பாங் (Bhang) சட்ட நிலை, இந்தியாவில் கஞ்சா சட்டங்கள் (Cannabis Laws) : கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இந்தியாவில் இந்தச் செடி தொடர்பான பொதுவான குழப்பத்தை தெளிவுபடுத்தியது: கஞ்சாவின் சில பாகங்கள் தொழில்நுட்ப ரீதியாக 'போதைப் பொருள்' (narcotic drug) என்ற வரையறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், செடியை வளர்க்கும் செயல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கஞ்சா சட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன: அதன்படி, நவம்பர் 4 அன்று கேரள உயர் நீதிமன்றம், கஞ்சா வளர்த்ததற்காக ஒருவருக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. வாடகை வீட்டின் மொட்டை மாடியில் தொட்டிகளில் ஐந்து கஞ்சா செடிகளுடன் கலால் அதிகாரிகளால் மனுதாரர் பிடிபட்டார். அவர் ஒரு புதிய தற்காப்பு வாதத்தை முன்வைத்தார் – அந்தச் செடிகளில் இன்னும் "பூக்கும் அல்லது காய்க்கும் நுனிகள்" (flowering or fruiting tops) உருவாகவில்லை என்று வாதிட்டார். சட்டத்தின்படி, பூக்கும் நுனிகள் மட்டுமே "கஞ்சா" (ganja) என்று கருதப்படுவதாக அவர் கூறினார். எனவே, அந்த மொட்டுகள் இல்லாத செடி சட்ட விரதோமானதாக கருத்தப்படக்கூடாது என்று வாதிட்டார்.
சி.எஸ். டயஸ் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு இந்த வாதத்தை நிராகரித்தது. 1985ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டம் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)), "கஞ்சா செடிக்கும்" (cannabis plant) "கஞ்சா" (ganja) என்ற தயாரிப்புக்கும் இடையே தெளிவான வரையறையை வைத்துள்ளதாக நீதிமன்றம் கூறியது. கஞ்சா அதன் பூக்கும் நுனிகளால் வரையறுக்கப்பட்டாலும், சட்டம் தனியாகவும் வெளிப்படையாகவும் கஞ்சா இனத்தைச் சேர்ந்த எந்தச் செடியின் வளர்ப்பையும் தடை செய்கிறது.
இந்தியாவில், இந்தச் செடி தொடர்பான பொதுவான குழப்பத்தை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது: கஞ்சாவின் சில பாகங்கள் தொழில்நுட்ப ரீதியாக "போதைப்பொருள்" (narcotic drug) என்ற வரையறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், செடியை வளர்க்கும் செயல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய சட்டத்தின் கீழ் 'கஞ்சா' என்றால் என்ன?
1985ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டம் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)) இயற்றப்பட்டது. சர்வதேச அழுத்தம் குறிப்பாக, அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சட்டத்தை இயற்றியது. இந்திய கலாச்சாரத்தில் எப்போதும் ஒரு பகுதியாக இருந்த ஒரு பொருளை குற்றமாக்குவதற்கு (criminalise) எதிரான வாதங்கள் இருந்தாலும், சட்டம் செடியின் அனைத்து பாகங்களுக்கும் முழுமையான தடையை விதிக்கவில்லை.
போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 2(iii), "கஞ்சா (சணல்)" (cannabis - hemp) என்பது சரஸ் (charas), கஞ்சா (ganja) மற்றும் இவை இரண்டிலிருந்தும் தயாரிக்கப்படும் எந்த கலவை அல்லது பானத்தையும் குறிக்கும் என்று வரையறுக்கிறது. சரஸ் (charas) என்பது கஞ்சா செடியிலிருந்து பெறப்பட்ட "பிரிக்கப்பட்ட பிசின், எந்த வடிவிலும்" – ஹாஷிஷ் எண்ணெய் (hashish oil) உள்பட என வரையறுக்கப்படுகிறது. கஞ்சா என்பது "கஞ்சா செடியின் பூக்கும் அல்லது காய்க்கும் மொட்டுகள்" (flowering or fruiting tops) என்று வரையறுக்கிறது. இருப்பினும், இந்த வரையறையில் “மொட்டுகள் இல்லாத போது செடியின் விதைகள் மற்றும் இலைகள்” சட்டத்திற்குள் வரவில்லை.
பாங் (Bhang) சட்ட இடைவெளி
இலைகள் மற்றும் விதைகளின் இந்த விலக்கு தான் பாங் (Bhang)-கான சட்டப்பூர்வ இடத்தை உருவாக்குகிறது – இது கஞ்சா செடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் உண்ணக்கூடிய தயாரிப்பு ஆகும். இது பெரும்பாலும் ஹோலி மற்றும் மகா சிவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது உட்கொள்ளப்படுகிறது.
போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)) சட்டம் இலைகளை "கஞ்சா" என வகைப்படுத்தாததால், பாங் "போதைப்பொருள்" (narcotic drug) அல்லது "மனம்பாதிக்கும் பொருள்" (psychotropic substance) என்ற வரையறைக்குள் வருவதில்லை. எனவே, கஞ்சாவின் உற்பத்தி, வைத்திருத்தல், விற்பனை, வாங்குதல் மற்றும் பயன்பாடு சட்டத்தின்கீழ் குற்றமாக இருந்தாலும், பாங் இந்த சட்டத்திற்குள் வரவில்லை.
ஆனால் இதன் அர்த்தம் பாங் ஒழுங்குபடுத்தப்படாதது என்று அல்ல. போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டம் தொடர்பான தேசிய கொள்கை (National Policy on NDPS), பாங் உற்பத்தி சட்டத்தால் உள்ளடக்கப்படவில்லை என்றாலும், அது மாநில சட்டங்களுக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்துகிறது. தொழில்துறை நோக்கங்களுக்காக அல்லது நார் மற்றும் விதைகளைப் பெறுவதற்காக கஞ்சா செடிகளின் சாகுபடி மற்றும் உற்பத்தி, வைத்திருத்தல், நுகர்வு மற்றும் போக்குவரத்தை அனுமதிக்கவும் ஒழுங்குபடுத்தவும் மாநில அரசுகளுக்கு சட்டம் அனுமதி அளிக்கிறது.
இதன் விளைவாக, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பாங் விற்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்குகின்றன. அசாம் போன்ற மற்ற மாநிலங்கள், உள்ளூர் சட்டங்களின்கீழ் அதை முழுவதுமாக தடை செய்துள்ளன.
வீட்டில் ஏன் கஞ்சா வளர்க்க முடியாது?
கஞ்சா இலைகள் போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)) சட்டத்தால் உள்ளடக்கப்படவில்லை என்றால், அவற்றை அறுவடை செய்ய ஒருவர் ஏன் செடி வளர்க்க முடியாது? கடந்த வார கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
சட்டத்தின் பிரிவு 8(b), மருத்துவ அல்லது அறிவியல் நோக்கங்களுக்காகவும், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையிலும் தவிர, எந்த கஞ்சா செடியின் சாகுபடியையும் தடை செய்கிறது. சட்டத்தின் பிரிவு 2(iv)-ல் "கஞ்சா செடி" (cannabis plant) என்பது "கஞ்சா இனத்தைச் சேர்ந்த எந்தச் செடியும்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது.
சட்டத்தில், பூக்கள் உள்ள செடியும் பூக்கள் இல்லாத செடிக்கும் இடையில் என்று எந்த வேறுபாடும் காட்டப்படவில்லை – குற்றம் செடியை “வளர்ப்பது” (cultivation) என்பதில் உள்ளது. தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது அல்ல. இது, பொதுவாக விவசாயத்தைக் குறிக்கிறது என்ற மனுதாரரின் வாதமும் நிராகரிக்கப்பட்டது. "வளர்ப்பு" என்பது ஒரு வயலிலோ அல்லது பூந்தொட்டியிலோ ஒரு செடியை வளர்ப்பது அல்லது தோட்டக்கலை செய்வதை உள்ளடக்கியது என்பதை நிறுவ நீதிமன்றம் சட்ட அகராதிகளைப் பயன்படுத்தி விளக்கியது.
சுருக்கமாக, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடையில் பாங்-கை சட்டப்பூர்வமாக வாங்கலாம். ஆனால், அந்த இலைகளை உற்பத்தி செய்யும் செடியை வளர்ப்பது குற்றமாகும்.
தண்டனை மற்றும் அளவு
சட்டத்தின் கீழ் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்கான தண்டனை, சம்பந்தப்பட்ட போதைப்பொருளின் அளவின் அடிப்படையில் "சிறிய" மற்றும் "வணிக" என மதிப்பிடப்படுகிறது.
கஞ்சாவிற்கு, "சிறிய அளவு" 1 கிலோ வரை என்ற அளவு உள்ளது. charas-க்கு, இது 100 கிராம் என்ற அளவு உள்ளது. சிறிய அளவுடன் பிடிபடுவது ஒரு வருடம் வரை கடுமையான சிறைத்தண்டனை ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டிற்கும் வழிவகுக்கும்.
கஞ்சாவிற்கு "வணிக அளவு" (commercial quantity), குறைந்தது 20 கிலோவிற்கு மேல் என்ற அளவு உள்ளது; charas-க்கு, இது 1 கிலோ அல்லது அதற்கு கிலோவிற்கு மேல் என்ற அளவு உள்ளது. இதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை மற்றும் ரூ 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
சிறிய மற்றும் வணிக அளவுகளுக்கு இடையில் உள்ள அளவை உள்ளடக்கிய எந்தவொரு குற்றத்திற்கும், தண்டனை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ 1 லட்சம் அபராதம் வரை நீட்டிக்கப்படலாம்.
கேரள வழக்கில் உள்ளதைப் போல் செடியை வளர்ப்பது – 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
தொழில்துறை மற்றும் மருத்துவ விதிவிலக்குகள்
அதன் கடுமையான தடை இருந்தபோதிலும், சட்டம் சட்டப்பூர்வ சாகுபடிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. சட்டத்தின் பிரிவு 14, தோட்டக்கலை (horticultural) மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக மட்டுமே கஞ்சாவின் சாகுபடியை அனுமதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக நார் அல்லது விதையைப் பெறுவதற்கு, அல்லது மருத்துவ பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கிறது.
இந்த விதி உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் தொழில்துறை சணல் (industrial hemp) சாகுபடியை சட்டப்பூர்வமாக்க அனுமதித்துள்ளது இது கஞ்சா செடியின் ஒரு வகை ஆகும், ஆனால் அதில் போதை ஏற்படுத்தும் டெட்ராஹைட்ரோகேனாபினால் (Tetrahydrocannabinol) என்ற ரசாயனத்தின் அளவு மிகக் குறைவாக (பொதுவாக 0.3%-க்கும் கீழே) உள்ளது. எனவே, இது “போதை” தராது. 2018-ஆம் ஆண்டில், உத்தரகாண்ட் சணல் சாகுபடிக்கு உரிமம் வழங்கிய முதல் மாநிலமாக மாறியது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
மத்திய அரசாங்கம் மருத்துவ ஆராய்ச்சிக்காக கஞ்சா வளர்ப்பதற்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research) போன்ற அறிவியல் அமைப்புகளுக்கும் உரிமம் வழங்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் மருத்துவ கஞ்சா மருத்துவமனை பெங்களூரில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட, நோய்களுக்கு கஞ்சா அடிப்படையிலான (cannabis-based) மருந்துகளை பரிந்துரைக்கிறது.
2019-ஆம் ஆண்டு முதல், கஞ்சா மீதான தடையை எதிர்த்து, Great Legalisation Movement India Trust என்ற வழக்கறிஞர் குழுவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கட்டுப்பாடுகள் அறிவியல் பூர்வமானவை அல்ல என்றும் தன்னிச்சையானவை என்ற வாதத்தை முன் வைக்கிறது.
Original Article: Why growing a cannabis plant in your balcony is a crime, but buying bhang isn’t.