இரயில்வே சீர்திருத்தப் பாதையை புறக்கணிக்கிறது - சுதான்ஷு மணி

 இரயில்வே (திருத்த) மசோதா மண்டலங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் தனியார்மயமாக்கலைக் காட்டிலும் நிர்வாக மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது. 


இந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரயில்வே (திருத்த) மசோதா, 2024, இந்திய ரயில்வே (ஐஆர்) வாரியச் சட்டம், 1905யை  ரத்து செய்து,  அதன் விதிகளை ரயில்வே சட்டம், 1989  இணைக்க முன்மொழிகிறது.  இந்த மசோதா இந்திய ரயில்வேயின் தற்போதுள்ள நிறுவன கட்டமைப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது மற்றும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிவர்த்தி செய்ய குறிப்பாக முயற்சிக்கவில்லை. இந்த திருத்தம் இரண்டு தனித்தனி சட்டங்களைக் குறிப்பிட வேண்டிய அவசியத்தை நீக்குவதன் மூலம் சட்ட கட்டமைப்பை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது ஒரு விவேகமான அணுகுமுறையாகும்.  ஆனால், இதில் பெரிய நடைமுறை தாக்கம் எதுவும் இல்லை. 


வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கவும், தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதிகள், விதிமுறைகள் மற்றும் நியமன நடைமுறைகளை அமைக்கவும் இந்த மசோதா அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. ஆயினும்கூட, இது பெரும்பாலும் தற்போதுள்ள நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.  இந்திய ரயில்வே மேலாண்மை சேவையைத் தொடங்கும்போது பெரும் ஆரவாரத்துடன் செயல்படுத்தப்பட்டது. வெவ்வேறு பணியாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வியடைந்தது. இது பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)) மற்றும் அமைச்சரவையின் நியமனக் குழுவின் (Appointments Committee of the Cabinet (ACC)) பங்கைக் குறைக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 


மசோதாவில் மாற்றங்கள் முக்கியமாக நிர்வாக ரீதியாகத் தோன்றுகின்றன. ஆனால், ஊடக அறிக்கைகள் பெருநிறுவனமயமாக்கல், சுதந்திரமான ஒழுங்குமுறை,  ரயில்வே மண்டலங்களுக்கு அதிக சுயாட்சி, புதிய கணக்கு முறைகள் மூலம் சிறந்த நிதி, சரிசெய்யப்பட்ட பயணிகள் கட்டணம், பெரிய சரக்குத் துறை, தனியார்மயமாக்கல் போன்ற பரந்த சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றன.  மசோதாவுடன் நேரடியாக தொடர்பில்லாத தலைப்புகளில் பாராளுமன்ற விவாதத்தில் , இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டியவை.

 

நீடித்த சீர்திருத்த இடைவெளி 


பல ஆண்டுகளாக நிபுணர் குழுக்களால் முன்மொழியப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் தனியார்மயமாக்கல், ஒரு பெருநிறுவன வணிக மாதிரியை பிரதிபலிக்கும் வகையில் ரயில்வே வாரியத்தை மறுசீரமைத்தல், கொள்கை வகுப்பதில் அதன் பங்கை மட்டுப்படுத்துதல் மற்றும் மண்டலங்களுக்கு முழு நிதி மற்றும் செயல்பாட்டு சுயாட்சியை வழங்குதல் ஆகியவை அடங்கும்.  இந்த தன்னாட்சி வரவு செலவுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு ஆகியவற்றை சுயாதீனமாக நிர்வகிக்க மண்டலங்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்த நோக்கங்கள் பாராட்டத்தக்கவை மற்றும் செயல்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றாலும், இவை அமைச்சகம் வரலாற்று ரீதியாக சிறிய ஆர்வத்தைக் காட்டியுள்ளது. ரயில்வே வாரியம் ஒரு கொள்கை வகுப்பாளர் என்பதைவிட சிறந்த நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 


சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், மண்டல மட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி சுயாட்சி ஒப்படைக்கப்பட்டபோது ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு இருந்தது. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் சாதனை நேரத்தில் நிறைவேற்றப்பட்ட ரயில் 18 / வந்தே பாரத் போன்ற திட்டங்களுக்கு இந்த அதிகாரமளித்தல் போன்றவை இதில்  சாத்தியமானது. துரதிர்ஷ்டவசமாக, இந்த வேகம் நீடிக்கவில்லை.  ரயில்வே உற்பத்தி அலகுகளை தனியார்மயமாக்குவது மற்றொரு தவறவிட்ட வாய்ப்பாக உள்ளது. செயல்பாட்டு சுதந்திரம் மற்றும் செலவு-உணர்வு ஆகியவற்றால் இயக்கப்படும் தனியார் கட்டமைப்புகளின் கீழ் தரமான உற்பத்தி செழித்து வளர்கிறது என்பதை உலகளாவிய போக்குகள் காட்டுகின்றன. 2019 செயல் திட்டம் தனியார்மயமாக்கலை முன்மொழிந்தது, ஆனால் தொழிற்சங்க அழுத்தத்தின் கீழ் தோல்வியடைந்தது.


ஒரு சுதந்திர கட்டுப்பாட்டாளரை நிறுவுவது மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட ஒரு பரிந்துரைகளில் ஒன்று. இது சில கேள்விகளை எழுப்புகிறது. இந்த அமைப்பு, கோட்பாட்டளவில், கட்டண சீரமைப்பு, பாதுகாப்பு கண்காணிப்பு, போட்டி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.  தற்போதைய நுகர்வோர் நீதிமன்றங்களைவிட இது நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்தும். ஆயினும்கூட, அரசியல் உணர்திறன் காரணமாக பயணிகள் கட்டண நிர்ணயத்தை ஒரு தன்னாட்சி நிறுவனத்திற்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறு சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. தனியார் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு முக்கியமான சரக்கு கட்டண ஒழுங்குமுறையும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. ஏனெனில், சரக்கு வருவாய் மூலம் பயணிகள் சேவைகளுக்கு குறுக்கு மானியம் வழங்குவதை ரயில்வே பெரிதும் நம்பியுள்ளது. 


எவ்வாறாயினும், தனியார்மயமாக்கல் மற்றும் போட்டியின் முக்கிய தலைப்புகள் இன்னும் மிகவும் சர்ச்சைக்குரியவை மற்றும் அரசியல் ரீதியாக உணர்திறன் கொண்டவை.


இந்தியன் இரயில்வே இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது. அவை, வணிகமாகச் செயல்படுவது மற்றும் சமூகப் பொறுப்புகளைச் சந்திப்பது.  இருப்பினும், இது பெரும்பாலும் திறமையின்மையை மறைக்கிறது. மத்திய, மாநில மற்றும் நகராட்சி அரசாங்கங்களால் பகிரப்பட்ட மானிய பயணிகள் கட்டணங்கள், சந்தை சார்ந்த சரக்கு கட்டணங்களுடன், மிகவும் நிலையான மாதிரியை வழங்க முடியும் என்றாலும், இந்த முக்கியமான பிரச்சினையை இந்த மசோதா புறக்கணிக்கிறது. 


இந்த மசோதா பரந்த சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டிருக்கலாம். ஆனால், வலுவான அரசியல் ஆதரவு இல்லாமல் அது வெற்றியடையாது. ரயில்வேயைப் பொறுத்தவரை, உண்மையான சீர்திருத்தத்திற்கு சிறிய மாற்றங்களைவிட அதிகம் தேவைப்படுகிறது. ஆழமான வேரூன்றிய அதிகாரத்துவம் மற்றும் அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா என்பது முக்கிய கேள்வியாகும். அதுவரை, ரயில்வே (திருத்தம்) மசோதா, (2024) ஆனது உண்மையான முன்னேற்றம் இல்லாத மற்றொரு படியாக இருக்கலாம்.




Original article:

Share:

மக்கள் தொகை விவாதத்தில் பரந்த பார்வை இல்லை - பூனம் முத்ரேஜா

 இந்தியாவின் மாறுபட்ட மக்கள்தொகை நிலப்பரப்பு அதன் மாநிலங்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் திட்டங்களைக் கோருகிறது. 


இந்திய குடும்பங்களை, குறிப்பாக பெண்களை மூன்று குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் பொது நபர்களின் சமீபத்திய அறிக்கைகள் இந்தியாவின் மக்கள்தொகை கொள்கைகளின் உண்மையான வெற்றியை மீண்டும் புறக்கணித்துள்ளன மற்றும் பெண்களின் சுயாட்சி குறித்த தவறான வழிகாட்டுதல் விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளன.  மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) 2.1-க்கும் குறைவாக உள்ள சமூகம் "பூமியிலிருந்து மறைந்துவிடும்" என்ற அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை "மக்கள்தொகை வெடிப்பு" குறித்து பேசிக் கொண்டிருந்த பலர் இப்போது "மக்கள்தொகை சரிவு" பற்றி பேச தொடங்கியதால், இந்த அறிக்கை புதிய அச்சத்தை தூண்டி உள்ளது. எவ்வாறாயினும், குடும்ப அளவை அதிகரிப்பதற்கான இந்த அழைப்புகள் தவறாக வழிநடத்தப்பட்டவை மட்டுமல்ல, அவை அடிப்படையில் குறைபாடுள்ளவை. அவை பெண்களின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன மற்றும் இந்தியா அதன் மக்கள்தொகை சவால்களை எதிர்கொள்ள தேவையான நுணுக்கமான நடவடிக்கைகளை புறக்கணிக்கின்றன. 


இந்தியாவின் மக்கள்தொகை இயக்கவியல் எச்சரிக்கையை அல்ல. இது சிந்தனைக்குரிய பரிசீலனையைக் கோருகிறது. 2023 ஆம் ஆண்டில், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியது. ஒரு முக்கியமான மக்கள்தொகை குறிகாட்டியான அதன் TFR, 1992-93 ஆண்டில் 3.4 இலிருந்து 2019-21 ஆண்டில் 2.0 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது. இது 2.1-க்கும் கீழே குறைந்துள்ளது. இந்தப் போக்கு, வளர்ந்த நாடுகளில் காணப்பட்ட வடிவங்களை ஒத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளுக்கான பரந்த அணுகல் மூலம் எளிதாக்கப்பட்ட சமூக முன்னேற்றத்தைக் குறிக்கிறது. 


ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்புகளின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2060-ஆம் ஆண்டுகளில் 1.7 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2100-ஆம் ஆண்டில் படிப்படியாக 1.5 பில்லியனாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மக்கள்தொகை ஈவுத்தொகை, அதன் பெரிய மற்றும் இளைய மக்கள் தொகை போன்றவை நாட்டின் எதிர்காலத்தை மறுவடிவமைக்க நம்பமுடியாத வாய்ப்பை வழங்குகிறது. 10 முதல் 24 வயதுக்குட்பட்ட 365 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களுடன், அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய தொழிலாளர் சக்தியை இந்தியா கொண்டிருக்கும். ஆனால், தரமான கல்வி, குழந்தை ஊட்டச்சத்து, எளிதில் அணுகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் அர்த்தமுள்ள வேலைகள் ஆகியவற்றில் நாம் முதலீடு செய்தால் மட்டுமே இந்த சாத்தியக்கூறுகளை பயனுள்ளதாக மாற்ற முடியும். 


நீண்ட காலமாக, அடுத்த சில ஆண்டுகளில் சீரான வயதான மக்கள்தொகைக்கு இந்தியா தயாராக வேண்டும். 2050-ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களின் விகிதம் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  இது 10% முதல் 20% வரை உயரும். இந்த மக்கள்தொகை மாற்றம் ஜப்பான், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் காணப்படும் போக்குகளைப் பிரதிபலிக்கும். அங்கு மூத்த குடிமக்கள் மக்கள்தொகை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளைக் மோசாமாக்கியுள்ளது. மேலும், சார்பு விகிதங்களை அதிகரித்துள்ளது மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. முதியோருக்கு கண்ணியமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்கு நமக்கு சிறந்த சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புகள் தேவை.  முதுமையை ஊக்குவித்தல் மற்றும் வயதானவர்களிடையே தொழிலாளர் பங்கேற்பை அதிகரிப்பது மூத்த குடிமக்கள் மக்கள்தொகையின் பொருளாதார விளைவுகளை மேலும் குறைக்கும். 


இந்தியக் குடும்பங்களில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுப்பதை ஆதரிப்பவர்கள், அதிகரித்துவரும் முஸ்லீம் மக்கள்தொகையால் இந்து மக்கள்தொகை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்ற வாதத்தைப் பயன்படுத்தவில்லை என்பதை மக்கள்தொகை நிபுணர்கள் நிம்மதியாக உணர வேண்டும். இந்த மாற்றம் பல ஆண்டுகளாக மக்கள்தொகைத் தரவு காட்டுவதை ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மதக் குழுக்களும் படிப்படியாக வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும், இந்துக்களைவிட முஸ்லிம்களுக்கு சரிவு வேகமாக உள்ளது.


2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு இடையில், முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் இந்துக்களின் வளர்ச்சி விகிதம் 3.1 உடன் ஒப்பிடும்போது 4.7 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. முஸ்லிம்களிடையே TFR 1992-93 ஆண்டில் 4.4 இலிருந்து 2019-21 ஆண்டில் 2.4 ஆக கணிசமாகக் குறைந்தது. முஸ்லிம் TFR இந்துக்களின் எண்ணிக்கையை விட சற்றே அதிகமாக இருந்தாலும், இவை வேகமாக குறைந்து வருகின்றன. இருப்பினும், அதே நேரத்தில், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லீம் பெண்களிடையே TFR பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள இந்து பெண்களைவிட குறைவாக உள்ளது.  கடந்த கால பகுப்பாய்வுகள்படி, முஸ்லீம் மக்கள் இந்து மக்களை ஒருபோதும் முந்துவதற்கான அச்சுறுத்தலை முன்வைக்கவில்லை. மதத்தில் வேரூன்றியுள்ள மக்கள்தொகை கவலைகள் ஆதாரமற்றவை என்பதை இவை  மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. 


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற எல்லைகளை மறுவரையறை செய்யும் வரவிருக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கையுடன் ஸ்டாலின் தனது கவலையை இணைத்துள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலீடுகள் மூலம் தங்கள் மக்கள்தொகையை வெற்றிகரமாக நிலைநிறுத்திய தென் மாநிலங்கள், அதிக மக்கள் தொகை வளர்ச்சியைக் கொண்ட வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அரசியல் செல்வாக்கு குறையும் என்ற சாத்தியக்கூறிலிருந்து அவரது அச்சம் உருவாகிறது.  இது சமமான பிரதிநிதித்துவம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. 


பெண்களுக்கு உத்தரவுகள் மூலம் இந்த பிரச்சினையை அணுகுவது பிற்போக்கானது மற்றும் பயனற்றது. அதற்கு பதிலாக, தொகுதி மறுவரையறை பிரச்சினை சீரான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய ஒரு சிந்தனைமிக்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறது.  ஒரு நியாயமான தீர்வு தென் மாநிலங்களை தண்டிக்காமல், ஒட்டுமொத்த வளர்ச்சியின் மூலம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அங்கீகரிக்க வேண்டும். நியாயமான அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வருவாயின் நியாயமான பங்கீடு பற்றிய அவர்களின் கவலைகள் சரியாக கவனிக்கப்பட வேண்டும்.


இந்தியாவின் மக்கள்தொகை போக்குகள் ஏற்கனவே தன்னார்வ, வளர்ச்சி உந்துதல் உத்திகளின் செயல்திறனை நிரூபிக்கின்றன. இந்த அணுகுமுறை உலகளாவிய ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது. அங்கு முற்போக்கான கொள்கைகள் மக்கள்தொகை போக்குகளை நிர்வகிப்பதில் வற்புறுத்தலைவிட ஆதரவான சமூக கட்டமைப்புகள் மூலம் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஸ்வீடன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள், மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு, பெற்றோர் இருவருக்கும் பெற்றோர் விடுப்பு, மற்றும் நெகிழ்வான பணி விருப்பங்கள் போன்ற பெண்களுக்கு ஏற்ற கொள்கைகள், தனிப்பட்ட விருப்பத்தை கட்டுப்படுத்தாமல் நிலையான பிறப்பு விகிதத்தை எவ்வாறு பராமரிக்க உதவும் என்பதைக் காட்டுகிறது.

குழந்தை வளர்ப்பின் பொருளாதார யதார்த்தங்கள் இந்த முறையீடுகளின் தர்க்கத்தை மேலும் பலவீனப்படுத்துகின்றன. குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் சுமை, கல்வி, சுகாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது . இந்த முறையான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, குடும்பங்களை அதிக குழந்தைகளைப் பெற வலியுறுத்துவது தனிநபர்கள் மீது பொறுப்பைத் திசைதிருப்புகிறது. ஏற்கனவே பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்பவர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது. 


இந்தியாவின் மாறுபட்ட மக்கள்தொகை நிலப்பரப்பு, அதன் மாநிலங்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் திட்டங்களை கோருகிறது. அவை மக்கள்தொகை மாற்றத்தின் மாறுபட்ட கட்டங்களில் உள்ளன. ஆணைகள் மூலம் மக்கள்தொகை கட்டுப்பாட்டை திணிப்பதற்கு பதிலாக, சிந்தனையான, உள்ளடக்கிய கொள்கைகள் மூலம் அதிகாரமளிப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். குடும்பங்களின் பொருளாதார சுமையை குறைக்க மலிவு குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற அணுகக்கூடிய குடும்ப ஆதரவு அமைப்புகளில் முதலீடு செய்வது இதில் அடங்கும். 


அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட பிராந்தியங்களிலிருந்து தொழிலாளர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு இடம்பெயர்வதன் மூலம் தொழிலாளர் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது மற்றொரு நடைமுறைப் படியாகும். பணியிடங்களை மிகவும் நெகிழ்வானதாக மாற்றுவதன் மூலமும், பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதும் முக்கியம். இது பெண்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை கூடுதல் மன அழுத்தமின்றி சமநிலைப்படுத்த உதவும்.


பூனம் முத்ரேஜா, நிர்வாக இயக்குநர், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை (Population Foundation of India). 




Original article:

Share:

மாநிலங்கள், பாம்புக்கடியை அறிவிக்கக்கூடிய நோயாக கருத ஒன்றிய அரசு ஏன் விரும்புகிறது? -அனோனா தத்

 இந்தியாவில் 310 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில், 66 வகைகள் விஷம் கொண்டதாகவும், மற்றும் 42 வகைகள் சாதாரண விஷம் கொண்டவையாகவும் உள்ளன. இவற்றில், 23 வகையான பாம்பின் விஷத்தால் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவையாக உள்ளன.


பாம்புக்கடியை ஒரு அறிவிக்கக்கூடிய நோயாக மாற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களை வலியுறுத்தியுள்ளது. இந்த நோயை தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள் சட்டப்பூர்வமாக அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். 


பாம்புக்கடி என்பது நாட்டில் ஒரு பெரிய பொது சுகாதார சவாலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று முதல் நான்கு மில்லியன் பாம்புக்கடி பாதிப்புகள் பதிவாகின்றன. மேலும், அவற்றால் ஆண்டுதோறும் 58,000 பேர் இறக்கின்றனர் என்று இந்தியாவில் முன்கூட்டிய மரணத்திற்கான காரணங்களை ஆய்வு செய்த, 2020 இந்திய மில்லியன் இறப்பு (Indian Million Death Study) ஆய்வு தெரிவிக்கிறது. 


இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடி இறப்புகளை பாதியாகக் குறைக்கும் நோக்கத்துடன் பாம்புக்கடி விஷத்தைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் (National Action Plan for Prevention and Control of Snakebite Envenoming (NAPSE) ) தேசிய செயல் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. பாம்புக்கடியை ஒரு அறிவிக்கக்கூடிய நோயாக (notifiable disease) மாற்ற வேண்டும் என்று NAPSE பரிந்துரைத்தது. 


வழக்கமாக, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, இறப்புக்கு வழிவகுக்கும் மற்றும் தகுந்த பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க விரைவாக ஆய்வு செய்ய வேண்டிய நோய்த்தொற்றுகள் அறிவிக்கக்கூடிய நோய்களாக அறிவிக்கப்படுகின்றன.


இவ்வாறு அறிவிக்கக்கூடிய நோய்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இந்த அறிவிப்பைக் கொண்டுவருவதற்கு மாநில அரசுகளின் பொறுப்பு அதிகம்.  அவற்றில் பெரும்பாலானவை காசநோய், எச்.ஐ.வி, காலரா, மலேரியா, டெங்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் அறிவிக்கத்தக்கவை என்று கருதுகின்றன. 


பாம்புக்கடிக்கு உடனடி கடுமையான மருத்துவ அவசரநிலைகளுக்கு வழிவகுக்கும். அவை கடுமையான பக்கவாதத்தை ஏற்படுத்தும்.  மேலும், அவை சுவாச பாதிப்பு, ஆபத்தான இரத்தப்போக்குக்கு மற்றும் வெவ்வேறு திசுக்களை சேதப்படுத்துதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.


இறப்பு மற்றும் கடுமையான அறிகுறிகளைத் தடுக்க பாம்புக்கடிக்கு விஷமுறிவு (antivenoms) மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். 


இந்தியாவில் 310 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில், 66 வகைகள் விஷம் கொண்டதாகவும், மற்றும் 42 வகைகள் சாதாரண விஷம் கொண்டவையாகவும் உள்ளன. இவற்றில், 23 வகையான பாம்பின் விஷத்தால் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவையாக உள்ளன. இருப்பினும், நாட்டில் கிட்டத்தட்ட 90% பாம்புக்கடிகளுக்கு நான்கு வகையான பாம்புகள் காரணமாகின்றன. அதில் இந்திய நாகப்பாம்பு, காமன் க்ரைட், ரஸ்ஸல்'ஸ் விப்பர் மற்றும் ரம்-ஸ்கேல்டு விப்பர் போன்றவை அதிக பாதிப்பை ஏற்படுத்துபவையாகும்.


வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பாலிவேலன்ட் விஷமுறிவு (polyvalent antivenom) நான்கு இனங்களிலிருந்தும் விஷத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது 80% பாம்புக்கடிக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். 


பாம்புக்கடியை அறிவிக்கக் கூடியதாகச் செய்வது முறையான கண்காணிப்புக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியா முழுவதும் பாம்புக்கடி பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் துல்லியமான எண்ணிக்கையை தீர்மானிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாம்புக்கடி நிகழ்வுகளை திறம்பட நிர்வகிக்கவும், தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசாங்கம் இந்த தகவலைப் பயன்படுத்தலாம். பல்வேறு பகுதிகளுக்கு போதுமான விஷமுறிவு மருந்துகளை வழங்கலாம். மேலும், பாம்புக்கடி பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் முறையான பயிற்சி அளிக்கப்படலாம். 


அனைத்து மாநில சுகாதார செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் புண்யா சாலியா எழுதியுள்ள கடிதத்தில், "பாம்புக்கடி கண்காணிப்பை வலுப்படுத்த அனைத்து பாம்புக்கடி பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்த தகவல்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இது அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புக்கு காரணமான காரணிகள் போன்றவற்றை அளவிட உதவும். இது, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கு வழிவகுக்கும்.


பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான மக்கள்தொகை, குறைந்த உயரம், விவசாயப் பகுதிகளில் பெரும்பாலான பாம்புக்கடி நிகழ்கிறது என்று NAPSE தெரிவித்துள்ளது. 


முக்கியமான மூன்று சவால்கள்


சிகிச்சை: பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் ஒரு சுகாதார மையத்திற்கு செல்வதில்லை. அதற்குப் பதிலாக பலர் நம்பிக்கை அடிப்படையிலான குணப்படுத்துபவர்களை அணுகுகிறார்கள். 


பல சந்தர்ப்பங்களில், சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்களுக்கு பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்க போதுமான பயிற்சி இல்லை. பாம்புக்கடியை உறுதி செய்வதற்கான சோதனைகளும் இல்லை. 


விஷமுறிவு மருந்துகள்: நாட்டில் விஷமுறிவு மருந்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட அனைத்து விஷங்களும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் வாழும் இருளர் பழங்குடியினரால் பிடிக்கப்பட்ட பாம்புகளிலிருந்து வந்தவை. இது ஒரு பெரிய சவாலாகும். ஏனெனில், ஒரே பாம்பு இனத்திலிருந்து உயிர்வேதியியல் கூறுகள் மற்றும் விஷத்தின் விளைவு புவியியலின் அடிப்படையில் வேறுபடலாம். 


"இந்த வேறுபாடுகள் நாட்டின் ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்திலிருந்து விஷ மாதிரிகளுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வணிக ரீதியான ASV (anti-snake venom) மோசமான நோயெதிர்ப்பு குறுக்கு நடுநிலை மற்றும் நச்சுத்தன்மையை நடுநிலையாக்குவதைக் காட்டுகின்றன" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் (ஐ.ஜே.எம்.ஆர்) வெளியிடப்பட்ட 2020-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 


விஷத்தின் ஆற்றல் வயதுக்கு ஏற்ப மாறுகிறது என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, ரஸ்ஸலின் வைப்பர் நியோனேட்டுகளின் விஷம் பெரியவர்களை விட பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையது என்று 2024-ஆம் ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கூடுதலாக, விஷமுறிவுகள் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன.


வடகிழக்கில் உள்ள க்ரைட், மோனோக்கிள்ட் நாகப்பாம்பு மற்றும் பச்சை குழி வைப்பர் போன்ற உள்ளூர் பாம்பு இனங்கள் உள்ளன. வணிகச் சந்தையில் கிடைக்கும் ஆன்டிவெனோம் இந்த பாம்புகளின் கடிக்கு எதிராக வேலை செய்யாது.


விஷமுறிவுகளின் இந்த வரம்புகள் காரணமாக, ஆராய்ச்சியாளர்கள் இப்போது செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கி வருகின்றனர். அவை பல்வேறு பாம்பு இனங்களில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவும். நச்சுத்தன்மையை எதிர்த்துப் போராட செயற்கையாக வடிவமைக்கப்பட்ட மூலக்கூறுகளையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். 


விஷ சேகரிப்பு: பிராந்திய வேறுபாடுகளை மறைக்கக்கூடிய விஷமுறிவு மருந்துகளை உருவாக்க நாடு முழுவதும் மண்டல விஷ சேகரிப்பு வங்கிகளை (venom collection banks) அமைக்க நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, பாம்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இது போன்ற வங்கிகளை அமைப்பது சவாலாக உள்ளது. 




Original article:

Share:

சுயதொழில் செய்வது எப்படி? -ஃபர்ஸானா அப்ரிடி

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒரு சவாலாக தொடர்ந்து இருப்பதால், கடன் மற்றும் சட்ட ஆதரவுக்கான அணுகலுடன் தொழிற்பயிற்சியானது, சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்த முடியும். 


 


இந்தியாவின் தொழிலாளர் வளம் இரண்டு குறிப்பிடத்தக்க பண்புகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, உழைக்கும் வயதினரின் தொழிலாளர் தொகுப்பில் பங்குபெறும் விகிதம் மிகக் குறைவு. இரண்டாவதாக, தொழிலாளர் பங்கேற்பின் அமைப்பு கிட்டத்தட்ட மாறாமல் உள்ளது. மற்ற நடுத்தர வருமான நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் சதவீதம் அதிகமாகவும், ஊதியம் அல்லது தினக்கூலி பெறும் தொழிலாளர்களின் அளவு சிறிய சதவீதமாகவும் உள்ளது. இந்த அமைப்பு பல ஆண்டுகளாக நிலையானதாக உள்ளது.


விவசாயத் துறையின் ஆதிக்கம் மற்றும் உற்பத்தித் துறையைத் தவிர்த்து, சேவைத் துறையை நோக்கிய ஒப்பீட்டளவிலான மாற்றம் ஆகியவை சுய வேலைவாய்ப்பின் தொடர்ச்சியான உயர் மட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இது தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் வேலையின் தரம் ஆகிய இரண்டிலும் எதிர்மறையான விளைவுகளைக் கொண்டுள்ளது. 


உழைக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சுயதொழில் செய்பவர்கள் ஆவர். இவர்களில் கிராமப்புறங்களில், கிட்டத்தட்ட 60% சுயதொழில் செய்பவர்கள், 40% பேர் நகர்ப்புறங்களில் உள்ளனர். இந்த சதவீதம் 2017-18 முதல் 2023-24 வரை, குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சுயதொழிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பெரும்பாலான ஆண்கள் "சொந்த கணக்கு பணியாளர்கள்" (own-account workers), பெரும்பாலான பெண்கள் "வீட்டு நிறுவனங்களில் உதவியாளர்களாக" (helpers in household enterprises) பணிபுரிகின்றனர். 2017-18 முதல் 2023-24 வரை சொந்தக் கணக்குப் பணியாளர்களின் பாலின இடைவெளி குறைந்திருந்தாலும், அதே காலகட்டத்தில் "உதவியாளர்கள்" பிரிவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இந்த அதிகரிப்பு முறைசாரா வேலைகளின் அதிகரிப்பைக் காட்டுகிறது. பெரும்பாலான பொருளாதாரங்களில், முறையான வேலைகள் மூலம் முழுமையான சமூகப் பாதுகாப்பு, ஊதிய விடுப்பு மற்றும் எழுதப்பட்ட வேலை ஒப்பந்தம் போன்ற அளவுகோல்களால் வரையறுக்கப்படுகின்றன. இருப்பினும், சுயதொழில் செய்பவர்களுக்கு இவை கிடைக்கவில்லை. சுயதொழில் தொடர்பான மற்ற இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறைந்த வருவாய் மற்றும் அதிக வேலைவாய்ப்பின்மை ஆகும். சுயதொழில் செய்பவர்கள் சாதாரண வேலை செய்பவர்களைவிட சற்று அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். கூடுதலாக, சுயதொழில் செய்பவர்களிடையே வருவாயில் பாலின இடைவெளி 2017-18 முதல் 2023-24 வரை கிராமப்புறங்களில் பெரியளவில் அதிகரித்துள்ளது. 


இந்த இடைவெளி ஒருவேளை அறிவிக்கப்பட்டதைவிட மோசமாக உள்ளது. பெண்கள் பெரும்பாலும் வீட்டுத் தொழில்களில் ஈடுபடுகிறார்கள். கிட்டத்தட்ட எல்லா உதவியாளர்களும், பாலினத்தைப் பொருட்படுத்தாமல், பூஜ்ஜிய வருமானத்தைப் புகாரளிக்கின்றனர். கூடுதலாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுயதொழில் செய்யும் பெண்கள் இருவரும் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவான மணிநேரமே வேலை செய்கிறார்கள். இதன் விளைவாக, கூடுதல் வேலைக்கு கிடைக்கும் தொழிலாளர்களின் விகிதம் கிராமப்புறங்களில் சுயதொழில் செய்யும் தொழிலாளர்களிடையே அதிகமாக உள்ளது.


பெரும்பாலான சுயவேலைவாய்ப்பு வேலைகள் தரம் குறைந்தவை மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்காதபோது, குறிப்பாக கிராமப்புறங்களிலும் பெண்களுக்கும் பின்னடைவான விருப்பமாக இருக்கலாம். வேலையின் தன்மையின் அடிப்படையில் அல்லது ஊதிய வேலைக்கு மாறுவதற்கு சுயதொழில் செய்யும் வேலையின் தரத்தை மேம்படுத்துவதில் உள்ள தடைகள் என்ன? 


குறைந்த கல்வி மற்றும் திறன்கள், முறையான கடன் மற்றும் சட்ட ஆதரவு ஆகியவற்றிற்கான மோசமான அணுகல் ஆகியவை முக்கிய வரம்புகளாக நிற்கின்றன. இவை அனைத்து சுயதொழில் செய்யும் தொழிலாளர்களையும் பாதிக்கும் அதே வேளையில், அவை பெரும்பாலும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு சவாலானவையாக உள்ளன. 


கல்வி மற்றும் தொழிற்பயிற்சி : பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியுடன் சுயதொழில் செய்பவர்களின் விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 17 சதவீதமாக மட்டுமே இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டில் 20.6 சதவீதமாக மட்டுமே அதிகரித்துள்ளது. சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கல்வி நிலைகள் குறைவாக உள்ளன. இந்த பெண்களில் 9 சதவீதம் பேர் 2017-18ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு அப்பால் முடித்தவர்கள், இது 2023-24ஆம் ஆண்டில் வெறும் 11.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. முறையான அல்லது தொழிற்பயிற்சி பெற்ற சுயதொழில் செய்பவர்களின் விகிதம் 3 சதவீதமாக உள்ளது. 


சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரின் தரத்தை மேம்படுத்துவதற்கும், தேர்வுகளை விரிவுபடுத்துவதற்கும், வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் தொழிற் பயிற்சியானது மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், திறன் பயிற்சியை தொழில்முனைவோருடன் இணைக்க தெளிவான முயற்சி தேவை. ஐடிஐகளை மேம்படுத்துவது குறித்த சமீபத்திய NITI ஆயோக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 


"ஐடிஐ முடித்தவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கும், கடன் பெறுவதற்கும் உதவுவதற்கு நிதி நிறுவனங்களுடன் எந்த ஐடிஐயும் கூட்டாண்மைகளை ஏற்பாடு செய்யவில்லை." PM முத்ரா யோஜனா (PM Mudra Yojana) சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் போன்ற பல்வேறு சுயதொழில் குழுக்களுக்குக் கிடைத்தாலும், ITIகளால் இன்னும் தங்கள் பயிற்சியாளர்களுக்கு தொடக்க நிதியை வழங்க முடியவில்லை.


முறையான கடனுக்கான அணுகல் : முறையான கடன் சந்தைகளுக்கான அணுகல் இல்லாமை சுய வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் வேலைகளை உருவாக்கும் தொழில்களை உருவாக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, 2023-ம் ஆண்டில், 10 கோடி தொழிலாளர்கள் வேலை செய்யும் அனைத்து இணைக்கப்படாத, விவசாயம் சாரா நிறுவனங்களில் 41% சிறிய அளவிலும் வீட்டு வளாகத்திலும் இயங்குகின்றன. 


இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)), இவற்றில் 5.53 கோடி நிறுவனங்கள் சொந்தக் கணக்கு நிறுவனங்கள் (Own Account Establishments (OAEs)) ஆகும். இவற்றில் ஒரு தொழிலாளிகூட முறையாக பணியமர்த்தப்படவில்லை. அதாவது, ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மற்றவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் வேலைகளை உருவாக்கும் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர் நிறுவனங்கள் (Hired Worker Establishments (HWE)) ஆகும். ஆச்சரியப்படத்தக்க வகையில், OAEகளில் ஒரு தொழிலாளிக்கான வருடாந்திர மொத்த மதிப்பு HWE களில் (ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம்) 50% ஆகும்.


முறையான கடன் வசதி இல்லாதது கடன் வாங்குவதற்கான செலவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கிடைக்கக்கூடிய கடன்களின் அளவைக் குறைக்கிறது. இது தொழில்முனைவோர் மற்றும் அவரது நிறுவனத்தின் திறன் மற்றும் அளவையும் கட்டுப்படுத்துகிறது. 


நிர்வாக மற்றும் சட்ட ஆதரவு : இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவது படிப்படியாக மேம்பட்டு வந்தாலும், தொழில்முனைவோருக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் கடன் அணுகல் இருக்கும்போதுகூட முறையான நிறுவனத்தைத் தொடங்குவது சவாலானதாகவே உள்ளது. நிர்வாக மற்றும் சட்ட நிலப்பரப்பு பெரும்பாலும் சிக்கலானது. WDR 2024 குறிப்பிடுகையில், அவர்களின் நேரமும் திறமையும் குறைவாக இருப்பதால், (நிறுவன) உரிமையாளர்கள் தங்கள் குடும்பங்கள் மூலம் நிறுவனங்களை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 


இது அவர்களின் வளரும் திறனைத் தடுக்கிறது. சில மதிப்பீடுகளின்படி, தொழில்முறை நிர்வாக ஆதரவு இல்லாதது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தனிநபர் வருமானத்தில் 11 சதவீத வித்தியாசத்திற்கு காரணமாக இருக்கலாம். 


மேலும், வணிக தகராறுகள் ஏற்பட்டால் சட்ட உதவிக்கான அணுகல் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. போதிய சட்ட அணுகல் இல்லாததால், ஒப்பந்த அமலாக்கத்தில் சிரமம் ஏற்படுகிறது. இது நிறுவனங்களின் மொத்த உற்பத்தித்திறனைக் குறைக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்களின் செயல்திறன் முறையான உற்பத்தித் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 


ASUSE-ன் கூற்றுப்படி, தனியுரிம அல்லது கூட்டாண்மை நிறுவனங்களில் பெரும்பாலானவை சிறுபான்மையினரால் நடத்தப்படுகின்றன. எஸ்சி-எஸ்டி தொழில்முனைவோரின் முதலீட்டு முடிவுகளில் நீதிமன்றத்தின் தரம் விகிதாசாரமற்ற முறையில் பெரிய (எதிர்மறையான) தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது இந்த முறைசாரா நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனை மேலும் கட்டுப்படுத்துகிறது. 


தொழில்களை உருவாக்குவது ஒரு சவாலாக தொடர்வதால், கடன் மற்றும் சட்ட ஆதரவுக்கான அணுகலுடன் தொழிற் பயிற்சி நாட்டில் சுயதொழில் மற்றும் தொழில் முயற்சியின் தரத்தை மேம்படுத்த முடியும். 


எழுத்தாளர் டெல்லியில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். அவர் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் பெண்கள் பொருளாதார அதிகாரமளிக்கும் திட்டத்தின் தலைவராகவும் உள்ளார்.




Original article:

Share:

MuleHunter AI : ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக்கணக்குகளைக் கண்டறிதல் - ரோஷினி யாதவ்

 சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, MuleHunter.AI உருவாக்கப்பட்டதாக அறிவித்தது. இதன் மாதிரி மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன? 


வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6-ம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) MuleHunter.AI என்ற AI-செயல் மாதிரியை உருவாக்குவதாக அறிவித்தது. இந்த மாதிரி டிஜிட்டல் மோசடியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற (mule) வங்கிக் கணக்குகளின் வளர்ந்து வரும் சிக்கலைச் சமாளிக்க இது வங்கிகளுக்கு உதவுகிறது. இந்த மாதிரியை இந்திய ரிசர்வ் வங்கி புத்தாக்க மையம் (Reserve Bank Innovation Hub(RBIH)) உருவாக்கியது.


முக்கிய அம்சங்கள்


1. MuleHunter.AI என்பது ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக் கணக்குகளை திறமையான முறையில் கண்டறிய உதவுகிறது. இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் ஒரு முன்னோடித் திட்டம் நேர்மறையான முடிவுகளைக் காட்டியதாக இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியீடு குறிப்பிடுகிறது. MuleHunter.AI மாதிரியை மேம்படுத்த வங்கிகள் ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்துடன் (RBIH) இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படும் ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக் கணக்குகளின் (mule bank accounts) சிக்கலைத் தீர்ப்பதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற கணக்குகளை (mule accounts) ஒடுக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமையன்று, நிதிச் சேவைகள் துறை செயலர் கூட்டம் நடத்தினார். இந்தக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி மற்றும் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டிஜிட்டல் நிதி மோசடி, குறிப்பாக மியூல் கணக்குகள் அதிகரித்து வரும் பிரச்சனை குறித்து அவர்கள் விவாதித்தனர்.


3. வெள்ளிக்கிழமை கூட்டத்தில், வங்கிகள் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. அவர்கள் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தவும், ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற கணக்குகளை திறம்பட நிவர்த்தி செய்ய வங்கிகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் ஊக்குவிக்கப்பட்டனர். கூடுதலாக, ரிசர்வ் வங்கியின் Mulehunter.AI மூலம் தீர்வை ஆராய்ந்து செயல்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற கணக்குகளைக் கண்டறிந்து கண்காணிப்பதை மேம்படுத்த உதவும்.


ரிசர்வ் வங்கி புத்தாக்க மையம் (Reserve Bank Innovation Hub(RBIH)) 

        RBIH என்பது இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும். நிதித்துறையில் புதுமைகளை துரிதப்படுத்தும் சூழலை மேம்படுத்துவதற்கும் உருவாக்குவதற்கும் இது அமைக்கப்பட்டது.


ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கி கணக்கு (Mule Bank Account)


1. இந்தியாவில் பெரும்பாலான இணையவழி நிதி மோசடிகளில் ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக் கணக்குகள் ஒரு முக்கிய அங்கமாகக் காணப்படுகின்றன.  சைபர் குற்றங்களின் வருமானத்தை மோசடி செய்ய பொதுவாக பயன்படுத்தப்படும் இதுபோன்ற சுமார் 4.5 லட்சம் வங்கிக் கணக்குகளை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது. 


2. ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றக் கணக்கு என்பது சட்டவிரோத நிதிகளை மோசடி செய்வது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்காகும். ஒரு ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றக் கணக்கு பொதுவாக குற்றவாளிகளால் அவர்களின் உண்மையான பயனர்களிடமிருந்து, பெரும்பாலும் குறைந்த வருமானக் குழுக்களைச் சேர்ந்த நபர்களிடமிருந்து அல்லது குறைந்த அளவிலான தொழில்நுட்ப கல்வியறிவு கொண்ட நபர்களிடமிருந்து வாங்கப்படுகிறது. 


டிஜிட்டல் கைது

        டிஜிட்டல் கைது என்பது ஒரு வகையான ஆன்லைன் மோசடியாகும். இந்த மோசடியில், மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் மூலம், வீடியோ கால் செய்து போலியான கைதுகளை மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் பறிப்பதே இவர்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.


3.  "ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றம்" (money mule) என்ற வார்த்தையானது, தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் திருடப்பட்ட அல்லது சட்டவிரோதமான பணத்தைச் சுத்தப்படுத்த குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் புகாரளிக்கப்படும்போது, ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றம் காவல் விசாரணையின் முக்கிய இலக்காகிறது. ஏனென்றால், உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் அதே வேளையில், ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றத்தின் கணக்குகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.


1. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இயந்திரங்கள், குறிப்பாக கணினிகள், பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் ஆகும். இந்தப் பணிகளில் மொழியைப் புரிந்துகொள்வது, வடிவங்களை அங்கீகரிப்பது, சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் முடிவுகளை எடுப்பது ஆகியவை அடங்கும். 


2. கணக்கீட்டு சக்தி மற்றும் பெரிய தரவுகளின் முன்னேற்றங்கள், படம் மற்றும் பேச்சு அங்கீகாரம், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் போன்ற பகுதிகளில் AI-ன் திறனை அதிகரித்துள்ளன. இன்று, AI தொடர்ந்து உருவாகி வருகிறது. இது பல தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது, புதுமைகளை இயக்குகிறது மற்றும் அன்றாட வாழ்க்கையை மாற்றுகிறது.


3. AI-ஐ இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம். ஒன்று, செயற்கை குறுகிய நுண்ணறிவு (Artificial Narrow Intelligence (ANI)) பலவீனமான AI என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) வலுவான AI என்றும் குறிப்பிடப்படுகிறது. 


4. செயற்கை குறுகிய நுண்ணறிவு (ANI) குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு குறுகிய களத்திற்குள் சிறந்து விளங்குகிறது. எடுத்துக்காட்டுகளில் சிரி போன்ற மெய்நிகர் உதவியாளர்கள், நெட்ஃபிக்ஸ் போன்ற தளங்களில் பரிந்துரை அமைப்புகள் மற்றும் பட அங்கீகார மென்பொருள் ஆகியவை அடங்கும். 


5. செயற்கை பொது நுண்ணறிவு (AGI) மனித அறிவாற்றல் திறன்களை பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டது. இது மனிதர்களால் செய்யக்கூடிய எந்தவொரு அறிவுசார் பணியையும் செய்ய அனுமதிக்கும். செயற்கை பொது நுண்ணறிவுக்கு பொதுவான பகுத்தறிவுத் திறன் இருக்கும். இது சூழலைப் புரிந்துகொண்டு வெவ்வேறு பகுதிகளில் புதிய சூழ்நிலைகளுக்கு மாற்றியமைக்க முடியும். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட நிரலாக்கம் தேவையில்லாமல், AGI தானே பிரச்சனைகளைக் கற்று தீர்க்க முடியும்.


6. இயந்திர கற்றல் (Machine Learning (ML)) மற்றும் ஆழமான கற்றல் (Deep Learning (DL)) ஆகியவை AI-ன் துணைக்குழுக்கள், ஆனால் சிக்கலான தன்மை மற்றும் திறன்களில் வேறுபடுகின்றன. 


7. இயந்திர கற்றல் தரவுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் கணிப்புகளைச் செய்வதற்கும் பயிற்சி வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் பெரும்பாலும் மனித இயக்க பிரித்தெடுத்தல் தேவைப்படுகிறது. 


8. ஆழமான கற்றல் என்பது இயந்திர கற்றலின் (ML) துணைக்குழு ஆகும். இது பல அடுக்குகளைக் கொண்ட நரம்பியல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகிறது. அதனால்தான் இது "ஆழமான" என்று அழைக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க்குகள் பெரிய தரவுத்தொகுப்புகளிலிருந்து அம்சங்களை தானாகவே கற்றுக்கொள்கின்றன. சிறிய தரவுத்தொகுப்புகளுடன் ML சிறப்பாகச் செயல்படும் அதே வேளையில், ஆழமான கற்றலுக்குப் பரந்த அளவிலான தரவு மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கீட்டு சக்தி தேவை.




Original article:

Share:

மத சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி . . . - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் கருத்துக்கணிப்புகள் இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாக மதத்தை அடிப்படையாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புத்தன்மை குறித்த பெரிய கேள்வியாக அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளன. 


2. மே 22 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு மேற்குவங்காள அரசு மற்றும் பிற மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். கல்கத்தா உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு முதல் மாநிலத்தால் வழங்கப்பட்ட அனைத்து 77 சமூகங்களுக்கு OBC சான்றிதழ் வழங்குதலை ரத்து செய்தது. இதற்கு, "மதம் மட்டுமே ஒரே அளவுகோலாகத் தெரிகிறது" என்று நீதிமன்றம் கூறியது.


3. மே 22 அன்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. மார்ச் 5 முதல் செப்டம்பர் 24, 2010 வரை மேற்குவங்காள அரசு இதேபோன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டது. அவர்களில் "42 வகுப்பினர்கள்" அடங்கும். அதில் 41 முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த வகுப்புகள் OBC-களாக வகைப்படுத்தப்பட்டன. இந்த வகைப்பாடு அரசியலமைப்பின் பிரிவு 16(4)ன் கீழ் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு அவர்களுக்கு உரிமை அளித்துள்ளது.


மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று, ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 108 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை (OBC) துணை வகைப்படுத்தியது. இதில் 66 ஏற்கனவே OBC-ல் இருப்பவர்களும், 42 புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களும் அடங்குவர். அவர்கள் 56 "ஓபிசி-ஏ (மேலும் பின்தங்கியவர்கள்)" மற்றும் 52 "ஓபிசி-பி (பின்தங்கியவர்கள்)" போன்ற வகைகளாகப் பிரிக்கப்பட்டனர்.


உங்களுக்குத் தெரியுமா? 


1. இடஒதுக்கீடு சவால் செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளில், உயர் நீதிமன்றம் (HC) இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் (மண்டல் தீர்ப்பு) (Indra Sawhney vs Union of India) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரிதும் நம்பியுள்ளது.


2. 1992-ம் ஆண்டில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை (OBC) அடையாளம் கண்டு, மதத்தின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது. அனைத்து மாநிலங்களும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில ஓபிசி பட்டியலில் எந்த துணைப்பிரிவுகளில் குடிமக்கள் சேர்க்கப்பட வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்து பரிந்துரைக்கும் பொறுப்பை இந்த ஆணையம் கொண்டுள்ளது.


3. தற்போதைய வழக்கில், ஆணையம் மற்றும் அரசாங்கம் இரண்டும் குடிமக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் 77 வகுப்பினர்களை ஆணையம் அடையாளம் காட்டியது. அதன்பிறகு, அவர்களை இணைக்க ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது.


4. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அப்போதைய முதலமைச்சர் பகிரங்கமாக (பிப்ரவரி 2010 இல்) அறிவித்த பின்னர், இந்த வகுப்புகளின் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை தீர்மானிக்க எந்தவொரு "புறநிலை அளவுகோல்களையும்" (objective criteria) பயன்படுத்தாமல், ஆணையத்தின் பரிந்துரை மிக விரைவாக வழங்கியதாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


5. மேற்கு வங்காளத்தின் 2012 சட்டத்தின் சில பகுதிகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது. இதில் குறிப்பிட்டுள்ளவை,


(i) மாநில அரசு OBC இடஒதுக்கீடுகளை OBC-A மற்றும் OBC-B வகைகளாக "மேலும் பிற்படுத்தப்பட்ட" மற்றும் "பிற்படுத்தப்பட்ட" வகுப்பினருக்குப் பிரிக்க அனுமதித்த விதி, மற்றும்


(ii) 2012-ம் ஆண்டு சட்டத்தின் அட்டவணையை மாற்றியமைத்து. மேலும், OBC-களை பட்டியலில் சேர்க்க மாநிலத்தை அனுமதித்த விதி ஆகியவை இதில் அடங்கும்.


5. துணை வகைப்பாடு என்பது வெவ்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அளவிலான இழப்புகளை நிவர்த்தி செய்வதாகும். இது ஆணையத்தால் சேகரிக்கப்பட்ட குறிப்பேடுகளை குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்று நீதிமன்றம் கூறியது. 




Original article:

Share: