புதுமையான தொழில்நுட்பங்கள் பொதுமக்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வடிவமைக்கின்றன? -தீரஜ் சிங்

 இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கணிசமாக மாறி வருகிறது. நவீன பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாள்வதில் தனியார் துறை இப்போது பெரிய பங்கை வகிக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் உத்திக்கான கூட்டாண்மைகளை உள்ளடக்கிய தனியார் பாதுகாப்பின் பங்கு விரிவடைந்துள்ளது. இது பாரம்பரிய பொதுப் பாதுகாப்பு சேவைகளை நிறைவு செய்கிறது. வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொது சேவைகள் பெரும்பாலும் முடியாத நகரங்களில் இந்த மாற்றம் அதிகமாகக் காணப்படுகிறது.


சைபர் குற்றத் தடுப்பு (cybercrime prevention), சிறந்த கண்காணிப்பு (better surveillance) மற்றும் சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு (healthcare and infrastructure) போன்ற துறைகளுக்கான பாதுகாப்புத் தீர்வுகள் போன்ற துறைகளில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அரசாங்க இலக்குகளை ஆதரிப்பதில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே நிறுவப்பட்ட நிறுவனங்கள் இரண்டும் வகிக்கும் முக்கிய பங்கை சைபர் பாதுகாப்பு முயற்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு செயல்படுத்தையில், பொது-தனியார் கூட்டாண்மை முக்கியத்துவம் பெறுகிறது. பயங்கரவாதம், கிளர்ச்சி, சைபர் குற்றம் மற்றும் பொருளாதார குற்றங்கள் போன்ற வளர்ந்து வரும் உள் பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதை இந்த ஒத்துழைப்புகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


இந்தியாவில் உள் பாதுகாப்பு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கான கொள்கைகளை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உள்துறை அமைச்சகம் (ministry of home affairs (MHA)) வழிவகுக்கிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. G7 நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த காவல்துறை-மக்கள் தொகை விகிதம், நீதிமன்ற வழக்குகளில் அதிக நிலுவைகள் மற்றும் குறைந்த தண்டனை விகிதங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சிக்கல்கள் சட்ட அமலாக்கத்தின் மீது அழுத்தத்தை  குறிப்பாக வேகமாக நகரமயமாக்கப்படும் பகுதிகளில் ஏற்படுத்துகின்றன.


உள்நாட்டு பாதுகாப்பு திட்டங்களுக்கு அரசாங்கம் நிதியை அதிகரித்திருந்தாலும், பயன்படுத்தப்படாத நிதி மற்றும் மெதுவான பொது கொள்முதல் செயல்முறைகள் போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்த சவால்களை சமாளிக்க, அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து வலுவான உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.


தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பொதுப் பாதுகாப்பை மாற்றி வருகின்றன. அவை சட்ட அமலாக்க மற்றும் அவசரகால பதிலளிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்குகின்றன. தொழில்நுட்பமானது பதிலளிப்புக்கான நேரங்களை மேம்படுத்த உதவுகிறது மற்றும் தரவு சார்ந்த முடிவெடுப்பதை அனுமதிக்கிறது. இது பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஸ்மார்ட் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் (Smart surveillance and monitoring systems) : நவீன கண்காணிப்பு அமைப்புகள் பாரம்பரிய CCTV அமைப்புகளை விட கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.  உயர்-வரையறை கேமராக்களை செயற்கை நுண்ணறிவு (AI) வழிமுறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த அமைப்புகள் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை தானாகக் கண்டறிவதை செயல்படுத்துகின்றன. இது சட்ட அமலாக்கத்தை விரைவாகச் செயல்படுத்தவும், குற்றங்கள் நிகழும் முன்பே தடுக்கவும் அனுமதிக்கிறது.


ரோபாட்டிக்ஸ் (Robotics) : ரோபோட்டிக்ஸ் பாதுகாப்பு மற்றும் வசதி மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும். இது ஒரு பயன்பாடான கழிப்பறையை சுத்தம் செய்தல், மேலும் அங்கு ரோபோக்கள் மனித கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளைக் கையாளும். மற்றொரு பயன்பாடு ஆபத்தான பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களுக்கான முகப்பு சுத்தம் செய்தல் ஆகும். வணிக ஹோட்டல்களின் பெரிய திறந்தவெளி பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளுக்காக ரோபோக்கள் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பில், பெரிய திறந்தவெளிகள் அல்லது நச்சு வாயுக்கள் உள்ள பகுதிகளில் பயன்படுத்த ரோபோக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அவை ரோந்துப் பணிக்கு நகரும் கேமரா சென்சார்களாகச் செயல்படும், நிலையான காவலர்களுக்குப் பதிலாக இருக்கும்.


சிசிடிவி கேமராக்கள் (CCTV cameras) : பொது இடங்கள், வணிகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் குற்றச் செயல்களைத் தடுப்பதாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளுடன் விசாரணைகளுக்கு மதிப்புமிக்க கருவியாகவும் செயல்படுகின்றன.


வான்வழி கண்காணிப்புக்கான ட்ரோன்கள் (Drones for aerial surveillance) : ட்ரோன்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்களைக் கொண்டுள்ளன. அவை நேரடி வீடியோ ஊட்டங்களை வழங்குகின்றன. இது தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மதிப்பீடுகளுக்கு அவற்றை அவசியமாக்குகிறது.


புவியியல் தரவு பகுப்பாய்வு (Geospatial data analysis) : புவியியல் தகவல் அமைப்புகள் (Geographic Information Systems (GIS)) குற்றத் தரவு, போக்குவரத்து முறைகள் மற்றும் பிற அளவீடுகளை ஒருங்கிணைக்கிறது. அவை பேரிடர் தயார்நிலைக்கு உதவுகின்றன மற்றும் தகவலறிந்ததை முடிவெடுப்பதை செயல்படுத்துகின்றன.


முக அங்கீகார அமைப்புகள் (Facial recognition systems) : இந்த அமைப்புகள் பொது நிகழ்வுகளில் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதில் உதவுகின்றன. இருப்பினும், அவை தனிப்பட்ட உரிமை தொடர்பானவற்றிலும் சில சிக்கல்களையும் எழுப்புகின்றன. மேலும், வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அவசியமாக்குகின்றன.


2. குற்றத் தடுப்புக்கான முன்கணிப்பு காவல் (Predictive policing for crime prevention : முன்கணிப்பு பகுப்பாய்வு (Predictive analytics) என்பது குற்றத் தடுப்புக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது கடந்த கால குற்றப் பதிவுகள் மற்றும் சமூக ஊடக செயல்பாடு போன்ற பெரிய தரவுத்தொகுப்புகளை பகுப்பாய்வு செய்கிறது. குற்றங்கள் நடக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காண இந்த முன்கணிப்பு மாதிரிகள் உதவுகின்றன. இது அதிகாரிகள் முன்கூட்டியே வளங்களை நிலைநிறுத்தி குற்றங்களைத் தடுக்க அனுமதிக்கிறது.


குற்ற வெப்ப வரைபடங்கள் (Crime heatmaps) : குற்றத் தரவுகளின் காட்சி பிரதிநிதித்துவங்கள் சட்ட அமலாக்கத்திற்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் காண உதவுகின்றன. இது அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் இடங்களில் வளங்களை மையப்படுத்த அனுமதிக்கிறது. இதன் விளைவாக, சமூக பாதுகாப்பு மேம்படுகிறது.


நடத்தை பகுப்பாய்வு கருவிகள் (Behavioral analysis tools) சாத்தியமான குற்றவாளிகளின் செயல்களை ஆய்வு செய்கின்றன. இது ஆரம்பகால தலையீடு மற்றும் மறுவாழ்வுக்கு உதவுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்த கருவிகள் மீண்டும் மீண்டும் குற்றங்களை (மீண்டும் குற்ற விகிதங்கள்) குறைக்கின்றன.


3. மேம்படுத்தப்பட்ட அவசரகால தகவல் தொடர்பு அமைப்புகள் : அவசரகாலங்களின் போது திறமையான தகவல் தொடர்பு மிக முக்கியமானது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பொது பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நிகழ்நேரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் திறனை பெரிதும் மேம்படுத்தியுள்ளன.


AI- இயங்கும் அனுப்புகை அமைப்புகள் (AI-powered dispatch systems) : இந்த அமைப்புகள் தீவிரத்தின் அடிப்படையில் அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. முக்கியமான வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுவதை உறுதி செய்கின்றன.

அவசரநிலைகளைப் புகாரளிப்பதற்கான மொபைல் பயன்பாடுகள் : பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் பயனர்கள் சம்பவங்களை எளிதாகப் புகாரளிக்க உதவுகின்றன. அவை பயனர்கள் புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பிக்க அனுமதிக்கின்றன. இந்த செயலிகள் மூலம் பயனர்கள் அதிகாரிகளுக்கு விரைவாக எச்சரிக்கை செய்யலாம்.


பேரிடர் எச்சரிக்கை அமைப்புகள் (Disaster alert system) : இந்த அமைப்புகள் உடனடி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தானியங்கி எச்சரிக்கைகளை அனுப்புகின்றன. இது, சரியான நேரத்தில் வெளியேற்றங்களைச் செயல்படுத்துகின்றன மற்றும் உயிர்களைக் காப்பாற்றுகின்றன.


2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா நகரும்போது, ​​வலுவான உள் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். பாரம்பரிய மற்றும் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த முயற்சியில் பொது-தனியார் கூட்டாண்மைகளும் முக்கியமானதாக இருக்கும்.  அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலமும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும், ஆதரவான கொள்கைகளை உருவாக்குவதன் மூலமும், தனியார் துறை பொதுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவ முடியும். இது இந்தியாவின் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும்.


இந்தக் கட்டுரையை SIS Ltd இன் தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ் சிங் எழுதியுள்ளார்.        


Original article:

Share:

நடுத்தர வர்க்கத்தினருக்காக, வரி குறைப்புகளுக்குப் பதிலாக ஒன்றிய வரவு செலவு அறிக்கை எதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்? -ஹிமான்ஷு

 பொருளாதார மந்தநிலை தீவிரமாக இருந்தது. இதைச் சரிசெய்ய, பொதுச் செலவுகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. இது ஒட்டுமொத்த தேவையை அதிகரிக்க உதவும்.


பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரியும் நேரத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய வரவு செலவு அறிக்கை வருகிறது. முன்பு போலல்லாமல், அரசாங்கம் இறுதியாக இந்த மந்தநிலையை ஒப்புக்கொள்கிறது. ஒரு நாள் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை தெளிவாக மதிப்பிட்டுள்ளது. இதில் முக்கிய பிரச்சினையானது, தேக்கமடைந்து வருவதால் ஏற்படுவது அல்லது குறைந்து வருவது வருமான மந்தநிலை ஆகும். சுயதொழில் செய்பவர்களின் வருமானத்தில் ஏற்படும் குறைந்து வரும் ஆதாரங்களையும் இந்த ஆய்வு வழங்கியது. 


கூலித் தொழிலாளர்களுக்கு, உண்மையான ஊதியங்கள் கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக தேக்க நிலையில் உள்ளன. இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க பட்ஜெட் யோசனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இது புதிய யோசனைகளை முன்வைக்கவில்லை. அதற்கு பதிலாக, வரவு செலவு அறிக்கையின் நடவடிக்கைகள் பொருளாதார யதார்த்தத்தை அல்லாமல், அரசியல் நடைமுறைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது. டெல்லி மற்றும் பீகாரில் வரவிருக்கும் தேர்தல்களும், ஆளும் கட்சியின் முக்கிய வாக்காளர்களான நடுத்தர வர்க்கத்தை திருப்திப்படுத்த வேண்டிய அவசியமும் பொருளாதாரத்தின் போராட்டங்களை விட, குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் விவசாயத்தில் மிகவும் முக்கியமானதாகிவிட்டன.


பொருளாதார மந்தநிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மொத்த தேவையை அதிகரிக்க பொது செலவினங்களில் அதிகரிப்பு தேவைப்பட்டது. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal GDP) வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது. இதில், பணவீக்கம் நான்கு-ஐந்து சதவீத வரம்பில் உள்ளது. 7.3 சதவீத செலவினங்களின் வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட குறைவாக உள்ளது. வட்டியை செலுத்துதல்கள், அதாவது உறுதியளிக்கப்பட்ட செலவினங்களைத் தவிர்த்து, அரசாங்க செலவினங்களில் வளர்ச்சி கடந்த ஆண்டைப் போலவே 5.9 சதவீதம் மட்டுமே ஆகும். 


மறுபுறம், அரசாங்கத்தின் மொத்த மற்றும் நிகர வரி வருவாய் பெயரளவு அடிப்படையில் 10.9% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், இதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ₹1 லட்சம் கோடி வரி நிவாரணம் உள்ளது. செலவினங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் நிதிநிலை அறிக்கையாகப் இருப்பதற்குப் பதிலாக, இது ஒரு எச்சரிக்கையான மற்றும் பழமைவாத நிதிநிலை அறிக்கையாக உள்ளது. அனைவருக்கும் வருமானத்தை உயர்த்த அரசாங்கம் அதிகமாக செலவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இது வருகிறது.


அடுத்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை 4.4 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு அனுமதித்திருந்தாலும், நிதிச் செலவுக்காக தேவைப்படும் திட்டங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கான உண்மையான செலவினக் குறைப்புகளால் இது அடையப்பட்டுள்ளது. பட்ஜெட் மதிப்பீடுகள் பல முக்கியமான அமைச்சகங்களில், திருத்தப்பட்ட செலவினம் கடந்த ஆண்டு பட்ஜெட் செய்யப்பட்டதை விடக் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. பட்ஜெட் அறிவிப்புகளின் போது அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டாலும், உண்மையான செலவினம் குறைவாக இருப்பதால் இது சில காலமாக ஒரு பொதுவான போக்காக இருந்து வருகிறது.


கிராமப்புற மேம்பாட்டுக்கான செலவு கவலை அளிக்கிறது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட மதிப்பீடுகளை விட ரூ.3,654 கோடி ரூபாய்  குறைவு. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தைப் பொறுத்தவரை, திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ரூ.4,224 கோடி ரூபாய் குறைவு ஆகும். கிராமப்புறங்கள் கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக துயரத்தை எதிர்கொண்டுள்ளன. 

மேலும், வேலையின்மை ஒரு முக்கிய பிரச்சினையாகும். முக்கிய திட்டங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு இந்த குறைவான செலவு சிக்கலை ஏற்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MAHATMA GANDHI NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE SCHEME(MGNREGA)) நிலைமையும் இதேபோன்றது. குறைந்த ஊதியம் மற்றும் உற்பத்தி வேலைகள் இல்லாததால் போராடும் பலருக்கு MGNREGA அவசியமாக உள்ளது. பணவீக்கம் மற்றும் உயரும் ஊதியங்கள் இருந்தபோதிலும், MGNREGA-க்கான நிதி செலவினம் கடந்த ஆண்டைப் போலவே ரூ.86,000 கோடியாகவே உள்ளது. இந்தத் தொகை உண்மையில் 2023-24 ஆம் ஆண்டில் MGNREGA-க்கான செலவினத்தை விடக் குறைவு.  இது ரூ.89,368 கோடி ரூபாயாக இருந்தது.


அதிக நேரம் பேசப்பட்ட மற்றொரு நெருக்கடி நிறைந்த துறை வேளாண் துறை ஆகும். வேளாண்மையில் கூட, வருமானம் தேக்கமடைந்துள்ளது அல்லது குறைந்து வருகிறது என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. வேளாண்மையைப் பொறுத்தவரை, பெயரளவு செலவுக்கான உண்மையில் கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட குறைவாக உள்ளது. வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட செலவு ரூ.1,27,290 கோடியாகும். இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டான ரூ.1,31,195 கோடிக்கு எதிரானதாகும்.


தேக்கமடைந்த அல்லது குறைந்து வரும் வருமானம் கொண்ட ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் செலவினங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு உதவ, நடுத்தர வர்க்கத்தின் மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் வரி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்குகளையும் வழங்குகிறது. தேவையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முக்கிய உத்தியாக இது தெரிகிறது. இது நல்வாழ்வுக்கான நடுத்தர வர்க்கத்தினருக்கு செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கக்கூடும் என்றாலும், பொருளாதாரத்தில் பலவீனமடைந்து வரும் நுகர்வுக்கான தேவையை மீண்டும் உயிர்ப்பிப்பதில் உண்மையான தாக்கம் நிச்சயமற்றதாக உள்ளது.


அரசாங்கத்தின் முடிவு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில், ஊடகங்கள் நடுத்தர வர்க்கத்தினர் மிகப்பெரிய பாதிக்கப்பட்டவர்கள் என்று கவனம் செலுத்தின. இருப்பினும், கிராமப்புறங்கள், வேளாண்மை மற்றும் முறைசாரா வணிகங்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்மையில் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். நிதிச் செலவினங்களை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது, ​​இது ஒப்பீட்டளவில் பணக்காரர்களுக்கு பணப் பரிமாற்றத்தைத் தவிர வேறில்லை. இது அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பெரும்பான்மையினருக்கு பயனளிக்கும். ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பணக்காரர்கள் மீது அரசாங்கம் தனது ஆதரவை வைப்பது இது முதல் முறை அல்ல. சில வழிகளில், இது முதல் மந்தநிலையின் போது பெருநிறுவனத் துறைக்கு அரசாங்கம் வழங்கிய உதவியைப் போன்றது.  


அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வரி மானியங்களை வழங்கியது.  இருப்பினும், இந்தப் பணம் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக அவர்களின் இருப்புநிலைக் குறிப்பைச் (balance sheets) சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, அரசாங்கம், குறிப்பாக தலைமைப் பொருளாதார ஆலோசகர், பெருநிறுவனத் துறையின் மீது ஏமாற்றமடைந்துள்ளார். முதலீட்டை அதிகரிப்பதற்கு அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் மானியங்களைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிக்கவும் ஊதியங்களைக் குறைக்கவும் செய்தனர்.


கடந்த நான்கு ஆண்டுகளில், பல நடுத்தர வர்க்க மக்கள் பல்வேறு வகையான கடன்களை, பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் இல்லாமல், பெற்றுள்ளனர். சமீபத்திய வரிச் சலுகையுடன், அவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் செலவிடுவதற்குப் பதிலாக தங்கள் கடன்களையும் அடமானங்களையும் செலுத்தத் தேர்வு செய்யலாம். நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதாரத்தை ஆதரிப்பார்களா அல்லது சில நிறுவனத் துறைகளைப் போல ஏமாற்றமடைவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் நிதிப் போராட்டங்களை எதிர்கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு இந்த வரவு செலவு அறிக்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் எங்கே உள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.


எழுத்தாளர் ஒரு இணைப் பேராசிரியர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தில் பணிபுரிகிறார்கள்.




Original article:

Share:

தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையம் (National Commission for Safai Karamcharis) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


1. இந்த ஆணையம் 1994-ஆம் ஆண்டு தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையச் சட்டம் (National Commission for Safai Karamcharis Act), 1993-ன் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக நிறுவப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டம் 2024-ஆம் ஆண்டில் காலாவதியாகி, இந்த ஆணையத்தை சட்டப்பூர்வமற்றதாக மாற்றியது. இருந்தபோதிலும், கையால் துப்புரவு செய்பவர்களைப் பணியமர்த்தப்படுவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013 இயற்றப்பட்ட பிறகு அதன் நோக்கம் விரிவடைந்தது.


2. அதன் முக்கிய பணிகளில் ஒன்றியத்திற்கு குறிப்பிட்ட செயல் திட்டங்களை பரிந்துரைப்பதும் அடங்கும். இந்த திட்டங்கள் துப்புரவு பணியாளர்களுக்கான நிலை, வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை  பணியாளர்களின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்வுக்கான திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை ஆய்வு செய்து மதிப்பீடு செய்வதிலும் இது கவனம் செலுத்துகிறது.


3. கூடுதலாக, துப்புரவு பணியாளர்களுக்கான திட்டம் (programs) மற்றும் திட்டங்கள் (schemes) செயல்படுத்தப்படாததை விசாரிப்பதும் இதன் பணியாகும். இது துப்புரவுப் பணியாளர்கள் தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்துவதையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. கடந்த 15 ஆண்டுகளில், டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் போது 94 பேர் இறந்துள்ளனர். இதற்கான பதிவுகள் கிடைக்கக்கூடிய 75 வழக்குகளில், ஒன்று மட்டுமே தண்டனைக்கு வழிவகுத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.


2. கையால் துப்புரவு செய்யும் பணி (Manual scavenging) என்பது சாக்கடைகள் அல்லது செப்டிக் தொட்டிகளில் இருந்து மனித கழிவுகளை கையால் அகற்றும் நடைமுறையாகும். இந்தியா இந்த நடைமுறையை கையால் துப்புரவு செய்பவர்களாக பணியமர்த்தல் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (Manual Scavengers and their Rehabilitation Act, 2013 (PEMSR)) மூலம் தடை செய்தது. இந்தச் சட்டம், மனித மலத்தை கைமுறையாக சுத்தம் செய்ய, எடுத்துச் செல்ல, அப்புறப்படுத்த அல்லது கையாள எந்தவொரு நபரையும் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.


3. 2013-ஆம் ஆண்டில், கையால் துப்புரவு செய்பவர்களின் வரையறை, செப்டிக் தொட்டிகள், பள்ளங்கள் அல்லது இரயில் பாதைகளை சுத்தம் செய்யப் பணியமர்த்தப்பட்டவர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. இந்த சட்டம் கையால் துப்புரவு செய்வதை "மனிதாபிமானமற்ற நடைமுறை" (dehumanizing practice) என்று அங்கீகரிக்கிறது. மேலும், "கையால் துப்புரவு செய்பவர்களால் அனுபவிக்கப்பட்ட வரலாற்று அநீதி மற்றும் அவமானத்தை" சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது.


4. இந்தச் சட்டத்தின் மோசமான அமலாக்கம் மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை சுரண்டுவதால் இந்தியாவில் இந்த நடைமுறை இன்னும் உள்ளது. மும்பையில், செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய நகராட்சி ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வசூலிக்கிறது. இருப்பினும், திறமையற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மிகவும் குறைவான அளவில் உள்ளது. ஒப்பந்ததாரர்கள் அவர்களை சட்டவிரோதமாக ரூ.300-500 தினசரி ஊதியத்தில் பணியமர்த்துகிறார்கள்.

 


Original article:

Share:

அதிக வருவாய் ஈட்டும் ஒரு பெரிய இரயில்வே மண்டலத்தைப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஏன் ஒப்புதல் அளித்தது? -தீரஜ் மிஸ்ரா

 புதிய தென் கடற்கரை இரயில்வே மண்டலம் (new South Coast Railway Zone) இந்திய ரயில்வேயின் 18-வது மண்டலமாக இருக்கும். இந்த நடவடிக்கை பல காரணங்களுக்காக முக்கியமானது.


ஜனவரி தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தெற்கு கடற்கரை இரயில்வே தலைமையகத்திற்கு (South Coast Railway headquarters) அடிக்கல் நாட்டினார்.


2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் தெற்கு கடற்கரை இரயில்வே (South Coast Railway (SCoR)) மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு வழிவகுத்தது. தெற்கு கடற்கரை இரயில்வே (SCoR) இந்திய இரயில்வேயின் 18-வது மண்டலமாக இருக்கும். இதன் அதிகார வரம்பு கிழக்கு கடற்கரை இரயில்வே மற்றும் தெற்கு மத்திய இரயில்வே மண்டலங்களின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.


இந்திய இரயில்வேயின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பகுதிகளில் ஒன்றான வால்டேர் இரயில்வே பிரிவை (முன்னர் கிழக்கு கடற்கரை இரயில்வேயின் கீழ் இருந்தது) அமைச்சரவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. அதன் காலனித்துவ காலப் பெயரை மேற்கோள் காட்டி, அரசாங்கம் முதல் பகுதியை விசாகப்பட்டினம் இரயில்வே பிரிவு என்று மறுபெயரிட்டு புதிய மண்டலத்தின் கீழ் சேர்த்தது.


இரண்டாவது பகுதி, ஒடிசாவின் ராயகடாவில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு புதிய பிரிவாக மாறும்.  இது கிழக்கு கடற்கரை இரயில்வேயின் கீழ் இருக்கும்.


ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் அட்டவணை 13 இன் 8வது பிரிவின் படி, இந்திய இரயில்வே ஒரு புதிய ரயில்வே மண்டலத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருந்தது.


பிப்ரவரி 27, 2019 அன்று, மத்திய அரசு ஒரு புதிய இரயில்வே பிரிவை உருவாக்கும் திட்டங்களை அறிவித்தது. இந்தப் பிரிவு ஆந்திரப் பிரதேசத்தில் செயல்பாடுகளுக்கான ஒரு இரயில்வே உத்திக்கான மையமாகச் செயல்படும் என்ற நோக்கம் கொண்டது. இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரி 28, 2019 ஆம் ஆண்டு  முதல் அமைச்சரவை முடிவில் சில மாற்றங்களுடன் இந்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.


ஒரு மூத்த ரயில்வே அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “இது பிராந்தியத்தில் தொழில்துறை மற்றும் விவசாய வளர்ச்சியை ஆதரிக்கும்.  இதனுடன், விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணபட்டணம் போன்ற முக்கிய துறைமுகங்களுக்கான தளவாடங்களை மேம்படுத்தும்.  இந்த மண்டலம் திருப்பதி மற்றும் ஆந்திராவின் பிற கலாச்சார அடையாளங்களுக்கு சுற்றுலாவை அதிகரிக்கும்.”


ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு தனி இரயில்வே மண்டலம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இருந்தபோதிலும், மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே அதிகார ஒற்றுமை ஏற்பட்ட பின்னரே அது நிறைவேறியது. 2024-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஆந்திராவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP), மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரு பகுதியாகும்.


தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் என்ன பிரிவுகள் அடங்கும்?


இது தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுடன் ஆந்திராவின் குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கும். அதன் முக்கிய பிரிவுகளில் விஜயவாடா பிரிவு (தெற்கு மத்திய இரயில்வேயிலிருந்து), குண்டூர் பிரிவு (தெற்கு மத்திய இரயில்வேயிலிருந்து) மற்றும் வால்டேர் பிரிவின் ஒரு பகுதி, அதாவது விசாகப்பட்டினம் பிரிவு ஆகியவை அடங்கும்.


இது முன்னாள் வால்டேர் பிரிவின் சில பகுதிகளை உள்ளடக்கும், இதில் பலாசா-விசாகப்பட்டினம்-துவாடா, குனேரு-விஜியநகரம், நௌபாடா சந்திப்பு-பரலகேமுண்டி, பொப்பிலி சந்திப்பு-சாலூர், சிம்ஹாசலம் வடக்கு-துவாடா பைபாஸ், வடலபுடி-துவாடா, மற்றும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை-ஜக்காயபாலம் ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவுகள் அடங்கும், மொத்தம் சுமார் 410 கி.மீ. ஆகும்.


வால்டேர் பிரிவின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு புதிய பிரிவு உருவாக்கப்படும். இதில் கோட்டவலசா–பச்சேலி, குனேரு–தெருவலி சந்திப்பு, சிங்கப்பூர் சாலை–கோராபுட் சந்திப்பு, மற்றும் பராலகேமுண்டி–குன்பூர் இடையேயான பிரிவுகளும் அடங்கும்.  இந்தப் பிரிவுகளின் மொத்த நீளம் சுமார் 680 கி.மீ. ஆகும். புதிய பிரிவின் தலைமையகம் ராயகடாவில் இருக்கும்.


வால்டேர் பிரிவு (Waltair division) ஏன் முக்கியமானது?


வால்டேர் பிரிவு இரயில்வேக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இது முதன்மையாக அதன் சரக்கு போக்குவரத்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கரின் சுரங்க மற்றும் எஃகு தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, கிழக்கு கடற்கரை இரயில்வே (East Coast Railway (ECoR)), 2023-24 நிதியாண்டில் சரக்கு ஏற்றுதலில் இந்திய இரயில்வேயின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. ஏப்ரல் 1, 2023 ஆண்டு  முதல் மார்ச் 25, 2024 ஆண்டு வரை, ECoR 250 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி, 2022-23 நிதியாண்டில் நிறுவப்பட்ட சாதனையை முறியடித்தது.


இதில், தெற்கு கடற்கரை இரயில்வேயின் (ECoR) குர்தா சாலை பிரிவு 156.17 மில்லியன் டன்களையும், அதைத் தொடர்ந்து வால்டேர் பிரிவு 74.66 மில்லியன் டன்களையும், சம்பல்பூர் பிரிவு 19.20 மில்லியன் டன்களையும் பங்களித்தது. இது, தொடர்ந்து ஐந்தாவது முறையாக 200 மில்லியன் டன் சரக்கு ஏற்றுதல் என்ற மைல்கல்லைக் கடந்த முதல் மண்டலமாகவும் தெற்கு கடற்கரை இரயில்வே (ECoR) ஆனது.




Original article:

Share:

இந்தியாவின் பசுமை எரிசக்தி வழித்தடம் (GEC) முன்முயற்சி என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


1. நிறுவனம் தளத்தில் உள்ள பணியாளர்களுக்கு (site personnel) 24 மணி நேரமும் பாதுகாப்பைக் கோருகிறது. சுமார் 1,200 தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, பிற மாநிலங்களிலிருந்து திறமையான தொழிலாளர்களை லடாக்கிற்கு கொண்டு வர வேண்டிய அவசியமும் உள்ளது. கூடுதலாக, சீன எல்லைக்கு அருகிலுள்ள இடத்திற்கு அதிக பரிமாண கனரக உபகரணங்களை கொண்டு செல்ல ஒரு பெரிய சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு தேவைப்படுகிறது.


2. பனிச்சரிவு ஏற்படக்கூடிய லடாக் பகுதியிலிருந்து ஹரியானா வரை மின் இணைப்பை அமைப்பது நடைமுறைக்கு ஏற்றதா என்பது குறித்து ஒரு பெரிய கேள்வி உள்ளது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இந்த திட்டத்திற்கு கூடுதல் செலவுகள் தேவைப்படும். 2023 ஆம் ஆண்டில், பசுமை எரிசக்தி வழித்தடம் (Green Energy Corridor (GEC)) திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதற்காக சுமார் ₹8,300 கோடியை அங்கீகரித்தது. இருப்பினும், இந்த திட்டம் நிதி ரீதியாக சாத்தியமா என்பது குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் கவலைகளை எழுப்பியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆவணங்கள் காட்டுகின்றன.


3. இதற்கிடையில், தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்படவுள்ள 13 ஜிகாவாட் (gigawatt (GW)) சூரிய மற்றும் காற்றாலை போன்ற கலப்பின பூங்காவிற்கான டெண்டர் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடோடி கால்நடை மேய்ப்பர்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு நிலத்தை நம்பியிருப்பதால், பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.


4. இராஜதந்திர பரிசீலனைகள் (Strategic considerations) : மின் பரிமாற்றத் திட்டத்தைக் கையாளும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation of India Ltd), அதன் விரிவான திட்ட அறிக்கையில் பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் பணி இடையூறுகளுக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டியது.


5. தொழில்நுட்ப, தளவாட சவால்கள் : லடாக்கின் அதிக சூரிய கதிர்வீச்சு மற்றும் குறைந்த வெப்பநிலை திறமையான சோலார் ஒளிமின்னழுத்த (photovoltaic (PV)) உற்பத்திக்கு ஏற்றது. ஆனால், அதன் புவியியல் தனித்துவமான சவால்களையும் முன்வைக்கிறது. இது -45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து, கடுமையான பனிப்பொழிவுடன், டிரான்ஸ்மிஷன் உபகரணங்கள் (transmission equipment) தீவிர வானிலையைத் தாங்க சிறப்பு எஃகு பயன்படுத்தும். இது சிறப்பு அடித்தளங்கள் மற்றும் பனிச்சரிவுக்கான பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் வலுப்படுத்தப்படும்.


6. நிதி நம்பகத்தன்மை (Financial viability) : முழு திட்டத்தின் வெற்றியும் பாங் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் திட்டமிடப்பட்ட 12 GWh பேட்டரி சேமிப்பைப் பொறுத்தது. இந்த சேமிப்பு பரிமாற்ற அமைப்பின் செயல்திறனை 35% இலிருந்து 76% ஆக அதிகரிக்கும். தற்போது, ​​இந்தியாவில் 1 GWh க்கும் குறைவான பேட்டரி சேமிப்பு கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகளுக்கான விநியோகச் சங்கிலியின் பெரும்பகுதி சீனாவால் கட்டுப்படுத்தப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. ஆகஸ்ட் 2020ஆ-ம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) வழிமுறைகளைப் பெற்ற பிறகு, மின் பரிமாற்றத் திட்டம் திட்டமிடப்பட்டது. லடாக்கில் 7.5 GW சூரிய சக்தி பூங்காவிற்கான விரிவான திட்டத்தை உருவாக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆவணங்களின்படி, இந்திய சூரிய ஆற்றல் கழகத்துடன் (Solar Energy Corporation of India (SECI)) கலந்தாலோசித்து இது செய்யப்பட இருந்தது.


2022-ஆம் ஆண்டுக்குள், இந்தத் திட்டம் 9 GW சூரிய சக்தி, 4 GW காற்றாலை மின்சாரம் மற்றும் 12 GWh பேட்டரி சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. இந்த கலப்பின பூங்கா ஹரியானாவின் கைதாலில் உள்ள தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும். இது தற்போதுள்ள லடாக் மின் கட்டமைப்பு மற்றும் லே-கார்கில்-அலுஸ்டெங் மின் இணைப்புடன் இணைக்கப்படும். இது ஜம்மு-காஷ்மீருக்கு நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்யும்.




Original article:

Share:

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 239AA கீழ் டெல்லிக்கு என்ன சிறப்பு விதிமுறைகள் உள்ளன? -ரோஷ்னி யாதவ்

 உங்களுக்குத் தெரியுமா? :


. டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் தனித்துவமான நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளது. இது முக்கியமாக டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம் (National Capital Territory of Delhi Act), 1991-ன் கீழ் செயல்படுகிறது.


. இந்திய அரசியலமைப்பில் உள்ள முதல் அட்டவணையின்படி, டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாகும். பிரிவு 239AA அதன் நிர்வாகத்திற்கான சிறப்பு விதிமுறைகளை வழங்குகிறது.


. பிரிவு 239AA, 69-வது திருத்தச் சட்டம், 1991 மூலம் சேர்க்கப்பட்டது. டெல்லியின் மாநில அந்தஸ்து கோரிக்கையை ஆராய 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எஸ். பாலகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் (S Balakrishnan Committee) அடிப்படையில் இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.


• பிரிவு 239AA-ன் படி, டெல்லி தேசிய தலைநகர் ஒரு நிர்வாகம் மற்றும் ஒரு சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும். டெல்லி சட்டமன்றம் தேசிய தலைநகர் பிரதேசத்தின் முழு அல்லது எந்தப் பகுதிக்கும் சட்டங்களை இயற்ற முடியும். மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பிரிவுகளில் சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், அவை யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தினால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும். இருப்பினும், காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் குறித்து சட்டங்களை இயற்ற முடியாது.


• பிரிவு 239AA(b) டெல்லி சட்டமன்றத்தில் எத்தனை இடங்களை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறுகிறது. இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், தேசிய தலைநகர் பிரதேசம் எவ்வாறு தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது மற்றும் சட்டமன்றத்தின் செயல்பாட்டிற்கான பிற விதிகளையும் தீர்மானிக்கும்.


. 1991-ஆம் ஆண்டில், பிரிவு 239AA சேர்க்கப்பட்டபோது, ​​நாடாளுமன்றம் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம் (Government of National Capital Territory of Delhi (GNCT)) சட்டம், 1991-ஐ நிறைவேற்றியது. இந்த சட்டம் டெல்லியின் சட்டமன்றம் மற்றும் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான கட்டமைப்பை அமைக்கிறது. இது சட்டமன்றத்தின் அதிகாரங்கள், துணை நிலை ஆளுநர் (Lieutenant Governor (LG)) விருப்புரிமை அதிகாரம் மற்றும் துணைநிலை ஆளுநருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய முதலமைச்சரின் கடமை ஆகியவற்றை வரையறுக்கிறது.





Original article:

Share:

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• நிதிக் கொள்கை (fiscal policy) எனப்படும் வரிவிதிப்பு மற்றும் செலவினக் கொள்கைகளைப் பயன்படுத்தி அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. வரிகளைக் குறைக்கும்போது, மக்கள் அதிக பணம் செலவழிக்கிறார்கள். இது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கிறது.


• இதேபோல், சம்பளம் (நடப்பு அல்லது வருவாய் செலவு என்றும் அழைக்கப்படுகிறது) போன்ற தினசரிச் செலவுகளுக்கான செலவினங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்தி சொத்துக்களை (மூலதனச் செலவு என்று அழைக்கப்படுகிறது) உருவாக்குவதற்கு அதிகமாகச் செலவிடுவது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை  அதிகரிக்க உதவுகிறது.


• இந்தியாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பெயரளவு அடிப்படையில் 10% விகிதத்தில் வளர்ந்துள்ளது. ஒப்பிடுகையில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது ஒரு இந்தியரின் சராசரி வருமானம் 8.9% விகிதத்தில் மட்டுமே வளர்ந்துள்ளது.


• ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை 11.8% வளர்ச்சியடைந்தது. இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை விட வேகமாகும்.  2015-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு செலவு அறிக்கை 13.31% மட்டுமே இருந்தது. மேலும்,  2025 நிதியாண்டில் 15.65% ஆக அதிகரித்தது.


• சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை செலவுகள் கல்வியை விடக் குறைவாக உள்ளது. வரவு செலவு அறிக்கை ஒட்டுமொத்த அளவிற்கு ஏற்ப ஒதுக்கீடு வளர்ந்திருந்தாலும், அது மொத்த அரசாங்க செலவினத்தில் 1.7% மட்டுமே  உள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? :


• மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் ஒரு முக்கியமான பொருளாதார குறிகாட்டியாகும் (macroeconomic indicator). உலகின் பிற நாடுகளுடன் ஒரு நாட்டின் வளர்ச்சியை ஒப்பிடுவதற்கும் இது ஒரு எளிதான அளவீடாகும்.


• இந்த அளவீட்டில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது சராசரி எண்ணை மட்டுமே தருகிறது. இது வருமானம், வேலையின்மை, கிராமப்புற-நகர்ப்புற இடைவெளிகள் அல்லது வருமான நிலைகளில் உள்ள வேறுபாடுகளைக் காட்டாது. இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடப்படும் விதம் காரணமாக அது அடிக்கடி பயன்படுத்தப்படும் அளவீடாகவே உள்ளது.


• மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும்.




Original article:

Share:

அரசியலமைப்பின் 22-வது பிரிவு என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


. கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரிடமும் கைதுக்கான காரணங்களை உடனடியாக தெரிவிப்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும் (fundamental right). கைது செய்யப்பட்ட உடனேயே கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படாவிட்டால், அது பிரிவு 22(1)-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட்டவரின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது கைது செய்யப்பட்ட நபரின் சுதந்திரத்தைப் பறிப்பதை குறிக்கிறது.


. "காரணம், பிரிவு 21-ல் வழங்கப்பட்டுள்ளபடி, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, எந்தவொரு நபரின் சுதந்திரத்தையும் பறிக்க முடியாது. சட்டத்தால் வழங்கப்பட்ட நடைமுறை பிரிவு 22(1)-ல் வழங்கப்பட்டுள்ளவற்றையும் உள்ளடக்கியது. எனவே, ஒரு நபர் கைது பிணை இல்லாமல் கைது செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள், கைதுக்குப் பிறகு, அவருக்கு விரைவில் தெரிவிக்கப்படாவிட்டால், அது பிரிவு 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவரது அடிப்படை உரிமையையும் மீறுவதாகும் என்று நீதிபதி ஓகா கூறினார்.


. கைது செய்யப்பட்ட ஒருவர் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன் காவலுக்காக கொண்டுவரப்படும் போது, ​​பிரிவு 22(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சரிபார்க்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


. கைதுக்கான காரணத்தை கைது செய்யப்பட்ட நபரின் நண்பர்கள், உறவினர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட நபர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி சிங் விளக்கினார். மேலும், சட்டத்தால் அனுமதிக்கப்பட்டபடி, கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்கு உடனடி மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க அவர்களால் முடியும் என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்"  என்று நீதிபதி சிங் கூறினார்.

உங்களுக்குத் தெரியுமா? :


• பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிரான பாதுகாப்பை பரிந்துரைக்கிறது. ஆனால், அதில் ஒரு பெரிய விதிவிலக்கு உள்ளது. பிரிவு 22(3)(b) இன் படி, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு இந்தப் பாதுகாப்பு பொருந்தாது. பிரிவு 22(4) முதல் 22(7) வரையிலான பிற பகுதிகள், தடுப்புக் காவல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகின்றன.


• முதலாவதாக அரசு, மாவட்ட நீதிபதியாக (district magistrate) இருக்கும் ஒருவரை "பொது ஒழுங்கை" பராமரிக்க அவசியமான போது ஒரு நபரை தடுத்து தடுப்பு காவலில் ஒரு வைக்க உத்தரவை பிறப்பிக்கும். அரசு இந்த அதிகாரத்தை காவல்துறைக்கும் வழங்க முடியும்.


• பிரிவு 22(4)-ன் கீழ், உத்தரவிடப்பட்ட தடுப்புக்காவல் மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்தால், அத்தகைய தடுப்புக்காவலுக்கு ஒரு ஆலோசனைக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும். இந்த ஆலோசனைக் குழு மாநிலங்களால் அமைக்கப்படுகின்றன. பொதுவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளை இந்த ஆலோசனைக் குழு கொண்டிருக்கும். ஒரு கைதிக்கு பொதுவாக ஆலோசனைக் குழு முன் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்படுவதில்லை. ஆலோசனைக் குழு தடுப்புக்காவலை (detainee) உறுதிப்படுத்தினால், உத்தரவை எதிர்த்து கைதி நீதிமன்றத்தை நாடலாம்.




Original article:

Share: