UDGAM மட்டுமே உரிமைக் கோரப்படாத வங்கி வைப்புத்தொகை பிரச்சனையைத் தீர்க்க முடியாது -தலையங்கம்

 நாடு முழுவதும் உள்ள வங்கிக் கணக்குகளுக்குத் தங்கள் நியமினிகளை (nominees) புதுப்பிப்பது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


யாரும் உரிமை கோராத பணம் வங்கிகளிடம் உள்ளது. இந்தப் பணத்தை வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கே திருப்பி செலுத்துவதற்கு வங்கிகள் மூலம் அணுக அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டணர். இதில், 2023 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகம் ஒரு பெரிய முயற்சியை மேற்கொண்டது. வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத முதல் 100 கணக்குகளில் இருந்து 100 நாட்களுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுவரை, 1,432 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டது. ஆனால், இதன் பிரச்சனை இன்னும் பெரியதாக உள்ளது. எவ்வாறாயினும், மார்ச் 2023 நிலவரப்படி, வங்கிகளில் யாரும் உரிமை கோராத ₹42,272 கோடி பணம் இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகமாகும். எனவே, இந்திய ரிசர்வ் வங்கி உரிமை கோரப்படாத வைப்பு தகவல்களை அணுகுவதற்கான நுழைவாயில் (Unclaimed Deposits - Gateway to Access inforMation(UDGAM)) என்ற புதிய வலைத்தளத்தைத் தொடங்குகிறது என்பது நல்ல செய்திதான். அதே நேரத்தில், இந்த இணையதளத்தில், வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு (Depositor Education and Awareness (DEA)) நிதியில் உரிமை கோரப்படாத பணம் ஏதேனும் உள்ளதா என்று கணக்கு வைப்பாளர் (depositors) பார்க்கலாம். பின்னர், அவர்கள் தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு வங்கியிடம் கேட்கலாம்.


உரிமை கோரப்படாத வைப்பு தகவல்களை அணுகுவதற்கான நுழைவாயில் (UDGAM) முன்முயற்சி ஒரு படி முன்னோக்கி உள்ளது. ஆனால், அது முழு பிரச்சினையையும் தீர்க்காது. வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (Depositor Education and Awareness (DEA) Fund ) 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள் மட்டுமே அடங்கும். வங்கிக் கணக்குகளில் 'செயல்படாத' (inoperative) பணம் அதிகமாக உள்ளது. இவை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கணக்குகளாக உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கிகளும் இந்த பணத்தை கல்வி மற்றும் விழிப்புணர்வு  நிதிக்கு மாற்றுவதற்கு முன்பு கணக்கு வைப்பாளர் (depositors) அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு உரிமை கோர உதவ வேண்டும். இல்லையெனில், பெரும்பாலும் கணக்குகள் செயல்படாததாகிவிடும். ஏனெனில், வங்கி கணக்கின் வாரிசாக ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் உரிமையாளர் இறந்துவிடுகிறார்.


இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் கிளை வங்கிகள் நாடு முழுவதும் விழிப்புணர்வை தொடங்க வேண்டும். இது டீமேட் கணக்கு (demat accounts) நியமனங்கள் குறித்த செபியின் (SEBI) பிரச்சாரத்தைப் போலவே, வங்கிக் கணக்குகளில் நியமினிகளை (nominees) புதுப்பிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். நியமினிகள் இல்லை என்றால், இறந்த கணக்கு வைத்திருப்பவர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அனுப்புவதற்கான நடைமுறை எளிமையாக்கப்பட வேண்டும். தற்போது, பயனாளிகளுக்கு சட்டப்பூர்வ வாரிசு அல்லது வாரிசு சான்றிதழ்கள் இருந்தாலும், பிணைய கையொப்பங்கள் மற்றும் நோட்டரி செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் (notarised affidavits) தேவைப்படும் வெவ்வேறு நடைமுறைகள் வங்கிகளில் உள்ளன. பயனாளிகள் புதிய இடங்களுக்குச் செல்வதாலும், பழைய வங்கிக் கணக்குகளை மூட மறப்பதாலும் பல செயலற்ற கணக்குகள் நடக்கின்றன. இதனால், வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகளை கிளைகளுக்கு இடையே எளிதாக மாற்ற அனுமதித்தால், இந்த சிக்கலை சரிசெய்ய முடியும். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி  “சொந்த கிளை” (home branch) என்ற எண்ணத்திலிருந்து வங்கிகள் விடுபட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும், பயனாளிகள் தங்கள் வங்கி நடைமுறைகளில் சிலவற்றை மாற்ற ஊக்குவிக்க வேண்டும். சில தனிநபர்கள் வரிகளைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு கணக்குகளில் பணத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால், வரிமானத் துறை அவர்களின் அனைத்து கணக்குகளையும் பான் (PAN) எண்களைப் பயன்படுத்தி கண்காணிக்க முடியும்.


உரிமை கோரப்படாத கணக்குகளின் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பது எல்லா இந்தியர்களுக்கும் மின்னணு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தொடங்க வேண்டும். ஜன் தன் யோஜனா திட்டத்தின் (Jan Dhan Yojana) வெற்றிக்குப் பிறகு இந்த நிலைமை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வங்கிக் கணக்குகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, மின்னணு முறைகள் தனிப்பட்ட சேவைகளுடன் இணைந்து பயன்படுத்தப்பட வேண்டும். இந்த சேவைகள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது பயனாளிகள் உரிமை கோரப்படாத பணத்தைப் பற்றி கண்டுபிடித்து அதற்கான உரிமைக் கோரல்களை தாக்கல் செய்ய அனுமதிக்கும்.




Original article:

Share:

உணவு பணவீக்கமானது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன் தேர்வுகளை கட்டுப்படுத்துகிறது - தலையங்கம்

 பணவீக்க விகிதம் மாறாமல் உள்ளது என்பது பணவியல் கொள்கைக் குழுவின் (MPC) நிலைப்பாடு சீராக இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.


பிப்ரவரி மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டால் (Consumer Price Index (CPI)) அளவிடப்படும் சில்லறை பணவீக்கம் 5.1% ஆக இருந்தது. பணவீக்கத்தின் முறை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உணவு மற்றும் எரிபொருளை தவிர்த்த முக்கிய பணவீக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், உணவு பணவீக்கம் அதிகமாக உள்ளது, ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கை விட அதிகமாக உள்ளது. பிப்ரவரியில் அடிப்படை பணவீக்கம் 3.4% ஆகவும், உணவுப் பணவீக்கம் 8.7% ஆகவும் இருந்தது. குறிப்பாக, இறைச்சி மற்றும் காய்கறிகளின் விலைகள் வேகமான வளர்ச்சியின் காரணமாக ஜனவரி முதல் பிப்ரவரி வரை உணவுப் பொருட்களின் விலைகள் சற்று அதிகரித்தன.


இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% ஐ அடைய உணவுப் பணவீக்கம் குறையுமா என்பது பெரும்பாலும் காலநிலை நிலைமைகளைப் பொறுத்தது. உணவுச் சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நரேந்திர மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, ஆனால் இந்தத் தலையீடுகள் உணவுப் பொருட்களின் விலைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பணக் கொள்கை மட்டுமே குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழல் இந்தியப் பொருளாதாரத்தில் மேலும் வலுப்பெறும் ஒரு கொள்கை சவாலை முன்வைக்கிறது. உணவுக் கூடையின் விகிதத்தைக் குறைப்பது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கும்.


இந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பணவீக்க விகிதம் மாறவில்லை என்பது  நிதிக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee (MPC)) அணுகுமுறை அப்படியே இருக்கும் என்பதைக் குறிக்கிறது. சில நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர்கள் செலவு மற்றும் முதலீடு மீதான உயர் உண்மையான வட்டி விகிதங்களின் எதிர்மறையான விளைவுகளை விவாதித்திருந்தாலும், டிசம்பர் காலாண்டில் வலுவான பொருளாதார வளர்ச்சி நிதிக் கொள்கைக் குழுவிற்க்கான இந்த கவலைகளை தற்காலிகமாக குறைத்திருக்கலாம்.




Original article:

Share:

உலகின் 'முதல் முழு தன்னாட்சி பெற்ற' செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளரான Devin செயற்கை நுண்ணறிவைச் சந்திக்கவும் -பிஜின் ஜோஸ்

 கணினி நிரல் எழுதுதல் (coding), பிழைத்திருத்தம் (debugging), சிக்கலைத் தீர்ப்பது (problem-solving) உள்ளிட்ட மென்பொருள் மேம்பாட்டில் டெவின் (Devin)  செயற்கை நுண்ணறிவு  மென்பொருள் பொறியாளர் சில மேம்பட்ட திறன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே குறிப்பிட்டுள்ளது.


உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளரை (AI software engineer) அமெரிக்காவை தளமாகக் கொண்ட பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு ஆய்வகமான Applied AI lab, Cognition உருவாக்கியுள்ளது. டெவின் (Devin) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு, சிறந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களால் நடத்தப்பட்ட பொறியியல் நேர்காணல்களில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது. கூடுதலாக,  Cognition கூறியபடி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பகுதி நேர பணியாளர் தளமான (freelancing platform), Upwork இல் குறிப்பிடப்பட்ட உண்மையான பணிகளை டெவின் (Devin) முடித்துவிட்டது.


Cognition நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்ட பதிவின்படி, "டெவின் (Devin) ஒரு கடின உழைப்பாளி மற்றும் திறமையான குழு உறுப்பினர். மேலும், டெவின் உங்களுடன் வேலை செய்யத் தயாராக உள்ளது அல்லது நீங்கள் சரிபார்க்க வேண்டிய பணிகளை இவற்றின் மூலம் தானாகவே முடிக்க முடியும். மேலும், டெவின் உதவியுடன், பொறியாளர்கள் இன்னும் சுவாரஸ்யமான சவால்களை சமாளிக்க முடியும். இதன் மூலம், பொறியியல் குழுக்கள் பெரிய இலக்குகளை இலக்காகக் கொள்ளலாம்” என்றும் கூறுகிறது.


டெவின் (Devin) என்ன செய்ய முடியும்?


செயற்கை நுண்ணறிவின் முகவர் டெவின், கணினி நிரல் எழுதுதல் (coding), பிழைத்திருத்தம் (debugging), சிக்கலைத் தீர்ப்பது (problem-solving) உள்ளிட்ட மென்பொருள் மேம்பாட்டில் சில மேம்பட்ட திறன்களுடன் வருகிறது. டெவின், அதன் பணிகளில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கும் புதிய சவால்களுக்கு ஏற்ப, இந்த டெவின் அதன் செயல்திறனைத் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும் பயன்படுத்துகிறது. எளிமையான சொற்களில், டெவின் (Devin) தொடக்கத்திலிருந்து இறுதி வரை பயன்பாடுகளை உருவாக்கலாம் மற்றும் தொடங்கலாம். கூடுதலாக, இது அதன் சொந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை கற்பிக்கவும் சரிசெய்யவும் முடியும்.


ஆயிரக்கணக்கான முடிவுகளை எடுப்பதை உள்ளடக்கிய சிக்கலான பொறியியல் பணிகளை டெவின் சுலபமாக கையாள முடியும். நீண்ட கால பகுத்தறிவு மற்றும் திட்டமிடலில் அறிவாற்றலின் முன்னேற்றம் காரணமாக இது சாத்தியமாகிறது. டெவின், ஒவ்வொரு முக்கியமான விவரங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும், காலப்போக்கில் தானாகவே கற்றுக்கொள்ளவும் மற்றும் அதன் பிழைகளை சரிசெய்யவும் டெவினால் முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.


கூடுதலாக, செயற்கை நுண்ணறிவு மென்பொருள், வடிவமைத்த பொறியாளர் பயனருடன் ஒத்துழைக்க முடியும். இது நிகழ்நேரத்தில், அதன் முன்னேற்றத்தைப் பற்றி பயனரைப் புதுப்பிக்கலாம், கருத்துக்களைப் பெறலாம் மற்றும் தேவைப்படும்போது வடிவமைப்புக்கு உதவலாம். 


GitHub இலிருந்து நிஜ உலக மென்பொருள் சிக்கல்களில் (real-world software issues) செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மதிப்பிடும் SWE-Bench அடிப்படை மதிப்பெண்ணைப் பயன்படுத்தி சோதனைகளில், டெவின் 13.86% சிக்கல்களை தானாகவே தீர்த்துள்ளது. முந்தைய சிறந்த மாதிரியை விட இது மிகவும் சிறப்பானது. இது, எந்தவொரு உதவி இல்லாமல் 1.96% சிக்கல்களையும், உதவியுடன் 4.80% சிக்கல்களையும் தீர்த்தது.


டெவின் செயற்கை நுண்ணறிவானது (Devin AI), பணிகளை விரைவாகவும் எளிதாகவும் செய்வதன் மூலம் மென்பொருள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் மேம்படுத்த முடியும். மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகளைத் தானியக்கமாக்குதல், விரைவாகக் குறியீட்டை உருவாக்குதல், திட்டங்களை விரைவாக முடிக்கச் செய்தல் மற்றும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.


டெவின் செயற்கை நுண்ணறிவின் (Devin AI) முக்கிய அம்சம் மனித நிரல் எழுதுவோருக்கு பொதுவான ஏற்படும் பிழைகள் மற்றும் முரண்பாடுகளை பெருமளவு குறைப்பது ஆகும். இதன் பொருள், செயற்கை நுண்ணறிவு முகவர் நிரல் எழுதும் நடைமுறைகளில் துல்லியம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இதன் மூலம், சிறந்த தரமான மென்பொருள் த யாரிப்புகளை உருவாக்க முடியும்.


இருப்பினும், Devin செயற்கை நுண்ணறிவுக்குப் பின்னால் உள்ள நிறுவனம் Devin ஐ இயக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரி (AI model) அல்லது அதன் தொழில்நுட்ப பிரத்தியேகங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த நிரலாக்கத்திற்கு உதவும் பிற செயற்கை நுண்ணறிவு கருவிகளில் OpenAI Codex, GitHub Copilot, Polycoder, CodeT5 மற்றும் Tabnine ஆகியவை அடங்கும்.


நிறுவனம், டெவினின் திறன்களை விரிவுபடுத்தியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளர், சிக்கலான தேவைகள் அல்லது மனித உள்ளுணர்வு மற்றும் படைப்பாற்றலை நம்பியிருக்கும் நிகழ்வுகளுடன் போராடக்கூடும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், டெவின் போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளால் மக்கள் வேலை இழக்க வழிவகுக்கும் என்ற கவலைகள் உள்ளன. ஆனால், செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து செயல்பட ஒரு புதிய வழியை வழங்குவதன் மூலம் டெவின் மென்பொருள் பொறியாளர்களுக்கு உதவ முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள்.


டெவினை உருவாக்கிய Cognition நிறுவனம், ஸ்காட் வூ (Scott Wu) தலைமையில் உள்ளது. Cognition தன்னை பகுத்தறிவில் கவனம் செலுத்தும் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் என்று விவரிக்கிறது. தற்போதைய செயற்கை நுண்ணறிவு கருவிகளை விட சிறந்த செயற்கை நுண்ணறிவு குழு உறுப்பினர்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. "டெவினை உருவாக்குவது ஒரு ஆரம்பம் - எங்கள் மிகப்பெரிய சவால்கள் இன்னும் வெளிவர உள்ளன." டெவின் விரைவில் பொறியியல் திட்டங்களுக்கு பணியமர்த்தப்படும். ஆனால், நிறுவனங்கள் இப்போதைக்கு காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.


பிஜின் ஜோஸ், புது தில்லியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share:

மனித-விலங்கு மோதலை 'அவசரநிலையாக’ அறிவித்ததில் கேரள அரசின் தவறு என்ன ? -சூசன் ஹரிஸ்

 காடுகளில் மனித விலங்கு மோதல்களைக் குறைக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் (Special vigilance committees) மற்றும் விரைவான பதிலளிப்புக் குழுக்கள் (rapid response teams (RRTs)) அமைப்பது நல்ல யோசனை. ஆனால் விலங்குகளை கொல்வது போன்ற  விருப்பங்களுடன் நாம் அவற்றை மாற்றக்கூடாது.


கேரள அமைச்சரவை சமீபத்தில் மனித-விலங்கு மோதலை ஒரு மாநிலம் சார்ந்த பேரழிவாக (state-specific disaster) அறிவித்தது. இதன் பொருள் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Kerala State Disaster Management Authority (SDMA)) இந்த மோதல்களை நிர்வகிக்கவும் நிதி உதவிகளை விரைவாக வழங்கவும் உதவும். கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற பேரழிவுகளில் கடலோர அரிப்பு (coastal erosion), வலுவான காற்று (strong winds), மின்னல் (lightning), குழாய் வடிவிலான நிலச்சரிவு (soil piping) மற்றும் வெப்பத்தாக்கம் (sunstroke) ஆகியவை அடங்கும்.


வெவ்வேறு அதிகாரிகளின் பொறுப்புகளைப் பற்றி நமக்கு போதுமான அளவு தெரியவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு மட்டங்களில் பல குழுக்களை உருவாக்கும். முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் காடுகள், வனவிலங்குகள், வருவாய், உள்ளூர் சுயாட்சி மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மேம்பாட்டு அமைச்சர்கள் இருப்பார்கள். மேலும், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் உட்பட மேலும் 3 குழுக்கள் அமைக்கப்படும்.


"மனித-விலங்கு மோதல்" (human-animal conflict) என்ற சொல் உள்ளூர் பகுதிகளில் நடக்கும் குறிப்பிட்ட சம்பவங்களைக் குறிக்கிறது. உதாரணமாக, கேரளாவின் வயநாட்டில் அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலைப் பற்றி நாம் பேசும்போது, மிகவும் உள்ளூர் மட்டங்களில் நிகழும் குறிப்பிட்ட மோதலைப் பற்றி பேசுகிறோம்.


இது போன்ற குழுக்கள் எப்போதும் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சவால்களைக் கருத்தில் கொள்வதில்லை. உள்ளூர் நிலப்பரப்பு, காடுகளுக்கு அருகாமை மற்றும் விலங்குகளுக்கு நீர் அல்லது உணவு கிடைப்பது போன்ற காரணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்த காரணிகள் மனிதர்களை பாதிக்கின்றன, நடுத்தர வர்க்க நகரவாசிகளுடன் ஒப்பிடும்போது ஏழை விவசாயிகள் பெரும்பாலும் அதிக ஆபத்தில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வயநாடு போன்ற இடங்களில், பல உள்ளூர்வாசிகள் இரவில் வெளியே செல்ல பயப்படுகிறார்கள். மேலும், சிலர் விவசாயத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.  மோதல்களுக்கு விலங்குகளைக் குற்றம் சாட்டுவது எளிது என்றாலும், சுற்றுச்சூழல் சுற்றுலா, முறைகேடான கட்டுமானம் மற்றும் சட்ட விரோத குவாரி போன்ற காரணிகள் உண்மையில் வனப்பகுதிகளை செல்வந்தர்களுக்கான பாதுகாப்பான இடங்களாக மாற்றுகின்றன. எனவே, பொதுமக்கள் மனித விலங்கு மோதலை எதிர்கொண்டு பாதிக்கப்படுகிறார்கள்.


புவியியல் நிகழ்வுகளுடன் விலங்குகள் வகைப்படுத்தப்படும் விதம் கவலைகளை எழுப்புகிறது. குறிப்பாக, மனித-விலங்கு மோதல்களை ஆராயும்போது. விரிவான உள்ளூர் மதிப்பீடுகள் பெரும்பாலும் இத்தகைய அபாயகரமான சந்திப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறியும். உதாரணமாக, வயநாட்டில் வனத்துறையினரிடம் சிக்கிய புலிகள் அடிக்கடி காயம் அடைந்துள்ளது மற்றும் அவற்றின்  பல பற்களைக் காணவில்லை. அதேபோன்று அண்மையில் இடம்பெற்ற யானைத் தாக்குதல் சம்பவத்திலும் மனிதர்கள் யானை மீது கற்களை வீசித் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலைகளில் மனிதர்களும் பாதிக்கப்படலாம் என்ற உண்மையை இது குறைப்பதற்காக அல்ல, ஆனால் குறிப்பிட்ட தொடர்புகளின் காரணங்களைப் புரிந்துகொள்ள விலங்குகளின் நடத்தையை சூழ்நிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் ஆதரவால் அடிக்கடி தூண்டப்படும் இந்த சம்பவங்களுக்கு பொதுமக்களின் எதிர்வினை "நிரந்தர தீர்வுக்கு" அழைப்பு விடுக்கிறது. இது விலங்குகளை  கூண்டில் அடைத்தல், மற்ற வனப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்தல் அல்லது சம்பந்தப்பட்ட விலங்குகளைச் சுட்டுகொள்ளுதல் போன்ற செயல்களை நோக்கிச் செல்கிறது. இருப்பினும், பல சமயங்களில், தலைமை வனவிலங்கு காப்பாளர் (chief wildlife warden) மற்றும் மாவட்ட வன அதிகாரி (district forest officer (DFO)) தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கிறார்கள். இது விலங்குகள் மனிதர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நடமாடினாலும் அவற்றை சுடுவதற்கு எதிராக வாதிடுகிறது.


இருப்பினும், அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய இது போன்ற குழுக்கள், விலங்குகளை விட மனித நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க முனைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட காட்கில் அறிக்கையை (Gadgil report) பலவீனப்படுத்திய உம்மன் வி உம்மன் அறிக்கை (Oommen V Oommen report) போன்ற அறிக்கைகளுடன் இதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். கேரளாவில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மனித-விலங்கு மோதல் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறி வருகிறது. ஒவ்வொரு காட்டு விலங்கும் சாத்தியமான அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது. இது விலங்குகளைக் கொல்வதால் மட்டுமே மனித பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி என்ற நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. ஆனால் விலங்குகளுக்காக யார் பேசுகிறார்கள்? நமக்கு வசதியாக இருக்கும் போது மட்டும் வனவிலங்கு பாதுகாப்பில் ஈடுபடுவோமா?


வனவிலங்கு மோதலைக் குறைப்பதற்காக காடுகளுக்குள் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முன்மொழிவு இந்த பிரகடனத்தில் அடங்கும்.  விலங்குகள் பெரும்பாலும் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மனித குடியிருப்புக்குள் நுழைவதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், இந்த செயற்கை நீர் ஆதாரங்களை உருவாக்கும் முறையின் விரிவான திட்டம் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஒரு ஆசிய யானை ஒரு நாளைக்கு 200 லிட்டர் தண்ணீர் வரை உட்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. காலனித்துவ கால மரத்தோட்டங்கள் மற்றும் "மஞ்சா கொன்னா" (senna spectabilis) போன்ற ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் இந்த சவால் அதிகரிக்கிறது. அவை இயற்கையான வாழ்விடத்தை மாற்றியமைத்துள்ளன மற்றும் வனவிலங்குகளுக்கு உனவளிக்க முடியாதவை. சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதில் நாம் பணிபுரியும் போது, ​​நாம் உருவாக்கும் எந்தவொரு புதிய நீர்நிலைகளும் மோதல்களைக் குறைப்பதிலும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.


விலங்குகளிடம் சகிப்புத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு வழியாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரைவான இழப்பீட்டை வலியுறுத்தி, விரைவான நெருக்கடியைத் தீர்ப்பதை இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு குழுக்களை நிறுவுதல், விரைவான பதிலளிப்பு குழுக்களை (rapid response teams (RRTs)) வலுப்படுத்துதல் மற்றும் வன கண்காணிப்பாளர் ரோந்துகளை அதிகரிக்கவும் இது முன்மொழிகிறது. இந்த செயலூக்கமான உள்ளூர் நடவடிக்கைகள், கொலை போன்ற தீங்கான நடைமுறைகளை நாடாமல் மோதல்களைத் தணிக்க உதவும். அனைத்து உயிரினங்களுக்கும் நீதியை ஊக்குவிக்கும் ஒரு சமநிலையை உருவாக்குவதே இதன் நோக்கம். இது, கடினமான சூழ்நிலைகளில் வரையறுக்கப்பட்ட வளங்களுடன் இணைந்து வாழ உதவுகிறது.


எழுத்தாளர் கேரளாவின் கல்பெட்டாவில் உள்ள சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான ஹியூம் மையத்துடன் (Hume Centre) இணைந்த ஆராய்ச்சியாளராக உள்ளார்.




Original article:

Share:

செயற்கை நுண்ணறிவு பற்றி அரசின் அறிவுரைகள் மற்றும் அதன் மீதான விமர்சகர்கள் எதனை சரியாக புரிந்து கொள்ளவில்லை -அனுபம் குஹா

 ஒழுங்குமுறை நிறுவப்பட்ட உரிமைகளைப் (existing rights) பின்பற்ற வேண்டும், நியாயமற்ற அல்லது நடைமுறைக்கு மாறான கொள்கைகளுக்கு வழிவகுக்கும் மிகைப்படுத்தப்பட்ட தேர்வுகளைத் தவிர்க்க வேண்டும்.


மார்ச் 1 அன்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  சைபர் சட்டம் (Cyber Law) மற்றும் தரவுஆளுமைக் குழு மூலம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. இந்த ஆலோசனை இடைத்தரகர்கள் மற்றும் தளங்களை அனுமதிக்கும் உள்ளடக்கத்தில் கவனமாக இருக்குமாறு கூறுகிறது. உள்ளடக்கத்தை நிர்வகிப்பதில் உரிய விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. உள்ளடக்கம் தகவல் தொழில் நுட்ப விதிகள் விதிகள் 2021 ஐ மீறவில்லை என்பதை உறுதி செய்வதேநோக்கமாகக் கொண்டுள்ளது. ஆலோசனை குறிப்பாக பெரிய மொழி மாதிரிகள் (Large language modules (LLMs))  மற்றும் உருவாக்கும் திறன்கொண்ட செயற்கை நுண்ணறிவு (Generative AI) உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைக் குறிப்பிடுகிறது. தகவல் தொழில்நுட்ப விதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளபடி பயனர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட இந்த தொழில்நுட்பங்கள் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.      

IT விதிகளின் விதி 3(1)(b) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது அல்லது IT சட்டத்தில் உள்ள வேறு எந்தச் சட்டங்களையும் மீறுவது போன்ற சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பகிர பயனர்களை தங்கள் AI கருவிகள் அனுமதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த Facebook மற்றும் Twitter போன்ற தளங்களை அரசாங்கம் கோரியது. இந்த அறிவுரையை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். புதிய உள்ளடக்கத்தை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மட்டுமே குறிவைக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், இது உண்மையில் அனைத்து செயற்கை நுண்ணறிவு மாதிரிகளையும் உள்ளடக்கியது. எந்த உள்ளடக்கத்தை பயனர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தும் கணினி பயன்பட்டார்களும் இதில் அடங்கும். அவை வழங்கும் உள்ளடக்கத்திற்கும் அவை பரிந்துரைக்கும் உள்ளடக்கத்திற்கும் தளங்களே பொறுப்பு என்பதை அறிவுரை தெளிவுபடுத்துகிறது.


கூடுதலாக, செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இன்னும் சோதிக்கப்படுகின்றன அல்லது நம்பகத்தன்மையற்றவை என்று கருதப்படுகின்றன. அவை பயன்படுத்துவதற்கு முன்பு அரசாங்கத்தின் வெளிப்படையான அனுமதியைப் பெற வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது. ஆலோசனையின் இந்த பகுதி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் உள்ளார்ந்த தன்மையை புறக்கணிக்கிறது. அனைத்து செயற்கை நுண்ணறிவு அமைப்புகளும், குறிப்பாக இயந்திர கற்றல் ( Machine learning (ML)) மாதிரிகள், ஓரளவு நம்பமுடியாதவை. அவை தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது அவை தவறுகளைச் செய்யலாம். இந்த அமைப்புகளின் சிக்கலானது பெரும்பாலும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை முழுமையாக தணிக்கை செய்வது அல்லது புரிந்துகொள்வது கடினம். ஆலோசனையின் படி, ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கும்  அரசாங்க ஒப்புதல் தேவைப்படும். நன்கு விவாதிக்கப்பட்ட பெரிய மொழி மாதிரிகள்(Large Language Model (LLM)) மட்டுமல்லாமல், பல்வேறு பயன்பாடுகளில் தினசரி பயன்படுத்தப்படும் பரந்த அளவிலான இயந்திர கற்றல் (machine learning) அமைப்புகள் இதில் அடங்கும்.


முதல் மற்றும் இரண்டாவது கோரிக்கைகள், மிகவும் கணிக்கக்கூடிய மற்றும் நியாயமான முறையில், செயற்கை நுண்ணறிவு தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊடகங்களில் இருந்து மிகை மற்றும் தெளிவற்ற கூக்குரல்களை எழுப்பியுள்ளன. முதல் கோரிக்கை பாதுகாப்பான துறைமுகம் என்ற கருத்தை நீக்குகிறது என்றும், இரண்டாவது கோரிக்கை நடைமுறைக்கு மாறானது மற்றும் செயல்படுத்த முடியாதது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவை  ஒழுங்குபடுத்துவது புதுமைகளைத் தடுக்கும் மற்றும் பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை அவசியம் என்று ஒரு எதிர் வாதம் உள்ளது. யார் சிறைக்குச் செல்கிறார்கள், யார் கடன் பெறுகிறார்கள் அல்லது யார் நம்பகமானவர் என்று கருதப்படுகிறார் என்பதைப் பற்றி முடிவெடுக்கும் போது, கணிதம் முறைப்படுத்தப்பட வேண்டும். இந்த முடிவுகள் சமூக-தொழில்நுட்ப அமைப்புகளை உள்ளடக்கியது. மேலும், அத்தகைய அமைப்புகளின் பயன்பாடு சமூகத்தை பாதிக்கும் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திறம்பட உருவாக்குகிறது என்பதை தொழில்துறை ஒப்புக்கொள்வது முக்கியம். இந்த முடிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தக் கொள்கைகளை நிராகரிப்பதற்கான விருப்பம் இல்லை. இந்த அமைப்புகளின் எந்த அம்சங்களுக்கு ஒழுங்குமுறை தேவை என்பதை தீர்மானிப்பது மற்றும் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான பயனுள்ள வழிகளைக் கண்டறிவது உண்மையான சவால். விவாதம் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence(AI)) கட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்பதைப் பற்றியது அல்ல, ஆனால் அதை எவ்வாறு சரியாகச் செய்வது என்பது பற்றியது.


வாதம், செயற்கை நுண்ணறிவு ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமா என்பது பற்றியது அல்ல, ஆனால் அது எவ்வாறு திறம்பட செய்யப்பட வேண்டும். "செயற்கை நுண்ணறிவு" என்ற சொல் பரந்த மற்றும் துல்லியம் இல்லாதது. இது ஒழுங்குமுறை செயல்முறையை சிக்கலாக்குகிறது. ஒழுங்குமுறை சமூக தாக்கங்களைக் கொண்ட இயந்திர கற்றலின் குறிப்பிட்ட பயன்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். மனித மற்றும் பொருளாதார உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த மாதிரிகளைப் பயிற்றுவிக்க பயன்படுத்தப்படும் தரவுகளையும் விவாதம் கருத்தில் கொள்ள வேண்டும்.  விவாதங்கள் இயந்திர கற்றல் பயன்பாடுகளின் உறுதியான எடுத்துக்காட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும், உரிமைகள் மீறல்களைத் தடுப்பதற்கான தெளிவான கொள்கைகளுடன். சில சந்தர்ப்பங்களில், தடைகள் அவசியமாக இருக்கலாம். குறிப்பாக "உணர்ச்சி கண்டறிதல்" (“emotion detection”) அல்லது பொது மற்றும் பணியிடங்களில் முக அங்கீகாரத்தைப் (facial recognition technology) பயன்படுத்துவது போன்ற மனித உரிமைகள் அல்லது கண்ணியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு. பரந்த கருத்துக்களை விட குறிப்பிட்ட மாதிரிகளில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ள ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும்.


கொள்கைகளை உருவாக்கும் போது, அவை என்ன சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை அறிவது முக்கியம். உதாரணமாக, சமூக ஊடக தளங்கள் ஜனநாயகத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன என்ற கவலை இருந்தால், அவற்றின் பாத்திரங்களை நாம் வேறுபடுத்த வேண்டும். ஒருபுறம், இந்த தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும்போது, அவை ஊடக நிறுவனங்களைப் போலவே செயல்படுகின்றன. அவை அதற்கேற்ப ஒழுங்குபடுத்தப்படலாம். 


கொள்கை வகுப்பாளர்கள் தாங்கள் தீர்க்க விரும்பும் குறிப்பிட்ட சிக்கல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, சமூக ஊடக தளங்கள் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அரசியல் விவாதங்களை இழிவுபடுத்தும் என்று கவலை இருந்தால், உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கான தளங்கள் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பவர்கள் போன்ற அவர்களின் பங்கை நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். சமூக ஊடக நிறுவனங்களை அல்காரிதம்கள் மூலம் விளம்பரப்படுத்துவதிலிருந்து சமூக ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முடிவு விவாதத்திற்குரியது. ஆனால், அது வெளியிடப்படும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அவர்களைப் பொறுப்பாக்குவதில் இருந்து வேறுபட்டது. இது பேச்சு சுதந்திரத்தை முடக்கும். ஒவ்வொரு பரிந்துரை முறையையும் ஒழுங்குபடுத்த முயற்சிப்பது நடைமுறைக்கு மாறானது. மேலும், தவறான தகவல்கள் எது என்பதைத் தீர்மானிக்க அரசு அல்லது தனியார் தளங்களை அனுமதிப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது.


  செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை குறித்த விவாதம் பெரும்பாலும் குறிப்பிட்ட தன்மையைக் கொண்டிருக்கவில்லை. தனித்துவமான சமூக மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் காணவில்லை. இந்த தனித்துவத்தை அடைவதற்கு செயற்கை நுண்ணறிவு கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் பாதிக்கப்படுபவர்களிடையே தீவிர ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்த செயல்முறை வெளிப்படையான, முழுமையான ஆலோசனைகளுடன் தொடங்க வேண்டும் மற்றும் உறுதியான சட்டத்தை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தற்போதைய ஆலோசனையை மறுபரிசீலனை செய்த பிறகு இதுபோன்ற முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்.


கட்டுரையாளர் ஐ.ஐ.டி மும்பையில் உள்ள கொள்கை ஆய்வுகளுக்கான அஷாங்க் தேசாய் மையத்தில் (Ashank Desai Centre) செயற்கை நுண்ணறிவு மற்றும் கொள்கை குறித்து பயிற்றுவிக்கும் உதவி பேராசிரியராக உள்ளார்




Original article:

Share:

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் விதிகள் மூலம் சிறுபான்மையினரை இரகசியமாக விலக்குதல் - பிரதாப் பானு மேத்தா

 குடியுரிமை (திருத்தச்) சட்டம் (Citizenship (Amendment) Act) தொடர்பான சிக்கலான பிரச்சினைகளை உச்ச நீதிமன்றம் முழுமையாக பரிசீலிக்கும். இப்போதைக்கு, அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தேர்தலின் போது இதை தேர்தல் நோக்கங்களுக்காகப்  பகடையாக பயன்படுத்துகிறது.  அதே நேரத்தில் குடிமக்களின் உரிமையை மறுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) பற்றிய அச்சத்தையும் இது ஏற்படுத்துகிறது.  


குடியுரிமை திருத்த விதிகள் கொண்டு வந்ததன் மூலம், ஆட்சியாளர்கள் எப்படி நயவஞ்சகர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் ஆதரவாளர்கள் எப்படி ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பதை, இன்றைய அரசியல் சூழழ் பிரதிபலிக்கிறது. 2019 ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் இது எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய, நிலைமையைப் புரிந்துகொள்ள இந்த சிக்கலின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது முக்கியம்.


முதலாவதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை, துன்புறுத்தப்பட்டு அருகிலுள்ள நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்து வருபவருக்கு, குடிமக்களாக மாற வழி இல்லாமல் இருப்பது நியாயமற்றது என்று அரசாங்கம் வாதிடலாம். இந்த, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை யாரும் எதிர்க்கக்கூடாது. இருப்பினும், இரண்டு முக்கியமான உண்மைகள் மறைமுகமாக கவனிக்கப்படவில்லை. முதலாவதாக, அகதிகளுக்கு குடியுரிமைக்கான வழியை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் தேவையில்லை. இரண்டாவதாக, இந்தியாவில் வாழும் அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்கள் குழுக்களுக்கு ஒரு பாதையை உருவாக்குவது மட்டுமே சட்டத்தின் நோக்கம் அல்ல.


குறிப்பாக, இந்த சட்டம் துன்புறுத்தல்களை எவ்வாறு கையாள்கிறது என்பதில் சில சிக்கல்களைக் கையாண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அரசாங்கத்தின் சொந்தக் கணக்கின்படி, சிறுபான்மையினரைத் துன்புறுத்துவது ஒரு தொடர் நிகழ்வாக இருப்பதால், 2014ஆம் ஆண்டை ஏன் முக்கிய தேதியாக பயன்படுத்த வேண்டும்? இதில் குறிப்பிட்ட செய்தி தெளிவாக இருந்தது: இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் எனவும், இதில் துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் குழுக்கள் அருகில் இல்லை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது. இந்த புதிய விதிகள், புலம்பெயர்ந்தோர், துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் அகதிகளை மதத்தின் அடிப்படையில் வித்தியாசமாக நடத்துகின்றன. இந்திய குடியுரிமையை மாற்றுவதும், முஸ்லிம்கள் இயற்கையாகவே இந்தியாவுக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை மறைமுகமாக உணர்த்துவதும் இதன் குறிக்கோள் ஆகும். அதைக் குறிப்பிட்டு விதிகளை உருவாக்க அரசாங்கம் நான்கு ஆண்டுகள் எடுத்தது. தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் அவர்களின் நேர்மையின்மை குறித்து கவனம் செலுத்தப்படும்போது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு ஏற்றாற்போல் விதிகளை அறிவித்தனர். இதனால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) சர்ச்சைக்குரியது. ஏனெனில், இது தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்துடன் இணைந்தது. இரண்டுமே மத அடிப்படையிலான குடியுரிமையைப் பாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பலருக்கு நாடற்ற தன்மை மற்றும் தடுப்புக்காவலுக்கு வழிவகுக்கும். மறுபுறம், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), சில மதக் குழுக்கள் இந்திய குடிமக்களாக மாறுவதை எளிதாக்குகிறது. இதில், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றிய கவலை குறிப்பாக அசாமில் வலுவாக உள்ளது. அங்கு, சட்டவிரோத குடியேற்றம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவை (NRC) விரைவுபடுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் அழுத்தமானது, பலர் தங்கள் உரிமைகளை இழக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்த அச்சம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. 


புதிதாக இயற்றப்பட்ட விதிகள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA), தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து (NRC) பிரித்துக் காட்டுகிறது. இதில், முஸ்லிம் அல்லாத அகதிகளை குடிமக்களாக மாறுவதற்கான வழியை அனுமதிப்பதன் மூலம் நேர்மறையான பக்கத்தை மட்டுமே வலியுறுத்துகின்றனர். இந்த நடவடிக்கை மூலம், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) கீழ் இந்துக்கள் எளிதில் அதிகளவில் குடியுரிமை பெறுவார்கள். அதே நேரத்தில், முஸ்லிம்கள் பெறமாட்டார்கள் என்ற அச்சத்தை உணர்த்துகிறது. இந்த விதிகளின்படி, தற்போது, இந்துக்கள் தகுதி பெறுவதற்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல்லது வங்காளதேசத்துடன் தங்கள் உறவுகளுக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்திய ஆவணங்களை வழங்குவதில் சிரமம் இல்லை. ஆனால், மேற்கண்ட நாடுகளில் இருந்து ஆவணங்களைப் பெறுவதில் சிரமம் உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவு (NRC) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) இணைத்தது எதிர்பார்க்கப்பட்டது போல் விதிகள் பாகுபாடு காட்டாது. 


இந்த விதிகள், அசாமில் குறிப்பாக முக்கியமானதாக இருக்கலாம். இந்தியாவின் பிற பகுதிகளில், இந்துக்களைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு அனுமானம் இன்னும் இருக்கலாம். அதே நேரத்தில், முஸ்லிம்கள் அங்கு இருப்பதற்கான தங்கள் உரிமையை நிரூபிக்க வேண்டியிருக்கலாம். முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. விதிகள் மற்றும் சட்டங்கள் மூலம் மக்கள் எவ்வாறு குடியுரிமையை இழக்கலாம் என்பதில் அமன் வதூத் கவனம் செலுத்தியுள்ளார். குடியுரிமை செயல்முறையின் பெரும்பகுதி புதிய சட்டங்களை உருவாக்குவது பற்றியது அல்ல, ஆனால் யார் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்பதைப் பற்றியது.


ஆனால் இந்த நடவடிக்கை புத்திசாலித்தனமாக இருக்கலாம். தற்போது, சாத்தியமான இந்திய குடிமக்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த சில சட்டக் குற்றச்சாட்டுகளை இது குறைக்கிறது. இதன் அடையாளமாக, இந்த அரசாங்கம் படிப்படியாக இந்துக்களுக்கு ஆதரவான சட்டங்களை உருவாக்கும் என்று வாக்காளர்களிடம் கூறுகிறது. ஆயினும்கூட, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பரிந்துரைத்த விரிவான செயல்முறையை உடனடியாகத் தொடங்குவதைத் தவிர்க்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA), தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து (NRC) தற்காலிகமாகப் பிரிப்பதன் மூலம், விதிகள் அவற்றின் வரம்பைக் கட்டுப்படுத்துகின்றன. இது, பொது எதிர்ப்புகளுக்கான காரணங்களைக் குறைக்கிறது மற்றும் இது சட்டச் சவால்களிலிருந்து விதிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.


இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு பரந்த கூட்டணியை உருவாக்குவது கடினமாக இருக்கலாம். இதில், ஷஹீன் பாக் (Shaheen Bagh) போராட்டத்தின் வரம்புகள் இருந்தபோதிலும் அதன் முயற்சிகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் 2019-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அரசானது, திட்டமிட்டு செயல்படுத்துவதை கடினமாக்கியுள்ளது. இதனால், அரசாங்கத்திடம் ஒரு திட்டவட்டமான செயல் திட்டம் உள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும், தற்போதைய சட்ட அமைப்பால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை அது இன்னும் எதிர்கொள்கிறது. ஷாஹீன் பாக் (Shaheen Bagh) போராட்டங்கள் அரசியலமைப்பு வாதங்களை பொது மற்றும் பயனுள்ள முறையில் குறிப்பிடத்தக்க முறையில் பயன்படுத்தியது.


இருப்பினும், போராட்டங்களுக்கு இரண்டு வரம்புகள் இருந்தன. அவர்கள், அரசியலமைப்பு கொள்கைகள் பற்றிய வலுவான புரிதலைச்  சுட்டிக்காட்டினர். ஆனால், அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து பரவலான ஆதரவைப் பெற முடியவில்லை. பல்வேறு சமூகங்களிடையே பரவலான ஆதரவு இல்லாதது இப்போது, இன்னும் குறைவான திறனாக உள்ளது. இந்தியாவில், எந்தவொரு போராட்டமும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட சக்திகளால் கைப்பற்றப்படும் என்ற அச்சத்தை எதிர்கொள்கிறது. இந்த பயத்தை சமாளிப்பது இப்போது கடினமாக இருக்கும்.


இறுதியில், உச்ச நீதிமன்றம், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பான எந்தவொரு சிக்கலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடும். ஆனால் இப்போதைக்கு, அரசாங்கம் தேர்தல்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. இது, குடிமக்களின் தேசிய பதிவேடானது (NRC) குடிமக்களின் உரிமைகளை பறிக்கும் உண்மையை குறித்து அச்சங்களை இது தணிக்கிறது. எவ்வாறாயினும், சிவில் சமூகம் இந்த நடவடிக்கை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய குடியுரிமையை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் விரைவான நடவடிக்கைகளை விட அமைதியாகவும், படிப்படியாகவும் நடந்து வருகின்றன.




Original article:

Share:

ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியர்கள் எப்படி சிக்கினர்? -சென்னை பிரிண்ட் எடிஷன்

 ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்தது தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation (CBI)) என்ன கண்டுபிடித்துள்ளது?


ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், மனித கடத்தல் நெட்வொர்க் (human trafficking network) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நெட்வொர்க் இந்தியர்களை "பாதுகாப்பு உதவியாளர்கள்" (security helpers) மற்றும்  ரஷ்ய இராணுவத்தில் உள்ள பிற பணியாளர்கள் போன்ற பணிகளுக்கு நியமிக்கிறது. இது, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்ய-உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் பல இந்தியர்கள்,  ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து தவறான நம்பிக்கைகளின் கீழ் வேலை செய்து ஏமாற்றப்பட்டதால், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இது காட்டுகிறது.


என்ன நடந்தது?


இந்த ஆண்டு பிப்ரவரியில், ரஷ்யாவுக்காக இந்தியர்கள் போராடத் தொடங்கியதை பற்றி பல செய்திகள் பேசுகின்றன. ஆரம்பத்தில், "இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக" (army security helpers) பணியமர்த்தப்பட்ட சில இந்தியர்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் ஆவணங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எடுத்துக்காட்டும் வகையில், தி ஹிந்து செய்திகளை வெளியிட்டது.


உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு முகவரின் உதவியுடன் ரஷ்யாவுக்குச் சென்றதாகவும், போர் நடந்த பகுதிக்கு அனுப்பப்பட மாட்டார் என அவருக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார். இருப்பினும், சில ஆயுதப் பயிற்சிகளுக்குப் பிறகு ஜனவரி மாதம் அவர் போர் நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு மாதத்திற்கு ₹ 1.95 லட்சம் சம்பளம் மற்றும் ₹50,000 போனஸ் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், உறுதியளிக்கப்பட்ட சம்பளம் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதில், பல இந்தியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பின்னர் அரசாங்க உதவியை நாடினர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஏழு பேர், தாங்கள் சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்றதாகவும், அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இரஷ்ய ராணுவத்தில் "உதவியாளர்களாக" (helpers) சேருமாறும் கட்டாயப்படுத்தியதாக வீடியோ எடுத்துள்ளனர்.

இதுகுறித்து,  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரஷ்ய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு மாஸ்கோ ஆட்சேர்ப்பு மையத்தில் (Moscow recruitment center) சுமார் 100 இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ரஷ்யாவில் பல ஆட்சேர்ப்பு மையங்கள் இருப்பதால் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், "இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக" (army security helpers) சேரும் அனைவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். இந்த ஒப்பந்தம், குறைந்தது ஒரு வருடம் நீடிக்கும் எனவும், அதில் கையெழுத்திட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு முன் வெளியேற முடியாது எனவும் கூறப்பட்டிருந்தது.


ஆட்சேர்ப்பு முகமைகள் எப்படி மக்களை ஏமாற்றினார்கள்?


கடந்த வாரம், இந்தியாவின் பல நகரங்களில் ஆட்கடத்தல் நெட்வொர்க்கை மத்திய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. இந்த நெட்வொர்க் இந்தியா முழுவதும் ஏழு நகரங்களில் விசா ஆட்சேர்ப்பு செய்பவர்களை  (visa recruiters) சம்மந்தப்படுத்தியது. இதன் மூலம், ஆலோசனை நிறுவனங்களால் இந்திய இளைஞர்கள் ஏமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.  ரஷ்ய இராணுவத்தில் பாதுகாப்புக் காவலர்களாகவும், உதவியாளர்களாகவும் சேருவதன் மூலம் சிறந்த வாழ்க்கை மற்றும் வேலைகள் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டன. இதுவரை, விசாரணை நிறுவனம், ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட 35 நபர்களைக் கண்டறிந்துள்ளது மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள இந்தியா முழுவதும் பரவியுள்ள குறைந்தது 17 ஆலோசனை நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.


மத்திய புலனாய்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்த நெட்வொர்க் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் மூலம் இந்திய இளைஞர்களை ஈர்த்தது. இவர்கள், ரஷ்யாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகள் வாங்கி தருவதாக வாக்குறுதியளித்தன. இதில், பல மாணவர்கள் ஏமாற்றப்பட்டு, தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்டனர். இந்த முகவர்கள், படிப்பிற்கு குறைந்த கட்டணங்கள் மற்றும் நீண்ட நாள் விசாக்களை தருவதாக அவர்களுக்கு உறுதியளித்தனர். பின்னர், இவர்கள் ரஷ்யாவிற்கு வந்ததும், உள்ளூர் முகவர்கள் மாணவர்களின் கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டனர். இதனால், அவர்களை ஆயுதப் படையில் சேர கட்டாயப்படுத்தினர். இதன் விளைவாக, போரில் குறைந்தது இரண்டு இந்தியர்கள் சண்டையிட்டு இறந்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.




அரசு கூறியது என்ன?


இரஷ்ய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றி ஏமாற்றப்பட்ட இந்திய குடிமக்களை விடுவிப்பது குறித்து,  ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அவர்களைக் கண்டுபிடிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்து வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்காக  ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறினார். இந்திய குடிமக்களை விரைவில் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்தினார். மத்திய புலனாய்வு அமைப்பின்  நடவைக்கைகளை மேற்கோள் காட்டி,  ரஷ்ய இராணுவத்தில் சாதகமான வேலைகளுக்காக, முகவர்களின் சலுகைகளால் ஆசைப்பட வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை வலியுறுத்தியது.




Original article:

Share:

இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் சரிவடையும் ரஷ்யாவின் ஆதிக்கம் -தி இந்து தரவுக் குழு

 கடந்த 15 ஆண்டுகளில், ஆயுதங்களுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை இந்தியா குறைத்துள்ளது. ஸ்வீடிஷ் சிந்தனைக்  குழுவான (Swedish think tank) ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. 2009 முதல் 2013 வரை, ரஷ்யா இந்தியாவிற்கு 76% ஆயுதங்களை வழங்கியது. ஆனால் 2019 முதல் 2023 ஆயுத இறக்குமதியில், 36% குறைந்துள்ளது.


ரஷ்யா, இந்தியாவின் சிறந்த ஆயுத வழங்குநராக இருந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா பிரான்ஸ் (France) மற்றும் அமெரிக்காவிடம் (U.S.) இருந்து அதிக ஆயுதங்களை வாங்கியுள்ளது. 2009-13ல், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் பிரான்ஸ் 0.9% மட்டுமே வழங்கியது. ஆனால், 2019-23 இல், அதன் பங்கு 33% ஆக உயர்ந்தது. பிரான்ஸ் இந்தியாவின்  இரண்டாவது பெரிய ஆயுத வழங்குநராக ஆனது. 2009-13ல் 8% ஆக இருந்த அமெரிக்காவின் பங்கு 2019-23ல் 13% ஆக உயர்ந்தது. முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களின் அளவை விளக்கப்படம் அளவிடுகிறது. இது முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி செலவைப் பார்க்கும் ஒரு சிறப்பு முறையைப் பயன்படுத்துகிறது. இந்த முறை மாற்றப்பட்ட இராணுவ வளங்களைக் காட்டுகிறது. 2019-23 முதல், இந்தியாவின் ஆயுத இறக்குமதி முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.7% அதிகரித்துள்ளது.


2019-2023 காலகட்டத்தில் சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா மாறியது. இந்தியாவின் உலகளாவிய ஆயுத இறக்குமதி பங்கு 9.1 சதவீதத்திலிருந்து 9.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் பங்கு 11 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துள்ளது. 


2014-18 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் மிகக் குறைவான பங்கைக் கொண்டிருந்த உக்ரைன் (Ukraine), பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு அதன் ஆயுத இறக்குமதி பங்கை 4.9% ஆக அதிகரித்தது. சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தான் தனது உலகளாவிய ஆயுத இறக்குமதியை 2.9% முதல் 4.3% வரை அதிகரித்துள்ளது. அதே, நேரத்தில் சீனாவின் பங்கு 4.9% முதல் 2.9% வரை குறைந்துள்ளது.


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன (Stockholm International Peace Research Institute (SIPRI)) கூற்றுப்படி, ஆசிய (Asia), ஓசியானியா (Oceania) மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் (West Asia) ஐரோப்பாவை விட அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்தன. 2019-2023 முதல் 10 ஆயுத இறக்குமதியாளர்களில் ஒன்பது பேர் இந்த பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள். இரண்டு ஐந்தாண்டு காலங்களில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் சிறந்த நாடுகளின் பங்குகளைக் காட்டுகிறது.


ஒரு முக்கிய ஆயுத வழங்குநராக ரஷ்யாவின் பங்கு உலகளவில் சரிந்தது. 2014-2018 முதல், உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யா 21% பங்களித்தது. ஆனால், இது 2019-23ஆண்டில் 11% (வரைபடம் 3) ஆக குறைந்தது. அளவின் அடிப்படையில், இந்த காலகட்டங்களில் ரஷ்யாவின் ஏற்றுமதி 52% குறைந்துள்ளது.


2019ஆம் ஆண்டில், ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிலையானதாக இருந்ததாக சிந்தனைக்  குழு (think tank)  குறிப்பிடுகிறது. அளவில் பெரிய மாற்றங்கள் இல்லை. இருப்பினும், 2020 இல் தொடங்கி ஏற்றுமதியில் வேகமான சரிவு ஏற்பட்டது. இந்த குறைவு 2021 மற்றும் 2022 இல் தொடர்ந்தது. 2023 இல், ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுதங்களின் அளவு 2019 இல் இருந்த அளவை விட 74% குறைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், ரஷ்யா 31 நாடுகளுக்கு முக்கிய ஆயுத வழங்குநராக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 14 ஆகவும்,  2023 இல் இது 12 ஆகக் குறைந்தது. இதற்கிடையில், உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா தனது பங்கை 34% முதல் 42% வரை அதிகரித்துக்கொண்டது .   


கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா கொள்முதல் செய்த ஆயுதங்களில்,  பெரும்பாலான கொள்முதல்கள் ஏவுகணைகளுக்கானவை, அவற்றில் பெரும்பாலானவை  ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டன.  மற்ற கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களில் இயந்திரங்கள், கவச வாகனங்கள் மற்றும் விமானங்கள் அடங்கும். பெரும்பாலும் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து  பெறப்பட்டன.




Original article:

Share:

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியுதவியை பகுப்பாய்வு செய்தல் . . . -அனிமேஷ் ஜெயின், அனுராக் ஆனந்த்

 இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்திக்கான இலக்குகள், அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவதைச் சார்ந்துள்ளது.


இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டது. இதனால், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' (லால் பகதூர் சாஸ்திரி எழுதியது) 'ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான்' (ஏ.பி. வாஜ்பாய்) என்ற முழக்கத்தை, இப்போது, 'ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்' (பிரதம அமைச்சரால்) என்று மறுபெயரிடுவதற்கான முடிவு  வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை முக்கியத்துவம் கொடுப்பதால், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த முயற்சிகளின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள, இந்தியாவின் தற்போதைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Research and Development (R&D)) நிதி நிலைமை மற்றும் அதன் விளைவுகளைப் பார்ப்பது முக்கியம். இந்தியாவானது, வேறு சில நாடுகளை விட குறைவாக செலவழித்த போதிலும், இந்தியா இன்னும் ஏராளமான காப்புரிமைகளை, நிறைய முனைவர் பட்டங்களை (PhDs) உருவாக்குவது மற்றும் பல கட்டுரைகளை வெளியிடுவது சிறந்த முயற்சியாகும். இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, இந்த வெளியீடுகளின் தரத்தையும் சரிபார்க்க வேண்டியது மிக அவசியம். 


இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை (Research and Development (R&D)) மிகவும் வளர்ந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்தச் செலவு  2010-11ல் ₹6,01,968 மில்லியனில் இருந்து 2020-21ல் ₹12,73,810 மில்லியனாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியாவை, மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியா முதலீடு செய்வது குறைவு. உதாரணமாக, சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4%, ஜெர்மனி 3.1%, தென் கொரியா 4.8% மற்றும் அமெரிக்கா 3.5% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகின்றன.


ஆராய்ச்சி வெளியீடு, கண்டுபிடிப்பு


இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சிறிய தொகையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு (Research and Development (R&D)) செலவிட்டாலும், கல்வியில்  திறமையானவர்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், 40,813 முனைவர்களை (PhDs) உருவாக்குகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த தரமானது, அறிவுசார் மூலதனத்தை (intellectual capital) வளர்ப்பதிலும், உலகளாவிய ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை காட்டுகிறது. கூடுதலாக, இந்தியாவின் ஆராய்ச்சியின் வெளியீடு கணிசமாக உள்ளது. இது, 2022 ஆம் ஆண்டில் 300,000 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளுடன் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவின் வலுவான ஆராய்ச்சி சூழல் மற்றும் பல்வேறு துறைகளில் அறிவை மேம்படுத்துவதற்கான பங்களிப்பைக் காட்டுகிறது. மேலும், காப்புரிமை மானியங்களிலும் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. 2022 இல் வழங்கப்பட்ட 30,490 காப்புரிமைகளுடன் உலகளவில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவை விட குறைவாக இருந்தாலும், இந்தியாவின் கண்டுபிடிப்பு, நிலப்பகுதி மேம்பட்டு வருவதையும், எதிர்காலத்தில் அதிக அறிவுசார் சொத்துக்களை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.


இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு (Research and Development (R&D)) பெரும்பாலான செலவுகள் அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. இதில் மத்திய அரசு (43.7%), மாநில அரசுகள் (6.7%), உயர்கல்வி நிறுவனங்கள் (Higher Education Institutions (HEI)) (8.8%), மற்றும் பொதுத்துறை தொழில்துறை (4.4%) ஆகியவை அடங்கும். இருப்பினும், 2020-21ல் தனியார் தொழில்துறையின் பங்களிப்பு 36.4% மட்டுமே ஆகும். இதில், அரசாங்கம், வணிகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதலீடு


2022-23 ஆம் ஆண்டிற்கான, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை புள்ளிவிவரங்களின்படி, 2020-21 ஆம் ஆண்டில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இந்தியா $17.2 பில்லியன் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் பெரும்பகுதியான, 9.4 பில்லியன் டாலர்கள் அல்லது 54% அரசுத் துறைக்கு செல்கிறது. இந்த பணத்தின் பெரும்பகுதி நான்கு முக்கிய அறிவியல் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது:  அவை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (30.7%), விண்வெளித் துறை (18.4%), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (12.4%), மற்றும் அணுசக்தி துறை (11.4%) ஆகியவை ஆகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெரும்பகுதி அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. அவர்கள், தங்கள் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கிறார்கள். மேலும், ஆராய்ச்சி செய்வதற்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் இந்த ஆய்வகங்கள் மிகவும் முக்கியமானவையாக உள்ளது. ஒதுக்கப்படும் அரசாங்கத்தின் நிதியுதவி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அவற்றின் உத்திகள் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த நெருங்கிய தொடர்பு, முக்கியமான அறிவியல் முன்னேற்றத்தை வழிநடத்துவதிலும், ஊக்குவிப்பதிலும் அரசாங்கம் எவ்வளவு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டுகிறது.


இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள தனியார் துறைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு குறைவான பங்களிப்பான, சுமார் 6.2 பில்லியன் டாலர்கள் வழங்குகின்றன. இது, நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த செலவில் 37% ஆகும். உலகளவில், வணிகங்கள் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் முயற்சிகளுக்கு 65% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன. இது, இந்தியாவின் சூழ்நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் காட்டுகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற முன்னணி கொண்ட நாடுகள், புதுமையான பொருளாதாரங்களில், தனியார் துறைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் 70% க்கும் அதிகமாக வழங்குகின்றன. இது, வலுவான தொழில்-கல்வி ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை தனியார் நிறுவனங்களின் அதிக ஈடுபாடு மற்றும் தொழில்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பு ஆகியவற்றால் மேம்படுத்தப்படலாம்.


உயர் கல்வி நிறுவனங்கள் ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  முதலீட்டில் ஒரு சிறிய பகுதியான, சுமார் 8.8% ($1.5 பில்லியன்) பங்களிக்கின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு தொழில்துறையின் பங்களிப்புகளை அதிகரிப்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகும். இதற்கு, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பல்நோக்கு அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தியா தனது சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலப்பரப்பை மேம்படுத்த அதன் வரையறுக்கப்பட்ட முடிவு மற்றும் சிறந்த உத்தியை மேம்படுத்தும் அதே வேளையில், மற்ற வளர்ந்த நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மைக்கு அவசியம்.


முயற்சிகளின் தாக்கம்


இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்திக்கான இலக்குகள், அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவதைச் சார்ந்துள்ளது. தற்போதைய, இடைவெளியைக் குறைக்க, தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதோடு, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான வசதிகளை வலுப்படுத்த வேண்டும். தேசிய டீஃப் தொழில்நுட்ப தொடக்கக் கொள்கை (National Deep Tech Startup Policy (NDTSP)) போன்ற முன்முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. இந்த கொள்கை, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களை ஈடுபட ஊக்குவிக்கும். டீஃப் தொழில்நுட்பத்தை (Deep Tech’s) உருவாக்குவது சில நேரம் எடுக்கும் மற்றும் அபாயங்களை உள்ளடக்கியது என்றாலும், அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் தொழில்நுட்ப சவால்களைத் தீர்ப்பதிலும் முதலீடு செய்வது புதிய சந்தைக்கான வாய்ப்புகளைத் திறக்கும். சமீபத்திய, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டம் (Anusandhan National Research Foundation (ANRF) Act) முன்னேற்றத்தின் அடித்தளமாக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.


இந்த புதிய சட்டம் நாடு முழுவதும் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்த உதவும். இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டில் உள்ள இடைவெளியைக் குறைப்பதும், உயர்கல்வி நிறுவனங்களில் வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும் இதன் இலக்காகும். இருப்பினும், சமமான நிதி விநியோகம், பல்வேறு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய தரங்களை பூர்த்தி செய்தல் போன்ற சவால்களை இது எதிர்கொள்கிறது. இந்த முயற்சிகள், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு சிறந்த உத்திகள் மூலம் வழிகாட்டுதலை வழங்குகிறது. அதே நேரத்தில், அதிக தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. தேசிய டீஃப் தொழில்நுட்ப தொடக்கக் கொள்கை (NDTSP) மற்றும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) சட்டத்துடன் இணைந்து இடைக்கால பட்ஜெட், வளர்ந்து வரும் தொழில்களில் தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.


அனிமேஷ் ஜெயின்,  இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகத்தில் கொள்கை பகுப்பாய்வு பிரிவில் பணியாற்றுகிறார்.  

அனுராக் ஆனந்த், இந்திய அறிவியல் கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை-கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக உள்ளார்.




Original article:

Share: