வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவது ஏன் முக்கியமானது? -குந்தலா கர்கன், சம்ரிதி பிரகாஷ்

 இது உற்பத்தித்திறனை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், முறைசாரா தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது ஊதிய இடைவெளியைக் குறைக்கவும் உதவும்.


கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அரசாங்கம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.  வேலைவாய்ப்பு உருவாக்கம் முக்கியமானது என்றாலும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா $36 டிரில்லியன் பொருளாதாரமாக மாற, முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இடையிலான உற்பத்தித்திறனில் உள்ள பெரிய இடைவெளியைக் குறைக்க வேண்டும். 


2022-23ஆம் ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) அறிக்கை மற்றும் 2022-23ஆம் ஆண்டு இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) அறிக்கையின்படி, முறைசாரா தொழில்துறை தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ.11.9 லட்சம் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) வருமானத்தை ஈட்டுகிறார்கள். அதே நேரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் ரூ.1.4 லட்சம் மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள்.


இது முறையான மற்றும் முறைசாரா வேலைவாய்ப்புக்கிடையே இந்த பரந்த உற்பத்தித் திறன் இடைவெளி, வருமான வளர்ச்சி மற்றும் பொருளாதார உள்ளடக்கம் இரண்டையும் பின்னுக்குத் தள்ளுகிறது. இந்தியாவின் பொருளாதார இடைவெளியைக் குறைக்க, தொழிலாளர் சந்தையில் ஒரு பெரிய மாற்றம் தேவை. அதிக உற்பத்தித்திறனை சிறந்த ஊதியங்களுடன் இணைத்தல், திறன்களை வேலை வாய்ப்புகளுடன் பொருத்துதல் மற்றும் முறைசாரா வேலைத் துறையை சீர்திருத்துதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.

                     

உற்பத்தித் திறன் இடைவெளி: 


2022-23ஆம் ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பு, முறையான தொழில்துறை துறையில் ஒரு தொழிலாளிக்கான மொத்த மதிப்பு கூட்டப்பட்ட  அளவு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் என மதிப்பிடுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக, ASUSE-ன் தரவுகள் முறைசாரா துறையில் ஒரு தொழிலாளிக்கான வருடாந்தர GVA வெறும் சுமார் ரூ.1.5 லட்சம் என்று காட்டுகிறது. உற்பத்தித் திறனில் எட்டு மடங்கு இடைவெளி உள்ளது. 


இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக இருந்தால், பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னும் குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா வேலைகளில் இருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு, தோராயமான மதிப்பீட்டின் படி, 91% தொழிலாளர்கள் முறைசாரா துறையில் உள்ளனர். அதே நேரத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே முறையாக வேலை செய்கிறார்கள்.


இந்த மதிப்பீடு பொருளாதாரத்தை எளிமையாக்குகிறது. சேவைகள், பொது நிர்வாகம், மற்றும் பிற முறையான தொழிலல்லாத துறைகளைத் தவிர்க்கிறது என்றாலும், இது முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இடையிலான உற்பத்தித்திறனில் உள்ள பெரிய இடைவெளியை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.


ஊதியங்கள் உற்பத்தித்திறனைப் பின்பற்ற வேண்டும். ஆனால் Neoclassical economic கோட்பாடு போட்டியுள்ள சந்தைகளில், ஊதியங்கள் தொழிலின் குறை உற்பத்திக்குச் சமமாக இருக்கும் என வாதிடுகிறது. ஒரு தொழிலாளி உற்பத்தி செயல்முறையில் அவர்/அவள் சேர்ப்பதுதான் ஊதியம் பெறுகிறார். 


இருப்பினும், அதிக வேலையின்மை மற்றும் ஒரு பெரிய ‘தொழிலாளர்களின் இருப்பு இராணுவம்’ (reserve army of labour) உள்ள பொருளாதாரங்களில் இந்த சமநிலை பெரும்பாலும் சீர்குலைக்கப்படுகிறது. இது கார்ல் மார்க்ஸால் பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற அமைப்புகளில், உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், அதிகப்படியான தொழிலாளர் வழங்கல் ஊதியங்களில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


மேலும், இந்தியாவில் 42% தொழிலாளர்கள் இன்னும்  விவசாயத்தில் உள்ளனர். ஆனால், அது பொருளாதாரத்தில் 18% மட்டுமே உள்ளது என்று 2024-25ஆம் ஆண்டு பொருளாதார கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த இடைவெளி பல தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பு சிறிதளவு அல்லது எந்த மதிப்பையும் சேர்க்காத வேலைகளில் இருப்பதைக் காட்டுகிறது. வேலை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கவோ அல்லது அதிக ஊதியத்தை நியாயப்படுத்தவோ இல்லை.


முறைப்படுத்தல் ஏன் கொள்கை முன்னுரிமையாக இருக்க வேண்டும்: 


தேசிய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், ஊதியத்தை உற்பத்தியுடன் இணைப்பதற்கும் தொழிலாளர்களை முறையான நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியம். முறைப்படுத்தல் (Formalisation) சமூகப் பாதுகாப்பு, நிலையான வேலைவாய்ப்பு, செயல்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் ஊதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை அணுக உதவுகிறது. 


e-Shram, ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் ‘(Employees' State Insurance Corporation (ESIC)) மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation (EPFO)) போன்ற கொள்கை கருவிகள் அனைவருக்குமானதாக மாற்றப்பட வேண்டும்.


அதே நேரத்தில், சிறு நிறுவனங்கள் மற்றும் நிகழ்ச்சித் தளங்கள் முறையான ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதற்கு எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் வரிச் சலுகைகள் போன்ற சலுகைகள் தேவைப்படுகிறது. தேசிய மற்றும் துணை தேசிய மட்டங்களில் "முறைப்படுத்தல் குறியீடு" (Formalisation Index) மூலம் இந்த மாற்றத்தைக் கண்காணிப்பது முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், தடைகளை அடையாளம் காணவும், சீர்திருத்தங்களை ஊக்குவிக்கவும் உதவும்.

திறன்-உற்பத்தித்திறன் இணைப்பை சரிசெய்தல்: 


முறைப்படுத்தல் மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கு ஒரு பெரிய தடையாக நாட்டின் கடுமையான திறன் பற்றாக்குறை உள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் தொடர்பான தேசிய கொள்கையின்படி, இந்தியாவின் பணியாளர்களில் 4.7 சதவீதம் பேர் மட்டுமே முறையான திறமையானவர்கள், அமெரிக்காவில் 52 சதவீதம், ஜப்பானில் 80 சதவீதம் மற்றும் தென் கொரியாவில் 96 சதவீதம் பேர் உள்ளனர். இந்த பொருத்தமின்மை, தொழிலாளர்கள் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பணிகளுக்கு, குறிப்பாக சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளுக்குச் செல்வதைத் தடுக்கிறது. 


தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill Development Corporation (NSDC)) மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (Industrial Training Institutes (ITIs)) குறிப்பாக ஊரக  மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் அதிகரிக்கப்பட வேண்டும். டிஜிட்டல் சேவைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். பயிற்சி பொருத்தமானதாகவும் உண்மையான வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என்பதையும் உறுதி செய்வதற்கு வலுவான தொழில்-கல்வி கூட்டாண்மை முக்கியமாகும்.


புதுமை மூலம் உற்பத்தித்திறனுடன் ஊதியத்தை சீரமைத்தல்: 


ஊதியங்களை உற்பத்தித் திறனுடன் சிறப்பாக இணைக்க இந்தியா செயல்திறன் அடிப்படையிலான ஊதிய மாதிரிகளை பாரிசோதித்துப் பார்க்க வேண்டும். மின்னணுவியல், நெசவு, மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில், நிறுவனங்கள் இழப்பீட்டை உற்பத்தி தரம் அல்லது செயல்திறனுடன் இணைக்க முடியும்.

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) போன்ற பொது திட்டங்கள் கூட சிறிய, செயல்திறன்-இணைக்கப்பட்ட சலுகைகளை அறிமுகம் செய்யலாம். தொழிலாளர் பாதுகாப்புகள் சமரசம் செய்யப்படாத வரை அந்த பணிகளை செய்யலாம். 


இந்த மாதிரிகள் முதலாளிகள், அரசுகள், மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளிடையே ஒருமித்த கருத்து மூலம் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் செயற்கைப் நுண்ணறிவு மற்றும் இணைய வலையமைப்பின் பொருட்கள் போன்ற டிஜிட்டல் கருவிகளால் ஆதரிக்கப்பட வேண்டும். இவை நிகழ்நேரத்தில் உற்பத்தித் திறனை புறநிலையாக அளவிட உதவும். 


Aatmanirbhar Skilled Employee Employer Mapping (ASEEM)) மற்றும் DigiLocker போன்ற தளங்கள் ஊதிய வரலாறு, திறமை சான்றிதழ்கள், மற்றும் தொழில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த தொழிலாளர் விபரக்குறிப்புகளைக் கட்டமைக்க உதவும்.


மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்துதல்: 


இந்தியாவின் மக்கள்தொகை நன்மை ஒரு மகத்தான வாய்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால், தொழிலாளர் சக்தி குறைந்த உற்பத்தித் திறன், முறைசாரா வேலைவாய்ப்பில் சிக்கித் தவித்தால் இது ஒரு பொறுப்பாகவும் மாறலாம்.  ஊதிய வளர்ச்சி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி என்பது விரிவடையும் சமத்துவமின்மை, சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் பின்னடைவுக்கு வழிவகுக்கிறது. 


வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஊதியங்கள் உயர வேண்டும். இதற்கு மறுபகிர்வு (redistribution) மட்டுமல்ல, மாற்றமும் (transformation) தேவைப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளியின் சராசரி உற்பத்தித்திறனை உயர்த்துவதும், பொருளாதாரத்தில் அவர்களுக்கு நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


முறைசாரா நிலையிலிருந்து முறைசாரா நிலைக்கு மாறுவது எளிதானதாக இருக்காது. இதற்கு முதலீடு, நிறுவன சீர்திருத்தம், மற்றும் அரசியல் விருப்பம் தேவைப்படும். இருப்பினும், செயலற்ற தன்மையின் காரணமாக அதற்கான விலை மிக அதிகம். முறைப்படுத்தல் இல்லாமல், இந்தியா குறைந்த வருமான சூழலில் சிக்கும் அபாயம் உள்ளது. 


அங்கே ஒரு சிறிய முறையான துறை மொத்த உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சியை இயக்கும் அதேசமயம் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அதன் பலன்களிலிருந்து விலக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். முறைப்படுத்தல், அதிக உற்பத்தித்திறன் மற்றும் தெளிவான ஊதியங்களுடன் வேலைகளை முறைப்படுத்துவது பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசியமானதாக ஆகும்.


புது டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு கொள்கை சிந்தனைக் குழுவான பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் (Pahle India Foundation) குந்தலா ஒரு மூத்த உறுப்பினராகவும், சம்ரிதி ஒரு ஆராய்ச்சி கூட்டாளராகவும் உள்ளார்.



Original article:

Share:

அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்ட திருத்தம்: இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முன்பு கூறியது என்ன? -அமல் ஷேக், வினீத் பல்லா

 ஒரு அமைச்சரை எப்போது பதவியில் இருந்து நீக்க முடியும்? அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தம் தற்போதைய நிலையை எவ்வாறு மாற்றுகிறது? சட்டம் மற்றும் நீதி தொடர்பான என்னென்ன கேள்விகள் இதில் அடங்கும். மேலும், உச்ச நீதிமன்றமும் சட்ட ஆணையமும் இதற்கு முன்பு என்ன கூறியுள்ளன?


ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, குறைந்தது 30 நாட்கள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒன்றிய அல்லது மாநில அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு திருத்தத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.


130வதுஅரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, 2025 மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முன்மொழியப்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்புடைய இரண்டு சட்டத் திருத்தங்கள் பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு (joint committee of Parliament)  அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தம் என்ன முன்மொழிகிறது?


இந்த மசோதா அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 75, 164 மற்றும் 239AA பிரிவுகளில் திருத்தங்களை முன்மொழிகிறது. அவை முறையே ஒன்றிய அமைச்சர்கள் குழு, மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள் குழு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அமைச்சர்களைக் கையாள்கின்றன.


இந்த விதிகளில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்படும்: ஒர் அமைச்சர், பதவியில் இருக்கும் போது, தொடர்ந்து 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அவர் காவலில் எடுக்கப்பட்ட 31 நாளுக்குள் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவரது பதவியில் இருந்து நீக்கப்படுவார்.


அமைச்சர் காவலில் இருந்து விடுவிக்கப்படும்போது இந்த பதவி நீக்கம் ரத்து செய்யப்படலாம். முதலமைச்சர்களும் பிரதமரும் முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின் வரம்பிற்குள் இடம் பெறுவார்கள்.


மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் அறிக்கையின்படி (Statement of Objects and Reasons), கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஒர் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஒரு சட்டம் தேவை. அத்தகைய அமைச்சர்கள் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நல்லாட்சியைத் தடுக்கலாம். இது அரசியலமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறைக்கலாம்.

 

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை மற்றும் வாக்களிக்க வேண்டும்.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8 இன் கீழ், (Representation of the People Act, 1951, (RPA)) சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவோ அல்லது சில குற்றவியல் குற்றங்களுக்காக பதவியில் தொடரவோ தகுதியற்றவர்கள் மற்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்கள்.


முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தம், குறிப்பிட்ட காலம் காவலில் கழித்த பின்னர் ஒரு அமைச்சரை நீக்குவது குறித்து கையாள்கிறது. அமைச்சர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை கையாளும்) வேறுபட்ட தகுதிகள் இல்லை. ஆனால், அவர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், தகுதிநீக்கத்திற்கான அளவுகோல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையாகும் (conviction). மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தால் தகுதி நீக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.


இந்தியாவின் அரசியலமைப்பு திட்டம் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்ற அனுமானத்தை கருத்தில் கொள்கிறது மற்றும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பை அரசுத் தரப்பின் மீது வைக்கிறது. காவல்துறையினர் கைது செய்த 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர். அதன் பின்னர், நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முடிவு செய்து, விசாரணை தொடங்குகிறது. இது விடுதலை அல்லது தண்டனையில் முடியலாம்.

முன்மொழியப்பட்ட மசோதா, ஒர் அமைச்சர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக 30 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டால் அவரை நீக்க முடியும் என்று கூறுகிறது. ஆனால், கைது என்பது விசாரணையின் முதல் படி மட்டுமே என்பதால், ஒருவரை நீக்குவதற்கு இதைக் காரணமாகக் கூறுவது நியாயம் மற்றும் சரியான சட்ட செயல்முறை குறித்த கவலைகளை எழுப்புகிறது.

ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எப்போது தகுதியற்றவராகலாம் என்ற விவாதம் என்னவாக இருந்துள்ளது? 


அரசியலில் குற்றமயமாக்கல் பிரச்சனை அதிகரித்து வருவதால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்பே தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள்.


தண்டனை வழங்குவதில் ஏற்படும் நீண்ட தாமதம் தகுதி நீக்கத்தை பயனற்றதாக்குகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். செப்டம்பர் 2013 முதல், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் 27பேர் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இருப்பினும், இயற்கை நீதியின் அரசியலமைப்பு கொள்கைகளின்படி (constitutional principles), ஒரு நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், தகுதி நீக்கம் சட்டமன்ற உறுப்பினரின் உரிமைகளை மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்தையும் பாதிக்கிறது.

1999ஆம் ஆண்டில்  இந்திய சட்ட ஆணையத்தின் (Law Commission of India) 170வது அறிக்கையில், ஒரு நபர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டால், அது தகுதி நீக்கத்திற்கான கூடுதல் காரணமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த தகுதி நீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அந்த நபர் விடுவிக்கப்படும் வரை, எது முதலில் நடக்கிறதோ அதுவரை நீடிக்கும்.


இந்த முன்மொழிவு 2004ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தாலும், 2014ஆம் ஆண்டில் சட்ட ஆணையத்தின் 244வது அறிக்கையிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

சட்ட ஆணையத்தின் 2014 அறிக்கை, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று பரிந்துரைத்தது. ஏனெனில், குற்றச்சாட்டுகளை உருவாக்குவது, அந்த நபரை விசாரணைக்கு உட்படுத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் திருப்தி அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது அல்லது நீதிமன்றம் ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிரான குற்றத்தை அறிந்துகொள்வது தகுதியின்மைக்கான பொருத்தமான நிலைகள் என்ற பரிந்துரைகளை அறிக்கை நிராகரித்தது.


நீதிமன்றத்தின் சிந்தனையைப் பயன்படுத்துவதற்கு முன் ஒருவரை தகுதியிழக்கச் செய்வது என்பது, இயற்கை நீதியின் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும் என்றும் இதனால் ஒருவருக்கு எதிராக எந்த வழக்குச் செயல்பாடுகளும் தொடங்காமல், அவரைத் தண்டிப்பது போன்ற நிலை ஏற்படும் என்றும் ஆணையம் கூறியது.


ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?


உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு பொது நலன் வழக்கின் (Public Interest Litigation) 2018ஆம் ஆண்டு  தீர்ப்பில் இந்த பரிந்துரைகளை விவாதித்தது. பொது நலன் அறக்கட்டளையின் பொதுநல வழக்கு, கடுமையான குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளை உருவாக்கும் கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யக் கோரியது.


நாடாளுமன்றம் வழங்கியதைத் தாண்டி தகுதிநீக்கத்திற்கான புதிய காரணங்களைச் சட்டம் இயற்றவோ அல்லது சேர்க்கவோ முடியாது என்று நீதிமன்றம் கூறியது. தகுதி நீக்கம் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.


எவ்வாறாயினும், ‘கொடூரமான மற்றும் கடுமையான குற்றங்களுக்காக’ (heinous and grievous offences) குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறுப்பினர் பதவியை அரசியல் கட்சிகள் ரத்து செய்வதற்கும், தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பதற்காக "வலுவான சட்டத்தை" நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.


முன்னதாக, 2014ஆம் ஆண்டு,  மனோஜ் நருலா vs யூனியன் ஆஃப் இந்தியா (Manoj Narula v Union of India (2014)) வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறியது.


இருப்பினும், ‘அரசியலமைப்பு நம்பிக்கையின் களஞ்சியமாக’ (repository of constitutional trust), குற்றவியல் வரலாற்றை கொண்ட நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று பிரதமர் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.


சமீபத்தில், பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இரண்டு அமைச்சர்களின் வழக்குகளில் உச்சநீதிமன்றம்,  தமிழ்நாட்டின் V.செந்தில் பாலாஜி மற்றும் அப்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்குகளில் சில கருத்துகளை தெரிவித்தது.


V.செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் வேலைக்கான பண மோசடியில் 14 மாதங்கள் காவலில் இருந்தார். ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சிகளின் கணிசமான அழுத்தத்தால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


விசாரணை பல ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், செப்டம்பர் 2024 இல், உச்ச நீதிமன்றம் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது. அவர் விடுதலையான சில நாட்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். அவர் தனது அதிகாரப் பதவியைப் பயன்படுத்தி அவருக்கு எதிரான வழக்கில் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்று கூறி, அவரது ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க இயக்குநரகம் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டது.


பிணை  மனு விசாரணைக்கு முன்பே அவர் ராஜினாமா செய்ததால், அவரது அமைச்சர் பதவியை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இதில் ​​நீதிமன்றத்தின் கருத்து தவறாக வழிநடத்தப்பட்டதாக கூறியது.


ஏப்ரல் 2025 இல், நீதிமன்றம் பாலாஜியிடம் பிணை அல்லது அவரது பதவி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னது. அவர் ராஜினாமா செய்யாமல் இருந்தால், அவரது பினையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். எனினும், சில நாட்களுக்குப் பிறகு, பாலாஜி ராஜினாமா செய்தால், நீதிமன்றம் அவரது பினைத் தொடர அனுமதித்தது.


மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு பினை வழங்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அவர் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடுவதையோ, அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதையோ, சாட்சிகளைச் சந்திப்பதையோ அல்லது தொடர்புடைய கோப்புகளை அணுகுவதையோ தடுத்தது.


தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பதவி விலகும் முடிவு கெஜ்ரிவாலிடம் விடப்பட்டது.


செப்டம்பர் 2024இல், நீதிமன்றம் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கியது. விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறியது. அவர் பதவியில் இருப்பது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதன் பிறகு, கெஜ்ரிவால் தானாக ராஜினாமா செய்தார்.



Original article:

Share:

இந்தியாவின் முதல் பேரிடர் தயார்நிலை குறித்த 'நேரடி ஆய்வகம் (Living lab)'. -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?

கணிச்சார், கண்ணூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இது இந்தியாவின் முதல் கிராம பஞ்சாயத்து ஆகும். இங்கே காலநிலை உணர்திறனை அதிகரிப்பதற்கும் மக்களின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும்  நேரடி ஆய்வக அணுகுமுறை (living lab approach) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் தொடர்ச்சியான நிலச்சரிவுகளில் மூன்று பேர் உயிரிழந்து 36 ஹெக்டேர் விவசாய நிலம் அழிக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு இது ஒரு ஆறுதல் தரக்குரிய செய்தியாக உள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. நேரடி ஆய்வக அணுகுமுறை (living lab approach) என்பது உண்மையான உலக அமைப்புகளை ஆராய்ச்சி மற்றும் புதுமையுடன் ஒருங்கிணைத்து தீர்வுகளை உருவாக்கி சோதிப்பதற்கான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும். முதலில் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்த அணுகுமுறை, உண்மையான உலக தீர்வுகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம், நிபுணர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகம் உட்பட பல பங்குதாரர்களின் ஈடுபாட்டால் குறிக்கப்படுகிறது.


2. இது கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Kerala State Disaster Management Authority (KSDMA)) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரே நோக்கம்  பஞ்சாயத்தில் உள்ள 4,600-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களை இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக வலுவாக்குவதாகும்.


3. நேரடி ஆய்வக அணுகுமுறை மக்களை நிலையான இயக்க நடைமுறைகள், அவசர உதவி அமைப்பு, வெளியேறும் வழிகள் மற்றும் பாதிப்புகள் பற்றி நன்கு அறிந்தவர்களாக்கியுள்ளது. அதிக உள்ளூர்மயமாக்கல் (Hyperlocalisation) என்றால் எச்சரிக்கைகள் மற்றும் பதில்கள் அந்த இடத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவது.


4. அனைத்து வீடுகளுக்கும் மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை போன்ற தரவுகளைச் சேகரிக்க ஒரு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தரவுகளைச் சரிபார்க்கும் மக்கள் வார்டு அளவிலான புலன குழுக்கள் (WhatsApp groups) மூலம் மற்றவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


5. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பஞ்சாயத்தில் உள்ளூர் வானிலை தரவுகளை வழங்க கிராமத்தில் தற்போது ஒரு தானியங்கி வானிலை நிலையம் (automatic weather station) உள்ளது. கிராமத்தின் 13 வார்டுகளிலும் 12 நிலையங்களைச் சேர்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


6. உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, தானியங்கி வானிலை நிலையம் ((automatic weather station (AWS)) என்பது வானிலை நிகழ்வுகளை பதிவு செய்யது தானாகவே தகவல்களை சேகரிக்கும் ஒரு நிலையமாகும். ஒரு தானியங்கி வானிலை நிலையம்  காற்று உணரிகள், வெப்பநிலை மற்றும் ஈரப்பத உணரிகள், அழுத்தம் உணரிகள் மற்றும் மழை உணரிகள் போன்ற நான்கு முக்கிய உணரிகளைக் கொண்டுள்ளது.


7. இந்த பஞ்சாயத்தில் விரைவில் நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பும்(early landslide warning system) இருக்கும். ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டடக் கட்டுமான ஆராய்ச்சி நிறுவனத்துடன் (CSIR)) இணைந்து ரூர்க்கியால்  உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தால் உருவாக்கப்பட்டு அடுத்த மாதம் நிறுவப்பட இருக்கும் இந்த அமைப்பு, களத்திலிருந்து தகவல்களைச் சேகரிக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உணர்திறன் கருவிகளையும் நிலச்சரிவு ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புக்காக செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் மாதிரியையும் (Artificial Intelligence/Machine Learning model) கொண்டிருக்கும்.


8. ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள் (Early Warning Systems (EWS)) நிலச்சரிவு நிகழ்வின் சாத்தியக்கூறுகளைக் கணிப்பது, தகவல்களைப் பரப்புவது மற்றும் சரியான நேரத்தில் பதிலளிப்பதை சாத்தியமாக்குவது போன்றவைகளை கண்காணிக்கும். இவை பிராந்தியம் சார்ந்ததாகவோ அல்லது தனிப்பட்ட சரிவுகளை இலக்காகக் கொண்டதாகவோ இருக்கலாம்.


9. சூறாவளி போன்ற சில இயற்கை நிகழ்வுகளுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் இந்தியா நல்ல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை செய்துள்ளது. இருப்பினும், நிலச்சரிவுகள் ஒரு பலவீனமான புள்ளியாக இருக்கின்றன. 


குறிப்பிடத்தக்க வகையில், இந்தியப் புவியியல் ஆய்வகத்தின் (Geological Survey of India (GSI)) முன்முயற்சியின் பேரில், தேசிய நிலச்சரிவு முன்கணிப்பு மையம் (National Landslide Forecasting Centre) ஜூலை 2024இல் தொடங்கப்பட்டது. இது நிலச்சரிவுகளுக்கான பேரிடர் எதிர்ப்பு சக்தியில் ஒரு முக்கியமான படிநிலையாகும்.


நிலச்சரிவுகளும் அவற்றால் இந்தியா எதிர்கொள்ளும் பாதிப்புகள் 


1. நிலச்சரிவுகள் என்பது பொதுவாக செங்குத்தான சரிவுகளைக் (steep slopes) கொண்ட மலைப்பகுதிகளில் நிகழும் இயற்கை நிகழ்வுகள் ஆகும். ஒரு நிலச்சரிவின் போது, பெரிய அளவிலான பாறைகள், கற்பாறைகள், தளர்வான சேறு, மண் மற்றும் குப்பைகள் போன்றவை மலைப்பகுதிகளில் கீழே சரிந்து, அதிக வேகத்தைப் பெற்று அடிக்கடி தாவரங்கள் அல்லது கட்டடங்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றன.


2. நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தைத் தூண்டக்கூடிய கடுமையான மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்புடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation (ISRO)) 2023இல் "இந்தியாவின் நிலச்சரிவு வரைபடம்" (Landslide Atlas of India)  என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வரைபடத்தில், வரைபடமாக்கப்பட்ட நிலச்சரிவுகள் கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையிலும் பருவகாலத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்ட்டதாகும்.


3. பனி மூடிய பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் புவியியல் நிலப்பரப்பில் (0.42 மில்லியன் சதுர கிமீ) 12.6 சதவீதம் நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளன. நிலச்சரிவுகளில் 66.5 சதவீதம் வடமேற்கு இமயமலையிலிருந்தும், 18.8 சதவீதம் வடகிழக்கு இமயமலையிலிருந்தும், 14.7 சதவீதம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தும் பதிவாகியுள்ளன.


4. 2019ஆம் ஆண்டு  ஜூலை மாத நிலவரப்படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடிய மாநிலங்களுக்கு குறிப்பிட்ட நிலச்சரிவு தணிப்புக்காக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நிலப் பதிவு மேலாண்மை அமைப்பை (Land Records Management System (LRMS)) தொடங்கியது. LRMS என்பது நிலச்சரிவு கண்காணிப்பு, விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு/பயிற்சி போன்றவற்றுடன் சரிவு நிலைப்படுத்தலின் பல்வேறு முறைகளின் பயன்பாட்டின் மூலம் நிலச்சரிவு சிகிச்சை நடவடிக்கைகளின் நன்மைகளை வெளிக்காட்ட தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும்.


5. தேசிய நிலச்சரிவு அபாய மேலாண்மை உத்தியானது (National Landslide Risk Management Strategy) செப்டம்பர் 27, 2019 அன்று இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. 


இந்த உத்தி ஆபத்து வரைபடமாக்கல், கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள், விழிப்புணர்வு திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்கைகள், நிலச்சரிவுகளின் நிலைப்படுத்தல் மற்றும் தணிப்பு போன்ற நிலச்சரிவு பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மையின் அனைத்து கூறுகளையும் நிவர்த்தி செய்கிறது.



Original article:

Share:

தி வயர் ஆசிரியர் மீதான தேச துரோக வழக்கு மற்றும் அரசின் கடுமையான நடவடிக்கை குறித்து…

 அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களை மிரட்டி, அவர்களுக்கு எதிராக தேசத்துரோகச் சட்டத்தைப் (sedition law) பயன்படுத்தி, ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசாங்கத்தின் வெளிப்படையான கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் ஒரு கொடூரமான முயற்சியாகும்.


ஆபரேஷன் சிந்தூர் குறித்து இணையதளத்தில் வெளியான கட்டுரை தொடர்பாக, தேசத்துரோக வழக்கில் பத்திரிகையாளரும் தி வயர் ஆசிரியருமான சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்தக் கட்டுரையில், ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட இந்திய விமானப்படை (Indian Air Force) ஜெட்கள் மற்றும் இராணுவ தந்திரோபாயங்கள் குறித்து இந்தோனேசியாவிற்கான இந்திய இராணுவ இணைப்பாளரின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.  இது பரவலாகப் புகாரளிக்கப்பட்டது. 


இது "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்" இப்போது காவல்துறை வழக்கு நாட்குறிப்புகளில் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 12அன்று, வரதராஜனுக்கு எதிராக எந்தவொரு "கட்டாய நடவடிக்கைகளையும்" எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அசாம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. 


இருப்பினும், நீதிமன்ற உத்தரவை மீறி, காவல்துறை வேறு மாவட்டத்தில் இரண்டாவது முதல் தகவல் அறிக்கையை (First Information Report (FIR)) பதிவு செய்தது. ஒரு செய்தி அறிக்கைக்காக தேசத்துரோக விதிகளைப் பயன்படுத்துவது, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அரசு இயந்திரங்களைத் தேர்ந்தெடுத்து நியாயமற்ற முறையில் பயன்படுத்துவது, உரிய நடைமுறை மீறல் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.


1962ஆம் ஆண்டு ஒரு முக்கிய தீர்ப்பில் (கேதர் நாத் சிங் வழக்கு), உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தை விமர்சிப்பது  கடுமையாக இருந்தாலும் கூட  வன்முறை அல்லது பொதுக் குழப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் அது தேசத்துரோகமாகாது என்று கூறியது. 


மே 2022இல், நீதிமன்றம் தேசத்துரோகச் சட்டத்தை (இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A) தற்காலிகமாக நிறுத்து வைத்தது. இது இன்றைய சமூகத்திற்கு பொருந்தவில்லை என்று கூறியது. இதை உணர்ந்த அரசாங்கம், நீதிமன்றம் அதை ரத்து செய்வதற்கு முன்பு சட்டத்தை நீக்குவதாகக் கூறியது. இது மறுபரிசீலனை செய்யப்படும்போது புதிய வழக்குகளைப் பதிவு செய்யவோ அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று நீதிமன்றம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது. 


இருப்பினும், 2023ஆம் ஆண்டில், புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​தேசத்துரோகச் சட்டம், பெயர் மாற்றத்துடன்  ‘ராஜ்த்ரோ’ (ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சி) என்பதிலிருந்து ‘தேஷ்த்ரோ’ (தேசத்திற்கு எதிரான துரோகம்) என நிலைநிறுத்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, சட்டத்தை தவறாக பயன்ப்படுத்தும் நடைமுறை இன்னும் தொடர்கிறது


ஒரு பத்திரிகையாளர் பல புகார்களுக்கு உட்படுத்தப்படுவதையும், தொடர்ச்சியானமுதல் தகவல் அறிக்கைகளையும் எதிர்கொண்டால், அது அவர்களின் செய்திகளைப் புகாரளிக்கும் மற்றும் சுதந்திரமாகப் பேசும் சுதந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும். 


இது நாட்டின் நிர்வாக விவகாரங்களை குடிமகன் அறிந்து கொள்ளும் சுதந்திரத்தையும், தகவலறிந்த சமூகத்தை உறுதி செய்வதற்கான பத்திரிகையாளரின் உரிமையையும் அழிக்கும்" என்று முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மே 2020இல் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கியபோது கூறினார். புதிய தேசத்துரோகச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அசாம் அரசு விரைவாகக் கவனிக்க வேண்டும்.



Original article:

Share:

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரி (AIDC) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரி (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) நீக்கம் ‘பொது நலனுக்கு அவசியம்’ என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 19 முதல் நடைமுறைக்கு வந்து செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


— அமெரிக்காவின் கடுமையான வரிகளால் நெசவுத் துறை மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்கா இந்தியாவின் ஆயுத்த ஆடைகள் (Ready-Made Garments (RMG)) ஏற்றுமதிக்கு முக்கிய சந்தையாக உள்ளது. ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (Apparel Export Promotion Council (AEPC)) அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 33 சதவீதமாக இருந்தது.


— AEPC அறிக்கையின் படி, இந்தியா அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று பொருட்கள்: பருத்தி டி-ஷர்ட்கள் (9.71 சதவீதம்); பருத்தியால் செய்யப்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகளின் ஆடைகள் (6.52 சதவீதம்); பருத்தியால் செய்யப்பட்ட குழந்தை ஆடைகள் (5.46 சதவீதம்) போன்றவைகளாகும். 


இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று பொருட்கள் உலகளவில் அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்தப் பொருட்களில் முறையே 10, 36 மற்றும் 20 சதவீத பங்கை கொண்டுள்ளன என்று ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.


— குறிப்பிடத்தக்க வகையில், வீட்டு ஜவுளிகள் மற்றும் கம்பளங்களும் முக்கியமான ஏற்றுமதி சார்ந்த துறைகளாக உள்ளன. இந்த துறைகளில் முறையே மொத்த விற்பனையில் 70-75 சதவீதம் மற்றும் 65-70 சதவீதம் ஏற்றுமதியை கொண்டுள்ளன. இதில், வீட்டிற்கு தேவையான துணிகள் ஏற்றுமதியில் அமெரிக்கா 60 சதவீதமும், கம்பள ஏற்றுமதியில் 50 சதவீதமும் பங்கு வகிக்கிறது.


— அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 30ஆம் தேதி இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். தொழிலாளர் மிகுதியான துறைகளின் வேதனையை அதிகரிக்கும் வகையில், ட்ரம்ப் இந்தியா மீது மேலும், 25 சதவீத வரிகளை அறிவித்துள்ளார். இந்த கூடுதல் அமெரிக்க வரிகள் ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.


— கடுமையான அமெரிக்க வரிகளுக்கு மத்தியில், மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்க அரசின் தலையீட்டை சிட்டிகுரூப் மற்றும் இந்திய நெசவுத் தொழில் கூட்டமைப்பு (Citigroup and Confederation of Indian Textile Industry (CITI)) கோரியுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க வரி விகிதம் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், போட்டியாளர் நாடுகளான வங்கதேசத்துக்கு புதிய அமெரிக்க வரி விகிதம் 20 சதவீதம், இந்தோனேசியா மற்றும் கம்போடியாவுக்கு தலா 19 சதவீதம், வியட்நாமுக்கு 20 சதவீதம் என்று CITI சுட்டிக்காட்டியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா ?


— இந்தியாவின் நெசவுத் தொழில் உலகின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். பருத்தி சாகுபடி முதல் உயர்நிலை ஆடை உற்பத்தி வரை பரந்த மதிப்புச் சங்கிலியைக் கொண்டுள்ளது.


— இந்தியாவின் நெசவு மற்றும் ஆடைத் துறையின் அளவை குறைத்து மதிப்பிட முடியாது. இது தொழில்துறை உற்பத்தியில் 13 சதவீதம், ஏற்றுமதியில் 12 சதவீதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 2 சதவீதம் பங்களிக்கிறது.


— சீனாவுக்கு அடுத்து, இந்தியா பருத்தி உற்பத்தியில் 2-வது பெரிய நாடாக உள்ளது. உலக உற்பத்தியில் 24 சதவீத பங்கு வகிக்கிறது. பருத்தி (Cotton) சாகுபடியில் சுமார் 60 லட்சம் உழவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தெலங்கானாவில் உள்ளனர்.


— பருத்தி  நெசவுத் தொழில் முழுவதும்  மூலப் பொருளான பருத்தியை நூலாக மாற்றுவது, துணி தயாரிப்பது, சாயமிடுதல் மற்றும் தையல் வரை  45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.



Original article:

Share:

STEM கல்வியானது, மாற்றுத்திறனாளி மாணவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் -ராமகிருஷ்ண ராமசுவாமி

 நிறுவனங்கள் இந்தப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கின்றன மற்றும் ஆய்வகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கான நிதியினை வழங்கத் தவறிவிடுகின்றன. 4% இட ஒதுக்கீடும் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.


தேசிய கல்விக் கொள்கை 2020, பின்தங்கிய மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த அணுகல், சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு நேர்மறையான படியாகும்.


 இருப்பினும், பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் இதை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (science, technology, engineering, and mathematics (STEM)) கல்வியில், நல்ல நிதியுதவி பெற்ற நிறுவனங்களில் கூட, நிலைமை இன்னும் மாறவில்லை.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5, இந்தியாவில் 63 மில்லியன் மக்கள் குறைபாடுகள் உள்ளதாக மதிப்பிடுகிறது. இது மக்கள் தொகையில் 5% க்கும் குறைவானது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டை விட இது குறைவு.  இது உலக மக்கள் தொகையில் சுமார் 15% பேர் ஏதேனும் ஒரு வகையான குறைபாடுடன் வாழ்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.


இந்தியாவில் நல்ல அர்த்தமுள்ள சட்டங்களும் உள்ளன. 2009ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம், (Right of Children to Free and Compulsory Education Act) மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட 14 வயது வரை இலவசக் கல்விக்கான அணுகலை உறுதி செய்கிறது. 


மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம்-2016, (Rights of Persons with Disabilities Act) கணிசமான சிந்தனையுடன் விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது கல்வி நிறுவனங்களின் கடமைகள் மற்றும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பை விளக்குகிறது.


நாடு முழுவதும் இந்த யதார்த்தம் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெரும்பாலும் சிறப்புத் தேவைகள் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக, உயர்கல்விக்கான அவர்களின் அணுகலும், பல்வேறு படிப்புப் பிரிவுகளில் அவர்களின் வெளிப்பாட்டுத்தன்மையும் குறைவாகவும், கட்டுபடுத்தப்பட்டதாகவும் மாறி வருகிறது.


இட ஒதுக்கீடு விதிமுறைகள்


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 4% இடங்களை ஒதுக்குவதை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் கட்டாயமாக்குகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தக் குழுவின் கீழ் வருகின்றன. எனவே, இந்தச் சட்டம் சரியாபன நடைமுறையில் செயல்படுத்தப்படுவது முக்கியம். முக்கியம். 

இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளில் குருட்டுத்தன்மை மற்றும் குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, இயக்க இயலாமை, பெருமூளை வாதம் மற்றும் தொடர்புடைய குறைபாடுகள், குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு ஆகியவை அடங்கும்.


தற்போது, ​​இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் கல்வி நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. மேலும், இது நிறுவன ரீதியாக எங்கு பூர்த்தி செய்யப்பட்டாலும், அது மிகவும் நுணுக்கமான அளவில், அதாவது துறைகள் முழுவதும் விரிவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.


 உண்மையில், பெரும்பாலான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கிடைமட்ட ஒதுக்கீடு (horizontal quota) என அழைக்கப்படுவதன் மூலம் சேர்க்கை பெறுகின்றனர். இதன் பொருள், இடங்கள் அவர்களுக்கு நேரடியாக ஒதுக்கப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் அறிவியல் சார்ந்த பாடங்களை எடுப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். ஏனெனில் அது மற்ற மாணவர்களுக்குக் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.


மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதகமான பல்வேறு நடைமுறைகளை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள். திறமைவாதமானது ஊனமுற்றோர் அல்லாதவர்களுக்கு சாதகமாக இருக்கும் பாகுபாடு ஆகும். 


உயர்கல்வி நிறுவனங்களில் சரியான உள்ளடக்கிய நடவடிக்கைகள் இல்லாததால், பல்வேறு திறன்களைக் கொண்ட மாணவர்கள், STEM பாடங்களில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி வரை ஊக்குவிக்கப்பட்டவர்கள் கூட, பெரும்பாலும் உயர்கல்வி அவர்களுக்கு நெருக்கமாக இருப்பதைக் காண்கிறார்கள்.


கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக மாறுவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. வளாகங்கள் முழுமையாக அணுகக்கூடியதாக இருக்க பெரிய முதலீடுகள் தேவை. பெரும்பாலான வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விடுதிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடமளிக்க முடியாது. நிர்வாகிகள் தங்கள் வரையறுக்கப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கடினமான தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். 


மேலும், 5% க்கும் குறைவான மாணவர்களுக்கு பயனளிக்கும், வசதிகளுக்கு செலவிடுவது குறைவானதாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், இதற்கான உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்காக இத்தகைய நிதி குறைவாக இருக்கும்பட்சத்தில் பரிசீலனைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.


வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள், யுனெஸ்கோ வழிகாட்டுதல்கள்படி, தேசிய சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மாற்றுத்திறனாளி நபர்களை உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதும் இவற்றில் அடங்கும். 


கூடுதலாக, அவை கல்வியை அணுகும்படி செய்தல், கல்வியின் வடிவத்தையும் பொருளையும் மாற்றியமைத்தல், மாற்றுத்திறனாளி நபர்களுக்கான கல்வி உரிமையை செயல்படுத்துவதை கண்காணித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கல்வி உரிமையை ஊக்குவித்தல் போன்றவற்றை உறுதி செய்கிறது.


தணிக்கை அணுகல்


கல்வியில் இடஒதுக்கீடு என்பது இந்த உரிமைகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உள்ளடக்கியது. மிகவும் அவசரமாகத் தேவைப்படுவது உணர்திறன் மற்றும் பயிற்சி ஆகும். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட வளாகங்கள் தேசிய கட்டிடக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். 


ஆனால், இது அரிதாகவே செயல்படுத்தப்படுகிறது. குறைபாடுகள் உள்ளவர்களுக்கான நியாயமான இடவசதியின் அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய, பழைய வளாகங்களுக்கு அணுகல் தன்மைக்கான தணிக்கை தேவைப்படுகிறது. 


வளாகங்கள் பொதுவாக பெரிய அளவில் இருக்கும். பழைய கட்டிடங்களில் மின்தூஙக்கி (lifts) அல்லது சரிவுகள் (ramps) இல்லை மற்றும் கழிப்பறைகளும் அணுக முடியாதவையாக உள்ளன. அத்தகைய சிக்கல்களின் பட்டியல் நீளமானதாக உள்ளது.


வழக்கமான வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாற்காலிகள், மேசைகள் மற்றும் பெஞ்சுகள் நிலையான உயரத்தில் உள்ளன. மேலும், புகை-ஹூட்கள் (fume-hoods) மற்றும் உலைகள் (furnaces) போன்ற ஆய்வக உபகரணங்களுக்கான அணுகல் மோசமாக உள்ளது. STEMஇல் கற்பித்தல் மற்றும் கற்றல் இடங்கள் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு எளிதில் பொருந்தாது.


அறிவியலில் ஆய்வக சோதனைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் உணர்திறன் இரண்டும் தேவை. பலவீனமான இயக்கம் கொண்ட மாணவர்களுக்கான உடல் அணுகல் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள் இன்னும் பெரிய சவாலை எதிர்கொள்கிறார்கள். 


ஏனெனில், பெரும்பாலான ஆய்வக பரிசோதனைகள் மற்றும் கற்பித்தல் முறைகள் அவர்களுக்காக வடிவமைக்கப்படவில்லை. தூய கணிதத்தைத் (pure mathematics) தவிர, கிட்டத்தட்ட அனைத்து அறிவியல் படிப்புகளும் ஆய்வக அறிவுறுத்தலை உள்ளடக்கியது. இது பெரும்பாலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களின் சூழலை குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு விலக்கானதாக மாற்றுகிறது.


அதே வாய்ப்புகள் மற்றும் அணுகல் கொடுக்கப்பட்டால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களைப் போலவே சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று பரிந்துரைக்க போதுமான சான்றுகள் உள்ளன. சிறப்புத் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வு, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அறிவியலை வளர்ப்பதில் உதவுகிறது என்பதையும் சான்றுகள் காட்டுகின்றன. 


எடுத்துக்காட்டாக, பார்வைக் குறைபாட்டை சரிசெய்ய வேண்டிய அவசியத்திலிருந்து ஆப்டோமெட்ரி அறிவியல் தொடங்கியது. மேலும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தனது செவித்திறன் குறைபாடுள்ள மனைவி மற்றும் தாயாருடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியத்தால் தொலைபேசி உருவானது. பின்னர் இது  பரந்த நன்மைகளைத் தந்தது.


இன்றைய தொழில்நுட்பத்தில், ஆய்வக பரிசோதனைகளை குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு மிகக் குறைந்த கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. பேச்சு-செயல்படுத்தப்பட்ட உபகரணங்கள் (speech-activated equipment), AI மற்றும் மின்னணு அடிப்படையிலான மூலம் இதைச் செய்யலாம். இந்த இடைமுகங்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு காட்சி குறியீடுகளை ஆடியோவாகவோ அல்லது கேட்கும் குறைபாடுள்ளவர்களுக்கு ஆடியோவை காட்சியாகவோ மாற்றுவது போன்றவை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றும்.


இன்றைய யுகத்தில், மக்கள் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும், பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு அடையாளங்கள் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. அறிவியல் சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வது ஒரு சிறப்புரிமையாக உள்ளத. மேலும் அந்த வாய்ப்பு ஒரு விஞ்ஞானியாக மாற விரும்பும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக,  மனம் அல்லது உடலின் வரம்புகள் காரணமாக இந்த வாய்ப்பு யாருக்கும் மறுக்கப்படக்கூடாது.


ராமகிருஷ்ண ராமசாமி, ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல் துறையில் கௌரவப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share: