தொழில்துறைப் பாதுகாப்பில் சமரசம் செய்யாதீர்கள். -சிரிஷ் குமார் கவுடா

 சில சந்தர்ப்பங்களில், நிறுவனங்களின் பாதுகாப்பை சுயமாக சான்றளிக்கவும், திடீர் ஆய்வுகளைத் தடை செய்யவும் விதிமுறைகள் அனுமதிக்கின்றன. இதனால் கடுமையான மேற்பார்வை பாதிக்கப்படும்.


சமீபத்திய வாரங்களில், தெளிவான பாதுகாப்புத் தோல்விகளைக் காட்டும் கொடிய பேரிடர்களை (deadly disasters) நாம் கண்டிருக்கிறோம். ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விபத்து மற்றும் சென்னை மெட்ரோ இரயில் கர்டர் சரிவு ஒரு கடுமையான சிக்கலை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பிரச்சினை தொழில்துறை பாதுகாப்பு தரங்களில் நிலையான சரிவு மற்றும் குறைந்து வரும் "பாதுகாப்பு காரணி" (factor of safety) ஆகும். 2025-ம் ஆண்டின் முதல் பாதியில், இந்தியா பல ஆபத்தான தொழில்துறை விபத்துகளைச் சந்தித்தது. குஜராத்தில் பட்டாசு கிடங்கு வெடிப்பு, ஆந்திராவில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து, நாக்பூரில் ஒரு ஆயுதத் தொழிற்சாலையில் வெடிப்பு மற்றும் மும்பையில் ஒரு இரசாயன தொழிற்சாலை வெடிப்பு ஆகியவை இதில் அடங்கும்.


பத்திரிகைகளில் பதிவாகும் பெரிய உற்பத்தி அமைப்புகளில் இவை சில முக்கியமானவை. தொலைதூரப் பகுதிகளில் இன்னும் பல விபத்துகள் நடக்கின்றன. ஆனால் அவை பதிவாகவில்லை. பல துறைகளில் உள்ள தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவான IndustriALL, 2024-ல் மட்டும் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிட விபத்துகளில் இறந்ததாகக் கூறுகிறது. தொழிற்சாலை ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் நிறுவனங்களின் பொது இயக்குநரகத்தின் (Directorate General of Factory Advice Service and Labour Institutes (DGFASLI)) அறிக்கைகள், 2012 மற்றும் 2022-க்கு இடையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இறந்ததாகக் காட்டுகின்றன. இந்த தொடர்ச்சியான விபத்துக்கள், பொறியியல் பாதுகாப்பு விளிம்புகள் பலவீனமடைந்து மேற்பார்வையானது தோல்வியடையும்போது ஏற்படும் விளைவுகள் எவ்வளவு கடுமையானவை என்பதைக் காட்டுகின்றன. பாதுகாப்பு ஒரு முக்கிய வணிக முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது. துயரங்கள் நடந்த பிறகுதான் நிறுவனங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, அவர்கள் வலுவான, அமைப்பு ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


கடந்த சில ஆண்டுகளில், அரசாங்கம் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் (Make in India programme), உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டங்கள் மற்றும் தொழில்துறை வழித்தடங்களை உயர்த்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் இதில் அடங்கும். உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்த முயற்சிகள் தேசிய வளர்ச்சியின் பரந்த இலக்கை ஆதரிக்கின்றன. இருப்பினும், இந்த செயல்பாட்டில் பாதுகாப்பு ஒரு முக்கியமான கவலையாகும். அதே நேரத்தில், கடுமையான போட்டி வணிகங்களை செயல்திறனில் அதிக கவனம் செலுத்தத் தள்ளுகிறது. இதன் விளைவாக, அவை பெரும்பாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்து மிகக் குறைந்த பாதுகாப்பு விளிம்புகளுடன் செயல்படுகின்றன.


தொழிலாளர் பாதுகாப்பு விஷயத்தில் நீர்த்துப் போதல் 


நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய "பாதுகாப்பு காரணியை" (factor of safety) குறைத்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், விதிகள் நிறுவனங்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு தரங்களை சான்றளிக்க அனுமதிக்கின்றன. இந்த விதிகள் திடீர் ஆய்வுகளையும் தடை செய்கின்றன. கடுமையான பாதுகாப்பு சோதனைகளைவிட வணிகத்தை எளிதாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. இதன் விளைவாக, பாதுகாப்பு விதிகளை புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.


தொழிலாளர் பாதுகாப்பைப் புறக்கணிப்பதன் மூலம் பணத்தைச் சேமிக்கும் நிறுவனங்கள் பின்னர் அதிக விலை கொடுக்கக்கூடும் என்பதை கல்வி ஆராய்ச்சி மற்றும் நிகழ்வு சான்றுகள் (Academic research and anecdotal evidence) தெளிவாகக் காட்டியுள்ளன. இந்த செலவுகள் மக்களுக்கும், நிதிக்கும் தீங்கு விளைவிக்கும் பேரிடர்களிலிருந்து வருகின்றன. தொழிலாளர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான வணிகத் தேர்வாகும். ஒரு வலுவான பாதுகாப்பு கலாச்சாரம் அபாயங்களைக் குறைக்கிறது. இது பணியாளரின் உற்பத்தித்திறன், மன உறுதி மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது, வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்குகிறது. சாதகமான சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை (Environmental, Social, Governance(ESG)) மதிப்பீடுகள் பிராண்டின் மதிப்பை அதிகரிக்கின்றன.


தொழிலாளர்களின் காப்பு மற்றும் பாதுகாப்பு (Safety and security of workers) ஆகியவை பெருநிறுவன ESG மதிப்பீடுகளின் ஒரு பகுதியாகும். பெரும்பாலான ESG கட்டமைப்புகளில் 'சமூக' பிரிவின் கீழ் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அடங்கும். விளைவுசார் முதலீட்டு மாதிரிகள் மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் பாய்கின்றன. மோசமான பாதுகாப்பு செயல்திறன் ESG மதிப்பெண்களைக் குறைக்கலாம். இது ஒரு நிறுவனத்தின் நற்பெயருக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும். இந்தியாவில், SEBI-ன் வணிக பொறுப்பு மற்றும் நிலைத்தன்மை அறிக்கையிடல் (Business Responsibility and Sustainability Reporting (BRSR)) தரநிலைகள், பணியிட சம்பவங்கள் பற்றிய தரவைப் பகிர்ந்து கொள்ள சிறந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கோருகின்றன. இது பாதுகாப்பை பங்குதாரர் மதிப்புடன் இணைக்கிறது.


எனவே, பாதுகாப்பை மேம்படுத்த ESG மதிப்பீடுகள் வலுவான, சந்தை சார்ந்த வழியை வழங்குகின்றன. ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் சீரற்றதாக இருக்கும்போது இது மிகவும் முக்கியமானது.


வளர்ந்துவரும் பொருளாதாரத்தில், அமைப்புகள் மற்றும் சந்தை நிலைமைகள் நிறுவனங்களை மிக வேகமாக வேலை செய்யவும், செலவுகளைக் குறைவாக வைத்திருக்கவும் தூண்டும். அவை விரைவாகவும் மலிவாகவும் சிறந்த செயல்திறனை அடைய முயற்சிக்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சி மக்களின் உயிர்களை பணயம் வைத்து வரக்கூடாது. பொறியியல் பாதுகாப்பு லாப வரம்புகளும் பெருநிறுவனங்களின் நல்லெண்ணமும் வரம்பற்றவை அல்ல என்பதை சமீபத்திய துயரங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. எதிர்கால பேரிடர்களைத் தடுக்கவும், தொழில்களை நிலையானதாக வைத்திருக்கவும், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் தொடர்ச்சியான, அமைப்பு அளவிலான கவனம் இருக்க வேண்டும். இந்த கவனம் ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை) பொறுப்புத்தன்மையுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.


எழுத்தாளர், திருச்சிராப்பள்ளி ஐஐஎம் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் முடிவெடுக்கும் அறிவியல் துறையின் ஆசிரியர்.



Original article:

Share:

அரசியலமைப்பு ஏன் குடியரசை மதச்சார்பற்றது என்று கட்டாயம் அறிவிக்க வேண்டும்? -அபிஷேக் சிங்வி

 மதச்சார்பின்மை (secularism) என்ற சொல் இன்று முகவுரையில் இல்லையென்றால், கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வுகள் அதை உடனடியாகவும் தெளிவாகவும் சேர்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கும்.


இந்திய அரசியலமைப்பு வெறும் சட்ட கையெழுத்துப் பிரதி மட்டுமல்ல, இது ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் கனவுகள், விருப்பங்கள் மற்றும் விதிக்கு ஒரு உயிருள்ள சான்றாக அமைகிறது. முகவுரை பெரும்பாலும் அரசியலமைப்பின் அடையாள அட்டை (identity card) என்று அழைக்கப்படுகிறது. இது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் தீவிர கருப்பொருள்களை முன்வைக்கும் ஒரு கவிதை முன்னுரையாகும்.


அரசியலமைப்பின் சில பகுதிகள், குறிப்பாக 'சோசலிஸ்ட்' (socialist) மற்றும் 'மதச்சார்பற்ற' (secular) போன்ற சொற்களை மாற்ற முடியுமா அல்லது மாற்ற முடியாததா என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அரசியலமைப்பின் பின்னால் உள்ள உண்மைகள், சட்டங்கள் மற்றும் உணர்வை மீண்டும் பார்ப்பது முக்கியம். முகவுரையைத் திருத்தவோ மாற்றவோ முடியாது என்று சொல்வது தவறு மற்றும் சட்டப்படி சாத்தியமற்றது என்பதை இது காண்பிக்கும்.


1976-ம் ஆண்டு 42-வது திருத்தம் சோசலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற சொற்களைச் சேர்த்த பிறகு, அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் அந்தச் சேர்த்தல்களுக்கு ஏற்பட்ட பல சவால்களில் எதுவும், பிரிவு 368-ன் கீழ் முகவுரையை மாற்ற முடியாது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டன. சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையின் கொள்கைகள் தொடக்கத்திலிருந்தே உண்மையான அரசியலமைப்பின் பார்வையின் ஒரு பகுதியாக இருந்தன. இருப்பினும், அவை 42வது அரசியலமைப்புத் திருத்தம் அவற்றை அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அவசரநிலை பிரகடனத்தின் மூலம் மட்டுமே கூறியது.


பொதுவாக வழிகாட்டுதல் கோட்பாடுகள் மற்றும் குறிப்பாக பிரிவுகள் 38 மற்றும் 39, சமத்துவமின்மையைக் குறைத்து வளங்களின் நியாயமான மற்றும் சமமான ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு கோருகின்றன. அவை சோசலிச உந்துதலை வெளிப்படுத்தும் வழித்தடங்களாகும். இதேபோல், அனைத்து மதங்களுக்கும் நியாயமான தீர்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைப் பெறுவதன் மூலம் நமது குடியரசின் மையத்தில் ஒரு வலுவான, மதச்சார்பற்ற நெறிமுறையை 25 முதல் 28 வரையிலான பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன.


இந்த வார்த்தைகள் அவசரகாலத்தின் அரசியலமைப்பு மீறல்களின் காலத்தில் தோன்றியிருக்கலாம், ஆனால் அவை அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் திட்டத்தை மறைப்பதற்கு பதிலாக தெளிவுபடுத்துகின்றன. இந்த வார்த்தைகள் குடியரசின் தார்மீக கடமைகளை நினைவூட்டுவதாக உள்ளன, யாருக்கும் தீங்கு விளைவிப்பதற்கு பதிலாக. மோசமான காலங்களிலிருந்து நல்லவை தோன்றலாம். இவற்றை இப்போது வேரோடு பிடுங்குவது, இந்தியாவின் அடிப்படைக் கருத்துகளுக்கு எதிராக நடத்தப்படும் பயனற்ற, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு போராக இருக்கும்.


எஸ்.ஆர். பொம்மை vs இந்திய ஒன்றியம்-1994 (SR Bommai vs Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டதாவது, "மதச்சார்பின்மை நமது அரசியலமைப்பு தத்துவத்தின் அடித்தளம். அது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும்." அரசியல், சட்டம் மற்றும் அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து வரும் முக்கிய நிபுணர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே வைத்திருந்த ஒன்றை நீக்க விரும்புவது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?


அடிப்படைக் கட்டமைப்பை மீறும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு கூறவில்லையா? இங்கே ஒரு முரண்பாடு உள்ளது. இதன் பின்னர் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட ஒன்று, அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொண்டதாகக் கருதப்படும் சட்ட வல்லுநர்களாலும் அரசியல் தலைவர்களாலும், அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியை யாராகிலும் எவ்வாறு நீக்க முடியும் என்பதை நமக்குச் சொல்லாமல் நீக்க முயற்சிக்கப்படுகிறது.


இந்தியாவில் மதச்சார்பின்மை மதத்திற்கு எதிரானது என்று சொல்வது தவறு. உண்மையில், மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதாகும். அனைத்து நம்பிக்கைகளும் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற கருத்தை அது கொண்டாடுகிறது. மதச்சார்பின்மை என்பது ஒரு பரந்த மற்றும் முழுமையான யோசனையாகப் பார்க்கப்படுகிறது. முதலாவதாக, அரசுக்கு அதன் சொந்த மதம் இருக்க முடியாது என்பதாகும். இரண்டாவதாக, அரசு அனைத்து மதங்களிலிருந்தும் சமமாக விலகி இருக்கிறது, ஆனால் அவற்றை சமமாக ஆதரிக்கிறது. மூன்றாவதாக, அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மதச்சார்பின்மை மேற்கத்திய நாடுகளில் காணப்படும் தேவாலயத்தையும், அரசையும் கடுமையாகப் பிரிப்பதில் இருந்து வேறுபட்டது.


அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்று பொருள்படும் சர்வ தர்ம சம பாவ் (Sarva dharma sama bhaav), இந்திய மதச்சார்பின்மையின் பரந்த கட்டமைப்பிற்குள் இருக்க முடியும். இதன் தொடர்புடைய அனைத்து அம்சங்களுடனும் நம்பிக்கையைப் பின்பற்றவும் பரப்பவும் உள்ள உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். அரசியலமைப்புப் பிரிவு 25-லிருந்து தொடங்கும் பரந்த அரசியலமைப்பு மொழியால் இது பாதுகாக்கப்படுகிறது. இந்திய மதச்சார்பின்மை என்றால் இதுதான், இரக்கம், சகவாழ்வு மற்றும் அரசியலமைப்பு ஒழுக்கத்தின் நெய்த துணி போன்றவை போல் உள்ளது.


சிலர், "நமது ஜனநாயக அமைப்பில் மதச்சார்பின்மை ஏற்கனவே தெளிவாக இல்லையா?" என்று கேலி செய்கிறார்கள். இருக்கலாம். ஆனால், பெருகிவரும் சகிப்பின்மையும் மறைமுக பெரும்பான்மைவாதமும் கொண்ட உலகில், தெளிவானவை அறிவிக்கப்பட வேண்டியவையாகவும், பாதுகாக்கப்பட வேண்டியவையாகவும், உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டியவையாகவும் ஆகின்றன.


முகவுரையில் உள்ள "மதச்சார்பற்ற" என்ற சொல் வெறும் காட்சிக்காக அல்ல. இது ஒரு தெளிவான நோக்க அறிக்கையாகும். இது ஒரு அரசியலமைப்பு வழிகாட்டியாக செயல்படுகிறது. இது எதிர்கால அரசாங்கங்களை எச்சரிக்கிறது. பொதுவாக நீங்கள் வாக்குகளைப் பெறலாம், ஆனால் நீங்கள் முக்கிய மதிப்புகளை பலவீனப்படுத்தக்கூடாது.


இங்கே ஒரு பெரிய முரண்பாடு உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை மிகவும் சேதப்படுத்திய அரசாங்கம் இப்போது அதன் ஆதரவாளர்கள் இந்த முக்கியமான வார்த்தையை அகற்ற அழுத்தம் கொடுக்க அனுமதிக்கிறது.


உண்மையில், மதச்சார்பின்மை என்ற சொல் இன்று முகவுரையில் இல்லையென்றால், கடந்த காலத்தின் நிகழ்வுகள் அதை உடனடியாகவும் தெளிவாகவும் சேர்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்.


நடைமுறையில் அரசியலமைப்பை அவமதிக்கும் மக்கள் இப்போது அதை சட்டத்திலும் நீக்க விரும்புகிறார்கள். அரசியலமைப்பு பதவிகளில் உள்ள அதிகாரிகளும் இந்த யோசனையை ஆதரிக்கும்போது, ​​அது அவர்களின் கடமையின் தோல்வி மட்டுமல்ல. அவர்கள் ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை வெளிப்படையாக ஆதரிப்பதை இது காட்டுகிறது.


பாஜக நீண்ட காலமாக "மதச்சார்பின்மை" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் அசௌகரியத்தை வெளிப்படுத்தி வருகிறது, இதை மிகவும் அநியாயமாக சிறுபான்மையினர் திருப்திப்படுத்தல் எனக் கருதுகிறது. இது உண்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய இறக்குமதி அல்ல, மாறாக வேதாந்த உந்துதல் ஆகும். இது அசோகரின் தம்மம், அக்பரின் சுல்ஹி-குல், கபீரின் இருபாடல்கள் மற்றும் குரு நானக்கின் போதனைகள் அனைத்தும் ஒன்றிணைந்தவை. இது ஸ்வாமி விவேகானந்தர், மதங்களின் பாராளுமன்றத்தில் "நாங்கள் பரந்த சகிப்புத்தன்மையில் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் உண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்." என்று பெருமையுடன் பிரகடனம் செய்தது’


மதச்சார்பின்மைக்கான எனக்குப் பிடித்த வரையறைகளில் ஒன்று ராஜீவ் பார்கவா குறிப்பிட்டது. அவர் ஆபிரகாம் லிங்கனின் பிரபலமான சொற்றொடரைத் தழுவினார். "மக்களுக்காக" மற்றும் "மக்களால்" ஆகியவை ஜனநாயகத்தின் முக்கிய மதிப்புகள் என்று லிங்கன் கூறினார். ஆனால், ஒவ்வொரு நபரும் ஒன்றாக குடியரசை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள் என்பதைக் குறிக்க "மக்களின்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். இதில் கடைசி வரிசையில் உள்ள கடைசி நபரும் அடங்கும். பகிரப்பட்ட உரிமை உணர்வு இல்லாமல், ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. முன்னுரையில் உள்ள மற்றொரு முக்கியமான சொல் சகோதரத்துவம் (Fraternity) ஆகும். இது மதச்சார்பின்மையுடன் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. ஒருவருக்கொருவரும் வளர உதவும் நல்ல கூட்டமைப்புகளைப் போல் உள்ளது.


நமது அரசியலமைப்பிலிருந்து இந்த சாரத்தை அழிக்க முயற்சிப்பது வெறும் திருத்தல்வாதம் (revisionism) மட்டுமல்ல. இது வரலாற்று நாசவேலை (historical vandalism). முகவுரையைச் சுற்றியுள்ள புதுப்பிக்கப்பட்ட விவாதம் வெறும் கல்வி சார்ந்தது அல்ல.


இது நமது தற்போதைய காலங்களை பிரதிபலிக்கிறது. இந்த காலங்கள் பிளவுபடுத்தும் அரசியல், தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம் மற்றும் வளர்ந்து வரும் வகுப்புவாதத்தால் குறிக்கப்படுகின்றன. அத்தகைய காலத்தில், மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பு அறிவிப்பு வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு பாதுகாப்புச் சுவராக செயல்படுகிறது. இந்த சுவர் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்கிறது.


“மாற்றத்தின் காற்று வீசும்போது, ​​சிலர் சுவர்களைக் கட்டுகிறார்கள், மற்றவர்கள் காற்றாலைகளைக் கட்டுகிறார்கள்” (When the winds of change blow, some build walls, others build windmills) என்பது பழமொழி. நமது அரசியலமைப்பு ஒரு காற்றாலையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தது. அது ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசை உருவாக்கியது. எதிர்கால சந்ததியினர் முன்னேற்றம் மற்றும் அமைதியின் காற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இது செய்யப்பட்டது. இன்று, சிலர் அந்த காற்றாலையை அகற்ற விரும்புகிறார்கள்.


முகவுரை வெறும் அறிமுகம் அல்ல. இது ஒரு வாக்குறுதி. ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு வாக்குறுதியாகும். இது விதியுடனான நமது சந்திப்பு. அந்த வாக்குறுதியை சிறிதளவு கூட அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது குடியரசின் ஆன்மாவை காட்டிக் கொடுப்பதாகும்.


அபிஷேக் சிங்வி ஒரு சட்ட நிபுணர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர் மற்றும் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆவார்.



Original article:

Share:

பழைய வாகனங்கள் மீதான ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகள் : ஒரு தற்காலிகத் தீர்வுகூட இல்லை

 டெல்லி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையும் பின்னடைவும் ஒரு பெரிய சிக்கலை எடுத்துக்காட்டுகின்றன. மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சரியாக வகுக்கப்பட்ட திட்டம் எதுவும் இல்லை.


பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடையை இடைநிறுத்துமாறு டெல்லி அரசாங்கம் மத்திய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் (Commission for Air Quality Management (CAQM)) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தடை ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இது 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களுக்கும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துகிறது. மாசுபாட்டைக் குறைப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது.


டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்தத் தடை "எதிர்மறை-விளைவாக" (counter-productive) இருக்கலாம் என்று கூறினார். மேலும், அவரின் கருத்து ஒரு அளவிற்கு நம்பகமானதாக உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பழைய வாகனங்களின் உரிமையாளர்களை அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து டீசல் அல்லது பெட்ரோல் வாங்க வைக்கக்கூடும். இது மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்திற்கு வழிவகுக்கும். டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், இந்தத் தடை இரு சக்கர வாகனங்களை நம்பியிருக்கும் பலரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும். இதுவும் ஒரு நியாயமான கவலைதான்.


இருப்பினும், கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றுக்கு எதிரான பின்னடைவு இரண்டும் ஒன்றிய அரசு மற்றும் CAQM உட்பட அதன் நிறுவனங்கள் மற்றும் அடுத்தடுத்த டெல்லி அரசாங்கங்களின் நீண்டகால தோல்வியின் அறிகுறியாகும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, டெல்லி அதன் காற்றைச் சுத்தம் செய்ய தெளிவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட உத்தி தேவைப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, அது கடுமையான நடவடிக்கைகளையும் முழுமையற்ற தீர்வுகளையும் மட்டுமே பெற்றுள்ளது.


இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு பெட்ரோல் பம்ப் டீலர்களை (petrol pump dealers) CAQM அமைப்பு பொறுப்பேற்க வைத்தது. அவர்கள் தவறினால், 1988-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 192-ன் கீழ் அவர்கள் அபராதம் விதிக்க நேரிடும். பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது இது பெரும் சுமையை ஏற்படுத்துவதாக பெட்ரோல் டீலர்கள் சங்கம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நபர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க பயிற்சி பெறவில்லை அல்லது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.


இந்த அமைப்பு எரிபொருள் நிலையங்களில் தானியங்கி பதிவெண் தகடு அடையாளங் காணுதல் (Automatic Number Plate Recognition (ANPR)) ஒளிப்படக்கருவிகளைப் பயன்படுத்தி, ஆயுள் முடிந்த வாகனங்களை அடையாளம் காணும். இது அரசாங்கத்தின் வாகன இணைய தளத்துடன் வாகனத் தரவைச் சரிபார்க்கிறது. இந்த அமைப்புகளுக்கான சோதனை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. கடந்த மாதம், ANPR ஸ்கேனர்கள் பழைய வாகனங்கள் மீதான தடையை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக CAQM கூறியது.


இருப்பினும், நகரின் பல பகுதிகளில், ANPR-களில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஒப்புக்கொண்டார். இவற்றில் தவறான சென்சார்கள் மற்றும் தவறான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் அடங்கும். மேலும், NCR பகுதி முழுவதும் இந்த அமைப்பு இணைக்கப்படவில்லை. கட்டுப்பாடுகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு மிகக் குறைந்த திட்டமிடல் மட்டுமே இருந்தது என்பதை இது காட்டுகிறது.


வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கு சாலையில் அதிக வாகனங்கள் இருப்பதற்கான பல காரணங்களைப் புரிந்துகொள்ள தொடர்ச்சியான முயற்சி தேவை. வாழ்க்கை முறை தேர்வுகள், வாழ்க்கை சம்பாதிக்க வேண்டிய அவசியம் மற்றும் பயணத்தை நீண்ட மற்றும் தொலைதூரமாக்குகின்ற நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவை இந்தக் காரணங்களில் அடங்கும். டெல்லியில் கடந்த கால அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை நன்றாகக் கையாளவில்லை. மக்கள் தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்க ஊக்குவிக்கும் எளிமையான பணிகூட போதுமான கொள்கைக்கான கவனம் செலுத்தப்படவில்லை. பதவியேற்றதிலிருந்து, டெல்லியின் பாஜக அரசாங்கம் முந்தைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கான அறிகுறியைக் காட்டவில்லை. அது தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும்.



Original article:

Share:

பதினைந்து நகர மையங்கள் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியும். இந்த திறனை நாம் வெளிக்கொணர வேண்டும். -அமிதாப் காந்த்

     நமது நகரங்கள் பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளன. மேலும், அவை உலகத் தரம் வாய்ந்த பொருளாதார மற்றும் கலாச்சார தன்மைகளாக இருக்க வேண்டும். சில படிநிலைகள் நமது நகரங்களை தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும், அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும்.


இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் புதுமை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நகரங்கள் முக்கிய மையமாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% 15 நகரங்கள் மட்டுமே ஆகும். இந்த நகரங்கள் மும்பை, புது தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், புனே, சூரத், கோயம்புத்தூர், நொய்டா/கிரேட்டர் நொய்டா, கொச்சி, குருகிராம், விசாகப்பட்டினம் மற்றும் நாக்பூர் போன்றவை ஆகும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா $30 டிரில்லியன்+ பொருளாதாரமாக மாற இவை உதவும். இந்த வளர்ச்சி பொருளாதாரத்தில் கூடுதலாக 1.5% அதிகரிக்கக்கூடும்.


இருப்பினும், இந்த நகரங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவை கடுமையான காற்று மாசுபாடு, நகர்ப்புற வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை, மோசமான இணைய இணைப்பு, குப்பை பிரச்சினைகள் மற்றும் சுகாதாரமற்ற புறநகர் பகுதிகள் போன்றவைகளை சமாளிக்கின்றன. இந்த சிக்கல்கள் நகரங்கள் நல்ல திட்டமிடல் அல்லது வலுவான மேலாண்மை இல்லாமல் வளர்ந்ததைக் காட்டுகின்றன. மேலும், அவை காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.


பாங்காக், லண்டன், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்கள் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. ஆனால், இந்திய நகரங்கள் அரிதாகவே உலகின் சிறந்த இடங்களாகத் தோன்றுகின்றன. இந்திய நகரங்கள் அவற்றின் முழு திறனை அடைய நாம் எவ்வாறு உதவ முடியும்? முதலில், நமது நகரங்களில் காற்றை சுத்தம் செய்ய வேண்டும். உலகில் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் சுமார் 42 இந்தியாவில் உள்ளன. இதற்கான முக்கிய காரணங்கள் வாகன உமிழ்வு, கட்டுமான தூசி மற்றும் பயிர்க் கூளம் எரிப்பு போன்றவை ஆகும்.


பொதுப் போக்குவரத்தை விரைவில் மின்சார வாகனங்களுக்கு மாற்ற வேண்டும். கட்டுமான தூசியைக் கட்டுப்படுத்தும் விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். 2025-26 பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund) அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்த நகர அளவிலான சவால்களை இந்த நிதி ஆதரிக்க முடியும். நகரங்கள் அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்தப்பட வேண்டும். இந்த தரவரிசைகளின் அடிப்படையில் நிதி தொடர்பான வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும்.


திடக்கழிவு மேலாண்மைக்கு ஒரு பெரிய மாற்றம் தேவை. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs (MoHUA)) நமது நகரங்கள் ஒவ்வொரு நாளும் 1,50,000 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறுகிறது. ஆனால், இந்தக் கழிவுகளில் கால் பகுதி மட்டுமே அறிவியல் மற்றும் நிலையான முறையில் பதப்படுத்தப்படுகிறது. தேசிய அளவில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 62 மில்லியன் டன் நகராட்சி திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்தக் கழிவுகளில் சுமார் 70% சேகரிக்கப்படுகிறது. ஆனால் 30% மட்டுமே முறையாக பதப்படுத்தப்படுகிறது. இது நகராட்சி நிர்வாகத்தில் தோல்வியைக் காட்டுகிறது. இதைச் சரிசெய்ய, மாநில அரசுகள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதில் கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கு வாகனங்கள் வாங்குவதும் அடங்கும். இந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட பொறுப்புணர்வை (performance-based accountability) ஊக்குவிக்கும் தெளிவான கொள்கைகள் மற்றும் விதிகள் மிக முக்கியம். இறுதியில், சிறந்த ஒழுங்குமுறை, சமூகப் பங்கேற்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை கழிவு மேலாண்மையை நிலையானதாகவும், சுற்றறிக்கையாகவும் மாற்றுவதற்கான ஒரே வழிகள் ஆகும். இது 2030-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 73.5 டிரில்லியன் டாலர்களை உருவாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்தூர் மாதிரி (Indore’s model) பெரும் ஆற்றலைக் காட்டியுள்ளது. வீடு வீடாகப் பிரிக்கப்பட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு சிறப்பு வாகனங்களில் உயர்தர கழிவு பதப்படுத்தும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஈரமான கழிவுகள் பயோ-சிஎன்ஜியாக (bio-CNG) மாற்றப்படுகின்றன.


நீர் அழுத்தம் என்பது ஒரு கடுமையான பிரச்சனை ஆகும். நமது ஆறுகளில் கிட்டத்தட்ட பாதி மாசுபட்டுள்ளன. 2018-ம் ஆண்டில், 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள் என்று நிதி ஆயோக் கணித்துள்ளது. நகரங்கள் குழாய் நீரில் 40-50% இழக்கின்றன. மோசமான நீரின் தரமும் அதிக சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்தூரில், GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர்நிலைகளில் கழிவுநீர் கசிவு நிறுத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவது இந்தூரை இந்தியாவின் முதல் நீர்மிகை நகரமாக (India’s first water-plus city) மாற்றியுள்ளது.


இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) மற்றும் நைட் ஃபிராங்க் (Knight Frank) 10 மில்லியன் மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறையை மதிப்பிடுகின்றன. இந்தப் பற்றாக்குறை 2030-ம் ஆண்டுக்குள் 31 மில்லியனாக மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முறைசாரா குடியிருப்புகள் அதிகரித்துள்ளன, இது சட்டவிரோத காலனிகளுக்கு வழிவகுக்கிறது. இந்தக் காலனிகளில் தண்ணீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சரியான உள்கட்டமைப்பு இல்லை. தரை இடக் குறியீடு (floor space index (FSI)) மற்றும் தரை பரப்பு விகிதம் (floor area ratio (FAR)) அதிகரிப்பது செங்குத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். அடர்த்தி தொடர்பான சலுகைகளும் ஒரு சாத்தியமான தீர்வாகும். இது 'நாளைய நிதி நகரங்கள்' (Financing Cities of Tomorrow) குறித்த G20 இந்தியா மற்றும் OECD அறிக்கையில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் நகர்ப்புற ஆற்றல் (urban potential) குறைவாக உள்ளது. ஏனெனில், நகரங்கள் நெரிசல் மற்றும் அதிக சுமை கொண்டவையாக உள்ளது. பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (Boston Consulting Group) கூற்றுப்படி, ஒரு இந்திய நகரத்தில் சராசரி நபர் ஒவ்வொரு நாளும் 1.5 முதல் 2 மணிநேரம் வரை போக்குவரத்தில் சிக்கிக் கொள்கிறார். போக்குவரத்து நெரிசல்கள் மாசுபாடு மற்றும் உமிழ்வை அதிகரிக்கின்றன. இதைச் சரிசெய்ய, பொதுப் போக்குவரத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நெரிசல் அடிப்படையிலான விலை நிர்ணயத்தையும் பயன்படுத்த வேண்டும். மேலும், சிறந்த போக்குவரத்து மேலாண்மைக்கு AI மற்றும் IoT தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் விதிகளைப் பின்பற்றி பொறுப்புடன் வாகனம் ஓட்டினால் மட்டுமே சாலைகள் போக்குவரத்திலிருந்து விடுபட முடியும்.


சியோல், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நகரங்கள் 1 Gbps-க்கும் அதிகமான இணைய வேகத்தைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவின் சராசரி மொபைல் இணைய வேகம் சுமார் 100 Mbps மட்டுமே. சிறந்த உலகளாவிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், புதுமை மையங்கள், உலகளாவிய திறன் மையங்கள் (global capability centres (GCC)) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை ஈர்க்க, இந்தியா அதன் இணைய வேகத்தை கணிசமாக மேம்படுத்த வேண்டும்.


டிஜிட்டல் உள்கட்டமைப்பு


நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் இரண்டிலும் அதிவேக பிராட்பேண்ட், 4G மற்றும் 5G ஆகியவற்றை நாம் விரிவுபடுத்த வேண்டும். இதைச் செய்ய, அதிக முதலீட்டை ஈர்க்க அலைக்கற்றை (spectrum) விலைகளைக் குறைக்க வேண்டும். பெரிய ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க்குகளையும் (large fibre-optic networks) உருவாக்க வேண்டும் மற்றும் நாடு முழுவதும் 5G ஐ அறிமுகப்படுத்த வேண்டும்.


நகர்ப்புற சீர்திருத்தம் பரவலாக்கப்பட்ட திட்டமிடல், நிர்வாகம் மற்றும் நிதியுதவியைப் பொறுத்தது. NITI ஆயோக்கின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் ஒரு திட்டமிடுபவர் மட்டுமே உள்ளார். இதற்கு நேர்மாறாக, வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு 5,000 முதல் 10,000 மக்களுக்கும் ஒரு திட்டமிடுபவர் உள்ளனர். பல இந்திய நகரங்களில் சரியான முதன்மைத் திட்டங்கள் (proper master plans) இல்லை.


74-வது அரசியலமைப்பு திருத்தத்தை நாம் முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதாவது, இந்தியாவில் சொத்து வரி வசூல் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாக உள்ளது. சொத்து வரி வசூலை அதிகரிப்பது அவசியம். நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது உதவும். கண்காணிப்பு மற்றும் வரி வசூலுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் உதவும். நகரங்கள் அதிக வருவாயை ஈட்ட நில மதிப்பு கையகப்படுத்துதலை (land value capture (LVC)) ஆராயலாம்.


நகரங்கள் தங்கள் சொந்த வருவாயை உயர்த்தும்போது, ​​அவர்கள் நிதியுதவிக்காக நகராட்சி பத்திர சந்தைகளைப் (municipal bond markets) பயன்படுத்தலாம். ஆனால், இது திட்டமிடல் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை முடித்த பின்னரே நிகழும்.


நமது நகரங்கள் பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளன. அவை பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்திற்கான உலகத் தரம் வாய்ந்த மையங்களாகவும் இருக்க வேண்டும். விவரிக்கப்பட்ட படிநிலைகள் நமது நகரங்களை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற உதவும். அவை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகவும் அணுக எளிதாகவும் மாறும். இது நடக்கக்கூடிய பாரம்பரியப் பகுதிகளில் முதலீடுகள் மற்றும் மென்மையான நகர்ப்புற அனுபவங்களுடன் செல்ல வேண்டும். அரசாங்கம் இவற்றை ஆதரிக்கிறது, மேலும் தனியார் துறை அவற்றை உருவாக்குகிறது.


அடுத்த பத்து ஆண்டுகள் நிச்சயமாக ஒரு "நகர்ப்புற காலமாக" (urban decade) இருக்கும். இந்த 15 நகரங்கள் இந்தியாவின் நகர்ப்புற மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும்.


எழுத்தாளர் இந்தியாவின் G20 ஷெர்பா மற்றும் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:

Share:

சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• பீகாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி வினோத் கஞ்சியால் கூறுகையில், 82% வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officer (BLO)) புதிய வாக்காளர் படிவங்களைப் பெற்றுள்ளனர். மேலும், சுமார் 72% படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன - 7.8 கோடி வாக்காளர்களில் சுமார் 5.61 கோடி பேருக்கு இது சென்றடைந்துள்ளது. இதுவரை, 3% படிவங்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் மிகப் பெரியவை என்றும், சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.


• ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்த செயல்முறையை களத்தில் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, 20033 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் (கடைசியாக இதுபோன்ற சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டபோது) அதிலிருந்து தொடர்புடைய சாற்றை சான்றாகப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் 2003 பட்டியலில் உள்ளவர்களின் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வாக்காளர் பட்டியல் பதிவைப் பயன்படுத்தலாம். ஆனால், 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் (2003-இல் 18 வயது இல்லாதவர்கள்) சான்றாக மற்ற ஆவணங்களைக் காட்ட வேண்டும்.


• சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் நடைமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.


• பீகார் வாக்காளர் பட்டியல்களில் தேர்தல் ஆணையத்தின் "சிறப்பு தீவிர திருத்தம்" (special intensive revision) செய்யும் 1 லட்சம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்கள் தலா ரூ.6,000 கௌரவ ஊதியமாகப் பெறுவார்கள் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் ஆணைய அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?


• தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தைத் தொடங்கியுள்ளது. இது இறுதியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும். பீகாரில், இந்த செயல்முறை ஜூன் 25ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதத்திற்கு முன்பு எதிர்பார்க்கப்படும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, செப்டம்பர் 30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலுடன் முடிவடையும்.


• அரசியலமைப்பின் பிரிவு 324(1), நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை "கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்துதல்" ஆகியவற்றின் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.


• மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் (Representation of the People Act, 1950) பிரிவு 21(3)-ன் கீழ், தேர்தல் ஆணையம் எந்த வகையிலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தை உத்தரவிடலாம் என்று கூறுகிறது.


• 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள், வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது, தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்பட்டபடி, புதிய பட்டியலை உருவாக்குவதன் மூலம் தீவிரமாக, ஏற்கனவே உள்ள பட்டியலில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சுருக்கமாக அல்லது இரண்டு முறைகளையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படலாம் என்று கூறுகிறது.


• சிறப்பு சுருக்க திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. மேலும், ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



Original article:

Share:

டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• தலைநகரில் டீசல் வாகனங்களில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட, மற்றும் பெட்ரோல் வாகனங்களில் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த உத்தரவு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.


• முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 98 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாவது நாளில் 78 அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், வியாழக்கிழமை - மூன்றாவது நாளில் எந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.


• நீண்டநாள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் எரிபொருள் நிலையங்களில் நிறுவப்பட்ட தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (Automatic Number Plate Recognition (ANPR)) கேமராக்களால் குறிக்கப்படுகின்றன. அவை எண் தகடுகளை ஸ்கேன் செய்து, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) இல்லாதவை அல்லது 'நீண்டநாள் பயன்படுத்தப்பட்டவை' என்று பதிவு நீக்கப்பட்டவைகளைச் சரிபார்க்க அரசாங்கத்தின் வாகனத் தரவுத்தளத்துடன் தரவைப் பொருத்துகின்றன.


• 2018ஆம் ஆண்டில், டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும் உச்சநீதிமன்றம் தடை செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


• வழக்கமாக ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்காகத் தயாரிக்கப்படும் உமிழ்வுப் பட்டியல், அந்த ஆண்டிற்கான ஒரு நகரம் அல்லது பிராந்தியத்திற்கான வெவ்வேறு மூலங்களிலிருந்து வரும் உமிழ்வை அளவிடுகிறது.


• 2021 வரைவு அறிக்கையை எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (The Energy and Resources Institute (TERI)) தயாரித்து நவம்பர் 2024-இல் வெளியிட்டது. டெல்லி அரசாங்கம் மாசு மூலங்களை நிகழ்நேரத்தில் அடையாளம் காண உதவும்படி TERI-யிடம் கேட்டது.


• வரைவு அறிக்கை பட்டியலிடும் ஆறு காற்று மாசுபடுத்திகளில், வாகனங்கள் மூன்றுக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன. டெல்லியில் வாகனங்கள்தான் அதிக அளவில் PM2.5 வாயுவை வெளியிடுகின்றன. இது மொத்த மதிப்பிடப்பட்ட PM2.5 வெளியேற்றமான 20.32 kt/ஆண்டில் சுமார் 47% அல்லது 9.6 kt/ஆண்டு (ஆண்டுக்கு கிலோ டன்கள்) ஆகும். இதைத் தொடர்ந்து சாலை தூசி (20%, 4.09 kt/ஆண்டு PM2.5) வெளியிடப்பட்டது.


• வாகனங்கள் 78% நைட்ரஜன் ஆக்சைடுகள் (nitrogen oxides (Nox)) மாசுபாட்டையும், 49% மீத்தேன் அல்லாத ஆவியாகும் கரிம சேர்மங்களையும் (non-methane volatile organic compounds (NMVOCs)) ஏற்படுத்துகின்றன.


• வாகனங்களில், இரு சக்கர வாகனங்கள் பெரும்பாலான PM2.5, PM10, சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. மூன்று சக்கர வண்டிகள் அதிக கரிம சேர்மங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் பேருந்துகள் நைட்ரஜன் ஆக்சைடின் மிகப்பெரிய ஆதாரமாகும்.


• 2021-ஆம் ஆண்டில், தேசிய தலைநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கான காற்று தர ஆணையச் சட்டம் (Capital Region and Adjoining Areas Act (CAQM Act)) என்ற சட்டம் இயற்றப்பட்டது. இது டெல்லி மற்றும் அருகிலுள்ள பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசப் பகுதிகளில் மாசுபாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தச் சட்டம் CAQM என்ற அமைப்பை உருவாக்கியது. இது பிராந்தியத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகளை வழங்கவும் அதிகாரம் கொண்டது.



Original article:

Share:

நாடாளுமன்ற நூலக சேவைக்கான புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுத்தல் -சுவாதி சுதாகரன், அபாந்திகா கோஷ்

 LARRDIS (Parliament Library and Reference, Research, Documentation and Information Service)-ஐ ஒரு ஆராய்ச்சி மையமாக உருவாக்குவது இந்தியாவின் நாடாளுமன்ற செயல்முறைகளை வலுப்படுத்தும்.


சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுவது ஒரு பொதுவான அம்சமாக மாறிவிட்டது. இதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறார்கள். நாடாளுமன்றம் அரசியலுக்கான இடம் மட்டுமல்ல, கொள்கைகள் உருவாக்கப்பட்டு, அவற்றை ஆராயப்படும் இடமும் இதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கம் கேள்வி கேட்கப்பட்டு பொறுப்பேற்க வைக்கப்படும் இடமும் நாடாளுமன்றம் ஆகும்.


சிக்கலான மற்றும் மாறுபட்ட பிரச்சினைகள் குறித்து சட்டம் இயற்றுவது ஒரு கடினமான வேலை. இந்த விஷயங்களில் பொருளாதார சீர்திருத்தங்கள், காலநிலை மாற்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். இதைச் சிறப்பாகச் செய்ய, உயர்தர ஆராய்ச்சி மற்றும் குறிப்புதவி சேவைகளுக்கான அணுகல் அவசியம். நாடாளுமன்ற நூலகம் என்பது நாட்டின் சிறந்த ஒன்றாகும். பல ஆராய்ச்சி அறிஞர்கள் அதன் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், கடந்த கால மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுப்படி, ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மட்டுமே இதைப் பயன்படுத்துகின்றனர்.


நாடாளுமன்ற நூலகம் மற்றும் குறிப்பு, ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் சேவை (LARRDIS) உடனடியாகவும் திறமையாகவும் செயல்படுகிறது — ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் 15 ஆண்டு கால நாடாளுமன்ற பதவிக்காலத்தில் ஆற்றிய உரைகள் குறித்து தனது இணைய கோரிக்கைக்கு, மூன்று நாட்களுக்குள் அனைத்தும் தனது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டதாக நினைவு கூர்ந்தார். இருப்பினும், உள்ளீடுகள் அதன் இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொகுதிகளில் உள்ளவற்றுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. "இது ஒரு ஆராய்ச்சி அமைப்போ அல்லது கல்வி நிறுவனமோ அல்ல," என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் LARRDIS-ன் பங்கை விவரித்தார். 


ஆனால் இந்த இடைவெளி இப்போது PRS நாடாளுமன்ற ஆராய்ச்சி போன்ற அமைப்புகளால் நிரப்பப்படுகிறது. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆராய்ச்சியில் உதவுவதற்காக சபை உதவியாளர்களை (Legislative Assistants to Members of Parliament (LAMP)) வழங்குகிறார்கள்.


நாடாளுமன்றத்தில் சுமார் 800 எம்.பி.க்கள் உள்ளனர். எந்த நேரத்திலும், 40 முதல் 50 எம்.பி.க்களுக்கு மட்டுமே LAMP உதவியாளர்கள் (LAMP fellow) சேவை உள்ளது. LAMP அதிக மதிப்பைச் சேர்ப்பதற்கும் திறம்பட செயல்படுவதற்கும் பாராட்டப்படுகிறது. இருப்பினும், இது வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டுள்ளது. கூட்டமைப்பினர் ஒவ்வொரு எம்.பி.யுடனும் குறுகிய நேரத்தை மட்டுமே செலவிடுகிறார்கள். இதன் காரணமாக, பல எம்.பி.க்கள் ஆராய்ச்சிக்காக அரசியல் உதவியாளர்கள் அல்லது வெளிப்புற ஆலோசகர்களை நம்பியுள்ளனர்.


சபை விவாதங்கள் அரசியல் மோதல்கள் போல மாறி வருகின்றன. பல அரசியல் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு பேசுவதற்கு வரையறைகளை வழங்குகின்றன. இதன் பொருள் எம்.பிக்கள் பெறும் தகவல்கள் ஒருதலைப்பட்சமாக இருக்கலாம் அல்லது நிபுணத்துவம் மற்றும் உண்மைகள் இல்லாமல் இருக்கலாம். இதன் விளைவாக, விவாதங்கள் ஆழமான பகுப்பாய்வைக் கொண்டிருக்காமல் போகலாம் என்ற நிலைப்பாடு உள்ளது.


LARRDIS-ன் நன்மை, தீமை மற்றும் விரும்பத்தகாதது


LARRDIS நாடாளுமன்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் தீவிரமாக உள்ளது. இது மக்களவை நடவடிக்கைகள், குழு அறிக்கைகள் மற்றும் அரியவகை புத்தகங்களின் PDF காப்பகங்களை உருவாக்கியுள்ளது. 2023-ம் ஆண்டில், எம்.பி.க்கள் எழுதிய கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு சேவையை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அதன் பெரும்பாலான சேவைகள் எதிர்வினையாற்றும் தன்மை கொண்டவை. எம்.பி.க்கள் நேரிலோ அல்லது இணையவழியிலோ கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.


எம்.பி.க்களின் தகவல் கோரிக்கைகளின் எண்ணிக்கை 1950-ல் 150-லிருந்து 2019-ல் 8,000-க்கு மேல் உயர்ந்தது. இருப்பினும், LARRDIS பெரும்பாலும் தனித்து இயங்குகிறது, பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள் அல்லது ஆலோசனை நிறுவனங்களுடன் குறைந்தபட்ச கூட்டாண்மைகளே உள்ளன. இந்த தனிமை, முன்கூட்டியே, எதிர்நோக்கு கொள்கை பகுப்பாய்வு செய்யவும், போக்குகளை முன்னறிவிக்கவும் அதன் திறனை மட்டுப்படுத்துகிறது. இது உள்நாட்டு ஆராய்ச்சி திறனையும் மட்டுப்படுத்தியுள்ளது.


இந்திய ஜனநாயகத்தின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, LARRDIS மாற வேண்டும். இது ஒரு சுறுசுறுப்பான, எதிர்காலம் சார்ந்த மற்றும் உள்ளடக்கிய ஆராய்ச்சி மையமாக மாற வேண்டும். இது இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். இந்த மாற்றம் இந்தியாவின் நாடாளுமன்ற செயல்முறையை மேம்படுத்தும்.


நிறுவப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகங்கள் சிறப்பு ஆராய்ச்சி அலகுகளைக் (special research units) கொண்டுள்ளன. இந்த அலகுகள் சட்டமியற்றுபவர்களுக்கு துல்லியமான, பாரபட்சமற்ற மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்குகின்றன. சர்வதேச நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions (IFLA)) மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான கூட்டாண்மை (Inter-Parliamentary Union (IPU)) ஆகியவை இந்த ஆராய்ச்சி சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. இந்த வழிகாட்டுதல்களின்படி, ஒரு முழுமையான ஆராய்ச்சி செயல்பாடு இரகசியத்தன்மை, நடுநிலைமை மற்றும் நிறுவன நினைவகத்தை உறுதி செய்ய வேண்டும்.


ஐரோப்பிய நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை (European Parliamentary Research Service (EPRS)) சிந்தனையாளர்கள், கல்வி கூட்டமைப்புகள் மற்றும் பிற நாடாளுமன்ற சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஒன்றாக, அவை பரந்த அளவிலான அறிவுத் தொகுப்பை உருவாக்குகின்றன. EPRS அறிக்கைகள் மற்றும் கொள்கைக்கான சுருக்கங்களைக் கொண்டு பயன்படுத்த எளிதான வலைத்தளத்தையும் இயக்குகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) பாதிக்கும் உலகளாவிய போக்குகளைக் கண்காணிக்கிறது. இது ஆரம்பநிலை கட்டத்தில் ஐரோப்பிய ஆணைய தாக்க மதிப்பீடுகளை மதிப்பாய்வு செய்கிறது. EPRS "ஐரோப்பா அல்லாதவற்றின் செலவு" (Cost of Non-Europe) அறிக்கைகளையும் மேற்கொள்கிறது. இது கூட்டு EU நடவடிக்கைகளின் நன்மைகளைக் காட்டுகிறது.


அர்ஜென்டினாவின் சட்டமன்ற ஆலோசனைக்கான அறிவியல் அலுவலகம் (OCAL) வெளிப்புற நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருப்பங்களைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு தகவல் அளிக்கிறது, சமூக சவால்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறது, சட்டமியற்றுபவர்களை அறிவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைக்கிறது, மற்றும் பயிற்சி திட்டங்களை நடத்துகிறது. பிரான்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருப்பங்களை மதிப்பீடு செய்யும் நாடாளுமன்ற அலுவலகம் (OPECST) மற்றும் மெக்சிகோவின் யூனியன் காங்கிரஸிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் அலுவலகம் (INCyTU) ஆகியவை இதே பங்கை வகிக்கின்றன.


LARRDIS இந்த முன்னெச்சரிக்கை மற்றும் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றலாம். கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேருவது ஒரு சாத்தியமான படியாகும். இந்தக் கூட்டமைப்புகள் கொள்கை தொடர்பான ஆய்வுகளை உருவாக்க உதவும். இத்தகைய ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் அல்லது காலநிலை மாற்றம் போன்ற சிக்கலான மற்றும் புதிய பிரச்சினைகளைக் கையாள முடியும்.


நாடாளுமன்றங்களுக்கு இடையேயான கூட்டாண்மை (Inter-Parliamentary Union (IPU)) இத்தகைய கூட்டமைப்புகளுக்கான எடுத்துக்காட்டுகளை குறிப்பிடுகிறது. பெனின் (ஆப்பிரிக்கா) மற்றும் கொலம்பியா (தென் அமெரிக்கா) ஆகிய நாடுகளில், அறிஞர்கள் நேரடியாக நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த அவர்கள் தொழில்நுட்ப ஆவணங்களை இணைந்து எழுதுகிறார்கள். எகிப்து நாடாளுமன்றக் குழுக்களில் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூட்டணிகளின் குழுக்களை இணைக்கிறது. ஸ்வீடனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சங்கம் (RIFO) என்ற அமைப்பு உள்ளது. இது சட்டமியற்றுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாகப் பேசவும் பணியாற்றவும் உதவுகிறது.


LARRDIS-ஐ மறுசீரமைக்க சிறந்த வழி, படிப்படியாகவும் ஆலோசனை ரீதியாகவும் அணுகுமுறையை மேற்கொள்வதாகும். இந்த அணுகுமுறை உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். LARRDIS-ன் ஆணை தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். எம்.பி.க்கள் மற்றும் குடிமக்கள் போன்ற யார் இதைப் பயன்படுத்தலாம் என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். திருப்புமுனை காலக்கெடு (turnaround timelines) மற்றும் இரகசியத்தன்மை நெறிமுறைகளுக்கும் (confidentiality protocols) தெளிவான விதிகள் தேவை. சிந்தனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி, OECD மற்றும் UNDP போன்ற அமைப்புகளின் நிபுணர்கள் அதன் பணியை வலுப்படுத்த முடியும்.


இது வெறும் நிர்வாக சீர்திருத்தம் அல்ல. சட்டம் இயற்றுதல், பொறுப்புத் தன்மை மற்றும் நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான முதலீடாகும். இந்தியா ஒரு சிக்கலான நாடாகும். இதன் காரணமாக, சரியான தகவல் இல்லாமல் உருவாக்கப்படும் கொள்கைகளின் விலை மிக அதிகமாக இருக்கலாம். ஒரு நவீன ஆராய்ச்சி சேவை, சட்டமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான தகவல் இடைவெளியைக் குறைக்கும். இது விவாதங்களின் தரத்தை மேம்படுத்துவதோடு, நாடாளுமன்ற செயல்முறைகளில் குடிமக்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.


சுவாதி சுதாகரன் மற்றும் அபந்திகா கோஷ் புதுதில்லியில் உள்ள Chase Advisors என்ற பொதுக் கொள்கை ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.



Original article:

Share:

PM-POSHAN vs உண்மைநிலை: இந்தியாவின் மதிய உணவுத் திட்டம் நடைமுறையில் எவ்வாறு சவால்களை எதிர்கொள்கிறது? -கிரண் நாராயணன், லாஸ்யா சேகர்

 இந்தியாவில் மதிய உணவு திட்டங்களின் (midday meal schemes) வரலாறு, சவால்கள் மற்றும் தாக்கத்தை ஆராய்வது, மாநில அளவிலான வெற்றிகள் மற்றும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது.


சென்னை மாநகராட்சி முதன்முதலாக மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ஒவ்வொரு இந்திய மாநிலமும் யூனியன் பிரதேசமும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது—சில மாநிலங்களான கேரளா போன்றவை முட்டை பொரித்த சாதம் மற்றும் சிறு கீரைகள் போன்ற நவீன உணவுகளை வழங்குகின்றன. இருப்பினும், நாடு முழுவதும் இன்னும் பிரச்சினைகள் உள்ளன. நாடு முழுவதும் திறமையின்மை நீடிக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் தக்கவைப்பை தொடர்ந்து மேம்படுத்திய ஒரு திட்டத்திற்கு நிதியுதவி ஒரு முக்கிய கவலையாக உள்ளது.


2025ஆம் ஆண்டு தொடக்கத்தில், மகாராஷ்டிரா அரசு நிதிக் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி மதிய உணவிலிருந்து முட்டைகளை நீக்குவதைப் பற்றி சிந்தித்தது. ஆனால், விமர்சனங்களைத் தொடர்ந்து, அது நடவடிக்கையை மாற்றியது—முட்டைகள் மற்றும் வாழைப்பழங்களை வாரந்தோறும் மீண்டும் சேர்த்து, திட்டத்தின் பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியது. இருப்பினும் விமர்சகர்கள் திட்டத்தின் ஊட்டச்சத்து மதிப்பின் குறைபாடுகள் குறித்து கவலைகளை எழுப்பினர். தி இந்து நாளிதழ் நாட்டில் உள்ள பல்வேறு உணவுத் திட்டங்களை ஆழமாக ஆராய்ந்து, அதன் தோற்றத்தைக் கண்டறிந்து, செயல்படுத்தலின் செயல்திறனை ஆராய்கிறது.


நூற்றாண்டு கால பயணம்


பள்ளிகளில் மதிய உணவு இந்தியாவில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1925ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் மதிய உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் பின்தங்கிய குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு மற்றும் குஜராத், மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் 1980களில் முதன்மை மாணவர்களுக்காக தங்கள் வளங்களைக் கொண்டு சமைத்த மதிய உணவு திட்டத்தை பரவலாக்கியுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதோடு (National Programme of Nutritional Support to Primary Education) சேர்க்கை, தக்கவைப்பு மற்றும் வருகையை உறுதி செய்வதற்காக, ஒன்றிய அரசு ஆகஸ்ட் 15, 1995 அன்று நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டமான தொடக்கக் கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டத்தைத் தொடங்கியது.


தமிழ்நாட்டில், 1920ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்த M. சிங்காரவேலர், மாநகராட்சி எல்லைகளுக்குள் ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்காக முதல் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்முயற்சியை எடுத்தார். பின்னர், அதில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை உணவுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு முழுமையாக அரசு நிதியுதவி திட்டமாக மாற்றப்பட்டது," என்று மாநில பொது பள்ளி அமைப்பு தளம்-தமிழ்நாடு (State Platform for Common School System-Tamil Nadu, SPCSS-TN) என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.


பிரதான் மந்திரி பாஷன் சக்தி நிர்மாண் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)), திட்டம் 2021ஆம் ஆண்டு தொடங்கி 2026 வரை தொடரும். அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தினமும் ஒரு சமைத்த உணவை வழங்குவதே இதன் நோக்கமாகும். இது 1995ஆம் ஆண்டு முதல் அனைத்து குழந்தைகளையும் தொடக்கப் பள்ளியில் சேர்ப்பதில் கவனம் செலுத்திய பழைய மதிய உணவுத் திட்டத்தை மாற்றியது. PM-POSHAN திட்டத்தின் செலவு மத்திய அரசுக்கும் (60%) மாநிலங்களுக்கும் (40%) இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஒன்றிய அரசு உணவு தானியங்களை வழங்குகிறது.


இந்த தொலைநோக்குப் பார்வையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டில் செப்டம்பர் 15, 2022 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் (Chief Minister’s Breakfast Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 1,545 அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், வகுப்பு 1 முதல் 5 வரையிலான 1.14 லட்சத்திற்கும் மேற்பட்ட முதன்மைப் பள்ளி மாணவர்களை உள்ளடக்கியது.


பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு, இரத்தசோகை, வைட்டமின் B12 குறைபாடு மற்றும் எடை குறைபாடு நிலைகளை ஒழிக்க வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், ஏற்கனவே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில திட்டக் குழுவின் படி, இதுவரை 1,319 பள்ளிகளில் வருகை அதிகரித்தது. இந்த வேகத்தை மேலும் அதிகரித்து, மாநில அரசு ஜூலை 15, 2025 முதல், நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பள்ளிகளையும் உள்ளடக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசு மற்றும் உதவி பள்ளிகளும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். தற்போது, 34,987 அரசு மற்றும் உதவி பள்ளிகள் முழுவதும் 17.53 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் காலை உணவு பெறுகின்றனர்.


மறுக்க முடியாத முடிவுகள்


இந்தியாவின் மதிய உணவு (Mid-Day Meal (MDM)) திட்டம் குறித்த 31 ஆய்வுகளின் 2024ஆம் ஆண்டு மதிப்பாய்வு, வழக்கமான உணவு மாணவர் சேர்க்கை, வருகை, பள்ளியில் தங்குதல் மற்றும் கற்றலை அதிகரிக்க உதவியது என்பதைக் கண்டறிந்துள்ளது, இருப்பினும் ஊட்டச்சத்தில் தாக்கம் வேறுபட்டது. மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தொடக்கப் பள்ளி வருகை மேம்பட்டதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தில் (United Nations Children's Fund (UNICEF)) முன்பு பணியாற்றிய கல்வியாளர் அருணா ரத்னம் கூறினார். "பொருளாதார நிபுணர் ஜீன் டிரெஸின் ஆய்வில், மதிய உணவுத் திட்டம் பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து 1990களில் தொடக்கப் பள்ளி வருகை மேம்பட்டதாகக் கண்டறியப்பட்டது. 2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan) போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இது அடையப்பட்டது," என்று அவர் கூறினார்.


உணவு உரிமை பிரச்சாரத்துடன் (Right to Food Campaign) தொடர்புடைய ஒரு சுதந்திர வளர்ச்சி பொருளாதார வல்லுநர் மற்றும் ஆராய்ச்சியாளர் தீபா சின்ஹா—உணவு ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த பணிபுரியும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் முறைசாரா வலையமைப்பு—மதிய உணவு குழந்தைகளை பள்ளிகளுக்கு கொண்டு வரவும் அங்கே தக்கவைக்கவும் உதவியுள்ளது. குறிப்பாக, பின்தங்கிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது என்று கூறினார். இது வகுப்பறையில் பசி பிரச்சினையையும் தீர்க்கிறது. ஏனெனில், காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் பல குழந்தைகள் உணவை உட்கொள்ள முடியும் என்பதால், வகுப்பறை பசி பிரச்சினையையும் இது நிவர்த்தி செய்கிறது. இது அவர்களின் கற்றலை மேம்படுத்துகிறது  என்று அவர் கூறினார்.


உணவுக்கு நிதியளிக்க நாங்கள் கடன் வாங்குகிறோம்


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பள்ளியின் தலைமையாசிரியர் வசுதா (பெயர் மாற்றப்பட்டது), மாநிலத்தின் கல்வித் துறையின் புதிய முடிவு முட்டை பொரித்த சாதம் போன்ற புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதால் ஒவ்வொரு நாளுக்கும் ஸ்பான்சர்களைக் கண்டுபிடிக்க அவர் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால், கல்வி கடமைகள் மற்றும் வழக்கமான நிர்வாக பொறுப்புகளுக்கு இடையில் சமநிலை படுத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. "எனது பள்ளியில் கிட்டத்தட்ட 650 மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து உணவு எடுத்துக்கொள்கிறார்கள். அனைவரும் சரியான நேரத்தில் உணவு கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்த எனக்கு பாதி நாளுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. இது எனது கல்விக் கடமைகளை கடுமையாக பாதிக்கிறது," என்று வசுதா கூறினார்.


அரசாங்க நிதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதம், ஆசிரியர்கள் வாராந்திர உணவுச் செலவுகளை ஈடுகட்ட தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 50,000 க்கும் அதிகமாகச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் கூறினார். கேரள அரசு, தொடக்கப்பள்ளியில் ஒரு குழந்தைக்கு, மதிய உணவுக்காக ரூ. 6.78 மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ரூ. 10.17 வழங்குகிறது. இது பள்ளிகள் உண்மையில் செலவிடும் தொகையில் பாதிக்கும் குறைவானது. கடந்த 4-5 ஆண்டுகளாக நிதி பெற நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். கடந்த ஆண்டு இந்த செலவுகளை ஈடுகட்ட சில ஆசிரியர்கள் கடன் வாங்க வேண்டியிருந்தது  என்று அவர் மேலும் கூறினார்.


நிதி அங்கீகரிக்கப்பட்டாலும் கூட, அவை பெரும்பாலும் மூன்று முதல் நான்கு மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, தவணைகளில் வந்து சேரும் என்று வசுதா சுட்டிக்காட்டினார்.  காய்கறிகள், முட்டை மற்றும் பாலுக்கான பணம் ஒரே நேரத்தில் எங்களுக்குக் கிடைப்பதில்லை. மேலும், காகித வேலைகளை முடிக்க நாங்கள் பல முறை அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், கடைக்காரர்கள் மற்றும் பால் வியாபாரிகளுக்கு வாரந்தோறும் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார். புதிய உணவுபட்டியலில், ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சம் ரூ.40 தேவைப்படுகிறது. ஒவ்வொரு முட்டைக்கும் ரூ.7, வாரத்திற்கு இரண்டு முறை பாலுக்கு ரூ.60, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (Liquefied petroleum gas (LPG)) மாதத்திற்கு ரூ.12,000 மற்றும் உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கான கூடுதல் கட்டணங்கள் ஆகியவை செலவுகளில் அடங்கும். இவை அனைத்தையும் தாண்டி, 500 மாணவர்களுக்கு உணவு தயாரிக்க ஒரு சமையல்காரர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்க அவர்கள் விறகுக்கு பதிலாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவிற்கு பயன்படுத்த வேண்டும். அதிகரித்து வரும் செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை  என்று அவர் மேலும் கூறினார்.


மற்ற இந்திய மாநிலங்களும் விதிவிலக்கு அல்ல. மதிய உணவுத் திட்டம் மாணவர் தக்கவைப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தினாலும், PM-POSHAN திட்டத்தின் மூலம் ஆதரவின்மை காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் போராடி வருகின்றன. முதன்மை மற்றும் மேல் முதன்மை வகுப்புகளுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.4 மற்றும் ரூ.6.19 மட்டுமே பெறுகிறோம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு குழந்தைக்கும் பழங்களை வழங்க ரூ.4 ஒதுக்கப்படுகிறது. இது தவிர, அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் 100 கிராம் கோதுமை மற்றும் அரிசியை அரசு நியாய விலைகடை மூலம் வழங்குகிறது. ஆனால், தானியங்களை கடையிலிருந்து பள்ளிக்கு கொண்டு வரும் போக்குவரத்து செலவை நாம் ஏற்க வேண்டும். மேலும், கோதுமையை அரைப்பதற்கு எங்களுக்கு தனியான நிதி கிடைக்கவில்லை என்று உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கரிலிருந்து ஒரு தலைமையாசிரியர் கூறினார்.


சமீபத்தில், மதிய உணவுத் திட்டத்திற்கான நிதி தாமதமாக வழங்கப்படுவதாக அவர் கூறினார். விலைவாசிகள் உயர்ந்து வருவதால், பணம் ஒருபோதும் போதுமானதாக இல்லை. ஒவ்வொரு புதன்கிழமையும், எங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி 100 மில்லி பால் வழங்குகிறோம்  என்று அவர் கூறினார். நிதி ஒவ்வொரு மாதமும் வருவதில்லை - அவை பெரும்பாலும் 3 முதல் 6 மாதங்கள் வரை தாமதமாகின்றன. நிலையான அட்டவணை இல்லை. தற்போதைய, மானியம் அனைத்து மாணவர்களுக்கும் உணவளிக்க போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 80% மாணவர்களுக்கு மட்டுமே உணவு தேவை என்று அரசாங்கம் கருதுகிறது மற்ற 20% பேர் வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வருகிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், பெரும்பாலான மாணவர்களால் அதை வாங்க முடியாது. மேலும், அவர்கள் அனைவரும் பள்ளி உணவை நம்பியிருக்கிறார்கள்," என்று அவர் விளக்கினார்.


பீகார் மாநிலத்தில் அனைவருக்குமான மதிய உணவு இன்னும் ஒரு கனவாகவே உள்ளது என்று கல்வியாளர் அனில் சத்கோபால் கூறுகிறார். 2007ஆம் ஆண்டு பீகாரின் பொதுப் பள்ளி முறை ஆணையத்தின் ஒரு பகுதியாக இருந்த சத்கோபால், மதிய உணவுத் திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் சமமான தரத்தை வழங்க 10 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை அனைவருக்குமானதாக மாற்ற பரிந்துரைத்தார். பீகாரில் மதிய உணவுத் திட்டங்களில் முழுமையான தவறான மேலாண்மை உள்ளது. 2007ஆம் ஆண்டு, பயிற்சி பெற்ற ஊழியர்களால் சமைக்கப்படும் உலகளாவிய சத்தான மதிய உணவைக் கோரும் பரிந்துரைகளின் தொகுப்பை எங்கள் ஆணையம் சமர்ப்பித்தது. ஆனால், அந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டில், பள்ளி உணவில் மாசுபட்ட உணவை உட்கொண்டதால் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பத்தாண்டிற்கும் மேலாக, எதுவும் மாறவில்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தத் திட்டம் வெளிப்படையாக இல்லை என்று சத்கோபால் கூறினார்.


சாதி அடிப்படையிலான பாகுபாடு


சாதி அடிப்படையிலான பாகுபாடு (Caste-based discrimination) மதிய உணவு பரிமாறுதல் மற்றும் சாப்பிடுதலில் பதிவாகியுள்ளது. சாதி அடிப்படையில் தனித்தனியான அமர்வு ஏற்பாடுகள் அல்லது உணவு மறுத்தல் போன்ற பாகுபாட்டு நடவடிக்கைகள் வடமாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்கள் இரண்டிலும் பதிவாகியுள்ளன. இது சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய கொள்கைகளை மீறுவதாக உள்ளது. ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மதிய உணவு பெறுவதில் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.


டெல்லி பல்கலைக்கழகத்தில் முன்னாள் தத்துவப் பேராசிரியர் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்விக்கான சமமான அணுகலுக்காக பணியாற்றும் அனுபவம் வாய்ந்த ஆர்வலர் மது பிரசாத்  தலைநகர் பகுதியில் உள்ள பொதுப் பள்ளிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு மிகவும் பரவலாக உள்ளது என்று கூறுகிறார். பட்டியல் சாதியை குழந்தைகள் இன்னும் சாப்பாட்டு அறைகளில் தனித்தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். மேலும், ஆசிரியர்கள் சரியாக கிண்ணங்களில் உணவை வைப்பதில்லை என்றும் சமையல்காரர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் பெற்றோர்கள் பள்ளி உணவைத் தவிர்த்த சம்பவங்கள் உள்ளன. பெற்றோர்களின் புகார்களைத் தொடர்ந்து தலைநகர் பகுதியில் உள்ள பல பள்ளிகள் இந்த சமையல்காரர்களை அகற்றியுள்ளன என்று அவர் கூறினார்.


தென்னிந்தியாவும் இதேபோன்ற சவாலை எதிர்கொள்கிறது மற்றும் மதிய உணவுத் திட்டம் சாதி அடிப்படையிலான பாகுபாடு பிரச்சனைகளுக்கு மத்தியில் சமூக உணவுப் பகிர்வின் ஒரு அம்சத்தை கொண்டுவருகிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தில் சாதி இன்னும் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆதிக்க சாதிக் குழுக்கள் ஆதிக்கமில்லாத அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண் சமையல்காரர்கள் தயாரித்த மதிய உணவை சாப்பிடாத இடங்கள் உள்ளன. எனினும், குழந்தைகள் தங்கள் மதிய உணவை உண்பதை உறுதி செய்ய ஆசிரியர்கள் முயற்சி செய்கிறார்கள். பள்ளிகளில் காலை உணவு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இந்த நிலைமை இந்த நாட்களில் மிகவும் மேம்பட்டுள்ளது" என்று ரத்னம் கூறினார்.


PM-POSHAN திட்டம் அடிமட்டத்தில் பயனுள்ளதாக உள்ளதா?


வகுப்பறைப் பசியைப் போக்குவதற்காகத் தொடங்கப்பட்ட PM-POSHAN திட்டம், தற்போது இந்தியா முழுவதும் 11.2 லட்சம் பள்ளிகளில் சுமார் 11.8 கோடி குழந்தைகளுக்கு சேவை செய்கிறது. 2020–21-ஆம் ஆண்டில், உணவு தானியங்களுக்காக மட்டும் ரூ. 11,500 கோடி இந்தத் திட்டத்திற்காக மையம் ரூ. 24,400 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. மொத்த அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் மையத்திலிருந்து ரூ.54,061.73 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ரூ. 31,733.17 கோடியும் ஆகும்.


இருப்பினும், இந்தத் திட்டத்தில் பெரிய குறைபாடுகள் இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். PM-POSHAN திட்டம், அதன் தற்போதைய வடிவத்தில், அதன் இலக்குகளைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. இது "ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தும்" மாதிரியைப் பயன்படுத்துகிறது. இது வெவ்வேறு தேவைகளைக் கொண்ட மாநிலங்களுக்கு நன்றாக வேலை செய்யாது. பள்ளி ஊட்டச்சத்து தோட்டங்கள் அல்லது தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு போன்ற யோசனைகள் நடைமுறைக்கு மாறாக, கிராமப்புற அல்லது ஏழைப் பகுதிகளில், குறியீட்டு ரீதியாகவே உள்ளன என்று பிரசாத் கூறினார். இந்தத் திட்டம் அடிப்படையில் பழைய மதிய உணவுத் திட்டத்தின் மறுபெயரிடுதல் என்றும், ஊட்டச்சத்தில் உண்மையான முன்னேற்றங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை சிறப்பாக எதிர்த்துப் போராட அறிவியல் பூர்வமாக திட்டமிடப்பட்ட உணவுகள், காலை உணவு மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளைச் சேர்க்க அவர் பரிந்துரைத்தார்.


இதேபோன்ற கருத்தை எதிரொலிக்கும் வகையில், PM-POSHAN திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் எப்போதும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக சின்ஹா ​​கருத்து தெரிவித்தார். பல தென்னிந்திய மாநிலங்கள் குறைந்தபட்ச தொகையை மட்டுமே பெறுகின்றன. அதே நேரத்தில் சில வட இந்திய மாநிலங்கள் விதிகள் கூறுவதைவிட அதிகமாகப் பெறுகின்றன. மேலும், முட்டை போன்ற பொருட்களை வாங்க அனைத்து மாநிலங்களுக்கும் பணம் கிடைப்பதில்லை. இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் குறைக்க உதவாது என்று அவர் கூறினார் - இது ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை ஆதரவை வழங்குகிறது.


தமிழ்நாடு, ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும், மதிய உணவுத் திட்டத்தை மற்ற பல மாநிலங்களைவிட சிறப்பாக நடத்துவதிலும் முன்னணியில் உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் வலுவான முதலீட்டில் கவனம் செலுத்தும் திராவிட மாதிரியே (Dravidian model) இதற்குக் காரணம் என்று ரத்னம் கூறுகிறார். இந்த அணுகுமுறை அனைத்து பள்ளிகளும் இந்தத் திட்டங்களைத் தடையின்றி செயல்படுத்துவதை உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.


இந்தத் திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்து சிறப்பாகச் செயல்பட, மக்கள் மற்றும் தலைவர்களிடையே விழிப்புணர்வு மிகவும் முக்கியம் என்று ரத்னம் கூறினார். தமிழ்நாட்டின் சுமார் 97% பேர் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். மேலும், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலை உள்ளது. ஆனால், அது ஏன் முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் இப்போது மாணவர்களின் உடல் நிறை குறியீட்டு எண்ணை (Body Mass Index (BMI)) சரிபார்க்கின்றன. மேலும், அங்கன்வாடி மையங்கள் உணவு மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் உதவுகின்றன. இந்த முயற்சிகள் சிறு குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவை நீக்குவதை உறுதி செய்ய உதவுகின்றன. இதன் விளைவாக, பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் விகிதம் 12-ஆம் வகுப்பு வரை வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், அதிகமான பெண்கள் கல்வியில் ஆர்வம் காட்டுகின்றனர்.


முன்னோக்கிய வழி


வல்லுநர்கள், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய வெற்றிகரமான மாதிரிகளை வழங்குவதாக சுட்டிக்காட்டுகின்றனர். "தமிழ்நாடு போன்ற மாநிலங்களால்கூட, துறை சார்ந்த திட்டங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளை கையாள முடியவில்லை. இத்தகைய திட்டங்களுடன் தொடர்புடைய உளவியல் சார்ந்த பிரச்சினைகளை அவர்களால் கையாள முடியாது. இங்குதான் அரசு ஈடுபாடு இல்லாமல், நிதி மற்றும் நிபுணத்துவம் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) முக்கியப் பங்கு வகிக்க முடியும்," என்று திருமதி ரத்னம் கூறினார்.


சின்ஹா திட்டத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து சிறந்த நிதியுதவி கேட்டுள்ளார். மாநில அரசுகளின் வளம் உருவாக்கும் திறன் குறைவானதாக மாறியுள்ளது மற்றும் நிதி ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டும். ஏனெனில், பெரும்பாலான வரிகள் ஒன்றிய அரசால் சேகரிக்கப்படுகின்றன மற்றும் இந்த முயற்சிகளில் சில ஒன்றிய அரசு நிதியுதவித் (centrally-sponsored schemes) திட்டங்களாகும். இந்த பற்றாக்குறைகள் காரணமாக இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. வள பற்றாக்குறையுடன் மாநிலங்கள் தொடர்ந்து இந்தத் திட்டங்களை நிர்வகிக்கும் அதே நேரத்தில், புதுமையான நடவடிக்கைகளைக் கொண்டுவருவதற்கான நிதி இடமும் குறைவானதாக மாறியுள்ளது. சில விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி நிதி நிறுத்தப்பட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன என்று சின்ஹா கூறினார்.


ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மதிய உணவை தனிப்பயனாக்குவது அனைத்து மாநிலங்களிலும் ஒரு பலவீனமாக இருந்து வருகிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இந்தத் திட்டங்கள் எவ்வளவு உள்ளூர் அளவில் இருக்கின்றனவோ, அவ்வளவு சிறப்பாக அது பொதுமக்களுக்கு உள்ளது. கேரளாவில் ஊட்டச்சத்து, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகளை வழங்க அடிமட்ட அளவிலான பங்கேற்புடன் ஒரு நல்ல மாதிரி உள்ளது. இது சமூக அளவிலான அணுகுமுறையை உறுதி செய்கிறது என்று ரத்னம் கூறினார்.



Original article:

Share: