நிலத்தடி நீர் மேலாண்மைக்கு ஆழமான மறுபரிசீலனை தேவை. -N.K. சர்க்கார்

 தற்போதுள்ள சட்ட கட்டமைப்பு நிலத்தடி நீரை ஒரு பொதுவான வளமாக கருதவில்லை.                     


இந்தியாவின் கிராமப்புற குடிநீர் வழங்கலில் சுமார் 90 சதவீதமும், நகர்ப்புற நீர் வழங்கலில் சுமார் 50 சதவீதமும் நிலத்தடி நீரிலிருந்து பெறப்படுகிறது. எனவே, நிலத்தடி நீரின் நிலையான மற்றும் சமமான நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான தேவை உள்ளது.


நிலத்தடி நீர் நீரியல் சுழற்சியின் ஒரு பகுதியாகவும் சமூக வளமாகவும் இருந்தாலும், அது இன்னும் தனிப்பட்ட சொத்தாக கருதப்பட்டு சமத்துவமற்ற முறையில் சுரண்டப்படுகிறது.


2024ஆம் ஆண்டு மத்திய நிலத்தடி நீர் வாரிய அறிக்கை (Central Ground Water Board (CGWB)) இந்தியாவில் நிலத்தடி நீர் பயன்பாடு காலப்போக்கில் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. 2004-ஆம் ஆண்டில், கிடைத்த நிலத்தடி நீரில் 58% பயன்படுத்தப்பட்டது. ஆனால், 2024-ஆம் ஆண்டில், இது 60.47%ஆக உயர்ந்துள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைப்பதைவிட அதிகமாகப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, ஹரியானாவில், 2024-ஆம் ஆண்டில் கிடைத்த நிலத்தடி நீர் 9.36 பில்லியன் கன மீட்டர் ஆக இருந்தது. ஆனால், வெளியேற்றப்படும் அளவு 12.72 பில்லியன் கன மீட்டர் ஆக இருந்தது. உதாரணமாக, 2024-ஆம் ஆண்டில் ஹரியானாவில், ஆண்டு நிலத்தடி நீர் உறிஞ்சும் வளங்கள் 9.36 பில்லியன் கன மீட்டர்களாகவும், ஆண்டு நிலத்தடி நீர் உறிஞ்சும் அளவு 12.72 பில்லியன் கன மீட்டர்களாகவும் இருந்தது. இதனால் நிலத்தடி நீர் உறிஞ்சும் அளவு 135.96 சதவீதமாக உள்ளது. பஞ்சாபில் 156.87 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 149.86 சதவீதமாகவும், டெல்லியில் 100.77 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 74.6 சதவீதமாகவும், உத்தரபிரதேசத்தில் 70.65 சதவீதமாகவும் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் உறிஞ்சும் அளவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரிய அளவிலான நிலத்தடி நீர்வளங்களை கருத்தில் கொண்டு — 40 மில்லியனுக்கும் மேற்பட்ட கிணறுகள் மற்றும் குழாய்க்கிணறுகள் மற்றும் 4-5 மில்லியன் நீரூற்றுகள் — பயனுள்ள மேலாண்மை தனிநபரைவிட சமூகத்தை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அடல் பூஜல் யோஜனா (Atal Bhujal Yojna (ABHY)) திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பங்கேற்பு நிலத்தடி நீர் மேலாண்மை (Participatory groundwater management (PGWM)), நிலத்தடி நீர் திட்டத்தின் முதுகெலும்பாக இருக்க வேண்டும். இருப்பினும், அடல் பூஜல் யோஜனா எட்டு மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் இப்போது செய்யப்படுவது போல, அவ்வப்போது செய்யப்படும் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் மதிப்பீடு, நிலத்தில் உள்ள நுண்ணிய அளவிலான சிக்கல்களைப் பார்க்கவில்லை. தேசிய நீர் மேலாண்மை திட்டம் (National Aquifer Management Programme (NAQUIM)) நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் இறுதி பயனர்களுக்குத் தேவையான உயர் தெளிவுத்திறன் தகவல்களை வழங்குவதில்லை.


அடிப்படைக் கொள்கைகள்


நிலையான நிலத்தடி நீர் மேலாண்மையை உறுதிசெய்ய பின்வரும் அடிப்படை கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும். முதலாவதாக, இந்திய அரசியலமைப்பின்கீழ், நீர் மாநிலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், வாழ்வுக்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாக நீருக்கான உரிமை போன்ற தேசிய அக்கறைகள் அதிகரித்து வருகின்றன; பல பகுதிகளில் நீர் நெருக்கடியின் தோற்றம்; பயன்பாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலத்திற்குள் நீர் மோதல்களின் இருப்பு; பயன்பாடுகள், பயனர்கள், துறைகள், மாநிலங்கள், தலைமுறைகள் முழுவதும் சமத்துவத்தின் தேவை; நீரில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த வளர்ந்துவரும் கவலைகள் உள்ளன. இவை நீர் துறையில் ஒரு மத்திய சட்டத்தை இயற்றுவதற்கு அழைப்பு விடுக்கின்றன. தேசிய நீர்க் கட்டமைப்பு மசோதா 2016 வரைவு பரவலாக ஆலோசிக்கப்பட வேண்டும்.


இரண்டாவதாக, இந்தியாவில், நிலத்தடி நீர் 19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் பொதுச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு நில உரிமையாளர்களுக்கு தங்கள் சொந்த நிலத்திற்கு கீழ் உள்ள அனைத்து நீரையும் எடுக்கும் உரிமையை வழங்குகிறது. இந்தச் சட்டம் மக்கள் விரும்பும் அளவுக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இது அருகிலுள்ள கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளில் நீர் மட்டங்களைக் குறைக்கும். இந்தச் சூழலில், 21-ஆம் நூற்றாண்டில் சிறந்த நிலத்தடி நீர் மேலாண்மைக்காக இந்திய எளிமைப்படுத்தல் 1882-ஆம் ஆண்டு சட்டத்தை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.


மூன்றாவதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) மற்றும் நீர்பிடிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலத்தடி நீரை நிரப்புவதற்காக நிர்வகிக்கப்பட்ட நீர்நிலைகளை நிரப்புதல் திட்டம் தொடங்கப்பட வேண்டும்.


நான்காவது, நிலையான நீர் மேலாண்மை மற்றும் நிர்வாகத்திற்காக மாநிலங்கள் இந்த மாதிரியைப் பயன்படுத்தும் வகையில், மாதிரி நிலத்தடி நீர் (நிலையான மேலாண்மை) 2017-ஆம் ஆண்டு மசோதாவை முறையாக அங்கீகரிக்க வேண்டும். நிலத்தடி நீரின் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மேற்பரப்பு நீருடன் ஒருங்கிணைக்கப்படுவதை இந்தச் சட்டம் உறுதி செய்ய வேண்டும்.


ஐந்தாவதாக, நிலையான நிலத்தடி நீர் மேலாண்மை என்பது நாம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு கிடைக்கிறது என்பதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும். அளவிடப்பட்ட முறையில் வழங்கப்படும் மின்சார விநியோகம் மற்றும் விலை நிர்ணயம், நிலத்தடி நீரின் தேவையையும் உறிஞ்சுதலையும் குறைக்க உதவும்.


ஆறாவதாக, பல மாநிலங்களில், பஞ்சாயத்துக்கு நிலத்தடிநீர் மேலாண்மையில் சிறிய பங்கு உள்ளது. இருப்பினும், 1992ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் பஞ்சாயத்துகளுக்கு நீர் மேலாண்மையில் அதிகாரம் அளிப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பஞ்சாயத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவ பற்றாக்குறையைக் காரணம் காட்டி மாநில துறைகள் பெரும்பாலும் நிலத்தடி நீர் பாசன மேலாண்மையின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

  

Original article:

Share:

கவனம் பெரும் சதுப்புநிலங்கள்: அதன் முக்கியத்துவம், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பைப் புரிந்துகொள்ளுதல் -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி


ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26 ஆம் தேதி சர்வதேச சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது 2015-ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) பொதுக் கூட்டத்தின் 38வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சதுப்புநில காடுகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கான முக்கியமான படியாகும். 




சதுப்புநிலத் தாவரங்கள் என்றால் என்ன மற்றும் அவை இந்தியாவில் எங்கே காணப்படுகின்றன?


சதுப்புநிலத் தாவரங்கள் உப்பு நீரில் வாழக்கூடிய சிறப்பு மரங்கள் மற்றும் புதர்கள் ஆகும். அவை நன்னீர் மற்றும் உப்பு நீர் சந்திக்கும் பகுதிகளில் வளரும். சதுப்புநிலங்கள் பொதுவாக காற்றில் பரவும், சுவாசிக்கும் வேர்கள் மற்றும் மெழுகு போன்ற, சதைப்பற்றுள்ள இலைகளைக் கொண்டுள்ளன. மேலும், அவை பூக்கும் தாவரங்களாகும். அவை அதிக மழை பெய்யும் பகுதிகளில் (1,000–3,000 மிமீ) 26°C முதல் 35°C வரை வெப்பநிலையுடன் உள்ள பகுதிகளில் செழித்து வளரும்.


சதுப்புநிலங்களின் தனித்துவமான சிறப்பம்சம் அவற்றின் விதைகள் முளைக்கும் விதம் ஆகும். சதுப்புநில விதைகள் மரத்தில் இருக்கும்போதே வளரத் தொடங்குகின்றன. சிறிது வளர்ந்த பிறகு, அவை தண்ணீரில் விழுகின்றன. அவை சேற்றில் அல்லது மண்ணில் சிக்கிக் கொள்ளும்போதுதான் புதிய தாவரமாக வளரத் தொடங்குகின்றன. இது சதுப்புநிலங்களின் சிறப்பு அம்சமாகும். இது கடுமையான உப்புத்தன்மை நிலைகளில் அவை நிலைத்திருக்க உதவுகிறது. விஞ்ஞானிகள் இந்த செயல்முறையை கனியிலேயே விதை முளைத்தல் (vivipary) என்று அழைக்கிறார்கள்.


சிவப்பு சதுப்புநிலக் காடுகள் (Red mangrove), அவிசென்னியா மரினா (avicennia marina), சாம்பல் சதுப்புநிலக் காடுகள் (grey mangrove), ரைசோபோரா (rhizophora) போன்றவை சில பொதுவான சதுப்புநில மரங்கள் ஆகும். சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்களில் ஏராளமாகக் காணப்படும் தாவரங்கள் கடலோர வன சுற்றுச்சூழல் அமைப்பை (littoral forest ecosystem) குறிக்கின்றன. இவை கடலோர பகுதிகளில் உப்பு நீர் (brackish waters) அல்லது உவர் நீரில் (brackish waters) வளரும்.


இந்தியாவில் சதுப்புநிலங்கள்


சதுப்புநிலங்கள் 123 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களில் பரவியுள்ளன. 2023-ஆம் ஆண்டு இந்திய வன அறிக்கையின் (Indian State of Forest Report (ISFR)) படி, இந்தியாவில் சதுப்புநிலங்களின் பரப்பளவு சுமார் 4,992 சதுர கிமீ ஆகும். இது நாட்டின் மொத்த புவியியல் பகுதியில் 0.15% ஆகும். மேற்கு வங்காளம் இந்தியாவில் மிகப்பெரிய சதுப்புநிலப் பரப்பைக் கொண்டுள்ளது. குஜராத் 1,177 சதுர கிமீ மதிப்பிடப்பட்ட பரப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு சதுப்புநிலங்கள் காடுகள் பெரும்பாலும் கட்ச் வளைகுடா (Gulf of Kutch) மற்றும் கம்பாத் வளைகுடாவில் (Gulf of Khambhat) அமைந்துள்ளன. 794 சதுர கிமீ பரவிய சதுப்புநில காடுகளுடன், கட்ச் மாவட்டம் குஜராத்தில் மிகப்பெரிய மாங்குரோவ் பகுதியைக் கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் (கோதாவரி-கிருஷ்ணா நாற்கோணம்), கேரளா மற்றும் அந்தமான் தீவுகளிலும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் காணப்படுகின்றன.


சுந்தரவனம் (இந்தியா மற்றும் வங்காளதேசம் முழுவதும் பரவியுள்ள) உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான சதுப்புநிலக் காடுகள் காடாகும். பிதர்கனிகா (Bhitarkanika) இந்தியாவில் இரண்டாவது பெரிய காடாகும். சுந்தரவன தேசிய பூங்கா யுனெஸ்கோ-வின் உலக பாரம்பரிய தளமாகும். இந்த காடு ராயல் வங்கப் புலிகள், கங்கை டால்பின்கள் மற்றும் பிற தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பிரபலமானது. பிதர்கனிகா அதன் அழிந்துவரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் (Olive Ridley turtles) மற்றும் உப்பு நீர் முதலைகளுக்கு புகழ்பெற்றது.


சதுப்புநிலக் காடுகளின் பன்முக முக்கியத்துவம் என்ன?


சதுப்புநிலக் காடுகள் நிலத்திற்கும் கடலுக்கும் இடையேயான எல்லையில் அமைந்துள்ள அரிய, அற்புதமான மற்றும் செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகும். இந்த அசாதாரண சுற்றுச்சூழல் அமைப்புகள் உலகம் முழுவதும் கடலோர சமுதாயங்களின் நல்வாழ்வு, உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன என்று யுனெஸ்கோ கூறுகிறது.


சதுப்புநிலக் காடுகள் ஆழமான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டவை. பல வழிகளில் அவை பயனளிக்கின்றன:


1. இயற்கை கடலோர பாதுகாப்பு (உயிர்-கவசங்கள்): சதுப்புநிலங்ககள் இயற்கை கடலோர காவலர்கள் மற்றும் பாதுகாவலர்களாக செயல்படுகின்றன. இவை 'உயிர்-கவசங்கள்' (bio-shields) என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில், இவை வலுவான அலைகள் மற்றும் காற்றின் தாக்கத்தைக் குறைக்கின்றன. மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இது முக்கியமாக அவற்றின் வேர்களால் சாத்தியமாகிறது.

2. கார்பன் குழிகள் (Carbon sinks): சதுப்புநிலங்ககள் அத்தியாவசிய கார்பன் குழிகளாக செயல்படுகின்றன (வெளியிடுவதைவிட அதிகக் கார்பனை உறிஞ்சுகின்றன). உலகமயமான வெப்பமடைதலைக் குறைக்க உதவுகின்றன. UNESCO அறிக்கையின்படி, ஒரு ஹெக்டேர் சதுப்புநிலத்தில் 3,754 டன் கார்பனைச் சேமிக்க முடியும். இது ஒரு வருடத்திற்கு 2,650+ கார்களை சாலையிலிருந்து நீக்குவதற்கு சமமானதாகும்.


சதுப்புநில மரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சி மண்ணில் சேமிக்கின்றன. அங்கு கார்பன் தொந்தரவு செய்யப்படாவிட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருக்கும். ஒளிச்சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக CO2-ஐ அகற்றும் பிற மரங்களிலிருந்து சதுப்புநிலங்கள் வேறுபடுகின்றன. கார்பனை அவற்றின் கிளைகள் மற்றும் வேர்களில் சேமித்து வைக்கிறன. ஆனால், மரம் தனது வலுவை இழக்கும் போது, கார்பன் மீண்டும் காற்றில் வெளியிடப்படுகிறது. மறுபுறம், சதுப்புநிலங்கள் மண்ணில் கார்பனை சேமித்து வைக்கின்றன, மரம் அழிக்கப்பட்டாலும் அது பாதுகாப்பாக இருக்கும்.


3. பொருளாதார முக்கியத்துவம்: சதுப்புநிலங்கள் கடலோரப் பகுதிகளில் காணப்படுவதால், இவை கடலோர சமுதாயங்களுக்கு வாழ்வாதார ஆதாரமாகவும் உள்ளன. மீனவ பெண்கள் மற்றும் விவசாயிகள் சதுப்புநிலங்கள் வழங்கும் பல்வேறு சுற்றுச்சூழல் செல்வத்தை சார்ந்துள்ளனர். மீன் வளர்ப்பு, மரம் அல்லாத வன உற்பத்திப் பொருட்கள், தேன் சேகரிப்பு மற்றும் படகு சவாரி ஆகியவை உள்ளூர் மக்கள் சார்ந்துள்ள சில உள்ளூர் தொழில்கள் சதுப்பு நிலத்தை பெரிதும் நம்பியுள்ளன. கூடுதலாக, பல்வேறு வகையான மீன்கள், இறால்கள் மற்றும் தாவரங்கள் சதுப்புநிலக் காடுகளில் செழித்து வளர்கின்றன. அவை நீலப் பொருளாதாரத்தை (blue economy) ஆதரிக்கின்றன.


4. பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கிறது: இந்த சதுப்புநிலக் காடுகள் உயிரினப் பன்மைத்தன்மையில் செழிப்பானவை. இவை ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து வாழும் சிக்கலான சமூகங்களை ஆதரிக்கின்றன. மீன்கள் மற்றும் நண்டுகளுக்கு மதிப்புமிக்க இனப்பெருக்க வாழிடத்தை வழங்குகின்றன; குரங்குகள், மான்கள், பறவைகள், மற்றும் கங்காருகளுக்கு உணவு ஆதாரமாக உள்ளன; மேலும் தேனீக்களுக்கு தேன் ஆதாரமாகவும் உள்ளன.


கேள்வி 3: இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்ன?


உலகில் உள்ள சதுப்புநிலக்காடுகளில் பாதிக்கும் மேற்பட்ட சதுப்புநிலக் காடுகள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. மேலும், ஐந்தில் ஒன்று மிகவும் கடுமையான ஆபத்தில் உள்ளது என்று ஒரு பெரிய உலகளாவிய ஆய்வு கூறுகிறது.


ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் அறிக்கையின் படி, சதுப்புநிலக்காடுகளின் பன்முக முக்கியத்துவம் இருந்தபோதிலும், இவை ஒட்டுமொத்த உலகளாவிய வன இழப்புகளைவிட மூன்று முதல் ஐந்து மடங்கு வேகமாக மறைந்து வருகின்றன. இது கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, கடந்த 40 ஆண்டுகளில் சதுப்புநிலங்களின் பரப்பளவு இரண்டாகப் பிளவுப்பட்டுள்ளது.


வன அழிப்பு, மாசுபாடு மற்றும் அணை கட்டுமானம் சதுப்புநிலங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஆனால், காலநிலை மாற்றத்தால் கடல் மட்ட உயர்வு மற்றும் கடுமையான புயல்களின் அதிகரித்த எண்ணிக்கையின் காரணமாக இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான அபாயம் அதிகரித்து வருகிறது.


புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்ட உயர்வு சதுப்புநிலங்கள் நீரில் மூழ்குவதற்கு வழிவகுக்கும். ஆய்வுகள் காலப்போக்கில் கடல் மட்ட உயர்வு காரணமாக சதுப்புநிலங்கள் நிலத்தை நோக்கி தள்ளப்படுவதைக் காட்டுகின்றன. இருப்பினும், மனித குடியிருப்புகள் மற்றும் பிற தொழில்துறை நடவடிக்கைகளால் நிலம் நோக்கிய இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, சதுப்புநிலங்கள் அவற்றின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு சாத்தியமில்லாத அளவுக்கு நசுக்கப்படலாம்.


குறிப்பிடத்தக்க வகையில், காலநிலை மாற்றம் சதுப்புநிலங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கை (33 சதவீதம்) அச்சுறுத்துகிறது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) சுற்றுச்சூழல் அமைப்புகளின் சிவப்பு பட்டியலைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. இது சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்பதை சரிபார்க்க இந்த ஆய்வு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) உலகளாவிய முறையைப் பயன்படுத்தியது.


உலகெங்கிலும் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிப்பது காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான சதுப்புநிலங்கள் கடல் மட்ட உயர்வை குறைப்பதற்கும், புயல் மற்றும் சூறாவளிகளின் தாக்கங்களிலிருந்து உள்நாட்டிற்குப் பாதுகாப்பை வழங்குவதற்கும் முக்கியமாக இருக்கும் என்று மதிப்பீடு கண்டறிந்துள்ளது.


சதுப்புநில பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?


பெருகிவரும் நகரமயமாக்கல், விவசாயம், இறால் வளர்ப்பு காரணமாக கடலோர பகுதிகளில் நில பரப்புகள் குறைந்து வருதல் மற்றும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையால் ஏற்படும் பிற ஆபத்துகள் ஆகியவற்றால் சதுப்புநிலங்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. கவனமாக செய்யப்படாத சுற்றுலாவும் இந்த பாதிக்கப்படக்கூடிய சதுப்புநிலப் பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன.


இருப்பினும், காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைக்கான உத்தியாக சதுப்புநிலங்களின் பாதுகாப்பு பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது. சில உலகளாவிய முயற்சிகளில், எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் (Mangroves for the Future (MFF)) மற்றும் காலநிலைக்கான சதுப்புநில கூட்டணி (Mangroves Alliance for Climate) ஆகியவை அடங்கும்.


இந்தியாவில், கடற்கரை வாழ்விடங்கள் & உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில காடு முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI)), அம்ரித் தரோஹர் (Amrit Dharohar), மேற்கு வங்காளத்தின் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பில் நிலையான மீன் வளர்ப்பு (Sustainable Aquaculture In Mangrove Ecosystem (SAIME)), ஆந்திர பிரதேசத்தின் வன சம்ரக்ஷண சமிதிகள் (Vana Samrakshana Samitis) மற்றும் பசுமை தமிழ்நாடு திட்டம் (Green Tamil Nadu Mission) போன்ற திட்டங்கள் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.


01. காலநிலைக்கான சதுப்புநில கூட்டணி (Mangrove Alliance for Climate)


கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற 27வது கால நிலை மாநாட்டின் அமர்வில் (Conference of Parties (COP)), இந்தியா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து, ‘உலகளவில் சமுதாயங்களின் நன்மைக்காக சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, மீட்டமைப்பு மற்றும் வளரும் தோட்ட முயற்சிகளை அதிகரிக்கவும், துரிதப்படுத்தவும், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் தகவமைப்புக்கு இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும்’ சதுப்புநில காலநிலை கூட்டணி (Mangrove Alliance for Climate (MAC)) தொடங்கப்பட்டது.


எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் (Mangroves for the Future (MFF))


எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் நிலையான வளர்ச்சிக்காக கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு பாதுகாப்பில் முதலீட்டை ஊக்குவிக்கும் தனித்துவமான பங்குதாரர் தலைமையிலான முயற்சியாகும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) ஆகியவற்றால் இணை தலைமை வகிக்கப்படும் எதிர்காலத்திற்கான சதுப்புநில கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பல்வேறு முகவர்கள், துறைகள் மற்றும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான தளத்தை வழங்குகிறது. ஆரம்பத்தில் இது சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, சீஷெல்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.


சமீபத்தில், இந்த திட்டம் வங்கதேசம், கம்போடியா, மியான்மர், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் முதன்மையானது சதுப்புநிலங்கள் ஆகும். ஆனால் எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் என்பது பவளப்பாறைகள், கழிமுகங்கள், தடாகங்கள், மணல் நிறைந்த கடற்கரைகள், கடல் புற்கள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற அனைத்து வகையான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உள்ளடக்கியது.


கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில திட்டத்தின் முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI))


சதுப்புநிலங்களை ஒரு உயிரியல் கேடயமாகச் செயல்படுத்துவதோடு, மிக அதிக உயிரியல் உற்பத்தித்திறன் மற்றும் கார்பன் பிரித்தெடுக்கும் திறனைக் கொண்ட தனித்துவமான, இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் 2023-24ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், கடலோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (MISHTI) திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் ஜூன் 5, 2023 அன்று தொடங்கப்பட்டது.


இருப்பினும், இந்த முன்முயற்சிகளை தாண்டி, விழிப்புணர்வை உருவாக்குவது, சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, ஒன்றையொன்று சிறந்த நடைமுறைகளை உள்ளடக்குவது மற்றும் மாறிவரும் காலநிலை சூழ்நிலைகளுக்கு ஏற்ப சதுப்புநில வழிமுறைகளை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தி அறிவியல் ஆய்வுகளை நடத்துவதும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, கடலின் மாறுபடும் உப்புத்தன்மை, கழிமுகங்களுக்கு நன்னீரின் குறைவு, மற்றும் உயரும் உலக வெப்பநிலைகள் ஆகியவற்றை புரிந்துகொள்வது அவசியம்.


ஒவ்வொரு பிராந்தியத்திலும் சதுப்புநிலப் பாதுகாப்பைத் தடுக்கும் முக்கியப் பிரச்சினைகளை நாம் கண்டறிய வேண்டும். பின்னர், அவற்றைக் காப்பாற்ற சிறந்த வழிகளைத் திட்டமிடலாம். சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக நமது சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்க, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய பொதுவான உலகளாவிய உத்தி வகுக்கப்பட வேண்டும்.



Original article:

Share:

NCAP 2.0, நகரங்களில் தூய்மையான காற்றை உறுதி செய்ய தொழில்துறை சீர்திருத்தத்தில் கவனம் செலுத்த வேண்டும். -அனிர்பன் பானர்ஜி

 சுத்தமான தொழில்துறை காற்றின் சுகாதாரத்திற்கு மட்டுமல்ல, பொருளாதாரத்திற்கும் பயனளிக்கிறது. நகரங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் இணைந்து தூய்மையான காற்றின் பொதுவான இலக்கை அடைய ஒரு கூட்டு அணுகுமுறை இருக்க வேண்டும்.


இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் கிட்டத்தட்ட 37 சதவீதம் வெப்ப மின் நிலையங்கள் (thermal power plants (TPP)), உருக்காலைகள் (smelters) மற்றும் உற்பத்தி அலகுகள் (manufacturing units) போன்ற பெரிய தொழில்களால் சூழப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் 20 சதவீதத்தில் தொழில்கள் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த நகரங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நகர எல்லைக்குள் சிறிய அளவிலான தொழில்களைக் கொண்டுள்ளன. பல தொழில்கள் நகர அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, புறநகர்ப் பகுதிகளில் உள்ளன. இது ஒழுங்குமுறையை கடினமாக்குகிறது.


ஆயினும்கூட, தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் (National Clean Air Programme (NCAP)) மற்றும் 15-வது நிதி ஆணைய நிதிகளில் 0.6 சதவீதம் மட்டுமே தொழில்துறையின் மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்த ஒதுக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை பரவலாக அறியப்பட்டாலும், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் மட்டுமே காற்று-நிலை மேலாண்மையை (airshed-level management) தீவிரமாகப் பின்பற்றுகின்றன.


தடைகள் மற்றும் வரவிருக்கும் தீர்வுகள்


செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல் நொறுக்கிகள் மற்றும் கனிம அரைக்கும் அலகுகள் போன்ற முறைசாரா தொழில்கள் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் 1,40,000-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அவை நிலக்கரி அல்லது விவசாயக் கழிவுகளை திறனற்ற முறையில் எரிக்கின்றன. இது PM2.5, கருப்பு கார்பன் மற்றும் சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) எனப்படும் சிறிய துகள்களின் அதிக உமிழ்வை ஏற்படுத்துகிறது. துணி வடிகட்டிகளுடன் இணைக்கப்பட்ட ஜிக்ஜாக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் செங்கல் சூளைகள் PM உமிழும் அளவைக் கணிசமாகக் குறைக்கலாம். அரசாங்கம் மறுசீரமைப்பு ஆணைகளைச் செயல்படுத்த வேண்டும், திறன் மேம்பாட்டை ஆதரிக்க வேண்டும் மற்றும் தூய்மையான மேம்பாடுகளுக்கு மானியங்களை வழங்க வேண்டும்.


இதேபோல், அரிசி ஆலைகள் உமி மற்றும் பிற எச்சங்களை எரிக்கின்றன. அவை பெரும்பாலும் சரியான உமிழ்வு கட்டுப்பாடுகள் இல்லாமல் திறமையற்ற உலைகளைப் பயன்படுத்துகின்றன. இது உமியை அரைத்து எரிப்பதால் PM மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அரிசி ஆலைகள் பல-சூறாவளி பிரிப்பான்கள் (multi-cyclone separators) அல்லது ஈரமான தேய்ப்பான்களை (wet scrubbers) நிறுவவும், அரிசி உமி வாயுவாக்கிகள் அல்லது உயிர்த்திரள் துகள்கள் உட்பட தூய்மையான எரிபொருட்களுக்கு மாறவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


கல் நொறுக்கிகள் (stone crushers) மற்றும் கனிம அரைக்கும் தொழிற்சாலைகளில் (mineral grinding industries) இருந்து வெளியேறும் உமிழ்வுகள் NCAP நகரங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) ஜூலை 2023-ல் தூசி கட்டுப்பாட்டு விதிகளைப் புதுப்பித்தது. இந்த விதிகள் தொழிற்சாலைகள் உலர் மூடுபனி குழல்\கள் (dry mist guns) போன்ற தூசி அடக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. இருப்பினும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 2022 அறிக்கை, பல தொழில்கள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. மீதமுள்ள உமிழ்வைக் குறைக்க, இந்த விதிகளை நன்கு செயல்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தணிக்கைகளைச் செய்வதன் மூலமும், தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலமும், தங்கள் தூசி கட்டுப்பாட்டு அமைப்புகளை முறையாகப் பயன்படுத்தாத தொழில்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலமும் இதைச் செய்யலாம்.


சிமென்ட் ஆலைகள், உருக்காலைகள், அனல் மின் நிலையங்கள் (TPPகள்) மற்றும் ஒருங்கிணைந்த எஃகு ஆலைகள் போன்ற பெரிய தொழில்கள் அதிக உமிழ்வை ஏற்படுத்துகின்றன. செயல்முறைகளை மேம்படுத்துவதன் மூலம் அவை உமிழ்வை 30–40% குறைக்கலாம். இதில் மாற்று எரிபொருள்கள், மின்சார உருக்கும் உலைகள் மற்றும் கழிவு வெப்பத்தை மீட்டெடுப்பது ஆகியவை அடங்கும். காற்று மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள் மிகவும் முக்கியம். எலக்ட்ரோஸ்டேடிக் வீழ்படிவாக்கிகள் (electrostatic precipitators (ESP)), துணி வடிகட்டிகள் மற்றும் ஈரமான தேய்ப்பான்கள் போன்ற சாதனங்கள் இந்தத் தொழில்களில் இருந்து 90% வரை துகள் பொருளை (particulate matter (PM)) கைப்பற்ற முடியும். அனல் மின் நிலையங்கள் (TPP) துகள் பொருளை (பறக்கும் சாம்பல்), சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளை (NOₓ) வெளியிடுகின்றன. இவற்றைக் குறைக்க, அவை ESPகள் அல்லது பை வீடுகள் (bag houses), புகைவாயு கந்தக நீக்கம் (flue gas desulphurisers) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்கி குறைப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.


சூரிய சக்தி அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அவற்றின் செயல்பாடுகளில் பயன்படுத்துவது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுகிறது மற்றும் உமிழ்வை இன்னும் குறைக்கிறது.


சமூக கொதிகலன்களைப் (community boilers) பயன்படுத்துவது ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு ஆகும். இந்த அமைப்பில், பல அலகுகள் ஒரு உயர் திறன் கொண்ட கொதிகலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த கொதிகலன்கள் ESPகள் மற்றும் பை வடிகட்டிகள் போன்ற நவீன மாசு கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளன. மார்ச் 2024 முதல் பொதுவான கொதிகலன்கள் குறித்த CPCB வழிகாட்டுதல்கள் மாநில தொழில்துறை கொள்கைகளில் சேர்க்கப்பட வேண்டும். இந்தக் கொள்கைகள் தொழில்துறை எஸ்டேட்டுகளைத் திட்டமிடுவதன் (planning of industrial estates) மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, small, and medium enterprises (MSME)) நிலக்கரி மற்றும் கன எண்ணெய் போன்ற மாசுபடுத்தும் எரிபொருட்களை பெரிதும் நம்பியுள்ளன. அவை அதிக அளவு PM மற்றும் SO₂ ஐ வெளியிடுகின்றன. இந்த மாசுபடுத்திகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு நகர்ப்புற புகைமூட்டத்திற்கும் பங்களிக்கின்றன. இயற்கை எரிவாயு, மின்சாரம் அல்லது சூரிய வெப்ப அமைப்புகளுக்கு மாறுவது PM மற்றும் SO₂ உமிழ்வு இரண்டையும் குறைக்கலாம்.


அறிக்கையிடல் இடைவெளியைக் குறைத்தல்


பெரிய தொழில்களுக்கான ஒரு முக்கிய முதல் படி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதாகும். அவர்கள் விரிவாக அறிக்கையிடுவதன் மூலம் இதைச் செய்யலாம். இப்போது, சந்தை மதிப்பின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் 1,000 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்கள் பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வைப் புகாரளிக்க வேண்டும். இது வணிகப் பொறுப்பு மற்றும் நிலைத்தன்மை அறிக்கையிடல் வடிவமைப்பின் கீழ் செய்யப்படுகிறது. இருப்பினும், சட்டப்படி அவர்கள் காற்று மாசுபடுத்தும் உமிழ்வைப் புகாரளிக்க வேண்டிய அவசியமில்லை.


இந்தத் தொழில்கள் எரிபொருள் வகைகள் உட்பட, தங்கள் வருடாந்திர எரிபொருள் பயன்பாட்டைப் புகாரளிப்பது மிகவும் முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் காற்று மாசு கட்டுப்பாட்டு சாதனங்கள் மற்றும் செயல்முறைகள் பற்றிய விரிவான தகவல்களையும் வழங்க வேண்டும். தொழிற்சாலைகள் செயல்பட ஒப்புதல் பெறும்போது இந்த அறிக்கையிடலை கட்டாயமாக்கலாம். இத்தகைய வெளிப்படைத்தன்மை உமிழ்வை சிறப்பாகக் கண்காணிக்க உதவும். இது தொழில்கள் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் புதிய, தூய்மையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும்.


இந்தியாவின் மின் துறைக்குத் தேவையான சீர்திருத்தங்கள்


இந்த மாற்றத்தின்போது தொழில்களை ஆதரிக்க அரசு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவற்றில் தொழில்துறை மேம்பாட்டு வாரியங்கள், நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், கனரக தொழில்கள் அமைச்சகம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆகியவை அடங்கும். இதில் சுத்தமான எரிபொருள் உள்கட்டமைப்பை உறுதி செய்தல் மற்றும் தொழில்துறை மேம்பாடுகளுக்கு எளிதான நிதியுதவி ஆகியவை அடங்கும். வரிச் சலுகைகள், மானியங்கள் அல்லது குறைந்த வட்டி கடன்கள் போன்ற நிதி ஊக்குவிப்பு, தொழில்கள் தூய்மையான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். இவை NCAP 2.0-ன் நிதிச் செலவில் இணைக்கப்படலாம்.


ஆனால் ஒரு கேள்வி உள்ளது: இந்த மாற்றங்களைச் செயல்படுத்த யார் தலைமை தாங்குவார்கள்?


உண்மையான சோதனை


உமிழ்வைக் குறைக்க தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு தொழில்கள் பணம் செலுத்த வேண்டும் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், உள்ளூர் அரசாங்கங்களும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் இந்த செலவை தொழில்களுக்கு உதவாமல் அனுப்ப முடியாது. இதற்கு ஒரு கூட்டு அணுகுமுறை தேவை. நகரங்கள், தொழில்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். சுத்தமான காற்றை அடைவதே அவர்களின் பொதுவான குறிக்கோள் ஆகும்.


சுத்தமான தொழில்துறை காற்று பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. மருத்துவமனை வருகைகள் குறையும். தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். இது சுத்தமான தொழில்நுட்பத் துறைகளிலும் வேலைகளை உருவாக்கும். இந்த நன்மைகள் முதலீட்டை நியாயப்படுத்துகின்றன.


NCAP 2.0 விரைவில் வருவதால், டோக்கன் முயற்சிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய நேரம் இது. ஒருங்கிணைந்த மற்றும் நன்கு நிதியளிக்கப்பட்ட ஒரு உத்தி நமக்குத் தேவை. இந்த உத்தி பெரிய தொழில்கள், MSMEகள் மற்றும் முறைசாரா தொழில்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்திய நகரங்களில் சுவாசிக்கக்கூடிய காற்று இருக்க முடியும்.


எழுத்தாளர் காற்று தரக் கொள்கை மற்றும் அவுட்ரீச் குழுவில் (Air Quality Policy and Outreach team) மூத்த பங்குதாரர் . அவர்கள் ஆராய்ச்சி அடிப்படையிலான சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தில் (CSTEP) பணிபுரிகின்றனர்.



Original article:

Share:

உயிரித் தூண்டிகள் (biostimulants) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 

Biostimulants :  உயிரித் தூண்டிகள்  என்பது தாவரங்களின் வளர்ச்சி மற்றும் செயல்திறனை மேம்படுத்தப் பயன்படும் பொருட்கள் ஆகும். இவை உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் போலல்லாமல், தாவரங்களின் இயற்கையான செயல்பாடுகளைத் தூண்டி, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவற்றை தாவரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மண்ணில் கலந்தோ பயன்படுத்தலாம்.





முக்கிய அம்சங்கள் :


சில்லறை விற்பனையாளர்கள் பயோஸ்டிமுலண்ட்களையும் (biostimulants) வாங்காவிட்டால், யூரியா மற்றும் டை அம்மோனியம் பாஸ்பேட் (diammonium phosphate (DAP)) போன்ற மானிய விலை உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில்லை என்று சௌஹான் சுட்டிக்காட்டினார்.


பயோஸ்டிமுலண்டுகளின் (biostimulants) திறமையின்மை குறித்து பல விவசாயிகள் சமீபத்தில் புகார்களை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். "விவசாயிகள் எவ்வளவு நன்மையைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்க பயோஸ்டிமுலண்டுகளை முழுமையாக மதிப்பாய்வு செய்வது அவசியம். இல்லையென்றால், அதை விற்க அனுமதி வழங்க முடியாது," என்று அவர் கூறினார்.


சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஃபார்ச்சூன் பிசினஸ் இன்சைட்ஸ் குறிப்பிட்டது, இந்திய பயோஸ்டிமுலண்டுகளின் சந்தை அளவு 2024-ல் 355.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. சந்தை 2025-ல் 410.78 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2032-ம் ஆண்டில் 1,135.96 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி முன்னறிவிப்பு காலத்தில் 15.64% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (compound annual growth rate (CAGR)) காட்டுகிறது.


பல ஆண்டுகளாக சுமார் 30,000 பயோஸ்டிமுலண்ட் (biostimulants) பொருட்கள் தடையின்றி விற்கப்பட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில்கூட, சுமார் 8,000 பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் சௌஹான் கூறினார். "நான் கடுமையான சோதனைகளை அமல்படுத்திய பிறகு, இந்த எண்ணிக்கை இப்போது தோராயமாக 650-ஆகக் குறைந்துள்ளது," என்று அவர் ஜூலை 15 அன்று ஒரு அறிக்கையில் கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா? :


இந்த பொருட்கள் தாவரங்களின் இயற்கையான செயல்முறைகளைத் தூண்டுவதன் மூலம் உதவுகின்றன. இது சிறந்த பயிர் விளைச்சலுக்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில், தாவரக் கழிவுகள் மற்றும் கடற்பாசி சாறுகள் இந்த பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


அதிகாரப்பூர்வமாக, உயிரூக்கிகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் உரங்கள் (கனிம, கரிம அல்லது கலப்பு) (கட்டுப்பாடு) உத்தரவு, 1985, இதனை “ஒரு பொருள் அல்லது நுண்ணுயிரி அல்லது இரண்டின் கலவையாகும், இது தாவரங்கள், விதைகள் அல்லது வேர்ப்பகுதியில் பயன்படுத்தப்படும்போது, தாவரங்களின் உடலியல் செயல்முறைகளைத் தூண்டுவதற்கும், அதன் ஊட்டச்சத்து உறிஞ்சுதல், வளர்ச்சி, விளைச்சல், ஊட்டச்சத்து திறன், பயிர் தரம் மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் திறனை மேம்படுத்துவதற்கும் முதன்மைப் பங்கு வகிக்கிறது... ஆனால், பூச்சிக்கொல்லிகள் அல்லது 1968 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளை இது உள்ளடக்காது” என வரையறுக்கிறது.


உயிரித் தூண்டிகள் / உயிரி ஊக்கிகளானது தற்போதுள்ள உரம் அல்லது பூச்சிக்கொல்லி வகைகளின் கீழ் வராததால், அவை நீண்ட காலமாக அரசாங்க ஒப்புதல் இல்லாமல் திறந்த சந்தையில் விற்கப்பட்டன.


இந்தியாவில், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் முறையே 1985 உரக் கட்டுப்பாட்டு ஆணை (Fertiliser Control Order (FCO)) மற்றும் 1968-ன் பூச்சிக்கொல்லிச் சட்டத்தால் (Insecticides Act) நிர்வகிக்கப்படுகின்றன. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-ன் கீழ் உரக் கட்டுப்பாட்டு ஆணையை (FCO) வெளியிட்டு, அவ்வப்போது அதில் மாற்றங்களைச் செய்கிறது.



Original article:

Share:

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) முக்கிய அம்சங்கள் மற்றும் நோக்கங்கள் -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :  


மே 6 ஆம் தேதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டாலும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்ததால் ஒப்பந்தத்தின் அறிக்கையானது வெளியிடப்பட இருந்தது. ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்தில் முறையான கையெழுத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பிரதமர் மோடியுடன் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொள்வார்.


புதன்கிழமை தொடங்கி நான்கு நாள் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணத்திற்கு முன்னதாக அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.


கடந்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து நாடானது மூன்று வெவ்வேறு பிரதமர்களைக் கண்டது. இதில், ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தேர்தல் வெற்றியைப் பெற்ற பிறகு இந்த ஒப்பந்தம் இறுதியாக அறிவிக்கப்பட்டது.


இந்தியாவைப் பொறுத்தவரை, UK ஒப்பந்தம் ஒரு மேற்கத்திய நாட்டுடனான முதல் பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும். 2019-ம் ஆண்டில் சீனா தலைமையிலான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை கைவிட புது தில்லி (இந்தியா) முடிவு செய்ததை அடுத்து இது நடந்தது.


இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்களுக்கு இங்கிலாந்து சந்தையைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு ஒப்பந்த உரையும் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இந்தியா எவ்வாறு கையாண்டது என்பதைக் காண்பிக்கும். CBAM என்பது இங்கிலாந்துக்கான இந்தியாவின் உலோக ஏற்றுமதியை கணிசமாக பாதிக்கக்கூடிய ஒரு விதியின் வெளிப்பாடாகும்.


இங்கிலாந்து ஒப்பந்தம் முக்கியமானது, ஏனெனில் இது இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் மேம்பட்ட சேவைத் துறைகளின் ஒருங்கிணைப்பைத் தொடங்குகிறது.


இந்தியா உயர்-ரக பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கியை அதன் சந்தையில் நுழைய அனுமதித்துள்ளது. இது படிப்படியாகக் கதவுகளைத் திறந்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? :


2024–25-ஆம் ஆண்டில் இந்தியாவின் இங்கிலாந்துக்கான ஏற்றுமதி 12.6 சதவீதம் அதிகரித்து 14.5 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 2.3 சதவீதம் அதிகரித்து 8.6 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. 2022–23-ஆம் ஆண்டில் 20.36 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023–24-ஆம் ஆண்டில் 21.34 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)) இந்தியாவின் அனைத்து ஏற்றுமதிக்கான பலன்களையும் உள்ளடக்கிய அனைத்து துறைகளிலும் உள்ள பொருட்களுக்கான விரிவான சந்தை அணுகலை உறுதி செய்கிறது. இந்தியா சுமார் 99 சதவீத வரிகளில், வரி நீக்கத்தால் பயனடையும், இது வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை உள்ளடக்கியது. இது இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க வாய்ப்புகளை வழங்குகிறது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள், சேவைகள், புதுமை, அரசாங்க கொள்முதல் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் பற்றிய அத்தியாயங்கள் உள்ளன. இரட்டைப் பங்களிப்பு மாநாட்டு ஒப்பந்தம் (Double Contribution Convention Agreement) அல்லது சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் (social security pact) குறித்த பேச்சுவார்த்தைகளையும் இரு நாடுகளும் முடித்துள்ளன.


பிரிட்டனில் குறிப்பிட்ட காலத்திற்கு பணிபுரியும் இந்திய நிபுணர்கள் சமூகப் பாதுகாப்பு நிதிகளுக்கு இரட்டை பங்களிப்பு செய்வதைத் தவிர்க்க இது உதவும். இருப்பினும், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (Bilateral Investment Treaty (BIT)) குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.


இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியா இதுவரை கையெழுத்திட்ட மிகவும் விரிவான தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் எதிர்கால ஒப்பந்தங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிக்கலான ஒப்பந்தம் போன்ற இப்போது பேச்சுவார்த்தையில் உள்ள பல வர்த்தக ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.



Original article:

Share:

கோயில்களின் பரிணாம வளர்ச்சியில் சோழர் கட்டிடக்கலை ஏன் ஓர் உயர்ந்த அடையாளத்தைக் குறிக்கிறது? -அஜய் வாஜ்பாய்

 ஒரு கட்டமைப்பை சோழர் காலம் என்று எப்படி வரையறுக்கிறது? அது அரச ஆட்சிக் காலமா அல்லது கூட்டணி ஆட்சிக் காலமா? அது அமைந்துள்ள இடம், சோழ அரசியல் பகுதிக்குள் உள்ளதா? அல்லது அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டதா?


சோழ வம்சத்துடன் தொடர்புடைய பல கல் கோயில்கள் காவேரிப் படுகைப் பகுதியில் காணப்படுகின்றன. இந்தப் பகுதி தொண்டைமண்டலம் மற்றும் மதுரையின் பழைய பகுதிகளுக்கு இடையில் உள்ளது. சோழப் பிரதேசம் பொதுவாக சோழமண்டலம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது "சோழர்களின் நிலம்" என்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


சோழர்கள் கிமு 3-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அசோகர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கிபி முதல் இரண்டு நூற்றாண்டுகளில் சங்க இலக்கியங்களிலும் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து கிபி 9-ஆம் நூற்றாண்டில் விஜயாலய சோழனின் கீழ் காவேரிப் பகுதியை வலுவாக ஆளத் தொடங்கினர்.


சோழர் கோயில் கட்டிடக்கலையின் ஆரம்பகால கட்டமானது, தஞ்சையில் (தஞ்சாவூர்) தங்கள் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்தியபோது தொடங்கியது. இந்தக் காலகட்டம் அமைதியின் வெளிப்பாடாக இருந்தது. மேலும், இந்தக் கோயில்களில் ஒற்றை மாடி சன்னதிகள் இருந்தன. இந்த ஆலயங்கள் சதுர அல்லது எண்கோண கோபுரங்களைக் கொண்டிருந்தன. இந்த பாணி பல்லவ கட்டிடக்கலையின் செல்வாக்கைக் காட்டியது.


கல் ஆலயங்களில் காணப்படும் பல கல்வெட்டுகள் முக்கியமான தடயங்களைத் தருகின்றன. கோயில் கட்டுவதில் ஒரு பழைய பாரம்பரியம் இருந்ததாகக் கூறுகின்றன. இந்தக் கல் ஆலயங்கள் முந்தைய செங்கல் ஆலயங்களை மாற்றியமைத்திருக்கலாம். இந்த மாற்றம் கண்டராதித்யனின் ராணி செம்பியன் மகாதேவியின் ஆதரவின் கீழ் நடந்திருக்கலாம் என்பதை குறிக்கிறது.


ஆரம்பகால கோயில்களின் ஆதரவு மற்றும் காலகட்டம் குறித்து பல குழப்பங்கள் நிலவுகின்றன - உதாரணமாக, நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரர், புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர், மற்றும் கும்பகோணம் நாகேஸ்வரர் - இவற்றில் கலை வரையறுக்க அரசவம்ச பெயர்களைப் பயன்படுத்துவதன் வரம்புகள் முக்கியமாகின்றன.


சோழர் கட்டிடக்கலை பாணி என்றால் என்ன?


ஒரு கட்டமைப்பை சோழர் கோயிலாக மாற்றுவது எது? இது அரச அல்லது கூட்டணி ஆதரவின் காரணமா? அல்லது சோழ அரசியல் பகுதிக்குள் அதன் இருப்பிடமா? அல்லது சோழர்கள் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டதா? இருப்பினும், கி.பி 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்டசோழபுரம் மற்றும் தாராசுரம் ஐராவதேஷ்வரர் ஆகிய மூன்று அரச கோயில்கள், சோழ பாணியாகக் கருதப்படுவதை சிறப்பாக வரையறுக்கின்றன.


ஒரு பொதுவான சோழர் கோயில் கிழக்கு-மேற்கு கோட்டில் கட்டப்பட்டது. இது முகமண்டபம் எனப்படும் நுழைவு மண்டபம், அர்த்தமண்டபம் எனப்படும் தூண் மண்டபம், அந்தராலா எனப்படும் முன்மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் எனப்படும் கருவறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. கருவறை மேலே தமிழ் திராவிட பாணி கோபுரத்தால் மூடப்பட்டிருந்தது.


தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர், கங்கைகொண்டசோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஷ்வரர் போன்ற அரச கோயில்கள் அவற்றின் தலைநகரங்களின் மையமாக வடிவமைக்கப்பட்டன. இந்தக் கோயில்கள் முந்தைய கோயில்களை விடப் பெரியதாகவும் சிக்கலானதாகவும் இருந்தன. அவை நினைவுச்சின்னமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன.


கி.பி 11-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் உள்ள இராஜராஜரின் பிரகதீஸ்வரர் கோயில் ஒரு அகழியால் சூழப்பட்ட உயரமான தரையில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு முகமண்டபம் (நுழைவு மண்டபம்), ஒரு அர்த்தமண்டபம் (தூண் மண்டபம்), ஒரு அந்தராலா (மண்டபம்), ஒரு சுற்றுப்பாதையுடன் கூடிய இரண்டு நிலை ஆலயம் மற்றும் பதினான்கு நிலை கோபுரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது முதலில் தங்க முலாம் பூசப்பட்ட தூண் (முடிச்சு) மற்றும் ஒரு செப்பு கலசத்தால் முடிசூட்டப்பட்டது. பிரகதீஸ்வரரின் விமானம் (சன்னதி மற்றும் மேல்கட்டமைப்பு) தோராயமாக 60 மீட்டர்கள் உயரம் கொண்டது. இது முந்தைய கோயில்களைவிட இரண்டு மடங்கு உயரம் கொண்டது.


பெரிய முற்றத்தில் ஒரு நந்தி மண்டபம் மற்றும் இரண்டு பெரிய கோபுரங்கள் (நுழைவாயில்கள்) உள்ளன. ஒரு கோபுரம் மூன்று தளங்களையும் மற்றொன்று ஐந்து தளங்களையும் கொண்டுள்ளது. இரண்டும் ஷாலா எனப்படும் பீப்பாய்-வளைந்த கூரையுடன் உச்சியில் உள்ளன. இப்போது காணாமல் போன இராஜராஜரின் செங்கல் அரண்மனையும் இருந்தது. இது ஒரு காலத்தில் வடக்குப் பக்கத்திலிருந்து பிரதான கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. முற்றத்தில் சண்டேஸ்வரரின் தொடர்புடைய சன்னதியும் உள்ளது. இந்தக் கோயில் பல்லவ மரபிலிருந்து ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது. அந்த மரபில், கோபுரங்கள் கோயில் வளாகத்தின் நுழைவாயில்களாக மட்டுமே இருந்தன. ஆனால் பிரகதீஷ்வராவில், கோபுரங்கள் சன்னதியின் பாணியைப் பிரதிபலிக்கத் தொடங்கின. இறுதியில், கோபுரங்கள் சன்னதியை விடப் பெரியதாக மாறின.

திரிபுராந்தகர் உருவப்படுத்தலின் அரசியல் உட்பொருள் 


இராஜராஜரின் வாரிசான முதலாம் ராஜேந்திரன், வடக்கில் தனது வெற்றிகரமான படையெடுப்பிற்குப் பிறகு, தனது தாயகத்தில் கங்கைகொண்டசோழபுரம் ("கங்கையை வென்ற சோழர்களின் நகரம்") என்ற புதிய தலைநகரில் தனது வெற்றியைப் புனிதப்படுத்தவும், நினைவுகூரவும், கொண்டாடவும் இந்த நீரைப் பயன்படுத்தினார். இந்தப் புதிய தலைநகரில், முதலாம் ராஜேந்திரன் ஒரு சிவ கோயிலைக் கட்டினார். இது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைப் போலவே வடிவமைப்பில் இருந்தது, ஆனால் சிறியது. இந்தக் கோயில் 50 மீட்டர் உயரம் வரை உயர்ந்துள்ளது. சன்னதியுடன் இணைக்கப்பட்டு பல தூண்களைக் கொண்ட ஒரு பெரிய மண்டபம் இருந்தது. இந்த மண்டபம் 150 தூண்களைக் கொண்டிருந்தது. இந்த வடிவமைப்பு பிற்கால கட்டிடங்களில் பின்பற்றப்பட்ட ஒரு வடிவத்தை அமைத்தது.


கல் மற்றும் வெண்கல சிற்பங்கள், சுவரோவியங்களுடன், சோழ கோயில்களின் வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் அலங்கரித்தன. இருப்பினும், இந்த சிற்பங்கள் முந்தைய படைப்புகளில் காணப்பட்ட தாளம் மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சிற்பங்கள் மிகப் பெரியதாக இருந்ததே இதற்குக் காரணம். வெவ்வேறு பொருட்களில் உள்ள சிற்ப எச்சங்கள் அழகாகவும் மத ரீதியாகவும் மட்டுமல்ல. அவை வலுவான அரசியல் அர்த்தங்களையும் கொண்டிருந்தன.


உதாரணமாக, பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜேஸ்வரம்-உடையார் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் புரவலர் மன்னரின் பெயரால் இது பெயரிடப்பட்டது. இந்த கோயிலில் திரிபுராந்தகராக சிவனின் 38 உருவங்கள் உள்ளன. திரிபுராந்தகர் நான்கு கைகள் கொண்ட ஒரு பிரபஞ்ச போர்வீரன், அவர் ஒரு வில்லை ஏந்தி நிற்கிறார். இந்த 38 உருவங்களில், 37 கல் சிற்பங்கள், ஒன்று ஒரு சுவரோவியம். இந்த சிற்பங்கள் கோயிலின் இரண்டு மாடி சுவர்கள், அதன் அடிப்பகுதி மற்றும் கோபுரம் (temple tower) ஆகியவற்றில் காணப்படுகின்றன.


கெர்ட் மெவிசென் கூற்றுப்படி, இந்த சித்தரிப்புகள் ஆட்சியாளரின் ஆதிக்கத்தைக் காட்டுகின்றன. அவை அவரை தெய்வத்துடன் இணைக்கின்றன. கூடுதலாக, அவை ராஷ்டிரகூடர்கள், கல்யாணி சாளுக்கியர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் சிங்களர்கள் போன்ற போட்டியாளர்களை விலக்கி வைக்க பாதுகாப்பு சிலைகளாக செயல்படுகின்றன.


இதேபோல், கி.பி 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட இரண்டாம் இராஜராஜரின் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் மண்டபத்தில் பல திரிபுராந்தக உருவங்கள் உள்ளன. இவை அதன் சுவர்கள், தூண்கள் மற்றும் அடித்தளத்தில் காணப்படுகின்றன. கோயில் ஒரு தேர் (ரதமண்டபம்) போல புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திரிபுராந்தக உருவத்தையும் தொடர்புடைய புராணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.


ஜெர்ட் மெவிசனின் கூற்றுப்படி, இந்த உருவம் தெய்வத்தை அழைக்க ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. எதிரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தெய்வம் வழிபடப்படுகிறது. இந்த உருவங்கள் எதிரிகள் மீது இழந்த சக்தியை மீண்டும் பெறவும் மீட்டெடுக்கவும் உதவுகின்றன. சோழர் கோயில்களில் திரிபுராந்தக உருவங்களைப் பயன்படுத்துவது ஒரு அரசியல் செய்தியைக் காட்டுகிறது. ராஜசிம்மரின் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், இந்த உருவங்கள் அவர்களின் போட்டியாளர்களான பாதாமி சாளுக்கியர்களை குறிவைத்தன.


சோழர் காலத்தில், தெய்வங்களின் பல சடங்கு வெண்கல உருவங்கள் சிறிய, எடுத்துச் செல்லக்கூடிய அளவுகளில் செய்யப்பட்டன. தஞ்சையில் உள்ள பிரகதேஸ்வரர் கோவிலில் 66 வெண்கல உருவங்கள் இருந்ததாக கல்வெட்டுகள் காட்டுகின்றன. இதில் கடவுள்கள், துறவிகள் மற்றும் ராஜராஜர் கூட அடங்குவர்.


பல அரச கட்டளைகளில், பார்வதியுடனான சிவனின் திருமணத்தின் நாடக சித்தரிப்பு முக்கியமானதாக உள்ளது. இந்தக் காட்சி கல்யாணசுந்தரர் என்று அழைக்கப்படுகிறது. சிவனும், பார்வதியும் நேர்த்தியான தோரணைகளில் ஒருவருக்கொருவர் அருகில் நிற்கிறார்கள். அவர்களின் கைகள் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. பார்வதியின் அருகில் நிற்கும் லட்சுமி, வெட்கப்பட்ட மணமகளை மணமகனை நோக்கித் தள்ளுவது போல சித்தரிக்கப்படுகிறார். ஆசாரியராகச் செயல்படும் விஷ்ணு, மற்றொரு பீடத்தில் தனித்தனியாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த வெண்கல உருவங்களுக்காக செய்யப்பட்ட தங்கம் மற்றும் ரத்தின நகைகளின் பெரிய நன்கொடைகளையும் கோயில் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

ராஜராஜரின் பிரகதீஸ்வரர் கோயில் நகரத்தின் மையமாக இருந்தது. அதைப் பராமரிக்க ஒரு பெரிய குழுக்களைக் கொண்ட மக்கள் பணியாற்றினர். கோயிலைக் கவனித்துக்கொண்ட கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள், வெண்கல வார்ப்பவர்கள், நகைக்கடைக்காரர்கள், பூசாரிகள் மற்றும் நிதி முகவர்கள் போன்ற பல தொழிலாளர்களை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.


இந்தக் கோயில் ஒரு மதத் தலமாக மட்டுமல்லாமல், நகரத்தின் குடிமை மையம், கல்வி மையம் மற்றும் வங்கியாகவும் செயல்பட்டது. அதன் சடங்குகளின் ஒரு பகுதியாக நடனம் மற்றும் இசை நிகழ்வுகளை நடத்தியது, கல்வெட்டுகளில் 67 கோயில் இசைக்கலைஞர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில், ஐந்து பேர் வேதப் பாடல்களைப் பாடினர், நான்கு பேர் தமிழ் பாடல்களை (தேவாரம்) பாடினர், ஐந்து பேர் பாடகர்களாகப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோயில் 12.5 சதவீத வட்டி விகிதத்தில் பணத்தைக் கடனாக வழங்கியது. கண்டேசா என்ற தனிநபர், கோயிலின் நிதி முகவராக செயல்பட்டார். இதில், பதிவுசெய்யப்பட்ட ஒரு பரிவர்த்தனையில், "தெய்வீக இறைவனின் முதல் ஊழியரான கண்டேசாவிடமிருந்து, வைப்பு வைக்கப்பட்ட பணத்திலிருந்து 500 நாணயங்களைப் பெற்றுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தது. 


இருப்பினும், சோழர்களின் மகத்தான திட்டங்கள் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் குறையத் தொடங்கின. போட்டியாளர்கள் மீதான அவர்களின் கட்டுப்பாடு பலவீனமடைந்ததால் இது நடந்தது. அவர்களின் மகத்தான கட்டிடக்கலை பாணி பிற்கால கட்டமைப்புகளைப் பாதித்தது. விஜயநகரப் பேரரசின் பெரிய வளாகங்களிலும், பின்னர் அந்தப் பகுதியில் கட்டப்பட்ட கோயில் நகரங்களிலும் இதைக் காணலாம்.



Original article:

Share: