சீரற்ற சட்டபூர்வமான விதிமுறைகளை ஒருங்கிணைப்பதில் இது ஒரு நல்ல பணியைச் செய்கிறது. இருப்பினும், இது சந்தை வடிவமைக்கப்பட்டுள்ள அல்லது செயல்படும் விதத்தை அடிப்படையில் மாற்றுவதில்லை.
பங்குச்சந்தை விதிகள் சட்டம் (Securities Markets Code (2025)), பத்திரங்கள் ஒழுங்குமுறையை (Securities Regulation) எளிமையாக்கவும், நவீனப்படுத்தவும் மற்றும் பகுத்தறிவாக்கம் செய்யவும் முற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சட்டம் ஒரு ஒருங்கிணைப்பு முயற்சியாக வெற்றி பெற்றாலும், அது ஒரு மாற்றியமைக்கும் சந்தை வடிவமைப்புச் சட்டமாக மாறுவதில் பின்தங்கிவிடுகிறது. சில திருத்தங்களும் தெளிவுபடுத்தல்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், முந்தைய அமைப்பின் அடிப்படைக் கருத்தியல் கட்டமைப்பு பெரும்பாலும் மாறாமல் அப்படியே உள்ளது.
இந்தக் சட்டத் தொகுப்பின் முக்கியப் பங்களிப்பு என்னவென்றால், முன்பு சின்னச் சின்ன பகுதிகளாகச் சிதறிக்கிடந்த சட்ட அமைப்புகளை இது ஒன்றிணைத்தது என்பதாகும். பல ஆண்டுகளாக, பங்குச்சந்தை விதிகள் மூன்று தனித்தனியான சட்டங்களின்கீழ் செயல்பட்டு வந்தன. இந்தச் சட்டங்கள்: பங்குச் சந்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பைப் பற்றிய சட்டம், சந்தையில் நடக்கும் ஒப்பந்தங்களைப் பற்றிய சட்டம், பரிவர்த்தனைகளை முடிவு செய்யும் அமைப்பைப் பற்றிய சட்டம் ஆகும்.
இந்த நிலை, பெரும்பாலும் விளக்கச் சிக்கலுக்கும், குறிப்பாகச் சட்டங்களுக்கு இடையேயான அமலாக்கத்திலும் வழிவகுத்தது. இருப்பினும், இந்தச் சட்டத் தொகுப்பானது, இடைத்தரகர்கள், சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள், ஒப்பந்தங்கள், தீர்வு, அமலாக்கம், தீர்ப்பு மற்றும் மேல்முறையீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒரே சட்டமியற்றும் கட்டமைப்பை நிறுவியுள்ளது. இதனால், நீதிமன்றங்கள் சிக்கலான கட்டமைப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் குறைகிறது. காலப்போக்கில், இது சட்டத் தெளிவை (legal certainty) மேம்படுத்த வேண்டும்.
இந்தச் சட்டம், சந்தை பங்கேற்பாளர்களை (market actors) சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள், பத்திர சந்தை சேவை வழங்குநர்கள், சந்தை பங்கேற்பாளர்கள், மற்றும் சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் (self-regulatory organisations (SROs)) என வகைப்படுத்துவதன் மூலம் கருத்தியல் தெளிவை மேம்படுத்துகிறது. இதன்மூலம், நிறுவனம் சார்ந்த தனித்தனி பிரிவுகளில் இருந்து விலகி, ஒரு செயல்பாட்டுச் சந்தை கட்டமைப்பை நோக்கி நகர்கிறது. சுய-ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு (SROs) சட்டரீதியான அங்கீகாரம் (statutory recognition) கிடைப்பது ஒரு பெரிய கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சட்டம், ஆய்வு, புலனாய்வு, தீர்ப்பு வழங்குதல், சமரசம் மற்றும் இடைக்கால நடவடிக்கைகள் ஆகியவற்றைச் சட்டப்பூர்வமாகப் பிரித்துள்ளது. மேலும், புலனாய்வு மற்றும் சமரச நிலைகளிலிருந்து தீர்ப்பு வழங்கும் அதிகாரிகளை விலக்குகிறது. மேலும், புலனாய்வுகள் மற்றும் இடைக்கால உத்தரவுகளுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. இந்தக் காலக்கெடு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகும். இத்தகைய பாதுகாப்புகளைக் குறியீடாக்குவது சட்ட நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கிறது மற்றும் மேல்முறையீட்டு மன்றங்களுக்கு முன்பாக அமலாக்க முடிவுகளை வலுப்படுத்துகிறது.
அந்தச் சட்டத்தொகுப்பு விகிதாசாரக் கொள்கையைத் தெளிவாக உள்ளடக்கியுள்ளது. இதன் பொருள், தண்டனைகள் என்பவை நோக்கம், மீறல் நீடித்த காலம், ஆதாயங்கள் அல்லது இழப்புகள், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு மற்றும் கடந்தகால நடத்தை போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பதாகும். இந்த அணுகுமுறை இந்தியப் பத்திரங்கள் அமலாக்கத்தை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. சட்டவிரோதமாகப் பெற்ற லாபத்தைப் பறிமுதல் செய்வதும், இழப்பீடு வழங்குவதும் இப்போது அமைப்பில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆனால், தீர்வு செயல்முறையின் சில பகுதிகள் இன்னும் வெளிப்படைத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகின்றன.
இந்தச் சட்டம் தீர்வுறுதி இறுதித்தன்மை (settlement finality) மற்றும் நிகரப்படுத்துதல் ஆகியவற்றின் சட்டபூர்வமான அடித்தளங்களை வலுப்படுத்துகிறது. தீர்வுறுதி முடிவுகளுக்குச் சட்டரீதியான உறுதியை அளிப்பதன் மூலமும், அனுமதிக்கும் நிறுவனங்களின் உரிமைகளுக்குத் தெளிவான முன்னுரிமை அளிப்பதன் மூலமும், இது எஞ்சியிருக்கும் திவால் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், ஒரு அமைப்பின் மீள்திறனை மேம்படுத்துகிறது. இந்தியச் சந்தைகள் அளவில் வளர்ந்து, ஒன்றோடொன்று இணைக்கப்படும்போது இது ஒரு முக்கியமான கருத்தாக அமைகிறது.
தற்போதுள்ள ஒன்றிய அரசுக்கும் பத்திரங்கள் ஒழுங்குமுறை அமைப்பிற்கும் இடையேயான உறவை நிர்வகிக்கும் ஆளுகை கட்டமைப்பை இது பெரும்பாலும் பாதுகாக்கிறது. மேலும் நியமனம், பதவி நீக்கம், மேற்கொள்ளுதல், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான முக்கிய அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது. இத்தகைய விதிகள் : இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியச் சட்டத்தின்கீழ் (Securities and Exchange Board of India (SEBI Act)) இருந்தபோதிலும், அவற்றை ஒருங்கிணைந்த சட்டத்தில் இணைப்பது நெருக்கமான ஆய்வுக்கு உரியதாகும் என்கின்றனர்.
சந்தைகள் விரிவடைந்து அரசியல் முக்கியத்துவம் பெறும்போது, சட்டமன்றத்திற்கும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் (Regulator) இடையே வலுவான சட்டரீதியான பாதுகாப்புக் கட்டமைப்பு இல்லாதது, இந்த சட்டம் முக்கியமாக தீர்க்கப்படாத நீண்டகால நிறுவன அபாயங்களை உருவாக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சட்டம் ஒப்பந்த ஒழுங்குமுறை விஷயத்தில் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. SCRA’s தடை அடிப்படையிலான அமைப்பிலிருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக, அது உடனடி, முன்பேர மற்றும் வழித்தோன்றல் ஒப்பந்தங்கள் என்ற பழைய வகைப்பாட்டையே தொடர்ந்து பயன்படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை, பரிவர்த்தனை அடிப்படையிலான வர்த்தகம், தீர்வு செய்தல் மற்றும் இடர் மேலாண்மை போன்ற பரந்த கொள்கைகளின் திசையில் இது ஒழுங்குமுறையை மாற்றியமைக்கவில்லை. இதன் விளைவாக, முந்தைய அமைப்பின் பல அடிப்படை பலவீனங்கள், இப்போது அவை ஒரு தெளிவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டக் கட்டமைப்புக்குள் வைக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து நீடிக்கின்றன.
மற்றொரு கட்டமைப்பு ரீதியான பலவீனம் என்னவென்றால், விதிமுறைகள், துணைச் சட்டங்கள் (bye-laws) மற்றும் துணை ஆவணங்களுக்கு அதிகாரத்தை ஒப்படைக்கும் அளவாகும். தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வளர்ந்து வரும் துறையில் சில அதிகார ஒப்படைப்பு தவிர்க்க முடியாததாக இருந்தாலும், சந்தை கட்டமைப்பு, போட்டி, புத்தாக்கம் மற்றும் முதலீட்டாளர் வகைப்பாடு தொடர்பான பல முக்கியமான பிரச்சினைகளை இந்தச் சட்டம், செயலாக்க அதிகாரத்தின் முடிவுக்கு விட்டுவிடுகிறது.
இந்தக் குறியீடு, குறை தீர்க்கும் அமைப்புகள், குறைதீர்ப்பாளர் வழிமுறைகள் மற்றும் அபராதங்கள் மூலம் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், இந்த பாதுகாப்பு மூலதனச் சந்தைகளின் இடர் நிறைந்த தன்மைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை இது தெளிவாக விளக்கவில்லை. வெவ்வேறு வகையான முதலீட்டாளர்களுக்கு இடையே மிகக் குறைவான சட்டப்பூர்வ வேறுபாடே உள்ளது. முதலீட்டாளர் பாதுகாப்பு என்பது, சரியான தகவல்களை வெளிப்படுத்துதல், வலுவான சந்தை நடைமுறைகள் மற்றும் தகவலறிந்த பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதை விட, சிக்கல்கள் ஏற்பட்ட பிறகு அவற்றை தீர்ப்பதாகவே முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த அணுகுமுறை, அதிகப்படியான எச்சரிக்கை மற்றும் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை மனப்பான்மைக்கு வழிவகுக்கக்கூடும், இது சந்தை வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
தற்போது, ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், வெளிப்படைத்தன்மைக்கான பாதுகாப்புகள் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளன. ஒப்பந்த உத்தரவுகளை மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும், விரிவான காரணம் அல்லது ஒற்றுமைக்கான அளவுகோல்கள் வெளியிடப்பட வேண்டும் என்ற வெளிப்படையான தேவை எதுவும் இல்லை. ஒப்பந்தங்கள் ஒரு முக்கியமான அமலாக்கக் கருவியாக மாறும் நிலையில், அதிக வெளிப்படைத்தன்மை அவற்றின் நியாயத்தன்மை மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்.
நழுவவிட்ட வாய்ப்புகள்
சர்வதேச தரநிலைகளைப் போலன்றி, இந்தக் குறியீடு பங்குச் சந்தைகளின் அடிப்படைக் கொள்கைகளைத் தெளிவாக விளக்கவில்லை. சில உலகளாவிய கட்டமைப்புகள் பணப்புழக்கத்தை ஒரு பொது நலனாகவும், ஊக வணிகத்தை விலைகளை நிர்ணயிப்பதற்கு முக்கியமானதாகவும், வழித்தோன்றல் பத்திரங்களை இடர்களை நிர்வகிப்பதற்கும் மூலதனத்தைத் திரட்டுவதற்குமான கருவிகளாகவும் பார்க்கின்றன. இருப்பினும், இந்தக் குறியீடு இந்த யோசனைகளை மறைமுகமாக மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், புதுமைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய ஒரு இலக்காகக் கருதாமல், அதை அனுமதிப்பதற்குரிய ஒன்றாகவே கருதுகிறது.
இது வர்த்தக தளங்களுக்கு இடையேயான போட்டி, செங்குத்து ஒருங்கிணைப்பு மற்றும் தளங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பது போன்ற முக்கிய உலகளாவிய சந்தைப் பிரச்சினைகளைக் கையாள்வதையும் தவிர்க்கிறது.
பங்குச் சந்தைகள் சட்டம், 2025 (The Securities Markets Code, 2025) என்பது, தற்போதைய சந்தைகளைத் தெளிவான முறையில் நிர்வகிப்பதற்குச் சிறப்பாகச் செயல்படும் ஒரு சட்டமாகும், ஆனால் இது புதிய வகையான சந்தைகளை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்படவில்லை. இது ஏற்கனவே உள்ள விதிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றிகரமாக உள்ளது, ஆனால் பெரிய, நீண்டகால சீர்திருத்தங்களை இது முழுமையாகக் கொண்டுவரவில்லை.
எழுத்தாளர், SPRV ஆலோசகர்கள் (consultants) நிறுவனப் பங்குதாரர் ஆவார்.
Original Article : Securities Markets Code, 2025 — a critical look. -Ravi Varanasi