தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை (National counter-terrorism policy) மூல காரணங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். -சஷாங்க் ரஞ்சன்

 பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரிப்பதற்கும் அவர்கள் பயங்கரவாதிகளாக மாறுவதிலிருந்து அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பதைத் தடுப்பதற்கும் பயங்கரவாத எதிர்ப்பின் மையக்கருத்தாக தடுப்பு இருக்க வேண்டும். ஏற்கனவே, பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களின் மறுவாழ்வு மற்றும் பணிநீக்கம் ஆகியவையும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.


இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency (NIA)) நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில்  இரண்டு நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, ஒன்றிய அரசு விரைவில், “தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் உத்தி" விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். "பயங்கரவாதம், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்புகளை" எதிர்த்துப் போராட ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.


ஒன்றிய மற்றும் மாநிலப் படைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (standard operating procedures (SOPs)), பல்வேறு குழுக்களிடையே ஒத்துழைப்பு, முகமைகளை ஒருங்கிணைத்தல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் முழு அரசாங்க ஆதரவு உள்ளிட்ட பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பல்வேறு அம்சங்களை உள்துறை அமைச்சர் விவாதித்தார். மாநாட்டில் 21 காவல்துறை இயக்குநர்கள், ஒன்றிய புலனாய்வு, புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


உள்துறை அமைச்சரின் கருத்துக்கள் வலுவான பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைக்கு அவசியமானவை மற்றும் தேசியக் கொள்கையில் சேர்க்கப்படும். இந்த நடவடிக்கைகள் நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைப்பை பலப்படுத்தும். எவ்வாறாயினும், சட்ட அமலாக்கத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளையும், குறிப்பாக பயங்கரவாதச் செயல்களுக்கு வழிவகுக்கும் காரணங்கள் மற்றும் நிபந்தனைகளையும் இந்தக் கொள்கை கவனிக்க வேண்டும். தடுப்பு என்பது இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை மற்றும் அது நடப்பதற்கான காரணத்தை முன்னரே கண்டறிய வேண்டும். இந்த நடவடிக்கை ஒரு பிரச்சனை தொடங்கும் முன் அதை நிறுத்துவது போன்றது.


உண்மையில், சில இன சமூகங்கள், இளைஞர்கள், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய குழுக்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதில், அவர்கள் பயங்கரவாதிகளாக மாறுவதையோ அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பதையோ தடுப்பதில் தடுப்பு கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு அல்லது தவறான செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களைப் போலவே, பயங்கரவாதத்தில் ஏற்கனவே உள்ளவர்களை அதில் மீண்டும் ஈடுபடுவதை தடுத்து மறுவாழ்வு பெற உதவும் நடவடிக்கைகளும் இதில் அடங்கும். வெற்றிகரமான தடுப்பு சமூகங்கள் மற்றும் ஆன்லைனில் தீவிரமயமாக்கலை நிவர்த்தி செய்தல், ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் ஏற்கனவே பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அந்தச் செயல்களில் இருந்து வெளியேற உதவுதல் ஆகியவையும் இதில் அடங்கும்.


தடுப்பு (Prevention) என்பது தீவிரமான அபாயத்தில் உள்ளவர்களை முன்கூட்டியே பாதுகாப்பதாகும். அவர்களை அடையாளம் கண்டு, ஆதரவை வழங்குவதன் மூலம் அவரகள் பாதுகாப்பாக உணரலாம். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தடுப்புத் திட்டம், தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக, சமூகங்கள், குடிமை சமூக அமைப்புகள், உள்ளூர் அதிகாரிகள், பள்ளிகள், சுகாதார நிறுவனங்கள், காவல்துறை, சிறைச்சாலைகள், மதத் தலைவர்கள் மற்றும் தனியார் துறை உட்பட பலதரப்பட்ட குழுக்களை  உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயங்கரவாத எதிர்ப்பு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedures (SOPs)) சரிசெய்வது குறித்து உள்துறை அமைச்சர் விவாதித்தார். தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் உள்ளூர் அச்சுறுத்தல் மதிப்பீடுகள் தடுப்பு மேம்படுத்த மற்றும் கொள்கையை வலுப்படுத்த உதவும். ஒரு "முழு-அரசாங்கம்" (whole-of-the-government) அணுகுமுறை உள்ளூர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நாட்டின் பரவலாக்கப்பட்ட மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு, பயங்கரவாதத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு சட்ட அமலாக்க நிறுவனங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

கூடுதலாக, ஜொஹான் கால்டுங் (johan Galtung) வரையறுத்தபடி, அரசாங்கத்தின் முழு அணுகுமுறையும் கட்டமைப்பு வன்முறையைக் குறைக்க வேண்டும். சமூக கட்டமைப்புகள் அல்லது நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகள் அல்லது உரிமைகளைப் பூர்த்தி செய்வதைத் தடுப்பதன் மூலம் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது கட்டமைப்பு வன்முறைகள் நிகழ்கின்றன.


கட்டமைப்பு வன்முறையைக் குறைப்பது அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கான நீண்டகாலத் தீர்வுகள், பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இதை நிவர்த்தி செய்ய, பயங்கரவாதத்தின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு அரசின் குறிப்பிடத்தக்க முயற்சி தேவைப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையானது சட்டம் மற்றும் ஒழுங்கில் மட்டுமே கவனம் செலுத்தினால், பல பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் போகும் அபாயம் உள்ளது.


சமீப காலங்களில், பயங்கரவாதத்தின் மூல காரணங்களைப் பற்றி விவாதிப்பது பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை வெற்றி பெற, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பயங்கரவாதம் உள் காரணிகளிலிருந்தே வருகிறது என்பதை கொள்கை வகுப்பாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். வெளிப்புறக் காரணிகள் இந்தப் பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையின் முக்கிய கவனம் இந்தப் பிரச்சனைகளை மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும். இது ராஜதந்திரத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.


எழுத்தாளர் ஜே & கே மற்றும் வடகிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் பணியாற்றி கணிசமான அனுபவத்துடன் ஓய்வு பெற்ற படைத்தளபதி ஆவார்.




Original article:

Share: