மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGS) விட, விக்சித் பாரத்-கிராமின் (VB-G) திட்டம் சிறப்பாக செயல்படுமா? -பி.சி. மோகனன், அமிதாப் குண்டு

புதிய திட்டம் பயனுள்ள சொத்துக்களை உருவாக்குவதற்கோ அல்லது தேவையற்ற பண இழப்புகளைத் தடுப்பதற்கோ வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. இது உள்ளூர் திட்டமிடலில் உள்ள நெகிழ்வுத்தன்மையையும் குறைக்கிறது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) (2005), கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு சட்டபூர்வமான மற்றும் உரிமை சார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. திறன் சாரா உடலுழைப்பு வேலை செய்ய முன்வரும் வயதுவந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம், வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த நேரடி வருமான உதவி, ஏழைப் பயனாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, வறுமை காரணமாக அவர்கள் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கு இடம்பெயர்வதையும் குறைக்கிறது.


இந்தத் திட்டம் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் சமூகச் சேர்க்கையை அதிகரிக்க உதவுகிறது, ஏனெனில் இதில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும். பல மாநிலங்களில், பெண்களின் பங்களிப்பு இதைவிட அதிகமாகவே உள்ளது. பணிகளைத் தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளூர் அளவிலேயே இருப்பதாலும், எளிய நடைமுறை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு வேலை என்ற அணுகுமுறையாலும், இது ஆதிதிராவிடர் (Scheduled Castes (SC)), பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) மற்றும் இதர நலிந்த பிரிவினருக்குப் பயனளிக்கிறது. வேறு வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ள சூழலில், அதிகமான மக்களை இந்தத் திட்டம் பொருளாதார பங்களிப்பில் ஈடுபடுத்தி வருகிறது.


வயது வரம்பு


2024–25-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வயது வாரியான பங்கீடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவை,  61–80 வயது வரம்பு: இந்தத் திட்டத்தில் 15.5% தொழிலாளர்கள் 61 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள். பொதுவாக இந்த வயதினர் ஊதியத்துடன் கூடிய வேலையில் இருப்பது அரிது என்றும் 51–60 வயது வரம்பு: மேலும் 22.6% தொழிலாளர்கள் 51 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 18–30 வயது வரம்பு: ஆனால், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை வெறும் 9% மட்டுமே என்றும் கூறப்படுகிறது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட' (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 70% பேர் 41 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் இவர்களின் பொருளாதார பங்கேற்பு குறையும்பட்சத்தில், கணிசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


தொழிலாளர்களின் வயது வரம்பு, அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு சூழலையும் வேலைக்கான தேவையையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. அருணாச்சல பிரதேசம் (25.1%), பீகார் (21.2%) மற்றும் ஜார்க்கண்ட் (23.6%) ஆகிய மாநிலங்களில் இளம் தொழிலாளர்களின் (18-30 வயது) பங்களிப்பு அதிகமாக உள்ளது; இதில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முக்கிய வாழ்வாதாரங்களாக உள்ளன. இதற்கு நேர்மாறாக, ஆந்திரப் பிரதேசம், கோவா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதிய தொழிலாளர்களின் (61-80 வயது) விகிதம் அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் மக்களின் சராசரி ஆயுட்காலம் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதும், நிலையான சொத்துக்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மொத்தச் செலவில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் ஊதியம் 40 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதி, மறைமுகமாக மனித உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ், மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவிலான ஊராட்சிகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலுக்குப் பொறுப்பாகின்றன. இந்த விதியானது இத்திட்டத்திற்கு ஒரு வலுவான உள்ளூர் தன்மையை வழங்குகிறது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MNREGA) வடிவமைப்பைக் கருத்தில் கொள்ளும்போது, இத்திட்டத்தை 'விக்சித் பாரத் கிராம பஞ்சாயத்துத் திட்டங்கள்' (Viksit Bharat Gram Panchayat Plans) மற்றும் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் (PM Gati Shakti) போன்ற விரிவான திட்டங்களோடு இணைக்கும்போது, அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் தகுதி மற்றும் பின்னணி மிக முக்கியமான ஒன்றாகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGA) பணியாற்றும் பெரும் பகுதியினருக்கு, நவீன உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கான போதிய திறன் இல்லாமல் இருக்கலாம். இது அத்திட்டத்தின்கீழ் தற்போது நடைபெறும் வேலைகளிலேயே பிரதிபலிக்கிறது. அதாவது பெரும்பாலும் நீர் பாதுகாப்பு, வறட்சி தடுப்பு நடவடிக்கைகள், காடு வளர்ப்பு, நுண் பாசனம், நீர் நிலைகளைச் சீரமைத்தல் மற்றும் நில மேம்பாடு போன்ற பணிகளே இதில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இந்தச் சட்டத்தில் உள்ள வரம்புகள் காரணமாக, பெரிய அளவிலான மற்றும் நீண்டகாலம் நிலைக்கக்கூடிய சொத்துக்களை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் இத்திட்டத்தில் குறைவாகவே உள்ளன.


முக்கியக் குறிக்கோள்


புதிய திட்டத்தின்கீழ், விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு & வாழ்வாதார உத்தரவாத திட்டம் (Viksit Bharat–GRAM G) சட்டம் 2025-ன் முக்கிய நோக்கம், கிராமப்புற மேம்பாட்டை 'விக்சித் பாரத்-2047' (வளர்ச்சியடைந்த இந்தியா-2047) என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைப்பதாகும். இது வாழ்வாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பரவலான பங்கேற்பை உறுதி செய்யவும், ஆண்டுக்கு 125 நாட்கள் கூடுதல் சட்டப்பூர்வ ஊதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை வழங்க முன்மொழிகிறது. இத்திட்டம் விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் (PM Gati Shakti) ஆகியவற்றுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது புவிசார் அமைப்புகள் (Geospatial systems), டிஜிட்டல் பொதுக் உள்கட்டமைப்பு மற்றும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான திட்டமிடல் வழிமுறைகளால் ஆதரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தத் திட்டம் 'விக்சித் கிராம பஞ்சாயத்து' (Viksit Gram Panchayat) திட்டங்களின் கீழ் குறிப்பிட்ட சில பணிகளை உள்ளடக்கி, அவற்றை 'விக்சித் பாரத் தேசிய ஊரகக் கட்டமைப்புத் தொகுப்புடன்' (Viksit Bharat National Rural Infrastructure Stack) இணைக்கிறது. நீர் தொடர்பான பணிகளின் மூலம் தண்ணீர் தேவையை உறுதி செய்தல், கிராமப்புறங்களுக்கான முக்கியக் கட்டுமானப் பணிகள், மக்களின் வருமானம் மற்றும் பிழைப்பிற்கு உதவும் கட்டுமானங்கள், அதீத வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதற்கான சிறப்பான பணிகள் ஆகியன முக்கியப் பகுதிகளாகும். இவற்றுடன் மத்திய அரசு அறிவிக்கும் பிற பொதுப் பணிகள், கிராமப்புற பொதுச் சொத்துகளைப் பராமரித்தல் மற்றும் தனிநபர் பயனாளிகளுக்கான திட்டங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம் (PM Awaas Yojana) மற்றும்  கழிப்பறை வசதி மற்றும் தூய்மைப் பணிகள் ஆகியனவாகும். 


சிக்கல்கள் மற்றும் கேள்விகள்


புதிய சட்டத்தின்கீழ் விரிவுபடுத்தப்பட்டுள்ள பணிகளின் நோக்கம், பயனுள்ள சொத்துக்களை உருவாக்குவதும் அவற்றை பராமரிப்பதும் ஆகும். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (MGNREGA) இருந்த 'தேவைக்கேற்ப வேலை' மற்றும் 'திறந்தநிலை உரிமை' சார்ந்த அணுகுமுறையிலிருந்து மாறுபடுகிறது. இந்த புதிய பணிகளில் பலவற்றிற்குத் திறன் கொண்ட அல்லது பாதியளவு திறன் கொண்ட (semi-skilled) தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். மேலும், இந்தப் பணிகளின் தன்மையை இனி உள்ளூர் அளவில் தீர்மானிக்க முடியாது. தற்போதைய திட்டத்தின்கீழ், 2024–25-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில், திறன் கொண்ட மற்றும் பாதியளவு திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. 


பெரும்பாலான திறன் சாரா பெண் தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGA) பங்கேற்பது என்பது அவர்களது குடும்ப வாழ்வாதாரத்திற்கான ஒரு வழியாக இருந்தது. ஜனவரி மாதம் 6-ஆம் தேதி 'Business Line' இதழில் பட்டாச்சார்யா குறிப்பிடுகையில், பழைய திட்டத்தைப் போலல்லாமல், புதிய திட்டம் முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புடன் கூடிய ஒரு திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதில் உத்திகள் வகுத்தல், பொறியியல், வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவை அடங்கும் என்பதால், இது செயல்திறனை மேம்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், இத்தகைய ஒரு கட்டமைப்பிற்குள், அடிமட்ட நிலையில் உள்ள திறன் சாரா அல்லது குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் பங்களிப்பை உறுதி செய்வது அல்லது இந்தத் திட்டத்தை உள்ளூர் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், விவசாயக் காலங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் வேலை நாட்களை அதிகரிப்பதும் சவாலானதாக இருக்கும். ஏனெனில், முந்தைய அனுபவங்களின்படி, வேலை நாட்களை அதிகரிப்பது என்பது குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய முன்னுரிமையாகத் தெரியவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூகத் தணிக்கைகள் (Social Audits) பெரும்பாலும் சில முக்கியப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. அவை: இல்லாத தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், வருகைப் பதிவேட்டில், போலிப் பெயர்களைப் பயன்படுத்திப் பணத்தைத் திசைதிருப்புதல், எந்த வேலையும் நடந்ததற்கான அடையாளம் இல்லாமை, வேலை செய்யாமலேயே நிதியைப் பயன்படுத்துதல், தரம் குறைந்த சொத்துக்களை உருவாக்குதல், மனித உழைப்பிற்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காகப் பொது வேலைகளைச் செய்தல் போன்றவை ஆகும். இத்தகைய பிரச்சனைகள் பொது நிதியுதவி பெறும் பல திட்டங்களைப் பாதிக்கின்றன. இந்தத் திட்டத்தின் மொத்த வரவு-செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, இதில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொகை மிக அதிகம் இல்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை

நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் நிர்வாகச் சீர்திருத்தங்களை அரசு முன்னிலைப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


புதிய திட்டமானது, நிகழ்நேரத் தரவு சேகரிப்பு (Real-time data), கண்காணிப்பு, டிஜிட்டல் திட்டமிடல் மற்றும் பணப்பட்டுவாடா முறைகள் மூலம் தற்போதுள்ள அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், அதே தொழில்நுட்பமும் அதே களப்பணியாளர்களுமே தொடரப்போகும் நிலையில், ஊழல் அல்லது முறைகேடுகளைத் தடுப்பதில் இந்த புதிய கட்டமைப்பு எவ்வாறு கூடுதல் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. முந்தைய முறைகளுடன் ஒப்பிடும்போது, பொதுவான டிஜிட்டல் விதிகள் தன்னிச்சையான முடிவுகளைக் குறைக்குமா என்பதை ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும். அதே சமயம், தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் செயல்பாடுகளால் களஅதிகாரிகளின் முடிவெடுக்கும் அதிகாரம் குறைவது குறித்த விவகாரங்கள் நீடிக்கின்றன. மேலும், டிஜிட்டல் தேவைகள் (ஸ்மார்ட்போன்கள், இணைய வசதி மற்றும் பயோமெட்ரிக் அல்லது செயலி வழியிலான வருகைப் பதிவு போன்றவை) கட்டாயமாக்கப்படுவதால், விளிம்புநிலை மக்கள் இத்திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவிர, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சிக்கல்கள் மற்றும் இந்தத் திட்டத்தின் அடிப்படை உரிமைகள் சார்ந்த தன்மை பலவீனமடைவது குறித்தும் அச்சங்கள் எழுந்துள்ளன.


புதிய சட்டத்தின்கீழ், உருவாக்கப்பட்ட அனைத்து சொத்துக்களும் ஒருங்கிணைந்த தேசிய வளர்ச்சி அணுகுமுறையை உறுதி செய்வதற்காக 'விக்சித் பாரத் தேசிய ஊரகக் கட்டமைப்புத் தொகுப்பில்' (Viksit Bharat National Rural Infrastructure Stack) ஒன்றிணைக்கப்படுகின்றன. திட்டமிடலானது, உள்ளூர் மட்டத்தில் தயாரிக்கப்பட்டு 'பிரதம மந்திரி கதி சக்தி திட்டம்' (PM Gati Shakti) போன்ற தேசிய அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட 'விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள்' மூலம் பரவலாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், புதிய சட்டத்தின்கீழ் தொழில்நுட்பத்தின் மீதான இந்த அதிகப்படியான சார்ந்து இருத்தல், 'தேவைக்கேற்ப வேலை' (Work on demand) எனும் உத்தரவாதத்தை நடைமுறையில் பலவீனப்படுத்துகிறது.


கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவது முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டாலும், புதிய முறை உண்மையில் மத்திய அரசு உருவாக்கிய மென்பொருளை முழுமையாக சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குகிறது. அதிகார அமைப்புகளில் இருந்து கீழ்நோக்கிய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு முறைகளால் உள்ளூர் அளவில் திட்டமிடும் சுதந்திரம் குறைகிறது. பல கிராம பஞ்சாயத்துகளில், பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை, நிலையான மின்சார வசதிகள் செய்யப்படவில்லை, இணைய வசதிகளும் சீராக இயங்குவதில்லை. இதனால், பணிச்சுமையும் அதிகமாகி, வேலைகள் தாமதமாகவும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தொழில்நுட்பம் மூலம் நிதி பரிமாற்றம் செய்தாலும் ஊதிய தாமதம் தவிர்க்கப்படுமா என்பது குறித்தும் மத்திய – மாநில – உள்ளூர் அரசுகளுக்கு இடையே பொறுப்பு தெளிவாக இல்லாமல் இருப்பதும் ஒரு தவறு நடக்கும்பட்சத்தில் யார் பொறுப்பேற்பது என்பது குறித்த தெளிவான அமைப்புகளும் வரையறுக்கப்படவில்லை. 


மோகனன், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் தற்காலிகத் தலைவர் ஆவார், மற்றும் குண்டு IORA சுற்றுச்சூழல் தீர்வுகள் நிறுவனத்தில் மூத்த ஆய்வாளர் ஆவார்.


 Original Article : Will VB-G Ram G score over MGNREGS? -PC Mohanan, Amitabh Kundu

Share:

மனித மூலதனம் ஏன் வளர்ச்சியின் ஆதாரமாக இருக்க வேண்டும்? -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

மக்கள்தொகை பலன் (demographic dividend) என்பது நிரந்தர நன்மை அளிக்கும் காரணி அல்ல. மாறாக, இது காலத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், தரமான வேலைவாய்ப்பை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை அதிகரித்து மனித மூலதனத்தை ஆழப்படுத்தவும் இந்தப் பலன்களைப் பயன்படுத்த இந்தியா தயராக இருக்கிறதா?


பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 27-28 தேதிகளில் புது டெல்லியில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 5-வது தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கியபோது, ​​'வளர்ந்த இந்தியாவிற்க்கான மனித வளம்' (Human Capital for Viksit Bharat) என்ற கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டது வெறும் அடையாளமாகவோ அல்லது சொல்லளவிலோ இருக்கவில்லை. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பேரியல் பொருளாதார வேகத்தால் மட்டும் தீர்மானிக்கப்படாமல், அதன் மக்களைச் சார்ந்தே இருக்கும் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அவர்கள் எவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொள்கிறார்கள், எவ்வளவு சிறப்பாகக் கல்வி கற்கிறார்கள், எவ்வளவு உற்பத்தித்திறனுடன் பணியாற்றுகிறார்கள் மற்றும் தங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமையும்.


இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டை நெருங்கிவரும் வேளையில், வளர்ந்த இந்தியா@2047 என்ற யோசனை ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: இந்தியா தனது மக்கள்தொகை பலனை நிலையான வளர்ச்சி மற்றும் பரந்த செழிப்பாக மாற்ற முடியுமா? மனித மூலதனம் (human capital) வளர்ச்சியின் ஒரு பின்தங்கிய சிந்தனையாக இல்லாமல், அதன் அடித்தளமாக மாறுகிறதா என்பதைப் பொறுத்தே இந்த கேள்விக்கான பதில் அமையும்.


நீண்டகால வளர்ச்சிக்கு மனித மூலதனம்


இயந்திரங்களோ சந்தைகளோ மட்டுமல்லாமல், மனிதர்கள் தான் நீண்டகால வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள் என்ற கருத்து புதியதல்ல. 1992-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற Gary Becker, நீண்டகால வளர்ச்சி என்பது அதிக மக்கள் அல்லது பணத்தால் வருவதில்லை. மாறாக, உற்பத்தித்திறனால்தான் வருகிறது என்று கூறினார். தொழிலாளர்கள் கல்வி கற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருந்து, புதிய வேலைகளுக்கும் தொழில்களுக்கும் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்கும்போது உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.


இந்தியாவின் கொள்கை இந்த நுண்ணறிவின் அடிப்படையிலேயே வழிநடத்தப்படுகிறது. நிதி ஆயோக்கின் ‘உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய இந்தியாவின் பாதை: வளர்ந்த இந்தியா @2047-க்கான ராஜதந்திரத் தேவைகள்’ (Strategic Imperatives for Viksit Bharat @2047) என்ற ஆய்வறிக்கை, மனித மூலதனத்தை – அதாவது மக்களின் அறிவு, திறன்கள், ஆரோக்கியம் மற்றும் தகவமைத்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றை நீண்டகால வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்திகளாகக் கருதுகிறது. இந்தியா இலட்சிய இலக்குகளைக் கொண்டிருப்பதால் இது முக்கியமானதாகிறது.


India's demographic dividend

வளர்ந்த இந்தியா @2047-ன் தொலைநோக்குப் பார்வை, இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சராசரி வருமானம் இன்றைய நிலைகளிலிருந்து 7 மடங்கு உயரும். அந்த வகையான மாற்றம் படிப்படியாக அதிகரிப்பதில்லை. அது கட்டமைப்பு ரீதியாக அதிகரிக்கும். உயர்-நடுத்தர வருமான நிலையை அடைய, இந்தியாவின் உற்பத்தித்திறன் கடந்த காலத்தைவிட மிக வேகமாக அதிகரிக்க வேண்டும். மேலும், உற்பத்தித்திறன் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.


உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வலையமைப்புகள் மக்கள் சிறப்பாகப் பணியாற்ற உதவக்கூடும். ஆனால், அவை மட்டும் தானாகவே மக்களை அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக மாற்றிவிடாது. தொழிலாளர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். மக்களின் மீது முதலீடு செய்யாமல், வளர்ச்சி என்பது காகிதத்தில் உள்ள ஒரு எண்ணாகவே நின்றுவிடும். அவ்வாறு முதலீடு செய்தால், வளர்ச்சி என்பது மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் உண்மையில் அனுபவிக்கும் ஒன்றாக மாறும்.


வளர்ச்சியை அதிகரிக்க மக்கள்தொகை அமைப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


மக்களுக்கும் உற்பத்தித்திறனுக்கும் இடையிலான இந்த இணைப்புதான் இந்தியாவின் மக்கள்தொகை தருணத்தை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. இந்தியா இன்று ஒரு முக்கியமான மக்கள்தொகை கட்டத்தில் உள்ளது. அதன் 1.44 பில்லியன் மக்களில் 62.5 சதவீதம் பேர் வேலை செய்யும் வயதில் (15-59 வயது) உள்ளனர். மேலும், இந்த விகிதம் 2041-ஆம் ஆண்டில் உச்சத்தை அடைந்து, பின்னர் குறையத் தொடங்கும். இந்த பரந்த உழைக்கும் வயது மக்கள்தொகையே இந்தியாவின் ‘மக்கள்தொகை பலனுக்கு’ (demographic dividend) அடித்தளமாக அமைகிறது.


ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை போக்குகள் வேகமாக மாறி வருகின்றன. பொருளாதார ஆய்வறிக்கையின்படி, ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் சராசரி குழந்தைகளின் (total fertility rate (TFR)) எண்ணிக்கை 1980-களில் 4.5-ஆக இருந்தது. அது 2025-ல் 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது 2.1 என்ற மாற்று விகிதத்திற்குக் (replacement level) கீழே உள்ளது. குழந்தைகளின் மக்கள் தொகை ஏற்கனவே உச்சத்தை எட்டிவிட்டது. வேறுவிதமாகக் கூறினால், இந்தியாவின் எதிர்காலப் பணியாளர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே பிறந்துவிட்டனர்.


இதற்கு ஒரு தெளிவான அர்த்தம் உண்டு. இந்தியாவின் மக்கள்தொகை நன்மை என்றென்றும் நீடிக்காது. 2030-களின் பிற்பகுதியிலும் 2040-களின் முற்பகுதியிலும் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை உச்சத்தை அடையும்போது, ​​அதிக எண்ணிக்கையிலான மக்கள் வயதடைந்து, ஆதரவு அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும். இந்த நேரத்தை இந்தியா உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், நல்ல வேலைகளை உருவாக்கவும், மக்களிடம் முதலீடு செய்யவும் பயன்படுத்தினால், வளர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறு செய்யாவிட்டால், அது வேலையின்மை, முறைசாரா வேலைகள் மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

பள்ளிப் படிப்பிலிருந்து வேலைக்குச் செல்லும் மாற்றங்கள் மீது கவனம் ஏன் திரும்புகிறது?


ஆனால், ஒரு இளம் மக்கள்தொகை மட்டும் இருப்பதனால் வளர்ச்சி ஏற்பட்டுவிடாது. அது அழுத்தத்தையும் வாய்ப்புகளையும் மட்டுமே உருவாக்கும். குழந்தைகளுக்கு நல்ல கல்வி, பயிற்சி மற்றும் ஆரம்பகாலப் பணி அனுபவம் கிடைத்தால் மட்டுமே, இந்தியாவின் மக்கள்தொகை நன்மை ஒரு உண்மையான பொருளாதார பலமாக மாறும்.

கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் இந்தியா முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இருப்பினும், ஏறக்குறைய அனைவருக்கும் பள்ளிக் கல்வி உறுதி செய்யப்பட்டிருந்தபோதிலும், எதிர்பார்க்கப்படும் பள்ளிக் கல்வி ஆண்டுகள் 13.4 ஆண்டுகளாகவே உள்ளன. இது பல நடுத்தர வருமானப் பொருளாதாரங்களில் காணப்படும் 15-16 ஆண்டுகளைவிடக் குறைவான அளவாகும். கற்றல் விளைவுகள், குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில், சீரற்ற நிலையில் உள்ளன. பயனுள்ள பள்ளிக் கல்வியின் ஒவ்வொரு கூடுதல் ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.3-0.4 சதவீதம் உயர்த்துகிறது. ஆனால், அது கற்றலின் தரம் மேம்படும்போது மட்டுமே ஏற்படக்கூடும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பலவீனமான அடிப்படைகள் (Weak foundations), பிற்காலக் கல்வி மற்றும் பயிற்சிகளின் பலன்களைக் கடுமையாகக் குறைக்கின்றன.


மேலும், திறன் உருவாக்கம் என்பது மிகவும் தடையாகவே உள்ளது. 15-29 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே முறையான தொழிற்பயிற்சி பெற்றுள்ளனர். அதே சமயம் 60%-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் திறமையான தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுவதாகத் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளிதான், உற்பத்தித்திறனில் அதற்கேற்ற உயர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு ஏன் வளர்ந்துள்ளது என்பதை விளக்குகிறது. திறன்கள் இல்லாத மக்கள்தொகை வளர்ச்சி எந்தப் பலனையும் அளிக்காது. அது குறைந்த தரமான வேலைகளுக்கான போட்டியை மட்டுமே அதிகரிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) பிரச்சனையானது வெறும் பள்ளியில் சேர்வது மட்டுமல்ல, திறன்களின் பற்றாக்குறைதான் என்பதை அங்கீகரித்தது. இது அடிப்படைக் கல்வி, தொழிற்கல்வி, பயிற்சிப் பணிகள் மற்றும் மாணவர்கள் பள்ளியிலிருந்து பணிக்குச் செல்ல உதவுவதில் கவனம் செலுத்துகிறது. இந்தத் திசை சரியானதுதான். ஆனால், முன்னேற்றம் மெதுவாக உள்ளது. தொழிற்கல்வித் திட்டங்கள் சீரற்றதாகவும், பலவீனமான தொடர்பைக் கொண்டவையாகவும் உள்ளன. மேலும், பயிற்சிப் பணிகளின் எண்ணிக்கையும்  குறைவாகவே உள்ளது.


எனவே, இந்தியாவின் கல்விச் சவாலானது இப்போது பள்ளி வருகை பற்றியது மட்டுமல்ல, கற்றல் மற்றும் திறன்கள் பற்றியது தான். அது குழந்தைகள் என்ன கற்கிறார்கள், அவர்களால் என்ன செய்ய முடியும் மற்றும் அந்தக் கற்றலை எவ்வளவு விரைவாக ஆக்கப்பூர்வமான வேலையாக மாற்ற முடிகிறது என்பதைப் பற்றியது. விரைவான முன்னேற்றம் இல்லையென்றால், மக்கள்தொகை பலன் என்பது ஒரு வாக்குறுதியாகவே நின்றுவிடும். உண்மையான மாற்றமாக மாறாது.


இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை


இந்தியாவின் சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் நம்பிக்கையளிப்பதாக உள்ளன. காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (Periodic Labour Force Survey (PLFS)) தரவுகளின்படி, 2017-18 மற்றும் 2023-24-ஆம் ஆண்டிற்கு இடையில், மொத்த வேலைவாய்ப்பு 47.5 கோடியிலிருந்து 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வேலையின்மை விகிதம் 6.0 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இளைஞர்களிடையே வேலையின்மையும் குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு 23.3%-லிருந்து 41.7%-ஆக உயர்ந்துள்ளது. இது வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருவதைக் காட்டுகிறது.


2017-ஆம் ஆண்டு முதல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees’ Provident Fund Organisation (EPFO)) 7.7 கோடி நிகர உறுப்பினர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பது, இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் முறைப்படுத்தல் ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் குறியீடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தத் மாற்றங்கள் முக்கியமானவை. பல குடும்பங்களுக்கு, எந்த வகையான வேலையாக இருந்தாலும் அதுவே நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதாரத்தைக் குறிக்கிறது. ஆனால், இந்த எண்களை மட்டும் வைத்துப் பார்க்கும்போது, ​​இந்தியா தனது மக்கள்தொகை நன்மையை நீண்டகால வளர்ச்சிக்கு மாற்றுகிறது என்பதை நிரூபிக்கவில்லை.


உற்று நோக்கினால், புதிதாக உருவாக்கப்படும் பெரும்பாலான வேலைகள் சுயதொழில் அல்லது தற்காலிக வேலைகள் என்பது தெரியவருகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் இந்த நிலை காணப்படுகிறது. சிறந்த மாற்று வழிகள் இல்லாததால் மக்கள் இந்த வேலைகளை ஏற்கின்றனர். வேளாண்மை, கட்டுமானம் மற்றும் சிறு வர்த்தகம் போன்ற துறைகளில், வருமானம் குறைவாகவும் நிலையற்றதாகவும் இருந்தாலும் கூட, வேலையின்மை விகிதம் குறையக்கூடும். இத்தகைய சூழ்நிலைகளில், வேலையின்மை குறைவது என்பது சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைப்பதைக் குறிக்காமல், எந்த விலையைக் கொடுத்தாவது வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.


மக்கள் திறமைகளுடன் பணிபுரியும்போது மக்கள்தொகை ஈவுத்தொகை ஈட்டப்படுகிறது.


மேலும், பொது வேலைவாய்ப்புத் திட்டங்கள் (VB-G RAM G) நெருக்கடியான காலங்களில் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கின்றன. ஆனால், அவை உற்பத்தித்திறனை அதிகரிக்கவில்லை. மேலும், திறமையான, அதிக ஊதியம் பெறும் வேளாண்மை அல்லாத வேலைகளுக்கு மாற்றாகவும் அமையாது.


மேலும், பெண்களின் பங்கேற்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பையும் கவனமாகப் பார்க்க வேண்டும். பல பெண்கள் பணியிடத்தில் நுழைந்துள்ளனர். பெரும்பாலும் முறைசாரா அல்லது ஊதியம் இல்லாத குடும்பப் பணிகளிலேயே ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பான, வழக்கமான மற்றும் நியாயமான ஊதியம் பெறும் வேலைகளுக்கான அணுகல் இல்லாத நிலையில், அதிக பங்கேற்பு என்பது தானாகவே அதிகாரமளிப்பு அல்லது பொருளாதாரப் பாதுகாப்பாக மாறிவிடுவதில்லை.


இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில், இந்தியாவிடம் எப்பொழுதும் ஒரு இளம் தொழிலாளர் சக்தி இருக்காது. உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை 2040-ஆம் ஆண்டுக்கு முன்பே உச்சத்தை எட்டும். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா என்ன செய்கிறதோ, அதுவே வயதடைந்து வரும் எதிர்காலத்தில் அது கொண்டிருக்கும் பொருளாதாரத்தின் தன்மையை வடிவமைக்கும்


அதிக மக்கள் வேலை செய்யும்போது மக்கள்தொகை பலன் கிடைப்பதில்லை. மாறாக மக்கள் திறமையுடனும், கண்ணியத்துடனும், நிலைத்தன்மையுடனும் வேலை செய்ய முடிந்தால் மட்டுமே அது சாத்தியமாகிறது. மேலும், தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள் பாதுகாப்பின்மையைக் குறைத்து, பணியிட மாற்றத்தை மேம்படுத்தினால் மட்டுமே மனித மூலதன உருவாக்கத்திற்கு ஆதரவளிக்க முடியும். இல்லையெனில், நெகிழ்வான வேலைவாய்ப்புகள் மக்களுக்குத் திறன்களைப் பெற உதவுவதற்குப் பதிலாக, திறன் மேம்பாட்டிற்கே மாற்றாக அமைந்துவிடக்கூடும்.



நேரம் ஏன் முக்கியமானது?


வரலாறு ஒரு எளிய பாடத்தை வழங்குகிறது. 1960-களின் முற்பகுதியில், தென் கொரியாவின் வருமான நிலை இந்தியாவிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. அது தற்செயலாக வளர்ச்சி அடையவில்லை. தனது இளம் மக்கள்தொகை குறையத் தொடங்குவதற்கு முன்பு, தென் கொரியா உயர்நிலைப் பள்ளிகள், வேலைப் பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்ததுடன், கல்வியை தொழில்துறையுடன் இணைத்தது.


1980-களுக்குள், அதன் தொழிலாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இடைநிலைக் கல்வியை முடித்திருந்தனர். வயதடையத் தொடங்கியபோது, ​​நிலையான ஊதியங்களையும் வாழ்க்கைத்தரத்தையும் ஆதரிக்கும் உற்பத்தித்திறன் ஏற்கெனவே அதிகமாக இருந்தது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், அப்படியே பின்பற்றுவது அல்ல, மாறாக சரியான வரிசைமுறையைக் கடைப்பிடிப்பதுதான். மனித மூலதனத்தில் முதலீடு முதலில் வந்தது, அதைத் தொடர்ந்து அதிக வருமானம் கிடைத்தது. தென்கொரியா முதலில் மக்களின் மீது முதலீடு செய்தது. அதன் பிறகு தான் செல்வந்த நாடாக மாறியது. கல்வி, திறன்கள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அது செல்வம் சேரும் வரை காத்திருக்கவில்லை. இது செல்வந்தராகுவதற்குத் தேவையான மனிதத் திறன்களையும் கல்வியையும் வளர்க்கிறது.


சுருக்கமாகச் சொன்னால், சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், கல்வியை வேலைவாய்ப்புடன் இணைப்பதன் மூலமும், திறன்கள், கற்றல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலமும் இந்தியா தனது இளம் மக்களை ஒரு உண்மையான மக்கள்தொகை பலனாக மாற்ற முடியும். இந்தியாவின் மக்கள்தொகை மாற்றங்கள் சாதகமாக உள்ளன. ஆனால், இப்போது எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே இந்த வாய்ப்பை அதிக வருமானம் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியாக மாற்றும். உண்மையான வளர்ச்சி என்பது வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டும் குறிப்பதில்லை. மக்களுக்கு கண்ணியம், பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்கும் வேலைகளின் மூலம் அனுபவிக்கப்பட வேண்டும்.


 Original Article : Why human capital needs to be the anchor of growth. -Pushpendra Singh and Archana Singh

Share:

செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையத்தின் (NBDSA) பங்கு மற்றும் பணிகள் என்னென்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 சமீபத்தில் ‘Financial Times’ இதழில் வெளியான ஒரு கட்டுரையில், ஊடக ஜாம்பவான் ரூபர்ட் முர்டாக்கின் மகன் ஜேம்ஸ் முர்டாக், 'அனைத்தையும் கேபிள் செய்தி ஊடகங்களைப் போல மாற்றுவது' (the cable newsification of everything) என்று அவர் குறிப்பிட்டதை விமர்சித்துள்ளார். இது போன்ற கருத்துக்கள், ஃபாக்ஸ் (Fox), சிஎன்என் (CNN) அல்லது எம்எஸ்என்பிசி (MSNBC) போன்ற செய்தி ஊடகங்களைத் தாண்டி உலகளவில் நிலவும் ஒரு பெரிய சிக்கலை விவரிப்பதாக சசி தரூர் குறிப்பிடுகிறார். 


முக்கிய அம்சங்கள்:


— கேபிள் செய்திகளின் நோக்கங்களான—மோதல், ஆத்திரம் மற்றும் பரபரப்பு செய்திகள் தற்போது ஒட்டுமொத்த தகவல் தொடர்பு அமைப்பிலும் பரவி, மக்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்து, மக்களிடையே பிரிவினையை ஊக்குவிப்பதாக முர்டாக் எழுதியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இந்த விளக்கம் இந்தியாவிற்கு நன்கு பொருந்துகிறது. இங்கு தொலைக்காட்சி விவாதங்கள் ஒவ்வொரு இரவும் மல்யுத்தப் போட்டிகளைப் போல மாறிவிட்டன.


— கேபிள் செய்திகள் இப்போது மக்களுக்குத் தகவல்களைத் தருவதைவிட, அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன என்று முர்டாக் முக்கியமான வாதத்தை முன்வைக்கிறார். இது இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் தெளிவாகத் தெரிகிறது. இடைவிடாத 'முக்கிய செய்திகள்' (breaking news) அறிவிப்புகள், 'இந்த நாடு அறிய விரும்புகிறது' என்று செய்தி வாசிப்பாளர்கள் ஆவேசமாகக் கத்துவது மற்றும் சிக்கலான விஷயங்களைக்கூட வெறும் சத்தமான விவாதங்களாகச் சுருக்குவது என இந்த நடைமுறை நீடிக்கிறது. இந்தத் பாணி தற்போது அரசியல், வணிகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் பரவியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். 


— இந்தியாவில், இந்த அணுகுமுறை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள முதன்மை நேர விவாதங்கள் (Primetime debates), அறிவுபூர்வமான கலந்துரையாடல்களாக இல்லாமல், வார்த்தைகளால் மல்லுக்கட்டும் 'மல்யுத்தப் போட்டிகளைப்' போலவே இருக்கின்றன. அங்கு உண்மைகளைவிட சத்தமாகப் பேசுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது; செய்தித் தொகுப்பாளர்கள் நடுநிலையான நெறியாளர்களாகச் செயல்படாமல், ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் பொறுப்பாளர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். 


— இந்தத் தகவல் பரவல் தொலைக்காட்சியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. சமூக ஊடகங்கள் இத்தகைய காட்சிகளை வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் ட்விட்டரில் (Twitter) வேகமாகப் பரவக்கூடிய குறுகிய வீடியோக்களாக மாற்றி, இன்னும் பெரிதாக்குகின்றன. இது ஒரு சுழற்சியை உருவாக்குகிறது. தொலைக்காட்சி வாயிலாக உணர்ச்சிகளைத் தூண்டுகிறது மேலும் சமூக ஊடகங்கள் அதனைப் பலப்படுத்துகின்றன. அரசியல்வாதிகள் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். இது அந்தச் சுழற்சியைத் தொடரச் செய்கிறது.


— தற்போது கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், துல்லியமான செய்திகளுக்கும் உண்மைத்தன்மை சரிபார்ப்புக்கும் பெயர்பெற்ற முன்னணி அச்சு ஊடகங்கள் (செய்தித்தாள்கள்) கூட தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. காலையில் செய்தித்தாள் வாசகர்களைச் சென்றடைவதற்கு முன்பே, மக்கள் முந்தைய இரவு தொலைக்காட்சியில் அந்தச் செய்திகளைப் பார்த்திருப்பார்கள் என்பது ஆசிரியர்களும் அறிவார்கள்.


— பல ஆண்டுகளாக, இந்தியாவின் அச்சு ஊடகங்கள் தொலைக்காட்சியின் மேலோட்டமான செய்தி வழங்கும் முறைக்கு ஒரு மாற்றாகவும், அதைச் சரிசெய்யும் கருவியாகவும் தங்களைக் கருதின. அவசரமானதொலைக்காட்சி விவாதங்களுக்குப் பிறகு, செய்தித்தாள்கள் செய்திகளின் பின்னணி, ஆழமான விவரங்கள் மற்றும் நிதானத்தை வழங்கின; இது வாசகர்களுக்குச் செய்திகளைச் சிந்திப்பதற்கான ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.


— எல்லா விஷயங்களும் அவசரமானதாகவும் மோதல் போக்கைக் கொண்டதாகவும் முன்வைக்கப்படும்போது, நேயர்கள் அதன் மீது அவநம்பிக்கை கொண்டு ஆர்வத்தை இழக்கிறார்கள். அச்சு ஊடகங்களும் இதே பாணியைப் பின்பற்றத் தொடங்கினால், பொதுமக்களால் இந்தத் தொடர்ச்சியான தகவல் இரைச்சலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று முர்டாக் எச்சரித்துள்ளார். 


— இதன் விளைவுகள் மிகவும் தீவிரமானவையாக அமையும் என்கின்றனர். முதலாவதாக, பத்திரிகை மீதான நம்பிக்கை குறைகிறது. முதலாவதாக, பத்திரிகை மீதான நம்பிக்கை சிதைகிறது. ஒவ்வொரு செய்தியும் ஒரு நெருக்கடியாக முன்வைக்கப்படும்போது, ​​ஒவ்வொரு தலைப்பும் கவனத்தை ஈர்க்கும் போது, ​​வாசகர்கள் செய்தி ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மையை இழக்கின்றனர்.


— இரண்டாவதாக, மக்களிடையே பிரிவினை அதிகரிக்கிறது. ஆக்ரோஷமான உணர்ச்சிகளைத் தூண்டும் பத்திரிகைத்துறை, தீவிரமான கருத்துக்களை ஊக்குவிக்கிறது. நிதானமான கருத்துக்களைப் புறக்கணிக்கிறது மேலும், சமரசத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.


— மூன்றாவதாக, ஜனநாயகம் பலவீனம் அடைகிறது. உண்மையான செய்திகளுக்குப் பதிலாக, பரபரப்பான செய்திகளை மட்டுமே பார்க்கும் பொதுமக்களால் கொள்கைகள், நிர்வாகம் அல்லது சமூகப் பொறுப்புகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட முடியாது என்றும் எச்சரிக்கின்றனர். 

— இந்தியாவில் ஏற்கனவே அரசு நிறுவனங்கள் அழுத்தத்தில் இருக்கும் நிலையில், பத்திரிகை துறை மீதான இந்த நம்பிக்கையிழப்பு மிகவும் ஆபத்தானது. மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதைவிட அவர்களுக்குத் தகவல் அளிப்பதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பணிந்து போவதைவிட அவர்களைக் கேள்வி கேட்பதாகவும், வெறும் விளம்பரங்களை விட உண்மையைத் தேடுவதாகவும் இருக்கக்கூடிய பத்திரிகைத்துறையே ஒரு ஜனநாயக நாட்டிற்கு அவசியமானதாகும்.


— அப்படியானால், என்ன செய்ய வேண்டும்? இதற்குத் தீர்வு தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்களைக் கைவிடுவது அல்ல, மாறாக அந்தத் தளங்களில் இதழியலின் அடிப்படை விழுமியங்களை மீண்டும் நிலைநிறுத்துவதே ஆகும். நமக்குக் கூச்சல் போடும் தொகுப்பாளர்களைவிட, விவாதங்களை வழிநடத்துபவர்கள் தேவை. குழப்பத்தை விளைவிக்கும் விவாதங்களைவிட, பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் விவாதங்கள் தேவை மற்றும் முந்தைய இரவு தொலைக்காட்சியில் நடந்த வாதங்களையே அப்படியே நகலெடுக்காத செய்தித்தாள்கள் தேவை. ஒரு செய்தி அதிக அளவில் பகிரப்படுவதைவிட அதன் 'உண்மைத்தன்மைக்கு' ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். செய்தியாளர்கள் மோதல்களைவிட அதன் சமூகச் சூழலில் கவனம் செலுத்த வேண்டும்.


— தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் போன்ற நவீன தகவல் தொடர்பு கருவிகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. அவை பொது நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காக அல்ல என்கின்றனர். இந்திய ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் வெறும் மோதலாக மாற்றாமல், அதற்குப் பதிலாக புலனாய்வுச் செய்திகள், விளக்கமான தகவல்கள் மற்றும் ஆழமான விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


— ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த தேசியவாத பத்திரிகைகள் முதல், அவசரநிலை (Emergency) காலத்தை எதிர்த்து நின்ற செய்தித்தாள்கள் வரை, இந்திய ஊடகங்கள் முக்கியமான தருணங்களில் எழுச்சியுடன் செயல்பட்டுள்ளன. அந்த உணர்வு இப்போது பலவீனமடைந்துள்ளது போலத் தெரிகிறது, அந்த உணர்வுகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

— பத்திரிகைத்துறை மீண்டும் ஒருமுறை சமூகத்தின் ஒரு கண்காணிப்பாளராகவும், நம்பகத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். அது தொடர் செய்திகளின் எண்ணிக்கையைவிட தெளிவான தகவல்களுக்கும், மக்களின் உணர்ச்சியைவிட செய்தியின் நடுநிலைமைக்கும், மோதல்களைவிடச் சமூகச் சூழல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது போன்ற பத்திரிகைத்துறை நடைமுறைகளையே ஒரு ஜனநாயக நாடு சார்ந்திருக்கிறது.


— ஜனநாயகம் அதிக இரைச்சலுடன் இருக்கும் ஒரு நாட்டில், பத்திரிகைத்துறை அந்த இரைச்சலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். மக்களுக்குத் தெளிவான தகவல்களை வழங்கி, அவர்களை வலுப்படுத்தும் ஊடகங்களே நமக்குத் தேவை என்றும் வெறும் கூச்சலிடும் அல்லது மக்களை திசைதிருப்பும் ஊடகங்கள் அல்ல என்றும் வாதிடுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், நமக்குத் தரமான பத்திரிகைத் துறை சார்ந்த நெறிமுறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது.


— தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் செய்தி சேனல்களுக்கான ஒரு சுதந்திரமான சுய-ஒழுங்குமுறை அமைப்பு வெளியிட்ட உத்தரவுகளில், கிட்டத்தட்ட 60% உத்தரவுகள் மத நல்லிணக்கத்திற்கு எதிரான நிகழ்ச்சிகளுக்கு எதிராகவே வழங்கப்பட்டுள்ளன.


— இந்த உத்தரவுகளை செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (News Broadcasting & Digital Standards Authority (NBDSA)) வழங்கியுள்ளது. இது தனியார் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கத்தால் (News Broadcasters & Digital Association (NBDA)) அமைக்கப்பட்ட அமைப்பாகும்.


— ஜனவரி மாதம் 1-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு வரை, செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) மொத்தம் 54 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில் 32 வழக்குகளில், நில ஆக்கிரமிப்பு, பெண்களின் பாதுகாப்பு, உணவு சுகாதாரம் போன்ற விவகாரங்களுடன் "ஜிஹாத்" என்ற வார்த்தையைச் சேர்த்து மதரீதியான தவறான பிம்பங்களை உருவாக்கியதற்காகத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

— செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) பெரும்பாலும் சர்ச்சைக்குரிய காணொளிகளைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்க மட்டுமே உத்தரவிட்டுள்ளது. ₹25 லட்சம் வரை அபராதம் விதிக்கும் அதிகாரம் இருந்தும், அதை மிக அரிதாகவே பயன்படுத்தியுள்ளது. மேலும், ஒரு புகார் அளிக்கப்பட்டதிலிருந்து இறுதி உத்தரவு வருவதற்குச் சராசரியாக 11 முதல் 12 மாதங்கள் ஆகின்றன. இந்தத் தாமதத்தினால், அந்தத் தவறான செய்திகள் நீண்டகாலம் இணையத்தில் அப்படியே இருக்கின்றன.


— 2023-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய தரவுகளை ஆய்வு செய்ததில், இந்தச் சுயக்கட்டுப்பாட்டு அமைப்பு விதிமீறல்களை கண்டறிந்தபோதிலும், கடுமையான தண்டனைகளை வழங்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், நீண்டகால தாமதமும் இந்த அமைப்பின் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது.


— மொத்தமுள்ள 54 வழக்குகளில், 43 வழக்குகளில் விதிமீறல்கள் நடந்திருப்பதை செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) கண்டறிந்துள்ளது. இதில் சமூக நல்லிணக்கம் தொடர்பான 39 வழக்குகளில் 32 வழக்குகள் அடங்கும். மீதமுள்ள 11 வழக்குகளில் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை. ஏனெனில், அவற்றில் விதிமீறல்கள் ஏதும் காணப்படவில்லை, என்றும் விதிமீறல் மிகச் சிறிய அளவில் இருந்தது என்றும் ஏற்கனவே திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) என்பது செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் (NBDA) அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு தனியார் தொலைக்காட்சி செய்திகள், நடப்பு நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பாளர்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இது இந்தியாவில் உள்ள செய்தி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பாளர்களின் ஒருங்கிணைந்த குரலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.


— இந்த அமைப்பிற்கு தலைமை தாங்குபவர் ஒரு சிறந்த சட்ட நிபுணராக இருக்க வேண்டும். அத்துடன், செய்தி ஆசிரியர்கள் மற்றும் சட்டம், கல்வி, இலக்கியம், பொது நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் வாரியத்தின் பெரும்பான்மை முடிவின்படி நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


— இந்த ஆணையத்தின் தலைவராக தற்போது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளார். இதில் மேலும் எட்டு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் அல்லது இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகளான சுயேச்சை உறுப்பினர்கள்; மற்ற நான்கு பேர் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் ஆசிரியர் உறுப்பினர்கள் ஆவர். இந்த ஆணையம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


— செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணைய அமைப்பு புகார்களைத் தீர்க்க இரண்டு கட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறது: முதலில், புகார் அளிக்க விரும்பும் நபர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் 15 நாட்களுக்குள் தனது புகாரைச் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்த 15 நாட்களுக்குள் செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணைய அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்யலாம். இந்த அமைப்பு தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டது என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் தனிநபர்களின் புகார்கள் மூலமே வந்துள்ளன. ஒரு கூட்டத்தில் எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது, நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அவற்றின் தன்மையைப் பொறுத்தது என்கின்றனர்.


Original Article : What is the role and function of the News Broadcasting & Digital Standards Authority (NBDSA)? -Roshni Yadav , Khushboo Kumari

Share:

C295 விமானம் இந்திய விமானப்படையின் (Indian Air Force) கடற்படையை எவ்வாறு மேம்படுத்தும்? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 தற்போதைய நிகழ்வு: 2024 அக்டோபரில் வதோதராவில் உள்ள ஏர்பஸ்-டாடா சி-295 (Airbus–Tata C-295) இறுதி அசெம்பிளி ஆலை கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஆண்டு செப்டம்பருக்குள் முதல் 'இந்தியாவில் தயாரிப்போம்' (Made in India) சி-295 விமானம் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்தார். அதே நாளில் அவர் டெல்லியில் ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸை சந்தித்தார். இந்த வளர்ச்சி நமது பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பின் ஆழம் அதிகரித்து வருவதை (growing depth of our defence industrial collaboration) காட்டுகிறது என்று ஜெய்சங்கர் கூறினார்.


முக்கிய அம்சங்கள் :


ஏர்பஸ் C295, முன்பு CASA C-295 என்று அழைக்கப்பட்டது. இது ஒரு நடுத்தர தூர இரட்டை எஞ்சின் டர்போபிராப் தந்திரோபாய போக்குவரத்து விமானமாகும் (turboprop tactical transport aircraft). இது முதலில் ஸ்பானிஷ் விண்வெளி நிறுவனமான CASA-வால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இது இப்போது ஐரோப்பிய பன்னாட்டு ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பிரிவின் ஒரு பகுதியாகும்.


“வதோதராவில் உள்ள ஏர்பஸ்–டாடா சி-295 இறுதி அசெம்பிளி வரிசை அக்டோபர் 2024-ல் நாட்டின் தலைவர்களால் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு முதல் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ சி-295 விமானம் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எங்கள் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பின் வளர்ந்துவரும் பலத்தையும், மீள் உற்பத்தித் திறன்களை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது, ”என்று அவர் கூறினார்.


இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய சர்வதேச பிரச்சினைகளை அவர்கள் மதிப்பாய்வு செய்ததாகவும், எதிர்காலத்தில் உறவை ஒரு இராஜதந்திர ரீதியில் கூட்டமைப்பாக உயர்த்துவதற்கு இணைந்து பணியாற்றவும் ஒப்புக்கொண்டதாகவும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.


இந்தியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே நெருக்கமான மற்றும் நட்புறவு நிலவுவதாக ஜெய்சங்கர் கூறினார். இந்த உறவுகள் பொதுவான ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பன்முகத்தன்மைக்கும் விதி அடிப்படையிலான ஒழுங்கிற்கும் உள்ள மரியாதையை அடிப்படையாகக் கொண்டவை. "வழக்கமான உயர்மட்டப் பரிமாற்றங்களுடன் எங்கள் அரசியல் ஈடுபாடு சீராக வளர்ந்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.


“பொருளாதாரக் கூட்டமைப்பு எங்கள் உறவின் ஒரு முக்கியத் தூண்” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய வெளியுறவுத்துறை அமைச்சர், “ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் முக்கியமான வர்த்தக நட்பு நாடுகளில் ஸ்பெயின் ஒன்றாகும். மேலும், சமீபத்திய ஆண்டுகளில் பொருட்களின் மீதான எங்கள் இருதரப்பு வர்த்தகம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது” என்றார்.


இந்த ஆண்டு, இந்தியாவும் ஸ்பெயினும் தூதரக உறவுகளின் 70 ஆண்டுகளைக் கொண்டாட உள்ளன. மேலும், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான இரட்டை ஆண்டையும் அவை குறிக்கின்றன. இது, செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை எதிர்காலத்தை நோக்கிய ஒத்துழைப்புடன் இணைப்பதில் உள்ள இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என்று ஜெய்சங்கர் கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


2021-ல், இந்தியா 56 C295 விமானங்களை வாங்குவதற்காக ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் (Airbus Defence and Space) நிறுவனத்துடன் ரூ. 21,935 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. முதல் 16 விமானங்கள் ஸ்பெயினில் உள்ள செவில்லில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் இறுதி அசெம்பிளி ஆலையிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் "பறக்கும் நிலையில்" வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட வேண்டும். 


வதோதராவில் உள்ள இந்த ஆலை, இந்தியாவின் முதல் தனியார் இராணுவப் போக்குவரத்து விமான உற்பத்தி ஆலையாகும். இது டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (Tata Advanced Systems Limited (TASL)) மற்றும் ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் (Airbus Defence and Space (Airbus DS)) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டமைப்பு ஆகும்.


வெளியுறவுத்துறை வலைத்தளத்தின்படி, 1956-ல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாக இருந்து வருகின்றன. இந்தியாவின் முதல் நிரந்தர தூதரை 1965-ல் நியமிக்கப்பட்டது.


ஸ்பெயினின் குடியேறிய மக்கள்தொகையில் இந்திய சமூகம் ஒரு சிறிய பகுதியினராக உள்ளனர். ஆசிய சமூகங்களில், இந்திய புலம்பெயர்ந்தோர் மூன்றாவது பெரிய குழுவாகும். ஆரம்பகால இந்திய குடியேறிகள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் துணைக்கண்டத்திலிருந்து வந்து கேனரி தீவுகளில் குடியேறிய சிந்தி இனத்தவர்கள் ஆவர். பலர் 1950-கள் மற்றும் 1960-களில் ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்குப் பயணம் செய்தனர். அதே சமயம் சிலர் நேரடியாக இந்தியாவிலிருந்து வந்தனர்.


Original Article : How will C295 aircraft enhance the India Airforce fleet? -Roshni Yadav , Khushboo Kumari    

Share:

மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளில் இந்தியா பின்தங்கியுள்ளது. இப்போது அது முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளது. -நிஷா ஹரிஹரன்

நம் நாட்டில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில் முன்னேற்றம் என்பது அதிக மேமோகிராம்கள் (mammograms) செய்வதால் வராது. சரியான பெண்ணுக்கு சரியான நேரத்தில் சரியான பரிசோதனை செய்வதன் மூலம் அது வரும்.


நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, மார்பகப் புற்றுநோய் பரிசோதனையின் முதுகெலும்பாக மேமோகிராபி (mammography) இருந்து வருகிறது. இது 50 முதல் 69 வயதுக்குட்பட்ட பெண்களிடையே இறப்பு விகிதத்தை 25-30 சதவீதம் குறைத்ததாகக் கூறப்படுகிறது. மார்பகப் புற்றுநோயின் ஆபத்து வயதுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கிறது என்ற கருத்துகணிப்பின் அடிப்படையில் ஸ்கிரீனிங் நெறிமுறை (screening protocol) கட்டமைக்கப்பட்டது. இந்த நம்பிக்கையின் காரணமாக, யாருக்கு எப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வயது ஒரு முக்கிய காரணியாகப் பயன்படுத்தப்பட்டது.


மார்பகப் புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் அல்ல என்பதை இப்போது நாம் அறிவோம். இதில் உயிரியல்ரீதியாகப் பல வேறுபட்ட துணை வகைகளின் தொகுப்புகள் ஆகும். ஒவ்வொன்றும் வெவ்வேறு வளர்ச்சி மற்றும் ஆபத்தைக் கொண்டுள்ளன என்பதை இப்போது நாம் அறிவோம். இவற்றில் குடும்ப வரலாறு, மார்பக அழுத்தநிலை, இனப்பெருக்க காரணிகள், வாழ்க்கை முறை மற்றும் மரபியல் அனைத்தும் மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்தில் பங்களிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.


இதை உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, ​​பாரம்பரிய வயது அடிப்படையிலான மாதிரியானது, மாறுபட்ட பாதைகள் மற்றும் விளைவுகளைக் கொண்ட ஒரு சிக்கலான நோயின் மிகைப்படுத்தப்பட்ட எளிமைப்படுத்தலாகும்.


ஆபத்துக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட பரிசோதனை முறை நோக்கிய மாற்றம்


ஆபத்துக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட பரிசோதனை செய்வது நிலையான வயது அடிப்படையிலான விதிகளிலிருந்து விலகி, பெண்ணின் தனிப்பட்ட ஆபத்துக்கு ஏற்ப பரிசோதனையை மாற்றியமைக்கிறது. குடும்ப வரலாறு, மார்பக அழுத்த நிலை, இனப்பெருக்க வரலாறு மற்றும் மரபியல் போன்ற காரணிகளும் சேர்க்கப்படுகின்றன. இந்தக் காரணிகள் யாருக்குக் கூடுதல் கண்காணிப்பு தேவை, ஆபத்து இல்லாமல் யார் குறைந்த இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்பதையும் கண்டறிய அவை உதவுகின்றன.


டிசம்பர் 12, 2025 அன்று, பெண்கள் ஆபத்து அளவுகளைப் பொறுத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தல் (Women Informed to Screen Depending on Measures of Risk(WISDOM)) சோதனையின் முதல் முடிவுகள் Journal of the American Medical Association (JAMA) இதழில் வெளியிடப்பட்டன. இது அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு முக்கிய சீரற்ற ஆய்வு, ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையுடன் ஒப்பிட்டது. வருடாந்திர மேமோகிராமி என்பது பாரம்பரிய வயது அடிப்படையிலான முறையாகும். இந்த ஆய்வில் 40 முதல் 74 வயதுடைய பெண்கள் சேர்க்கப்பட்டனர். தனிப்பயனாக்கப்பட்ட முறை தனிப்பட்ட மார்பகப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகளைப் பயன்படுத்தியது. அவற்றில் மார்பக அழுத்த நிலை, குடும்ப வரலாறு மற்றும் மரபணு ஆபத்து ஆகியவை அடங்கும்.


இந்தக் ஆய்வுகள் ஊக்கமளிப்பதாக இருந்தன. ஆபத்து அடிப்படையிலான பரிசோதனை சாத்தியமானதாகவும், பெண்களுக்கு ஏஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மருத்துவரீதியாகவும், மேம்பட்ட புற்றுநோய்களைக் கண்டறிவதில் இது வழக்கமான பரிசோதனைக்கு நிகராக இருந்தது. சுருக்கமாக, தனிநபரின் ஆபத்துக்கு ஏற்ப பரிசோதனையை மாற்றியமைத்தல் பாதுகாப்பை குறைக்கவில்லை. மேலும், சுகாதார அமைப்புகள் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தவும் உதவும்.


ஐரோப்பிய ஆய்வுகளிலிருந்து வரும் புதிய தரவுகள் மேலும் ஆதாரங்களைச் சேர்க்கும். அத்தகைய ஒரு ஆய்வுதான் ‘மை பெர்சனலைஸ்டு பிரெஸ்ட் ஸ்கிரீனிங் (My Personalised Breast Screening (MyPeBS))’. இந்த ஆய்வுகள், இந்த அணுகுமுறையை எவ்வாறு பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டும்.


இது இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது?


இந்தியாவில் மக்கள்தொகை அடிப்படையிலான தேசிய அளவிலான மேமோகிராஃபி திட்டம் (mammography programme) ஒருபோதும் இருந்ததில்லை. இன்று இருப்பது சந்தர்ப்பவாத பரிசோதனை மற்றும் ஆங்காங்கே சில தனியார் முயற்சிகளும் உள்ளன. இந்தக் குறைபாடு பெரும்பாலும் ஒரு தோல்வியாக விவரிக்கப்படுகிறது. ஆனால் இந்த "தோல்வி" இந்தியாவின் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தால் என்ன செய்வது?


மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், மார்பகப் புற்றுநோய் பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படுகிறது. இது இந்தியாவில், நோய்க் கண்டறிதலுக்கான சராசரி வயது வெறும் 47 ஆண்டுகள் ஆகும். இது மேற்கத்திய நாடுகளைவிட கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகாலம் குறைவு. இந்தக் குறைந்த வயது காரணமாக, மேமோகிராமின் உணர்திறன் குறைவாக உள்ளது. இது புற்றுநோயைக் கண்டறியத் தவறவிடும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey(NFHS)) மற்றும் இந்தியாவில் நீடித்த முதுமை ஆய்வு நிலை-1 (Longitudinal Ageing Study(LASI)) ஆகியவற்றின் தரவுகள், 0.9 சதவீத பெண்கள் மட்டுமே மருத்துவ மார்பகப் பரிசோதனையை மேற்கொண்டதாகக் காட்டுகின்றன. மேலும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் 1.3 சதவீதம் பேர் மட்டுமே மேமோகிராம் பரிசோதனை செய்துள்ளனர்.


இந்தக் கட்டுப்பாடுகளை உணர்ந்து, உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய மார்பகப் புற்றுநோய் முயற்சி (Global Breast Cancer Initiative (GBCI)), குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், முழுமையான மக்கள்தொகைத் திட்டங்களை அல்லாமல், ஆரம்பகால நோயறிதலில் கவனம் செலுத்தி முன்னுரிமை அளிக்க வேண்டும். இலக்கு வைக்கப்பட்ட, ஆபத்து அடிப்படையிலான பரிசோதனையைப் பயன்படுத்துமாறும் அது அறிவுறுத்துகிறது. அதாவது, முழு மக்களுக்கும் பொதுவான பரிசோதனை செய்வதை அது ஆதரிக்கவில்லை.


மொத்தத்தில், இந்தியாவின் "தவறவிட்ட வாய்ப்பு" உண்மையில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கலாம்.


முன்னேற்றச் செயல்பாடு எப்படி இருக்கும்?


40 ஆண்டுகள் பழமையான ஒரு அமைப்பை இந்திய நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. அது புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க முடியும். இந்த அமைப்பு ஆபதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம். இது இந்தியாவின் மக்கள்தொகை யதார்த்தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இது இந்தியாவின் தற்போதைய சுகாதார அமைப்பின் பலங்களையும் பயன்படுத்திக்கொள்ளும்.


பல கட்டுமானத் தொகுதிகள் (building blocks) ஏற்கனவே உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs), துணை செவிலியர் மருத்துவத் தாதியர் (ANMs), மற்றும் முதன்மை சுகாதார செவிலியர்கள் ஆகியோரைக் கொண்ட பரந்த சமூக சுகாதாரப் பணியாளர் குழு, தாய்சார் மற்றும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. இது மார்பக சுகாதார ஆபத்து மதிப்பீட்டை இயல்பான கூடுதலாகச் சேர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (Ayushman Bharat Digital Mission), பரிசோதனை (screening), பரிந்துரை (referrals), மற்றும் பின்தொடர்தல் (follow-up) ஆகியவற்றை கண்காணிப்பதற்கு ஆதரவளிக்க முடியும். ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project) இறக்குமதி செய்யப்பட்ட அனுமானங்களுக்குப் பதிலாக, இந்திய மரபணு தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மார்பக புற்றுநோய் ஆபத்து மாதிரிகளை (breast-cancer risk models) உருவாக்குவதற்கு நீண்டகால வாய்ப்பை வழங்குகிறது. தேசிய புற்றுநோய் கட்டமைப்பு (National Cancer Grid) தர நிலைகள், பரிந்துரை பாதைகள், மற்றும் மருத்துவ மேற்பார்வைக்கான அடித்தளத்தை வழங்குகிறது. இதனால் ஆரம்பக் கண்டறிதல் (early detection) சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சையுடன் (timely diagnosis and treatment) இணைக்கப்படுவதை உறுதி செய்கிறது.


போலியோ ஒழிப்பு மற்றும் கோவிட் தடுப்பூசி மூலம், இந்தியா தனது பெரிய, பரவலாக்கப்பட்ட பொது சுகாதாரத் திட்டங்களை துல்லியமாகவும் திறமையாகவும் செயல்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.


பல ஆண்டுகளாக, அக்டோபர் மாதம் பெண்கள் "விழிப்புடன் இருங்கள்" be (aware) வலியுறுத்தும் பிரச்சாரங்களால் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. விழிப்புணர்வு மிக முக்கியமானது. ஆனால் விழிப்புணர்வு மட்டுமே உயிர்களைக் காப்பாற்றாது. உள்ளமைக்கப்பட்ட நுண்ணறிவு கொண்ட அமைப்புகள் தேவை. இந்த அமைப்புகள் ஆபத்தில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, முன்கூட்டியே பதிலளித்து, எந்தப் பெண்ணும் பாதுகாக்கப்படாமல் விடப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய முடியும்.


ஆபத்தின் அடிப்படையிலான பரிசோதனை என்பது இனி ஒரு யோசனை மட்டுமல்ல. WISDOM ஆய்வின் ஆரம்ப முடிவுகள் அதற்கு மருத்துவ நம்பகத்தன்மையை அளித்துள்ளன. நம் நாட்டிற்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில் முன்னேற்றம் என்பது அதிக மேமோகிராம்களைச் செய்வதன் மூலம் வராது. சரியான நேரத்தில் சரியான பெண்ணுக்கு சரியான பரிசோதனையை வழங்குவதன் மூலமே அது வரும்.


எழுத்தாளர், ஆலோசகர் மற்றும் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்.


 Original Article : India has lagged on breast cancer screenings. Now, an opportunity to leapfrog -Nisha Hariharan

Share:

நாம் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே கற்க உதவுவதன் மூலம், இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறோம். -அமிதாப் காந்த்

 இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அரசாங்கம், சமூகங்கள் மற்றும் கூட்டமைப்புகள் மத்தியில் துணிச்சலான நடவடிக்கை, சீரான கவனம் மற்றும் கூட்டு அர்ப்பணிப்பு தேவைப்படும். இது இந்தியாவின் முழுமையான பொருளாதார மற்றும் சமூக ஆற்றலை வெளிக்கொணர்வதற்கான பாதையாகும்.


இந்தியாவின் வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் மக்கள்தொகை ஈவு ஆகியவை சக்திவாய்ந்த ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத முதலீட்டைச் சார்ந்ததுள்ளன. ஆனால், இதுதான் ஆரம்பத்திலேயே சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுவது. இந்தியாவில் 10 வயதுக்குட்பட்ட 250 மில்லியன் குழந்தைகளுடன், ஒரு முக்கியமான மக்கள்தொகை காலகட்டத்தில் உள்ளது. இன்றைய இளைஞர்களில் 137 மில்லியன் பேர் 2047-ம் ஆண்டுக்குள் பணியாளர் தொகுப்பில் இணைவார்கள். அவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள். ஆரம்பகால ஆண்டுகளில் கட்டமைக்கப்படும் அடித்தளமே இறுதியில் நாட்டின் நீண்டகால உற்பத்தித்திறன், புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்குகிறது. இது ஆரம்பக் கல்வியை 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற கருத்தாக்கத்திற்கு முக்கியப் பங்களிக்கிறது.


தரமான ஆரம்பகால கற்றல் அறிவாற்றலை 1.9 புள்ளிகள் அதிகரிக்கிறது என்பதை வேலூரில் இருந்து வெளிவந்த நீண்டகால ஆராய்ச்சி (2024) தெளிவான முடிவுகளைக் காட்டுகிறது. இருப்பினும், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (Early Childhood Education (ECE)) என்பது ஒரு முதல்படி மட்டுமே. குழந்தைகள் முறையான வகுப்பறைகளுக்குள் நுழையும்போதுதான் உண்மையான சவால் தொடங்குகிறது. இந்தக் கட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு (Foundational Literacy and Numeracy (FLN) மிகவும் முக்கியமானது. இவை படிக்க, புரிந்துகொள்ள மற்றும் எண்களைப் பயன்படுத்தும் திறன் போன்றவற்றை உள்ளடக்கியது. எதிர்காலத்தில் குழந்தைகள் கல்வியுடன் எவ்வளவு சிறப்பாக ஈடுபட முடியும் என்பதை இவை தீர்மானிக்கின்றன. தேசிய கல்விக் கொள்கை-2020 (National Education Policy (NEP) இந்த முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இது 3-ம் வகுப்புக்குள் தரமான ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கான உலகளாவிய அணுகலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது இந்தியாவின் மனித மூலதன உத்தியின் இரண்டு முக்கிய தூண்களாகும். இவை வலுவான அங்கன்வாடிகள், பால்வாடிகைகள் மற்றும் ஆரம்ப தொடக்க வகுப்புகள் மூலம் வழங்கப்படுகின்றன.


3–5 வயதுக் குழந்தைகள்: ஆர்வத்தையும் பராமரிப்பையும் வளர்த்தல் — அங்கன்வாடிகளை வலுப்படுத்துதல்


3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் முக்கியமாக அங்கன்வாடிகளில் பராமரிப்பு மற்றும் கல்வியைப் பெறுகிறார்கள். இது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி பெறும் ஆரம்பகால குழந்தைப் பருவ அமைப்பாகும். இது 14 லட்சம் மையங்களைக் கொண்டுள்ளது. இது தகுதியான 60 சதவீத குழந்தைகளுக்கு சேவை செய்கிறது. இருப்பினும், அங்கன்வாடிப் பணியாளர்கள் ஊட்டச்சத்து, நிர்வாகம், முன்பள்ளிக் கல்வி (pre-school education) போன்ற ஒரே நேரத்தில் பல பணிகளைச் கையாளுகிறார்கள். இந்த பல பொறுப்புகள் காரணமாக, உயர்தரக் கற்றலை வழங்குவதற்கான அவர்களின் திறன் பெரும்பாலும் சவாலுக்கு உள்ளாகிறது.


இந்தியாவில், கட்டமைக்கப்பட்ட ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early Childhood Care and Education(ECCE)) திட்டங்கள் தெளிவான நன்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. ஐந்து மற்றும் ஒன்பது வயதிற்குள் நுண்ணறிவு அளவில் (Intelligence quotient(IQ)) 3 முதல் 19 புள்ளிகள் வரை அதிகரிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலூர் ஆய்வு (2024) மற்றும் கே. முரளிதரன் மற்றும் பிறரின் ஆராய்ச்சி இதை ஆதரிக்கிறது. இந்தத் திட்டங்கள் அறிவாற்றல் திறனை மட்டுமல்லாமல், கவனம், உந்துதல் மற்றும் சமூக-உணர்ச்சி வளர்ச்சியையும் வலுப்படுத்துகின்றன.


தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டங்களையும் JPAL ஆய்வுகளின் சான்றுகள் இந்த அணுகுமுறையை ஆதரிக்கின்றன. ஒரு பிரத்யேகக் கல்வியாளரைச் சேர்ப்பது குழந்தைகளின் கற்றல் நேரத்தை இருமடங்காக அதிகரிக்கிறது. இது அறிவாற்றலை மேம்படுத்துகிறது, வளர்ச்சி குன்றிய நிலையை குறைக்கிறது மற்றும் பள்ளிக்குச் செல்வதற்கான தயார்நிலையை மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. கே. முரளிதரன் குறிப்பிட்டபடி, இது இரண்டு மணி நேர கண்காணிப்புக் காலத்திற்குள் கற்பித்தல் நேரத்தை 18 நிமிடங்களிலிருந்து 75 நிமிடங்களாக அதிகரிக்கிறது.


இந்தியாவில், தற்போதுள்ள 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், 12 லட்சம் மையங்களுக்கு ஒரு கூடுதல் கல்வியாளர் தேவைப்படுகிறது. தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களில் அடுத்த சில ஆண்டுகளில் 12 லட்சம் பெண் கல்வியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.13,000 கோடி (ரூ.1.1 லட்சம்/நபர்/ஆண்டு) முதலீடு செய்யப்படுகிறது. இது ஒவ்வொரு அங்கன்வாடியையும் 1:20 சிறந்த கல்வியாளர்-குழந்தை விகிதத்துடன் கூடிய ஒரு முன்மாதிரியான விளையாட்டுப் பள்ளியாக மாற்றவும், ஆண்டுதோறும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியை (ECE) மேம்படுத்தவும் உதவும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test), குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சி (Nursery Teacher Training) மற்றும் வீட்டு அறிவியல் படிப்புகளை (Home Science courses) முடித்தவர்களிடமிருந்து இந்தத் தகுதியுள்ளவர்களை வழங்குகிறது.


இந்த மேம்படுத்தப்பட்ட கல்வியாளர் மாதிரியைச் செயல்படுத்துவது மில்லியன் கணக்கான பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். இது ஆரம்பகால கற்றல் தரத்தை உயர்த்தும். மேலும், வளர்ந்த இந்தியாவின் ஒரு முக்கியத் தூணாக அங்கன்வாடிகளை நிலைநிறுத்தும்.


3–5 வயதுக் குழந்தைகள் : பள்ளி தயார்நிலையை உருவாக்குதல் — பால்வாடிகளை விரிவுபடுத்துதல்


குழந்தைகள் ஐந்து வயதை நெருங்கும்போது, ​​பலர் அங்கன்வாடிகளை விட்டு வெளியேறிவிடுகின்றனர். 5 வயது குழந்தைகளில் 37 சதவீதத்தினரும் 6 வயது குழந்தைகளில் 11 சதவீதத்தினரும் மட்டுமே தொடர்ந்து அங்கன்வாடிகளில் சேர்ந்துள்ளனர். வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை-2024 (Annual Status of Education Report (ASER)) அறிக்கையின்படி, இது நான்கு வயதுக் குழந்தைகளிடையே இருந்த ஏறத்தாழ 60% பதிவிலிருந்து ஒரு பெரும் வீழ்ச்சியாகும். இதன் விளைவாக, பல குழந்தைகள் பள்ளியில் வெற்றிபெறத் தேவையான அடிப்படைக் கல்வித் திறன்கள் இல்லாமல் முதல் வகுப்பில் சேர்கின்றனர். உள்ளூர் பள்ளிகள் அர்ப்பணிப்புள்ள இடம், பணியாளர்கள் மற்றும் வளங்களைக் கொண்ட இடங்களில், முன்-தொடக்கப் பிரிவுகளை நிறுவுவது இந்த இடைவெளியைக் குறைத்து, முறையான பள்ளிப்படிப்புக்கான தயார்நிலையை மேம்படுத்தும்.


தற்போது, ​​முன்பருவப் பள்ளிக் கல்விப் பிரிவுகளைக் கொண்ட அரசுப் பள்ளிகளில் 9 சதவீதம் மட்டுமே அர்ப்பணிப்புள்ள ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) ஆசிரியர்களைக் கொண்டுள்ளன. மேலும், குழந்தை-ஆசிரியர் விகிதமும் மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த ஆதாரங்கள், குறைந்த செலவிலான, பிரத்யேக முன்பருவக் கல்வி ஆசிரியரை நியமிப்பது கற்றலில் தெளிவான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த மேம்பாடுகள் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் (randomised controlled trials (RCT)) மூலம் மதிப்பிடப்பட்ட மாதிரிகள் வழியாக அளவிடப்பட்டன. இது பயிற்சி பெற்ற மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்களில் முதலீடு செய்வது குழந்தைகளின் பள்ளித் தயார்நிலையை மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. கல்வி அமைச்சகம் இதை அங்கீகரித்து, நிபுன் பாரத் திட்டத்தின் (NIPUN Bharat mission) கீழ் பால்வடிகளைச் (Balvatika) சேர்த்துள்ளது. 2025 முதல் பள்ளிக்கு ரூ.2 லட்சம், கூடுதலாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ரூ.1 லட்சம் மற்றும் கற்றல் உபகரணங்களுக்காக ஒரு குழந்தைக்கு ரூ.500 தொடர்ச்சியான மானியங்களுடன் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.


பல மாநிலங்கள் இதில் விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளன. உத்தரபிரதேசம் 20,000 பால்வாடிகளின் கல்வியாளர்களை (Balvatika educators) பணியமர்த்தி வருகிறது. மேலும், சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) பட்ஜெட்டில் இருந்து ரூ.260 கோடியை முதலீடு செய்து ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) கல்வியாளர்களை பணியமர்த்துகிறது. ஒடிசா 45,000-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிகளில் முன்-தொடக்க வகுப்புகளை (pre-primary classes) அறிமுகப்படுத்தியுள்ளது. அதே எண்ணிக்கையிலான பிரத்யேக உதவியாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. இது வகுப்பறைகளுக்குள் பயனுள்ள ஆதரவை உறுதி செய்கிறது. ஹரியானா முன்-தொடக்கக் கல்வியை 8,000-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளாக விரிவுபடுத்தியுள்ளது.


இந்த மாநிலங்களின் செயல்படுத்தலின் அனுபவத்தை இந்தியா பயன்படுத்துவதன் மூலம், நாடு முழுவதும் தயார்நிலைக் இடைவெளிகளை வெற்றிகரமாக நிரப்ப முடியும். ஒவ்வொரு "உயர்நிலைப் பள்ளியிலும்" (100க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தொடக்கப் பள்ளி) கூடுதலாக ஒரு ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) ஆசிரியரைப் பணியமர்த்துவது, ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,600 செலவில் அடைய முடியும். சமக்ர சிக்ஷாவின் கீழ் அதிகரித்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு இந்த நிரூபிக்கப்பட்ட மாதிரிகளை அளவிடுவதில் கவனம் செலுத்துவது உயர்தர பால்வாடிகளை நிறுவுவதற்கு முக்கியமாகும்.


6 முதல் 10 வயது : அடிப்படைகளில் தேர்ச்சி பெறுதல் — அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை விரைவுபடுத்துதல்


ஆறு முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்கின்றனர். இந்தக் கட்டத்தில், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு (FLN) வாழ்நாள் கற்றலுக்கு அடிப்படையாகிறது. வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை-2024 மற்றும் தேசிய சாதனை ஆய்வு-2024 (National Achievement Survey (NAS)) போன்ற தேசிய மதிப்பீடுகள் ஊக்கமளிக்கும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. இந்த முன்னேற்றங்கள் நிபுன் பாரத் திட்டத்தின்கீழ் ஏற்பட்ட கவனம் சார்ந்த முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. இந்த முன்னேற்றம், சிறந்த கற்றல் பொருட்கள், வலுவான ஆசிரியர் பயிற்சி மற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்புகளில் வழக்கமான வகுப்பறை கண்காணிப்பு ஆகியவற்றிலிருந்து வருகிறது.


அடுத்த கட்டமாக, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவின் (FLN) கவனத்தை 4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்துவதாகும். இது குழந்தைகள் நம்பிக்கையுடன் படிக்கவும், பகுத்தறியவும் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க நடுநிலைப் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்வது. உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மாவட்டத் திட்டக் கண்காணிப்பு அலகுகள் (PMU), வலுப்படுத்தப்பட்ட இடைநிலை மேலாண்மைக் கட்டமைப்பு, வித்யா சமிக்ஷா கேந்திரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தலைமையிலான திருத்தப் பயிற்சிகள் போன்ற நம்பிக்கைக்குரிய கொள்கை புதுமைகளை வழங்குகின்றன. இவை கண்காணிப்பை மேம்படுத்தி, தெளிவான, விளைவு சார்ந்த இலக்குகளை நிர்ணயிக்க உதவியுள்ளன.


இந்த முன்னேற்றங்களைத் தக்கவைத்துக் கொள்ள, விமர்சன சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற உயர்நிலை திறன்களை உருவாக்கும் மேம்பட்ட வாசிப்பு மற்றும் கணிதப் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், அடிப்படைக் கற்றலைச் சுற்றி பெற்றோர்களையும் சமூகங்களையும் அணிதிரட்ட நாடுதழுவிய பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்.


ஆசிரியர்களுக்கான ஆதரவு, தரவு சார்ந்த கண்காணிப்பு மற்றும் உயர் தொடக்கக் கல்வி ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தை (FLN) விரைவுபடுத்துவது, கற்றல் விளைவுகளை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவின் நீண்டகால உற்பத்தித்திறன் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததாக இருக்கும்.


இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையில் உள்ளது. வலுவான அங்கன்வாடிகள், அர்ப்பணிப்புள்ள ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) ஆசிரியர்களைக் கொண்ட பால்வாடிகள் மற்றும் அடிப்படைக் கற்றல் ஆகியவற்றின் தடையற்ற தொடர்ச்சியானது ஒரு கல்வி உத்தியைவிட மேலானது. இது உற்பத்தித்திறன், புதுமை மற்றும் வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் மையமான உள்ளடக்கிய வளர்ச்சியின் செயல்பாடாகும். இந்த தொலைநோக்குப் பார்வையை உணர, அரசாங்கம், சமூகங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களிடையே துணிச்சலான நடவடிக்கை, நிலையான கவனம் மற்றும் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு தேவைப்படும். இது இந்தியாவின் முழு பொருளாதார மற்றும் சமூக ஆற்றலைத் திறப்பதற்கான பாதையாகும்.


எழுத்தாளர் இந்தியாவின் G20 ஷெர்பா மற்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.


Original Article : When we help children learn early and well, we lay a solid foundation for India’s future -Amitabh Kant

Share: