காலநிலை நெருக்கடியின் பாலின இரட்டை சுமையை நிவர்த்தி செய்தல் - நித்யா மோகன் கெம்கா, சூர்யபிரபா சதாசிவன்

 COP29 கலவையான முடிவுகளுடன் முடிந்தது. காலநிலை நடவடிக்கைகளில் பாலின-பதிலளிப்பு (gender-responsive) உத்திகளைச் சேர்ப்பது ஒரு பெரிய சவாலாகும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் "இரட்டைச் சுமையை" எதிர்கொள்கின்றனர். சுற்றுச்சூழல் மாற்றங்களால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்களின் சமூகங்களில் அதிக சமூக மற்றும் பொருளாதாரக் கடமைகளையும் மேற்கொள்கிறார்கள். பெரும்பாலும் போதுமான வளங்கள் அல்லது முடிவெடுப்பதில் பங்கு இல்லாமல் நிகழ்கிறது.


காலநிலை மற்றும் பாலினத்தின் இந்த சந்திப்புக்குள் ஆரோக்கியம் ஒரு முக்கியமான பரிமாணமாக வெளிப்படுகிறது. COP29 ஆனது, COP28 ஆரோக்கியத்தின் மீதான கவனத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், பெண்களின் உயர்ந்த சுகாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் முன்னேற்றம் மிகக் குறைவாகவே உள்ளது.  வரவிருக்கும் மாதங்களில், உலகம் COP30-க்குத் தயாராகி வருவதால், காலநிலை நிதி விவாதங்களின் மையத்தில் பாலினத்தை வைப்பது மற்றும் சுகாதாரம் போன்ற அதன் முக்கிய தொடர்புகளிலும் கவனம் செலுத்துவது முன்னெப்போதையும் விட முக்கியமானது.


ஆசியா, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும். அங்கு காலநிலை, சுகாதாரம் மற்றும் பாலின பிரச்சினைகள் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் பெண்கள் சுற்றுச்சூழல் சேதத்தால் நீர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கர்ப்பப் பிரச்சினைகளால் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். காலநிலை நெருக்கடி அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது அதிக பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. முடிவுகளை எடுக்கும் அவர்களின் வரையறுக்கப்பட்ட சக்தி மற்றும் மீள்தன்மையை உருவாக்க வளங்களை அணுகுவதைத் தடுக்கும் சமத்துவமின்மை ஆகியவற்றால் இது மோசமடைகிறது.


தற்போது, ​​பல கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதைவிட பெரிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, வெள்ளத்தால் பரவும் நோய்களைத் தடுக்கக்கூடிய வெள்ள எதிர்ப்பு நீர் அமைப்புகள் போன்ற திட்டங்கள், சமூக சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு மிக முக்கியமானவை என்றாலும், அபாயங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளைவிட பெரும்பாலும் குறைவான கவனத்தைப் பெறுகின்றன.


காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கான செலவு மிக அதிகம். வளரும் நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் $5.5 டிரில்லியன் தேவைப்படுகிறது என்று UNCTAD தெரிவித்துள்ளது. இருப்பினும், காலநிலை நடவடிக்கைகளுக்கான உலகளாவிய நிதி போதுமானதாக இல்லை. உதாரணமாக, பொது சுகாதாரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிக்க சுகாதாரம் தொடர்பான காலநிலை நடவடிக்கைகளுக்கு $3.2 டிரில்லியன் தேவை என்று அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (Observer Research Foundation (ORF)) கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தேவைகள் தற்போதைய நிதி அமைப்புகளால் நிவர்த்தி செய்யப்படவில்லை.


சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம் (Institute for Environment and Development (IIED)) படி, காலநிலை நிதியில் 10% மட்டுமே உள்ளூர் சமூகங்களுக்கு செல்கிறது. இது ஒரு கவலைக்குரிய பிரச்சினையாகும். குறிப்பாக, தெற்காசியா போன்ற பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளில் 750 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காலநிலை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த முக்கியமான நிதியை அணுகுவது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. வெள்ளத்தைத் தடுக்கும் நீர் அமைப்புகள் போன்ற சுகாதார அபாயங்களுக்கு உதவும் தகவமைப்புத் திட்டங்களை விட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பெரிய திட்டங்களை காலநிலை நிதி பெரும்பாலும் ஆதரிக்கிறது. கிராமப்புறங்களில், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சிக்கலான செயல்முறைகள் போன்ற கூடுதல் தடைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.  இது நிலைமையை இன்னும் கடினமாக்குகிறது.


காலநிலை மீள்தன்மையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் ஆற்றல் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பேரழிவுகளில், வீட்டு வளங்களை நிர்வகிப்பதன் மூலமும், உணவு மற்றும் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும் அவர்கள் முதலில் பதிலளிப்பார்கள். பெண்கள் மாற்றத்தை இயக்கும் திறனைக் காட்டியுள்ளனர்.  நேபாளத்தின் பாலினம் மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் போன்ற வெற்றிகரமான எடுத்துக்காட்டுகள், காலநிலை உத்திகளில் பாலினத்தைச் சேர்ப்பதன் நேர்மறையான விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன. இந்தத் திட்டம் உள்ளூர் தழுவலுக்கான பயிற்சியை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு உதவுகிறது. இதேபோல், 103 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு சுத்தமான சமையல் ஆற்றலை வழங்கும் இந்தியாவின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana), பெண்களின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வது ஆரோக்கியத்தையும் காலநிலை மீள்தன்மையையும் மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.


பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது வலுவான சமூகங்களை உருவாக்க உதவுகிறது மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது என்பதை இந்த வெற்றிகள் காட்டுகின்றன. இருப்பினும், இந்த வெற்றிகள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவை உலகளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். பெண்களை உதவி பெறுபவர்களாக மட்டுமல்லாமல், மாற்றத்தின் செயலில் உள்ள முகவர்களாக மாற்றுவதற்கு பாலினத்தை மையமாகக் கொண்ட ஒரு பரந்த கொள்கை முக்கியமானது. பெண்கள் தலைமையிலான திட்டங்களை ஆதரிப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுத்தமான தண்ணீரை வழங்குதல் மற்றும் காலநிலை தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் போன்றவற்றை எவ்வாறு செய்ய முடியும் என்பதை UNDP சிறு மானியத் திட்டம் நிரூபிக்கிறது.


COP30 எதிர்நோக்குகையில், நாம் மூன்று முக்கிய செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: 


பெண்களின் சுகாதாரத் தேவைகளில் கவனம் செலுத்தும் வகையில் காலநிலை நிதியை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். இதில் மனநல சேவைகளுக்கான நிதி, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காலநிலைக்கு ஏற்ற சுகாதாரப் பராமரிப்பை உருவாக்குதல் மற்றும் காலநிலை தகவமைப்புத் திட்டங்களில் மனநல ஆதரவைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும்.


இரண்டாவதாக, அடிமட்டத்தில் உள்ள பெண்கள் நிதி ஆதாரங்களையும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பெறுவதை உறுதிசெய்ய மக்களைப் பொறுப்பேற்க வைக்கும் அமைப்புகளை உருவாக்குங்கள். பாலினத்தின் அடிப்படையில் தகவல்களைப் பிரிக்கும் தரவைப் பயன்படுத்துவதும், சமூகம் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அனுமதிப்பதும் வெற்றியைக் கண்காணிக்க உதவும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த கூட்டாண்மைகளை உருவாக்குவதும் முக்கியம்.

மூன்றாவதாக, காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் குரல்களைப் பெருக்கும் தளங்களை உருவாக்கி, தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதாரங்களின் ஆதரவுடன், அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்தல். 


எதிர்கால COP மாநாடுகள் மற்றும் பிற சர்வதேச நிகழ்வுகளை எதிர்நோக்குகையில், காலநிலை நிதி மற்றும் கொள்கையில்  குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் ஒரு முக்கிய மையமாக இருக்க வேண்டும். கூடுதல் நன்மையாக மட்டுமல்லாமல், மீள்தன்மை திட்டமிடலின் முக்கிய பகுதியாக ஆரோக்கியம் இருக்க வேண்டும்.


இந்த நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒத்துழைப்பு அவசியம். சுகாதாரத்திற்கான காலநிலை நிதி உள்ளடக்கியதாகவும், அணுகக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதன் பொருள் பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நிதியை உருவாக்குதல், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு வலுவான குரலை வழங்குதல் ஆகியவை அடங்கும். இலக்கு வைக்கப்பட்ட காலநிலை நிதி மூலம் இரட்டைச் சுமையை நிவர்த்தி செய்வது சரியான செயல் மட்டுமல்ல. அது நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கும் இது அவசியம். யாரும் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த அணுகுமுறைகளுடன் இந்தப் பிரச்சினையை நாம் சமாளிக்க வேண்டும்.


கட்டுரையாளர் டாக்டர் நித்யா மோகன் கெம்கா, PATH அமைப்பின் இயக்குநர் மற்றும் சூர்யபிரபா சதாசிவன், மூத்த துணைத் தலைவர், பொதுக் கொள்கை (public policy), சேஸ் இந்தியா (Chase India), புது தில்லி.




Original article:

Share:

இந்தியா-அமெரிக்கா மற்றும் அணுசக்தி மறுமலர்ச்சி -சி.ராஜா மோகன்

 டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான நீண்டகால நலன்களின் சீரமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றிய வரலாறு ஆகியவற்றுடன், டிரம்பின் கீழ் அது தொடரும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்தியா-அமெரிக்க உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பராமரிக்க, தொடர்ச்சியான முயற்சிகள் தேவை.


அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியாவிற்கு வருகை தந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இது அவரது இறுதி வெளிநாட்டுப் பயணமாகும். இந்த பயணம் அமெரிக்க-இந்திய உறவின் மூன்று முக்கிய அம்சங்களைக் காட்டுகிறது. முதலாவதாக, இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் பைடன் நிர்வாகத்தின் வலுவான அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. வெள்ளை மாளிகையில் சல்லிவன் மற்றும் அவரது குழுவினர் இந்த முயற்சியில் சிறப்புப் பங்காற்றியுள்ளனர். கூட்டாண்மையை வலுப்படுத்துவதும், எதிர்பாராத நெருக்கடிகள் அமெரிக்க-இந்திய உறவை சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்வதும் இதன் நோக்கமாகும்.

 

இரண்டாவதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த பைடன் நிர்வாகம் சிறப்பு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்த அரசாங்க விவாதங்களுக்கு அப்பால் அவர்கள் முன்னேறியுள்ளனர். இப்போது, ​​அவர்கள் பல ஆண்டுகளாக உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), குறைமின் கடத்திகள் (semiconductors), விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சியில் இரு நாடுகளிலிருந்தும் வணிகங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் ஈடுபடுவதும் அடங்கும்.

 

இதற்கான கொள்கை கருவி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா-இந்தியா முன்முயற்சி (United States–India Initiative on Critical and Emerging Technology (iCET)) ஆகும்.  இது சல்லிவன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரால் ஜனவரி 2023-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி மற்றும் வாஷிங்டன் இரண்டிலும் உள்ள சிக்கலான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த விரிவான பேச்சுக்களை iCET உள்ளடக்கியுள்ளது. இது இந்தியா-அமெரிக்க உறவுகளில் பைடன் நிர்வாகத்தின் மரபின் முக்கிய பகுதியாக இருக்கும்.

 

பைடனின் பெரிய திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக iCET உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் சீனாவை உலகம் நம்பியிருப்பதைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். நட்பு நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. ஆசியா மற்றும் அதன் சுற்றியுள்ள நீர்நிலைகள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகார சமநிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அமெரிக்காவைப் பற்றிய இந்தியாவின் பார்வையில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவின் முக்கிய மையமாக இது மாறியது. இந்தியா தனது அணுசக்தி மற்றும் விண்வெளித் திட்டங்களை உருவாக்க அமெரிக்கா உதவியது. இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதிலும், இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகித்தது.

 

சுசுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் நிறைய ஒத்துழைப்பு இருந்தது. இருப்பினும், 1970-ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் புதிய அணு ஆயுத பரவல் தடைச் சட்டங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய விதிகள் காரணமாக இந்த ஒத்துழைப்பு முடிவுக்கு வந்தது.

 

1960-ஆம் ஆண்டுகளில், இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இது அமெரிக்கா, பிற முன்னேறிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் கடுமையான தடைகளுக்கு இலக்காக அமைந்தது. இவை அனைத்தும் அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தன. (1960-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்க உதவ முன்வந்ததாகக் ஒரு கதை உள்ளது, ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்த வாய்ப்பை நிராகரித்தார்.)

 

1980-ஆம் ஆண்டுகளில், பிரதம மந்திரிகள் இந்திரா காந்தியும். ராஜீவ் காந்தியும் அணு ஆயுத பரவல் தடை தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் பொதுவான தொழில்நுட்ப தளத்தைக் கண்டறிய முயன்றனர். இருப்பினும், 1990-ஆம் ஆண்டுகளில், இந்தியாவிற்கு எதிரான அணு ஆயுத பரவல் தடை கட்டுப்பாடுகள் வலுவடைந்தன. மே 1998-ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாயின் அணு ஆயுத சோதனைகள் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபடுவதற்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி, அணு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தன. 


2005-08 ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி முன்முயற்சியால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. வாஷிங்டனில், பராக் ஒபாமாவும் டொனால்ட் ட்ரம்பும் ஆழமான தொழில்நுட்ப கூட்டுறவுக்கான அடித்தளத்தைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகின்றனர். பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் iCET மூலம் அதை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

 

அதிக முன்னேற்றம் இருந்தபோதிலும், கடந்த 20வது ஆண்டுகளாக தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிறந்த முன்னேற்றத்தின் நன்மைகளை முழுமையாக உணர முடியாமல் நீடித்த பிரச்சினைகள் உள்ளன. டெல்லியில், சல்லிவன் திங்களன்று இந்தியாவுடனான விண்வெளி ஒத்துழைப்பில் தற்போதுள்ள பல கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவித்தார். 


இருதரப்பு சிவிலியன் அணுசக்தி ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய அணுசக்தி மையங்களை அமெரிக்க கருப்பு பட்டியலில் இருந்து அகற்ற பைடன் நிர்வாகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதையும் அவர் மேற்கோள் காட்டினார். (ஜனாதிபதி பைடனும் நிர்வாகக் குழுவும் ஜனவரி 19 வரை கொள்கை முடிவுகளை எடுக்க முடியும், அவை ஒவ்வொரு நாளும் எடுக்கப்படுகின்றன). 

 

இந்தியாவும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. குறிப்பாக அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) (2010), விதிகளை மாற்றியமைப்பதில் அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்கள் அணுசக்தி துறையில் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. அணுசக்தி ஒப்பந்தம் வெளியாகி ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகும், ரஷ்யாவைத் தவிர சர்வதேச இறக்குமதியாளர்களுடன் அணுமின் நிலையங்களைக் கட்டுவதற்கான எந்த ஒப்பந்தமும் இல்லை என்பது உண்மையில் வருந்தத்தக்கது. 

 

டெல்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், அணுசக்தி மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையாகும். AI தரவு மையங்கள் அதிக அளவு சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்தத் துறையில் உள்ள பல நிறுவனங்கள் அணுசக்தியைத் தேர்வு செய்கின்றன. 


அணுசக்தி மீண்டும் வருவதால், இந்தியா அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த சரியான விதிகளை அமைக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் நீடித்த ஒத்துழைப்பை உருவாக்குவதற்கும், பகிரப்பட்ட பொருளாதார மற்றும் உலகளாவிய இலக்குகளால் இயக்கப்படுவதற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் மோடியின் அரசாங்கத்திற்கும் பைடன் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளார்.

 

டிரம்பின் கீழ் இந்த பரந்த கட்டமைப்பு நிலைத்திருக்குமா? நம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. டிரம்ப் மற்றும் பைடன் இருவரும் அமெரிக்க தொழில்நுட்பத் தலைமையை வலுப்படுத்தவும் மேம்பட்ட உற்பத்தியை அதிகரிக்கவும் விரும்புகிறார்கள். சீனாவுடனான போட்டி, பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தொடர வாய்ப்புள்ளது. அதாவது, அமெரிக்கா இந்தியா போன்ற நம்பகமான கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். 


மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம், அதன் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான பகிரப்பட்ட நலன்களும், தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான அவர்களின் நீண்ட அரசியல் உறுதிப்பாட்டின் வரலாற்றும், டிரம்பின் கீழ் இது தொடரும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள் தேவைப்படும்.


இந்த வாரம், சல்லிவன் இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார். அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸைச் சந்திக்க வாஷிங்டனுக்குச் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பேணுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்புகள் உள்ளன.


இருப்பினும், அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் டிரம்ப் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். இதன் தாக்கத்திற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். இது குறித்து மேலும் அடுத்த வாரம் விவாதிக்கப்படும். 


சி.ராஜா மோகன், கட்டுரையாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share:

யூரியா எப்படி ஒரு முதலீட்டு வெற்றிக் கதையானது. -ஹரிஷ் தாமோதரன்

 2019-ஆம் ஆண்டு முதல் ரூ .60,000 கோடிக்கும் அதிகமான செலவில் ஆறு புதிய ஆலைகள் மற்றும் ஏழாவது ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் "புதிய பசுமைப் புரட்சியுடன்" தொடர்புடைய (“new Green Revolution”) மாநிலங்களில் உள்ளன. 

 

டை-அம்மோனியம் பாஸ்பேட் (di-ammonium phosphate (DAP)) தொழில் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. மேலும், உற்பத்தித் துறை குறைந்த முதலீட்டைக் காண்கிறது. இருப்பினும், யூரியா தொழில் கணிசமாக வளர்ந்துள்ளது. இது புதிய உற்பத்தி திறன்களைச் சேர்த்துள்ளது மற்றும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) இலக்கை நோக்கி முன்னேற்றம் அடைந்துள்ளது.

 

2011-12 மற்றும் 2023-24 (ஏப்ரல்-மார்ச்) ஆண்டுக்கு இடையில், இந்தியாவின் உள்நாட்டு யூரியா உற்பத்தி 22 மில்லியனில் இருந்து 31.4 மில்லியன் டன்னாக (million tonnes (mt)) உயர்ந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 9.8 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக இருந்த இறக்குமதி 7.8 மில்லியன் டன்னிலிருந்து 7 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை இறக்குமதியில் மேலும் 31.7% வீழ்ச்சி பதிவாகியுள்ளது (அட்டவணை 1). இது 5 மில்லியன் டன்னுக்கும் குறைவாக இருக்கலாம். இது 2006-07 ஆம் ஆண்டின் 4.7 மில்லியன் டன்னுக்குப் பிறகு மிகக் குறைவான இறக்குமதி ஆகும். 

 

 பசுமைச் சார்ந்த திட்டங்கள் 

 

இந்துஸ்தான் உர்வாரக் & ரசாயன் லிமிடெட் (Hindustan Urvarak & Rasayan Ltd (HURL)) மற்றும் சம்பல் பெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ், மேட்டிக்ஸ் பெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் மற்றும் ராமகுண்டம் பெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (rest of Chambal Fertilisers & Chemicals, Matix Fertilisers & Chemicals and Ramagundam Fertilizers & Chemicals Ltd (RFCL)) ஆகிய ஆறு புதிய ஆலைகள் மேற்கண்ட உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக வந்துள்ளன. 

 

சம்பல், RFCL மற்றும் மேட்டிக்ஸ் திட்டங்கள் தலா ரூ .6,000-7,000 கோடி முதலீடு செய்தன. அதே நேரத்தில் கோவிட் பிந்தைய காலத்தில் கட்டப்பட்ட HURL அலகுகள், ₹8,100-8,600 கோடி அதிக முதலீட்டை உள்ளடக்கியது. இந்த ஆலைகள் ஒன்றாக, 2023-24 ஆம் ஆண்டில் 7.55 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) யூரியாவை உற்பத்தி செய்தன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).

 

இந்த பசுமை ஆலைகள் இயற்கை எரிவாயுவில் (பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டவை) 1.27 மில்லியன் டன் ஆண்டு உற்பத்தி திறன் கொண்டவை. மேலும் ஒவ்வொன்றும் 1.27 மில்லியன் டன்கள் என்ற ஆண்டு உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளன.  2023-24 ஆம் ஆண்டில், மேட்டிக்ஸ், சம்பல் மற்றும் HURL-கோரக்பூர் போன்ற மூன்று ஆலைகளும் அவற்றின் மதிப்பிடப்பட்ட திறனை விட அதிகமாக உற்பத்தி செய்தன. இந்த ஆலைகள் ஆற்றல் திறன் கொண்டவை. ஒரு டன் யூரியாவை உற்பத்தி செய்ய சுமார் 5 ஜிகா கலோரிகள் (GCal) தேவைப்படுகின்றன. பழைய ஆலைகள் 5.5 முதல் 6.5 ஜிகா கலோரிகள்  வரை பயன்படுத்துகின்றன. 

 

மேலும், புதிய ஆலைகள் கிழக்கு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானாவின் "புதிய பசுமைப் புரட்சியுடன்" தொடர்புடைய  பகுதிகளில் அமைந்துள்ளன. பதிண்டா, நங்கல் மற்றும் பானிபட் ஆகிய இடங்களில் உள்ள தேசிய உர நிறுவனம் (NFL) போன்ற தொழிற்சாலைகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகளுக்கு சேவை செய்கின்றன. 

"கிழக்கு இந்தியாவில் எங்களுக்கு 20% சந்தை பங்கு உள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரே யூரியா உற்பத்தியாளராக இருப்பதைத் தவிர, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுராவுக்கும் நாங்கள் வழங்குகிறோம்" என்று மேட்டிக்ஸ் பெர்டிலைசர்ஸ் தலைவர் நிஷாந்த் கனோடியா கூறினார். துர்காபூருக்கு அருகிலுள்ள பனகரில் உள்ள நிறுவனத்தின் ஆலை, 118% திறன் பயன்பாட்டில் 1.5 மெட்ரிக் டன் உற்பத்தி செய்தது மற்றும் 2023-24ஆம் ஆண்டில் 4.856 ஜிகால்/டன்னை உற்பத்தி செய்தது. இது நாட்டின் மிகப்பெரிய ஒற்றை யூனிட் மற்றும் மிகவும் ஆற்றல் திறன் கொண்ட யூரியா உற்பத்தியாளராக மாறியது. 

 

கூடுதலாக, ஏழாவது யூரியா ஆலை தால்சரில் 1.27 மில்லியன் டன் அளவில் (அங்குல் மாவட்டம், ஒடிசா) ரூ .17,080.69 கோடி மதிப்பீட்டில் வருகிறது. மூன்றில் இரண்டு பங்கு நிறைவடைந்துள்ள தல்ச்சர் உர நிறுவனம் லிமிடெட்டின் திட்டம், அம்மோனியா மற்றும் யூரியாவை உற்பத்தி செய்யும் மற்ற ஆறு அலகுகளிலிருந்து வேறுபட்டது. இந்த ஆறு அலகுகளும் கேபிஆர் (அமெரிக்கா), ஹால்டோர் டாப்சோ (டென்மார்க்), சாய்பெம் (இத்தாலி) அல்லது டோயோ இன்ஜினியரிங் (ஜப்பான்) போன்ற நிறுவனங்களிடமிருந்து உரிமம் பெற்ற எரிவாயு அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அதற்கு பதிலாக, தல்ச்சரின் திட்டம் நிலக்கரியை மூலப்பொருளாகப் பயன்படுத்தும்.

 

"நிலக்கரி தல்ச்சர் சுரங்கங்களிலிருந்து வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெறப்படும் பெட்ரோலியத்துடன் 25% வரை சாம்பல் கலக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மூலப்பொருட்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதால் அரசாங்கம் இந்த திட்டத்தை ஆதரிக்கிறது. பெட்ரோலிய கோக் என்பது இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயைப் பயன்படுத்தினாலும், அவற்றின் துணை விளைபொருளாக செயல்படும். இந்த திட்டம் நிலக்கரி வாயுவாக்கத்தையும் பயன்படுத்துகிறது. இது இந்தியாவில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டால்ச்சர் ஆலையின் நிலக்கரி வாயுமயமாக்கல் (gasification) மற்றும் அம்மோனியா-யூரியா தொகுப்புகளுக்கான மொத்த ஆயத்த தயாரிப்பு ஒப்பந்தம் சீனாவின் வுஹுவான் பொறியியல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

புதிய ஆலைகளைப் பொறுத்தவரை ஒரு அடிப்படை கேள்வி என்னவென்றால், டால்ச்சர் உட்பட மொத்தம் ரூ .61,575 கோடி முதலீடு மதிப்புக்குரியதா என்பதுதான். 

 

NFL’s நிறுவனத்தின் கடைசி டெண்டரின் அடிப்படையில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட யூரியாவின் இறக்குமதி  விலை தற்போது டன்னுக்கு 370-403 டாலராக உள்ளது. மறுபுறம், இயற்கை எரிவாயு உள்நாட்டு யூரியா ஆலைகளுக்கு மொத்த கலோரிஃபிக் மதிப்பு அடிப்படையில் ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்க்கு (million metric British thermal units) சராசரியாக 14.35 டாலர் என்ற சீரான "தொகுப்பு" விலையில் வழங்கப்படுகிறது. இது நிகர கலோரிஃபிக் மதிப்பு அடிப்படையில் 15.9 டாலர் (1.108 மடங்கு) ஆகும். 

 

ஒவ்வொரு mmBtu-க்கும் 5 GCal / டன் மற்றும் 0.25 GCal ஆற்றல் நுகர்வு எடுத்துக்கொண்டால், புதிய ஆலைகளால் உற்பத்தி செய்யப்படும் யூரியாவில் மூலப்பொருள் செலவு மட்டும் டன்னுக்கு $318 ஆக $15.9/mmBtu ஆக வருகிறது. பசுமைத் திட்டங்களுக்கு எட்டு வருட காலத்திற்கு (வட்டி, தேய்மானம், மேல்செலவுகள் மற்றும் லாபம் உட்பட மற்ற அனைத்து கட்டணங்களையும் ஈடுகட்டுவதாகக் கூறப்படுகிறது) 175 டாலர் நிலையான செலவைச் சேர்ப்பது மொத்தம் டன்னுக்கு 493 டாலராக உயரும். இதனால், இன்று யூரியாவை வீட்டில் "தயாரிப்பதை” விட "வாங்குவது" (இறக்குமதி செய்வது) மலிவானது. 

 

இதற்கு எதிரான வாதம் என்னவென்றால், சுங்க வரி மற்றும் பிற வரிகள் (மொத்தம் 26%) விலக்கப்படும்போது, ​​விநியோகிக்கப்பட்ட எரிவாயுவின் விலை, mmBtu ஒன்றுக்கு $15.9லிருந்து $12.62 ஆகக் குறைகிறது. இந்த வரிகளை வசூலிப்பதன் மூலம் உள்நாட்டு யூரியாவின் மூலப்பொருள் செலவு 252 டாலராகவும், மொத்தம் டன்னுக்கு 427 டாலராகவும் குறையும். 


மேலும், கப்பல்களில் இறக்குமதி செய்யப்படும் மொத்த யூரியாவை துறைமுகத்தில் இறக்கி, பைகளில் அடைத்து அவற்றை நுகர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல மீண்டும். இந்த யூரியாவை புதிய ஆலைகளைவிட துறைமுகங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு அனுப்புவதால், ஒரு டன்னுக்கு $30-35 கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த செலவில் இறக்குதல், பையில் அடைத்தல், போக்குவரத்து மற்றும் வட்டி செலவுகள் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, யூரியாவை இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் உள்ள செலவில் உள்ள வேறுபாடு சிறியதாகிறது.

 

இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதைவிட, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் (Make-in-India) முயற்சி இரண்டு முக்கிய நன்மைகளை வழங்குகிறது. முதலாவதாக, இது வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இரண்டாவதாக, இது ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கிறது.


எவ்வளவு செய்ய வேண்டும் ?


இறக்குமதி செய்யப்பட்ட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquefied natural gas (LNG)) மற்றும் குழாய்களைக் கையாள்வதற்கான ஏழு முனையங்கள் நாட்டின் பெரும்பகுதியைக் கடந்து செல்வதால், கடந்த பத்தாண்டு காலத்தில் யூரியாவின் பொருளாதாரம் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. 

 

முந்த்ரா, தஹேஜ் மற்றும் ஹசிரா (குஜராத்), தாபோல் (மகாராஷ்டிரா), கொச்சி (கேரளா), எண்ணூர் (தமிழ்நாடு) மற்றும் தாம்ரா (ஒடிசா) ஆகிய இடங்களில் உள்ள திரவ இயற்கை எரிவாயு முனையங்கள் மற்றும் குழாய் அமைப்புகள் ஆகியவை யூரியாவுக்கு பதிலாக எரிவாயுவை இறக்குமதி செய்து உள்நாட்டிற்கு கொண்டு செல்வதை எளிதாக்கியுள்ளன. துறைமுகங்களுக்கு அருகிலுள்ள மேற்கு மற்றும் தெற்கு சந்தைகளுக்கு வழங்குவதற்காக யூரியாவை இறக்குமதி செய்வது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

 

இது ஒரு புதிய தற்சார்பு யூரியா உத்தியை அனுமதிக்கிறது. இதன் பொருள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் அதிக யூரியாவை உற்பத்தி செய்வது ஆகும். அதே நேரத்தில் தீபகற்ப இந்தியாவிற்கு அதிக கொள்முதல் விருப்பங்களைத் தேடுவதும் முக்கியமானதாகும். இந்த உத்தியில் சில பழைய, ஆற்றல் திறனற்ற ஆலைகளை மூடுவது மற்றும் யூரியா நுகர்வைக் குறைப்பது ஆகியவை அடங்கும்.

 

2011-12 மற்றும் 2023-24 ஆண்டுக்கு இடையில், இந்தியாவின் யூரியா நுகர்வு 29.6 மில்லியன் டன்னிலிருந்து 35.8 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் DAP (10.2 மெட்ரிக் டன் முதல் 10.8 மெட்ரிக் டன்) மற்றும் கலப்பு உரங்கள் (10.4 மெட்ரிக் டன் முதல் 11.1 மில்லியன் டன்) வரை அதிகம் இல்லை. நவம்பர் 2012-ஆம் ஆண்டு முதல் யூரியாவின் பண்ணை விலை டன்னுக்கு ரூ .5,360 (வேம்பு பூச்சு இல்லாமல்) உறைந்ததால் சமநிலையற்ற நுகர்வு வளர்ச்சி உந்தப்பட்டது. 

 

மிகவும் பகுத்தறிவார்ந்த விலை நிர்ணயம் என்பது விவசாயிகள் யூரியாவை நியாயமான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். மேலும், இந்த நைட்ரஜன் உரத்தை "தயாரிப்பது" மற்றும் "வாங்குவது" ஆகிய இரண்டின் மீது உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்.




Original article:

Share:

பிரிக்ஸ் (BRICS) அமைப்பு - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையில், பிரிக்ஸ் உறுப்பினர் சேர்க்கையை "பிற வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை அதிகரிப்பதற்கான ஒரு இராஜதந்திர வழி" என்று அது குறிப்பிட்டு வரவேற்றது.


2. உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, பிரிக்ஸில் சேர நீண்ட காலமாக விரும்புகிறது. வளர்ந்து வரும் நாடுகளுடன் கூட்டணிகளை வலுப்படுத்துவதையும், உலகளாவிய தெற்கின் இலக்குகளை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. 2025-ம் ஆண்டில் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரேசில், ஜோகன்னஸ்பர்க்கில் 2023 பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது இந்தோனேசியாவின் உறுப்பினர் பதவியை அனைத்து உறுப்பு நாடுகளும் அங்கீகரித்ததாக அறிவித்தது.


4. இருப்பினும், 2024-ம் ஆண்டில் அதன் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்தோனேசியா தனது பிரிக்ஸ் உறுப்பினர்களை இறுதி செய்ய முடிவு செய்தது. இதில், ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ அக்டோபரில் பதவியேற்றார்.


5. பிரேசில் அரசாங்கம், "உலகளாவிய நிர்வாக நிறுவனங்களை சீர்திருத்த இந்தோனேசியா மற்ற பிரிக்ஸ் உறுப்பினர்களுடன் ஒரு உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கிறது. உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இது நேர்மறையான பங்களிப்பை அளிக்கிறது" என்று கூறியது.


6. சமீப காலமாக, பிரிக்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் அதன் உறுப்பினர்களை விரிவுபடுத்தி வருகிறது. இந்தோனேசியா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்த குழுவில் அடங்கும். இது வளரும் நாடுகளிடையே பிரிக்ஸ் வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


1. BRIC என்ற சொல் முதன்முதலில் 2001-ம் ஆண்டு கோல்ட்மேன் சாக்ஸ் பயன்படுத்தினார். அவர்கள் அதை தங்கள் உலகளாவிய பொருளாதார ஆய்வறிக்கையான 'உலகிற்கு சிறந்த பொருளாதார BRIC தேவைகள்' (The World Needs Better Economic BRICs) என்பதில் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த 50 ஆண்டுகளுக்குள் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் சிலவாக மாறும் என்று அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.


2. 2006-ம் ஆண்டு G8 அவுட்ரீச் உச்சிமாநாட்டின் (G8 Outreach Summit) போது ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சந்தித்த பிறகு BRIC ஒரு அதிகாரப்பூர்வ குழுவாக மாறியது. அதே ஆண்டு, நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபையின் (UN General Assembly (UNGA)) போது நடந்த முதல் BRIC வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தக் குழு முறைப்படுத்தப்பட்டது.


3. முதல் பிரிக் உச்சி மாநாடு 2009-ம் ஆண்டு ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரில் நடைபெற்றது. 2010-ம் ஆண்டில் நியூயார்க்கில் நடைபெற்ற பிரிக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2011-ம் ஆண்டில் சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 3-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தென்னாப்பிரிக்கா கலந்து கொண்டது. 


4. ஆகஸ்ட் 2023-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் வேட்புமனுவை பிரிக்ஸ் தலைவர்கள் ஆதரித்தனர். இந்தத் தகவல் பிரேசிலின் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து வெளிப்படுகிறது. ஏனெனில், பிரேசில் 2025-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பதவியை வகிக்கிறது. இருப்பினும், உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, கடந்த ஆண்டு அதன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரே இந்தக் கூட்டணியில் முறையாக இணைய விருப்பம் தெரிவித்தது.




Original article:

Share:

மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் : பதவி மற்றும் பொறுப்புகள் - பிரியா குமாரி சுக்லா

 1. "இன்று, பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) நிர்ணயித்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைக்கூட இந்தியாவில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தராக (Vice Chancellor (VC)) நியமிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கல்யாணி மதிவாணன் 2015-ம் ஆண்டு வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.


2. தற்போது, இந்திய உயர்கல்வித் துறை அதிகப்படியான கட்டுப்பாடுகளையும் கடுமையான நிதி பற்றாக்குறையையும் எதிர்கொள்கிறது.


3. புதிய கல்விக் கொள்கை (New Education Policy (NEP)) மற்றும் "பல்கலைக்கழக மானியக் குழு (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு செய்வதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள், 2025" (University Grants Commission (Minimum Qualifications for Appointment and Promotion of Teachers and Academic Staff in Universities and Colleges and Measures for Maintenance of Standards in Higher Education) Regulations) என்ற வரைவு விதிமுறைகள் சில நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. ஆனால், அவை இன்னும் வலுவான அரசாங்கக் கட்டுப்பாட்டைப் பேணுகின்றன.

4. துணைவேந்தர்கள், பல்கலைக்கழக அமைப்பின் தலைவர்கள் மற்றும் மிகவும் புலப்படும் அடையாளங்கள் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும். 


5. பல்கலைக்கழகத்தின் தலைவராக துணைவேந்தர் நிர்வாக மற்றும் கல்விப் பிரிவுகளுக்கு இடையே ஒரு "பாலமாக" செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக துணைவேந்தரின் தகுதிகள் பல்கலைக்கழக மானியக் குழுவால் 2010-ம் ஆண்டில் வகுக்கப்பட்டன. 


6. 2018 UGC விதிமுறைகளின்படி, துணைவேந்தர் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அல்லது ஒரு மரியாதைக்குரிய ஆராய்ச்சி அல்லது கல்வி நிறுவனத்தில் அதற்கு சமமான பதவியில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவமுள்ள "மேன்மைமிகு கல்வியாளராக" (distinguished academician) இருக்க வேண்டும்.


7. புதிய UGC விதிமுறைகள் வரவேற்கத்தக்க மாற்றத்தை முன்மொழிகின்றன. அவை, பேராசிரியர்கள் அல்லாதவர்களை மதிப்புமிக்க பதவிக்கு தகுதியுடையவர்களாக ஆக்குகின்றன. இப்போது, ​​பேராசிரியர்களைத் தவிர, கல்வி அல்லது அறிவார்ந்த பங்களிப்பின் நிரூபிக்கப்பட்ட பதிவைக் கொண்ட தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து எந்தவொரு சிறப்புமிக்க நபரும் விண்ணப்பிக்கலாம்.


8. செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் மூத்த பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் யோசனை வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது. இது பயிற்சியாளர்களின் செல்வாக்கையும் ஓரளவு குறைக்கிறது. இருப்பினும், இது பலரை விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள், சிறந்த பொது நிபுணர்கள், நீதிபதிகள் மற்றும் முன்னணி பேராசிரியர்களிடமிருந்து பரிந்துரைகளை அழைப்பது ஒரு சிறந்த வழியாக உள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


1. பல குழுக்கள் இந்த விஷயத்தில் பரிந்துரைகளை வழங்கியுள்ளன. கோத்தாரி குழு (1964) (Kothari Commission) ஒரு துணைவேந்தர் தொலைநோக்கு பார்வை கொண்ட நபராக இருக்க வேண்டும் என்று கூறியது. அவர்களின் கல்வித் தகுதி தலைமைத்துவ குணங்களையும் நிர்வகிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். துணைவேந்தர் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிடமிருந்தும் உயர்ந்த மரியாதையைப் பெற வேண்டும். துணைவேந்தர் பல்கலைக்கழகங்களால் நிலைநிறுத்தப்படும் மதிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் ஒரு புகழ்பெற்ற கல்வியாளராக இருக்க வேண்டும். அவர்களின் கல்வி மதிப்பு, நிர்வாகத் திறன் மற்றும் தார்மீக அந்தஸ்து மூலம் பல்கலைக்கழகத்தை வழிநடத்தும் திறனும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.


2. துணைவேந்தர்களை (VCs) நியமிப்பதில் அரசாங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்கலைக்கழகங்களின் சுயாட்சி பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. மத்திய பல்கலைக்கழகங்களில், இந்திய குடியரசுத் தலைவர் துணைவேந்தர்களை (VCs) நியமிக்கிறார். இது, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் அலுவலக பார்வையாளராக குடியரசு தலைவர், பொதுவாக அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றுகிறார்.


3. எவ்வாறாயினும், 2023 உச்சநீதிமன்றத் தீர்ப்பில் (டாக்டர் பிரேமச்சந்திரன் கீசோத் வழக்கு), குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டத் தலைவராக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அதிகாரியாகக் கருதப்பட்டார். மாநிலப் பல்கலைக்கழகங்களில், VCs பொதுவாக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களைத் தவிர, குறைவான அளவில் சுதந்திரமாக நிகழ்கிறது.


4. 1996-ம் ஆண்டு காமன்வெல்த் உயர்கல்வி மேலாண்மை சேவை (Commonwealth Higher Education Management Service (CHEMS)) 55 சதவீத ஆசிய பல்கலைக்கழகங்களில், அரசாங்கம் துணைவேந்தர்களை (VC) நியமித்ததாகக் கண்டறிந்தது. 18 சதவீத பல்கலைக்கழகங்களில், பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட VC-யை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. 27 சதவீத பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தங்கள் சொந்த VC-களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது.




Original article:

Share: