புற்றுநோய் மருந்துகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும் - சஞ்சீவ் பஞ்சால்

 சிகிச்சை செலவுகளை குறைக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும் உதவும்.


புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. சிலர் தைரியமாக நோயிலிருந்து தப்பித்து மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். இருப்பினும், பலர் இன்னும் புற்றுநோயால் இறக்கின்றனர். இது உலகளவில் கோடிக்கானவர்களைப் பாதிக்கிறது.


2020-ஆம் ஆண்டில், உலகளவில் 19.3 கோடி நோயாளிகள் இருந்தனர். இந்தியா மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கொண்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில், இந்தியாவில் 1.4 கோடி அதிகமான புற்றுநோய் சிகிச்சையளிகள் இருந்தனர்.  உலகளாவிய புற்றுநோய் ஆய்வகம் (Global Cancer Observatory) இந்த எண்ணிக்கை 2040-ல் 57.5% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.


புற்றுநோயின் சுமையைக் குறைப்பது ‘ஆரம்ப பரிசோதனை, துல்லியமான நோயறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை’ ஆகிய மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்தது. இந்தியாவில், மற்ற நாடுகளைப் போல ஸ்கிரீனிங் மற்றும் நோயறிதல் திட்டங்கள் பரவலாக இல்லை. இதன் விளைவாக, நோயாளிகள் பெரும்பாலும் இறுதி நிலைகளில் கண்டறியப்படுகிறார்கள்.


பல நோயாளிகள் அதிக சிகிச்சை செலவுகளை எதிர்கொள்கின்றனர். இது குடும்பங்களை வறுமையில் தள்ளும். நாடாளுமன்ற அறிக்கையின்படி, புற்றுநோய் தொடர்பான மருத்துவச் செலவுகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். புற்றுநோய் மருந்துகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) மூலம் இந்தப் பிரச்சனை இன்னும் மோசமாகியுள்ளது.




விலைமலிவு பிரச்சினை (Affordability issue)


2021-ஆம் ஆண்டில், 45-வது சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம் கூட்டத்தில் புற்றுநோய்க்கான மருந்தான பெம்ப்ரோலிசுமாப் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 12%-ல் இருந்து 5%-ஆகக் குறைத்தது. Pembrolizumab பல்வேறு புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.


2023-ல் நடந்த 50-வது சரக்கு மற்றும் சேவை வரி ஆணையக் கூட்டத்தில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யும்போது Dinutuximab மீது சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. Dinutuximab குழந்தைகளுக்கு ஏற்படும் அரிதான புற்றுநோயான அதிக ஆபத்துள்ள நியூரோபிளாஸ்டோமாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.


அனைத்து புற்றுநோய் மருந்துகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது புதுமையான சிகிச்சைகளை அணுகக்கூடியதாகவும் மலிவு விலையாகவும் மாற்றும்.


இந்தியாவில் புற்றுநோயாளிகள் அதிக வரவுக்கு மீறிய செலவு (out-of-pocket (OOP)) மற்றும் குறைந்த காப்பீட்டுத் தொகையை எதிர்கொள்கின்றனர்.  45-60 வயதுடைய புற்றுநோயாளிகள் ஒரு வெளிநோயாளி வருகைக்கு சராசரியாக ₹8,053 மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு ₹39,085 செலவழித்ததாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆண்டுதோறும், ஒவ்வொரு நோயாளியின் செலவும் சுமார் ₹3,31,177 ஆகும். 80%-க்கும் அதிகமான புற்றுநோய் சிகிச்சை செலவுகள் மருந்துகள் மற்றும் நோயறிதலுக்காக ஆகும். சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைப்பது இந்த நிதிச்சுமையை கணிசமாக குறைக்கும்.  குறைந்த செலவுகள் இந்த மருந்துகளை பின்தங்கிய மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றும்.


இந்தியாவில், பல புற்றுநோயாளிகள் இறுதி நிலைகளில் கண்டறியப்படுகிறார்கள். மார்பகம், கருப்பை வாய் கருப்பை, தலை மற்றும் கழுத்து மற்றும் வயிற்றில் புற்றுநோய் உள்ள பெரும்பாலான நோயாளிகள் தாமதமாக கண்டறியப்பட்டதாக தேசிய புற்றுநோய் பதிவுத் திட்ட (National Cancer Registry Programme) அறிக்கை காட்டுகிறது. 40%-க்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் பரவிய பின்னரே கண்டறியப்பட்டது. மேம்பட்ட நிலைகள் சிகிச்சை சிக்கலான மற்றும் செலவுகளை அதிகரிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பதன் மூலம் சிகிச்சையை மிகவும் குறைவானதாக மாற்ற முடியும். இது நோயாளிகளை சரியான நேரத்தில் ஆலோசனைகளைப் பெறவும் தேவையான மருந்துகளைத் தவறாமல் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும். குறைந்த விலையில் சிகிச்சைகளை வழங்குவது சிறந்த சிகிச்சைக்கு வழிவகுக்கும்.


புற்றுநோய் மருந்துகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது புதிய சிகிச்சைகளை அணுகக்கூடியதாக மாற்றும். இது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பயனளிக்கும். மருந்து நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும். அதிக முதலீடு புதிய மற்றும் பயனுள்ள மருந்துகளை உருவாக்க வழிவகுக்கும்.


எழுத்தாளர் அஸ்ட்ராஜெனெகா பார்மா இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநராக உள்ளார்.          


Original article:

Share:

இயற்கையுடன் முரண்படுவதால் ஏற்படும் விளைவுகள் -தர்மேந்திர சந்துர்கர்

 பாரம்பரிய அறிவை அங்கீகரிப்பதுடன், தீவிர வானிலை நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்கு சிறந்த வழிகளில் முதலீடு செய்வது முக்கியம்.


“இந்த சூழலை ஏற்படுத்த நாம் என்ன செய்தோம்?“ - மலைகள் இடிந்து, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் வெள்ளத்தில் மூழ்கும் போது, ​​இந்த கேள்வி எழுகிறது. இது இயற்கை நிகழ்வுகள் மட்டுமல்ல, மனிதர்களாகிய நாம் எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தோம் என்பது பற்றியது.


மேற்குத் தொடர்ச்சி மலைகள் அல்லது இமயமலை போன்ற உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் கனமான கட்டுமானம் மற்றும் நகரங்களில் மழைநீர் வடிகால்களை தடுப்பது ஆகியவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. சுரங்க நீர்மின் திட்டங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் புறவழிச்சாலைகள், பொருத்தமற்ற இடங்களில் கட்டப்பட்ட நகரங்கள் போன்ற  மனித நடவடிக்கைகள் பேரழிவுகளை மிகவும் மோசமாக்குகின்றன. காலநிலை மாற்றம் ஒரு காரணியாக இருந்தாலும், இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் (anthropogenic)  ஏற்படுகிறது. எதிர்காலத்தில், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் இழப்பு மற்றும் சேதங்களை நாம் சமாளிக்க வேண்டும். இந்த பேரழிவுகளில் இருந்து நம்மை எவ்வாறு  பாதுகாத்துக்கொள்ள முடியும்?


சாம்பல் காண்டாமிருகம் (Gray Rhino)


இந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிளாக் ஸ்வான்ஸ் போல் இல்லாமல் (Black Swans), இவை அரிதான மற்றும் எதிர்பாராதவை. அடிக்கடி மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பேரழிவுகளை, நாசிம் நிக்கோலஸ் தலேப் வகைப்படுத்தியுள்ளார். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் இவை. கோவிட்-19 தொற்றுநோயை சாம்பல் காண்டாமிருகமாகக் கருதுகின்றனர். ஏனெனில், கடுமையான சுவாச நோய்க்குறி (Severe Acute Respiratory Syndrome (SARS)) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East Respiratory Syndrome (MERS)) போன்ற முந்தைய வெடிப்புகளிலும் இதே போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தன. இந்த பேரழிவுகள் சாதாரணமாகி வருகின்றன. இந்த தொடர்ச்சியான பேரழிவுகளின் விளைவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


பெரியவர்கள் சொல்வதைக் கேளுங்கள் (Listen to elders)


ஃபுகுஷிமாவுக்கு அருகிலுள்ள அனியோஷியில், கல்வெட்டுகள் "எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாக இருக்க உயரமான வீடுகளை கட்டுங்கள். கடந்த கால சுனாமிகளை நினைவில் கொள்க. இந்த நிலைக்கு கீழே கட்ட வேண்டாம்" என்று சுனாமி பற்றி எச்சரிக்கின்றன. சுற்றுச்சூழல் ஞானத்தைக் காட்டும் பாரம்பரிய நடைமுறைகள் இந்திய கிராமப்புறங்களில் உள்ளன. புங்காஸ், கட்ச்சின் பாரம்பரிய வீடுகள், 2001 பூகம்பத்தில் இருந்து தப்பின. கர்வாலில் உள்ள பழைய கிராமங்கள் பல பேரழிவுகளில் இருந்து தப்பித்து வருகின்றன. இது பல வகையான பேரழிவுகளைத் தாங்கக்கூடிய வீடுகளைக் கட்டுவதில் பாரம்பரிய அறிவின் மதிப்பைக் காட்டுகிறது. இந்த பாரம்பரிய அறிவை அங்கீகரிப்பதும் பயன்படுத்துவதும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு நன்கு பொருந்தக்கூடிய வீடுகள் மற்றும் சமூகங்களை உருவாக்க உதவுகிறது.


 தாய்லாந்தில் உள்ள மோகன் பழங்குடியினர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். நிலம் நடுங்கும் போது, ​​கடலும் நகரும். கடல் விரைவாகப் பின்வாங்கும்போது, ​​பழங்குடியினர் உயரமான நிலத்திற்கு சென்று விடுவதாக தெரிவிக்கின்றனர். அவர்களின் பாரம்பரிய முன் எச்சரிக்கை அமைப்பு 2004 இந்தியப் பெருங்கடல் ஏற்பட்ட சுனாமியில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு உதவியது.


முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் முக்கியத்துவம்:

 

பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளும், முன்னறிவிப்புகளும் முக்கியமானவை. பல ஆண்டுகளாக சூறாவளி முன்னறிவிப்பு (cyclone forecasting) பெரிதும் மேம்பட்டுள்ளது. இது உயிர் இழப்பைக் குறைத்துள்ளது. முன்னறிவிப்பு மற்றும் சரியான நேரத்தில் தொடர்பு கொள்வதில் தொடர்ந்து முதலீடு செய்வது தீவிர வானிலை நிகழ்வுகளின் இழப்புகளைக் குறைப்பதற்கு முக்கியமான எச்சரிக்கும் அமைப்பாகும்.

பேரிடர் மேலாண்மையில் தவறுகளுக்கு இடமில்லை. சிறிய பிழைகள் பெரிய பகுதிகள் மற்றும் பல மக்களைப் பாதிக்கும் பெரிய பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். புதிய தொழில்நுட்பம் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். பெரிய பகுதி கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கைகளை அனுப்பலாம். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் ஆபத்தான பகுதிகளை அடையாளம் காண முடியும். இந்தக் கருவிகள் பயனுள்ள மேற்பார்வை திட்டங்களை உருவாக்க உதவும்.


இயற்கைக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வளர்ச்சி கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அனைத்தையும் சரி செய்ய பல ஆண்டுகளாகும். சமநிலையை மீட்டெடுக்க பல தலைமுறைகள் எடுக்கும். தற்போதைய மாற்றங்களை நாம் சரி செய்து வாழ வேண்டும். எதிர்காலத்தை சிறப்பாக கையாள கடந்த கால தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.


எழுத்தாளர் சம்போதி ஆராய்ச்சி மற்றும் தொடர்புகளின் (Sambodhi Research & Communications) இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவு அதிகாரியக உள்ளார்.



Original article:

Share:

சிறு தொழில்கள் - பங்கு, முக்கியத்துவம் மற்றும் சவால்கள் -நிதேந்திர பால் சிங்

 சிறு தொழில்கள் அனைத்து தொழில்துறை அலகுகளிலும் சுமார் 95 சதவீதம்  பங்கு வகிக்கின்றன. நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. "இந்தியாவின் வளர்ச்சி குடிசை மற்றும் சிறு தொழில்களில் உள்ளது" என்று மகாத்மா காந்தி கூறினார். இதில் 175 லட்சம் பேர் பணியாற்றி வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன சிறு தொழில்கள், அமைப்புசாரா பாரம்பரிய தொழில்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர வணிகங்கள் ஆகியவை தொழில்களின் வரம்பில் அடங்கும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) கீழ் உள்ள மற்ற தொழில்களுடன் ஒப்பிடும்போது சிறு தொழில்கள் எவ்வாறு உள்ளன?


தொழில்களின் வகைப்பாடு

வகைப்பாடு / தொழில் வகை

குறு

சிறு

நடுத்தர

முதலீடு

ரூ. 1 கோடிக்கு கீழ்

ரூ. 10 கோடிக்கு கீழ்

ரூ. 50 கோடிக்கு கீழ்

ஆண்டு வருவாய்

ரூ. 5 கோடிக்கு மிகாமல்

ரூ. 50 கோடிக்கு மிகாமல்

ரூ. 250 கோடிக்கு மிகாமல்


இந்தியப் பொருளாதாரத்தில் சிறு தொழில்களின் பங்கு


தொழில்முனைவோர் நடவடிக்கைகளின் வளர்ச்சி: 


சிறு தொழில்களின் புதுமையான வணிக நடைமுறைகள் தொழில்முனைவோர் நடவடிக்கைகளின் செல்வாக்கை விரிவுபடுத்த உதவியுள்ளன. இது, அதிக பொருளாதாரத் துறைகளை உள்ளடக்குவதற்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோர் தேவைகளை திருப்தி செய்யும் பல்வேறுபட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் வழிவகுத்துள்ளது.


கிராமப்புற மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளின் தொழில்மயமாக்கல்: 


அவை பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, நாடு முழுவதும் செல்வம் மற்றும் வருமானத்தின் மிகவும் சமமான விநியோகத்தை உறுதி செய்துள்ளன.


வேலைவாய்ப்பு உருவாக்கம்: 


இந்தியாவில் உள்ள இந்த சிறு தொழில்கள் பெரிய தொழில்களைவிட கணிசமாக குறைந்த மூலதன செலவில் பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.



கிராம மற்றும் சிறு தொழில்கள் என்றால் என்ன?


கிராம மற்றும் சிறு தொழில் (Village and Small Industry (VSI)) என்பது அமைப்புசாரா பாரம்பரிய துறைகள் மற்றும் சிறு தொழில்களுக்கான சொல். கைவினைப் பொருட்கள், கைத்தறி, காதி மற்றும் கிராமத் தொழில்கள், கயிறு திரித்தல், பட்டுப்புழு வளர்ப்பு, விசைத்தறிகள் மற்றும் சிறு தொழில்கள் ஆகியவை கிராம மற்றும் சிறு தொழில் துறையை உருவாக்கும் ஏழு துணைத் துறைகளாகும்.


அரசின் முன்னெடுப்புகள்


பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister’s Employment Generation Programme (PMEGP)): 


நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிரிவுகளில் புதிய குறு வணிகங்கள், திட்டங்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு முயற்சிகளை நிறுவுவதன் மூலம் வேலைகளை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும். தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பான காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (Khadi and Village Industries Commission (KVIC)) இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பாகும். மாநில அளவிலான காதி மற்றும் கிராமத் தொழில் மையங்கள், மாநில காதி மற்றும் கிராமத் தொழில் வாரியங்கள் (State Khadi and Village Industries Boards (KVIB)), மாவட்ட தொழில் மையங்கள் (District Industries Centres (DIC)), கயிறு வாரியம் (கயிறு தொடர்பான நடவடிக்கைகள்) மற்றும் வங்கிகள் ஆகியவை மாநில அளவில் இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களாகும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) உத்திரவாதம் இல்லாத கடன் ஒதுக்கீடு: 


வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மைக்ரோ மற்றும் சிறு வணிகங்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. தகுதிவாய்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களால் மைக்ரோ மற்றும் சிறு வணிகங்களுக்கு வழங்கப்படும் உத்திரவாதம் இல்லாத கடன் வசதிகளின் கடன் அலகுக்கு 5 கோடி ரூபாய் வரை உள்ளடக்கியது.


புத்தாக்கம், கிராமப்புற தொழில் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டம் (A Scheme for Promotion of Innovation, Rural Industry & Entrepreneurship (ASPIRE)): 


இத்திட்டம் 2021-2022-ஆம் ஆண்டு முதல் 2025-2026-ஆம் ஆண்டு வரை ரூ .194.87 கோடி ரூபாய் செலவினத்துடன் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜனவரி 28, 2022-ஆம் ஆண்டு அன்று, புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. 


அடுத்தடுத்த இலக்குகள்:


(i) வேலையின்மையைக் குறைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.


(ii) இந்தியாவின் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.


(iii) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் போட்டித்தன்மையை அதிகரிக்க புதுமைகளை ஊக்குவித்தல்.


தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் (Entrepreneurship and Skill Development Programmes (ESDP)): 


பெண்கள், பட்டியல் இனத்தவர்(SC)/பட்டியல் பழங்குடியினர் (ST), ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தனிநபர்கள் போன்ற பல்வேறு சமூக பின்னணியைச் சேர்ந்த இளைஞர்களை சுய வேலைவாய்ப்பு அல்லது தொழில்முனைவோர் தொழில் பற்றி சிந்திக்க ஊக்குவிப்பதே திட்டத்தின் குறிக்கோள்.


பாரம்பரிய தொழில்களை புத்துயிரூட்டுவதற்கான நிதித் திட்டம் (Scheme of Fund for Regeneration of Traditional Industries (SFURTI)): 


பாரம்பரிய தொழில்கள் மற்றும் கைவினைஞர்களை தொகுப்புகளாக ஒழுங்கமைப்பதன் மூலம் அவர்களுக்கு போட்டி, நீண்டகால நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்புகளால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளின் சந்தைப்படுத்தலை மேம்படுத்துதல், தொடர்புடைய அமைப்புகள் பாரம்பரிய கைவினைஞர்களை மேம்பட்ட திறன்களுடன் செயற்படுத்துதல், கைவினைஞர்களுக்கு மேம்பட்ட கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குதல், செயலில் பங்குதாரர்களின் பங்கேற்புடன் ஆளுகை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் புதுமையான தயாரிப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், மேம்பட்ட செயல்முறைகள், சந்தை நுண்ணறிவு மற்றும் பொது-தனியார் கூட்டாண்மையின் புதிய மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கான சாம்பியன்ஸ் திட்டம் (MSME Champions Scheme): 


2021–2022-ஆம் ஆண்டு முதல் 2025–2026-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கான சாம்பியன்ஸ் திட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:


1. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கான (MSMEs) நிலையான (Zero Defect Zero Effect) சான்றிதழ் திட்டம்


2. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கான (MSMEs) போட்டி திட்டம்


3. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கான (MSMEs) புதுமையான திட்டம்


பசுமைப்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கான திட்டம்: 


"பசுமைப்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்த அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது.


குறிப்பு: இந்த சிறு தொழில்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மாநில அரசுகளின் முதன்மை கடமை உள்ளது.


சவால்கள்: 


சுபம் குப்தா (Shubham Gupta), (மேலாளர், காலநிலை பின்னடைவு பயிற்சித் திட்டம் (Climate Resilience Practice programme), உலக வளங்கள் நிறுவனம் இந்தியா) பின்வரும் சவால்களை விவாதிக்கிறார்.


நிதிக்கான அணுகல்:


 இது இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும், மொத்த நிதிப் பற்றாக்குறை $400 பில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க அதிக காலம் ஆகலாம் என்றாலும், கழிவு மேலாண்மை, மின்சார வாகனங்கள், எரிசக்தி திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் துறைகளில் இலக்கு வைக்கப்பட்ட பசுமை நிதித் திட்டங்கள் இந்த பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும்.


வட்டி விகிதங்கள்:


வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும், நுகர்வோர் நிதி, வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களை நுகர்வோருக்கு எளிதில் அணுகுவதன் மூலமும், சந்தையில் தேவையை அதிகரிக்க மத்திய அரசு செயல்பட வேண்டும்.


காலநிலை உறுதிப்பாடுகள் மற்றும் குறைந்த கார்பனுக்கு மாறுதல்: 


சிறு நிறுவனங்கள் செய்யமுடிந்தது அவற்றின் பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றுவதுதான். உலகளாவிய தேவை மற்றும் விநியோகச் சங்கிலிகள் புதிதாக உருவாக்கப்பட்ட வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்போது பசுமையான, சுற்றுச்சூழல் நட்பு செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு விரைவாக இடம்பெயர்ந்தாலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) அபாயங்களை சமாளிக்க உதவும் நிலையான திட்டம் எதுவும் இல்லை.


ஒழுங்கமைக்கப்படாத இயல்பு: 


அதன் கட்டமைப்பு மற்றும் சிறு அளவிலான வணிகங்களின் விளைவாக (கிட்டத்தட்ட அனைத்து இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் மைக்ரோ அளவிலானவை), இந்தத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். இந்த பாதிப்பு கோவிட்-19 தொற்றுநோயால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில், பூட்டுதலால் ஏற்பட்ட தேவை குறைவதால் மில்லியன் கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் கதவுகளை மூட வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பசுமை மாற்றம்: 


கொள்கை மற்றும் தேவை நிச்சயமற்ற தன்மைகளுக்கு அவர்களின் வெளிப்பாடு மேல்நோக்கி இருப்பதை விட எதிர்மறையாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்வது அவசியம். பச்சை நிறத்தில் செல்வதற்கான வணிக வழக்கை அவர்கள் புரிந்துகொண்டாலும், அவர்களில் பெரும்பாலோர் புதிய நடவடிக்கைகளில் முதலீடு செய்ய நிதி மற்றும் தொழில்நுட்பரீதியாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆயினும்கூட, சில அரசாங்க முயற்சிகள் தற்போதைய தடைகளை அகற்ற உதவும்.


ஊக்கத்தொகைகள் மற்றும் அபராதம்: 


சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எதிர்மறையான வெளிப்புறங்களுக்கு வரிவிதிப்பதன் மூலமும், பசுமை செலவினங்களுக்கு மானியங்கள் அல்லது வரிச்சலுகைகளை வழங்குவதன் மூலமும் எளிய இணக்கத்திற்கு அப்பால் செல்ல ஊக்குவிக்கப்படலாம். சுற்றுச்சூழல் சட்டங்களை புதுப்பிப்பது பல்வேறு தொழில்கள் வழங்கும் ஆபத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். பரவலாக செயல்படுவதற்கு முன்பு, இந்தக் கொள்கைகள் முதலில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) அவற்றின் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.  குறைந்த எரிசக்தி உத்திகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பின்பற்றுதல், கழிவு மேலாண்மை, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல் போன்ற நல்ல நடைமுறைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பின்பற்ற வேண்டும்.


அரசாங்கங்கள், வணிகக் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதிலும், பயிற்சி மற்றும் வளங்களை வழங்குவதிலும் செயலில் பங்கு வகிக்கலாம். அரசாங்கங்களும் முதலீட்டாளர்களும் வரி விலக்குகள், மானியங்கள், மானியங்கள் மற்றும் குறைந்த வட்டி கடன்கள் போன்ற நிதி சலுகைகளை வழங்கலாம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) நிலையான நடைமுறைகளை பின்பற்ற அல்லது நிலையான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கலாம்.


பயிற்சி, தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவி வழங்குவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) நிலையான நடைமுறைகளை செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் உதவ முடியும்.



Original article:

Share:

முரண்பாடுகளை மீறி, அதிகமான பெண்கள் மெக்கானிக்கல், சிவில், கடல்சார் மற்றும் சுரங்கப் பொறியியல் படிப்புகளில் நுழைகிறார்கள் -ஆர். அமண்டா மரியம் பெர்னாண்டஸ், நித்திகா பிரான்சிஸ், விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

 இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவிகளின் பங்கு, கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது.


அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி (All India Survey on Higher Education (AISHE)) கல்லூரிக் கல்வியைத் தொடரும் மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்தபோதிலும், இந்தியாவில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் அதிகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகள். 2016-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் ஒரே துறையாக பொறியியல் இருந்தது.

2022-ஆம் ஆண்டில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.  இதற்கு முன்பு. அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி (All India Survey on Higher Education (AISHE)) கண்காணிக்கப்படாத பல புதிய படிப்புகள் கணக்கெடுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்தப்  போக்கு மாறவில்லை.


பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெண்களைவிட ஆண் மாணவர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. 2013-ஆம் ஆண்டில், அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் மின்னணு பொறியியல் (electronics engineering), கணினி பொறியியல் (computer engineering) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (information technology (IT)) துறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.  கணினி பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில், 2013-ஆம் ஆண்டில் அனைத்து மாணவர்களில் 45% க்கும் அதிகமான பெண் மாணவர்கள் இருந்தனர். கடந்த பத்தாண்டுகளில் இந்த துறைகளில்  மாணவிகளின் பங்களிப்பு தலா 10% புள்ளிகள் குறைந்துள்ளது.


இருப்பினும், சமூக மனப்பான்மை மற்றும் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், முன்பு மாணவிகள் குறைவாகவே இருந்த துறைகளில் சேரத் தொடங்கினர்.  உதாரணமாக, சுரங்கப் பொறியியலில் (mining engineering), 2013-ஆம் ஆண்டில் 1.2% ஆக இருந்த பெண் மாணவர்களின் பங்கு, 2022-ஆம் ஆண்டில் 8% ஆக உயர்ந்தது. அதேபோல், கடல்சார் பொறியியலில் (marine engineering), பெண் மாணவர்களின் பங்கு 1.5%லிருந்து 6.4% ஆக உயர்ந்தது. அதே காலகட்டத்தில், பெண் மாணவர்களின் பங்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (mechanical engineering) மற்றும் சிவில் இன்ஜினியரிங் (civil engineering)  ஆகியவற்றில் முறையே 4.2% முதல் 7.6% மற்றும் 18.2% முதல் 23% வரை கணிசமாக அதிகரித்துள்ளது.


மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆண் மாணவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் பங்கு 2013-ஆம் ஆண்டில் 95.8% இலிருந்து 2022-ஆம் ஆண்டில் 92.4% ஆக சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இந்தத் துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.  2016-ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் 5.4 லட்சம். 

மறுபுறம், கணினி பொறியியல் படிப்புகளில் சேரும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டில் சுமார் 3.5 லட்சத்தில் இருந்து 2023-ஆம் ஆண்டில் 8.25 லட்சமாக அதிகரித்துள்ளது.


இந்த படிப்புகளில் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) பங்கு 2013-ஆம் ஆண்டில் 33% ஆக இருந்து 2022-ஆம் ஆண்டில் 38% ஆக உயர்ந்தது. பட்டியல் பழங்குடியின (Scheduled Tribes(ST)) மாணவர்களின் பங்கு அதே காலகட்டத்தில் 2.1% இலிருந்து 3.3% ஆக சற்று அதிகரித்துள்ளது.  பட்டியல் இனத்தவர் (Scheduled Castes(SC)) இடையே, அதிகரிப்பு சீரற்றதாக இருந்தது.  இது சில ஆண்டுகளில் சிறிது சரிந்து, 2013-ஆம் ஆண்டில் 8.7% உடன் ஒப்பிடும்போது 2022-ஆம் ஆண்டில் 11% ஆக இருந்தது. காலப்போக்கில் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பங்கு குறைந்தது.


மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகள் பல ஆண்டுகளாக ஆண்களிடையே மதிப்பை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இது வேலைவாய்ப்பில் சரிவைச் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் கணினி பொறியியல் போன்ற படிப்புகள் மாணவர்களை ஈர்க்கின்றன.



Original article:

Share:

குடிமை பணிகளில் பக்கவாட்டு நுழைவு (lateral entry) ஊக்குவிக்கப்பட வேண்டுமா? -பிரிசில்லா ஜெபராஜ்

 கடந்த வாரம், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission  (UPSC)) 45 பக்கவாட்டு நுழைவு பதவிகளை அறிவித்தது. இதில் 10 இணைச் செயலாளர் பதவிகளும், 35 இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர் பதவிகளும் அடங்கும். இருப்பினும், அறிவிப்பு வெளியான சில நாட்களில், கடுமையான விமர்சனத்தின் காரணமாக ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.


எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்தன. இடஒதுக்கீடு கொள்கைகளை புறக்கணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். இந்த நடவடிக்கை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBCs)), பட்டியலிடப்பட்ட சாதிகள் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) ஆகியோரின் வேலைவாய்ப்புகள் "பறிக்கப்படுவதாக" எதிர்க்கட்சிகள் கூறினர்.


குடிமைப் பணிகளில் பக்கவாட்டு நுழைவு ஊக்குவிக்கப்பட வேண்டுமா? அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா பிரிஸ்கில்லா ஜெபராஜ் நடுநிலையான உரையாடலில் கேள்வியை விவாதிக்கின்றனர்.


இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) வெளியில் இருந்து ஆட்களை பணியமர்த்த வேண்டிய அவசியம் என்ன?


அசோக் வர்தன் ஷெட்டி: குடிமைப் பணி  துறையில் நிபுணத்துவம் கண்டிப்பாக வேண்டும். நிபுணர்களை ஆலோசகர்களாக அல்லது ஆலோசகர்களாக பணியமர்த்துவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், துணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், இணைச் செயலாளர்கள் என்று ஆட்களை நியமிப்பது தான் அனைவராலும் எதிர்க்கப்படுகிறது. இவை அனைத்தும் நிர்வாகப் பதவிகள், இந்த வகையான பதவிகளுக்கு ஒரு நிபுணர் சரியான தேர்வாக இருக்கமாட்டார். ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு நாட்டிலேயே மிகவும் கடினமான ஒன்றாகும். 


கடந்த ஆண்டு 13 லட்சம் பேர் குடிமைப் பணி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,016 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 180 பேர் இந்திய ஆட்சிப் பணிக்கு  தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த கடினமான தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் உயர் பதவிகளை அடைவதற்காக பல ஆண்டுகளாக பணி செய்கிறார்கள். உதாரணமாக, ஒன்றிய செயலகத்தில் துணைச் செயலாளராக (Deputy Secretary) வருவதற்கு ஒன்பது ஆண்டுகள் பணியாற்றுகிறார்கள். இயக்குநராவதற்கு 12 வருடங்களும், இணைச் செயலாளராக வருவதற்கு குறைந்தது 16 வருடங்களும் ஆகும். மறுபுறம், பக்கவாட்டில் நுழைபவர்கள் இந்த செயல்முறையைத் தவிர்க்கலாம். ஒரு விண்ணப்பம் மற்றும் அரை மணி நேர நேர்காணலின் அடிப்படையில் அவர்கள் இந்த உயர் பதவிகளைப் பெற முடியும்.


ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா: பேரிடர் மேலாண்மை, குறைக்கடத்திகள், ஃபின்டெக், முதலீடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போன்ற சிறப்புத் துறைகளுக்கு விளம்பரப்படுத்தப்பட்ட இடுகைகள். குடிமைப் பணி தேர்வு மூலம் தேர்ச்சி பெரும் அதிகாரிகளுக்கு இந்தப் பகுதிகளுக்குத் தேவையான நிபுணத்துவம் இல்லாமல் இருக்கலாம். செயல்படுத்தல் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு முக்கியம். பக்கவாட்டு நுழைவுப்பணியாளர்களாக பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பதற்காக பணிபுரிகின்றனர். இங்குதான் அவர்களின் சிறப்பு நிபுணத்துவம் தேவைப்படுகிறது.


மறுபுறம், அனைத்து விதமான திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மாநில அளவில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒன்றிய அரசால் அல்ல. அனைத்து விதமான செயல்பாட்டிற்கும் இந்திய ஆட்சிப் பணிக்கு பொதுப்பணியாளர் அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள்.


அசோக் வர்தன் ஷெட்டி: கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தல் ஆகியவை நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. நல்ல கொள்கைகளை உருவாக்க, செயல்படுத்துவதில் அனுபவம் தேவை. செயல்படுத்துவதைக் கருத்தில் கொள்ளாமல் கொள்கை உருவாக்கம் செய்யப்பட்டால், கொள்கைகள் தோல்வியடைய வாய்ப்புள்ளது.


பாகிஸ்தானில் நடந்ததை பாருங்கள். 1972-ல், சுல்பிகர் அலி பூட்டோ நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை (administrative reforms commission) உருவாக்கினார். பாகிஸ்தானின் குடிமைப் பணி துறையில் பொதுப்பணியாளர்களால் நிரம்பியுள்ளது மற்றும் கூடுதல் சிறப்பு தேவை என்று ஆணையம்  கண்டறிந்தது. பூட்டோ பின்னர் பக்கவாட்டு நுழைவு  முறையை அறிமுகப்படுத்தினார் மற்றும் துணை செயலாளர் முதல் செயலாளர் வரை பதவிகளுக்கு தனது கட்சி விசுவாசிகளை நியமிக்கத் தொடங்கினார்.


பூட்டோ அதிகாரத்தை இழந்தபோது, ​​ஜெனரல் ஜியா ஹக் (General Zia Haq) அவரை நியமித்தவர்களை பதவி நீக்கம் செய்தார். ஜியா ஹக் பின்னர் குடிமைப் பணியில் பக்கவாட்டு நுழைவு மூலம் இராணுவ வீரர்களை கொண்டு வரத் தொடங்கினார். இன்று பாகிஸ்தானின் குடிமைப் பணித்துறை சீர்குலைந்துள்ளது.


பக்கவாட்டு நுழைவு, உண்மையில் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக நிபுணத்துவம் வாய்ந்தவர்களைக் கொண்டுவருவது போன்ற சூழல் உருவாக்கப்படும்.


இந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் நிபுணத்துவப் பகுதியில் கடினமான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பின்னர் கடுமையான நேர்காணலுக்குச் சென்றால் சரியாக இருக்கும். இருப்பினும், அவர்களின் விண்ணப்பம் மற்றும் குறுகிய நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே அவர்களைத் தேர்ந்தெடுப்பது ஆபத்தானது. ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாக சென்றாலும், காலப்போக்கில் அனைத்தும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. இது அரசியல் விசுவாசம், தகுதி பாராமல் முக்கியப் பதவிகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களை பதவியில் அமர்த்துதல் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும்.


தகுதிப் பாராமல்  உருவாக்கப்படும்  அமைப்பு (crony system) உருவாவதை எவ்வாறு தடுக்க முடியும்?


ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா: இந்த வாதம் நீட்டிக்கப்படலாம். யுபிஎஸ்சி, இந்திய ஆட்சிப் தேர்வாளர்களின் நேர்காணல்களை நடத்தும் போது, ​​அவர்களின் கருத்தியல் சார்புகளைப் பார்த்து, கருத்தியல் ரீதியாக கொள்ளாத நபர்களை ஒதுக்கி வைப்பதைத் தடுப்பது எது?


இன்று, லிங்க்ட்இன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அனைவரை பற்றிய பல தகவல்களை தெரிந்து கொள்கிறோம். ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறைக்கடத்திகளில் அனுபவம் இல்லாத ஒருவரை குறைக்கடத்திகளுக்கான இணைச் செயலாளராக நியமித்தால், மக்கள் கேள்விகளை எழுப்புவார்கள். சட்டப்பூர்வ புகார்களை தாக்கல் செய்வார்கள், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம்.


அசோக் வர்தன் ஷெட்டி: ஒருவரின் நிபுணத்துவத்தை சோதிக்க நேர்காணல் மட்டும் போதாது. உதாரணமாக, பல சிறந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை விட பூஜா கேத்கர் நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றார். பல தவறுகளை செய்திருக்கிறார் என்பதை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணலின்போது  உணரவில்லை. நேர்காணல்கள் மட்டுமே ஒரு நபரின் திறமைகள், அணுகுமுறை அல்லது குணநலன்களை மதிப்பிடுவதற்கான நம்பகமான வழி அல்ல என்பதை இது காட்டுகிறது.


வெளியில் இருந்து வருபவர்களை எந்த நிலையில் கொண்டு வருவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


அசோக் வர்தன் ஷெட்டி:  கடுமையான போட்டித் தேர்வைப் பயன்படுத்தி நுழைவு மட்டத்தில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கவும். செயலர் மட்டத்தில் அனுபவம் வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கலாம்.


உயர்மட்ட பதவிகளுக்கு, மன்மோகன் சிங், வி. கிருஷ்ணமூர்த்தி அல்லது எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நிபுணத்துவம் தெளிவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உள்ளது. இருப்பினும், இயக்குநர், துணைச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் போன்ற இடைநிலைப் பதவிகளில், நிபுணத்துவத்தை சரிபார்ப்பது கடினமாக இருக்கும். பில் கேட்ஸ் அல்லது மார்க் ஜுக்கர்பெர்க் போன்றவர்கள் பெரிய சாதனைகளைச் செய்துள்ள நிலையில், அவர்கள் இந்த இடைநிலை அரசுப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பில்லை.


ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா: இணைச் செயலாளர் மட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்களைக் பதவியில் அமர்த்துமாறு நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில், அவர்களின் அனுபவம் கொள்கை வகுப்பிற்கு உதவும். ஆலோசகர்களைப் போல் இல்லாமல், இந்த அதிகாரிகளுக்கு விஷயங்களைச் செய்ய அதிகாரம் உள்ளது. ஒரு உயர் நிறுவனத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஒருவர், அரசாங்கத்தில் சேர ஊதியக் குறைப்பு எடுத்தாலும், ஒரு புதிய வழியைக் கொண்டு வர முடியும். அவை பயனுள்ளதாக இருக்கும். முடிவில்லாத ஆவணங்களைத் தவிர்க்கவும், புதுமையான பரிந்துரைகளை வழங்கவும். அனுபவம் வாய்ந்த வெளியாட்களை மூத்த நிபுணர்களை  நிறுவனங்கள் எவ்வாறு வேலைக்கு அமர்த்துகின்றன என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.


பக்கவாட்டு பணியாளர்களுக்கான (lateral entry hires) இடஒதுக்கீடு விதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இந்தக் கொள்கை திரும்பப் பெறப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியானதா?


ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா: இல்லை, தற்போதுள்ள இடஒதுக்கீடு விதிகளின்படி பணியமர்த்தப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பதாக அரசு கூறவில்லை. அதற்கு பதிலாக 45 கூடுதல் அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் புதிய பதவிகளில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்கள் அல்லது பட்டியலிடப்பட்ட சாதிகள் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (Scheduled Tribes)  ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், இந்த புதிய பணியாளர்கள் தற்போதைய வேலைகளை மாற்ற மாட்டார்கள்.


அசோக் வர்தன் ஷெட்டி:  நான் உடன்படவில்லை. இந்தப் புதிய பதவிகள் கூடுதல் பதவிகள் அல்ல; அவர்கள் தற்போதுள்ள இணைச் செயலாளர், இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர் பதவிகளில் இருந்து வருகிறார்கள். இது தற்போதைய அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை பாதிக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் போது, ​​பக்கவாட்டு நுழைவுக்கான அனைத்து பதவிகளிலும் 10% ஒதுக்கீடு செய்ய பரிந்துரை இருந்தது. ஆனால், அது  செயல்படுத்தப்படவில்லை.


இடஒதுக்கீடுகளைப் பொறுத்தவரை, இடஒதுக்கீடு பதவிகளுக்கான விதிகள் உள்ளன:  பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கு 15%, பட்டியல் பழங்குடியினருக்கு 7.5%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு மேல் நீடிக்கும் எந்தவொரு பணிக்கும், அந்த  பணி தற்காலிகமானதாக இருந்தாலும், இட ஒதுக்கீடு பொருந்தும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training) கூறுகிறது. இந்தப் புதிய பதவிகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்பதால், அவர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தும்.

பொதுத்துறை நிறுவனத்தின் துணைவேந்தர் போன்ற தனிப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என்று ஒரு விதி உள்ளது. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission  (UPSC)) இந்த இணைச் செயலாளர், இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர் பதவிகள் ஒவ்வொன்றையும் பாடம் சார்ந்ததாகக் கருதுகிறது. இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அவற்றை தனித்தனி பதவிகளாக வகைப்படுத்தியுள்ளனர் மற்றும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை. இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது ஒரு நல்ல முயற்சியாகும். ஒவ்வொரு வேலையும் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படலாம். எந்தப் பதவிக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது என்று கருத்து எழலாம்.


அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு கேடரில் இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்; 

மைக்ரோ ஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் நெட்வொர்க்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் துணை உரை எழுத்தாளராகவும், திட்ட ஆணையத்தில் ஆலோசகராக இருந்தார்.



Original article:

Share: