பண்டைய கலிங்கத்தின் மறக்கப்பட்ட தலைநகரான சிசுபால்கர் (Shishupalgarh) -தேவ்தத் பட்டநாயக்

சிசுபால்கரின் வரலாற்றுப் பெயர் கலிங்கநகரமாக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பெயர் தொல்லியல் மற்றும் கற்பனைக்கு இடையிலான உரையாடலைப் பிரதிபலிக்கக்கூடும். ஒன்று தொல்லியல் கற்கள் வழியாகப் பேசுகிறது, மற்றொன்று கற்பனை கதைகள் வழியாகப் பேசுகிறது.


கிருஷ்ணா நதியின் டெல்டாவில் உள்ள நன்கு அறியப்பட்ட நாகார்ஜுனகொண்டாவிற்கு வடக்கே, ஒடிசாவின் கடற்கரையில் உள்ள மகாநதி டெல்டாவில் உள்ள சிசுபால்கர் நகரத்தை சிலர் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்த நகரம் எந்த மத நினைவுச்சின்னங்களையும் விட்டுச் சென்றதில்லை, பௌத்தம், சமணம், இந்து மத நினைவுச்சின்னங்கள் எதுவும் இல்லை. இதன் காரணமாக, இது ஏறக்குறைய மறக்கப்பட்டுவிட்டது.


நவீன புவனேஷ்வரின் எல்லையில் அமைந்துள்ள சிசுபால்கர், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நகர வாழ்க்கையை நமக்குக் காட்டுகிறது. இது இந்தியா கடல்சார் வர்த்தகத்தின் பரந்த உலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியாக இருந்தது. பேரரசுகள் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்தன, நீண்டதூர வர்த்தகம் வளர்ந்து கொண்டிருந்தது, மேலும் புதிய மதக் கருத்துக்கள் சமூகங்களை மாற்றிக்கொண்டிருந்தன. இந்த நிலப்பரப்பில், கோட்டை நகரமான சிசுபால்கர் பண்டைய கலிங்கத்தின் சிறந்த மையங்களில் ஒன்றாக உருவெடுத்தது.


பேரரசுகளின் காலத்தில் ஒரு நகரம்


தொல்லியல் ஆய்வுகளின்படி, அதன் தோற்றத்தை கிமு 3-ம் நூற்றாண்டில், அசோகரின் கலிங்கப் படையெடுப்பிற்குப் பிந்தைய பதட்டமான சூழ்நிலை நிறைந்த  ஆண்டுகளில் அறியப்படுகிறது. அதன் கொடூரத்திற்காக நினைவுகூரப்பட்ட அந்தப் போர், மௌரியப் பேரரசரை மாற்றியது மற்றும் மாநிலக் கொள்கையை புத்த மத விழுமியங்களை நோக்கித் திருப்பிவிட்டிருந்தது. கிழக்கு கடற்கரையில், இந்த மாற்றம் துறைமுகங்கள், வர்த்தகக் குழுக்கள் மற்றும் மடாலயங்களின் வலையமைப்புகளின் வளர்ச்சியுடன் ஒத்துப்போனது. சிசுபால்கர் இந்த காலநிலையில் செழித்து வளர்ந்ததாக தெரிகிறது. நான்கு திசைகளுக்கும் கச்சிதமாக நேர்கோட்டில் அமைந்த அதன் பெரிய செங்கற்கோட்டை, முற்கால இந்திய நகரங்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.


கிமு 1-ம் நூற்றாண்டுக்கும் கிபி 3-ம் நூற்றாண்டுக்கும் இடையில் இந்த நகரம் அதன் உச்சத்தை அடைந்தது. இந்த நேரத்தில், ரோமானியப் பேரரசு மத்தியதரைக் கடலில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும், ஹான் பேரரசு சீனாவில் செழித்தோங்கியது. வர்த்தகர்கள் கடல் வழிகள் மற்றும் வணிகக் குழுப் பாதைகள் மூலம் இந்த உலகங்களை ஒன்றாக இணைத்தனர். ஒடிசாவின் கடற்கரை இந்த உலகளாவிய அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தத் தளத்தில் காணப்படும் சுழல் வடிவ மட்பாண்டங்கள் ரோமானியர்களின் இரசனையைக் காட்டுகின்றன. அதேநேரத்தில், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள் தக்காணம் மற்றும் பிற பகுதிகளுடனான வர்த்தகத்தைக் குறிக்கின்றன.


இந்த நகரம் ஒரு வர்த்தக மையத்தைவிட மேலானது. இது தெருக்கள், வடிகால்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பிரம்மாண்டமான நுழைவாயில்களுடன் கவனமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தளத்தின் மையத்தில் 16 தூண்கள் அல்லது 'சோலா கம்பா' (solah khamba) என்று பிரபலமாக அறியப்படும் செதுக்கப்பட்ட கல் தூண்களின் ஒரு குழு நிற்கிறது. இவை ஒரு காலத்தில் ஒரு உயர்ந்த மண்டபத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அது ஒருவேளை குடிமைச் சந்திப்புகள் அல்லது அரச விழாக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அவற்றின் இருப்பு ஒழுங்கமைக்கப்பட்ட தலைமை மற்றும் பகிரப்பட்ட பொது இடங்களைக் குறிக்கிறது. இது பழங்குடி தலைமைகளிலிருந்து கட்டமைக்கப்பட்ட ராஜ்யங்களுக்கு இந்திய அளவில் ஏற்பட்ட பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.


இது தக்காணத்தில் சாதவாகனர்களின் காலமாகவும், வடக்கில் குஷானர்களின் காலமாகவும் இருந்தது. இந்தோ-கிரேக்க, சாக மற்றும் பார்த்திய ஆட்சியாளர்களும் இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டனர். அவர்கள் புதிய நாணயங்களையும் கலைப் பாணிகளையும் அறிமுகப்படுத்தினர். சிசுபால்கர் இந்தத் தாக்கங்களை உள்வாங்கிக்கொண்டாலும், அதன் சொந்த கலிங்க அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டது.


சிசுபால்கரின் புராணம், நினைவு மற்றும் புனித நிலப்பரப்பு


நகரத்தில் மதம் ஆரம்பகால இந்திய நம்பிக்கையின் பன்மைத் தன்மையை பிரதிபலித்தது. சுடுமண் சிலைகள் (Terracotta figurines) பிரபலமான கிராம தெய்வங்கள், துர்க்கையின் ஆரம்பகால வடிவங்கள், மர ஆவிகள் மற்றும் யட்ச வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் கலவையை வெளிப்படுத்துகின்றன. இவை கருவுறுதல், பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சூழலியல் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு பழைய நம்பிக்கை அடுக்கைச் சேர்ந்தவை. அருகிலுள்ள பகுதிகள் அசோகரின் காலத்திலிருந்தே வலுவான பௌத்த நடவடிக்கைகளைக் காட்டுகின்றன.


நகரச் சுவர்களுக்குள் பெரிய மடாலயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், குடியிருப்பாளர்கள் தௌலி (Dhauli) மற்றும் ஜௌகடா (Jaugada)  போன்ற தளங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு பௌத்த கலாச்சாரக் கோளத்திற்குள் தெளிவாக வாழ்ந்தனர். அதேநேரத்தில், ஆரம்பகால சைவ மற்றும் வைணவ சின்னங்கள் பரந்த கலிங்கப் பகுதியில் காணப்படுகின்றன. முறையான பிரிவுகள் இன்னும் பிரத்தியேக சமூகங்களாகக் கடினமடையாத ஒரு உலகத்தை இது வெளிப்படுத்துகிறது. புராணம், சின்னம் மற்றும் நடைமுறை ஆகியவற்றின் பகிரப்பட்ட தொகுப்பிலிருந்து வந்த மக்கள் சடங்குகளுக்கு இடையில் சுதந்திரமாக நகர்ந்தனர். இது சாதி மற்றும் மதப் பிரிவுகளும் வரையறுக்கப்படுவதற்கு முந்தைய காலமாகும்.

இருப்பினும், சிசுபால்கர் என்ற பெயர் இந்த பண்டைய உலகத்தைச் சேர்ந்ததல்ல. அது பிற்காலத்தில் மக்கள் நினைவால் உருவாக்கப்பட்டது. அந்த நகரத்தின் உண்மையான பெயர் கல்வெட்டுகளில் நிலைத்திருக்கவில்லை. இடைக்கால மற்றும் நவீனகாலத்தின் தொடக்கத்தில் அந்த இடிபாடுகளுக்கு அருகில் வாழ்ந்த கிராம மக்கள், மகாபாரதத்தின் வீரம் மிக்க மன்னரான சிசுபாலனுடன் தொடர்புபடுத்தி, அந்த பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்களை விளக்கினர். கைவிடப்பட்ட கோட்டைகள் பெரும்பாலும் காவிய நாயகர்களுடன் தொடர்புபடுத்தப்படும் இதுபோன்ற தொடர்புகள் இந்தியாவில் பொதுவானவை.




பண்டைய உலகில் ஒடிசாவின் இடத்தை மீண்டும் பெறுதல்


19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரிட்டிஷ் நில அளவையாளர்கள் வந்த நேரத்தில், சிசுபால்கர் என்ற பெயர் ஏற்கனவே உள்ளூர் பயன்பாட்டில் இருந்தது. ஆரம்பகால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நகரத்தின் வரலாற்றுப் பெயர் கலிங்கநகரமாக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நேரடி ஆதாரங்கள் இல்லாமல் இதை உறுதிப்படுத்த முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் பெயர் தொல்பொருளியல் மற்றும் கற்பனைக்கு இடையிலான உரையாடலை பிரதிபலிக்கிறது. ஒன்று கற்கள் வழியாகவும் மற்றொன்று கற்பனைக் கதைகள் வழியாகவும் பேசுகிறது.


கி.பி 4-ம் நூற்றாண்டில், அந்த நகரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆறுகள் தங்கள் போக்கை மாற்றியதால், விவசாய நிலைத்தன்மை குறைந்தது. வர்த்தகப் பாதைகள் மாறி, மற்ற துறைமுகங்களுக்குச் சாதகமாக அமைந்தன. அரசியல் அதிகாரம் புதிய முக்கியத்துவத்தை நோக்கி நகர்ந்தது. பல பழங்கால இடங்களைப் போலவே, வாழ்க்கையும் படிப்படியாகக் குறைந்தது. இடிபாடுகளின்மீது கிராமங்கள் வளர்ந்தன, மேலும் வரலாறு புராணக்கதைகளுடன் கலந்தது. ஆயினும், கற்கள் நிலைத்திருக்கின்றன.


இன்று இந்தியாவின் ஆரம்பகால திட்டமிடப்பட்ட நகர்ப்புற மையங்களில் ஒன்றாகவும், உலகெங்கிலும் உள்ள பெரிய நகரங்களுடன் சமகாலத்தவராகவும் சிசுபால்கர் நிற்கிறது. பெரும்பாலும் ஒரு புறக்கணிக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் ஒடிசா, ஒரு காலத்தில் கங்கை சமவெளி, தக்காணப்பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் ரோம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு செழிப்பான மையமாக இருந்ததை இது நமக்கு நினைவூட்டுகிறது.


 Original Article : Shishupalgarh, the forgotten capital of ancient Kalinga -Devdutt Pattanaik

Share:

காசிரங்கா உயர்மட்ட வழித்தடம் தேசியப் பூங்காவில் எவ்வாறு விலங்குகளின் இறப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நோக்கமாக உள்ளது? -சுக்ரிதா பருவா

ரூ. 6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா வழித்தடம், தேசியப் பூங்காவையும் கிழக்கு அசாமையும் மாநிலத் தலைநகரான குவாஹாத்தியுடன் இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையின் பகுதியாக இருக்கும். இதன் நோக்கம், விலங்குகள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு வழிவகை செய்வதாகும்.



அசாமின் காசிரங்காவில் 34.5 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு உயர்மட்ட வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார். நிபுணர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் தேசியப் பூங்காவில் கனரக வாகனப் போக்குவரத்தால் விலங்குகள் அடிபட்டு இறப்பு அதிகரித்துவரும் பிரச்சனைக்கு இது ஒரு நீண்டகால தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரூ. 6,950 கோடி மதிப்பிலான இந்த வழித்தடம், தேசியப் பூங்காவையும் கிழக்கு அசாமையும் மாநிலத் தலைநகரான குவாஹாத்தியுடன் இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையின் பகுதியாக இருக்கும். இதன் நோக்கம், விலங்குகள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு வழிவகை செய்வதாகும். தற்போது, ​​வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த நெடுஞ்சாலை விலங்குகளின் இயல்பான நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ளது.


காசிரங்கா உயர்மட்ட வழித்தடம் பற்றி


இந்த பூங்காவில், உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையைக் கொண்டதும், 37 வகையான பாலூட்டிகள் மற்றும் ஏறக்குறைய 500 வகையான பறவைகளின் இருப்பிடமாகவும் விளங்கும் காசிரங்கா தேசியப் பூங்கா, மத்திய அசாமின் நாகோன் மற்றும் கிழக்கு அசாமின் கோலாகாட் மாவட்டங்களில் உள்ள பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகளில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் வடகரையில் உள்ள ஒரு முக்கிய நகரமான தேஜ்பூரை கிழக்கு அசாமில் உள்ள நகரங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய சாலையான முன்னர் NH-37 என்று அழைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 715, பூங்காவின் தெற்கு எல்லையாக அமைகிறது. இந்த நெடுஞ்சாலைக்கு அப்பால் கார்பி ஆங்லாங் மலைகள் (hills of Karbi Anglong) அமைந்துள்ளன.


இந்த ஆண்டு அக்டோபரில், மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இந்த நெடுஞ்சாலையின் 86.675 கி.மீ நீளமுள்ள இருவழிப் பாதையை நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்தச் சாலையின் பெரும்பகுதி பூங்காவின் எல்லையோரமாக அல்லது அதன் வழியாகப் பயணிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், 34.5கி.மீ நீளமுள்ள ஒரு உயர்மட்ட வழித்தடம் அமைப்பது அடங்கும். இதன் மூலம், தேசியப் பூங்காவிலிருந்து கார்பி ஆங்லாங் மலைகளுக்கு விலங்குகள் கடந்து செல்வதற்காக அதன் அடியில் ஒரு பகுதி விடப்படும். அரசாங்கத்தின்படி, இந்தத் திட்டத்தில் தற்போதுள்ள 30.22 கி.மீ. சாலைகளைத் தரம் உயர்த்துவதும், ஜகலாபந்தா மற்றும் போக்காகாட் நகரங்களைச் சுற்றி 21 கி.மீ. நீளமுள்ள புதிய புறவழிச் சாலைகளை அமைப்பதும் அடங்கும். இதன் நோக்கம், கவுஹாத்தி (Guwahati), காசிரங்கா தேசியப் பூங்கா (Kaziranga National Park) மற்றும் நுமலிகர் தொழில்துறை நகரம் (industrial town of Numaligarh) ஆகியவற்றுக்கு இடையேயான தற்போதைய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் நேரடி இணைப்பை அதிகரிப்பது ஆகும்.


அதிகரித்த மனித நடமாட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது


தேசிய நெடுஞ்சாலையும், அதன் வழியாகச் செல்லும் போக்குவரத்தும் தேசியப் பூங்காவில் உள்ள வனவிலங்குகளுக்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.


இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ரதின் பர்மனின் கூற்றுப்படி, தாழ்வான பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகள், ஈரநிலங்கள் மற்றும் புல்வெளிகள் முதல் கார்பி ஆங்லாங்கின் உயர்நிலங்கள் வரை பரந்து விரிந்த இப்பகுதியின் நிலப்பரப்பு பல விலங்குகளின் இயற்கை வாழ்விடமாக உள்ளது.


“காசிரங்காவின் எல்லை விலங்குகளால் அல்ல, மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார். ஒரு இயற்கையான நிகழ்வான வெள்ளம் ஏற்படும்போது, ​​தேசியப் பூங்காவின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்குகின்றன. அப்போது விலங்குகள் தெற்கு நோக்கி உயர்நிலங்களை நோக்கி நகர்கின்றன. வெள்ளம் வடிந்ததும், அவை மீண்டும் தாழ்வான பகுதிகளுக்குத் திரும்புகின்றன. இருப்பினும், வளர்ச்சி இந்த முறையை மாற்றிவிட்டது. நெடுஞ்சாலையின் இருப்பு மற்றும் அருகிலுள்ள மனித குடியிருப்புகள் இந்த இயற்கையான இயக்கத்தைக் சீர்குலைத்துள்ளன.


இந்த நிதியாண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 13,800 பயணிகள் வாகனங்கள் செல்லும் இந்த பரபரப்பான நெடுஞ்சாலையைக் கடக்க விலங்குகள் மேற்கொள்ளும் முயற்சிகள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.


கவுஹாத்தி பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைப் பேராசிரியர்களான பிரசந்த குமார் சைகியா மற்றும் மாலபிகா ககாதி சைகியா, மற்றும் ஆராய்ச்சி அறிஞர் சோமோயிதா சூர் ஆகியோர் அடங்கிய ஒரு ஆராய்ச்சிக் குழு, அக்டோபர் 2016 மற்றும் செப்டம்பர் 2017-க்கு இடையில் NH-715 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் வாகனங்களால் ஏற்படும் விலங்குகளின் இறப்பு குறித்து 2022-ல் ஆய்வு மேற்கொண்டது. இந்தக் காலகட்டத்தில் வாகனங்களுடன் மோதியதில் இந்தியச் சிறுத்தை உட்பட 6,036 விலங்குகள் கொல்லப்பட்டதாக பதிவு செய்தனர். இந்தச் சாலை விபத்துக்களில் 63.6% ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான வெள்ளக் காலத்தில் நிகழ்ந்ததாக அந்த ஆய்வு கண்டறிந்தது.


அந்த ஆய்வு மேலும் கூறியிருப்பதாவது, “இந்த சாலை விபத்துக்களுக்கு முக்கியக் காரணம் வாகனங்களின் அதிக வேகம்தான். எனவே, அனைத்து விலங்குகளின் பாதுகாப்பான நடமாட்டம் மற்றும் இருப்புக்காக முறையான தணிப்பு வடிவமைப்புகளுடன், வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாம் வளர்ச்சிப் பணிகளை நிறுத்தக்கூடாது. மாறாக, எந்தவொரு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஏற்படும் ஊடுருவல்களில் வாகன மோதல்களைக் குறைக்க, அதனுடன் இணைந்து முறையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்புகள் மற்றும் புதுமைகளை இணைத்துக்கொள்ள வேண்டும்.”


காசிரங்கா கோட்ட வன அதிகாரி அருண் விக்னேஷின் கூற்றுப்படி, இந்தப் பிரச்சனை காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கார்பி ஆங்லாங்-காசிரங்கா நிலப்பரப்பு வழியாகச் செல்லும் சாலையில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் தொடர்ச்சியான இயக்கமே இந்த வழித்தடத்தைத் தடுக்கிறது. எனவே, இந்த விலங்குகளுக்கு ஒரு மாற்றுப் பாதையைக் கண்டறிய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். உயர்மட்டச் சாலை வழியாக கனரக வாகனங்களின் போக்குவரத்தை உறுதி செய்வதன் மூலம் இதை நிர்வகிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.


பூங்காவின் விலங்குகளைப் பாதுகாத்தல்


தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அதிகாரி (DFO) கூறினார். “முக்கியமான கடக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட ஆறு இடங்களில் எங்களிடம் விலங்கு உணர்வி அமைப்புகள் (animal sensor systems) உள்ளன. விலங்குகள் நெடுஞ்சாலைக்கு அருகில் வந்தால் இந்த அமைப்புகள் எங்களை எச்சரிக்கும். அவ்வாறு நிகழும்போது, ​​அந்தப் பகுதியில் போக்குவரத்து உடனடியாக ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால் இது ஒரு தற்காலிகத் தீர்வுதான்,” என்று அவர் கூறினார்.


இத்தகைய உணர்திறன் வாய்ந்த பகுதியில் இந்த அளவிலான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான கட்டுமானப் பணிகள், அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு ஒரு பெரிய இடையூறாக அமையும் என்று சில ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இருப்பினும், வனவிலங்கு அறக்கட்டளையைச் (Wildlife Trust of India (WTI)) சேர்ந்த டாக்டர் பர்மன், இந்த மேம்பாலம் நீண்டகாலப் பிரச்சினைக்கு “ஒரு நிரந்தரத் தீர்வாக” இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார். “கட்டுமானத்தின் போது ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளுடன், நான் இந்தப் துறையில் இருந்த 30 ஆண்டுகளில் கண்ட ஒரு பிரச்சினைக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும். காலப்போக்கில் போக்குவரத்து அதிகரித்து வருவதால், இந்தப் பிரச்சினை வளர்ந்து கொண்டேதான் இருந்தது என்றும் அவர் மேலும் கூறினார். இது ஒரு முக்கியமான சாலை, மேலும் நாம் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்பதால், வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த ஒரு வழி இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


  Original Article : How the Kaziranga Elevated Corridor aims to curb animal deaths in the National Park?. -Sukrita Baruah

Share:

காப்புரிமைகள் மற்றும் பொது சுகாதாரம் : இந்தியாவின் விருப்பத்தேர்வுகள் என்ன? -ஜே சாய் தீபக்

 நாட்டின் காப்புரிமை முறைமை (patent regime), தொழில்நுட்பத்தின் எந்தத் துறையிலும், புதிய குடுவையில் பழைய மது (old wine in a new bottle) என்ற சொல்லாடலைப் போன்று, பழைய கண்டுபிடிப்புக்கு புதிய காப்புரிமை வழங்குவதைத் தடுக்கிறது.சில தரப்புகளில் இருந்து ஆணவம் தூண்டிய (hubris-driven) வரி அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டும் (sabre-rattling) நடவடிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவாதம் இப்போது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இந்தியா தனது பொது சுகாதார இலக்குகளை முன்னேற்றுவதற்காகக் கிடைக்கும் அனைத்து சட்ட மற்றும் கொள்கை கருவிகளையும் (legal and policy levers) இதுவரை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. 


இந்தியன் எக்ஸ்பிரஸ் (IE), ஜனவரி 30, 2023 வெளியிட்ட நாளிதழில் 'காப்புரிமை பேரத்தை அமல்படுத்துதல்' என்ற தலைப்பிலான எனது முதல் கட்டுரையில், இந்தியாவின் சூழலில் அறிவுசார் சொத்துரிமைகளை (intellectual property rights (IPR)) அமல்படுத்துவதற்கும் பொது சுகாதாரக் கடமைகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது குறித்த எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் (Trade Related Aspects of Intellectual Property Right (TRIPS)) கீழ் இந்தியாவிற்கு அறிவுசார் சொத்துரிமைகளை (IPR) அமல்படுத்துவதற்கான கடமைகள் இருந்தபோதிலும், அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் (TRIPS) கீழ் பொது சுகாதாரத்தின் நிலையில் அதன் தேசிய நலனைப் பாதுகாக்கும் உரிமையும் அதற்கு உண்டு என்பதே இந்த கட்டுரையின் பரந்த சாராம்சம் ஆகும். குறிப்பிடும்படியாக, "காலவரம்பை நீட்டிக்கும் காப்புரிமைகள்" (evergreening patents) வழங்குவதையோ அல்லது அமல்படுத்துவதையோ தடுக்க அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (TRIPS) இணக்கமான சட்டப்பூர்வ வழிமுறைகள்மூலம் பொது சுகாதாரக் கவலைகளைப் பாதுகாப்பது "பாதுகாப்புவாதம்" (protectionism) என்று தகுதி பெறாது. தொடர்ச்சியாக, காலவரம்பை நீட்டிக்காத காப்புரிமை பெற்றவர்களின் (குறிப்பாக மருந்து மற்றும் விவசாயத் துறைகளில்) சட்டவிரோதமான மற்றும் சமத்துவமற்ற நடத்தையை ஊக்குவித்தல், அரசு, சமூகம் மற்றும் பொதுவான உற்பத்தியாளர்கள் போன்ற பிற பங்குதாரர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நியாயமான நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற நிலைப்பாட்டையும் எடுக்கப்பட்டது. இது துணை-உகந்த மற்றும் போட்டிக்கு எதிரான சந்தை விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


உண்மையான புத்தாக்கத்தையும் அதற்கான முதலீட்டையும் ஊக்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வாதிடுவது இந்த வாதத்தின் நோக்கமல்ல. மாறாக, அதன் சிகிச்சைத் திறனை மேம்படுத்தாத வகையில் ஒரு மருந்தை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், ஏறக்குறைய அதே மருந்துக்கு மீண்டும் ஒரு காப்புரிமை ஏகபோகத்தைப் பெறுவதிலிருந்து மருந்துப் புத்தாக்குநர்களைத் (pharmaceutical innovators) தடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது. எளிமையாகச் சொன்னால், நாட்டின் காப்புரிமை சட்டம், தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையுடனும் தொடர்புடைய பழைய கண்டுபிடிப்புக்கு புதிதாக இரண்டாவது காப்புரிமை வழங்குவதைத் தடுக்கிறது. ​​சில தரப்புகளிலிருந்து ஆணவத்தால் இயக்கப்படும் கட்டணக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தியா தனது பொது சுகாதார இலக்குகளை முன்னேற்றுவதற்கும், துஷ்பிரயோகம் நிறைந்த பசுமையான நடத்தையைத் தடுப்பதற்கும் கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட மற்றும் கொள்கை விதிமுறைகளையும் சேவையில் ஈடுபடுத்தாததால், இந்த விவாதம் இப்போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உலகளாவிய வடக்கிலிருந்து சில மருந்துப் புத்தாக்குநர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் நடத்தை அவர்களின் சொந்த நாடுகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதால், அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் (TRIPS) கீழ் இந்தியா தனது எல்லைக்குள் அதே நிறுவனங்களின் நடத்தையை உன்னிப்பாகக் கவனித்து அதன் காப்புரிமை கட்டமைப்பின் கீழ் விருப்பங்களை ஆராயும் உரிமையைப் பெறும்.


காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 47(4)-ன் கீழ், அரசாங்கம் (மத்திய மற்றும் மாநில) எந்தவொரு அதிகார வரம்பிலிருந்தும் காப்புரிமை பெற்ற மருந்தை அதன் சொந்த பயன்பாட்டிற்காகவோ அல்லது அரசாங்கத்தால் அல்லது அரசாங்கத்தின் சார்பாக பராமரிக்கப்படும் எந்தவொரு மருந்தகம், மருத்துவமனை அல்லது பிற மருத்துவ நிறுவனங்களில் விநியோகிக்கவோ இறக்குமதி செய்ய காப்புரிமை பெற்றவரின் ஒப்புதல் தேவையில்லை. அரசு சாரா நிறுவனத்திற்கு சுகாதாரத் துறையில் பொது சேவையின் பதிவு இருந்தால், அரசிதழ் அறிவிப்பின் மூலம் இந்த வசதியை நீட்டிக்க முடியும். காப்புரிமைச் சட்டத்தின்கீழ் உள்ள இந்த நெகிழ்வுத்தன்மை கவனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இது புற்றுநோய் மருந்துகள் போன்ற காப்புரிமை பெற்ற மருந்துகளின் போதுமான கிடைப்பதை உறுதிசெய்ய உதவும். குறிப்பாக, இது கிராமப்புறங்களில் மிகவும் முக்கியமானது. இத்தகைய பகுதிகளில் பெரும்பாலும் தரமான மூன்றாம் நிலை தனியார் சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. உயிருக்கு ஆபத்தான நோய்கள் இனி நகரங்களுக்குள் மட்டும் இருப்பதில்லை அல்லது அவற்றின் துன்பம் வசதியானவர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.


அடுத்து, காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 66-ன் கீழ், காப்புரிமை அல்லது காப்புரிமைதாரர் பயன்படுத்தும் முறை மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது பொதுவாக பொதுமக்களுக்கு பாதகமானது என்று அரசாங்கம் கருதினால், காப்புரிமையாளரின் தரப்பைக் கேட்டறிந்தபிறகு, பொதுநலன் கருதி ஒரு காப்புரிமையை அது ரத்து செய்ய மத்திய அரசுக்கு மிகவும் பரந்த அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரத்தை செயல்படுத்த, பொது சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற முக்கியமான பகுதிகளை பாதிக்கும் காப்புரிமைகளின் பட்டியலை தொகுக்க காப்புரிமை அலுவலகத்தை மத்திய அரசு கோரலாம். மேலும், காப்புரிமையாளரின் நடத்தை நுகர்வோருக்குப் பாதகமாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க, அத்தகைய காப்புரிமைகளை 'எவர்கிரீனிங்' (காலவரம்பை நீட்டித்தல்) நோக்கத்திற்காகவோ அல்லது அவை செயல்படுத்தப்படும் அல்லது வணிகமயமாக்கப்படும் விதத்திற்காவோ ஆய்வு செய்யலாம். இத்தகைய நடவடிக்கை, மருந்துத் துறையில் 'காலவரம்பை நீட்டித்தல்'/முறைகேடான காப்புரிமைகளை அல்லது முறைகேடான காப்புரிமையாளர்களுக்குச் சொந்தமான காப்புரிமைகளை ரத்து செய்வதற்காகத் தனியார் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நீண்டகால வழக்கமான வழக்கு நடவடிக்கைகளின் தேவையைத் தவிர்க்கக்கூடும்.


காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 92A-ன் கீழ், உலகளாவிய தெற்கின், குறிப்பாக ஆப்பிரிக்காவின் மருந்தகமாக இந்தியா இருந்து வருவதால், மருந்துத் துறையில் உற்பத்தித் திறன் போதுமானதாகவோ அல்லது இல்லாததாகவோ இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் பொது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு இந்திய ஜெனரிக் மருந்து உற்பத்தியாளருக்கு, ஆப்பிரிக்க நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் காப்புரிமை பெற்ற மருந்தைத் தயாரிக்க இந்திய காப்புரிமை அலுவலகத்தால் கட்டாய உரிமம் வழங்கப்படுவது சாத்தியமாகும். நிச்சயமாக, கட்டாய உரிமத்தை வழங்குவதற்காக காப்புரிமை பெற்றவருக்கு நியாயமான விதிமுறைகளில் இழப்பீடு வழங்கப்படலாம்.


காப்புரிமைச் சட்டத்தில் பொதுநலனுக்காக சொத்துக்களை கையகப்படுத்தும் அதிகாரம் தொடர்பான ஒரு விதியும் அடங்கும். பிரிவு 102-ன் கீழ், மத்திய அரசு, ஒரு அரசிதழ் அறிவிப்பின் மூலம், பொது நோக்கங்களுக்காக காப்புரிமை விண்ணப்பம் அல்லது ஏற்கனவே உள்ள காப்புரிமையையோ கையகப்படுத்த முடியும். அத்தகைய கையகப்படுத்துதலுக்கான இழப்பீட்டை அரசாங்கத்திற்கும் காப்புரிமை விண்ணப்பதாரர் அல்லது காப்புரிமைதாரருக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் மூலம் தீர்மானிக்கப்படலாம். அல்லது இரு தரப்பினரும் உடன்படத் தவறினால், ஒரு உயர்நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்கலாம்.


காப்புரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள விருப்பங்களுக்கு மேலதிகமாக, 2002-ம் ஆண்டு போட்டிச் சட்டத்தின் கீழ் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக தவறான காப்புரிமையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்தியாவின் பொது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சட்டப்பூர்வமாகக் கிடைக்கும் அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (TRIPS) இணக்க அதிகாரங்களின் பரந்த வரிசையுடன், உலகளாவிய வடக்கிலிருந்து "புதுமையாளர்கள்" மருந்துத் துறையில் தொடர்ச்சியான தீர்ப்புகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள காப்புரிமையின் தவறான பயன்பாட்டின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பொது சுகாதார கட்டமைப்பின் ஒரு பகுதியாக விரிவான காப்புரிமைக் கொள்கைகளை வகுக்க வேண்டிய நேரம் இது. இந்தப் பிரச்சினை முற்றிலும் சட்டபூர்வமானது அல்ல என்பதையும், முதலீடு மற்றும் வர்த்தகத்தின் கண்ணோட்டத்தில் தோற்றம் மற்றும் நடைமுறைவாதத்தின் பரிசீலனைகள் உள்ளன என்பதையும் ஒருவர் புரிந்துகொண்டாலும், தவறான பயன்பாட்டின் நடத்தைக்கு பதிலளிக்கவும், பழக்கமான குற்றவாளிகளுக்கு எதிராக பொது நலனுக்காகவும் ஒரு அளவீடு செய்யப்பட்ட கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.


எழுத்தாளர் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் இந்திய உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பயிற்சிபெறும் மூத்த வழக்கறிஞர். அவர் "இந்தியா தட் இஸ் பாரத்: காலனித்துவம், நாகரிகம், அரசியலமைப்பு" (India that is Bharat: Coloniality, Civilisation, Constitution) மற்றும் "இந்தியா, பாரத் மற்றும் பாகிஸ்தான்: ஒரு சாண்ட்விச் செய்யப்பட்ட நாகரிகத்தின் அரசியலமைப்பு பயணம்" (India, Bharat and Pakistan: The Constitutional Journey of a Sandwiched Civilisation) என்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.


 Original Article : Patent rights and public health: What are Bharat’s options? -J Sai Deepak

Share:

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

  

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO))-  12 உறுப்பு நாடுகளின் அமைப்பு (அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், நார்வே, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், அயர்லாந்து இல்லாத ஐரோப்பிய நாடுகள்)


முக்கிய அம்சங்கள்:


— இந்த யோசனையை டிரம்ப் முதன்முதலில் 2019-ஆம் ஆண்டிலேயே முன்வைத்தார். இருப்பினும், தற்போது இதில் அவர் காட்டும் ஆர்வம் மற்றும் சொன்னதைச் செய்துகாட்டும் அவரது வரலாறு (உதாரணமாக, கடந்த ஆண்டு ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் இந்த ஆண்டு வெனிசுலா மீதான தாக்குதல்) அவரது பேச்சை அலட்சியப்படுத்த முடியாது என்பதை உணர்த்துகிறது. வல்லரசு நாடுகள் சர்வதேச விதிகளை மதிக்காத ஒரு 'பனிப்போருக்கு பிந்தைய' உலகில், டிரம்ப் தனது வழக்கமான துணிச்சலுடன் செயல்படுகிறார். அதே நேரத்தில், மார்க் ஜேக்கப்சன் மற்றும் சாரா ஓல்ஸ்விக் போன்ற ஆர்க்டிக் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல, கிரீன்லாந்து நீண்டகாலமாகவே அமெரிக்காவின் ஆர்வத்திற்குரிய ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்று குறிப்பிடுகின்றனர். 


— கிரீன்லாந்து மீது அமெரிக்கா காட்டிய முதல் அதிகாரப்பூர்வ ஆர்வம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நார்வே மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இடையே 434 ஆண்டுகளாக இருந்த அரசியல் கூட்டணி முறிந்த பிறகு இது நடந்தது. அதன் பிறகு, 1814-ஆம் ஆண்டு போடப்பட்ட 'கீல் ஒப்பந்தத்தின்' (Treaty of Kiel) படி கிரீன்லாந்து டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அமெரிக்கா தனது எல்லைகளை விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருந்த அந்த காலத்தில், அதாவது 1832-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கலாம் என்று பரிந்துரைத்தார். அந்த காலகட்டத்தில் "லூசியானா கொள்முதல்" (Louisiana Purchase) போன்ற அமெரிக்காவின் நிலப்பரப்பு விரிவாக்க நடவடிக்கைகள் பொதுவாக இருந்தன. இந்த ஆர்வம் 'மன்ரோ கொள்கையை' (Monroe Doctrine) பின்பற்றி அமைந்தது; இக்கொள்கையை அண்மையில் டிரம்ப், "டான்ரோ கொள்கை" (Donroe Doctrine) என்று பெயரை மாற்றி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


— 1867-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் சீவார்ட், ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திய கையோடு, கிரீன்லாந்தையும் விலைக்கு வாங்க முன்மொழிந்தார். கனடாவை அமெரிக்க எல்லைக்குள் கொண்டு வரவும், அந்நாட்டை அமெரிக்காவுடன் இணைய வற்புறுத்தவும் அவர் இந்தத் திட்டத்தைத் தீட்டியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இத்தகைய நடவடிக்கையை பிரிட்டன் கடுமையாக எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.


— முதல் உலகப் போருக்கு முன்பு, கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் கட்டுப்படுத்தவும், ஜெர்மனி அவற்றை ராணுவத் தளங்களாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், கிரீன்லாந்து மற்றும் டேனிஷ் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளை வாங்க அமெரிக்கா முயன்றது. அமெரிக்கா போரில் ஈடுபடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 1917-ஆம் ஆண்டு, டேனிஷ் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும், கிரீன்லாந்தின் மீதான டென்மார்க்கின் ஆட்சி அதிகாரத்தை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 


— இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், அமெரிக்கா மீண்டும் கிரீன்லாந்தை (Greenland) கைப்பற்ற நினைத்தது. ஏப்ரல் மாதம் 1940-ஆம் ஆண்டில் நாஜி ஜெர்மனி டென்மார்க்கைக் கைப்பற்றிய பிறகு (ஆனால் கிரீன்லாந்தைக் கைப்பற்றவில்லை), அமெரிக்கா உடனடியாக கிரீன்லாந்தின் நூக் (Nuuk) நகரில் ஒரு தூதரகத்தை அமைத்தது. 1941-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம், நாஜிக்கள் கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதைத் தடுக்க அமெரிக்கா அங்கு ராணுவத் தளங்களை அமைக்க அனுமதி பெற்றது. போர் முடிந்த பிறகு, 1946-ஆம் ஆண்டில் அதிபர் ட்ரூமன் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அதிகாரப்பூர்வமாக முன்வந்தார், ஆனால் டென்மார்க் அந்த வாய்ப்பை நிராகரித்தது. அதற்குள், அமெரிக்காவிற்கு இருந்த முக்கிய அச்சுறுத்தல் நாஜி ஜெர்மனியிடமிருந்து சோவிய ஒன்றியத்திற்கு மாறியிருந்ததாகக் கூறப்படுகிறது.


— வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு இடையே நிலவிய பனிப்போரின்போது (Cold War), அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது என்று மீண்டும் கருதியது. நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கும், கிரீன்லாந்தும் அமெரிக்காவின் நலன்களுக்கான கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டன. 1951-ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விளைவாக, கிரீன்லாந்து மக்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படாமல் 'தூலே விமான தளம்' (Thule Air Base) உருவாக்கப்பட்டது (இது தற்போது 'பிடுஃபிக் விண்வெளி தளம்' என்று அழைக்கப்படுகிறது). பனிப்போர் முழுவதும், சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக அமெரிக்கா கிரீன்லாந்தைப் பயன்படுத்தியது. இது நேட்டோவின் 'வடக்குப் பாதுகாப்பு கவசத்தின்' ஒரு பகுதியாக இருந்தது. அணு ஆயுதப் போட்டி தீவிரமடைந்தபோது, டென்மார்க் நாடு 1957-ஆம் ஆண்டில்  "தங்கள் நாடு அணு ஆயுதங்கள் இல்லாத பகுதி" (Denmark’s 1957 nuclear weapons-free zone policy) என்று கொள்கை முடிவை அறிவித்திருந்தது. இருப்பினும், அமெரிக்கா அந்த விதியை மீறி கிரீன்லாந்தில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


— சோவியத் ஒன்றியம் (USSR) வீழ்ச்சி அடைந்தபிறகு, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாக இருந்த காலத்தில், கிரீன்லாந்தின் முக்கியத்துவம் மாறியது. அப்போது கிரீன்லாந்து பகுதிகள், வெறுமனே ரஷ்யாவை எதிர்ப்பதற்கான இடமாக இல்லாமல், கப்பல் போக்குவரத்து வழிகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆர்க்டிக் திட்டங்களுக்கான தளமாகவே பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதுடன், சீனா-ரஷ்யா இடையிலான நெருக்கமான உறவும் அமெரிக்காவின் இராணுவ ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளது. இதை 2019-ஆம் ஆண்டிலேயே அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெளிவாகக் குறிப்பிட்டார். ஆர்க்டிக் கூட்டமைப்பு இனி சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த முடியாது என்றும், ஏனெனில் சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் எச்சரித்தார். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், இது வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, கூட்டங்கள் நடத்தப்பட்டு, இராணுவப் படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


— ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு நலன்கள் இருந்தாலும், அவர்களை எதிர்ப்பதற்காக ஒரு ஜனநாயக நாட்டின் இறையாண்மையையோ அல்லது சுயநிர்ணய உரிமையையோ மீறுவது நியாயமாகாது. இந்தக் கொள்கைகளை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஆதரித்து வருகிறது. இப்பகுதியை கூட்டாகப் பாதுகாக்க அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு இருப்பது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கும். அத்தகைய ஒரு கூட்டணி ஏற்கனவே இருக்கலாம் — இது நன்கு தெரிந்த நான்கு எழுத்து சுருக்கப் பெயரால் (NATO) குறிக்கப்படுகிறது.


— அமெரிக்கா கிரீன்லாந்தை (Greenland) வாங்குவதற்கு அனுமதி கிடைக்கும் வரை, ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது இறக்குமதி வரிகளை உயர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான அந்த ஆர்க்டிக் தீவு குறித்த சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.


— பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social - social media platform created by Donald Trump) பதிவில் அறிவித்துள்ளார். இந்த நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்பை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


— ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் இறக்குமதி வரி (tariffs) 25% ஆக உயர்த்தப்படும் என்றும், கிரீன்லாந்தை வாங்குவதற்கு அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை எட்டும்வரை இந்த வரி அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார். கிரீன்லாந்தின் முக்கிய இடவமைப்பு மற்றும் அங்குள்ள கனிம வளங்கள் காரணமாக, அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்று ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் அந்தத் தீவைக் கைப்பற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை என்கின்றனர். டென்மார்க் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐரோப்பிய நாடுகள் இந்த வாரம் அந்தத் தீவிற்குத் தங்கள் படைகளை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— டென்மார்க் நாட்டின் உறுப்பினராக இருப்பதால், கிரீன்லாந்தும் நேட்டோ (NATO) அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையிலான குறுகியபாதை இந்த ஆர்க்டிக் தீவின் வழியாகச் செல்வதால், இது அமெரிக்க இராணுவத்திற்கும் அதன் ஏவுகணை எச்சரிக்கை அமைப்பிற்கும் மிகவும் முக்கியமான இடமாக உள்ளது. 


— ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து, உலகின் மிகப்பெரிய தீவாகும். இது பூமியிலேயே மக்கள் தொகை மிகக்குறைவாகக் கொண்ட பகுதியாகும். அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள இந்தத் தீவில், உலகின் மிக வடக்கே அமைந்துள்ள நிலப்பகுதியான 'காஃபெக்லூபென் தீவு' (Kaffeklubben Island) இடம்பெற்றுள்ளது.


— கிரீன்லாந்து கனிம வளம் மிக்கது. அங்கு தங்கம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற தாதுக்கள் உள்ளன. மேலும், டிஸ்ப்ரோசியம் (dysprosium), நியோடைமியம் (neodymium) மற்றும் டெர்பியம் (terbium) போன்ற முக்கியமான அரிய மண் கனிமங்களும் (rare earth minerals) அங்கு அதிகளவில் உள்ளன. உலகில் உள்ள 34 வகையான அபூர்வ மண் கனிமங்களில், சுமார் 23 கனிம வகைகள் அங்கு காணப்படுகின்றன. இதனால் சுரங்க நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டுகின்றன.


— டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தில், டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ளன. அதன் பொருளாதாரம் முக்கியமாக மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளது, மேலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% டென்மார்க் அரசாங்கத்தின் மானியங்கள் மூலம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.


— கிரீன்லாந்து புவியியல் ரீதியாக வட அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருந்தாலும், கடந்த 300 ஆண்டுகளாக டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொடக்கத்தில் ஒரு குடியேற்ற நாடாக (colony) இருந்த கிரீன்லாந்து தீவு, தனது ஆரம்பகால வரலாற்றில் மற்ற உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாத நிலையிலுமே இருந்ததாகக் கூறப்படுகிறது


— 1953-ஆம் ஆண்டு, கிரீன்லாந்து டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாறியது மற்றும் அங்குள்ள மக்களுக்கு டென்மார்க் குடியுரிமை கிடைத்தது. 1979-ல், கிரீன்லாந்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது; இதன் மூலம் அந்நாட்டு மக்கள் தங்கள் உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றனர். அதேவேளையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்பை மட்டும் டென்மார்க் தக்கவைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கின்றனர்.


Original Article : What is the North Atlantic Treaty Organization (NATO)? -Roshni Yadav

Share:

இந்தியாவின் குடியரசு தினமாக ஜனவரி 26 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? -ரோஷ்னி யாதவ்

  முக்கிய  அம்சங்கள்:


— உண்மையான போர்க்களத்தில் ராணுவத் தளவாடங்கள் எந்த வரிசையில் பயன்படுத்தப்படுமோ, அதே வரிசையில் பொதுமக்கள் பார்ப்பதற்கு காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகக் கூறப்படுகிறது


— படைப்பிரிவுகள் போர் ஒத்திகை அணிவகுப்பு வரிசையில் கர்தவ்ய பாதை (Kartavya Path) வழியாக முன்னேறிச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதில் முதலில் உளவுப் பிரிவுகளும், அவர்களைத் தொடர்ந்து தளவாடங்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் முழு போர் சீருடைகளுடன் அணிவகுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.


—முதலில் கண்காணிப்பு தளங்களின் வாகனங்கள் அணிவகுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ட்ரோன்கள் மற்றும் எதிர்ப்பு ஏவுகணைகள் (anti-tank missiles) கொண்ட நடமாடும் உளவு வாகனங்கள் இடம்பெறும் என்றும் அத்துடன் அப்பாச்சி (Apache) மற்றும் பிரசாந்த் (Prachand) போன்ற இலகுரக போர் ஹெலிகாப்டர்களின் வான்வழி சாகசங்களும் நடைபெறும் என்கின்றனர்.


— இதனைத் தொடர்ந்து பீரங்கிகள் (Tanks), காலாட்படை போர் வாகனங்கள் (Boyevaya Mashina Pekhoty (BMP)), பீரங்கிப் படைகள் (Artillery), வான் பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ஏவுகணைகள், இவற்றுக்குத் தேவையான தளவாட வாகனங்கள், இயந்திர நாய் (Robotic dogs), இரட்டைத் திமில் ஒட்டகங்கள் (Bactrian camels) மற்றும் ஜான்ஸ்கர் குதிரைகள் (Zanskar ponies) ஆகியவற்றின் அணிவகுப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


— இறுதியாக, காலாட்படைப் பிரிவுகளும், இந்த ஆண்டு அணிவகுப்பில் முதன்முறையாக அறிமுகமாகும் 'பைரவ்' இலகுரக அதிரடிப் படைப்பிரிவுகளும் (Bhairav light commando battalion) அணிவகுத்து வர வாய்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


— இந்திய ராணுவத்தின் சார்பில் 61-வது காவல்படை (61 Cavalry) குதிரைப்படைப் பிரிவும், ஒரு போர் வியூகப் பிரிவும் பங்கேற்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அணிவகுப்பில் பின்வரும் ராணுவ அமைப்புகளின் பலம் காட்சிப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அவை,  அணிவகுப்புப் பிரிவுகள்: ஏழு தரைப்படை வீரர்களின் அணிவகுப்புகள், அதிவேக கண்காணிப்பு வாகனம் (High Mobility Recce Vehicle (HMRV)), T-90 பீஷ்மா மற்றும் அர்ஜுன் போர் பீரங்கிகள், காலாட்படை போர்வாகனம் -II (BMP-II)) ரக கவச வாகனங்கள், நாக் ஏவுகணை அமைப்பு (Nag Missile System (NAMIS)), அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும் வாகனங்கள் (All-terrain vehicles). இயந்திர கோவேறு கழுதைகளுடன் கூடிய இலகுரக தாக்குதல் வாகனங்கள், பனிப்பகுதிக்கான வாகனம் (Glacier All-Terrain Vehicle Glacier (ATV)), அதிநவீன இலகு ஹெலிகாப்டர் - துருவ் (Advanced Light Helicopter (ALH) Dhruv) ஹெலிகாப்டர், சக்திபான் (Shaktiban), அதிநவீன இழுத்துச் செல்லும் கனரக பீரங்கி அமைப்பு (Advanced Towed Artillery Gun System (ATAGS)) மற்றும் தனுஷ் பீரங்கிகள், பினாகா (Pinaka) ராக்கெட் அமைப்பு, பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணை, ஆகாஷ் மற்றும் பராக்-8 (Barak-8) தரைவழி-விண்வெளி ஏவுகணைகள், ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையம் (Integrated Operational Centre (IOC)). தானியங்கி தரைவழி வாகனங்கள் (Unmanned Ground Vehicle (UGV)), ட்ரோன் சக்தி (Drone Shakti) ஆகிய படைகள் அணிவகுக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


— இந்த அணிவகுப்பில் ஜான்ஸ்கர் குதிரைகள், இரட்டைத் திமில் கொண்ட ஒட்டகங்கள் மற்றும் கையாளுபவர்களுடன் கூடிய மோப்ப நாய்கள் உள்ளிட்ட விலங்குப் படைகள் பங்கேற்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஸ்காட்ஸ் (Scouts), ராஜ்புத், அசாம், ஜம்மு & காஷ்மீர் இலகு காலாட்படை படைப்பிரிவு (Jammu and Kashmir Light Infantry (JAK LI)), பீரங்கிப் படை (Artillery), பைரவ் மற்றும் லடாக் ஸ்காட்ஸ் ஆகிய ராணுவப் பிரிவினர், கைகளை உயர்த்தி வீசி நடக்கும் 'ஊஞ்சா கடம் தால்' (Uncha Kadam taal) முறையில் மேடையைக் கடந்து அணிவகுத்துச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. 


— போர்க்களக் காட்சியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் போன்ற வான்வழிப் படைகளும், அதைத் தொடர்ந்து டி-90 (T-90) மற்றும் அர்ஜுன் பீரங்கிகளின் கவசப் படைகளும், காலாட்படை போர் வாகனங்கள்)-II (Boyevaya Mashina Pekhoty (BMP)-II) மற்றும் நாக் ஏவுகணை அமைப்பு-II (Nag Missile System (NAMIS-II)) அமைப்புகளைக் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட பிரிவுகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


— அடுத்ததாக, கண்காணிப்பு அமைப்புகள் மூலம் போர்க்களத்தைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையம் (Integrated Operational Centre) காட்சிப்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து, தானியங்கி தரைவழி வாகனங்கள் (UGVs), அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும் வாகனங்கள் (ATVs), இலகுரக தாக்குதல் வாகனங்கள், இயந்திர கோவேறு கழுதைகள், தளவாட வாகனங்கள், இயந்திர நாய்கள், பாக்ட்ரியன் ஒட்டகங்கள் மற்றும் ஜான்ஸ்கர் குதிரைகள் ஆகியவை அணிவகுத்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.


— இறுதியாக, இந்த ஆண்டு முதன்முறையாகக் பங்கேற்கும் பைரவ் இலகுரக அதிரடிப் படைப்பிரிவு மற்றும் காலாட்படை வரிசைகளுடன் இந்த அணிவகுப்பு நிறைவடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு, வந்தே மாதரம் பாடல் உருவான 150-வது ஆண்டைக் குறிக்கும் விதமாக அமையும் என்றும் கர்தவ்ய பாதையில் (Kartavya Path) உள்ள அரங்குகளில், இப்பாடலின் முதல் வரிகளை விளக்கும் பழமையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், முதன்மை மேடையில் அமைக்கப்படும் மலர் அலங்காரங்கள், இப்பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும் என்று கூறப்படுகிறது.


— இந்திய தேசிய காங்கிரஸ் தனது லாகூர் மாநாட்டை 1929-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தியது. டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி அன்று, "முழுமையான சுயராஜ்யம்" எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பூர்ண ஸ்வராஜ் (Poorna Swaraj) தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவின் சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், இந்திய மக்களைச் சுரண்டி, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அந்தத் தீர்மானம் குறிப்பிட்டது. எனவே, இந்தியா ஆங்கிலேய அரசுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு, முழு சுதந்திரம் அடையவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


— இந்த சுதந்திரப் பிரகடனம் 1930-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. காங்கிரஸ் இந்தியர்களை அந்த நாளை 'சுதந்திர தினமாக' கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இந்தத் தீர்மானம் பூர்ண ஸ்வராஜ் தினத்திற்குப் பிறகு தொடங்கிய காந்திய அகிம்சை போராட்ட முறைகள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 


— 1930-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைக்கும் வரை, ஜனவரி மாதம் 26-ஆம் தேதி 'சுதந்திர தினம்' அல்லது 'முழு சுதந்திர தினமாக' கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் தங்களின் இறையாண்மைக்கான உறுதியை அன்று புதுப்பித்துக் கொண்டனர்.


— இறுதியாக, ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி, 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. பின்னர், இந்திய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவர ஒரு தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தபோது, ஜனவரி மாதம் 26-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில், அந்தத் தேதிக்கு ஒரு வலுவான தேசிய முக்கியத்துவம் இருந்தது என்றும் கூறப்பட்டது. மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட முழு சுதந்திரம் (Poorna Swaraj) பிரகடனத்தின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரசியலமைப்பு அமைந்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.


Original Article : Why was January 26 chosen to be India’s Republic Day? -Roshni Yadav

Share:

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி: உச்சநீதிமன்றம், உயர்கல்வி மற்றும் மாணவர்களின் நலன் குறித்து…

  உயர்கல்வி நிறுவனங்களுக்கு அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் (systemic reforms) தேவைப்படுகின்றன.


மாணவர் தற்கொலைகள் தொடர்பான ஒரு வழக்கில்,  உச்சநீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு  9 வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உயர் கல்வி தனியார்மயமாக்கல் மூலம் வேகமாக விரிவடைந்துள்ள போதிலும், அதன் தரம் அதற்கு ஈடாக மேம்படவில்லை என்பதையும், இது மாணவர்களுக்கு நிதி, சமூக மற்றும் கல்வி ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி, நீதிமன்றம் 9வழிகாட்டுதல்களைப் வழங்கியுள்ளது: அவற்றில் ஏழு, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான பதிவுகளைப் பராமரித்தல், அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. மற்ற இரண்டு வழிகாட்டுதல்கள், பதிவாளர்கள், துணைவேந்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதைக் கட்டாயமாக்குகின்றன. மாணவர்களின் நலனுக்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று நீதிமன்றம் கருதுவது தெளிவாகத் தெரிகிறது.



அரசியலமைப்பின் 142-வது பிரிவு உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதிகாரங்களை வழங்குகிறது ?

              142-வது பிரிவு முழுமையான நீதியை (complete justice) உறுதி செய்வதற்காகத் தேவையான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்களை (special powers) வழங்குகிறது. 


இந்தியா முழுவதும் கள நிலவர அறிக்கைகள், பல பொது உயர்கல்வி நிறுவனங்கள், குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில், 50% பணியிடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன. சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த உதாரணமாகும். ஏனெனில், இது தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான மாநில அரசின் உயர்கல்வி நிறுவனம் ஆகும். உயர்கல்விச் சேர்க்கையில் நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் ஒரு மாநிலமாக உள்ளது. மேலும், பெண்கல்வியில் ஒரு சிறந்த சாதனைப் பதிவையும் கொண்டுள்ளது. இத்தகைய புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகளில் தேர்வுகள் மூலம் பட்டங்களை வழங்குவதுடன், தரமான ஆராய்ச்சிக்காகவும் தமிழ்நாடு அனைவராலும் அறியப்பட்டுள்ளது. 1970-களின் பிற்பகுதியில் கற்பித்தல் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. கடந்த பத்தாண்டுகளில் கற்பித்தல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும், கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு குறைவாகவே உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது. தத்துவம், தாவரவியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையங்கள் இருப்பதாகக் கூறி வருகிறது. ஆனால், அவை இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன. இன்று, மாநிலம் தனது பொதுப் பல்கலைக்கழகங்களில் இருந்து பயன்படுத்திக்கொள்ளக்கூடிய, தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட மானுடவியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்பட்டுவரும் ஒரு ஆளுநரால் துணைவேந்தர் நியமனங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் (Presidential reference on a Governor’s powers) மீது நீதிமன்றம் கூறியுள்ள தெளிவற்றத்தன்மையை, துணைவேந்தர் பதவியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு முன்பு விரிவாக விளக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும். மேலும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு  ஒன்றிய அரசின் ஆதரவு தேவைப்படலாம். தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கண்டுபிடிப்பது கடினமான பணியாக இருக்கலாம். ஊழல் மற்றும் அரசியல்-கருத்தியல் அடிப்படையிலான நியமனங்கள் தரத்தைப் பாதித்துள்ளன. அவை கவனிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் நிர்ணயித்த நான்குமாத காலக்கெடு சவாலானதாகத் தோன்றினாலும், ‘வளர்ந்த இந்தியா’ (Viksit Bharat) போன்ற இலக்குகளை அடைவதற்காக, முதலில் உயர்கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த உத்தரவில் குறிப்பிடபட்டுள்ளது.


Original Article : Crisis in education: On the Supreme Court, higher education and student well-being


Share:

குழந்தை கடத்தலை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? -சி.பி.பி. ஸ்ரீவஸ்தவா

 பலேர்மோ நெறிமுறை (Palermo Protocol) என்றால் என்ன? 2023-ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதா, சட்டத்தில் ஆட்கடத்தல் (trafficking) எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் குழந்தைகளைச் சுரண்டலிலிருந்து (children from exploitation) எவ்வாறு பாதுகாக்கிறது? உச்சநீதிமன்றம் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது? சுரண்டலை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான ஒன்றிய-மாநில அரசு உறவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?


தற்போதைய செய்தி:


குழந்தைக் கடத்தல் என்பது இந்தியாவில் கவலைக்குரியதாக இருந்து வருகிறது. கே. பி. கிரண் குமார் vs மாநில அரசு (K. P. Kiran Kumar versus State) வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பில், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதுடன், குழந்தை கடத்தல் என்பது அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் குழந்தைகளின் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை (right to life) மீறுகிறது என்று கூறியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2022ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 3,098 குழந்தைகள் கடத்தலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2024 மற்றும் மார்ச் 2025-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியா முழுவதும் குழந்தைத் தொழிலாளர், கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் இருந்து 53,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர். இருப்பினும், 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய குற்றங்களுக்கான தண்டனை விகிதம்  4.8%-ஆக மட்டுமே இருந்தது.


குழந்தை கடத்தல் (child trafficking) என்றால் என்ன?


சர்வதேச அளவில், 2000ஆம் ஆண்டின் பலேர்மோ நெறிமுறை (ஐ.நா. மனிதர்களை, குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் கடத்துவதைத் தடுத்தல், ஒடுக்குதல் மற்றும் தண்டிப்பதற்கான நெறிமுறை) குழந்தைக் கடத்தலை, 'சுரண்டல் நோக்கத்திற்காக ஒரு குழந்தையை கொண்டு செல்லுதல், மாற்றுதல், அடைத்து வைத்தல் அல்லது பெற்றுக்கொள்ளுதல்' என வரையறுக்கிறது. தற்போது, ​​பாரதிய நியாய சன்ஹிதா (Bhartiya Nyaya Sanhita (BNS)) 2023-ஆம் ஆண்டின் பிரிவு 143, ஒருவர் அச்சுறுத்தல்கள், வன்கொடுமை, மோசடி, ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது சம்மதத்தைப் பெறுவதற்காகப் பலன்களைக் கொடுப்பதன் அல்லது பெறுவதன் மூலமாகவோ, ஒரு நபரைச் சுரண்டலுக்காக ஆள்சேர்ப்பு செய்தல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லுதல், அடைக்கலம் கொடுத்தல், மாற்றுதல் அல்லது பாதிக்கப்பட்டவரைக் கட்டுப்படுத்தும் ஒருவரிடமிருந்து சம்மதம் பெறுவதற்காகப் பணம் அல்லது சலுகைகள் வழங்குவது போன்றவை மனிதக் கடத்தல் ஆகும் என்று கூறுகிறது. 'சுரண்டல்' (exploitation) என்ற சொல் ஒரு விரிவான விளக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் அது உடல்ரீதியான மற்றும் பாலியல் சுரண்டலையும் உள்ளடக்கியது. இது எந்தவொரு அடிமைத்தனம் (servitude), கொத்தடிமைத்தனம் அல்லது உறுப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றுதல் போன்ற வடிவங்களையும் உள்ளடக்கியது.


குழந்தைகளின் உரிமைகள் (rights of children) என்ன?


அரசியலமைப்புச் சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக விரிவான விதிகளை வழங்குகிறது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 23 மற்றும் 24 ஆகியவை மனிதக் கடத்தல், யாசகம் பெறுதல், கட்டாய உழைப்பு மற்றும் அபாயகரமான தொழில்களில் வேலைக்கு அமர்த்துதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை அளிக்கின்றன. இந்த விதிகளைத் தவிர, குழந்தைகள் தவறாக நடத்தப்படாமல் இருப்பதையும், அவர்கள் ஆரோக்கியமான முறையில் மற்றும் சுதந்திரம் மற்றும் கண்ணியமான சூழ்நிலைகளில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 39-ன் உட்பிரிவுகள் (e) மற்றும் (f) ஆகியவற்றின்கீழ், அவர்கள் சுரண்டப்படுவதிலிருந்தும், புறக்கணிக்கப்படுவதிலிருந்தும் அல்லது கைவிடப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள்.


பாரதிய நியாய சன்ஹிதாவின் 98 மற்றும் 99 பிரிவுகள் குறிப்பாக சிறார்களை 'விற்பது மற்றும் வாங்குவது' (selling and buying) குறித்துப் பேசுகின்றன. மறுபுறம், பாலியல் சுரண்டலுக்கான ஆட்கடத்தலைத் தடுப்பது 1956ஆம் ஆண்டு ஒழுக்கக்கேடான போக்குவரத்து தடுப்பு (Immoral Traffic (Prevention) Act)) சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், குழந்தைக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவை 2015ஆம் ஆண்டு சிறார் நீதி குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு (the Juvenile Justice (Care and Protection of Children) Act) சட்டத்தின் கீழ் வருகிறது. 2013ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டமும் (Criminal Law Amendment Act), பாலியல் சுரண்டல், அடிமைத்தனம், கொத்தடிமை, கட்டாய உழைப்பு மற்றும் உறுப்பு நீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் ஆட்கடத்தலைத் தெளிவாக வரையறுப்பதன் மூலம் அதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சம்மதம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது ஆட்கடத்தலை ஒரு குற்றமாகவே கருதுகிறது.


2012ஆம் ஆண்டு  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences (POCSO) Act) இந்த விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை உள்ளடக்கிய குற்றங்களை வரையறுப்பதைத் தவிர, இந்தச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. இந்த சட்டத்தின் கீழ் கடுமையான வழக்குகளில் ஆயுள் மற்றும் மரண தண்டனை வழங்கப்படலாம். இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, இந்தச் சட்டம் பாலின பாகுபாடின்றி (gender-neutral) அனைவருக்கும் பொருந்தும் தன்மையாகும். வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக, போக்சோ சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 400 விரைவு நீதிமன்றங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்கள், ஒவ்வொரு நீதிமன்றமும் ஆண்டுக்கு 165 வழக்குகளைத் முடித்து வைப்பதை    இலக்காக நிர்ணயித்துள்ளன.


நீதித்துறை அணுகுமுறை எப்படி இருந்துள்ளது?


1990ஆம் ஆண்டு விஷால் ஜீத் vs இந்திய (Vishal Jeet versus Union of India) ஒன்றியம் வழக்கில், கடத்தல் மற்றும் குழந்தை விபச்சாரம் ஆகியவை கடுமையான சமூக-பொருளாதார பிரச்சனைகள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கு ஒரு தடுப்பு மற்றும் மனிதாபிமான அணுகுமுறை தேவை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. எம்.சி. மேத்தா vs  தமிழ்நாடு அரசு (M. C. Mehta versus State of Tamil Nadu), 1996ஆம்  ஆண்டு வழக்கில், அபாயகரமான தொழில்களில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடைசெய்யும் நோக்கில் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. மேலும்,2011ஆம்  ஆண்டு பச்ச்பன் பச்சாவ் அந்தோலன்  vs  இந்திய ஒன்றியம் (M. C. Mehta versus State of Tamil Nadu) வழக்கில், குழந்தைகளிடம் பரவலாக நடைபெறும் சுரண்டல் மற்றும் கடத்தலைச் சமாளிப்பதற்காக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.


அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?


பாதிக்கப்பட்டவர்களின் சமூக-பொருளாதார பாதிப்புகள், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களை, கருத்தில் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றங்களுக்கு பலியாவதிலிருந்தும் பாதுகாக்க சமூகம் தவறிவிட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். வறுமை, வேலையின்மை, இடம்பெயர்வு, பேரழிவுகள் மற்றும் குடும்ப அமைப்பின் முறிவு போன்ற காரணிகள் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்குகின்றன. இது கடத்தல் சங்கிலியை வலுப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களின் பரவல் இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளன. ஏனெனில், போலி வேலை அல்லது 'மாதிரியமைத்தல்' (modelling) வாய்ப்புகள் என்ற பெயரில் ஆட்களைச் சேர்ப்பதில் இது அதிகமாகக் காணப்படுகிறது. அரசாங்கம் முதலில் வலுவான அமைப்புகள் மூலம் குழந்தைகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். கடத்தல்காரர்களுக்கு தண்டனை குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களைக் கடுமையாகத் தண்டித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் என்பதால், ஒரு வலுவான ஒன்றிய-மாநில அரசு உறவும் முக்கியமானதாகிறது.


C. B. P. ஸ்ரீவஸ்தவா டெல்லியில் உள்ள பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ளார்.


 Original Article : How should India tackle child trafficking? -C.B.P. Srivastava

Share:

இந்தியா உலகளாவிய வயது வந்தோரின் நீரிழிவு நோய் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. -மானஸ் ஸ்ரீவஸ்தவா

தற்போதைய செய்தி : 


“The Lancet Diabetes and Endocrinology” இதழ் நடத்திய ஆய்வின்படி, 2024-ஆம் ஆண்டில் 9 கோடி சர்க்கரை நோயாளிகளுடன் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், 14.8 கோடி நோயாளிகளுடன் சீனா முதலிடத்திலும், 3.9 கோடி நோயாளிகளுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


முக்கிய அம்சங்கள்:


நீரிழிவு நோய் என்றால் என்ன?


உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation (WHO)) கருத்துப்படி, நீரிழிவு நோய் (Diabetes) என்பது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாதபோது ஏற்படும் ஒரு நீண்டகால நோயாகும். இன்சுலின் (Insulin)  என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோய் முறையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கும். இது காலப்போக்கில் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் உட்பட உடலின் பல உறுப்புகளைப் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. 


பாதங்களில் ஏற்படும் நரம்பு பாதிப்போடு இரத்த ஓட்டம் குறைவதும் சேரும்போது, அது பாதப் புண்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது; இது சில நேரங்களில் கால் துண்டிப்பிற்கும் (amputation) வழிவகுக்கலாம். சர்க்கரை நோய் கண்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களையும் பாதித்து, 'நீரிழிவு விழித்திரை நோய்' (diabetic retinopathy) போன்ற பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், இது கண்பார்வை இழப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.  அத்துடன், சிறுநீரக செயலிழப்பிற்கு சர்க்கரை நோய் ஒரு முக்கியமான காரணியாக உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


நீரிழிவு நோயின் அறிகுறிகள்:


  • அதிக தாகம் எடுத்தல்


  • வழக்கத்தை விட அதிக முறை சிறுநீர் கழித்தல்


  • மங்கலான பார்வை


  • சோர்வாக உணருதல்


  • எதிர்பாராமல் உடல் எடை குறைதல்


இந்த ஆய்வு எதை வெளிப்படுத்துகிறது?


சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், உலகின் நீரிழிவு நோய் பாதிப்புகளில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 2050-ம் ஆண்டிற்குள், அமெரிக்காவைவிட பாகிஸ்தானில் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருக்கக்கூடும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


2024-ஆம் ஆண்டில், உலகில் உள்ள 20 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் 11 சதவீதத்திற்கும் அதிகமானோர் (சுமார் 58.9 கோடி மக்கள்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 13 சதவீதமாக, அதாவது சுமார் 85.3 கோடி அளவிற்கு பதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2024-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள மக்கள்தொகையில் ஒன்பது பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) பாதிப்பு இருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய  900 மில்லியனாக உயரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


2024-ஆம் ஆண்டில், 20 முதல் 79 வயதுக்குட்பட்ட நீரிழிவு நோயாளிகள் சீனாவில்தான் அதிக எண்ணிக்கையில் (148 மில்லியன்) இருந்தனர்; அதனைத் தொடர்ந்து இந்தியா (90 மில்லியன்) மற்றும் அமெரிக்காவில் (39 மில்லியன்) இருந்தனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


2024-ஆம் ஆண்டில், உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் நான்கு பங்கிற்கும் அதிகமானோர் (அதாவது 80.64 சதவீதம் பேர்) குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 2050-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் அதிகரிக்கப்போகும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த நாடுகளிலேயே ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மக்கள்தொகைப் பெருக்கம், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொடர்ந்து அதிகரித்துவரும் நகரமயமாக்கல் ஆகியவையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயருவதற்கு முக்கியக் காரணங்களாகும். உலகளவில் நீரிழிவு நோயின் தாக்கத்தைக் கண்காணிக்க, போதிய வசதிகள் இல்லாத இடங்களில் தரவுகளைச் சேகரிக்க ஆதரவு தேவைப்படுகிறது. ஏனெனில், இத்தகைய இடங்களில்தான் வரும் காலங்களில் சர்க்கரைநோய் பாதிப்பு பெருமளவில் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.


உலகெங்கிலும் 75 முதல் 79 வயதுடைய முதியவர்களிடையே நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகபட்சமாக சுமார் 25 சதவீதத்தை எட்டியுள்ளது. மேலும், பெண்களைவிட ஆண்களிடையேயும், கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களிலும் இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நீரிழிவு நோய் பாதிப்பு நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகமாகவும் (11.46 சதவீதம்), அதைத் தொடர்ந்து அதிக வருமானம் கொண்ட நாடுகளில் (10.21 சதவீதம்) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் (7.47 சதவீதம்) குறைவாகவும் காணப்பட்டது.


2000-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதைக் குறைக்க, எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் மத்தியில் இன்னும் தீவிரமான மற்றும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


நீரிழிவு நோயின் வகைகள்?


வகை 1 நீரிழிவு நோய்


வகை 1 நீரிழிவு நோய் (முன்பு இன்சுலின் சார்ந்த, இளம் வயது அல்லது குழந்தைப் பருவத்தில் தொடங்கும் நீரிழிவு நோய் என அழைக்கப்பட்டது), உடலில் போதிய இன்சுலின் உற்பத்தி இல்லாததால் ஏற்படுகிறது. இதற்கு தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

வகை 2 நீரிழிவு நோய்


வகை 2 நீரிழிவு நோய், உடல் ஆற்றலுக்காக சர்க்கரையை (குளுக்கோஸ்) பயன்படுத்தும் முறையைப் பாதிக்கிறது. இது உடலில் இன்சுலின் பயன்பாட்டைத் தடுக்கிறது. இதற்குச் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்கின்றனர். 


காலப்போக்கில், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) உடலுக்கு, குறிப்பாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சமீபகாலம்வரை, இந்த வகை நீரிழிவு நோய் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்டது. ஆனால், இப்போது குழந்தைகளிடமும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.


கர்ப்பகால நீரிழிவு நோய்


கர்ப்பகால நீரிழிவு என்பது சாதாரண அளவைவிட அதிகமாகவும், ஆனால் முழுமையான நீரிழிவு நோயாகக் கருதப்படும் அளவைவிடக் குறைவாகவும் இருக்கும் இரத்த சர்க்கரை நிலையாகும். இந்த வகை நீரிழிவு நோய் கர்ப்ப காலத்தில் மட்டுமே ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.


நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை


நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சாதாரண அளவைவிட அதிகமாக இருக்கும், ஆனால் அது இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) என்று சொல்லும் அளவுக்கு மிக அதிகமாக இருக்காது. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், எதிர்காலத்தில் இரண்டாம் வகை  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.


மோனோஜெனிக் நீரிழிவு நோய்


ஒற்றை மரபணு நீரிழிவு நோய்


இது ஒரு சாதாரண வகை நீரிழிவு நோய் அல்ல; இது ஒருவருடைய உடம்பில் உள்ள ஒரே ஒரு மரபணுவில் (Gene) ஏற்படும் மாற்றத்தால் வருகிறது.


வகை 5 நீரிழிவு நோய்


கடந்த ஆண்டு, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (International Diabetes Federation (IDF)), 'வகை 5' (Type 5) நீரிழிவு நோயை ஒரு தனித்துவமான பாதிப்பாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள, உடல் மெலிந்த மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் ஒரு வகை நீரிழிவு நோயாகும். ஐந்தாம் வகை நீரிழிவு நோயானது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை (Beta cells) அசாதாரணமாகச் செயல்பட வைத்து, போதுமான இன்சுலின் உற்பத்தியைத் தடுக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் உடல் அதன் செயல்பாட்டை எதிர்க்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



மற்றொரு லான்செட் (Lancet) ஆய்வறிக்கை மற்றும் அரசாங்கத்தின் முன்முயற்சி


"The Lancet Global Health இதழில் வெளியான புதிய ஆய்வின்படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் (Diabetes) இருந்தது என்றும் இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீரிழிவு நோய் இருந்தவர்களில் சுமார் 40% பேருக்கு தங்களுக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பதே தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 


இந்த ஆய்வானது, இந்தியாவில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட (45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட) பெரியவர்களிடம் 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்திய முதியோர் நீடித்த ஆய்வு (Longitudinal Ageing Study in India (LASI)) தரவுகளைப் பயன்படுத்தியது. இந்தியாவில் நீரிழிவு நோய் (Diabetes) எவ்வளவு பரவலாக உள்ளது என்பதையும், அது எவ்வளவு துல்லியமாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு, கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது என்பதையும் மதிப்பீடு செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


சுமார் 2 கோடி இந்தியர்களுக்குத் தங்களுக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இருப்பதே தெரியாமல் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் சுமார் 8% பேருக்குத் தங்களுக்கு இந்நோய் இருப்பது தெரியாமலேயே அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏறக்குறைய சமமாக இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது (ஆண்களுக்கு 19.6% மற்றும் பெண்களுக்கு 20.1%). மேலும், கிராமப்புறங்களைவிட (15%) நகரங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அதிகமாக (30%) உள்ளது."


இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான தெளிவான வேறுபாடுகளையும் இந்த ஆய்வு காட்டியது. வயதுக்கேற்பக் கணக்கிடும்போது, தென்னிந்திய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், மத்திய மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் குறைவாகவும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், சண்டிகர் (36.9%), கேரளா (36.0%) மற்றும் புதுச்சேரி (36%) ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் விகிதம் மிக அதிகமாக இருந்ததாகவும் அதேசமயம், நீரிழிவு நோய் பாதிப்புள்ள பெரியவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு (6.1 மில்லியன்), மகாராஷ்டிரா (5.8 மில்லியன்) மற்றும் உத்தரபிரதேசம் (4.7 மில்லியன்) ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. 


கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தைகளிடையே 'வகை 2' சர்க்கரை நோய் (Type 2 Diabetes) வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்கவும் அதைக் குறைக்கவும் பள்ளிகளில் வாரியங்களை (Sugar Boards) அமைக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)) உத்தரவிட்டுள்ளது.


சுகாதாரத் துறை முக்கியமாக மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய சுகாதார அமைச்சகம், 'தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ்' (National Health Mission (NHM)) உள்ள 'தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின்' (National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD)) வாயிலாக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.


இந்தத் திட்டம், முக்கியமாக நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கான உட்கட்டமைப்பு, பணியாளர்கள், பரிசோதனை, ஆரம்பக்கால நோய் கண்டறிதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரை, சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவைகள் மற்றும் முன்மொழிவுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.


தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (NHM), விரிவான ஆரம்ப சுகாதார சிகிச்சையின் ஒரு பகுதியாக நீரிழிவு நோயைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் கண்டறிவதற்கான மக்கள் நலத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அனைவருக்கும் உடல்நலப் பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆண்டு நீரிழிவு (சர்க்கரை நோய்) மற்றும் இரத்த அழுத்தத்திற்கான நாடு தழுவிய தொற்றா நோய் (Non-Communicable Diseases (NCD)) பரிசோதனை முகாமைத் தொடங்கியது. இந்த முகாம், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் (Ayushman Arogya Mandirs (AAMs)) மற்றும் தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின்கீழ் (National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD)) உள்ள பிற சுகாதார நிலையங்கள் மூலம் நடத்தப்படுகிறது.


தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின்கீழ் (NP-NCD) நீரிழிவு நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச மருந்துகளும், முறையான தொடர் சிகிச்சையும் வழங்கப்படுகின்றன.


 Original Article : India second in global adults diabetes burden. -Manas Srivastava


Share: