சரக்கு மற்றும் சேவை வரி 2.0-ன் நோக்கமும் விளைவுகளும் -மோகன் ஆர் லாவி

 சரக்கு வரி விகிதங்களில் பெரிய குறைப்பு வரிவிதிப்பு குறித்த நம்பிக்கைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


அரசு, ஜிஎஸ்டி விகிதங்களை சீர்திருத்த விரைவாக நகர்ந்து வருகிறது. இதை GST 2.0 அல்லது ஒரு பெரிய சீர்திருத்தம் என்று அழைக்கிறது. ஆகஸ்ட் 15 அன்று தனது உரையில் பிரதமர் இதைக் குறிப்பிட்டார். மேலும், செப்டம்பர் 3 அன்று நடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் புதிய விகிதங்களை அங்கீகரித்தது. இந்த புதிய விகிதங்களில் பெரும்பாலானவை செப்டம்பர் 22 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனுமதி மிக விரைவாக இருந்ததால் கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டமே தேவையில்லை. சுமார் 440 பொருட்களுக்கு வரி விகிதங்கள் மாறிவிட்டன. சுமார் 70 சதவீத மாற்றங்கள் இரண்டு குழுக்களாக உள்ளன: 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் (பொருட்களின் 58 சதவீதம்) மற்றும் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் (பொருட்களின் 12 சதவீதம்). சுமார் 9 சதவீத மாற்றங்கள் 12 சதவீதத்திலிருந்து 0 சதவீதமாகவும், 7 சதவீதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் உள்ளன.


12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால் அதிகம் பயனடைந்த தொழில்கள் பின்வருமாறு: துணி நூல் தொழில், கைவினைப் பொருட்கள் மற்றும் "எளியோரின் பொருட்கள்" என்று சுவாரஸ்யமாக பெயரிடப்பட்ட ஒரு பிரிவு. பற்பொடி, பருத்தி கைப்பைகள் மற்றும் மேசைப் பாத்திரங்கள் ஆகியவை எளியோர் பொருட்களுக்கு சில உதாரணங்கள்.


சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான குறிப்பிட்ட வேலைப் பணி சேவைகள் 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்படும். அதே நேரத்தில் பிற வேலைப் பணி சேவைகள் 18% வரி விதிக்கப்படும். வேலை ஒப்பந்த சேவைகளுக்கு 12% வரி விதிக்கப்படும். 


பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிற்கும், குறிப்பிட்ட கட்டுப்பாடு இல்லாவிட்டால், உள்ளீட்டு வரிக் கடன் (input tax credit (ITC)) பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாளைக்கு ₹7,500-க்கும் குறைவான விகிதங்களைக் கொண்ட ஹோட்டல் தங்குமிடத்திற்கு ITC உடன் முந்தைய 12% க்குப் பதிலாக, இப்போது ITC இல்லாமல் 5% வரி விதிக்கப்படும்.

கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது


நிதி அமைச்சகம், HSN வகைப்பாட்டின் படி அத்தியாய வாரியாக வரிசைப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வரி விகிதங்களை வெளியிட்டுள்ளது. இது 75 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளது. பெரும்பாலான பதில்கள் திருத்தப்பட்ட விகிதங்களை விளக்கி நியாயப்படுத்துகின்றன. அதே நேரத்தில் சில சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றன.


எடுத்துக்காட்டாக, கேள்வி 9-ல், புதிய அட்டவணையின் கீழ் ஒரு பொருள் அல்லது சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், முன்பு வரி விதிக்கப்பட்டிருந்தால், திரட்டப்பட்ட  ITCயை செப்டம்பர் 21 வரை செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 


இது பயன்படுத்தப்படாவிட்டால், மீதமுள்ள  ITCயை மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம். ஒரு சாத்தியமான வழக்கு சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. காப்பீட்டு நிறுவனங்கள் ITCயை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவை பிரீமியங்களை அதிகரிக்கக்கூடும். இந்த விஷயத்தில் மேலும் தெளிவு இன்னும் காத்திருக்கிறது.

மனிதனால் உருவாக்கப்பட்ட நெசவு மற்றும் உரத் துறைகளில் தலைகீழ் வரி கட்டமைப்பை (inverted duty structure) நிர்ணயித்துள்ளதாக ஜிஎஸ்டி குழுமம் தெரிவித்துள்ளது. ஆனால், புதிய விகிதங்கள் தொடங்குவதற்கு முன்பு செய்யப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதியாளர்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது. இதன் பொருள் இறக்குமதியாளர்கள் அந்த செலவை அவர்களே ஏற்க வேண்டும்.


ஐபிஎல் போட்டிகள்


இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League (IPL)) வரும் ஆண்டுகளில் அதன் பிரபலத்தை ஓரளவு இழக்க நேரிடும். சமீபத்திய ஆன்லைன் கேமிங் தடை, போட்டியின் முக்கிய ஸ்பான்சர்களில் சிலரைப் பறித்துவிட்டது. மேலும், ரசிகர்கள் இப்போது ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் பந்தயம், கேசினோக்கள், சூதாட்டம், குதிரை பந்தயம், லாட்டரி மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றுக்கான வரி விகிதத்திற்கு சமம் ஆகும் .




சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (GSTAT) செப்டம்பர் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் மேல்முறையீடுகளை ஏற்கத் தொடங்கும் என்றும், டிசம்பர் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணைகளைத் தொடங்கும் என்றும் GST கவுன்சில் அறிவித்துள்ளது. நிலுவையில் உள்ள பழைய மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. GSTAT இன் முதன்மை அமர்வு, முன்கூட்டியே தீர்ப்பளிப்பதற்கான தேசிய மேல்முறையீட்டு ஆணையமாகவும் செயல்படும்.


பெரும்பாலான தற்போதைய உத்தரவுகள் வருவாய்க்கு சாதகமாக இருப்பதால், ஜூன் 2026 வரை GSTAT அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பெறும். மேல்முறையீடுகளை விரைவாகக் கையாள GSTAT நன்கு தயாராக இருக்கும் என்று வரி செலுத்துவோர் நம்புகிறார்கள்.


இந்த சீர்திருத்தங்கள் ஒரு சிறந்த GST அமைப்புக்கு வழிவகுக்கும் என்பது இன்னும் நிச்சயமற்றது. உள்ளீட்டு வரி வரவுகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் வரை மற்றும் பெரும்பாலான அதிகாரிகள் முக்கியமாக வருவாய் வசூலில் கவனம் செலுத்தும் வரை, அமைப்பு சரியானதாகக் கருத முடியாது. நாம் அந்த நிலையை அடைவோமா என்பது ஒரு திறந்த கேள்வியாகவே உள்ளது.


எழுத்தாளர் ஒரு பட்டயக் கணக்காளர் ஆவார்.



Original article:

Share:

இரு தரப்புகளின் சிறப்பு : இந்தியா அமெரிக்காவுடன் உறவை மீட்டெடுக்க சரியான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். -மைக்கேல் குகல்மேன்

 இந்தியாவின் இராஜதந்திர சுதந்திரம் பல கொள்கை விருப்பங்களைத் திறந்து வைத்திருக்கவும் நெகிழ்வாக இருக்கவும் அனுமதிக்கிறது. இது போன்ற கடிமான நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும்.


உலக அரசியலில் இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று முக்கிய சக்திகளுடன் உறவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அது தீர்மானிக்க வேண்டும். சீனா சிறந்த உறவுகளை நோக்கி நகர்கிறது. ரஷ்யா நட்பு நாடு, ஆனால் அது கடுமையான அமெரிக்க அழுத்தத்தின் கீழ் உள்ளது. மேலும், அமெரிக்காவே கடுமையான உள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.


சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவது புத்திசாலித்தனமானது. கடந்த அக்டோபரில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு எல்லை கண்காணிப்புகள் மீட்டெடுக்கப்பட்டாலும், எல்லைப் பிரச்சினை இன்னும் பதட்டமாகவே உள்ளது. 


எதிர்கால மோதல்கள் சாத்தியமாகும். மேலும், இந்தியாவின் சுற்றுப்புறத்திலும் கடல்களிலும் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. சீனாவுடனான பதட்டங்களைக் குறைப்பது இந்தியா இந்த சவால்களை சிறப்பாகக் கையாள உதவும். இது ஒரு பாதுகாப்பான தற்காப்புத் திட்டமாகும். ஏனெனில், சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பதில் அமெரிக்கா எந்த அளவுக்கு உறுதியுடன் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சீனாவுடனான உறவுகளைத் தளர்த்துவதில் அமெரிக்க அதிபரும் ஆர்வம் காட்டியுள்ளார்.


சீனாவுடன் நெருக்கமாக செயல்படுவதற்கு இந்தியாவுக்கு பொருளாதார காரணங்களும் உள்ளன. 50 சதவீத அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளும் இந்தியா, சீன சந்தைகளை அணுக விரும்பும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும். 


ஆனால், சீனா சந்தை அணுகலைவிட அதிகமாக வழங்குகிறது. உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் அதிக சீன முதலீடுகள் இந்தியாவின் வளர்ச்சியை ஆதரிக்கக்கூடும். இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அதிக சீன வெளிநாட்டு முதலீட்டை பரிந்துரைத்துள்ளார். குறைக்கப்பட்ட பதட்டங்கள், லடாக் மோதலுக்குப் பிறகு நடைமுறையில் உள்ள புதிய சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்துவதை அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் எளிதாக்கும்.


இந்தியா தனது நெருங்கிய நண்பர்களைக் கைவிடாது. ரஷ்யா அதில் மிக நெருக்கமான ஒன்றாகும். ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்வது இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்காகவே மட்டுமே உள்ளது. 


அது ரஷ்யாவின் போரை ஆதரிப்பதற்காக அல்ல. இந்தியா பலமுறை அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவிலிருந்து விலகிச் செல்வது இந்தியாவின் அரசியல் நலன்களுக்கும் வெளியுறவுக் கொள்கைக் கொள்கைகளுக்கும் எதிரானது.


அமெரிக்காவுடனான உறவுகள் மிகவும் சிக்கலானவை. உறவுகள் சரிவதைத் தடுக்க இந்தியா விரைவாகச் செயல்பட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இது சரியான தருணமாக இருக்காது. கூட்டாண்மை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. 


மேலும், சிக்கல்களும் உள்ளன. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கினால், அரசியல் காரணங்களுக்காக இந்தியா எளிதில் கொடுக்க முடியாத கூடுதல் சலுகைகளை அமெரிக்கா கோரும். புதிய அமெரிக்க குடியேற்ற விதிகள் மற்றும் H1-B அயல்நாட்டு நுழைவு அனுமதி (VISA) திட்டத்தில் சாத்தியமான மாற்றங்கள் மக்களிடையேயான தொடர்புகளை சேதப்படுத்தக்கூடும். 


கூட்டாண்மையின் இராஜதந்திர மதிப்பு கூட கேள்விக்குறியாகி வருகிறது. ஏனெனில், இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவுடனான பதட்டங்களைக் குறைக்க விரும்பலாம். ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட மோடி-ட்ரம்ப் நட்பும் பலவீனமடைந்து வருகிறது.


விரைவான தீர்வு இதற்கு இல்லை. மேலும், இந்த மாதம் UNGA-வில் மோடி-ட்ரம்ப் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை. மோடி கலந்து கொண்டாலும்கூட, குவாட் உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கலாம். 


ஆனால், அவர் வரமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசி அழைப்புகள் உதவக்கூடும். ஆனால், கடந்தகால முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் கடந்த ஜூன் மாதத்தில் அவர்களின் கடைசி அழைப்பு மோசமாக இருந்தது.


சிலர் இந்தியா அமெரிக்காவை நம்புவதை நிறுத்திவிட்டு முன்னேற வேண்டும் என்று வாதிடுகின்றனர். ஆனால், அது ஒரு தவறாகும். தற்போதைய முட்டுக்கட்டை மற்றும் நல்லெண்ண இழப்பு இருந்தபோதிலும், உறவுகளை முறித்துக் கொள்வது பரஸ்பர நம்பிக்கையை பெரிதும் நம்பியுள்ள முக்கிய பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர பிரச்சினைகளில் ஒத்துழைப்பை பாதிக்கலாம்.


அமெரிக்காவுடனான தனது உறவுகளை டெல்லி இழக்க முடியாது. அதன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் மூன்றாவது பெரிய முதலீட்டாளராகவும் இருக்கும் அமெரிக்காவை இந்தியா எளிதில் மாற்ற முடியாது. அதே நேரத்தில், சீனாவுடனான இந்தியாவின் வரையறுக்கப்பட்ட புரிதல் அதன் வரம்புகளைக் கொண்டுள்ளது. ஏனெனில், LAC தொடர்ந்து அவநம்பிக்கையை உருவாக்குகிறது. 


இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகமாகி வருவதால், பாகிஸ்தானுடனான சீனாவின் வலுவான கூட்டணி மேலும் கவலையை சேர்க்கிறது. எந்தவொரு எதிர்கால மோதலிலும், பாகிஸ்தான் மீண்டும் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். 


டிரம்பின் எதிர்ப்பு இருந்தபோதிலும், அமெரிக்கா சீனாவுடனான உறவுகளை முழுமையாக மீட்டமைக்கத் தயாராக இல்லை. இது வாஷிங்டனுடனான இந்தியாவின் கூட்டாண்மையை சீன எல்லை நகர்வுகளைத் தடுக்க உளவுத்துறை பகிர்வு முதல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டைக் குறைக்கக்கூடிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு வரை முக்கியமானதாக ஆக்குகிறது. 


இந்தியா-அமெரிக்க உறவுகளை சரிசெய்ய சிறந்த நேரம் இன்னும் தொலைவில் இருக்கலாம். அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.


 மேலும், ஒரு சிறிய வர்த்தக ஒப்பந்தம் போன்ற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள்கூட நடக்கவில்லை. ரஷ்யாவின் போரும் விரைவில் முடிவடையும் சாத்தியமில்லை.


இருப்பினும், இந்தியாவின் இராஜதந்திர சுயாட்சி கொள்கை அத்தகைய காலங்களில் அதற்கு நெகிழ்வுத்தன்மையையும் தேர்வுகளையும் வழங்குகிறது. இதற்கிடையில், அமெரிக்காவுடனான உறவு முழுமையாக உடைக்கப்படவில்லை. இரு நாடுகளும் சமீபத்தில் ஒரு கூட்டு செயற்கைக்கோளை ஏவினர், அமெரிக்க அதிகாரிகள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கைது செய்தனர். மேலும், இரு தரப்பினரும் கடந்த மாதம் 2+2 பேச்சுவார்த்தை நடத்தினர்.


நாடுகளுக்கு நிரந்தர நண்பர்கள் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன என்று லார்ட் பால்மர்ஸ்டன் ஒருமுறை கூறினார். இருப்பினும், இழந்த நண்பர்கள் மீண்டும் நண்பர்களாக முடியும்.


வரலாறு இதை தெளிவாகக் காட்டுகிறது. 1950-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1960-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும், அமெரிக்க-இந்திய உறவுகள் வலுவாக இருந்தன. ஏனெனில், இருவரும் சீனாவை எதிர்க்க விரும்பினர். ஆனால், 1971-ஆம் ஆண்டில் எல்லாம் மாறியது. 


இந்த முறை, அதற்கு அதிக நேரம் ஆகாது. இன்று, அமெரிக்க-இந்திய உறவுகள் தற்போதைய கூட்டாண்மையின் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், 1970-ஆம் ஆண்டு மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் இருந்ததைவிட இந்த உறவு இன்னும் மிகவும் வலுவாக உள்ளது.


தற்போது, ​​நெருக்கடி கடந்து செல்லும் வரை இந்தியா காத்திருக்கவும், பின்னர் சரியான நேரத்தில் அமெரிக்காவுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பவும் முடியும். இதற்கிடையில், சீனாவுடனான பதட்டங்களைத் தணிக்கவும், ரஷ்யாவுடனான அதன் உறவுகளைப் பேணவும் இந்தியா செயல்பட்டு வருகிறது. அமைதியாக இருப்பது, தொடர்ந்து முன்னேறுவது மற்றும் நீண்டகாலத்திற்கு சிந்திப்பது இதில் முக்கியமானதாக உள்ளது.


எழுத்தாளர் வாஷிங்டன் டிசி-யை தளமாகக் கொண்ட தெற்காசிய ஆய்வாளர் மற்றும் Foreign Policy  இதழின் கட்டுரையாளர் ஆவார்.



Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி 2.0 என்பது ஒரு சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் -அதிதி நயார்

 விலை நிர்ணயம் நுகர்வோர் தேவையையும் உற்பத்தியாளர் உணர்வையும் உயர்த்தும்.


இந்தியாவின் வரி முறையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் 2025ஆம் ஆண்டு வரி அடுக்குகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. புதிய முறையில், 12% அடுக்கு 5% அடுக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. 


மேலும், 28% அடுக்கு 18% அடுக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. சில பொருட்கள் இப்போது 0% அல்லது 40% வரி விதிக்கப்படும். 40% விகிதம் 28% GST விகிதத்தின் மேல் கூடுதல் வரி சேர்க்கும் முந்தைய முறையை மாற்றுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றம் சராசரி வரி விகிதத்தை 12% -லிருந்து 5% ஆகக் குறைக்கிறது.


விகிதங்களைக் குறைப்பதை நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் இருவரும் வரவேற்பார்கள். முதன்முதலில் இந்த மாற்றம் தீபாவளிக்கு என்று அறிவிக்கப்பட்டபோது, ​​கொள்முதல் தாமதங்கள் மற்றும் பழைய சரக்கு மீதான வரி எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து கவலைகள் இருந்தன. ஆனால், செயல்படுத்தல் தேதி செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு முன்னதாக, பண்டிகை காலத்திற்கு சற்று முன்பு மாற்றப்பட்டதால், இந்தக் கவலைகள் பல தளர்த்தப்பட்டுள்ளன. 


செப்டம்பர் மாதத்தின் கடைசி எட்டு நாட்களில் கூடுதல் விற்பனை, இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாமதமான கொள்முதல்களின் எதிர்மறையான விளைவைப் பற்றிய கவலைகளையும் குறைக்கும். உள்ளூர் நுகர்வு அதிகரிப்பு மற்றும் நேர்மறையான உணர்வு, அமெரிக்க வரிகள் மற்றும் ஏற்றுமதிகள் மீதான அபராதங்களால் ஏற்படும் சிக்கல்களை சமநிலைப்படுத்த உதவும். இருப்பினும், சில துறைகளில் வேலை இழப்புகள் பாதிக்கப்பட்ட வீடுகளிடையே தேவையைக் குறைக்கலாம்.


மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவானது ஒன்றிய ஜிஎஸ்டி (Central GST (CGST)). ஆனால், ஒரு மாநிலத்திற்குள் நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் மாநில ஜிஎஸ்டி (State GST (SGST)), ஒரு மாநிலத்தின் வரி வருவாயில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக வழங்குகிறது.  இது SGST எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது.


CGST என்பது பகிரக்கூடிய வரிகளின் ஒரு பகுதியாகும். மேலும், அதில் சுமார் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, ஒன்றியம் CGST-யை குறைவாக வசூலித்தால், மத்திய வரிகளிலிருந்து அவற்றின் பங்கு குறைவாக இருப்பதால், மாநிலங்களும் இழக்கின்றன.


2025-26 பட்ஜெட் மதிப்பீடுகளில், 28 மாநிலங்களின் ஒருங்கிணைந்த SGST வசூல் முந்தைய ஆண்டைவிட 22% அதிகரித்து ரூ.10.8 டிரில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், SGST வசூல் 5.8 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. 


உண்மையான SGST வருவாய் புதிய GST விகிதங்கள் போன்ற உள்நாட்டு காரணிகளையும், அமெரிக்க கட்டணங்கள் மற்றும் புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளையும் சார்ந்துள்ளது.


மத்திய பட்ஜெட்டில், அனைத்து மாநிலங்களுக்கும் வரி பகிர்வாக ரூ.14.2 டிரில்லியன் என இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 2025ஆம் ஆண்டுக்குள், ரூ.5.3 டிரில்லியன் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டுக்கான மீதமுள்ள பரிமாற்றங்கள், வரி விகிதம் மாற்றங்களுக்குப் பிறகு CGST வசூல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும்.


2023-24-ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி தரவுகளின் அடிப்படையில், இந்த பகுத்தறிவு நடவடிக்கையால் வருவாய் ரூ.48,000 கோடி குறையும் என்று வருவாய் செயலாளர் மதிப்பிட்டுள்ளார். இந்தத் தொகை ஆண்டின் இரண்டாம் பாதியில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முழு ஆண்டையும் கணக்கிட்டால், மொத்த வருவாய் இழப்பு சுமார் ரூ.96,000 கோடியாக இருக்கும். இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி மாற்றங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் இழப்பைப் போன்றது.


இருப்பினும், அதிக நுகர்வு இந்த இழந்த வருவாயில் சிலவற்றை மீட்டெடுக்க உதவும். முதல் சுற்று வருவாய் இழப்பில், மாநிலங்கள் சுமார் ரூ.67,700 கோடியைச் சுமக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மையத்தின் நிகர இழப்பு சுமார் ரூ.28,300 கோடியாக இருக்கும்.


வருவாய் இழப்பின் பங்கு, மாநிலங்களுக்கு இடையே வேறுபடும், இது அவர்களின் வருவாயில் எவ்வளவு SGST மற்றும் மத்திய வரி பகிர்விலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து இருக்கும். ஏற்கனவே வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மாநிலங்கள் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் மற்ற வருவாயை உயர்த்துவதன் மூலமோ அல்லது தங்கள் செலவினங்களைக் குறைப்பதன் மூலமோ இதைச் செய்யலாம்.


ஜிஎஸ்டியை சீராக்குவது ஒரு நல்ல மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது நுகர்வோர் தேவையை அதிகரிக்கும் மற்றும் உற்பத்தியாளர் நம்பிக்கையை மேம்படுத்தும்.  இது அமெரிக்க வரிகள் மற்றும் அபராதங்களின் சில எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும். 

உள்நாட்டு நுகர்வை மையமாகக் கொண்ட துறைகளில் தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்யலாம். ஆனால், ஏற்றுமதியாளர்கள் இன்னும் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்கலாம். அரசாங்கம் வருவாய் இழப்பை பிற வருமான ஆதாரங்கள் மூலமாகவோ அல்லது செலவுகளைக் குறைப்பதன் மூலமாகவோ சமப்படுத்த வேண்டும். நிதி ஊக்கத்தின் சரியான அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


எழுத்தாளர் தலைமைப் பொருளாதார நிபுணர், ஆராய்ச்சி மற்றும் வெளிநடவடிக்கைத் தலைவர், ICRA.



Original article:

Share:

தேசிய அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பெருக்கம் (BBNJ) என்றும் அழைக்கப்படும், உயர் கடல் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


புதிய ஒப்பந்தத்தின் விதிகளின்படி புதிய சட்டத்தின் வரையறைகளைத் தயாரிப்பதற்காக, நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் வழக்கறிஞர்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் உபாத்யாய் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக் குழுவை (12-member drafting committee) பூமி அறிவியல் அமைச்சகம் அமைத்துள்ளது.


சர்வதேச நீர்நிலைகளில் செயல்பாடுகளைக் கையாள்வதால், தேசிய அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பெருக்கம் (BBNJ) என்றும் அழைக்கப்படும் உயர் கடல் ஒப்பந்தம், மாசுபாடு மற்றும் அதிகப்படியான வள பிரித்தெடுப்பை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அதே நேரத்தில், பல்லுயிர் மற்றும் பிற கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டிற்கான முயற்சிகளை ஊக்குவிக்கிறது.


புதிய ஒப்பந்தத்தின் விளைவுகளில் ஒன்று, தேசிய பூங்காக்கள் அல்லது வனவிலங்கு இருப்புகளைப் போலவே, உயர் கடல்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை வரையறுப்பதாகும். உயர் கடல்கள் என்பது ஒரு நாட்டின் பிராந்திய நீர்நிலைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு (Exclusive Economic Zones (EEZ)) அப்பால் உள்ள பகுதிகள் ஆகும்.


கடல் பகுதிகளில் சுமார் 64 சதவீதத்தை உள்ளடக்கிய இந்த சர்வதேச நீர்நிலைகள், உலகளாவிய பொதுச் சொத்துகளாகக் கருதப்படுகின்றன. மேலும், தற்போது, ​​எந்தவொரு நாடும் அவற்றை எந்த நடவடிக்கைக்கும் பயன்படுத்த சுதந்திரமாக உள்ளன. 


அனைத்து நாடுகளும் வழிசெலுத்தல், விமானம் ஓட்டுதல், மீன்பிடித்தல், கடலுக்கடியில் கேபிள்கள் போன்ற உள்கட்டமைப்புகளை அமைத்தல் மற்றும் கனிமப் பிரித்தெடுத்தல் ஆகியவற்றிற்கு சம உரிமைகளைப் பெறுகின்றன.


உயர் கடல் ஒப்பந்தம், கடலடி சுரங்கம் போன்ற சில பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் வளங்களைப் பாதுகாப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும். எடுத்துக்காட்டாக, கடல் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சமமான உரிமைகளைப் பகிர்வுக்கான ஏற்பாடுகளையும் இது கொண்டுள்ளது.


இந்த ஒப்பந்தம் ஐ.நா. கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் (UN Convention on the Law of the Sea (UNCLOS)) கீழ் சட்டப்பூர்வமாக இணைக்கப்பட்ட சர்வதேச கருவியாகச் செயல்படும். இது அனைத்து பெருங்கடல்களையும் உள்ளடக்கியது மற்றும் பெருங்கடல்கள் மற்றும் அவற்றின் வளங்களைப் பயன்படுத்துவதில் நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுக்கிறது.


இந்தியா BBNJ-ல் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை. இதுவரை, 55 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன. இது 60-வது நாடு ஒப்புதல் அளித்த 120 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வர உள்ளது. ஒரு சட்டத்தை இயற்றுவது ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமில்லை.


உபாத்யாய் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு, கடல்சார் சுற்றுச்சூழல் பிரச்சினையை விரிவான முறையில் ஆராய்ந்து, கடல்களில் இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடல் வளங்களைப் பாதுகாப்பதையும் ஊக்குவிக்கும் ஒரு சட்டத்தை வரைவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? 


கடல்களுக்கு எந்தவொரு சர்வதேச ஆளுகைப் பொறிமுறையும் இல்லை என்று கூற முடியாது. 1982-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட மாநாடு, அல்லது UNCLOS, என்பது உலகெங்கிலும் உள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் முறையான நடத்தை மற்றும் பயன்பாட்டிற்கான பரந்த கட்டமைப்புகளை வகுக்கும் ஒரு விரிவான சர்வதேச சட்டமாகும்.


இது பெருங்கடல்களில் செயல்பாடுகள் தொடர்பான நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுக்கிறது. இது இறையாண்மை, கடந்து செல்லும் உரிமைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார பயன்பாட்டின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளையும் உள்ளடக்கியது. பிராந்திய நீர்நிலைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களின் (EEZ) எல்லை நிர்ணயம் UNCLOS-ன் விளைவாகும்.


UNCLOS-ன் படி, பிராந்திய கடல் (territorial sea (TS)), ஒரு நாட்டின் கடற்கரையின் அடிப்பகுதியில் இருந்து 12 கடல் மைல்கள் வரை நீண்டுள்ளது. EEZ மற்றும் TS இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், பிராந்திய கடலுக்குள் (TS)  உள்ள நீர்நிலைகள் மீது ஒரு மாநிலத்திற்கு முழு இறையாண்மை உள்ளது. அதேசமயம், EEZ-ஐப் பொறுத்தவரை, கடலின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள பொருட்களுக்கு அந்த மாநிலம் பிரத்தியேக இறையாண்மை பொருளாதார உரிமைகளை மட்டுமே கொண்டுள்ளது.


UNCLOS பொதுவான கொள்கைகளை வகுக்கிறது. இது கடல் வளங்களை சமமாக அணுகுவது மற்றும் பயன்படுத்துவது பற்றி பேசுகிறது. இது பல்லுயிர் மற்றும் கடல் சூழலியலின் பாதுகாப்பு மற்றும் நிலைமையை வலியுறுத்துகிறது. ஆனால், இந்த இலக்குகளை எவ்வாறு அடைய வேண்டும் என்பதை இது குறிப்பிடவில்லை.


இங்குதான் உயர் கடல் ஒப்பந்தம் வருகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான UN கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கீழ் பாரிஸ் ஒப்பந்தம் செயல்படுவதைப் போலவே, UNCLOS-ன் கீழ் உயர் கடல் ஒப்பந்தம் ஒரு செயல்படுத்தல் ஒப்பந்தமாக செயல்படும்.



Original article:

Share:

வரையறுக்கப்பட்ட பதிவு, சில சிறுபான்மை மதக் குழுக்களுக்கு விலக்கு: புதிய வெளிநாட்டினர் சட்டத்தில் என்ன இருக்கிறது? -தீப்திமான் திவாரி

 வெளிநாட்டவர்களின் நுழைவு, தங்குதல் மற்றும் வெளியேறுதலை ஒழுங்குபடுத்தும் இந்தியாவின் அமைப்பை விரிவாக மாற்றுவதற்கும், சில வகையான வெளிநாட்டவர்களுக்கு விலக்குகளை வழங்குவதற்கும் விதிகள் மற்றும் உத்தரவுகள் (Rules and Orders) வெளியிடப்பட்டுள்ளன.


கடந்த சில நாட்களாக, குறிப்பாக செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்த குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025-ன் கீழ் பல்வேறு விதிகள் மற்றும் உத்தரவுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.


புதிய விதிகள் மற்றும் உத்தரவுகள், வெளிநாட்டினரின் நுழைவு, தங்குதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான இந்தியாவின் அமைப்பை முழுமையாக மாற்றியமைத்து, சில வகை வெளிநாட்டினருக்குக் கிடைக்கும் விலக்குகளை அடையாளம் காண உதவுகின்றன.


பழைய சட்டங்களை ஒருங்கிணைத்தல்


குடிபெயர்வு மற்றும் வெளிநாட்டவர் மசோதா, 2025 (The Immigration and Foreigners Bill), மார்ச் 27-ஆம் தேதி மக்களவையிலும் ஏப்ரல் 2-ஆம் தேதி மாநிலங்கவையிலும் நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் 4-ஆம் தேதி குடியரசுத்தலைவரின்  ஒப்புதலைப் பெற்றது.


இந்தச் சட்டம், 1920ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைதல் சட்டம் (Passport Act); 1939ஆம் ஆண்டு வெளிநாட்டினர் பதிவுச் சட்டம் (Registration of Foreigners Act) ; 1946ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act) மற்றும் 2000ஆம் ஆண்டு குடியேற்ற (பரிமாறுநர்களின் பொறுப்பு) சட்டம் ஆகியவற்றை மாற்றியமைத்து, வெளிநாட்டினரின் நுழைவு, தங்குதல், இயக்கம் மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றுக்கான இந்தியாவின் ஆட்சியை ஒரே சட்டத்தின்கீழ் ஒருங்கிணைத்தது.


மாற்றத்தின் தேவை


இந்தியாவில் நுழைவதையும் தங்குவதையும் நிர்வகிப்பதற்கான பழைய சட்ட அமைப்பு சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் இருந்தது. இது இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய காலாவதியான சட்டங்கள் மற்றும் பல்வேறு சிதறிய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டது, இதனால் புரிந்துகொள்வதும் தொடர்ந்து பயன்படுத்துவதும் கடினமாக இருந்தது.


1920, 1939, 1946 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் இருந்து வந்த நான்கு வெவ்வேறு சட்டங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் தெளிவற்ற விதிகளைக் கொண்டிருந்தன.


திபெத்திய அகதிகள், இலங்கைத் தமிழ் அகதிகள், நேபாளம் மற்றும் பூட்டானின் குடிமக்கள் போன்ற குறிப்பிட்ட வகை நுழைபவர்களுக்கான விலக்குகள் பல வரிசைகளில் பரவியிருந்தன. மேலும், அவை பெரும்பாலும் எளிதில் அணுகக்கூடியதாகவோ தெளிவாகவோ இல்லை.


அறிக்கையிடல் கடமைகள் பெரும்பாலும் கைமுறையாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தன. இதனால் அமலாக்கத்திற்கான தரவு காணாமல் போனது அல்லது முழுமையடையவில்லை. உள்ளூர் அல்லது ஒன்றிய அரசு - இதில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்தும் குழப்பம் இருந்தது. மேலும், தண்டனைகள் அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கான விதிகள் நாடு முழுவதும் வேறுபட்டன.


சட்டம், விதிகள் மற்றும் உத்தரவுகள்


குடிபெயர்வு மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025-ன் முக்கியமான விதிகள் மற்றும் உத்தரவுகளுடன் சேர்ந்து பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:


செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருத்தல் (Possession of valid documents): வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் அனைவரும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணத்தையும், வெளிநாட்டவராக இருந்தால் செல்லுபடியாகும் அயல்நாட்டு நுழைவு அனுமதியையும் வைத்திருக்க வேண்டும் — சட்டத்தால் அல்லது ஒன்றிய அரசின் சிறப்பு உத்தரவுகளால் வெளிப்படையாக விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.


அறிவிக்கப்பட்ட தளங்கள் வழியாக மட்டுமே நுழைவு மற்றும் வெளியேறுதல் (Entry and exit only via notified posts): இந்தச் சட்டம் அனைத்து முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்கள், நில எல்லை தளங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உட்பட நியமிக்கப்பட்ட குடியேற்றப் பதிவுகளை பட்டியலிடுகிறது. இதன் மூலம் வெளிநாட்டினர் சட்டப்பூர்வமாக இந்தியாவிற்குள் நுழைந்து வெளியேறலாம்.


குடிவரவு அதிகாரியின் அதிகாரங்கள் (Powers of the Immigration Officer): அறிவிக்கப்பட்ட குடிவரவு பதவிகளில் உள்ள அதிகாரிகள் நுழைவு, வெளியேறுதல் மற்றும் அனுமதிக்கப்படுதல் ஆகியவற்றில் இறுதி அதிகாரத்தையும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவு அல்லது வெளியேறலை சரிபார்க்க அல்லது மறுக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளனர்.


வரையறுக்கப்பட்ட பதிவு மற்றும் கட்டுப்பாட்டு முறை (Defined registration and control mechanism): வெளிநாட்டு குடிமக்கள் நியமிக்கப்பட்ட பதிவு அலுவலர்களிடம் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் /துணை காவல் ஆணையர் குடிபெயர்வு மற்றும் வெளிநாட்டவர் ஒழுங்குமுறைக்கான உள்ளூர் குடிமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


குறிப்பிட்ட, பிராந்தியங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான அதிகாரங்களுடன் வெளிநாட்டினரின் பிராந்திய பதிவு அதிகாரிகளின் (Foreigners’ Regional Registration Officers (FRROs)) வலையமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தங்குமிட வழங்குநர்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் (Obligations of accommodation providers and institutions): ஹோட்டல்கள், விடுதிகள், பணம் கொடுத்து தங்கும் வீடுகள், மத நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்கள் வெளிநாட்டவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் கையெழுத்துக்கள் அல்லது கட்டைவிரல் ரேகைகளைப் பெற்று,


 ஒவ்வொரு வெளிநாட்டவரின் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டின் 24 மணி நேரத்திற்குள் முறையாக நிரப்பப்பட்ட படிவத்தை மின்னணு வழியில் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இதில் வெளிநாட்டு இந்திய குடிமக்கள் (Overseas Citizen of India (OCI)) அட்டை வைத்திருப்பவர்களும் அடங்குவர்.


கல்வி மற்றும் மருத்துவ அறிவிப்புகள் (Educational and medical notifications): பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட அல்லது சிகிச்சையளிக்கப்பட்ட வெளிநாட்டவர்களைப் பற்றி பதிவு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள் ஒவ்வொரு வெளிநாட்டவரின் பிறப்பு மற்றும் இறப்பை ஏழு நாட்களுக்குள் மின்னணு வழியில் அறிக்கை செய்ய வேண்டும்.


விடுதிகள், சங்கங்களை மூடுவதற்கான அதிகாரம்: பொது ஒழுங்கு, சட்டம் அல்லது பாதுகாப்பு கவலைகள் இருந்தால், வெளிநாட்டவர்கள் அடிக்கடி வரும் இடங்களை கட்டுப்படுத்தவோ, தடை செய்யவோ அல்லது மூடவோ குடிமை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. 


அத்தகைய உத்தரவுகள், அதிகாரசபையின் கருத்துப்படி, வெளிநாட்டவர் “குற்றவாளியாகவோ, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்புடையவராகவோ அல்லது விரும்பத்தகாதவராகவோ” இருந்தால் வெளியிடப்படலாம். இத்தகைய இடங்களுக்கு பொறுப்பானவர்கள் அனுமதியின்றி வேறு இடத்திற்கு செயல்பாடுகளை மாற்ற முடியாது.


பாதுகாக்கப்பட்ட/தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு அனுமதி (Special permit for protected/ restricted areas): பாதுகாக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட இடங்களுக்குள் செல்வதற்கு சிறப்பு அனுமதி தேவைப்படும். இதற்கு குறிப்பிடப்பட்ட படிவங்கள் மற்றும் நடைமுறைகளுடன் நியமிக்கப்பட்ட இணையத்தளம் அல்லது மொபைல் செயலிகள் மூலம் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.


விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகள்


பணியில் நாட்டிற்குள் நுழையும்/வெளியேறும் இந்திய ராணுவ வீரர்கள், மற்றும் அரசுப் போக்குவரத்தில் பயணம் செய்தால் அவர்களது குடும்பத்தினர்


நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள், அங்கீகரிக்கப்பட்ட நிலம் அல்லது விமான வழிகள் வழியாக (சீனா, மக்காவ், ஹாங்காங் அல்லது பாகிஸ்தான் வழியாக) இந்தியாவிற்குள் நுழைந்தால். அவர்களிடம் கடவுச்சீட்டு இருந்தால் அவர்கள் விமானத்திலும் உள்ளே வரலாம்.


* சிறப்பு நுழைவு அனுமதிகள் கொண்ட திபெத்திய அகதிகள், குறிப்பாக 1959 மற்றும் மே 30, 2003-க்கு இடையில் நுழைந்தவர்கள், அல்லது பின்னர் நியமிக்கப்பட்ட இடுகைகளின் கீழ்; ஆனால்,  அதிகாரிகளுடன் பதிவுசெய்யப்பட்டு பதிவு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே வரலாம்.


* ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து மத துன்புறுத்தலில் இருந்து தப்பி டிசம்பர் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த சிறுபான்மை சமுதாய அகதிகள் (இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்), பயண ஆவணங்கள் இல்லாமல் அல்லது பின்னர் காலாவதியாகிவிட்ட ஆவணங்களுடன் கூட உள்ளே வரலாம்.


குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019-ன் படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்தால் மட்டுமே இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். 


இந்த தேதி மாற்றப்படவில்லை. இருப்பினும், இந்த தேதிக்குப் பிறகு வந்தவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக அவர்கள் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ மாட்டார்கள்.


உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) கூற்றுப்படி, டிசம்பர் 31, 2014 அன்று குடியுரிமை (திருத்தம்) சட்ட காலக்கெடுவுக்குப் பிறகு இந்தியாவிற்குள் நுழைந்து, நீண்டகால அயல்நாட்டு நுழைவு அனுமதிகளைத் தேடுபவர்கள், குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் கீழ் விரைவான குடியுரிமைக்குத் தகுதி பெற மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் இந்திய குடிமக்களாக மாறுவதற்கு வழக்கமான இயற்கைமயமாக்கல் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.


ஜனவரி 9, 2015 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்த பதிவுசெய்யப்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.


அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களின் கீழ் அயல்நாட்டு நுழைவு அனுமதி  தேவைகள் விலக்கு அளிக்கப்பட்ட சில நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திர மற்றும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது குறிப்பிட்ட துறைமுகங்களில் "வருகையின் போது நுழைவு அனுமதி" பெற தகுதியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.


 மனிதாபிமான பயிற்சிகள்/நிகழ்வுகளுக்காக இந்தியாவிற்கு வருகைதரும் போர்க்கப்பல்களில் உள்ள வெளிநாட்டு இராணுவ பணியாளர்கள், தனி அரசாங்க அறிவிப்பால் விலக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.


புதிய சட்டம்


சிதறிக்கிடந்த சட்டங்களை ஒருங்கிணைப்பதைத் தவிர, சட்டம் மற்றும் விதிகள் பின்வருவனவற்றை அறிமுகப்படுத்துகின்றன:


டிஜிட்டல் மற்றும் மின்னணு பதிவுகள்: தங்குமிட வழங்குநர்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான தரவுத்தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் அறிவிப்பு அமலாக்கம் மற்றும் பொது சுகாதார மேலாண்மை மற்றும் குடியுரிமை முடிவுகளை எடுப்பதற்கான ஒரு வலுவான தரவுத்தளத்தை உருவாக்கும்.


படிப்படியான அபராதங்கள்/கலவை அமைப்பு: காலாவதியாக தங்குதல், பதிவு செய்யாமல் இருத்தல், அயல்நாட்டு நுழைவு அனுமதி விதிமுறைகளை மீறுதல், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத வருகை மற்றும் அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறுதல் போன்ற மீறல்களுக்கு, விதிகள் ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலான படிப்படியான அபராதங்களை பரிந்துரைக்கின்றன.


திபெத்தியர்கள், மங்கோலிய பௌத்த துறவிகள் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில தேசிய குழுக்களுக்கு வெவ்வேறு விகிதங்கள் பொருந்தும், அங்கு அபராதங்கள் ரூ.50 வரை குறைவாக இருக்கும்.


பாதுகாப்புகள் மற்றும் மேல்முறையீட்டு முறைகள்: விதிகள் அபராதங்கள் மற்றும் தண்டனைகளுக்கான மேல்முறையீடுகளை தெளிவுபடுத்துகின்றன மற்றும் சில மனிதாபிமான வழக்குகளுக்கு விதிவிலக்குகளை வழங்குகின்றன. அவை நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட தவறுகள் அல்லது நல்ல நம்பிக்கையில் செய்யப்பட்ட இணக்கத்திற்கு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை வழங்குகின்றன.


மையப்படுத்தல் மற்றும் ஒப்படைப்பு: சட்டம் ஒன்றிய அரசுக்கும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செயல்பாடுகளை ஒப்படைக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. எந்த நேரத்திலும் மாற்றுவதற்கும், ரத்து செய்வதற்கும் அல்லது சிறப்பு அல்லது வெளியிட அதிகாரம் அளிக்கிறது.


உள்ளூர் மட்டங்களில் எந்தவித விருப்ப உரிமை விலக்குகளும் இல்லை: நுழைவு, விசா, ஆவணங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட/கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அனுமதிகளுக்கான அனைத்து விலக்குகளும் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இருக்கும் — இது உள்ளூர் மாறுபாடுகளை அனுமதித்த தெளிவின்மையை நீக்குகிறது.


அமலாக்கத்திற்கு ஊக்கமளிக்கும் வாய்ப்பு


நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் பணி மற்றும் மின்னணு பதிவுகளுடன், பிழை அல்லது தெளிவின்மைக்கான விளிம்பு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அபராதங்களை செலுத்துவதன் மூலமும், நீதிமன்றங்களின் சுமையைக் குறைப்பதன் மூலமும், தீர்ப்பை மிகவும் திறமையாக்குவதன் மூலமும் பல குற்றங்களை விரைவாகக் குறைக்க முடியும்.


விதிகள் இப்போது திபெத்தியர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை சமூகங்களுக்கு விலக்குகளை தெளிவாகப் பட்டியலிடுகின்றன. அதிகாரிகள் இனி ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது - இந்தக் குழுக்களில் உள்ள அனைவரும் சட்டத்தின் கீழ் ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள்.



Original article:

Share:

ஆதி வாணி. -ரோஷ்னி யாதவ்

 சமீபத்தில், செயற்கை நுண்ணறிவால்-இயங்கும் செயலியான ஆதி வாணியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்தப் பயன்பாடு எதைப் பற்றியது? அரசாங்கத்தின் செயற்கைநுண்ணறிவு-உந்துதல் முயற்சிகள் என்ன?


பழங்குடியின மொழிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெரிய மொழி மாதிரிகளுக்கு அடித்தளமாக செயல்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) அடிப்படையிலான மொழிபெயர்ப்புக் கருவியான ‘ஆதி வாணி’யின் பீட்டா பதிப்பை பழங்குடியினர் விவகார அமைச்சகம் திங்களன்று வெளியிட்டது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பிற அரசாங்க முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. செயற்கை நுண்ணறிவு மற்றும் பழங்குடி மொழிகளில் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் முயற்சிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த செயலி, இந்தி மற்றும் ஆங்கிலத்தை பழங்குடி மொழிகளுக்கும், அதற்கு நேர்மாறாகவும் மொழிபெயர்க்கும். மேலும், இந்த மொழிகளை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. இது ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேகாலயாவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்-பிலானி, நயா ராய்பூர்-இந்திய தொழில் நுட்பக் கழகம் மற்றும் டெல்லி-இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் தலைமையிலான கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டது.


3. இந்த செயலி வெள்ளிக்கிழமை முதல் கூகுள் ஆப் ஸ்டோரில் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கும். மேலும், ஆரம்பத்தில் பரவலாகப் பேசப்படும் பழங்குடி மொழிகளான பிலி, கோண்டி, சந்தாலி மற்றும் முண்டாரி ஆகியவற்றுக்கான மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கும். 


பிலி என்பது மிகவும் பரவலாகப் பேசப்படும் திட்டமிடப்படாத மொழியாகும். மேலும், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.


4. அதைத் தொடர்ந்து, ஒடிசாவில் ஆதிக்கம் செலுத்தும் குய் மற்றும் மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் சில பகுதிகளில் பேசப்படும் காரோ மொழிக்கான மொழிபெயர்ப்பையும் வழங்கும்.


5. இந்த செயலி பழங்குடி மொழி முதன்மை வகுப்புகளையும் ஒருங்கிணைத்துள்ளது. இது அவர்களின் தாய்மொழியில் அடிப்படை கற்றலுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. 


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு  (National Educational Research and Training Council (NCERT)) மூலம் கல்வி அமைச்சகம் மற்றும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்துடன் இணைந்து, 89 பழங்குடி மொழிகள் உட்பட 117 மொழிகளுக்கான முதன்மை வகுப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில முதன்மை வகுப்புகள் சந்தாலி, வார்லி, பாவ்ரி ஆகிய மொழிகளில் உள்ளன.


6. ஆதி கர்மயோகி அபியான் (Adi Karmayogi Abhiyan), அடிமட்ட பழங்குடியினரின் தலைமைப் பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, ஆதி வாணி செயலியை பழங்குடியின சமூகங்களில் பிரபலப்படுத்வத்தை நோக்கமாக கொண்டுள்ளது

7. குறிப்பிடத்தக்க வகையில், 2011ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பட்டியல் பழங்குடியினர்களின் மக்கள் தொகை 10.45 கோடியாகும். மேலும், இது 461 பழங்குடி மொழிகளின் தாயகமாக உள்ளது. 71 தனித்துவமான பழங்குடியினர் தாய்மொழிகள் உள்ளன. சுமார் 82 மொழிகள் அழிந்து போகும் அபாயத்தில் (vulnerable) உள்ளன. அவற்றில் 42 மொழிகள் அழிந்து போகும் அபாயத்தில் (critically endangered) உள்ளன.


பழங்குடியினர்களுக்கான சமீபத்திய நலத்திட்டங்கள்


பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)): 2023ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடி பெருமை தினம் (Janjatiya Gaurav Divas) நவம்பர் 15 அன்று ஜார்கண்டின் குந்தியில் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரை (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) இலக்காகக் கொண்டு PM JANMAN திட்டத்தை தொடங்கினார்.


• இந்தக் முன்முயற்சித் திட்டத்தின் கீழ், ஒன்பது அமைச்சகங்கள்பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா, பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா மற்றும் ஜல் ஜீவன் திட்டம்  போன்ற 11 முக்கியமான திட்டங்களை செயல்படுத்தும்.


தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA)): இது 17 துறை அமைச்சகங்களை ஒன்றிணைத்து, நலத்திட்டங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகத் தொடங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் போது பிரதமர் நரேந்திர மோடியால் இந்தத்திடம் தொடங்கப்பட்டது.


• இந்தத் திட்டத்திற்கு காலனித்துவ எதிர்ப்பு பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பெயரால் தர்தி ஆபா (பூமியின் தந்தை) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், இத்திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளில் ரூ.79,156 கோடி மத்தியப் பங்காக ரூ.56,333 கோடியும், மாநிலப் பங்காக ரூ.22,823 கோடியும் ஒதுக்கப்பட்டது.


பிற AI அடிப்படையிலான அரசு முயற்சிகள்


1. BharatGen: இது ஒரு முன்னோடியான உருவாக்க செயற்கை நுண்ணறிவின் முயற்சியாகும். இது மொழி, பேச்சு மற்றும் கணினி பார்வையில் அடிப்படை மாதிரிகளின் தொகுப்பை நிறுவுவதன் மூலம் பொது சேவை வழங்கலை மாற்றுவதையும் குடிமக்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


- BharatGen இந்தியாவின் சமூக-கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டு, ஒரு பொதுப் பயன்பாடாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மாதிரிகள் மற்றும் பயன்பாடுகளை வழங்கும். 


சமூக நேர்மை, கலாச்சார பாதுகாப்பு மற்றும் மொழியியல் வகை போன்ற இந்தியாவின் பெரிய கவலைகளை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் சென்றடைகிறது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.


- இந்தியாவுக்கென பிரத்தியேகமாக உள்ள அடிப்படை செயற்கை நுண்ணறிவு  மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் BharatGen ஆத்மநிர்பார் பாரத் இலக்குடன் இணைகிறது. இது உரை மற்றும் பேச்சு இரண்டையும் ஆதரிக்கும். இந்தியாவின் தனித்துவமான மொழியியல் சூழலைப் பற்றிய தகவல்களை உறுதி செய்யும்.


2. பாஷினி: தேசிய மொழி தொழில்நுட்ப இயக்கத்தின் (the National Language Technology Mission) கீழ் பிரதமர் நரேந்திர மோடியால் ஜூலை 2022-ல் தொடங்கப்பட்டது. பாஷினி என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்புக் கருவியாகும். 


இது மொழிகளுக்கான தேசிய பொது டிஜிட்டல் தளத்தை நிறுவுவதற்கும் இந்திய மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கத்தின் அளவை அதிகரிப்பதற்கும் இந்திய மொழிகளின் நிகழ்நேர மொழிபெயர்ப்பை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.


— மொழியியல் தடைகளை உடைத்து, டிஜிட்டல் சேவைகளை மக்கள் எளிதாக அணுகுவதற்கு 22 திட்டமிடப்பட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


— பாஷினி திட்டம் பல மொழி ஒருங்கிணைப்புடன் நிர்வாகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஒருங்கிணைக்கவும், தேசிய ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கும் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஏற்று மேலும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


3. சபாசார்: இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, திரிபுராவில் ‘சபாசார்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு கருவி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது. ‘சபாசார்’ கிராம சபை ஒளி மற்றும் ஒலிப் பதிவுகளிலிருந்து கட்டமைக்கப்பட்ட கூட்ட நடவடிக்கைகளை உருவாக்க AI-இன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது.


— இது நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்களின் நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான தன்மையை ஏற்படுத்தும். பஞ்சாயத்து அலுவலர்கள் தங்கள் e-GramSwaraj உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி ஒளி/ஒலிப் பதிவுகளை ‘சபாசார்’-ல் பதிவேற்றலாம்.


- ‘சபாசார்’ பாஷினியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி ஒரு வீடியோ அல்லது ஆடியோவிலிருந்து ஒலிப்புக்கேற்ப எழுத்துமுறையை (transcription) உருவாக்குகிறது, அதை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீட்டு மொழியில் மொழிபெயர்த்து, சுருக்கத்தை தயார் செய்கிறது. இது ஆங்கிலத்துடன் கூடுதலாக ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் குஜராத்தி போன்ற அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் டிரான்ஸ்கிரிப்ஷனை செயல்படுத்துகிறது.


4. Chitralekha: இது இயந்திர மொழி (Machine language) மாதிரி ஆதரவைப் பயன்படுத்தி பல்வேறு இந்திய மொழிகளில் வீடியோ வசன வரிகளை இடுவதற்கான ஒரு திறந்த மூல தளமாகும். 


இது பல உள்ளீட்டு மூலங்கள், நகலெடுத்தல் (transcription) மூலம் உருவாக்கும் செயல்முறை மற்றும் குரல் ஓவர் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.



Original article:

Share: