உக்ரைன்-ரஷ்யா மோதலின் மூன்று ஆண்டுகள் மற்றும் இந்தியாவிற்கான பாடங்கள் -சி. உதய் பாஸ்கர்

 ரஷ்யாவிற்கான டிரம்பின் அணுகுமுறை அவர் ஐரோப்பாவிலிருந்து விலகிச் சென்றுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இது இந்தியா தனது முக்கிய இராணுவப் பலங்களில் கவனம் செலுத்துவதற்கான ஒரு நினைவூட்டலாக செயல்படுகிறது.


ஐரோப்பிய பாதுகாப்பு சீர்குலைந்து போயிருந்த நேரத்தில், 1975 ஹெல்சின்கி ஒப்பந்தம் (Helsinki Agreement) தேசிய எல்லைகளை மாற்ற முடியாது என்ற வலுவான நம்பிக்கையை உருவாக்கியது. எந்த நாடும் எந்த வகையிலும் அவற்றை மாற்ற பலத்தை பயன்படுத்தாது, போரை விட, எந்த வகையிலும் அவற்றை மாற்றாது என்று அது உறுதியளித்தது. அதிபர் விளாடிமிர் புடின் தனது சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியபோது இந்த நம்பிக்கை உடைந்தது. இரஷ்ய டாங்கிகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. ஐரோப்பாவில் ஒரு வழக்கமான போர் சாத்தியமற்றது என்ற நீண்டகால கருத்து மற்றும் தடை உடைக்கப்பட்டது. பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இரஷ்ய எதிரிணையை "போர் குற்றவாளி" (war criminal) என்று அழைத்தார்.


அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதிர்ச்சியடைந்த உக்ரைனை ஆதரிக்க ஒன்றிணைந்தன. பின்னர் போர் ஒரு தெளிவான அரசியல் குறிக்கோளுடன் தீவிரமாகத் தொடங்கியது. இரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே இதன் நோக்கமாக இருந்தது. சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு இந்தப் போரை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளின் கூட்டணியும் அவசியம் என்று கருதின. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தப் போராட்டத்தின் அடையாளமாக கருதப்பட்டார்.


போர் தொடர்ந்தபோது, ​​மார்ச் 2023-ம் ஆண்டில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court (ICC)) அதிபர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. அவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதித்தது மற்றும் அதன் சொத்துக்களை முடக்கியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து மாஸ்கோ தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், தீவிர போரின் காரணமாக அதிகளவில் உயிரிழப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்தியது.


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ரியாத்தில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐரோப்பிய பாதுகாப்பின் மற்றொரு பகுதி பலவீனமடைந்து தெளிவற்றதாகத் தெரிகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஐரோப்பாவுடனான கூட்டணி உருவாக்கப்பட்டது. பின்னர் இது, 1949-ம் ஆண்டில் நேட்டோவின் (NATO) கீழ் ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்பாக அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இது நிரந்தரமாகவும் மாறாததாகவும் கருதப்பட்டது. இப்போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் இது பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இவர், பதவியேற்ற முதல் மாதத்திலேயே, அட்லாண்டிக் கடல் கடந்த கூட்டணியின் முக்கியத்துவத்தை அவர் குறைத்துள்ளார்.


போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப்-புடின் "ஒப்பந்தம்" (Trump-Putin “deal”)  உருவாக்கப்பட்டு வருவதால் ஐரோப்பாவும் உக்ரைனும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 2024 பிரச்சாரத்தின் போது, ​​டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தார். அந்த இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது தெளிவாகிறது. மாஸ்கோவுடனான முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, உக்ரைன் நேட்டோவில் சேருவது இனி ஒரு வழி அல்ல என்று டிரம்ப் குழு கூறியது. ரஷ்யா தான் கைப்பற்றிய நிலத்தை விட்டுக்கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது நம்பத்தகாதது என்றும் அவர்கள் கூறினர். இந்த அமெரிக்க அதிபரின் விமர்சகர்கள் இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளனர். ரஷ்யா விரும்பும் அனைத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக "புடின் ஒரு இசைக்கருவி போல டிரம்பை வாசிக்கிறார்" (Putin is playing Trump like a fiddle) என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


பிப்ரவரியில் போர்நிறுத்தத்தை இறுதி செய்ய டிரம்ப்-புடின் சந்திப்பு சாத்தியம் என்ற ஊகம் உள்ளது. இருப்பினும், இந்த சாத்தியமான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தெளிவாக இல்லை. தன்னை இறுதி ஒப்பந்தத்தை உருவாக்கியவராகக் கருதும் டிரம்ப், புடினுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கலாம். இந்த ஒப்பந்தம் உக்ரைன், ரஷ்யா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நீண்டகால நலன்களுக்கு சேவை செய்யக்கூடும். மாற்றாக, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறுகிய கால ஒப்பந்தமாக இது இருக்கலாம். இது அமெரிக்க அதிபர் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற வைப்பதற்காக இருக்குமா?.


எந்தவொரு போரையும் முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமான குறிக்கோள் ஆகும். அமைதிக்கான தனது உறுதிப்பாட்டிற்காக அதிபர் டிரம்ப் பாராட்டுக்கு தகுதியானவர் ஆவர். அவர் போரை கடுமையாக எதிர்த்தார், அதை தேவையற்றது மற்றும் அழிவுகரமானது என்று அழைத்தார். அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று கூட அவர் பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், அவரது அறிக்கைகள் பெரும்பாலும் கணிக்க முடியாதவை மற்றும் முரண்பாடானவை ஆகும். இது அவருக்கு தெளிவான உத்தி அல்லது வழிகாட்டும் கொள்கைகள் உள்ளதா என்பதைப் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது. ஒரே நிலையான செய்தி அவரது "அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்" (Make America Great Again (MAGA)) முழக்கமாகத் தெரிகிறது.


டிரம்ப் புடினுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டியுள்ளார். அதாவது, மாஸ்கோவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஜோ-பைடனின் கொள்கையை அவர் நிராகரிக்கிறார். இருப்பினும், டிரம்பின் குழுவிலும் குடியரசுக் கட்சியிலும் உள்ள பலர் இந்த அணுகுமுறையை ஏற்கவில்லை. இது ஒரு ஆபத்தான நடவடிக்கை என்று அவர்கள் நம்புகிறார்கள். முந்தைய தலைவர்கள் செய்த கடந்த காலத் தவறுகளை டிரம்ப் சரிசெய்ய விரும்புகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த தவறுகள் 1990-ம் ஆண்டு காலகட்டங்களின் முற்பகுதியில் நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவுபடுத்த அனுமதித்தபோது பில் கிளிண்டனுடன் இந்த ஒப்பந்தத்தைத் தொடங்கியதாக சிலர் வாதிடுகின்றனர். இந்த விரிவாக்கம் மாஸ்கோவிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறியது மற்றும் ரஷ்யாவின் அச்சங்களை அதிகரித்தது என்று குறிப்பிடுகின்றன.


அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து வாழ்வதற்கான அமைதியான மற்றும் நீண்டகால வழியில் உடன்பட முடிந்தால், அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். இது டிரம்ப் மற்றும் புடினுக்கு இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகள் மூலம் நிகழலாம். இது கடந்த காலத் தலைவர்களான ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) மற்றும் மிகைல் கோர்பச்சேவ் (Mikhail Gorbachev) ஆகியோரால் பனிப்போரின் போது அடைய முடியாத ஒரு முக்கியமான புவிசார் அரசியல் இலக்கை அடைவதற்கு ஒத்ததாக இருக்கும்.


பெய்ஜிங்கிற்கு ஏற்ற சூழ்நிலை "யால்டா 2.0" (Yalta 2.0) ஆக இருக்கும். இந்த சூழ்நிலையில், டிரம்ப், புடின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரு புதிய உலக ஒழுங்கிற்கு (new world order) உடன்படுவார்கள். 1945-ம் ஆண்டில் ரூஸ்வெல்ட், ஸ்டாலின் மற்றும் சர்ச்சில் திட்டமிட்டதைப் போலவே, அவர்கள் உலகளாவிய செல்வாக்கைப் பிரிப்பார்கள். இருப்பினும், இந்த யோசனை நடைமுறைக்கு மாறானது.


அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிக்க முடியாதவராக இருப்பதற்கான வரலாற்றைக் கொண்டுள்ளார். எனவே, அமெரிக்கா தனது கொள்கையை முற்றிலுமாக மாற்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரஷ்யா மீண்டும் ஒரு எதிரியாக மாறக்கூடும். அதே நேரத்தில், அமெரிக்கா ஐரோப்பாவை உறுதிப்படுத்தி அதன் பாதுகாப்புத் தொடர்பான கவலைகளைத் தணிக்கக்கூடும்.


தற்போதைய சூழ்நிலையில், ஐரோப்பாவின் இராஜதந்திர சிக்கல்களிலிருந்து இந்தியா ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். இவை, முக்கியமாக இராணுவத் திறன்களைப் புறக்கணிக்ககூடாது. பாதுகாப்புச் செலவு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுடன் பொருந்துவதை உறுதி செய்வது முக்கியம். இந்தியா தனது இராணுவ சக்தியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இது முன்பைவிட அதிக உறுதியுடனும் நேர்மையுடனும் செய்யப்பட வேண்டும். டெல்லி இந்த அணுகுமுறையை உள்வாங்க வேண்டும்.


எழுத்தாளர் Society for Policy Studies-ன் இயக்குநர் ஆவார்.




Original article:

Share:

‘மொழி விரோதம் மற்றும் கசப்புணர்வை’ எதிர்த்துப் போராடும் ஒரு மாற்று மருந்தாக நிறுவப்பட்டது : மண்டல கவுன்சில்கள் (zonal councils) என்றால் என்ன? -சுஷாந்த் குல்கர்னி

 மண்டல கவுன்சில்களை உருவாக்கும் யோசனை முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் (States Reorganisation Commission) அறிக்கை மீதான விவாதத்தின் போது முன்மொழியப்பட்டது.


சனிக்கிழமை (பிப்ரவரி 22) புனேவில் நடைபெற்ற மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். மொழி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பதால் ஏற்படும் பதட்டங்களைக் குறைப்பதற்காக இந்த கவுன்சில்கள் 1950-ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன. மொழி மோதல்களைத் தணிக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அவை உருவாக்கப்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் மற்றும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் நாங்கள் பார்க்கிறோம்.


அப்போதைய, பிரதமர் ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட யோசனை


மண்டல கவுன்சில்களை உருவாக்கும் யோசனையை முதன்முதலில் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1956-ம் ஆண்டில் முன்மொழிந்தார். மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் (States Reorganisation Commission) அறிக்கை மீதான விவாதத்தின் போது, ​​மறுசீரமைக்கப்பட்ட மாநிலங்களை நான்கு அல்லது ஐந்து மண்டலங்களாக தொகுக்க அவர் முன்மொழிந்தார். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஆலோசனைக் குழு (Advisory Council) இருக்கும். இது, மாநிலங்களுக்கிடையில் கூட்டுறவுப் பணியை ஊக்குவித்து ஒரு ஆலோசனைக் குழுவைக் கொண்டிருக்கலாம் என்று தகவல் உள்துறை அமைச்சகத்தின் (MHA) பதிவுகள் கூறுகிறது.


மொழி ரீதியிலான மோதல்கள் நமது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த காலத்தில் பண்டித நேரு இந்த ஆலோசனையை வழங்கினார். மொழியின் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதால் இந்த மோதல்கள் ஏற்பட்டன. இதை நிவர்த்தி செய்ய, ஒரு உயர் மட்ட ஆலோசனை அமைப்பை (high-level advisory forum) உருவாக்க முன்மொழியப்பட்டது. இந்த விரோதங்களின் தாக்கத்தைக் குறைத்து, மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் இடையில் ஆரோக்கியமான சூழலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இது மாநில அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்கவும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் சமநிலையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும். பண்டித நேருவின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் (States Reorganisation Act) கீழ் ஐந்து மண்டல கவுன்சில்கள் நிறுவப்பட்டதாக உள்துறை அமைச்சக பதிவுகள் தெரிவிக்கின்றன.


மண்டல கவுன்சில்களின் உறுப்பினர்கள்


மண்டல கவுன்சில்களின் தற்போதைய நிலை பின்வருமாறு:


  • வடக்கு மண்டல கவுன்சிலில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகியவை அடங்கும்.


  • மத்திய மண்டல கவுன்சிலில் சத்தீஸ்கர், உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்கள் அடங்கும்.


  • கிழக்கு மண்டல கவுன்சிலில் பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் அடங்கும்.


  • மேற்கு மண்டல கவுன்சிலில் கோவா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் டாமன் & டையு மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.


  • தெற்கு மண்டல கவுன்சிலில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை அடங்கும்.


வடகிழக்கு கவுன்சில் 1972-ம் ஆண்டு வடகிழக்கு கவுன்சில் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்கள் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் ஆகும். முன்னர் கிழக்கு மண்டல கவுன்சிலில் இருந்த சிக்கிம் மாநிலம், 2002-ம் ஆண்டு வடகிழக்கு கவுன்சிலில் சேர்க்கப்பட்டது.


மண்டல கவுன்சில்களின் அமைப்பு


ஒவ்வொரு மண்டல கவுன்சிலிலும் ஒரு நிலைக்குழு (Standing Committee) உள்ளது. இந்தக் குழுவில், உறுப்பு நாடுகளின் தலைமைச் செயலாளர்கள் அடங்குவர். இந்த நிலைக்குழுக்கள் அவ்வப்போது கூடி, பிரச்சினைகளைத் தீர்க்கவோ அல்லது மண்டல கவுன்சில்களின் மேலும் கூட்டங்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளைச் செய்யவோ கூடுகின்றன. தேவைப்படும்போது திட்டக் குழு மற்றும் பிற மத்திய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.


ஒவ்வொரு கவுன்சிலுக்கும் ஒரு குறிப்பிட்ட அமைப்பு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ஒவ்வொரு கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றுகிறார். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாறி மாறி துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு முதலமைச்சரும் அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஒரு வருடம் இந்தப் பதவியை வகிக்கிறார்கள். மண்டல கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் முதலமைச்சர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். ஆளுநர் இந்த அமைச்சர்களை பரிந்துரைக்கிறார். மண்டலத்தில் உள்ள யூனியன் பிரதேசங்களிலிருந்து இரண்டு உறுப்பினர்களும் இதில் உள்ளனர். கூடுதலாக, திட்டக் குழு (Planning Commission) ஒவ்வொரு மண்டல கவுன்சிலுக்கும் ஒருவரை பரிந்துரைக்கிறது. மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் தலைமைச் செயலாளரையும் மேலும் ஒரு அதிகாரியையும் அனுப்புகிறது.


2018-ம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. வடகிழக்கு கவுன்சிலின் அலுவல்சார் தலைவராக மத்திய உள்துறை அமைச்சரை அங்கீகரித்தது. மேலும், கவுன்சிலின் துணைத் தலைவராக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சரை (Development of the North Eastern Region (DoNER)) நியமித்தது.


மண்டல கவுன்சில்களின் பங்கு


மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மண்டல கவுன்சில்கள் ஒரு சிறந்த தளம் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான சச்சரவுகளைத் தீர்க்கவும் அவை உதவுகின்றன. இதற்கான தீர்வுகளைக் காண இந்த கவுன்சில்கள் திறந்த மற்றும் நேர்மையான விவாதங்களை ஊக்குவிக்கின்றன. மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்படும் பிராந்திய மன்றங்களாக அவை செயல்படுகின்றன. ஒவ்வொரு சபையிலும் உள்ள மாநிலங்கள் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.


மண்டல கவுன்சில்கள் பல மாநிலங்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம். பொருளாதார மற்றும் சமூக திட்டமிடல், எல்லை தொடர்பான தகராறுகள் மற்றும் மொழியியல் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவை இதில் அடங்கும். அவை, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களை மறுசீரமைப்பது தொடர்பான விஷயங்களையும் இது கையாளுகின்றன.


வெள்ளிக்கிழமை, உள்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில், மோடி அரசாங்கம் மண்டல கவுன்சில்களின் பங்கை மாற்றியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முன்பு, அவை ஆலோசனை அமைப்புகளாக (advisory bodies) மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது அவற்றை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கான தளங்களாக செயல்படுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கூட்டுறவு மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த கூட்டாட்சி இரண்டையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.




Original article:

Share:

ஜம்மு காஷ்மீரின் சினார் மரங்களின் (Chinar trees) புவிசார் குறியீடு எவ்வாறு முக்கியமானது?. -ரோஷ்னி யாதவ்

 ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் "மர ஆதார்" திட்டத்தைத் (“Tree Aadhaar” mission) தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் இப்பகுதியின் சினார் மரங்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சமீபத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் சினார் மரங்களைப் பாதுகாக்க "மர ஆதார்" திட்டத்தைத் (“Tree Aadhaar” mission) தொடங்கியது. இந்த மரங்கள் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இந்த முயற்சியில் அனைத்து சினார் மரங்களையும் எண்ணுவதுடன் ஒவ்வொரு மரத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை வழங்குவது அடங்கும்.


முக்கிய அம்சங்கள் :


1. ஓரியண்டல் பிளேன் மரம் (பிளாட்டனஸ் ஓரியண்டலிஸ் வர். கேஷ்மெரியானா) என்றும் அழைக்கப்படும் சினார், மேப்பிள் போன்ற ஒரு மரம் ஆகும். இது ஒரு பெரிய விதானத்தைக் (canopy) கொண்டுள்ளது மற்றும் போதுமான நீர்வளம் உள்ள குளிர்ந்த காலநிலை பகுதிகளில் காணப்படுகிறது.


2. கிழக்கு இமயமலையில் இந்த மரம் பொதுவானது. மரம் முதிர்ச்சியடைய 30 முதல் 50 ஆண்டுகள் ஆகும். அதன் முழு அளவை அடைய 150 ஆண்டுகள் ஆகும். மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் சுற்றளவு 10 முதல் 15 மீட்டர் வரை இருக்கலாம்.


3. சினார் என்பது ஜம்மு & காஷ்மீரின் "மாநில மரம்" (state tree) ஆகும். இப்போது இது ஒரு யூனியன் பிரதேசமாகும். இலையுதிர் காலத்தில் அதன் பசுமை இலைகள் மெதுவாக கருஞ்சிவப்பு சிவப்பு மற்றும் தங்க நிறமாக மாறும் போது இந்த மரம் இப்பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாக மாறும்.


4. காஷ்மீர் கலை, இலக்கியம் மற்றும் கைவினைப் பொருட்களில் இந்த மரம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. உள்ளூர் பேப்பியர்-மச்சே (local papier-mâché), எம்பிராய்டரி (embroidery), கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள் (hand-woven carpets) மற்றும் வால்நட் மர வேலைப்பாடுகளில் (walnut wood carvings) சினார் மையக்கருக்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.


5. முகலாயர்கள் இந்த மரத்திற்கு "சினார்" (chinar) என்ற பெயரை வழங்கினர். இந்த வார்த்தையை உருவாக்கியவர் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் என்று சிலர் நம்புகிறார்கள்.


6. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்முவில் உள்ள செனாப் பிராந்தியத்தின் சில பகுதிகளில் சினார் தோட்டங்களை விரிவுபடுத்துவதில் முகலாயர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். முகலாயர்கள் இந்த மரத்தை "அரசுரிமை வாய்ந்த மரம்" (royal tree) என்று கருதினர்.


சினார் பாதுகாப்புத் திட்டம் (Chinar Conservation Project)


1. ஒவ்வொரு சினார் மரத்தின் நிலையையும் அரசாங்கம் கண்காணிக்க உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தனியார் நிலத்தில் கூட சினார் மரத்தை வெட்டுவதற்கு அரசாங்க அனுமதி தேவை. இருப்பினும், பல மரங்கள் ஒப்புதல் இல்லாமல் வெட்டப்படுகின்றன. இதைத் தடுக்க, சினார் பாதுகாப்புத் திட்டம் (Chinar conservation project) இந்த மரங்களை சிறப்பாக கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது.


2. புதிய முயற்சியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் செனாப் பகுதியில் உள்ள சினார் மரங்களின் கணக்கெடுப்பு அடங்கும். இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக அரசாங்கம் அனைத்து சினார் மரங்களையும் கணக்கெடுத்துள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் "மர ஆதார்" (Tree Aadhaar) என்ற தனித்துவமான அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மரமும் புவிசார் குறியீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.


3. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சினார் மரங்களில் உலோக QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்வது ஒவ்வொரு மரத்தைப் பற்றிய தகவலையும் தரும். இந்தத் தகவல் 25 கூறுகளை (25 parameters) உள்ளடக்கியது. மரத்தின் தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை, வயது, உயரம், சுற்றளவு, கிளைகளின் எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவை இதில் அடங்கும். மரத்தின் உயரம் பற்றிய விவரங்களும் தரவுகளில் அடங்கும். மரம் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களையும் இது குறிப்பிடும்.


கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes(MISHTI)) மற்றும் கங்கை டால்பினின் செயற்கைக்கோள் குறியீடு (Satellite tagging)


1. ‘காலநிலைக்கான சதுப்புநில கூட்டணியில்’ (Mangrove Alliance for Climate) இந்தியா இணைந்த பிறகு, ஒன்றிய அரசு கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (MISHTI) திட்டத்தைத் தொடங்கியது. காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் 27வது கட்சிகளின் மாநாட்டின் (COP27) போது இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வு நவம்பர் 2022-ம் ஆண்டில் எகிப்தில் நடந்தது. உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கும் வகையில் MISHTI முன்முயற்சி ஜூன் 5, 2023 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.


2. சதுப்புநிலங்கள் இந்தியாவில் மிகவும் பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாகும். அவை, கடற்கரையோரங்களை மோசமான வானிலையிலிருந்து பாதுகாக்கின்றன. காலநிலை மாற்றம் உலகளவில் அதிக தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சதுப்புநிலத் தோட்டங்கள் கடலோர நிலங்களை மீள்தன்மை கொண்டதாக மாற்ற உதவுகின்றன. அவை, வெள்ளம் மற்றும் நில அரிப்பைத் தடுக்கின்றன. புயல்களின் போது அவை ஒரு இடைநிலையாகவும் (buffer) செயல்படுகின்றன. கூடுதலாக, சதுப்புநிலங்கள் சிறந்த கார்பன் மூழ்கிகளாகும்.


கங்கை டால்பினின் செயற்கைக்கோள் குறியீடு


1. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ‘திட்டம் டால்பினுக்கு’ (Project Dolphin) ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 18, 2024 அன்று அசாமில் முதல் கங்கை நதி டால்பின் (பிளாட்டானிஸ்டா கங்கெடிகா-Platanista gangetica) குறியிடப்பட்டது.


2. பருவகாலங்களில் இனங்கள் எவ்வாறு நகர்கின்றன மற்றும் நடந்துகொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள குறியீட்டு பயிற்சி (tagging exercise) உதவுகிறது. இது அவற்றின் இடம்பெயர்வு முறைகள், வரம்பு மற்றும் பரவல் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. கூடுதலாக, அவை தங்கள் வாழ்விடத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன. குறிப்பாக, துண்டாக்கம் அல்லது கலங்கிய ஆறு (fragmented or disturbed river systems) அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது. இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


3. உலகளவில் காணப்படும் ஐந்து நதி டால்பின் இனங்களில் கங்கை டால்பினும் ஒன்றாகும். இது முக்கியமாக இந்திய துணைக் கண்டத்தில் காணப்படுகிறது. இது குறிப்பாக, கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா (Ganga-Brahmaputra-Meghna) மற்றும் கர்ணபுலி-சங்கு நதி அமைப்புகளில் (Karnaphuli-Sangu river systems) காணப்படுகிறது.


4. 2009-ம் ஆண்டு, பிரதமர் மன்மோகன் சிங், கங்கை நதி டால்பினை இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக (National Aquatic Animal) அறிவித்தார். இது இனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் பாதுகாப்பில் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கவும் ஒரு முயற்சியாகும்.


5. 1990-ம் ஆண்டு காலகட்டங்களில் இருந்து சிந்து மற்றும் கங்கை டால்பின்கள் இரண்டும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலில் 'அழிந்து வரும் இனங்கள்' (Endangered) ஆக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடு இந்த இனம் "காடுகளில் அழிந்து போகும் அபாயம் மிக அதிகம்" (a very high risk of becoming extinct in the wild) என்பதைக் குறிக்கிறது.




Original article:

Share:

சக்திகாந்த தாஸ் புதிய முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் : இந்தப் பதவியின் பொறுப்புகள் என்ன?

 சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் அதிகாரியாக இந்திய நிர்வாகப் பணியில் (Indian Administrative Service) சேர்ந்தார். இவர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக அவரது பதவிக்காலம் டிசம்பர் 2024-ம் ஆண்டில் முடிந்தது.


இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் சனிக்கிழமை (பிப்ரவரி 22) பிரதமரின் முதன்மை செயலாளராக (Principal Secretary) நியமிக்கப்பட்டார். அவர், ஒரு ஓய்வு பெற்ற IAS அதிகாரி ஆவார். வரலாற்றில் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பணவியல் கொள்கை (monetary policy) மற்றும் அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட நிதிக் கொள்கை (fiscal policy) இரண்டிலும் அனுபவம் கொண்ட ஒரே அதிகாரி சக்திகாந்த தாஸ் தான்.


சக்திகாந்த தாஸுக்கு மற்றொரு தனித்துவமும் உண்டு. அது, பிமல் ஜலானுக்கு (1997-2003) பிறகு, ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தில் பணியாற்றும் இரண்டாவது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இவர்தான். 


சக்திகாந்த தாஸ் யார்?


சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டில் தமிழ்நாடு கேடரில் ஒரு அதிகாரியாக இந்திய நிர்வாகப் பணியில் (Indian Administrative Service) சேர்ந்தார். இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பயின்றார். 2014-ம் ஆண்டில், அவர் உரங்கள் துறைச் செயலாளர் (Fertilisers Secretary) ஆனார்.


விரைவில், ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக (Revenue Secretary) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2015-ம் ஆண்டில், அவர் பொருளாதார விவகார செயலாளராக (Economic Affairs Secretary) நியமிக்கப்பட்டார். மேலும், மே 2017-ம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை இந்தப் பதவியில் இருந்தார். சக்திகாந்த தாஸ் 15-வது நிதி ஆணையத்தின் (15th Finance Commission) உறுப்பினராகவும் இருந்தார்.


அவர் 2018 முதல் டிசம்பர் 2024 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றினார். மேலும், அவர் நியமிக்கப்பட்டபோது ஒரு அதிகாரப்பூர்வமாக வெளியீடு, “இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றிய காலத்தில், அவர் 8 மத்திய பட்ஜெட்டுகளைத் தயாரிப்பதில் நேரடியாக ஈடுபட்டார். உலக வங்கி (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank (ADB)), புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank (NDB)) மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) ஆகியவற்றில் இந்தியாவின் மாற்று ஆளுநராகவும் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் பணியாற்றினார். சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)), G20, BRICS மற்றும் SAARC போன்ற சர்வதேச மன்றங்களில் அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னர் தெரிவித்தது போல, இந்தக் காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி பல சவால்களை எதிர்கொண்டது. இவற்றில் உள்நாட்டு மற்றும் வெளிப்புற அதிர்வலைகளும் அடங்கும். உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் (Infrastructure Leasing & Financial Services (IL&FS)) சரிவு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இது மற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களையும் (non-banking financial companies (NBFC)) பாதித்தது. மற்றொரு சவாலாக, இந்த காலகட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோய் இருந்தது. இது வாழ்நாளில் ஒரு முறை ஏற்படும் நெருக்கடியாகும். கூடுதலாக, ரஷ்யா-உக்ரைன் போர் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.


மேலும், ₹2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதையும் அவர் மேற்பார்வையிட்டார். தேசிய அட்டை கட்டண வலையமைப்பான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) மற்றும் RuPay ஆகியவற்றின் வரம்பை உலக அளவில் விரிவுபடுத்துவதில் சக்திகாந்த தாஸ் பணியாற்றினார். இருப்பினும், கடந்த ஆறு ஆண்டுகளாக அதிக உணவு பணவீக்கம் (high food inflation) ஒரு கடுமையான சவாலாகவே இருந்தது.


முதன்மைச் செயலாளரின் பதவி (Principal Secretary’s post) என்ன?


முதன்மைச் செயலாளர் பிரதமர் அலுவலகத்தின் (Prime Minister’s Office (PMO)) நிர்வாகத் தலைவராக உள்ளார். இந்தப் பதவி பிரதமருக்கு மிக முக்கியமான உறுதுணைப் பதவியாகக் கருதப்படுகிறது. தற்போது, ​​பிரமோத் குமார் மிஸ்ரா இந்தப் பதவியை வகிக்கிறார். அவர் 1972 கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஆவார். சக்திகாந்த தாஸ் முதன்மைச் செயலாளர்-2 ஆக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் அலுவலகத்தில் பொதுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor), பிரதமரின் ஆலோசகர் (Advisor to the PM), கூடுதல் செயலாளர்கள் (Additional Secretaries), இணைச் செயலாளர்கள் (Joint Secretaries) மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அடங்குவர். முதன்மைச் செயலாளருக்கு பல முக்கிய பொறுப்புகள் உள்ளன. பிரதமருக்கும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்கிறார்கள். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அவர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்கள் பிரதமருக்கு முக்கியமான உத்தரவுகளை வழங்குகிறார்கள் மற்றும் பிற தொடர்புடைய பணிகளைக் கையாளுகிறார்கள்.




Original article:

Share:

இந்தியாவில் OTT தளங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


1. சமூகத்தில் வளர்ந்துவரும் கவலை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் (parliamentary panel) தெரிவித்தது. இதில், "கருத்துச் சுதந்திரம்" (freedom of expression) என்ற அரசியலமைப்பு உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், டிஜிட்டல் தளங்கள் ஆபாச (obscene) மற்றும் வன்முறை உள்ளடக்கத்தைப் (violent content) பிரதிபலிப்பதற்கு இதைப் பயன்படுத்துகின்றன என்று மக்களின் கவலையாக உள்ளது.


2. தற்போதைய சட்டங்களின் கீழ் சில விதிகள் இருந்தாலும், அத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு கடுமையான மற்றும் பயனுள்ள சட்ட கட்டமைப்பிற்கான கோரிக்கை அதிகரித்து வருவதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவிடம் (Standing Committee) அது தெரிவித்துள்ளது. "இந்த கோரிக்கையின் முன்னேற்றங்கள் அமைச்சகத்தின் கவனத்தில் கொண்டுள்ளது மற்றும் தற்போதைய சட்டப்பூர்வ விதிகள் மற்றும் ஒரு புதிய சட்ட கட்டமைப்பின் அவசியத்தை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளது" என்று அது குறிப்பிட்டுள்ளது.


3. 10 நாட்களுக்குள், தற்போதைய சட்டங்களில் தேவையான மாற்றங்கள் குறித்து பிப்ரவரி 13 அன்று நிலைக்குழுவானது, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேட்டது. இந்தப் புதிய தொழில்நுட்பம் மற்றும் ஊடகத் தளங்கள் காரணமாக சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை அவர்கள் கவனிக்க விரும்பினர்.


4. மூன்று நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 19 அன்று, சமூக ஊடக சேனல்கள் (social media channels) மற்றும் OTT தளங்கள் (OTT platforms) தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules)-2021ஆம் ஆண்டில் உள்ள நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மத்திய அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதில், குழந்தைகள் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் (inappropriate material) பார்ப்பதைத் தடுக்க “A-மதிப்பீடு பெற்ற உள்ளடக்கத்திற்கான அணுகல் கட்டுப்பாட்டை” அமைக்கவும் குழுவினர் அமைச்சகத்திடம் கூறினர்.


5. சட்டமானது, OTT தளங்கள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கோருகிறது. சட்டத்தால் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அவை உள்ளீடு செய்யக்கூடாது. மேலும், பயனர்களின் வயதை அடிப்படையாகக் கொண்டே உள்ளடக்கத்தையும் வகைப்படுத்த வேண்டும். இந்தச் சட்டமானது, பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டம்-1986 (Indecent Representation of Women Act), பாரதிய நியாய சன்ஹிதா-2023 (Bhartiya Nyaya Sanhita (BNS)), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences (POCSO)) மற்றும் தகவல் தொழில்நுட்ப (Information Technology (IT) Act) சட்டம்-2000 உள்ளிட்ட பல செயல்களைக் குறிக்கிறது. தவறான (obscene) அல்லது ஆபாச உள்ளடக்கத்தை (pornographic content) வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்தச் சட்டங்கள் கூறுகின்றன.


6. இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீட்டின்-2021 (Intermediary Guidelines and Digital Media Ethics Code (IT Rules, 2021)) பகுதி III-ன் கீழ், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் (online streaming platforms) மூன்று நிலைகளில் குறை தீர்க்கும் முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த அமைப்பு நெறிமுறைகளின் மீறல்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது.


நெறிமுறைகள் குறியீடு (Code of Ethics) சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கானத் தளங்களைத் தடை செய்கிறது. வயதின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வகைப்படுத்தவும் அவர்களைக் கோருகிறது. கூடுதலாக, இது குழந்தைகள் ‘A’-மதிப்பீடு பெற்ற உள்ளடக்கத்தை (‘A’-rated content) அணுகுவதை கட்டுப்படுத்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. YouTube டிஜிட்டல் மீடியா மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் (IT Rules) நெறிமுறைக் குறியீட்டால் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விதிகள் இணையத் தளத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளடக்கத்திற்கு மட்டுமே பொருந்தும். ஒரு தனிநபரின் சேனலில் பதிவேற்றப்படும் உள்ளடக்கத்திற்கு, YouTube ஒரு வெளியீட்டாளராகக் கருதப்படுவதில்லை. அதற்கு பதிலாக, இது ஒரு சமூக ஊடக இடைத்தரகராகக் கருதப்படுகிறது. ஏனெனில், பதிவிடக்கூடிய உள்ளடக்கம் பயனர் உருவாக்கியது ஆகும். இதனால், உள்ளடக்கத்தைத் தடுப்பது மற்றும் பிற உரிய முயற்சிக்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற சில அரசாங்க விதிகளைப் பின்பற்றும் வரை, இந்த உள்ளடக்கத்திற்கு YouTube பொறுப்பேற்க முடியாது.


2. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை (right to freedom of speech and expression) முழுமையானது அல்ல. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 இந்த உரிமையை உறுதி செய்கிறது. இருப்பினும், இது நற்பண்பு (decency) மற்றும் ஒழுக்கம் (morality) போன்ற சில காரணங்களுக்காக நியாயமான கட்டுப்பாடுகளையும் அனுமதிக்கிறது. இதன் பொருள், ஒரு செயல் அல்லது உள்ளடக்கம் ஆபாசமானதா (Obscenity) என்பதை தீர்மானிக்கும்போது, ​​பேச்சு சுதந்திரம் சமூகத்தின் தார்மீக தரங்களுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும், மேலும் அது தண்டிக்கப்பட வேண்டும்.


இணையவழி ஆபாசமான உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்


1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita, 2023 (BNS)) : புத்தகங்கள், ஓவியங்கள் மற்றும் உருவங்கள் போன்ற ஆபாசமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள், ஏற்றுமதி செய்பவர்கள், விளம்பரம் செய்பவர்கள் அல்லது லாபம் ஈட்டுபவர்களை BNS பிரிவு 294 தண்டிக்கும். மேலும், "மின்னணு வடிவத்தில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் காட்சிப்படுத்துபவர்களையும்" இந்த சட்டப்பிரிவு உள்ளடக்கியது. மேலும், சட்டம் அத்தகைய உள்ளடக்கமான அதீத காமம் மிகுந்த (lascivious) அல்லது அதிகப்படியான பாலியல் (overly sexual) என்று விவரிக்கிறது. அதைப் படிக்க, பார்க்க அல்லது கேட்க வாய்ப்புள்ளவர்களுக்கு கேடு விளைவிக்கும் உள்ளடக்கமும் இதில் அடங்கும்.


2. தகவல் தொழில்நுட்ப (Information Technology (IT) Act) சட்டம், 2000-ம் ஆண்டின் பிரிவு 67 : இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் ஆபாசம் தொடர்பான சட்டம் உருவாகியுள்ளது. இது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67-ன் படி, மின்னணு முறையில் ஆபாசமான விஷயங்களை வெளியிடும் அல்லது அனுப்பும் எவரும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ளலாம்.




Original article:

Share:

டாலர்-ரூபாய் பரிமாற்றம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


• மத்திய வங்கியின் இந்த முயற்சி, அமைப்பின் பணப்புழக்கத் தேவைகளுக்கு நீடித்த தீர்வை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே, நேரத்தில் ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தி நாட்டின் அந்நியச் செலாவணியை வலுப்படுத்துகிறது.


• இந்த பரிமாற்ற வழிமுறை வங்கிகளுக்கு உடனடி பணப்புழக்கத்தை வழங்குவதன் மூலம் ரூபாயை நிலைப்படுத்தி உதவுகிறது. வெளிநாட்டு நிதிகள் நாட்டைவிட்டு வெளியேறும்போது ரூபாயின் மீதான அழுத்தத்தை இது குறைக்கிறது. இது தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. சந்தை நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மாற்று விகிதத்தில் தீவிர ஏற்ற இறக்கங்களைத் தடுக்கும்.


• இந்த பரிமாற்றம் ரிசர்வ் வங்கியின் டாலர் இருப்புகளையும் அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் தலையிடுவதால் இது முக்கியமானது. அடுத்த வாரம், ரிசர்வ் வங்கி 3 ஆண்டு காலத்திற்கு $10 பில்லியன் பரிமாற்ற ஏலத்தை நடத்தும்.


• ஜனவரி 2025-ல், இந்திய வங்கி அமைப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பணப்புழக்க நெருக்கடியை சந்தித்தது. பணப்புழக்க பற்றாக்குறை ஜனவரி 23 அன்று ₹3.15 லட்சம் கோடியை எட்டியது. இது 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.


• ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த ரிசர்வ் வங்கி டாலர்களை விற்று வருகிறது. இது வங்கி அமைப்பில் ரூபாய் பணப்புழக்கத்தைக் குறைத்தது.


• இந்த பரிமாற்றம் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து ஒரு எளிய வாங்கி-விற்கும் அந்நிய செலாவணி பரிவர்த்தனையாகும். ஒரு வங்கி ரிசர்வ் வங்கிக்கு அமெரிக்க டாலர்களை விற்கும். அதே, நேரத்தில் பரிமாற்ற காலத்தின் முடிவில் அதே அளவு அமெரிக்க டாலர்களை வாங்க ஒப்புக்கொள்கிறது.


•கடந்த ஐந்து வாரங்களில் ரிசர்வ்வங்கி, வங்கி அமைப்பில் ₹3.6 லட்சம் கோடியைச் சேர்த்தது. இது கடன் கொள்முதல்கள், அந்நிய செலாவணி பரிமாற்றங்கள் (forex swaps) மற்றும் நீண்டகால மறுசுழற்சிகள் மூலம் செய்யப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா?


• சந்தையில் ரூபாய் பணப்புழக்க நிலைமைகளை நீடித்த அடிப்படையில் சரிசெய்ய ரிசர்வ் வங்கி திறந்த சந்தை செயல்பாடுகளை (Open Market Operations (OMOs)) பயன்படுத்துகிறது. திறந்த சந்தை செயல்பாடுகள் நீண்டகால அடிப்படையில் பணப்புழக்கத்தை சரிசெய்ய உதவுகின்றன. அதிகப்படியான பணப்புழக்கம் இருக்கும்போது, ரிசர்வ்வங்கி அரசுப் பத்திரங்களை விற்கிறது. இது சந்தையில் ரூபாய் பணப்புழக்கத்தைக் குறைக்கிறது. பணப்புழக்கப் பற்றாக்குறை இருக்கும்போது, ​​ரிசர்வ்வங்கி அரசுப் பத்திரங்களை வாங்குகிறது. இது சந்தையில் பணப்புழக்கத்தைச் அதிகரிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமைப்பில் பண விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் திறந்த சந்தை செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.




Original article:

Share:

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் சமீபத்திய போராட்டத்திற்கு காரணம் என்ன? - ரோஷ்னி யாதவ்

 நிதிப் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான மோதல் தற்போது கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் வரை விரிவடைந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ஐ ஏற்றுக்கொண்டு மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றாவிட்டால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி கிடைக்காது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடுமையான போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. அரசியல் காரணங்களுக்காக திமுக அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். அவர்கள் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் போல் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறினார்.


2. சமக்ர சிக்ஷா நிதியை தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதோடு இணைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்டாலின் கூறினார்.


3. குறிப்பாக, தமிழ்நாடு நீண்ட காலமாக மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது. 1960-களில் இருந்து, இந்தி சேர்க்கப்படுவதை நிராகரித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இருமொழிக் கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. இந்தக் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் நவோதயா வித்யாலயாக்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படவில்லை.


2020-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP))


1. நாட்டில் கல்வி வளர்ச்சியை வழிநடத்துவதற்கான ஒரு விரிவான கட்டமைப்பே தேசிய கல்விக் கொள்கை ஆகும். கல்விக்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் தத்துவம் இல்லாததற்காக அப்போதைய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தேஷ்வர் பிரசாத் விமர்சித்தபோது, ​​1964-ஆம் ஆண்டு ஒரு கொள்கைக்கான தேவை முதன்முதலில் உணரப்பட்டது. அதே ஆண்டில், அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) தலைவர் டி.எஸ். கோத்தாரி தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட கல்வி ஆணையம், கல்வி குறித்த தேசிய மற்றும் ஒருங்கிணைந்த கொள்கையை வரைவு (draft) செய்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், நாடாளுமன்றம் 1968-ல் முதல் கல்விக் கொள்கையை (first education policy) நிறைவேற்றியது.


2. தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது இந்தியாவின் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையாகும். முதல் தேசிய கல்விக் கொள்கை 1968-ல் பிரதமர் இந்திரா காந்தியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை 1986-ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் கீழ் வந்தது. 1992-ல், பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்தக் கொள்கை திருத்தப்பட்டது. மூன்றாவது தேசிய கல்விக் கொள்கை, 2020-ல் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.


3. தேசிய கல்விக் கொள்கை ஒரு பரந்த வழிகாட்டுதலை வழங்குகிறது. ஆனால், அதைப் பின்பற்றுவது கட்டாயமில்லை. கல்வி பொதுப்பட்டியலில்  (concurrent subject) இடம் பெற்றுள்ளதால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் இதில் சட்டங்களை இயற்றலாம். தற்போதைய, அரசாங்கம் 2040ஆம் ஆண்டிற்குள் இந்தக் கொள்கையை முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.


சமக்ர சிக்ஷா அபியான்

                  பள்ளிக் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டமாக சமக்ர சிக்ஷா அபியான் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan (SSA)), ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA)) மற்றும் ஆசிரியர் கல்வி (TE) ஆகிய திட்டங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தப்படுகிறது.


மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?


மும்மொழிக் கொள்கை 1968-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஒரு இந்திய மொழியையும், இந்தி பேசாத மாநிலங்களில், பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும்.


இந்தியாவில் இந்தி எவ்வளவு பரவலாகப் பேசப்படுகிறது?


1. 2011 மொழியியல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட 121 தாய்மொழிகள் உள்ளன. இந்தி மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது, 52.8 கோடி தனிநபர்கள், அல்லது மக்கள் தொகையில் 43.6% பேர், அதைத் தங்கள் தாய்மொழியாக அறிவித்தனர். இரண்டாவதாக 9.7 கோடி (8%) பேருக்கு தாய்மொழியாக பெங்காலி உள்ளது.


2. இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 13.9 கோடி (11% க்கும் அதிகமானோர்) இந்தியை தங்கள் இரண்டாவது மொழியாக அறிவித்தனர். இது 55% மக்கள்தொகைக்கு தாய்மொழி அல்லது இரண்டாவது மொழி ஆகும்.


இந்தி திவாஸ் (இந்தி தினம்)


1. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவாஸ் அல்லது இந்தி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சபை இந்தியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மாற்றியதை இது நினைவுகூரும் நாளை இது குறிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலத்திற்கு இணை மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. 


2. மூன்று நாட்கள் விரிவான விவாதங்களுக்குப் பிறகு அரசியலமைப்பு சபை இந்தியை நாட்டின் அலுவல் மொழியாகத் தேர்ந்தெடுத்தது. (குறிப்பு: இந்தி தேசிய மொழியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.)


3. ஒன்றிய அரசு எந்த எழுத்து முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்த எழுத்து முறையை எண்களில் பயன்படுத்த வேண்டும், ஆங்கிலத்தின் நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதங்கள் நடந்தன. இந்துஸ்தானி (இது இந்தி மற்றும் உருது கூறுகளின் கலவையாகும்) மற்றும் சமஸ்கிருதமும் அதிகாரப்பூர்வ மொழியாக முன்மொழியப்பட்டது.


4. முன்ஷி-அய்யங்கார் கொள்கை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு வரைவுக் குழு உறுப்பினர்களான கே.எம். முன்ஷி மற்றும் என். கோபாலசாமி அய்யங்கார் ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டது. முன்ஷி-அய்யங்கார் கொள்கையின் ஒரு பகுதியாக, 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் பிரிவு 343 கூறியது:


முன்ஷி-அய்யங்கார் கொள்கை மற்றும் இந்தி திவாஸ்


(அ) ஒன்றிய அரசின் அலுவல் மொழி தேவநாகரி எழுத்துக்களில் இந்தி மொழியாக இருக்கும்.


(ஆ) ஒன்றிய அரசின் அலுவல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் இந்திய எண்களின் சர்வதேச வடிவமாக இருக்கும்.


(இ) இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த விதி அமலில் இருந்தது. அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்ததைப் போலவே, ஒன்றிய அரசின் அனைத்து அலுவல் நோக்கங்களுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.


5. 15 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, ​​இந்தி பேசாத பல மாநிலங்கள் தங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்று அச்சத்தில் போராட்டங்களை நடத்தின. குறிப்பாக, தமிழ்நாட்டில் போராட்டம் கடுமையாக இருந்தது. இதை சரி செய்ய, ஒன்றிய அரசு அலுவல் மொழிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகவே இருக்கும் என்பதை உறுதி செய்தது.




Original article:

Share: