அமெரிக்க பணி ஆணைகளுக்காக சீன நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களை நாடுகின்றன - ப்ளூம்பெர்க்

 அமெரிக்காவிற்கான சீன ஏற்றுமதிகள் அதிக வரிகளை எதிர்கொள்கின்றன. அதே நேரத்தில், இந்திய பொருட்களுக்கு குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.


அமெரிக்க வரிவிதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சில சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்திய ஏற்றுமதியாளர்களை தங்கள் சார்பாக ஆணைகளை பிறப்பித்து, உலக வர்த்தகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் வர்த்தகப் போரைத் தொடரும்போது, ​​தங்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகின்றன.


மே 5 வரை நடைபெறும் குவாங்சோவில் உள்ள கேன்டன் கண்காட்சியில், பல இந்திய நிறுவனங்களை சீன வணிகங்கள் அணுகின. அவர்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் ஒரு நேர்காணலில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதாவது விற்பனைக்கு ஈடாக, இந்திய நிறுவனங்கள் சீன வணிகங்களுக்கு தரகுத்தொகை (commission) செலுத்தும்.


அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பெரும்பாலான சீன ஏற்றுமதிகள் இப்போது 145% வரி விதிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தியாவில் இருந்து வரும் பொருட்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும்போது 10% வரி விதிக்கப்படுகின்றன. தற்போது, 90 நாள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது திட்டமிட்ட வரிவிதிப்புகளைத் தொடர்ந்தால், ஜூலை மாதத்தில் இந்த வரி 26%-ஆக உயர்த்தப்படும்.


டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அவரது வரிவிதிப்புகளால் மேற்கொள்ளப்பட்ட பல சீன ஏற்றுமதியாளர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் வியட்நாமில் தொழிற்சாலைகளை அமைத்தனர் அல்லது தாய்லாந்து போன்ற இடங்களுக்கு பொருட்களை அனுப்பினார்கள். அங்கிருந்து, பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த முறை, வியட்நாம் போன்ற நாடுகள் மீது டிரம்ப் 46 சதவீத பரஸ்பர வரிகளை விதித்துள்ளார். இதன் விளைவாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் ஆர்டர்களைப் பெறலாம்.


இருப்பினும், இந்திய அரசாங்கம் சீன முதலீட்டில் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இது சீன நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளை அமைப்பதையோ அல்லது இந்தியா வழியாக அமெரிக்காவிற்கு பொருட்களை அனுப்புவதையோ கடினமாக்குகிறது. அதற்குப் பதிலாக, கேன்டன் கண்காட்சியில் உள்ள இந்திய நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்க அணுகப்பட்டன. இந்த பொருட்கள் சீன நிறுவனங்களின் பிராண்டுகளின் கீழ் (under the brands) அல்லது இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பிராண்டட் (co-branded) செய்யப்பட்டவை என்று சஹாய் கூறினார்.


கைக்கருவிகள், மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற துறைகளில் பெரும்பாலான கேள்விகள் வந்துள்ளன. இது, அமெரிக்க வாடிக்கையாளர்கள் சிலர் நேரடியாக இந்திய விநியோகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்று சஹாய் கூறினார். சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் வாங்குபவர்களுக்கும், விநியோகர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சஹாய் கூறினார். 


ஜலந்தரை தளமாகக் கொண்ட ஓய்கே டூல்ஸ் (OayKay Tools), டிராப் ஃபோர்ஜ் ஹேமர்கள் (drop forge hammers) மற்றும் கோல்ட் ஸ்டாம்ப் இயந்திரங்கள் (cold stamp machine) போன்ற கைக்கருவிகளை உருவாக்குகிறது. அமெரிக்க சந்தைக்கு வழங்குவதற்காக சீனாவை தளமாகக் கொண்ட அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


"நான்கு முதல் ஐந்து நிறுவனங்கள் அணுகியுள்ளன," என்று ஓய்கே டூல்ஸின் ஏற்றுமதி அதிகாரி சித்தாந்த் அகர்வால் கூறினார். "அவர்கள் தங்கள் பிராண்ட் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும்."


இந்தியா அதிக ஏற்றுமதிக்கான ஆணைகளைப் பெற்றுள்ளது. டிரம்ப் நிர்வாகத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசாங்கம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால் இது மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அதிக அமெரிக்க வரிகளைத் தவிர்க்க உதவும் என்று இந்தியா நம்புகிறது. துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கடந்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின்போது, ​​இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய ஒத்துழைப்பு காலகட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பினரும் இலக்கு வைத்துள்ளனர்.


இதற்கிடையில், அமெரிக்காவும் சீனாவும் வரிவிதிப்புகள் தொடர்பாக முரண்படுகின்றன. பெய்ஜிங் அதிக அளவிலான வரிகளை "அர்த்தமற்றது" என்று குறிப்பிட்டிருந்தது. டிரம்ப் தனது நிர்வாகம் சீனாவுடன் வர்த்தகம் குறித்து பேசி வருவதாகக் கூறினார். இருப்பினும், எந்த பேச்சுவார்த்தைகளும் நடப்பதில்லை என்று பெய்ஜிங் மறுத்து, அனைத்து வரிவிதிப்புகளையும் நீக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டது.


சீன நிறுவனங்கள் விட்டுச்சென்ற இடைவெளியை நிரப்ப இந்திய நிறுவனங்களை அமெரிக்கா எவ்வளவு அனுமதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சலுகைகளை வழங்க பெய்ஜிங்கின் மீது அழுத்தம் கொடுக்க வாஷிங்டன் முயற்சிக்கிறது.


இந்தமாத தொடக்கத்தில் கேன்டன் கண்காட்சியில் அமெரிக்கர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இருப்பினும், புதிய வரிவிதிப்புகள்தான் முக்கிய விவாதப் பொருளாக இருந்தன. டிரம்பின் 90 நாள் தாமதம் சீன நிறுவனங்களை தென்கிழக்கு ஆசியாவில் அதிக முதலீடு செய்ய ஊக்குவித்தது. இது அமெரிக்க கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக செய்யப்பட்டது.


இந்திய நிறுவனமான விக்டர் ஃபோர்கிங்ஸ் (Victor Forgings), இடுக்கி (pliers), ஹேக்ஸாக்கள் (hacksaws) மற்றும் சுத்தியல்கள் (hammers) போன்ற கை கருவிகளை 1954 முதல் தயாரித்து வருகிறது. அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து மோதலில் இருப்பதால், இந்த நிறுவனம் தனது வணிகத்தை வளர்க்க இதை ஒரு வாய்ப்பாக கருதுகிறது.


"சீன விநியோகர்கள் தங்களை அணுகினர். அவர்கள் தங்கள் சார்பாக அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களை நிறைவேற்ற விரும்பினர். அமெரிக்க நிறுவனங்களும் தங்களை அணுகின. இந்த நிறுவனங்களுக்கு சீனாவில் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், அதிக வரிவிதிப்புகள் காரணமாக தற்போது வழங்க முடியாது," என்று வடக்கு பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் உள்ள விக்டர் ஃபோர்கிங்ஸின் நிர்வாக பங்குதாரர் அஸ்வனி குமார் கூறினார்.



தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்ய நிறுவனம் மேலும் இரண்டு உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்தவும் அமைக்கவும் விரும்புவதாக குமார் கூறினார். தெற்காசிய நாட்டில் தங்கள் இருப்பை விரிவுபடுத்த அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளன என்று அவர் கூறினார்.


Original article:
Share:

அவ்வளவு வறுமை இல்லை : இந்தியாவின் வறுமைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து…

 வறுமைக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.


உலக வங்கியானது, சமீபத்தில் இந்தியா குறித்த வறுமை மற்றும் சமபங்குக்கான  சுருக்கமான ஒரு குறிப்பை வெளியிட்டது. பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூறியதை இது உறுதிப்படுத்துகிறது. அதாவது, 2017 PPP அடிப்படையில் ஒரு நாளைக்கு $2.15-க்கும் குறைவாக வருமானத்துடன் வாழ்வதாக அளவிடப்படும் இந்தியாவில் தீவிர வறுமையின், முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இது 2011-12-ல் 16.2%-ஆக இருந்து 2022-23-ல் 2.3%-ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, 171 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.


உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் முக்கியமான நேரடிப் பலன் பரிமாற்றங்கள் (ஜன் தன் யோஜனா, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் மாநிலங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பிற) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நியாயமாக கருதலாம். இந்தத் திட்டங்களின் விளைவுகள் 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளின் வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்புகளில் (Household Consumer Expenditure Surveys (HCESs)) காட்டப்பட்டுள்ளன. உலக வங்கி தீவிர வறுமைக்கும் 'குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின்' வறுமை நிலைக்கும் ஒரு நாளைக்கு $3.65 (PPP விதிமுறைகள்) இடையே ஒரு முக்கிய வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்த அளவீட்டைப் பயன்படுத்தி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் 61.8%-லிருந்து 28.1%-ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது, அதாவது 378 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. வெவ்வேறு வறுமை நிலைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் முக்கியமானவை. 80 கோடி மக்களுக்கு உணவு தானிய விநியோகம் தீவிர வறுமையைக் குறைக்க உதவியது என்பதை அவை காட்டுகின்றன. இருப்பினும், மக்கள்தொகையில் கால் பகுதியினர் தங்கள் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் இன்னும் தங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க போராடுகிறார்கள்.


பல நேரடி பலன் பரிமாற்றம் (DBT) திட்டங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வழிகளில் நுகர்வுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும். எனவே, இந்த 'இலவசங்கள்' அவற்றின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் வெவ்வேறு விளைவைக் கொண்டிருக்கலாம். 2011-12 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுகளின் HCES தரவுகளைப் பயன்படுத்தும் குறிப்பானது, நுகர்வு அடிப்படையில் சமத்துவமின்மை குறைவதைக் காட்டுகிறது. இருப்பினும், வருமான அடிப்படையிலான சமத்துவமின்மையைக் கருத்தில் கொள்ளும்போது இது உண்மையாக இருக்காது. 2011-12 மற்றும் 2022-23 HCES தரவுகளுக்கு இடையிலான வழிமுறையில் ஏற்பட்ட மாற்றம் இதற்கான ஒப்பீடுகளை கடினமாக்குகிறது என்பதையும் குறிப்பு குறிப்பிடுகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளி 2011-12-ல் 84%-லிருந்து 2022-23-ல் 71%-ஆகவும், 2023-24-ல் 70%-ஆகவும் குறைந்துள்ளதாக HCES தரவு காட்டுகிறது. இருப்பினும், முதல் 10% பேரின் சராசரி வருவாய் 2023-24-ல் கீழ் 10% பேரின் சராசரி வருவாய் 13 மடங்கு அதிகமாக இருந்ததாக குறிப்பு குறிப்பிடுகிறது. வழிமுறை சிக்கல்கள் காரணமாக, இது காலப்போக்கில் முன்னேற்றத்தைக் குறிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


குறிப்புகளின் அடிப்படையில் சில கருத்துகணிப்புகள் குழப்பமானவையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, "சமீபத்திய தரவு 2018-19-க்குப் பிறகு முதல் முறையாக கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு ஆண் தொழிலாளர்கள் மாறுவதைக் காட்டுகிறது" என்ற கூற்று ,காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளுடன் (Periodic Labour Force Survey data) பொருந்தவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் விவசாயத்தில் வளர்ந்து வரும் பணியாளர்களை இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது. இது டிசம்பர் 2024-ல் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனைக் குழு நடத்திய ஆய்வோடு ஒத்துப்போவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புற இடம்பெயர்வு குறைந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவின் சமூக-பொருளாதார விவரம் தொடர்பான தரவுகளில் உள்ள வெளிப்பாட்டிற்கு தீவிர கவனம் தேவை.


Original article:
Share:

இந்தியாவின் தடுப்பூசி வெற்றியை எவ்வாறு தக்கவைப்பது? -தீபக் கபூர்

 இது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, சமூக அதிகாரமளித்தல் மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான அர்ப்பணிப்பை உள்ளடக்கியது.


தடுப்பூசிகள் நவீன மருத்துவத்தில் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகவும் மற்றும் அவை, மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்தியாவின் நோய்த்தடுப்புக்கான பயணமானது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அதாவது 1802-ஆம் ஆண்டில் மும்பையில் நாட்டின் முதல் பெரியம்மை தடுப்பூசி (smallpox vaccine) போடப்பட்டபோது தொடங்கியது. இது பொது தடுப்பு சுகாதாரத்திற்கான (public preventive healthcare) அடித்தளத்தை அமைத்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, 1948-ஆம் ஆண்டு சர்வதேச காசநோய் பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் தடுப்புக்கான நோய்த்தடுப்பு தீவிரமாக தொடங்கியது. இது முக்கியமாக நுரையீரலை பாதிக்கும் மற்றும் 1940-களின் பிற்பகுதியில் இந்தியாவில் ஆண்டுக்கு 5,00,000 பேரைக் கொன்றது என்று மதிப்பிடப்பட்ட கொடிய பாக்டீரியா நோயைத் தடுக்க வடிவமைக்கப்பட்டது.


இருப்பினும்கூட, 1978 வரை இந்தியா அதன் தடுப்பூசி விநியோக கட்டமைப்பில் ஒரு திருப்புமுனையை அடைந்தது மற்றும் பரந்த பாதுகாப்பு சுகாதாரத்தை குறிப்பிட்ட அளவில் வழங்கும் திறன் கொண்டது. இந்த ஆண்டு, நாடுகள் நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தை (Expanded Programme on Immunisation (EPI)) அறிமுகப்படுத்தியது. பின்னர், உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம் (Universal Immunisation Programme (UIP)) என மறுபெயரிடப்பட்டது. இது, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு காசநோய், போலியோ, தட்டம்மை மற்றும் ஹெபடைடிஸ் பி உள்ளிட்ட 12 தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக இலவச தடுப்பூசிகளை வழங்குகிறது.


இன்று, இது உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களில் ஒன்றான, மிகப்பெரிய தேசிய நோய்த்தடுப்பு திட்டங்களில் ஒன்றாகும். UIP ஒவ்வொரு ஆண்டும் 2.67 கோடிக்கும் மேற்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளை அடைகிறது. இது ஆண்டுதோறும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களையும் அடைகிறது.


போலியோ ஒழிப்பு (Polio eradication)


குறிப்பிடத்தக்க வகையில், UIP போலியோ ஒழிப்பின் கீழ், இந்திய சுகாதாரத்திற்கான ஆரம்பகால மற்றும் மிகவும் முக்கியமான வெற்றிகளில் ஒன்றாக மாறியது. போலியோவை நிறுத்துவதில் நாடு வெற்றி பெற்ற போதிலும், அதிக மக்கள் தொகை அடர்த்தி, மோசமான சுகாதாரம், விளிம்புநிலை மற்றும்/அல்லது அணுக முடியாத சமூகங்களின் பரவல் மற்றும் தடுப்பூசிகளின் மீதான தயக்கம் ஆகியவை நீடித்தன. இந்த பொது சுகாதார சவால்கள் டிசம்பர் 2014-ல் மிஷன் இந்திரதனுஷ் (Mission Indradhanush (MI)) தொடங்குவதற்கு நம் அரசாங்கம் வழிவகுத்தது.


டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டனஸ், போலியோ மற்றும் காசநோய், மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் மிஷன் இந்திரதனுஷ் (Mission Indradhanush (MI)) திட்டம் கவனம் செலுத்துகிறது. இது, நாடு முழுவதும் உள்ள 554 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த முயற்சி இதுவரை பன்னிரண்டு கட்டங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், தேவைப்படுபவர்களுக்கு நோய்த்தடுப்புக்கான பாதுகாப்பை தொடர்ந்து வழங்கும்.


2023-24-ஆம் ஆண்டில், இந்தியா முழு, தேசிய நோய்த்தடுப்புக்கான பாதுகாப்பை அடைந்தது. மேலும், UIP மற்றும் MI போன்ற திட்டங்களின் நிலையான மற்றும் விரிவான முயற்சிகள் மூலம் ஒரு மைல்கல் சாத்தியமானது.


உலக முன்னேற்றத்திற்கு இந்தியாவும் பங்களிக்கிறது. அதாவது, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக, தடுப்பூசிகள் பல நாடுகளுக்கு அணுகக்கூடியதாக இருப்பதை இந்தியா உறுதி செய்கிறது. இது உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் 60 சதவீதத்தை வழங்குகிறது. உலகளவில் குறைந்த விலையில் தடுப்பூசிகளின் மிகப்பெரிய விநியோகர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.


இப்போது, ​​மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் (Electronic Vaccine Intelligence Network (eVIN)) செயலி போன்ற AI-ஐப் பயன்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள், சுகாதார விநியோகத்தை இன்னும் நவீனமாக்க உதவும்.


தடுப்பூசிகளுடன் இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றி மூன்று விஷயங்களைச் சார்ந்துள்ளது. முதலாவதாக, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான வலுவான அர்ப்பணிப்பு. இரண்டாவதாக, சமூகங்களை மேம்படுத்துதல். மூன்றாவதாக, கூட்டு நடவடிக்கை மூலம் ஒன்றாக வேலை செய்தல் போன்றவை ஆகும்.


எழுத்தாளர் ரோட்டரி இன்டர்நேஷனல் இந்தியாவின் தேசிய போலியோபிளஸ் குழுவின் தலைவர் ஆவர்.


Original article:
Share:

மூன்றாவது ஐ.நா பெருங்கடல் மாநாடு: ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு - - தியரி மாதௌ

 காலநிலை மாற்றம் வேகமடைதல் மற்றும் கடல் வளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், கடல் மற்றொரு பிரச்சினை அல்ல - இது நம் அனைவரையும் பாதிக்கும் ஒன்று.


இந்திய தீபகற்பம் ஒரு கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர்.  7,517 கி.மீ கடற்கரையைக் கொண்ட இந்தியா, அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் கடலால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகும். இது இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்கு 2030-ல் பிரதிபலிக்கிறது, இது நீலப் பொருளாதாரத்தை வளர்ச்சிக்கான முக்கியப் பகுதியாக எடுத்துக்காட்டுகிறது.


கடல் ஒரு பகிரப்பட்ட வளமாகும். இது அனைவருக்கும் சொந்தமானது. இது மக்களுக்கு உணவளிக்கிறது மற்றும் பாதுகாக்கிறது. நம்மை ஊக்குவிக்கிறது மற்றும் பயணிக்க உதவுகிறது. இது நிலையான ஆற்றல், வளங்கள், வர்த்தக வழிகள் மற்றும் முடிவற்ற அறிவியல் அறிவை வழங்குகிறது.

மூன்று பேரில் ஒருவர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலை நம்பியிருக்கிறார். இருப்பினும், அது ஆபத்தில் உள்ளது. இது இன்னும் பெரும்பாலும் அறியப்படாத ஒரு பகுதி, மேலும் உலகளாவிய நிர்வாகம் மற்றும் அதன் பாதுகாப்பிற்கு தேவையான நிதி இரண்டும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கடலில் சேர்கிறது என்று சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மீன்வளங்கள் அதிகப்படியான மீன்பிடித்தலால் பாதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் கடல் அமிலமயமாக்கல், கடல்மட்ட உயர்வு மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவு ஆகியவை காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளாக வேகமடைகின்றன.


நாம் இப்போது செயல்பட வேண்டும். முன்னெப்போதையும்விட, பலதரப்பு நடவடிக்கைகள் கடல் பாதுகாப்பின் சவால்களுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.


ஜூன் 9-13-ஆம் தேதிகளில், பிரான்ஸ் கோஸ்டா-ரிக்கா உடன் இணைந்து மூன்றாவது ஐக்கிய நாடுகளின் கடல் மாநாட்டை (third United Nations Ocean Conference (UNOC3)) நடத்தவுள்ளது. சுமார் 100 நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் மேலும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், ஆர்வலர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து குடிமக்கள் நிஸ் நகரில் ஒன்றுகூடுவார்கள். உறுதியான செயல்பாடுகள் மூலம் கடலைப் பாதுகாக்கும் நமது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். 21-வது காலநிலை மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்திற்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலகளாவிய கட்டமைப்பை நிறுவிய இந்த UNOC3 ஒரு வரலாற்று வாய்ப்பாகும். "நிஸ் கடல் ஒப்பந்தங்கள்" 2015-ல் ஐ.நா. ஏற்றுக்கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் முழுமையாக இணைந்து, கடலின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாக உருவாகலாம். இந்த நோக்கத்திற்காக, நிஸில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் செயல்பாட்டு மற்றும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், சிறந்த நிர்வாகம், மேலும் நிதியுதவி மற்றும் கடல்களைப் பற்றிய அதிக அறிவை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.


நிர்வாகத்தைப் பொறுத்தவரை, ஐ.நா. மாநாட்டின் கீழ் தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒப்பந்தம் (Biodiversity of Areas beyond National Jurisdiction (BBNJ Agreement)) முக்கியமானது.


கடலின் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் ஆழ்கடல் பகுதிகள் தற்போது சர்வதேச சட்டத்தால் நிர்வகிக்கப்படாத ஒரே பகுதிகளாகும். கண்காணிப்பு மற்றும் பொதுவான விதிகள் இல்லாதது ஒரு உண்மையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்துகிறது. அதிகளவில் எண்ணெய் மற்றும் நெகிழி மாசுபாடு, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட மற்றும் அழிந்துவரும் பாலூட்டிகளின் பிடிப்பு ஆகியவை நடக்கின்றன. இந்த சட்ட வெற்றிடத்தை முடிவுக்குக் கொண்டுவர, BBNJ ஒப்பந்தம் 60 நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது நடைமுறைக்கு வரும்.


கடலின் பாதுகாப்புக்கு பொது மற்றும் தனியார் நிதியுதவி, மற்றும் நிலையான நீல பொருளாதாரத்திற்கான ஆதரவும் தேவைப்படுகிறது. கடல் வழங்கும் நம்பமுடியாத பொருளாதார வாய்ப்புகளை தொடர்ந்து பெற, கடல் வளங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். நிஸில், உலகளாவிய வர்த்தகம், கப்பல் போக்குவரத்து சுற்றுலா மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கான பல உறுதிமொழிகள் அறிவிக்கப்படும்.


இறுதியாக, நாம் போதுமான அளவு அறியாத அல்லது போதுமானதாக அறியாத ஒன்றை எப்படி பாதுகாக்க முடியும்? கடலைப் பற்றிய நமது அறிவை மேம்படுத்தவும், அதை மிகவும் திறம்பட பரப்பவும் வேண்டும். இன்று, நாம் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை வரைபடமாக்க முடியும். ஆனால், பூமியின் மேற்பரப்பில் 70 சதவீதத்தை உள்ளடக்கிய கடலின் ஆழங்கள் இன்னும் அறியப்படாமலேயே உள்ளன. ஒன்றிணைந்து கடலைப் பற்றி சிறப்பாகப் புரிந்துகொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவியல், புதுமை மற்றும் கல்வியை நாம் அணிதிரட்ட வேண்டும்.


UNOC3 சாதனைக்கு தேசிய அளவில் தயாராவதற்கும், இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதற்கும், பிரான்ஸ் "என் கடலில் இல்லை" (Not in my ocean) என்ற யோசனைகளின் அடிப்படையில் விழாவை ஏற்பாடு செய்கிறது. மே மாதம் முழுவதும், டெல்லி, சென்னை, புதுச்சேரியில் உள்ள அலயன்ஸ் பிரான்சேஸ் மற்றும் கோவாவின் அருங்காட்சியகம் ஆகியவை பிரான்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கலைஞர்களுடன் உள்ளார்ந்த கண்காட்சிகள், திரைப்பட காட்சிகள், பட்டறைகள், கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை நடத்தும். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள, கற்றுக்கொள்ள, வியக்க மற்றும் கடலைப் பற்றிய முக்கியமான தலைப்புகளில் விவாதிக்க அழைக்கப்படுவார்கள். மேலும், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் கோஸ்டா ரிக்கா தூதரகத்துடன் இணைந்து, இந்த ஐ.நா. மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து தெளிவான பரிந்துரைகளை வழங்க டெல்லியில் இந்திய நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து "நீல உரையாடல்கள்" (Blue Talks) நடத்துவோம்.


வேகமாக அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் கடல் வளங்களை அதிகமாக சுரண்டுதல் ஆகியவற்றின் பின்னணியில், கடல் என்பது வேறு எந்தப் பிரச்சினையையும் போல ஒரு பிரச்சினை மட்டுமல்ல இது நம் அனைவரையும் பாதிக்கும் ஒன்று. பன்முகத்தன்மை சவால் செய்யப்படும் சூழலில், நாம் நமது பகிரப்பட்ட பொறுப்பை மறந்துவிடக் கூடாது. கடல் ஒரு உலகளாவிய பிணைப்பு, மற்றும் நமது எதிர்காலத்திற்கு முக்கியமானது. ஒன்றாக, UNOC3 ஐ மக்கள், எதிர்கால சந்ததியினர் மற்றும் கிரகத்திற்கு நாம் மூன்றாவது ஐக்கிய நாடுகளின் கடல் மாநாட்டை (third United Nations Ocean Conference (UNOC3)) நமது மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், நமது பூமிக்கும் ஒரு திருப்புமுனையாக மாற்ற முடியும்.


எழுத்தாளர் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர்


Original article:
Share:

இந்தியாவில் பருவமழை முன்கணிப்பின் வரலாறு மற்றும் பரிணாமம். -அலிந்த் சவுகான்

 தென்மேற்கு பருவமழைக்கான துல்லியமான முன்னறிவிப்புகளைச் செய்வதற்கான முயற்சிகள் 1870களில் இருந்து தொடங்குகின்றன. நீண்ட சோதனை மற்றும் பிழை செயல்முறை மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் அதன் கணிப்புகளை மேம்படுத்தியுள்ளது. ஆனால், சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது.


ஜூன்-செப்டம்பர் தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் “இயல்பை விட அதிகமாக” மழை பெய்யும் என்றும் நீண்ட கால சராசரியில் (long-period average (LPA)) 105% என்றும் கணித்துள்ளது.


இந்திய பருவமழையின் அனைத்து முக்கிய காரணிகளான, பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation (ENSO)) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) போன்றவை சாதகமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாத தொடக்கத்தில் கூறியது.


தென்மேற்கு பருவமழை நான்கு மாதங்கள் நீடிக்கும் மற்றும் நாட்டின் வருடாந்திர மழைப்பொழிவில் சுமார் 70%-ஐ வழங்குகிறது. இது விவசாயம், பொருளாதாரம் மற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை நிரப்புவதற்கு மிகவும் முக்கியமானது. துல்லியமான பருவமழை முன்னறிவிப்புகள் அரசாங்கத்தை வெவ்வேறு சூழ்நிலைகளுக்குத் தயாராவதற்கு உதவுகின்றன.


இந்த ஆண்டு பருவமழைக்கான முதல் முன்னறிவிப்பு ஏப்ரல் 15 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. கேரளக் கடற்கரையில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, மே மாதத்தின் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்பு வெளியிடப்படும். எதிர்காலத்தில் 30 நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீண்டதூர முன்னறிவிப்புகளைச் செய்யலாம்.


முதல் கணிப்புகள்

இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1877-ஆம் ஆண்டு பருவமழையை முன்னறிவிப்பதற்கான ஒரு முறையான முயற்சி தொடங்கியது, ஆங்கிலேய வானிலை ஆய்வாளரும் பழங்கால ஆராய்ச்சியாளருமான (palaeontologist) ஹென்றி பிரான்சிஸ் பிளான்ஃபோர்ட் இந்திய அரசாங்கத்திற்கு முதல் வானிலை அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.


காலப்போக்கில் முன்னறிவிப்பு மற்றும் உண்மையான மழைப்பொழிவு தரவு


டெக்கான் பீடபூமியில் பயிர் தோல்விகள் 1876-78-ஆம் ஆண்டு பெரும் பஞ்சத்திற்கு வழிவகுத்த பின்னர், துல்லியமான மழைப்பொழிவு முன்னறிவிப்புகளுக்கான தேவை அதிகரித்தது. இது 1877ஆம் ஆண்டு காலகட்டத்தில் முழு நாட்டையும் பாதித்தது. பருவமழை எப்போது, ​​எங்கு மழை பெய்யும் என்பதைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை ஆங்கிலேய காலனித்துவ அரசாங்கம் உணர்ந்தது.


குயின்னிபியாக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரமேஷ் சுப்பிரமணியன் தனது "பருவமழை, கணினிகள், செயற்கைக்கோள்கள்: இந்தியாவில் வானிலை கண்காணிப்பின் வரலாறு மற்றும் அரசியல்" 2021 என்ற தனது ஆய்வறிக்கையில் எழுதியது போல, பருவமழையின் வெற்றி விவசாயம், நதி ஆரோக்கியம், கப்பல் போக்குவரத்து மற்றும் ஆங்கிலேய நலன்களுக்கான வருவாய்க்கு மிகவும் முக்கியமானது.


பனி & மழை: பருவமழையின் முதல் தற்காலிக முன்னறிவிப்புகள் 1882 மற்றும் 1885ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிளான்ஃபோர்ட் வழங்கினார். அவர் இமயமலை பனிப்போர்வைக்கும் இந்திய பகுதியில் பெய்யும் மழையின் அளவுக்கும் இடையேயான உறவை ஆராய்ந்தார்.


பிளான்ஃபோர்டின் முன்னறிவிப்புகள் "இமயமலையின் குளிர்காலம் மற்றும் வசந்த கால பனி படிவுக்கும் அதைத் தொடர்ந்து வரும் கோடைகால பருவமழைக்கும் இடையேயான தலைகீழ் உறவை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, இமயமலை பனியின் மாறுபட்ட அளவு மற்றும் தடிமன் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளின் காலநிலை நிலைமைகள் மற்றும் வானிலையில் பெரும் மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கருதப்பட்டது" என்று இந்தியாவில் வானிலை ஆய்வின் பரிணாம வளர்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ கணக்கில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.


1886-ல், பிளான்ஃபோர்ட் இந்தியா முழுவதற்கும் பர்மாவிற்கும் பருவமழை மழையளவின் முதல் நீண்ட கால முன்னறிவிப்பை (long-range forecast (LRF)), இந்த தலைகீழ் உறவு கருதுகோளின் அடிப்படையில் வழங்கினார்.


பிளான்ஃபோர்டைத் தொடர்ந்து சர் ஜான் எலியட் வந்தார். அவர் மே 1889-ல் கல்கத்தா தலைமையகத்தில் இந்திய வானிலை ஆய்வகங்களின் முதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இது இன்றைய இந்திய வானிலை ஆய்வுமைய தலைவர் பதவிக்கு இணையானது.


மேலும் வேறு சில காரணிகள்: எலியட் பிளான்ஃபோர்டின் பணியை முன்னெடுத்துச் சென்றார். இமயமலை பனியைப் பற்றிய தரவுகளை ஏப்ரல்-மே மாதங்களில் உள்ளூர் இந்திய வானிலை நிலைமைகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலவும் நிலைமைகள் போன்ற காரணிகளுடன் இணைத்து தனது நீண்டகால முன்னறிவிப்புகளை வெளியிட்டார்.


ஆனால், பிளான்ஃபோர்டைப் போலவே எலியட்டாலும் வறட்சிகளையோ அல்லது அதைத் தொடர்ந்து வந்த பஞ்சங்களையோ, பட்டினி மற்றும் மரணங்களை ஏற்படுத்தியவற்றை திறம்பட முன்னறிவிக்க முடியவில்லை. 1899-1900-ஆம் ஆண்டு இந்தியப் பஞ்சம், பத்து லட்சத்திலிருந்து 4.5 மில்லியன் மக்களைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எலியட் இயல்பைவிட சிறந்த மழை பெய்யும் என்று கணித்திருந்த ஒரு வருடத்தில் அது தாக்கியது.


இந்திய பருவமழை மீது உலகளாவிய காரணிகளின் தாக்கத்தை இணைக்க முயன்ற முதல் காலனித்துவ அதிகாரி இயற்பியலாளரும் புள்ளியியலாளருமான சர் கில்பர்ட் வாக்கர் ஆவார். அவர் 1904-ல் எலியட்டைத் தொடர்ந்து வந்தார்.


28 முன்கணிப்புகள், புள்ளியியல் தொடர்புகள்: வாக்கர் பருவமழை மழைக்கும் முந்தைய உலகளாவிய வளிமண்டல, நிலப்பரப்பு மற்றும் கடல் அளவுருக்களுக்கும் இடையேயான புள்ளியியல் தொடர்புகளின் அடிப்படையில் முதல் புறநிலை மாதிரிகளை உருவாக்கினார். தனது முன்னறிவிப்புகளைச் செய்ய, வாக்கர் இந்தியப் பருவமழையுடன் குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான வரலாற்றுத் தொடர்பைக் கொண்ட 28 அளவுருக்கள் அல்லது முன்கணிப்பாளர்களை அடையாளம் கண்டார்.


வாக்கர் உலகளாவிய அழுத்த அமைப்புகளில் தெற்கு அலைவு (Southern Oscillation (SO)), வட அட்லாண்டிக் அலைவு (North Atlantic Oscillation (NAO)) மற்றும் வட பசிபிக் அலைவு போன்ற (North Pacific Oscillation (NPO)) மூன்று பெரிய அளவிலான ஊசலாட்ட மாறுபாடுகளை விவரித்தார்.


இவற்றில், தெற்கு அலைவு (Southern Oscillation (SO)) இந்தியாவின் காலநிலை மாறுபாட்டிலும் உலகின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான தாக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. தெற்கு அலைவு பின்னர் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமாதல் அல்லது எல் நினோ உடன் 1960களில் ஜேகப் பியெர்க்நஸ் மூலம் இணைக்கப்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India_MeteorologicalIndia Meteorological Department (IMD)) தெரிவித்துள்ளது.


வாக்கர் மேலும், மழையின் அளவை முன்னறிவிப்பதற்காக இந்தியத் துணைக்கண்டத்தை ஒரு பிரிக்கப்படாத முழுமையாகக் கருத முடியாது என்று வாதிட்டார். தீபகற்பம், வடகிழக்கு, மற்றும் வடமேற்கு இந்தியா என்று பிராந்தியத்தை மூன்று துணைப்பிராந்தியங்களாகப் பிரித்தார்.


சுதந்திரத்திற்குப் பிறகு


இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழை முன்னறிவிப்புக்கான வாக்கரின் மாதிரியை 1987 வரை பயன்படுத்தியது. முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமாக இல்லை. "1932-1987 காலகட்டத்தில் தீபகற்பத்திற்கான முன்னறிவிப்புகளின் சராசரி பிழை 12.33 செ.மீ மற்றும் வடமேற்கு இந்தியாவிற்கு 9.9 செ.மீ," என்று நிலவுலக அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம் ராஜீவன் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி டி.ஆர் பட்நாயிக் தங்கள் “தென்மேற்கு பருவமழையின் கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பின் பரிணாம வளர்ச்சி” (Mausam, IMD’s quarterly journal, 2025) என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்.


முக்கிய பிரச்சனை என்னவென்றால், வாக்கர் அடையாளம் கண்ட பல அளவுருக்கள் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. அவற்றின் தொடர்பு பருவமழையுடன் இனி ஒன்றாக இல்லை. இந்திய வானிலை ஆய்வுமைய விஞ்ஞானிகள் மாதிரியில் பல மாற்றங்களை முயற்சித்தனர். ஆனால், அதன் துல்லியம் அதிகம் மேம்படவில்லை.


கோவாரிகர் மாதிரி (GOWARIKER MODEL): 1988-ல், இந்திய வானிலை ஆய்வு மைய வாசந்த் ஆர் கோவாரிகர் தலைமையிலான விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சக்தி தேய்வு மாதிரியின் (power regression model) அடிப்படையில் பருவமழையின் செயல்பாட்டு முன்னறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. இது மொத்த மழையுடன் ஒரு புள்ளியியல் உறவில் முன்கணிப்பாளர்களாக 16 அனுபவரீதியாக பெறப்பட்ட வளிமண்டல மாறிகளைப் பயன்படுத்தியது.


நாடு முழுவதிலும் பருவத்திற்கான முன்னறிவிப்புக்கு ஆதரவாக புவியியல் பிராந்தியங்களுக்கான முன்னறிவிப்பு கைவிடப்பட்டது. வடமேற்கு இந்தியா, தீபகற்ப இந்தியா, மற்றும் வடகிழக்கு இந்தியாவிற்கான செயல்பாட்டு முன்னறிவிப்புகள் 1999-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த பிராந்தியங்களின் புவியியல் எல்லைகள் வேறுபட்டன.


புதிய மாதிரியிலும் இதேபோன்ற சிக்கல்கள் எழுந்தன. "2000-ஆம் ஆண்டில், பதினாறு அளவுருக்களில், நான்கு அளவுருக்கள் பருவமழையுடனான தங்கள் தொடர்பை இழந்துவிட்டன என்பது உணரப்பட்டது, எனவே அவை மற்ற முன்கணிப்பாளர்களால் மாற்றப்பட்டன," என்று சூர்யசந்திரா ஏ ராவ், பிரசாந்த் ஏ பிள்ளை, மஹேஷ்வர் பிரதான் மற்றும் அங்கூர் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் தங்களது 2019-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையான “இந்தியாவில் இந்திய கோடைகால பருவமழையின் பருவகால முன்னறிவிப்பு: கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்” (மௌசம்) என்ற கட்டுரையில் எழுதினர்.


இந்த காலகட்டத்தில் IMDயின் பிராந்திய முன்னறிவிப்புகள் துல்லியமற்றதாக இருந்தன. "1994, 1997 மற்றும் 1999 போன்ற ஆண்டுகளில் முன்னறிவிப்பு பிழை மாதிரி பிழையை விட அதிகமாக இருந்தது" என்று ராவ் மற்றும் பலர் எழுதினர்.


14 நல்ல பருவமழைகளுக்குப் பிறகு 2002-ல் வந்த வறட்சியை முன்னறிவிக்கத் தவறிய பிறகு, அது 1987-க்குப் பிறகு மிக மோசமான வறட்சியாக இருந்தது. சக்தி தேய்வு மாதிரி விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டது.


இரண்டு புதிய மாதிரிகள்: 2003-ல், IMD பருவமழை முன்னறிவிப்புக்கான 7 8 மற்றும் 10 அளவுருக்களுடன் இரண்டு புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தியது. இது புதிய இரண்டு-கட்ட முன்னறிவிப்பு உத்தியையும் ஏற்றுக்கொண்டது. முதல் கட்ட முன்னறிவிப்பு ஏப்ரல் மத்தியில் வெளியிடப்பட்டது மற்றும் ஒரு புதுப்பிப்பு அல்லது இரண்டாம் கட்ட முன்னறிவிப்பு ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்டது.


புதிய மாதிரிகள் 2003 பருவமழையை துல்லியமாக முன்னறிவித்தன. ஆனால், 2004 வறட்சியை முன்னறிவிக்கத் தவறிவிட்டன. இது IMDயை வரைவு பலகைக்கு மீண்டும் அனுப்பியது.


இந்தத் துறை இரண்டு முக்கிய நோக்கங்களுடன் தனது மாதிரிகளை மறுமதிப்பீடு செய்தது: (அ) பருவமழையுடன் உறவுகளைக் கொண்ட பொருத்தமான மற்றும் நிலையான முன்னறிவிப்பாளர்களின் மறுபரிசீலனை மற்றும் (ஆ) முன்னறிவிப்பாளர்களின் உகந்த எண்ணிக்கை மற்றும் உகந்த மாதிரி பயிற்சி காலம் போன்றவற்றை அடையாளம் காண்பதன் அடிப்படையில் மாதிரி மேம்பாட்டின் முக்கியமான வழி” என்று 2019 ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


புள்ளியியல் முன்னறிவிப்பு அமைப்பு: 2007-ல், IMD தனது இரண்டு-கட்ட முன்னறிவிப்பு உத்திக்கு ஆதரவாக புள்ளியியல் அரங்க முன்னறிவிப்பு அமைப்பை (Statistical Ensemble Forecasting System (SEFS)) உருவாக்கியது. மேலும், தனது மாதிரிகளில் உள்ள அளவுருக்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது.


ஏப்ரலில் முதல் முன்னறிவிப்புக்கான 8-அளவுரு மாதிரியை 5-அளவுரு மாதிரி மாற்றியது, மற்றும் ஜூனில் முன்னறிவிப்பு புதுப்பிப்புக்கான 10-அளவுரு மாதிரியை ஒரு புதிய 6-அளவுரு மாதிரி மாற்றியது. மாதிரிகளின் "அதிகப்படியான பொருத்தம்" இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதே நோக்கமாக இருந்தது. இதில் ஒரு மாதிரி பயிற்சித் தொகுப்பை மிக நெருக்கமாகப் பொருத்துகிறது அல்லது நினைவில் கொள்கிறது. அதனால் புதிய தரவின் அடிப்படையில் சரியான முன்னறிவிப்புகளைச் செய்யத் தவறுகிறது.


இந்தத் துறை, ஒருங்கிணைந்த முன்னறிவிப்புகளின் கருத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த முறையில், முன்னறிவிப்பாளர்களின் அனைத்து சேர்க்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட அனைத்து சாத்தியமான முன்னறிவிப்பு மாதிரிகளும் ஒற்றை, மிகவும் வலுவான கணிப்பை உருவாக்குவதாகக் கருதப்பட்டது.


இந்தப் புதிய அமைப்பு, IMD தனது முன்னறிவிப்பை கணிசமாக மேம்படுத்த உதவியது. 2007 மற்றும் 2018க்கு இடையிலான சராசரி முழுமையான பிழை (முன்னறிவிப்புக்கும் உண்மையான மழைப்பொழிவுக்கும் இடையிலான வேறுபாடு) 1995 மற்றும் 2006க்கு இடையிலான சராசரி முழுமையான பிழையான 7.94% உடன் ஒப்பிடும்போது, ​​LPA-ல் 5.95% (ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதிவான மழைப்பொழிவு) ஆகும்.


சமீபத்திய ஆண்டுகளில் முன்னறிவிப்புகள்


இணைந்த இயக்கவியல் மாதிரி (COUPLED DYNAMIC MODEL): பருவமழை முன்னறிவிப்பில் மேம்பாடு 2012-ல் பருவமழை திட்டம் இணைந்த முன்னறிவிப்பு அமைப்பின் (Monsoon Mission Coupled Forecasting System (MMCFS)) தொடக்கத்தாலும் ஏற்பட்டது. இது ஒரு இணைந்த இயக்கவியல் மாதிரியாகும். இதனால் கடல், வளிமண்டலம், மற்றும் நிலத்திலிருந்து தரவுகளை இணைத்து மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்க முடியும். IMD தனது முன்னறிவிப்புகளுக்கு MMCFS மற்றும் SEFSஐ சேர்த்துப் பயன்படுத்தியது.


பல மாதிரி குழுமம் (MULTI-MODEL ENSEMBLE) : 2021-ல் பல மாதிரி குழுமம் அடிப்படையிலான அமைப்பின் தொடக்கத்துடன் முன்னறிவிப்புகளின் துல்லியம் மேலும் அதிகரித்தது. இந்த புதிய பல மாதிரி குழுமம் அமைப்பு இந்தியாவின் சொந்த MMCFS மாதிரி உட்பட பல்வேறு உலகளாவிய காலநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களிலிருந்து இணைந்த உலகளாவிய காலநிலை மாதிரிகளை (coupled global climate models (CGCMs)) பயன்படுத்தியது.


2007இல் SEFS மற்றும் 2021இல் MME அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பருவமழைக்கான IMDயின் செயல்பாட்டு முன்னறிவிப்புகள் கணிசமாக மேம்பட்டுள்ளன என்று புவி அறிவியல் அமைச்சகம் இந்த ஆண்டு பிப்ரவரி  மாதத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தது.


சிறந்த முன்னறிவிப்புகள், முன்னேற்றத்திற்கான நோக்கம்: இந்தியாவின் பருவகால மழையின் தனிப்பட்ட முன்னறிவிப்பு பிழை 1989 மற்றும் 2006-க்கு இடையிலான அதே எண்ணிக்கையிலான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2007-2024 ஆண்டுகளில் சுமார் 21% குறைந்துள்ளது என்று புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்கவையில் தெரிவித்தார்.


IMDயின் ஏப்ரல் மாத முன்னறிவிப்புகளும் மிகவும் துல்லியமாகிவிட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் (2021 முதல் 2024 வரை), உண்மையான மழைப்பொழிவு ஏப்ரல் மாத முன்னறிவிப்பிலிருந்து 2.27 சதவீத புள்ளிகள் மட்டுமே வேறுபட்டது. இது எதிர்பார்க்கப்படும் 4% வரம்பிற்குள் உள்ளது.


இருப்பினும், IMDயை இன்னும் மேம்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ராஜீவன் மற்றும் பட்டநாயக் ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையில், ENSO போன்ற உலகளாவிய காலநிலை முறைகளுடன் வானிலை நிகழ்வுகளுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க உறவுகள் அல்லது இணைப்புகள் - முறையான பிழைகள்/சார்புகள் மற்றும் தொலைதொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் துறை அதன் முன்னறிவிப்பு மாதிரிகளை மேம்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.


Original article:
Share:

உச்சநீதிமன்றத்தின் முன்னிருக்கும் கேள்வி: “போட்டியின்றி” பெறும் தேர்தல் வெற்றிகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவையா? -தாமினி நாத்

 ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால் தேர்தலை நடத்தாமல் இருப்பது வாக்காளர்கள் "அனைவருக்கும் எதிரான வாக்கு" (None of the Above (NOTA)) விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கிறது என்றும், அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால், தேர்தல் நடத்தப்படாமல், வெற்றி பெறுவதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு அவர் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வாக்கைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.


மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 53(2)-ன் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் சட்ட ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான சட்டக் கொள்கைக்கான விதி மைய (Vidhi Centre for Legal Policy) மனுவை நீதிமன்றம் விசாரித்தது.


இந்தப் பிரிவு ("போட்டியிடப்பட்ட மற்றும் போட்டியிடாத தேர்தல்களில் நடைமுறை") வேட்பாளர்களின் எண்ணிக்கை, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தால், தேர்தல் அதிகாரி அத்தகைய அனைத்து வேட்பாளர்களையும் அந்த இடங்களை நிரப்ப முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்று கூறுகிறது.


ஆகஸ்ட் 2024-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால் தேர்தலை நடத்தாமல் இருப்பது வாக்காளர்கள் NOTA விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கிறது. இது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று வாதிடுகிறது.


இந்த மனு, 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கம் VS இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் குறிப்பிடுகிறது. அந்த தீர்ப்பில், தேர்தல்களில் NOTA-விற்கு வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும், இது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் கீழ் நேரடித் தேர்தல்களில் NOTAவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்மறை வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்படுகிறது என்றும நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் இந்த உரிமை பொருந்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


போட்டியற்ற தேர்தல்கள்


1951 முதல் 2024 வரை, 26 இடங்களில், வேறு யாரும் போட்டியிடாததால், மக்களவை வேட்பாளர்கள் யாரும் வாக்களிக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தத் தேர்தல்களில் 82 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த 26 வழக்குகளில், 1957-ல் 7 வழக்குகளும், 1951 மற்றும் 1967-ல் தலா 5 வழக்குகளும், 1962-ல் 3 வழக்குகளும், 1977-ல் 2 வழக்குகளும், 1971, 1980, 1989 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் தலா 1 வழக்குகளும் நடந்தன. 2024-ஆம் ஆண்டில், பாஜகவின் சூரத் வேட்பாளர் முகேஷ்குமார் தலால் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற பிறகு அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மாநில சட்டமன்றங்களில் போட்டியற்ற தேர்தல்கள் அதிகமாக நடப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பதில்


இந்த மாத தொடக்கத்தில் அளித்த பதிலில், தேர்தல் ஆணையம், 1951 முதல் 2024 வரை நடைபெற்ற 20 மக்களவைத் தேர்தல்களில், 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே போட்டியின்றி வெற்றி பெற்றதாகக் கூறியது. 1989 முதல், இதுபோன்ற ஒரு வழக்கு மட்டுமே நடந்துள்ளது.


ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியுடன், அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. எனவே, வேட்பாளர்களின் எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கிறது. மேலும், வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த அதிக விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்துடன் உள்ளனர். ஒரு தேர்தல் போட்டியின்றி நடைபெறுவதற்கான வாய்ப்பு அரிதாகிவிட்டது. இது புள்ளிவிவர தரவுகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது.


"NOTA" ஒவ்வொரு தேர்தலிலும் தானாகவே போட்டியிட்டதாகக் கருத முடியாது என்று ஆணையம் வாதிட்டது.


எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (electronic voting machine (EVM)) ஒரு பொத்தானைச் சேர்க்க வேண்டும் என்று கூறும் NOTA தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.


எனவே, தேர்தல் ஆணையம் "வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரும் இடங்களில் வாக்களிப்பு நடைபெறும்போது NOTA விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. எனவே, போட்டியிடாத அனைத்து தேர்தல்களிலும் NOTAவை கட்டாய வேட்பாளராகக் கருதுவது தற்போதைய சட்டங்களால் அனுமதிக்கப்படவில்லை. இதைச் சாத்தியமாக்க, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.


உச்சநீதிமன்றத்தின் பார்வை


ஏப்ரல் 24 அன்று நடந்த விசாரணையின்போது, ​​இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒரு பகுதியாக இருந்த நீதிபதி சூர்யா காந்த், ஒரு வேட்பாளர் தானாகவே வெற்றி பெறுவதற்குப் பதிலாக, குறைந்தது 10% அல்லது 15% வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறுவது நல்ல யோசனையாக இருக்கலாம் என்று கூறினார்.


ஜனநாயகம் பெரும்பான்மை ஆதரவை அடிப்படையாகக் கொண்டால், போட்டியிடாத தேர்தல்களிலும் கூட, வேட்பாளரை ஆதரிக்கும் சில வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்று நீதிபதி காந்த் கூறினார்.


இந்தப் பிரச்சினையை ஆராய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார், "இப்போது, ​​எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இந்த பிரச்சனை நாளை எழும்பட்சத்தில் நீங்கள் இன்றே தீர்வை உருவாக்கலாம்" என்று கூறினார்.


அந்த தீர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து, நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “5% வாக்குகளை கூட பெற முடியாத ஒருவரை ஏன் தானாக பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்? நீங்கள் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், அதை பற்றி சிந்தியுங்கள்” என்றார்.


Original article:
Share:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அறிவித்த 5 அம்ச செயல் திட்டம் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்துதல் போன்ற பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் எல்லைகளுக்குள் இருந்தே திருப்பித் தாக்கும் திறன்களை உள்ளடக்கிய பல இராணுவ பதிலடி நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.


முக்கிய அம்சங்கள்:


• செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும்" என்றும் "அவர்களை உலகின் கடைசி எல்லை வரை துரத்துவோம்" என்றும் கூறினார்.


• அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் "இராணுவ பதிலடி இருக்கும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார். தாக்குதலின் தன்மை பற்றி விவாதித்து வருகிறோம். 2019-ஆம் ஆண்டு முதல், நமது ஆயுதங்களை நவீனமயமாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நமது எல்லைக்குள்ளிருந்தே பயங்கரவாதிகளை இலக்கு வைக்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.


• 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவர் புல்வாமாவில் வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை, ஒன்றிய ரிசர்வ் பாதுகாப்பு படை (Central Reserve Police Force (CRPF)) வாகனங்களின் மீது மோதச் செய்தார். சில நாட்களுக்குப் பிறகு பாலகோட்டில் இந்திய விமானப்படை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.


• பகல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு மறுக்க முடியாதது என்று வலியுறுத்திய அரசாங்க வட்டாரங்கள், "இது பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிருடன் மிகவும் தொடர்புடையது" என்றும் அவரது நலன்களுடன் தொடர்புடையது என்றும் சுட்டிக்காட்டின. அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, பகல்காம் தாக்குதல் "பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களின் பின்னணியில், பிரபலத்தைப் பெறவும், இந்தியாவில் சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்கவும் ஜெனரல் முனிரின் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


• மதத்தின் அடிப்படையில் இலக்குகளைத் தேர்ந்தெடுத்த பயங்கரவாதிகளின் அடையாளங்கள் மற்றும் விவரங்களைக் கண்டறியும் முயற்சிகள் "முன்னேற்றத்தில்" இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


உங்களுக்குத் தெரியுமா?


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவால் அறிவிக்கப்பட்ட 5-அம்ச செயல் திட்டம்: 


1. இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) உடனடியாக "நிறுத்தி வைத்துள்ளது".


2. புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தில் உள்ள பாதுகாப்பு/இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் விரும்பத்தகாத நபர் (Persona Non Grata) என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் உள்ளது. இந்தியா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்திலிருந்து தனது பாதுகாப்பு/கடற்படை/விமானப்படை ஆலோசகர்களை திரும்பப் பெறவுள்ளது.


3. சார்க் விசா விலக்கு திட்டம் (SAARC Visa Exemption Scheme (SVES)) விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட எந்த விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவைவிட்டு வெளியேற 48 மணிநேரம் அவகாசம் உள்ளது.


4. அட்டாரி எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடல் - செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் எல்லையைக் கடந்து சென்றவர்கள் மே 1, 2025-க்கு முன்பு அந்த வழியாகத் திரும்பிச் செல்லலாம்.


5. தற்போதைய 55-ல் இருந்து தூதரகங்களின் எண்ணிக்கை 30ஆக குறைக்கப்படும். இது மே 01, 2025க்குள் நடைமுறைப்படுத்தப்படும்.


Original article:
Share: