சர்வம் மற்றும் இந்தியா செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (India AI Mission) -ரோஷ்னி யாதவ்

 சிந்திக்கவும் பேசவும் கூடிய இந்தியாவின் முதல் அரசாங்க ஆதரவுடன் கூடிய பெரிய மொழி மாதிரியை (large language model (LLM)) உருவாக்க AI startup Sarvam தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றியும் இந்தியா AI திட்டம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய செய்திகளில் ஏன்?


நாட்டின் முதல் தயாரிக்கப்பட்ட AI மொழி மாதிரியை உருவாக்க, பெங்களூருவை தளமாகக் கொண்ட AI startup Sarvam இந்திய அரசு தேர்வு செய்துள்ளது. சீனாவின் குறைந்த விலை AI DeepSeek கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இது வந்துள்ளது. விண்ணப்பித்த 67 நிறுவனங்களிலிருந்து சர்வம் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் தொடக்கத்திலிருந்தே AI மாதிரியை உருவாக்க கணினி சக்தியுடன் அரசாங்கத்திடமிருந்து உதவி பெறும்.


முக்கிய அம்சங்கள்:


1.  சர்வம் என்பது ₹10,370 கோடி பட்ஜெட்டைக் கொண்ட இந்தியா AI திட்டத்தின் (IndiaAI Mission) கீழ் ஆதரவைப் பெறும் முதல் புத்தொழில் நிறுவனம் (start-up) ஆகும். அரசாங்கம் இன்னும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பல திட்டங்களைப் பரிசீலித்து வருகிறது.


2.  சர்வமின் AI மாதிரி புத்திசாலித்தனமாக இருக்கும். குரல் அம்சங்களை ஆதரிக்கும் மற்றும் இந்திய மொழிகளை நன்கு புரிந்துகொள்ளும். இது அதிக எண்ணிக்கையிலான மக்களின் பயன்பாட்டிற்காகவும் உருவாக்கப்படும்.


3. அரசாங்க ஆதரவைப் பொறுத்தவரை, நிறுவனம் தனது மாதிரியை உருவாக்கி பயிற்சி அளிக்க ஆறு மாதங்களுக்கு 4,000 கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை (graphics processing units (GPUs)) அணுகும் என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.



4. இந்த மாதிரி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தற்போது வெளியிடப்படாது. ஆனால், அது இந்திய மொழிகளில்  சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும். இந்தியாவில் AI தரவு மையங்களை அமைக்க அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களால் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை (graphics processing units (GPUs)) அணுகும் அதிகாரம் சர்வமுக்கு வழங்கப்படும்.


5. சர்வமின் பெரிய மொழி மாதிரி (LLM) திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம் மூன்று வகையான மாதிரிகளை உருவாக்குகிறது:


(i) Sarvam-Large - மேம்பட்ட சிந்தனை மற்றும் உள்ளடக்க உருவாக்கத்திற்காக உருவாக்கப்படுதல்.


(ii) Sarvam-Small - விரைவான மற்றும் நிகழ்நேர பயனர் தொடர்புகளுக்காக உருவாக்கப்படுதல்.


(iii) Sarvam-Edge - தொலைபேசிகள் அல்லது டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களில் சிறிய பணிகளுக்காகஉருவாக்கப்படுதல்.


6. சர்வம் மாதிரி இந்தியாவில் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும். இது இந்திய வசதிகளைப் பயன்படுத்தும் மற்றும் திறமையான இந்திய தொழிலாளர்களின் புதிய குழுவால் உருவாக்கப்படும். இந்த திட்டத்தின் குறிக்கோள், இந்தியாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவது, நாட்டில் புதிய யோசனைகளை ஆதரிப்பது மற்றும் எதிர்காலத்தில் இந்தியா AI-ல் முன்னணியில் இருக்க உதவுவதாகும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்தியா AI திட்டம்


1. அனைவருக்கும் கணினி அணுகலை எளிதாக்குதல், தரவு தரத்தை மேம்படுத்துதல், இந்தியாவில் AI திறன்களை உருவாக்குதல், சிறந்த AI நிபுணர்களை ஈர்த்தல், நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட உதவுதல், புதிய தொடக்க நிறுவனங்களுக்கு பணம் வழங்குதல், சமூகத்திற்கு உதவும் AI திட்டங்களை ஆதரித்தல் மற்றும் AI-ன் நியாயமான மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் AI வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு முழுமையான அமைப்பை உருவாக்க இந்தியா AI திட்டம் (IndiaAI Mission) விரும்புகிறது.


2. திட்டத்தின் குறிக்கோள்கள்:


  • சிறந்த முடிவுகளை எடுக்க, தகவல்தொடர்புகளை மேம்படுத்த மற்றும் பணி செயல்திறனை அதிகரிக்க திறன் அமைப்புகளைப் பயன்படுத்துதல்.

  • சுகாதாரம், கல்வி, விவசாயம், திறன் நகரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் இந்தியாவின் சமூகத் தேவைகளைத் தீர்க்க ஸ்மார்ட் அமைப்புகளைப் பயன்படுத்துதல்.

  • புதிய தகவல்களை உருவாக்குதல் மற்றும் திறன்அமைப்புகளுக்கான புதிய பயன்பாடுகளை உருவாக்குதல்.


3. இந்த நோக்கம் பின்வரும் ஏழு தூண்கள் மூலம் இந்தியாவின் AI சுற்றுச்சூழல் அமைப்பின் பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அவை:


(i) IndiaAI கணினி திறன்


(ii) IndiaAI கண்டுபிடிப்பு மையம்


(iii) IndiaAI தரவுத்தொகுப்புகள் தளம்


(iv) IndiaAI பயன்பாட்டு மேம்பாட்டு முயற்சி


(v) IndiaAI எதிர்கால திறன்கள்


(vi) IndiaAI தொடக்க நிதி


(vii) பாதுகாப்பான மற்றும் நம்பகமான AI




இந்தியா AI திட்டத்தின் சவால்கள்


1. வரையறுக்கப்பட்ட AI நிபுணத்துவம் மற்றும் AI தீர்வுகளை செயல்படுத்த முதலீடு இல்லாமை

2. AI மற்றும் cloud computing உள்கட்டமைப்பு இல்லாமை

3. தரவு இல்லாமை மற்றும் மோசமான தரவு தரம்

4. தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சிக்கல்கள்

5. AI  ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறைகள் இல்லாமை


LLM என்றால் என்ன?


1. கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, பெரிய மொழி மாதிரிகள் (LLM) மனித மொழியைப் புரிந்துகொண்டு பயன்படுத்தும் பெரிய கணினி நிரல்கள் ஆகும். இந்த மாதிரிகள் முதலில் நிறைய தகவல்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப சரிசெய்யப்படுகின்றன. எளிமையாகச் சொன்னால், அவை உரையை வரிசைப்படுத்துதல், கேள்விகளுக்கு பதிலளித்தல், உரை எழுதுதல் மற்றும் வெவ்வேறு தொழில்களில் ஆவணங்களைச் சுருக்கமாகக் கூறுதல் போன்ற விஷயங்களுக்கு உதவுகின்றன.


2. வங்கி, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பகுதிகளில் உள்ள சிறப்பு சிக்கல்களைத் தீர்க்க பெரிய மொழி மாதிரிகளை மாற்றலாம். அந்தப் பகுதிகளிலிருந்து குறைந்த அளவு தரவு மட்டுமே இருந்தாலும்கூட அவை பயன்படுத்தப்படலாம்.


3. மூன்று முக்கிய பகுதிகளைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் பெரிய மொழி மாதிரிகளை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். முதலில், ‘பெரிய’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன:


  • இது அதிக அளவு பயிற்சித் தரவைப் பயன்படுத்துகிறது

  • parameters எனப்படும் அதிக எண்ணிக்கையிலான அமைப்புகளைக் கொண்டுள்ளது. இயந்திர கற்றலில், parameters மாதிரியின் நினைவகம் போன்று அவை கற்றுக்கொண்டதைச் சேமிக்கின்றன. இவை மாதிரி பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுகின்றன.


4. LLM பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது மிக முக்கியமான விஷயம் அதன் பொது நோக்கம். இதன் பொருள், மனித மொழியின் பொதுவான பகுதிகளிலிருந்து வரும் பொதுவான சிக்கல்களை, எந்தப் பணியாக இருந்தாலும் அல்லது என்ன வளங்கள் கிடைத்தாலும், இந்த மாதிரியால் தீர்க்க முடியும்.


5.  ஒரு LLM என்பது ஒரு மனிதனைப் போல புரிந்துகொண்டு எழுதக்கூடிய மிகவும் புத்திசாலித்தனமான மென்பொருளைப் போன்றது. மொழியில் உள்ள வடிவங்கள் மற்றும் இணைப்புகளைக் கண்டறிவதன் மூலம் இது ஒரு பெரிய அளவிலான தரவுகளிலிருந்து கற்றுக்கொள்கிறது. LLMகள் கணினிகள் மனித மொழியைப் படிக்க, புரிந்துகொள்ள மற்றும் எழுத உதவுகின்றன.



Original article:
Share:

மேடன்-ஜூலியன் அலைவு என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • இந்த ஆண்டு, மும்பையில் பருவமழை முன்னெப்போதையும் விட முன்னதாகவே தொடங்கியது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 1950ஆம் ஆண்டு முதல் பதிவுகளை பராமரித்து வருகிறது. இதற்கு முன் மே 29 அன்று பருவமழை பெய்தது, இது 1971, 1962 மற்றும் 1956-ஆம் ஆண்டுகளில் நடந்தது. வழக்கமாக, ஜூன் 11-ஆம் தேதி மும்பையில் பருவமழை தொடங்கும்.


  • பொதுவாக, கேரளாவில் மழை பெய்யத் தொடங்கிய சுமார் 10 நாட்களுக்குப் பிறகு பருவமழை மும்பையை அடைகிறது. கேரளாவில் பருவமழை தொடங்கும் வழக்கமான தேதி ஜூன் 1 ஆகும்.  அதன் பிறகு, பருவமழை ஜூன் 6-ஆம் தேதி மகாராஷ்டிராவிற்கும் பின்னர் ஜூன் 11-ஆம் தேதி மும்பைக்கும் நகரும்.


  • இந்த ஆண்டு, மே 24-ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கியதாக IMD தெரிவித்துள்ளது. தற்போது 2009-ஆம் ஆண்டுக்கு பின் முன்பே பருவமழை தொடங்கியுள்ளது. பின்னர் பருவமழை கேரளாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு 24 மணி நேரத்தில் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவையும் திங்கட்கிழமை மும்பையையும் அடைந்தது.


  • வானிலை நிலைமைகள் மிகவும் சிறப்பாக இருந்ததால் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கும் விரைவாகப் பெய்யத் தொடங்குவதற்கும் காரணம் என்று மும்பை IMDயின் இயக்குனர் சுபாங்கி பூட் கூறினார்.


  • மூத்த வானிலை நிபுணர்கள் கூறுகையில், மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation (MJO)) ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தது. MJO இந்தியப் பெருங்கடலில் தொடங்குகிறது மற்றும் இந்திய பருவமழையை பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.


உங்களுக்குத் தெரியுமா?:


  • MJO என்பது அடிப்படையில் காற்று, மேகங்கள் மற்றும் அழுத்தத்தின் சிக்கலான, நகரும் அமைப்பாகும். இது வினாடிக்கு 4-8 மீட்டர் வேகத்தில் கிழக்கு நோக்கி பயணிக்கிறது. 30 முதல் 60 நாட்களுக்குள், MJO காற்றுப் பட்டைகள் உலகம் முழுவதும் பயணித்து, அவற்றின் எழுச்சியில் குறிப்பிடத்தக்க வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். சாதகமான கட்டங்களில், அவை இந்தியாவில் பருவமழையை அதிகரிக்கக்கூடும்.


  • மே 22 அன்று வெளியிடப்பட்ட அதன் முன்னறிவிப்பில், MJO அப்போது 4ஆம் கட்டத்தில் 1-ஐ விட அதிகமான வீச்சுடன் இருந்ததாக IMD கூறியது. இது வலுவான மழைப்பொழிவு மற்றும் புயல்களைக் குறிக்கிறது.


  • “MJO ஒரு பங்களிக்கும் காரணியாக இருந்தாலும், குறுக்கு பூமத்திய ரேகை ஓட்டம் (வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களுக்கு இடையில் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் கொண்டு செல்லும்) தற்போது மிகவும் வலுவாக உள்ளது. இது மேலும் அதிக ஈரப்பதத்தைக் கொண்டுவருகிறது,” என்று IMD அதிகாரி ஒருவர் கூறினார்.


  • மேலும், சூறாவளி சுழற்சி காரணமாக அரபிக்கடலில் உருவான குறைந்த அழுத்தப் பகுதி, தென்மேற்கு பருவமழையின் வேகமான இயக்கத்திற்கும் உதவியது என்று IMD விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களாக மும்பையில் பருவமழைக்கு முந்தைய கனமழையை வரவழைத்தது இந்த குறைந்த அழுத்தப் பகுதிதான் காரணம்.


  • கடந்த 107 ஆண்டுகளில் இந்த மாதம் மும்பையின் மிக மழைக்கால மே மாதமாக IMD கொலாபா ஆய்வகம் இந்த மாதம் இதுவரை 295 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு, தீவு நகரத்தில் (மும்பையில்) மிக அதிக மழை 1918ஆம் ஆண்டு மே மாதத்தில் 279.4 மிமீ மழை பதிவாகியிருந்தது. இதற்கிடையில், இந்த மாதம் ஏற்கனவே 197 மிமீ மழை பெய்துள்ளதால், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு சாண்டாக்ரூஸில் அதிக மழை பெய்யும் மே மாதமாகவும் இது உள்ளது.


  • IMD தனது நீண்டதூர முன்னறிவிப்பில், இந்த ஆண்டு, நாடு இயல்பைவிட அதிகமாக பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது "நீண்ட கால சராசரியில் (LPA) 105% ஆகவும், மாதிரி பிழை ± 5% ஆகவும் இருக்கும்" என்று கணிக்கப்பட்டுள்ளது.


  • பருவமழையின்போது எல் நினோ தெற்கு அலைவு (El Niño Southern Oscillation (ENSO)) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) ஆகியவற்றின் நடுநிலை நிலைமைகள் பருவத்தை மழைக்கு ஏற்றதாக மாற்ற உதவும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.


Original article:
Share:

இராணுவ நடவடிக்கைகளில் சிவப்பு அணிகளை (Red Teams) பயன்படுத்துவதன் முதன்மை நோக்கம் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • சிவப்பு அணி (Red teaming) என்பது எதிரியின் சிந்தனை, தந்திரங்கள் மற்றும் அதற்கு அவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் நிபுணர்களின் ஒரு சிறிய குழுவை திட்டமிடல் குழுவில் சேர்ப்பதாகும். அவர்களின் வேலை திட்டத்தை கவனமாக கேள்வி கேட்பது, எதிரி செய்வது போல் செயல்படுவது மற்றும் இராணுவ உத்தி சிறப்பாக செயல்படுமா என்பதை சரிபார்க்க உதவுவது.

சிவப்பு அணி என்பது தனிநபர்கள் அல்லது அலகுகளின் குழுவைக் குறிக்கிறது, அவை முதன்மையான சக்தியின் திட்டங்கள், உத்திகள் மற்றும் இராஜதந்திரங்களை சவால் செய்வதற்கும் சோதனை செய்வதற்கும் குறிப்பாகப் பணிபுரிகின்றன.


நீல அணி, நட்பு அல்லது நட்புப் படைகளைக் குறிக்கும்.


  • ஆதாரங்களின்படி, இந்திய இராணுவம் இந்த யோசனையை ஒரு உண்மையான நடவடிக்கையில் முயற்சித்தது இதுவே முதல் முறை. இது இந்தியாவின் உத்தியில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது, இது எல்லை தாண்டிய நடவடிக்கைகளில் எதிரிகளின் நகர்வுகளைக் கணிப்பதில் மிகவும் நெகிழ்வானதாகவும் சிறந்ததாகவும் ஆக்குகிறது.


  • Red teaming-ல் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் பெரிய திட்டமிடல் குழுவின் ஒரு பகுதியாக பணியாற்றினர்.


  • இந்த யோசனை 2024 அக்டோபரில் நடந்த ராணுவத் தளபதிகள் கூட்டத்திற்குப் பிறகு தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பிறகு, 15 அதிகாரிகள் ரெட் டீமிங்கில் சிறப்புப் பயிற்சி பெற்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 'விதுர் வக்தா' (‘Vidur Vakta’) திட்டத்தை வளர்த்து முறைப்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்குள் நிபுணர்களை உருவாக்குவதும், வெளிநாட்டு பயிற்சியாளர்களை குறைவாக நம்புவதும் இதன் குறிக்கோள்.


  • கடந்த மே மாதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் தெரிவித்தபடி, இராணுவம் OPFOR (எதிர்ப்புப் படை) என்ற சிறப்புப் பிரிவை உருவாக்குவது குறித்து ஆராயத் தொடங்கியது. இந்தப் பிரிவு போர் உத்திகளை மிகவும் யதார்த்தமானதாக மாற்றவும், சண்டையிடும் திறன்களை மேம்படுத்தவும் பயிற்சியின்போது எதிரியாகச் செயல்படும். அமெரிக்காவைப் போலவே பல படைகளும் ஏற்கனவே பயிற்சியில் எதிரிகளின் செயல்களை நகலெடுக்க இத்தகைய பிரிவுகளைப் பயன்படுத்துகின்றன.


  • சிம்லாவை தளமாகக் கொண்ட அதன் பயிற்சி கட்டளையில் (ARTRAC) இராணுவம் ஏற்கனவே REDFOR (சிவப்புப் படைகள்) பிரிவைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவு போர் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை சரிபார்க்கிறது. பொதுவாக காகிதத்தில் அல்லது மணல் மாதிரிகளுடன் செய்யப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சிகள் எவ்வாறு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்பதற்கான விதிகள் மற்றும் வரம்புகளை அமைக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?:


  • சிவப்பு அணி நீண்ட காலமாக இராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக பனிப்போரின்போது. இது சோவியத் திட்டங்களை முன்னறிவிக்க உதவியது. ஆனால், இந்திய இராணுவம் சமீபத்தில்தான் இதை முயற்சிக்கத் தொடங்கியது. 'சிவப்பு அணி' என்ற சொல் போர்-விளையாட்டுப் பயிற்சிகளில் இருந்து உருவானது, அங்கு சிவப்பு அணியாக நியமிக்கப்பட்ட ஒரு குழு, எதிரியின் தந்திரங்களை உருவகப்படுத்தி, நீல அணி எனப்படும் தற்காப்புப் படைக்கு எதிராக கற்பனையான தாக்குதல்களை நடத்துகிறது.


  • இந்திய இராணுவத்தில், இந்த யோசனை மகாபாரதக் கதையில் ஒரு ஆலோசகரின் பெயரால் 'விதுர் வக்தா' (‘Vidur Vakta,’) என்று அழைக்கப்பட்டது. இராணுவத்தின் பல்வேறு பகுதிகளில் சோதிக்கப்படுவதற்கு முன்பு இது சிறிது காலம் பேசப்பட்டது. பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் செயல்முறையை மேம்படுத்தவும் பல நிலைகளில் சோதனைகள் செய்யப்பட்டன.


Original article:
Share:

சிறு நகரங்களை மறுபரிசீலனை செய்ய நகர்ப்புற சவால் நிதி பயன்படுத்தப்பட வேண்டும். -பூமா ராமன்

 ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் Smart Cities Mission (சீர்மிகு நகரங்கள் திட்டம்) அனுபவம் காட்டுகிறது என்னவென்றால், பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவது தானாகவே அலை விளைவை (ripple effect) ஏற்படுத்தாது. பிராந்திய வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


இந்தியா நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு உற்சாகமான மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. ரூபாய் 1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதியம் ("Urban Challenge Fund") அறிவிப்புடன், இந்திய அரசு நமது நகரங்களை மறு கற்பனை செய்வதற்கு ஒரு தைரியமான அடி எடுத்து வைக்கிறது. இந்த நிதியம், முதல் ஆண்டுக்கு ரூபாய் 10,000 கோடி ஒதுக்கியுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள மிக அழுத்தமான சவால்களை சமாளிக்க முயல்கிறது.


நகர்ப்புற சவால் நிதியம் மூன்று அம்சங்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நகரங்களை பொருளாதார வளர்ச்சியின் உற்பத்தித்திறனான மற்றும் திறமையான மையங்களாக ஆக்குவது; இரண்டாவதாக, அவற்றை ஆக்கப்பூர்வமான வழியில் வளர்த்து மறுவளர்ச்சி செய்வது மற்றும் மூன்றாவதாக, அடிப்படை கட்டமைப்பு, குறிப்பாக நீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது. இந்த நிதியம் வங்கிக்கு தகுதியான திட்டங்களுக்கு 25 சதவீத நிதியுதவி வழங்கும், குறைந்தது 50 சதவீத செலவு பத்திரங்கள் (bonds), வங்கி கடன்கள், மற்றும்  பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnerships (PPP)) போன்ற பிற மூலங்களிலிருந்து வர வேண்டும்.


உலக வங்கி அறிக்கையின் படி, 2036-ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்திய நகரங்களில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விரிவான நகர்ப்புற விரிவாக்கத்தை குறிப்பிடுகிறது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், கடுமையான சவால்களையும் வழங்குகிறது. அதிக கூட்டம், போதுமான அடிப்படை கட்டமைப்பு இல்லாமை, வீட்டு பற்றாக்குறை, மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை டெல்லி, மும்பை, மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் முக்கிய கவலைகளாக உள்ளன. நீர், சுகாதாரம், போக்குவரத்து, மற்றும் சுகாதார பராமரிப்பு தேவை நகர்ப்புற அமைப்புகளின் திறனை மீறுகிறது. இது திறனற்ற சேவை வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, மில்லியன் கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சேரிகளில் வாழ்கின்றனர். சமூக ஏற்றத்தாழ்வு ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பெரும்பாலும் வளர்ச்சி வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். மேலும், மோசமான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் துண்டாடப்பட்ட ஆட்சி திறமையான தீர்வுகளை தடுக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள நீடித்த நகர்ப்புற திட்டமிடல், மலிவு வீட்டுவசதியில் முதலீடுகள், அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துதல், மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் தேவைப்படுகின்றன.


வேகமாக வளர்ந்துவரும் நகர்ப்புற மக்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா நகர்ப்புற உள்கட்டமைப்பில் $840 பில்லியன் (ரூ. 70 லட்சம் கோடி) அல்லது சராசரியாக ஆண்டுக்கு $55 பில்லியன் (ரூ. 4.6 லட்சம் கோடி) முதலீடு செய்ய வேண்டும் என்று உலக வங்கி அறிக்கை மதிப்பிடுகிறது. இந்தியாவின் நகர்ப்புற சவாலை எதிர்கொள்ள தேவையானதைவிட வரவு செலவு அறிக்கை ரூ. 10,000 கோடி குறைவாக உள்ளது.


அறிக்கை அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை வழங்குவதற்கு நகர நிறுவனங்களின் திறன்களை விரிவுபடுத்த பரிந்துரைக்கிறது. தற்போது, 10 பெரிய நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)) கடந்த மூன்று நிதியாண்டுகளில் அவர்களின் மொத்த முதலீட்டு வரவு செலவு அறிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே செலவழிக்க முடிந்தது. தற்போது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நகர அடிப்படை கட்டமைப்பின் 75 சதவீதத்திற்கும் மேல் நிதியளிக்கின்றன. நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் அவர்களின் சொந்த உபரி வருவாய்களின் மூலம் 15 சதவீதம் நிதியளிக்கின்றன. இந்திய நகரங்களின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே தற்போது தனியார் ஆதாரங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.


2011 மற்றும் 2018-க்கு இடையில், நகர்ப்புற சொத்து வரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.15 சதவீதமாக இருந்தது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கான சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3-0.6 சதவீதமாக இருந்தது. நகராட்சி சேவைகளுக்கான குறைந்த சேவை கட்டணங்கள் அவற்றின் நிதி நிலைத்தன்மையையும் தனியார் முதலீட்டிற்கான ஈர்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. நடுத்தர காலத்தில், வரிவிதிப்புக் கொள்கை மற்றும் நிதி பரிமாற்ற முறை உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிக்கை பரிந்துரைக்கிறது. இது நகரங்கள் அதிக தனியார் நிதியுதவியைப் பயன்படுத்த அனுமதிக்கும். குறுகிய காலத்தில், தனியார் நிதியுதவியை அதிக அளவில் திரட்டக்கூடிய பெரிய, அதிக திறன் கொண்ட நகரங்களின் தொகுப்பை இது அடையாளம் காட்டுகிறது.


இந்த பரிந்துரைகள் இருந்தபோதிலும், இந்த கட்டுரை அதிக உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவின் சிறிய நகரங்களில் முதலீடு செய்ய வாதிடுகிறது.


இந்தியாவின் நகரங்கள் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுவதைவிட பெரியதாக உள்ளன. நகரங்களுக்கு அருகிலுள்ள பல பகுதிகள் நகர்ப்புறமாக இல்லாமல் கிராமப்புறமாக கணக்கிடப்படுவதால் இது நிகழ்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் மிகவும் துல்லியமான கணக்கீட்டைப் பெற நகரங்களின் பரந்த வரையறையைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் மக்கள் தொகை 2001 மற்றும் 2011-க்கு இடையில் முந்தையதை விட மெதுவாக வளர்ந்தது. ஏன் என்பதைப் புரிந்துகொள்ள நாம் மேலும், படிக்க வேண்டும். சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவில் பெரிய நகரங்கள் எப்போதும் பொருளாதாரம் வளர முக்கிய காரணம் அல்ல என்று கூறுகின்றன. நகர்ப்புறங்களில் முறையான துறை வேலைகள் குறைவாக இருப்பது, மிகவும் சிறப்பு வாய்ந்த திறன்கள் தேவைப்படுவதைத் தாண்டி, சிலரை நகர வாழ்க்கையிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் ஒதுக்கி வைக்க (exclusionary urbanisation) வழிவகுத்துள்ளது.


இதன் விளைவாக, இந்தியாவில் நகரமயமாக்கல் அதிகமாக உள்ளது. சிறிய நகரங்கள் 2001 மற்றும் 2011-க்கு இடையில் நகரங்களைவிட வேகமான வேகத்தில் வளர்ந்து வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் (Small and Medium Towns (SMS)) குறைந்த உற்பத்தி மற்றும் வாழ்க்கை செலவுகள் உட்பட உற்பத்தியில் அவர்களின் செலவு நன்மைகளை பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்க முடியும் என்று இப்போது அங்கீகரிக்கப்படுகிறது. இந்த நகரங்கள் கிராமப்புற பொருளாதாரத்தின் பல்வகைப்படுத்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கின்றன மற்றும் அவர்களின் வளர்ச்சி கிராமப்புற வறுமையை குறைப்பதில் நகரங்களின் வளர்ச்சியைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் அத்தியாவசிய சந்தை சேவைகளை வழங்குவதன் மூலமும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இடையில் இணைப்புகளாக செயல்படுவதன் மூலமும் கிராமப்புற வளர்ச்சியை ஆதரிக்கின்றன. மேலும், கோவிட் பிந்தைய கூட்டு பணி இடங்களை (collaborative workspaces) ஏற்றுக்கொள்ளும் போக்கு தொலைவிலிருந்து பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், புதிய வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் செயல்பாட்டை வளர்ப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். அவை ஒரு நகரத்தின் சமூக அடிப்படை கட்டமைப்பின் மதிப்புமிக்க அங்கங்களாக பார்க்கப்படலாம். அதிக நிலையான மற்றும் முழுமையான பிராந்திய வளர்ச்சிக்கு பங்களிக்கும்.


எதிர்கால வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் நகரங்களில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக 1 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் நகரங்களில், இது நுகர்வை அதிகரிக்கும். 2030-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பில் 70 சதவீதம் இன்னும் வளர்ச்சியடையாத நிலையில், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் எழுகின்றன. ஜூன் 2023 EY அறிக்கை, சிறிய நகரங்களின் திறனை வலியுறுத்தியது, இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கத்தை முன்னறிவித்தது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஆதரவான கொள்கைகள் மற்றும் அடுக்கு 2 நகரங்களில் திறமையான பணியாளர்கள் 11 சதவீதத்திலிருந்து (2019–2023) 14 சதவீதமாக (2023–2030) வளர்ச்சியை அதிகரிக்கக்கூடும். விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், வதோதரா மற்றும் கொச்சி போன்ற நகரங்களை உலகளாவிய திறன் மையங்களுக்கான (GCC) வளர்ந்து வரும் மையங்களாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது, மேலும் 2030-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஒரு முக்கிய GCC மையமாக மாறும். குறைந்த செலவுகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் காரணமாக இந்தியாவின் சிறிய நகரங்கள் விரைவான நகர்ப்புற வளர்ச்சிக்கான ஆற்றலைக் கொண்டுள்ளன, ஆனால் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஒரு தடையாகவே உள்ளது.


எதிர்கால வேலை வளர்ச்சியில் 70 சதவீதம் நகரங்களில், குறிப்பாக 1 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் நகரங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ஆண்டிற்கான இந்தியாவின் நகர்ப்புற காட்சியில் 70 சதவீதம் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதால், அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் எழுகின்றன. ஜூன் 2023-ஆம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை சிறிய நகரங்களின் திறனை வலியுறுத்தியது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை கணித்தது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஆதரவான கொள்கைகள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் திறமையான பணியாளர்கள் இருப்பதன் மூலம் வளர்ச்சி 11 சதவீதத்திலிருந்து (2019–2023) 14 சதவீதமாக 2023 முதல் 2030-க்குள் அதிகரிக்கக்கூடும். 


விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், வதோதரா மற்றும் கொச்சி போன்ற நகரங்களை உலகளாவிய திறன் மையங்களுக்கு (Global Capability Centres (GCC)) வளர்ந்து வரும் மையங்களாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு முக்கிய உலகளாவிய திறன் மையமாக மாறும். குறைந்த செலவுகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் காரணமாக இந்தியாவின் சிறிய நகரங்கள் விரைவான நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஒரு தடையாகவே உள்ளது.


7000-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களுக்கு எதிராக, Metropolises-கள் மற்றும் megapolises உட்பட வெறும் 100 நகரங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. இந்த நகரங்கள் அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடுகள், சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அத்தியாவசிய சேவைகளின் வழங்கல், மற்றும் அவசர அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் மிகவும் தேவை உள்ளது.


 இது விவசாயத்திலிருந்து தொழிலாளர்களை மாற்ற உதவுவது மட்டுமல்லாமல், பெரிய நகரங்களில் இடம்பெயர்வு சுமையை குறைக்கவும் உதவும். இந்த சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் ULBs (நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள்) இந்த நகர்ப்புற சவாலை சந்திக்க திறன் வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


Metropolises:


Metropolises என்பது மிகப் பெரிய மற்றும் முக்கியமான நகரம், பெரும்பாலும் ஒரு நாடு அல்லது பிராந்தியத்தின் தலைமை நகரம் ஆகும்.


Megapolises:


Megapolises என்பது ஒரு பெரிய, தொடர்ச்சியான நகர்ப்புற மண்டலத்தை உருவாக்கும் நெருக்கமாக இணைக்கப்பட்ட பெருநகரப் பகுதிகளின் சங்கிலி ஆகும்.


நகர்ப்புற சவால் நிதியம் (Urban Challenge Fund) பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவதைவிட சிறிய நகர வளர்ச்சியின் பிரச்சினையை சமாளிக்க ஒரு வாய்ப்பாகும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission) போன்ற திட்டங்களின் அன்புவங்கள் காட்டுகின்றன. பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவது தானாகவே, சிற்றலை விளைவை (ripple effect) ஏற்படுத்தாது. பிராந்திய வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


எழுத்தாளர் வாழ்விட மன்றத்தின் (Habitat Forum (INHAF)) இணை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.


Original article:
Share:

வலுவான மாநிலங்கள், வலுவான தேசம் என்ற உணர்வை வளர்ப்பதில் நிதி ஆயோக்-ன் பங்கு. — அகில் குமார்

 வலுவான மாநிலங்கள் ஒரு வலுவான தேசத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பல்வேறு முயற்சிகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மாநிலங்களை தீவிரமாக ஆதரிப்பதன் மூலம் நிதி ஆயோக் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை முன்னோக்கி செலுத்துகிறது. ஆனால், இந்த அமைப்பு இந்த தொலைநோக்கு பார்வையை எவ்வாறு முன்னேற்றுகிறது?


10-வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது, ​​பிரதமர் நரேந்திர வளர்ந்த இந்தியா என்ற இலக்கை மீண்டும் வலியுறுத்தி, உற்பத்தி மற்றும் சேவைகள், சுற்றுலா போன்ற துறைகளில் கவனம் செலுத்தவும், இந்தியா பல நாடுகளுடன் கையெழுத்திட்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப்  (Free Trade Agreements) பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகளைக் கண்டறியவும் மாநில அரசுகளை வலியுறுத்தினார்.


நாம் ஒரே இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தையும் வளர்ச்சியடைய செய்வது, ஒவ்வொரு நகரத்தையும் வளர்ச்சியடைய செய்வது, ஒவ்வொரு மாநகராட்சியையும் (Nagar Palika) வளர்ச்சியடைய செய்வது மற்றும் ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சியடைய செய்வது என்ற நோக்கம் நமக்கு இருக்க வேண்டும். இந்த வழிகளில் நாம் பணியாற்றினால், வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கு 2047 வரை காத்திருக்க வேண்டியதில்லை" என்று மே 25 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் கூறினார்.


வலுவான மாநிலங்கள் ஒரு வலுவான தேசத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பல்வேறு முயற்சிகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மாநிலங்களை தீவிரமாக ஆதரிப்பதன் மூலம் நிதி ஆயோக் இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி செலுத்துகிறது. இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் இந்த முதன்மையான கொள்கை சிந்தனைக் குழு இந்த தொலைநோக்குப் பார்வையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது? கூட்டுறவு மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த கூட்டாட்சி முறையை அது எந்த வழிகளில் வளர்க்கிறது? அதன் தொடக்கத்திலிருந்து அது தொடங்கிய குறிப்பிடத்தக்க முயற்சிகள் யாவை?


வலுவான மாநிலங்கள், வலுவான நாடு

கூட்டுறவு மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த கூட்டாட்சி முறையை மேம்படுத்துவதற்கான இரண்டு கொள்கைகளுடன், இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institution for Transforming India (NITI Aayog)) 65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவை (Planning Commission) மாற்றி ஒரு பொது கொள்கை சிந்தனைக் குழுவாக ஜனவரி 2015-ல் அமைக்கப்பட்டது. அமைப்பின் நோக்கங்களை வெளிப்படுத்தும் வகையில், ஜனவரி 1, 2015 அன்று இந்திய அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், "கடந்த காலத்திலிருந்து ஒரு முக்கியமான பரிணாம மாற்றம் ஒன்றிய அரசு அனைத்து முடிவுகளையும் எடுத்து மாநிலங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசும் மாநிலங்களும் இணைந்து செயல்படும் ஒரு உண்மையான, தொடர்ச்சியான கூட்டாண்மையாக இது இருக்கும்.


இந்த அமைப்பின் இரண்டு அடிப்படைத் தூண்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் விவசாயம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் ஆகும்.


ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மேலிருந்து கீழ் செல்லும் அணுகுமுறையை (top-down approach) பின்பற்றி மையப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்பட்ட முந்தைய திட்டக் குழுவைப் போல் இல்லாமல், நிதி ஆயோக் எந்த நிதி அதிகாரமும் இல்லாமல் கீழ்-மேல் மாதிரியை (bottom-up model) பின்பற்ற வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம், அது நிதி ஒதுக்கீட்டை கொள்கை திட்டமிடலிலிருந்து பிரித்து, வளர்ச்சி முன்னுதாரணம் மற்றும் கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மாநிலங்களின் பங்கை மறுவரையறை செய்தது.


அதன் அமைப்பின் அடிப்படையில், நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவில் இந்தியப் பிரதமர், அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பில் துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட பிற உறுப்பினர்களும் அடங்குவர். தேசிய வளர்ச்சி கொள்கையை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக துறைகளுக்கு இடையேயான மற்றும் கூட்டாட்சி பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஆளும் குழு ஒரு தளத்தை வழங்குகிறது. இந்தக் கட்டமைப்பின் அடிப்படையில், நிதி ஆயோக் பரந்த அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்கிறது.


சிந்தனைக் குழுவின் (think tank) செயல்பாடுகளை கொள்கை மற்றும் திட்ட கட்டமைப்பு, கூட்டுறவு கூட்டாட்சி, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு, மற்றும் சிந்தனைக் குழு, அறிவு மற்றும் புதுமை மையம் எனும் நான்கு பரந்த பகுதிகளாக வகைப்படுத்தலாம். கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிக்க, இது ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு முதன்மைத் திட்டங்களுடன் தொடர்புடைய பல்வேறு பணிக்குழுக்கள் மற்றும் துணைக் குழுக்களை உருவாக்குகிறது.


இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்துவதற்காக மாநில அரசுகள், குடிமை சமூக பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் இது பன்முக ஆளுகை மாதிரியை ஏற்றுக்கொண்டது. கொள்கை கண்டுபிடிப்பு மற்றும் தரவுகளில் இந்த அமைப்பு பல யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


கூடுதலாக, நிதி ஆயோக் ஆகஸ்ட் 2030-க்குள் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals (SDGs)) இந்தியாவின் செயல்திறனைக் கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. ஏனெனில், அது மாநிலங்களுக்கிடையே போட்டியை ஊக்குவிப்பதற்காக நிலையான வளர்ச்சி குறியீட்டை அறிமுகப்படுத்தியது. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு இந்தியா குறியீட்டு 2023-24 அறிக்கை, இந்தியாவின் கூட்டு மதிப்பெண் 2020-21-ல் 66-ஆக இருந்ததைவிட 2023-24-ல் 71-ஆக இருந்தது என்பதைக் காட்டுகிறது. வறுமையை ஒழித்தல், ஒழுக்கமான வேலை, பொருளாதார வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை மற்றும் வாழவதற்கான வசதியை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


குறிப்பாக, இந்தியா பல முக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றங்களைக் கண்டது. அவற்றில் 1 (வறுமை இல்லாதது), 3 (நல்ல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு), 6 (தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்), 7 (மலிவு மற்றும் சுத்தமான எரிசக்தி), 9 (தொழில், புதுமை மற்றும் உள்கட்டமைப்பு) மற்றும் 11 (நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்) ஆகியவை அடங்கும். முதன்மையான கொள்கை சிந்தனைக் குழுவின் பிற குறிப்பிடத்தக்க முயற்சிகள் பின்வருமாறு:


— சுகாதார செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கான சுகாதார விளைவு குறியீட்டில் செயல்திறன்.


— இந்தியாவின் வளர்ந்து வரும் நீர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு நீர் மேலாண்மைக் குறியீடு.


— கல்வி விளைவுகளை மேம்படுத்துவதற்கான பள்ளி கல்வி தர குறியீடு. பல்வேறு குறியீடுகள் குறித்த நிகழ்நேரத் தரவுகளைப் பெறுவதிலும், தகவலறிந்த கொள்கை வகுப்பை ஊக்குவிப்பதிலும், பல்வேறு மாநிலங்களுக்கிடையில் போட்டியை வளர்ப்பதிலும் இந்த நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்தன.


ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் போட்டி


2018-ஆம் ஆண்டில், 26 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 112 மாவட்டங்களில் (சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பிற) மனித மேம்பாட்டு குறிகாட்டிகளின் வளர்ச்சியின்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக நிதி ஆயோக் 'லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை' (Aspirational Districts Programme (ADP)) அறிமுகப்படுத்தியது. இந்த ADP உத்தியின் அடிப்படைக் கொள்கைகள் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் போட்டியாகும் (collaboration, convergence, and competition) ஆகிய மூன்று 'C'கள் ஆகும். மாவட்டங்களின் வெற்றிக் கதைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:


— ஜமுய், பீகார்: அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப தலையீடுகளை மேம்படுத்துதல்.


— மல்காங்கிரி, ஒடிசா:-அங்கன்வாடி அமைப்பின் மாற்றம்.


— விஸியங்கரம், ஆந்திரப் பிரதேசம்: பழங்குடி கர்ப்பிணிப் பெண்களுக்கான விடுதிகள் கட்டுமானம்.


— நந்தூர்பார், மகாராஷ்டிரா: ஊட்டச்சத்து குறைபாட்டைச் சமாளிக்க சிறந்த ஊட்டச்சத்துக்கான மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள்.


அறிவு மற்றும் புதுமை மையமாக அதன் பங்கில், நிதி ஆயோக் 2016-ல் அடல் புத்தாக்கத் திட்டத்தை (Atal Innovation Mission (AIM)) அறிமுகப்படுத்தியது. இது நாடு முழுவதும் புதுமை சூழலியலை வளர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 10,000 அடல் புத்தாக்கத் திட்டங்களில் (Atal Tinkering Labs (ATLs)) 1.1 கோடி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 72 அடல் இன்குபேஷன் மையங்கள் (Atal Incubation Centres - AICs) மூலம் கிட்டத்தட்ட 32,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, நாடு முழுவதும் 110 ஆசைகள் மாவட்டங்களில் 7,100 அடல் புத்தாக்கத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டன.


இந்த திட்டம் இளைஞர்களின் சிறந்த திறமைகளைக் கொண்டு வருவதிலும், படைப்பாற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவோர் திறன்களை ஊக்குவிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. அக்னிகுல் விண்வெளி தொழில்நுட்பம் (Agnikul  space tech)  போன்ற பல புத்தொழில் நிறுவனங்கள் AIM-லிருந்து பயன் பெற்றன. நவம்பர் 2024-ல், ஒன்றிய அமைச்சரவை மார்ச் 31, 2028 வரை அடல் புத்தாக்கத் திட்டத்திற்கு ரூ. 2,750 கோடி ஒதுக்கீட்டுடன் அனுமதி வழங்கியது.


அடல் புத்தாக்கத் திட்டத்தை (Atal Innovation Mission (AIM-1.0)) போல் இல்லாமல், AIM 2.0, 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் புதுமை மற்றும் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்புகளை விரிவுபடுத்தும். 15 சதவீத குடிமக்கள் வசிக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், வடகிழக்கு, லட்சிய இலக்கு மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் ஒரு புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆயோக் இந்தியாவில் திட்டமிடல் எவ்வாறு மிகவும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது என்பதை மாற்றியது, மாநிலங்களை மிகவும் நெருக்கமாக ஈடுபடுத்தியது மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவித்தது. மாநிலங்களுடனான வழக்கமான கலந்துரையாடல்கள் கொள்கை அமலாக்கத்தை மேம்படுத்தவும் எதிர்கால சவால்களுக்குத் தயாராகவும் உதவுகின்றன.


Original article:
Share:

மாநிலங்களவைத் தேர்தல்கள் எத்தனை முறை நடத்தப்படுகின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• அசாமில் இரண்டு இடங்களையும் வெல்ல ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக்கும் போதுமான எண்ணிக்கை இல்லை. தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான ஆளும் கூட்டணியின் கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளுமே இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை.


• அசாமில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் (Asom Gana Parishad (AGP)) மற்றும் பாஜகவின் மிஷன் ரஞ்சன் தாஸின் பதவிக்காலம் ஜூன் 14 அன்று முடிவடைவதால் இரண்டு இடங்கள் காலியாகிவிடும்.

• 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில், ஒவ்வொரு மாநிலங்களவை வேட்பாளரும் வாக்கெடுப்பில் வெற்றிபெற 42 வாக்குகள் தேவைப்படும். 80 சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக: 64, AGP: 9 மற்றும் யுபிபிஎல்: 7) ஒரு இடத்தை வெல்லும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இரண்டாவது இடத்திற்கு நான்கு வாக்குகள் குறைவாக இருக்கும்.


• இரண்டு இடங்களையும் வென்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநிலங்களவை எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.


உங்களுக்குத் தெரியுமா?


• மாநிலங்களவை (Council of States) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இந்த அவை அரசியலமைப்பின்படி அதிகபட்சம் 250 உறுப்பினர்களுடன் வரையறுக்கப்பட்டுள்ளது, இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் 238 பேர் மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். தற்போதைய மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் 12 பேர் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.


•  ஒவ்வொரு மாநிலம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அந்த மாநிலத்தின் சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மற்றும் அந்த யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் குழுவின் (Electoral College) உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவையின் தலைவர் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார். அவை நிரந்தர சபையாகும் மற்றும் அவை எப்பொழுதும் கலைக்கப்பட்டது (not subject to dissolution). ஆனால், அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.


Original article:
Share: