உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, வெள்ளிக்கிழமை 4-3 பெரும்பான்மை தீர்ப்பில் ஒரு கல்வி நிறுவனத்தின் "சிறுபான்மை தன்மையை" (minority character) தீர்மானிக்க "முழுமையான மற்றும் யதார்த்தமான" ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆனால், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (Aligarh Muslim University(AMU)) மீதான உண்மை நிலவரத்தை அறிய ஒரு சிறிய அமர்விற்கு விடப்பட்டது.
எவ்வாறாயினும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (Aligarh Muslim University(AMU)) அதன் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறுவதற்கு இந்தத் தீர்ப்பு அடிப்படையில் வழி வகுத்துள்ளது.
வழக்கின் பின்னணி
1967-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ”எஸ். அஜீஸ் பாஷா vs இந்திய ஒன்றியம்” (S.Azeez Basha vs Union of India) வழக்கில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) முஸ்லிம் சிறுபான்மையினரால் நிறுவப்படவில்லை அல்லது நிர்வகிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. மாறாக, ஒன்றிய சட்டமன்றத்தின் சட்டத்தின் மூலம் AMU நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக, அரசியலமைப்பின் 30வது பிரிவின் கீழ் AMU ஒரு சிறுபான்மை நிறுவனமாக தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.
1981-ம் ஆண்டில், அரசாங்கம் 1920-ம் ஆண்டின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகச் (AMU) சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இந்தத் திருத்தம் முஸ்லிம் சமூகத்தால் நிறுவப்பட்ட நிறுவனம் என்று கூறப்பட்டது. இந்தியாவில் முஸ்லிம்களின் கலாச்சார மற்றும் கல்விக்கான முன்னேற்றத்தை மேம்படுத்துவதே இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருந்தது.
2005-ம் ஆண்டில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) தனது முதுகலை மருத்துவத் திட்டங்களில் முஸ்லீம்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. 2006-ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும், MU தொடர்பான 1981-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தையும் இந்த நீதிமன்றம் ரத்து செய்தது. அஜீஸ் பாஷா வழக்கின் அடிப்படையில் AMU ஒரு சிறுபான்மை நிறுவனமாக கருதப்படவில்லை என்பது நீதிமன்றத்தின் நியாயமான பதிலாக இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2019-ம் ஆண்டில், இந்த வழக்கானது மேலும் விசாரணைக்காக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான (MEIs) பாதுகாப்பு
சட்டப்பிரிவு 30(1)-ன் கீழ், அனைத்து சிறுபான்மையினருக்கும் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் உரிமை உண்டு. மேலும், சட்டப்பிரிவு 15(5) சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு (minority educational institutions (MEI)) பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) இட ஒதுக்கீடு வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கிறது.
சிறுபான்மை அந்தஸ்து இந்த கல்வி நிறுவனங்களின் தினசரி நிர்வாகத்தின் மீது அதிக கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது. இதில், சிறுபான்மை மாணவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்கி, மாணவர் சேர்க்கையை அவர்கள் முடிவு செய்யலாம். மேலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணியமர்த்துவதில் அவர்கள் அனுமதியைக் கொண்டுள்ளனர்.
சிறுபான்மைத் தன்மை
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உடன் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கினர். இந்த முடிவில், அவர்கள் அரசியலமைப்புப் பிரிவு 30(1)-ன் கீழ் சிறுபான்மை நிறுவனங்களின் "முக்கிய அத்தியாவசியங்கள்" (core essentials) தொடர்பான கோட்பாடுகளை கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
ஒரு சிறுபான்மை நிறுவனத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கம் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றாலும், அது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டியதில்லை. மாறாக, சிறுபான்மையினர் அல்லாத பின்னணியில் உள்ள மாணவர்களை அனுமதித்தால் சிறுபான்மை நிறுவனம் அதன் சிறுபான்மைத் தன்மையை இழக்காது.
ஒரு சிறுபான்மை நிறுவனம் அதன் சிறுபான்மை தன்மையை இழக்காமல் மதச்சார்பற்ற கல்வியை வழங்க முடியும்.
ஒரு சிறுபான்மை நிறுவனம் அரசாங்க உதவியைப் பெற்றால், எந்த மாணவரையும் மதம்சார்ந்த போதனையில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது. கல்வி நிறுவனம் முழுமையாக அரசால் பராமரிக்கப்பட்டால், அது மத போதனைகளை வழங்க முடியாது. இந்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நிறுவனம் இன்னும் சிறுபான்மை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வு
ஒரு நிறுவனம் உண்மையில் சிறுபான்மை தன்மையைக் கொண்டிருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க, அது "முழு ஆய்வுக்கு உட்படுத்தி" அது எவ்வாறு நிறுவப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதைச் செய்ய, நீதிமன்றம் சில அளவுகோல்களை அல்லது "குறியீடுகளை" அமைத்து, இவை இரண்டு-அடுக்கு ஆய்வின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும்.
நிறுவன அமைப்பு : சோதனையின் முதல் அம்சம் சிறுபான்மை நிறுவனத்தின் தோற்றம், அதன் நோக்கம் மற்றும் நிறுவனம் தொடர்பான ஆய்வு எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதை ஆராய்கிறது.
கல்வி நிறுவன அமைப்பின் பின்னணியில் இருந்தவர்களை அடையாளம் காண நீதிமன்றங்கள் ஆய்வின் மூலம் முதல் கட்டத்தை கண்டறிய வேண்டும். இதை நிரூபிக்க, சமூக உறுப்பினர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகளுடன் கடிதங்கள் மற்றும் தபால்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளலாம். நீதிமன்றத்தின்படி, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லது அதிலிருந்து ஒரு குழுவை இணைக்க வேண்டும்.
நிறுவனத்தை நிறுவுவதன் நோக்கம் முக்கியமாக சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக இருக்க வேண்டும். அது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நேரத்தில், கடிதங்கள் அல்லது பேச்சுவார்த்தைகளை ஆராயவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இந்த ஆவணங்கள் நிறுவனத்தை உருவாக்குவதன் "அவசியம்" மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் "கல்விக்கான சிரமங்களை" அங்கீகரிப்பதை விளக்கலாம்.
அடுத்த கட்டமாக, நீதிமன்றத்தின் படி, "ஆய்வு" செயல்படுத்தப்பட்டது. கல்வி நிறுவனத்திற்கு நிதி வழங்கியது யார்? நிலம் எவ்வாறு கையகப்படுத்தப்பட்டது அல்லது தானமாக வழங்கப்பட்டதா? தேவையான அனுமதிகளைப் பெற்று கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பை நிர்வகித்தவர் யார்?
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) பழைய மாணவர்களின் முன்னாள் மாணவர் சங்கம், எழுத்துப்பூர்வ ஆவணங்களில், சர் சையத் அஹ்மத் கான் "முஸ்லீம் சமூகம் புறக்கணிக்கப்பட்டதாகவும், பின்தங்கியதாகவும் இருப்பதைக் கண்டறிந்த பிறகு" முஸ்லீம் சமூகத்திற்கு ஆதரவாக AMU நிறுவப்பட்டது என்று கூறியது. 1870-ம் ஆண்டுகளில், முகமது ஆங்கிலோ-ஓரியண்டல் (Muhammadan Anglo-Oriental (MAO)) கல்லூரி அறக்கட்டளை குழு நிதி சேகரிக்கத் தொடங்கியது. இதன் அடிப்படையில், MAO கல்லூரி நிறுவப்பட்டது. முஸ்லீம் பல்கலைக்கழக சங்கம் 1911-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பின்னர், அரசாங்கத்துடனான "நீண்ட ஒப்பந்தங்கள்" (long negotiations) மூலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகச் சட்டம் 1920-ன் அடிப்படையில், முகமது ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரி உச்சக்கட்டத்தை அடைந்தது, என்று முன்னாள் மாணவர் சங்கம் சமர்ப்பித்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், முகமது ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) உருவாக்கத்தின் பின்னணியில் ஒரு "முதன்மை" நோக்கம் "மேற்கத்திய நாடுகளின் கலைகள் மற்றும் அறிவியலை மேம்படுத்துவது ஆகும். ஆனால், இவை மத ஆய்வுக்கு மட்டுமல்ல" என்று மையம் வாதிட்டது. மேலும், இந்த ஆய்வில் MAO-ஐ நிறுவுவதற்கு "வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்களும்" பங்களித்ததாக அது வாதிட்டது. 1911-ம் ஆண்டில் அலிகாரில் ஒரு பல்கலைக்கழகம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டபோதும், ஏகாதிபத்திய அரசாங்கம் அவர்கள் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளும் என்பதில் தெளிவாக இருந்ததாக மையம் குறிப்பிட்டிருந்தது.
நிர்வாகம் : ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தை சிறுபான்மை சமூகத்தினர் கையாள வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இது போன்ற, ஒரு நிறுவனத்திற்கான "தேர்வு" (choice) என்பது ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. மேலும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நபர்களை தினசரி நிர்வாகத்திற்கு நியமிப்பது "நிர்ப்பந்தம்" இல்லை.
ஒரு கல்வி நிறுவனத்தின் சிறுபான்மை தன்மையை "உறுதிப்படுத்துகிறதா" என்பதை ஆய்வு செய்வதன் மூலம் நீதிமன்றங்கள் நிர்வாக அமைப்பை அறிய முடியும் என்று பெரும்பான்மையினர் கருதுகின்றனர். கல்வி நிர்வாகம் "சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதாக" தெரியவில்லை என்றால், சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவுவது நோக்கம் அல்ல என்பதை நியாயமாக ஊகிக்க முடியும்.
அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்கள் (AMU போன்றவை), அரசியலமைப்பு தொடங்கப்பட்ட ஜனவரி 26, 1950 அன்று கல்வி நிர்வாகம் எவ்வாறு செயல்பட்டது என்பதை நீதிமன்றங்கள் ஆராய வேண்டும் என்று பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளது. மேலும், கல்வி நிறுவனர்களிடமிருந்து கட்டுப்பாட்டை மேற்கொள்ள ஏதேனும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
1950-ம் ஆண்டு வரை நிர்வாகத்தின் மீதான இறுதி அதிகாரம் முஸ்லீம் சமூகத்திடமே இருந்தது என்றும், 'நிர்வாகம்' (AMU-ன் உச்ச நிர்வாகக் குழு) முழுவதுமாக முஸ்லீம்களைக் கொண்டது என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர்.
எவ்வாறாயினும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகச் (AMU) சட்டத்தின் பிரிவு 13 மற்றும் 14 ஆனது அதிகாரிகளுக்கு "மேலதிக அதிகாரத்தை" (overriding authority) வழங்குவதாக ஒன்றிய அரசு வாதிட்டது. அதாவது, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு முகமது ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரி மீதான அதன் கட்டுப்பாட்டை விட அதிகமாக இருந்தது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகச் (AMU) சட்டம் 1951-ம் ஆண்டில் திருத்தப்பட்டது என்றும் அந்த வழக்கில் சமர்பிக்கப்பட்டது. இந்த திருத்தம் கட்டாய மதக் கல்வி மற்றும் பல்கலைக்கழகத்தின் நீதிமன்றத்தில் அனைத்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் நீக்கியது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சட்டம்-1920, அரசியலமைப்பு விதிகளுக்கு இணங்க இது செய்யப்பட்டது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) வரலாற்றில் முக்கிய தேதிகள், சட்ட வழக்கு :
1877 : சையத் அஹ்மத் கான் முஹம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரியை முஸ்லிம்களை மேம்படுத்துவதற்காக நிறுவினார்.
1920 : AMU சட்டம் இயற்றப்பட்ட பிறகு முஹம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக (AMU) ஆனது.
1950 : நாடாளுமன்றம் AMU-ஐ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவித்தது.
1951 : AMU சட்டம் திருத்தப்பட்டது. அந்த நேரத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் AMU நிர்வாக மற்றும் அதன் உச்சபட்ச ஆளும் குழு உறுப்பினர்களாக இருக்க அனுமதிக்கிறார்கள்.
1965 : மற்றொரு திருத்தம் AMUவின் நிர்வாகக் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தியது. பல்கலைக்கழக நிர்வாகம் இனி உச்ச நிர்வாகக் குழு அல்ல.
1967 : திருத்தங்களுக்கு சவால் விடும் உச்சநீதிமன்ற விதிகள், AMU ஐ சிறுபான்மை நிறுவனமாக வகைப்படுத்த முடியாது என்று கூறுகிறார் (அஜீஸ் பாஷா வழக்கு).
1981 : இந்திரா காந்தியின் அரசாங்கம் AMU சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. AMU முஸ்லிம்களின் கல்வி, கலாச்சார முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டது என்று அறிவித்தது.
2005 : முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முஸ்லீம் மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை AMU அறிமுகப்படுத்தியது.
2006 : அலகாபாத் உயர்நீதிமன்றம் கொள்கை மற்றும் 1981-ம் ஆண்டு திருத்தத்தை இரத்து செய்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கமும், AMUவும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடின.
2016 : ஒன்றிய அரசு மேல்முறையீட்டில் இருந்து விலகியது. UPA அரசின் நிலைப்பாடு “எஸ்சி/எஸ்டி/ஓபிசி/ஈடபிள்யூஎஸ்களுக்கான இடஒதுக்கீடு என்ற பொதுக் கொள்கைக்கு எதிரானது. மேலும், இது மத்தியப் பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தும்” என்று கூறியது.
2019 : மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.