக்கு நெறிப்படுத்தப்பட்ட நுழைவை CETA வழங்குவதன் மூலம் நிதி மற்றும் கல்வி எளிதாக்கப்படுகிறது.


• இந்தியா தனது 89.5% கட்டண வரிசைகளை திறந்துள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் 91% ஏற்றுமதியை உள்ளடக்குகிறது. உணர்வுப்பூர்வமான துறைகள் மற்றும் உள்நாட்டுத் திறன் கட்டமைக்கப்படும் ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை பாதுகாக்கிறது. வரிகளின் நீக்கம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரம்பை நுகர்வோருக்கு மிகவும் மலிவாக்கும். போட்டி விலையில் அதிக வகைத்தன்மை மற்றும் தரத்தை வழங்கும்.


• ஐக்கிய இராச்சிய விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) இந்தியாவின் முக்கியப் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வழிகளைத் திறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கட்டணக் குறைப்பு, வர்த்தகத்திற்கான எளிமையான விதிகள், சேவைகளுக்கான வலுவான ஏற்பாடுகள் மற்றும் தொழில்முறை இயக்கத்தை எளிதாக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.


• இந்த ஒப்பந்தம் ஏற்றுமதியாளர்களை பொருட்களின் தோற்றத்தை சுய-சான்றிதழ் செய்ய அனுமதிப்பதன் மூலம் இணைந்து செயல்படுவதை எளிதாக்குகிறது. நேரம் மற்றும் காகித வேலைகளை குறைக்கிறது. ஐக்கிய இராச்சிய இறக்குமதியாளர்கள் சான்றிதழுக்காக இறக்குமதியாளர்களின் அறிவை நம்பியிருக்கலாம். இது வர்த்தகத்தை மேலும் எளிதாக்குகிறது. £1,000-க்கு கீழ் உள்ள சிறிய சரக்குகளுக்கு, தோற்ற ஆவணங்களுக்கான தேவை இல்லை. இது மின்-வணிகம் மற்றும் சிறு வணிகங்களை ஆதரிக்கிறது. பொருள் குறிப்பிட்ட தோற்ற விதிகள் (Product Specific Rules of Origin (PSRs)) ஜவுளி, இயந்திரங்கள், மருந்துகள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற முக்கிய துறைகளுக்கான இந்தியாவின் தற்போதைய விநியோக சங்கிலிகளுடன் ஒத்துப்போகிறது.



Original article:

Share: