நீதிபதியின் மீதான குற்றச்சாட்டு கேள்விகளை எழுப்புகிறது. -சஞ்சய் ஜெயின்

 குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியை (indicted judge) நீக்குவதற்கான செயல்முறை மிகவும் கடுமையானது.


உச்சநீதிமன்றம் ஒரு உள்ளகக் குழு விசாரணை அறிக்கையை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரிடம் நடவடிக்கைக்காக அனுப்பியதன் மூலம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக குற்றசாட்டை ஒப்புக்கொண்டதன் மூலம் (“impeachment”) மூலம் மற்றொரு பதவி நீக்க நடவடிக்கைக்கு தயாராகியுள்ளது.


ஆனால், ஒரு நீதிபதியை நீக்குவது சாத்தியமற்றது மற்றும் ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பு (Constitution) நடைமுறைக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நீதிபதியும் நீக்கப்படவில்லை. ஒன்பது உயிர்களைக் கொண்ட கிளியைப் போல, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி, பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க ஒன்பது  வாய்ப்புகள் உள்ளன.


உள்நாட்டு விசாரணை நடைமுறையின் விரிவான விளக்கம் உச்சநீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி 'X' எதிராக எம்.பி. மாநிலம் (Addl. District and Sessions Judge 'X' VS State of MP, 2015) வழக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு கட்ட விவாதத்தை வழங்குகிறது. முதலாவதாக, கிடைக்கக்கூடிய தகவலின் உண்மைத்தன்மை குறித்து முதன்மையான பார்வையை உருவாக்குதல் மற்றும் அதில் உள்ள தவறான நடத்தை அல்லது முறைகேடு சம்பந்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதிலை வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, விரிவான விசாரணை தேவை (deeper investigation) என்று தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டால், மூன்றுபேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் (சம்பந்தப்பட்ட ஒருவரைத் தவிர) மற்றும் மற்றொரு அதிகார வரம்பைச் சேர்ந்த ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்குவர். இந்தக் குழு விசாரணை நடத்தி, அதன் முடிவுகளைச் சமர்ப்பிக்கும். குற்றச்சாட்டுகள் கடுமையானதாகக் கண்டறியப்பட்டால், பதவி நீக்கம் பரிந்துரைக்கலாம்; இல்லையெனில், குற்றச்சாட்டுகளில் பொருள் இல்லை என்ற தனது முடிவை அது தெரிவிக்கும்.


அதன் பிறகு, தலைமை நீதிபதி நீதிபதியை ராஜினாமா செய்யுமாறு அல்லது ஓய்வு பெறுமாறு அறிவுறுத்துவார். நீதிபதி மறுத்தால், இந்திய தலைமை நீதிபதி அவர்களுக்கு நீதிமன்றப் பணிகளை வழங்குவதை நிறுத்திவிட்டு, குழுவின் அறிக்கையை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பலாம். இவ்வாறு, அரசியலமைப்பின் கீழ் முறையான நீக்குதல் நடவடிக்கைகள் தொடங்குகின்றன.


நீக்குவதற்கான வழிமுறைகள்


ஒரு நீதிபதியை நீக்குவதற்கான செயல்முறை இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 217(1)(b) மற்றும் 218-ன் அடிப்படையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னரே ஒரு நீதிபதியை குடியரசுத்தலைவரால் நீக்க முடியும். இது மிகவும் கடுமையான செயல்முறையாக அமைகிறது. முதல் முன் நிபந்தனை என்னவென்றால், நீக்கல் தீர்மானம் 100 மக்களவை உறுப்பினர்கள் அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களால் கையெழுத்திட வேண்டும். இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீதிபதிகள் விசாரணைச் சட்டம், 1968-ன் படி, மற்றொரு மூன்று உறுப்பினர் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு தெளிவான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, காரணங்களுடன் நீதிபதியிடம் சமர்ப்பிக்கும். பின்னர், நீதிபதி தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த செயல்முறை ஒரு முழுமையான விசாரணையைப் போன்றது. அங்கு நீதிபதி சாட்சிகளை விசாரிக்கலாம். ஆதாரங்களைக் காட்டலாம் மற்றும் பிரதிவாதி சாட்சிகளைக் கொண்டு வரலாம்.


குழு நீதிபதி ஏதேனும் "தவறான நடத்தை" (misbehaviour) அல்லது "இயலாமை" (incapacity) குற்றவாளி என்று கண்டறிந்தால், அது தனது அறிக்கையை சம்பந்தப்பட்ட சபையின் சபாநாயகர் அல்லது தலைவரிடம் சமர்ப்பிக்கும். விரிவான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட சபையின் முன் வைக்கப்படும். இந்த கட்டத்தில்தான் அரசியலமைப்பின் பிரிவுகள் 217(1)(b) மற்றும் 218-ன் கடுமைகள் மற்றும் தேவைகள் செயல்படுத்தப்படுகின்றன. நீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இரு அவைகளும் தேவையான பெரும்பான்மையுடன் நீக்கல் தீர்மானத்தை நிறைவேற்றினால், நீதிபதியை நீக்குவதற்கு தீர்மானம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும்.


பல உயிர்வழிகள்


சுவாரஸ்யமான விவகாரம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு ராஜினாமா செய்வதற்கு முடிவு எடுக்க எத்தனை 'உயிர்நாடிகள்' (lifelines) கிடைக்கின்றன என்பதுதான். குற்றச்சாட்டுகள் எழும்போது முதலில், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி,  இந்தியாவின் தலைமை நீதிபதியிடம் (Chief Justice of India) தனது அறிக்கையை சமர்பிக்கும்போது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முன்னிலையில் ஆரம்ப கட்டத்திலேயே அவருக்கு குறைந்தது இரண்டு வாய்ப்புகள் ராஜினாமா செய்வதற்கு கிடைக்கின்றன. அதன் பின்னர், உயர் நீதிமன்ற அறிக்கை பெறப்படும்போது, ​​உள்ளகக் குழு அமைக்கப்பட்ட பிறகு, மற்றும் இந்திய தலைமை நீதிபதி ராஜினாமா செய்ய அறிவுறுத்தும்போது - உச்ச நீதிமன்ற மட்டத்தில் மேலும் மூன்று வாய்ப்புகள் வருகின்றன.


ஆறாவது வாய்ப்பு நீதித்துறை விசாரணைக் குழுவின் முன்னிலையில் நடைபெறும் நடவடிக்கைகளின்போது கிடைக்கிறது; ஏழாவது வாய்ப்பு, நீதித்துறை விசாரணை குழு தனது எதிர்மறையான அறிக்கையை சபாநாயகர் அல்லது தலைவரிடம் (Speaker or Chairman) சமர்பிக்கும்போது கிடைக்கின்றது; எட்டாவது வாய்ப்பு, சபாநாயகர் அல்லது தலைவர் அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட சபை முன்னிலையில் சமர்பிக்கும்போது கிடைக்கின்றது; ஒன்பதாவது மற்றும் கடைசி வாய்ப்பு நாடாளுமன்ற விவாதத்தின் போது கிடைக்கிறது.


இந்த விரிவான செயல்முறை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது என்றாலும், ஒரு சாதாரண நபரின் பார்வையில், நீதித்துறை அமைப்பில் தவறுகள் எவ்வாறு சரியாகக் கையாளப்படுகின்றன என்ற கேள்வி தொடர்ந்து விடையைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.


எழுத்தாளர் மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரலும் ஆவார்.



Original article:

Share:

இந்தியாவில் மகப்பேறு உரிமைகளுக்கு நிதியளித்தல். -எலினா சமந்த்ராய், ரோஹித் மணி திவாரி

 உமா தேவி தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இப்போது சவாலானது முறைசாரா துறையில் (informal sector) மகப்பேறு விடுப்புக்கு நிதி வழங்குவதாகும்.

மே 23 அன்று அறிவிக்கப்பட்ட கே உமா தேவி எதிர். தமிழ்நாடு அரசு (K Uma Devi VS State of Tamil Nadu) வழக்கில் சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அரசியலமைப்பின் பிரிவு 21-கீழ் அடிப்படை உரிமையாக (fundamental right) மகப்பேறு உரிமைகளை அங்கீகரித்ததற்காக முக்கியத்துவம் வாய்ந்தது.


உழைக்கும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், வேலைப் பாதுகாப்பை ஊக்குவிப்பதிலும், மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான சேவைகளை உறுதி செய்வதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு  வழங்கப்பட்டதால் இது பாராட்டப்படுகிறது.


இனப்பெருக்க உரிமைகள் மற்றும் மகப்பேறு நலன்கள் தொடர்பான முந்தைய தீர்ப்புகளிலிருந்து நீதிமன்றம் விரிவாக மேற்கோள் காட்டியுள்ளது.


இந்த தீர்ப்பின் மிக முக்கியமான அம்சம், நீதிமன்றம் சர்வதேச மாநாடுகள் மற்றும் ஆவணங்களான மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனம் (Universal Declaration of Human Rights), ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக குழு (United Nations Economic and Social Council), பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான மாநாடு (Convention on the Elimination of All forms of Discrimination Against Women (CEDAW)), சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation (ILO)) மகப்பேறு மாநாடு C183 (2000) ஆகியவற்றை மேற்கோள் காட்டி, பிரசவத்திற்கு முன்னும் பின்னும் வேலை செய்யும் பெண்களுக்கு 'சிறப்பு உதவி மற்றும் சமூக பாதுகாப்பின்' தேவையை வலியுறுத்தியது.


சுருக்கமாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மகப்பேறு பாதுகாப்பு மாநாடு C183, மகப்பேறு விடுப்பு பெறுவதற்கான உரிமையை ஊக்குவிப்பதைத் தவிர, மகப்பேறு இடைவெளிக்குப் பின் பெண்கள் அதே பதவியில் மீண்டும் நியமிக்கப்படுவதை அங்கீகரிக்கிறது.


பெண்கள் தங்கள் வேலையின்போது எதிர்கொள்ளும் சவால்கள், தொழிலாளர் சக்தியில் அவர்களின் நிலைத்தன்மை மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை நிவர்த்தி செய்யும் சூழலில் இந்த தீர்ப்பு சரியான நேரத்தில் வந்துள்ளது.


மகப்பேறு நல சட்டம் (MB Act)


பெண் வேலைவாய்ப்பின் சேவை நிபந்தனைகளுடன் எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டரீதியான உரிமைகளை சீரமைக்க 'நெறிமுறைக் கட்டமைப்பாக' (normative framework) மகப்பேறு நல சட்டத்தை (Maternity Benefit Act 1961) நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. 'பெண்கள் இப்போது தொழிலாளர் வளத்தின் கணிசமான பகுதியாக இருக்கிறார்கள்' மற்றும் தொழிலாளர் வளத்தில் அவர்களின் சமமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாட்டில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உரிமைகளை வழங்க அரசு 'செயல்பட கடமைப்பட்டுள்ளது' என்பதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.


பயனுள்ள மகப்பேறு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கொள்கைகளைக் கொண்ட நாடுகளில், தொழிலாளர் வளத்தில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் அவர்கள் நீண்டகாலத்திற்கு வேலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


‘பணியிடத்தில் பராமரிப்பு’ குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை: பராமரிப்பு விடுப்பு மற்றும் சேவைகளில் முதலீடு செய்வது மிகவும் பாலின சமமான பணி உலகத்திற்காக' (Care at Work: Investing in care leave and services for a more Gender Equal World of Work) என்ற ILO அறிக்கை, 123 நாடுகளில் முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு ஏற்பாடுகள் இருந்தன என்று தெரிவித்தது. இது உலகளவில் 90 சதவீத தாய்மார்களுக்கு பயனளிக்கிறது. இருப்பினும், 13 நாடுகளில் விடுப்பு ஊதியம் முந்தைய சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.


இருப்பினும், இந்தியா 18 வாரங்களுக்கு மேல் அதிகபட்ச ஊதிய விடுப்பு (26 வாரங்கள்) வழங்கும் 42 நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது. அதாவது ILO-ன் C183-ஐ விட அதிகமாக சென்று, உலகம் முழுவதும் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.


இப்போது, மகப்பேறு நல சட்டம் 2017 முதல் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு நலன்களுடன் வளர்ப்பு மற்றும் ஆணையிட்ட தாய்மார்களையும் (adoptive and commissioning mothers) நெகிழ்வான பணி விருப்பங்களுடன் உள்ளடக்கியுள்ளது. பெண் வேலைவாய்ப்புக்கு போதுமான மற்றும் தாராள மகப்பேறு திட்டத்தின் முக்கியத்துவத்தை நீதிமன்றம் அங்கீகரித்தது. ஏனெனில், மகப்பேறு வெறும் நல ஏற்பாடு அல்ல; மாறாக இது ஒரு பெண் தொழிலாளி வேலையில் நிலைத்திருக்க உதவுகிறது மற்றும் அவளின் திறன் மற்றும் உற்பத்தியைத் தக்கவைத்துக்கொண்டே வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையின் போட்டியிடும் தேவைகளைச் சமநிலைப்படுத்த அனுமதிக்கிறது.


ஒரு முக்கியமான தீர்ப்பாக இருந்தாலும், K. உமா தேவி VS தமிழ்நாடு அரசு வழக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. மகப்பேறு உரிமைகள் ஒரு அடிப்படை உரிமையாக பொதுத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே பொருந்துமா, அல்லது நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த அல்லது வேறு எந்த வகையான வேலையில் இருந்தாலும் அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா?


நிதியுதவி பிரச்சினைகள் (Funding issues)


இரண்டாவதாக, பெண் தொழிலாளர் வளத்தின் பெரும்பகுதியை உருவாக்கும் முறைசாரா துறையில் பணிபுரியும் பெண்களைப் பற்றி என்ன? இந்தத் தீர்ப்பின் கீழ் அவர்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது? இப்போது, ​​முதலாளிகள் தங்கள் அறியாமையை ஒப்புக்கொள்ளவோ ​​அல்லது மகப்பேறு செலவை எந்த விலக்கு அல்லது வரம்புகளும் இல்லாமல் ஏற்கத் தவிர்க்கவோ முடியாதபோது, ​​முக்கிய கேள்வி இந்த அடிப்படை உரிமைக்கு நிதியளிப்பது தொடர்பானது.


பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் கூட்டு நிறுவனங்களுக்கு (conglomerates) மகப்பேறு உரிமைக்கு நிதியுதவி வழங்குவது ஒருபோதும் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (Micro Small and Medium Enterprises (MSMEs)) முதலாளிகளுக்கு சவால் உள்ளது. மகப்பேறு விடுப்பின் இரட்டைச் செலவுகளையும் ஊழியர் மாற்றுச் செலவையும் தாங்கும் தனிப்பட்ட முதலாளிக்கான இந்த நிதி தாக்கங்களை ILO ஒப்புக்கொள்கிறது.


முதலாளிகள் மகப்பேறுக்கான நேரடி செலவு மற்றும் பண நலன்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாக இருக்க வேண்டியதில்லை என்று ILO தரநிலைகள் வலியுறுத்தியுள்ளன; மாறாக, இது சமூக காப்பீடு அல்லது பொது நிதி அல்லது பங்களிப்பு அல்லாத சமூக உதவி மூலம் குறிப்பாக முறைசாரா துறையில் உள்ள பெண்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அனுப்பப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகள் தொழிலாளர் சந்தையில் பாகுபாட்டு நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதில் விளைவைத் தரலாம்.


இந்திய சூழலில், இந்த நிதிப் பகுதி எப்போதும் ஒரு அரணாகவே இருந்து வருகிறது. அதே, நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகளை உறுதி செய்கிறது.


எடுத்துக்காட்டாக, நாட்டின் முதல் மகப்பேறு பாதுகாப்பு சட்டமான பம்பாய் மகப்பேறு நல சட்டம் (Bombay Maternity Benefit Act of 1929), தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்களுக்கு 'பங்களிப்பு அல்லாத' மற்றும் முதலாளியால் மட்டுமே நிதியளிக்கப்பட்ட மகப்பேறு சலுகைகளை பரிந்துரைத்தது.


மகப்பேறு சட்டத்தின் அதாவது MB சட்டத்தின் உணர்வை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து, சட்டத்தின் போதுமான தன்மை மற்றும் நோக்கத்தை அங்கீகரித்திருந்தாலும், அதன் பயனுள்ள செயல்படுத்தல் உறுதியான 'இந்த அடிப்படை உரிமைக்கு நிதியளிப்பதற்கான ஆதரவு நிறுவனங்களை' சார்ந்துள்ளது.


கொள்கை கண்ணோட்டத்தில், ILO வழிகாட்டுதல்களுடன் இணைந்த உலகளாவிய மகப்பேறு நிதியம் (Universal Maternity Fund) போன்ற நன்கு வளர்ந்த மகப்பேறு நிதியுதவி அமைப்பு, மகப்பேறு நலன்கள் நிதியுதவியில் ஏற்கனவே உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய உதவும்.


ILO-ன் உலக சமூக பாதுகாப்பு அறிக்கை 2024-26 (World Social Protection Report), பல நாடுகளில் மகப்பேறு நிதியுதவியில் கலப்பு மாதிரிகள் உள்ளன என்று கூறியது. அவற்றில் பெரும்பாலானவை சமூகக் காப்பீடு, தேசிய சமூக பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வரி நிதியுதவி வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன மற்றும் மிகச் சிலவற்றில் முதலாளிகள் முழு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


உமா தேவி தீர்ப்பு இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு உதவ, பிற நாடுகள் மகப்பேறு விடுப்பு மற்றும் அதற்கான நிதியை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த அனுபவங்கள் முறைசாரா துறை மற்றும் தற்காலிக வேலைகளில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவும்.


சமந்த்ராய், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வி.வி. கிரி தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளார்; திவாரி, திருவனந்தபுரத்தில் மத்திய பிராந்திய தொழிலாளர் ஆணையராக உள்ளார்.



Original article:

Share:

FASTag-ல் பயன்படுத்தப்படும் RFID தொழில்நுட்பம் குறித்து… -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி:



சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (ஜூன் 18) "'தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலை பயணத்திற்கு" ரூ.3,000 விலையில் FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை அறிவித்தார். கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிகரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்த புதிய அமைப்பு, சுங்கச்சாவடிகள் தொடர்பான "நீண்டகால கவலைகளை" நிவர்த்தி செய்யும் என்று அமைச்சர் கூறினார். இது ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வரும் என்றும் ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு நீடிக்கும் என்றும் எது முன்னதாக வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும் என்று கூறினார்.


முக்கிய அம்சங்கள்:


1. FASTag என்பது இந்திய தேசிய பரிமாற்ற கழகம் (National Payments Corporation of India (NPCI)) மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் மின்னணு சுங்க வசூல் முறையாகும். FASTag ஸ்டிக்கர் பொதுவாக கார் கண்ணாடியில் ஒட்டப்படுகிறது. இது 2014-ஆம் ஆண்டில் சோதனை திட்டமாக தொடங்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டில் நாட்டின் ஒவ்வொரு சுங்க நிலையத்திலும் கட்டாயமாக்கப்பட்டது.


2. இது சுங்க நிலையங்களில் நிறுவப்பட்டிருக்கும் வருடிகளுடன் (scanners) தொடர்பு கொள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள (Radio Frequency Identification (RFID)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கார் ஒரு சுங்க சாவடியைக் கடந்தவுடன், தேவையான சுங்கக் கட்டணம் FASTag உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு அல்லது முன்கூட்டியே செலுத்தப்பட்ட பணப்பை (prepaid wallet) மூலம் தானாக கழிக்கப்படுகிறது.


3. RFID என்பது குறிச்சொற்கள் (tags) மற்றும் வாசிப்பு கருவிகளை (readers) கொண்ட மின்னியல் அலைகள் (wireless) கண்காணிப்பு முறையாகும். ரேடியோ அலைகள் பொருள்கள் அல்லது மக்களின் தகவல்/அடையாளத்தை அருகிலுள்ள வாசகர்களுக்குத் தெரிவிக்கப் பயன்படுகின்றன- இந்த கருவிகள் கையில் பிடிக்கக்கூடியவையாகவோ அல்லது கம்பங்கள் அல்லது கட்டடங்கள் போன்ற நிலையான இடங்களில் பொருத்தப்பட்டதாகவோ இருக்கலாம். குறிச்சொற்கள் பாதுகாப்பான தகவல்கள், தொடர் எண்கள் மற்றும் குறுகிய விளக்கங்களைச் சேமிக்க முடியும். சில குறிச்சொற்கள் விமானங்களில் பயன்படுத்தப்படுவதைப் போல கூடுதல் தகவல்களைச் சேமிக்க முடியும்.


4. பல்வேறு வகையான RFID குறிச்சொற்கள் உள்ளன: அவை செயலற்ற குறிச்சொற்கள் (Passive tags), அரை-செயலற்ற குறிச்சொற்கள் (semi-passive tags), மற்றும் செயல்படும் குறிச்சொற்கள் (active tags) உள்ளன. செயல்படும் RFID-கள் தங்களுடைய சொந்த மின்சக்தி மூலத்தைப் பயன்படுத்துகின்றன, அவை பெரும்பாலும் பேட்டரிகள். செயலில் உள்ள குறிச்சொற்கள் பீக்கான்களைப் (Beacons) போல ஒவ்வொரு சில வினாடிகளுக்கும் தகவல்களை அனுப்பலாம் அல்லது ஒரு வாசகர் அருகில் வரும்போது இயக்கலாம்.


பீக்கான் (Beacons)  என்றால் என்ன?


பீக்கான் என்பது ஒரு அறிவிப்பு சாதனமாகும். அது அருகில் உள்ள சாதனங்களை உணர்ந்து தகவல் அனுப்புகிறது. எடுத்துக்காட்டாக, சிறிய சாதனங்கள், அவை புளூடூத் அல்லது ரேடியோ அலைகள் மூலம் அருகில் உள்ள சாதனங்களுக்கு சிக்னல்கள் அனுப்புகின்றன.





5. செயலற்ற RFID-கள், மறுபுறம், வாசிப்புக் கருவி அனுப்பும் மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்தி அதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இது குறிச்சொல் வாசிப்புக் கருவிக்கு மீண்டும் தகவலை அனுப்புவதற்கு போதுமான மின்சக்தியாகும். செயலில் உள்ள குறிச்சொற்கள் நீண்ட வாசிப்பு தூரத்தைக் கொண்டுள்ளன. செயலற்ற குறிச்சொற்களுடன் ஒப்பிடும்போது, ​​செயலில் உள்ள குறிச்சொற்களால் 300 அடி தூரம் வரை வாசிக்க முடியும். FASTag செயலற்ற RFID குறிச்சொற்களைப் பயன்படுத்துகிறது. அரை-செயலற்ற குறிச்சொற்கள் ஒரு சக்தி மூலத்துடன் கூடிய உள் சுற்றுகளைக் கொண்டுள்ளன. ஆனால், அவை தகவல்களை திருப்பி அனுப்ப வாசகரின் சிக்னல்களைப் பயன்படுத்துகின்றன.


6. RFID குறிச்சொற்கள் ஒருங்கிணைந்த சுற்று (integrated circuit) மற்றும் ஆண்டெனாவைப் பயன்படுத்தி பல்வேறு அதிர்வெண்களில் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி வாசிப்புக் கருவியுடன் தொடர்பு கொள்கின்றன - குறைந்த அதிர்வெண், உயர் அதிர்வெண், மற்றும் மிக உயர் அதிர்வெண் குறிச்சொல் ரேடியோ அலைகள் வடிவத்தில் மீண்டும் அனுப்பும் செய்தி தரவாக மொழிபெயர்க்கப்பட்டு ஹோஸ்ட் கணினி அமைப்பால் (host computer) பகுப்பாய்வு செய்யப்படுகிறது.


இது குறியீட்டுப்பட்டையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

ஒரு குறியீட்டுப்பட்டை (barcode) என்பது கணினியில் தரவை உள்ளிடப் பயன்படும் வெவ்வேறு அகலங்களைக் கொண்ட இணையான கோடுகளின் அச்சிடப்பட்ட தொகுப்பாகும். இந்தப் பட்டைகள் பூஜ்ஜியம் மற்றும் ஒன்றைக் குறிக்கின்றன, அவை பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரையிலான இலக்கங்களை டிஜிட்டல் கணினியால் செயலாக்கப்படுகின்றன. கருப்பு-வெள்ளை வடிவத்தை ஸ்கேன் செய்ய ஒளியைப் பயன்படுத்தி குறியீட்டுப்பட்டை வாசகர்கள் எனப்படும் சிறப்பு ஆப்டிகல் ஸ்கேனர்களால் குறியீட்டுப்பட்டைகள் படிக்கப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, RFID சில்லுகளிலிருந்து வாசகர்களுக்கு தரவை அனுப்ப ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது. மேலும், அதற்கு நேரடி பார்வைக் கோடு தேவையில்லை. டேக் தானே இயக்கப்படாவிட்டாலும் கூட, ஒரு RFID குறிச்சொற்கள் ஒரு வாசிப்பாளருக்கு தரவை அனுப்ப முடியும்.


➥ சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்க நிலையங்களில்,  அடிப்படையிலான தடையற்ற சுங்க முறை' (‘ANPR-FASTag-based Barrier-Less Tolling System’) மூலம் சுங்க சாவடிகள் வழியாக வாகனங்களின் தடையற்ற நகர்வை செயல்படுத்தி பயண நேரத்தை குறைக்கும்.


➥ இந்த சுங்க முறை சுங்கக் கழிவுக்கு 'தானியங்கி எண் தகடு  அங்கீகாரம்' (Automatic Number Plate Recognition (ANPR)) தொழில்நுட்பத்தை ஏற்கனவே உள்ள 'FASTag' முறையுடன் இணைக்கும். இதன் கீழ், உயர் செயல்திறன் ANPR கேமராக்கள் மற்றும் FASTag வாசிப்புக் கருவிகளைப் பயன்படுத்தி வாகனங்களின் அடையாளத்தின் அடிப்படையில் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். இதற்காக வாகனங்கள் சுங்க சாவடியில் நிற்க வேண்டிய அவசியமில்லை.


செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க முறை (Satellite-based Tolling System)


➥ மார்ச் மாதத்தில், ஒன்றிய போக்குவரத்து அமைச்சர் மாநிலங்கவையில் தனியுரிமை கவலைகள் காரணமாக, சுங்க வசூலிப்பதற்காக ஒரு லட்சிய உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பை (Global Navigation Satellite System (GNSS)) ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.


➥ GNSS-ன் கீழ், சுங்க வசூல் முறை செயற்கைக்கோள்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஆன்-போர்ட் யூனிட் (on-board unit (OBU)) உதவியுடன் செயல்படுகிறது மற்றும் பயணித்த தூரத்தின் அடிப்படையில் சுங்கக்கட்டணம் கணக்கிடப்படுகிறது.


➥ தனிநபர்கள் மற்றும் வாகன தரவு தொடர்பான கடுமையான தனியுரிமைக் கவலைகள் இருப்பதால், இந்தியாவிற்கு அதன் சொந்த முழுமையான செயற்கைக்கோள் அமைப்பு இருக்கும்போது மட்டுமே இது அறிமுகப்படுத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டதால் GNSS தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஆதாரங்கள் தெரிவித்தன.


இந்திய விண்மீன் கூட்டத்துடன் வழிசெலுத்தல் (Navigation with India Constellation (NavIC)) அமைப்புடன் வழிசெலுத்தல்


ISRO-வின் செயற்கைக்கோள் ஏவுதல்.


1. NavIC, அல்லது இந்திய பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS), இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organisation (ISRO)) உருவாக்கிய ஒரு தன்னிச்சையான, தனித்த வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும். இது பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் தேவைகளுக்கு சேவை செய்யும் ஏழு செயற்கைக்கோள் பிராந்திய வழிசெலுத்தல் தொகுப்பைக் கொண்டுள்ளது. ISRO-வின் வலைத்தளத்தின்படி, பிராந்திய வழிசெலுத்தல் தொகுப்பின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நான்கு செயற்கைக்கோள்கள் சாய்ந்த புவிசார் ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


2. 1999-ஆம் ஆண்டில் கார்கில் போரின் பின்னர் தனியார் GNSS-க்கான யோசனை உருவானது. அந்த போரின்போது போர்க்களத்தில் அமெரிக்கன் உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பை (Global Positioning System (GPS)) இந்தியாவின் இராணுவத்தால் பயன்படுத்த முடியவில்லை. இது தொடர்பாக, முதல் செயற்கைக்கோள், IRNSS 1A, ஜூலை 1, 2013 அன்று ஏவப்பட்டது.


3. ஏப்ரல் 28, 2016 அன்று தொடரின் 7-வது செயற்கைக்கோளான IRNSS-1G ஏவப்பட்டதைத் தொடர்ந்து, "வெற்றிகரமான ஏவுதல்... [செயற்கைக்கோளின்] IRNSS விண்மீன் தொகுப்பின் நிறைவைக் குறிக்கிறது" என்று ISRO கூறியது. இருப்பினும், 2016-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பல வழிசெலுத்தல் செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் ரூபிடியம் அணு கடிகாரங்களின் செயலிழப்புகள் பற்றிய தகவல்கள் வந்தன. ரூ.2,250 கோடி செலவில் ஏவப்பட்ட 11 செயற்கைக்கோள்களில், தோல்வியுற்ற செயற்கைக்கோள்களுக்கான மாற்றீடுகள் உட்பட, ஐந்து மட்டுமே முழுமையாக செயல்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


4. NavIC செயற்கைக்கோள்கள், பொது மற்றும் வணிக பயன்பாட்டிற்கான நிலையான நிலைப்படுத்தல் சேவை மற்றும் இந்தியா மற்றும் அருகிலுள்ள பகுதிகளை உள்ளடக்கிய பாதுகாப்புப் படைகளுக்கான வரையறுக்கப்பட்ட சேவை ஆகிய  இரண்டு சேவைகளை வழங்குகின்றன.


5. GPS (அமெரிக்கா), GLONASS (ரஷ்யா), Galileo (ஐரோப்பா), Beidou (சீனா), மற்றும் QZSS (ஜப்பான்) போன்ற உலகளாவிய அமைப்புகள் இருந்தபோதிலும் IRNSS போன்ற தனியார் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை உருவாக்குவதற்கான முதன்மை காரணம், பாதுகாப்பு பயன்பாட்டில் அது வழங்கும் நம்பகத்தன்மையாகும்.



Original article:

Share:

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் செலவுகள் உணவுப் பணவீக்கம் மற்றும் குடும்ப நலனில் என்ன தாக்கங்களை ஏற்படுத்துகின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை வாங்குவதில் அரசாங்கம் அதிக ஆர்வம் காட்டவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price (MSP)) குவிண்டாலுக்கு ரூ.8,682-ஆக இருந்தாலும், திறந்த சந்தையில் பயிர் சுமார் ரூ.6,000-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.


  • இந்தப் பிரச்சினை ஒரு வகை பயறு வகையை மட்டும் பாதிக்காது. லோதி என்ற விவசாயி, பருவமழை காலத்தில் (காரிஃப்) சோயாபீன் பயிரிடுகிறார், ஜூலை தொடக்கத்தில் நடவு செய்து அக்டோபர் நடுப்பகுதியில் அறுவடை செய்கிறார். பின்னர் அவர் குளிர்காலத்தில் (ரபி) சன்னா (கொண்டை) மற்றும் மசூர் (சிவப்பு பயறு) பயிரிடுகிறார். மார்ச் மாத தொடக்கத்தில் மசூர் மற்றும் மார்ச் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை சன்னா அறுவடை செய்த பிறகு, அவர் கோடைகாலத்தில் சன்னாவை பயிரிடுகிறார். இது வளர 60-70 நாட்கள் ஆகும்.


  • பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை வளர்க்கும் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக, 2024-25 (ஏப்ரல் முதல் மார்ச் வரை) காலத்தில் இந்தியா சாதனை அளவுகளை இறக்குமதி செய்வதால் பருப்பு இறக்குமதி 7.3 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. இது 2016-17ஆம் ஆண்டில் $5.5 பில்லியன் மதிப்புள்ள 6.6 மில்லியன் டன்கள் மற்றும் 4.2 பில்லியன் டாலர்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.


  • 2017-18நிதியாண்டுக்குப் பிறகு, பருப்பு இறக்குமதி அடுத்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 2.6 மில்லியன் டன்களாக 1.7 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் உள்நாட்டு உற்பத்தி சிறப்பாக இருந்ததே ஆகும். இந்தியாவின் பருப்பு உற்பத்தி 2013-14-ஆம் ஆண்டில் 19.3 மில்லியன் டன்களாகவும், 2015-16-ஆம் ஆண்டில் (வறட்சி ஆண்டு) 16.3 மில்லியன் டன்களாகவும் இருந்தது. இது 2021-22-ஆம் ஆண்டில் 27.3 மில்லியன் டன்களாகவும், 2022-23-ஆம் ஆண்டில் 26.1 மில்லியன் டன்களாகவும் அதிகரித்துள்ளது.


  • இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி சணல் மற்றும் நிலக்கடலையிலிருந்து வந்தது. மிகக் குறைந்த நீர்ப்பாசனம் தேவைப்படும் வேகமாக வளரும் சணல் வகைகளையும், அனைத்து பருவங்களிலும் பயிரிடக்கூடிய நிலக்கடலை வகைகளையும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இன்று, விவசாயிகள் பருவமழை (காரிஃப்), குளிர்காலம் (ரபி), வசந்த காலம் மற்றும் கோடை காலங்களில் நிலக்கடலை பயிரிடுகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா?


  • பருப்பு வகைகளைப் போலல்லாமல், தாவர எண்ணெய்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. நவம்பர் 2024-ஆம் ஆண்டு முதல், தாவர எண்ணெய்களின் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் இருந்து மே மாதத்தில் 17.9%-ஐ எட்டியது. இதன் காரணமாக, மோடி அரசாங்கம் மே 30 அன்று கச்சா பனை, சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை 20%-லிருந்து 10% ஆகக் குறைக்க முடிவு செய்தது. மற்ற கட்டணங்கள் உட்பட மொத்த இறக்குமதி வரி 27.5%-லிருந்து 16.5%-ஆகக் குறைக்கப்பட்டது.


  • இந்த வரி குறைப்பு இந்தியாவால் இன்னும் அதிகமான சோயாபீன் எண்ணெய் இறக்குமதிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை (US Department of Agriculture (USDA)) நம்புகிறது. இந்தியாவின் சோயாபீன் எண்ணெயில் பெரும்பாலானவை அர்ஜென்டினாவிலிருந்து வந்தாலும், ஜூன் 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட USDA அறிக்கை, குறைந்த வரி அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க உதவும் என்று கூறுகிறது.


  • இதன் விளைவாக, இந்த நிதியாண்டில் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி புதிய உச்சத்தை எட்டக்கூடும். அதே நேரத்தில், 2025-26ஆம் ஆண்டில் உலகளாவிய தாவர எண்ணெய் உற்பத்தி சாதனை அளவாக 235 மில்லியன் டன்களை எட்டும் என்று USDA கணித்துள்ளது. முக்கியமாக பாமாயில் (80.7 மில்லியன் டன்) மற்றும் சோயாபீன் எண்ணெய் (70.8 மில்லியன் டன்). இருப்பினும், லோதி போன்ற விவசாயிகளுக்கு இது நல்ல செய்தியாக இருக்காது.


  • இறக்குமதி வரியில் 11% வீழ்ச்சி குறித்து இந்திய சோயாபீன் பதப்படுத்துபவர்கள் சங்கம் கவலை கொண்டுள்ளது. இது இந்திய சந்தையில் மலிவான இறக்குமதி எண்ணெய்களின் வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது இந்திய விவசாயிகளின் லாபத்தைக் குறைக்கும், பின்னர் அவர்கள் குறைவான எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு, இந்த காரீஃப் பருவத்தில் அதிகப் பணம் சம்பாதிக்கும் பிற பயிர்களுக்கு மாறக்கூடும் என்று இந்தூரில் உள்ள சங்கத்தின் தலைவர் டேவிஷ் ஜெயின் கூறினார்.


Original article:

Share:

பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் QR குறியீடுகளை ஒன்றிய அரசு ஏன் விரும்புகிறது? -ஹரிகிஷன் சர்மா

 இந்தத் திட்டத்தின் கீழ் தரமற்ற பணிகள் ஏற்கனவே இருக்கும் முறைகளைப் பயன்படுத்தி சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால், வழக்கமான மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வழி இல்லை.


இந்த மாதம், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD), பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா (Prime Minister Gram Sadak Yojana (PMGSY))-ன் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளின் பராமரிப்பு விவரங்களைக் காட்டும் அனைத்து பலகைகளிலும் QR குறியீடுகளைச் சேர்க்குமாறு மாநிலங்களுக்குச் சொன்னது.


PMGSY என்றால் என்ன?


கிராமப்புறங்களில் சாலைகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் டிசம்பர் 25, 2000 அன்று பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது.


இரண்டாவது கட்டம் 2013ஆம் ஆண்டு தொடங்கியது. 2016ஆம் ஆண்டில், இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளை அமைக்க இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்பு திட்டம் (RCPLWEA) என்ற மற்றொரு பகுதி தொடங்கப்பட்டது. மூன்றாவது கட்டம் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


செப்டம்பர் 11, 2024 அன்று, மத்திய அரசு, இன்னும் இணைக்கப்படாத 25,000 கிராமங்களுக்கு அனைத்து வானிலை சாலை இணைப்பை வழங்கும் சாலைத் திட்டத்தின் IV-ம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் சமவெளிப் பகுதிகளில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராமங்கள், வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் 250 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராமங்கள் மற்றும் பழங்குடிப் பகுதிகள், லட்சிய மாவட்டங்கள் மற்றும் பாலைவனப் பகுதிகள் போன்ற சிறப்புப் பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்கள் அடங்கும். ஒன்பது மாநிலங்களில் உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராமங்களையும் இது உள்ளடக்கியது. மக்கள்தொகை தரவு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.


இந்தத் திட்டம் மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்பட்டது. ஆனால், 2015-16 முதல், செலவு இப்போது மத்திய அரசால் 60% மற்றும் மாநிலங்களால் 40% பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 


2024-25 முதல் 2028-29-ஆம் ஆண்டு வரை, 62,500 கி.மீ சாலைகள் ரூ.70,125 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 8,36,850 கி.மீ சாலைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 7,81,209 கி.மீ சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அரசாங்கம் என்ன திட்டமிட்டுள்ளது?


கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) கீழ் செயல்படும் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (NRIDA), QR குறியீடுகளைப் பயன்படுத்துவது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. சாலைகள் எவ்வளவு சிறப்பாக கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்பது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை சேகரிப்பதே இதன் குறிக்கோள்.


PMGSY திட்டத்தின் கீழ், ஒரு சாலை கட்டப்பட்ட பிறகு, ஒப்பந்ததாரர் அதை ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். இந்த பராமரிப்பு e-MARG (கிராமப்புற சாலைகளின் மின்னணு பராமரிப்பு) எனப்படும் மொபைல் மற்றும் வலை அடிப்படையிலான அமைப்பைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகிறது. இது கிராமப்புற சாலைகளின் பராமரிப்பை நிர்வகிப்பதிலும் கண்காணிப்பதிலும் உதவுகிறது.


ஒப்பந்ததாரர் வழக்கமான பராமரிப்புப் பணிகளைச் செய்து eMARG அமைப்பு மூலம் விலைப் பட்டியல்களை சமர்ப்பிக்கிறார். களப் பொறியாளர்கள் பின்னர் வழக்கமான ஆய்வுகள் (RI) மூலம் பணியைச் சரிபார்க்கிறார்கள். இந்த ஆய்வுகளின் போது, ​​அவர்கள் புவி-குறிச்சொற்கள் கொண்ட புகைப்படங்களை எடுக்கிறார்கள். இந்தப் புகைப்படங்களின் அடிப்படையில், பராமரிப்பு தொடர்பான 12 புள்ளிகளைப் பயன்படுத்தி செயல்திறன் மதிப்பீடு (PE) செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, கிராமப்புற சாலைகள் மாநில விஷயமாக இருப்பதால், சாலை பராமரிப்புக்கான பொறுப்பு மாநில அரசாங்கங்களிடமே உள்ளது.


சாலை கட்டுமானத்தின் தரத்தை சரிபார்க்க NRIDA தேசிய அளவிலான கண்காணிப்பாளர்களையும் (NLMs) அனுப்புகிறது. இந்த கண்காணிப்பாளர்கள் கடந்த காலங்களில் PMGSY திட்டத்தின்கீழ் தரமற்ற பணிகளைக் கண்டறிந்துள்ளனர்.


இதுவரை, சாலைகள் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன என்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைச் சேகரிக்க எந்த அமைப்பும் இல்லை.


புதிய அமைப்பு எவ்வாறு செயல்படும்?


மக்கள் கருத்து தெரிவிப்பதை எளிதாக்க, eMARG அமைப்பில் ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாலைக்கும் ஒரு QR குறியீடு உருவாக்கப்பட்டு, சாலையின் பராமரிப்பு தகவல் பலகையில் காட்டப்படும். இந்தப் பலகையில் ஆங்கிலத்திலும் உள்ளூர் மொழியிலும் கருத்து தெரிவிப்பது குறித்த வழிமுறைகள் இருக்கும்.


சாலையைப் பயன்படுத்தும் எவரும் சாலை பற்றிய விவரங்களைப் பெற தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். NRIDA விளக்கியுள்ளபடி, அவர்கள் புகைப்படங்களை எடுத்து, கருத்து சாளரத்தின் மூலம் ஏதேனும் பராமரிப்பு சிக்கல்களைப் புகாரளிக்கலாம்.


பொதுமக்கள் அனுப்பும் புகைப்படங்கள் வழக்கமான சாலை ஆய்வுகளுடன் இணைக்கப்படும். புகைப்படங்களைப் படித்து செயல்திறன் மதிப்பெண்களை வழங்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பயன்படுத்தப்படும். மதிப்பெண்களை ஒதுக்குவதற்கு முன்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அலகுகளும் இந்தப் புகைப்படங்களைச் சரிபார்க்க வேண்டும்.


இந்த முறை பொதுமக்கள் சாலை பராமரிப்பில் உதவ அனுமதிப்பது மட்டுமல்லாமல், நியாயமான செயல்திறன் சோதனைகளுக்காக பொறியியல் ஊழியர்களுக்கு பயனுள்ள தகவல்களையும் வழங்குகிறது. இது eMARG-ஐ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகளைப் பராமரிப்பதற்கான மிகவும் வெளிப்படையான அமைப்பாக மாற்றும் என்று NRIDA ஜூன் 2 அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் PMGSY முறையைக் கையாளும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.


இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு சோதனைத் திட்டம் உட்பட பல மாநிலங்களில் சோதனைகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு, இந்த அமைப்பு முழுமையாகச் செயல்பட்டது.



Original article:

Share:

இந்தியா எவ்வாறு தனது கடற்கரையை 3,500 கி.மீ.க்கு மேல் ‘அதிகரித்தது’? -அமிதாப் சின்ஹா

 இந்தியாவின் கடற்கரையின் நீளம் 7,516 கிமீ ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த கடற்கரை தற்போது 11,098 கி.மீ ஆக அளவிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் கடற்கரையோரம் முன்பு இருந்ததைவிட இப்போது மிக நீளமாக உள்ளது. முந்தைய நீளத்தைவிட கிட்டத்தட்ட 50% அதிகம். இந்த அதிகரிப்பு நிலப்பரப்பை கையகப்படுத்தியதால் ஏற்பட்டது அல்ல. ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் துல்லியமான அளவீடுகள் காரணமாகும்.


கூடுதலாக, இந்தியாவில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவின் கடல்கடந்த தீவுகளின் மறுமதிப்பீடு மற்றும் மறுகணக்கின் காரணமாக இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.


கடற்கரையின் நீளம் மற்றும் தீவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நிர்வாக மற்றும் இராஜதந்திர கண்ணோட்டத்தில் சுவாரஸ்யமானது மற்றும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நிலத்தின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


நீளமான கடற்கரை


1970ஆம் ஆண்டுகளின் அளவீடுகளின் அடிப்படையில், இந்தியாவின் கடற்கரை 7,516 கி.மீ நீளம் கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது அது 11,098 கி.மீ ஆக அளவிடப்பட்டுள்ளது. இது 3,582 கி.மீ அல்லது சுமார் 48% அதிகரிப்பு.

பயன்படுத்தப்படும் தரவுகளின் தரத்தில் உள்ள வேறுபாட்டின் காரணமாக இந்த பெரிய மாற்றம் ஏற்பட்டது. முன்னதாக, அளவீடு 1 : 45,00,000 அளவில் குறைந்த விவரத் தரவைப் பயன்படுத்தியது. இப்போது, ​​1 : 2,50,000 அளவில் சிறந்த மற்றும் தெளிவான தரவு பயன்படுத்தப்பட்டுள்ளது, இது மிகவும் துல்லியமான முடிவுகளைத் தருகிறது.


கடற்கரைகள் ஒரே மாதிரி நேரானாவை அல்ல; அவை பல திருப்பங்களையும் வளைவுகளையும் கொண்டுள்ளன. சிறந்த கருவிகளைக் கொண்டு அவற்றை அளவிடுவது ஒரு சிறிய அளவுகோலைப் பயன்படுத்துவதைப் போன்றது. எடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் அளவுகோல் சிறிய விவரங்களைத் தவறவிடுகிறது. ஆனால், ஒரு மீட்டர் அளவுகோல் அவற்றைத் தெளிவாகக் காட்ட முடியும்.


உயர் தெளிவுத்திறன் தரவு இந்த வளைவுகள் மற்றும் வளைவுகளை மிகவும் துல்லியமாகக் காட்ட உதவுகிறது. குறைந்த தெளிவுத்திறன் தரவுகளில், இந்த விவரங்கள் இழக்கப்படுகின்றன. மேலும், கடற்கரைகள் நேராகத் தெரிகின்றன. இது மொத்த நீளம் குறைவாகத் தெரிகிறது.


முன்னதாக, கடற்கரைகள் மனிதனியக்க முறைகளைப் (manual) பயன்படுத்தி அளவிடப்பட்டன. இப்போது, ​​GIS எனப்படும் மேம்பட்ட கணினி மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது நிலத்தின் மிகவும் தெளிவான மற்றும் துல்லியமான படத்தை அளிக்கிறது.


கடற்கரை நீளம் அதிகரிப்பதற்கான மற்றொரு காரணம், பல சிறிய கடல் தீவுகளைச் சேர்ப்பதாகும். பழைய வரைபடங்களில் காண முடியாத அளவுக்கு சிறியதாக இருந்ததாலோ அல்லது கைமுறையாக அளவிடும் கருவிகளுடன் சேர்க்க கடினமாக இருந்ததாலோ இவை முன்னர் தவறவிடப்பட்டன.


கடற்கரை முரண்பாடு


இந்தியாவின் புதிதாக அளவிடப்பட்ட கடற்கரை நீளம் மிகவும் துல்லியமானது. ஆனால், அது இன்னும் சரியான நீளம் அல்ல. உண்மையில், எந்த கடற்கரையின் சரியான நீளத்தையும் அளவிடுவது சாத்தியமற்றது. இது "கடலோர முரண்பாடு" (coastline paradox) என்று அழைக்கப்படுகிறது. கடற்கரைகள் மிகவும் சீரற்றவை மற்றும் ஒழுங்கற்றவை. எனவே அளவீடு எவ்வளவு விரிவாக உள்ளது என்பதைப் பொறுத்து அவற்றின் நீளம் மாறுபடும். நீங்கள் அதை எவ்வளவு நெருக்கமாக அளவிடுகிறீர்களோ, அது அவ்வளவு நீளமான கடற்கரையாகிறது.


இதே யோசனை நதி அமைப்புகள் மற்றும் மலைத்தொடர்கள் போன்ற பிற இயற்கை அம்சங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, ஆறுகள் நேரான பாதைகளைப் பின்பற்றுவதில்லை. மேலும் அவற்றின் கரைகள் சீரற்றவை. ஒரு நதியின் நீளத்தை அதன் கரையில் அளவிடுவது கடற்கரையை அளவிடுவது போன்ற அதே சிக்கலை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ஆற்றின் நீளம் பொதுவாக கரைகளில் அல்ல.  பிரதான நீரோட்டத்தில் அளவிடப்படுகிறது.


இந்தியாவின் கடற்கரை நீளம் நிறைய மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை. நீளம் எவ்வளவு துல்லியமாக அளவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது. தொழில்நுட்பம் மேம்படும்போது, ​​அளவீடுகள் மிகவும் விரிவாகின்றன. மேலும், நீளம் அதிகரிக்கிறது. அதனால்தான் இந்த அளவீடு இப்போது ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் செய்யப்படுகிறது.


மற்ற நாடுகளும் தங்கள் கடற்கரை அளவீடுகளைப் புதுப்பிக்கின்றன. இது சிறந்த கருவிகள் இருப்பதால் மட்டுமல்ல, மண் அரிப்பு போன்ற இயற்கை மாற்றங்கள் மற்றும் நிலத்தை மீட்டெடுப்பது போன்ற மனித நடவடிக்கைகள் காரணமாகவும் முக்கியமானது.


புதிய தீவுகள்


கடற்கரையைப் போலன்றி, தீவுகளின் எண்ணிக்கையை எண்ணுவது ஒரு அளவீட்டுப் பிரச்சினை அல்ல. ஆனால், வேறு சில சவால்களும் உள்ளன. உதாரணமாக, சில இடங்கள் அதிக அலைகளின் போது மட்டுமே தீவுகளாகவும், குறைந்த அலைகளின் போது நிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


2016ஆம் ஆண்டில், இந்திய சர்வேயர் ஜெனரல் அலுவலகம் நாட்டில் 1,382 கடல் தீவுகளை பட்டியலிட்டது. இருப்பினும், மாநில அரசுகள் மற்றும் கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை போன்ற பிற நிறுவனங்கள் குறைவாகவே கணக்கிட்டன.


பின்னர், இந்த வேறுபாடுகளை அழிக்க ஒரு தரவு சரிபார்ப்பு செய்யப்பட்டது. இது தெளிவான வரையறைகள் மற்றும் நிலையான விதிகளைப் பயன்படுத்தி 1,298 கடல் தீவுகளின் இறுதி எண்ணிக்கையைப் பெற்றது. இது 91 கடற்கரை தீவுகளையும் சேர்த்தது. எனவே, இப்போது தீவுகளின் மொத்த எண்ணிக்கை 1,389 ஆகும். இது அசாம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள பல நதி தீவுகளை உள்ளடக்கவில்லை.


தாக்கங்கள்


கள நிலைமை மாறாததால், தீவுகள் அல்லது கடற்கரை நீளத்திற்கான புதுப்பிக்கப்பட்ட எண்கள் பெரும்பாலும் பதிவுகளை பராமரிப்பதற்கானவை மற்றும் சர்வதேச மட்டத்தில் விஷயங்களைப் பாதிக்காது.


இருப்பினும், இந்த புதிய புள்ளிவிவரங்கள் இன்னும் முக்கியமானவை. அவை இந்தியாவின் நிலம் மற்றும் புவியியலை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. அவை நிர்வாகம், மேம்பாடு மற்றும் பாதுகாப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். சில சந்தர்ப்பங்களில், அவை நடைமுறையிலும் முக்கியமானதாக இருக்கலாம்.


எடுத்துக்காட்டாக, புதிய கடற்கரை அளவீடுகள் கடலோர மண்டல விதிமுறைகளின்கீழ் (Coastal Zone Regulations (CRZ)) வரும் பகுதிகளை மாற்றக்கூடும். இது கடலோர அரிப்பைத் தடுக்கும் அல்லது காலநிலை மாற்றத்திலிருந்து கடற்கரையைப் பாதுகாக்கும் பணிகளைப் பாதிக்கலாம். இது சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களையும் பாதிக்கலாம்.

Original article:

Share: