மிகக் குறைவு, மிகத் தாமதம் : டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள்-2025 குறித்து . . .

 டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள் (Digital Personal Data Protection Rules) தகவல் உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.


இந்திய உச்சநீதிமன்றம் தனியுரிமையை ஒரு அடிப்படை உரிமையாகக் கருதி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கான மூன்று வெவ்வேறு வரைவுகளை அரசாங்கம் வெளியிட்டது. இருப்பினும், சட்டத்தின் இறுதி வரையறைகளை எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றிய தெளிவு போதுமானதாக இல்லை. 2023 சட்டம் 2018 வரைவை எளிமைப்படுத்தியது. இது பயனர் தரவுகளுக்கான சில முக்கியமான பாதுகாப்புகளையும் சேர்த்தது. ஆனால், இது இந்தியர்களின் தரவைக் கையாள அரசாங்க நிறுவனங்களுக்கு பரந்த உரிமையை வழங்குவதற்கும், இந்திய தரவு பாதுகாப்பு வாரியத்தை (Data Protection Board of India (DPBI)) நடைமுறைப்படுத்துவதற்கும், தகவல் உரிமை (Right to Information (RTI)) சட்டம்-2005-ஐ கடுமையாகத் திருத்துவதை (cruelly amending) மேற்கொண்டது. இது கடந்த இருபதாண்டுகளாக இந்தியா அடைந்த வெளிப்படைத்தன்மையில் பல முக்கிய ஆதாயங்களை மாற்றியமைத்தன. நவம்பர் 14, 2025 அன்று அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள்-2025, அதன் தாய்ச் சட்டத்தால் ஏற்படும் கடுமையான இடைவெளிகளையும் சேதங்களையும் சரிசெய்ய அவை குறைவாகவே செயல்படுகின்றன. உண்மையில், அவர்கள் அனைத்து முக்கியமான பாதுகாப்புகளையும் 2027 வரை செயல்படுத்துவதை தாமதப்படுத்துகின்றன. அதேநேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உடனடியாக பலவீனப்படுத்துவதை அமல்படுத்துகின்றன. பொதுத் தகவல் அதிகாரிகள் இப்போது வேறொரு சட்டம் ஏற்கனவே அந்தத் தகவலை வெளியிட வேண்டும் என்று கோரினால் தவிர, தனிப்பட்ட தகவலுக்கான எந்தவொரு கோரிக்கையையும் இப்போது நிராகரிக்க அதிகாரம் பெற்றுள்ளனர். இதன் பொருள் குடிமக்கள் மிகக் குறைந்த அளவிலான தகவல்களை மட்டுமே அணுக முடியும். இது மக்களுக்கான பொறுப்புணர்வுக்கு தீங்கு விளைவிக்கும். ஏற்கனவே தாமதமாகிவிட்ட வரைவு விதிகளுக்கான மூன்று மாத ஆலோசனைக் காலத்தையும் அரசாங்கம் நீட்டித்தது. பின்னர், பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதே நாளில் இறுதி விதிகளை வெளியிட்டது. 


ஜனவரி மாதத்தில் வரைவு விதிகள் வெளியிடப்பட்டபோது இந்த நிலையை அடைவதில் ஏற்பட்ட தாமதங்கள் துரதிர்ஷ்டவசமானவை. இப்போது அவை மன்னிக்க முடியாதவை. விதிகளின் இறுதி வடிவத்தில் சிறிதளவு மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், 12–18 மாத இணக்க காலக்கெடுவும் ஒரு பிரச்சனையாகும். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட இந்த கட்டமைப்பைப் பற்றி நீண்டகாலமாக அறிந்திருக்கின்றன. இருப்பினும் இதற்கான காலவரிசை இன்னும் தெளிவான நம்பிக்கையைக் காட்டவில்லை. இந்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள நிறுவன கட்டமைப்பும் சுதந்திரமற்ற நிலையில், இது ஒரு தீவிர கவலையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, இந்திய தரவு பாதுகாப்பு வாரியம் (DPBI) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும். இதன் பொருள், அரசாங்க அமைப்பு கூகிள், அமேசான் மற்றும் மெட்டா போன்ற பெரிய உலகளாவிய தரவு-மிகவும் அதிகமான நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறது. இந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் இந்தியர்களின் தரவை தவறாகக் கையாண்டால், அவற்றை விசாரிக்கும் அமைப்பையும் அதே அமைப்பு மேற்பார்வையிடும். இந்தியர்களின் தரவைக் கையாளும் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட விதிகளில் அதிருப்தி அடைய எந்த காரணமும் இல்லை. இந்த விதிகளின் வரையறுக்கப்பட்ட இலக்குகளை முழுமையாக செயல்படுத்த அவர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாகும். ஆனால், சட்டம் மற்றும் விதிகளின் பெயரில் உள்ள முக்கிய நோக்கத்தைத் தேடும் சாதாரண குடிமக்கள் — அதாவது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தனியுரிமையும் பொறுப்புக்கூறலும் பெறுதல் (அவற்றுடன் தனிப்பட்ட தரவுகளைப் பகிர்வது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத மறைமுகக் கட்டாயமாகிவிட்டது) — இப்போது தங்கள் நிலைமை முன்பு போலவே பெரும்பாலும் தொடர்வதைக் காண்பார்கள்: அரசுக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் திறந்த புத்தகங்களைப் போல இருப்பது, மறுபக்கத்தில் உள்ளவை அனைத்தையும் மறைக்கும் ஒருபக்கக் கண்ணாடியின் (one-way mirror) பிரதிபலிக்கும் பக்கத்தில் நிற்பது.


Share: