தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.
சர்வதேச நடுவர் மன்றத்திற்கான (international arbitration) உலகளாவிய மையமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் நாடுதழுவிய சட்ட மாநாடுகளில் இந்த கருத்து தொடர்ச்சியான கருப்பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த மாநாடுகளின் போது சமீபத்திய அறிக்கைகள் வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்துகின்றன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தானது, நடுவரின் பெயரை அறிந்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளரையும், சட்ட நிறுவனத்தையும் கணிக்கக்கூடிய சிக்கல்களால் நடுவர் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சொலிசிட்டர் ஜெனரல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது போல, இந்த அமைப்பு வலுவான நெருக்கடியை" எதிர்கொள்கிறது.
இதன் காரணமாக, நடுவர் அமைப்பில் வெளிப்படைத்தன்மை தொடர்பான கவலைகளைப் பூர்த்தி செய்யும் நடுவர் அமைப்பில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, சில சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை நாம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். 2019-ம் ஆண்டு மத்தியஸ்தம் மற்றும் சமரச (திருத்தம்) சட்டம் (Arbitration and Conciliation (Amendment) Act), நடுவர் மன்றங்களை தரப்படுத்தவும், நடுவர்களை அங்கீகரிக்கவும் இந்திய நடுவர் மன்றத்தை (Arbitration Council of India (ACI)) உருவாக்கத் திட்டமிட்டது. நியமனங்கள் தனிப்பட்ட அல்லது தொழில்முறை தொடர்புகளின் அடிப்படையில் அல்ல, உண்மையான தகுதியின் அடிப்படையில் இருப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும்.
இருப்பினும், 2019-ம் ஆண்டின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டாலும், இந்திய நடுவர் மன்றம் (ACI) செயல்படாமல் உள்ளது. இது ஒரு நடைமுறைக்கான தாமதம் மட்டுமல்ல. இது உண்மையான சீர்திருத்தத்தின் தோல்வியாகும். இதற்கான சட்டம் காகிதத்தில் மட்டும் உள்ளது. ஆனால், அதை ஆதரிக்கத் தேவையான மன்றங்கள் உருவாக்கப்படவில்லை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த ஒரு தேசிய நடுவர் தரவுத்தளம் (National Arbitrator Database (NAD)) தேவை. தேசிய நடுவர் தரவுத்தளம் (NAD) நாடு தழுவிய தரவுத்தளமாக இருக்க வேண்டும். இது நடுவர்களுக்கு ஒரு கட்டாய, வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு செயலில் உள்ள நடுவரும் தேசிய நடுவர் தரவுத்தளத்தில் (NAD) பதிவு செய்ய வேண்டும். அவர்களின் கல்வித் தகுதிகள், கள நிபுணத்துவம், ஆண்டு அனுபவங்கள், வழங்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை மற்றும் மிக முக்கியமாக, நீதிமன்ற சவால்களில் அந்த விருதுகள் எவ்வாறு செயல்பட்டன என்பதற்கான பதிவு ஆகியவை அடங்கும். இந்தத் தரவு பொதுமக்கள் பார்வையில் அணுகக்கூடியதாக இருக்கும்.
வழிமுறை ஒதுக்கீடு (Algorithmic allocation)
நிறுவன அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் மன்றங்களில் நியமனம் செய்வதற்கு, இந்த அமைப்பு மனித விருப்புரிமையை நீக்கும் வழிமுறை ஒதுக்கீட்டைப் (Algorithmic allocation) பயன்படுத்தும். கட்சிகள் அல்லது நீதிமன்றங்கள் தரப்படுத்தப்பட்ட அளவுருக்கள் மூலம் தேவையான திறன்களை வரையறுக்கும். எடுத்துக்காட்டாக, “கட்டுமான தகராறுகள்” (construction disputes) மற்றும் “25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்” (more than 25 years of experience) ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். மேலும், தேசிய நடுவர் தரவுத்தளத்தின் (NAD) வழிமுறை, பின்னர் சீரற்ற, திறன்-பொருந்தக்கூடிய நடுவர்களின் குறுகிய பட்டியலை உருவாக்கும். இந்தப் பட்டியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். நடுவரை நியமிக்கும் கட்சிகள் இந்த அமைப்பு உருவாக்கிய பட்டியலிலிருந்து தேர்வு செய்யும். இது கட்சி சுயாட்சியைப் பாதுகாக்கும் அதே வேளையில், புறநிலை ரீதியாக தகுதிவாய்ந்த நிபுணர்களுக்கு மட்டுமே தேர்வைக் கட்டுப்படுத்தும்.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நடுவருக்கு சாதகமாக இருக்கும் மிகக் குறுகிய அளவுகோல்களை விதிப்பதன்மூலம் கட்சிகள் அதை தவறாகப் பயன்படுத்த முடியாதபடி அமைப்புக்கு பாதுகாப்புகள் தேவை. தேடலுக்கான அளவுருக்கள் குறைந்தபட்ச வரம்பைவிட குறைவான நடுவர்களை (எடுத்துக்காட்டாக, ஐந்து தகுதிவாய்ந்த நடுவர்கள்) வழங்கினால், அமைப்பானது தானாகவே அளவுகோல்களை விரிவுபடுத்தி, அவர்களின் விவரக்குறிப்புகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவை என்று தரப்பினருக்கு அறிவிக்கும். கூடுதலாக, தேசிய நடுவர் தரவுத்தளம் (NAD), மேற்பார்வை அதிகாரத்தால் மதிப்பாய்வு செய்ய ஒரே நடுவரை தொடர்ந்து வழங்கும் வரம்பிற்கான சேர்க்கைகள் போன்ற சந்தேகத்திற்கிடமான வடிவங்களைக் காட்டும். இது, மறைக்கப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகளை அனுமதிப்பதற்குப் பதிலாக, வழிமுறை கட்சிகளை நடுவர்களுடன் உண்மையிலேயே பொருத்துகிறது என்பதை இது உறுதி செய்கிறது. தேசிய நடுவர் தரவுத்தளம் (NAD) தொடர்ச்சியான கண்காணிப்பு வழிமுறைகளையும் உள்ளடக்கும். ஒவ்வொரு முடிவுக்கு வந்த நடுவர் மன்றத்திற்கும், முடிவுக்கான அறிக்கை தேவைப்படும். அதாவது, தீர்ப்பு சவால் செய்யப்பட்டதா, சவாலுக்கான காரணங்கள் மற்றும் நீதிமன்றம் என்ன முடிவு செய்தது என்பதற்கான பதிவை உருவாக்கும்.
இது ஒவ்வொரு நடுவருக்கும் ஒரு வெளிப்படையான செயல்திறன் பதிவை உருவாக்கும். மேலும், கட்சிகள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் மற்றும் அமைப்பு சிக்கலான வடிவங்களை அடையாளம் காண உதவும். ஒரு நடுவரின் விருதுகள் தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்பட்டால், அவர்களின் தரப்படுத்தலுக்கான ஒரு வடிவத்தில் பிரதிபலிப்பதைக் காண்பார். மேலும், தொடர்ந்து நல்ல விருதுகளை வழங்குபவர்கள் அளவிடக்கூடிய அளவீடுகள் மூலம் அவர்களின் தொழில்முறை நிலை மேம்படுவதைக் காண்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அதே வேளையில், புதிய, தகுதிவாய்ந்த நடுவர்களுக்கான அணுகலையும் இதுபோன்ற அமைப்பு ஜனநாயகப்படுத்தலாம். இது சார்புநிலையையும், சார்புநிலை உணர்வையும் கூட கணிசமாகக் குறைக்கப்படும். நடுவர் அங்கீகாரம் மற்றும் நியமன நோக்கத்திற்காக தேசிய நடுவர் தரவுத்தளத்தை (NAD) அதன் முதன்மை தொழில்நுட்பக் கருவியாகக் கொண்டு சட்டமன்றம் உடனடியாக இந்திய நடுவர் மன்றத்தை (ACI) முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே சட்டமாக இயற்றப்பட்டதை முழுமையாக செயல்படுத்த நமக்கு உறுதித்தன்மை தேவை.
Original Article: A national arbitrator database is needed.