இன்னும் சில பிரிக்ஸ் நாடுகள், ஆனால் ஒரு சீன-ஈரானிய சுவராக அல்ல

 ரஷ்யாவின் கசான் நகரில் 16வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இன்று தொடங்கவுள்ள நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர், இந்தியா முக்கியப் பங்காற்றுவதற்கான வலுவான நிலையில் இருப்பதாக சுறியுள்ளார். இப்போது ஈரானையும் உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில், மேற்கத்திய எதிர்ப்புக் குழுவாக மாறுவதைத் தடுக்க இந்தியாவால் உதவ முடியும்.  பிரிக்ஸ் அமைப்பிற்குள் சீனாவின் மேலாதிக்கத்தை சமநிலைப்படுத்தவும், ஒரு பக்கத்துடன் இணைவதை விட,  பல நாடுகளுடன் இணைந்து உலகளாவிய அமைப்பை  ஆதரிக்கும் வாய்ப்பாகவும்   இருக்கும்.


கடந்த காலங்களில், ஏற்ற தாழ்வுகள் இருந்தபோதிலும், பிரிக்ஸ் (Brics) குழுவின் உறுப்பினர் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்றவை முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ளன. புதிய வளர்ச்சி வங்கி உருவாக்கம் (New Development Bank) மற்றும் எதிர்பாராச் செலவு இருப்பு ஒப்பந்தம் (Contingency Reserve Agreement) ஆகியவை இதில் அடங்கும். குழுவின் ஐந்து புதிய உறுப்பினர் நாடுகளான எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகவும் முக்கியமான புதிய முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.  தற்போது உள் போட்டிகள், பலதரப்பு நிறுவனங்களில் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகளை இழந்தது மற்றும் உலக அரங்கில் அதன் தாக்கத்தை இழந்ததன் காரணமாக பிரிக்ஸ்  மந்தமடைந்துள்ளது.


ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த இலக்குகள் உள்ளன. ஆனால், சீனா அதன் உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்க பிரிக்ஸ் அமைப்பை பயன்படுத்துவதை நோக்கமாக  கொண்டுள்ளது.  குறிப்பாக, உலகளாவிய தெற்கில். உலகளாவிய நிர்வாகத்தில், குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெரிய நிலையை வகிக்க விரும்பும் இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் லட்சியங்களை மட்டுப்படுத்தவும் இது முயற்சிக்கிறது. மேலும், இது பிரிக்ஸ் அமைப்பின் செயல்திறனை பலவீனப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு (அக்டோபர் 22-24) விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு  நாடுகளுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.  இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.  இந்தியா அதில் முழுமையாக ஈடுபட வேண்டும்.


பிரிக்ஸ் (Brics)  மேற்கு நாடுகளுக்கு எதிரான குழுவாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் பணி. குவாட் (Quad), AUKUS, ரஷ்யா-சீனா கட்டுப்பாடுகள் இல்லாத கூட்டாண்மை, உக்ரைன் போர் மற்றும் ஈரான் போன்ற கூட்டணிகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்ததால், மேற்கு நாடுகளுக்கு சவால் விடும் குழுவைப் பயன்படுத்துவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.  பிரிக்ஸ் முதலில் மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் உலக ஒழுங்கை எதிர்க்க உருவாக்கப்பட்டது என்றாலும், அது முற்றிலும் மேற்குக்கு எதிரானதாக மாறக்கூடாது.


குவாட் மற்றும் பிரிக்ஸ் போன்ற பல்வேறு புவிசார் அரசியல் குழுக்களை இந்தியா சமன் செய்ய முடிந்தது.  பிரிக்ஸ் அமைப்பின்  எதிர்காலத்தை வடிவமைக்க அதன் பல சீரமைக்கப்பட்ட நிலைப்பாட்டைப் பயன்படுத்த இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தனது நிலைப்பாட்டில் தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது எந்த ஒரு அமைப்பிற்கும் சொந்தமானது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. அதிர்ஷ்டவசமாக, விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பல நாடுகள் சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்க விரும்புகின்றன. பல்வேறு அரசியல் உறவுகளைக் கொண்டிருக்கின்றன. மேலும், ஆழமான உலகளாவிய பிளவுகளைத் தவிர்க்கின்றன.


2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டில், இந்தியப் பிரதமர் மோடி, உலக அமைப்பைச் சீர்திருத்துவதற்காக பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது என்பதை தலைவர்களுக்கு நினைவூட்டினார். "சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை" (“reformed multilateralism") பற்றிய தனது பார்வையை அவர் அறிமுகப்படுத்தினார். இப்போது, பிரிக்ஸ் அமைப்பு  மீண்டும் உலகளாவிய நிர்வாகத்தில் அதிக செல்வாக்கைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு இப்போது உலக மக்கள்தொகையில் 41%, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% மற்றும் உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 44% ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


பிரிக்ஸ் (Brics) அமைப்பில் மேற்கு நாடுகள் ஒன்றுபட்டதாகவும் ஜனநாயக ரீதியாகவும் காணப்பட்டாலும், சில நேரங்களில் வேறுபாடுகள் மற்றும் மோதல்களை எதிர்கொள்கிறது. இது ஒரு ஒருங்கிணைந்த குரலைக் கொண்டிருப்பதைத் தடுக்கிறது. எவ்வாறாயினும், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது மற்றும் குழுவில் அதிக பன்முகத்தன்மை அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்த வேண்டும். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்துவது சவாலானதாக இருந்தாலும்,  சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய குழுவை விட பெரிய பிரிக்ஸ் உலகளாவிய சீர்திருத்தங்களை மிகவும் திறம்பட வலியுறுத்த முடியும்.


பிரிக்ஸ் (Brics) அமைப்பு, உள்ளூர் நாணய தீர்வுகள் மற்றும் மாற்றுக் கட்டண முறைகள் பற்றிய பேச்சுக்கள் டாலரின் ஆதிக்கத்தை சவால் செய்வதோடு மட்டுமல்லாமல், ஒருதலைப்பட்ச தடைகள் மற்றும் சொத்து முடக்கம் போன்ற அரசியல் கருவிகளாக டாலர் மற்றும் சர்வதேச கட்டண முறைகளின் அதிகரித்து வரும் பயன்பாட்டை எதிர்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


G20 நாடுகளின்  பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் என்றாலும், உலகளாவிய நிதி அமைப்பின் உண்மையான சீர்திருத்தம் இன்னும் முழுமையாக இல்லை. பிரிக்ஸ் அமைப்பின் முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டால், பிரிக்ஸ் (Brics) அமைப்பு நம்பிக்கையுடன் அதன் பொருளாதார சக்தியைப் பயன்படுத்தி, G20 நாடுகளுக்குள் அல்லது அதற்கு வெளியே மாற்றத்திற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.


வரவிருக்கும் கசான் உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் சேர காத்திருக்கும் 34 நாடுகளில் இருந்து புதிய கூட்டாளர்களை சேர்க்கும். மேலும், உலகளாவிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  காலநிலை நிதி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற இந்தியா நீண்டகாலமாக ஆதரிக்கும் விரிவாக்கங்களை மேலும் வலுப்படுத்த முடியும். ஊகங்களுக்கு மாறாக, விரிவாக்கம் உண்மையில் பிரிக்ஸை அமைப்பை கட்டுப்படுத்தும் சீனாவின் முயற்சியை எதிர்க்கலாம்.


சர்வதேச சட்டம் மற்றும் விதிகள் அடிக்கடி மீறப்படும் உலகில், விரிவாக்கப்பட்ட  பிரிக்ஸ் அமைப்பிற்க்கு G7 மற்றும் மேற்கு நாடுகள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும். பிரிக்ஸ் அமைப்பின் எழுச்சியை சாதரணமாக பார்ப்பது தவறு. ஏனெனில், அது பிளவுகளை ஆழப்படுத்தலாம் மற்றும் உலகளாவிய தெற்கிலிருந்து மேற்கு நாடுகளை மேலும் அந்நியப்படுத்தலாம்.


அமெரிக்கா மற்றும் குவாட் உடனான இந்தியாவின் நெருங்கிய உறவுகள் அல்லது சீனாவுடனான அதன் கடினமான உறவு, பிரிக்ஸை வலுப்படுத்துவதைத் தடுக்கக்கூடாது. உக்ரைன் போரில் தான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை கசான் உச்சிமாநாட்டில் ரஷ்யா காட்ட முயல்வதால், இந்தியா பிரிக்ஸ் அமைப்பினை முன்னணியில் இருந்து வழிநடத்த முடியும் என்பதை காட்ட வாய்ப்புள்ளது.

     



Original article:

Share:

அரசியலமைப்பு கட்டமைப்புக்கு மதச்சார்பின்மை முக்கியமானது: அரசியலமைப்பின் முகவுரை வழக்கில் உச்சநீதிமன்றம் -உத்கர்ஷ் ஆனந்த்

 அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த வார்த்தைகளை முன்னுரையில் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக கூறி வாதிட்டனர். 


1976-ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் "சமதர்மம்" (socialist) மற்றும் "மதச்சார்பற்ற "(secular) சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து உச்சநீதிமன்றம் திங்களன்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. இந்த சொற்கள் மேற்கத்திய விளக்கங்களிலிருந்து வேறுபட்டவை என்றாலும், இந்திய சூழலில் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டுள்ளன என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது. 


அரசியலமைப்பில் உள்ள 'சமத்துவம்' (‘equality’) மற்றும் 'சகோதரத்துவம்' (‘fraternity’) போன்ற சொற்களை நீங்கள் ஆராயும்போது, முகவுரையில் அவற்றின் அர்த்தங்கள் தெளிவாகின்றன. மதச்சார்பின்மை (secularism) என்பது நமது அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என்றும் இந்த நீதிமன்றம் கூறியுள்ளது என்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய  அமர்வு கூறியது. 


இந்திய ஜனநாயகம் இந்த கருத்துக்களை ஒரு நெகிழ்வான வழியில் விளக்கி சமநிலைப்படுத்தியுள்ளது என்று அமர்வு கூறியது.  இந்தியாவில் மதச்சார்பின்மை மத நடுநிலைமைக்கு அப்பாற்பட்டது என்றும், மேலும், அது சட்ட கட்டமைப்பிற்குள் ஆழமான அர்த்தத்தைப் பெறுகிறது என்றும் குறிப்பிட்டது. 


வழக்கறிஞர்கள் விஷ்ணு சங்கர் ஜெயின் மற்றும் அஸ்வினி உபாத்யாய் தலைமையிலான மனுக்கள், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சொற்களை முன்னுரையில் சேர்க்க வேண்டாம் என்று தேர்வு செய்தனர் என்று வாதிட்டனர். அரசியலமைப்பின் வரைவின் போது நடந்த விவாதங்கள் இந்த வார்த்தைகளை உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகளை நிராகரித்துள்ளன. இது வடிவமைப்பாளர்களின் தெளிவான முடிவைக் காட்டுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். 


ஆனால், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது மதச்சார்பின்மை (secularism) என்ற கருத்து இன்றைய காலத்துடன் ஒப்பிடும்போது வேறுபட்டது என்று நீதிபதி கன்னா கூறினார். மதச்சார்பின்மை குறித்த இந்தியாவின் புரிதல்கள் மற்றும் முக்கியமான தீர்ப்புகள் மதச்சார்பின்மையை அடிப்படை கட்டமைப்புக் கோட்பாட்டின் முக்கிய பகுதியாக அடையாளம் கண்டுள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் மத விதிகளை ரத்து செய்வதன் மூலம் இந்திய அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மதச்சார்பின்மைக்கு குறிப்பிடத்தக்க அர்த்தத்தை அளித்துள்ளன என்று  அமர்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை விளக்குவதிலும் சமநிலைப்படுத்துவதிலும் நீதிமன்றங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் உள்ளன என்றும் அமர்வு குறிப்பிட்டது. 


"சமதர்மம்" (socialist)  பிரச்சினையில், 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய பிறகு, சமதர்மம் சமத்துவ வாய்ப்பு மற்றும் நியாயமான வள விநியோகம் பற்றியதாக மாறியது என்று  அமர்வு விளக்கியது. இந்திய சமதர்மத்தை மேற்கத்தைய சோசலிசத்துடன் ஒப்பிடுவதற்கு எதிராக அது எச்சரித்தது. இந்தியா எப்பொழுதும் சமதர்மத்தை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் அணுகியுள்ளது என்று வலியுறுத்தியது. 



"நமது பொருளாதாரக் கொள்கை 1990-ஆம் ஆண்டு முதல் தாராளமயமானது.  நாட்டுக்கு தீங்கு விளைவித்ததா? இல்லை!  "சமதர்மம்" ( socialist) என்பது சம வாய்ப்புகள் மற்றும் நியாயமான செல்வப் பகிர்வு என்றும் பொருள்படும். சமதர்மம் என்பதற்கு மேற்கத்திய அர்த்தத்தை நாம் பயன்படுத்தக்கூடாது என்று அமர்வு குறிப்பிட்டது. 


இந்த வழக்கின் மனுதாரரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நவம்பர் 26, 1949-ஆம் ஆண்டு தேதியிலிருந்து 1976-ஆம் ஆண்டில் முன்னுரையை திருத்தியிருக்க முடியாது என்று வேறு கோணத்தில் வாதிட்டார். இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதியானது "சமதர்மம்" (socialist) மற்றும் மதச்சார்பின்மை (secularism) போன்றவற்றை சேர்ப்பது போன்ற பிற்கால திருத்தங்களை அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என்று அவர் வாதிட்டார்.


சுவாமியின் வாதத்தை ஏற்க மறுத்த அமர்வு, திருத்தங்கள் அரசியலமைப்பு பரிணாமத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறியது. "அந்த நேரத்தில் செய்யப்பட்ட ஒரே திருத்தம் இதுவல்ல," என்றும் அமர்வு குறிப்பிட்டது. மாறிவரும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியலமைப்பில் பல திருத்தங்கள் உள்ளன. 


இந்த தெளிவுபடுத்தல்கள் இருந்தபோதிலும், இந்திய முகப்புரையின் தனித்தன்மையை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இவை நவம்பர் 26, 1949 என்ற குறிப்பிட்ட தேதியைச் சேர்த்தது என்றும், பின்னர் மனுதாரர்களுக்கான குறிப்பிட்ட அறிவுறுத்தல்களுடன், மேலும் விரிவான விசாரணைக்காக வழக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க அமர்வு ஒப்புக்கொண்டது. முன்னுரை ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியை மாற்றாமல்  இந்த சிக்கலைத் தீர்க்க முடியுமா? என்பது குறித்தும் மனுதாரர்களிடம் விளக்கம் கேட்டனர். 


42 வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்து சுவாமி மற்றும் சமூக சேவகர் பல்ராம் சிங் உள்ளிட்ட 2020-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியது. 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தம், முகவுரையில் "சமதர்மம்" (socialist)  மற்றும் மதச்சார்பின்மை (secularism) என்ற சொற்களைச் சேர்த்தது. 


திருத்தத்திற்கு முன்பு, முன்னுரை இந்தியாவை ஒரு "இறையாண்மை ஜனநாயக குடியரசு" (“sovereign democratic republic”) என்று விவரித்தது. மாற்றத்திற்குப் பிறகு, அது "இறையாண்மை சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு" (“sovereign socialist secular democratic republic”) என்று குறிப்பிடப்பட்டது.


 இந்த மாற்றம் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் அசல் நோக்கங்களுடன் முரண்படுவதாகவும், அவர்கள் வேண்டுமென்றே இந்த விதிமுறைகளை நிராகரித்ததாகவும் மனுதாரர்கள் கூறினர். 


அரசியலமைப்பு சபை விவாதங்களின் போது, "சமதர்மம்" (socialist)  மற்றும் மதச்சார்பின்மை (secularism) என்ற சொற்கள் பல முறை முன்மொழியப்பட்டன. நவம்பர் 15, 1948 அன்று, பேராசிரியர் கே.டி.ஷா முன்னுரையில் "சமதர்மம்" (socialist)  மற்றும் மதச்சார்பின்மை (secularism) ஆகியவற்றைச் சேர்க்க பரிந்துரைத்தார். ஆனால், சட்டமன்றம் அதை நிராகரித்தது. 


பின்னர் பிரிவு 18-ல் "மதச்சார்பற்ற" சேர்க்கும் முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டன. இந்த நிராகரிப்புகள் அரசியலமைப்பின் மையத்தில் இந்த கருத்துக்களை சேர்க்க வேண்டாம் என்ற வடிவமைப்பாளர்களின் தெளிவான முடிவைக் காட்டுகின்றன என்று மனுதாரர்கள் வாதிட்டனர். 


வழக்கறிஞர் உபாத்யாய் மற்றும் பிற மனுதாரர்கள், 1976-ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் இந்த வார்த்தைகளை சேர்த்தது அரசியலமைப்பின் உண்மையான பார்வையை மீறுவதாகக் கூறினர். குறிப்பாக, மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவு 25  கருத்தில் கொண்டு. முகவுரையில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மத நடுநிலை என்று தவறாக விளக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் வாதிட்டனர். 


அதற்கு பதிலாக, இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டிய நேர்மறையான கடமை அரசுக்கு உள்ளது என்பதாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 1989-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தையும் மனுதாரர்கள் முறையீடு செய்தனர்.  


இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு அரசியல் கட்சிகள் "சமதர்மம்" (socialist)  மற்றும் மதச்சார்பின்மை (secularism) உறுதியளிக்க வேண்டும் என்று இந்த திருத்தம் கூறுகிறது.  இது அரசியல் கட்சிகளை அவர்களின் மதிப்புகளை பிரதிபலிக்காத சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துகிறது.  இது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a))-ன் கீழ் அவர்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுகிறது என்று அவர்கள் வாதிட்டனர்.




Original article:

Share:

செயற்கைக்கோள் அலைக்கற்றை (satellite spectrum) என்றால் என்ன? பெரும்பாலான நாடுகள் ஏலங்களை நடத்த ஏன் விரும்புவதில்லை ? -சௌம்யரேந்திர பாரிக்

 இதற்கு பதிலளிக்கும் விதமாக, அக்டோபர் 14 அன்று X தளத்தில் மஸ்க் ஒரு ஏல செயல்முறை "முன்னோடியில்லாததாக இருக்கும். ஏனெனில், இந்த அலைக்கற்றை நீண்ட காலமாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (International Telecommunication Union (ITU) செயற்கைக்கோள்களுக்கான பகிரப்பட்ட அலைக்கற்றை  என வகைப்படுத்தியுள்ளது"  என்று பதிவிட்டுள்ளார்.


இந்த மாத தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோவால் முன்மொழிந்தபடி  அலைக்கற்றைகளை ஏலம் விடாமல், செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கான (spectrum for satellite communication (satcom)) அலைக்கற்றை "நிர்வாக ரீதியாக" ஒதுக்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் தெளிவுபடுத்தினார். 


இது நிறுவனத்தின் சில பெரிய போட்டியாளர்களுக்கு, குறிப்பாக எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு (Starlink) கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. இருப்பினும், உண்மை என்னவென்றால், செயற்கைக்கோள் அலைக்கற்றையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, எந்த ஒரு நாடும் அதை ஏலம் விடுவது சாத்தியமில்லை. மொபைல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் நிலம்சார்ந்த அலைக்கற்றை (terrestrial spectrum) போலல்லாமல், செயற்கைக்கோள் அலைக்கற்றை தேசிய பிராந்திய வரம்புகள் இல்லை. இந்த சர்வதேச தன்மை காரணமாக, செயற்கைக்கோள் அலைக்கற்றை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (ITU) ஒருங்கிணைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.


சாட்காமிற்கான (satcom) அலைக்கற்றை என்பது தொலைத்தொடர்பு சட்டம், 2023-ன் முதல் அட்டவணையின் ஒரு பகுதியாகும் (“நிர்வாக செயல்முறை மூலம் அலைக்கற்றை ஒதுக்குதல்”). சட்டத்தின் பிரிவு 4(4) இன் கீழ், தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் மூலம் ஒதுக்கப்படும், "முதல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள உள்ளீடுகளைத் தவிர, நிர்வாகச் செயல்பாட்டின் மூலம் ஒதுக்கப்படும்".


சட்டத்தின் கீழ் "நிர்வாக செயல்முறை" என்பது "ஏலம் நடத்தாமல் அலைக்கற்றை ஒதுக்கீடு" என்றும், "ஏலம்" என்பது அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான ஏல செயல்முறை என்றும் பொருள்படும்". 


தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunication (DoT)) அலைக்கற்றை ஒதுக்குவதற்கான ஒரு வழிமுறையைக் கொண்டு வருமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (Telecom Regulatory Authority of India (Trai)) கேட்டுக் கொண்டது. டிராய் சேவைக்கான விலை மாதிரிகளை ஆராய்ந்தபோது, ஜியோ நிர்வாக ஒதுக்கீட்டால் செயற்கைக்கோள் மற்றும் நிலப்பரப்பு சேவைகளுக்கு இடையில் ஒரு சமமான நிலையை உறுதிப்படுத்த முடியாது என்று ஜியோ கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பித்தது. 


இதற்கு பதிலளிக்கும் விதமாக, அக்டோபர் 14 அன்று X தளத்தில் மஸ்க் ஒரு ஏல செயல்முறை "முன்னோடியில்லாததாக இருக்கும். ஏனெனில், இந்த அலைக்கற்றை நீண்ட காலமாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (International Telecommunication Union (ITU)) செயற்கைக்கோள்களுக்கான பகிரப்பட்ட அலைக்கற்றை  என வகைப்படுத்தியுள்ளது"  என்று பதிவிட்டுள்ளார்.


சாட்காம் சேவைகள் தரையில் இணைப்பை வழங்க சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களின் வரிசையைப் பயன்படுத்துகின்றன. தரவை அனுப்ப கம்பிகள் தேவையில்லை. மேலும், கேபிள், ஃபைபர் அல்லது டிஜிட்டல் சந்தாதாரர் வரி (digital subscriber line (DSL)) போன்ற நிலப்பரப்பு நெட்வொர்க்குகள் எனப்படும் தரை அடிப்படையிலான தகவல்தொடர்புகளுக்கு மாற்றாகும். 


வீடுகள் மற்றும் வணிகங்கள் போன்ற இறுதி பயனர்களுக்கு, செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் இரண்டு முக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பரந்த இணைப்பு (wider coverage) மற்றும் அதிக நெகிழ்திறன் இணைய வசதி (resilient network). சாட்காம் சேவைகளின் தாமதம் சில நேரங்களில் நிலம் சார்ந்த இணைய வசதிகளை விட அதிகமாக இருக்கலாம் என்றாலும், அவை அதிக உபகரணங்களை நிறுவ வேண்டிய அவசியமின்றி அவை பரந்த பகுதிகளை மறைக்க முடியும்.


செயற்கைக்கோள்களின் பயன்பாடு மொபைல் தொலைபேசியால் அணுக முடியாத தொலைதூர இடங்களை அடைய தகவல்தொடர்பு வலையமைப்புகளை அனுமதிக்கிறது. சாட்காம் சேவைகள் மிகவும் பிரதானமாக மாறும் போது, தாழ்வான மற்றும் கிராமப்புறங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு ஆளாகும் பகுதிகள் நிலையான இணைப்பால் பயனடையும் என்று பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது. 


செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையம் நிலப்பரப்பு அடிப்படையிலான சேவைகளை விட அதிக நெகிழ்திறன் கொண்டதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில், அவை தரையில் ஒப்பீட்டளவில் குறைவான கூறுகளைக் கொண்டுள்ளன. எனவே, செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கான உபகரணங்கள் தீவிர வானிலை நிகழ்வுகளால் சேதத்தைத் தக்கவைக்கும் வாய்ப்பு குறைவு.

சாட்காம் (satcom) துறையின் அளவு 


இந்தியாவில் ஆலோசனை நிறுவனமான கே.பி.எம்.ஜி (KPMG) சமீபத்திய அறிக்கையில், தற்போது ஆண்டுக்கு 2.3 பில்லியன் டாலராக இருக்கும் நாட்டின் சாட்காம் துறை 2028-ஆம் ஆண்டில் 20 பில்லியன் டாலரை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது. 


உலக அளவில் இத்துறையில் முதலீடுகள் செய்வதில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி, இந்தியாவில் சுமார் 290.4 மில்லியன் வீடுகளில் பிராட்பேண்ட் பயன்படுத்தப்படவில்லை என மதிப்பிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் ஆபரேட்டர்களுக்கு வலுவான சந்தை வாய்ப்பை வழங்குகிறது. 


ஏலம் vs ஒதுக்கீடு 


நிலப்பரப்பு வலையமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளுக்கான அலைக்கற்றை ஆகியவற்றுக்கு இடையிலான முக்கிய வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம். மேலும், ஒதுக்கீடு மற்றும் ஏலத்திற்கு இடையிலான வேறுபாடு ஏன் முதலில் எழுகிறது. 


நிலப்பரப்பு மொபைல் சேவைகளுக்கு, அலைக்கற்றை பிரத்தியேகமானது. மேலும், கொடுக்கப்பட்ட புவியியல் பகுதியில் ஒரு மொபைல் ஆபரேட்டரால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது. எனவே, இதை ஆபரேட்டர்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ள முடியாது. 


செயற்கைக்கோள்களைப் பொறுத்தவரை, ஒரே அலைக்கற்றை இயற்கையில் பிரத்தியேகமானது அல்ல. மேலும், ஒரே புவியியல் பகுதிக்கு சேவை செய்ய பல செயற்கைக்கோள் ஆபரேட்டர்களால் பயன்படுத்தப்படலாம். எனவே, செயற்கைக்கோள் அலைக்கற்றையை நிர்வாக ரீதியாக ஒதுக்குவதே பொதுவான போக்கு. 


அமெரிக்கா, பிரேசில் மற்றும் சவுதி அரேபியா போன்ற ஒரு சில நாடுகள் கடந்த காலங்களில் அதிர்வெண் அடிப்படையில் அலைக்கற்றை (frequency spectrum) ஏலங்களை நடத்தியுள்ளன.  அமெரிக்காவும், பிரேசிலும் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தை நடத்தின. ஏல செயல்முறை சாத்தியமற்றது என்று கண்டறிந்த பின்னர் இரு நாடுகளும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு திரும்பின. 


அமெரிக்கா கடைசியாக 2004-ஆம் ஆண்டில் ஒளிபரப்பு சேவைகளுக்கான மூன்று உள்நாட்டு சுற்றுப்பாதை இடங்களுக்கு செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தை நடத்தியது.  12 GHz மற்றும் 14 GHz அதிர்வெண்களில் இயங்கும் குறுந்துளை முனையம் (Very Small Aperture Terminal (VSAT)) மற்றும் அதற்கு சமமான C-Band ஆண்டெனாக்களுக்கான வருடாந்திர ஒழுங்குமுறை கட்டணம் உரிமம் அல்லது அங்கீகாரத்திற்கு $595 டாலர் ஆகும். 


செயற்கைக்கோள் ஏலங்களை நிர்வாக உரிமத்துடன் மாற்ற பிரேசில் 2020-ஆம் ஆண்டில் அதன் ஒழுங்குமுறை கட்டமைப்பை திருத்தியது. நாட்டில் செயற்கைக்கோள் தரையிறங்கும் உரிமைகள் ஏலம் மூலம் ஒதுக்கப்பட்டாலும், செயற்கைக்கோள் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அலைக்கற்றை தனித்தனியாக ஏலம் விடப்படவில்லை. 

சவுதி அரேபியா சமீபத்தில் எஸ்-பேண்டில் (S-band) ஒரு அலைக்கற்றை ஏலத்தை நடத்தியது.  இது 2 GHz முதல் 4 GHz வரை இருக்கும் மற்றும் மொபைல் செயற்கைக்கோள் சேவைகள் (mobile satellite services (MSS)) மற்றும் வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எஸ்-பேண்டின் (S-band)  தொழில்நுட்ப பண்புகள் மொபைல் செயற்கைக்கோள் சேவைகளுக்கு பிரத்யேக அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. எனவே, தரைவழி மொபைல் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் போன்று ஏலம் நடத்தப்படலாம்.



Original article:

Share:

தென்னிந்தியா தனது முதியோர் மக்கள் தொகையை எவ்வாறு கையாள வேண்டும்? - உதித் மிஸ்ரா

 தென்னிந்தியாவில் முதியோர்களின் நிலைமை குறித்து ஏன் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன? இந்த நிலைமை சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தால், அதிக குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிக்க முடியுமா? உள்-இடப்பெயர்வு என்ன விதமான பங்கை வகிக்க முடியும்? 


ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை உருவாக்கி வருவதாக ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும், எங்கள் மாநிலம் ஏற்கனவே மக்கள்தொகையில் பற்றாக்குறையில் உள்ளோம் எனவும், ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைப் பெற்றிருப்பது இளைஞர்களின் எண்ணிக்கையின் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று இவர் குறிப்பிட்டிருந்தார்.


முன்னதாக, தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளதாவது, மாநிலங்களில் தொகுதி எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு குறைவான மக்கள்தொகையால் நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கலாம் என்று கவலைப்படுவதாகவும், தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைவாக இருப்பதாகவும், மேலும் ஏற்கனவே முதியோர்களின் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலைமை, படிப்படியாக வட இந்தியாவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


திங்களன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தால், தென்னிந்தியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளில் பங்கு குறையும் சாத்தியம் குறித்து பேசுகையில் "ஏன் 16 குழந்தைகளை இலக்காகக் கொள்ளக்கூடாது?" என்று கேலி செய்தார்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டில் தாமதமாகியுள்ள நிலையில், மிக சமீபத்தில் கிடைக்கக்கூடிய மக்கள் தொகை கணிப்புகள், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்குள் உள்ள ஒரு தொழில்நுட்பக் குழுவின் 2020-ம் ஆண்டு அறிக்கையிலிருந்து வந்துள்ளன. 


இந்தியாவின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு முதியோர்களை கொண்டுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சதவீதம் ஒட்டுமொத்தமாக உயரும். இருப்பினும், தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் முதியோர்களின் அதிகரிப்பு குறைவாக இருக்கும். ஏனென்றால், பெரும்பாலான தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட விரைவில் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கு (lower fertility rate) மாறிவிட்டன. உதாரணமாக, ஆந்திராவின் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான், உத்தரப் பிரதேசம் கருவுறுதலின் மாற்று நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


2011 முதல் 2036-ம் ஆண்டு வரை, இந்தியாவின் மக்கள் தொகை 31.1 கோடி கூடுதலாக அதிகரிக்கும். இந்த அதிகரிப்பில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 17 கோடி - பீகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் எண்ணிக்கையின் கூடுதலாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் உத்தரப்பிரதேசம் 19% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* 2011-2036 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகை அதிகரிப்பில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்களின் பங்களிப்பு 2.9 கோடி மட்டுமே பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த அதிகரிப்பில் 9% ஆகும்.


* கருவுறுதல் குறைந்து வருவதாலும், சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதாலும், மக்கள்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 10 கோடியிலிருந்து 2036-ம் ஆண்டில் 23 கோடியாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், மக்கள்தொகையில் முதியோர்களின் பங்கு 8.4% முதல் 14.9% வரை உயரும். 


* கேரளாவில், மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த கருவுறுதல் மற்றும் இறப்பு விகிதங்கள் முன்னதாகவே எட்டப்பட்டன. இதன் விளைவாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதம் 2011-ம் ஆண்டில் 13% ஆக இருந்து 2036-ம் ஆண்டில் 23% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 4-ல் ஒருவர் முதியவராக இருப்பார். மாறாக, உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை இளைஞர்களைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் பங்கு 2011-ம் ஆண்டில் 7% ஆக இருந்து 2036-ம் ஆண்டில் 12% ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


முதியோர்களைப் பற்றிய சந்திரபாபு நாயுடுவின் கவலை மற்றும் குறைந்த  மக்கள்தொகை பற்றிய ஸ்டாலினின் குறிப்பு போன்ற இரண்டு வேறுபட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளன.


பொதுவாக, மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உழைக்கும் மக்களை கொண்டுள்ளதால், அது "பிளவு" (dividend) என்று பரிந்துரைக்கிறது. ஏனென்றால், மக்கள் தொகையில் வருமான ஈட்டாத மற்றும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் சதவீதத்தை அளவிடும் சார்பு விகிதம் 50% க்கும் குறைவாக உள்ளது.


இரண்டு வகையான சார்புநிலைகள் உள்ளன. அவை, 15 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார். முதியோர்களின் அதிக சதவிகிதம், இந்த வளர்ந்து வரும் மக்கள்தொகையை கவனித்துக்கொள்வதற்கு அரசு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.


ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக இருப்பது வேறுபட்டது. தேர்தல் எல்லை நிர்ணயம் (electoral delimitation) குறித்த பொது விவாதங்களில் இந்த கவலை கவனம் பெற்றுள்ளது. மக்களவையில் குறைவான இடங்களுடன் தென் மாநிலங்களுக்கு பாகுபாடு விதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இது வடக்கு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​குறிப்பாக "BIMARU" மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் முந்தைய மக்கள்தொகை மாற்றத்தின் காரணமாகும்.


ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் போன்ற சில நாடுகளும் முதியோர்களுடன் போராடுகின்றன என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார். இருப்பினும், மேம்பாடாக மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க முடியும் என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை.


சமூக மக்கள்தொகை ஆய்வாளர் சோனால்டே தேசாய், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் எமரிட்டா மற்றும் ஜே.என்.யூவின் பி.எம்.குல்கர்னி மற்றும் தீபக் மிஸ்ரா போன்ற கல்வியாளர்கள் மகப்பேறு சார்பு கொள்கைகள் (pro-natalist policies) மிகக் குறைந்த வெற்றியையே பெற்றுள்ளன என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். 


மகப்பேறு ஆதரவு கொள்கைகள் உலகில் எங்கும் திறம்பட செயல்படவில்லை என்று சோனால்டே தேசாய் சுட்டிக்காட்டினார். இதில் ஜப்பான், சீனா, கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அடங்கும். ஸ்காண்டிநேவிய நாடுகளில் இந்தக் கொள்கைகள் சில நேர்மறையான விளைவைக் கொண்ட ஒரே இடமாக உள்ளது. இந்த நாடுகளில், இந்த கொள்கைகள் குடும்ப ஆதரவு, குழந்தை பராமரிப்பு ஆதரவு, பாலின சமத்துவம் மற்றும் தந்தைவழி விடுப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன.


இந்தக் கருத்துக்கள், மக்கள் தொகைப் பிரச்சினை தொடர்பான அரசியல்வாதிகளின், குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.


ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய கவலை அதிகமான மக்கள்தொகை வளர்ச்சியாகும். இது அதிக அளவு கருவுறுதல் (ஒரு பெண்ணுக்கு பிறப்பு) மூலம் தூண்டப்பட்டது. ஒரு காலத்தில் இதன் நிலைமை மிகவும் கடுமையானதாகக் கருதப்பட்டது. ஏனெனில், இந்தியா தனது மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்க போதுமான உணவு இருக்குமா என்று பலர் கவலைப்பட்டனர். 


பல ஆண்டுகளாக, இந்தியா அதன் மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைக்க முடிந்தது. குறிப்பாக, பல தென் மாநிலங்களில் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 2004-ம் ஆண்டில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற விகிதத்தில் கருவுறுதலின் மாற்று நிலையை ஆந்திரப் பிரதேசம் அடைந்தது. கேரளா (1988), தமிழ்நாடு (2000), இமாச்சல பிரதேசதம் (2002) மற்றும் மேற்கு வங்காளத்தைத் (2003) தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய மாநிலமாக அமைந்தது. ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டம் முன்பு இருந்தது. இருப்பினும், சந்திரபாபு நாயுடு இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளார்.


இருப்பினும், தனிப்பட்ட மாநிலங்கள் கடந்த காலங்களை விட கணிசமாக குறைந்த அளவிலான கருவுறுதலைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் மக்கள்தொகையின் வேகம் என்பது இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. 


இருப்பினும், குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.


"எளிமையான தீர்வு (உள்) இடப்பெயர்வு" என்று தேசாய் கூறினார். மொத்த மக்கள்தொகைக்கு பங்களிக்கும் மூன்று காரணிகள் உள்ளன: கருவுறுதல், இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவை ஆகும். தேசாய் மற்றும் குல்கர்னி இருவரும் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையிலான மக்கள்தொகை மாற்றத்தின் சீரற்ற வேகத்தால் ஏற்படும் மக்கள்தொகை வேறுபாட்டை சமப்படுத்துவதற்கு உள்-இடப்பெயர்வு உதவும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


இடப்பெயர்வு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. "மேலும், தென் மாநிலங்களில் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் கிடைப்பார்கள்" என்று தேசாய் கூறினார். சுருக்கமாக, இதற்கான இலக்கு மாநிலங்கள் ஒரு இளைஞர்களை, அல்லது இவர்களின் கல்வியை உயர்த்துவதில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. உழைக்கும் வயதினர் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து அவர்கள் உடனடியாக பயனடைவார்கள்.


இந்த மாதிரியைத்தான் அமெரிக்கா பல பத்தாண்டுகளாக பயன்படுத்தியுள்ளது. இது புலம்பெயர்ந்தோர், அவர்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவை அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்தை உலகளவில் தக்கவைக்க உதவியுள்ளன.


குல்கர்னி மற்றும் மிஸ்ரா இருவரும் இந்தியா தனது தொழிலாளர்களின் பொருளாதார உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதிக குழந்தைகளைப் பெறுவதற்குப் பதிலாக, இந்தியா அதன் தற்போதைய மக்கள்தொகையின் பிளவின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.




Original article:

Share:

ஒடிசா, மேற்கு வங்கத்தை தாக்கும் டானா புயல்: புயல்களுக்கு எப்படி, ஏன் பெயரிடப்படுகிறது?

 டானா புயல்: புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது. அவற்றின் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன மரபுகள் பின்பற்றப்படுகின்றன?  


இந்திய வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 21-ஆம் தேதி  அன்று கிழக்கு-மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புதன்கிழமைக்குள் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக அறிவித்தது. "டானா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வியாழக்கிழமை இரவு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் வடக்கு கடற்கரை இடையே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதள  பக்கத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புதன்கிழமை ஒரு தீவிர புயலாகவும் உருவாகும் என்றும்,  இது வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டும் என்றும், புயல்  வியாழன் இரவு அல்லது  வெள்ளிக்கிழமை காலை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. ஆகஸ்ட் பிற்பகுதியில் அஸ்னா புயலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குள் வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் இரண்டாவது புயல் டானா ஆகும். 


"டானா" என்ற பெயர் அரபு மொழியில் "பெருந்தன்மை" (‘generosity’) என்று பொருள் மற்றும் அப்பகுதியில் உள்ள வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிடும் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி கத்தார் நாட்டினால் இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. சூறாவளிகள் எவ்வாறு பெயரிடப்படுகின்றன, அவற்றின் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன மரபுகள் பின்பற்றப்படுகின்றன? 


புயல்களுக்கு பெயர் வைப்பது யார்? 


2000 ஆம் ஆண்டில், உலக வானிலை அமைப்பு/ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (World Meteorological Organization/United Nations Economic and Social Commission for Asia and the Pacific (WMO/ESCAP)) எனப்படும் நாடுகளின் குழு, இப்பகுதியில் உள்ள சூறாவளிகளுக்கு பெயரிட முடிவு செய்தது. இந்த குழுவில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடும் பெயர் பரிந்துரைகளை அனுப்பியது. மேலும், WMO/ESCAP Panel on Tropical Cyclones (PTC) இறுதிப் பட்டியலை உருவாக்கியது.


2018-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து. ஏப்ரல் 2020-ல், இந்திய வானிலை ஆய்வு மையம் 169 புயல் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. 13 நாடுகளில் ஒவ்வொன்றும் 13 பெயர் பரிந்துரைகளை அளித்தன.


புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்? 


புயல்களுக்குப் பெயரிடுவது, எண்கள் அல்லது தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்துவதை விட, மக்கள் அவற்றை நினைவில் வைத்திருப்பதை எளிதாக்குகிறது. இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகள், ஊடகங்கள் மற்றும் பேரிடர் மேலாளர்களுக்கும் உதவுகிறது. பெயரிடுவது புயல்களை அடையாளம் காண உதவும்.  அவற்றின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது மற்றும் விரைவான எச்சரிக்கைகளை உருவாக்குகிறது. இது ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாகும் போது குழப்பத்தை தவிர்க்க உதவுகிறது. மற்ற பகுதிகளும் வெப்பமண்டல புயல்களுக்கு இந்த பெயரிடும் முறைகளைப்  பின்பற்றுகின்றன.


புயல்களுக்கு  பெயரிடும் மரபுகள்


நாடுகள் புயல்களுக்கு பெயர்களை பரிந்துரைக்கும் போது, ​​அவை சில வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்:


1. அரசியல் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் மற்றும் பாலினம் தொடர்புடையதாக பெயர் இருக்கக்கூடாது:

2. பெயர் எந்தக் குழுவையும் புண்படுத்தக் கூடாது.

3. அது கொடூரமாக இருக்கக்கூடாது.

4. இது குறுகியதாகவும், உச்சரிக்க எளிதாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

5. இது எட்டு எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் குரல்வழியுடன் இருக்க வேண்டும்.

7. ஒவ்வொரு பெயரும் தனித்துவமாக இருக்க வேண்டும் மற்றும் மீண்டும் மீண்டும் வரக்கூடாது.


எடுத்துக்காட்டாக,  மகாராஷ்டிராவை பாதித்த புயல் நிசர்கா வங்கதேசத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோமாலியாவைத் தாக்கிய இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட கதி. பின்னர், ஈரானால் பரிந்துரைக்கப்பட்ட நிவார் புயல் தமிழ்நாட்டைப் தாக்கியது.


ஒரு நெடுவரிசையில் உள்ள அனைத்து பெயர்களும் பயன்படுத்தப்பட்டவுடன், அடுத்த நெடுவரிசையின் பெயர்கள் மீண்டும் பங்களாதேஷிலிருந்து தொடங்கி தேர்ந்தெடுக்கப்படும். உதாரணமாக, மோச்சாக்குப் பிறகு, அடுத்த புயல்க பைபர்ஜாய் என பெயரிடப்படும். இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டதும், வெப்ப மண்டல சூறாவளிகள் குழு (Panel on Tropical Cyclones (PTC)) உறுப்பினர்களால் புதிய பட்டியல் உருவாக்கப்படும்.




Original article:

Share:

இந்தியாவில் ஒரு இயற்கை மறுசீரமைப்பு சட்டத்தை அமல்படுத்துவது பற்றி… -துஹின் ஏ. சின்ஹா, கவிராஜ் சிங்

 அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட சட்டம் பின்பற்றப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாகும். 


இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீரழிவு ஒரு அவசர உலகளாவிய பிரச்சினையாகும். மேலும், இந்தியா இதன் பரந்த புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையுடன், இந்த சிக்கலையும் எதிர்கொள்கிறது. அதன் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 30% நில சீரழிவைக் கொண்டிருப்பதால், இந்தியா ஒரு விரிவான இயற்கை மறுசீரமைப்பு சட்டத்தை (nature restoration law) ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (Nature Restoration Law (NRL)), இந்தியா தனது வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளைக் குறைக்க செயல்படுத்தப்படும் ஒரு எழுச்சியூட்டும் மாதிரியாகும். 


ஜூன் 17, 2024 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL), ஐரோப்பாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பான சட்டமாகும். 


ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் 66.07%-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் இந்த ஒழுங்குமுறை அங்கீகரிக்கப்பட்டது. இது, உலகளாவிய சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. 2030-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலம் மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தது 20% மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கோருகிறது. இது, 2050-ம் ஆண்டுக்குள் மறுசீரமைப்பு தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் முழுமையாக மீட்டெடுப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.


இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL) என்பது 2030-ம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்லுயிர்க்கான உத்தி மற்றும் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஐரோப்பாவின் 80% வாழ்விடங்கள் மோசமான நிலையில் இருப்பதால், பல்லுயிர்க்கான ஆபத்தான இழப்பின் போக்கை மாற்றியமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. காடுகள், விவசாய நிலங்கள், ஆறுகள் மற்றும் நகர்ப்புற இடங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளில் இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL) கவனம் செலுத்துகிறது. 25,000 கிலோமீட்டர் ஆறுகளை மீட்டெடுப்பது போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. கூடுதலாக, 2030-ம் ஆண்டுக்குள் மேலும் மூன்று பில்லியன் மரங்களை நடவும் திட்டமிட்டுள்ளது.


இந்தியாவுக்கான சுற்றுச்சூழல், பொருளாதாரம் தொடர்பானவை 


இந்தியா கடுமையான சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation (ISRO)) நிலச் சீரழிவு குறித்த அறிக்கையை வெளியிட்டது. இது, 2018-19 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 97.85 மில்லியன் ஹெக்டேர் அல்லது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 29.7% பாதிப்பை சந்தித்துள்ளது என்பதை ஆய்வு காட்டுகிறது. 


இந்த ஒப்பீடு, 2003-05 ஆம் ஆண்டில் 94.53 மில்லியன் ஹெக்டேரில் இருந்து கடிமையான அதிகரிப்பாக உள்ளதால், பாலைவனமாக்கலாக மாறி வருவதை  இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2018-19 ஆம் ஆண்டில், இது 83.69 மில்லியன் ஹெக்டேர்களை பாதித்துள்ளது. இது, முக்கிய மாநிலமான குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்றவற்றில் நிலப் பாதிப்பு என்பது  பொதுவானது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இமொத்தத்தில், இந்தியாவின் பாலைவனமான நிலப்பரப்பில் இதன் பங்கு 23.79% ஆகும்.


இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பசுமை இந்தியா திட்டம் (Green India Mission), பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana), ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை திட்டம் (Integrated Watershed Management Programme), இது உலகின் இரண்டாவது பெரிய நீர்நிலை திட்டமாகும் மற்றும் தேசிய காடு வளர்ப்பு திட்டம் (National Afforestation Programme) உட்பட பல முயற்சிகளை இது வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. 


இருப்பினும், பாதிப்புகளின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரு பரந்த உத்தி தேவைப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் NRL போன்ற இயற்கை மறுசீரமைப்புச் சட்டம் (Nature Restoration Law (NRL)) இந்தியாவுக்குத் தேவை. இது சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புக்கான சட்டப்பூர்வ இலக்குகளை அமைக்கிறது. இந்தச் சட்டம் பாதிப்படைந்த நிலப்பரப்புகளை மீட்டெடுப்பதை கட்டாயமாக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.


இந்தியாவில் ஒரு சட்டம் எப்படி அமைக்க முடியும்? 


ஐரோப்பிய ஒன்றியத்தின் மாதிரியால் ஈர்க்கப்பட்ட இந்தியாவில் ஒரு இயற்கை மறுசீரமைப்பு சட்டம், பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம். 


முதலில், மறுசீரமைப்புக்கான இலக்குகள் (restoration targets) உள்ளன. இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் 20% தரம் குறைந்த நிலத்தை மீட்டெடுப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். மேலும், 2050-ம் ஆண்டிற்குள் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீட்டெடுப்பது நீண்ட கால இலக்கான திட்டமாகும். இதில் காடுகள், ஈரநிலங்கள், ஆறுகள், விவசாய நிலங்கள் மற்றும் நகர்ப்புற பசுமையான இடங்கள் ஆகியவை அடங்கும்.


இரண்டாவதாக, ஈரநில மறுசீரமைப்பு (wetland restoration) உள்ளது. இந்தியாவில் மக்கும் நிலங்கள் (peatlands) குறைவாகவே காணப்பட்டாலும், சுந்தரவனக் காடுகள் மற்றும் சிலிகா ஏரி போன்ற முக்கியமான ஈரநிலங்கள் பல்லுயிர் மற்றும் கார்பன் வரிசைப்படுத்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. ஒரு புதிய சட்டம் 2030க்குள் 30% சிதைந்த ஈரநிலங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மூன்றாவதாக, விவசாயத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயம் இந்தியாவின் நிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. வேளாண் காடுகள் மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பது விவசாய நிலங்களை மீட்டெடுக்க உதவும். எங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் பட்டாம்பூச்சி குறியீடு அல்லது பறவைக் குறியீடு போன்ற குறிபீடுகள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும்.


நான்காவது, ஆறுகளின் மறுசீரமைப்பு (river restoration) ஆகும். சுதந்திரமாக ஓடும் ஆறுகளை மீட்டெடுப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்த முயற்சியால் கங்கை, யமுனை போன்ற முக்கிய ஆறுகளில் தொடங்கி, மாசுபாட்டை நிவர்த்தி செய்வதிலும், தடைகளை அகற்றுவதிலும் கவனம் செலுத்தப்படும்.


ஐந்தாவது, நகர்ப்புற பசுமையான இடங்கள் (urban green spaces) ஆகும். நகர்ப்புறங்களின் பாதிப்பை எதிர்த்துப் போராட, பசுமையான இடங்களின் வனங்களின் நிகரளவில் இழப்பு இல்லை என்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் நகர்ப்புறங்களில் உள்ள  வனங்களை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், இந்த நகரங்கள் வெப்ப தீவுகள் மற்றும் காற்றின் தரம் குறைதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.


மறுசீரமைப்பின் பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் 


இத்தகைய சட்டத்தின் நன்மைகள் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பதற்கு அப்பாற்பட்டவை ஆகும். 2030ஆம் ஆண்டுக்குள் இயற்கை மறுசீரமைப்பு உலகளவில் 10 டிரில்லியன் டாலர் வரை பொருளாதார வருவாயை ஈட்டக்கூடும் என்று உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. இந்தியாவில், பாதிப்படைந்த நிலங்களை மீட்டெடுப்பது விவசாய உற்பத்தியை மேலும் அதிகரிக்கும். 


இது நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, குறிப்பாக கிராமப்புறங்களில் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா தனது நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) மேம்படுத்த இந்த சட்டம் உதவும். குறிப்பாக, இது இலக்கு 15-ஐக் குறிக்கிறது. இந்த இலக்கு காடுகளின் நிலையான மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது. மேலும், இது பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைப்பது காலநிலை மாற்றத்திற்கான விளைவுகளை குறைக்க உதவும். இந்த காலநிலை மாற்றம் நிலத்தின் மீதான பாதிப்பை மோசமாக்குகிறது. நிலம் பாதிப்படைவதால், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறனை இழக்கிறது. இந்த இழப்பு புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம், இந்தியா தனது கார்பன் குளங்களை (carbon sinks) மேம்படுத்த முடியும். இது பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற உதவும்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டம் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும். இதில், நிலச் சீரழிவு மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தியாவில் இதேபோன்ற சட்டத்தை அமல்படுத்துவது, பாதிப்படைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவும். 


இது சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும், பருவநிலையை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். காலநிலை தொடர்பான அவசரம் தெளிவாக உள்ளது. ஆனால், இதற்கான நடவடிக்கை இப்போது தேவை.


செய்தி தொடர்பாளராக துஹின் ஏ.சின்ஹா ​​உள்ளார். கவிராஜ் சிங் எர்த்வுட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.




Original article:

Share: