மனநலம்: இந்தியாவின் மௌன நெருக்கடி - ஊர்வசி பிரசாத் & ஸ்ரேயா அஞ்சலி

 மோசமான வசதிகள், சமூக களங்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை.


ஒவ்வொரு ஆண்டும், உலக மனநல தினத்தன்று, "மனநலம் இல்லாமல் ஆரோக்கியம் இல்லை" (“there is no health without mental health.”) என்பதை நமக்கு நினைவூட்டுகிறோம். இருப்பினும், வரவு செலவு திட்டங்களில் மனநலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது மற்றும் கொள்கை வகுப்பில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.


இந்தியா மனநலப் பிரச்சினைகளின் பெரும் சுமையைச் சுமக்கிறது. உலகளாவிய நோய்ச்சுமை ஆய்வின்படி (The Global Burden of Disease study), 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, 197 மில்லியன் இந்தியர்கள், அதாவது மக்கள் தொகையில் சுமார் 14.6 சதவீதம் பேர், மனச்சோர்வு, பதற்றம், இருமுனைக் கோளாறு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் உள்ளிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


சிகிச்சை இடைவெளி மிகவும் விரிவானது. கடுமையான மனநலக் கோளாறு உள்ளவர்களில் 80%-க்கும் அதிகமானோர் வசதிகள் இல்லாமை, சமூக களங்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக எந்த சரியான கவனிப்பையும் பெறுவதில்லை. தேசிய மனநலக் கணக்கெடுப்பு (2015–16) 10.6% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு மனநலக் கோளாறை அனுபவித்ததாகக் கண்டறிந்துள்ளது, சிகிச்சை இடைவெளிகள் வெவ்வேறு பகுதிகள் மற்றும் கோளாறுகளில் 70% முதல் 92% வரை உள்ளன.


உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியாவின் தற்கொலை விகிதம் 100,000 பேருக்கு 21.1 ஆக இருந்தது. இது வளர்ந்துவரும் பிரச்சினையின் தீவிர அறிகுறியாகும்.


இந்த புள்ளிவிவரங்கள் மனநலம் ஒரு பொது சுகாதார நெருக்கடி மற்றும் வளர்ச்சிக்கான சவால் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.


கட்டமைப்பு இடைவெளிகள், கொள்கை குறைபாடுகள்


மீண்டும் மீண்டும் தேசிய அளவில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இந்த நெருக்கடி ஏன் நீடிக்கிறது?


மனித வள பற்றாக்குறை: 


இந்தியாவில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் சுமார் 0.75 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இது WHO பரிந்துரைத்த 100,000 பேருக்கு 3 பேர் என்பதைவிட இது மிகக் குறைவு. பல மாநிலங்களில், 100,000 பேருக்கு 0.3 அல்லது அதற்கும் குறைவான மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மனநல செவிலியர்கள், உளவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு இந்தப் பற்றாக்குறை இன்னும் மோசமாக உள்ளது.


குறைந்த முதலீடு: 


மனநலம் சுகாதார பட்ஜெட்டில் மிகச் சிறிய பங்கைப் பெறுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் தொகை மாறுபடும். ஆனால், பல மனநல சேவைகள் இன்னும் தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை ஆதரவுக்காகச் சார்ந்துள்ளது.





கொள்கை மற்றும் செயல்படுத்தல் இடைவெளி:


 2017ஆம் ஆண்டின் மனநலச் சட்டம் ஒரு நவீன சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. இது மனநலப் பராமரிப்புக்கான உரிமைகளை உறுதி செய்கிறது, மனநல மறுஆய்வு வாரியங்கள் போன்ற மேற்பார்வை அமைப்புகளை அமைக்கிறது மற்றும் நிறுவனமயமாக்கலை ஊக்குவிக்கிறது. இருப்பினும், இந்த விதிகளை செயல்படுத்த தேவையான அமைப்புகளை உருவாக்குவதில் பல மாநிலங்கள் மெதுவாக உள்ளன.

ஒருங்கிணைப்பு இல்லாமை: 


மனநல சேவைகள் முதன்மை சுகாதாரப் பராமரிப்பில் சரியாக சேர்க்கப்படவில்லை. மருத்துவமனைகள், முதியோர் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் பெரும்பாலும் உளவியல் ஆதரவு அமைப்புகள் இல்லை. நோயாளிகள் பொதுவாக நகரங்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும், இது பயண நேரத்தையும் செலவையும் அதிகரிக்கிறது, இது பலரால் வாங்க முடியாத ஒன்று.


தரவு இல்லாமை: 


மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மனநல சுகாதாரத்தில் முன்னேற்றம், விளைவுகள் அல்லது பொறுப்புணர்வை அளவிடுவதற்கு நிகழ்நேர, தரப்படுத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லை. அமைச்சகங்கள், மாநிலங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முயற்சிகளை தனிமைப்படுத்தி பயனற்றதாக வைத்திருக்கிறது.


மனநலம் என்பது வெறும் மருத்துவ அல்லது உளவியல் பிரச்சினை அல்ல. இது சமத்துவமின்மை, காலநிலை மன அழுத்தம், இடம்பெயர்வு மற்றும் இளைஞர்களின் விரக்தி ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது. இந்தியாவில், பெண்கள் அதிக மனநல சுமையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வீட்டு வன்முறை, பராமரிப்பு மன அழுத்தம் மற்றும் உதவியை நாடுவதைத் தடுக்கும் சமூக விதிமுறைகளைச் சமாளிக்கின்றனர். இதன் விளைவாக, அவர்களின் மனநலத் தேவைகள் பெரும்பாலும் காணப்படாதவை மற்றும் மோசமாக ஆதரிக்கப்படுகின்றன.


இந்தியாவின் வளர்ச்சி அதன் இளைஞர்களைப் பொறுத்தது. இருப்பினும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்கொலை விகிதங்கள் மற்றும் பதட்டம் மற்றும் மனச்சோர்வு வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளன. தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) தரவுகளின்படி, 2013 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில் மாணவர் தற்கொலைகள் 65 சதவீதம் அதிகரித்துள்ளன.


தீவிர வானிலை, கிராமப்புற துயரம், வாழ்வாதார இழப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை மனநலப் பிரச்சினைகளை மோசமாக்குகின்றன. உலகெங்கிலும் உள்ள ஆய்வுகள் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை மனச்சோர்வு, பதட்டம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலை நடத்தை அதிகரிப்புடன் தொடர்புடையவை என்பதைக் காட்டுகின்றன. கூடுதலாக, வேலைக்காக நகரங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக இடம்பெயர்தல், உடைந்த சமூக உறவுகள் மற்றும் நிலையற்ற வாழ்க்கை நிலைமைகள் மன உளைச்சலை அதிகரிக்கின்றன.


எதுவும் செய்யாமல் இருப்பதற்கான செலவு


மனநலத்தைப் புறக்கணிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது உற்பத்தித்திறனைக் குறைக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், பராமரிப்பாளர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்குகிறது. மனநலக் கோளாறுகள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் உலகளாவிய இழப்புகளை ஏற்படுத்துகின்றன என்று WHO மதிப்பிடுகிறது. இந்தியாவில், 2012 மற்றும் 2030ஆம் ஆண்டுக்கு இடையில், இது இழப்பு உற்பத்தித்திறன் மற்றும் நல்வாழ்வில் $1.03 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மருந்துகள் மற்றும் வாழ்வாதார ஆதரவு மூலம் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பது மக்களின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை மேம்படுத்துவதாகக் காட்டியது, சிகிச்சைக்குப் பிறகும்கூட நன்மைகள் நீடிக்கும் எனவே பராமரிப்பில் முதலீடு செய்வதன் அவசியத்தைக் காட்டுகிறது.


இந்தியாவில் தற்கொலை மட்டுமே மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மருத்துவச் செலவுகள், இழந்த உற்பத்தித்திறன் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகள் உட்பட $16 பில்லியனுக்கும் அதிகமாகும். இந்த எண்கள் பணத்தைவிட அதிகமாக பிரதிபலிக்கின்றன. அவை இழந்த மனித ஆற்றல், உடைந்த குடும்பங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பலவீனமான நம்பிக்கையைக் குறிக்கின்றன.


கொள்கை வரைவு


பொது சுகாதார முன்னுரிமையாக இந்தியா ஆறு முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்:


முதன்மை மருத்துவத்தில் உலகளாவிய மனநலம்: 


அனைத்து ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களிலும் (Ayushman Aarogya Mandirs (AAMs)) மனநல பரிசோதனை, ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்குங்கள். ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் குழுக்கள், முதன்மை பராமரிப்பு செவிலியர்கள் மற்றும் சமூக சுகாதார பணியாளர்களுக்கு (ASHAs) நிலையான கருவிகள், நெறிமுறைகள் மற்றும் தொலை-மனநல மருத்துவ ஆதரவுடன் பயிற்சி அளிக்க வேண்டும.


மனநல நிதியளிப்பு நோக்கம்: 


தேசிய மற்றும் மாநில அளவில் சுகாதார பட்ஜெட்டில் 5% மனநலத்திற்கு ஒதுக்கவும். மனநல சேவைகளை விரிவுபடுத்தும் மாநிலங்களுக்கு பொருத்தமான மானியங்களை வழங்கவும். அளவிடக்கூடிய பாதுகாப்பு, விளைவுகள் மற்றும் தரத்துடன் நிதியை இணைக்கும் சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.





பணியாளர் விரிவாக்கம் மற்றும் திறன் முடுக்கம்: 


உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல்-புற்றுநோய் நிபுணர்கள் உட்பட குறைந்தது 50,000 புதிய மனநல நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க ஐந்து ஆண்டு இலக்கை அமைக்கவும், விரைவான பயிற்சி, டிஜிட்டல் கற்றல் மற்றும் பணி-பகிர்வு மாதிரிகள், அதாவது சாதாரண ஆலோசகர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு ஆகியவற்றைப் பயன்படுத்தவும்,  மருத்துவ நிறுவனங்களை வலுப்படுத்தி தர அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும்.


தரவு, கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல்: 


சேவை வழங்கல், விளைவுகள், மாவட்ட அளவிலான இடைவெளிகள் மற்றும் குறைகளைக் கையாளுதல் ஆகியவற்றைக் கண்காணிக்க ஒரு தேசிய நிகழ்நேர மனநல தளத்தை உருவாக்க வேண்டும். இதில் பொது மற்றும் தனியார் வழங்குநர்கள் இருவரும் முக்கிய அளவீடுகளைப் புகாரளிக்க வேண்டும். வள ஒதுக்கீட்டை வழிநடத்த இந்தத் தரவைப் பயன்படுத்த வேண்டும்.


உரிமைகள், சமத்துவம் மற்றும் சட்டப் பாதுகாப்புகள்: 


மனநலச் சட்டம், 2017 முழுமையாக செயல்படுத்துதல், மனநல மறுஆய்வு வாரியங்கள் (MHRBs) சரியாக செயல்படுவதை உறுதி செய்தல், மனநல குறை தீர்க்கும் செயல்முறைகளை எளிதாக்குதல், தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் பாகுபாட்டைத் தடுத்தல், காப்பீடு மற்றும் பொதுத் திட்டங்களில் மனநல சேவைகள் உடல் ஆரோக்கியத்தைப் போலவே நடத்தப்பட வேண்டும் என்று சட்டப்பூர்வமாகக் கோருகிறது.


காலநிலை-எதிர்ப்பு மனநல உத்திகள்: 


பேரிடர் மீட்பு மற்றும் காலநிலை தழுவல் திட்டங்களில் உளவியல் சமூக ஆதரவைச் சேர்க்கவும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற காலநிலை அபாயங்களுக்கு ஆளாகக்கூடிய பகுதிகளில் மீள்தன்மை மையங்களுக்கு நிதியளிக்க வேண்டும். வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் இடப்பெயர்ச்சி போன்ற காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் அதிர்ச்சியைக் கையாள சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் வேண்டும்.


இந்த சீர்திருத்தங்கள் கடினமானவை. ஆனால், அவை எதுவும் செய்யாததால் ஏற்படும் உயிர் இழப்பு மற்றும் உற்பத்தித்திறனைவிட மிகவும் எளிதானவை மற்றும் மலிவானவையாகும்.


2025 உலக மனநல தினத்தன்று, இந்தியா சொற்களிலிருந்து செயலுக்கு மாற வேண்டும். தேவைப்படுபவர்களில் 80% பேர் போதுமான உதவியைப் பெறாத, மனநலம் பற்றி அமைதியாகப் பேசப்படும் ஆனால் முறையாகக் கவனிக்கப்படாத நாடாக நாம் இருக்க முடியாது.


மனநலம் ஒட்டுமொத்த சுகாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடலின் ஒரு பகுதியாக இருக்கும்போது, ​​நாம் நோய்க்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், அதன் கண்ணியத்தைப் பாதுகாப்போம், மீள்தன்மையை வளர்ப்போம், மனித ஆற்றலை மீட்டெடுப்போம். இதில் இந்தியா செயல்படுமா என்பது அல்ல, எப்போது செயல்படும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது.



Original article:

Share:

‘பணவீக்க இலக்கை’ நேர்த்தியாக்கல் - அஷிமா கோயல்

 வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் தங்கள் தனித்துவமான நோக்கங்களுக்கு ஏற்றவாறு நெகிழ்வுத்தன்மையுடன் பணவீக்க இலக்கைப் பயன்படுத்த வேண்டும்.

நெகிழ்வான பணவீக்க இலக்கு (flexible inflation targeting (FIT)) அமைப்பில் எந்தவொரு மாற்றமும், நெகிழ்வான பணவீக்க இலக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பும் பின்பும் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி எவ்வாறு செயல்பட்டது போன்ற தெளிவான தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.


நெகிழ்வான பணவீக்க இலக்கிற்க்கு முன்பு, 1970-ஆம் ஆண்டுகளில் இருந்து, இந்தியாவின் சராசரி நுகர்வோர் விலை பணவீக்கம் (consumer price inflation (CPI)) சுமார் 8.5%-ஆக இருந்தது. 2014-15-ல் நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சராசரி பணவீக்கம் சுமார் 5% ஆகக் குறைந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நெகிழ்வான பணவீக்க இலக்கிற்கு (FIT) பிறகு பணவீக்கம் தெளிவாகக் குறைந்தது.


நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) காலத்தில் மொத்த விலைக் குறியீடு (wholesale price index (WPI)) கூர்மையாக நகர்ந்தாலும், நுகர்வோர் விலை பணவீக்கம் ஏற்படும் மாற்றங்கள் குறைவாக இருந்தன என்பதை தரவு விளக்கப்படங்கள் காட்டுகின்றன. 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து மிகவும் நிலையான மைய அல்லது நீண்டகால பணவீக்கம் 4% ஆகவே உள்ளது. அதிக நிலையற்ற தலைப்பு பணவீக்கம் முக்கிய பணவீக்கத்துடன் ஒத்துப்போகிறது என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் பொருள் நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) குறைந்த மற்றும் நிலையான பணவீக்கத்தை அடைய உதவியுள்ளது.


1970ஆம் ஆண்டுகளில் இருந்து, மெதுவான பொருளாதார வளர்ச்சியின் காலங்களில், நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) (CPI-IW) அடிப்படையிலான உண்மையான வட்டி விகிதங்கள் பெரும்பாலும் 1.5%-க்கு மேல் இருந்ததாக தரவு காட்டுகிறது. இதுபோன்ற இரண்டு காலகட்டங்கள் 2017-18 முதல் 2019-20 மற்றும் 2024-25 நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) அமைப்பின் கீழ் நிகழ்ந்தன. இதன் பொருள் எதிர்காலத்தில் இதே போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) சரிசெய்தல் தேவை ஏற்படுகிறது.


இருப்பினும், நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) முற்றிலுமாக அகற்றுவது தீர்வாகாது. நெகிழ்வான பணவீக்க இலக்கிற்கு (FIT) முன்பே, 1990-ஆம் ஆண்டுகளில், அதிகப்படியான பண இறுக்கத்தின் காலகட்டங்கள் இருந்தன. மேலும், 1970-ஆம் ஆண்டு மற்றும் 2010-ஆம் ஆண்டுகளின் முற்பகுதி போன்ற மிக அதிக பணவீக்க காலங்களில், உண்மையான வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தபோதும் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது. மறுபுறம், மொத்த விலைக் குறியீடு (wholesale price index (WPI)) அடிப்படையிலான அதிக உண்மையான வட்டி விகிதங்கள் வளர்ச்சியை அதிகம் பாதிக்காது. ஏனெனில், அவை பொதுவாக எரிபொருள் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைவதால் வருகின்றன. இது நுகர்வோர் மற்றும் வணிகங்கள் இரண்டிற்கும் உதவுகிறது.

















FIT அளவுருக்களை சரிசெய்தல்


ரிசர்வ் வங்கியின் விவாதக் கட்டுரை, பெரும்பாலும் விஷயங்களை அப்படியே வைத்திருக்க உதவும் வரையறுக்கப்பட்ட கேள்விகளைக் கேட்கிறது. வீட்டுச் செலவினங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் இன்னும் பெரிய பங்கைக் கொண்டிருப்பதால், பணவீக்கம் முக்கிய இலக்காக இருக்க வேண்டும். உணவு விலைகள் பணவீக்கத்தைப் பற்றி மக்கள் எப்படி உணருகிறார்கள் என்பதையும் பாதிக்கின்றன. மேலும், அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளையும் பாதிக்கின்றன.


நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) காலத்தில், சராசரி பணவீக்க விகிதம் 5% ஆக இருந்தது. அதே நேரத்தில் முக்கிய அல்லது நீண்டகால பணவீக்கம் 4%-ஆக இருந்தது. பணவீக்கத்தின் மிகவும் நிலையற்ற பகுதிகள் பொதுவாக இந்தப் போக்கை நோக்கி நகர்கின்றன. விரிவான தொழில்துறை தரவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், பணவீக்க எதிர்பார்ப்புகள் சுமார் 3% ஆகும். பெரிய விநியோக அதிர்ச்சிகளின் தாக்கம் குறைவாக இருந்தாலும், ஒப்பீட்டு விலைகளை சரிசெய்ய இது இன்னும் போதுமானதாக இருந்தது.


இதன் பொருள் பணவீக்க எதிர்பார்ப்புகள் இப்போது 4% சுற்றி நிலைபெறுகின்றன. இது எதிர்காலத்தில் கட்டுப்பாட்டாளர்களால் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை வழிநடத்தக்கூடும். நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) காலத்தில் குறைந்த பணவீக்கம் வட்டி பரவல்கள், கட்டணங்கள் மற்றும் கடன் வாங்கும் செலவுகளைக் குறைக்கவும் உதவியது.


தொடர்ச்சியான விநியோக அதிர்ச்சிகள் காரணமாக பணவீக்கம் இரு திசைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டிவிட்டதால், வரம்பைக் குறைக்கக்கூடாது. அதை அகலமாக வைத்திருப்பது பொருட்களின் குறுகிய கால விலை ஏற்றங்களை புறக்கணிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், சந்தைகளுக்கு வழிகாட்ட இன்னும் தெளிவான எண் தேவை, எனவே ஒரு வெளிப்படையாக மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.


நெகிழ்வான பணவீக்க இலக்கின் (FIT) முக்கிய நன்மை என்னவென்றால், அது தனிப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் முடிவுகளைக் குறைக்கிறது. ஆனால், இது சிறப்பாக செயல்பட, நிறுவன நினைவாற்றல் மற்றும் தொடர்ச்சியை வலுப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு நடந்தது போல், அனைத்து நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில் மாற்றக்கூடாது.


ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் இலக்காக இருந்தாலும், முக்கிய பணவீக்கத்தின் கணிப்புகளும் பொதுவில் பகிரப்பட வேண்டும். இது பொருட்களின் விலைகளில் குறுகிய கால மாற்றங்களுக்குப் பதிலாக நிலையான போக்கில் மக்கள் கவனம் செலுத்த உதவுகிறது. 2000-ஆம் ஆண்டில், அதிகரித்துவரும் உணவுப் பணவீக்கம் பற்றிய அடிக்கடி வரும் அறிக்கைகள் பணவீக்கம் எப்போதும் அதிகமாக இருப்பதாக மக்களை நம்ப வைத்தன.


பணவீக்கம் குறையும்போது, ​​தற்காலிக அடிப்படை விளைவுகள் தவறாக வழிநடத்தும் மாற்றங்களை உருவாக்கலாம். எனவே, அடிப்படை விளைவுகளைவிட வேகத்தில் கவனம் செலுத்தும் சராசரி கணிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அவை மிகவும் துல்லியமான முடிவுகளைத் தருகின்றன.


RBI இன் பணவீக்க முன்னறிவிப்புகள் பொதுவாக எச்சரிக்கையாக இருக்கும் மற்றும் கடந்தகாலப் போக்குகளைப் பின்பற்ற முனைகின்றன. சந்தைகள் கொள்கையை கணிக்க RBI-ன் கணிப்புகளை நம்பியிருப்பதால், மேலும் தன்னாட்சி கணிப்புகளும் கிடைக்க வேண்டும். நெகிழ்வான பணவீக்க இலக்கின் (FIT), பணவீக்க குறியீடுகளை தொடர்ந்து புதுப்பித்தல் மற்றும் மறுஅடிப்படையாக்குதல் ஆகியவற்றைப் பொருத்தமாக வைத்திருக்க வேண்டும்.


எதிர்பாராத பணப்புழக்க அதிர்ச்சிகள் ஏற்பட்டாலும், குறுகியகால கோரிக்கை கடன் விகிதம் (call money rate) ரெப்போ விகிதத்திற்கு அருகில் இருக்க வேண்டும். நீண்டகால பணப்புழக்க மேலாண்மைக்கான அதிகாரத்தை நாணயக் கொள்கைக் குழுவிற்கு வழங்குவது, அமைப்பை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் மற்றும் நிலையற்ற தன்மையைக் கையாள்வதில் சந்தை நம்பிக்கையை வலுப்படுத்தும்.





நெகிழ்வுத்தன்மையைப் புரிந்துகொள்வது


அதிக பணவீக்க காலத்திற்குப் பிறகு இந்தியா நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) கட்டமைப்பை விரைவாக ஏற்றுக்கொண்டது. இது பெரும்பாலும் முன்னேறிய பொருளாதாரங்களில் பயன்படுத்தப்படும் நிலையான மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இந்த மாதிரியில் நெகிழ்வுத்தன்மை என்பது பணவீக்கத்திற்கான வரம்பையும் இலக்கை அடைய அதிக நேரத்தையும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், இந்தியாவின் அமைப்புக்கு வளர்ந்துவரும் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்கள் தேவை.


ரிசர்வ் வங்கி புத்திசாலித்தனமாக பொதுமக்களின் கருத்துக்களை முன்கூட்டியே கேட்டுள்ளது. இது ஒரு தேசிய விவாதத்தின் மூலம் விவாதம் மற்றும் தெளிவுபடுத்தலுக்கான நேரத்தை அனுமதிக்கிறது. இத்தகைய பங்கேற்பு நெகிழ்வான பணவீக்க இலக்கின் (FIT) புரிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும், குறிப்பாக பல சந்தை வல்லுநர்கள் அதை மிகவும் கடுமையாகப் பார்ப்பதால்.


உள்ளூர் நிலைமைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முந்தைய "பல குறிகாட்டி அணுகுமுறை" (“multiple indicator approach,”) இன்னும் தொடர்கிறது என்பது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பணவீக்கம் மற்றும் வளர்ச்சி இரண்டையும் பாதிக்கும் அனைத்து காரணிகளையும் பணவியல் கொள்கைக் குழு (MPC) கருதுகிறது. சிறந்த தகவல்தொடர்புக்காக, ரிசர்வ் வங்கி இப்போது இந்த சிக்கலை இரண்டு முக்கிய மாறிகளாக எளிதாக்குகிறது. அதிகாரப்பூர்வ அறிக்கைகள் நெருக்கமான கவனத்தை ஈர்க்கும் ஒரு நாட்டில், இந்த தெளிவான தகவல்தொடர்பு பணவீக்க எதிர்பார்ப்புகளை விரைவாக நிலைநிறுத்த உதவுகிறது. பொருளாதாரம் வளர்ந்து பன்முகப்படுத்தப்படுவதால், எதிர்பாராத அதிர்ச்சிகள் சிறிய, குறுகியகால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் மிகவும் நிலையானதாகின்றன.


இருப்பினும், பணவீக்க எதிர்பார்ப்புகள் எவ்வாறு நிலைநிறுத்தப்படுகின்றன என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை ஆய்வு செய்யவில்லை. இது முக்கியமானது, ஏனெனில், இது ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய வழியாகும். அதே நேரத்தில் வழக்கமான தேவை-சார் விளைவுகள் (demand-side effects) பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கின்றன.


வளர்ந்துவரும் சந்தை (Emerging Market (EM)) மத்திய வங்கிகளும் பல கருவிகளை ஒன்றாகப் பயன்படுத்த வேண்டும். முன்னேறிய பொருளாதாரங்களில் (AEs), கடுமையான பணவீக்க இலக்கு வேலை செய்கிறது.  ஏனெனில் அவை மாற்று விகிதத்தை சுதந்திரமாக நகர்த்தவும், பணப்புழக்கத்தை இயற்கையாகவே சரிசெய்யவும் அனுமதிக்கின்றன. ஆனால், இந்த அமைப்பு வளர்ந்துவரும் சந்தைகளில் வேலை செய்யாது, அங்கு மாற்று விகிதக் கொள்கைக்கு தலையீடுகள், இருப்புக்களை உருவாக்குதல் மற்றும் விவேகமான நடவடிக்கைகளைப் பயன்படுத்துதல் தேவை. இந்த கருவிகள் அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பெரிய வெளிப்புற அதிர்ச்சிகளின் போது அல்லது சந்தைகள் பிரிக்கப்படும்போது, ​​மத்திய வங்கிகள் உபரி பணவீக்கத்தை பராமரிக்க வேண்டும்.


வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பொருளாதார வளர்ச்சி முக்கியம். ஆனால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிக பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். வளர்ந்து வரும் சந்தைகள் நிலையற்ற பொருட்களின் விலைகள் மற்றும் விநியோக சிக்கல்களுக்கு ஆளாகின்றன. நிதி நடவடிக்கைகள் விநியோக-சார் பணவீக்கத்திற்கு சிறப்பாக செயல்படுவதால், முழுமையான சுதந்திரத்தைவிட, மத்திய வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அவசியம். அரசியல் மாற்றங்கள் இருந்தபோதிலும் இந்த ஒருங்கிணைப்பு தொடர்வதை உறுதிசெய்ய, பொருட்களின் விலைகளை நிர்வகிப்பதற்கான சில பொறுப்புகளை முறையாக அரசாங்கத்திற்கு வழங்க முடியும். இது நீண்டகால உற்பத்தித்திறன் சார்ந்த நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும். வரையறுக்கப்பட்ட வளர்ந்துவரும் சந்தை வளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும்.


உலகளாவிய எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப எண்ணெய் கலால் வரிகளை சரிசெய்ய ஒரு தெளிவான திட்டத்தை வகுக்க முடியும். அதே நேரத்தில், இந்தியாவின் எண்ணெய் சார்பைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் தொடரலாம்.


நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) இன் கீழ் திருத்தப்பட்ட RBI சட்டத்தின் முன்னுரை, வங்கியை "வளர்ச்சியை மனதில் கொண்டு விலை நிலைத்தன்மையைப் பராமரிக்க" வழிநடத்துகிறது. வளர்ந்த இந்தியாவின் தேசிய இலக்குகளை சிறப்பாக பிரதிபலிக்க, இதை "வளர்ச்சியைப் பாதுகாக்கும் அதே வேளையில் விலை நிலைத்தன்மையைப் பராமரிக்க" என்று மாற்றலாம்.


பணவியல் கொள்கை கட்டமைப்பின் தொடர்ச்சியான மதிப்பாய்வு கடந்த கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு மேம்பாடுகளைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும். RBI விவாதக் கட்டுரை முழுமையாக இல்லாவிட்டாலும், இதைப் பற்றி விவாதிக்கிறது. ஆனால், பல மத்திய வங்கிகளில் அவ்வப்போது மதிப்பாய்வுகள் அமைப்பை வலுப்படுத்தியுள்ளன என்று அது குறிப்பிடுகிறது.


எழுத்தாளர் நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) முன்னாள் உறுப்பினர் ஆவார்.



Original article:

Share:

இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) பொறுப்பு மற்றும் செயல்பாடு என்ன? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி:


தரவுத் தொகுப்புகள் மற்றும் பிற கணக்கீட்டு வளங்கள் மீதான கட்டுப்பாட்டின் காரணமாக, பெரிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் (AI) நியாயமற்ற சந்தை நன்மையைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், இந்தியாவின் வளர்ந்துவரும் AI சந்தை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய "கட்டமைப்பு சவாலாக" அறியப்பட்டதாக, இந்திய போட்டி ஆணையம் (CCI) வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.


முக்கிய அம்சங்கள் :

— விலைகளை நிர்ணயிப்பதற்காக வழிமுறைகள் மூலம் AI நிறுவனங்கள் கூட்டுச் சேர்வதால் ஏற்படும் அபாயங்களை போட்டி கண்காணிப்பு அமைப்பு எடுத்துக்காட்டியது. நிதி மற்றும் திறமையான ஊழியர்களைப் பெறுவதில் சிறிய AI நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் இது குறிப்பிட்டது.


— AI வளர்ச்சியை நிர்வகிக்க இந்தியாவில் ஒழுங்குமுறை கருவிகள் இருப்பதாக ஆய்வு கூறியது. இருப்பினும், AI-ஐ பாதுகாப்பாகவும், நெறிமுறையாகவும், உள்ளடக்கியதாகவும் பயன்படுத்த சரியான பாதுகாப்புகள், வெளிப்படைத்தன்மை விதிகள் மற்றும் தொழில்துறை தலைமையிலான சுய கட்டுப்பாடு ஆகியவற்றின் அவசியத்தை அது வலியுறுத்தியது.


— நியாயமான போட்டியை ஊக்குவிக்க, நிறுவனங்கள் தங்கள் நிர்வாக செயல்முறைகளைப் பதிவு செய்வதன் மூலம் சுய தணிக்கைகளைச் செய்ய வேண்டும் என்று CCI பரிந்துரைத்தது.


— ஒரு முக்கிய AI கவலை பொறிமுறை கூட்டுச் சேர்க்கை (algorithmic collusion) ஆகும். அங்கு AI விலை நிர்ணய வழிமுறைகள் காலப்போக்கில் ஒத்த விலைகளை நிர்ணயிக்கக் கற்றுக்கொள்கின்றன.


— இது நேரடி மனித ஈடுபாடு இல்லாமல்கூட விலை நிர்ணயம்போல செயல்படக்கூடும். இது கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிந்து கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது.


— இந்த ஆய்வை வடிவமைக்கும்போது நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பங்குதாரர்களிடையே AI- வசதியளிக்கப்பட்ட கூட்டு முயற்சி மிகப்பெரிய கவலையாக இருந்தது. அதைத் தொடர்ந்து விலை பாகுபாடு மற்றும் அதிகரித்த நுழைவு தடைகள் இருந்தன. இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு (67 சதவீதம்) AI தொடக்க நிறுவனங்கள், அவற்றை இயக்கும் முக்கிய அடித்தள அடுக்கை விட, பயன்பாட்டு அடுக்கில் கவனம் செலுத்துவதால் கவலைகள் மேலும் அதிகரிக்கின்றன.


— குருகிராமை தளமாகக் கொண்ட மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (MDI) CCI-க்காகத் தயாரித்த இந்த ஆய்வு, AI மேம்பாடு மற்றும் பயன்பாடுகளில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்காக நிறுவன சுய தணிக்கைகளைப் பரிந்துரைத்தது.


உங்களுக்குத் தெரியுமா?


— AI பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் மையத்தில், குறைந்த முயற்சியில் அதிக சாதனைகளை அடைவதாக இது உறுதியளிக்கிறது. இது புதுமைகளை செயல்படுத்துகிறது மற்றும் செயற்கை பொது நுண்ணறிவு (AGI) அடையப்பட்டால் மனிதனைப் போன்ற நுண்ணறிவுடன் இயந்திரங்கள் மற்றும் தளங்களை உருவாக்க முடியும். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் AI முன்னேற்றத்தை துரிதப்படுத்த முடியும்.


— இந்தியா தற்போது AI-ல் உலகளாவிய கூட்டாண்மை (Global Partnership on AI (GPAI)) அமைப்பிற்க்கு தலைமை தாங்குகிறது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் AI-ன் எதிர்காலத்தை வடிவமைக்க நம்பகமான கூட்டாண்மைகளை ஊக்குவித்து வருகிறது. நிர்வாகத்தை மேம்படுத்துவதில் GovAI உடனான அதன் வெற்றி, AI அணுகக்கூடியதாகவும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.


— கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India), போட்டிச் சட்டம் (Competition Act) 2002 மூலம் போட்டிச் சட்டத்தை அமல்படுத்துகிறது.


— ராகவன் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, ஏகபோகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம், 1969 (MRTP சட்டம்) ரத்து செய்யப்பட்டு, போட்டிச் சட்டம், 2002-ஆல் மாற்றப்பட்டது.


— சட்டத்தின் முன்னுரை மற்றும் பிரிவு 18-ல் கூறப்பட்டுள்ளபடி, போட்டிக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை அகற்றுதல், போட்டியை ஊக்குவித்தல் மற்றும் பராமரித்தல், நுகர்வோர் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியாவில் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு ஆணையம் பொறுப்பாகும்.



Original article:

Share:

இருமல் மருந்து இறப்புகள்: ஒரு ஒழுங்குமுறை அமைப்பு போலி மருந்து மோசடிகளை உடைக்க முடியாது. இந்தப் பணிக்கு காவல்துறையின் பங்கேற்பு தேவை. -கேசவ் குமார் மற்றும் நிகிதா ஓபல்

 போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையானது (Drug Control Department) நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், காவல்துறை செயல்பாட்டுத் திறன், புலனாய்வு சேகரிப்பு மற்றும் வழக்குத் தொடுப்பதில் அனுபவத்தை வழங்குகிறது. ஒழுங்குமுறை மற்றும் குற்றவியல் சட்டத்தின் ஒருங்கிணைப்பு, அமலாக்கம் இணக்கச் சோதனைகளில் நின்றுவிடாமல், குற்றவியல் நிறுவனங்களைத் தகர்க்கும் வரை நீட்டிக்கப்படுவதை உறுதி செய்யும்.


இந்தியாவின் மருந்துத் தொழில் பெரும்பாலும் "உலகின் மருந்தகம்" (pharmacy of the world) என்று அழைக்கப்படுகிறது. அது இப்போது வளர்ந்துவரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கட்டுப்பாடில்லாமல் பரவி வருகின்றன. இது பொது சுகாதாரத்தையும் நாட்டின் நம்பகத்தன்மையையும் அச்சுறுத்துகிறது. பல மாநிலங்களில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு தனிப்பட்ட வழக்குகள் அல்ல. அவை ஒரு முறையான தோல்வியைக் காட்டுகின்றன. இந்த போலி மருந்துகளுக்குப் பின்னால் உள்ள சிக்கலான, ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியாவின் விசாரணை மற்றும் வழக்குத் தொடுக்கும் அமைப்புகள் போதுமானதாக இல்லை.


இந்தியாவில் போலியான போதைப்பொருள் வழக்குகளுக்கான தண்டனை விகிதம் வெறும் 5.9 சதவீதமாக உள்ளது. மேலும், நடைமுறைச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, பயனுள்ள தண்டனை விகிதம் 3 சதவீதத்தைத் தாண்டும். போதைப்பொருள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 (Drugs and Cosmetics Act(D&C))-ன் கீழ் புலனாய்வு செயல்முறைகள் போதுமானதாக இல்லை என்பதைக் காட்டுகிறது. இது நவீன நாடுகடந்த குற்றங்களுக்கு இந்த சட்டம் மிகவும் பொருத்தமானதல்ல. தரவு பகுப்பாய்வு, தடயவியல் வரைபடம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான உளவுத்துறை பகிர்வு இல்லாதது போலியானவர்கள் கிட்டத்தட்ட எந்த ஆபத்தும் இல்லாமல் செயல்பட அனுமதிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் அசோக் குமார் (2020) தீர்ப்பில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க நடைமுறை தடையாக உள்ளது. இது போதைப்பொருள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களை பதிவு செய்வதை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு வழங்கியது. இந்த முடிவு காவல்துறை அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அது கவனக்குறைவாக சட்ட அமலாக்கத் துறையின் செயல்பாட்டை முடக்கியது. சட்டத்தின் கீழ் நேரடியாக வழக்குகள் பதிவு செய்வதிலிருந்து காவல்துறையைத் தவிர்த்து, போலியானவர்களால் சுரண்டப்படும் அமலாக்க இடைவெளியை உருவாக்கியது.


இந்திய மருந்துக் கூட்டணி (Indian Pharmaceutical Alliance (IPA)) உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொது நல வழக்கு (Public Interest Litigation (PIL)) மூலம் இந்தத் தடையை சவால் செய்துள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒழுங்குமுறை இணக்கம் பற்றி அறிந்தவர்கள், ஆனால் பெரிய அளவிலான போலி வலையமைப்புகளை கண்டறிய தேவையான புல நுண்ணறிவு மற்றும் தடயவியல் கருவிகள் அவர்களிடம் இல்லை. இதன் விளைவாக, பெரும்பாலான விசாரணைகள் குற்றவியல் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கண்டறியாமல் பறிமுதல் செய்வதில் மட்டுமே உள்ளன.


எவ்வாறாயினும், சட்டத்தை கவனமாகப் படித்தால், காவல்துறை முற்றிலும் அதிகாரமற்றவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)), 2023, பிரிவு 318 (மோசடி) மற்றும் பிரிவுகள் 336–338 (மோசடி மற்றும் பதிவுகளை பொய்யாக்குதல்) போன்ற பொதுவான குற்றவியல் விதிகளின் கீழ் காவல் விசாரணைகளைத் தொடங்குவதற்கான வழிகளை வழங்குகிறது. போலி அல்லது கலப்பட மருந்துகளின் விற்பனையானது நுகர்வோரை ஏமாற்றுவதை உள்ளடக்கியது. அதே சமயம் போலி பெயர்ப் பட்டைகள் (Forged labels), விலைப்பட்டியல்கள் (invoices) மற்றும் உற்பத்தி உரிமங்கள் (manufacturing licenses) ஆகியவை போலியானவையாகக் கருதப்படுகின்றன.


எனவே, இந்த பாரதிய நியாய சன்ஹிதா (BNS) விதிகளின்கீழ் காவல்துறையினர் வழக்குகளைப் பதிவு செய்யலாம். இந்த அணுகுமுறை நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது. மீரட், ஆக்ரா, டெல்லி மற்றும் டெஹ்ராடூனில், இந்திய மருந்துக் கூட்டணி (IPA) மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு இடையேயான ஒருங்கிணைந்த முயற்சிகள் முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவுசெய்ய வழிவகுத்தது மற்றும் ஒழுங்குமுறை மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் விசாரணைகள் தொடர அனுமதித்தது. இந்த இரட்டை அணுகுமுறையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது, போதைப்பொருள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்கீழ், முன்னறிவிப்பு குற்றம் எழுந்தாலும், மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தொடர்பான வழக்குகள் உண்மையில் காவல்துறையால் விசாரிக்கப்படலாம். ஒழுங்குமுறை மற்றும் குற்றவியல் சட்டத்தின் இந்த ஒருங்கிணைப்பு, அமலாக்கம் இணக்கச் சோதனைகளில் நின்றுவிடாமல், குற்றவியல் நிறுவனங்களைத் தகர்ப்பது வரை நீட்டிக்கப்படுவதை உறுதி செய்கிறது.


உறுதியான தடுப்பை அடைய, இந்தியா ஒரு "இரு உலகங்களின் சிறந்தவை" (Best of Both Worlds) மாதிரியை ஏற்க வேண்டும் — இது மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் தொழில்நுட்ப துல்லியத்தையும், காவல்துறை மற்றும் தடயவியல் முகமைகளின் விசாரணைத் திறனையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாதிரி. மருந்து கட்டுப்பாட்டுத் துறை உரிமம், உருவாக்க தரநிலைகள் மற்றும் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு ஆகியவற்றில் கள அறிவைப் பெற்றுள்ளது, அதே வேளையில் காவல்துறை செயல்பாட்டு திறன், உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் வழக்கு விசாரணை அனுபவத்தை வழங்குகிறது.


கூட்டு விசாரணைகளின் குறிப்பிட்ட சட்டம் (D&C சட்டம்) மற்றும் பொது குற்றவியல் சட்டங்கள் (BNS, PMLA, IPC- சமமானவை) ஆகியவற்றை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்துவதை செயல்படுத்தும். இது இரட்டை பொறுப்புணர்வை உருவாக்கும். இந்த கட்டமைப்பானது புலனாய்வு நோக்கத்தை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அறிவியல் சரிபார்ப்பு மற்றும் பல நிறுவனங்களின் உறுதிப்படுத்தல் மூலம் நீதிமன்றத்தில் சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையை மேம்படுத்துகிறது.


போலி மருந்து வலையமைப்புகள் (Counterfeit medicine networks) அரிதாகவே தனித்தனி செயல்பாடுகளாகும். அவை பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற சிண்டிகேட்களுடன் பின்னிப் பிணைந்த பொருளாதார குற்றங்களுடன் உள்ளன. நிதி மற்றும் அமலாக்க அதிகாரிகளை உள்ளடக்குவதற்கு போதைபொருள் ஆய்வாளர்களுக்கு அப்பால் போராட்டம் விரிவடைய வேண்டும்.

அமலாக்க இயக்குநரகம் (ED) பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) செயல்படுத்தி, போலி போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து பெறப்பட்ட சொத்துகளைக் கண்டறிந்து முடக்கலாம். வருமான வரித் துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் சட்டவிரோத லாபத்தை சட்டப்பூர்வமாக்கப் பயன்படுத்தப்படும் ஷெல் நிறுவனங்கள் மற்றும் போலி ரசீது கட்டமைப்புகளை விசாரிக்கலாம். போலியானவர்களின் நிதி கட்டமைப்பைக் குறிவைத்து, அவர்களின் செயல்பாட்டுத் திறனை அரசாங்கம் நடுநிலையாக்க முடியும்.


இந்த அணுகுமுறை நிதி விசாரணையை தடயவியல் அறிவியலுடன் இணைக்கிறது. இது எளிய சோதனைகளிலிருந்து முழு அளவிலான பொருளாதார-குற்ற விசாரணைகளாக மாற்றுகிறது. போலி போதைப்பொருள் வலையமைப்புகள் மீது வழக்குத் தொடரப்படுவது மட்டுமல்லாமல் நிரந்தரமாக அகற்றப்படுவதையும் இது உறுதி செய்கிறது.


வெற்றிகரமான வழக்குத் தொடர ஒரு வலுவான தடயவியல் கட்டமைப்பு அவசியம். போலி மருந்து வழக்குகளில், போலி மருந்துகளைக் கைப்பற்றுவது மட்டும் போதாது. அறிவியல்சார்ந்த சான்றுகளும் சேகரிக்கப்பட வேண்டும். நவீன கருவிகள் இந்த செயல்பாட்டில் உதவுகின்றன. இவற்றில் வேதியியல் மற்றும் நச்சுயியல் பகுப்பாய்வு, பொதி மற்றும் மை தடயவியல், டிஜிட்டல் தடயவியல் பதிவு மற்றும் அழைப்பு விவரப் பதிவு (Call Detail Record (CDR)) பகுப்பாய்வு ஆகியவை அடங்கும். இந்தக் கருவிகள் வலுவான மற்றும் நம்பகமான ஆதாரங்களை வழங்குகின்றன.


இந்த முறைகளைப் பயன்படுத்தி, புலனாய்வாளர்கள் முழு விநியோக வலையமைப்புகளையும் சர்வதேச தொடர்புகளையும் கண்டறிய முடியும். தடயவியல் அடிப்படையிலான அமைப்பு நீதிமன்றத்தில் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. இது அதிக தண்டனை விகிதங்களுக்கும் வழிவகுக்கிறது. இந்தியாவின் தடயவியல் அறிவியல் ஆய்வகங்கள் (Forensic Science Laboratories (FSL)) மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Sciences University (NFSU)) முக்கியப் பங்கு வகிக்க முடியும். அவை திறன் மேம்பாடு, ஆய்வக சான்றிதழ் மற்றும் நிபுணர் சாட்சி ஆதரவு ஆகியவற்றில் உதவ முடியும்.


பெரிய அளவிலான போலி போதைப்பொருள் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் நிறுவனங்களாக அறிவிக்க பாரதிய நியாய சன்ஹிதா (BNS) -இன் பிரிவு 111 சட்ட ஆதரவை வழங்குகிறது. மருத்துவ குற்றங்களை எதிர்த்துப் போராட சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் (Special Investigation Teams (SIT)) உருவாக்கப்படலாம். இந்தக் குழுக்களில் காவல்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை, அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) மற்றும் தடயவியல் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இருக்கலாம்.


இந்தியாவின் போலி போதைப்பொருளின் சவால் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்கிறது. இந்தப் பிரச்சினை சட்ட அமலாக்க நெருக்கடியாகவும், சட்டத்தில் உள்ள இடைவெளியாகவும் உள்ளது. அதைத் தீர்ப்பது என்பது ஒரு அமைப்பை இன்னொரு அமைப்புடன் மாற்றுவதை அர்த்தப்படுத்துவதில்லை. இதற்கான தீர்வு, ஒழுங்குமுறை நிபுணத்துவத்தை குற்றவியல் விசாரணையுடன் இணைப்பதாகும். D&C சட்டம் அறிவியல் மற்றும் நடைமுறை கட்டமைப்பை வழங்குகிறது. BNS மற்றும் PMLA ஆகியவை புலனாய்வு மற்றும் தண்டனை அதிகாரத்தை வழங்குகின்றன.


போதைப்பொருள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் (D&C) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைக்க, பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.


1. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே கூட்டு அதிகார வரம்பை அனுமதிக்க D&C சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.


2. போலி போதைப்பொருள் குற்றங்களை விசாரிக்க தேசிய மற்றும் மாநில அளவிலான சிறப்பு புலனாய்வுக் குழுக்களை (SIT) அமைத்தல்.


3. ஒவ்வொரு பெரிய போலி போதைப்பொருள் வழக்கிலும் தடயவியல் பகுப்பாய்வு தேவை.


4. ED, வருமான வரி மற்றும் GST பிரிவுகளால் நிதி விசாரணைகளை அனுமதித்தல்.


5. நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தடயவியல் அறிவை மேம்படுத்த பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல்.


போலி மருந்துகளுக்கு எதிரான போராட்டத்திற்கு அறிவியல் மற்றும் சட்டம் இரண்டும் தேவை. அறிவியல் துல்லியத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் சட்டம் அமலாக்க அதிகாரத்தை வழங்குகிறது. ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் இந்தியா இந்த சிக்கலை சிறப்பாக சமாளிக்க முடியும். இந்த அணுகுமுறையில் பல நிறுவனங்களின் தடயவியல் தலைமையிலான விசாரணைகள் அடங்கும் மற்றும் சட்டமன்ற சீர்திருத்தங்களால் ஆதரிக்கப்பட வேண்டும். அத்தகைய அமைப்பு இந்தியாவின் அமலாக்கத்தை எதிர்வினையாற்றுவதில் இருந்து முன்முயற்சியுடன், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதாக மாற்றும். ஒழுங்குமுறை நுண்ணறிவு குற்றவியல் விசாரணையுடன் இணைந்தால், தரவு குற்றத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படும்போது, ​​மற்றும் அறிவியல் நீதியை ஆதரிக்கும் போது, ​​இந்தியா அதன் குடிமக்களை போலி போதைப்பொருள்களிலிருந்து பாதுகாக்க முடியும்.


கேசவ் குமார் ஒரு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் மும்பையில் உள்ள இந்திய மருந்து கூட்டணியின் ஆலோசகர் ஆவார். நிகிதா ஓபல் ஒரு வழக்கறிஞர் ஆவர்.



Original article:

Share:

பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்ட வரலாறு. -திலீப் பி சந்திரன்

 சுதந்திரத்திற்குப் பிறகு ஆரம்ப ஆண்டுகளில், அடையப்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு, பொருளாதாரக் கொள்கைகளில் முன்னுதாரண மாற்றங்களைத் தொடர்ந்து, வெளிப்புற காரணிகளால் ஏற்படும் சவால்களுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் நீடித்த திறனையும், கடினமான சூழ்நிலைகளில் அதன் நெகிழ்வுத் திறனையும் விளக்குகிறது.


அதிபர் டொனால்ட் டிரம்ப், இரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்கான 25 சதவீதம் உட்பட, இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியதிலிருந்து, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் "இறங்கும் நிலைக்கு" (landing ground) வரவில்லை. 


அமெரிக்காவானது, உலகின் மிகப்பெரிய சந்தை என்பதால் அமெரிக்காவுடன் புரிந்துணர்வு மேற்கொள்வது அவசியம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். ஆனால், இந்தியாவின் ‘கட்டுப்பாட்டுக்கு’ (red lines) மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜெய்சங்கர் ஒரு முக்கியமான கேள்வியை குறிப்பிட்டதாவது, வர்த்தகம் வரிவிதிப்புகளால் அளவிடப்படும் உலகில், ஒப்பீட்டு நன்மைகள் (comparative advantages) மற்றும் போட்டித்தன்மை (competitiveness) எங்கே?


இந்தச் சூழ்நிலையானது, தடையில்லா வர்த்தகத்திற்குப் பதிலாக பாதுகாப்புவாதத்தை நோக்கி வளர்ந்துவரும் மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இது இந்தியாவின் நீண்ட எதிர்ப்பு வரலாற்றை ஆழமாகப் பிரதிபலிக்கவும் ஊக்குவிக்கிறது. இந்தச் சூழலில், காலனித்துவ பொருளாதார அமைப்புக்கு இந்தியாவின் எதிர்ப்பை மறுபரிசீலனை செய்வது முக்கியம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா எவ்வாறு பொருளாதார பின்தங்கிய நிலையை எவ்வாறு சமாளித்து பொருளாதார ஒருங்கிணைப்பை உறுதிசெய்தது என்பதையும் ஆராய்வது மதிப்புக்குரியது.


முதல் நவீன இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளரான தாதாபாய் நௌரோஜி, “பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு முற்றிலும் இந்தியப் பணத்தாலும், முக்கியமாக இந்திய இரத்தத்தாலும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மேலும், பிரிட்டன் ஆயிரக்கணக்கான மில்லியன் பவுண்டுகளை ஈட்டியுள்ளது” என்றார்.  காலனித்துவ இந்தியப் பொருளாதாரத்தின் ஒரே நோக்கம் பிரிட்டிஷ் பேரரசின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே இருந்தது. காலனித்துவத்திற்கு முந்தைய பொருளாதாரம், விவசாயத்தில் தன்னிறைவு, செழிப்பான கைவினைப்பொருட்கள் மற்றும் சாதகமான வர்த்தக சமநிலை ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டது. காலனித்துவ ஆட்சி இந்த பொருளாதாரத்தை முறையாக பலவீனப்படுத்தியது.


பொருளாதார காலனித்துவத்தின் வணிகக் கட்டத்தில், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிலிருந்து அதிகப்படியான வருவாயைச் சேகரித்தது மற்றும் பிரிட்டனுக்கு இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நிதியளிக்கப் பயன்படுத்தியது. பின்னர், பிரிட்டிஷ் தொழில்துறை மூலதனத்தின் எழுச்சியுடன், இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக வெறும் மூலப்பொருட்களை வழங்குபவராகவும், பிரிட்டனில் இருந்து இறுதிசெய்யப்பட்ட பொருட்களின் சந்தையாகவும் குறைக்கப்பட்டது. பிரிட்டனில் தொழில்மயமாக்கல் இந்தியாவின் பொருளாதாரத்தின் நேரடி செலவில் இருந்தது.


பின்னர், காலனித்துவ நிர்வாகம் மிக அதிக வருமானத்தை உறுதி செய்தபோது, ​​அது இந்தியாவில் தனியார் முதலீட்டை ஊக்குவித்தது. இது நியாயமற்ற போட்டி மற்றும் ஏகபோக நிலைமைகளின்கீழ் நடந்தது. இந்த சுரண்டல் கொள்கைகள் பெரிய அளவிலான தொழில்மயமாதல், விவசாயத்தில் தேக்கம், கடுமையான வரி விதிப்பு மற்றும் மில்லியன் கணக்கான மக்களை கடுமையான வறுமையில் தள்ளும் தொடர்ச்சியான பஞ்சங்களுக்கு வழிவகுத்தது.


இந்திய மார்க்சிஸ்ட் ஆர்.பால்மே தத், தனது பிரபலமான புத்தகமான, ”இந்தியா டுடே-1940”-ல், இந்த ஏகாதிபத்திய ஆட்சியை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தினார். அவை ஆரம்பகால முதலாளித்துவம் (early capitalism), தொழில்துறை மூலதனம் (industrial capital) மற்றும் நிதி மூலதனம் (finance capital) போன்றவை ஆகும். பிரிட்டிஷ் பொருளாதாரக் கொள்கைகளின் சுரண்டல் தன்மையை வெளிப்படுத்துவதற்கான பிற முன்னோடி தேசியவாத முயற்சிகளில் பின்வருவன அடங்கும். அவை தாதாபாய் நௌரோஜியின் ”செல்வசுரண்டல் கோட்பாடு” (drain theory), இந்தியாவில் வறுமை மற்றும் பிரிட்டிஷ் அல்லாத ஆட்சி-1901 (Poverty and Un-British Rule in India); ஆர்.சி.தத்தின் சுரண்டல் பிரிட்டிஷ் கொள்கைகளை அவரது புத்தகமான இந்தியாவின் பொருளாதார வரலாறு 1901-1902 (The Economic History of India)-ல் பகுப்பாய்வு செய்தார். இதில், இந்தியப் பொருளாதாரத்தின் சார்புநிலை பற்றிய எம் ஜி ரானடேவின் விமர்சனம் ஆகியவை இதில் அடங்கும்..


கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக ஏகபோகத்துடன் தொடங்கி, இந்தியாவிற்கு மிகவும் சாதகமற்ற விதிமுறைகளின் கீழ் தனியார் முதலீட்டிற்கான பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆதரவில் ஏகபோகத்துடன் தொடங்கியது. இந்தியா ஒரு சார்புப் பொருளாதாரமாக (dependent economy) எவ்வாறு குறைக்கப்பட்டது? என்பதை இந்தச் சிந்தனையாளர்கள் நிரூபித்துள்ளனர்.


இரயில்வே போன்ற பிரபலமான காலனித்துவ உள்கட்டமைப்பு திட்டங்கள் கூட முக்கியமாக பிரிட்டிஷ் வணிக நலன்களுக்கு சேவை செய்தன. அவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. ஜி.வி. ஜோஷி குறிப்பிட்டது போல, இரயில்வேக்கான செலவுகளை "பிரிட்டிஷ் தொழில்களுக்கு இந்தியாவின் மானியமாக" பார்க்க வேண்டும். இதன் காரணமாக, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தலைவர்களின் முக்கிய பணிகளில் ஒன்று பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாகும். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகால காலனித்துவ சுரண்டலால் அது மிகப்பெரிய பேரழிவிற்கு உட்பட்டது.


இரண்டு முரண்பட்ட பொருளாதார சித்தாந்தங்களில், ஒன்று முதலாளித்துவம் (capitalism) மற்றும் மற்றொன்று பொதுவுடைமை (socialism) ஆகும். உலக ஒழுங்கை வடிவமைக்கும் பனிப்போரின் உச்சகட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஒரு அந்நிய சக்தியைச் சார்ந்திருப்பதன் நீண்டகால சேதத்தை சந்தித்தபிறகு, இந்தியா இரண்டு சித்தாந்தங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்தது. மாறாக, முதலாளித்துவ மற்றும் பொதுவுடைமைப் பொருளாதாரங்கள் இரண்டின் அம்சங்களையும் இணைத்து அதன் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் நடைமுறைப் பொருளாதாரப் பாதையை ஏற்றுக்கொண்டது.


பொருளாதாரத் திட்டமிடலானது சோவியத் மாதிரியிலிருந்து, சுதந்திர இந்தியாவின் தலைமை, வளர்ச்சிக்கான திட்டமிட்ட அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்து ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. எவ்வாறாயினும், பொருளாதாரத் திட்டமிடல் பற்றிய யோசனை சுதந்திரத்திற்கு முன்பே இருந்தது. மேலும் விஸ்வேஸ்வரய்யா திட்டம் (1934), இந்திய தேசிய காங்கிரஸால் தேசிய திட்டக்குழுவை நிறுவுதல் (1938), பம்பாய் திட்டம் (1944), காந்திய திட்டம் (1944) மற்றும் மக்கள் திட்டம் (1945) உட்பட சில ஆரம்பகால திட்டங்கள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தன.


ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள தொலைநோக்குப் பார்வையானது பொதுவுடைமைப் பொருளாதாரத்தை (socialist economy) முழுமையாக நகலெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அரசு முதன்மையாக பொதுத்துறையில் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதில் விருப்பங்கொண்ட ஒரு கலப்புப் பொருளாதாரத்தை (mixed economy) முன்மொழிந்தது. 1950-ல் நிறைவேற்றுத் தீர்மானத்தின் (executive resolution) மூலம் நிறுவப்பட்ட திட்டக் குழுக்கு ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்து மேற்பார்வையிடும் பணி ஒப்படைக்கப்பட்டது.


முதல் ஐந்தாண்டுத் திட்டம் முதன்மையாக விவசாயத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், மஹாலனோபிஸ் மாதிரியால் (Mahalanobis model) வழிநடத்தப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது விரைவான தொழில்மயமாக்கலுக்கு (rapid industrialisation) கவனம் செலுத்தப்பட்டது. திட்டமிடப்பட்ட வளர்ச்சியின் ஆரம்பகால ஆண்டுகள் இந்தியாவின் பொருளாதாரப் பாதைக்கு அடித்தளமிட்டன. மேலும் அவை வறுமை ஒழிப்பு, கனரகத் தொழில்களின் விரிவாக்கம், தேசிய வருமானத்தை உயர்த்துதல், விவசாயத்தை நவீனமயமாக்குதல், இறக்குமதி மாற்றீட்டை ஊக்குவித்தல் மற்றும் பொதுத்துறையின் முக்கியப் பங்கை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டது. 


இந்தியா ஒரு பொதுவுடைமை பொருளாதார திட்டமிடல் மாதிரியை (Socialist model of economic planning) ஏற்றுக்கொண்டது. கொள்கை வகுப்பாளர்கள் இதை ஒரு 'கட்டளைப் பொருளாதாரம்' (command economy) என்று கருதினர். அதில் முக்கியமான பொருளாதார முடிவுகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டன. தொழில்மயமாதல், விவசாயப் பின்தங்கிய நிலை, வர்த்தக ஏற்றத்தாழ்வுகள், குறைந்த தேசிய வருமானம், மூலதனத் துறையில் போதிய முதலீடு இல்லாமை மற்றும் சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் மோசமான பொது உள்கட்டமைப்பு போன்ற நாடு தழுவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய அவசரத் தேவை மையப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் (centralised economic policies) தேவையை மேலும் நியாயப்படுத்தியது.


திட்டக் குழுவின் (Planning Commission) அமைப்பு இந்த மையப்படுத்தல் போக்குகளை வலுப்படுத்தியது. இது அரசியலமைப்புச் சட்டமோ அல்லது சட்டப்பூர்வ அமைப்போ இல்லாத திட்டக் குழுவில், பிரதமர் தலைமையில், மத்திய அமைச்சரவையின் உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்டிருந்தது. இந்த அமைப்பு கொள்கை வகுப்பை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தது.


இந்த செயல்பாட்டில், அரசியலமைப்பின் 280-வது பிரிவின்கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட நிதி ஆயோக், திட்டக்குழுவால் படிப்படியாக குறைக்கப்பட்டது. மையப்படுத்துதல் போக்குகளை சமநிலைப்படுத்த, தேசிய வளர்ச்சி கவுன்சில் (National Development Council (NDC)) 1952-ல் திட்டக் குழுவின் உச்ச அமைப்பாக நிறுவப்பட்டது. தேசிய வளர்ச்சி கவுன்சிலானது மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் நிர்வாகிகளின் பங்கேற்பை ஒரு ஆலோசனை அமைப்பாக வழங்குவதன் மூலம் உறுதி செய்தது.


சுதந்திரத்திற்குப் பிறகு ஆரம்ப ஆண்டுகளில், பொருளாதாரத் திட்டமிடலில் மாநிலங்கள் குறைந்தபட்ச பங்கைக் கொண்டிருந்தன. ஏனெனில், அவை மையப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டக்குழு மற்றும் மத்திய அரசின் திட்டங்களால் இயக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டன. ஆயினும்கூட, மத்திய அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான முகவர்களாக மாநிலங்கள் இருந்தன. மேலும், அவை வளங்களைத் திரட்டும் முக்கியமான பணிக்கும் அவைகள் பொறுப்பேற்றன.


பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றால் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களுடன் இந்த மையப்படுத்தல் போக்குகள் குறைந்துவிட்டன. 2014-ல் திட்டக்குழு ஒழிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியின் காலகட்டம் முறையான தீர்வைக் குறித்தது. அதன் அடுத்தக்கட்டமான NITI ஆயோக், 2015-ல் நிறுவப்பட்டது. மேலும், ஒரு கூட்டாட்சி நிறுவனமாக கருதப்பட்டது. இதன் நிர்வாகக் குழு பிரதமர் தலைமையில் செயல்படுகிறது மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகிகளை உள்ளடக்கியது. இந்த அமைப்பு கொள்கை வகுப்பில் அதிக பங்கேற்பை உறுதி செய்கிறது.


கூட்டுறவு மற்றும் போட்டி கூட்டாட்சியின் புதிய கட்டமைப்பு, முந்தைய மேலிருந்து கீழ்நோக்கிய, ஒரே மாதிரியான அணுகுமுறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இது ஒருமித்த கருத்து மூலம் முடிவெடுப்பதில் கவனம் செலுத்தியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களை சமமான மற்றும் பொறுப்பான நட்பு நாடுகளாக மாற்றுவதே இதன் குறிக்கோளாக இருந்தது. இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற சில நடவடிக்கைகள், மாநிலங்களின் நிதி சுயாட்சியைக் குறைத்தன. இந்த நடவடிக்கைகள் நிதி கூட்டாட்சியின் உணர்விற்கு எதிரானதாகக் கருதப்படுகின்றன. மேலும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளன.


சுதந்திரம் பெற்ற பிறகு, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதன் மூலம் இந்தியா சுரண்டல் காலனித்துவ பொருளாதாரக் கொள்கைகளுக்கு பதிலளித்தது. இந்த "கட்டளைப் பொருளாதாரம்" (command economy) பொருளாதார பின்தங்கிய நிலையைக் கடந்து தேசிய பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டது. இந்த மாதிரியில், மாநிலங்கள் முக்கியமாக முகவர்களாகச் செயல்பட்டு, மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் திட்டக் குழுவால் உருவாக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தின.


காலப்போக்கில், இந்த மையப்படுத்தப்பட்ட மாதிரியானது உலகமயமாக்கல், பரவலாக்கம், தனியார்மயமாக்கல் மற்றும் வரிவிதிப்பு மாற்றங்கள் போன்ற காரணிகளால் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டது. சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அடையப்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு, பொருளாதாரக் கொள்கைகளில் முன்னுதாரண மாற்றங்களைத் தொடர்ந்து, வெளிப்புற காரணிகளால் ஏற்படும் சவால்களுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் நீடித்த திறனையும், பாதகமான சூழ்நிலைகளில் அதன் தகவமைப்புத் திறனையும் விளக்குகிறது.



Original article:

Share: