கிரீன்வாஷிங் (Greenwashing) பற்றிய உண்மைகள்

 கிரீன்வாஷிங் (Greenwashing) வழிகாட்டுதல்கள் நல்லது. ஆனால், அவை  மோசடி செயல்முறையாக (sharper) இருக்கலாம். 


இந்திய நுகர்வோர்கள், மற்ற நாடுகளைப் போலவே, சுற்றுச்சூழலுக்கு குறைவான தீங்கு விளைவிக்கும் தயாரிப்புகளையும் சேவைகளையும் இப்போது விரும்புகிறார்கள். இந்த விருப்பங்களுக்கு பலர் அதிக பணம் செலுத்த தயாராக உள்ளனர். வணிக நிறுவனங்கள் சாதாரண தயாரிப்புகளுக்கு அதிக விலை வசூலிக்க 'கரிம' (‘organic), 'இயற்கை' (‘natural’), 'சுற்றுச்சூழல் மாசுபடுத்தாதவை (‘eco-friendly) அல்லது 'நிலையானவை' (‘sustainable’) என்று முத்திரையிடுகின்றன. 


பிப்ரவரி 2024 இல், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (Advertising Standards Council of India (ASC)) பசுமை உரிமைகோரல்களைக் கொண்ட பெரும்பாலான விளம்பரங்கள் தெளிவற்றவை அல்லது தவறாக வழிநடத்துகின்றன என்பதைக் கவனித்தது. இதை நிவர்த்தி செய்ய, பசுமை உரிமைகோரல்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டனர். இப்போது, நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)), அவர்களுக்கு சட்ட அதிகாரத்தை வழங்கி இந்த வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளது. 


மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்கள் குறிப்பாக கிரீன்வாஷிங் (Greenwashing)  நடைமுறையை தடை செய்கின்றன. கிரீன்வாஷிங் (Greenwashing)  என்பது சுற்றுச்சூழல் நன்மைகளை மிகைப்படுத்தும் அல்லது தவறாகக் வழிநடத்தும ஏமாற்றும் நடைமுறை என பரவலாக வரையறுக்கப்படுகிறது. ஒரு தயாரிப்பின் முக்கியமான தகவல்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் அம்சங்களை மறைப்பது அல்லது தவிர்ப்பதும் இதில் அடங்கும். தவறான படங்களைப் பயன்படுத்துவதும் கிரீன்வாஷிங் (Greenwashing) ஆகும். 


மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்கள் பசுமை உரிமைகோரல்களைச் செய்யும் வணிகங்களுக்கு பல விதிகளை அமைக்கின்றன. முதலாவதாக, பசுமை, சுற்றுச்சூழல் நட்பு, கரிம, இயற்கை, நிலையான அல்லது கார்பன்-நடுநிலை (carbon-neutral) போன்ற சொற்களை ஆதாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. இந்த உரிமைகோரல்கள் சுயாதீன ஆய்வுகள் அல்லது மூன்றாம் தரப்பு சான்றிதழ்களால் ஆதரிக்கப்பட வேண்டும்.  அவை QR குறியீடு அல்லது URL மூலம் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும். 


இந்த விதி தவறான அல்லது தெளிவற்ற உரிமைகோரல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும்,  இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. இந்த பசுமை உரிமைகோரல்கள் அனைத்தையும் சான்றளிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ அமைப்புகள் இந்தியாவில் உள்ளனவா? நுகர்வோருக்கு அவர்களைப் பற்றி தெரியுமா? 


இரண்டாவதாக, ஒரு தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது அல்லது நச்சுத்தன்மையற்றது என்று ஒரு நிறுவனம் கூறினால்,  இதன் முழு தயாரிப்பு, உற்பத்தி செயல்முறை, பேக்கேஜிங் அல்லது அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் அகற்றப்படுகிறது  என்பதை முழுமையாக விளக்க வேண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் செய்யும் மாற்றங்களையும் மற்றும் ஒரு தயாரிப்பை 'பசுமை' என்று அழைப்பதையும் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு அட்டை பெட்டியில் நெகிழி மூடப்பட்ட தயாரிப்பை மக்கும் என்று பெயரிட முடியாது. 


மூன்றாவதாக, மக்கும் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய போன்ற கூற்றுக்கள் மற்றும் அறிவியல் சான்றுகள் போன்றவை மூன்றாம் தரப்பு சரிபார்ப்பால் ஆதரிக்கப்பட வேண்டும். விற்பனையாளர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதரவான ஆராய்ச்சி ஆய்வுகளின் பகுதிகளை எடுக்க முடியாது. அவர்கள் முழு ஆய்வையும் வெளிப்படுத்த வேண்டும். 


இந்த வழிகாட்டுதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீன்வாஷிங் (Greenwashing) எதிர்ப்பு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், அவை குறைவான பாதிக்கப்பட கூடிவை. ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு ஒரு தயாரிப்பின் வாழ்க்கைச் சுழற்சியை வெளிப்படுத்த வேண்டும்.  இதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) முறையான வழிகாட்டுதல்கள் இல்லை. 


இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA)  வழிகாட்டுதல்கள் இன்னும் பரந்தவை மற்றும் அவை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த கவலைகளை எழுப்புகின்றன. அவை நுகர்வோருக்கு புகார்களை பதிவு செய்வதற்கான வழியை வழங்கவில்லை. விதி மீறல்களுக்கு அபராதமும் இல்லை. கூடுதலாக, இந்தியா இன்னும் முக்கிய நகரங்களில் சரியான கழிவுப் பிரிப்பை (waste segregation) செயல்படுத்தவில்லை. ஏனெனில் அவற்றிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி இல்லை.


Original article:

Share:

வலுவான நிறுவனமா, வலிமையான தலைமையா? சேஷன் வழக்கின் படிப்பினைகள் -இன்சியா வாகனவதி

 வலுவான தலைமைக்கும் நிறுவன பொறுப்புணர்வுக்கும் இடையே எவ்வாறு சமநிலையை ஏற்படுத்த முடியும்? 


இந்திய ஜனநாயகத்தில், வலுவான தலைமைக்கும் நிறுவனங்களின் ஒருமைப்பாட்டிற்கும் இடையே அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறது. வலுவான தலைவர்கள் நிறுவனங்களை முன்னோக்கி செயல்படுத்த முடியும்.  ஆனால், இவை பலவீனமான தலைவர்களின் நம்பகத்தன்மையை பாதிக்கலாம். சில நேரங்களில் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) போன்ற நிறுவனங்களுக்கு இந்த பிரச்சினை மிகவும் பொருத்தமானது. 


சமீபத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக அரசியல் கட்சிகள் மீது, குறிப்பாக பாரதிய ஜனதா (பாஜக) மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. இது அரசியல் சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் தேர்தல் ஆணையத்தின் திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. வலுவான தலைமை முக்கியமானது என்றாலும், ஒரு நபரின் கைகளில் அதிக அதிகாரம் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். இது தேர்தல் ஆணையம் பராமரிக்க வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை பலவீனப்படுத்தும். எனவே, வலுவான தலைமைத்துவத்திற்கும் பொறுப்புக்கூறலுக்கும் இடையில் சமநிலையை எவ்வாறு காணலாம்? 


தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில், 1995-ஆம் ஆண்டில் டி.என்.சேஷன் Vs இந்திய ஒன்றியம் (TN Seshan Vs. Union of India) வழக்கின் போது இந்த பிரச்சினைகள் ஒரு முக்கிய தலைப்பாக மாறியது. இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையர் (chief election commissioner (CEC)) டி.என்.சேஷன் மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டது.  இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. 


சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக ஆனதும், செயல்படாத ஒரு நிறுவனத்தை செயல்படுத்தும் நோக்கில் பொறுப்பேற்றார். அவர் உறுதியாகவும் ஊழலற்றவராகவும் இருந்தார் மற்றும் பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். தேர்தல் ஆணையத்தின் குறைந்தபட்ச மேற்பார்வைக்குப் பழகிய அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் அவர் கடுமையாக விதிகளை அமல்படுத்தினார்.  ஆனால், சேஷனுக்கு தலைமை தேர்தல் ஆணையர் என்பதைத் தவிர வேறு செல்வாக்கு இல்லை. அவர் பெரும்பாலும் முரட்டுத்தனமானவராகக் காணப்பட்டார் மற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


அரசியல்வாதிகள் அவரை நீக்க விரும்புகிறார்கள் என்று சேஷனுக்குத் தெரியும். ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை.  ஏனென்றால், ஒரு தலைமை தேர்தல் ஆணையரை நீக்குவது ஒரு நீதிபதியை நீக்குவது போல கடினம். அந்த நேரத்தில், தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பாக இருந்தது.  இது சேஷனுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வழங்கியது. 1993-ஆம் ஆண்டில் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு, அவசரச் சட்டம் மூலம் தேர்தல் ஆணையத்தை பல உறுப்பினர் அமைப்பாக மாற்ற முயன்றது. இதனால் ஆத்திரமடைந்த சேஷன் தனது அதிகாரத்தை கட்டுப்படுத்த அரசு விரும்புவதாகக் கூறி இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார்.  


உச்ச நீதிமன்றம் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது: தேர்தல் ஆணையத்தில் கூடுதல் தேர்தல் ஆணையர்களை (election commissioners (ECs)) சேர்ப்பது அரசியலமைப்பு சட்டமா? மேலும், புதிய அவசரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா? என்ற வாதத்தை முன்வைத்தார். எனினும் வழக்கில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை சேஷன் இருந்தது. 


இருப்பினும், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) ஏ.எம்.அகமதி, அதிகாரம் ஒரு தனிநபரிடம் குவிவதை எதிர்ப்பதில் அறியப்பட்டார். நீதிபதிகளை நியமிப்பதில் தலைமை நீதிபதியின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதில் உடன்படாதபோது அகமதி  இந்த கருத்தை இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் முன்பு காட்டியிருந்தார். டி.என்.சேஷன் வழக்கில், நீதிபதிகள் அகமதி, ஜே.எஸ்.வர்மா, என்.பி.சிங், எஸ்.பி.பரூச்சா மற்றும் எம்.கே.முகர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு தனிநபர் மீது அதிக கவனம் செலுத்துவது தவறு என்று தீர்ப்பளித்தது. தேர்தல் ஆணையம் ஒற்றை உறுப்பினர் அமைப்பாக இருந்தாலும், அது சக்தி வாய்ந்தது என்று  கூறினர். 


அகமதி எழுதிய தீர்ப்பில், அரசியலமைப்பின் பிரிவு 324, பிரிவு 2 தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட பிற ஆணையர்களை சேர்க்க அனுமதிக்கிறது என்று விளக்கியது. தலைமை தேர்தல் ஆணையர் தலைவராக செயல்படுவார். ஆனால், தேர்தல் ஆணையம் இன்னும் பல உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற கருத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. கூடுதலாக, தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் பெரும்பான்மை வாக்குகளால் எடுக்கப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையரால் மட்டுமே அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பை நிரந்தரமாக மாற்றியது. ஆனால், இன்று இந்த வழக்கிலிருந்து நாம் என்ன படிப்பினைகளைப் பெறலாம்? ஒரு நபரின் கைகளில்  அதிக அதிகாரம் இருந்தால் அவை தவறான செயலுக்கு வழிவகுக்கும். மறுபுறம், பலவீனமான தலைவர்கள் முக்கியமான நிறுவனங்களை பலவீனப்படுத்தலாம் என்ற  இரண்டு சூழ்நிலைகளுக்கும் தீங்கு விளைவிக்கும். 


இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்றால், தனிநபர்கள் வருகிறார்கள், செல்கிறார்கள். ஆனால், நிறுவனங்கள் நிலையாக நீடிக்கின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களையும், அதிக அரசியல் அழுத்தங்களையும் எதிர்க்கும் அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும்.  இதை உறுதி செய்ய, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி அடங்கிய குழுவால் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டது.  இது அரசாங்கத்தின் எந்தவொரு அமைப்பின்  முக்கிய நியமனங்களைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கிறது. 


ராஜேந்திர பிரசாத், அரசியல் நிர்ணய சபையில், ஒரு அரசியலமைப்பு ஒரு இயந்திரத்தைப் போன்றது, அதை நடத்தும் மக்கள் இல்லாமல் அது உயிரற்றது என்று கூறினார். நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் நேர்மையான நபர்கள் இந்தியாவுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தினார். இந்த யோசனை நமது அரசியலமைப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும். அவை நமது ஜனநாயகத்திற்கு சேவை செய்ய வலுவான மற்றும் நியாயமான தலைவர்கள் தேவை. 


இன்சியா வாகன்வதி, 'தி ஃபியர்லெஸ் ஜட்ஜ்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் ஏ.எம்.அஹ்மதி' (Insiyah Vahanvaty is the author of The Fearless Judge) என்ற புத்தகத்தை எழுதியவர். 




Original article:

Share:

சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC)) தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? 13 ஆண்டுகளாக ஏன் அவை நடத்தப்படவில்லை? - கமல்தீப் சிங் பிரார்

 சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழுவுக்கு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் 2011-ஆம் ஆண்டு முதல் தேர்தல் எதுவும் நடக்கவில்லை ஏன்? 


2011-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 170 சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC)) உறுப்பினர்களில் குறைந்தது 30 பேர் கடந்த 13 ஆண்டுகளில் இறந்துவிட்டனர். இந்தக் குழுவிற்கான தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்றாலும், கடந்த பத்தாண்டுகளாக தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. 


2011-ஆம் ஆண்டில் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC)) தேர்தலில் வெற்றி பெற்ற சிரோமணி அகாலி தளம் (Shiromani Akali Dal (Badal)), அதே காலகட்டத்தில் பஞ்சாபில் நடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. எஸ்.ஜி.பி.சி கட்சி (SGPC) இன்னும் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் புதிய தேர்தல்கள் இல்லாததுதான் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.


முதலில், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) என்றால் என்ன? 


பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகரில் உள்ள அனைத்து சீக்கிய குருத்வாராக்களுக்கும் எஸ்ஜிபிசி (SGPC) முக்கியமான நிர்வாகக் குழுவாகும். இது நவம்பர் 15, 1920-ஆம் ஆண்டில் அமிர்தசரஸில் நிறுவப்பட்டது. முதலில், தர்பார் சாஹிப் குருத்வாரா மற்றும் பிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாராக்களை நிர்வகிப்பதற்காக இந்த குழுவானது நிறுவப்பட்டது. 


19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பஞ்சாப், கிறிஸ்தவ அறக்கட்டளை நடவடிக்கைகளின் எழுச்சி மற்றும் ஆரிய சமாஜம் என்ற இந்து சீர்திருத்த இயக்கத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.  இந்த சூழலில்தான் அன்றாட வாழ்க்கையில் "சீக்கிய சிந்தனை மற்றும் கொள்கைகளை தரங்குறைத்தலை" (degradation of Sikh thought and principles) தடுக்க சிங் சபா இயக்கம் சீக்கியர்களிடையே தொடங்கியது. 


ஆனால், தர்பார் சாஹிப் மற்றும் பிற குருத்வாராக்களின் கட்டுப்பாடு பிரிட்டிஷாரின் மறைமுக ஆதரவைப் பெற்ற சக்திவாய்ந்த மதகுருமார்களின் கைகளில் இருந்தது. இந்த மதகுருமார்கள் குருத்வாராக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தங்களின் தனிப்பட்ட பண்பாகக் கருதினர். உருவ வழிபாடு (idol worship) மற்றும் தலித் சீக்கியர்களுக்கு (Dalit Sikhs) எதிரான பாகுபாடு போன்ற சீக்கிய மதத்தின் கொள்கைகளை மீறும் நடைமுறைகளை அவர்கள் ஊக்குவித்தனர். 


பிரபலமற்ற மதகுருமார்களை மாற்றவும், சீக்கிய மதத்தின் கொள்கைகளின்படி சீக்கிய குருத்வாராக்களை நிர்வகிக்கவும் எஸ்ஜிபிசி (SGPC) உருவாக்கப்பட்டது. இது, உருவாக்கப்பட்ட ஆண்டுகளில், எஸ்ஜிபிசி (SGPC) பல குருத்வாராக்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முடிந்தது.  இருப்பினும்,  இது அடிக்கடி வன்முறைக்கு வழிவகுத்தது. இறுதியில், ஆங்கிலேயர்கள் 1925-ஆம் ஆண்டில் குருத்வாராச் சட்டத்தை (Gurdwaras Act) இயற்றினர். இந்தச் சட்டம் எஸ்ஜிபிசி (SGPC) அமைப்பிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து, குருத்வாராக்களை நிர்வகிக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாக நிறுவியது.


சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) தேர்தல் எவ்வாறு நடைபெறுகின்றன? 


எஸ்ஜிபிசி (SGPC)  மொத்தம் 170 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, 15 நியமன உறுப்பினர்கள் உள்ளனர்.  எஸ்ஜிபிசி (SGPC), சீக்கிய தற்காலிக இடங்களான தக்த்ஸின் 5 தலைவர்களையும் உள்ளடக்கியது. இறுதியாக, பொற்கோயிலின் தலைமை அர்ச்சகராக இருக்கும் தலைமை கிரந்தியும் எஸ்ஜிபிசி (SGPC)  இன் ஒரு பகுதியாக உள்ளார்.


குருத்வாரா தேர்தல் ஆணையம் 1925 சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். எஸ்ஜிபிசி (SGPC) தேர்தலை நடத்துவதற்கு இது பொறுப்பாக அமைகிறது. குருத்வாரா தேர்தல் ஆணையத்தின் தலைவர் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுகிறார். இந்தத் தலைவர் தேர்தல்களை மேற்பார்வையிடுகிறார் மற்றும் பாதுகாப்பு மற்றும் பிற ஆதாரங்களை வழங்கும் பஞ்சாப் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்.


அக்டோபர் 2020-ஆம் ஆண்டில், குருத்வாரா தேர்தல் ஆணையத்தின் தலைவராக பஞ்சாப் மற்றும் ஹரியானா ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எஸ் சரோனை மத்திய அரசு நியமித்தது. இருப்பினும், சரோன் இந்த ஆண்டு மே மாதத்தில்தான் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கினார். 


பொதுத் தேர்தல் வாக்காளர்களைப் போலவே எஸ்ஜிபிசி (SGPC) வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றும் நடைமுறையை எஸ்ஜிபிசி (SGPC)  பின்பற்றுகிறது. தகுதியுடைய எந்தவொரு நபரும் வாக்காளர்களாக பதிவு செய்ய நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளை அணுகலாம்.



சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) தேர்தலில் யார் வாக்காளராக முடியும்? 


எஸ்ஜிபிசி (SGPC) தேர்தல்களில் வாக்காளராக ஆவதற்கு, நான்கு முக்கிய நிபந்தனைகள் உள்ளன. பதிவு செய்யும் போது, ​​ஒரு நபர் பின்வரும் அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும்:


  1. நீக்கப்படாத முடியை பராமரிக்கிறார்கள். 


  1. மது அருந்த மாட்டார்கள்.


  1. அவர்கள் ஹலால் இறைச்சியை உட்கொள்வதில்லை.


  1. அவர்கள் புகையிலையை உட்கொள்வதில்லை.


கூடுதலாக, வாக்காளர்கள் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சீக்கியர்களாக இருக்க வேண்டும். இந்த முறை, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சீக்கியர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஹரியானாவில் இருந்து சீக்கியர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஏனெனில், மாநிலம் இப்போது அதன் சொந்த ஹரியானா சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவைக் கொண்டுள்ளது. 


கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் எஸ்ஜிபிசி (SGPC) தேர்தலுக்கு பதிவு செய்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் 5.6 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் (5.27 மில்லியன்) பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். அதைத் தொடர்ந்து ஹரியானா (337,000), இமாச்சலப் பிரதேசம் (23,011), மற்றும் சண்டிகர் (11,932) போன்ற மாநிலங்களில் வாக்காளர்களும் உள்ளனர்.





தேர்தல் ஏன் தாமதமானது?


பல சீக்கியக் குழுக்கள் 2016-ஆம் ஆண்டு  முதல் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இருப்பினும், 2011-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையானது இன்னும் செயல்பாட்டில் உள்ளது.

 

எஸ்ஜிபிசி (SGPC) தேர்தல்களில் முதலில் ஏற்பட்ட தாமதம் சட்டச் சிக்கலால் ஏற்பட்டது. டிசம்பர் 2011-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற எஸ்ஜிபிசி (SGPC) தேர்தலை ரத்து செய்தது. 2003-ஆம் ஆண்டு மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்வதன் மூலம் செஹாஜ்தாரி சீக்கியர்களின் வாக்களிக்கும் உரிமையை நீதிமன்றம் மீட்டெடுத்தது. 


இந்த அறிவிப்பானது 2011-ஆம் ஆண்டு செகாஜ்தாரி சீக்கியர்கள் வாக்களிப்பதைத் தடுத்தது. செகாஜ்தாரி வாக்களிக்கும் உரிமை பற்றிய விசாரணைகளின் போது, ​​2011-ஆம் ஆண்டு வாக்கெடுப்பு முடிவுகள் இந்த விவகாரத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


பிப்ரவரி 2012-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்ஜிபிசி (SGPC)  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருந்தபோதிலும், 2016-ஆம் ஆண்டில் புதிய தேர்தல்கள் நடக்கவிருந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் 2011-ஆம் ஆண்டு இருந்த எஸ்ஜிபிசி (SGPC) சபையை மீண்டும் நிறுவியது.


இந்த மறுசீரமைக்கப்பட்ட சபை கூட 2021-ஆம் ஆண்டில் அதன் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்தது. 2022-ஆம் ஆண்டில் பஞ்சாபில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் எஸ்ஜிபிசி (SGPC) தேர்தல்களை விரைவில் நடத்துமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.




Original article:

Share:

இந்தியாவில் மீண்டும் புத்துயிர் பெறும் வேளாண்மை -ஹரிஷ் தாமோதரன்

 சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா அதிக GDP வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்த போதிலும், விவசாயத் துறையின் பங்கு வேலைவாய்ப்பில் உயர்ந்து வருகிறது. இது பல பத்தாண்டுகளாகப் பழமையான கிராமப்புற இந்தியா விவசாயத்துடன் தொடர்புடையதாக மாறி வருகிறது.


வாழ்வாதாரத்திற்கும் வருமானத்திற்கும் விவசாயத்தை சார்ந்திருப்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறதா? இந்தப் போக்கு கிராமப்புறங்களில் விவசாயத்திலிருந்து பல பத்தாண்டுகளாகப் பழமையான மாற்றத்தை மாற்றியமைக்கலாம்.


2021-22 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்க கணக்கெடுப்பு (All India Rural Financial Inclusion Survey) இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இது, நாட்டில் 57% கிராமப்புற குடும்பங்கள் இப்போது "விவசாயம்" (agricultural) சார்ந்து இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில், 50,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நடுத்தர நகர்ப்புற மையங்களில் உள்ள குடும்பங்களும் இதில் அடங்கும். இந்த சதவீதம் 2016-17 முதல் முந்தைய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்ட 48%-ஐ விட கணிசமாக அதிகமாகும்.


விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (Agriculture & Rural Development (NABARD)) கணக்கெடுப்பில், "விவசாய குடும்பம்" என்பது இரண்டு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது : (i) விவசாயத்தின் மொத்த விளைபொருட்களின் மதிப்பு ரூ.6,500-க்கு அதிகமாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது. வயல் மற்றும் தோட்டக்கலை பயிர்கள், கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு, அல்லது மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு ஆகியவை இதில் அடங்கும். (ii) ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரையிலான குறிப்பு ஆண்டில் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது இந்தச் செயல்பாடுகளில் சுயதொழில் செய்துள்ளார்கள். 2016-17 கணக்கெடுப்பில், உற்பத்தியின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.


2016-17 முதல் 2021-22 வரை, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாயம் என அடையாளம் காணப்பட்ட கிராமப்புற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (அட்டவணையைப் பார்க்கவும்)


மேலும், இந்தியாவில் விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 2021-22ல் ரூ.13,661 ஆக இருந்தது. இது விவசாயம் அல்லாத கிராமப்புற குடும்பங்கள் ஈட்டிய ரூ.11,438 ஐ விட அதிகமாகும். 2016-17 கணக்கெடுப்பில், விவசாயம் அல்லாத கிராமப்புற குடும்பங்களின் ரூ.7,269 உடன் ஒப்பிடுகையில், விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.8,931 ஆக இருந்தது.


2021-22ஆம் ஆண்டில், விவசாயக் குடும்பங்களுக்கான மொத்த வருமானத்தில் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு 45% பங்களித்துடன், இது  2016-17ல் 43.1% அதிகரித்துள்ளது. பெரும்பாலான நில அளவுகளில் விவசாய நடவடிக்கைகளின் வருமானத்தின் உயரும் பங்கு காணப்பட்டது:


- 0.01 ஹெக்டேருக்கும் குறைவான குடும்பங்களுக்கு, பங்கு 23.5% இலிருந்து 26.8% ஆக அதிகரித்துள்ளது.


- 0.41-1 ஹெக்டேர் உள்ளவர்களுக்கு, இது 38.2% லிருந்து 42.2% ஆக உயர்ந்துள்ளது.


- 1.01-2 ஹெக்டேர் கொண்ட குடும்பங்களுக்கு, இது 52.5%லிருந்து 63.9% ஆக உயர்ந்துள்ளது.


- 2 ஹெக்டேருக்கு மேல் உள்ளவர்களுக்கு, பங்கு 58.2% லிருந்து 71.4% ஆக அதிகரித்துள்ளது.


2016-17 மற்றும் 2021-22 க்கு இடையில் கிராமப்புற இந்தியாவில் விவசாயத்தை நம்பியிருக்கும் குடும்பங்களின் விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது. விவசாயக் குடும்பங்களைப் பொறுத்தவரை, விவசாயத்தின் வருமானம் அவர்களின் மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக வளர்ந்துள்ளது. இதன் விளைவாக, அரசு அல்லது தனியார் வேலைகள், சுயதொழில், கூலித் தொழிலாளர்கள், வாடகை, வைப்புத்தொகை மற்றும் முதலீடுகள் போன்ற விவசாயம் அல்லாத ஆதாரங்களின் வருமானம் குறைந்துள்ளது. இந்த போக்கு அனைத்து நில அளவு வகைகளுக்கும் பொருந்தும்.


சுருக்கமாக, சமீபத்திய காலத்தில் அதிக விவசாய குடும்பங்கள் உள்ளதால், கிராமப்புற இந்தியா அல்லது இந்தியாவில் விவசாயம் (கிரிஷி) அதிகரித்துள்ளது. மேலும், அவர்கள் விவசாயத்தின் மூலம் தங்கள் வருமானத்தில் பெரும் பங்கைப் பெறுகிறார்கள்.


சமீபத்திய கணக்கெடுப்புக்கான குறிப்பு ஆண்டாக 2021-22 ஆகும். இந்த காலகட்டம் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட முழு ஊரடங்கை தொடர்ந்து இந்த ஆய்வு வந்தது. இதில், தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது பொருளாதார நடவடிக்கை மீதான கட்டுப்பாடுகள் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளை பாதித்திருக்கலாம். ஜூலை 2021-ம் ஆண்டில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டாலும், பொருளாதாரம் மீண்டு வர கால அவகாசம் தேவைப்பட்டது.


குறிப்பாக, விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, விவசாயத் துறை மற்ற பொருளாதாரத்தைப் போன்ற இடையூறுகளைச் சந்திக்கவில்லை. கூடுதலாக, இந்தியா 2019-ல் தொடங்கி தொடர்ந்து நான்கு நல்ல பருவமழை ஆண்டுகளை அனுபவித்தது. இதன் காரணமாக, 2021-22 கணக்கெடுப்பின் ஆய்வுகள் கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் வருமானங்களில் விவசாயத்தின் பங்கை அதிகப்படுத்தலாம். எனவே, இந்த ஆய்வுகளை 2016-17 கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது, ​​இந்த சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


ஆனால், இந்தியர்கள் தோட்டக்கலையை விட்டு வெளியேறுவதைவிட மீண்டும் இந்த துறைக்கு திரும்புவது அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் கூடுதல் தரவு ஆதாரமும் உள்ளது. 


  தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் காலமுறை தொழிலாளர் ஆய்வுகளின் (Periodic Labour Force Surveys (PLFS)) படி, 1993-94ஆம் ஆண்டில் நாட்டின் தொழிலாளர்களில் 64.6% பேர் விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் பங்கு 2004-05ல் 58.5%-ஆகவும், 2011-12ல் 48.9%-ஆகவும், 2018-19ல் 42.5%-ஆகவும் குறைந்தது. அதன்பிறகு, இதன் போக்கு தலைகீழாக மாறியுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு பெற்ற தொழிலாளர்களின் பங்கு 45.6% ஆகவும், 2020-21 இல் 46.5% ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டன. PLFS குறிப்பு ஆண்டு ஜூலை முதல் ஜூன் வரை இயங்கும். மேலும் கோவிட் தொற்று முதலில் மார்ச் 2020-ம் ஆண்டில் தோன்றியது.




முரண்பாடு


2021-22 காலகட்டத்திற்குப் பிறகும் விவசாயத்தின் பங்கு அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரம் தொற்றுநோயிலிருந்து மீண்டு, 2023-24ல் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3% வளர்ச்சியை அடைந்திருந்தாலும் இது உண்மைதான். 2023-24 ஆண்டிற்கான சமீபத்திய விகிதம் 46.1% ஆகும். இது 2018-19-ம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய குறைந்த அளவான 42.5%-ஐ விட கணிசமாக அதிகமாகும்.


இந்த போக்கு கிராமப்புறங்களிலும் கவனிக்கத்தக்கது. 2018-19 ஆம் ஆண்டில், இந்திய கிராமப்புற தொழிலாளர்களில் 57.8% விவசாயத் துறை வேலைவாய்ப்பை அளித்துள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டில் 61.5%ஆகவும், 2020-21 ஆம் ஆண்டில் 60.8% ஆகவும் உயர்ந்துள்ளது. இது 2021-22 இல் 59% ஆகவும், 2022-23 இல் 58.4% ஆகவும் குறைந்தது. ஆனால், 2023-24 இல் மீண்டும் 59.8% ஆக உயர்ந்துள்ளது. 


இந்திய பொருளாதாரம் 2016-17 மற்றும் 2023-24-க்கு இடையில் நிலையான ரூபாயில் 1.4 மடங்குக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது. இந்த போக்கு NABARD மற்றும் PLFS-ன் தரவுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கான சில விளக்கங்கள் தேவைப்படும் முரண்பாட்டை அளிக்கிறது.


இந்த போக்குக்கு உற்பத்தித் துறையில் வேலைகள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். 2023-24-ஆம் ஆண்டில், உற்பத்தித் துறையில் இந்தியாவின் பணியாளர்களில் 11.4% பேர் மட்டுமே பணியாற்றியுள்ளனர். இது 2011-12ல் 12.6% ஆகவும், 2018-19ல் 12.1% ஆகவும் குறைந்துள்ளது.


2023-24-ஆம் ஆண்டில், வர்த்தகம், தாங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் (12.2%) மற்றும் கட்டுமானம் (12%) ஆகியவற்றைவிட உற்பத்தித் துறையின் வேலைவாய்ப்பின் பங்கு குறைவாக இருந்தது. உபரி உழைப்பு விவசாயத்திலிருந்து வெளியேறுகிறது. ஆனால், இந்த உழைப்பு தொழிற்சாலைகளுக்கு செல்வதில்லை. மாறாக, விவசாயத்திற்கு இணையான துறைகளுக்கு நகர்கிறது. இந்தத் துறைகள் ஒரு தொழிலாளிக்கு குறைந்த உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளன, வாழ்வாதார ஊதியத்திற்குச் சற்று அதிகமாகக் கொடுக்கின்றன, மேலும் அவை பெரும்பாலும் முறைசாராவை.


2023-24 ஆம் ஆண்டில், வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் (12.2%) மற்றும் கட்டுமானம் (12%) ஆகியவற்றை விட உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பின் பங்கு குறைந்துள்ளது. விவசாயத்தின் அதிக உழைப்பு விவசாயத்திலிருந்து வெளியேறுகிறது. ஆனால், இந்த உழைப்பு தொழிற்சாலைகளுக்கு செல்வதில்லை. மாறாக, விவசாயத்திற்கு இணையான துறைகளுக்கு நகர்கிறது. இந்தத் துறைகள் ஒரு தொழிலாளிக்கு குறைந்த உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளன. வாழ்வாதார ஊதியத்திற்குச் சற்று அதிகமாகக் கொடுக்கின்றன. மேலும், அவை பெரும்பாலும் முறைசாராவை.


2023-24 ஆம் ஆண்டிற்கான PLFS தரவுகளின்படி, விவசாயத்தில் அதிக தொழிலாளர் பங்கைக் கொண்ட மாநிலங்களில் சத்தீஸ்கர் (63.8%), மத்தியப் பிரதேசம் (61.6%), உத்தரபிரதேசம் (55.9%), பீகார் (54.2%), இமாச்சலப் பிரதேசம் (54%), ராஜஸ்தான் (51.1%) மற்றும் ஜார்க்கண்ட் (50%) ஆகியவை அடங்கும். மறுபுறம், சில மாநிலங்கள் விவசாயத்தில் தொழிலாளர் சக்தியில் ஒப்பீட்டளவில் குறைந்த சதவீதத்தைக் கொண்டுள்ளன. கோவா 8.1%, கேரளா 27%, பஞ்சாப் 27.2%, ஹரியானா 27.5%, தமிழ்நாடு 28%, மேற்கு வங்கம் 38.2% ஆகியவை இதில் அடங்கும்.



2011-ம் ஆண்டில் 1.82 டிரில்லியன் டாலராக இருந்த ஒரு பொருளாதாரம் 2016-ம் ஆண்டில் 2.29 டிரில்லியன் டாலராகவும், 2023-ம் ஆண்டில் 3.55 டிரில்லியன் டாலராகவும் (உலக வங்கியின் தரவுகளின்படி) வளர்ந்துள்ளது. வேலைவாய்ப்புக்காக விவசாயத்தை அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருப்பதற்கான காரணங்கள் பொருளாதார வல்லுநர்களிடையே விவாதப் பொருளாக இருக்க வேண்டும்.




Original article:

Share:

30 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் : நிலக்கரிப் பயன்பாட்டை விலக்குவதற்கான பெரும் செலவு - நிகில் கானேகர்

 குறைந்தபட்சம் இன்னும் ஒரு பத்தாண்டிற்கு இந்தியாவின் ஆற்றல் கலவையில் நிலக்கரி முக்கிய அங்கமாக இருக்கும். நிலக்கரியிலிருந்து மாறுவது ஒரு குறிப்பிடத்தக்க சவாலை அளிக்கிறது.


அடுத்த 30 ஆண்டுகளில் நிலக்கரியை விட்டு வெளியேற இந்தியாவிற்கு $1 டிரில்லியன் அல்லது ரூ.84 லட்சம் கோடி தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான iForest-ன் ஆய்வில் இருந்து இந்த மதிப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட முதல்-வகையான ஆய்வு, நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி ஆலைகளை குறைப்பதற்கான செலவுகளை இது மதிப்பிடுகிறது. நிலக்கரியை சார்ந்துள்ள பிராந்தியங்களில் சமூக-பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.


குறைந்தபட்சம் இன்னும் ஒரு பத்தாண்டிற்கு இந்தியாவின் ஆற்றல் கலவையில் நிலக்கரி ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். இதனால், நிலக்கரியிலிருந்து வேறு ஆற்றலுக்கு மாறுவது ஒரு குறிப்பிடத்தக்க சவாலை அளிக்கிறது.


இங்கே "வெறும்" என்ற சொல் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி ஒரு நியாயமான மற்றும் உள்ளடக்கிய நகர்வைக் குறிக்கிறது. புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதை இந்த அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


உலகளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தத் துறையில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். மார்ச் மாதத்திலிருந்து PIB செய்திக்குறிப்பின்படி, பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்களில் 369,053 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், பலர் தனியார் துறையில், நிலக்கரி, போக்குவரத்து மற்றும் தளவாடங்களைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் (thermal power plants) பணிபுரிகின்றனர்.


2070-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்கும் நிலையில், நிலக்கரியை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருப்பவர்கள் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், இந்த மாற்றம் விலை உயர்ந்ததாக இருக்கும்.


இந்தியாவில் நிலக்கரியை அதிகம் நம்பியுள்ள நான்கு மாவட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் போலந்தில் உள்ள பொருளாதாரத் திட்டங்களின் மதிப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வானது, எட்டு முக்கிய செலவுகளுக்கான கூறுகளை அடையாளம் கண்டுள்ளது.


இந்த செலவுகளில் சுரங்க மூடல்கள், மறுபயன்பாடு தளங்கள் மற்றும் நிலக்கரி ஆலைகளை நிறுத்தி வைத்தல் ஆகியவை அடங்கும். புதிய தூய்மையான எரிசக்தி தளங்களை உருவாக்குதல், பசுமை வேலைகளுக்கான திறமையான தொழிலாளர்களை உருவாக்குதல் மற்றும் புதிய வணிகங்களுடன் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும். சமூக ஆதரவு மற்றும் பசுமை ஆற்றல் முதலீடுகள் அவசியம். கூடுதலாக, திட்டமிடல் செலவுகளுடன், மாநிலங்களுக்கான இழப்புகளை ஈடுகட்ட வருவாய் மாற்றீடு தேவைப்படுகிறது.


அடுத்த 30 ஆண்டுகளில் தேவைப்படும் $1 டிரில்லியனில் சுமார் 48% பசுமை மாற்றத்திற்காக முதலீடுகளை நோக்கிச் செல்லும் என்று ஆய்வு மதிப்பிடுகிறது. நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரியில் இயங்கும் ஆலைகளுக்குப் பதிலாக ஆற்றல் உள்கட்டமைப்பை உருவாக்க இந்த நிதி உதவும்.


செலவுகளுக்கு நிதியளிக்க, பொது நிதி மற்றும் தனியார் முதலீடுகளுடன் இணைந்து செயலாற்றும். இதில் பொது நிதி, மானியங்கள் மற்றும் மானியங்களில் இருந்து வரும். பெரும்பாலான பொது நிதி "ஆற்றல் அல்லாத" செலவுகளை ஈடு செய்யும் என்று ஆய்வு மதிப்பிடுகிறது. இந்தச் செலவுகள், மாற்றத்தின் போது சமூகத்தின் பின்னடைவை ஆதரிப்பது, புதிய பசுமை வேலைகளுக்கு நிலக்கரி தொழிலாளர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்தல் மற்றும் பழைய நிலக்கரி சார்ந்த தொழில்களுக்குப் பதிலாக புதிய வணிகங்களுக்கு பொருளாதார ஆதரவை வழங்குதல் ஆகியவை அடங்கும்.


சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியில் இந்தியாவில் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் உள்ளது. இந்தப் பணம் சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து வருகிறது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகளுடன் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். இது நிலக்கரி மாவட்டங்களில் புதிய வணிகங்களை ஆதரிக்கலாம் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு உதவலாம். மாற்றத்துடன் தொடர்புடைய பல ஆற்றல் செலவுகளை தனியார் முதலீடுகள் ஈடுசெய்யும் என்பதை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்த முதலீடுகள் பெரும்பாலான புதிய சுத்தமான எரிசக்தி திட்டங்களுக்கும் நிதியளிக்கும்.


வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டும் சட்டங்களை ஏற்றுக்கொண்டன அல்லது நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க சர்வதேச நிதியுதவியை உள்ளடக்கிய முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்துள்ளன.


உதாரணமாக, தென்னாப்பிரிக்காவின் ஜஸ்ட் எனர்ஜி டிரான்சிஷன் இன்வெஸ்ட்மென்ட் பிளான்ஸ் (Just Energy Transition Investment Plans (JET-IP)), இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிடமிருந்து நிதி ஆதரவைப் பெறும். தென்னாப்பிரிக்காவின் 20 ஆண்டுகால எரிசக்தி மாற்றத்திற்கு 98 பில்லியன் டாலர் தேவைப்படும். இதனால், 2023 மற்றும் 2027-ம் ஆண்டுகளுக்கு இடையில் $8.5 பில்லியன் வழங்கப்படும். இதில், பெரும்பாலும் பசுமை ஆற்றல் முதலீடுகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த நிதி சலுகையுடன் கடன்கள், மானியங்கள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை ஆகியவை அடங்கும்.


ஜெர்மனி நிலக்கரி மின்சாரத்தை 2038-ம் ஆண்டிற்குள் படிப்படியாக நிறுத்துவதற்கான சட்டங்களை இயற்றியுள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரியில் இயங்கும் ஆலைகளை மூடுவதற்கு $55 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியது. இதில், நிலக்கரியை நம்பியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கும் இந்த நிதியுதவி உதவுவதாக கூறப்படுகிறது.


இந்த ஆய்வில், அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களாக சத்தீஸ்கரில் உள்ள கோர்பா, ஜார்க்கண்டில் பொகாரோ மற்றும் ராம்கர் மற்றும் ஒடிசாவில் அங்கூல் ஆகியவை ஆகும். நிலக்கரி மற்றும் நிலக்கரி சார்ந்த தொழில்களில் அவர்களின் பொருளாதார மதிப்பீடுகளை புரிந்துகொள்ள இந்தப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டன. இதில், நிலக்கரியிலிருந்து, இப்பகுதி மக்களின் சாதகமான மாற்றத்திற்கான செலவுகளை மதிப்பிடுவதே இலக்காக இருந்தது.


எடுத்துக்காட்டாக, பொகாரோவில் பல நிலக்கரி ஆலைகள் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த எஃகு ஆலையுடன் நிலக்கரி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இத்துறை மாவட்டத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 54% பங்களிக்கிறது. நிலக்கரி சுரங்கம், நிலக்கரி ஆலைகள் மற்றும் எஃகு மற்றும் சிமென்ட் போன்ற தொடர்புடைய தொழில்களில் சுமார் 139,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.


2040-ம் ஆண்டுக்குப் பிறகு மாவட்டத்தில் நிலக்கரி முழுவதுமாக குறைக்கப்படும் என்று ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இதற்கு அடுத்த 30 ஆண்டுகளில் ரூ.1.01 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும். இந்த நிதியானது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், சுரங்கங்களை மீண்டும் உருவாக்கவும், தற்போதைய நிலக்கரி ஆலைகளில் பசுமை ஆற்றல் உற்பத்தியைத் தொடங்கவும் பயன்படுத்தப்படும்.




Original article:

Share:

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் (Digital Public Infrastructure-DPI) திறனை எவ்வாறு முழுமையாகப் பயன்படுத்துவது? -மான்சி கெடியா , சுருதி வாங்குறி

 தாக்கத்தின் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமும், செயல்முறையை நிறுவனமயமாக்குவதன் மூலமும், தேவைப்படும்போது சரிசெய்தல் மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். இது பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான வாழ்க்கையை மாற்றுவதில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளின் (Digital Public Infrastructure (DPI)) வாக்குறுதியை நிறைவேற்ற உதவும். 


செப்டம்பர் 22, 2024-ம் ஆண்டு, ஐ.நா உச்சி மாநாட்டில் உலகளாவிய டிஜிட்டல் காம்பாக்ட் (Global Digital Compact (GDC)) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பல்வேறு பங்குதாரர்களை உள்ளடக்கிய மின்னணு நிர்வாகத்தில் உலகளாவிய ஒத்துழைப்பின் புதிய காலகட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையானது, அனைவருக்கும் பயன்தரும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதாக உறுதியளித்துள்ளது. 


இது 2023-ம் ஆண்டில்  தொடங்கப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கான (DPI) உலகளாவிய பாதுகாப்புகள் என்ற முன்முயற்சியைப் பின்பற்றுகிறது. இது ஐ.நா. பொதுச்செயலாளரின் தொழில்நுட்பத் தூதுவர் (Office of the UN Secretary-General’s Envoy on Technology (OSET)) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Program (UNDP)) ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.


ஜி20 தலைவர் பதவியில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை தீவிரப்படுத்துவதற்கான ஒரு வழியாக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளின் (DPI) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, உலகளாவிய தெற்கில் உலகின் மிகப்பெரிய மின்னணு அடையாளத் திட்டமான ஆதார் திட்டத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. 


மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 14.96 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவுசெய்யப்பட்டதன் மூலம், நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் (digital payments) அதிகபட்ச அளவைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) பற்றிய உலகளாவிய விவாதங்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது.


எவ்வாறாயினும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) பற்றிய தீவிரம் சீராக வளர்ந்து வருகிறது. உலக வங்கியின் ID4D (வளர்ச்சிக்கான அடையாளம்) திட்டம் கிட்டத்தட்ட 60 நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. மற்றொரு முன்முயற்சியான, G2Px திட்டம் (அரசாங்கத்திலிருந்து நபருக்கு பணம் செலுத்துவதை மின்னணு மயமாக்குதல்), 35 நாடுகளில் செயலில் உள்ளது. இந்தியாவின் இலாப நோக்கற்ற முன்முயற்சியான Modular Open Source Identity Platform (MOSIP), 11 நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.


ID4D  - வளர்ச்சிக்கான அடையாளம் (Identity for Development)

G2Px - அரசாங்கத்திலிருந்து நபருக்கு பணம் செலுத்துவதை டிஜிட்டல்  

           மயமாக்குதல் (Digitising government-to-person payments)






டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) மற்றும் இதுபோன்ற முன்முயற்சிகள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் விரிவடைவதால், இதற்கான தாக்க மதிப்பீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மதிப்பீடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த திட்டத்தின் முயற்சிகளின் வெற்றியைக் கண்காணிக்க உதவுகின்றன. அவை டிபிஐகளின் வடிவமைப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. மேலும், DPI-கள் அணுகக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. சரியான மதிப்பீடு இல்லாமல், அரசாங்கங்கள் தங்கள் இலக்குகளை அடையாத வேறுவொரு உள்கட்டமைப்பு அமைப்புகளில் முதலீடு செய்யலாம். இது இன்னும் மோசமானது, மேலும் இது பாகுபாடுகளை அதிகரிக்கலாம். DPI-கள் இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவியுள்ளன என்பதை ஆரம்பகால சான்றுகள் காட்டுகின்றன.


பெரியவர்களுக்கான வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2008-ம் ஆண்டில் 25%ஆக இருந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் 80%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த கணக்குகளில் 56% பெண்கள் வைத்துள்ளனர். மின்னணு பரிவர்த்தனைகள் 2022-23-ல் இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (nominal GDP) கிட்டத்தட்ட 50% ஐ எட்டின. 


இந்த பரிவர்த்தனைகள் UPI-ல் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்கள் மூலம் கிரெடிட்டை அணுகுவதை எளிதாக்கியது. இருப்பினும், DPI-கள் குடிமக்களின் வாழ்வாதாரம், வருமானம், நல்வாழ்வு மற்றும் சமூக நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து ஆழமான கேள்விகள் உள்ளன. UPI மற்றும் வருமானம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள நேரடி இணைப்பை தெளிவாகக் காண்பிப்பது கடினம். விரிவான தரவு இல்லாமல், அவ்வாறு செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.


கூடுதலாக, DPI-கள் தனியார் துறை மற்றும் அரசாங்கத்திற்கு, பயனர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


தாக்க மதிப்பீடுகளை நடத்துவதில் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று தரவு இல்லாதது ஆகும். ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, UPI மூலம் செயல்படுத்தப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்தத் தரவு மட்டும் ஒட்டுமொத்த தாக்கத்தை போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை. பயனர்களின் சமூக-பொருளாதார பின்னணிகள், பயன்பாட்டின் அதிர்வெண் அல்லது நடத்தை மாற்றங்கள் பற்றிய தரவு முக்கியமானது. எடுத்துக்காட்டாக, DPI-யால் இயங்கும் கடன் நிதி அமைப்பில் அபாயங்களை அதிகரித்ததா அல்லது குறைத்ததா என்பதை மதிப்பிடுவது முக்கியம். 


கிடைமட்டத் தரவு முக்கியமானது. இதில், பாலினம், வருமானம் மற்றும் கல்வி போன்ற மக்கள்தொகை காரணிகள் விளைவுகளை வடிவமைக்க எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. அனைவருக்குமான பொது உள்கட்டமைப்பு (UPI) கிராமப்புற பெண்களின் நிதி சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அளவிட முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும். தற்போது, ​​நாம் படிப்பதில் பெரும்பாலான தகவல்கள் முறையான தரவுகளைவிட தனிப்பட்ட நிகழ்வு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.


தரவு சேகரிப்பு பற்றிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கவலைகள் மிகவும் முக்கியமானவை. இருப்பினும், நிகழ்வு ஆதாரம், விரிவான நுண்ணறிவுகளிலிருந்து பெறுவதற்கு நிறைய இருக்கிறது. இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து, யார் பயனடைகிறார்கள்?, யார் பின்தங்கப்படுகிறார்கள்? மற்றும் இந்த வேறுபாடுகளுக்கான காரணங்களை இந்தத் தரவு காட்டலாம். கூடுதலாக, இந்த அணுகுமுறை சந்தைகள் மற்றும் நிர்வாகத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.


இந்த சவால்களை எதிர்கொள்ளவும், இந்தியாவில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கான (DPI) தாக்க மதிப்பீடுகளை வழக்கமான நடைமுறையாக மாற்றவும், வடிவமைப்பு, தரவு மற்றும் உரையாடல் ஆகிய மூன்று முக்கிய கூறுகளை நாம் முன்மொழிகிறோம். முதலாவதாக, தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கையாள்வது போன்றே, டிபிஐ-களின் வடிவமைப்பில் தாக்க மதிப்பீடுகளை ஆதரிக்க தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்குதல் வேண்டும். 


இது தொடர்ச்சியான மேம்பாட்டுக்கான பதில்விவரத்தை உருவாக்கும். இரண்டாவதாக, நம்பகமான மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும் முறைகள் மூலம் தரவை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது, ​​பல அரசு நிறுவனங்கள் தரவு கிடைப்பதைக் குறைக்க முனைகின்றன. இது தரவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் அதே வேளையில், இது மதிப்பீடுகளின் தரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.


குடிமக்கள் மற்றும் தனியார் துறையுடன் நம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும். இது, நன்கு வடிவமைக்கப்பட்ட தரவு சேகரிப்பு அமைப்புகள் இதை அடைய உதவும். இந்த அமைப்புகள் உயர்தர மதிப்பீடுகளை அனுமதிக்கின்றன. இதற்கான தரவை எளிதாகக் கண்டுபிடித்து பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப வடிவமைப்புகளும் முக்கியமானவையாக உள்ளது.


கூடுதலாக, பங்குதாரர்களிடையே உரையாடலை வளர்ப்பது முக்கியம். இதில் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டு நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவது இதில் அடங்கும். இந்த குழுக்களைச் சுற்றி ஒரு சமூகத்தை உருவாக்குவது அவசியம். ஈடுபாட்டிற்கான நெறிமுறைகளை உருவாக்குவது பங்கேற்பு ஆளுகையை செயல்படுத்தும். இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த பொறுப்புணர்வையும் மேம்படுத்தும்.


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளில் (DPIs) இந்தியாவின் நம்பிக்கை நியாயமானது. இந்த திட்டத்திற்கான வெற்றியை உறுதிப்படுத்த, தாக்க மதிப்பீடுகளில் கவனம் செலுத்துவது மற்றும் முறையான செயல்முறையை நிறுவுவது முக்கியம். இது தேவைப்படும் போது சரியான நேரத்தில் திருத்த நடவடிக்கைகளை அனுமதிக்கும். இத்தகைய நடவடிக்கைகள், பொருளாதாரங்களை மாற்றுவதற்கும், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் DPI களின் வாக்குறுதியை நிறைவேற்ற உதவும். இதற்கான, பயணம் நன்றாகத் தொடங்கிவிட்டது. ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.


கேடியா ICRIER இல் மூத்த ஃபெலோவாகவும், வாங்குரி ICRIER இல் ஆராய்ச்சி உதவியாளராகவும் உள்ளார்.




Original article:

Share: