இந்தியா மாறிவரும் நிலப்பரப்பில் பயணிக்கிறது: உலகளாவிய உர சந்தையில் அமெரிக்க வரிவிதிப்புகளின் தாக்கம் -அபிஷேக் வடேகர்

 இந்தியா முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாகச் செயல்பட்டால், அது ஆபத்துகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம், உள்ளீட்டு விலைகளை நிலையாக வைத்திருக்கலாம், மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளிலிருந்து பயனடையலாம்.

 

அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் சமீபத்திய மாற்றங்கள் சர்வதேச விநியோக வலையமைப்புகளை மறுவடிவமைத்து வருவதால், உலகளாவிய உரத் துறை பெரும் இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் இந்தப் பிரச்சினையை மேலும் அதிகரிக்கின்றன. விவசாய சந்தைகளில் நிச்சயமற்றத் தன்மையை உருவாக்குகின்றன மற்றும் விநியோகத்தில் உள்ள சிரமங்கள் காரணமாக உலகளவில் விவசாயிகளைப் பாதிக்கின்றன. ஒரு காலத்தில் நம்பகமானதாக இருந்த விநியோகச் சங்கிலிகள் இப்போது நிச்சயமற்றதாகிவிட்டன. சமீபத்திய அமெரிக்க வரிகள் நீண்டகால வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டு, புதிய ஏற்பாடுகளைத் தேட நாடுகளை கட்டாயப்படுத்துவதால் அவை குறிப்பாக கவலையளிக்கின்றன.


இந்தியாவைப் பொறுத்தவரை, தனது பெரிய விவசாயத் துறையை ஆதரிக்க உர இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள இந்த முன்னேற்றங்கள் கடுமையான சவால்களை ஏற்படுத்துகின்றன.


இந்தக் கட்டுரை அமெரிக்கக் கொள்கைகள், உலகளாவிய உர வர்த்தகத்தில் அவற்றின் குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகள் மற்றும் இந்தியாவில் அவற்றின் தாக்கம் பற்றிய விவரங்களை விளக்குகிறது.


அமெரிக்க வரிகள் உர சந்தைகளை எவ்வாறு உலுக்குகின்றன


ஜூலை 31 அன்று, அதிபர் டிரம்ப் உலகளாவிய உரச் சந்தைகளைப் பாதிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். புதிய "பரஸ்பர" வரிகள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கி, சில நாடுகளை மற்ற நாடுகளைவிட கடுமையாக பாதித்தன.


எகிப்து, சவுதி அரேபியா மற்றும் மொராக்கோ இப்போது பாஸ்பேட் உரங்களுக்கு 10 சதவீத வரியை எதிர்கொள்கின்றன. அதே நேரத்தில் ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் 15 சதவீத வரியை எதிர்கொள்கின்றன. அமெரிக்காவிற்கு அம்மோனியம் பாஸ்பேட்டின் முக்கிய சப்ளையரான சவுதி அரேபியாவிற்கு இது முக்கியமானது. நைட்ரஜன் உரங்களில், அல்ஜீரியாவின் யூரியா 30 சதவீத வரியைக் கொண்டுள்ளது. நைஜீரியாவின் 15 சதவீத வரியைக் கொண்டுள்ளது. இதில் அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படவில்லை.


கட்டண விதிகள் சீரற்றவை. கனடா மற்றும் பிற USMCA நாடுகளிலிருந்து பொட்டாசியம் உரங்கள் வரியற்றவையாகவே உள்ளன, ஆனால் பிற கனேடிய ஏற்றுமதிகள் 35 சதவீத வரிகளை எதிர்கொள்கின்றன. பிரேசில் அதன் NPK தயாரிப்புகளுக்கு விலக்கு அளிக்க பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் 50 சதவீத வரியைத் தவிர்த்தது.


இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, ஜூலை 31 அன்று மோனோஅமோனியம் பாஸ்பேட் (MAP), டைஅமோனியம் பாஸ்பேட் (DAP), யூரியா மற்றும் அம்மோனியா போன்ற முக்கிய உரங்களின் விலைகள் உடனடியாக உயர்ந்தன. வர்த்தக முடிவுகள் எவ்வளவு விரைவாக சந்தைகளை மாற்றும் மற்றும் நாடுகளை சரிசெய்ய கட்டாயப்படுத்தும் என்பதை நிலைமை காட்டுகிறது.


இந்தியாவில் இதன் தாக்கம்


உரத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகச் சந்தை 2025ஆம் ஆண்டில் சுமார் $402.5 பில்லியனில் இருந்து $541.2 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமார் 6.1 சதவீதமாகும். இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக 2050ஆம் ஆண்டில் 9 பில்லியனைத் தாண்டும் உலக மக்கள்தொகைக்கு உணவளிக்க வேண்டிய அவசியம் கிடைக்கக்கூடிய விவசாய நிலங்களில் குறைவு மற்றும் நவீன விவசாய நுட்பங்களை ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவதால் இது உந்தப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியாக இருக்கும் வேளாண்மை, உலகளாவிய சூழ்நிலை காரணமாக கடுமையான அபாயங்களை எதிர்கொள்கிறது. ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களை நாடு பெரிதும் சார்ந்துள்ளது. இவை அமெரிக்காவின் புதிய வரிகளால் பாதிக்கப்படுகின்றன. இந்த சார்பு இந்தியாவை திடீர் விலை உயர்வு மற்றும் விநியோக சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது. வரிகள் இந்தியாவை நேரடியாக குறிவைக்கவில்லை என்றாலும், அவற்றின் விளைவுகள் இன்னும் உணரப்படும். உரச் செலவுகள் அதிகரிப்பது விவசாயிகளின் செலவுகளை அதிகரிக்கும், அவர்களின் லாபத்தைக் குறைக்கும், நுகர்வோருக்கான உணவு விலைகளை உயர்த்தும். மேலும், இந்திய விவசாய ஏற்றுமதிகளை உலகளவில் குறைந்த போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும்.


இந்தியாவின் இராஜதந்திர சவால்கள், வாய்ப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை


இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் அது புத்திசாலித்தனமாக செயல்பட்டால் வாய்ப்புகளையும் கண்டறிய முடியும். வரிகளிலிருந்து வரும் உடனடி சிக்கல்கள் தெளிவாக உள்ளன. வெளிநாட்டு இறக்குமதியாளர்களை அதிகமாகச் சார்ந்திருத்தல், உலகளாவிய விலை மாற்றங்களுக்கு பாதிப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி போன்றவை இந்தியாவின் சிக்கல்களாக உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தியா அதன் யூரியாவில் சுமார் 20%, DAP-ன் 50-60% மற்றும் அதன் கிட்டத்தட்ட அனைத்து மியூரியேட் ஆஃப் பொட்டாஷையும் இறக்குமதி செய்கிறது.

அதே நேரத்தில், இந்த சவால்கள் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளுடன் விநியோக கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் இந்தியா இறக்குமதிகளை பன்முகப்படுத்த முடியும். இது ஒரு சில ஆதாரங்களை நம்பியிருப்பதைக் குறைத்து உலகளாவிய இடையூறுகளுக்கு எதிராக பாதுகாக்கும். நிலைமை உள்நாட்டு உற்பத்தியின் விரைவான வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. ஆராய்ச்சியில் முதலீடுகள், தனியார் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் இந்தியா மேலும் தன்னம்பிக்கை பெற உதவும். கூடுதலாக, இந்தியா சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற ராஜதந்திரத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் சர்வதேச மன்றங்கள் மூலம் விலக்குகளைப் பெறலாம்.


துல்லியமான வேளாண்மை மற்றும் திறமையான உர பயன்பாடு போன்ற நிலையான விவசாய முறைகளைப் பயன்படுத்துவது பயிர் உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம், அதே நேரத்தில் ஒட்டுமொத்த உர பயன்பாட்டைக் குறைக்கலாம், இது இறக்குமதியை நீண்டகாலமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.


குறிப்பாக, இறக்குமதியாளர்கள் அமெரிக்காவிலிருந்து பொருட்களை மாற்றும்போது சந்தைகளை கவனமாகக் கண்காணிப்பது சரியான நேரத்தில் உரங்களை வாங்க உதவும். இந்த உத்திகள் தற்போதைய பலவீனங்களை நீடித்த பலங்களாக மாற்றும், இதனால் இந்தியாவின் வேளாண்மை வலுவாகவும் வெளிநாட்டு ஆதாரங்களைச் சார்ந்திருக்காமலும் இருக்கும்.



முடிவுரை


உலகளாவிய உர வர்த்தகத்திற்கு அமெரிக்க வரிவிதிப்பு மாற்றம் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, இது வளங்களை பல்வகைப்படுத்துவதன் மூலமும், உள்நாட்டில் அதிக உற்பத்தி செய்வதன் மூலமும், புத்திசாலித்தனமான உத்தியைப் பயன்படுத்துவதன் மூலமும் வலுவாக மாற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாகச் செயல்படுவதன் மூலம், இந்தியா அபாயங்களைக் குறைக்கலாம், உள்ளீட்டு விலைகளை நிலையானதாக வைத்திருக்கலாம் மற்றும் மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளிலிருந்து பயனடையலாம்.


ஆசிரியர் Tradelink International Pvt. Ltd நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.



Original article:

Share:

நுகர்வு தரவுகளில் உள்ள சிக்கல்கள் -ஆஷிஷ் குமார், பயல் சேத்

 சிறந்த கொள்கை வகுப்பிற்கு தனியார் இறுதி நுகர்வு செலவு (Private Final Consumption Expenditure (PFCE)) மற்றும் வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.


வீட்டு நுகர்வு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பகுதியாகும். இது சுமார் 60 சதவீதத்தை உருவாக்குகிறது. ஆனால், இரண்டு அதிகாரப்பூர்வ தரவு ஆதாரங்கள் மிகவும் மாறுபட்ட முடிவுகளைத் தருகின்றன.


ஒரு ஆதாரம் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களிலிருந்து தனியார் இறுதி நுகர்வு செலவு (PFCE). மற்றொன்று தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (HCES).


மேலிருந்து கீழாக (பேரியல்) மற்றும் கீழிருந்து மேலாக (குறு) மதிப்பீடுகளுக்கு இடையே வேறுபாடுகள் எதிர்பார்க்கப்பட்டவை என்றாலும், பிரச்சினை என்னவென்றால், இந்த இடைவெளியின் அளவும் நீடித்திருப்பதும் ஆகும். இது 1972-73ல் சுமார் 5 சதவீதமாக இருந்தது, 2022-23ல் கிட்டத்தட்ட 45 சதவீதமாக விரிவடைந்துள்ளது (ஏ.கே. அதிகாரி குழு அறிக்கை, PFCE, MoSPI, 2015).





இரண்டு நடவடிக்கைகள்


PFCE என்பது வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேவை செய்யும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் (NPISHs) பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பைக் கணக்கிடும் ஒரு பெரிய பொருளாதார அளவீடு ஆகும். இது உற்பத்தி, வர்த்தகம், விலைகள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து தரவைப் பயன்படுத்தும் பொருட்கள் ஓட்ட முறை மூலம் மதிப்பிடப்படுகிறது.


இதில் முதலாளிகள் அல்லது அரசு சாரா நிறுவனங்களால் வழங்கப்படும் இலவச அல்லது மானிய விலை உணவு, கல்வி அல்லது சுகாதாரப் பராமரிப்பு போன்ற வீடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளும் அடங்கும்.


மறுபுறம், வீடுகளில் இருந்து தரவைச் சேகரிப்பதன் மூலம் HCES நுகர்வு பற்றிய ஒரு கீழ்நிலைக் காட்சியை வழங்குகிறது. இந்த ஆய்வுகள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உண்மையான செலவுகளைப் பதிவு செய்கின்றன.


2022-23ஆம் ஆண்டில், கணக்கெடுப்பு மாத தனிநபர் செலவினம் (monthly per capita expenditure (MPCE)) கிராமப்புறங்களில் ₹3,773 ஆகவும் நகர்ப்புறங்களில் ₹6,459 ஆகவும் மதிப்பிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், இது கிராமப்புறங்களில் ₹4,122 ஆகவும் நகர்ப்புறங்களில் ₹6,996 ஆகவும் அதிகரித்தது. வறுமை, சமத்துவமின்மை மற்றும் உணவுப் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு இந்த புள்ளிவிவரங்கள் முக்கியமானவை.


இருப்பினும், HCES நுகர்வு மதிப்பீடுகள் PFCE மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே உள்ளது.


எண்கள் ஏன் ஒன்றாக வரவில்லை?


முறைசார் வேறுபாடுகள்: 


குடும்பங்கள் தாங்கள் என்ன செலவிடுகிறார்கள் என்று HCES பதிவு செய்கிறது. எடுத்துக்காட்டாக, அவர்கள் வாடகை, சுகாதாரம் அல்லது கல்விக்கு பணம் செலுத்தினால் அது கணக்கிடப்படுகிறது. ஆனால், அவர்கள் NGOக்கள் அல்லது மதக் குழுக்களிடமிருந்து இலவச அல்லது மானிய விலையில் சேவைகளைப் பெற்றால், பணம் செலுத்தப்படாவிட்டால் அவை பொதுவாக சேர்க்கப்படாது.


இருப்பினும், PFCE, வீடுகளால் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் முழு மதிப்பையும், அவை இலவசமாகப் பெறப்பட்டாலும்கூட அதை கணக்கிடுகிறது.


உதாரணமாக, ஒரு நபர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து ₹500 செலுத்தினால், HCES ₹500 மட்டுமே பதிவு செய்யும். ஆனால், உண்மையான செலவு ₹25,000-ஆக இருக்கலாம். இது ஒரு NGO அல்லது அரசாங்கத் திட்டத்தால் ஈடுசெய்யப்படுகிறது. எனவே, HCES செலவினத்தைக் காட்டுகிறது, அதே நேரத்தில் PFCE பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் முழு பொருளாதார மதிப்பைக் காட்டுகிறது. இது இரண்டிற்கும் இடையிலான இடைவெளியை அதிகம் விளக்குகிறது.


விலை மற்றும் மதிப்பீட்டு இடைவெளிகள்: 


PFCE சந்தை விலைகளைப் பயன்படுத்துகிறது. பெரும்பாலும் GST, வரி தாக்கல்கள் அல்லது உற்பத்தியாளர் விலைகள் போன்ற ஆதாரங்களில் இருந்து புதுப்பிக்கப்படுகிறது. HCES வீடுகள் அளவு மற்றும் செலவு என அறிக்கை செய்வதிலிருந்து கணக்கிடப்பட்ட அலகு மதிப்புகளைப் பயன்படுத்துகிறது. இவை தேசிய கணக்குகளில் பயன்படுத்தப்படும் சந்தை விலைகளிலிருந்து நிறைய வேறுபடலாம்.


காலக்கெடு பொருத்தமின்மை: 


HCES ஒரு விவசாய ஆண்டில் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் PFCE நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டது. இது ஆறுமாத இடைவெளியை உருவாக்குகிறது, இதனால் கடுமையான ஒப்பீடு கடினமாகிறது.


இந்த வேறுபாடுகள் காரணமாக, இரண்டு மதிப்பீடுகளுக்கும் இடையிலான இடைவெளி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேசிய கணக்குகளின் கடைசி திருத்தத்தின்போது MoSPI குழுவால் குறிப்பிடப்பட்ட பெரிய பிரச்சினை என்னவென்றால், இடைவெளி பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. இது 1972-73-ல் 5 சதவீதத்திலிருந்து 2011-12-ல் சுமார் 45 சதவீதமாகவும், 2022-23-ல் 46சதவீதமாகவும், 2023-24-ல் 47.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.


1972-73-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வேறுபாடு அதிகரித்திருந்தாலும், கடந்த 11 ஆண்டுகளில் இது பெரிதாக விரிவடையவில்லை.


நுகர்வு விவரங்களைப் பார்க்கும்போது தெளிவான வேறுபாடுகள் தெரிகின்றன.


HCES 2023-24-ஆம் ஆண்டில், உணவு ஒரு நபருக்கு கிராமப்புறத்தில் 46% மற்றும் நகர்ப்புறத்தில் 39% ஆகும். இது 2011-12-ஆம் ஆண்டில் 53% மற்றும் 42%-ஐ விடக் குறைவு.




உணவுக்குள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான செலவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் பால், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் புரதம் நிறைந்த பொருட்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதன் பொருள் பெரும்பாலான வீட்டுச் செலவுகள் இப்போது போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, வாடகை மற்றும் நீடித்த பொருட்கள் போன்ற உணவு அல்லாத பொருட்களில் உள்ளன.


HCES மற்றும் PFCE இடையே வளர்ந்துவரும் இடைவெளி பெரிய கொள்கை தாக்கங்களை ஏற்படுத்துகிறது. HCES நுகர்வை குறைத்து மதிப்பிட்டால், வறுமை உண்மையில் இருப்பதைவிட அதிகமாகத் தோன்றலாம். இது தவறான சமூகநலன் இலக்குக்கு வழிவகுக்கும். பொது விநியோக முறை அல்லது நேரடி நன்மை பரிமாற்றங்கள் போன்ற திட்டங்கள் இந்தத் தரவை நம்பியுள்ளன.


ஆனால், PFCE நுகர்வு மிகையாக மதிப்பிட்டால், குறிப்பாக காலாவதியான அனுமானங்கள் அல்லது முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், அது பொருளாதாரத்தின் அதிகப்படியான நேர்மறையான படத்தைக் கொடுக்கக்கூடும்.


இடைவெளியைக் குறைத்தல்


சரி, என்ன செய்ய முடியும்?


முந்தைய ஆய்வுகள், பணக்கார குடும்பங்களின் ஒத்துழைப்பு இல்லாதது வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பு (HCES)-ல் சார்புக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. எனவே, அதிக வருமானம் கொண்ட நகர்ப்புற குடும்பங்கள் கணக்கெடுப்பில் எவ்வளவு சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.


இதில் HCES தரவை மாற்று ஆதாரங்களான வருமான வரி பதிவுகள், கட்டண செயலி பரிவர்த்தனை தரவு, மற்றும் புலப்படுத்தல் தரவு (scanner data) ஆகியவற்றுடன் ஒப்பிடுவது அடங்கும், இதனால் விருப்பமான மற்றும் சேவை தொடர்பான நுகர்வு அறிக்கையிடலில் உள்ள இடைவெளிகளை மதிப்பிட முடியும். இத்தகைய முக்கோணமாக்கல், குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை அளவிட உதவி, மாதிரி எடுப்பு அல்லது கணக்கெடுப்பு வடிவமைப்பில் இலக்கு மேம்பாடுகளுக்கு வழிகாட்டலாம்.


இரண்டாவதாக, வருமான வரி தாக்கல்கள் குடும்ப வருமானம் குறித்து நம்பகமான தரவை வழங்குகின்றன, இது நேரடியாக நுகர்வை அளவிடாவிட்டாலும், குறிப்பாக உயர் வருமானப் பிரிவுகளில் ஒரு வலுவான பிரதிநிதியாக செயல்படுகிறது. வரி தரவிலிருந்து வருமான விநியோகங்களை HCES குடும்பங்களுடன் (மறு எடைப்படுத்துதல், அளவுத்திருத்தம் அல்லது மதிப்பீடு போன்ற முறைகள் மூலம்) ஒருங்கிணைப்பதன் மூலம், மேல் பிரிவில் குறைவான உள்ளடக்கத்தை சரிசெய்து, தனிநபர் நுகர்வு செலவினத்தின் திருத்தப்பட்ட மற்றும் மிகவும் யதார்த்தமான மதிப்பீட்டை பெற முடியும்.


சில்லறை விற்பனைச் சங்கிலிகள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலிருந்து விரிவான மற்றும் அடிக்கடி கொள்முதல் தகவல்களை வழங்கும் ஸ்கேனர் தரவு, HCES மதிப்பீடுகளை மேம்படுத்த மற்றொரு பயனுள்ள ஆதாரமாகும்.


HCES வினாத்தாள்களில், செயலி அடிப்படையிலான சேவைகள், ஆன்லைன் கல்வி மற்றும் டிஜிட்டல் சந்தாக்கள் போன்ற புதிய செலவின வடிவங்களைச் சேர்க்க மாற்றங்கள் தேவை. இவை பெரும்பாலும் கணக்கெடுப்பில் தவறவிடப்படுகின்றன, ஆனால் அவை மிகவும் பொதுவானதாகி வருகின்றன.


MoSPI-ஆல் தயாரிக்கப்பட்ட தனியார் இறுதி நுகர்வு செலவு (PFCE)  மதிப்பீடுகள் வர்த்தக வரம்புகள், நுகர்வு பங்குகள், வீண் விரய விகிதங்கள் மற்றும் வாடகை அல்லது நிதி சேவைகள் போன்ற கணக்கிடப்பட்ட மதிப்புகளைப் பொறுத்தது.  இவற்றில் பல காலாவதியான ஆய்வுகள் அல்லது பழைய சராசரிகளை அடிப்படையாகக் கொண்டவை. PFCE மதிப்பீடுகளை துல்லியமாக வைத்திருக்க, இந்த விகிதங்களுக்கு வழக்கமான புதுப்பிப்புகள் மற்றும் வருமானக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களில் கூடுதல் விவரங்கள் தேவை.


PFCE மதிப்பீட்டில் மற்றொரு பலவீனமான பகுதி NPISHகளின் (குடும்பங்களுக்கு சேவை செய்யும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள்) வரையறுக்கப்பட்ட பகுதி ஆகும். அவர்களிடமிருந்து சரியான வருமானம் மற்றும் செலவுத் தரவைச் சேகரிக்க வழக்கமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும். இது PFCE மதிப்பீடுகளை மிகவும் துல்லியமாக்கும் மற்றும் பொருளாதாரத்தில் சேவை நுகர்வின் உண்மையான அளவைக் காண்பிக்கும்.


இரண்டு தரவுத்தொகுப்புகளிலிருந்தும் நுண்ணறிவுகளை இணைக்கும் ஒரு சரியான நல்லிணக்க அமைப்பு இருக்க வேண்டும். PFCE பரந்த நிர்வாகக் கவரேஜை வழங்குகிறது. அதே நேரத்தில் HCES விரிவான வீட்டு அளவிலான தகவல்களை வழங்குகிறது. ஒன்றை மற்றொன்றைவிட சிறந்ததாகக் கருதுவதற்குப் பதிலாக, இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்த வேண்டும்.


MoSPI குழுக்கள் இந்த சீர்திருத்தங்களை முன்னர் பரிந்துரைத்திருந்தாலும், அவை ஓரளவு மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. வலுவான நடவடிக்கை இல்லாமல், இந்தியா அதன் நுகர்வு சார்ந்த வளர்ச்சி மற்றும் அதன் பின்னணியில் உள்ள சமத்துவமின்மை இரண்டையும் தவறாக மதிப்பிடும் அபாயம் உள்ளது.


முடிவுரை


இந்தியா உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், அதற்கு வலுவான அடித்தளங்கள் இருக்க வேண்டும்.


PFCE மற்றும் HCES மூலம் அளவிடப்படும் வீட்டு நுகர்வுக்கு இடையிலான இடைவெளி, செழிப்பு, வறுமை மற்றும் கொள்கை முடிவுகளை நாம் எவ்வாறு கண்காணிக்கிறோம் என்பதில் ஒரு தீவிரமான சிக்கலைக் காட்டுகிறது.


நாட்டில் தனியார் குடும்ப நுகர்வின் யதார்த்தமான நிலைப்பாட்டை பெறுவதற்கும், பயனுள்ள கொள்கை வகுப்பதற்கும், கீழ்நிலை குறு மற்றும் மேல்நிலை பேரியல் நுகர்வு மதிப்பீடுகளுக்கு இடையேயான உறுப்பு வாரியான வேறுபாட்டை முழுமையாக விளக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


குமார், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரலாகவும், பஹ்லே, இந்தியா அறக்கட்டளையின் சிறப்பு உறுப்பினராகவும் உள்ளார்; சேத், பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share:

மாநிலங்களவை தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்ன? —ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


ஜம்மு-காஷ்மீரின் நான்கு மாநிலங்களவை இடங்களின் பதவிக்காலம் ஒரே நேரத்தில் முடிவடையும் நிலையில், அவற்றின் பதவிக்காலத்தை மாற்றியமைக்க குடியரசுத்தலைவர் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் கடந்த மாதம் நிராகரித்தது.


முக்கிய அம்சங்கள்:


* ஜம்மு காஷ்மீரில் (Jammu and Kashmir (J&K)) உள்ள நான்கு ராஜ்யசபா இடங்கள் ஒரே நேரத்தில் முடிவடையும் நிலையில் குடியரசுத்தலைவரின் கருத்தை தேர்தல் ஆணையம் (EC) கேட்டது. யூனியன் பிரதேசம் எப்போதும் மேல்சபையில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும். ஆனால், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இதற்கு எந்த சட்டப்பூர்வ ஏற்பாடும் இல்லை என்று கூறியது.


* இந்த நான்கு இடங்களும் 2021ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ளன. அப்போது ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சியின்கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தது. செப்டம்பர்-அக்டோபர் 2024-ல் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், தேர்தல் ஆணையம் இன்னும் மக்களவை தேர்தலை நடத்தவில்லை. இதனால் முதல்வர் உமர் அப்துல்லா தாமதம் குறித்து கேள்வி எழுப்பினார். மாநில அல்லது யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற ஊறுப்பினர்களால் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


* இந்த ஆண்டின் தொடக்கத்தில், சில ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜ்யசபா இடங்களின் பதவிக்காலத்தை குறைக்க குடியரசுத்தலைவரின் உத்தரவை கோரி தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்தின் சட்டமன்றத் துறைக்கு கடிதம் எழுதியது. 


* 1952ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்த ஆறு ஆண்டு பதவிக்காலத்திற்குப் பிறகு அவை அனைத்தும் முடிவடையாதபடி, இடங்களின் பதவிக் காலத்தை மாற்றுவதற்கு இதேபோன்ற ஒரு குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


* அரசியலமைப்பின் 83வது பிரிவு, மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஓய்வு பெறுகிறார்கள் என்று கூறுகிறது. மக்களவையைப் போலல்லாமல், மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும்.


* அனைத்து மாநிலங்களவை இடங்களும் இத்தகைய அணுகுமுறையுடன் தொடங்கினாலும், சில மாநிலங்களில் சில இடங்களின் பதவிக்காலம் பல ஆண்டுகளாக அவசரநிலை மற்றும் குடியரசுத்தலைவர் ஆட்சியின் காரணமாக ஒரே நேரத்தில் மாறிவிட்டது. ஜம்மு & காஷ்மீரில், 1990ஆம் ஆண்டுகளில் இருந்து இந்த சுழற்சி சீர்குலைந்துள்ளது.


* 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 154, மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என்று கூறுகிறது. இருப்பினும், அது தொடர்ச்சியான அவையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, குடியரசுத்தலைவர் உத்தரவுகள் இரண்டு முறை பிறப்பிக்கப்பட்டன.


* பிரிவு 154-ன் துணைப் பிரிவு 2, மாநில கவுன்சில் முதலில் உருவாக்கப்பட்ட பிறகு, குடியரசுத்தலைவர், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து, சில உறுப்பினர்களின் பதவிக் காலத்தைக் குறைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். இது ஒவ்வொரு குழுவிலிருந்தும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஓய்வு பெறுவதை உறுதி செய்வதாகும்.


* மேலும், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஏப்ரல் 2, 1958 அன்று ஓய்வு பெறலாம் என்றும், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பிறகு, தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை நடத்திய பிறகு, உறுப்பினர்களின் பதவிக்காலம் குறித்து புதிய விதிகளை உருவாக்க முடியும் என்றும் அது கூறுகிறது.


* இதன் பொருள், 1952-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை கூட்டத்தின் போதும், பின்னர் 1956-ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் மூலமாகவும் மட்டுமே குடியரசுத் தலைவர் உத்தரவுகளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அனுமதித்தது.


* குடியரசுத் தலைவர் இப்போது சில மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலத்தைக் குறைக்க விரும்பினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RP) திருத்தப்பட வேண்டும். இந்த மாற்றம் ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.



Original article:

Share:

குழந்தை இறப்பு விகிதம் எனபது என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை, தேசிய சராசரி 1000 பிறப்புகளுக்கு 25 என்று கூறுகிறது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், 2022-ஆம் ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 5.6 குழந்தை இறப்பு விகிதத்தைக் (Infant Mortality Rate (IMR) கொண்ட அமெரிக்காவை விட மாநிலத்தின் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று கூறினார். கேரளாவின் குழந்தை இறப்பு விகிதம் நாட்டிலேயே மிகக் குறைவு என்று அவர் கூறினார்.


— பல ஆண்டுகளாக, சுகாதாரத் துறையில் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக கேரளாவின் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது.


— மாநில பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, கேரளாவின் குழந்தை இறப்பு விகிதம் 2010ஆம் ஆண்டில் 7.42 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 8.2 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் இது பல ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.


— 2023 ஆம் ஆண்டின் மாநில முக்கிய புள்ளிவிவரங்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பெரும்பாலான குழந்தை பிறப்புகள் மருத்துவமனை பிரசவங்களாகவே உள்ளன என்பதைக் காட்டுகிறது. கிராமப்புறத்தில் மொத்த பிரசவங்களில் 96.16 சதவீதமும், நகர்ப்புறத்தில் மொத்த பிரசவங்களில் 99.88 சதவீதமும் 2023 ஆம் ஆண்டில் மருத்துவமனை பிறப்புகளாக பதிவாகியுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


— டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடந்த பத்தாண்டுகளில் தங்கள் குழந்தை இறப்பு விகிதத்தை ((Infant Mortality Rate (IMR)) பாதிக்கும் மேலாகக் குறைத்துள்ளன. இது நாடு முழுவதும் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ள குழந்தை ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியில் மிகப்பெரிய நன்மைகளைப் பதிவு செய்துள்ளது.


— 2023ஆம் ஆண்டு மாதிரி பதிவு கணக்கெடுப்பின் சமீபத்திய தரவு, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 37 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது 2013-ல் 1,000 பிறப்புகளுக்கு 40 இறப்புகளிலிருந்து 2023-ஆம் ஆண்டில் 25-ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 2021-ஆம் ஆண்டில் உலக சராசரியை விடக் குறைந்துள்ளது. மேலும், உலகளாவிய விகிதத்தைவிட வேகமாகச் சரிவைக் காட்டுகிறது. ஆனால், இது ஆசியாவின் சராசரியுடன் இன்னும் சாதகமற்றதாக உள்ளது. அங்கு குழந்தை இறப்பு விகிதம் சுமார் 17.4 ஆகும்.


— நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் முந்தைய ஆண்டைவிட ஒரு புள்ளி மேம்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், சராசரி முன்னேற்றம் 1.4 புள்ளிகளாக உள்ளது.


— ஒற்றை இலக்க குழந்தை இறப்பு விகிதம் கொண்ட ஒரே பெரிய மாநிலமாக கேரளா உள்ளது. 1,000 பிறப்புகளுக்கு ஒரு வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளனர். இது பெரும்பாலான வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்க விகிதமாகும். ஆனால், ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் குழந்தை இறப்பு விகிதத்தில் இந்த மாநிலம் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு ஒன்பது மற்றும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு என்ற விகிதம் உள்ளது.


— மணிப்பூர், சிக்கிம் மற்றும் கோவா போன்ற சிறிய மாநிலங்களிலும் ஒற்றை இலக்க குழந்தை இறப்பு விகிதம் உள்ளது. ஏறக்குறைய அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ளது.


— சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டிலேயே அதிக குழந்தை இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. 1,000 பிறப்புகளுக்கு 37 இறப்புகள் ஏற்படுகின்றன. ஒடிசா மற்றும் அசாம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1,000 பிறப்புகளுக்கு தலா 30 இறப்புகள் ஏற்படுகின்றன.



Original article:

Share:

இந்தியா காலநிலை மாற்றங்களைத் தாங்கும் நகரங்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? -அகஸ்தே தனோ குவாமே, அஸ்மிதா திவாரி, நட்சுகோ கிகுடகே

 காலநிலை சவால்களை எதிர்கொள்ள, நகரங்கள் வலுவான நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அவை, ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் மற்றும் குடிமக்களின் ஆதரவைப் பெற வேண்டும்.


இந்தியாவின் எதிர்காலத்திற்கான திறவுகோல் நகரங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளில், இந்திய நகரங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமான புதிய வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 25 ஆண்டுகளில், நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகை கிட்டத்தட்ட ஒரு பில்லியனாக உயரும், சில மெகாசிட்டிகள் தனிப்பட்ட நாடுகளைவிட பெரியதாக மாறும். நகர்ப்புற வளர்ச்சியின் இந்த அதிர்ச்சியூட்டும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் நகரங்கள் அதன் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரின் திறமை மற்றும் தொழில்முனைவோரை வெளிக்கொணரும் எதிர்காலத்திற்கான வரைபடத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.


நகர்ப்புற உள்கட்டமைப்பின் பெரும்பகுதி இன்னும் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்படாமல் இருப்பதால், இந்தியாவின் நகரங்கள் எதிர்காலத்திற்குத் தயாராகும் வாய்ப்பின் குறுகிய காலத்தை மட்டுமே வழங்குகிறது. 2070-க்குள், அவர்கள் 144 மில்லியனுக்கும் அதிகமான புதிய வீடுகளைக் கட்டவேண்டும். தற்போதுள்ள இருப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். வீட்டுவசதியுடன், இந்த பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நகராட்சி சேவைகளையும் உருவாக்க வேண்டும்.


முக்கியமாக, புதிய உள்கட்டமைப்பு காலநிலை மாற்றத்தின் வளர்ந்துவரும் தாக்கங்களைத் தாங்க வேண்டும். காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பில் ஆரம்ப முதலீடுகள் அவசியம். இத்தகைய முதலீடுகள் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர் சேதங்களைத் தவிர்க்க உதவும். அவை எண்ணற்ற உயிர்களையும் காப்பாற்ற முடியும்.


இன்று, வெள்ளம் பெருகும் அபாயத்தை உருவாக்குகிறது. புதிய வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருவதால், இந்தியாவின் நகர்ப்புறங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் புவியியல் அல்லது மேற்பரப்பு வெள்ளத்தின் அபாயத்தை எதிர்கொள்வார்கள். இது, 2030-ம் ஆண்டளவில் $5 பில்லியன் இழப்புகள் ஏற்படக்கூடும். மேலும், 2070-ம் ஆண்டில் $30 பில்லியன் இழப்பு ஏற்படும். அதிகப்படியான மழைநீரை உறிஞ்சக்கூடிய இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிக்கிறது மற்றும் வெள்ள எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுகிறது. இது அபாயத்தைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, இப்போது 80 சதவீத நகர்ப்புறமாக இருக்கும் பிரேசில், கால்வாய் அமைத்தல் மற்றும் கட்டமைப்பு வெள்ளக் கட்டுப்பாட்டைத் தாண்டி இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியாவிலும், சில நகரங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொல்கத்தா நகர அளவிலான வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், சென்னை புயல் நீர் மேலாண்மை மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிக்க வெள்ளத் தயார்நிலையை (water management and flood preparedness) மேம்படுத்துகிறது.


அதிக வெப்பம் மற்றொரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. தற்போது, ​​நகர்ப்புற வெப்ப தீவு விளைவுடன் இணைந்து தீவிர வெப்பம் முக்கிய இந்திய நகரங்களில் இரவுநேர வெப்பநிலை ஆண்டு முழுவதும் சுற்றியுள்ள பகுதிகளைவிட 3°C முதல் 5°C வரை அதிகமாக உள்ளது. 21-ம் நூற்றாண்டில் வெப்பநிலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்கள் அகமதாபாத்தின் வெப்ப செயல் திட்டத்தைப் (Heat Action Plan) பின்பற்றலாம். அவை மரங்களின் பரப்பை அதிகரிக்கலாம். வெப்பத்தை அதிகரிக்கும் கூரைகளை குளிர்ந்த கூரைகளால் மாற்றலாம், அவை செயல்படுத்த எளிதானவை. வெளிப்புற தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தையும் மாற்றலாம். இந்த நடவடிக்கைகளை இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இறப்புகளைத் தடுக்கலாம். உச்ச கோடை மாதங்களில் பொருளாதார உற்பத்தித்திறனையும் இது பாதுகாக்க முடியும்.


தற்போது, ​​நகர்ப்புற வீடுகள் வெள்ளம், தீவிர வெப்பம், சூறாவளி, நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்ளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. 2070-ம் ஆண்டிற்குள் பாதிக்கு மேல் வீடுகள் கட்டப்படாமல் இருப்பதால், இந்தப் புதிய வீடுகள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன, அமைந்துள்ளன, வடிவமைக்கப்பட்டுள்ளன, கட்டப்படுகின்றன, மற்றும் பராமரிக்கப்படுகின்றன என்பது நகரங்கள் மற்றும் அதன் குடிமக்கள்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னோக்கிய திட்டமிடலுடன் புதிய வீடுகள் சிறிய நகர வடிவமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்வது, இந்தியாவின் நகரங்களை மேலும் செழுமையாகவும், உள்ளடக்கியதாகவும், காலநிலைக்கு ஏற்பவும் மாற்ற உதவும்.


ஒரு நகரத்தின் உற்பத்தித்திறனுக்கும் அதன் மக்களுக்கும் திறமையான போக்குவரத்து மிகவும் முக்கியமானது. இருப்பினும், இன்று, இந்தியாவின் நகர்ப்புறச் சாலைகளில் கால் பகுதிக்கும் மேலான பகுதிகள் நேரடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில நகரங்களில், வெறும் 10 முதல் 20 சதவீத சாலைகள் வெள்ளத்தில் மூழ்கினால், அவற்றின் போக்குவரத்து அமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதிக்கப்படும். வெள்ள அபாயங்களை வரைபடமாக்குதல், வடிகால்களை மேம்படுத்துதல், செல்ல முடியாத சாலைகளுக்கு மாற்று வழிகளை உருவாக்குதல், வெள்ளப் பாதுகாப்பு மற்றும் சாலைப் பராமரிப்பில் முதலீடு செய்தல் ஆகியவை பருவநிலையால் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க உதவும். கூடுதலாக, நகராட்சி சேவைகளை நவீனமயமாக்குவதில் பெரிய முதலீடுகள், கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுகளை ஆற்றலாக மாற்றுவது, காற்று, நீர் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தலாம். இது நகர்ப்புற உற்பத்தித்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு பரந்த அளவிலான பலன்களைத் தரும்.


இந்த சவால்களை எதிர்கொள்ள, நகரங்கள் தங்கள் நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும், ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும், மேலும் அரசாங்கம் மற்றும் குடிமக்கள் இருவரின் ஆதரவையும் பெற வேண்டும். ஏனெனில், இந்த முயற்சி தனியாகக் கையாள முடியாத அளவுக்கு பெரிய பணியாகும். இந்த முக்கிய முயற்சியை இயக்குவதற்கு திறன், புதுமையான நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை கொண்டுவர தனியார்துறை ஈடுபாட்டை ஊக்குவிப்பது சம அளவில் முக்கியமானது. அடுத்த முப்பதாண்டுகளில், காலநிலை-எதிர்ப்பு மற்றும் குறைந்த கார்பன் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான செலவு $10.95 டிரில்லியன் ஆகும். முதலீடு மிகப்பெரியதாக இருந்தாலும், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமிக்கவும், முதலீட்டை ஈர்ப்பதன் மூலமும், புதிய வேலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்திய மக்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்துவதன் மூலமும் நகர்ப்புற வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இப்போது செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.


இந்தியாவில் உலக வங்கியின் தேசிய இயக்குநராக கோவாமே உள்ளார். திவாரி மற்றும் கிகுடகே ஆகியோர் உலக வங்கி நிபுணர்கள் ஆவர். அவர்கள் உலக வங்கியின் புதிய அறிக்கையான Towards Resilient and Prosperous Cities in India-ன் (இந்தியாவில் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வளமான நகரங்களை நோக்கி) முக்கிய ஆசிரியர்கள் ஆவர்.



Original article:

Share:

பன்முகக் கலாச்சார பல்கலைக்கழகங்கள் ஏன் மனநல அமைப்புகளை கவனத்துடன் உருவாக்க வேண்டும்? -அனிதா படங்கர்

 மாணவர்கள் உயர்கல்விக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால், வளாகங்கள் அவசர தீர்வுகளுக்கு அப்பால் சென்று உணர்வுபூர்வமான ஆதரவை அத்தியாவசிய சேவையாக மாற்ற வேண்டும்.


எனது அலுவலகத்தில் ஒரு மாணவி முதன்முதலில் விரக்தியடைந்ததை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அது மதிப்பெண்கள், காலக்கெடு அல்லது தவறவிட்ட வகுப்புகள் அல்ல, ஆனால் அவர் முற்றிலும், ஆழமாக தனிமையாக உணர்ந்த நிகழ்வு ஆகும். வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில், அறிமுகமில்லாத உணவு, மொழிகள் மற்றும் முகங்களால் சூழப்பட்டிருந்த அவருக்கு உண்மையிலேயே புரிந்துகொள்ள யாரும் இல்லை. யாரும் கேட்கவில்லை. அந்த தருணம் என்னுடன் இருந்தது, உணர்ச்சி நல்வாழ்வு அத்தியாவசியமாக இல்லாமல் விருப்பமாகக் கருதப்படும்போது மாணவர்கள் விரிசல்களில் இருந்து நழுவுவது எவ்வளவு எளிது என்பதை எனக்கு உணர்த்தியது.

வளாகத்தில் நெருக்கடி (Crisis on campus)


2025-ம் ஆண்டில், இந்தியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொண்டது. மாணவர்கள் தற்கொலைகளில் கடுமையான அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தை மாணவர் மனநலத்திற்கான தேசிய பணிக்குழுவை (National Task Force on Student Mental Health) அமைக்கத் தூண்டியது. ஒரு பத்தாண்டுகாலத்திற்கும் மேலாக, வளாகங்களில் தற்கொலை விகிதங்கள் 64% அதிகரித்துள்ளன. இது, சுமார் 12.3% மாணவர்கள் தற்கொலை எண்ணங்களின் அடிப்படையில் புகாரளித்தனர். சுமார் 5.2% பேர் தற்கொலைக்கு முயன்றனர். இவை வெறும் எண்கள் அல்ல. அவை நீண்டகாலமாக மௌனத்தில் அதிக சுமைகளைச் சுமக்கும் இளம் வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.


நெருக்கடி ஒரே இரவில் தோன்றவில்லை. பெரும்பாலான வளாகங்களில், மனநலம் இன்னும் ஒரு நெருக்கடியானப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவர்கள் பொதுவாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒன்று அல்லது இரண்டு ஆலோசகர்களை மட்டுமே வழங்குகிறார்கள். ஆனால், மாணவர்களுக்கு இதைவிட அதிகமாக தேவை. ஆதரவு என்பது கடைசி முயற்சியாக உணரக்கூடாது. இது ஒரு மாணவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மாணவர்கள் தனியாக இல்லை என்பதை அவர்கள் அமைதியாக மாணவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.


என்ன செய்ய முடியும்?


பல்கலைக்கழகங்கள் முன்னேற வேண்டுமென்றால், உண்மையான பராமரிப்பு எப்படி இருக்கும்? என்று நாம் கேட்க வேண்டும். ஒரு மாணவர் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பே உண்மையான பராமரிப்பு தொடங்குகிறது.


முன்னேற்றமான சேர்க்கை : நோக்குநிலையின்போது, ​​மனநல வளங்கள் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே இயற்கையாகவே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.


சக மாணவர் வழிகாட்டுதல் : மாணவர்கள் ஆசிரியர்களை அணுகுவதற்கு முன்பு பெரும்பாலும் நண்பர்களிடம் பேசுகிறார்கள். ஹாங்காங்கின் சிறந்த தூதர்கள் (Wellness Ambassadors) போன்ற மூத்த மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான முதல் பதிலளிப்பவர்களாக பயிற்சி அளிப்பது நெருக்கடிக்கும், பராமரிப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும்.


நுழைவு காவலராக (Faculty as gatekeepers) : ஒரு பேராசிரியரிடமிருந்து ஒரு எளிய “நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வி எல்லாவற்றையும் மாற்றும். ஏதாவது தவறு இருக்கும்போது ஆசிரியர்களால் கவனிக்க முடியும். அவர்களால் கவனமாகக் கேட்க முடியும். அவர்கள் மாணவர்களுக்கு சரியான உதவியை பரிந்துரைக்க முடியும். இந்த வழியில், அவர்கள் ஒரு உயிர்நாடியாக மாறலாம்.


முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் : AI- இயங்கும் கருவிகள் தனியுரிமையை மீறாமல், நாள்பட்ட வருகையின்மை, விலகல் அல்லது துயரம் போன்ற பிரச்சினைகளைக் குறிக்கலாம். இந்தக் கருவிகள் தனியுரிமையை மீறுவதில்லை. உணர்திறன் மிக்கதாகப் பயன்படுத்தப்படும்போது, ​​தரவு நிறுவனங்கள் சரியான நேரத்தில் செயல்பட உதவுகிறது.


புதிய அமைப்புகளில் மாணவர்கள் : பன்முக கலாச்சார நகரங்களில் உள்ள மாணவர்கள் அல்லது வெளிநாடுகளில் படிப்பவர்களுக்கு, உணர்ச்சிரீதியான அழுத்தம் வலுவடைகிறது. அவர்கள் கல்லூரிக்கு மட்டுமல்ல, புதிய விடுமுறைகள், புதிய விதிமுறைகள் மற்றும் புதிய வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்றவாறு மாறி வருகின்றனர். வீட்டு ஏக்கம் என்பது வீட்டை இழப்பது மட்டுமல்ல. அது உங்கள் நிலைமையையும், உங்கள் விருப்பத்தையும், உங்கள் மொழியையும் இழப்பதாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில், மனநல ஆதரவு கலாச்சார ரீதியாக வேரூன்றி சமூகத்தால் இயக்கப்பட வேண்டும்.


உதாரணமாக, துபாயின் அறிவு மற்றும் மனித வளர்ச்சி ஆணையம் (KHDA) ஒரு எளிய ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தும் கேள்வியைக் கேட்டு ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியை அமைக்கிறது: உங்கள் மாணவர்கள் நலமாக இருக்கிறார்களா? இதை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் மனநல செல்வாக்கு கட்டமைப்பையும் நல்வாழ்வு தணிக்கைகளையும் உருவாக்கியுள்ளனர். KHDA பல்கலைக்கழகங்களை செயல்திறனுக்கு மட்டுமல்ல, உணர்ச்சி பாதுகாப்பிற்கும் பொறுப்பாக்குகிறது. நண்பர் அமைப்புகள், பன்மொழி ஆலோசனைகள், தினசரி மனநிறைவு அமர்வுகள் மற்றும் வளாகம் முழுவதும் நடைபெறும் கலாச்சார கொண்டாட்டங்கள் இப்போது பல்கலைக்கழக வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு சமூக உணர்வை உருவாக்குகின்றன. மாணவர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைந்திருக்கும்போது, அவர்கள் வெறுமனே சமாளிப்பது மட்டுமல்ல. அவர்கள் வளர்கிறார்கள்.


இந்தியாவிற்கான படிப்பினைகள்


இந்தியா இப்போது இதேபோன்ற திருப்புமுனையில் உள்ளது. UGCயின் "நல்வாழ்வு செல்" (well-being cell) வழிகாட்டுதல்கள் மற்றும் வரவிருக்கும் 2026 மதிப்பாய்வின் மூலம், நிறுவனங்களுக்கு ஒரு தேர்வு உள்ளது. பெட்டிகளை சரிபார்க்கும் அமைப்புகளை உருவாக்குதல் அல்லது உண்மையிலேயே அக்கறை கொண்ட சமூகங்களை உருவாக்குதல். உண்மையான நல்வாழ்வு அமைப்புகள் (True well-being systems) கொள்கைகளால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை. ஆனால், மக்களால் கட்டமைக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு பழக்கமான மொழிகள், கலாச்சார தொடர்புகள் மற்றும் அறிவுறுத்தல்களால் மட்டுமல்ல, இரக்கத்துடன் வழிநடத்தும் ஆசிரியர்கள் தேவை. மன ஆரோக்கியம் அவசரகால நெறிமுறையாக இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், பராமரிப்பு கலாச்சாரமாக மாறும்போது, ​​மாணவர்கள் ஒளிந்து கொள்வதை நிறுத்திவிட்டு குணமடையத் தொடங்குகிறார்கள்.


எழுத்தாளர் சிம்பியோசிஸ் துபாயின் நிர்வாக இயக்குனர்.



Original article:

Share:

அமலாக்கமும் குறைபாடுகளும் : பீகார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் ஆலந்த் குறித்து . . .

 இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதன் அமைப்பு ரீதியான தவறுகளை சரிசெய்வதில் முனைப்புடன் இருக்க வேண்டும். 


பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மக்கள்தொகை முறைகள் மற்றும் புள்ளிவிவர எதிர்பார்ப்புகளை மீறி சில பகுதிகளில் நீக்கப்பட்டதால் கவலைகளை எழுப்பியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள செயல்முறைகளில் (rolls) கடுமையான பிரச்சினைகளை எதிர்கட்சிகள் கூறி வந்தாலும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதாயமளிக்கும் வகையில் மோசடி செய்ததற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. இருப்பினும், கர்நாடகாவில் உள்ள ஆலந்த் தொகுதியின் (Aland constituency) நேர்வு கவலை அளிக்கிறது. தவறான நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான படிவம்-7 விண்ணப்பங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை முறையான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இந்த சரியான நேரத்தில் தலையீடுகூட இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) முயற்சியைவிட உள்ளூர் அரசியல் தலைவர்களின் விடாமுயற்சியால் சாத்தியமானது. விண்ணப்பங்கள் மோசடியானவை என்பதை உறுதிப்படுத்திய ஒரு சுதந்திரமான விசாரணை, தொழில்நுட்பப் பதிவுகளுக்கான அணுகலை ECI மறுத்ததால், அது நிலைகுலைந்துள்ளது. ஆயினும்கூட, பீகார் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் ஆலந்த் (Aland) இரண்டு சிக்கல்களால் ஒன்றுபட்டுள்ளன. முதலாவதாக, சரிபார்க்கக்கூடிய விவரங்கள் இல்லாதது. இரண்டாவதாக, ECI முன்கூட்டியே செயல்படுவதற்குப் பதிலாக, சேதத்திற்குப் பிறகு எதிர்வினையாற்றுகிறது. ஆலந்த் (Aland)-ல், விசாரணை இப்போது ECI-யின் விருப்பப்படி சார்ந்துள்ளது. அதன் அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. பீகாரில், உச்சநீதிமன்றம் வெளிப்புற சரிபார்ப்பை அனுமதிக்க கட்டாயப்படுத்திய பின்னரே ECI பெயர்களையும் நீக்கங்களுக்கான காரணங்களையும் பகிர்ந்து கொண்டது. 


இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) அதன் கூற்றுக்களை சுதந்திரமாகச் சோதிப்பதற்கான வழிமுறைகள் இல்லை. இது இல்லாதது அரசியல் கட்சிகளுக்கும் ECI-க்கும் இடையே நம்பிக்கை பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. கட்சிகளைப் பொறுத்தவரை, பட்டியல்களில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் தேர்தல் களத்தையே மாற்றுகிறது. பீகாரில் பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவினாலும், ஆலந்த்-ல் முந்தைய தேர்தலில் 700-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 2023-ல் கிட்டத்தட்ட 6,000 வாக்காளர்களை போலியாக நீக்குவதற்கு அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விளக்கங்கள் முழுமையடையாதபோது அல்லது அழுத்தத்திற்குப் பிறகு மட்டுமே கொடுக்கப்பட்டால், சர்ச்சைகள் அதிகரிக்கும். 


எளிதில் கிடைக்கக்கூடிய தரவுகளுடன் தீர்க்கக்கூடிய சிக்கல்கள் கடினமான போட்டிகளாக மாறும். இந்தப் போட்டிகள் பெரும்பாலும் போட்டியிடும் சார்பு கூற்றுக்களை உள்ளடக்கியவை, அவற்றைச் சரிபார்க்க கடினமாக உள்ளன. நீதித்துறை தலையீடு பீகாரில் முக்கியமானதாகிவிட்டது. நீதிமன்றங்கள் தீர்வு வழங்கியுள்ளன, ஆனால் உத்தரவு வரும்வரை அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. 


வெளிப்படுத்தல்களுக்கான நீதிமன்றங்களைப் பொறுத்து அதிகார சமநிலை மாறுகிறது. இது ECI-ன் செயல்முறைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒவ்வொரு வழக்கையும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது நிர்வாகக் குறைபாடு என்று விளக்கலாம். ஆனால் ஒன்றாக, இந்த வழக்குகள் ஒரு பெரிய சிக்கலைக் காட்டுகின்றன. சரிபார்க்கக்கூடிய சான்றுகள் இல்லாதது செயல்பாட்டுக் கவலைகளை முறையான சந்தேகமாக மாற்றுகிறது. 


இந்தக் கவலைகளைப் போக்குவதற்கான பொறுப்பு ECI-க்கு முழுமையாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக, மற்றொரு நீதித்துறை தலையீட்டிற்காக காத்திருக்காமல், ஆலந்த்-ன் குற்றச்சாட்டுகளை ஆணையமானது தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் மற்றும் விசாரணைக்கு உதவ வேண்டும். படிவம்-7 தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், குறிப்பாக பதிலாள் (proxy) மூலம் வாக்காளர் நீக்கத்தைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Original article:

Share: