வரி பங்களிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் -தலையங்கம்

 2020 ஆம் நிதியாண்டில் வரி விகிதம் குறைக்கப்பட்டாலும் கார்ப்பரேட் வரி வசூல் குறைந்து வருகிறது.


மார்ச் 17 வரை நேரடி வரி (direct tax) வசூலுக்கான புதிய எண்கள் நேரடி வரி வருவாய் நன்றாக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. இந்த வளர்ச்சி நிதி நடவடிக்கைகள் மற்றும் சிறந்த இணக்கம் காரணமாக உள்ளது. நிகர நேரடி வரி (Net direct tax) வசூல் ₹18.9 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான ₹15.77 லட்சம் கோடியை விட 20 சதவீதம் அதிகம். நேரடிவரிகள் மெதுவாக வளர்ந்து வருவதால் மறைமுக வரிகளின் (indirect tax) இந்த வளர்ச்சி இந்த ஆண்டு ஒட்டுமொத்த வரி வருவாயை ஆதரிக்கும். 2024 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, கலால் வரி (excise duty) வசூல் 4 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் சுங்க வரி (custom duties) 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. 2024 நிதியாண்டிற்கான சமீபத்திய மதிப்பீடுகளில், தனிநபர் வருமான வரி (personal income tax) வசூல் 23% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நிறுவன வரி (corporate tax)  வசூல் 12% அதிகரித்துள்ளது. மொத்த நேரடி வரி வசூலில் நிறுவன  வரியை விட தனிநபர் வருமான வரி அதிகம் பங்களிக்கிறது.


தனிநபர் வருமான வரி வருவாய் 2022 நிதியாண்டு முதல் 20% க்கும் வளர்ந்து வருகிறது. சம்பளம், வட்டி, ஈவுத்தொகை (dividend) மற்றும் முந்தைய இழப்புகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவுகளுடன் வரி வருமானத்தை முன்கூட்டியே நிரப்புவது போன்ற முயற்சிகள் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். இந்த முயற்சிகள் தற்போதுள்ள வரி செலுத்துவோர் அதிக வரி செலுத்த வைக்கின்றன. அதிக பரிவர்த்தனைகள் நடக்கும் போது நேரடியாக வரி விதிக்கப்படுகிறது, இது நேர்மையான வரி செலுத்துவோருக்கு கடினமாக இருந்தாலும், வரி ஏய்ப்பைத் தடுக்க உதவுகிறது. தனிநபர் வருமான வரி வசூல் அதிகரித்து வருகிறது, ஆனால் வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக வளரவில்லை. 2020 நிதியாண்டு மற்றும் 2023 நிதியாண்டுக்கு இடையில், வரிக் கணக்கு தாக்கல் செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கை 4.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது சம்பளம் உள்ளவர்களைப் போல மக்கள்  அதிக வரிகளை செலுத்துகிறார்கள்.


தனிநபர் வருமான வரி வசூல் அதிகரித்து வருகிறது. ஆனால் நிறுவன வரி வசூல் சிறப்பாக இல்லை. 2021 நிதியாண்டு முதல், தனிநபர் வருமான வரி வருவாய் நிறுவன வரி  வருவாயை விட அதிகமாக உள்ளது. அதற்கு முன்பு, 2000-01 முதல் 2019-20 வரை, நிறுவன வரி  வசூல் பொதுவாக வருமான வரி வசூலை விட 60 முதல் 80 சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால் 2021 நிதியாண்டுமுதல் தொடங்கி, இந்த போக்கு புரட்டப்பட்டுள்ளது, இப்போது தனிநபர் வரி வசூல் 2024 நிதியாண்டுமற்றும் 2025 நிதியாண்டுல் நிறுவன வரியை விட 10 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிறுவன வரி (corporate tax) வசூல் குறைந்து வருகிறது. குறிப்பாக 2020 நிதியாண்டில் நிறுவன வரி விகிதங்களில் குறிப்பிடத்தக்க குறைப்புக்குப் பிறகு. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் சவால்களை எதிர்கொண்ட போதிலும், நிறுவனங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் இலாப வளர்ச்சியைக் காட்டியுள்ளன. இப்பிரச்னையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அதிக வரி செலுத்துவதால், தனிப்பட்ட வருமான வரி செலுத்துவோர் மகிழ்ச்சியடையவில்லை. அதிக வரி விகிதங்கள் அவர்களை வருத்தமடையச் செய்கிறது. அதிகமான மக்கள் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கிறார்களா என்பதைப் பார்க்க சமீபத்திய தரவு எதுவும் இல்லை. எவ்வாறாயினும், புதிய ஆட்சி மிகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அடுத்த அரசாங்கம் தனிநபர் வருமான வரி (personal income tax) முறையில் மாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.




Original article:

Share:

இந்தியாவின் நான்கு விண்வெளி வீரர்கள் ககன்யான் விண்வெளி பயணத்திற்கு எவ்வாறு தயாராகி வருகின்றனர் ? - ஜான்சன் டி.ஏ.

 விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கலத்தில் அனுபவிக்கும் தீவிர ஈர்ப்பு சக்தியைக் கருத்தில் கொண்டு, பெங்களூரில் பயிற்சி பெறும் நான்கு விண்வெளி வீரர்களுக்கும் மிக உயர்ந்த மட்ட உடல் மற்றும் மன தகுதி அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஒரு விண்வெளி வீரராக ஆவதற்கு, ஒரு நபருக்கு மிகச்சிறந்த தடகள வீரர்கள்" (super athletes) போன்ற உடல் மற்றும் மன வலிமை தேவை என இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யானுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களைத் தயார் படுத்தும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 


நான்கு இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)) அதிகாரிகள் ககன்யான் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பெயர்கள் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா. அவர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organisation’s (ISRO)) புதிய விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.


போர் விமானிகள் போன்ற விண்வெளி வீரர்கள், விண்வெளிப் பயணங்களுக்கான தொழில்நுட்ப அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பொறியியல் மற்றும் அறிவியல் சவால்களைக் கையாள்வது இதில் அடங்கும். ஆனால், அவர்களுக்கு சிறந்த உடல் மற்றும் மன உறுதியும் தேவை.


"அவர்கள் தீவிர பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார்கள் - காற்றுள்ள (aerobic), காற்றில்லா (anaerobic) மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் உடல் ரீதியாக மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். விண்வெளி வீரர்களுக்கு மன முதிர்ச்சி முக்கியமானது. அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்தகுதி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கூட மிஞ்சுகிறது என்று பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு நிபுணர் கூறினார்.


விண்வெளி வீரர்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுகிறார்கள். "வழக்கமான பரிசோதனைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புகள் உள்ளன" என்று நிபுணர் கூறினார்.


பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் மனித விண்வெளி வாகன மையத்தில் (Human Space Flight Centre) பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்வெளிப் பயணத்தின் பணியாளர் தொகுதிக்குள் உள்ள அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய அவர்கள் சிமுலேட்டர்களைப் (simulators) பயன்படுத்துகின்றனர். விண்வெளி வீரர்கள் உடல் மற்றும் மன நிலைப்படுத்தலுக்கும் செல்கிறார்கள். இந்த பயிற்சியானது பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படையின் விண்வெளி மருத்துவ நிறுவனத்தில் (Indian Air Force's Institute of Aerospace Medicine (IAM)) விண்வெளி மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகிறது. இந்திய விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் விண்வெளி மருத்துவ நிறுவனம் முக்கியப் பங்காற்றியது. மேலும், விண்வெளி வீரர்களுக்கான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்நிறுவனமே கையாளுகிறது.


இந்திய விமானப்படை மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்தும் இந்திய விண்வெளி திட்டம், 2025-26 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் பணிக்கான விண்வெளி வீரர்களின் பயிற்சி விவரங்களை ரகசியமாக வைத்திருக்கிறது.


2018 ஆம் ஆண்டில் இந்திய மனித விண்வெளிப் பயணத்தை விரைவுபடுத்தும் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து இந்த திட்டம் 2006 இல் தொடங்கியது, விண்வெளி வீரர் பயிற்சி குறித்த சில தகவல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிவியல் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் வெளிவந்துள்ளன. 


உடல்  நலன் முக்கியமானது

2020 ஆம் ஆண்டில், பெங்களூருவில் நடந்த சர்வதேச விண்வெளி மாநாட்டின் (international space conference) போது, ககன்யானுக்கு நான்கு இந்திய விமானப்படை (IAF) போர் விமானிகளைத் தேர்வு செய்ய உதவிய ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் வலேரியேவிச் கோடோவ் (Oleg Valeriyevich Kotov), "தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் அதிக ஊக்கம், உடல் தகுதி, மன வலிமை மற்றும் உணர்ச்சி ரீதியாக நெகிழ்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நட்பாகவும், தொடர்புத் திறன் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்” என்றார்.


ஜூலை 2023 இல், கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையின் போது, ககன்யான் இயக்குனர் ஆர் ஹட்டன் (R Hutton), தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் வகுப்பறை அமர்வுகள் மற்றும் உடலியல் மற்றும் உளவியல் தயாரிப்பு உட்பட பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.


விண்வெளி மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது ? 


ஹட்டனின் கூற்றுப்படி, விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தில், அவசரநிலைகளின் போது வலுவான ஈர்ப்பு சக்திகளைக் கையாள்கிறார்கள், இதற்கு நிறைய உடல் வலிமை தேவைப்படுகிறது. சில நேரங்களில், அவர்கள் ஒரு டன் காரை தங்கள் தலையில் சுமப்பதற்கு சமமான சக்திகளை எதிர்கொள்கின்றனர்.


"விண்வெளிக்குச் செல்லும்போது, விண்வெளி வீரர்கள் நிலைம சக்திகளை (inertia forces) அனுபவிக்கிறார்கள். ஒரு ’G’ என்பது பூமியின் ஈர்ப்பு விசை (gravitational pull of the earth). ‘4G’ இருந்தால் அது உங்கள் எடையை விட நான்கு மடங்கு அதிகம். 60 கிலோ எடையுள்ள ஒருவரின் உடலில் 240 கிலோ என்பது தலையில் 240 கிலோ சுமப்பது போன்றது”  என்று ஹட்டன் கூறுகிறார்.


விண்வெளிப் பயணத்தின் போது, சில அவசர நிலைகளில், விண்வெளி வீரர்கள் 12G முதல் 16G வரையிலான முடுக்க சக்திகளை எதிர்கொள்ள நேரிடும். இதன் பொருள் அவர்கள் தங்கள் உடல் எடையை விட 16 மடங்கு சக்திகளை எதிர்கொள்ள வேண்டும். 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு, மாருதி காரின் எடைக்கு இணையான ஒரு டன் விசை உடலில் இருப்பது போன்றது. இந்த தீவிர அழுத்தம் சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும், நிமிடங்கள் அல்ல. இருப்பினும், விண்வெளி வீரர்கள் இதுபோன்ற சூழ்நிலைக்கு பயிற்சி பெற வேண்டும். கூடுதலாக, பணியில் இருக்கும் இரண்டு குழு உறுப்பினர்களும் மூன்று நாட்கள் விண்வெளியில் செலவிடுவார்கள். அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 400 கி.மீ தூரம் வரை பயணிக்கும். அவர்களின் பாதை 51 டிகிரி சாய்வில் இருக்கும்.  


விமானத்தின் புறப்பாடு மற்றும் இறங்கும் போது, குழுவினர் ஓரளவு சாய்ந்த நிலையில் படுத்துக் கொள்வார்கள். இது முழு உடலிலும் ஈர்ப்பு சக்தியை பரப்ப உதவுகிறது, முதுகெலும்பு மீதான அழுத்தத்தை குறைக்கிறது. 


2022 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படையின் விண்வெளி மருத்துவ நிறுவனத்தின் (Institute of Aerospace Medicine (IAM)) உயிரியல் மருத்துவ நிபுணரான ஸ்குன் லார் பொலாஷ் சன்னிகிரகி (Sqn Ldr Polash Sannigrahi) 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், “விண்வெளி விமானத்தின் மாறும் சூழலில் விண்வெளி வீரர்கள் பலவித அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். நுண் ஈர்ப்பு (microgravity), கதிர்வீச்சு (radiation) வெளிப்பாடு, சர்க்காடியன் டிஸ்ரித்மியா (circadian dysrhythmia), குறைக்கப்பட்ட தினசரி உடல் செயல்பாடு மற்றும் மூடிய காற்று-நீர் (closed air-water systems) அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு தீவிர சூழலில் அவர்கள் வாழவும் வேலை செய்யவும் இது தேவைப்படுகிறது. இந்த மாற்றங்கள் மற்றும் தேவைப்படும் உடல் வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டு, உடல் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான உடல் தகுதித் திட்டம், நீச்சல் மற்றும் யோகா ஒரு அளவிடக்கூடிய பயிற்சி விளைவை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.


மாஸ்கோவில் பனி மற்றும் நீரில் உயிர்வாழும் பயிற்சி 


2019 ஆம் ஆண்டு தேர்வுக்காக பரிசீலிக்கப்பட்ட 60 இந்திய விமானப்படை (IAF) பைலட்டுகள் கொண்ட நான்கு விண்வெளி வீரர்களை விமானப்படையின் விண்வெளி மருத்துவ நிறுவனத்தின் (Institute of Aerospace Medicine (IAM)) தான் தேர்வு செய்தது. ரஷ்ய நிபுணர்களின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள், ரஷ்யாவின் ஸ்டார் சிட்டியில் உள்ள யூரி ககாரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் (Yuri Gagarin Cosmonaut Training Centre (GCTC))  பயிற்சியின் முதல் பகுதியைப் பெற்றனர். 


ரஷ்யாவில், அவர்கள் பனி மற்றும் நீரில் உயிர்வாழும் பயிற்சி உள்ளிட்ட தீவிர நிலைமைகளுக்கு ஆளாகினர், இது போன்ற நிலைமைகளில் தரையிறங்குவதற்கான நிகழ்விற்கு தயாராக இந்தப் பயிற்சிகளில் ஈடுப்பட்டனர்.


 இந்திய வீரர்களின் மிக உயர்ந்த ஊக்கம் மற்றும் திறமையைக் குறிப்பிட்டனர். அவர்கள் மிகவும் சாதகமான வானிலையைப் பெறவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது, ஈரமான பனி இருந்தது, ஒரு பனி மேலோடு உருவாகி காலடியில் உருகியது. ஆனால் இந்த கடினமான சூழ்நிலையிலும், அவர்கள் அனைத்து பணிகளையும் முடித்தனர்,  என்று யூரி ககாரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தின் (Yuri Gagarin Cosmonaut Training Centre (GCTC)) வல்லுநர்களின்  இந்திய விண்வெளி வீரர்கள் பற்றிய 2020 ஆன்லைன் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 


விண்வெளி வீரர்களை விமானப்படையின் விண்வெளி மருத்துவ நிறுவனம் (Institute of Aerospace Medicine (IAM)) தேர்வு செய்யும் செயல்பாட்டில் உள்ள உடல் மதிப்பீடு எட்டு செயல்பாடுகளை உள்ளடக்கியது, இவற்றில் ஆறு தடகளம், 60-மீ ஸ்பிரிண்ட் (60-m sprint) மற்றும் 5-கிமீ ஓட்டம் ( 5-km run), 20 வினாடிகளில் 25 மீட்டர் நீச்சல் (swimming) மற்றும் தொடர்ச்சியான 200 மீட்டர் நீச்சல் ஆகியவை அடங்கும்.


விமானப்படையின் விண்வெளி மருத்துவ நிறுவனம் (Institute of Aerospace Medicine (IAM)) பொதுவாக போர் விமானிகளைப் பயிற்றுவிக்கவும் சோதிக்கவும் பயன்படும் மையவிலக்குகளைக் கொண்டுள்ளது. அவை, விண்வெளிப் பயணத்தின் போது அதிக ஈர்ப்பு விசைகளுக்கு எதிர்ப்பை உருவாக்க விண்வெளி வீரர்களுக்கு உதவப் பயன்படுத்தப்படுகின்றன. "அவர்களிடம் ஒரு காப்ஸ்யூலுடன் ஒரு மையவிலக்கு உள்ளது, இது விண்வெளி விமானத்தில் உணரப்படும் முடுக்கத்தை அடைய நகர்த்தப்படும்" என்று டாக்டர் ஆர் ஹட்டன் கூறினார்.


நீண்ட பயணத்திற்கு தயாராவது


விண்வெளி வீரர்கள் உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றாலும், மன வலிமை ஒரு இன்றியமையாத தேவையாகும். "உளவியல் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் விபத்து அல்லது தீ விபத்து ஏற்படாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் போது, உங்கள் சாதாரண புலன்கள் வேலை செய்யாது. உங்களால் ஒரு எளிய சுவிட்சை கூட நிறுத்தி வைக்க முடியாது. ஏனெனில், உங்கள் உளவியல் தலையெடுத்துள்ளது” என்று ககன்யான் திட்ட இயக்குனர் டாக்டர் ஹட்டன் கடந்த ஆண்டு கூறினார்.


இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான தயாரிப்பில், பெங்களூருவில் உள்ள அதன் மையத்தில் உபகரணங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக விமானப்படையின் விண்வெளி மருத்துவ நிறுவனம் (Institute of Aerospace Medicine (IAM)) கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.


விமானப்படையின் விண்வெளி மருத்துவ நிறுவனம் (Institute of Aerospace Medicine (IAM)) 1982 ஆம் ஆண்டு முதல், அதாவது விண்வெளியில் முதல் இந்தியராக ராகேஷ் ஷர்மா பெயர் பெற்ற, 1984 ஆம் ஆண்டு ரஷ்ய சோயுஸ் டி 11 பணிக்காக விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா மற்றும் ஏர் கமடோர் ரவீஷ் மல்ஹோத்ரா ஆகியோரின் தேர்வு மற்றும் அடிப்படைப் பயிற்சி முதல் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ககன்யானுக்கான மிகவும் சிக்கலான, தீவிரமான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் பயிற்சிக்கு நிறுவனம் விரைந்து செயல்பட வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விண்வெளி வீரர்களில் ஒருவர், இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சியின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விமானத்தில் செல்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


"நாங்கள் நீண்ட காலத்திற்கு விண்வெளி விமானங்களுக்கான தனிநபர்களின் சுகாதார நிலையை மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறோம். நாங்கள் ஒரு வீரரின் உடல்நிலையைப் பார்த்து, அடுத்த சில ஆண்டுகளுக்கு, அதாவது ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்கணிப்பை வழங்குகிறோம். ஒரு குறுகிய பணிக்காக நாங்கள் வீரர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை,” என்று ரஷ்ய விண்வெளி வீரர் ஓலெக் கோடோவ் 2020 இல் பெங்களூருவில் கூறினார்.




Original article:

Share:

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால், அது புதுப்பிக்கப்பட வேண்டும் -வர்யா ஸ்ரீவஸ்தவா

 ஜனநாயகம் குறித்து வளர்ந்து வரும் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். குடிமக்களாகிய நாம் அதைக் கோராதவரை, நமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தாதவரை, நமது ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களைச் சரிசெய்ய முடியாது.


2024 மற்றும் 2025 க்கு இடையில், 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் பொது அல்லது குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடைபெறும். அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதில் அடங்கும். அமெரிக்காவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸின் (Freedom House) அறிக்கை, தொடர்ந்து 19 வது ஆண்டாக ஜனநாயக ஆட்சி குறைந்து வருவதைக் காட்டுகிறது. மக்கள், அரசியலில் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் ஆர்வமின்மை உள்ளது.  

 

இந்த ஆண்டு முக்கியமான ஜனநாயக முடிவுகளின் காரணமாக உலகளாவிய கண்காணிப்பு அமைப்புகள் பாதுகாப்புகளைப் புதுப்பித்து வருகின்றன. பல்வேறு பிராந்தியங்களில் தேர்தல்கள் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சுதந்திரமான தளங்களை சிவில் சமூகம் உருவாக்கி வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசியல் தகவல்தொடர்புக்கான விதிகளை புதுப்பித்து வருகின்றன. அதிகரித்து வரும் நமது மின்னணு உலகிற்கு உள்ளூர் அரசாங்கங்கள் தேர்தல் நடைமுறைகளை சரிசெய்து வருகின்றன.


ஜனநாயக அரசியலின் நடைமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நாம் ஒரு படி பின்னோக்க்கி சென்று ஜனநாயகம் முன்னேற்றதிற்கான செல்லும் வழியைக் கூட கருத்தில் கொள்ள வேண்டுமா? அப்படியானால், அதன் சிக்கல்களை சரிசெய்ய முடியுமா?


அண்மையில் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர் பென் கார்ஃபின்கெல் எழுதிய ஒரு கட்டுரையில், "ஜனநாயகம் என்பது ஒரு பற்றுதானா?" என்ற முக்கியமான கேள்வியைக் கேட்கிறார்.


நீண்ட காலமாக ஜனநாயகம் அசாதாரணமானது, பின்னர் 200 ஆண்டுகளில் பரவலாகிவிட்டது என்று கார்ஃபிங்கெல் குறிப்பிடுகிறார். அவர் டாரன் அசெமோக்லு (Daron Acemoglu) மற்றும் ஜேம்ஸ் ராபின்சனின் ஆராய்ச்சியை (James Robinson's research) மேற்கோள் காட்டுகிறார். இது, 200 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்மயமாக்கலால் உந்தப்பட்ட ஜனநாயகத்தின் தோற்றத்தை அடையாளம் காட்டுகிறது. அசெமோக்லு மற்றும் ராபின்சன் கருத்துப்படி, தொழில்மயமாக்கல் உயரடுக்கின் அரசியல் மற்றும் பொருளாதார விருப்பங்களை பொது மக்களின் விருப்பங்களுடன் சீரமைக்க உதவியது. இதன் மூலம் கூட்டு முடிவெடுப்பதற்கு இடமளித்தது. ஜனநாயகம் பற்றிய கார்ஃபிங்கலின் கட்டுரைக்கு அப்பால் நாம் பார்த்தால், 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகத்தின் எழுச்சிக்கான நியாயங்களை ஐரோப்பிய அறிவொளி அனுபவத்திலும், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மதிப்புகளிலும் காணலாம். மாற்றாக, உலகின் பிற பகுதிகளில், காலனித்துவத்தை எதிர்த்து ஜனநாயகம் கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தின் சமீபத்திய எழுச்சிக்கான நியாயத்திற்கு அப்பால், கார்ஃபிங்கெல் (Garfinkel) ஈடுபட முயற்சிக்கும் கேள்வி, தொழில்மயமாக்கலுக்கும் பரவலான தன்னியக்கமயமாக்கலுக்கும் இடையிலான இந்த சிறிய பள்ளத்தாக்கில் ஜனநாயகம் வாழுமா என்பதுதான். இதேபோன்ற கேள்வியை தியோடர் லெக்டர்மேன் (Theodore Lechterman) எழுப்புகிறார். அவர், செயற்கை நுண்ணறிவு ஜனநாயகத்தை வழக்கற்றுப் போகுமா என்று கேட்கிறார். இந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம், லெக்டர்மேன் (Lechterman) நமது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பொதுக் கோளங்களின் தன்மைக்கு நம் கவனத்தை ஈர்க்கிறார். "செயற்கை நுண்ணறிவு யுகத்திற்கான ஜனநாயகத்தின் நியாயத்தை மேம்படுத்த வேண்டும்" என்று முடிவு செய்ய, தொழில்நுட்பம் மற்றும் மின்னணு கற்பனாவாதத்தின் யோசனைகளுடன் அவர் ஈடுபடுகிறார். முடிவெடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார், இன்று நமக்கு நாமே ஒரு கேள்வி: யார் முடிவுகளை எடுப்பது, எப்படி?


உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக முடிவுகளை எடுக்கும் ஒரு தேர்தல் சுழற்சிக்கு நாம் தயாராகி வருகையில், கார்ஃபிங்கெல் (Garfinkel) மற்றும் லெக்டர்மேனின் (Lechterman's) கேள்விகள் பெருகிய முறையில் முக்கியமானவை.


நமக்கு ஜனநாயகம் வேண்டுமா?


ஜனநாயகத்தின் சட்டப்பூர்வத்தன்மை பற்றிய கேள்விகளுக்கு, அது பொதிந்துள்ள தார்மீக மதிப்புகள் மற்றும் ஒப்பீட்டளவில் சிறந்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் அதன் செயல்திறன் ஆகும். அரசியல் தத்துவவாதிகள் ஜனநாயகத்தைப் பற்றி அதிகம் படித்திருக்கிறார்கள். அதற்கான காரணங்களையும், எதிராகவும் எல்லா காரணங்களையும் ஆராய்ந்து பார்த்தார்கள். ஜனநாயகத்தில் உள்ள மக்கள் அது செயல்பட வேண்டும் என்று விரும்புவதால் அது செயல்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதன் நியாயத்தன்மை மக்களிடம் இருந்து வருகிறது என்கிறார்கள்.


உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளில் உள்ள குடிமக்கள் கருத்தில் கொள்ள வேண்டிய கேள்விகளை கார்ஃபிங்கெல் (Garfinkel) மற்றும் லெக்டர்மேன் (Lechterman) எழுப்புகின்றனர். 


"ஜனநாயகத்தை வலுப்படுத்த நம்பிக்கையை உருவாக்குதல்" (Building Trust to Reinforce Democracy) என்ற தலைப்பில் 2021 பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development(OECD)) வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு பத்து பேரில் நான்கு பேர் தங்கள் தேசிய அரசாங்கங்களை நம்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த நம்பிக்கை சரிவு முன்னர் குறிப்பிட்ட ஃப்ரீடம் ஹவுஸ் (Freedom House) அறிக்கையின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது. நாம் 2024ஐ நெருங்கும்போது, வாக்களிப்பதோடு, ஜனநாயக பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.


நல்ல செய்தி என்னவென்றால், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைக் கையாளக்கூடிய புதிய நிறுவனங்களையும் செயல்முறைகளையும் நாம் ஜனநாயகத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடியுமா என்று அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மார்க் கோக்கெல்பெர்க் (Mark Coeckelbergh) எங்களின் புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகம் சார்ந்த மின்னணு பொதுக் கோளங்களில் ஜனநாயகம் மற்றும் அறிவாற்றல் முகமையைப் படித்து வருகிறார். குடிமக்கள் கூட்டங்களில் தனது பணியின் மூலம் ஜனநாயகத்தின் சமூக அறிவியலைப் பற்றிய புதிய யோசனைகளை ஹெலீன் லாண்டேமோர் (Hélène Landemore) ஆராய்கிறார். நவீன ஜனநாயக நாடுகளில் சோபியா ரோசன்ஃபெல்ட் (Sophia Rosenfeld) உண்மையைப் பற்றி சிந்திக்கிறார். ஜெய்னெப் பாமுக் (Zeynep Pamuk), அறிவியல் ஜனநாயக முடிவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்கிறார். தாரேக் மசூத், ஜனநாயகத்தில் மதத்தின் பங்கைப் பார்க்கிறார். ராபர்ட் பி தாலிஸ் (Robert B Talisse), ஜனநாயக நாடுகளில் வேடிக்கை மற்றும் நட்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். எலிசபெத் கான்டலமேசா (Elizabeth Cantalamessa) ஜனநாயக வெற்றிக்காக உணர்ச்சியைத் தழுவிக்கொள்ள பரிந்துரைக்கிறார்.


நல்ல செய்தி என்னவென்றால், ஜனநாயகம் குறித்த இந்த கோட்பாடு மற்றும் ஆராய்ச்சி அனைத்தையும் நாமே இன்னும் செயல்படுத்த வேண்டும். 


2024-25 தேர்தல் சுழற்சி நெருங்கும்போது, அரசியல் குழப்பம், பொதுமக்களின் திகைப்பு மற்றும் குறைபாடுள்ள தேர்தல் முடிவுகளை நாம் காணலாம். தனியார் பொருளாதார நலன்களால் இயக்கப்படும் தவறான தகவல்களால் நிரப்பப்பட்ட ஒரு முனைப்படுத்தப்பட்ட பொதுக் கோளத்தை (polarised public sphere) காண்போம். அதிகாரம் தொடர்ந்து கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வெற்றியாளர்களின் கைகளில் குவிந்திருக்கும். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜனநாயகத்தின் புதிய கோட்பாடுகளை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த நாம் பணியாற்ற வேண்டும். குடிமக்கள் மாற்றத்தைக் கோராதவரை, தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தாதவரை, நமது ஜனநாயகத்தில் உள்ள விரிசல்களை நம்மால் சரிசெய்ய முடியாது.


ஜனநாயகம் என்பது சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து மாறும் ஒரு சோதனை ஆகும். இந்த ஆண்டு தேர்தல்கள் நமது ஜனநாயக முறைகளை மறுபரிசீலனை செய்ய நம்மைத் தூண்டும் ஒரு முக்கியமான தருணம். இந்த ஜனநாயக சவாலை நாம் எதிர்கொள்ளும்போது, சில நாடுகள் பயனுள்ள முடிவெடுப்பதில் போராடக்கூடும். ஆனால், சரியான செயல்களால், ஜனரஞ்சகவாதம் (populism) மற்றும் சர்வாதிகாரத்தின் (totalitarianism) அச்சுறுத்தல்களை நாம் சமாளிக்க முடியும்.




Original article:

Share:

பல சமகால தடுப்பூசிகள் ஏன் குறைந்த ஆயுள் கொண்டவையாக உள்ளன ? -விபின் எம்.வஷிஷ்ட், புனித் குமார்

 மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலான புதிய தலைமுறை தடுப்பூசிகள் குறுகிய கால பாதுகாப்பைக் கொண்டுள்ளன.


தட்டம்மை தடுப்பூசி பெற்ற பிறகு, மக்கள் பொதுவாக தங்கள் வாழ்நாள் முழுவதும் தட்டம்மையிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். தட்டம்மை தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தட்டம்மை தடுப்பூசி இன்று நம்மிடம் உள்ள வலிமையான தடுப்பூசிகளில் ஒன்றாகும். இருப்பினும், மற்ற பெரும்பாலான தடுப்பூசிகளுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்க பல பூஸ்டர் ஷாட்கள் (multiple booster shots) தேவைப்படுகின்றன.


சமீபத்திய மதிப்பாய்வு, தற்போது கிடைக்கக்கூடிய 34 தடுப்பூசிகள் அவற்றின் பாதுகாப்பு நோய் எதிர்ப்புச் சக்தியின் காலத்திற்கான மதிப்பாய்வை நாங்கள் சமீபத்தில் வெளியிட்டோம், மேலும் ஐந்து தடுப்பூசிகள் மட்டுமே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பாதுகாப்பை வழங்குவதையும் மூன்று மட்டுமே வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதையும் கண்டறிந்தோம். இந்த 34 தடுப்பூசிகளில், 15 தடுப்பூசிகள் 5 முதல் 20 ஆண்டுகள் வரை பாதுகாப்பை வழங்குகின்றன. அதே எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக நீடிக்கும் குறுகிய கால பாதுகாப்பை வழங்குகின்றன.


மிக முக்கியமாக, மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலான புதிய தலைமுறை தடுப்பூசிகள் குறுகிய கால பாதுகாப்பைக் கொண்டுள்ளன.


தடுப்பூசிகள் வெவ்வேறு நோயெதிர்ப்பு மறுமொழிகளை எவ்வாறு தூண்டுகின்றன?


தடுப்பூசிக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு சிக்கலான செயல்முறையை உள்ளடக்கியது. ஆரம்பத்தில், நமது நிணநீர் கணுக்கள் (lymph nodes) memory B செல்களை உருவாக்குகின்றன. இந்த செல்கள் ஒரு நோய்க்கு எதிராக நீண்டகால பாதுகாப்பை வழங்குகின்றன. தடுப்பூசி உடலுக்கு அறிமுகப்படுத்தும் ஆன்டிஜெனை அவைகள் நினைவில் கொள்கின்றன. அதே ஆன்டிஜென் கொண்ட வைரஸ் பின்னர் உடலில் நுழைந்தால், இந்த பி செல்கள் (B cells) செயல்படுத்தப்படுகின்றன. அவை வைரஸை அழிக்கவும், தொற்றுநோயை அழிக்கவும் நிறைய சக்திவாய்ந்த ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.


memory B செல்கள் வேலை செய்ய, அவைகளுக்கு டி செல்களின் (T cell) ஆதரவு தேவைப்படுகிறது. மேலும், டி செல்களை (T cell) செயல்படுத்தக்கூடிய தடுப்பூசிகள் மட்டுமே உடலில் memory B செல்களை உருவாக்க முடியும்.


மேலும், சில தடுப்பூசிகள், டைபாய்டு (typhoid) மற்றும் நிமோகாக்கல் (pneumococcal) போன்றவை. உடலில் பி செல் (B cell) உற்பத்தியைத் தூண்டுவதில்லை. சில நேரங்களில், நோய் எதிர்ப்பு சக்தியை நீண்ட காலம் நீடிக்க செல்களுக்கு வழக்கமான பூஸ்டர்கள் தேவைப்படுகின்றன. இது ஆறு மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை இருக்கலாம். தடுப்பூசிகள் நினைவக B செல்களை (B cell) உருவாக்கத் தூண்டுகின்றன, ஆனால் இந்த செல்களை வைத்திருப்பது எப்போதும் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தமல்ல.


தட்டம்மை (measles) மற்றும் ரூபெல்லா (rubella) தடுப்பூசிகளைப் பெற்ற பிறகு, இரத்தத்தில் உள்ள memory B செல்களின் அளவு நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியாக இருக்கும். இது பல ஆண்டுகளுக்குப் பிறகு இரத்தத்தில் காணப்படும் ஆன்டிபாடிகளின் அளவுடன் நன்றாக பொருந்துகிறது. இருப்பினும், சின்னம்மை (chickenpox), டெட்டனஸ் (tetanus) மற்றும் டிப்தீரியா (diphtheria) தடுப்பூசிகளுக்கு இது உண்மையல்ல. memory B செல்கள் இருப்பது எப்போதும் ஆன்டிபாடிகள் நீண்ட காலம் நீடிக்கும் என்று அர்த்தமல்ல என்று இது அறிவுறுத்துகிறது. காலப்போக்கில் ஆன்டிபாடி அளவை சீராக வைத்திருக்க உதவும் மற்றொரு வழியாக இருக்கலாம் என்று தெரிகிறது.


நீண்ட கால பிளாஸ்மா செல் (long-lasting plasma cell (LLPC)) எனப்படும் மற்றொரு முக்கியமான நோயெதிர்ப்பு உயிரணு உள்ளது. இந்த செல்கள் நிணநீர் கணுக்கலிருந்து (lymph node) எலும்பு மஜ்ஜைக்கு நகர்கின்றன மற்றும் இது, பல ஆண்டுகள் நீடிக்கும். தடுப்பூசி தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியில் நீண்ட கால பிளாஸ்மா செல்கள் (LLPC) முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பூசிகளை உருவாக்கும் போது, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த நீண்டகால பிளாஸ்மா செல்களை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும். இது பெரும்பாலும் நோயெதிர்ப்பு அறிவியலின் 'ஹோலி கிரெயில்' (holy grail) என்று குறிப்பிடப்படுகிறது.  தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் எலும்பு மஜ்ஜையில் இந்த செல்களை உருவாக்குவதில் சிறந்தவை ஆகும். ஆனால், mRNA கோவிட் -19 தடுப்பூசிகள் போன்ற சில வலுவான தடுப்பூசிகள், எலும்பு மஜ்ஜையிலும் இந்த செல்களை செயல்படுத்த முடியாது.


தடுப்பூசிகள் நீண்ட காலமாக மக்களைப் பாதுகாக்க, அவர்கள் எலும்பு மஜ்ஜையில் memory B செல்கள் மற்றும் நீண்ட கால பிளாஸ்மா செல்கள் (LLPC)  இரண்டையும் உருவாக்க வேண்டும். இதைச் செய்வதற்கான வெவ்வேறு தடுப்பூசிகளின் திறன் மாறுபடும். இது, சில தடுப்பூசிகள் மற்றவர்களை விட நீண்ட காலம் நீடிக்கும் என்பதை விளக்குகிறது.


ஏற்றத்தாழ்வை விளக்குதல்


தடுப்பூசியின் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பாதிக்கும் மூன்று முக்கிய வகை காரணிகள் உள்ளன: தடுப்பூசி தொடர்பான காரணிகள், தடுப்பூசி குறிவைக்கும் நோய்க்கிருமி தொடர்பான காரணிகள் மற்றும் தடுப்பூசி பெறும் நபர் தொடர்பான காரணிகள் ஆகும்.


தட்டம்மை, ரூபெல்லா, மஞ்சள் காய்ச்சல், சிக்கன் பாக்ஸ் மற்றும் வாய்வழி போலியோ போன்ற நேரடி வைரஸ் தடுப்பூசிகள் பொதுவாக கொல்லப்பட்ட நோய்க்கிருமிகளிலிருந்து அல்லது நோய்க்கிருமியின் சில பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை விட நீண்ட காலம் நீடிக்கும் பாதுகாப்பை வழங்குகின்றன. "வைரஸ் போன்ற துகள்" (virus-like particle (VLP)) தளங்கள் போன்ற புதிய தடுப்பூசி தொழில்நுட்பங்களும் நீண்டகால பாதுகாப்பை வழங்குகின்றன. மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus (HPV)). மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசிகள் வைரஸ் போன்ற துகள் (VLP) இயங்குதளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.


அடுத்து, ஹெபடைடிஸ் பி (hepatitis B) போன்ற பல-டோஸ் தடுப்பூசியின் அளவுகளுக்கு இடையே சரியான இடைவெளி முக்கியமானது. உதாரணமாக, ஹெபடைடிஸ் பி (hepatitis B) தடுப்பூசியுடன், முதல் டோஸுக்கும், பூஸ்டருக்கும் இடையில் குறைந்தது ஆறு மாதங்கள் இருக்க வேண்டும். இந்த நீண்ட இடைவெளி ஆன்டிஜெனை சரியாக செயலாக்கவும், வலுவான, நீடித்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உடலுக்கு உதவுகிறது. தடுப்பூசிகளில் துணை மருந்துகளைச் சேர்ப்பது தடுப்பூசிக்கு நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு பதிலளிக்கிறது மற்றும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை மாற்றுகிறது. டோல் போன்ற ஏற்பி அகோனிஸ்ட்கள் (Toll-like receptor (TLR agonists)) போன்ற சில புதிய துணைப்பொருட்கள், memory B செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேரடியாகப் பாதிக்கலாம்.


ஒரு தடுப்பூசி உங்களைப் பாதுகாக்கும் கால அளவும் அது எந்த வகையான கிருமிக்கு எதிராகப் பாதுகாக்கிறது என்பதைப் பொறுத்தது. சில வைரஸ்கள் உங்களை வேகமாகப் பாதிக்கின்றன, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்பட போதுமான நேரத்தை வழங்காது. கோவிட்-19க்கு காரணமான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (influenza virus) மற்றும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 வைரஸின் (SARS-CoV-2 viruses) நிலை இதுதான். இயற்கையான தொற்று அல்லது தடுப்பூசியிலிருந்து வந்தாலும், வேகமாக செயல்படும் இந்த வைரஸ்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி மிக நீண்ட காலம் நீடிக்காது.


நோய்த்தொற்றுகள் அல்லது தடுப்பூசிகள் பொன்னுக்கு வீங்கி (Mumps), தட்டம்மை (measles) மற்றும் மஞ்சள் காய்ச்சல் (yellow fever) போன்ற நீண்ட அடைகாக்கும் காலங்களைக் (longer incubation periods) கொண்ட வைரஸ்களை குறிவைக்கும்போது, இதன் விளைவாக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிக்கும். ஏனென்றால், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பதிலளிக்க அதிக நேரம் இருப்பதால் நீடித்த நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும்.


மறுபுறம், சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (SARS-CoV-2), இன்ஃப்ளூயன்ஸா (influenza) மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus) போன்ற முதன்மையாக சளி பகுதிகளில் மற்றும் இரத்தத்தில் அரிதாக தொற்றுநோய்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் நபருக்கு நபர் விரைவாக பரவக்கூடும். நமது நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக பதிலளிக்கும் முன்பே இந்த விரைவான நோய் பரவல் நிகழ்கிறது. இது, இந்த வைரஸ்களுடன் அடிக்கடி மீண்டும் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது.


தடுப்பூசியில் உள்ள வைரஸின் மரபணு நிலைத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் பாதிக்கிறது. தட்டம்மை (measles) மற்றும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (SARS-CoV-2) உள்ளிட்ட ஆர்.என்.ஏ வைரஸ்கள் விரைவாக உருமாறுகின்றன. இருப்பினும், 1954 ஆம் ஆண்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு விகாரத்திலிருந்து உருவாக்கப்பட்ட தட்டம்மை தடுப்பூசிக்கு புதுப்பிப்புகள் தேவையில்லை. இதற்கு நேர்மாறாக, வைரஸின் உருமாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள SARS-CoV-2 தடுப்பூசிகள் கடந்த நான்கு ஆண்டுகளில் பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளன.


காய்ச்சல் வைரஸில் அதிக உருமாற்ற விகிதங்கள் இருப்பதால் காய்ச்சல் தடுப்பூசிகளுக்கும் வருடத்திற்கு இரண்டு முறை புதுப்பிப்புகள் தேவைப்படுகிறது. தட்டம்மை வைரஸின் மேற்பரப்பு கிளைகோபுரோட்டீன் (glycoprotein) அதன் ஆன்டிஜெனிக் (antigenic) பண்புகளை பாதிக்க்கக் கூடிய உருமாற்றங்களுக்கு குறைவான வாய்ப்புள்ளது. இதற்கிடையில், சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (SARS-CoV-2) வைரஸின் ஸ்பைக் புரதத்தில் (spike protein) சில உருமாற்றங்கள் மட்டுமே அதன் ஆன்டிஜெனிக் தன்மையை கணிசமாக மாற்ற முடியும்.


அடுத்து, தடுப்பூசி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பாதிக்கும் காரணிகள். தடுப்பூசி போடப்படும் நபரின் வயது, தடுப்பூசியிலிருந்து வரும் ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் வலுவாக இருக்கும் என்பதைப் பாதிக்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பானது முழுமையாக வளர்ச்சியடையாததால் அல்லது வயதுக்கு ஏற்ப வலுவிழந்துவிட்டதால், மிக இளம் வயதிலும், மிகவும் வயதான வயதிலும் அதற்கான எதிர்வினை குறைவாக இருக்கும். பாலினத்தின் அடிப்படையில் நோயெதிர்ப்புக்கான தீர்வுகள் வேறுபடலாம். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் உடல்கள் பெரும்பாலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. கூடுதலாக, சமீபத்திய ஆய்வுகள் உடல் பருமன் தடுப்பூசி செயல்திறன் குறைவதை விரைவுபடுத்தலாம் என்று கூறுகின்றன.


ஒரு தடுப்பூசி செலுத்தப்படும் நாளின் நேரமும் முக்கியமானது. காலையில் போடப்படும் தடுப்பூசிகள் பின்னர் கொடுக்கப்பட்டதை விட வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. ஏனென்றால், சர்க்காடியன் கடிகாரம் (circadian clock) நோயெதிர்ப்பு-செல் செயல்முறைகளை பாதிக்கிறது. சைட்டோகைன் உருவாக்கம் (cytokine generation), செல் கடத்தல் (cell trafficking), டென்ட்ரிடிக் செல் (dendritic cell) செயல்பாடு மற்றும்  T and B cell செயல்பாடு ஆகியவை இதில் அடங்கும். ஒரு நல்ல இரவு தூக்கம் நோயெதிர்ப்பு தொடர்புகளை மேம்படுத்தலாம் மற்றும் நீண்ட கால பாதுகாப்பை அளிக்கும் என்று எலிகளுடன் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


புதிய உயிரியல் பொறியியல் தொழில்நுட்பங்கள் (New bioengineering technologies) வேகமாக வளர்ந்து வருகின்றன. நானோ துகள்கள் மற்றும் வைரஸ் போன்ற துகள் தடுப்பூசிகள் மூலம், ஆன்டிஜென் வேலன்ஸ் (antigen valence) மற்றும் அடர்த்தி நன்றாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஆன்டிஜென் உற்பத்தியை புதிய உயிர் பொருட்கள் மூலம் கட்டுப்படுத்தலாம் மற்றும் நிலைநிறுத்தலாம். புதிய உதவியாளர்கள் குறிப்பிட்ட உள்ளார்ந்த நோயெதிர்ப்புக்கான பாதைகளை செயல்படுத்த முடியும். நோயெதிர்ப்புக்கான உருவாக்கம் நீடித்து நிலைத்திருக்கும் வழிமுறைகள் மிகவும் தெளிவாகத் தெரிந்ததால், குறைந்த அளவுகளில் நீடித்த தடுப்பூசி-தூண்டப்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு நாம் தடுப்பூசிகளை ஒரு உத்தியாக உருவாக்கலாம்.


டாக்டர் விபின் எம்.வசிஷ்டா நோய்த்தடுப்புக்கான IAP Committee-ன் முன்னாள் கன்வீனராகவும், பிஜ்னோரின் மங்களா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் குழந்தை மருத்துவராகவும் உள்ளார். 

டாக்டர் புனீத் குமார் ஒரு மருத்துவர், குமார் சைல்ட் கிளினிக், புது தில்லி, தொற்று நோய்கள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் சிறப்பு ஆர்வம் கொண்டவர்.




Original article:

Share:

மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்வது குறித்து -ரங்கராஜன். ஆர்

 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951  (Representation of the People Act, 1951) இன் பிரிவு 123 (3), அரசியல் தலைவர்கள் பணம் அல்லது பரிசுகள் மூலம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ முடியாது என்று கூறுகிறது.


'சக்தி' (‘shakti’) குறித்த ராகுல் காந்தியின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இதே பிரச்னையை வைத்து பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டியதற்காக பிரதமருக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம்  புகார் அளித்துள்ளது.


சட்டம் என்ன சொல்கிறது?


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951) பிரிவு 123 (3), மக்களை அவர்களின் மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிக்கச் வாக்குகளை சேகரிப்பது  தவறு என்று கூறுகிறது. மேலும், பிரிவு 123(3A) (Section 123(3A)) தேர்தல்களின் போது சில காரணங்களின் அடிப்படையில் குடிமக்களிடையே விரோதம் அல்லது வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் வேட்பாளர்களின் எந்தவொரு செயலையும் கண்டிக்கிறது. ஊழல் குற்றங்களில் யாராவது சிக்கினால், அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம் என்றும்  மக்கள் பிரதிநிதித்துவச்  சட்டம் கூறுகிறது.


மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct (MCC)) என்ன கூறுகிறது?


மாதிரி நடத்தை விதிகள்  (Model Code of Conduct (MCC)) என்பது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான விதிகளின் தொகுப்பாகும். தேர்தலின் போது நியாயத்தையும் மரியாதையையும் பேணுவதை நோக்கமாகக் கொண்ட இந்த விதிகளைப் பின்பற்றுவதாக வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்றுவுள்ளனர். 1990 களில் தொடங்கப்பட்ட இந்த நெறிமுறை, எந்தக் கட்சியும் வேட்பாளரும் சாதி, மதம் அல்லது மொழியின் அடிப்படையில் தற்போதுள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் வெறுப்பு அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் எதையும் செய்யக்கூடாது என்று நடத்தை விதிகள் கூறுகிறது. ஜாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளை முன்வைத்து யாரும் வாக்குகளைப் பெற வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. மாதிரி நடத்தை விதிகள் ஒரு சட்டமாக இல்லாவிட்டாலும், கடந்த 30 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தால் இது வலுவாக அமல்படுத்தப்பட்டு, முக்கியத்துவம் பெறுகிறது.


வரலாறு என்ன?


1961 க்கு முன்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123 (3), ஒரு வேட்பாளர் மதம், இனம், சாதி அல்லது சமூகத்தின் அடிப்படையில் மேல்முறையீடு செய்தால், அது ஊழல் நிறைந்த தேர்தல் நடைமுறையாகக் கருதப்படும் என்று கூறியது. 1961 ஆம் ஆண்டில், ‘முறையான' (‘systemic’) என்ற வார்த்தையை நீக்குவதன் மூலம் சட்டம் மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தின் பொருள் என்னவென்றால், மதம் அல்லது வகுப்புவாத காரணங்களின் அடிப்படையில் ஒரு முறை வாக்குகளைக் கோருவது கூட சட்டத்திற்கு எதிரானது.


கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மத அடிப்படையில் வாக்கு கேட்டுள்ளனர். இந்த காரணத்திற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. இருப்பினும், இதற்காக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே பிரபலமான தலைவர் 1995 இல் சிவசேனாவின் பால் தாக்கரே (Bal Thackeray) ஆவார். இதுபோன்ற விதிமீறல்கள் நிகழும்போது, இந்திய தேர்தல் ஆணையம் வழக்கமாக தலைவர்களை சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்வதைத் தடுக்கிறது.


உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியுள்ளது?


2017 ஆம் ஆண்டில் அபிராம் சிங் vs சி.டி.கமாச்சின் (Abhiram Singh versus C. D. Commachen) வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு 4 க்கு 3 என்ற பெரும்பான்மையுடன் வேட்பாளர்கள் தங்கள் சொந்த மதம் அல்லது வாக்காளர்களின் மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கேட்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையான நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123 (3)ஐ ஒரு ‘ குறிக்கோளுடன் கூடிய விளக்கத்துடன்' (‘purposive interpretation’) விளக்கினர். அவர்கள் சரியான வார்த்தைகளுடன் மட்டும் ஒட்டவில்லை. இதன் பொருள் வேட்பாளர்கள் அல்லது வாக்காளர்களின் மதத்தின் அடிப்படையில் வாக்குகளுக்கான எந்தவொரு முறையீடும் ஊழல் நிறைந்த தேர்தல் நடைமுறையாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. அரசின் மதச்சார்பற்ற கடமைகளுடன் மதத்தை கலக்க அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, மதம் என்பது தனிப்பட்ட விஷயம் ( personal faith).


என்ன தேவை?


அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலின் போது தங்கள் மதம், சாதி, சமூகம் அல்லது மொழி காரணமாக குடிமக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியிருக்கலாம். நாட்டின் மதச்சார்பற்ற இயல்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுக்கு தீங்கு விளைவிக்காமல், சரியான கொள்கைகளுடன் இந்த பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் இதைச் செய்ய வேண்டும். மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கேட்பது நமது பன்முக சமுதாயத்தை இன்னும் பிளவுபடுத்தும்.


மத இடங்கள் பெரும்பாலும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மதத் தலைவர்கள் சில நேரங்களில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்கிறார்கள். அரசியலையும் மதத்தையும் தனித்தனியாக வைத்திருக்க இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கான முக்கிய பொறுப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களிடமே உள்ளது. மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வது நம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, சட்டத்தையும் மீறுகிறது. இந்த சட்டங்களை மீறுபவர்களை சமாளிக்க இந்திய தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களும் விரைவான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.


ரங்கராஜன் ஆர்.முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, 'அரசியல் எளிமைப்படுத்தப்பட்டது' (‘Polity Simplified’) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தற்போது 'ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமி'யில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.




Original article:

Share:

கர்நாடக இசை உலகில் ஒரு முரண்பாடான குறிப்பு - ஜி.ஆர்.கோபிநாத். கோபிநாத்

 விருது வழங்குவதில் உள்ள கருத்து வேறுபாடு வருத்தமளிக்கிறது, ஏனென்றால் வெவ்வேறு கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றிணைந்தால் இசை செழிக்கும்.


கர்நாடக இசையில் குறிப்பிடத்தக்க நபரான டி.எம்.கிருஷ்ணா, சமீபத்தில் தி மியூசிக் அகாடமி (The Music Academy), தமிழ்நாட்டின் மதிப்புமிக்க சங்கீத கலாநிதி விருதை (Sangita Kalanidhi award) வென்றார். அவர் ஒரு கலைஞர் மற்றும் ஒரு ஆர்வலர் ஆவார்.


ஒரு கலைஞராக, அவர் பாரம்பரியத்தை மதிக்கிறார். இருப்பினும், அவரது பார்வை புதுமையானது மற்றும் புதிய சாத்தியங்களை ஆராய்கிறது. அவர் கடந்த காலத்தை மதிக்கிறார், ஆனால் அது மட்டுப்படுத்தப்படவில்லை. ஓடும் மலை நீரோடை போல, ஒரு ஆர்வலராக, இசையின் களத்திலும், சமூக மற்றும் குடிமைப் பிரச்சினைகளிலும், அவர் காரணங்களை ஆதரிக்கிறார். குரல் இல்லாதவர்களின் குரலை வலுப்படுத்துகிறார். அவர் இசையில் பழமைவாத கருத்துக்களை சவால் செய்கிறார் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிக்கிறார். சர்ச்சைகளைக் கிளப்புவதை அவர் ரசிக்கிறார் என்று சிலர் கூறலாம்.

கலைஞரின் மேடை


திரு.கிருஷ்ணாவின் கச்சேரிகள், எப்பொழுதும் மனதை மயக்கும், தூண்டும், வியப்பூட்டும். அவர்கள் கலையின் தூய்மைவாதிகளை மகிழ்விப்பார்கள், அவாண்ட்-கார்ட் (avant-garde) கேட்போரை மகிழ்விப்பார்கள். மேலும், பக்தியுள்ள விசுவாசிகளை மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் ஆச்சரியப்படுத்துகிறார்கள். மதவெறியர்களுக்கு அவர் நீண்டகால நம்பிக்கைகளை அவமரியாதை செய்வதை விரும்புவதில்லை மற்றும் கோபமாக உணர்கிறார்கள். அவர் பழமைவாதிகளுக்கு சவால் விடும்போது நாத்திகர்களும், அஞ்ஞானவாதிகளும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பாரம்பரிய இசையை விரும்பும் வயதானவர்கள், அவரது வழக்கத்திற்கு மாறான வழிகள் இருந்தபோதிலும், தயக்கத்துடன் அவரைப் பாராட்டுகிறார்கள். நவீன இளைஞர்களும் பாரம்பரிய இசை மாணவர்களும் அவரை வணங்குகிறார்கள்.


இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் திறமையானவர், கவர்ச்சியான மற்றும் தைரியமானவர். அவர் ஒரு மரபுக் கொள்கை எதிர்ப்பாளர் (iconoclast). ஆனால், அவரது இசை மற்றும் அவரது பார்வைகள் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வங்கள் மற்றும் ஆழமான ஆராய்ச்சியால் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர் கிளாசிக்கல் இசை, கலை மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகளின் கைவினைஞர்கள் பற்றிய புத்தகங்களை எழுதியவர் மற்றும் அவர்களின் பழமையான கைவினைப்பொருள் மற்றும் அவர்களின் பாகுபாடு, அந்நியப்படுதல், புறக்கணிப்பு மற்றும் தெளிவின்மை ஆகியவற்றின் மீதான அவர்களின் அன்பான பக்தி. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கலை மற்றும் சமகால பிரச்சினைகளில் அயராது பேசுபவர், மற்றும் ஒரு துணிச்சலான ஆர்வலர். அவரது படைப்புகள் விமர்சகர்களின் பாராட்டையும் கோபத்தையும் ஈர்த்துள்ளன.


அவரது இசையும், செயல்களும் பெரும்பாலும் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றன. மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாத இவர், கோயில் திருவிழாக்களில் சமயப் பாடல்களைப் பாடி அனைவரையும் வசீகரித்து வருகிறார். அவர் ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் மாற்று சிந்தனை உடையவர். ஆனால், மரபுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. பாலின பாகுபாடு மற்றும் சாதியம் போன்ற பிரச்சினைகள் உட்பட நமது கலாச்சார மற்றும் சமூக விதிமுறைகளை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார் மற்றும் சவால் விடுகிறார். நம் சமூகத்தில் உள்ள போலித்தனங்கள் மற்றும் அரசியல் பிரச்சினைகள் பெரும்பாலும் பிரத்தியேகமானவை மற்றும் பாரபட்சமானவை என்பதை அவர் அம்பலப்படுத்துகிறார். இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.


அவர் வழக்கமான விதிகளைப் பின்பற்றாமல் இருக்கலாம். சில நேரங்களில் அவர் முரட்டுத்தனமாகவும் பெருமையாகவும் நடந்துகொள்கிறார். எல்லோரும் அவரை நேசிப்பதில்லை. ஆனால், அவர் சுவாரஸ்யமான விவாதங்களைத் தொடங்குகிறார் மற்றும் கலையை மிகவும் மாறுபட்டதாக ஆக்குகிறார். நாட்டுப்புற, புராண, கிளாசிக்கல், தாசா மற்றும் வசன சாகித்தியம் போன்ற பல வகையான கலைகளை அவர் கொண்டாடுகிறார். பழங்கால மற்றும் நவோதயா கவிதைகள், தலித் கவிதைகள், தமிழ்ப் பாடல்கள், சமஸ்கிருதப் பாடல்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து வரும் ஸ்லோகங்கள் (shlokas) மற்றும் சூஃபி இசை (Sufi music) ஆகியவற்றையும் அவர் ரசிக்கிறார்.


உதாரணமாக, பெங்களூரில் நடந்த ஒரு கச்சேரியில், பாடகர் தியாகராஜா, தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரி ஆகியோரின் கிளாசிக்கல் ராகங்கள் மற்றும் இசையமைப்பையும், புரந்தர தாசாவின் பாடல்களையும், பெருமாள் முருகனின் ஒன்று உட்பட தமிழ் பாடல்களையும் பாடினார். கூடுதலாக, அவர் கேரளாவைச் சேர்ந்த துறவி மற்றும் சீர்திருத்தவாதி நாராயண குருவின் (Narayana Guru) இசையமைப்பையும், பாகிஸ்தானின் தேசிய கீதத்தை எழுதிய பாகிஸ்தானிய கவிஞர் ஹபீஸ் ஜலந்தரியின் (Hafeez Jalandhari) கன்ஹையா (Kanhaiya) (கிருஷ்ணன்) பற்றிய அழகான உருது பஜனையும் பாடியுள்ளார். சில பாரம்பரிய விசுவாசிகளுக்கு, இது அவமரியாதையாக தோன்றியிருக்கலாம். திரு. கிருஷ்ணா, இசை என்பது அனைவராலும் தொடர்புபடுத்தக்கூடிய ஒன்று என்று நம்புகிறார்.


அவர் கலையை நேசிக்கிறார், அதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். அவர் முக்கிய ராகங்கள் மற்றும் இசையமைப்புகளைப் பாடும்போது, அவர் பாரம்பரிய வழிகளில் ஒட்டிக்கொண்டார். ஆனால், அவர் ஒவ்வொரு கச்சேரியிலும் புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறார். கீர்த்தனைகள், ராகங்கள், ஆலாபனைகள், தானம், பல்லவிகள், கல்பனாஸ்வரங்கள் மற்றும் நிரவல்கள் ஆகியவற்றை நிகழ்த்துவதில் அவரது நிபுணத்துவம் அவரது பார்வையாளர்களை வசீகரித்து மயக்குகிறது. அவரது நிகழ்ச்சிகள் கேட்பவர்களை ஆழமாக ஈடுபடுத்தும் ஒரு புதிய கண்ணோட்டத்தை கொண்டு வருகின்றன.

முனைப்படுத்துதல்


இவர் பெற்ற சங்கீத கலாநிதி பட்டம் இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் இசைக்கலைஞர்களின் அரசியல் மற்றும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிலர், மிகவும் பழமைவாதிகள், மற்றவர்கள் மிகவும் தாராளவாதிகள் இருக்க, சமூக ஊடகங்கள் பிரிவினையை தூண்டுவதாக தெரிகிறது. பெரியாரை பின்பற்றுபவர்களுக்கு எதிராக பிராமண  மற்றும் 'இந்துத்துவா' தீவிர செயல்பாட்டாளர்களின்  கோட்டையாக சென்னை இருப்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் கூட பாஜகவுக்கு எதிராக உள்ளது.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரபல பாரம்பரிய பாடகர்கள் ரஞ்சனி மற்றும் காயத்ரி ஆகியோர் வரவிருக்கும் மியூசிக் அகாடமியின் வருடாந்திர மாநாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். ஈ.வே.ரா. பெரியார் போன்ற பிராமண விரோத நபரை திரு.கிருஷ்ணா புகழ்வதை அவர்களால் கவனிக்க முடியவில்லை என்பது அவர்கள் எழுப்பிய கருத்துக்கள். 2017 ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற வித்வான் என்.ரவிகிரண், திரு.கிருஷ்ணா இந்திய பாரம்பரிய இசையை துருவப்படுத்தவும் சீர்குலைக்கவும் முயற்சிப்பதால் விருதைத் திருப்பித் தருவதாக அறிவித்தார். பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh) ஆகியவற்றுடன் இணைந்த சில எழுத்தாளர்கள் இந்த கலைஞர்களை ஆதரித்தனர். மேலும், "பிராமண வெறுப்பாளர்" (Brahmin hater) என கருதப்படும் ஒருவரை கௌரவித்ததற்காக மியூசிக் அகாடமியை விமர்சித்தனர்.


மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி, செல்வி ரஞ்சனிக்கும் மற்றும் காயத்ரிக்கும் எழுதிய கடிதத்தில், சங்கீத கலாநிதி (Sangita Kalanidhi) தேர்வு முழுக்க முழுக்க இசையின் சிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இவற்றில், வெளியாட்கள் தலையீடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தினார். பல ஆண்டுகளாக இசையில் சாதனை படைத்த டி.எம்.கிருஷ்ணாவை இந்த ஆண்டு தேர்வு செய்துள்ளனர்.


பாரம்பரியத்தின் பெயரால், நாம் பழைய முறைகளில் மிகவும் கடுமையாக இறுகப் பற்றிக் கொண்டால், எதிர்கால சந்ததியினரின் படைப்பாற்றலை நசுக்கிவிடும் அபாயம் உள்ளது. உண்மையான கலை, என்பது கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதல்ல, மாறாக வாழ்க்கை என்ற நீரோட்டத்துடன் பாய்ந்து, எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது ஆகும். ஒரு நதியைப் போலவே, இசையும் உருவாகி வளர வேண்டும். அதன் வளமான பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில் புதிய கருத்துக்களுடன் மலர வேண்டும்.


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திருவிழாவின் போது மியூசிக் அகாடமி மற்றும் பல்வேறு சபாக்களைப் புறக்கணிப்பதில் திரு.கிருஷ்ணா தவறிழைத்திருக்கலாம். இப்போது விழாவில் இருந்து விலகி விருதுகளைத் திருப்பித் தருபவர்களும் இதேபோன்ற தவறைச் செய்யக்கூடும்.


கலைஞர்களின் பங்கு


சில கலைஞர்கள் தங்கள் கலையில் மட்டுமே கவனம் செலுத்தி அதில் திருப்தி அடைகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த கலை வடிவங்களில் புதிய விஷயங்களைப் பரிசோதித்து உருவாக்குகிறார்கள். மற்றவர்கள் பாரம்பரிய கலை வடிவங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஆர்வலர்கள். அவர்கள் சமூகங்கள் மற்றும் கலாச்சார இடங்களில் உள்ள அநீதி மற்றும் சார்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள். சமூகத்திலும் அரசியலிலும் நடக்கும் அநீதிகளையும் விமர்சிக்கிறார்கள். வரலாறு முழுவதும், பல சிறந்த கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் இருந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த கலைஞர்களை மீறிய கிளர்ச்சியாளர்களாக இருந்தனர்.


ஒரு கலைஞன் ஒரு ஆர்வலராக மாறும்போது மற்றும் அந்த கலைஞர்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்போது அவரது பங்கு என்ன? காமுஸ் உருக்கமாகச் சொன்னது போல், “கலைஞர்களாகக் கருதப்படுவதால், உலகில் நமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால் ஆண்களாகக் கருதினால், ஆம்... துன்பம் மற்றும் அழகு இரண்டிற்கும் நாம் ஒரே நேரத்தில் சேவை செய்ய வேண்டும்”.


அகாடமியின், கலைஞர்களை ஆதரிக்கும் பல்வேறு செயலில் உள்ள சபாக்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட இசை மற்றும் கலைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். விவாதம், வாதம் மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் இசையை மேம்படுத்த ஆன்மீக நோக்கத்தில் அவர்கள் பணிவுடன் ஒன்றிணைய வேண்டும். நமக்குப் பின் வருபவர்களுக்கு நமது பாரம்பரியம் சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெவ்வேறு கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்கள் கலக்கும் போது கலை உண்மையிலேயே பிரகாசிக்க முடியும், இல்லையெனில் அது மிகவும் மூடப்படுவதால் பாதிக்கப்படலாம்.


புறக்கணிப்பதும், தவறான பெருமையுடன் எதிர்வினையாற்றுவதும் இரு தரப்பிலும் முதிர்ச்சியற்றது. தாகூர் கூறியது போல், "ஒரு கலைஞரின் பணி வாழ்க்கையின் கொண்டாட்டத்தில் படைப்பாற்றலைச் சேர்ப்பதும், மக்களுக்குள் இருக்கும் முடிவற்ற சாத்தியங்களை வெளிப்படுத்துவதும் ஆகும்”.


கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் ஒரு ராணுவ வீரர், விவசாயி மற்றும் ஏர் டெக்கானின் நிறுவனர் ஆவார்.




Original article:

Share: