முக்கிய கனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாப்பது முக்கியம் - பங்கஜ் வசிஷ்ட்

 கனிமங்கள் சுத்தமான ஆற்றல் மற்றும் உயர் தொழில்நுட்ப டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு இன்றியமையாதவை. கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Ltd (KABIL)) அமைப்பை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டில் கனிமங்களைப் பாதுகாக்க  மேலும் நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.


கனிமங்களுக்கான உலகளாவிய தேவை அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. பொருளாதாரங்களின் விரைவான டிஜிட்டல் மயமாக்கல், ஆற்றல் மாற்றத்திற்கான உலகளாவிய தேடலுடன் இணைந்து, செம்பு மற்றும் நிக்கல் போன்ற மொத்த மூலப்பொருட்களின் தேவையையும், லித்தியம், கோபால்ட், நியோடைமியம், டெல்லூரியம் மற்றும் அரிதான பூமி கூறுகள் (rare earth elements (REEs)) போன்ற முக்கிய கனிமங்களின் தேவையையும் அதிகரித்துள்ளது. காற்றாலை விசையாழிகள், சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப டிஜிட்டல் தயாரிப்புகள் உள்ளிட்ட சுத்தமான ஆற்றல் அமைப்புகளின் உற்பத்திக்கு இந்த தாதுக்கள் இன்றியமையாதவை.


இந்த கனிமங்களின் உலகளாவிய இருப்பு போதுமானதாக இருந்தாலும், அவற்றின் விநியோகம் மிகவும் சீரற்றதாக உள்ளது. மேலும், கடந்த 30 ஆண்டுகளாக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிக செறிவூட்டப்பட்ட விநியோகச் சங்கிலிகளுக்கு வழிவகுத்தன. சீனா சுரங்கம் மற்றும் பல முக்கியமான கனிமங்களை செயலாக்குவதில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டை செலுத்துகிறது. செயலாக்க தொழில்நுட்பங்கள், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு கையகப்படுத்துதல்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் முதலீடுகள் மூலம் இந்த ஆதிக்கம் அடையப்பட்டது. கனிமத் துறையில் சீனாவின் பெருக்கம் உலகளாவிய தொழில்களுக்கு பயனளித்தாலும், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்கள் இந்த செறிவூட்டப்பட்ட விநியோகச் சங்கிலியின் பாதிப்புகளை அம்பலப்படுத்தியுள்ளன.


இதன் விளைவாக, கனிமப் பாதுகாப்பு என்பது உலகளவில் ஒரு முக்கிய கொள்கை நோக்கமாக உருவெடுத்துள்ளது. தொழில்மயமான நாடுகள் முக்கியமான கனிமங்களைக் கண்டறிந்து, விநியோகச் சங்கிலித் தடைகளைத் தணிக்க உத்திகளை வகுத்துள்ளன. இந்த நடவடிக்கைகளில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், மறுசுழற்சி மற்றும் மாற்றுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் சர்வதேசக் கூட்டாண்மைகளை ஆராய்வது ஆகியவை அடங்கும்.


முக்கியமான தாதுப்பொருட்களுக்கான இறக்குமதியைச் சார்ந்திருப்பதால் இந்தியாவும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை எதிர்கொள்கிறது. இரும்பு, அலுமினியம் மற்றும் பாக்சைட் போன்ற வளங்களில் நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், அது அதன் மாங்கனீஸில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது மற்றும் ஃப்ளோர்ஸ்பார் மற்றும் மாக்னசைட் போன்ற சில உலோகம் அல்லாத கனிமங்களுக்கான இறக்குமதியை முழுமையாகச் சார்ந்துள்ளது. கூடுதலாக, இந்தியா, ஜெர்மானியம், கனரக அரிதான பூமித் தனிமங்கள், பெரிலியம், ரீனியம், டான்டலம், நியோபியம், கோபால்ட், லித்தியம் மற்றும் ஸ்ட்ரோண்டியம் போன்ற கனிமங்களுக்கான இறக்குமதியை முழுமையாகச் சார்ந்துள்ளது. இந்த கனிமங்களின் நிலையான விநியோகத்தைப் பாதுகாப்பது, வளர்ந்த இந்தியாவாக (‘Viksit Bharat’) மாற வேண்டும் என்ற இந்தியாவின் பார்வையை அடைவதற்கு இன்றியமையாததாகும்.


அதிர்ஷ்டவசமாக, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கனிம விநியோகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, கனிம பாதுகாப்பு உத்தியை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். 2019-ஆம் ஆண்டில் கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Ltd (KABIL)) நிறுவப்பட்டது இந்த முயற்சிகளில் ஒரு முக்கிய படியாக அமைந்தது. தேசிய அலுமினியம் நிறுவனம் (National Aluminium Company Ltd (NALCO)), ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Ltd (HCL)) மற்றும் கனிம ஆய்வு நிறுவனம் (Mineral Exploration Company Ltd. (MECL)) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த கூட்டு முயற்சி, வெளிநாடுகளில் உள்ள முக்கியமான கனிம சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. KABIL, அப்போதிருந்து, லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற அத்தியாவசிய தாதுக்களைப் பெறுவதற்கு அர்ஜென்டினா, சிலி, பொலிவியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் கூட்டாண்மையை ஆராய்ந்து வருகிறது.


2023ஆம் ஆண்டில், சுரங்க அமைச்சகம் பாதுகாப்பு, மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கு அவசியமான 30 முக்கியமான கனிமங்களின் விரிவான பட்டியலைக் கண்டறிந்து இந்த அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தியது. இந்த வேகத்தை கட்டியெழுப்ப, அரசாங்கம் ஜூலை 2024ஆம் ஆண்டில், ‘கிரிட்டிகல் மினரல் மிஷன்’ (‘Critical Mineral Mission’) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தேசிய இருப்புக்களை நிறுவுவதற்கும் ₹1,500 கோடி நிதித்தேவை ஏற்பட்டது. 


பிரத்யேக நிதியை உருவாக்கவும்


இந்தியாவின் கனிம பாதுகாப்பு உத்தி முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது. போதுமான நிதி கிடைக்காதது ஒரு முக்கிய பிரச்சினை. கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற முக்கியமான கனிமங்களின் இருப்பு இந்தியாவில் குறைவாக இருப்பதால், மற்ற நாடுகளில் இந்த கனிமங்களுக்கான சுரங்கங்களை வாங்குவது நீண்டகால பாதுகாப்பிற்கு அவசியம்.


KABIL வெளிநாட்டு சுரங்கங்களை வாங்கத் தொடங்கியுள்ள போதிலும், அதில் உள்ள அபாயங்களைக் கையாள போதுமான பணம் இல்லை. இதைச் சரிசெய்ய, அத்தகைய திட்டங்களுக்குத் தேவையான பணத்தை வழங்க அரசாங்கம் ஒரு சிறப்பு நிதியை உருவாக்க வேண்டும். இந்த நிதி சுரங்கங்களை வாங்கவும், கனிமங்களை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு செல்ல தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கவும் உதவும்.


கூடுதலாக, KABIL மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் உலகளாவிய முயற்சிகளை ஆதரிக்க இந்தியா அதன் வளர்ச்சி உதவித் திட்டங்களைப் பயன்படுத்தலாம். இந்த அணுகுமுறை சீனா வெளிநாட்டிலிருந்து முக்கியமான கனிமங்களைப் பெறுவதைப் போன்றது.


கோபால்ட், லித்தியம் மற்றும் அரிய மண் கூறுகளை (REEs) கையாள்வதில் நிதி வரம்புகளுக்கு அப்பாற்பட்ட சவால்களை இந்தியா எதிர்கொள்கிறது. பிரித்தெடுத்தல், சுத்திகரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட உள்நாட்டு மதிப்புச் சங்கிலியில் உள்ள இடைவெளிகளிலிருந்து இந்தச் சவால்கள் எழுகின்றன.


கோபால்ட் மற்றும் லித்தியத்தைப் பொறுத்தவரை, உள்நாட்டு சுரங்க மற்றும் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாததால் இந்தியா இறக்குமதியை முழுமையாக நம்பியுள்ளது. REEs-ஐப் பொறுத்தவரை, தாதுவை சுரங்கப்படுத்துவதற்கும் பதப்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு ஓரளவு திறன் உள்ளது. ஆனால், சுத்திகரிப்பு மற்றும் பிரித்தெடுப்பதற்கான உள்கட்டமைப்பு அதற்கு இல்லை.


கோபால்ட், லித்தியம் மற்றும் அரிய மண் தாதுக்களிலிருந்து பேட்டரி கேத்தோடு பொருட்கள், உயர் செயல்திறன் கொண்ட உலோகக் கலவைகள் மற்றும் நிரந்தர காந்தங்கள் போன்ற மேம்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் இல்லை. நாட்டிற்குள் இந்தப் பொருட்களைச் சுத்திகரித்து செயலாக்கும் திறன் இல்லாமல், வெளிநாடுகளில் சுரங்கங்களை வாங்குவது மிகவும் உதவியாக இருக்காது. இதைச் சரிசெய்ய, இந்தியா விரைவாக சுத்திகரிப்பு மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, இந்த மேம்பட்ட பொருட்களின் உள்ளூர் உற்பத்தியை ஆதரிக்க வேண்டும்.


இது இரண்டு முக்கிய படிகளை உள்ளடக்கியது. முதலாவதாக, சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கத்திற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல் ஆகும். இரண்டாவதாக, பேட்டரி கேத்தோடுகள், உயர் செயல்திறன் கொண்ட உலோகக் கலவைகள் மற்றும் நிரந்தர காந்தங்கள் போன்ற முக்கியமான பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகைகளை வழங்குதல். உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production-Linked Incentive (PLI)) போன்ற திட்டங்களை விரிவுபடுத்துவது இதற்கு உதவும். உற்பத்தியை வலுப்படுத்துவது இறக்குமதிக்கான தேவையைக் குறைக்கும் மற்றும் KABIL எதிர்காலத்தில் பெற திட்டமிட்டுள்ள கனிமங்களை வாங்குவதை உறுதி செய்யும்.


 பங்கஜ் வசிஷ்ட் எழுத்தாளர் மற்றும் இணைப் பேராசிரியர், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு, வெளியுறவு அமைச்சகம்.




Original article:

Share:

வைட்டமின் D குறைபாடுகளை சரிசெய்க. -அர்பிதா முகர்ஜி, ஆஷிஷ் சவுத்ரி, த்ரிஷாலி கண்ணா

 வலுவான பட்ஜெட் மூலம் திட்டங்களை அதிகரிக்க முடியும்.


ஐந்து இந்தியர்களில் ஒருவருக்கு வைட்டமின் D  குறைபாடு உள்ளது.  இது பல நோய்களை ஏற்படுத்தும். இதை நிவர்த்தி செய்ய, ஆயுஷ்மான் பாரத்தின் இலக்குகளுடன் இணைந்து "வைட்டமின் D குறைபாடு இல்லாத இந்தியா" (“Vitamin D Kuposhan Mukt Bharat”) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட வேண்டும். சுகாதார பட்ஜெட் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் என்று PM-EAC ஆய்வு கண்டறிந்துள்ளது. இது நுண்ணூட்டச்சத்து தலையீடுகளில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ₹1 ரூபாயும் ₹15 ரூபாய்க்கும் அதிகமான பொருளாதார வருமானத்தை ஈட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.


இரத்த சோகை குறைபாடு இல்லாத இந்தியா (Anaemia Mukt Bharat) போன்ற திட்டங்களின் வெற்றியை இந்தியா கண்டுள்ளது.


செயலற்ற செலவுகள்


ICRIER-ன் வரவிருக்கும் அறிக்கையில், இதன் நன்மைகள் மற்றும் செயலற்ற செலவுகள் தொடர்பாக சுகாதாரச் செலவு மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் பொருளாதார தாக்கம் மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார செலவினங்களில் செயலற்றத் தன்மையின் பொருளாதார செலவுகள் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இடுப்பு எலும்பு முறிவுகள் போன்ற நிலைகளுக்கான சிகிச்சை பெரும்பாலும் வைட்டமின் D குறைபாடுடன் தொடர்புடையது. இது கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தலாம். ஒரே ஒரு இடுப்பு எலும்பு முறிவு சிகிச்சைக்கு பொது மருத்துவமனைகளில் ₹50,000 மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  ₹2.5 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


வைட்டமின் D குறைபாட்டை எதிர்த்து நடவடிக்கை எடுக்காதது உற்பத்தித்திறனில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வைட்டமின் D அளவு குறைவாக இருப்பது உடல் சோர்வு, தசை மற்றும் எலும்பு வலி மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். இது அதிக நாட்கள் நோய்வாய்ப்பட்ட பாதிப்புகள் மற்றும் குறைந்த வேலை செயல்திறன் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சினைகள் தனிநபர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன.


வைட்டமின் D குறைபாடு உற்பத்தித்திறனைப் பாதிக்கிறது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கிறது. சிறந்த பணியிட ஆரோக்கியம் என்பது குறைவான நாட்கள் நோய்வாய்ப்பட்ட பாதிப்புகள், அதிக ஆற்றல் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனைக் குறிக்கிறது. வைட்டமின் D போன்ற போதுமான நுண்ணூட்டச்சத்துக்களை உறுதி செய்வது, பணியாளர்களின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலமும் சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் ₹27,720 கோடியைச் சேர்க்கக்கூடும்.


இந்தியாவில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் சிறப்புத் திட்டங்கள் தேவை. வரவிருக்கும் பட்ஜெட்டில் 'வைட்டமின் D குறைபாடு இல்லாத இந்தியா"' (‘Vitamin D Kuposhan Mukt Bharat’) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம். இந்தத் திட்டம் தற்போதைய அரசாங்க முயற்சிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். இது சோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவைக் குறைக்க உதவும். குறைபாடுகளைக் கண்டறிந்து இலக்கு தீர்வுகளை உருவாக்க ICMR-NIN இன் 'டயட் அண்ட் பயோமார்க்ஸ் சர்வே (DABS-I)' (‘Diet and Biomarkers Survey (DABS-I)’) தரவையும் இது பயன்படுத்தலாம்.


உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பல்வேறு குழுக்களை இணைத்து வைட்டமின் D குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, ஜோர்டானின் 'தேசிய கோதுமை மாவு வலுவூட்டல்' ('National Wheat Flour Fortification') திட்டத்தில் கோதுமை மாவுடன் வைட்டமின் D சேர்க்க வேண்டும். உலகளாவிய அமைப்பான GAIN,  குழந்தைகளுக்கு வைட்டமின் D முன்கலவைகளை வழங்க எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியா"' திட்டம் (Kuposhan Mukt Bharat program) குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு இலவச வைட்டமின் D பரிசோதனைகளை வழங்க முடியும். கூடுதலாக, ஏழை மக்களுக்கு வலுவூட்டல் மற்றும் கூடுதல் பொருட்களை வழங்க கூட்டாண்மைகளை உருவாக்க முடியும்.


பாரம்பரிய மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு நிதி ஒதுக்கப்படலாம். 


மேம்பட்ட செறிவூட்டல் தொழில்நுட்பங்கள், உயிர்-செறிவூட்டப்பட்ட பயிர்கள், செறிவூட்டப்பட்ட பானங்கள், தாவர அடிப்படையிலான வைட்டமின் D துணைப்பொருள்கள், மேம்படுத்தப்பட்ட பாரம்பரிய மருந்துகள் மற்றும் குறைந்த விலை பரிசோதனை கருவிகளை உருவாக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கலாம்.


முகர்ஜி, சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) பேராசிரியராக உள்ளார்; சவுத்ரி ஆகாஷ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கன்னா ICRIER-ல் ஆராய்ச்சி உதவியாளர்.




Original article:

Share:

10 ஆண்டுகளில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao)" திட்டம் சாதித்தவைகளும் தவறவிட்டவைகளும் -ஹரிகிஷன் சர்மா

 "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao (BBBP))" திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்ன? பல ஆண்டுகளாக பிறப்பு பாலின விகிதங்களில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எவ்வாறு செயல்படுகின்றன? 


சரியாக பத்தாண்டிற்கு முன்பு, ஜனவரி 22, 2015 அன்று, குழந்தை பாலின விகிதத்தில் சரிவைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை (BBBP) தொடங்கினார்.


ஆரம்பத்தில் 100 மாவட்டங்களுக்கு திட்டமிடப்பட்டது. இது 2015-16 ஆண்டில் 61 கூடுதல் மாவட்டங்களுக்கும் பின்னர் நாட்டின் அனைத்து 640 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.


இத்திட்டத்தின் நோக்கங்கள் என்ன?


அதன் நோக்கங்களில் பாலின-சார்பு பாலினத் தேர்வைத் தடுப்பது மற்றும் பெண் குழந்தைகளின் உயிர்வாழ்வு, கல்வி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.


பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, பள்ளிகளில் அவர்களின் வருகை, பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் போன்ற பல இலக்குகளை அது நிர்ணயித்துள்ளது. இது விளம்பரப் பிரச்சாரங்கள், ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மூலம் கர்ப்பத்தை சட்டவிரோதமாகக் கண்டறிவதை நிறுத்துதல் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் செய்யப்பட வேண்டும். 


தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தை (ஆண் மற்றும் பெண் பிறப்பு விகிதம்) ஒவ்வொரு ஆண்டும் 2 புள்ளிகளால் மேம்படுத்துவதே முதல் மற்றும் முக்கிய இலக்காகும்.

மாவட்ட அளவிலான பிறப்பின் போது பாலின விகிதம் (Sex Ratio at Birth (SRB)) தரவு பொதுக் களத்தில் கிடைக்கவில்லை என்றாலும், 2023-24 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு, தேசிய SRB 1000 ஆண்களுக்கு (2014-15) 918 என்பதில் இருந்து 930 ஆக (2023-24, தற்காலிகமாக) மேம்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இந்தத் தரவு சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பிலிருந்து (Health Management Information System (HMIS)) வருகிறது. HMIS தரவுகள் பொது வெளியில் கிடைக்கவில்லை.

தனித்தனியாக, பெரிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய (10 மில்லியன் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட) மாதிரி பதிவு முறையின் (SRS) தரவு, 2014-16 மற்றும் 2018-20 ஆண்டுக்கு இடையில் அகில இந்திய அளவில் SRB 9 புள்ளிகளால் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தரவு கிடைக்கும். 2018-20ஆம் ஆண்டிற்கான SRS தரவு உள்ள 22 மாநிலங்களில், பிறக்கும் போது பாலின விகிதம் 13 மாநிலங்களில் அதிகரித்தது, ஒன்பது மாநிலங்களில் குறைந்துள்ளது மற்றும் ஒரு மாநிலத்தில் அப்படியே இருந்தது (மகாராஷ்டிரா) அதிகபட்ச அதிகரிப்பு 54 புள்ளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹரியானா (38 புள்ளிகள்), இமாச்சலப் பிரதேசம் (33 புள்ளிகள்) மற்றும் குஜராத் (29 புள்ளிகள்) பதிவு செய்யப்பட்டது.

பிறப்பின் போது பாலின விகிதம் (Sex Ratio at Birth (SRB)) வீழ்ச்சி கண்ட மாநிலங்களில், ஒடிசா தொடர்ந்து அதிகபட்சமாக 23 புள்ளிகள் சரிவை பதிவு செய்தது கர்நாடகா (19 புள்ளிகள்) மற்றும் பீகார் (13 புள்ளிகள்) பெற்றுள்ளன.

பிறக்கும் போது பாலின விகிதம்

மாநிலங்கள்

2014-16

2018-20

ஆந்திரப் பிரதேசம்

913

926

அசாம்

896

923

பீகார்

908

895

சத்தீஸ்கர்

963

958

டெல்லி

857

860

குஜராத்

848

877

ஹரியானா

832

870

ஹிமாச்சல பிரதேசம்

917

950

ஜம்மு காஷ்மீர்

906

921

ஜார்கண்ட்

918

914

கர்நாடகா

935

916

கேரளா

959

974

மத்திய பிரதேசம்

922

919

மகாராஷ்டிரா

876

876

ஒடிசா

948

925

பஞ்சாப்

893

897

ராஜஸ்தான்

857

911

தமிழ்நாடு

915

917

தெலுங்கானா

901

892

உத்தரகாண்ட்

850

844

உத்தரப்பிரதேசம்

882

905

மேற்கு வங்காளம்

937

936

இந்தியா

898

907

ஆதாரம்: மாதிரி பதிவு அமைப்பு அறிக்கை; மற்றும் இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள், 2023

2. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதத்தில் பாலின இடைவெளி குறைக்கப்பட்டது

இரண்டாவது இலக்கானது ஐந்து வயதிற்கு முன் குழந்தை இறப்புகளில் பாலின இடைவெளியைக் குறைப்பதாகும், இது 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு அளவிடப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில், BBBP தொடங்கப்படுவதற்கு சற்று முன்பு, தேசிய அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் சிறுமிகளுக்கு 49 ஆகவும், ஆண்களுக்கு 42 ஆகவும் இருந்தது. இது 7 புள்ளிகளின் பாலின வேறுபாடு ஆகும். ஆண்டுக்கு 1.5 புள்ளிகள் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  2020ஆம் ஆண்டில், இந்த வேறுபாடு 2 புள்ளிகளாக இருந்தது (பெண்கள் 33 மற்றும் சிறுவர்கள் 31). இருப்பினும், மாநிலங்களில் முன்னேற்றம் மாறுபடும்.

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் ஹிமாச்சல பிரதேசம், கேரளா, டெல்லி, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் எதிர்மறையாக உள்ளது. அதாவது ஆண்களைவிட பெண் குழந்தைகளின் விகிதம் குறைவாக உள்ளது.  இது கிட்டத்தட்ட மூன்று மாநிலங்களில் உள்ள அளவுகளுக்கு சமம். ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், பீகார், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இது தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் பெண் மற்றும் ஆண் இடையே உள்ள இடைவெளி

மாநிலங்கள்

2014

2020

ஆந்திரப் பிரதேசம்

2

1

அசாம்

7

5

பீகார்

9

5

சத்தீஸ்கர்

11

8

டெல்லி

5

-3

குஜராத்

3

-2

ஹரியானா

6

0

ஹிமாச்சல பிரதேசம்

2

-9

ஜம்மு & காஷ்மீர்

4

3

ஜார்கண்ட்

8

2

கர்நாடகா

3

1

கேரளா

3

-8

மத்திய பிரதேசம்

10

-1

மகாராஷ்டிரா

1

1

ஒடிசா

3

2

பஞ்சாப்

7

4

ராஜஸ்தான்

10

6

தமிழ்நாடு

-1

0

தெலுங்கானா

3

1

உத்தரகாண்ட்

7

1

உத்தரப்பிரதேசம்

11

1

மேற்கு வங்காளம்

4

0

இந்தியா

7

2

ஆதாரம்: அந்தந்த ஆண்டுகளுக்கான SRS அறிக்கைகளிலிருந்து கணக்கிடப்பட்டது.

3. நிறுவன பிறப்புகளில் அதிகரிப்பு

மூன்றாவது இலக்கானது நிறுவன விநியோகங்களை ஆண்டுக்கு குறைந்தது 1.5 சதவீதம் அதிகரிப்பதாகும். தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளின் தரவுகள், பல ஆண்டுகளாக நிறுவன பிரசவங்களின் விகிதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

BBBP தொடங்கப்பட்டபோது, ​​78.9 சதவீத பிறப்புகள் மருத்துவமனைகள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் போன்ற நிறுவனங்களில் நடந்தன (2015-16க்கான NFHS-4 தரவு). 2019-21 ஆண்டில், இந்த எண்ணிக்கை 9.7 சதவீத புள்ளிகள் அதிகரித்து 88.6 சதவீதமாக இருந்தது (NFHS-5). ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் நிறுவன விநியோகங்களில் அதிகரிப்பைக் கண்டன.

நிறுவன விநியோகங்கள் (%) 

மாநிலங்கள்

NFHS-4

(2015-16)

NFHS-5

(2019-21)

மாற்றம்

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

96.4

98.9

2.5

ஆந்திரப் பிரதேசம்

91.5

96.5

5

அருணாச்சல பிரதேசம்

52.2

79.2

27

அசாம்

70.6

84.1

13.5

பீகார்

63.8

76.2

12.4

சண்டிகர்

91.6

96.9

5.3

சத்தீஸ்கர்

70.2

85.7

15.5

தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ

#

96.5


டெல்லி

84.4

91.8

7.4

கோவா

96.9

99.7

2.8

குஜராத்

88.5

94.3

5.8

ஹரியானா

80.4

94.9

14.5

ஹிமாச்சல பிரதேசம்

76.4

88.2

11.8

ஜம்மு & காஷ்மீர்

#

92.4


ஜார்கண்ட்

61.9

75.8

13.9

கர்நாடகா

94

97

3

கேரளா

99.8

99.8

0

லடாக்

#

95.1


லட்சத்தீவு

99.3

99.6

0.3

மத்திய பிரதேசம்

80.8

90.7

9.9

மகாராஷ்டிரா

90.3

94.7

4.4

மணிப்பூர்

69.1

79.9

10.8

மேகாலயா

51.4

58.1

6.7

மிசோரம்

79.7

85.8

6.1

நாகாலாந்து

32.8

45.7

12.9

ஒடிசா

85.3

92.2

6.9

புதுச்சேரி

99.9

99.6

-0.3

பஞ்சாப்

90.5

94.3

3.8

ராஜஸ்தான்

84

94.9

10.9

சிக்கிம்

94.7

94.7

0

தமிழ்நாடு

98.9

99.6

0.7

தெலுங்கானா

91.5

97

5.5

திரிபுரா

79.9

89.2

9.3

உத்தரகாண்ட்

68.6

83.2

14.6

உத்தரப்பிரதேசம்

67.8

83.4

15.6

மேற்கு வங்காளம்

75.2

91.7

16.5

இந்தியா

78.9

88.6

9.7

NFHS தரவு

4. பிறப்புக்கு முந்தைய சோதனைகள் அதிகரித்து வருகின்றன

BBBP ஆனது, 1வது மூன்று மாத பிறப்புக்கு முந்தைய சோதனையில் (ANC) வருடத்திற்கு குறைந்தபட்சம் 1% அதிகரிப்பைக் கணித்துள்ளது. தாய்மார்களின் இறப்பு நிகழ்வுகளைக் குறைக்க இது அவசியம். BBBP தொடங்கப்பட்ட 2015-16 ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் (NFHS-4), 58.6 சதவீத தாய்மார்கள் மட்டுமே பிரசவத்திற்கு முந்தைய சோதனை செய்திருந்தனர்.  இருப்பினும், அதன் பிறகு, இந்த எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரித்துள்ளது.

துணை தேசிய அளவில், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்களைத் தவிர, இது அதிகரித்துள்ளது. NFHS-5-ல் உள்ள தரவுகளின்படி, 2019-21 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 70 சதவீத தாய்மார்கள் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனை செய்தனர். கர்ப்ப பராமரிப்புக்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, ANC-க்காக கர்ப்பிணிப் பெண்ணின் முதல் வருகை அல்லது பதிவு கர்ப்பம் சந்தேகிக்கப்படும் உடனேயே நடைபெற வேண்டும்.




முதல் மூன்று மாதங்களில் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனை செய்த தாய்மார்கள் (%)

மாநிலங்கள்

NFHS-4

(2015-16)

NFHS-5

(2019-21)

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

68.4

77.1

ஆந்திரப் பிரதேசம்

82.3

81.7

அருணாச்சல பிரதேசம்

36.9

53.1

அசாம்

55.1

63.8

பீகார்

34.6

52.9

சண்டிகர்

67.4

82.3

சத்தீஸ்கர்

70.8

65.7

தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ

#

77.7

டெல்லி

63

76.4

கோவா

84.4

70.3

குஜராத்

73.8

79.3

ஹரியானா

63.2

85.2

ஹிமாச்சல பிரதேசம்

70.5

72.4

ஜம்மு & காஷ்மீர்

#

86.6

ஜார்கண்ட்

52

68

கர்நாடகா

65.9

71

கேரளா

95.1

93.6

லடாக்

#

85.7

லட்சத்தீவு

90.6

99.6

மத்திய பிரதேசம்

53

75.4

மகாராஷ்டிரா

67.6

70.9

மணிப்பூர்

77

79.9

மேகாலயா

53.3

53.9

மிசோரம்

65.6

72.7

நாகாலாந்து

24.7

49.5

ஒடிசா

64

76.9

புதுச்சேரி

80.6

82.4

பஞ்சாப்

75.6

68.5

ராஜஸ்தான்

63

76.3

சிக்கிம்

76.2

63.7

தமிழ்நாடு

64

77.4

தெலுங்கானா

83.1

88.5

திரிபுரா

66.4

63.2

உத்தரகாண்ட்

53.5

68.8

உத்தரப்பிரதேசம்

45.9

62.5

மேற்கு வங்காளம்

54.9

72.6

இந்தியா

58.6

70

ஆதாரம்: இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள், 2023

5. இடைநிலைக் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்

2018-19ஆம் ஆண்டிற்குள் இடைநிலைக் கல்வியில் பெண்களின் சேர்க்கையை 82%ஆக உயர்த்துவது BBBP திட்டத்தின் இலக்குகளில் ஒன்றாகும். 2014-15 ஆண்டில் இந்த எண்ணிக்கை 75.5 சதவீதமாக இருந்தது. 2018-19 ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 76.9 சதவீதமாக இருந்ததால், இந்தத் திட்டத்தால் இந்த இலக்கை அடைய முடியவில்லை.


இடைநிலை (IX-X) கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம்  

ஆண்டுகள்

மொத்த பதிவு விகிதம் (%)

2013-14

73.5

2014-15

75.7

2015-16

77

2016-17

76.2

2017-18

76.2

2018-19

76.9

2019-20

77.8

2020-21

79.5

2021-22

79.4






Original article:

Share: