நிலக்கரி மீதான டிரம்பின் அழுத்தம் இந்தியாவிற்கு பயனளிக்கக்கூடும். -ரிச்சா மிஸ்ரா

 இந்தியாவின் பொருளாதாரம், குறிப்பாக அதன் மின் துறை, நிலக்கரியை பெரிதும் நம்பியுள்ளது. நிலக்கரிக்கு டிரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.


எரிசக்தித் துறையிலிருந்து நிலக்கரியை அகற்றுவதற்கான காலநிலை ஆதரவாளர்களின் எந்தவொரு முயற்சியும் குறைந்தபட்சம் இப்போதைக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும்.


இதன் அடிப்படையில் டிரம்ப் பதிவில் குறிப்பிட்டதாவது, “சீனா போன்ற நாடுகள் பல நிலக்கரி எரிமின் உற்பத்தி நிலையங்களைத் திறப்பதன் மூலம் பொருளாதார நன்மையைப் பெற அனுமதித்த சுற்றுச்சூழல் தீவிர ஆதரவாளர்கள் (Environmental Extremists), பைத்தியக்காரர்கள் (Lunatics), தீவிரவாதிகள் (Radicals) மற்றும் குண்டர்களால் (Thugs) பல ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, அழகான, சுத்தமான நிலக்கரியுடன் எரிசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்க எனது நிர்வாகத்தை நான் அங்கீகரிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

— @TrumpDailyPosts.


டிரம்பின் முடிவுகளானவை, நிலக்கரி உற்பத்தியாளர்களுக்கும் காலநிலை ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு விவாதத்தைத் தூண்டின. இந்தியாவும் அமெரிக்காவும் வரிச் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நிலக்கரி என்பது இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு பகுதி உள்ளது.


நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்கவும், அனல் ஆலைகளை மறுபரிசீலனை செய்யவும் அழுத்தம் கொடுக்கும் இந்தியாவுக்கு டிரம்பின் நிலைப்பாடு பலனளிக்குமா? இந்தியா நிலக்கரியை ஆதரிக்கிறது, ஆனால் அதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்?


"இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தக் கொள்கை அமெரிக்காவிலிருந்து ஒரு சிறிய அளவு நிலக்கரியை மட்டுமே இறக்குமதி செய்வதால் வரையறுக்கப்பட்ட நேரடி தாக்கத்தையே கொண்டுள்ளது" என்று NT-Live/NinjaTrader Group, LLC-ன் மூத்த பொருளாதார நிபுணர் டிரேசி ஷுசார்ட் கூறுகிறார். இருப்பினும், அமெரிக்க கொள்கைகள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் எரிசக்தி உத்தியைப் பாதிக்கலாம். இந்தியா அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுடன் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை சமநிலைப்படுத்த வேண்டும்.


நிலக்கரித் துறைக்கான கண்ணோட்டம்


2025-ம் ஆண்டில் நிலக்கரித் துறைக்கான S&P குளோபல் கமாடிட்டி இன்சைட்ஸின் கண்ணோட்டத்தின்படி, "சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான தீவிரமுனைப்பு மற்றும் புவிசார் அரசியல் போட்டி மிகவும் கவனிக்கத்தக்கதாகி வருகிறது. சீனா உலகளாவிய செல்வாக்கைப் பெற சுத்தமான தொழில்நுட்பத்தில் அதன் முன்னணியைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க கட்டணங்களை அதிகரித்து வருகின்றன."


2025-ம் ஆண்டில், சீனாவின் புதுப்பிக்கத்தக்க நிலையங்கள் சற்று குறையும். ஆனால், இன்னும் 250 GW-க்கு மேல் இருக்கும் என்று S&P குளோபல் எதிர்பார்க்கிறது. கூடுதலாக, சீனாவில் நிலக்கரி எரியும் உற்பத்தி ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்து புதிய சாதனையை எட்டும்.


பல வளரும் பொருளாதாரங்களில், நிலக்கரி தேவை 2025-ல் தொடர்ந்து உயரும் என்று S&P குளோபல் கமாடிட்டி இன்சைட்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சி அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைவிட மிகவும் மெதுவாக இருக்கும் இந்தியாவில் மிக முக்கியமான அதிகரிப்பு இருக்கும்.


பிற எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற அழுத்தம் இருந்தபோதிலும், நிலக்கரி இந்தியாவின் மின்சார உற்பத்திக்கான முதன்மை எரிபொருளாக உள்ளது.


மார்ச் 19 அன்று, நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மக்களவையில், 2024-25 நிதியாண்டில் (பிப்ரவரி 2025 வரை) 764.56 மில்லியன் டன் நிலக்கரி (தற்காலிகமாக) மின்துறைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். அதே காலகட்டத்தில், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் 757.70 மில்லியன் டன் (தற்காலிகமாக) பயன்படுத்தியுள்ளன.


இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நிதியாண்டு 2025-ம் ஆண்டில், நாடு ஏற்கனவே 1 பில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது. இதில், முக்கியமாக வணிகச் சுரங்கங்களில் இருந்து அதிக உற்பத்தி காரணமாக இதன் செயல்பாடு அமைந்துள்ளது. கோல் இந்தியா லிமிடெட் (Coal India Ltd (CIL)) இந்த உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.


உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, சமீபத்திய மாதங்களில் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. வலுவான உள்ளூர் விநியோகம், நாணய மதிப்பு தேய்மானத்துடன் இணைந்து, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வாங்குபவர்களுக்கு குறைந்த ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நிலக்கரி அமைச்சகம் 'திட்டம் கோக்கிங் நிலக்கரி'யை (Mission Coking Coal) அறிமுகப்படுத்தியுள்ளது.


எஃகுத் தொழிலுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்த, கோல் இந்தியா லிமிடெட் அதன் சுத்திகரிப்புக்கான திறனை விரிவுபடுத்துகிறது. இந்த புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலமும், ஏற்கனவே உள்ள சிலவற்றை மேம்படுத்துவதன் மூலமும், பழையவற்றிலிருந்து பணமாக்குவதன் மூலமும் இதைச் மேற்கொள்கிறது.


2030 நிதியாண்டில், தற்போதைய திறன் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 18 என்ற சாம்பல் சதவீதத்தில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன்கள் சுத்திகரிக்கப்பட்ட கோக்கிங் நிலக்கரியை CIL உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திட்டமிடப்பட்ட 11 புதிய கோக்கிங் நிலக்கரி சுத்திகரிக்கப்பட்ட நிலையங்களில், மூன்று ஏற்கனவே இயக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டு செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் இரண்டு கட்டுமானத்தில் உள்ளன. மீதமுள்ளவை வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.


Coking : கோக்கிங் என்பது ஒரு வெப்ப செயல்முறையாகும், இது முதன்மையாக எஃகு உற்பத்தி மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது, அங்கு நிலக்கரி அல்லது கச்சா எண்ணெயின் அடிப்பகுதி போன்ற பொருட்கள் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் வெப்பப்படுத்தப்பட்டு கோக், அதிக கார்பன், நுண்துளை எரிபொருள் மற்றும் பிற துணை தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன


சுத்தமான நிலக்கரி ஆராய்ச்சி


சமீபத்தில், கோல் இந்தியா லிமிடெட் (CIL) ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (IIT-H) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. அவர்கள் ஹைதராபாத்தில் சுத்தமான நிலக்கரி ஆற்றல் மற்றும் நிகர பூஜ்ஜிய மையத்தை (Centre of Clean Coal Energy and Net Zero (CLEANZ)) நிறுவுவார்கள். சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் நிலக்கரி பயன்பாட்டை பல்வகைப்படுத்துவதும் இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி மேம்பாட்டை நிலக்கரி அமைச்சகம் ஆதரிக்கிறது.


குறைந்த தர மற்றும் நிராகரிக்கப்பட்ட நிலக்கரியில் கவனம் செலுத்தி நிகர பூஜ்ஜிய பயன்பாட்டை அடைவதை CLEANZ நோக்கமாகக் கொண்டுள்ளது.


நிலக்கரி படுகை மீத்தேன் மற்றும் நிலக்கரி சுரங்க மீத்தேன் மீட்பு (coal mine methane recovery), கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்கள் (carbon capture technologies), நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் சின்கேஸ் பயன்பாடு (coal gasification and syngas use), ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு (energy efficiency and conservation), மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மற்றும் இயந்திர கற்றல் (machine learning) போன்ற பகுதிகளில் CLEANZ செயல்படும்.


டிரம்பின் அறிக்கையானது காலநிலை ஆதரவாளர்களை தெளிவாகக் குறிக்கிறது. இருப்பினும், இந்த திட்டங்களுக்கு நிதியளிப்பது குறித்து, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு, சில நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.


இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில், அது போதுமான நிலக்கரி இருப்புகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஒரு சுரங்கத்தை உருவாக்குவதில் எந்தவொரு முதலீடும் நீண்ட காலமாகும். மேலும் இந்தியாவின் மின்சாரத் துறை நிலக்கரியை பெரிதும் சார்ந்துள்ளது.


இப்போது டிரம்ப் நிலக்கரியை வலியுறுத்தியதால், இந்தியா இதை தனது நன்மைக்காகப் பயன்படுத்தலாம். இது, ஏற்கனவே உள்ள பரிமாற்ற நெட்வொர்க்குகளை மற்ற எரிசக்தி ஆதாரங்களுடன் ஒருங்கிணைத்து சேமிப்புக்கான வசதிகளை உருவாக்க முடியும்.



Original article:

Share:

இந்தியாவில் வங்கிச் சேவையை, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) எவ்வாறு மேம்படுத்தியுள்ளது? -வச்சஸ்பதி சுக்லா, சந்தோஷ் குமார் தாஷ்

 அரசாங்கத்தின் முதன்மைத் திட்டம், அனைவருக்குமான நிதி உள்ளடக்கத்தை (universal financial inclusion) அடைய உதவியிருந்தாலும், வங்கிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கணக்குகளைப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன.


கடந்த காலங்களில் பல முன்முயற்சிகள் இருந்தபோதிலும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களில், அதிக ஆவணத் தேவைகள், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் குறைந்தபட்ச இருப்பு ஆணைகள் ஆகியவற்றின் காரணமாக நிதி உள்ளடக்கம் ஒரு சவாலாகவே இருந்தது. இந்த தடைகளைப் போக்க, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தை அரசாங்கம் ஆகஸ்ட் 28, 2014 அன்று அனைவருக்குமான நிதி உள்ளடக்கத்தை அடையும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. வங்கிக் கணக்கு இல்லாத தனிநபர்கள் குறைந்தபட்ச இருப்புத் தேவை இல்லாமல் எந்த வங்கியிலும் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் திறக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. ஜனவரி 2015-க்குள், 12.5 கோடிக்கும் அதிகமான கணக்குகள் திறக்கப்பட்டன. ஜனவரி 2025 வரை, மொத்தம் 54.5 கோடியை எட்டியது. இதில் 61% பெண்கள் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த விரைவான வளர்ச்சி மக்களுக்கு சேமிப்பு, பணம் அனுப்புதல், கடன், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சேவைகளை அணுக அனுமதித்துள்ளது. இதனால், வங்கிச் சேவை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.


சில தனிநபர்கள் பல கணக்குகளை வைத்திருப்பதால், வங்கிச் சேவைகளில் முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ள, குடும்பங்கள் அல்லது வங்கிக் கணக்குகளைக் கொண்ட தனிநபர்களின் விகிதத்தை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுப்பாய்வு முக்கியமானது. ஏனெனில், வங்கிகளுக்கான அணுகல் பரவலாக மாறுபடலாம். சில வீடுகளில், அனைத்து உறுப்பினர்களுக்கும் கணக்குகள் இருக்கலாம், மற்றவற்றில், யாருக்கும் கணக்குகள் இருக்காது. ஜனவரி-டிசம்பர் 2013 தரவுகளின்படி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் (NSSO) 70-வது சுற்று ‘கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு’ (Debt and Investment Survey) குடும்ப அளவிலான தரவை வழங்கும் அதே வேளையில், 77-வது சுற்று (ஜனவரி-டிசம்பர் 2019) தனிப்பட்ட அளவிலான தரவை மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், ஒரு அலகுக்கான பதிவுத் தரவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைக் கொண்ட குடும்பங்களின் சதவீதத்தை நாம் மதிப்பிடலாம்.


கிராமப்புறங்களில் குறைந்தது ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பங்களின் விகிதம் 2013-ல் 68.8%-லிருந்து 2019-ல் 97.8% ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நகர்ப்புறங்களில், இந்த அதிகரிப்பு 79.5%-லிருந்து 96.9% ஆக அதிகரித்துள்ளது.


இது, 2019-ம் ஆண்டளவில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கான அணுகல் கிட்டத்தட்ட உலகளாவியதாகிவிட்டது என்பதைக் காட்டுகிறது. 2013 மற்றும் 2019-க்கு இடையில் வங்கி சேவைகள் கணிசமாக மேம்பட்டன. அதேநேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் குறைந்தன. 2019-ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் 95 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தன. வங்கி சேவைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு முதன்மையான PMJDY திட்டமே காரணமாக இருக்கலாம்.


மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு குறைந்தது


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு பயனளித்துள்ளது. அடிப்படை வங்கி சேவைகளுக்கான அணுகல் குறைவாக உள்ள கிராமப்புற மக்களைக் கொண்ட இந்த மாநிலங்களில், வங்கிக் கணக்குகள் உள்ள கிராமப்புற குடும்பங்களின் சதவீதத்தில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. உதாரணமாக, 2013-2019-ம் ஆண்டில், பீகார் 55.1 சதவீதம், ஜார்க்கண்ட் 47.9 சதவீதம், மேற்கு வங்கம் 43.4 சதவீதம், ஒடிசா 38.4 சதவீதம், சத்தீஸ்கர் 38.3 சதவீதம், மத்திய பிரதேசம் 38 சதவீதம், மற்றும் அசாம் 37.1 சதவீதம் அதிகரித்தன. PMJDY-லிருந்து நகர்ப்புறத் துறையும் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைந்தது. 2019-ம் ஆண்டுக்குள், அனைத்து மாநிலங்களும் நகர்ப்புற குடும்பங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வங்கிக்கான அணுகலைப் பதிவு செய்துள்ளன. கேரளாவைத் தவிர, 2013-ம் ஆண்டில் அதிக அணுகலை எட்டியது. இந்த எண்ணிக்கைகள், வசதியான மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு இடையேயான வங்கி அணுகலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதில் PMJDY முக்கியப் பங்காற்றியதாகக் கூறுகின்றன.


நிதி உள்ளடக்கம் (Financial inclusion)


தனிநபர் அளவில், தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) 77-வது சுற்றில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வங்கிச் சேவைகள் ஒப்பீட்டளவில் சமமாக அணுகக்கூடியதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது, கிராமப்புறங்களில் 84.4 சதவீதம் மற்றும் நகர்ப்புறங்களில் 85.2 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு வங்கிக் கணக்கையாவது கொண்டுள்ளனர். NSS 78வது சுற்று பல குறிகாட்டி கணக்கெடுப்பு (Multiple Indicator Survey) 2021-க்குள், வங்கிக் கணக்குகள் கொண்ட தனிநபர்களின் விகிதம் 89.4 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 89.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 89.6 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 94.6 சதவீதமாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் 94.6 சதவீதம்  மற்றும் நகர்ப்புறங்களில் 94.4 சதவீதம் ஆகும். NSS 79-வது சுற்று விரிவான வருடாந்திர மட்டு கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் ஆண்களுக்கு 96.2 சதவீதமாகவும், பெண்களுக்கான 92.8 சதவீதமாகவும் இருந்தது .


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சண்டிகர் 100% வங்கிக் கணக்குக்கான பாதுகாப்பை அடைந்துள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 21 மாநிலங்களில் 95%-க்கும் அதிகமான தனிநபர்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தனர். ஆறு மாநிலங்களில் மட்டுமே 90%-க்கும் குறைவான பாதுகாப்பு இருந்தது. இந்த எண்ணிக்கைகள் இந்தியா தனிநபர் நிலையில் நிதி உள்ளடக்கத்தை கிட்டத்தட்ட அடைந்துவிட்டதைக் காட்டுகின்றன.


குறிப்பிடத்தக்க சாதனைகள்


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ், வைப்புத்தொகையாக மார்ச் 2015-ல் ₹15,670 கோடியிலிருந்து மார்ச் 2024-ல் ₹2,32,502 கோடியாக அதிகரித்துள்ளது. இது 1,380 சதவீத வளர்ச்சி அல்லது கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (compound annual growth rate (CAGR)) 40 சதவீதமாக உள்ளது. ஒரு கணக்கிற்கான சராசரி வைப்புத்தொகையிலும் இது தெளிவாகத் தெரிகிறது. இது ₹1,065 இலிருந்து ₹4,467 ஆக உயர்ந்துள்ளது. இது, 20 சதவீத CAGR உடன் 4.2 மடங்கு உயர்வு ஆகும்.


விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (MasterCard) போன்ற உலகளாவிய அமைப்புகளுக்கு மாற்றாக உள்நாட்டு கட்டண வலையமைப்பை நிறுவுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, டிசம்பர் 2024 வரை PMJDY திட்டத்தின் கீழ் 37 கோடிக்கும் அதிகமான RuPay கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. RuPay PMJDY கடன் அட்டைகளின் குறிப்பிடத்தக்க அம்சம், தனிப்பட்ட விபத்து மரணம் மற்றும் மொத்த ஊனமுற்றோர் பாதுகாப்பு ₹2 லட்சம் வரை காப்பீட்டை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் சேமிப்பு அல்லது வைப்புத்தொகை பற்றியது மட்டுமல்ல, இது சாதாரண மனிதர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவியுள்ளது. 2018-19ல் 2,338 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2023-24ல் 16,443 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ₹34 லட்சம் கோடி நேரடி பலன் பரிமாற்றங்கள் PMJDY கணக்குகள் மூலம் செயல்படுத்தப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் இந்தியாவில் அரசுத் திட்டங்களில் கசிவுகளைக் குறைக்க உதவுகிறது.


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டமானது, மக்களை வங்கி மூலமாக சேமிக்க உதவுவது மட்டுமல்லாமல், நிதி வரலாறு இல்லாதவர்களுக்கு கடன் அணுகலையும் வழங்குகிறது. அவர்களின் சேமிப்பு முறைகளைக் காண்பிப்பதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, முத்ரா கடன் அனுமதிகள் 2018-19 முதல் 2023-24 வரை 9.8% கூட்டு வருடாந்திர விகிதத்தில் வளர்ந்தன. இந்தக் கடன் அணுகல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது தனிநபர்கள் தங்கள் வருமானத்தை வளர்க்க அதிகாரம் அளிக்கிறது.


நிலையான டிஜிட்டல் பங்கீடு


தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு இணையவழி வங்கி பரிவர்த்தனைகளை கணிசமாக ஊக்குவித்துள்ளது. இது பணமில்லா பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் கருப்பு பணம் மற்றும் ஊழலைக் குறைப்பதற்கும் இது முக்கியமானது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு 79-வது சுற்று விரிவான வருடாந்திர மாடுலர் சர்வேயின்படி (Comprehensive Annual Modular Survey), 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 37.8 சதவீதம் பேர் இணையவழி வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய முடிந்தது. இருப்பினும், பாலின வேறுபாடுகளாக 25.2 சதவீத பெண்கள் மற்றும் 47.1 சதவீத ஆண்கள் இணையவழி வங்கித் திறனைக் கொண்டுள்ளனர். கிராமப்புறங்களுடன் (30 சதவீதம்) ஒப்பிடும்போது நகர்ப்புறங்கள் அதிக தேர்ச்சியை (50.6 சதவீதம்) காட்டுகின்றன.


NSS 79-வது சுற்று கணக்கெடுப்பு இணையவழி வங்கித் திறன்களில் (online banking capabilities) கணிசமான மாநில அளவிலான ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டியது. சண்டிகர் மற்றும் தெலுங்கானா மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணையவழி வங்கி பரிவர்த்தனைகளை நடத்தும் திறன் கொண்டவர்கள் என்று தெரிவித்தாலும், பல மாநிலங்கள் கணிசமாக பின்தங்கி உள்ளன. இதற்கான, புள்ளிவிவரங்கள் 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன. உதாரணமாக, திரிபுரா 12.8 சதவீதம், மேகாலயா 17.9 சதவீதம், சத்தீஸ்கர் 19.1 சதவீதம், மேற்கு வங்கம் 21.5 சதவீதம், உத்தரபிரதேசம் 24.4 சதவீதம், அஸ்ஸாம் 27 சதவீதம், ஜார்கண்ட் 27.4 சதவீதம், ஒடிசா 29.2 சதவீதம், குஜராத் 2.8 சதவீதம், 29.7 சதவீதம் இது டிஜிட்டல் நிதி கல்வியறிவின் சீரற்ற முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் டிஜிட்டல் பங்கீட்டைத் தீர்ப்பதற்கான இலக்குகளின் தலையீடுகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


முன்னோக்கி செல்லும் வழி


PMJDY வங்கிச் சேவைக்கான அணுகலை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு கணக்கையாவது வைத்திருக்கும். இருப்பினும், உலகளாவிய Findex தரவுத்தளம் 2021 இந்தியாவில் 35 சதவீத கணக்குகள் செயலற்ற நிலையில் இருப்பதாகக் காட்டுகிறது. 2023-ம் ஆண்டு ஆய்வறிக்கையில், அகந்த் ஜே திவாரி மற்றும் கிரஹாம் ஏ.என். ரைட் ஆகியோர் பல PMJDY கணக்குகளைத் திறப்பது ஒரு முக்கியக் காரணம் என அடையாளம் கண்டுள்ளனர். அதே சமயம், மானுவேலா குந்தரின் 2017-ம் ஆண்டு ஆய்வில், ‘இந்தியாவில் நிதிச் சேர்க்கையின் முன்னேற்றம்: பல அலைகள் கணக்கெடுப்புத் தரவுகளின் நுண்ணறிவு’ (The Progress of Financial Inclusion in India: Insights from Multiple Waves of Survey Data), PMJDY கணக்கு வைத்திருப்பவர்களில் 51% பேர் PMJDY அல்லாத கணக்குகளையும் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.


அதிகமான அளவில், மக்கள் கணக்குகளை வைத்திருந்தாலும், வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை, பின்தங்கிய பகுதிகளில் கல்வியறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. இதன் மூலம், விழிப்புணர்வை உருவாக்குதல், நிதிக் கல்வி, நிதி தொழில்நுட்ப கூட்டாண்மைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் போன்ற இலக்குக்கான தீர்வுகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.


இந்தியாவில் நிதி உள்ளடக்கம் பொருளாதார வளர்ச்சியை இயக்கும். இதை அடைய, கணக்கு செயலற்ற தன்மையைக் குறைத்து, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை திறன்களை வளர்க்க உதவுவது முக்கியம். இது உள்ளடக்கிய வங்கியின் நன்மைகளை அதிகரிக்கும், நிதி பங்கேற்பை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.


எழுத்தாளர்கள், சர்தார் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனம் (SPIESR) மற்றும் கிராமப்புற மேலாண்மை நிறுவனம், ஆனந்த் (IRMA) ஆகியவற்றில் உதவிப் பேராசிரியர்கள் ஆவர்.



Original article:

Share:

பிரதிநிதித்துவத்தில் சமபங்கு தொடர்பான பிரச்சினை

 தொகுதி மறுவரையறை (delimitation) தொடர்பாக, தேசிய ஜனநாயக கட்சி அல்லாத கட்சிகளின் சென்னைக் கூட்டத்தின் விரிவான அறிக்கையில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும்.


தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் மற்றும் ஒடிசா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் (joint action committee (JAC)) சென்னை கூட்டத்தில் இருந்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதில் ஒன்று, இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றொன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) தொகுதி மறுவரையறைக்கு எதிரானது அல்ல என்றும், "நியாயமான மற்றும் சரியான செயல்முறையை" (fair and just process) மட்டுமே கோருகிறது என்றும், "நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்த மாநிலங்களைத் தங்களின் திறமையான மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் மூலம் தண்டிக்கக் கூடாது" என்றும் தெரிவித்தார். ஆனால், ஒன்றிய பாஜக எதிர்ப்பு முன்னணியில் NDA அல்லாத கட்சிகளை அணிதிரட்டுவதில் தொகுதி மறுவரையறைக்கான எதிர்ப்பு செயல்திட்டத்தின் வரம்பையும் சென்னையில் அமைக்கப்பட்ட கலந்துரையாடல் குழு அம்பலப்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி (SP), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) போன்ற முக்கிய NDA அல்லாத கட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்கவில்லை. உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக மக்களவை இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது குறிப்பிடத்தக்கது.


இருந்தபோதிலும், தொகுதி மறுவரையறை செயல்முறை குறித்து தென்னிந்தியாவில் உள்ள பாதிப்புகளை கூட்டம் வெற்றிகரமாக எடுத்துக்காட்டியது. தற்போது வரை, ஒன்றிய அரசு இன்னும் தெளிவான திட்டத்தை அறிவிக்கவில்லை. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் தென்னிந்தியாவில் தொகுதி மறுவரையறை செயல்முறை தோல்வியடையாது என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இது பிரதிநிதித்துவம் அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்களவையின் தொகுதி எண்ணிக்கையை  சரிசெய்யும் திட்டமானது 2026-ல் நிர்ணயிக்கப்பட்டது. இதில் புதிய நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள சிலவற்றை மாற்றுதல் அல்லது நீக்குதல் ஆகியவை அடங்கும். இது 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகிவிட்டது. மக்கள் தொகை முக்கிய அளவுகோலாக இருந்தால், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று அரசியல் முதன்மையாளர்கள்   தெரிவிக்கின்றனர். இது தென்னிந்தியா வைத்திருக்கும் இடங்களின் விகிதத்தைக் குறைக்கும். பிரதிநிதித்துவத்தில் இத்தகைய ஏற்றத்தாழ்வு கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதிக்கலாம். குறிப்பாக நிதி விஷயங்களில், அதிகார சமநிலையானது பலவீனமடைந்து வருகிறது.


அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமத்துவப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மக்கள் தொகை மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க வேண்டுமா என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கை அதற்கு சாதகமாக உள்ளது. ஆனால், சுதந்திரம் அடைந்ததில் இருந்து தொகுதி மறுவரையறைக்கான இந்திய அனுபவம் வேறுபட்டது. பிரத்தியேகமாக மக்கள்தொகையின் பார்வையில் மட்டுமே சிக்கலைப் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு பிராந்தியமும் பிரதிநிதித்துவப்படுவதில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தனிப்பட்ட வாக்காளரைக் காட்டிலும் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் அலகுக்கு சிறப்புரிமை வழங்கும் கட்டமைப்பை நிர்வாகிகள் விரும்பினர். எனவே, இலட்சத்தீவு மற்றும் லடாக் சிறிய மக்கள் தொகையாக இருந்தாலும் மக்களவைத் தொகுதிகள் ஒப்பீட்டளவில் அவற்றிற்கு கிடைத்தன. கல்வி மற்றும் சுகாதாரத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, மக்கள்தொகையை நிலைப்படுத்தவும், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளுக்கு திறமையான பணியாளர்களை உருவாக்கவும், அவர்களின் பாரம்பரிய சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெறப்பட்ட தென் மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பதில் நியாயமற்ற நிலை உள்ளது.


தொகுதி மறுவரையறை விவாதம் இந்தியாவின் முன்னேற்றத்தை அச்சுறுத்தும் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை ஆகிய இரண்டு முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகிறது. வடக்கு-தெற்கு மாநில ஏற்றத்தாழ்வு (North-South disparity) தொடர்பான வேறுபாடு ஒரு சாதகமற்ற அரசியல் சண்டையாக மாறாமல் இருக்க, ஒன்றிய அரசு கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) குறிப்பிடுவதை கவனம் செலுத்த வேண்டும்.



Original article:

Share:

இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்களில் என்ன குறை இருக்கிறது? -அலிந்த் சவுகான்

 நீண்டகாலத் திட்டங்கள் இல்லாமை, வெப்ப அலைகள் மோசமடைவதால் வெப்பம் தொடர்பான இறப்புகளை அதிகரிக்கலாம்.


பெரும்பாலான இந்திய நகரங்களின் வெப்ப செயல் திட்டங்கள் (heat action plans (HAPs)) கடுமையான வெப்பத்தைக் கையாள நீண்டகால உத்திகளைக் கொண்டிருக்கவில்லை என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. திட்டங்களைக் கொண்ட நகரங்கள்கூட அவற்றை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அது கூறியது.


திட்டமிடுதலில் இத்தகைய இடைவெளிகள் வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் அடிக்கடி, தீவிரமாக மற்றும் நீண்டதாக மாறும்போது அதிகமான வெப்பம் தொடர்பான இறப்புகள் ஏற்படக்கூடும்  என்று பகுப்பாய்வு கூறுகிறது.


"வெப்பமயமாதல் உலகத்திற்கு இந்தியா தயாரா?" என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, அதிக ஆபத்துள்ள இந்திய நகரங்களில் வெப்ப அலைகளுக்கான எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தது. இது நகர்ப்புற மக்கள்தொகையில் 11%-ஐ உள்ளடக்கியது. இது புது டெல்லியில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழுவான நிலையான எதிர்கால கூட்டுப்பணியால் (Sustainable Futures Collaborative (SFC)) நடத்தப்பட்டது. லண்டன் கிங்ஸ் கல்லூரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டது.


இந்த கண்டுபிடிப்புகள் வரவிருக்கும் விஷயங்களின் வடிவம் பற்றிய எச்சரிக்கையாகும். தொடர்ச்சியான வெப்ப அலைகளுக்கு அமைப்புகளில் முன்னேற்றம் அவசியமானது மற்றும் அவசரமானது என்றாலும், எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதிலும் சமமான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று SFC-ன் வருகை பேராசிரியர் ஆதித்ய வலியாதன் பிள்ளை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


முதலில், வெப்ப செயல் திட்டம் என்றால் என்ன?


வெப்ப செயல் திட்டம் என்பது கடுமையான வெப்பத்தை எச்சரிக்கவும், தயார்படுத்தவும் ஒரு அமைப்பாகும். வெப்பம் தொடர்பான உடல்நல அபாயங்களிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க, தயார்நிலையை மேம்படுத்துதல், தகவல்களைப் பகிர்தல் மற்றும் பதில்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை இது உள்ளடக்கியது என்று அரசாங்க ஆவணம் கூறுகிறது.


ஜூலை 2024-ல் மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) வெப்ப அலை நிலைமைகளுக்கு ஆளாகக்கூடிய 23 மாநிலங்களில் மாநில அதிகாரிகளுடன் இணைந்து வெப்ப செயல் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறியிருந்தார்.


இந்தியாவில் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 530-ஆக இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் இது 730-ஆக உயர்ந்தது. இருப்பினும், 2024-ஆம் ஆண்டில், வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இறப்புகள் 269 ஆகவும், வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்ட இறப்புகள் 161 ஆகவும் குறைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், இலாப நோக்கற்ற அமைப்பான ஹீட்வாட்ச் 2024-ஆம் ஆண்டு அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் இடையே இந்தியாவில் 17 மாநிலங்களில் வெப்ப பக்கவாதம் (heatstroke) காரணமாக 733 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியது.


புதிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?


1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) உள்ள நகரங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர், அவை கடந்த கால சராசரிகளுடன் ஒப்பிடும்போது ஆபத்தான வெப்ப அளவுகளில் (வெப்பநிலை + ஈரப்பதம்) மிகப்பெரிய உயர்வைக் காணக்கூடும்.


இந்த நகரங்கள் பெங்களூரு, டெல்லி, ஃபரிதாபாத், குவாலியர், கோட்டா, லூதியானா, மீரட், மும்பை மற்றும் சூரத் ஆகும். இந்த ஒன்பது நகரங்களில் வெப்ப நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகரம், மாவட்டம் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆராய்ச்சியாளர்கள் 88 நேர்காணல்களை நடத்தினர். பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், நகரத் திட்டமிடல், தொழிலாளர் துறைகள் மற்றும் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் பிரதிநிதிகளையும் அவர்கள் நேர்காணல் செய்தனர்.


ஆய்வில் என்ன கண்டறியப்பட்டது?


இந்த ஆய்வில், ஒன்பது நகரங்களிலும் குடிநீர் வசதி, சரிசெய்யப்பட்ட பணி அட்டவணைகள் போன்ற குறுகியகால அவசர நடவடிக்கைகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும், நீண்டகால தீர்வுகள் காணவில்லை அல்லது மோசமாக செய்யப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.


வீடு அல்லது தொழில்சார் குளிர்ச்சியை அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடைக்கச் செய்தல், இழந்த வேலைக்கான காப்பீட்டுத் தொகையை உருவாக்குதல், வெப்ப அலைகளுக்கான தீ மேலாண்மை சேவைகளை விரிவுபடுத்துதல், பரிமாற்ற நம்பகத்தன்மை மற்றும் விநியோக பாதுகாப்பை மேம்படுத்த மின்சார கட்ட மறுசீரமைப்புகள் போன்ற நீண்டகால நடவடிக்கைகள் அனைத்து நகரங்களிலும் இல்லை என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


பகுப்பாய்வின்படி, நகரங்கள் நகர்ப்புற நிழல் மற்றும் பசுமைப் போர்வையை விரிவுபடுத்துதல் மற்றும் அதிக வெப்ப ஆபத்தை அனுபவிக்கும் மக்கள் தொகை மற்றும் பகுதிகள் மீது கவனம் செலுத்தாமல் திறந்தவெளிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தின.


நீண்டகால உத்திகள் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றன என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. நீண்டகால தீர்வுகளை ஆதரிக்க அதிக நிதி தேவை என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.


நிறுவன வரம்புகள் நீண்ட கால நடவடிக்கைக்கு தடையாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, உள்ளூர், மாவட்ட மற்றும் மாநில அளவில் அரசாங்கத் துறைகளுக்கு இடையேயான மோசமான ஒருங்கிணைப்பு.



Original article:

Share:

தமிழக முதல்வரின் தொகுதி மறுவரையறைக் கூட்டத்தின் மையமாக, ஒன்றிய அரசின் அதிகரித்து வரும் அதிகார மையப்படுத்தலுக்கான எதிர்ப்பு -சேலம் தரணிதரன் மற்றும் தக்ஷனா இந்துமதி

 இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு அதன் பரந்த பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவம் மக்கள்தொகை அளவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், அது அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.


தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee (JAC)) கூட்டம் நடைபெற்றது. இதில் மூன்று முதலமைச்சர்கள், ஒரு துணை முதலமைச்சர் மற்றும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நியாயமற்ற எல்லை நிர்ணயத்தை எதிர்க்க JAC மாநிலங்களை ஒன்றிணைத்தது. இந்தக் கூட்டம், நமது நாட்டின் முக்கியப் பிரச்சினைகளான மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மற்றும் ஒன்றிய அரசாங்கத்தால் அதிகார மையப்படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தது.


அரசியலமைப்பின் 82-வது பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை இடங்கள் மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் சரிசெய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. 1976-ஆம் ஆண்டில், இந்திரா காந்தியின் அரசாங்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த செயல்முறையை 25 ஆண்டுகளுக்கு முடக்கிவைத்தது.


2001-ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசாங்கம், பிராந்தியங்களுக்கு இடையே மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக, தொகுதி மறுவரையறை முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. இந்த முடக்கம் 2026-ல் முடிவடையும். அதன் பிறகு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை சரிசெய்ய ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை (Delimitation Commission) என்று உருவாக்க வேண்டும் அரசியலமைப்பின் பிரிவு 82 கோருகிறது.


மக்கள்தொகை கட்டுப்பாட்டை திறம்படக் கொண்ட மாநிலங்கள் ஊக்கமில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடக்கம் மேற்கொள்ளப்பட்டாலும், வட மாநிலங்கள் தங்கள் ஒரு வாக்கு விகிதாச்சாரத்தில் குறைவாக இருப்பதாக வாதிட்டன. உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று முதல் நான்கு மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சிக்கிமில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 0.6 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தாமதப்படுத்துவதால், 2031-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் மற்றொரு திருத்தம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், தொகுதி மறுவரையறைப் பணி ஆரம்ப காலக்கெடுவைவிட மிக விரைவாக திட்டமிடப்படும். தொகுதி மறுவரையறை ஆணையம் அரசியலமைப்பு ஆணையின் கீழ் செயல்படுவதால், அதன் முடிவுகளை நீதிமன்றத்தில் சவால் செய்வது கடினமாக இருக்கும். இதனால்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் 2026 காலக்கெடுவிற்கு முன்னர் பிரிவு 82-ல் திருத்தம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளன.


பிரச்சனை எங்கே இருக்கிறது?


இந்த பிரச்சினையின் முக்கிய அம்சம் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகும். முதலாவதாக, மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுகிறது. இந்த விகிதம் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே பெரிதும் வேறுபடுகிறது.


2000-களின் முற்பகுதியில் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை எட்டின. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை 1.4–1.8 குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன. இது மக்கள்தொகை அளவைப் பராமரிக்கத் தேவையான 2.1-ஐ விடக் குறைவு. ஆனால் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இன்னும் அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும், அவை நிலைப்படுத்த அதிகநேரம் எடுக்கும். 1970-களில் இருந்த மக்கள்தொகை வேறுபாடுகள் இன்னும் இந்தியாவிற்கு சவால்களை உருவாக்குகின்றன.


மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் நாடாளுமன்ற இடங்களை இழக்கும். அதே, நேரத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்தாததால் அதிக இடங்களைப் பெறும்.


தொகுதி மறுவரையறை தாக்கங்கள்: எண்களுக்கு அப்பால் 


புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவின்போது, ​​அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கும் வகையில் மக்களவையை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் மறைமுகமாகத் தெரிவித்தார். மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் (மொத்த இடங்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கும் என்று வைத்துக் கொண்டால்), ஐந்து மாநிலங்கள் (குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்) மொத்த இடங்களில் 47 சதவீதத்தை உருவாக்கும் 367 இடங்களைக் கொண்டிருக்கும். மேலும், ஐந்து தென் மாநிலங்கள் 19 சதவீத பிரதிநிதித்துவத்தில் வெறும் 164 இடங்களைக் கொண்டிருக்கும் (தற்போதைய 24 சதவீதத்திலிருந்து குறைந்து விடும்.) மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட தென் மாநிலங்கள் அரசியல் செல்வாக்கை இழந்து கொண்டே இருக்கும். இதனால் நாடாளுமன்றத்தில் அவற்றின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கும்.


தொகுதி மறுவரையறை பிரச்சினை எண்களுக்கு அப்பாற்பட்டது. இது மாநிலங்கள் மற்றும் இந்திய கூட்டாட்சி அமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் குறைப்பு நீண்டகால மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.


முதலாவதாக, பிரதிநிதித்துவ இழப்பு தென் மாநிலங்களை தேர்தல் ரீதியாக அபாயத்தை ஏற்படுத்தும். மொத்த இடங்களில் 19 சதவீத இடங்களை மட்டுமே கொண்டுள்ளதால், தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசாங்கத்தை அமைப்பதிலோ அல்லது முக்கிய கொள்கைகளை வகுப்பதிலோ குறைந்தபட்ச பங்கையோ கொண்டிருப்பார்கள். இது பொருளாதாரக் கொள்கைகள் முதல் நிர்வாக முடிவுகள் வரை மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும்.


2024-2025 மாநில பட்ஜெட்டுகளின் பகுப்பாய்வு, பீகாரின் வருவாயில் 72 சதவீதமும், உத்தரபிரதேசத்தின் வருவாயில் 54 சதவீதமும் ஒன்றிய அரசிடமிருந்து ஒன்றிய வரிகள் மற்றும் மானிய உதவிகளில் பங்கு வடிவில் வந்ததாகக் காட்டுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு 24% மட்டுமே பெற்றது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைவதால், அதிக மக்கள்தொகைக் கொண்ட மாநிலங்கள் பட்ஜெட் முடிவுகளில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். இது தென் மாநிலங்களின் வளர்ச்சியை மெதுவாக்கும். மேலும், நாட்டின் நிதிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் தாங்கள் உருவாக்கும் வருவாயில் குறைவான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்கும்.


ஒன்றிய அரசின் கொள்கை மீறலைப் பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கை (NEP) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சமக்ர சிக்ஷா அபியானுக்கு நிதி மறுக்கப்படுவதற்கு தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அங்கீகரிக்க தமிழ்நாடு மறுத்ததே காரணம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். இது ஒரு மாநிலமாக தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்க மறுப்பதாகும். கேரளாவிலும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அங்கு நிதிக் கொள்கைகள் மாநிலத்திற்கு எதிராக நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டன.


இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு அதன் பரந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை வெறும் கலாச்சார மற்றும் மொழியியல் சார்ந்தது மட்டுமல்ல, வளர்ச்சி சார்ந்ததும் கூட. பிரதிநிதித்துவம் மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட்டால், அது அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். தொகுதி மறுவரையறைக் கருத்து முதலில் அரசியலமைப்பில் உருவாக்கப்பட்டபோது, ​​இந்தியாவின் மக்கள்தொகை நிலப்பரப்பு இன்றைய நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்வது மற்றும் அதன் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல், இந்தியாவில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.


முதல்வர் ஸ்டாலின் கூட்டிய கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee (JAC)) கூட்டம் கூட்டாட்சி முறையைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய தருணமாகும். அவர் விவரித்தது போல, மக்கள்தொகை அளவை கருத்திக்கொள்ளாமல் பெரிய அல்லது சிறிய அனைத்து மாநிலங்களும் நிர்வாகத்தில் குரல் கொடுப்பதை உறுதி செய்வதற்கான "மைல்கல் நிகழ்வு" என்று அவர் அழைத்தார். தொகுதி மறுவரையறை, மாநில உரிமைகள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத மையப்படுத்தல் கொள்கைகளைக் கட்டுப்படுத்துவதில் சீர்திருத்தங்கள் இல்லாமல், நமது அரசியலமைப்பில் உள்ள "மாநிலங்களின் ஒன்றியம்" (Union of States) என்ற கொள்கை நிரந்தரமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


தரணிதரன் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில துணைச் செயலாளர்; இந்துமதி ஒரு அரசியல் ஆலோசகர்.



Original article:

Share:

இந்தியாவில் வக்ஃப் சொத்துக்கள் எவ்வாறு முறைப்படுத்தப்படுகின்றன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB)) அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, மார்ச் 26-ஆம் தேதி பாட்னாவிலும், மார்ச் 29-ஆம் தேதி விஜயவாடாவிலும் உள்ள மாநில சட்டமன்றங்களுக்கு முன்பாக பெரிய அளவிலான உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமார் உட்பட ஜே.டி.(யு), ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக AIMPLB செய்தித் தொடர்பாளர் SQR இல்யாஸ் தெரிவித்தார்.


• ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அனைத்து முஸ்லிம் அமைப்புகள், குடிமை சமூகக் குழுக்கள் மற்றும் தலித், ஆதிவாசி, இதர பிற்ப்படுத்த வகுப்பினர் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு வாரியத்தின் சார்பாக இலியாஸ் நன்றி தெரிவித்தார்.


• அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (All India Muslim Personal Law Board (AIMPLB)) 31 உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கைக் குழு, "சர்ச்சைக்குரியது, பாரபட்சமானது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது" என்று விவரித்த மசோதாவை எதிர்க்க அனைத்து அரசியலமைப்பு, சட்ட மற்றும் ஜனநாயக வழிமுறைகளையும் பின்பற்ற தீர்மானித்துள்ளது.


• முதல்கட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 26-ம் தேதி பாட்னாவிலும், மார்ச் 29-ம் தேதி விஜயவாடாவிலும் மாநில சட்டசபைக்கு முன்பாக பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. AIMPLB-ன் மூத்த தலைவர்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான மத மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2024-ஆம் ஆண்டு மசோதாவின்படி, சட்டம் தொடங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அனைத்து வக்ஃப் சொத்துக்களும் ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். தரவுத்தளத்தில் உள்ள எந்தவொரு சொத்தும் அரசு சொத்து என்று குறிக்கப்பட்டால், மாவட்ட ஆட்சியர் விசாரணையை மேற்கொண்டு மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.


•  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலேஷ்வர் கமைத் முன்மொழிந்த திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது. இந்த மாற்றம் சில சூழ்நிலைகளில் வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மிகவும் நெகிழ்வானதாக ஆக்குகிறது. “தரவுத்தளத்தில் வக்ஃப் விவரங்களை தாக்கல் செய்யாததற்கு போதுமான காரணத்தை” முத்தவல்லி (Property managers) வழங்குகிறது.


• திருத்தப்பட்ட மசோதா, தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் காலக்கெடுவை நீட்டிக்கும் அதிகாரத்தை வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு வழங்குகிறது. எவ்வாறாயினும், "போதுமானவை" என்று கருதக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் நீட்டிப்பு காலம் குறிப்பிடப்படவில்லை என்பதால், தீர்ப்பாயம் அதன் விருப்பப்படி செயல்பட வேண்டும்.


• பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராதா மோகன் தாஸ் அகர்வால் செய்த மற்றொரு விளைவாக திருத்தத்தையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது. 2024-ஆம் ஆண்டு மசோதாவில், முன்மொழியப்பட்ட சட்டம் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாவிட்டால், வக்ஃப்களால் வழக்கு, மேல்முறையீடுகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எதுவும் தாக்கல் செய்ய முடியாது.


• 2024-ஆம் ஆண்டு மசோதா, வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு முன்பு இருந்த அதிகாரங்களை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியது.


சட்டம் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வக்ஃப் சொத்து என்று பெயரிடப்பட்ட எந்தவொரு அரசு சொத்தும் வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்று மசோதா கூறுகிறது. இருப்பினும், முடிவை எடுக்கவேண்டியது வக்ஃப் தீர்ப்பாயம் அல்ல, மாவட்ட ஆட்சியர்தான்.



Original article:

Share:

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான நீதித்துறையின் உள்விசாரணை எவ்வாறு இருக்கும்? -அபூர்வா விஸ்வநாத்

 டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை மூன்று பேர் கொண்ட குழு விசாரிக்க உள்ளது. உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை செயல்முறையை அமைத்து, 2014-ல் மீண்டும் அதை மறுபரிசீலனை செய்தது.


மார்ச் 14 அன்று ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பண மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளார்.


நீதித்துறையின் உள் விசாரணை அரசியலமைப்பின் கீழ் உள்ள பதவி நீக்க நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது. இது தலைமை நீதிபதி ஷீல் நாகு (பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம்), தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா (இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்) மற்றும் நீதிபதி அனு சிவராமன் (கர்நாடக உயர் நீதிமன்றம்) ஆகியோரால் நடத்தப்படும்.


ஒரு நீதிபதியை நீக்குவதற்கான வழிமுறைகள்


உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் (impeachment of a judge) செய்வதற்கான நடைமுறை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124(4)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 218, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இதே விதிகள் பொருந்தும் என்று கூறுகிறது.


டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு ஆராய்ந்து பார்க்கும். இத்தகைய விசாரணைக்கான நடைமுறை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் வகுக்கப்பட்டது, மேலும் 2014ல் உச்ச நீதிமன்றம் இதை மீண்டும் பரிசீலித்தது.


அரசியலமைப்பின் பிரிவு 124(4)-ன் கீழ், "நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை" (proved misbehaviour) அல்லது "இயலாமை" (incapacity) ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே ஒரு நீதிபதியை நாடாளுமன்றம் பதவி நீக்க முடியும்.


உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதை ஆதரிக்க வேண்டும். மேலும், ஆதரவாக வாக்குகள் ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் 50%-க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.


நாடாளுமன்றம் வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தால், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத்தலைவர் உத்தரவிடுவார். இருப்பினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலோ அல்லது அதன் பதவிக்காலம் முடிவடைந்தாலோ, பதவி நீக்கத் தீர்மானம் தோல்வியடையும்.


ஒரு நீதிபதிக்கு எதிரான புகார் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே வரவோ அல்லது அவர்களிடம் செல்லவோ தேவையில்லை. ஒரு நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அழைக்கப்படலாம்.


1995-ஆம் ஆண்டில், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எம். பட்டாச்சார்ஜி மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, உள் அமைப்பின் தேவை எழுந்தது.


அப்போது மூத்த வழக்கறிஞர் இக்பால் சாக்லா தலைமையிலான மும்பை வழக்கறிஞர் சங்கம், நீதிபதியை ராஜினாமா செய்யக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.


வழக்கை விசாரிக்கும் போது, ​​உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே. ராமசாமி மற்றும் பி.எல். ஹன்சாரியா ஆகியோர் மோசமான நடத்தைக்கும் பதவி நீக்கத்தை நியாயப்படுத்தும் நடத்தைக்கும் இடையிலான இடைவெளியைக் சி. ரவிச்சந்திரன் ஐயர் VS  நீதிபதி ஏ.எம். பட்டாச்சார்ஜி  வழக்கில் குறிப்பிட்டனர்.


அரசியலமைப்பின் 124-வது பிரிவின் கீழ், பதவி நீக்க நடவடிக்கைக்கு தகுதியற்ற, பொருத்தமற்ற நடத்தைக்கு நீதிபதிகளை பொறுப்பேற்க வைக்கும் எந்த நடைமுறையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தைக்கும் உயர் பதவிக்கு தகுதியற்ற மோசமான நடத்தைக்கும் இடையிலான ஒரு பெரிய இடைவெளியை" குறைப்பதற்க்காக உச்சநீதிமன்றம் ஒரு உள்ளக நடைமுறையை உருவாக்க முடிவு செய்தது.


நீதித்துறை மதிப்புகளை நிலைநிறுத்தத் தவறும் நீதிபதிகளைக் கையாள்வதற்கான செயல்முறையை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி. அகர்வால், ஏ.எஸ். ஆனந்த் மற்றும் எஸ்.பி. பருச்சா, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பி.எஸ். மிஸ்ரா மற்றும் டி.பி. மொஹபத்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். உச்சநீதிமன்றத்தின் மதிப்புகளை மறு மதிப்பீடு செய்வதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நீதித்துறை நெறிமுறைகளைப் பின்பற்றாத நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.


இந்தக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 1997-ல் சமர்ப்பித்தது. இது டிசம்பர் 1999-ல் உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றக் கூட்டத்தில் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


2014-ல் செயல்முறை மீண்டும் பார்க்கப்பட்டது


2014-ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் பதவியில் இருக்கும் நீதிபதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தபோது, ​​உச்சநீதிமன்றம் அதன் உள்ளக நடைமுறையை மறுபரிசீலனை செய்தது.


நீதிபதிகள் ஜே.எஸ். கெஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் இந்த செயல்முறையை "ஏழு படிகள்" (கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி 'X' VS மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்) மூலம் விளக்கினர்.


அடிப்படையில், ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது குடியரசுத்தலைவர் ஒரு புகாரைப் பெறும்போது இந்த செயல்முறை தொடங்குகிறது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது குடியரசுத்தலைவர் புகாரை தலைமை நீதிபதிக்கு அனுப்புவார்.


இந்த புகார் தலைமை நீதிபதியால் போதுமான அளவு தீவிரமாகக் கண்டறியப்படவில்லை என்றால் எந்த நிலையிலும் கைவிடப்படலாம். இருப்பினும், புகாரின் உண்மைத்தன்மையை சோதிக்க, தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமிருந்து ஆரம்ப அறிக்கையைப் பெறலாம்.


முதற்கட்ட அறிக்கையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, "ஆழமான விசாரணை" தேவை என்று பரிந்துரைத்தால், தலைமை நீதிபதி பரிந்துரையையும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நீதிபதியின் அறிக்கையையும் ஆராய்ந்து, பின்னர் இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்யலாம்.


உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதற்கட்ட அறிக்கை, ஆழமான விசாரணை தேவை என்று பரிந்துரைத்தால், தலைமை நீதிபதி பரிந்துரையையும் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் அறிக்கையையும் மதிப்பாய்வு செய்வார். பின்னர், இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிடலாம்.


இந்தக் குழு நியாயமான நீதி விதிகளைப் பின்பற்றி அதன் சொந்த நடைமுறையை வகுக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இதில் நீதிபதி வர்மா தனது பக்கத்தை விளக்க ஒரு வாய்ப்பு வழங்குவதும் அடங்கும்.


விசாரணை முடிந்ததும், குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கையில் பின்வருவனவற்றைக் குறிப்பிட வேண்டும்:


நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையா என்று கண்டறிந்து குற்றச்சாட்டு, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கும் அளவுக்கு தீவிரமானவையா கருத்தில் கொள்ள வேண்டும்.


அறிக்கை குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகக் கண்டறிந்தால், அது சம்பந்தப்பட்ட நீதிபதிக்கும் அனுப்பப்படும். தவறான நடத்தை நீக்க நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு தீவிரமானது அல்ல என்று குழு முடிவு செய்தால், தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு "ஆலோசனை" வழங்கி, குழுவின் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிடலாம்.


குற்றச்சாட்டுகள் நீக்கப்படும் அளவுக்கு தீவிரமானவை என்று குழு கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட நீதிபதியை ராஜினாமா செய்யவோ அல்லது தானாக முன்வந்து ஓய்வு பெறவோ தலைமை நீதிபதி அறிவுறுத்துவார்.


நீதிபதி ராஜினாமா செய்ய மறுத்தால், அவர்களுக்கு நீதித்துறைப் பணிகளையும் வழங்குவதை நிறுத்துமாறு தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்துவார். (உதாரணமாக, நீதிபதி வர்மாவுக்கு எந்த நீதித்துறைப் பணியையும் ஒதுக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி கன்னா ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவிடம் கூறியுள்ளார்)


தலைமை நீதிபதியின் ராஜினாமா அல்லது ஓய்வு பெறுவதற்கான ஆலோசனையை குற்றச் சாட்டிற்கு உள்ளான நீதிபதி பின்பற்றவில்லை என்றால், பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற குழுவின் முடிவை தலைமை நீதிபதி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிப்பார்.



Original article:

Share: