பெரும்பாலான பிரிவுகளில் ரயில்கள் கொள்ளளவைவிட அதிகமாக இயங்கும் வழித்தடங்களால் உயர்நிலைப் பாதை வலையமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் அத்தகைய வழித்தடங்கள் எவை, அவற்றைக் குறைக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?
மும்பை புறநகர் வழித்தடத்தின் முக்கிய விரிவாக்கமான மகாராஷ்டிராவில் உள்ள 32 கி.மீ பத்லாப்பூர்-கர்ஜத் பிரிவில் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்தை கட்டமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது மும்பை புறநகர் வழித்தடத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது புறநகர் ரயில் திறனை அதிகரிக்கும். இந்தப் பிரிவு 1,238 கி.மீ நீளமுள்ள மும்பை-சென்னை உயர் அடர்த்தி வலையமைப்பில் ஒரு முக்கிய இணைப்பாகும். இது புனே, சோலாப்பூர், குண்டக்கல் மற்றும் அரக்கோணம் வழியாக மும்பையை சென்னையுடன் இணைக்கும் இந்திய ரயில்வேயின் மிகவும் பரபரப்பான பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.
ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்பு (High Density Network (HDN)) அல்லது வழித்தடங்களிலும் கூட்டத்தைக் குறைப்பதற்கான இந்திய ரயில்வேயின் நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாக, அமைச்சரவை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இவை மொத்த வலையமைப்பில் சுமார் 16% ஆகும். ஆனால், மொத்த ரயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்கிறது. இது அதிக அடர்த்தி கொண்ட இந்திய ரயில்வேயின் அடித்தளமாக உள்ளது. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளுடன், அதிக அடர்த்தி கொண்ட வலையமைப்பை சிறப்பாக நிர்வகிப்பது முக்கியம்.
வழித்தடங்கள்
ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்பு அல்லது HDN என்பது பயணிகள்-சரக்கு வழித்தடங்களால் உருவாக்கப்படுகிறது. அங்கு பெரும்பாலான பிரிவுகளில் ரயில்கள் கொள்ளளவைவிட அதிகமாக இயங்குகின்றன. இது நெரிசல், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களால் ஏற்படும் தாமதம் மற்றும் வலையமைப்பின் செயல்திறனை பாதிக்கிறது. இந்திய ரயில்வேயின் மொத்த 69,181 வழித்தட-கிமீ வலையமைப்பில், அதிக அடர்த்தி கொண்ட வலையமைப்பு 11,051 வழித்தட-கிமீ அல்லது மொத்தத்தில் 15.97 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த பரபரப்பான வழித்தடங்கள் வெவ்வேறு கிலோமீட்டர் வரம்புகளைக் கொண்ட 237 பிரிவுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.
"சரியான திறன் பயன்பாட்டிற்கு" (right capacity utilisation) ஒரு உலகளாவிய அளவுகோல் இல்லை என்றாலும், ரயில்களின் ஓட்டத்தை தடையின்றி வைத்திருக்க ஒரு ரயில் வலையமைப்பு அதன் மொத்த திறனில் 70-80 சதவீதத்தில் செயல்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.
ரயில்வே வாரியத்தின் திட்டமிடல் இயக்குநரகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பு (HDN) மொத்தப் பாதையில் 4.60 சதவீதம் மட்டுமே 80 சதவீதத்திற்கும் குறைவாகவே இயங்குகிறது. HDN-ன் 18.89 சதவீத திறன் பயன்பாடு (line-capacity utilisation) 80-100 சதவீதமாகவும், வலையமைப்பின் பயன்பாட்டில் 32.75 சதவீதம் 100-120 சதவீதமாகவும், 29.53 சதவீத வழித்தடம் 120-150 சதவீத பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், 14.11 சதவீத வலையமைப்பு 150 சதவீதத்திற்கும் அதிகமாக செயல்படுகிறது.
இந்த அறிக்கை, வழித்தடத்தில் உள்ள 237 பிரிவுகளில், 24 பிரிவுகள் (10%) மட்டுமே அவற்றின் திறனில் 80%-க்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. 41 பிரிவுகள் 80-100%-க்கும், 81 பிரிவுகள் 100-120%-க்கும், 58 பிரிவுகள் 120-150%-க்கும், 33 பிரிவுகள் அவற்றின் திறனில் 150%-க்கும் அதிகமாகப் பயன்படுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக, பத்லாப்பூர்-கர்ஜத்துக்குப் பிறகு வரும் மும்பை-சென்னை உயர்நிலைப் பாதையில் 28 கி.மீ. கர்ஜத்-லோனாவாலா பிரிவில், அதிகபட்ச கொள்ளளவு 40 ரயில்கள் என்றாலும், தினமும் சுமார் 67 ரயில்கள் இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன. இதன் விளைவாக திறன் பயன்பாடு 167 சதவீதமாக உயர்ந்தது.
இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த திறன் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது உயர்நிலைப் பாதை வலையமைப்பின் இந்த புள்ளிவிவரங்கள் மிக அதிகம். 2051-ஆம் ஆண்டு வரையிலான ரயில்வேயின் திட்டமிடலை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணமான தேசிய ரயில் திட்டத்தின்படி, மொத்த வலையமைப்பில் 45 சதவீதத்தில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 29 சதவீதம் 70-100 சதவீதத்திற்கும் இடையில் இயங்குகிறது. 25 சதவீதம் வலையமைப்பு 100-150 சதவீதத்திற்கும் இடையில் இயங்குகிறது. மேலும், ஒரு சதவீத வலையமைப்பு அதன் திறனைவிட 1.5 மடங்கு அதிகமாக அல்லது 150 சதவீதத்திற்கும் அதிகமாக ரயில்களை இயக்குகிறது.
உயர்நிலைப் பாதை வலையமைப்பின் பாதுகாப்பு
உயர்நிலைப் பாதை வலையமைப்பு நாட்டின் நான்கு பக்கங்களையும் உள்ளடக்கியது. ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்புகள்: டன்குனி, அசன்சோல், தன்பாத், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் சென்ட்ரல் வழியாக 1,422-கிமீ ஹவுரா-டெல்லி; 2,039-கிமீ ஹவுரா-மும்பை வழியாக காரக்பூர், டாடாநகர், ஜார்சுகுடா, பிலாஸ்பூர், நாக்பூர், பூசாவல் மற்றும் இகத்புரி; சூரத், கோத்ரா, ரத்லாம், நாக்டா, சவாய் மாதோபூர் மற்றும் மதுரா வழியாக 1322-கிமீ மும்பை-டெல்லி; மொராதாபாத், ரோஜா, கோண்டா, கோரக்பூர், கதிஹார், நியூ ஜல்பைகுரி மற்றும் ரங்கியா வழியாக 1,876-கிமீ டெல்லி - கவுகாத்தி; மதுரா, ஜான்சி, பினா, போபால், நாக்பூர், பல்ஹர்ஷா மற்றும் விஜயவாடா வழியாக 2,037-கிமீ டெல்லி-சென்னை; பத்ரக், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக 1,117-கிமீ ஹவுரா-சென்னை; மற்றும் மும்பை-சென்னை வழித்தடமாகும்.
ஹவுரா-டெல்லி வழித்தடத்தில் அல்லது உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1-ல், 31.34 கிமீ அல்லது இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே திறன் பயன்பாடு 80 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. இதேபோல், தங்க நாற்கர (Golden Diagonal) ரயில்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HDN 2 அல்லது ஹவுரா (கொல்கத்தா)-மும்பை வழித்தடத்தில், 85.2 கிமீ பாதை மொத்த ரயில் திறனில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
தங்க நாற்கரப் பாதையின் ஒரு பகுதியான உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 அல்லது டெல்லி-மும்பை வழித்தடம், எந்தவொரு பாதைக்கும் 150 சதவீதத்திற்கும் அதிகமான வழித்தட திறன் பயன்பாட்டைக் கொண்டிராத இரண்டு உயர்நிலைப் பாதை வலையமைப்புகளில் ஒன்றாகும். மொத்தம் 1224-கிமீ பாதை 80 சதவீதத்திற்கும் அதிகமான திறன் பயன்பாட்டுடன் நிறைவடைந்தது. மும்பைக்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் (Jawaharlal Nehru Port (JNPT)) முதல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி வரையிலான மேற்கத்திய அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் (Western Dedicated Freight Corridor (WDFC)) சரக்கு ரயில்களைக் கையாள உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 வழியாக செல்கிறது.
உயர்நிலைப் பாதை வலையமைப்பு 4 அல்லது டெல்லி-குவஹாத்தி வழித்தடம் டெல்லியை வடகிழக்கு மாநிலங்களுடன் மூன்று பெருநகர நகரங்கள் வழியாக இணைக்கிறது. பயணிகளுடன், இந்த பாதை சரக்குகளுக்கான அதிக தேவையையும் காண்கிறது. இந்த வழித்தடத்தில் 96 சதவீத வழித்தட கிமீ பாதை 80 சதவீதத்திற்கும் அதிகமான வழித்தட திறன் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
இதேபோல், உயர்நிலைப் பாதை வலையமைப்பு 5 அல்லது டெல்லி-சென்னை வழித்தடத்தில் கிட்டத்தட்ட 52 சதவீதமும், உயர்நிலைப் பாதை வலையமைப்பு 6 அல்லது ஹவுரா-சென்னை வழித்தடத்தில் 50 சதவீதமும், பாதை திறன் பயன்பாட்டில் 120-150 சதவீதத்துடன் நிறைவுற்றதாக உள்ளது. உயர்நிலைப் பாதை வலையமைப்பு 7 அல்லது மும்பை-சென்னை வழித்தடத்தில், 90 சதவீத ரயில்கள் அதன் மொத்த திறனில் 80-120 சதவீதம் வரை இயக்குகின்றன.
ரயில் கூட்டத்தை குறைக்கும் முயற்சிகள் (Decongestion efforts)
தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளுடன், உயர்நிலைப் பாதை வலையமைப்பில் நெரிசல் மிகவும் அதிகரிக்கும் என்று தேசிய ரயில் திட்டம் மதிப்பிட்டுள்ளது. இதனால், 2051-ஆம் ஆண்டுக்குள் எந்தப் பிரிவுகளும் 100 சதவீதத்திற்கும் குறைவான திறன் பயன்பாட்டுடன் இயங்காது என்றும், 92 சதவீத வலையமைப்புகள் 150 சதவீதத்திற்கும் அதிகமான திறன் பயன்பாட்டில் இயங்காது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், 2031-ஆம் ஆண்டுக்குள், மொத்த உயர்நிலைப் பாதை வலையமைப்பில் 50 சதவீதம் 150 சதவீதத்திற்கும் அதிகமான நெரிசலுடனும், 39 சதவீதம் 100-150 சதவீத திறனுடனும், 9 சதவீதம் அதன் திறனில் 70-100 சதவீதத்துடனும் இயங்கும் என்று ஆவணம் காட்டுகிறது.
பல நடவடிக்கைகள் ரயில்கள் சீராக இயங்க உதவுகின்றன. ஆனால், ஒரு நடைபாதையில் கூட்டத்தைக் குறைப்பதற்கான மிக முக்கியமான வழி தண்டவாளங்களை விரிவுபடுத்துவதாகும். இரட்டிப்பாக்குதல், மூன்றுமடங்கு, நான்கு மடங்காக அல்லது ஐந்து அல்லது ஆறு தண்டவாளங்களை உருவாக்குவது போன்ற கூடுதல் பாதைகளைச் சேர்ப்பதாகும்.
ரயில்வே அமைச்சகம் அதன் இரட்டிப்பாக்கத் திட்டங்களின் கீழ் பாதை விரிவாக்கத் திட்டங்களை எடுத்து வருகிறது. 2021-22ஆம் ஆண்டில் மொத்தம் 1,983 கி.மீ., 2022-23ஆம் ஆண்டில் 3,185.5 கி.மீ., 2023-24ஆம் ஆண்டில் 2,244 கி.மீ., மற்றும் 2024-25ஆம் ஆண்டில் 2,900 கி.மீ.க்கு மேல் இதுபோன்ற திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தரவு காட்டுகிறது.
இதனுடன், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (dedicated freight corridors (DFCs)) முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள மற்றும் மேற்கு பகுதியில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் 96.4% நிறைவடைந்துள்ளன. இந்த இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் உயர்நிலைப் பாதை வலையமைப்பிலிருந்து சில சரக்குப் போக்குவரத்தை நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் ரயில்களுக்கு அதிக இடம் கிடைக்கும்.
ரயில்வே வாரியத்தின் தரவுகளின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பின் 11,051 கி.மீ நீளத்தில், 250 கி.மீ. ஒற்றை பாதை, 8,113 கி.மீ. இரட்டை பாதை, 2,040 கி.மீ. மூன்று பாதை, 625 கி.மீ. நான்கு பாதை மற்றும் 23 கி.மீ. பென்டா/ஹெக்ஸா பாதைகள் உள்ளன. இந்த வழித்தடத்தின் 250 கி.மீ.க்கும் அதிகமான பகுதி இன்னும் ஒற்றைப் பாதையாக உள்ள வகைகளில் உயர்நிலைப் பாதை வலையமைப்பின் 4-ல் மட்டுமே உள்ளன. உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 5 ஆகியவை மட்டுமே penta/hexa பாதைகளைக் கொண்டுள்ளன. 212 கி.மீ நீளமான நான்கு மடங்கு பாதை உயர்நிலைப் பாதை வலையமைப்பு 2-ல் உள்ளது, அதைத் தொடர்ந்து உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1-ல் 187 கி.மீ மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3-ல் 126 கி.மீ. உள்ளன.
தேசிய ரயில் திட்டத்தின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 4 ஆகியவை முழு நீளத்திற்கும் மூன்று பாதையாக மேம்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதேபோல், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சரக்குத் தேவையை பூர்த்திசெய்ய உயர்நிலைப் பாதை வலையமைப்பு 2, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 6 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 7 ஆகியவற்றை முழு நீளத்திற்கும் மூன்று அல்லது நான்கு பாதைகளாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.
original link:
Seven corridors handle 41% of India’s rail traffic: How Railways plans to expand them.