டொனால்ட் டிரம்ப் ஏன் இந்தியர்களை நாடு கடத்த விரும்புகிறார்? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான சந்திப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்கள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இது, பிப்ரவரி 11-12 தேதிகளில் பாரிஸில் நடைபெறும் AI உச்சிமாநாட்டின் (AI summit) போது இந்த சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


2. ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம், "நம்பிக்கையின் அளவுகள் மிக அதிகமாக உள்ளன" (levels of trust are very high) என்றும், "நம்பிக்கை என்பது மிகவும் முறைப்படுத்தப்பட்ட உணர்வு" (the trust is a more systemic sentiment) என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


4. ரூபியோ (Rubio) "பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும், முறைகேடான புலம்பெயர்வு (irregular migration) தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் நிர்வாகத்தின் விருப்பத்தை வலியுறுத்தினார்" என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் அறிக்கையில் இதைப் பகிர்ந்து கொண்டார்.


5. மக்களின் புலம்பெயர்வு, மேலும், இந்த சிக்கலின் காரணமாக அரசாங்கத்திற்கு தெளிவான நிலைப்பாடு உள்ளது என்று ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இந்த நிலைப்பாடு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அரசாங்கம் மக்களின் சட்டப்பூர்வ நகர்வை வலுவாக ஆதரிக்கிறது. அவர்கள் உலகளாவிய பணியிடம் என்ற கருத்தை நம்புகிறார்கள்.


6. பொருளாதார ஒத்துழைப்பு குறித்து, நாடுகளுக்கு பல வாய்ப்புகள் உள்ளன என்றும், முன்னேற்றமானது தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருக்கு கிடைத்த செய்தி என்னவென்றால், இந்தியா ஒரு கூட்டணி நாடாக மதிக்கப்படுகிறது. இதனால், ஒன்றாக வேலை செய்ய விரும்பும் குறிப்பிட்ட பகுதிகள் உள்ளன என்பனவாகும்.


7. டிரம்ப் 2.0 நிர்வாகத்தில் இந்தியாவுக்கும் (டெல்லி) அமெரிக்காவுக்கும் (வாஷிங்டன் டிசி) இடையிலான உரையாடலில் சட்டவிரோத புலம்பெயர்வு (Illegal immigration) மற்றும் கட்டணங்கள் (tariffs) என்ற இரட்டைக் கருப்பொருள்கள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


1. டிரம்ப் நிர்வாகம், வெளியேற்றுதலுக்கு (deportations) நடவடிக்கை எடுத்தால், முதலில் பாதிக்கப்படப்போவது நவம்பர் 2024 நிலவரப்படி 20,407 "ஆவணம் இல்லாத" (undocumented) இந்தியர்கள் ஆவர். இந்த நபர்கள், "இறுதிக்கட்ட நீக்க ஆணைகளை" (final removal orders) எதிர்கொள்கின்றனர் அல்லது தற்போது அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (Immigration and Customs Enforcement (ICE)) தடுப்பு மையங்களில் உள்ளனர். இவர்களில், 17,940 "ஆவணங்களற்ற" (paperless) இந்தியர்கள் தடுப்புக்காவலில் இல்லை. அவர்கள் "இறுதிக்கட்ட நீக்க ஆணைகளின்" கீழ் உள்ளனர். மேலும் 2,467 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். அவர்கள் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (ICE) தடுப்பு மையங்களின் அமலாக்க மற்றும் நீக்க நடவடிக்கைகளின் (Enforcement and Removal Operations (ERO)) கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.


2. குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்தில் (Immigration and Customs Enforcement (ICE)) உள்ள இந்தியர்கள் தேசிய அளவில் நான்காவது பெரிய குழுவாக ஆக்குகிறது. நவம்பர் 2024 நிலவரப்படி, அனைத்து நாடுகளிலிருந்தும் குறிப்பிடப்பட்ட மொத்த எண்ணிக்கையானது 37,000-க்கும் மேற்பட்ட குடிமக்கள் அல்லாதவர்கள் (non-citizens) தடுத்து வைக்கப்பட்டனர்.


3. தற்செயலாக, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (ICE) இந்தியாவை ஈராக், தெற்கு சூடான் மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினாவுடன் பட்டியலிட்டுள்ளது. இந்த 15 நாடுகள் "ஒத்துழைக்காத" (uncooperative) நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிலிருந்து தங்கள் "ஆவணங்களற்ற' (undocumented) குடிமக்களை திரும்ப ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.


4. "ஒத்துழைக்காதது" (uncooperative) என வகைப்படுத்துதல் : தூதரக நேர்காணல்களை (consular interviews) நடத்த மறுப்பதன் மூலம், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்தின் (Immigration and Customs Enforcement (ICE)) "நீக்க" (removal) முயற்சிகளுக்கு "தடையாக" (hindering) உள்ளது. இதனால், பட்டயம் நீக்கும் பணிகளை (charter removal missions) ஏற்க மறுப்பது, அகற்றும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துவது இதில் அடங்கும்.


5. ICE-ன் 2024 ஆண்டு அறிக்கையின்படி, வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, இது, 2021-ம் ஆண்டில் 292ஆக இருந்து 2024-ம் ஆண்டில் 1,529ஆக உயர்ந்துள்ளது.


6. எனினும், வெளியேற்றம் தொடர்பான தரவு பெரும்பாலும் தளர்வாக கணக்கிடப்படுகிறது. கடந்த அக்டோபரில், ஒரு பட்டய விமானமானது (charter flight) குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான 'ஆவணமற்ற' (undocumented)  இந்தியரான முதியோர்களை பஞ்சாபிற்கு அழைத்து வந்தது. இந்தத் தகவலைப் பகிர்ந்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவிச் செயலர், அக்டோபர் 2023 மற்றும் செப்டம்பர் 2024-க்கு இடையில் 1,100 இந்தியர்கள் பட்டய மற்றும் வணிக விமானங்கள் (charter and commercial flights) மூலம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.


7. டிசம்பர் 6 அன்று, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் குறிப்பிட்டதாவது, "அமெரிக்க அரசின் தரவுகளின்படி, நவம்பர் 2023 முதல் அக்டோபர் 2024 வரை மொத்தம் 519 இந்தியர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்" என்று கூறினார்.


8. ICE-ன் நீக்கப் பதிவுகளில் தன்னார்வ ரீதியில் திரும்பப் பெறுதல், புறப்பாடு (departures) மற்றும் திரும்பப் பெறுதல்களைச் (withdrawals) சேர்ப்பதன் மூலம் முரண்பாடுகள் வரக்கூடும். இந்த சந்தர்ப்பங்களில், குடிமகன் அல்லாத ஒருவர் புலம்பெயர்வு தொடர்பான விளைவுகளை எதிர்கொள்ளாமல் அமெரிக்காவை விட்டு வெளியேறவோ அல்லது சேர்க்கைக்கான விண்ணப்பத்தை திரும்பப் பெறவோ அனுமதிக்கப்படுகிறார். இவை இறுதிக்கட்ட நீக்க ஆணைகளின் (final removal orders) கீழ் நடக்கும் திருப்பி அனுப்புதல்களுடன் இணைக்கப்படுகின்றன.


9. அமெரிக்காவில் உள்ள குடியுரிமை பெறாதவர்கள் குடியேற்ற மேல்முறையீட்டு வாரியத்திடம் (Board of Immigration Appeals (BIA)) மேல்முறையீடு செய்யலாம். குடியேற்றம் தொடர்பாக, நீதிபதி நீக்க ஆணையை பிறப்பித்தால் இந்த மேல்முறையீடு செய்யப்படும். நீதிபதியின் முடிவை குடியேற்ற மேல்முறையீட்டு வாரியம் (BIA) ஒப்புக்கொண்டால், அந்த உத்தரவு இறுதியானது.




Original article:

Share: