உத்தரகாசி திடீர் வெள்ளத்திற்கு என்ன காரணம்? : கனமழையா, கரடுமுரடான நிலப்பரப்பா? -அஞ்சலி மரார்

 உத்தரகாசி திடீர் வெள்ளத்திற்கு முதன்மையான காரணம், இப்பகுதியின் நிலப்பரப்பு ஆகும். அங்கு பெய்யும் கனமழை பெரும்பாலும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால், ஆறுகளில் சேறு மற்றும் கான்கிரீட் குப்பைகள் அனுப்பப்படுகிறது.


உத்தரகாசி திடீர் வெள்ளம் 2025 : உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண் சரிவில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர். மேலும் இதில் பல கட்டிடங்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்கள் சேதமடைந்தன.


உத்தரகாண்டின் மேல் மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுவது பொதுவானது. அவை பெரும்பாலும் மேக வெடிப்பால் (cloudburst) ஏற்படுகின்றன. இது உ தீவிர மழைப்பொழிவை ஏற்படுத்தும். இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக மேக வெடிப்பு (cloudburst) செவ்வாய்க்கிழமை திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கவில்லை. இருப்பினும் கடந்த மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததுதான் காரணமாகும்.


முதன்மையாகக் காரணம், இப்பகுதியின் நிலப்பரப்பு ஆகும். இங்கு கனமழை பெரும்பாலும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுப்பதுடன், சேறு மற்றும் கான்கிரீட் குப்பைகளால் ஆறுகளில் பரவுகிறது. இந்தப் பொருட்கள் மிகுந்த ஆற்றலுடன் கீழே பாய்ந்து, அதிக வேகத்தைப் பெறுகிறது. இதனால், கீழ் பகுதிகளில் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.


உத்தர்காசியின் நிலப்பரப்பு என்ன?


உத்தர்காசி மாவட்டம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 800 முதல் 6,900 மீட்டர் வரை உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பெரிய புவியியல் பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும். மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் பனிப்பாறைகள் உள்ளன.


இவை  மாவட்டத்தில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் மேல் பகுதிகள் உள்ளன. அவற்றின் மூலங்கள் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி அருகே பனி மூடியிருக்கும்.


உத்தர்காசியில் உயரமான முகடுகள், ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளன. அதன் நிலம் கரடுமுரடானது, செங்குத்தான மலைகள், குறுகிய பள்ளத்தாக்குகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன.


நிலம் தென்மேற்கை நோக்கி சாய்வாக உள்ளது, சில பள்ளத்தாக்குகளில் உயரம் சுமார் 800 மீட்டர் கூர்மையாக குறைகிறது.


உத்தர்காசி ஆண்டுதோறும் எவ்வளவு மழைப்பொழிவைப் பெறுகிறது?


மாவட்டத்தின் பெரும்பகுதி இமயமலையின் தெற்கு சரிவில் அமைந்திருப்பதால், பருவமழை நீரோட்டங்கள் பொதுவாக ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக ஊடுருவுகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), குறிப்பாக மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் மழைப்பொழிவு அதிகபட்சமாக இருக்கும்.


உத்தரகாசியில் ஒரு வருடத்தில் சராசரியாக 1,289 மிமீ மழை பெய்யும். கடந்த கால பதிவுகள் 1969ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2,436 மிமீ (இயல்பை விட 189 சதவீதம் அதிகம்) மழை பதிவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஜூலை மாதம் இங்கு மிகவும் மழை பெய்யும் மாதமாகும். இந்த நேரத்தில் சராசரியாக சுமார் 312 மிமீ மழை பெய்தது. மலைப்பகுதிகளில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் மாவட்டமாக இருக்கும்.


செவ்வாய்க்கிழமை திடீர் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுத்தது எது?


நிலத்தின் வடிவம், சமீபத்திய நாட்களில் தொடர்ந்து பெய்த மழை, செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவுகள், இடிபாடுகள் போன்றவை திடீர் வெள்ளப் பெருக்குகிற்கு காரணமாக இருக்கலாம்.


காலநிலை மாற்றம் மழையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. இது பனிப்பாறைகள் மற்றும் குளிர்காலத்தில் சேகரிக்கும் பனியின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.


உத்தர்காசி  மழைப்பொழிவு தொடர்ச்சியாக இருந்தால், பேரிடரை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்தப் பகுதி கடந்த பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ள பழைய மண் சரிவுகளின் அடுக்குகளில் இப்பகுதி கட்டப்பட்டுள்ளது.


உத்தர்காசி மாவட்டம் தெற்கு இமயமலை சரிவில் அமைந்துள்ளது. அங்கு குறைந்த தாவரங்கள் உள்ளன மற்றும் குறிப்பிடத்தக்க தடைகள் எதுவும் இல்லை. மழைப்பொழிவு அல்லது பூகம்பங்கள் போன்ற லேசான தூண்டுதல்கள் கூட தளர்வான மொரைன் மற்றும் மண் எளிதில் கீழ்நோக்கி சரிந்து, அதன் பாதையில் வீடுகளையும் சாலைகளையும் விழுங்கச் செய்யலாம்.


இந்த மழை ஏன் 'மேக வெடிப்பு' (cloudburst) அல்ல?


மேக வெடிப்புக்கு ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) படி, தோராயமாக 10 கிமீ x 10 கிமீ பரப்பளவில் ஒரு மணி நேரத்திற்கு 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு மேக வெடிப்பு நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) 24 மணி நேர மழைப்பொழிவு தரவு, உத்தரகாசியில் 2.7 மிமீ மழை பெய்துள்ளதாகக் கூறியது. மேலும், காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, உத்தரகாசியில் உள்ள பல்வேறு வானிலை ஆய்வு நிலையங்களில் மழைப்பொழிவு மேக வெடிப்புக்கு வரையறுக்கப்பட்ட வரம்பை விட மிகக் குறைவாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தரவு காட்டுகிறது.


இதற்கு நேர்மாறாக, கடந்த மூன்று நாட்களில் உத்தரகண்டின் பிற பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. உதாரணமாக, ஹரித்வார் சமவெளிகளில் செவ்வாய்க்கிழமை 24 மணி நேரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது.



Original article:

Share:

இந்தியாவிற்கு மொழியியல் தேசியவாதம் அல்ல, அளவிடக்கூடிய AI மூலம் இயங்கும் வகுப்பறைகளே தேவை. -தாரா தாஸ்

 இந்தியாவுக்கு மிகை பிராந்தியம் (hyperregionality) அல்ல, மிகை இயக்கம் (hypermobility) தேவை. அதாவது, கலாச்சார நம்பகத்தன்மைக்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் இடையில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்ற தவறான கருத்தை அகற்ற வேண்டும்.


Zoho இன் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இந்தியர்கள் தங்கள் தாய்மொழிகளில் பணியாற்றுமாறு வலியுறுத்துகிறார். தொழில்நுட்பத்திலும் இந்தியாவின் திறமை மொழியியல் தடைகளால் பின்தங்கியிருப்பதாகக் கூறுகிறார். 95% இந்தியர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதில்லை என்று அவர் கூறுகிறார். தாய்மொழிகளில் நம்பிக்கையை வளர்ப்பது ஒரு சரியான யோசனை என்றாலும், அவரது பார்வை குறுகியதாகவும், உண்மையான வாய்ப்புகளை உருவாக்குவதை விட தேசியவாதத்தால் இயக்கப்படுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். மொழித் தடைகளை விரைவாகவும் மலிவு விலையிலும் கடக்க AI ஏற்கனவே உதவும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


உண்மையான மாற்றங்களைச் செய்யக்கூடிய தலைவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்கவோ அல்லது வெளிநாட்டு பட்டங்களைப் பெறவோ தேவையில்லை என்று கூறும்போது, அவர்கள் ஒரு முக்கியமான உண்மையை விட்டுவிடுகிறார்கள். ஆங்கிலத் திறன்களும் வெளிநாட்டுக் கல்வியும் இந்த தலைவர்களுக்கு $4.9 டிரில்லியன் மதிப்புள்ள உலகளாவிய தொழில்நுட்பத் துறையின் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு இடத்தைப் பெற உதவியது. நமது மாணவர்கள் இயற்கையாகவே கற்றுக்கொள்ள இயலாதவர்கள் அல்ல. பிரச்சனை என்னவென்றால், நமது தொழில்நுட்பக் கல்வி முறையால் அவர்களுக்கு திறம்பட கற்பிக்க முடியாது. மாணவர்களுக்கு நம்பகமான, அணுகக்கூடிய மற்றும் தகுதி அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.


2009ஆம் ஆண்டில், சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டம் உலகளவில் கல்வி முறைகளை சோதித்து தரவரிசைப்படுத்தியது. இதில், 73 நாடுகளில் இந்தியா 72வது இடத்தைப் பிடித்தது. பிந்தைய மதிப்பீடுகளைப் புறக்கணிப்பதன் மூலம், நாம் பொறுப்புணர்வைத் தவிர்த்துவ் வருகிறோம். இது AI- இயக்கப்படும் சீர்திருத்தங்கள் பற்றிய பெரும் கூற்றுக்களை பலவீனப்படுத்துகிறது. மாணவர்களுக்கு அத்தகைய நிலைப்பாடு தேவையில்லை என்று கூறுவது பழைய நிலப்பிரபுத்துவ கட்டமைப்புகளை மீண்டும் கொண்டுவருகிறது. இந்த கட்டமைப்புகள் ஒடுக்கப்பட்டவர்களை ஏற்கனவே ஒரு உலகளாவிய மொழியின் மதிப்பையும் (global lingua franca) மற்றும்  பேச்சுவார்த்தைகளில் ஆற்றலையும் கொண்டவர்களைச் சார்ந்து வைத்திருக்கின்றன.


ஏறத்தாழ, இந்தியா சுமார் 1.5 மில்லியன் கல்வியாளர்களின் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதனால் நெருக்கடி வகுப்பறைகளுக்கு வழிவகுக்கிறது. சுமார் 1.2 லட்சம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்குகின்றன. இவற்றில் 89 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளன. தொழில்நுட்பத் தலைவர்கள் பெரும்பாலும் இந்தியாவை சீனாவின் மொழியியல் தேசியவாதத்துடன் ஒப்பிடுகிறார்கள். சீனாவில் மொழியியல் பேச்சுவழக்கு வேறுபாடுகளுடன் (idiomatic dialect variations) கூடிய ஒற்றை எழுத்து வடிவம் (single script) இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். சீனாவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் உதவித்தொகை மாணவர்கள் வெளிநாடுகளில் ஆராய்ச்சி செய்து தங்கள் அறிவை மீண்டும் கொண்டு வர அனுமதிக்கிறது. இந்தியாவில் 780 மொழிகள் மற்றும் 68 எழுத்து வடிவங்கள் உள்ளன. சீனா AI கல்வியில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. சீன பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் 99 சதவீதம் பேர் AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 60 சதவீதம் பேர் AIஐ அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவின் வலுவான பொது நூலக அமைப்பு இணைய அணுகல், மடிக்கணினிகள் மற்றும் சில நேரங்களில் MacBooksகளை கூட வழங்குகிறது. இத்தகைய கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதற்குப் பதிலாக, நமது தொழில்நுட்ப வல்லுநர்கள் சாக்குகள் நிறைந்த தேசியவாத விவாதங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.


இன்று, எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், AI ஐ உடனடியாக எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான். இந்தியாவின் சர்வம் AI (Sarvam AI) மாதிரிகள் 97 சதவீத துல்லியத்துடன் 10 மொழிகளில் குறியீடு-கலப்பு உள்ளடக்கத்தை (code-mixed content) செயலாக்க முடியும். இதில் திறந்த மூல ஷுகா v1 (open-source Shuka) ஆடியோ மாதிரியும் அடங்கும். இதன் உள்ளடக்கம் நிஜ உலக இந்திய மொழி பயன்பாட்டை பிரதிபலிக்கும். இது சிக்கலான கல்விச் சொற்களைக் கையாளும் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் உட்பட எட்ஜ் சாதனங்களில் (edge devices) திறமையாக இயங்கும். சர்வம் ஏற்கனவே IndiaAI திட்டத்தின் கீழ் இந்தியாவின் இறையாண்மை அடிப்படை மாதிரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. Rocket Learning போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே குழந்தைப் பருவக் கல்வியில் AIஐப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, அவர்களின் திட்டங்களில் 75% குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகிறார்கள். அதே நேரத்தில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) “அனுவாதினி” (Anuvadini) செயலி 22 பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது.


இந்த முன்னேற்றம் தேவையற்ற மொழி சார்ந்த பிளவுகளை நீக்க உதவுகிறது. புதிய திறந்த அணுகல் தொழில்நுட்பங்களை இணைப்பதன் மூலம், அரசியல் ஆதரவு மற்றும் தொழில்துறை கவனம் இருந்தால் நமது கல்வி முறையை விரைவாக மாற்ற முடியும். பெரிய அளவிலான கல்வி சீர்திருத்தங்களை தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை. பொது விழிப்புணர்வு செய்திகள் முதல் மேம்பட்ட தொழில்நுட்பக் கல்வி வரை, பாடங்களைத் தனிப்பயனாக்கலாம், தேர்வுகளை தானியங்கிப்படுத்தலாம், தரப்படுத்தலாம் மற்றும் தகவல்களை பரவலாகப் பகிரலாம். இந்தியாவில் உள்ள எந்த கிராமத்திற்கும் இதை அணுகுவதற்கு மின்சாரம் (electricity), வைஃபை (Wi-Fi) மற்றும் ஸ்மார்ட்போன் (smartphone) மட்டுமே தேவை.


பிராந்திய அடையாளம் சாதி மற்றும் வர்க்கப் பிரிவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. AI மூலம் இதை உடைக்க முடியும். நிகழ்நேர மொழிபெயர்ப்புத் திறன்கள் கற்பவர்களுக்கு பன்மொழித் திறனை வழங்குகின்றன. மேலும் செயற்கையான அணுகலுக்கான பற்றாக்குறையை நீக்குகிறது. கடந்த காலத்தில், ஆங்கிலம் ஒரு நடுநிலை ஊடகமாக செயல்பட்டது. பல இந்தியர்கள் இருமக்குறியீட்டைக் (binary coding) கற்றுக்கொண்டனர். ஏனெனில் அது அவர்களுக்கு கணித ரீதியாக ஆள்மாறாட்டம் மற்றும் தர்க்கரீதியாக இலவசமான ஒரு சொற்களஞ்சியத்தை வழங்கியது. இந்த நடுநிலைமை சமூக இயக்கத்தை செயல்படுத்துகிறது. நமது கலாச்சாரத்தைப் பேணுவதற்கும் கல்வியை மேம்படுத்துவதற்கும் இடையில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும். AI-இயக்கப்படும் Intelligent Interactive Teaching Systems (IITS) முறையை ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்க முடியும், ஆய்வுப் பொருட்களை உருவாக்க முடியும் மற்றும் அறிவு இடைவெளிகளை விரைவாக நிரப்ப முடியும்.


மொழி எதுவாக இருந்தாலும், AI கருவிகள் ஒவ்வொரு குழந்தையின் வேகத்திற்கும் பொருந்தக்கூடும் என்று UNICEF இந்தியாவின் ஆராய்ச்சி காட்டுகிறது. மனித ஆசிரியர்களைப் போலல்லாமல், AI 24/7 வேலை செய்ய முடியும். இது இந்தியாவின் 1.5 மில்லியன் பள்ளிகளில் நிலையான தரம் கொண்ட தொலைதூர கிராமங்களையும் அடைய முடியும். இந்தியாவில் 60 சதவீத பள்ளிக் குழந்தைகள் ஆன்லைன் கற்றலை அணுக முடியாத நிலையில், மொபைல் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. 58% உயர் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே ஸ்மார்ட்போன்களைக் கொண்டுள்ளனர். இது பாரம்பரிய கல்வி முறைகளை மாற்றியமைக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


தேசிய கல்விக் கொள்கை 2020, கல்வியின் அனைத்து நிலைகளிலும் AI ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இருப்பினும், பெரிய அளவில் அதை செயல்படுத்த எந்த அவசரமும் இல்லை. அதற்கு பதிலாக, நமக்கு பல காரணங்கள் தொடர்ந்து வருகின்றன. 


இந்தியா பழைய அரசுப் பள்ளி மாதிரியை டிஜிட்டல் நூலக அமைப்புடன் மாற்ற முடியும். இணையம் மற்றும் வைஃபை மூலம், எந்த வயதினரும் முன்பே ஏற்றப்பட்ட பாடங்களைப் பயன்படுத்தி தாங்களாகவே கற்றுக்கொள்ளலாம். 80 வயது இல்லத்தரசி, 40 வயது விவசாயி அல்லது 20 வயது மெக்கானிக் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் மற்றும் அவர்கள் முன்பு தவறவிட்ட வாய்ப்புகளை அணுகலாம். AI உடனடி கருத்துக்களை வழங்க முடியும். இதனால் மனித ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதலில் கவனம் செலுத்த முடியும்.


இந்திய இளைஞர்கள் கற்றுக் கொள்ளத் தேவையில்லாததைச் சொல்ல வேண்டியதில்லை அல்லது கற்றுக்கொள்வதற்கும், வெளியேறுவதற்கும், விருப்பமுள்ளவர்கள் தங்கள் கிராமங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட வேண்டியதில்லை. கல்வி மூலம் செல்வாக்கு பெற்று அதிகாரத்தில் இருப்பவர்கள், மற்றவர்கள் செய்வதைத் தடுக்கும் தடைகளை உருவாக்கக்கூடாது.


மோசமான உள்கட்டமைப்பு, தரவு தனியுரிமை சிக்கல்கள் மற்றும் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் போன்ற பிரச்சனைகளை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றை தாமதப்படுத்துவதற்கான காரணங்களாகப் பயன்படுத்தாமல், ஏற்படும் சிக்கல்களை உடனடியாக தீர்க்க வேண்டும். உண்மையான கேள்வி என்னவென்றால், AI இந்திய கல்வியை மாற்றுமா என்பது அல்ல, மாறாக பெரும்பாலான மக்கள் பின்தங்குவதற்கு முன்பு அதிலிருந்து பயனடைய உதவும் அளவுக்கு விரைவாகச் செயல்படுவோமா என்பதுதான்.


தாஸ் மைசூரைச் சேர்ந்த எழுத்தாளர், உளவியலாளர், AI ஆராய்ச்சியாளர் மற்றும் Project Shunyata அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.



Original article:

Share:

கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா (2025) -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


பிற்பகல் நடவடிக்கைகள் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள், கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அவையானது நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முயன்றபோது, அவைத் தலைவர் புவனேஸ்வர் கலிதா, அவையில் ஒழுங்கு இருந்தால் மட்டுமே ஒழுங்குப் பிரச்சினையை அனுமதிப்பதாகக் கூறினார். பின்னர், அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


1925ஆம் ஆண்டு இந்திய கடல்வழி சரக்குப் போக்குவரத்து சட்டத்திற்குப் பதிலாக இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இந்தியாவின் கடல்சார் சட்டத்தை சர்வதேச மரபுகளுடன் மறுசீரமைக்கிறது மற்றும் கடல் வழியாக சரக்குகளை கொண்டு செல்வதை நிர்வகிக்கும் விதிகளை நவீனமயமாக்க முயல்கிறது.


1925ஆம் ஆண்டின் இந்திய ககடல்வழி சரக்குப் போக்குவரத்து சட்டத்தை மாற்றியமைக்கும் இந்த மசோதா, இந்தியாவின் கடல்சார் சட்டத்தை சர்வதேச மரபுகளுடன் இணைக்கிறது மற்றும் கடல்வழி சரக்குப் போக்குவரத்து விதிகளை நவீனப்படுத்த முயல்கிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா, 2024, ஆகஸ்ட் 9, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா, கடல் வழியாக இந்திய சரக்குகளை எடுத்துச் செல்லும் சட்டம், 1925 ஐ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1925 சட்டம், இந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மற்றொரு துறைமுகத்திற்கு அல்லது உலகின் எந்த துறைமுகத்திற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் விலக்குகளை வகுக்கிறது. இந்தச் சட்டம், ஹேக் விதிகள் (Hague Rules) என அழைக்கப்படும் ஆகஸ்ட் 1924இன் சரக்கு மசோதாக்கள் தொடர்பான சில சட்ட விதிகளை ஒன்றிணைப்பதற்கான சர்வதேச மாநாட்டையும், அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தங்களையும் பின்பற்றுகிறது.


மசோதா மத்திய அரசுக்கு இரண்டு அதிகாரங்களை வழங்குகிறது.


(i) மசோதாவின் விதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை வெளியிடவும், மற்றும்


(ii) சரக்குக் கப்பல் போக்குவரத்து மசோதா என்பது ஒரு சரக்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தால் ஒரு கப்பல் ஏற்றுமதி செய்பவருக்கு வழங்கப்படும் ஆவணமாகும். எடுத்துச் செல்லப்படும் பொருட்களின் வகை, அளவு, நிலை மற்றும் சேருமிடம் போன்ற விவரங்கள் இதில் உள்ளன. அட்டவணையில் உள்ள விதிகள் சரக்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை விளக்குகின்றன.


இந்த மசோதா ஹேக்-விஸ்பி விதிகளை (Hague-Visby Rules) ஏற்றுக்கொள்கிறது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடல்சார் தரநிலையை ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. இந்த மசோதா சிக்கலான தன்மையை தெளிவுடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம் கடல்வழி வர்த்தக சட்டங்களை எளிதாக்கும், மேலும் இது சட்ட மோதல்களின் அபாயத்தைக் குறைக்கும். இது கடல் வழியாக சரக்கு இயக்கத்தில் (cargo movement) வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் வணிக செயல்திறனை மேம்படுத்தும்.

  


Original article:

Share:

தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் இந்திய தந்தி சட்டம் (1885) -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், முன்னாள் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Intelligence Bureau (SIB)) தலைவர் மற்றும் IPS அதிகாரி டி. பிரபாகர் ராவ், துணை காவல் கண்காணிப்பாளர் டி. பிரணீத் ராவ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எம். திருப்பதண்ணா மற்றும் என். புஜங்க ராவ், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் பி. ராதாகிஷன் ராவ் மற்றும் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் ஏ. ஷ்ரவன் குமார் ராவ் போன்றோர் ஆவர்.


ஆகஸ்ட் 5 வரை பிரபாகர் ராவை கைது செய்யாமல் உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியிருந்த நிலையில், பிரனீத் ராவ், திருப்பத்தண்ணா, புஜங்க ராவ் மற்றும் ராதாகிஷன் ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர். வேறு ஒரு வழக்கில் தொடர்புடைய ஷ்ரவன் குமார் ராவ் ஹைதராபாத்தில் உள்ள மத்திய சிறையில் உள்ளார்.


முன்பு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (Telangana Rashtra Samithi (TRS)) கட்சி என்று முன்னர் அழைக்கப்பட்ட BRS கட்சி, புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் 2014ஆம் ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. BRS தலைவரும் இரண்டு முறை முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் டிசம்பர் 3, 2023 அன்று பிஆர்எஸ் காங்கிரஸிடம் தேர்தலில் தோல்வியடைந்தபோது, ஆறு பேர் மீதான வழக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, டிசம்பர் 4 அன்று, SIB தலைவர் பிரபாகர் ராவ் தனது அதிகாரப்பூர்வ பதவியை ராஜினாமா செய்தார்.


உங்களுக்குத் தெரியுமா? :


நிலையான இணைப்பு தொலைபேசிகளின் (fixed-line phones) காலத்தில், இயந்திர பரிமாற்றங்கள் (mechanical exchanges), அழைப்பிலிருந்து ஆடியோ சிக்னலை அனுப்ப சர்க்யூட்களை ஒன்றாக இணைக்கும். இதற்கான பரிமாற்றங்கள் டிஜிட்டல் ஆனதும், கணினி மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. இன்று, மொபைல் ஃபோன்கள் மூலம் பெரும்பாலான உரையாடல்கள் நடக்கும்போது, அதிகாரிகள் சேவை வழங்குநருக்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறார்கள். வழங்குநர் கொடுக்கப்பட்ட எண்ணின் உரையாடல்களைப் பதிவு செய்ய சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளார். அவர்கள் இணைக்கப்பட்ட கணினி மூலம் இந்த பதிவுகளை நிகழ்நேரத்தில் வழங்க வேண்டும்.


மாநிலங்களில், தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஒன்றியத்தில், புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau), CBI, அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate), போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (Narcotics Control Bureau), மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence), தேசிய புலனாய்வு நிறுவனம் (National Investigation Agency), R&AW, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Signal Intelligence) மற்றும் டெல்லி காவல் ஆணையர் (Delhi Police Commissioner) ஆகிய 10 முகமைகள் இதைச் செய்ய அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வேறு முகமையால் ஒட்டுகேட்பது சட்டவிரோதமாக கருதப்படும். இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பது இந்திய தந்தி சட்டம், 1885-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.


பிரிவு 5(2) பொது அவசரநிலையின் போது அல்லது பொதுப் பாதுகாப்பிற்காக தொலைபேசி ஒட்டுக்கேட்பு செய்யப்படலாம் என்று கூறுகிறது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் பொதுப் பாதுகாப்புக்கு அவசியம் என்று நம்பினால் அதை அனுமதிக்கலாம். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கைப் பாதுகாக்கவும் இது செய்யப்படலாம். ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவதைத் தடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம். 


இந்திய தந்தி (திருத்தம்) விதிகள் (Indian Telegraph (Amendment) Rules), 2007 இன் விதி 419A, தொலைபேசி ஒட்டுக்கேட்பு உத்தரவுகளை உள்துறை அமைச்சகத்தில் உள்ள இந்திய அரசின் செயலாளரால் மட்டுமே பிறப்பிக்க முடியும் என்று கூறுகிறது. ஒரு மாநிலத்திற்கு, உள்துறைக்கு பொறுப்பான மாநில அரசின் செயலாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். சேவை வழங்குநருக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு அனுப்பப்பட வேண்டும். இந்த எழுத்துப்பூர்வ உத்தரவு கிடைத்த பின்னரே ஒட்டுக்கேட்பு தொடங்க முடியும்.



Original article:

Share:

இந்தியாவின் அணுசக்தி தொலைநோக்குத் திட்டம் எவ்வாறு நிலையான எதிர்காலத்தை ஆதரிக்கிறது? -ரேணுகா

 நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒரு முக்கியமான பங்களிப்பாக அணுசக்தி வெளிப்பட்டுள்ளது. இந்தியாவின் அணுசக்தியின் தொலைநோக்கு பார்வை, ஒரு வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) உருவாக்குவதில் இரண்டு இலக்குகளான, கார்பன் குறைப்பு (decarbonisation) மற்றும் எரிசக்தி பாதுகாப்பு (energy security) அடைவதை எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது?.


ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, புதைபடிவ எரிபொருள்கள் மனிதவள முன்னேற்றத்திற்கு உந்துதலாக உள்ளன. இருப்பினும், இந்த முன்னேற்றம் காலநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவின் நமது அதிகப்படியான பயன்பாடு கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் கடல் மட்ட உயர்வு, கணிக்க முடியாத வானிலை மற்றும் தீவிர வெப்ப அலைகள் ஆகியவை அடங்கும். இந்த பின்னணியில், எரிசக்தி சுதந்திரம் நமக்கு உயிர்வாழ்வதற்கான கேள்வியாக மாறியுள்ளது.  மேலும், எரிசக்தி சுதந்திரம் என்பது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்காமல் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதாகும்.


இந்தியாவிற்கு அணுசக்தியின் முக்கியத்துவம் 


இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அக்டோபர் 2024 நிலவரப்படி 200 GW கடந்தது. இது முந்தைய ஆண்டை விட 13.5% அதிகமாகும். மொத்தம் 92 GW சூரிய சக்தி, 52 GW நீர் மின்சாரம், 48 GW காற்றாலை ஆற்றல் மற்றும் 11 GW உயிரி ஆற்றல் ஆகியவை அடங்கும்.


இந்த முன்னேற்றம் இந்தியாவின் காலநிலை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இலக்குகளை ஆதரிக்கிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் மட்டும் போதுமானதாக இருக்காது என்பதும் தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படும். மேலும், இவை பருவ காலங்களைப் பொறுத்ததும் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தும் வரையறுக்கப்படுகின்றன.


இந்த சூழ்நிலையில், நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக அணுசக்தி வெளிப்படுகிறது. அணுசக்தியானது அதிக திறன் கொண்ட, நிலையான மின்சாரத்தை (base-load electricity) குறைந்தபட்ச கார்பன் உமிழ்வுகளுடன் வழங்குகிறது. வானிலை அல்லது பருவகால மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் இது செயல்பட முடியும். 2031-32ஆம் ஆண்டுக்குள் அணுசக்தித் திறனை 22,800 மெகாவாட்டாகவும், 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட்டாகவும் அதிகரிக்க இந்தியா ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எரிசக்தி சுதந்திரத்திற்கான பலதரப்பட்ட எரிசக்தி துறை ஒரு இராஜதந்திர தேவையாகும். 




இந்தியாவின் அணுசக்தி பயணம் 


இந்தியாவின் அணுசக்தி பயணம் தன்னம்பிக்கை மற்றும் அணுசக்தி தொழில்நுட்பத்தை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கியது. 1945ஆம் ஆண்டு டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research) மற்றும் 1954-ம் ஆண்டு அணுசக்தித் துறை (Department of Atomic Energy) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தை (Bhabha Atomic Research Centre) நிறுவியதன் மூலம் அணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் அணுமின் நிலையங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் உதவியுடன் தாராபூர் மற்றும் ராஜஸ்தானில் செயல்படத் தொடங்கின. 


1962 ஆம் ஆண்டு சீனாவுடனான போர் மற்றும் 1964 ஆம் ஆண்டு சீனாவின் முதல் அணுகுண்டு சோதனை ஆகியவை இந்தியா தனது அணுசக்தி கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1968 ஆம் ஆண்டில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty (NPT)) கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இது P-5 குழுவிற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு நியாயமற்றது என்று கூறியது.


இந்தியா தனது முதல் அணுசக்தி சோதனையான போக்ரான்-I ஐ 1974இல் நடத்தியது. இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது பல நாடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க விமர்சனங்களை வெளிப்படுத்தின. மேலும், அணுசக்தி வர்த்தகத்தை கட்டுப்படுத்த 48 நாடுகள் கொண்ட அணுசக்தி விநியோக குழு (Nuclear Supplier Group (NSG)) உருவாவதற்கு வழிவகுத்தது. இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திற்கு (NPT) வெளியே இருப்பதால், பத்தாண்டுகளாக அணுசக்தி தொழில்நுட்பத்திற்கான அணுகல் மறுக்கப்பட்டது. இருப்பினும், இந்தியா தனது உள்நாட்டு அணுசக்தி தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தியது மற்றும் அணுசக்தி பொறுப்புணர்வின் நிலையான கொள்கையை பராமரித்தது. 


1996ஆம் ஆண்டில், விரிவான அணு-சோதனை-தடை ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) கையெழுத்திட இந்தியா மறுத்தது. 1998இல் பொக்ரான்-II அணுகுண்டு சோதனை, CTBT இல் கையெழுத்திட மறுத்ததோடு, இந்தியாவை தனிமைப்படுத்தியது. ஆனால், அதன் வளர்ந்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, அதன் அணுசக்தி திறனை அதிகரிக்க வேண்டியிருந்தது.  


123 ஒப்பந்தம் மற்றும் அணுசக்தி விநியோக குழு (NSG) விலக்கு


பொக்ரான்-II சோதனைக்குப் பிறகு, இந்தியா தனது ‘முதலில் பயன்படுத்த வேண்டாம்’ (No-First-Use) கொள்கையுடன் அணு ஆயுதம் அல்லாத நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தாதது மற்றும் குறைந்தபட்ச அணுசக்தி தடுப்பு கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் அணுசக்திக் கட்டுப்பாட்டை நிறுவனமயமாக்கிய அணுசக்தி கட்டளை ஆணையம் (Nuclear Command Authority) மற்றும் Strategic Forces Command அமைப்பையும் இந்தியா நிறுவியது. இது இந்தியா தனது அணுசக்தி கொள்கை மற்றும் இராஜதந்திரத்தில் நம்பிக்கையை வளர்க்க உதவியது.


2005இல் இந்தியா-அமெரிக்க பொது அணுசக்தி ஒப்பந்தம் (India-US Civil Nuclear Agreement) (123 ஒப்பந்தம்) உடன் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. இது அமெரிக்காவின் அணுசக்தி சட்டம், 1954 இன் பிரிவு 123 இன் கீழ் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொது அணுசக்தி ஒத்துழைப்புக்கான இருதரப்பு ஒப்பந்தமாகும். இது இந்தியாவின் பரவல் தடை சாதனையை ஒப்புக் கொண்டது. மேலும், இதைத் தொடர்ந்து NSG ஆனது NPT யில் கையெழுத்திடாமல் பொது அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவிற்கு 2008இல் விலக்கு அளித்தது. 


அணுசக்தி விநியோக குழு (Nuclear Supplier Group (NSG))  விலக்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய, இந்தியா தனது குடிமக்கள் மற்றும் இராணுவ அணுசக்தி திட்டங்களை தானாக முன்வந்து பிரித்து, சர்வதேச பாதுகாப்புகளின் கீழ் அதன் சிவிலியன் உலைகளை (சிவிலியன் நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்துபவர்கள்) வைக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம், நியமிக்கப்பட்ட வசதிகளில் அணுசக்தி பொருட்களை அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஆய்வு செய்து சரிபார்க்க முகமையை அனுமதிக்கிறது. 


இதைத் தொடர்ந்து, இந்தியா மூன்று முக்கிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு குழுக்களில்   இணைந்தது. இவை ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆட்சி, ஆஸ்திரேலியா குழு மற்றும் வாஸ்ஸினார் ஏற்பாடு போன்றவை ஆகும். இருப்பினும், NSG உறுப்பினர் பதவிக்கான அதன் முயற்சி இன்னும் தீர்க்கப்படவில்லை. NPT கையொப்பமிட்டவர்கள் மட்டுமே NSG உறுப்பினர் பதவியைப் பெற வேண்டும் என்று சீனா போன்ற நாடுகள் வலியுறுத்துகின்றன.


தற்போதைய அணுசக்தி திறன் மற்றும் எதிர்கால இலக்குகள்


இந்தியாவில் தற்போது 24 அணு உலைகள் (nuclear reactors) செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அழுத்தப்பட்ட கன நீர் உலை (Pressurised Heavy Water Reactor (PHWR)) வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன, மொத்தம் 8180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பெரும்பாலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்திய அணுசக்தி கழகத்தால் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) நடத்தப்படுகின்றன. 


2025-2026ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை அடையும் இலக்குடன் வளர்ந்த இந்தியாவுக்கான அணுசக்தி இயக்கத்தை (Nuclear Energy Mission (NEM)) அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது எரிசக்தி சுதந்திரத்தை அடைவதையும், காலநிலை இலக்குகளை அடைவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உள்நாட்டு திறன்களை மேம்படுத்துதல், பொது-தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல் மற்றும் சிறிய மட்டு உலைகளை (SMRs) உருவாக்குவதன் மூலம் செய்யப்படும். SMR-களை உருவாக்குவதற்காக ₹20,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும், உள்நாட்டு அழுத்தம் கொண்ட கனரக நீர் உலைகள், ஃபாஸ்ட் ப்ரீடர் உலைகள் (fast breeder reactors) மற்றும் SMR அணுசக்தியின் ஆய்வு ஆகியவற்றின் கலவையானது இந்தியா புதுப்பிக்கத்தக்கவற்றின் இடைவெளியைக் குறைக்கவும், நிலையான, குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாற்றத்தை ஆதரிக்கவும் உதவும். 



இந்தியாவின் அணுசக்தி எதிர்காலத்தை வலுப்படுத்துதல் 


இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள் உலகளாவிய மற்றும் உள்ளூர் சவால்களை எதிர்கொள்கின்றன. மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் அணுசக்தி விநியோக குழுவின் (Nuclear Supplier Group (NSG))  உறுப்பினராக இல்லாதது ஒரு முக்கிய பிரச்சினையாகும்.


உள்நாட்டில், அணுசக்தித் துறையானது தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை மிகக் குறைந்த அளவே ஈர்க்கிறது. இந்தியாவின் அணுசக்தி சட்டங்களின் கீழ் ஒழுங்குமுறை மற்றும் சட்டப்பூர்வ தடையே முதன்மையான காரணமாகும். அணுசக்தி சட்டம் (1962), அணுசக்தி உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் இந்திய அரசாங்கத்திற்கு பிரத்யேக அதிகாரத்தை வழங்குகிறது. இது தனியார் அல்லது வெளிநாட்டு பங்கேற்பாளருக்கு இடமளிக்காது. 


இது தவிர, அணுசக்தி சேதத்திற்கான குடிமை பொறுப்புச் சட்டம் (Civil Liability for Nuclear Damage Act), 2010, அணு விபத்து ஏற்பட்டால் விநியோகர் பொறுப்பை விதித்தது. இது உலகளாவிய விதிமுறைகளிலிருந்து வேறுபட்டது. முக்கிய வெளிநாட்டு விநியோகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆபத்தை மிக அதிகமாகக் கண்டதால் இந்தியாவை மிகவும் ஆபத்தானதாகக் கருதி அதைத் தவிர்க்கிறார்கள்.  


இந்தியாவின் தூய எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைப் பயன்படுத்துவது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருட்களின் தேவையைக் குறைக்கவும் உதவுகிறது. நாட்டின் தொழில்கள் மற்றும் நகரங்களுக்கு அதிக எரிசக்தி தேவைப்படுவதால் இது முக்கியமானது. சரியான சீர்திருத்தங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பத்துடன், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அணுசக்தி நம்பகமான, குறைந்த கார்பன் மூலமாக மாறி வருகிறது.


இவற்றை சரியாகப் பயன்படுத்தினால், அது வளர்ந்த இந்தியா (Viksit Bharat) தொலைநோக்குப் பார்வையை அடைய உதவும். மேலும், இந்தியாவை நிலையான அணுசக்தி தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக மாற்றும். நாட்டை தூய்மையான, தன்னிறைவு எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும்.



Original article:

Share:

உறவுகளை சீர்படுத்துதல்: பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்தியாவிற்கான அரசுமுறைப் பயணம் குறித்து…

 இந்தியாவும் பிலிப்பைன்ஸும் உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 


வெள்ளிக்கிழமை முடிவடையும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசு முறை பயணம்  மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது சந்திப்புகள், வரலாற்று-கலாச்சார உறவுகளைக் கொண்ட இரு நாடுகளுக்கும் ஒரு இராஜதந்திர  பங்காளித்துவ ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) கையெழுத்திடுவதன் மூலம் தங்கள் வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தின.


2022ஆம் ஆண்டில்  பதவியேற்றதிலிருந்து இந்தியாவிற்கு அவரது முதல் பயணத்தில், மார்கோஸ் மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் சீன ஊடுருவல்களுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தியாவுடன் மிக நெருக்கமாக ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார். அவரது பயணத்துடன் ஒத்துப்போகும் வகையில், இந்திய கடற்படை தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் தனது முதல் கூட்டு கடல் பயிற்சிகளை நடத்தியது. இந்தப் பயிற்சிகள் சீனாவால் விமர்சிக்கப்பட்டன. இந்தியா பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக 2016ஆம் ஆண்டு  கடல் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (UN Convention on the Law of the Sea (UNCLOS)) நீதிமன்ற நடுவர் தீர்ப்பை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. 


இந்தோ-பசிபிக்கில் பன்முக ஒழுங்கை மதிக்குமாறு சீனாவை கேட்டுக்கொண்டது மற்றும் மார்கோஸ் இதை பாராட்டினார். இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தி வருகின்றன. உலகளவில் இந்தியா இதுபோன்ற பல ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரை, ஜப்பான், வியட்நாம், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவைத் தொடர்ந்து இந்தியா அதன் ஐந்தாவது ராஜதந்திர நட்பு நாடாகும். 


இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையைப் பெறும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் ஆகும். மேலும், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், அதிக இந்திய இராணுவ உபகரணங்களை வாங்க விரும்புகிறார். இரு நாடுகளும் தங்கள் இராணுவ மற்றும் கடலோர காவல்படை சேவைகளுக்கான ஒப்பந்தங்கள் உட்பட ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. விசாக்களை எளிமைப்படுத்தவும் நேரடி விமானங்களைத் தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இருதரப்பு வர்த்தகம் 2024-25ஆம் ஆண்டில் $3.3 பில்லியனாக சிறியதாக உள்ளது. ஆனால், இரு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பம் மற்றும் மருந்து நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதால் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.


மார்கோஸ் மற்றும் மோடி இடையேயான சந்திப்புகள், தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் உறவு குறித்து ஒரு முக்கியமான செய்தியை அனுப்பியது.  பிலிப்பைன்ஸ் 2026ஆம் ஆண்டில் ஆசியானுக்குத் தலைமை தாங்கும் மற்றும் ஆசியான்-இந்தியா விரிவான இராஜதந்திர கூட்டாண்மைக்கான ஒருங்கிணைப்பாளராக உள்ளது.


 ஜூன் மாதத்தில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலின் தேவையற்ற கருத்துக்களால் கோபமடைந்த உறவுகளைத் தளர்த்துவதற்கான ஒரு வழியாகவும் மார்கோஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் பல ஆசியான் நாடுகளை "சீனாவின் B குழு" என்று அழைத்தார். 

மேலும், 2009ஆம் ஆண்டு ஆசியான்-இந்தியா சரக்கு ஒப்பந்தத்தை (ASEAN-India Trade in Goods Agreement (AITIGA)) கேலி செய்தார். அடுத்த வாரம் டெல்லியில் பேச்சு வார்த்தையுடன், AITIGA-ஐ மறுபரிசீலனை செய்வதற்கான விரைவான பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கம் நகர்ந்துள்ளது. இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தனித்தனியாக ஒரு முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Preferential Trade Agreement (PTA)) பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது குறித்து விவாதித்தன. அமெரிக்காவின் வரிகள் மற்றும் அபராதங்களை எதிர்கொண்டாலும், மிகவும் திறந்த உலகளாவிய வர்த்தக அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியாவின் நோக்கத்தை இது காட்டுகிறது.


இந்த நிச்சயமற்ற உலகளாவிய காலங்களில், குவாட் நாடுகளுடன் மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும்  இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை இந்தியா விரும்புகிறது என்பதை இந்த வருகை காட்டுகிறது.



Original article:

Share:

நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்: ரிசர்வ் வங்கி, விகிதக் குறைப்புகளை நிறுத்தி வைத்துள்ளது பற்றி..

 நிலைமை நிச்சயமற்றதாக இருப்பதால், வட்டி விகிதங்களைக் குறைப்பதை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஒரு நல்ல முடிவை எடுத்தது.


ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு (Monetary Policy Committee), புதன்கிழமை அறிவித்தபடி, வட்டி விகிதக் குறைப்பை நிறுத்தியது சரியான முடிவாகும். கட்டணங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் இன்னும் உருவாகி வருவதாகவும், பிப்ரவரி 2025 முதல் செயல்படுத்தப்பட்ட 100 அடிப்படைப் புள்ளிகள் விகிதக் குறைப்புக்கள் இன்னும் அமைப்பு முழுவதும் ஊடுருவி வருவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சரியாகச் சுட்டிக்காட்டினார். 


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போதுள்ள 25% பரஸ்பர வரிகளுக்கு மேலாக கூடுதலாக 25% வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு மல்ஹோத்ராவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த விவாகரம் இன்னும் முடிவடையவில்லை என்ற அவரது மதிப்பீடு மிகவும் துல்லியமானது. 


இந்தியா இன்னும் அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டிருக்கிறது. மேலும், இறுதி வரிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கான "அபராதங்கள்" (penalties) போன்ற கூடுதல் வரிகள் மற்ற நாடுகளுக்கும் விதிக்கப்படலாம் என்று டிரம்ப் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். 


இது இந்தியாவின் ஒப்பீட்டு நன்மையை பாதிக்கும். இந்தியாவின் பொருளாதார நன்மையைப் பராமரிக்க, வட்டி விகிதக் குறைப்புகளை இடைநிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. கடந்த ஆறு மாதங்களில் முந்தைய 1% வட்டி விகிதக் குறைப்புகள் பயனுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு இந்த இடைநிறுத்தம் ரிசர்வ் வங்கியை அனுமதிக்கிறது. மேலும், இந்த குறைந்த விகிதங்களை கடன் வாங்குபவர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு நேரம் அளிக்கிறது. வங்கிகளில் போதுமான பணம் இருப்பதால், வங்கிகள் கடன்களை வழங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.


இருப்பினும், கேள்வி என்னவென்றால், போதுமான வளர்ச்சி தொடர்பான கடன் வாங்குதல் நடைபெறுகிறதா என்பதுதான். ஜூன் 2025ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் தரவுகள், நுகர்வோர் சாதனங்களுக்கான கடன்கள் கடந்த ஆண்டை விட 3% குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. வீட்டுக் கடன்கள் 36%இலிருந்து 9.6% ஆக மிகவும் மெதுவாக வளர்ந்தன. 


இந்தக் குறைந்த தேவைக் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, நிறுவனங்களும் தங்கள் கடன் வாங்குவதைக் குறைத்து வருவதாகத் தெரிகிறது. தொழில்துறைக்கான கடன்கள் ஜூன் 2025இல் 5.5% வளர்ச்சியடைந்தன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 8.1%ஆக இருந்தது. எனவே, விகிதங்களைக் குறைப்பது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ, பண விவகாரங்களில் மட்டுமல்ல, பல துறைகளிலும் வலுவான கொள்கைகள் தேவை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார். 


அரசாங்கம் பல்வேறு துறைகளில் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதை விட இலக்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வரி விதிப்பதன் மூலம் அதிக பணிகளை மேற்கொள்ள முடியும். பல முறை வாக்குறுதியளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விகித பகுத்தறிவு (Goods and Services Tax rate rationalisation) நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. எண்ணெய் விலைகள் குறையும் போது எரிபொருள் விலைகள் குறைக்கப்பட வேண்டும். இது நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்தும். ரிசர்வ் வங்கி, இப்போதைக்கு, நடவடிக்கைகளுக்காக காத்திருக்க முடியும். ஆனால், பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் விரைவாக செயல்பட வேண்டும்.



Original article:

Share:

இந்தியாவின் நச்சு குழாய்கள்: நிலத்தடி நீர் மாசுபாடு எவ்வாறு நாள்பட்ட நோய்களை உருவாக்குகிறது? -சுதீர் குமார் சுக்லா

 நிலத்தடி நீர் மாசுபாடு (Groundwater pollution) மெதுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இது கண்ணுக்குத் தெரியாதது மற்றும்  பரவக்கூடியது. இருப்பினும், அது அது ஏற்படுத்தும் சேதம் எப்பொழுதும் சரிசெய்ய முடியாததாக இருக்கும். ஒவ்வொரு நாளும் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இதைச் சார்ந்து இருப்பதால், இது ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியாகும்.


இந்தியாவின் ஆறுகள் மற்றும் பருவகால பருவமழைகள் இருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான உள்நாட்டு மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வது நிலத்தடி நீர்தான். ஊரக பகுதிகளில் 85%க்கும் அதிகமானவை மற்றும் பாசன நீரில் 65% மேற்பரப்புக்குக் நிலத்தடி நீரிலிருந்து வருகிறது.  இருப்பினும், இந்த முக்கிய வளத்தின் விரைவான மற்றும் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற பிரித்தெடுத்தல், அதிகரித்து வரும் கண்ணுக்குத் தெரியாத நெருக்கடியைத் நிலத்தடி நீர் மாசுபாடு அதிகரிக்க செய்துள்ளது. ஒரு காலத்தில் இயற்கையின் தூய்மையான இருப்பாகக் கருதப்பட்ட நிலத்தடி நீர், இப்போது நைட்ரேட்டுகள், கன உலோகங்கள், தொழில்துறை நச்சுகள் மற்றும் நோய்க்கிருமி நுண்ணுயிரிகளால் மாசுபட்டுள்ளது. அதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கு அமைதியான அச்சுறுத்தலாக உள்ளது.


மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Board (CGWB)) 2024 வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறது. 440 மாவட்டங்களில் இருந்து 20%க்கும் மேற்பட்ட மாதிரிகள் நைட்ரேட்டுகளால் மாசுபட்டிருந்தன. இதற்கு பெரும்பாலும் இரசாயன உரங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் இருந்து வெளி வரும் கசிவுகள் இதற்கு காரணமாகும். 9%-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் அதிகப்படியான ஃபுளோரைடு கண்டறியப்பட்டது. இது பரவலான பல் மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு (dental and skeletal fluorosis) வழிவகுத்தது. 


குறிப்பாக, இராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இது அதிகம் காணப்பட்டது. பஞ்சாப் மற்றும் பீகாரில், உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) நிர்ணயித்த பாதுகாப்பான வரம்பை விட ஆர்சனிக் அளவு மிக அதிகமாக இருந்தது. இது புற்றுநோய் மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரித்தது. பஞ்சாப், ஆந்திரா மற்றும் இராஜஸ்தானில் உள்ள சில மாவட்டங்களிலும் அதிக யுரேனியம் அளவுகள் இருந்தன. இது ரசாயன உரங்கள் மற்றும் அதிகப்படியான நிலத்தடி நீர் பயன்பாடு காரணமாக இருக்கலாம். பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 13%-க்கும் அதிகமானவை இரும்பிற்கான பாதுகாப்பான வரம்புகளை மீறிவிட்டன. இது இரைப்பை குடல் (gastrointestinal) மற்றும் வளர்ச்சி கோளாறுகளுக்கு முக்கிய காரணியாக இருந்தது.


இந்த புள்ளிவிவரங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. அவை முறையான புறக்கணிப்பு மற்றும் கொள்கை செயலற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன.


நிலத்தடி நீர் மரண மண்டலங்கள் (Groundwater death zones)


உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள புத்பூரில், இந்த ஆண்டு இரண்டு வாரங்களில் மட்டும் 13 பேர் சிறுநீரக செயலிழப்பு மற்றும் தொடர்புடைய பிரச்சனைகளால் இறந்தனர். அருகிலுள்ள காகிதம் மற்றும் சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இது உள்ளூர் ஆழ்துளை கிணறுகளை மாசுபடுத்தியுள்ளது. ஜலாவுனில், நிலத்தடி எரிபொருள் கசிவுகள் காரணமாக அடிகுழாய்களில் (handpumps) இருந்து பெட்ரோலியம் போன்ற திரவங்கள் வெளியேறுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். புவனேஸ்வரின் பைகாராபூரில், ஒரு பழுதடைந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தியது.


இவை தனித்த சம்பவங்கள் அல்ல. இந்த நிகழ்வுகள் பலவீனமான  செயலக்கம், நிறுவன அக்கறையின்மை (institutional apathy)  மற்றும் வளர்ந்து வரும் ஒரு கடுமையான பிரச்சினையை பொதுமக்கள் கவனிக்காதது போன்ற கவலையளிக்கும் போக்கை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.



உடல்நல பாதிப்புகள்: தரவு எதை  வெளிப்படுத்துகிறது?


இந்தியாவில் நிலத்தடி நீர் மாசுபாடு தேசிய பொது சுகாதார நெருக்கடியாக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (Indian Council of Medical Research (ICMR)) மற்றும் உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் ஆய்வுகள் குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்கள் காரணமாக பரவலான சுகாதார விளைவுகளை ஆவணப்படுத்தியுள்ளன.


ஃப்ளோரைடு மாசுபாடு 20 மாநிலங்களில் உள்ள 230 மாவட்டங்களை பாதிக்கிறது. ஏறக்குறைய 66 மில்லியன் மக்கள் எலும்புக்கூடு ஃப்ளோரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மூட்டு வலி, எலும்பு பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் மெதுவான வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தீவிர நிலையாகும். ராஜஸ்தானில், 11,000-க்கும் மேற்பட்ட ஊரக பகுதிகளில்  இந்த நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் ஜபுவாவில், ஃப்ளோரைடு அளவு 5மி.கி/லிட்டரை விட அதிகமாக உள்ளது. இதனால், 40% பழங்குடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடு சிதைவு குறைபாடுகள் பதிவாகியுள்ளன.


தேசிய நீர் தர கணக்கெடுப்பில் கேரளத்தின் 10 மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் பாதி மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின்  2024ஆம் ஆண்டு அறிக்கை, 15,259 நிலத்தடி நீர் மாதிரிகளில் 9.04% உலக சுகாதார அமைப்பின் 1.5 மி.கி/லி ஃப்ளோரைடு வரம்பை மீறியதாகக் கண்டறிந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள  சோனேபத்ரா (உ.பி.) 52.3% பரவல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், மத்தியபிரதேசத்தில் ஷிவ்புரில் அளவுகள் 2.92 மி.கி/லிட்டரை எட்டியுள்ளன. நீரிலிருந்து ஃவுளூரைடை (defluoridation) நீக்குதல், சிறந்த ஊட்டச்சத்தை வழங்குதல் மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குதல் ஆகியவை பயனுள்ள தீர்வுகளில் அடங்கும்.


ஹரியாணாவில் மாசுபட்ட நிலத்தடி நீருக்கு எதிராக தொட்டிகள் போரிடுகின்றன 


மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் அசாம் உள்ளிட்ட கங்கை நதிப் பகுதியில் ஆர்சனிக் வெளிப்பாடு அதிகமாக உள்ளது.  இது தோல் பிரச்சினைகள், திசு சேதம், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களை ஏற்படுத்தும். பீகாரில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இரத்தத்தில் அதிக ஆர்சனிக் உள்ள 100 பேரில் ஒருவர் தோல், சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் உள்ளிட்ட புற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில், ஆர்சனிக் செறிவுகள் 200 µg/L-ஐ எட்டின. இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. 10,000க்கும் மேற்பட்ட புற்றுநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின், போஜ்பூர் மற்றும் புக்ஸர் மாவட்டங்களில், இதே போன்ற தாக்கங்கள் காணப்படுகின்றன. ஆர்சனிக் நிலத்தடியில் இருந்து வருவது (geogenic) என்றாலும், நிலத்தடி நீர் அதிகமாக எடுப்பது, சுரங்கம் மற்றும் பாசனத்தால் அதன் இயக்கம் மோசமாகிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Board (CGWB)) 2024ஆம் ஆண்டு அறிக்கை உத்தரப் பிரதேசத்தின் 29 மாவட்டங்களில் பாதுகாப்பற்ற ஆர்சனிக் அளவுகளை அடையாளம் காட்டியது. பாக்பட்  பகுதி பாதுகாப்பான வரம்பை விட 40 மி.கி/லிட்டருக்கு 4,000 மடங்கு அதிகமாக பதிவு செய்துள்ளது.


நைட்ரேட் மாசுபாடு வட இந்தியாவில் பரவலாக உள்ளது மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. குழந்தை உணவு நைட்ரேட் கலந்த தண்ணீருடன் கலக்கப்படும்போது, அது ‘blue baby syndrome’ எனப்படும் மெத்தெமோகுளோபினீமியாவை ஏற்படலாம். 2023ஆம் ஆண்டு  தேசிய சுகாதார விவரக்குறிப்பு (National Health Profile) ஐந்து ஆண்டுகளில், பஞ்சாப், ஹரியானா மற்றும் கர்நாடகாவில், கடுமையான நைட்ரேட் நச்சுத் தன்மை பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்று, இந்திய மாவட்டங்களில் 56% பாதுகாப்பான நைட்ரேட் அளவை விட அதிகமாக உள்ளன.







‘ blue baby syndrome‘ என்றால் என்ன?


     blue baby syndrome என்பது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். இது குழந்தைகள் அதிக மாசுப்பாடு உள்ள  நைட்ரேட் தண்ணீரை குடிக்கும்போது இது நிகழ்கிறது.



ஒரு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புவியியல் மண்டலங்களுக்குள் மட்டுமே இருந்த யுரேனியம், அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சுதல் மற்றும் உர பயன்பாடு காரணமாக அடிக்கடி கண்டறியப்படுகிறது. மால்வா பகுதியில், மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நிலத்தடி நீரில் யுரேனியம் அளவுகள் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பான 30 µg/L-ஐ மீறுவதைக் கண்டறிந்தது. இது நாள்பட்ட உறுப்பு சேதம் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கும் நச்சுத்தன்மை (nephrotoxicity) ஆகியவற்றின் கடுமையான அபாயங்களை ஏற்படுத்துகிறது. முடிவுகள் 66% மாதிரிகள் குழந்தைகளுக்கும் 44% பெரியவர்களுக்கும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்துவதாகக் காட்டின.


கர்நாடகாவின் கடினமான பாறை நிலப்பரப்பில் நிலத்தடி நீர் நெருக்கடி ஆழமடைகிறது.


தொழில்துறை வெளியேற்றங்களிலிருந்து கன உலோகங்கள்  ஈயம், காட்மியம், குரோமியம், பாதரசம்  போன்றவை நிலத்தடி நீரில் நுழைகின்றன. இதனால் வளர்ச்சி தாமதங்கள், இரத்த சோகை, நோயெதிர்ப்பு அமைப்பு பிரச்சினைகள் மற்றும் நரம்பியல் பாதிப்பு ஏற்படுகிறது. கான்பூர் (உ.பி.) மற்றும் வாபி (குஜராத்) ஆகியவற்றில் உள்ள தொழில்துறை தொகுப்புகளுக்கு (industrial clusters) அருகிலுள்ள குழந்தைகளிடையே ஆபத்தான முறையில் அதிக இரத்த ஈய அளவுகள் இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research) தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Environmental Health (NIREH)) கண்டறிந்துள்ளது.


கசிவு ஏற்படும் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் ஊடுருவல் ஆகியவற்றிலிருந்து காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் ஹெபடைடிஸ் A மற்றும் E ஆகியவை மீண்டும் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன. புவனேஸ்வரின் பைகாராபூரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் சமீபத்தில் கழிவுநீர் மாசுபட்ட நிலத்தடி நீரால் இணைக்கப்பட்ட நீர்வழி நோய் பரவலால் பாதிக்கப்பட்டனர்.


இந்தியா நிலத்தடி நீரை மிக ஆழமாக உறிஞ்சுகிறதா?


இந்த நெருக்கடி ஒரு பிளவுபட்ட ஒழுங்குமுறை அமைப்பில் வேரூன்றியுள்ளது. நீர் (தடுப்பு மற்றும் மாசுபாட்டுக் கட்டுப்பாடு) சட்டம், 1974 (Water (Prevention and Control of Pollution) Act) நிலத்தடி நீரை அரிதாகவே குறிக்கிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. மேலும், மாநில மாசுபாட்டு கட்டுப்பாட்டு வாரியங்கள் (State Pollution Control Boards (SPCBs)) வளங்கள் குறைவாகவும் தொழில்நுட்ப ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன. தொழிற்சாலைகள் மிகக் குறைந்த கண்காணிப்புடன் இயங்குகின்றன. மேலும், கிராமப்புற மற்றும் அருகிலுள்ள நகர்ப்புறங்களில் சுகாதார வசதிகள் இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளன.


முக்கிய கட்டமைப்பு சிக்கல்கள் பின்வருமாறு:


சிதறிய அமைப்பு (Institutional fragmentation): 


மத்திய நிலத்தடி நீர் வாரியம், மாநில மாசுபாட்டு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் ஜல் ஷக்தி அமைச்சகம் போன்ற நிறுவனங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. தொழிற்சாலைகள் குறைந்தபட்ச மேற்பார்வையுடன் இயங்குகின்றன. மேலும், சுகாதார உள்கட்டமைப்பு, குறிப்பாக ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில், பற்றாக்குறையாகவே உள்ளன.


பலவீனமான சட்ட அமலாக்கம்: 


நீர் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அது சரியாக அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக,  நிலத்தடி நீர் வெளியேற்றத்திற்கு. பலவீனமான விதிகள் மற்றும் மோசமான கண்காணிப்பு மாசுபடுத்துபவர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்கின்றன.

உண்மையான மற்றும் அணுகக்கூடிய தரவு இல்லாதது: 


கண்காணிப்பு அரிதாகவே நிகழ்கிறது மற்றும் பரவலாகப் பகிரப்படுவதில்லை. முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் அல்லது பொது சுகாதார சோதனைகளுக்கான இணைப்புகள் இல்லாமல், மாசுபாடு பெரும்பாலும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திய பின்னரே கண்டறியப்படுகிறது.


அதிகப்படியான நீர் பிரித்தெடுத்தல்: 


அதிகமாக நீரை இறைப்பது நீர் மட்டத்தைக் குறைத்து மாசுக்களை அதிகரிக்கிறது, இதனால் நிலத்தடி நீர் இயற்கை நச்சுகள் மற்றும் உப்பால் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவது இந்தியாவின் நிலத்தை அமைதியாக மூழ்கடித்து வருகிறது.


மாற்ற வேண்டியவை


இந்தியாவின் நிலத்தடி நீர் நெருக்கடிக்கு கட்டுப்பாடு, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பொது பங்கேற்பை ஒருங்கிணைக்கும் ஒரு துணிச்சலான, ஒருங்கிணைந்த மற்றும் பல பரிமாண உத்தி தேவைப்படுகிறது.அவை:


ஒரு தேசிய நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டு கட்டமைப்பு: 


நிறுவனங்கள் முழுவதும் பொறுப்புகளை தெளிவாக வரையறுத்து, CGWB-ஐ ஒழுங்குமுறை அதிகாரத்துடன் அதிகாரம் அளிக்கிறது.


நவீனமயமாக்கப்பட்ட கண்காணிப்பு உள்கட்டமைப்பு: 


நிகழ்நேர சென்சார்கள், ரிமோட் சென்சிங் மற்றும் திறந்த அணுகல் தளங்களைப் பயன்படுத்துதல், ஆரம்பகால கண்டறிதலுக்காக சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (Health Management Information System (HMIS)) போன்ற சுகாதார கண்காணிப்பு அமைப்புகளுடன் நீர் தரத் தரவை ஒருங்கிணைக்க வேண்டும். 


இலக்கு வைக்கப்பட்ட தீர்வு மற்றும் சுகாதார தலையீடுகள்: 


குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் சமூக அளவிலான ஆர்சனிக் மற்றும் ஃவுளூரைடு அகற்றும் அமைப்புகளை நிறுவவும், குழாய் நீர் அணுகல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவுபடுத்த வேண்டும்.


நகர்ப்புற மற்றும் தொழில்துறை கழிவு சீர்திருத்தங்கள்: 


பூஜ்ஜிய திரவ வெளியேற்றத்தை (Zero Liquid Discharge (ZLD)) கட்டாயமாக்குதல், குப்பைக் கிடங்குகளை கண்டிப்பாக ஒழுங்குபடுத்துதல் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்களுக்கு அபராதங்களை அமல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


வேளாண் வேதியியல் சீர்திருத்தம்: 


கரிம விவசாயத்தை ஊக்குவித்தல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சமநிலையான ஊட்டச்சத்து மேலாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.



குடிமக்களை மையமாகக் கொண்ட நிலத்தடி நீர் நிர்வாகம்: 


பாதுகாப்பான நீர் நடைமுறைகளை சோதித்தல், கண்காணித்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றில் பஞ்சாயத்துகள், நீர் பயனர் குழுக்கள் மற்றும் பள்ளிகளின் ஈடுபாட்டை அதிகரிக்க  வேண்டும்.



வேதியியல் ரீதியாக மாசுபட்ட இடங்களை நிவர்த்தி செய்வதற்கான நடைமுறை சட்டப்பூர்வமானது


இந்தியாவின் நிலத்தடி நீர் நெருக்கடி இப்போது அளவை விட பாதுகாப்பைப் பற்றியது. தினமும் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதை நம்பியுள்ளனர். இது ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமல்லாமல், பொது சுகாதார அவசரநிலையாகவும் மாறுகிறது. நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இலக்கு வைத்தாலும், மில்லியன் கணக்கானவர்களுக்கு இன்னும் சுத்தமான தண்ணீர் இல்லை.


நிலத்தடி நீர் மாசுபாடு (Groundwater pollution) மெதுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இது கண்ணுக்குத் தெரியாதது மற்றும்  பரவக்கூடியது. இருப்பினும், அது அது ஏற்படுத்தும் சேதம் எப்பொழுதும் சரிசெய்ய முடியாததாக இருக்கும்.  நாம் விரைவாக ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால், சுத்தமான தண்ணீரின் முக்கியத்துவத்தை அது இல்லாமல் போன பிறகுதான் நாம் உணர முடியும். அதற்கான விலை பணமாக இருக்காது. மாறாக, உயிர்கள் மற்றும் இழந்த எதிர்காலங்களாக இருக்கும்.


டாக்டர் சுதீர் குமார் சுக்லா ஒரு சுற்றுச்சூழல் விஞ்ஞானி மற்றும் நிலைத்தன்மை நிபுணர் (sustainability expert). தற்போது அவர் புது தில்லியில் உள்ள மோபியஸ் அறக்கட்டளையில் தலைமை சிந்தனையாளராகப் பணியாற்றுகிறார்.



Original article:

Share: