செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தில் உள்ள சட்ட சவால்களை எதிர்கொள்ளுதல் -டெபோர்ஷி பாரத்

 டெல்லி உயர் நீதிமன்றத்தில் OpenAI-க்கு எதிராக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (Asian News International (ANI)) சமீபத்தில் தொடங்கிய வழக்கு, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) உருவாக்குபவர்களின் (developers) சட்டப் பொறுப்புகள் குறித்த விமர்சன உரையாடல்களைத் தூண்டியுள்ளது.  


ANI வழக்கின் மையத்தில் OpenAI இன் large language models (LLMs) அங்கீகாரம் இல்லாமல் பதிப்புரிமை பெற்ற பொருட்களில் பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த பிரச்சினை உலகளாவிய முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் OpenAI-க்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் கொண்டு வந்த வழக்கும், பதிப்புரிமை மீறலை மையமாகக் கொண்டுள்ளது. இந்த சர்ச்சைகளின் முக்கிய அம்சம், சரியான உரிமங்களைப் பெறாமல் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக, பொதுவில் கிடைக்கும் மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதாகும்.


இந்தியாவில், அறிவுசார் சொத்துரிமையை நிர்வகிக்கும் 1957-ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயன்பாட்டு வழக்குகளை நிவர்த்தி செய்வதற்கான தெளிவான விதிகள் இல்லை. எனவே, AI உருவாக்குநர் (developers) கவனமாக இருக்க வேண்டும் மற்றும் AIயைப் பயிற்றுவிக்க தரவைப் பயன்படுத்துவதற்கு முன்பு உள்ளடக்க உரிமையாளர்களிடமிருந்து அனுமதியைப் பெற வேண்டும். 


உரிமம் பெறுவது சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது  மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் நல்ல உறவை உருவாக்குகிறது. இது வருவாய்-பகிர்வு ஒப்பந்தங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கான உரிமங்களை உள்ளடக்கியது, ஒப்பந்தத்தில் இருந்து இரு தரப்பினரும் ஆதாயத்தை உறுதிப்படுத்துகிறது.

மற்றொரு சர்ச்சைக்குரிய சட்ட பிரச்சினை இந்திய பதிப்புரிமை சட்டத்தின் கீழ் "நியாயமான பயன்பாடு" அல்லது "நியாயமான கையாளுதல்" விதிகளின் பொருந்தக்கூடிய தன்மை பற்றியது. நியாயமான பயன்பாட்டிற்கு அமெரிக்கா ஒப்பீட்டளவில் பரந்த முறையை வழங்கினாலும், குறிப்பாக உருமாறும் அல்லது வணிகம் அல்லாத சூழல்களில், நியாயமான கையாளுதல் குறித்த இந்தியாவின் விளக்கம் குறுகியது. இங்குள்ள நீதிமன்றங்கள் வரலாற்று ரீதியாக பதிப்புரிமை வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாக உள்ளன. 


குறிப்பாக, வணிகப் பயன்பாடு சம்பந்தப்பட்ட வழக்குகளில். AI உருவாக்குநர் (developers) தங்கள் பயிற்சி நடைமுறைகளை நியாயப்படுத்த நியாயமான கையாளுதலைப் பயன்படுத்தினால் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பெரிய, லாபம் சார்ந்த பயிற்சி செயல்முறைகளுக்கு இது குறிப்பாக பொருந்தும். பொதுவில் கிடைக்கும் உள்ளடக்கம்கூட அதன் நோக்கத்திற்கு அப்பால் பயன்படுத்தினால் பதிப்புரிமையால் பாதுகாக்கப்படலாம்.

 

இழப்பீட்டு உட்பிரிவுகள் 


வளர்ந்து வரும் இந்த சட்ட நிலப்பரப்பில், உருவாக்குநர் (developers) மட்டுமல்ல, AI அமைப்புகளின் பயனர்களையும் பாதுகாப்பதற்கான முக்கிய உத்தியாக இழப்பீடுகள் உருவாகி வருகின்றன. உள்ளடக்கத்தை உருவாக்க AI-ஐப் பயன்படுத்தும் வணிகங்கள் போன்ற LLM பயனர்கள் கவனக்குறைவாக மூன்றாம் தரப்பு பதிப்புரிமைகளை மீறலாம் அல்லது தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை மீறலாம். 


தங்கள் சேவை ஒப்பந்தங்களில் இழப்பீட்டு உட்பிரிவுகளை வழங்குவதன் மூலம், AI உருவாக்குநர் (developers) தங்கள் வாடிக்கையாளர்களை சாத்தியமான வழக்குகளிலிருந்து பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் பொறுப்பில் தெளிவான எல்லைகளை அமைக்கலாம். எவ்வாறாயினும், இந்த இழப்பீடுகள் கவனமாக வரைவு செய்யப்பட வேண்டும்.  பயனர் தவறான பயன்பாடுகளைக் காட்டிலும் AI அமைப்பிலிருந்து நேரடியாக எழும் உரிமைகோரல்களுக்கான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். 


குறிப்பாக இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act, 2023 (DPDP Act)) விரைவில் நடைமுறைக்கு வருவதால், உருவாக்குநர் (developers) தரவுப் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். AI அமைப்புகள், DPDP சட்டத்தின் நோக்கம் வரம்பு (குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே தரவைப் பயன்படுத்துதல்) மற்றும் தரவுக் குறைத்தல் (தேவையான அளவு தரவுகளைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறுவது கடுமையான அபராதங்களுக்கு வழிவகுக்கும். உருவாக்குநர் (developers) தனிப்பட்டத் தரவை பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் அல்லது AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கு அதைப் பயன்படுத்துவதற்கு முன் தெளிவான ஒப்புதலைப் பெற வேண்டும்.


AI பயிற்சித் தரவுகளில் அனுமதியின்றி பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றங்களின் பதிலைப் பற்றிய கவலையை ANI வழக்கு எழுப்புகிறது. இதில் உள்ள ஒரு சாத்தியமான முடிவு என்னவென்றால், உருவாக்குநர் (developers) தங்கள் மாதிரிகளில் இருந்து அத்தகைய உள்ளடக்கத்தை அகற்ற நீதிமன்றங்கள் கோரலாம்.


இதற்கு ஒரு தீர்வு "மெஷின் அன்லெர்னிங்" ("machine unlearning") ஆகும். இந்த செயல்முறையானது குறிப்பிட்ட தரவுத்தொகுப்புகளின் செல்வாக்கை அழிக்க AI மாதிரிகளை மீண்டும் பயிற்றுவிப்பதை உள்ளடக்கியது. அவை ஒருபோதும் கணினியின் ஒரு பகுதியாக இல்லை. இது தொழில்நுட்ப ரீதியாக கடினமாக இருந்தாலும், குறிப்பாக பெரிய AI மாதிரிகளுக்கு, நீதிமன்றங்கள் AI பயிற்சி நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்துவதால், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியமான வழியாக இது அமையும்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் AI சட்டத்திலிருந்து படிப்பினைகளைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, AI உருவாக்குநர் (developers) தங்கள் அமைப்புகளின் ஆற்றல் நுகர்வு, வாழ்க்கை சுழற்சி செயல்திறன் மற்றும் தரவு பயன்பாட்டு நடைமுறைகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோருகிறது.  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) போன்ற இந்தியாவின் கட்டுப்பாட்டாளர்கள் இதே போன்ற தேவைகளை பின்பற்றலாம். 


AI அமைப்புகள் இத்தகைய  நெறிமுறைகளை  நிலையானவை என்பதை உறுதி செய்யலாம். உரிமம், தரவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி கண்காணிப்பு ஆகியவற்றில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதைப் போலவே, இந்த விதிமுறைகளை வடிவமைப்பதில் தொழில்துறை பங்குதாரர்களுடனான ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும். 


டெபோர்ஷி பாரத், எழுத்தாளர் மற்றும்  S&R அசோசியேட்ஸ் (S&R Associates) என்ற சட்ட நிறுவனத்தில் ஆலோசகர்.  




Original article:

Share:

முறைகேடான கடன் வழங்குதலுக்கு சிறை, கடுமையான அபராதத்தை புதிய மசோதா முன்மொழிகிறது. -ஷிஷிர் சின்ஹா

 டிஜிட்டல் முறையில் கடன் கொடுப்பவர்கள் உட்பட, கட்டுப்பாடற்ற கடன் வழங்குபவர்களால் எந்தவொரு நபரையும் துன்புறுத்துவதும் தண்டனைக்குரியது ஆகும்.


ஒரு புதிய வரைவு மசோதா, நேரிலோ அல்லது ஆன்லைனிலோ கட்டுப்பாடற்ற கடன் வழங்கினால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று முன்மொழிகிறது. டிஜிட்டல் முறையில் கடன் கொடுப்பவர்கள் உட்பட, கட்டுப்பாடற்ற கடன் வழங்குபவர்களால் ஒருவர் துன்புறுத்தப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் கடன் தொகையைவிட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.


நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை, 'ஒழுங்கற்ற கடன் செயல்பாடுகளைத் தடை செய்வது (Banning of Unregulated Lending Activities (BULA)) மசோதா என்ற புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, ரிசர்வ் வங்கி அல்லது பிற கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்படாத, எந்தச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படாத எந்தவொரு நபர் அல்லது குழுவையும் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




கருத்து கேட்டல்


இந்த வரைவு பொதுமக்களின் கருத்துகளுக்காக விடப்பட்டுள்ளது. கருத்துக்களை பிப்ரவரி 13, 2025-ஆம் ஆண்டுக்குள் சமர்ப்பிக்கலாம். 


இந்த வரைவு 'பொது கடன் நடவடிக்கை' என்பதை எந்தவொரு நபரும் கடன் அல்லது முன்பணம் அல்லது வேறுவிதமாக நிதியளிப்பதற்கான வணிகமாக வரையறுக்கிறது. அது தனது சொந்த நடவடிக்கையைத் தவிர வேறு எந்த செயலுக்கும் வட்டியில், ரொக்கமாகவோ அல்லது வேறு வகையாகவோ உள்ளது. ஆனால், உறவினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்கள் இதில் அடங்காது. ரிசர்வ் வங்கி சட்டம், வங்கி ஒழுங்குமுறை சட்டம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆயுள் காப்பீட்டுக் கழகம், தேசிய வீட்டுவசதி வங்கி, பிராந்திய கிராமப்புற வங்கிகள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள், சீட்டு நிதிகள் மற்றும் மாநில பண கடன் வழங்குநர்கள் சட்டங்கள் போன்ற அரசியலமைப்பின் முதல் அட்டவணையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட போன்ற கடன் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் 20 சட்டங்களை இது பட்டியலிடுகிறது.  


இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் மீறல்கள் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டிற்கும் உட்பட்ட அறியக்கூடிய மற்றும் பினையில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும். "இந்த சட்டத்தை மீறி டிஜிட்டல் அல்லது வேறுவிதமாக கடன்களை வழங்கும் எந்தவொரு கடனளிப்பவருக்கும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மேலும், 2 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். கடன் வாங்கியவர்களை துன்புறுத்துவதற்கு அல்லது கடன்களை மீட்டெடுக்க சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தும் கடன் வழங்குநர்கள் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள்" என்று வரைவு கூறியது.  


கடன் வழங்குபவர், கடன் வாங்கியவர் அல்லது சொத்துக்கள் பல மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அமைந்திருந்தால் அல்லது சம்பந்தப்பட்ட மொத்த தொகை பொது நலனை கணிசமாக பாதிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால் விசாரணை சிபிஐ விசாரனைக்கு மாற்றப்படலாம் என்றும் இந்த மசோதா முன்மொழிகிறது. குறிப்பிடப்பட்ட சட்டங்களால் உள்ளடக்கப்பட்ட எந்தவொரு ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் நடவடிக்கையையும் விலக்குவதற்காக கட்டுப்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்து முதல் அட்டவணையை திருத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்க இது முயல்கிறது.  


குழுவின் பரிந்துரைகள் 


இந்த மசோதா டிஜிட்டல் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் பணிக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றுகிறது. இது அதன் நவம்பர் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கட்டுப்பாடற்ற கடன் வழங்குவதைத் தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்தது. முன்னதாக, தகவல் தொழில்நுட்ப (Information Technology) சட்டம் (2000), கீழ் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள் (2021) , அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 


தற்போதுள்ள சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் இதுபோன்ற செயலிகளை பிளே ஸ்டோர் / ஆப் ஸ்டோர் (intermediaries) மூலம் அரசாங்கம் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் கோரும்போது இவற்றை அகற்ற இவை அதிகாரம் வழங்குகின்றன. மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்தந்த இடைத்தரகர்களை (ஆப் ஸ்டோர்கள்) ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பட்டியல் மற்றும் அவர்களின் ஆப் ஸ்டோர்களில் உள்ள கடன் செயலிகளை மட்டுமே வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 




Original article:

Share:

ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு: எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய முடியுமா?

 நாடாளுமன்றத்தில் இன்று வெடித்த மோதல் குறித்தும், அதன் விளைவாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியவை. 


நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஏற்பட்ட மோதல் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது  முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் மீது பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 


மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பி.ஆர்.அம்பேத்கரின் சிலை அருகே இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை எதிர்ப்பு பேரணி நடத்தினர்.

 

காலை 11.30 மணியளவில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிங் சாரங்கி சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதைக் காண முடிந்தது. நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளுக்கு அருகில் நின்றபோது மற்றொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை (முகேஷ் ராஜ்புத்) ராகுல் தன் மீது தள்ளியதாக சாரங்கி கூறினார். சாரங்கி மற்றும் ராஜ்புத் இருவரும் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இருப்பினும், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவரின் நுழைவை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தடுத்ததாக ராகுலும் காங்கிரஸும் கூறுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது உங்கள் கேமராவில் பதிவாகி இருக்கலாம், நான் நாடாளுமன்ற நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன், அப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னைத் தடுக்கவும், தள்ளவும், அச்சுறுத்தவும் முயன்றனர் என்றார். 


அதற்கு பின்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தள்ளிவிட்டதாகவும், எண்பது வயதானவரை காயப்படுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ‘இந்த நுழைவாயில் வழியே உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அவர்கள் அரசியலமைப்பை முறையை மாற்ற முயல்கின்றனர் மற்றும் அம்பேத்கரின் நினைவகத்தை அவமதிக்கிறார்கள் என்பதே இங்கு மைய பிரச்சினையாக உள்ளது’ என்று ராகுல் கூறினார். 


இந்த மோதலைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கூற்றுக்களை முன்வைத்தனர். பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கினாலும், இரு தரப்பு உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 


இந்த மோதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ் உள்ளிட்ட 3 தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றனர். சில மணி நேரம் கழித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவல் நிலையத்திற்கு சென்று பா.ஜ.க.வுக்கு எதிராக புகார் அளித்தனர். 


நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராகுல் மற்றும் பிற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது டெல்லி போலீசார் வியாழக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் தெரிவித்தார். 


பாரதிய நியாய சன்ஹிதா (2023), (Bharatiya Nyaya Sanhita (BNS)) சட்டத்தின் பின்வரும் பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது: 


பிரிவு 117 (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்): இந்த குற்றத்திற்கான தண்டனை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கிறது. 


பிரிவு 115 (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்): இந்த குற்றத்திற்கான தண்டனை ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் ஆகும்.


பிரிவு 125 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்): இந்த குற்றத்திற்கான தண்டனை மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 வரை அபராதம் ஆகும். 


பிரிவு 131 (தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்): இந்த குற்றத்திற்கான தண்டனை மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் ஆகும்.


பிரிவு 351 (கிரிமினல் மிரட்டல்): இந்த குற்றத்திற்கான தண்டனை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம்.

 

பிரிவு 3(5) (பொதுவான நோக்கம்): ஒரு பொதுவான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல நபர்களால் ஒரு குற்றச் செயல் செய்யப்படும்போது, "அத்தகைய நபர்கள் ஒவ்வொருவரும் அந்த செயலுக்கு அவர் மட்டுமே செய்ததைப் போலவே பொறுப்பாவார்கள்" என்று இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. 


ராகுல் காந்தியை கைது செய்ய முடியுமா? 


ஆம், கைது செய்ய முடியும். பிரிவு 117 மற்றும் 125 ஆகியவை அறியக்கூடிய குற்றங்களாக கருதப்படுகிறது. அதாவது நீதிமன்றத்தின் வாரண்ட் இல்லாமல் காவல்துறை ஒருவரைக் கைது செய்யலாம். மாறாக, அடையாளம் காண முடியாத குற்றங்களுக்கு கைது செய்ய வாரண்ட் தேவைப்படுகிறது.


இருப்பினும், கைது செய்வது கட்டாயமில்லை. 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்வது கட்டாயமில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 


மேலும், இந்த குற்றங்கள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியவை, அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை என்ற வகையில் ஜாமீன் வழங்கப்பட வேண்டிய குற்றங்கள் ஆகும். எனவே, ராகுல் கைது செய்யப்பட்டாலும், அவர் ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளது. 


ராகுலை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியுமா? 


அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், (1951) பிரிவு 8(3)-ன் படி: "எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர் அத்தகைய தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும், அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்." 


இந்த விதியின் கீழ் கடந்த ஆண்டு சூரத் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களை நீக்கி, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.




Original article:

Share:

பொருளாதார கணக்கெடுப்பு

 1. பொருளாதார கணக்கெடுப்பு 2023-24, ஜூலை 22 அன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


2. 2024-25 நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5-7 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு கணித்துள்ளது.


3. வசூலிக்கப்பட்ட வரியில் 55% நேரடி வரிகளிலிருந்தும், மீதமுள்ள 45% மறைமுக வரிகளிலிருந்தும் பெறப்பட்டது. 


4. FY24-க்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை (current account deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.7% ஆகும். 


ஒன்றிய பட்ஜெட் 2024 


1. 2024-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்தார். 


2. நான்கு முக்கிய குழுக்களின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அவை, 'கரீப்' (ஏழை), 'அன்னதாதா' (விவசாயிகள்), 'யுவா' (இளைஞர்கள்) மற்றும் 'மஹிலாயன்' (பெண்கள்) ஆகியவை ஆகும். 


3. பட்ஜெட்டின் கருப்பொருள் : வேலைவாய்ப்பு, திறன், MSMEs மற்றும் நடுத்தர வர்க்கம் போன்றவையை குறிப்பிடுகிறது. 


4. அனைவருக்கும் போதுமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான 9 முன்னுரிமைகளை பட்ஜெட் கோடிட்டுக் காட்டுகிறது. அவை, (1) விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவு, (2) வேலைவாய்ப்பு மற்றும் திறன், (3) உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதி, (4) உற்பத்தி மற்றும் சேவைகள், (5) நகர்ப்புற மேம்பாடு, (6) எரிசக்தி பாதுகாப்பு, (7) உள்கட்டமைப்பு, (8) கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (9) அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் போன்றவை ஆகும். 


5. அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரிகள் (Angel taxes) நீக்கப்பட்டுள்ளன.


6. அரசாங்கத்திற்கான முக்கிய வருவாய் ஆதாரங்கள், 


 - கடன் வாங்குதல் மற்றும் பிற பொறுப்புகள் (27%)

 - வருமான வரி (19%)

 - ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் (18%)

 - கார்ப்பரேஷன் வரி (17%)

 - வரி அல்லாத ரசீதுகள் (9%) ஆகியன.




7. அரசாங்க செலவினங்களின் முக்கிய பகுதிகள்:


 - வரிகள் மற்றும் கடமைகளில் மாநிலங்களின் பங்கு (21%)

 - வட்டி செலுத்துதல்கள் (19%)

 - மத்திய துறை திட்டம் (16%).


8. முக்கிய துறைகளுக்கான செலவுகளான,


 - பாதுகாப்பு: ₹4,54,773 கோடி

 - ஊரக வளர்ச்சி: ₹2,65,808 கோடி

 - விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள்: ₹1,51,851 கோடி

 - உள்துறை: ₹1,50,983 கோடி

 - கல்வி: ₹1,25,638 கோடி.


போன்றவை வரி தொடர்பான துறைசார்ந்த செலவினங்களின் முக்கிய பகுதிகளை குறிப்பிடுகிறது.




Original article:

Share:

upsc தொடர்பான சில முக்கியமான நடப்பு நிகழ்வுகள் - குஷ்பு குமாரி

 லிக்னோசாட் (Lignosat)

 

1. லிக்னோசாட் (Lignosat) என்றழைக்கப்படும் உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோள் ஜப்பானிய விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. எதிர்கால விண்வெளி பயணத்திற்கான நம்பகமான, புதுப்பிக்கத்தக்க கட்டிடப் பொருளாக மரங்கள் இருக்க முடியுமா என்பதை சோதிக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

2. இந்த செயற்கைகோள், கியோட்டோ பல்கலைக்கழகம் (Kyoto University) மற்றும் வீடுகட்டும் சுமிடோமோ ஃபாரஸ்ட்ரி (Sumitomo Forestry) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கார்கோ கேப்சூல் (SpaceX Dragon cargo capsule) மூலம் இது நவம்பர் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station (ISS)) வந்தடைந்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு, இது பூமிக்கு மேலே உள்ள சுற்றுப்பாதையில் வெளியிடப்படும். அங்கு அது ஆறு மாதங்களுக்கு சுற்றுப்பாதையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. 

 

புரோபா-3 திட்டம்  (Proba-3 Mission)

 

1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation (ISRO)) டிசம்பர் 5-ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி 59 / புரோபா-3 திட்டத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது, இரண்டு செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய ஐரோப்பிய விண்வெளி முகமையின் (European Space Agency (ESA)) பணியான புரோபா-3, சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான சூரிய கரோனாவை (solar corona) ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. 


2. இந்த பணியானது "துல்லியமாக பறக்கும் உருவாக்கம்" (precision formation flying) போன்ற அடிப்படையில் முதல் முயற்சியை மேற்கொள்ளும். இந்த செயல்பாட்டில், இரண்டு செயற்கைக்கோள்கள் ஒன்றாக பறந்து விண்வெளியில் ஒரு நிலையான உள்ளமைவை பராமரிக்கும்.

 

அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) 

 

1. தனியார் விண்வெளி நிறுவனமான அக்னிகுல் (Agnikul) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் முழு 3-டி அச்சிடப்பட்ட இயந்திர ராக்கெட்டான அக்னிபான் (Agnibaan) தயாரிக்கப்பட்டதை இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 

 

'ஜீட்டா-கிளாஸ்' (Zeta-class) சூப்பர் கம்ப்யூட்டர் 


1. ஜப்பான் ஒரு அற்புதமான "ஜீட்டா-கிளாஸ்" சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க தயாராகி வருகிறது. இது இன்றைய அதிநவீன இயந்திரங்களைவிட 1,000 மடங்கு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

2. "ஃபுகாகு நெக்ஸ்ட்" (Fugaku Next) என்று அழைக்கப்படும் இந்த சூப்பர் கம்ப்யூட்டரின் மேம்பாடு 2025-ம் ஆண்டில் தொடங்கும். இது ஜப்பானிய நிறுவனங்களான RIKEN மற்றும் Fujitsu தலைமையில் இருக்கும்.


3. யூரோபா கிளிப்பர் (Europa Clipper) என்பது நாசா விண்கலம் ஆகும். வியாழனின் சந்திரன் யூரோபாவை விரிவாக ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட முதல் பணி இதுவாகும். இந்த விண்கலம் அக்டோபர் 14, 2024 அன்று ஏவப்பட்டது. பின்னர், இது ஏப்ரல் 203-ம் ஆண்டு அளவில் வியாழன் கோளை அடையும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

பரம் ருத்ரா (PARAM Rudra)

 

1. செப்டம்பர் 26 அன்று, டெல்லி, புனே மற்றும் கொல்கத்தாவில் உள்ள முன்னணி அறிவியல் நிறுவனங்களில் நிறுவப்பட்ட மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் (PARAM Rudra supercomputers) திறக்கப்பட்டன. 

 

2. பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (Centre for Development of Advanced Computing (C-DAC)) உருவாக்கப்பட்டன. அவை, தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (National Supercomputing Mission (NSM)) கீழ் உருவாக்கப்பட்டன.

அரசியல்  (POLITY)

 

இந்திய குடியரசுத் துணைத்தலைவர் நீக்கம் தொடர்பானது : 

 

1. டிசம்பர் 10-ம் தேதி, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா (no-confidence) தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. இது, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

 

2. குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும் ஒரே நபராக இருக்க வேண்டும். எனவே, அவற்றை அகற்றுவதற்கான செயல்முறை, அரசியலமைப்புப் பிரிவு 67-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.


3. இந்த விதியின்படி, குடியரசுத் துணைத்தலைவர் அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார். மேலும், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி பதவியை ராஜினாமா செய்தாலோ அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ மட்டுமே அவர்கள் முன்னதாகவே பதவியை விட்டு வெளியேற முடியும்.


4. குடியரசுத் துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான அல்லது பதவி நீக்கம் செய்வதற்கான செயல்முறை அரசியலமைப்புப் பிரிவு 67(b)-ல் விளக்கப்பட்டுள்ளது. 

பிரிவு 66 

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் நடைமுறை.

பிரிவு 67

குடியரசுத் துணைத்தலைவரின் பதவிக் காலம்

பிரிவு 68

குடியரசுத் துணைத்தலைவர் பதவியில் உள்ள காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெறும் நேரம் மற்றும் சாதாரண காலியிடத்தை நிரப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பதவிக் காலம்.

பிரிவு 69

குடியரசுத் துணைத்தலைவரின் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி.

பிரிவு 70

பிற தற்செயல்களில் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளை நிறைவேற்றுதல்.

பிரிவு 71

தலைவர் அல்லது துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான அல்லது அதனுடன் தொடர்புடைய விஷயங்கள்.


செம்மொழிகளின் நிலை (classical languages)

 

1. மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளுக்கு 'செம்மொழி' (classical languages) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இப்போது, இந்தியாவில் மொத்த 'செம்மொழிகள்' எண்ணிக்கை 11 ஆக உள்ளது. இந்த செம்மொழிகளின் புதிய வகையானது 2004-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

 

2. பிராகிருதம் என்பது நெருங்கிய தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழிகளின் (Indo-Aryan languages) குழுவாகும். அர்த்தமகதி (Ardhamagadhi) என்பது பிராகிருதத்தின் பேச்சுவழக்கு தொடர்புடையது. இது, சமண ஆகமங்களும் கதா சப்தசதியும் (Gatha Saptashati) அர்த்தமகதியில் எழுதப்பட்டுள்ளன.

 

3. பாலி (Pali) என்பது சமஸ்கிருதமயமாக்கப்பட்ட மாகதி பிராகிருதத்தின் ஒரு வகையாகும். இது திபிடகாஸ் (Tipitakas) எனப்படும் தேரவாத பௌத்த நியதியின் மொழியாகும்.

 

4. பிராகிருதம் மற்றும் பாலி ஆகியவை இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்படாத இரண்டு செம்மொழிகள் ஆகும்.

 





பிரதான் மந்திரி வித்யாலக்ஸ்மி திட்டம் (PM Vidyalaxmi Scheme)

 

1. பிரதான் மந்திரி வித்யாலக்ஸ்மி திட்டம் (PM Vidyalaxmi Scheme) நவம்பர் 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இது ஒரு புதிய மத்திய அரசின் திட்டமாகும். இது மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

2. இந்தத் திட்டத்தின் கீழ், தரமான உயர்கல்வி நிறுவனத்தில் (Quality Higher Education Institution (QHEI)) அனுமதிக்கப்பட்ட எந்த மாணவரும் கல்வி கடனுக்குத் தகுதியுடையவர் ஆவர். இந்தக் கடன்கள் பிணையமில்லாமல் மற்றும் உத்தரவாதமில்லாததாக இருக்கும். கல்விக் கட்டணம் மற்றும் பிற படிப்பு தொடர்பான செலவுகளின் முழுத் தொகையையும் அவர்களால் ஈடுசெய்ய முடியும்.

 

NPS வாத்சல்யா திட்டம் (NPS Vatsalya Scheme) 

 

1. தேசிய ஓய்வூதிய முறை வாத்சல்யா (NPS Vatsalya) திட்டம் செப்டம்பர் 18 அன்று நிதியமைச்சரால் தொடங்கப்பட்டது. 

 

2. இந்த திட்டம் 0 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டதில், ஒரு பெற்றோர் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1000 வைப்புத்தொகை (deposit) செய்யலாம். வைப்புத்தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. 

 

மௌசம் திட்டம்

 

செப்டம்பர் 2024-ம் ஆண்டில், மத்திய அமைச்சரவை "மௌசம் திட்டத்திற்கு" (Mission Mausam) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிக்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தீவிர வானிலை நிகழ்வுகளை கணிக்கும் இந்தியாவின் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு இந்தியா பதிலளிக்க உதவுவதும் இதன் நோக்கமாகும்.

 



ஆயுஷ்மான் வய வந்தனா (Ayushman Vaya Vandana)

 

1. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY)) திட்டத்தின் கீழ் அரசாங்கம் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையை (Ayushman Vaya Vandana card) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அட்டை 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது. இது அவர்களின் வருமானம் அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது.

 

2. இந்த அட்டை அக்டோபர் 29 அன்று தொடங்கப்பட்டது. இந்த தினம் 9-வது ஆயுர்வேத தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.


பிரதான் மந்திரி ஜாதியா உன்னத் கிராம் அபியான் (PM JUGA) 

 

1. பிரதமர் JUGA திட்ட்டத்திற்க்காக ரூ.79,156 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசின் ரூ.56,333 கோடியும், மாநில அரசுகளின் ரூ.22,823 கோடியும் அடங்கும்.

 

2. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள், மத்திய திட்டங்களின் முழு பாதுகாப்பு மற்றும் செயல்படுத்தலை உறுதி செய்வதாகும். இந்தத் திட்டங்கள் பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

டிஜிட்டல் வேளாண் திட்டம்  (Digital Agriculture Mission)

 

1. விவசாயத் துறையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure (DPI)) உருவாக்குவதற்காக ரூ.2,817 கோடி டிஜிட்டல் வேளாண் திட்டத்திற்கு (Digital Agriculture Mission) மத்திய அமைச்சரவை செப்டம்பர் 2, 2024 அன்று ஒப்புதல் அளித்தது. டிஜிட்டல் வேளாண் திட்டத்தின் மூன்று முக்கிய கூறுகள் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன. அவை, அக்ரிஸ்டாக் (AgriStack), கிரிஷி முடிவு ஆதரவு அமைப்பு (Krishi Decision Support System (DSS)) மற்றும் மண் சுயவிவர வரைபடங்கள் (Soil Profile Maps) ஆகியவை ஆகும். 




Original article:

Share: