ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) என்றால் என்ன? பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) என்றால் என்ன?

 

  • புதிய விருப்ப ஓய்வூதியத் திட்டமானது 10 ஆண்டுகள் தகுதிபெற்ற சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ரூ. 10,000 நிச்சயமான ஊதியம் மற்றும் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிச் சேவைக்குப் பிறகு "முழு உறுதியளிக்கப்பட்ட ஊதியம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  • ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் UPS,  23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டமானது அரசாங்கத்தின் பங்களிப்பை அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் கூட்டுத் தொகையில் 18.5 சதவீதமாக முந்தைய 14 சதவீதத்திலிருந்து உயர்த்தும். அதே நேரத்தில் ஊழியரின் பங்கு 10 சதவீதமாக இருக்கும்.


  • UPS-ன் கீழ், ஓய்வுபெறுவதற்கு கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் என்ற விகிதத்தில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் இருக்கும். குறைந்த தகுதிச் சேவைக் காலம் இருந்தால், விகிதாசார தொகையாக இருக்கும்.


  • விருப்ப ஓய்வுகளுக்கு, 25 வருட சேவைக்குப் பிறகு UPS தேர்வு கிடைக்கும், மேலும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஊதியம், அவர்கள் பணியில் இருந்திருந்தால், அந்த ஊழியர் ஓய்வு பெற்ற தேதியில் இருந்து தொடங்கும்.


  • UPS-ன் கீழ் இரண்டு வகையான நிதிகள் உள்ளன. அவை ஒன்று, பணியாளர் பங்களிப்பு மற்றும் இணையான மத்திய அரசின் பங்களிப்புடன் ஒரு தனிப்பட்ட நிதித் தொகுப்பு. இரண்டாவது, மத்திய அரசிடமிருந்து கூடுதல் பங்களிப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நிதி ஆகும்.


  • யுபிஎஸ் விதிகள், யுபிஎஸ் தொடங்குவதற்கு முன்பு ஓய்வு பெற்ற கடந்த என்பிஎஸ் ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும். இந்த ஓய்வூதியதாரர்கள் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகையை பொது வருங்கால வைப்பு நிதி விகிதங்களிலான வட்டியுடன் பெறுவார்கள்.


  • இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்ட நேரத்தில் விவரிக்கப்பட்ட அரசாங்க மதிப்பீடுகளின்படி, UPS அதன் முதல் ஆண்டில் சுமார் ரூ.6,250 கோடி செலவாகும் என்றும், ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகைக்காக ரூ.800 கோடி கூடுதல் செலவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


  • பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு நிலையான ஓய்வூதியத்தைப் பெற்றனர்.  இது அவர்களின் கடைசி சம்பளத்தில் 50% ஆகும். இந்தத் திட்டத்தில் ஊழியர்கள் பங்களிக்க வேண்டியதில்லை. ஜனவரி 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த ஊழியர்களுக்குப் பொருந்தும் புதிய ஓய்வூதிய முறை (NPS), பங்களிப்புகளைக் கோருகிறது. ஆனால், ஓய்வூதியம் சந்தை செயல்திறனைப் பொறுத்ததாக இருக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?:


  • மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இது அவர்களின் சேவையின் கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக உறுதி செய்கிறது.


  • ஏப்ரல் 1, 2025 முதல், அரசாங்கத்தில் 25 ஆண்டுகள் சேவை முடித்த அனைவருக்கும் UPS கிடைக்கும். பணியாளரின் இறப்புக்குப் பிறகு ஓய்வூதியத்தில் 60% இணையருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது, குறைந்தது 10 ஆண்டுகள் சேவையை முடித்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000, பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரித்து வரும் விலையைத் எதிர்கொள்ள உதவும் பணவீக்க சரிசெய்தல் மற்றும் ஓய்வு பெறும்போது ஒரு மொத்தத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதி ஆகியன அதன் மற்ற முக்கிய அம்சங்கள்.



Original article:

Share:

குடியரசு தினத்தன்று, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்: இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 3 விசயங்கள்.

 தேசிய போர் நினைவகம் பிப்ரவரி 25, 2019 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன் இறந்த வீரர்களை நினைவு கூறும் நினைவுச்சின்னம் எது? போர் நினைவுச் சின்னத்தின் கட்டிடக்கலையின் பின்னணியில் உள்ள செய்தி என்ன?


இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் பிரமாண்ட அணிவகுப்புடன் கொண்டாடுவதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேசத்திற்கு தலைமை தாங்கினார்.  இந்தோனேசியாவின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றவுடன் விழா தொடங்கியது. அதன்பிறகு, பிரதமர் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் அணிவகுப்பைக் காண கர்தவ்யா பாதையில் வணக்கம் செலுத்தும் மேடையை நோக்கிச் சென்றனர்.


தேசிய போர் நினைவகத்தின் வரலாறு என்ன? இதற்கு முன் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் நினைவுச்சின்னம் இந்தியாவில் இருந்ததா?


1, தேசிய போர் நினைவுச்சின்னம் என்றால் என்ன?


தேசிய போர் நினைவகம் பிப்ரவரி 25, 2019 அன்று மோடியால் திறந்து வைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு போர்கள், போர் நடவடிக்கைகள் மற்றும் மோதல்களில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களின் நினைவாக இது கட்டப்பட்டது. அத்தகைய வீரர்களுக்கு பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. ஆனால், இதற்கு முன், தேசிய அளவில் அவர்களை நினைவுகூரும் எந்த நினைவுச்சின்னமும் இல்லை.


எவ்வாறாயினும், புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் அமர் ஜவான் ஜோதி இருந்தது. இந்திய வீரர்களின் உச்சபட்ச தியாகத்தை கௌரவிக்கும் நித்திய சுடராக இருந்தது. 1961ஆம் ஆண்டு முதல் ஒரு தேசிய போர் நினைவுச்சின்னம் கட்டுவதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், அதன் கட்டுமானம் இறுதியாக 2015ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா கேட் கிழக்கே (Gate at C Hexagon) இடம் இறுதி செய்யப்பட்டது.


2.  தேசிய போர் நினைவுச்சின்னத்தின் வடிவமைப்பு


நினைவுச்சின்னம் நான்கு மைய வட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் மற்றும் மிகப்பெரியது ரக்ஷா சக்ரா அல்லது பாதுகாப்பு வட்டம், வரிசை மரங்களால் குறிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களைக் குறிக்கின்றன. தியாகச் சக்கரம், தியாகத்தின் வட்டம், சக்ரவ்யூஹின் அடிப்படையில் மரியாதைக்குரிய வட்டமான செறிவான சுவர்களைக் கொண்டுள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டிற்காக உயிர் நீத்த ஒவ்வொரு ராணுவ வீரர்களுக்கும் சுவரில் கிரானைட் கற்களில் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, 26,466 வீரர்களின் பெயர்கள் இந்த கிரானைட் கற்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு சிப்பாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யும் போது ஒரு பெயர் சேர்க்கப்படுகிறது. மூன்றாவது, வீர்த சக்ரா அல்லது வீரத்தின் வட்டம், நமது ஆயுதப் படைகளின் போர்கள் மற்றும் செயல்களை சித்தரிக்கும் ஆறு வெண்கல சுவரோவியங்களுடன் மூடப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது.


இறுதியானது அமர் சக்ரா, இது ஒரு தூபி மற்றும் ஒரு நித்திய சுடரைக் கொண்டுள்ளது.  இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியின் சுடர் இந்த சுடருடன் இணைக்கப்பட்டது. சுடர் வீழ்ந்த வீரர்களின் ஆன்மா அழியாமையின் அடையாளமாகவும், அவர்களின் தியாகத்தை நாடு மறக்காது என்பதற்கான அடையாளமாகவும் உள்ளது. நாட்டின் உயரிய வீர விருதான பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் மார்பளவு சிலைகளும் நினைவிடத்தில் நிறுவப்பட்டுள்ளன.


3.  அமர் ஜவான் ஜோதி


அமர் ஜவான் ஜோதி 1971 வங்காளதேசப் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைக் குறிக்கும் வகையில் 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1972ஆம் ஆண்டு  குடியரசு தினத்தன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். அமர் ஜவான் ஜோதி முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. இது ஒரு கருப்பு பளிங்கு அடித்தளத்தையும், ஒரு நினைவுச்சின்னத்தையும் கொண்டிருந்தது. இது ஒரு அறியப்படாத சிப்பாயின் கல்லறையாகப் பயன்படுத்தப்பட்டது. அடித்தளத்தில், ஒரு துப்பாக்கிச் சுரிகையுடன் (bayonet) தலைகீழாக L1A1 சுய-ஏற்றுதல் துப்பாக்கி இருந்தது. துப்பாக்கியின் மேல் ஒரு சிப்பாயின் போர் தலைக்கவசம் இருந்தது.


இந்தியா கேட் அல்லது அகில இந்திய போர் நினைவகம் 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இது பல போர்கள் மற்றும் பிரச்சாரங்களில் இறந்த பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் சுமார் 90,000 இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.  புதிய நினைவிடத்தில் அமர் ஜவான் ஜோதி சுடரை இணைக்க மோடி அரசாங்கம் முடிவு செய்தபோது, ​​இந்தியா கேட் கடந்த கால இந்தியாவின் காலனித்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும், வீரமரணம் அடைந்த வீரர்களை கௌரவிப்பது மிகவும் பொருத்தமானது என்று கூறப்பட்ட காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.




Original article:

Share:

75 வருட பரிசோதனைக்குப் பிறகும் இந்திய அரசியலமைப்பு ஏன் இன்னும் செழித்து வருகிறது? -அபினவ் சந்திரசூட்

 சிலர் இது மிக நீளமாக இருப்பதாகவும் அல்லது உண்மைத் தன்மை இல்லையெனவும் அல்லது போதுமான அளவு இந்தியச் சட்டமாகவே இருப்பதாகவும் விமர்சித்தாலும், நமது அரசியலமைப்பின் நீடித்த தாக்கம் அதன் படைப்பாளர்களின் ஞானத்தை நிரூபிக்கிறது. இது உலகளாவிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்திய யதார்த்தங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டது. 75 ஆண்டுகளாக, இந்தியர்கள் அதைப் பாதுகாக்க உழைத்து வருகின்றனர். இப்போது, ​​அதைத் தொடர்ந்து செய்வது நமது பொறுப்பு.


நவம்பர் 17, 1949 அன்று, அரசியலமைப்பு வரைவு அதன் மூன்றாவது மற்றும் இறுதி வாசிப்புக்காக இந்திய அரசியலமைப்பு சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அடுத்த சில நாட்களில், பல உரைகளில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவணத்தை கடுமையாக விமர்சித்தனர். மூன்று வாதங்கள் குறிப்பாக அவையை நடைபெறாமல் செய்தன. அதற்குக் காரணம் புதிய அரசியலமைப்பு மிக நீளமாக இருப்பதாகவும், அதில் உண்மைத் தன்மை இல்லையெனவும் மற்றும் போதுமான அளவு இந்தியச் சட்டமாகவே இருப்பதாகவும் விமர்சித்தனர்.


சுதந்திர இயக்கத்தின்போது ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் (1923–1970) நாடாளுமன்ற ஊறுப்பினராகப் பணியாற்றிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  சேத் கோவிந்த் தாஸ், அரசியலமைப்புச் சட்டம் குறித்த சில கவலைகளைச் சுட்டிக்காட்டினார். அதில் "அதிகமான கட்டுரைகள்" இருப்பதாகவும், தேவையற்ற விவரங்கள் சேர்க்கப்பட்டதாகவும், அது "மிகவும் பருமனானது" என்றும் அவர் கூறினார்.


ஒடிசாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான லட்சுமிநாராயண் சாஹு, அரசியலமைப்பை "கிச்ரி" (“khichri”) அல்லது "காக்டெய்ல்" (“cocktail”) என்று விமர்சித்தார். 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மற்றும் பிற உலக அரசியலமைப்புகளிலிருந்து பெரிதும் கடன் வாங்கிய "விசித்திரமான மற்றும் ஆரோக்கியமற்ற கலவை" என்று அவர் விவரித்தார். இது "செயல்படுத்தப்பட்டவுடன் விரைவில் தோல்வியடையும்" என்று சாஹு கணித்தார்.


மைசூர் முதலமைச்சராகவும் பின்னர் மத்திய அமைச்சராகவும் ஆன வழக்கறிஞரான கே. ஹனுமந்தையா கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆங்கிலேயர்களால் ஏழு முறை சிறையில் அடைக்கப்பட்ட ஹனுமந்தையா, வரைவு அரசியலமைப்பில் "இந்தியத்தன்மை" இல்லை என்று கூறினார். வரைவுக் குழுவின் பல உறுப்பினர்கள் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார். அவர் அரசியலமைப்பை ஒரு ஆங்கில இசைக்குழுவுடன் ஒப்பிட்டு, "எங்களுக்கு வீணை அல்லது சிதார் இசை தேவைப்பட்டது. ஆனால், இங்கே ஒரு ஆங்கில இசைக்குழுவின் இசை உள்ளது" என்று கூறினார்.


இந்த விமர்சனங்களில் பல செல்லுபடியாகும். இந்திய அசல் அரசியலமைப்புச் சட்டத்தில் 395 பிரிவுகளும் 8 அட்டவணைகளும் இருந்தன. இது உலகின் மிக நீளமான ஒன்றாகும். நவம்பர் 1949ஆம் ஆண்டில், இது 165 நாட்கள் விவாதிக்கப்பட்டது. மேலும், 7,635 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன.


சில பகுதிகளில் சிறிய விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக:


  • ரயில்வே கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மாநிலங்கள் வரி விதிக்க முடியாது என்று பிரிவு 287 கூறியது.

  • தலைவர் தற்காலிகமாக இல்லாதபோது துணைத் தலைவர் ஒரு மாநில சட்டமன்றத்திற்கு எவ்வாறு தலைமை தாங்க முடியும் என்பதை பிரிவு 184 விளக்கியது.

  • ஒரு மாநிலத்தின் துணை நீதித்துறை சேவையில் நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிரிவு 234 கோடிட்டுக் காட்டியது.


கூடுதலாக, அரசியலமைப்பின் பெரும் பகுதிகள் 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து கடன் வாங்கப்பட்டன.  இது பிரிட்டனின் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட கடைசி காலனித்துவ அரசியலமைப்பாகும்.


இந்திய அரசியலமைப்பின் சில பகுதிகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்த அரசியலமைப்புச் சட்டங்களால் ஈர்க்கப்பட்டன. 1946ஆம் ஆண்டில், அரசியலமைப்புச் சபையின் அரசியலமைப்பு ஆலோசகரான பி.என். ராவ், 115 பக்க ஆவணத்தைத் தயாரித்தார். இந்த ஆவணத்தில் லிதுவேனியா, ஹங்கேரி, பெரு, சிரியா, தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் அடங்கும். இது சட்டமன்றத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது.


உதாரணமாக, பிரிவு 14-ல் உள்ள "சட்டங்களின் சம பாதுகாப்பு" என்ற சொற்றொடர் அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்திலிருந்து எடுக்கப்பட்டது. பிரிவு 19(2) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு விதிவிலக்குகளை அரசியலமைப்பில் நேரடியாகச் சேர்ப்பதன் மூலம் ஐரிஷ் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது. பிரிவு 21-ல் உள்ள "சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை" என்ற சொற்றொடர் ஜப்பானிய அரசியலமைப்பின் பிரிவு 31-லிருந்து வந்தது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பெலிக்ஸ் பிராங்க்ஃபர்ட்டருடன் ராவ் விவாதித்த பிறகு இந்த யோசனை உருவானது.


நமது அரசியலமைப்புச் சட்டம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அதைக் கொண்டாட ஒரு காரணம் இல்லையா? அது ஒரு காலத்தில் மிக நீளமானது, அசலானது அல்ல, உண்மையிலேயே இந்திய அரசியலமைப்புச் சட்டமாக இல்லை என்று விமர்சிக்கப்பட்டது.


அரசியலமைப்புச் சட்டம் குறித்த விமர்சனங்களுக்கு சிறந்த பதில்களில் ஒன்று வரைவுக் குழுவின் தலைவரான பி.ஆர். அம்பேத்கரிடமிருந்து வந்தது.  நவம்பர் 1948ஆம் ஆண்டில், அரசியலமைப்பு அசலானது என்ற கூற்றை உரையாற்றும் போது அவர் ஒரு உரை நிகழ்த்தினார். இதற்காக "நான் மன்னிப்பு கேட்கவில்லை" என்று அவர் கூறினார். கருத்துக்களை கடன் வாங்குவது வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதை விளக்கினார். அரசியலமைப்பின் பின்னால் உள்ள அடிப்படைக் கருத்துக்களுக்கு யாருக்கும் பிரத்யேக உரிமைகள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உத்வேகத்திற்காக அதன் எல்லைகளுக்கு வெளியே பார்த்த ஒரே நாடு இந்தியா அல்ல. அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய நபரான ஜேம்ஸ் மேடிசன், தாமஸ் ஜெபர்சனின் புத்தகங்களைப் பயன்படுத்தி பண்டைய கிரேக்க நாகரிகங்களைப் படித்தார். இந்தியாவின் கலாச்சாரம் எப்போதும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் திறந்திருக்கும். உதாரணமாக, முன்னாள் தலைமை நீதிபதியான எம்.சி. சாக்லாவின் சுயசரிதை *டிசம்பர் மாதத்தில் ரோஜாக்கள்*, ரிக் வேதத்தின் மேற்கோளுடன் தொடங்குகிறது. அவர் "ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் உன்னதமான எண்ணங்கள் நமக்கு வரட்டும்" என்று குறிப்பிட்டார்.


அரசியலமைப்பில் அதிகப்படியான நிர்வாக விவரங்கள் உள்ளன என்பதை அம்பேத்கர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்தியாவில் அரசியலமைப்பு நெறியின் பாரம்பரியம் இல்லாததால் இது அவசியம் என்று அவர் நம்பினார். அதை அவர் "அரசியலமைப்பு நெறி" ("constitutional morality.") என்று அழைத்தார். அம்பேத்கர் 1914-15ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றைப் படித்தார். மேலும், 19ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜார்ஜ் க்ரோட்டைக் குறிப்பிட்டார். கிரேக்கத்தின் 12 தொகுதிகள் கொண்ட வரலாற்றில், ஒரு அரசாங்கம் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இருக்க "அரசியலமைப்பு நெறி" அவசியம் என்று க்ரோட் எழுதினார். இந்தியா அரசியலமைப்பு நெறியின் கலாச்சாரத்தை வளர்த்தவுடன், இந்த விவரங்களை நீக்க முடியும் என்று அம்பேத்கர் அரசியலமைப்பு சபையில் விளக்கினார். அந்த நேரத்தில், இந்தியாவில் அரசியலமைப்பு நெறி என்பது இயற்கையான உணர்வு அல்ல. ஆனால், அவை வளர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றார். ஏனெனில், ஜனநாயகம் இந்தியாவிற்கு புதியது, அங்கு மக்கள் சமூகம் இயற்கையாகவே ஜனநாயக முறையில் இல்லை.


இந்திய அரசியலமைப்பு மற்ற நாடுகளிடமிருந்து கருத்துக்களைப் பெற்றது. ஆனால், அது அவற்றை கண்மூடித்தனமாக நகலெடுக்கவில்லை. உதாரணமாக, பிரிவு 21-ல், அமெரிக்க நீதிமன்றங்கள் பெரும் மந்தநிலையின் போது செய்தது போல், சமூக நலச் சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கக்கூடாது என்பதற்காக, "சட்ட நடைமுறை" என்ற அமெரிக்க வார்த்தையை வடிவமைத்தவர்கள் தவிர்த்தனர். பிரிவு 19(2)-ல் உள்ள பேச்சு சுதந்திரத்தின் வரம்புகள் ஐரிஷ் அரசியலமைப்பால் ஈர்க்கப்பட்டன. ஆனால், அவை இந்தியாவின் சொந்த வரலாற்றையும் பிரதிபலித்தன. உதாரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற சியாமா பிரசாத் முகர்ஜியின் அழைப்பு, பேச்சு சுதந்திரத்தின் வரம்பாக "வெளிநாடுகளுடனான நட்புறவை" சேர்க்க வழிவகுத்தது. அரசு வேலைகள், கல்வி மற்றும் சட்டமன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடுக்கான விதிகளும் இந்தியாவிற்கு தனித்துவமானவை. மேலும், வெளிநாட்டுக்கு சாதகமானவை எதுவும் இல்லை.


நவம்பர் 25, 1949 அன்று தனது உரையில், அம்பேத்கர் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். "ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதைப் பின்பற்ற வேண்டியவர்கள் மோசமாக இருந்தால் அது மோசமாகிவிடும்" என்று அவர் கூறினார். மறுபுறம், "ஒரு மோசமான அரசியலமைப்புகூட அதைப் பின்பற்றுபவர்கள் நல்லவர்களாக இருந்தால் நன்றாக வேலை செய்யும்." என்றார். இந்த உரை, அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பிலடெல்பியா மாநாட்டின் கடைசி நாளில் பெஞ்சமின் பிராங்க்ளின் பேசிய பிரபலமான வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகிறது. செப்டம்பர் 17, 1787 அன்று, எலிசபெத் வில்லிங் பவல் என்ற பெண் பிராங்க்ளினிடம், "சரி, மருத்துவரே, நம்மிடம் என்ன இருக்கிறது?  நம்மிடம் இருப்பது குடியரசா அல்லது முடியரசா?" என்று கேட்டார். அதற்கு  பிராங்க்ளின், "நம்மிடம் இருப்பது ஒரு குடியரசு, நீங்கள் அதை பேண முடிந்தால்" என்று பதிலளித்தார். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அதை நமக்குக் கொடுத்தனர். 75 ஆண்டுகளாக, இந்தியர்களின் பல தலைமுறைகளாகப்  பாதுகாத்து வருகின்றன. இப்போது, ​​அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது பொறுப்பு.




Original article:

Share:

குடியரசு தினம் 2025: ஜனவரி 26 அன்று வழங்கப்படும் பல்வேறு விருதுகள் யாவை?

 குடியரசு தினம் 2025 விருதுகள்: இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு மத்திய மற்றும் மாநில காவல்துறைப் படைகளின் பணியாளர்களுக்கு 95 வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் உட்பட 942 சேவைப் பதக்கங்களை ஒன்றிய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.


குடியரசு தின விழா 2025: 2024ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். மொத்தம் 49 பேர் இந்த விருதுகளைப் பெறுவார்கள். முன்னதாக, மத்திய மற்றும் மாநில காவல்துறையினருக்கு 942 சேவை பதக்கங்களை அரசாங்கம் அறிவித்தது. இதில் துணிச்சலான செயல்களுக்கான 95 பதக்கங்களும் அடங்கும். இந்தியாவின் 76வது குடியரசு தினத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பல்வேறு வகையான விருதுகள் என்ன? 


குடிமைச் சேவை விருதுகள்


மிகவும் பிரபலமான விருதுகள் பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் ஆகும். பத்ம விருதுகளில் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவையும் அடங்கும். இவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரம் ஆகும்.


பாரத ரத்னா என்பது இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் மிகவும் மதிப்புமிக்க குடிமக்களுக்கான அங்கீகாரம் ஆகும். இது கலை, இலக்கியம், அறிவியல் அல்லது பொது சேவை ஆகியவற்றில் தனித்தன்மைவாய்ந்த சேவைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியான நபர்களை பிரதமர் பரிந்துரைக்கிறார். மேலும், ஒரு வருடத்தில் அதிகபட்சம் மூன்று நபர்களுக்கு பாரத ரத்னா வழங்க முடியும். இதுவரை 53 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.


பத்ம விபூஷண் தனித்தன்மைவாய்ந்த மற்றும் சிறப்பான சேவைக்காகவும், பத்ம பூஷண் உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காகவும், பத்மஸ்ரீ விருது எந்தவொரு துறையிலும் சிறந்த சேவைக்காகவும் வழங்கப்படுகிறது. விருது வென்றவர்களை பத்ம விருதுகள் குழு தேர்வு செய்கிறது. அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர  எந்தவொரு துறையிலும் பணிபுரியும் எவரும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். நியமனச் செயல்முறை பொதுமக்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், மக்கள் தங்களைத் தாங்களே முன்மொழிய அனுமதிக்கிறது.


இந்த விருதுகள் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையில் உள்ள பணியாளர்களின் சிறப்பான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றன. அவை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் அறிவிக்கப்படுகின்றன.


குடியரசுத்தலைவரின் சிறப்புமிக்க சேவைக்கான பதக்கம் (President’s Medal for Distinguished Service (PSM))  சிறப்பு வாய்ந்த சாதனைக்காக வழங்கப்படுகிறது.  அதே சமயம் திறமையான சேவைக்கான பதக்கம் (Medal for Meritorious Service (MSM)) வளம் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு, 101 PSMகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 85 காவல்துறையினருக்கும், ஐந்து தீயணைப்பு சேவைக்கும், ஏழு குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைக்கும், நான்கு சீர்திருத்த சேவைக்கும் வழங்கப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு 746 MSMகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 634 போலீஸ் சேவைக்கும், 37 தீயணைப்பு சேவைக்கும், 39 சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைக்கும், 36 சீர்திருத்த சேவைக்கும் அடங்கும்.


ஆயுதப் படைகளுக்கு, பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal), அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (Ati Vishisht Seva Medal ) மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் (Vishisht Seva Medal) ஆகியவை மிக உயர்ந்த மரியாதை வாய்ந்தது ஆகும். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரின் தனித்தன்மைவாய்ந்த மற்றும் சிறப்புமிக்க சேவைக்கு இந்த மூன்று விருதுகளும் அளிக்கப்படுகின்றன.


கேலண்ட்ரி விருதுகள்


துணிச்சலுக்கான பதக்கங்கள் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு வீரம் மற்றும் வீரச் செயலுக்காக வழங்கப்படுகின்றன.


போர்க்கால விருதுகள்:  இந்த விருதுகள் எதிரிக்கு எதிரான போர்களில் காட்டப்படும் துணிச்சலுக்காக வழங்கப்படுகின்றன. இவை முக்கியமாக ஆயுதப்படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன. போர்க்காலத்தின் மிக உயர்ந்த துணிச்சலான விருதுகள் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா மற்றும் வீர் சக்ரா ஆகும்.


அமைதிக் கால விருதுகள்: அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் சௌரிய சக்ரா ஆகியவை அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகள்.


ஒரு அரசாங்க செய்திக்குறிப்பு இந்த விருதுகளை வேறுபடுத்துகிறது, “பரம்வீர் சக்ரா, எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலான மற்றும் சுய தியாகத்திற்கான மிகவும் வெளிப்படையான செயலுக்காக வழங்கப்படுகிறது. அதே சமயம் அசோக் சக்ரா வீரம் மற்றும் சுய தியாகம் போன்ற செயல்களுக்காக வழங்கப்படுகிறது. 


அமைதிக்கால விருதுகள் ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள், காவல்துறை அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படலாம்.


காவல் துறையின் வீரப் பதக்கங்கள்: காவல்துறை உறுப்பினர்களுக்கான விருதுகள் ஆண்டுக்கு இருமுறை அதாவது குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களின் துணிச்சல், சிறப்புமிக்க சேவை மற்றும் முன்மாதிரியான நடத்தை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்படுகின்றன.


"உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுதல், குற்றங்களைத் தடுப்பது அல்லது குற்றவாளிகளைக் கைது செய்தல், அவர்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பது போன்றவற்றில் தனித்தன்மைவாய்ந்த துணிச்சலும் திறமையும் கொண்ட அரிதான வெளிப்படையான துணிச்சலான செயலைச் செய்தவர்களுக்கு குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கம் வழங்கப்படுகிறது. 


துணிச்சலுக்கான காவல் பதக்கம், கடமையின் வரிசையில் துணிச்சலையும் தைரியத்தையும் அங்கீகரிக்கிறது.


உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 95 துணிச்சலான பதக்கங்களில் 17 தீயணைப்புப் படை வீரர்களுக்கும், மீதமுள்ளவை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. துணிச்சலான பதக்கங்களில், இடதுசாரி தீவிரவாதத்தால் (Left Wing Extremism (LWE)) பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவை செய்ததற்காக உள்ளூர் போலீசார் உட்பட பாதுகாப்புப் பணியாளர்களுக்கு 28 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த 28 வீரர்களும், வட கிழக்கைச் சேர்ந்த 3 பேரும், பிற பிராந்தியங்களைச் சேர்ந்த 36 வீரர்களும் வீரப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.


கடந்த ஆண்டு 1,132 சேவைப் பதக்கங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. இதில் 277 வீரத்திற்கான பதக்கங்களும் அடங்கும்.


சிவிலியன் கேலண்ட்ரி பதக்கங்கள்: இந்த விருதுகள் துணிச்சலான செயல்களுக்காகவும் உயிரைக் காப்பாற்றியதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.


ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் அசோகா விருதுகளின் ஒரு பகுதியாக உருவானது. அவை அனைத்து தரப்பு மக்களாலும் உயிர்காக்கும் செயல்களுக்காக வழங்கப்படுகின்றன. மேலும், அவை மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இந்த விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.


இந்த ஆண்டு, 17 பேருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஒன்பது பேருக்கு உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் 23 வீரர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக் வழங்கப்படும். இந்த விருதுகளில் ஆறு பேருக்கு மரணத்திற்குப் பின் விருதுகள் வழங்கப்படுகின்றன.


தேசிய துணிச்சலான விருதுகள், விதிவிலக்கான தைரியத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை அங்கீகரித்து, இந்தியக் குழந்தைகள் நலக் கவுன்சிலால் (Indian Council for Child Welfare (ICCW)) வழங்கப்படுகிறது.




Original article:

Share:

தேசிய வாக்காளர் தினம் - குஷ்பு குமாரி

 இந்திய தேர்தல் ஆணையத்தின் 75-வது ஆண்டு நிறைவையும், தேசிய வாக்காளர் தினத்தையும் (National Voters' Day) இந்தியா கொண்டாடுகிறது.


1950-ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு "வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்" (Nothing Like Voting, I Vote for Sure) என்ற கருப்பொருளுடன் 15-வது தேசிய வாக்காளர் தினத்தைக் குறிக்கிறது. இந்த கருப்பொருள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் மக்கள் தங்கள் வாக்களிப்பதில் பெருமை கொள்ள ஊக்குவிக்கிறது.

முக்கிய அம்சங்கள்:


1. தேசிய வாக்காளர் தினம், மக்கள் தேர்தல்களில் பங்கேற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இளம் வாக்காளர்கள் மீது கவனம் செலுத்துகிறது மற்றும் வாக்காளர் பதிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நாள் விழிப்புணர்வைப் பரப்புவதோடு, தகவலறிந்த வாக்களிப்பையும் ஊக்குவிக்கிறது. தேசிய, மாநில, மாவட்டம், தொகுதி மற்றும் வாக்குச் சாவடி மட்டங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இது நாட்டின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக உள்ளது.


2. ஜனநாயக நாடுகளில், வாக்களிப்பது என்பது அரசியல் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டும் ஒரு அடிப்படை உரிமையாகும். சமூகத்தில் யார் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் அனைவருக்கும் ஒரு கருத்தைச் சொல்ல இது அனுமதிக்கிறது. வாக்களிப்பது ஒருவரின் குடியுரிமையைப் பயன்படுத்துவதில் முக்கியப் பகுதியாகும்.


3. 2013-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் "மேற்கூறியவை எதுவும் இல்லை (NOTA)" என்ற விருப்பத்தை அனுமதித்தது. இது வாக்காளர்கள் வேட்பாளர்கள் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு வழியை வழங்குகிறது.


4. "எதிர்மறை வாக்களிப்பை அனுமதிப்பது கருத்து சுதந்திரத்திற்கும் பிரிவு 21-ன் கீழ் சுதந்திரத்திற்கான உரிமைக்கு (right to liberty) எதிரானது. எதிர்மறை வாக்களிப்பு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களைப் பற்றி வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுவதன் மூலம் ஜனநாயகத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த அமைப்பு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு முக்கியமானது  என்று நீதிமன்றம் கூறியது.


பெரும்பான்மை (First-past-the-post (FPTP)) வாக்களிப்பு முறை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறை


இந்தியாவில், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பெரும்பான்மை (First-past-the-post (FPTP)) வாக்களிப்பு முறை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறை (proportional representation systems) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுகிறார். இது தேர்தல்களை நடத்துவதற்கான ஒரு எளிய வழியாகும்.


மாநிலங்களவை மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு (single transferable vote system) எனப்படும் ஒரு முறையைப் பயன்படுத்துகிறது. இந்த முறை மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் விகிதத்தை மிகவும் துல்லியமாக வெளிக்காட்ட உதவி செய்கிறது.

 


   





 

தபால் வாக்குகள்


1. தபால் வாக்கு (Postal ballot) என்பது மக்கள் பிரதிநித்துவ சட்டப் பிரிவு 60-ல் கூறப்பட்டுள்ளபடி, வாக்குச்சாவடிகளில் இருக்க முடியாத வாக்காளர்கள் தொலைதூரத்தில் வாக்களிக்க அனுமதிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 18-ன் படி, பின்வரும் நபர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க உரிமை உண்டு:


• சிறப்பு வாக்காளர்கள்: குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், கேபினட் அமைச்சர்கள், பிற உயர்மட்டப் பிரமுகர்கள் மற்றும் அவர்களது துணைவியார் உட்பட, மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் பிரிவு 20(4)ன் கீழ் பதவி வகிக்கும் நபர்கள் சிறப்பு வாக்காளர்களாக கருதப்படுவர் .


• சேவை வாக்காளர்கள்: இந்திய ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள், தங்கள் மாநிலத்திற்கு வெளியே பணியாற்றும் ஆயுதமேந்திய மாநில காவல்துறை உறுப்பினர் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர் மற்றும் அவர்களுடன் வசிக்கும் அவர்களது மனைவிகள் சேவை வாக்காளர்களாக கருதப்படுவர்.


• தேர்தல் கடமையில் உள்ள வாக்காளர்கள்: இதில் அனைத்து ஆணையத்தின் பார்வையாளர்கள், தலைமை அதிகாரிகள், வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் பொது ஊழியர்கள் வாக்குப்பதிவு நாளில் உத்தியோகப்பூர்வ பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். வீடியோகிராபர்கள், கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், துப்புரவாளர்கள், உதவி எண் ஊழியர்கள் போன்ற தனியார் மற்றும் அரசு சாரா ஊழியர்களும் இதில் அடங்குவர்.


வாக்காளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்


• மக்கள் பிரதிநித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 60 ©-ன் கீழ் வராத வாக்காளர்கள்: 2019-ல், தேர்தல் ஆணையம் “வருகை தராத வாக்காளர்கள்” வகையை உருவாக்கியது. இதில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், குறைந்தது 40% உடல்நல குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், கோவிட்-19 சந்தேக நபர் அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் உள்ளனர்.


1. தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர, சுதந்திரமான மற்றும் அரசியலமைப்பு அதிகார அமைப்பாகும். ஒன்றிய மற்றும் இந்திய மாநிலங்களில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான அமைப்பாகும்.


புதிய தேர்தல் ஆணையர் தேர்வு செயல்முறை


தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ன் படி, சட்ட அமைச்சகம், ஐந்து பெயர்களைக் கொண்ட குழுவைத் தயாரிப்பதற்காக, சட்ட அமைச்சர் தலைமையில் ஒரு தேடல் குழுவை அமைக்கும். பிரதமர், அமைச்சரவை அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, இந்தக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் அல்லது வெளியில் இருந்து “வேறு எந்த நபரையும்” பரிசீலிக்கலாம்.


1. தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர, சுதந்திரமான மற்றும் அரசியலமைப்பு அதிகார அமைப்பாகும். ஒன்றிய மற்றும் இந்திய மாநிலங்களில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான அமைப்பாகும்.


2. தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதற்கும், ஆணையத்தின் சாத்தியமான பாத்திரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவை வழங்குவதற்கும் அரசியலமைப்பில் பிரிவுகள் 324–329 குறிப்பிட்டுள்ளன.


3. பிரிவு 324: வாக்காளர் பட்டியல் தயாரிப்பதையும், நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கான அனைத்து தேர்தல்களையும் நடத்துவதையும் மேற்பார்வையிட, வழிநடத்த மற்றும் கட்டுப்படுத்தும் பொறுப்பை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.


4. பிரிவு 325: மதம், இனம், சாதி, பாலினம் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் விலக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது.


5. பிரிவு 326: வயது வந்தோர் வாக்குரிமை (வயது வந்தோர் வாக்களிக்கும் உரிமை) மக்கள் சபை (மக்களவை) மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கு அடிப்படையாகும்.


6. பிரிவு 327: இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி, தேவைப்படும் போதெல்லாம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் குறித்து சட்டங்களை இயற்ற அனுமதிக்கிறது.


7. உறுப்புரை 328: தேவைப்படும் போதெல்லாம் மாநில சட்டமன்றம் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் குறித்து சட்டங்களை இயற்ற அனுமதிக்கிறது.


8. பிரிவு 329: தேர்தல் விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடுக்கிறது.




Original article:

Share:

இந்தோனேசியாவுடன் இந்தியா : பண்டைய உறவுகளிலிருந்து புதிய கட்டத்திற்கு

 இரண்டு ஆசிய நாடுகளும் இப்போது தங்கள் வரலாற்று உறவை வலுப்படுத்த வேண்டும்.


குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவரது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளைக் காட்டும் சின்னங்களால் நிறைந்திருந்தது. இருப்பினும், இந்த வருகை எந்தவிதமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் பண்டைய உறவுகள் உள்ளன. இந்த உறவு வர்த்தகம், பயணம் மற்றும் ஜாவானிய இந்து மதத்தின் பரவலை அடிப்படையாகக் கொண்டவை. வேதங்கள் மற்றும் சமஸ்கிருத படைப்புகளின் பயன்பாடும் இரு நாடுகளையும் இணைத்துள்ளது. இந்தப் பகிரப்பட்ட கூறுகள் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வலுவான உறவை உருவாக்கியுள்ளன. கடந்த நூற்றாண்டில், இந்தியாவும் இந்தோனேசியாவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்தன. 

இது டச்சு காலனித்துவத்தை எதிர்த்துப் போராடிய இந்தோனேசியத் தலைவர்களை சுதந்திர இந்தியா ஆதரிக்க வழிவகுத்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு டச்சு விமானப் பயணங்களைத் தடை செய்தார். மேலும், இந்தோனேசியப் பிரதமர் மற்றும் துணை அதிபரை  வெளியேற்ற இந்திய விமானங்களை அனுப்பினார். இந்தோனேசியாவின் முதல் அதிபர்சுகர்னோ, ஜனவரி 5, 1950 அன்று தி இந்து இதழில் ஒரு கட்டுரையில் இந்தோனேசியாவின் நன்றியுணர்வைப் பற்றி எழுதினார். இந்தியாவும் இந்தோனேசியாவும் பெரும் வல்லரசு அரசியலை விரும்பாததால் ஒன்றுபட்டன. 


பண்டுங் மாநாட்டில் தொடங்கி அணிசேரா இயக்கம் (non-aligned movement (NAM)) உருவாக்கத்தை அவர்கள் ஆதரித்தனர். அவற்றின் ஒற்றுமைகளால் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன. இரண்டு நாடுகளும்  தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்திய பெரிய ஆசிய நாடுகள். இரு நாடுகளும் கணிசமான சிறுபான்மையினரிடம் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கும் பெரிய மதப் பெரும்பான்மையினரைக் கொண்டிருந்தன. தங்கள் பெரிய மக்கள்தொகைக்கு சமமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பொருளாதார சக்திகளாக இருநாடுகளும்  இருந்தன. 


சமீபத்தில், அவர்களின் உறவு பல்வேறு கவலைகளுக்கு இடையே தொடர்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய தடைகள், அமெரிக்க-சீனா போட்டி, இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் "உணவு, உரம் மற்றும் எரிபொருள்" பாதுகாப்பு பற்றிய கவலைகள் ஆகியவை இதில் அடங்கும். பலதரப்பு ஒழுங்கு பலவீனமடைவது குறித்தும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர். பாலி (2022) மற்றும் டெல்லி (2023) ஆகிய இடங்களில் நடைபெற்ற G-20 உச்சிமாநாட்டில் அவர்களின் கூட்டு முயற்சிகள் இப்போது மேலும் பயன்படுத்தப்படும். இந்தோனேசியா BRICS-ல் இணைந்துள்ளது. இது அவர்களின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கிறது. இந்த வகையில், இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டில் சுபியாண்டோவின் வருகை, பண்டுங்கிலிருந்து விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் வரை ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்கிறது.


இருதரப்பு உறவுகளின் வரலாற்று, ராஜதந்திர மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அறிவிப்புகள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாகவே உள்ளன. சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இருப்பினும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை, சபாங் துறைமுகத் திட்டம் அல்லது ஆச்சே-அந்தமான்ஸ் இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட முன்னேற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 


சமீபத்திய, புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகம் மற்றும் சீனாவுடன் பேசுவதற்கான முயற்சிகள் குறித்து அவர்கள் ஒத்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாலும், கூட்டு அறிக்கை அவர்களின் உலகக் கண்ணோட்டம் குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்தியாவின் குடியரசு தின அழைப்பு மற்றும் சுபியாண்டோவின் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் வருகை ஆகியவை இரு நாடுகளுக்கும் முக்கியமான செய்தியாக இருந்தன. இரண்டு ஆசிய சக்திகளும் இப்போது அடுத்த கட்டத்தில் தங்கள் உறவை வலுப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.




Original article:

Share:

குடியரசுப் பயணம்: தேசத்திற்கு குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை பற்றி…

 கட்சி சார்பான அரசியல் விவாதங்களில் பங்கேற்பதை குடியரசுத்தலைவர் தவிர்க்க வேண்டும்.


76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அரசியலமைப்புச் சட்டம் ஒரு உயிருள்ள ஆவணமாக மாறியுள்ளது என்று கூறினார். இந்தியாவின் பண்டைய குடிமை நற்பண்புகளுக்கு இது பெருமை சேர்த்தது. நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆவணத்தை உருவாக்கியதற்காக வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்புச் சபையின் பிற உறுப்பினர்களுக்கும் குடியரசுத்தலைவர் அஞ்சலி செலுத்தினார். ஒரு நவீன குடியரசாக இந்தியாவின் முன்னேற்றத்தை அதன் பாரம்பரியத்துடன் இணைத்த குடியரசுத்தலைவர், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மதிப்புகள் எப்போதும் இந்தியாவின் நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருவதாகக் கூறினார். சுதந்திரத்தின்போது இந்தியாவின் எதிர்காலத்தை சந்தேகித்தவர்கள் (Sceptics), நாட்டின் பலம் காரணமாக அவர்களின் சிந்தனை தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். அரசியலமைப்பு சபை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டது, அதில் 15 பெண்கள் இடம் பெற்றிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். உலகின் பல பகுதிகளில் பெண்கள் சமத்துவம் இன்னும் தொலைதூர இலக்காக இருந்தபோதிலும், இந்தியப் பெண்கள் ஏற்கனவே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகின்றனர். இந்தியாவின் 75 ஆண்டுகால முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் குடியரசுத்தலைவர், காலனித்துவ கால சட்டங்களிலிருந்து விலகியதற்காக ஒன்றிய அரசைப் பாராட்டினார். குறிப்பாக, காலனித்துவ குற்றவியல் சட்டங்களை இந்திய நீதி மரபுகளின் அடிப்படையில் மூன்று புதிய சட்டங்களுடன் மாற்றுவதற்கான துணிச்சலான நடவடிக்கையை குடியரசுத்தலைவர் எடுத்துரைத்தார்.


நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் யோசனையை  குடியரசுத்தலைவர் ஆதரித்தார். நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கான வரைவு மசோதா, நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல்களை ஒன்றாக நடத்துவது நிர்வாகத்தை மேலும் சீரானதாக மாற்றும், முடிவெடுப்பதில் தாமதத்தைத் தடுக்கும், வளங்களைச் சேமிக்கும் மற்றும் செலவுகளைக் குறைக்கும் என்று கூறி குடியரசுத்தலைவர் விவாதத்தில் இணைந்தார். இந்தியா (Indian National Developmental Inclusive Alliance (INDIA)) கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றன. இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகவும், கூட்டாட்சியை பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதன் மூலம் "ஒரு நாடு, ஒரு கட்சி" என்ற கொள்கை முன்னெடுப்பதற்கான முயற்சி நடப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் இந்த இந்த விவாதத்தைத் தவிர்த்திருக்கலாம். குடியரசுத்தலைவர் ஒரு அரசியல் விவாதத்தில் ஈடுபடுவதைத் தடுக்க அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும். சீரானத் தன்மையை கட்டாயப்படுத்தாமல் ஒற்றுமை என்பது ஒரு சிறந்த தேசத்திற்கு முக்கியம். குடியரசு தினம் இதை அனைவருக்கும் நினைவூட்ட ஒரு நல்ல நாளாகும்.




Original article:

Share: