சமூகத் துறை, வளர்ச்சிக்கு மிக முக்கியமானது -ஸ்மிதா ராய் திரிவேதி அபிமன் தாஸ்

 சுகாதாரம் மற்றும் கல்வி நிலைகள் மேம்படுத்தப்படாவிட்டால், கட்டுப்பாடுகளை நீக்குவதில் இருந்து எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி சாத்தியமாகாது.


பொருளாதார ஆய்வு 2024-25 பொருளாதாரத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்துவதில் ஒரு நல்ல வேலையைச் செய்கிறது. இது வளர்ச்சிக்கான நான்கு தூண்களில் கவனம் செலுத்துகிறது. அவை கட்டுப்பாடுகளை நீக்குதல், தனியார் பங்கேற்பு, திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஆற்றல் மாற்றம் போன்றவை ஆகும்.


இருப்பினும், இந்த தூண்களை வலுப்படுத்துவது முக்கியம் என்றாலும், தூண்  (Stambh) அடித்தளத்திற்கும் கவனம் தேவை. இந்த அடிப்படை மனித மூலதனத்தில் முதலீட்டைக் குறிக்கிறது. சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லாமல், பொருளாதாரத்திற்குத் தேவையான வளர்ச்சி ஏற்படாது.


முதலாவதாக, பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 90.2 சதவீத பணியாளர்கள் இரண்டாம் நிலை கல்விக்கு சமமான அல்லது அதற்கும் குறைவான கல்வியைக் கொண்டுள்ளனர். இந்தக் கல்வித் திறன் அமைப்பு என்பது பெரும்பாலான பணியாளர்கள் (88.2 சதவீதம்) குறைந்த திறன் கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர், இதில் தொடக்க மற்றும் அரை திறன் கொண்ட தொழில் திறன்கள் உள்ளன (பொருளாதார ஆய்வறிக்கை, 24-25, ப.398). பெரும்பான்மையானவர்களுக்கு அதிக வருமானத்திற்கான மாற்றம் திறன் மேம்பாட்டைச் சார்ந்துள்ளது.


இரண்டாவதாக, ஒட்டு மொத்த வருவாய் போக்கானது (தொழில்கள் மற்றும் துறைகள் முழுவதும்) ஒரு மிதமான அதிகரிப்பைக் காட்டிலும், முறையான பெருநிறுவனத் துறையில் வேலை இழப்பு மற்றும் ஊதிய வீழ்ச்சிக்கான அறிகுறிகள் உள்ளன. பெருநிறுவன இந்தியாவின் லாபம் நிதியாண்டு 2024-ம் ஆண்டில் 22.3 சதவீதம் உயர்ந்தது. ஆனால், வேலைவாய்ப்பு 1.5 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. ஊழியர்களின் செலவுகள் நிதியாண்டு 2023-ம் ஆண்டில் 17 சதவீதத்திலிருந்து நிதியாண்டு 2024-ம் ஆண்டில் 13 சதவீதமாகக் குறைந்தது. இது "பணியாளர் விரிவாக்கத்தை விட செலவுக் குறைப்பு" என்பதைக் குறிக்கிறது (பொருளாதார ஆய்வு 2024-25, ப.381).


தொழிலாளர்களுக்கு குறைந்த உற்பத்தித்திறன் இருப்பதை குறிப்பிடுகிறது. மேலும், இது சிறந்த திறன்களின் அவசியத்தைக் காட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அரசாங்கம் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை தொழில் மற்றும் தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன. (பொருளாதார ஆய்வு 2024-25, ப.374-75, 401-407) 


உலக வங்கியின் கூற்றுப்படி, கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்வதில் இந்தியா பிரிக்ஸ் நாடுகளைவிட பின்தங்கியுள்ளது. வெவ்வேறு தேவைகளைக் கொண்ட நாடுகளை ஒப்பிடுவது ஒரு அடிப்படை கருவியாகும். இருப்பினும், இந்தத் துறைகளுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. பெரும்பாலான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைவிட இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சிறிய பங்கை கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடுகிறது என்பதை ஒப்பீடு மூலம் தெளிவுபடுத்துகிறது.


சமீபத்தில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. FY25-ல், கல்விக்கான அரசின் செலவு ₹9.2 லட்சம் கோடி, மற்றும் சுகாதாரத்திற்கான செலவு ₹3.2 லட்சம் கோடி ஆகும். இந்தத் தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.98% மற்றும் 3.33% ஆகும். இருப்பினும், 144 கோடி மக்கள்தொகை கொண்ட, தனிநபர் செலவு மிகக் குறைவு மற்றும் போதுமானதாக இல்லை.


ஒரு கட்டமைப்பு பிரச்சனை


இந்தியா எப்போதும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு குறைவான அளவாகவே செலவிடப்பட்டுள்ளது. மேலும், கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக அது ஒரு சுழற்சியில் சிக்கியுள்ளது. அரசாங்கத்தின் வருவாயில் சுமார் 35-40% கடன்கள், மானியங்கள் மற்றும் பாதுகாப்புக்கான வட்டி செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 2025-26 பட்ஜெட்டின் படி, 20% வட்டி செலுத்துவதற்கும், 6% மானியத்திற்கும், 8% பாதுகாப்புக்கும் செல்கிறது (2025-2026 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், பக்.12).


அதிக நிதிப் பற்றாக்குறை, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழி, வரி வருவாயை அதிகரிப்பதாகும். இருப்பினும், ₹12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கும் 2025-26 பட்ஜெட் அறிவிப்பு, மனித மூலதன மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தும் குறிக்கோளுடன் ஒத்துப்போகவில்லை.


சுகாதாரம் மற்றும் கல்வியில் நமக்கு ஏன் அதிக முதலீடு தேவை? முதலாவதாக, திறன் மேம்பாடு 18 ஆண்டுகளில் தொடங்குவதில்லை. இந்தியாவின் பள்ளிக் கல்விக்கு முழுமையான மறுசீரமைப்பு தேவை. திறன் உருவாக்கத்தை செயல்படுத்த இந்த மறுசீரமைப்பு அவசியம். அரசுப் பள்ளிகள் 12 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேவை செய்கின்றன மற்றும் சுமார் 50 லட்சம் ஆசிரியர்களைப் பணியமர்த்துகின்றன (பொருளாதார ஆய்வு 2024-25, பக்.308). இருப்பினும், உள்கட்டமைப்பு மற்றும் தரத்தில் அவை தனியார் பள்ளி அமைப்பை விட பின்தங்கியுள்ளன என்பது தெளிவாகிறது. ஏனெனில், 'தனியார் பள்ளியில்' (private school) கல்வி கற்பது, அதை பெற பெற்றோருக்கு ஒரு விருப்பமாகவே உள்ளது என்பதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது.


பொதுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை இன்னும் பலவீனமாக உள்ளது. இதற்கான சரியான காரணங்கள் உள்ளன. கோவிட் காலத்தில், கிராமப்புற இந்தியாவில் பல மாணவர்கள் மொபைல் தொழில்நுட்பத்தை அணுக முடியாததால் கல்வியைத் தொடர முடியவில்லை. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உறுதியற்ற நடவடிக்கை, கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது.


அடுத்த 10 ஆண்டுகளில், AI-சார்ந்த வேலைகளுக்கு பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்குத் தயாராக, அரசாங்கம் உடனடியாக மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப (IT) உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சியில் முதலீடு செய்ய வேண்டும். கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் அரசுப் பள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, திறமையான பணியாளர்களை உருவாக்க அவர்களின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம்.


இரண்டாவதாக, 4.33 கோடி மாணவர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், தொழில்துறையின் மாறிவரும் திறன் தேவையை அதிகரிக்க ஆராய்ச்சியில் பெரிய அளவிலான முதலீடும் தேவைப்படுகிறது. உயர்தர மற்றும் இரண்டாம் நிலை உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தரத்தில் உள்ள வேறுபாடு அப்பட்டமாக உள்ளது, இது கல்வி அடைவின் தரத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.


சுகாதார முதலீடு முக்கியமானது


மூன்றாவதாக, பொது சுகாதார அமைப்புக்கு அதிக முதலீடு தேவை. மேலும், அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதாரத் திட்டங்களைப் பராமரிக்க இது அவசியம். மாறிவரும் சுகாதார அவசரநிலைகளால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் இது அவசியம். சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை மருத்துவமனைகள் சுகாதார அவசரநிலைகளுக்குத் (health emergencies) தயாராக இருக்க வேண்டும். இது ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும். மேலும், இதற்கான முதலீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தேவைப்படும்.


கூடுதலாக, இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவை. தற்போது, ​​இந்த ஒருங்கிணைப்பு பல சந்தர்ப்பங்களில் சிறந்ததாக இல்லை.


பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் நுகர்வுச் செலவினங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த நிவாரணங்களிலிருந்து வரும் வருவாய் இழப்பு முக்கியமான துறைகளுக்கான செலவினங்களைப் பாதிக்கக்கூடாது.


மேலும், கல்வி மற்றும் சுகாதாரம் மாநில செலவினங்களைச் சார்ந்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் அதிக செலவு செய்ய மாநிலங்களை ஊக்குவிப்பது முக்கியம். சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தாமல், கட்டுப்பாடுகள் நீக்கம் மற்றும் தனியார் முதலீட்டிலிருந்து எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி ஏற்படாது.


ராய் திரிவேதி தேசிய வங்கி மேலாண்மை நிறுவனத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். தாஸ் ஐஐஎம் அகமதாபாத் ஐஐசிஐ தலைவர் பேராசிரியராக உள்ளார்.



Original article:
Share:

இந்தியாவின் AI திட்டப்பணியை ஊக்குவிக்க ஒன்றியம் இணையதளம் தொடங்குகிறது. -அதிதி அகர்வால்

 மத்திய அரசு AI தரவுத்தொகுப்புகளுக்கான தளமான AIKosha மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான ஒரு கணினி போர்ட்டலையும் அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சிகள் 14,517 GPU-களுடன் இந்தியாவில் AI வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


வியாழக்கிழமை, ஒன்றிய அரசு அதன் IndiaAI திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு புதிய தளங்களை அறிமுகப்படுத்தியது. இந்த தளங்கள் IndiaAI தரவுத்தொகுப்புகள் தளம் (AIKosha என அழைக்கப்படுகிறது) மற்றும் IndiaAI கணினி வலைவாயில் (போர்ட்டல்) (IndiaAI Compute Portal) ஆகும்.


செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளை உருவாக்க AIKosha பல தரவுத்தொகுப்புகள் மற்றும் மாதிரிகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த கணினி போர்டல் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் 10 நிறுவனங்களிலிருந்து 14,000க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (graphics processing units (GPUs)) மூலம் மானிய விலையில் கிடைக்கக்கூடிய சக்திவாய்ந்த கணினி வளங்களை அணுகக் கோர அனுமதிக்கிறது.


AIKosha போர்ட்டலில், தரவுத்தொகுப்புகள் மற்றும் மாதிரிகள் பொது சேவைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் காட்ட 8 பயன்பாட்டு நிகழ்வுகளை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளிலிருந்து குரல் மாதிரிகளைப் பயன்படுத்தி கிராமப்புற குடிமக்களுக்காக AI குரல் உதவியாளர்களை உருவாக்க முடியும். இந்த உதவியாளர்கள் அரசாங்கத் திட்டங்களுக்கு மக்கள் விண்ணப்பிக்க உதவலாம். மானியம் கோருவதில் நகல் விண்ணப்பங்கள் (duplicate applications) மற்றும் மோசடிகளைத் தடுக்க குரல் சரிபார்ப்பையும் அவர்கள் பயன்படுத்தலாம்.


புதன்கிழமை தொடங்கப்பட்ட AI கணினி போர்டல், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு 14,517 வரிசையாக பட்டியலில் சேர்க்கப்பட்ட GPUகளுக்கான அணுகலை வழங்கும். முன்னதாக, மக்கள் கணினி வளங்களுக்கான கோரிக்கைகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeitY) மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியிருந்தது. இப்போது, ​​இந்த கோரிக்கைகள் போர்ட்டல் மூலம் செயல்படுத்தப்படும், இது சில நாட்களில் முழுமையாக செயல்படும்.


IndiaAI திட்டம் மார்ச் 7, 2024 அன்று ₹10,371.92 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. இந்தத் தொகையில், 44% (₹4,563.36 கோடி) 10,000 GPUகள் மூலம் கணினியின் திறனை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. இது, திட்டத்தின் ஏழு தூண்களில் (seven pillars) மிகப்பெரியது.


கணினி திறனுக்காக ஏலம் எடுக்கும் குழுக்கள் ஒவ்வொரு காலாண்டிலும் அதிக GPU களைச் சேர்ப்பதாகக் கூறியுள்ளன என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் கூறினார்.


யோட்டாவின் (Yotta) தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான சுனில் குப்தா, நிறுவனம் 9,216 GPUகளை வழங்குவதாகக் கூறினார். இது முதல் கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து GPUகளில் சுமார் 63% ஆகும். ஏப்ரல் 30-ம் தேதி முடிவடையும் இரண்டாவது ஏலச் சுற்றிலும் யோட்டா (Yotta) விண்ணப்பிக்கும்.


"இந்தியாவின் அடித்தள மாதிரிகளை உருவாக்குவதில் நம்முடைய முன்னேற்றம் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது" என்று வைஷ்ணவ் குறிப்பிட்டார். "நாம் 67 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம்." இவற்றில் 22 பெரிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்கானவை, மீதமுள்ளவை சிறிய மொழி மாதிரிகளுக்கானவை. மேலும் அவர் குறிப்பிட்டதாவது, "கணினி திறனில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி நம் சொந்த அடித்தள மாதிரிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும்." இந்த மாதிரிகள் பல AI பயன்பாடுகளுக்கு சக்தி அளிக்கின்றன.


பெரும்பாலான நாடுகளில், தனியார் நிறுவனங்கள் AI-ல் பெரும்பாலான முதலீடுகளைச் செய்கின்றன என்று தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறினார். ஆனால், இந்தியாவில், அரசாங்கம் முன்னிலை வகித்துள்ளது. 7 பிரத்யேக தூண்கள் மூலம் நாடு முழுவதும் AI ஐ ஏற்றுக்கொள்ள ஒரு கவனம் செலுத்தும் திட்டத்தை அது தொடங்கியுள்ளது. அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் பகிரப்பட்ட கணினித் திறனை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த அமைப்பின் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் குறைவு.


வெவ்வேறு GPU-களுக்கான மிகக் குறைந்த ஏலங்கள் ஏற்கனவே சந்தை விகிதத்தைவிட சராசரியாக 40%-க்கும் குறைவாக இருந்தன. ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் அவற்றை அணுக உதவும் வகையில் அரசாங்கம் 40% வரை கூடுதல் மானியங்களை வழங்கும்.


தரவுத்தளங்களின் களஞ்சியம்


தற்போது, ​​AIKosha 315 தரவுத்தொகுப்புகளையும் 12 நிறுவனங்களிலிருந்து 84 மாதிரிகளையும் வழங்குகிறது. இது பல கருவிகளையும் வழங்குகிறது. இந்தத் தளம் தனிப்பட்ட தரவு அல்லாத தரவை மட்டுமே உள்ளடக்கும் என்று வைஷ்ணவ் குறிப்பிட்டார். ஒரு தரவுத்தொகுப்பு டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவிலிருந்து (Digital India Bhashini division) வருகிறது. இது 12 இந்திய மொழிகளில் 1,684 மணிநேர தொடர்புகொண்ட பேச்சுத் தரவைக் (labeled speech data) கொண்டுள்ளது. இந்தத் தரவு தானியங்கி பேச்சு அங்கீகாரத்திற்கான கருவிகளை உருவாக்க உதவும்.


தெலுங்கானா அரசாங்கத்தின் மற்றொரு தரவுத்தொகுப்பில் மாநிலத்தின் நியாய விலைக் கடைகளிலிருந்து (fair price shops) பரிவர்த்தனைத் தரவு உள்ளது.


IndiaAI-ன் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங், AIKosha ஒரு குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பாக (minimum viable product(MVP)) வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான தரவுத்தொகுப்புகளுடன் தொடங்கப்பட்டது என்றார். மேலும், அவர் கூறியதாவது, "தளம் உள்ளது, ஆனால் அதை வளப்படுத்த வேண்டும்" (The platform exists, but it will need to be enriched) என்று கூறிப்பிட்டிருந்தார்.


இந்தப் பிரிவு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்து சிக்கல் நிறைந்த அறிக்கைகளை சேகரித்து வருகிறது. இவை அடுத்த சுற்றில் ஆராய்ச்சியாளர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு சவால்களாக முன்வைக்கப்படும்.


இதற்கான தளத்தைத் தொடங்க, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் விண்ணப்பங்களில் கோரிய தரவுத்தொகுப்புகளில் கவனம் செலுத்தியது. இந்த விண்ணப்பங்கள் வெவ்வேறு IndiaAI திட்டத் தூண்களின் (IndiaAI Mission pillars) கீழ் செய்யப்பட்டன என்று பெயர் தெரியாத நிலையில் HT உடன் பேசிய ஒரு அதிகாரி தெரிவித்தார்.


அமைச்சகம் தற்போதுள்ள திறந்த அரசாங்கத் தரவு (Open Government Data (OGD)) களஞ்சியத்திலிருந்து அனைத்து தரவுத்தொகுப்புகளையும் மாற்றவில்லை. AIKosha AI-தயாரான தரவுத்தொகுப்புகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். மேலும், அதிகாரி குறிப்பிட்டதாவது, "நாங்கள் பொருத்தமான மற்றும் AI-தயாரான தரவுத்தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கிறோம். இதில் தரவுக்கான தரம், தரப்படுத்தல் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்வதும் அடங்கும்."


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) மற்ற அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. அவர்களின் தரவுத் தொகுப்புகளை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் பொது சேவை பயன்பாடுகளை உருவாக்க அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்பிக்கிறார்கள்.


AIKosha இந்திய மொழிகளில் உரையிலிருந்து பேச்சு மற்றும் மொழிபெயர்ப்பிற்கான பல்வேறு மாதிரிகளை வழங்குகிறது. இந்த மாதிரிகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) பாஷினி பிரிவிலிருந்து (Bhashini Division) வருகின்றன.


Sarvam AI மற்றும் Ola Krutrim போன்ற தனியார் நிறுவனங்களும் AIKosha-ல் தங்கள் மாதிரிகளைச் சேர்த்துள்ளன. Sarvam AI-ன் ஷுகா (Shuka) இந்திய மொழிகளில் ஆடியோ அடிப்படையிலான கேள்வி-பதில் கருவிகளை உருவாக்க உதவுகிறது. க்ருத்ரிமின் சித்ரார்த் (Krutrim’s Chitrarth) ஆங்கிலத்துடன் சேர்த்து 10 இந்திய மொழிகளில் உள்ள உரை விளக்கங்களிலிருந்து படங்களை உருவாக்க முடியும்.


தரவுத் தொகுப்புகளைப் பதிவிறக்க, பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி DigiLocker-ல் பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் ஆதார் பயன்படுத்தி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) நிறுவன லாக்கர் மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்முறை தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் தரவுத்தொகுப்புகள் பொருத்தமானவை என்பதை உறுதி செய்கிறது. மேலும், இது தொடர்பாக ஒரு அதிகாரி குறிப்பிட்டதாவது, "இது ஒரு அரசாங்க தளம். யாராவது பொருத்தமற்ற படங்களுடன் தரவுத் தொகுப்பைப் பதிவேற்றினால், நாங்கள் பொறுப்பேற்க வேண்டும்." பங்களிப்பாளர்கள் தாங்கள் பதிவேற்றும் தரவுத்தொகுப்புகள் மற்றும் மாதிரிகளுக்கான அணுகல் கட்டுப்பாடுகளை அமைக்க தளம் அனுமதிக்கிறது.


AIKosha இல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 8 பயன்பாட்டு நிகழ்வுகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. தளத்தில் உள்ள வெவ்வேறு மாதிரிகள் மற்றும் தரவுத்தொகுப்புகள் எவ்வாறு பொது சேவைகளை வழங்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒரு உதாரணம் கிராமப்புற மக்கள் பேச்சுவழக்குகளைப் புரிந்துகொள்ள உதவும் குரல் உதவியாளர்கள் போன்று. இதற்கு பாஷினி (Bhashini) மற்றும் ப்ராஜெக்ட் வாணியிலிருந்து (Project Vaani) தரவுத்தொகுப்புகள் தேவை. இவை 54 இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளை உள்ளடக்கியது. இதற்கு பிராந்திய பேச்சு முறைகள் பற்றிய தகவல்களுடன் E-Shram மற்றும் MNREGA போன்ற அரசாங்கத் திட்டங்களிலிருந்து தரவுகளும் தேவை.


IndiaAI பயன்பாட்டு மேம்பாட்டு முயற்சியின் கீழ் 30 அணிகளுக்கு விருது வழங்கப்பட்டது. விவசாயம், காலநிலை மாற்றம், சுகாதாரப் பாதுகாப்பு, கற்றல் குறைபாடுகள் மற்றும் நிர்வாகம் ஆகிய ஐந்து முக்கிய பகுதிகளுக்கு அவர்கள் AI அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கினர். கருத்தியல் நிலையில் யோசனைகளைக் கொண்ட அணிகளுக்கு ₹5 லட்சம் வழங்கப்பட்டது. தயாராக முன்மாதிரிகளைக் கொண்ட அணிகளுக்கு ₹25 லட்சம் வழங்கப்பட்டது.


திறனை வளர்ப்பதற்கான முயற்சிகள்


பொதுத்துறை அதிகாரிகளுக்கான AI திறன் கட்டமைப்பை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இது அரசு ஊழியர்களிடையே திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது AI மேம்பாடு மற்றும் செயல்படுத்தலின் வாழ்க்கைச் சுழற்சியில் கவனம் செலுத்துகிறது.


அமைச்சகம் அரசாங்கத்தின் இணையவழி பாடத் தளமான iGOT கர்மயோகியில் (iGOT Karmayogi) AI கூறுகளையும் சேர்த்தது. இந்தத் தளம் அரசு ஊழியர்களுக்கு 1,900-க்கும் மேற்பட்ட இணையவழி படிப்புகளை வழங்குகிறது. புதிய iGOT AI, உள்ளூரில் உருவாக்கப்பட்ட AI மாதிரிகளைப் பயன்படுத்தும். இந்த மாதிரிகள், அரசு ஊழியரின் அமைச்சகம், பங்கு மற்றும் தலைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பாடநெறி பரிந்துரைகளைத் தனிப்பயனாக்கும்.


iGOT-ஐப் பயன்படுத்துவதை எளிதாக்குவதே இதன் குறிக்கோள் என்று அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அடில் ஜைனுல்பாய் கூறினார். அதிகாரிகள் கேள்விகளை உள்ளிட முடியும். மேலும், இந்தத் தளம் மிகவும் பொருத்தமான படிப்புகளை பரிந்துரைக்கும்.


1.3 மில்லியன் அரசு ஊழியர்கள் AI பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 9,40,000 பேர் இந்தப் பாடத்திட்டத்தை முடித்துள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் குறைந்தது ஒரு AI பாடத்திட்டத்தையாவது எடுக்க வேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் குறிக்கோள் என்று ஜைனுல்பாய் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து அரசு ஊழியர்களையும் "அதில் உரையாடுபவர்களாக" மாற்றுவதே அவர்களின் முக்கிய நோக்கமாகும்.


IndiaAI புத்தொழில் குளோபல் ஆக்சலரேஷன் திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பையும் வைஷ்ணவ் அறிவித்தார். பிரான்சின் ஸ்டேஷன் F மற்றும் HEC பாரிஸுடன் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள் ஸ்டேஷன் F-ன் முடுக்கி திட்டத்தில் நான்கு மாதங்கள் செலவிடுவார்கள். இந்த நேரத்தில், அவர்கள் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைகளை அணுகுவார்கள்.


AI மூன்று முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் சூட் கூறினார். இவை திறன் மேம்பாடு, கணினி திறன் மற்றும் தர தரவுத்தொகுப்புகள் ஆகும். வியாழக்கிழமை அறிவிப்புகள் மூலம் இந்த சவால்கள் தீர்க்கப்பட்டன.


“AI மற்றும் தரவுகளுடன் இந்தியா சரியான பாதையில் உள்ளது” என்று அவர் கூறினார். AI தொடர்பான தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் நெறிமுறை கவலைகளையும் அஜய் சூட் ஒப்புக்கொண்டார். AI நிர்வாகம் குறித்த இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆலோசனைக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் மதிப்பாய்வு செய்த பிறகு இது நடக்கும்.


AI ஐ ஒழுங்குபடுத்துவதற்கான "தொழில்நுட்ப-சட்டக் கட்டமைப்பை" (techno-legal framework) இந்தியா பங்களிக்கும் என்று அஜய் சூட் மேலும் கூறினார். இது ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உலகளாவிய தரவுக் கட்டமைப்பின் கீழ் இருக்கும். இது இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் (Digital Personal Data Protection Act) உள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்ததாக இருக்கும்.


Original article:
Share:

பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, பாலினத்தை உள்ளடக்கிய கழிப்பறை வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் நமக்குத் தேவை. -டோலன் கங்குலி

 பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்வது, பொது இடங்களில் பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு அடிப்படைத் தேவை என்பதை முடிவெடுப்பவர்கள் (Decision-makers) அங்கீகரிக்க வேண்டும்.


குழந்தை பருவத்திலிருந்தே, பல பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு கழிப்பறையைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். இது பள்ளி, ஷாப்பிங், வேலை அல்லது ஒரு குறுகிய நடைப்பயணத்திற்குச் செல்லும்போது கூட இது பொருந்தும். இந்தப் பழக்கமானது, பெண்களுக்கு சுத்தமான மற்றும் அணுகக்கூடிய பொது கழிப்பறைகள் இல்லாதது போன்ற கடுமையான யதார்த்தத்திலிருந்து (harsh reality) உருவாகிறது. ஆண்கள் பெரும்பாலும் திறந்தவெளிகளைப் பயன்படுத்தும் எதார்த்தத்தைக் காணலாம். ஆனால், பெண்களுக்கு அந்த தேர்வு இல்லை. இதனால், பாலினத்தை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு இல்லாதது பெண்களின் அன்றாட இயக்கத்தை பாதிக்கிறது. இது மட்டுமல்லாமல், பணியிடத்தில் பெண்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது பெரியளவிலான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.


இந்தியாவில் பொதுக் கழிப்பறைகளின் யதார்த்தம்


இந்தியாவில் பல பெண்கள் பாதுகாப்பான, சுகாதாரமான பொதுக் கழிப்பறைகள் இல்லாததால் தங்கள் வீடுகளுக்கு வெளியே நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். ஆராய்ச்சி இந்த கூற்றை ஆதரிக்கிறது. பெண்களின் பணியாளர் பங்கேற்புக்கு (women’s workforce participation) ஒரு முக்கியத் தடையாக, போதுமான அளவில் சுகாதார வசதிகள் இல்லாததை இது அடையாளம் காட்டுகிறது. 2018-ம் ஆண்டு ஆக்‌ஷன் எய்ட் இந்தியா (ActionAid India) நடத்திய ஆய்வில், டெல்லியில் உள்ள 35 சதவீத பொது கழிப்பறைகளில் பெண்களுக்கென தனிப் பிரிவு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 45 சதவீத கழிப்பறைகளை உள்ளே இருந்து பூட்ட முடியாது என்பது கவலையளிக்கிறது. கூடுதலாக, 53 சதவீத கழிப்பறைகளில் குழாய் நீர் வசதி இல்லை. இந்த நிலைமைகள் சுகாதாரத்தை மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தையும் முற்றிலும் பாதிக்கிறது.


உத்தரப்பிரதேசத்தில், கோயில்கள் மற்றும் கும்பமேளாவிற்கு நிதி தாராளமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், விதி சட்டக் கொள்கைக்கான ஒன்றியத்தின் (Vidhi Centre for Legal Policy) 2019 அறிக்கை, 74 மாவட்ட நீதிமன்றங்களில், நான்கில் கழிப்பறைகளே இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. ஏழு நீதிமன்றங்களில் பெண்களுக்கு எந்த வசதியும் இல்லை. 2021-ம் ஆண்டில், உத்தரப் பிரதேச காவல் நிலையங்களில் பெண் காவலர்களுக்கு சரியான சுகாதார வசதிகள் இல்லாததையும் அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளனர்.


கொல்கத்தாவில் ஒரு ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான சமீபத்திய விசாரணை ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக்காட்டுகிறது. மருத்துவமனை வளாகத்திற்குள்கூட பெண் ஊழியர்களுக்கு சுத்தமான, நல்ல வெளிச்சம் கொண்ட கழிப்பறைகள் இல்லை. இது ஒரு முறை மட்டுமே ஏற்படும் பிரச்சினை அல்ல. ஆனால், இந்தியா முழுவதும் பொது மற்றும் தொழில்முறை இடங்களில் பெண்களை பாதிக்கப்படக்கூடிய ஒரு பெரிய அமைப்பு ரீதியான தோல்வியின் அறிகுறியாகும்.


திருநங்கைகள் (trans) மற்றும் பால்புதுமையினர்களுக்கு (queer individuals) நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. நன்னீர் நடவடிக்கை வலையமைப்பு தெற்காசியா (Freshwater Action Network South Asia) மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார கூட்டு கவுன்சில் (Water Supply and Sanitation Collaborative Council) நடத்திய தேசிய ஆய்வில், திருநங்கைகள் பெரும்பாலும் பொது கழிப்பறைகளை அணுக சிரமப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஆண்களுக்கான வசதிகளைப் பயன்படுத்தினால், அவர்கள் துன்புறுத்தல் மற்றும் வன்முறையை எதிர்கொள்கின்றனர். பெண்களின் கழிப்பறைகள் பெரும்பாலும் வரவேற்கப்படாதவை. திருநங்கைகள் கழிப்பறைகளுக்குச் செல்லும்போது பாலியல் வேலையைத் தேடுவதாக அடிக்கடி தவறாகக் கருதப்படுகிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது. இது அதிக பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, பல திருநங்கைகள் தங்களை விடுவித்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான தருணத்திற்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரங்களையும் ஏற்படுத்துகிறது.


2018-ம் ஆண்டில், வாட்டர்எய்ட் (WaterAid) அமைப்பானது, நன்னீர் நடவடிக்கை வலையமைப்பு தெற்காசியா (Freshwater Action Network South Asia) மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார கூட்டு கவுன்சிலுடன் (Water Supply and Sanitation Collaborative Council) இணைந்து, சென்னையில் உள்ள திருநங்கை சமூகங்களுடன் ஆலோசனைகளை நடத்தியது. இதில், பங்கேற்பாளர்கள் நன்கு வெளிச்சம் மற்றும் சுகாதாரமான கழிப்பறைகளுக்கான அவசரத் தேவையை எடுத்துரைத்தனர். பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் பாலின சார்பற்ற கழிப்பறைகளையும் அவர்கள் கோரினர். கூடுதலாக, குளியல் வசதிகளுடன் கூடிய சமூக கழிப்பறை வளாகங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

WaterAid : வாட்டர்எய்ட் என்பது தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும். இது 1981-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குடிநீர் பத்தாண்டுக்கு (1981–1990) பதிலளிக்கும் விதமாக அமைக்கப்பட்டது.


Freshwater Action Network South Asia (FANSA) : நன்னீர் நடவடிக்கை வலையமைப்பு தெற்காசியா அமைப்பானது சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாததன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்காகவும் செயல்படும் ஒரு அமைப்பு.


Water Supply and Sanitation Collaborative Council : நீர் வழங்கல் மற்றும் சுகாதார கூட்டு கவுன்சில் உலகளவில் சுகாதாரம், சுகாதாரம் மற்றும் நீர் விநியோகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு ஐ.நா.வால் நடத்தப்பட்ட அமைப்பாகும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இது உதவும். இது 1990-ல் நிறுவப்பட்டது மற்றும் 2020ஆம் ஆண்டின் இறுதியில் மூடப்பட்டது.


பாலினத்தை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு இல்லாமை: ஒரு கட்டமைப்புத் தடை


பணியிடத்தில் பெண்கள் குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் பாலினத்தை உள்ளடக்கிய பொது உள்கட்டமைப்பு இல்லாதது ஆகும். இது வீட்டுத் தொழில்களில் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்கு பெண்களை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது அவர்களின் இடம் தொடர்பான சுதந்திரத்தையும் குறைக்கிறது மற்றும் ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளுக்கான அவர்களின் பொறுப்பையும் அதிகரிக்கிறது.


சமீபத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) ஆண்டு அறிக்கை (ஜூலை 2023 - ஜூன் 2024) பெண்களின் தொழிலாளர் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. இது 2017-18-ல் 23.3%-லிருந்து 2023-24-ல் 41.7% ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி கிராமப்புறங்களில் காணப்படுகிறது. கிராமப்புறங்களில், பெண்களின் பங்கேற்பு 24.7%-லிருந்து 48% ஆக உயர்ந்தது. நகர்ப்புறங்களில், இந்த உயர்வு 20.4%-லிருந்து 28% மிதமான உயர்வாக காணப்பட்டது. ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பல கிராமப்புறப் பெண்களின் பங்கேற்பின் பெரும்பகுதி குடும்ப வணிகங்கள் மற்றும் வீடு சார்ந்த வேலைகளில் பணிபுரியும் பெண்களை உள்ளடக்கியது. இந்த வேலைகள் பெரும்பாலும் நிதி சுதந்திரத்தையோ அல்லது நியாயமான ஊதியத்தையோ உறுதி செய்வதில்லை. இந்த வேலைகளில் பலவற்றிற்கு பெண்கள் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை அல்லது சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறைகள் போன்ற பணியிட வசதிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.


பாலினத்தை உள்ளடக்கிய பொது இடங்களில் சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் இருக்க வேண்டும். இந்த கழிப்பறைகள் போதுமான தனியுரிமை (privacy) மற்றும் சரியான வெளிச்சத்தை (proper lighting) வழங்க வேண்டும். அவற்றில், சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் (sanitary napkin vending machines) மற்றும் பாதுகாப்பான பூட்டுதல் அமைப்புகள் (secure locking systems) இருக்க வேண்டும். இந்த வசதிகள் திருநங்கைகள் மற்றும் பால்புதுமையினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் அடிப்படை சுகாதாரத்தை கண்ணியத்துடன் அணுக முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.


குறிப்பாக, சுகாதார வசதி என்பது ஒரு சலுகை அல்ல. இது ஒரு அடிப்படை உரிமையாகும். நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal (SDG)) 6-ன் கீழ், மாநிலங்கள் அனைவருக்கும் போதுமான மற்றும் நியாயமான சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும். பெண்கள், சிறுமிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், பொதுக் கழிப்பறைகள் கிடைக்க வேண்டும். அவற்றில் ஓடும் நீர் (running water), சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் (sanitary napkin dispensers) மற்றும் அப்புறப்படுத்தும் அமைப்புகள் (disposal systems) போன்ற அத்தியாவசிய வசதிகளும் இருக்க வேண்டும்.


அரசாங்கங்கள், நகர்ப்புற திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பொதுத் திட்டமிடலில் பாலினத்தை உள்ளடக்கிய கழிப்பறை உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது வளர்ச்சித் திட்டங்களின் முக்கிய பகுதியாக இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுக் கழிப்பறைகள் கட்டப்படுவது மட்டுமல்லாமல், அனைத்து தனிநபர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு போதுமான நிதி, கடுமையான கண்காணிப்பு மற்றும் சமூக பங்கேற்பு மிக முக்கியமானவையாக இருக்க வேண்டும். கூடுதலாக, பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதார வசதிகள் தங்கள் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறைகளை வழங்க கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.


பொது இடங்களில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் கிடைப்பதை உறுதி செய்வது பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு அடிப்படை படியாகும் என்பதை முடிவெடுப்பவர்கள் (Decision-makers) அங்கீகரிக்க வேண்டும். சுகாதாரம் என்பது வசதியைப் பற்றியது மட்டுமல்ல. இது பெண்களின் இயக்கம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாலினத்தை உள்ளடக்கிய கழிப்பறைகளைக் கேட்பது என்பது சிறப்பு கவனிப்பை கேட்பது அல்ல. இது அடிப்படை மனித கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கான கோரிக்கையாக உள்ளது.


எழுத்தாளர் ஒரு சமூக ஆர்வலர் ஆவர்.


Original article:

Share:

‘பஞ்சாயத்’ வலைத் தொடரில் மஞ்சு தேவி பாத்திரம் இந்தியாவின் பரவலான யதார்த்தத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது? -ரித்விகா பட்கிரி

 சமீபத்தில் ஒரு அரசு குழு, தங்கள் மனைவிகளின் சார்பாக பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்தும் கணவர்களுக்கு முன்மாதிரியான தண்டனைகள் (exemplary penalties) வழங்க பரிந்துரைத்தது. ஆனால், இது உள்ளூர் நிர்வாகத்தில் பெண்களின் பங்கை வலுப்படுத்துமா?


பிரபலமான வலைத் தொடரான ‘​​பஞ்சாயத்’தில் புலேரா என்ற கற்பனை கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மஞ்சு தேவியையும் அவரது கணவர் பிரிஜ் பூஷன் துபேயையும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்தத் தொடர் “பிரதான் பதி”, “சர்பஞ்ச் பதி” அல்லது “முக்கிய பதி” கலாச்சாரத்தை நகைச்சுவையாக சித்தரித்தது. இதில், பிரிஜ் பூஷன் உண்மையான தலைவராக செயல்படுகிறார். மஞ்சு தேவி பின்னணியில் இருக்கிறார்.


‘பஞ்சாயத்’-ல் மஞ்சு தேவியின் கதாபாத்திரம் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. பஞ்சாபில் உள்ள மூன்று கிராமங்களில் 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிராம பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் 75% பேர் தங்கள் கணவர்கள் அல்லது பிற பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டது.


2022-ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த அறிக்கைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக கணவர்கள் அல்லது ஆண் குடும்ப உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாகக் காட்டின. கேரளாவில், உள்ளூர் நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 54% பெண்கள் இருந்தபோதிலும், அவர்கள் பெரும்பாலும் முடிவெடுப்பதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். 


அந்த சூழலில், "முன்மாதிரியான தண்டனைகள்" மூலம் மறைமுகத் தலைமையைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சி மிகவும் தேவையான நடவடிக்கையாகும். ஆனால், “பிரதான் பதி”  கலாச்சாரத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் என்ன, மேலும் பெண்களின் குறியீட்டு பிரதிநிதித்துவம் பெரும்பாலும் உள்ளூர் நிர்வாகத்தில் அவர்களின் கணிசமான பங்களிப்பை மறைப்பது ஏன்? உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைத் தடுக்கும் ஆழமாக வேரூன்றிய சமூக மற்றும் அமைப்பு சார்ந்த தடைகளை அரசாங்கத்தின் முயற்சி நிவர்த்தி செய்கிறதா?


உள்ளடக்கிய நிர்வாகத்தை நோக்கி


பெண்கள் அரசியலில் பங்கேற்கும்போது, ​​ சிறந்த கொள்கைகள், குறைவான ஊழல், குறைவான மோதல்கள் மற்றும் அதிகமான பெண்கள் பணியிடத்தில் சேர வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானவை.


இந்த திருத்தங்கள் 1993-ல் நடைமுறைக்கு வந்தன. அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய இவை கட்டாயப்படுத்துகின்றன. இந்த ஒதுக்கீடு கிராமப்புற பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பொருந்தும். இந்த அமைப்புகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள்  (Panchayati Raj Institutions or PRIs) என்றும் அழைக்கப்படுகின்றன.


நாடு முழுவதும் உள்ளூர் நிர்வாகத்தில் 1.45 மில்லியனுக்கும் அதிகமான அல்லது 46% பெண்கள் உள்ளனர். 2023 உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை (Global Gender Gap report), பாலின சமத்துவத்தின் புதிய நடவடிக்கையாக உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் பங்கேற்பை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில், உள்ளூர் நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் பெண்கள் 46.6% உள்ளனர். இது நாட்டை இந்தப் பகுதியில் மிக உயர்ந்த தரவரிசையில் ஒன்றாக ஆக்குகிறது.


இத்தகைய எண்ணிக்கையிலான சாதனைகள் இருந்தபோதிலும், மஞ்சு தேவி போன்ற கதைகள் இன்னும் உள்ளன. இது பெண்கள் தங்கள் அதிகாரத்தை சுயாதீனமாகப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.


எனவே, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவால், “பஞ்சாயத்துகளை நடத்தும் தலைவர்களின் கணவர்களுக்கு ‘முன்மாதிரியான தண்டனைகள்’ பரிந்துரைப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்” என்றும் “பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை  (Transforming Women’s Representation) மாற்றுதல்: கணவர்களின் பங்கேற்புக்கான முயற்சிகளை நீக்குதல்” என்ற தலைப்பில் அறிக்கையும் பரிந்துரைக்கப்பட்டது.


சில பரிந்துரைகள்:


அ) கணவர்களின் பங்கேற்புகளுக்கு எதிராகப் போராடும் தனிநபர்களுக்கான வருடாந்திர விருது ‘பிரதான்பதி’ எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு வழங்கப்படும்.


ஆ) கிராம சபைகளில் பெண் தலைவர்களின் பொது பதவியேற்பு.


இ) பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் கூட்டமைப்புகளை உருவாக்குதல்.


ஈ) தலைமைத்துவப் பயிற்சி மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்க பாலின வள மையங்களை அமைத்தல்.


இ) பெண்கள் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்கும், நிகழ்நேர சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதலை வழங்குவதற்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.


அரசியல் முடிவெடுப்பதில் பெண்களின் முக்கியத்துவத்தை இந்தப் பரிந்துரைகள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், பெண்கள் பெரும்பாலும் ஆட்சியில் இருந்து விலக்கப்படுவதற்கான ஆழமான காரணங்களை அவை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. பாலின விதிமுறைகள், சமூக மற்றும் கலாச்சார கட்டுப்பாடுகளுடன் சேர்ந்து, இந்தியாவில் பெண்களின் இயக்கத்தை கணிசமாக பாதிக்கின்றன.


கூடுதலாக, பெண்களின் வீட்டு வேலைகள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் விகிதாசாரமற்ற சுமை ஆகியவை வீட்டிற்குள் எடுக்கப்படும் முடிவுகளைப் பாதிக்கும் பெண்களின் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்கள் குறித்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பல மாநிலங்களில், பெண் தலைவர்கள் முதன்மையாக வீட்டு வேலைகளில் ஈடுப்பட்டுள்ளதாக கண்டறிந்தது.


எனவே, வீட்டிற்குள் தொடங்கும் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யாமல் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுக்க முடியும் என்று கற்பனை செய்வது தவறானது. ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ போன்ற திட்டங்கள் பாலின விதிமுறைகளை மாற்ற உதவுகின்றன, ஆனால் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்களின் பங்கை அதிகரிக்க இதே போன்ற முயற்சிகள் தேவைப்படுகின்றன.


எல்லாவற்றிற்கும் மேலாக, குறைந்த எழுத்தறிவு, குறைந்த நடமாட்டம் மற்றும் நிர்வாகத்தைப் பற்றிய அறிவு இல்லாமை ஆகியவை பெண்கள் முடிவுகளை எடுப்பதைத் தடுக்கின்றன. இதன் விளைவாக, ஆண் உறவினர்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறார்கள், இது பிரதிநிதித் தலைமைக்கு வழிவகுக்கிறது. இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய, ஆழமாக வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் கொள்கைகள் தேவைப்படுகின்றன.


உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பெண் தலைவர்கள் தினசரி அலுவல் பிரச்சினைகளை தீர்க்க உதவும். இருப்பினும், இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவு சமமற்றது, பாலினம், சாதி மற்றும் வர்க்க அடிப்படையிலான இடைவெளிகள் உள்ளன. ஸ்மார்ட்போன் வைத்திருப்பது எப்போதும் டிஜிட்டல் அதிகாரமளிப்பைக் குறிக்காது. பெண்கள் மொபைல் போன் வைத்திருப்பதற்கான வாய்ப்பு 7% குறைவாகவும், ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு 16% குறைவாகவும் இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. உள்ளூர் நிர்வாகத்தில் பெண்களின் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்ய, இந்த கட்டமைப்பு சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.


அறிக்கையின் பரிந்துரைகள் முக்கியமானவை. ஆனால், அவர்களின் வெற்றி இந்த ஆழமாக வேரூன்றிய பாலின ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதைப் பொறுத்து இருக்கும். கடந்தகால முயற்சிகள் நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த உதவியுள்ளன. உதாரணமாக, கேரளாவின் குடும்பஸ்ரீ சுயஉதவிக்குழுக்கள் பெண்களுக்கு தலைமைத்துவத்தில் பயிற்சி அளித்தன. இது சிறந்த அரசியல் ஈடுபாட்டிற்கு வழிவகுத்தது.


இதேபோல், மகாராஷ்டிராவில் மஞ்சே ராஜ் மற்றும் மேற்கு வங்கத்தில் குல்திக்ரி கிராம பஞ்சாயத்து போன்ற அனைத்து மகளிர் பஞ்சாயத்துகளும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. இந்த பஞ்சாயத்துகள் பெண் கல்வியறிவு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்துள்ளன.


இருப்பினும், ஆழமாக வேரூன்றிய தடைகளை நீக்காமல், பாலின சமத்துவத்திற்கான கொள்கைகள் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வராது. 73-வது திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகும், உள்ளூர் நிர்வாகத்தில் பெண்களின் பங்கு பெரும்பாலும் அடையாளமாகவே உள்ளது. அவர்களின் வரையறுக்கப்பட்ட முடிவெடுக்கும் சக்தி, அதிக வீட்டுப் பணிச்சுமை, கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் மற்றும் சமூக விதிமுறைகள் அவர்களைத் தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றன.


உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் முடிவெடுப்பதை மேம்படுத்த, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் மற்றும் பதிலாள் தலைமையை முடிவுக்குக் கொண்டுவரும் கொள்கைகள் நமக்குத் தேவை.



Original article:
Share:

அரசியலமைப்பின் 14-வது பிரிவு என்ன கூறுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• சர்க்கார் வழக்கை விரைவுபடுத்தி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்த ஒரு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இது அரசியலமைப்பின் 14வது பிரிவின் கீழ் சமத்துவ உரிமையை மீறுவதாக தீர்ப்பளித்தது. முதல் முறையாக, இந்த உரிமையின் தன்மை மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் நீதிமன்றம் விளக்கியது.


• பிப்ரவரி 26, 1949 அன்று, டம் டம்மில் உள்ள ஒரு பொறியியல் நிறுவனமான ஜெசாப் தொழிற்சாலையைத் தாக்கிய 50 இளைஞர்கள் கொண்ட கும்பலில் சர்க்கார் ஒருவராக இருந்தார். அவர்கள் மூன்று ஐரோப்பிய மேற்பார்வை ஊழியர்களைக் கொன்றனர். பாதிக்கப்பட்டவர்கள் "தாக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் சடலங்கள் எரியும் உலைகளில் வீசப்பட்டன" என்று நீதிமன்ற பதிவுகள் கூறுகின்றன.


• சர்வதேச பதட்டங்களைத் தணிக்க, மேற்குவங்க அரசு ஆகஸ்ட் 17, 1949 அன்று சிறப்பு நீதிமன்றங்கள் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் சிறப்பு வழக்குகளுக்கு விரைவான விசாரணைகளை அனுமதித்தது.


• இந்தச் சட்டத்தின் கீழ், சிறப்பு நீதிமன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இல்லாமல் விசாரணைகளை நடத்தலாம் மற்றும் முக்கிய சாட்சிகளை வரவழைக்க மறுக்கலாம். சர்க்கார் அக்டோபர் 11 அன்று கைது செய்யப்பட்டார்.


உங்களுக்குத் தெரியுமா?


•  ஜனவரி 25, 1950 அன்று, இந்தியாவின் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, கிங் VS அன்வர் அலி சர்க்கார் சிறப்பு நீதிமன்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


• நீதிமன்ற பதிவுகளின்படி, சர்க்கார் ஜெசோப் & கோ தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார் என்று அரசு தரப்பு கூறியது. தொழிலாளர் பணிநீக்கங்களுக்கு எதிராக போராட்டங்களை வழிநடத்தியதாகவும், பூஜை சலுகைகள் கோரியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், குற்றம் நடந்த இடத்தில் அவர் இல்லை என்று எதிர் தரப்பு வாதிட்டது.


•  மார்ச் 31, 1950 அன்று, அலிப்பூரைச் சேர்ந்த அமர்வு நீதிபதி எஸ். என். குஹா ராய் சர்க்கார் மற்றும் 49 பேருக்கு "நாடு கடத்தும் ஆயுள் தண்டனை" என்ற தண்டனையை விதித்தார். இந்தத் தண்டனை நாடுகடத்தலை உள்ளடக்கியது. காலனித்துவ சட்டங்களின் கீழ், அரசுக்கு எதிரானவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள “காலா பானிக்கு” அனுப்பப்படுவது போன்ற தண்டனைகள் வழக்கமாக வழங்கப்பட்டன.


•  சட்டத்தின் முன் அனைவரும் சமம் (right to equality before the law) என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 14-வது பிரிவை மேற்கோள் காட்டி, அன்வர் அலி சர்க்கார் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மற்ற குற்றவாளிகளைப் போலவே தன்னையும் ஒரு வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் ஆங்கிலேயர்கள் என்பதால் தான் நியாயமற்ற முறையில் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.


. ஆங்கிலேயரான தலைமை நீதிபதி சர் ஆர்தர் ட்ரெவர் ஹாரிஸ், சர்க்காருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். "குற்றங்களின் வகைகள்" (classes of offences) அல்லது "வழக்குகளின் வகைகள்" (classes of cases) சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படலாம் என்றாலும், குறிப்பிட்ட "வழக்குகளை" தேர்ந்தெடுப்பது பிரிவு 14-ஐ மீறுவதாக உள்ளது என்று உயர் நீதிமன்றம் கூறியது.


- இந்த தீர்ப்பு பிரிவு 14-ன் கீழ் “நியாயமான வகைப்பாடு” (reasonable classification) சோதனைக்கு அடித்தளமாக அமைந்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமைக்கு விதிவிலக்கு அளிக்க முடியுமா, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிற்கு மட்டுமே எப்போது பொருந்தும் என்பதை இந்த சோதனை தீர்மானிக்கிறது. இருப்பினும், இந்த விதிவிலக்கு இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்: புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாடு (intelligible differentia) - இந்த குழுவை வித்தியாசமாக நடத்துவதற்கு தெளிவான காரணங்கள் இருக்க வேண்டும். பகுத்தறிவு உறவு (rational relation) - வகைப்பாடு சட்டத்தின் நோக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.


அரசியலமைப்பின் பிரிவு 14-ன்  முக்கியத்துவம்..


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14, சட்டத்தின் முன் அனைவருக்கும் சமத்துவத்தையும், சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதன் படி, பதவி, செல்வம், மதம், சமூக அங்கீகாரம் அல்லது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் யாரையும் வித்தியாசமாக நடத்த முடியாது என்று தெளிவாக விளக்குகிறது.


Original article:

Share:

குவாண்டம் கம்ப்யூட்டிங் குறித்த நிதி ஆயோக்கின் அறிக்கை. -குஷ்பூ குமாரி

 இந்தியா ஒரு எல்லைப்புற தொழில்நுட்ப நாடாக மாறுவதை விரைவுபடுத்துவதற்காக, நிதி ஆயோக் சமீபத்தில் நிதி எல்லைப்புற தொழில்நுட்ப மையத்தை (NITI-FTH) நிறுவியுள்ளது. இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிலுடன் இணைந்து, NITI-FTH குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் விரைவான பரிணாமம் மற்றும் தேசியப் பாதுகாப்பில் அதன் தாக்கங்கள் குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது மற்றும் இந்தியா ஒரு மாற்றும் சகாப்தத்தில் செல்லவும் வழிநடத்தவும் உதவும் இராஜதந்திர முன்னோக்குகளை வழங்குகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. குவாண்டம் தொழில்நுட்பம் என்பது குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. குவாண்டம் கணினிகள் போன்ற குவாண்டம் கணினி சாதனங்களை உருவாக்க வன்பொருள், மென்பொருள், வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குவது இதில் அடங்கும்.


2. இந்த தொழில்நுட்பம் குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது, இதில் சூப்பர்போசிஷன், குவாண்டம் என்டாங்கிள்மென்ட் மற்றும் பெரிய அளவிலான கணக்கீடுகளில் அதிக செயல்திறனை அடைய குறுக்கீடு ஆகியவை அடங்கும். 


3. சூப்பர்பொசிஷன் (Superposition): குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவிட்களை (குவாண்டம் பிட்கள்) அடிப்படையாகக் கொண்டது, அவை சரியாக வேலை செய்ய நிலையானதாக இருக்க வேண்டும். சூப்பர்பொசிஷன் என்பது இந்த துகள்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் திறனைக் குறிக்கிறது. துகள் கவனிக்கப்படும் வரை மட்டுமே இந்த நிகழ்வு நீடிக்கும். ஒருமுறை கவனித்தால், துகள் ஒரு இடத்தில் தோன்றி மற்றவற்றில் இருப்பதை நிறுத்துகிறது.


4. சிக்கல்: இது ஒரு சிறப்புப் பண்பாகும், இதில் ஒரு காலத்தில் இணைக்கப்பட்ட துகள்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உடனடியாக ஒன்றையொன்று பாதிக்கலாம். ஒரு துகள் அளவிடப்படும்போது, ​​மற்ற துகளின் நிலை உடனடியாக தீர்மானிக்கப்படுகிறது. அனுப்புநரின் மற்றும் பெறுநரின் குவிட்களை இணைப்பதன் மூலம் குவாண்டம் தகவல்தொடர்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்தப் பண்பு உதவும்.


5. குறுக்கீடு: இது சிறிய துகள்களின் வெவ்வேறு நிலைகளின் அலை போன்ற கலவையாகும். இந்த கலவையானது அளவிடப்படும்போது ஒரு துகள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதற்கான வாய்ப்புகளை மாற்றுகிறது.


இரண்டு துகள்களுக்கு இடையில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், குறுக்கீடு என்பது ஒன்றையொன்று சுற்றியுள்ள பல துகள்களை உள்ளடக்கியது.


குறுக்கீடு ஆக்கபூர்வமான (விளைவுகளை வலுப்படுத்துதல்) அல்லது அழிவுகரமானதாக (விளைவுகளை ரத்து செய்தல்) இருக்கலாம். இந்தப் பண்பு குவாண்டம் வழிமுறைகளில் இதைப் பயனுள்ளதாக்குகிறது. இது சாத்தியமற்ற விளைவுகளைக் குறைப்பதன் மூலமும், அதிக சாத்தியமுள்ளவற்றின் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலமும் துல்லியத்தை மேம்படுத்த உதவுகிறது. 




மஜோரானா 1


மைக்ரோசாப்ட்-ன் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பான மஜோரானா 1 பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த சிப்பில் உள்ள குவிட்கள் அதிக நீடித்தவை என்றும் மற்ற தளங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன என்றும் மைக்ரோசாப்ட் கூறுகிறது. இந்த சிப் அளவிடுதலை மேம்படுத்துகிறது. பிழைகளைக் குறைக்கிறது மற்றும் அவற்றை மிகவும் திறம்பட சரிசெய்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த தொழில்நுட்பம் ஒரு சில ஆண்டுகளில் மில்லியன்-குவிட் அமைப்பை உருவாக்க உதவும்.


தேசியப் பாதுகாப்பை மறுவடிவமைப்பதில் குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் பங்கு


NITI Frontier Tech Hub Quarterly Insigh, Future Front, குவாண்டம் தொழில்நுட்பங்கள் பல களங்களில் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளை மறுவடிவமைக்கும் ஐந்து வழிகளை சுட்டிக்காட்டுகின்றன.


1. கிரிப்டோகிராஃபி மற்றும் சைபர் பாதுகாப்பு: இணைய பாதுகாப்பு மற்றும் இணைய வங்கிச் சேவைக்கு பயன்படுத்தப்படும் பொது விசை குறியாக்கம், சக்திவாய்ந்த குவாண்டம் கணினிகளால் (CRQC) அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க, குவாண்டம் கணினி தாக்குதல்களை எதிர்க்கக்கூடிய சிறப்பு வழிமுறைகளை உள்ளடக்கிய Post-Quantum Cryptography (PQC)-ஐ நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.


2. புலனாய்வு சேகரிப்பு: குவாண்டம் கம்ப்யூட்டிங் சிக்னல் நுண்ணறிவை (SIGINT) மேம்படுத்தும். இது நாடுகள் தகவல்தொடர்புகளை விரைவாகவும் பெரிய அளவிலும் இடைமறிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் மாற்றி அமைக்கவும் உதவும். இது அவர்களுக்கு உளவுத்துறையில் ஒரு பெரிய நன்மையை அளிக்கும் மற்றும் உளவுத்துறை மற்றும் எதிர் நுண்ணறிவு செயல்படும் முறையை மாற்றும்.


3. இராணுவப் பயன்பாடுகள்: குவாண்டம் தொழில்நுட்பங்கள் தளவாடங்கள், வள மேலாண்மை மற்றும் போர்க்களத் திட்டமிடலை மேம்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் திறமையானதாக மாற்றும். குவாண்டம் AI உடன் இராணுவ ட்ரோன்கள் மற்றும் ரோபோக்கள் புத்திசாலித்தனமாக மாறும். டோபாலஜி குவிட் எனப்படும் ஒரு சிறப்பு வகை குவிட், குவாண்டம் அமைப்புகளை ஒரு மில்லியன் குவிட்களாக அளவிட உதவும். இது ஆயுத அமைப்புகளை மேம்படுத்தும், மேம்பட்ட ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறியவும், தன்னாட்சி ஆயுதங்களுக்கான வலுவான, நம்பகமான கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்கவும் அனுமதிக்கும்.


4. பொருளாதாரப் போர்: இன்றைய குறியாக்கத்தை யாராவது உடைக்க முடிந்தால், அது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். நிதிச் சந்தைகள் நிலையற்றதாக மாறக்கூடும். வங்கி அமைப்புகள் ஆபத்தில் இருக்கக்கூடும், டிஜிட்டல் கொடுப்பனவுகள் பாதுகாப்பாக இருக்காது. குவாண்டம் கணினிகள் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களிடமிருந்து முக்கியமான ரகசியங்களைத் திருடவும் உதவக்கூடும்.  இது பொருளாதார உளவுத்துறை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்று வெளியீடு தெரிவித்துள்ளது.


5. புவிசார் அரசியல் சக்தி: குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஒரு நாட்டின் ஆதிக்கம் உலகளாவிய தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை வடிவமைக்க ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும், இதனால் சர்வதேச விதிமுறைகளை வடிவமைக்கும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. டோபாலஜி குவிட் (topology qubit) நிலைத்தன்மை மற்றும் அளவிடுதல் திறனை மேம்படுத்துவதாக உறுதியளிப்பதால், அது முன்னணி குவாண்டம் நாடுகளின் ஆதிக்கத்தையும் உறுதிப்படுத்தும்.


தேசிய குவாண்டம் திட்டம்


1. குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக 2023ஆம் ஆண்டில் அரசாங்கம் தேசிய குவாண்டம் மிஷனைத் தொடங்கியது. இது நான்கு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது:


1. குவாண்டம் கம்ப்யூட்டிங் - குவாண்டம் கொள்கைகளைப் பயன்படுத்தும் மேம்பட்ட கணினிகளை உருவாக்குதல்.


2. குவாண்டம் தொடர்பு - குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகளை உருவாக்குதல்.


3. குவாண்டம் உணர்திறன் & அளவியல் - குவாண்டம் நுட்பங்களுடன் அளவீடு மற்றும் உணர்திறன் கருவிகளை மேம்படுத்துதல்.


4. குவாண்டம் பொருட்கள் & சாதனங்கள் - குவாண்டம் அறிவியலின் அடிப்படையில் புதிய பொருட்கள் மற்றும் சாதனங்களை வடிவமைத்தல்.


2. எட்டு ஆண்டுகளுக்கு (2023-2031) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியை ஆதரிப்பதற்காக இந்த திட்டம் ரூ.6,003.65 கோடி பட்ஜெட்டைக் கொண்டுள்ளது. இதில் வெவ்வேறு பகுதிகளை மையமாகக் கொண்ட நான்கு கருப்பொருள் மையங்களை (டி-ஹப்கள்) அமைப்பதும் அடங்கும்.


சமீபத்திய மத்திய பட்ஜெட் இந்த ஆண்டு நிதியை ரூ.427 கோடியிலிருந்து ரூ.86 கோடியாகக் குறைத்துள்ளது. இருப்பினும், 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ரூ.600 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Original article:

Share: