நகர்ப்புற செயல்திட்டம் | புதிய அரசாங்கத்திற்கான ஐந்து பணிகள் -சௌமியா சாட்டர்ஜி

 இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது. 2050-ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் பாதிப் பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் (United Nations) சபை கணித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY))  திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட வீடுகள் குறித்த பட்ஜெட் வாக்குறுதியை அரசாங்கம் காப்பாற்றும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் கீழ் 30 கோடி  வீடுகள் கட்டப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில்  10 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும் அமைச்சரவைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நகர்ப்புற பகுதியானது ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் (Union ministry of housing and urban affairs (MoHUA)) செயல்படுத்தப்படுகிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையை தொடர்ந்து வைத்திருக்கும் ஹர்தீப் சிங் பூரிக்கு பதிலாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு (Manohar Lal Khattar) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீட்டுத் திட்டங்களும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பயனுள்ள மாநில அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மனோகர் லால்கட்டார் கூறினார். தூய்மை இந்தியா திட்டம் (Swacch Bharat Mission) மற்றும் அம்ருத் திட்டங்களின் கீழ் முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது. 2050-ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் பாதிப் பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களை (Union ministry of housing and urban affairs (MoHUA)) கண்காணிக்கும் அமைச்சகத்திற்கு புதிய அமைச்சர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் நம்பும் முக்கியப் பிரச்சினைகள் இங்கே உள்ளன. 

மலிவு விலை வீடுகள் மற்றும் அடிப்படை சேவைகள்

இந்தியாவில், மலிவு விலை வீடுகளுக்கு அதிகத் தேவை உள்ளது. ஆனால், விநியோகம் குறைவாக உள்ளது. குறிப்பாக நகரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட பாதி மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். டெல்லியில்கூட, 19 கோடி குடியிருப்பாளர்களில் 5 கோடி மக்களுக்கு அடிப்படை குடிமை வசதிகள் இல்லை என்று 2021-ன் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) வெளிப்படுத்தியுள்ளது.

"வீடுகளை வழங்கும் அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால், தற்போதைய முயற்சிகள் பெரும்பாலும் பயனற்றவை," நகர்ப்புற ஆய்வாளரும், கொள்கை நிபுணருமான அரவிந்த் உன்னி தனது கருத்தை தெரிவித்தார் . பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் துணைத் திட்டமான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டு வளாகங்கள் (Affordable Rental Housing Complexes (ARHCs)) அதிக நன்மையைப் பெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ARHC-களுக்கு ஊக்கம் தேவை என்று அவர் பரிந்துரைத்தார் மற்றும் குடியேற்றம் அல்லாதவர்களையும் சேர்த்து வாடகைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து, மார்ச் மாதம் வரை இத்திட்டத்தின் கீழ் 5,648 வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவரைப் பொறுத்தவரை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் தற்போதைய கூறுகள் தங்கள் இலக்குகளை அடையவில்லை. குறிப்பாக சிறு குடிசைப் பகுதிகளுக்கு, பெரிய அளவில் குடியிருப்புகளை மேம்படுத்த ஒரு புதியமுறை தேவைப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் ஒரு பகுதியாக நில உரிமையை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதேபோல், உலக வள நிறுவனம் (World Resources Institute (WRI))-இந்தியாவின் நிலையான நகரங்களுக்கான நிர்வாகத் திட்ட இயக்குநர் ஜெயா திண்டாவ், முறைசாராக் குடியிருப்புகளில் தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளாக தூய்மை இந்தியா திட்டம் (Swacch Bharat Mission) மற்றும் அம்ருத் திட்டங்களுக்கு கணிசமான பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மீள்தன்மை (Climate resilience) மற்றும் தகவமைப்பு (adaptability)

நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக நிதி இருக்கும்போது, ​​அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக திட்டமிடலில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று திண்டாவ் (Dhindaw) எடுத்துரைத்தார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் வீடுகள் வெள்ளம், வெப்பம் மற்றும் பிற பேரிடர்களை உள்ளடக்கிய திட்டமிடல் மற்றும் பயனுள்ள வடிவமைப்பின் மூலம் எதிர்க்கும் தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

மேம்பட்ட பேரிடர் மேலாண்மை (better disaster management) மற்றும் உள்கட்டமைப்பு, நிதி, மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை சமாளிக்க நகரங்களுக்கு உதவ திட்டமிடல் ஆகியவற்றில் தயார்நிலையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். கூடுதலாக, உள்கட்டமைப்புத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை போன்ற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்வதற்கும், பசுமைப் பொருளாதார நடைமுறைகளுக்கு அவர்கள் மாறுவதற்கு வசதி செய்வதற்கும் திண்டாவ் அழைப்பு விடுத்தார்.

சீர்மிகு நகரத்  திட்டம் (Smart City Mission), முடிவடையும் தருவாயில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நகர்ப்புற பின்னடைவு பணியாக மறுபெயரிடப்படும் என்று உன்னி கூறினார். இந்தப் பணியில் வெப்ப செயல் திட்டங்கள், காலநிலை செயல் திட்டங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை இலக்காகக் கொண்ட பிற நகரங்கள் சார்ந்த திட்டங்கள் இருக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நிலையான போக்குவரத்து

இ-ரிக்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள் போன்ற இடைநிலை பொதுப் போக்குவரத்து (Intermediate public transport (IPT) முறைகளுடன் இந்திய நகரங்கள் பல்வேறு வகையான வெகுஜன போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இன்ஃப்ராவிஷன் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான ஜெகன் ஷா (Jagan Shah) வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை தனியார் வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைத்து, சாலை நெரிசலைக் குறைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10-ஆண்டு கால ஆட்சியில், இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் கணினி கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும் நிறைவடைந்தால், உலகின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் கணினிக் கட்டமைப்பை  இந்தியா பெற உள்ளது.

நகராட்சி நிதி சீர்திருத்தங்கள்

கடந்த பத்தாண்டுகளில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (Union ministry of housing and urban affairs (MoHUA)) இந்தத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த அதிக வரவு செலவுத் திட்டங்களில் கூட, வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கான உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவை போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனக்ரஹாவில் பொது நிதியை நிர்வகிக்கும் அபுலா சிங், நகரங்களுக்கு அதிக முதலீடுகள் தேவை என்று வலியுறுத்தினார். திரட்டப்பட்ட கடன்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற புதுமையான நிதி முறைகளை இன்னும் முழுமையாக ஆராய அவர் பரிந்துரைத்தார்.

தற்போதைய சூழலில் நிதி திரட்டுவதில் உள்ள சவாலை அவர் எடுத்துரைத்தார் மற்றும் கிடைக்கக்கூடிய நிதியை திறம்பட பயன்படுத்துவதற்கும் செலவினங்களுக்கு பொறுப்புணர்வை உறுதிசெய்வதற்கும் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

"பத்திரங்கள் நகராட்சி நிதிகளுக்கான நிதி ஆரோக்கியத்தின் குறிகாட்டிகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கு நிதி திரட்ட நம்பகமான வழியாகும். நிதிக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல், நிதித் துறை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சந்தை சார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை நிதியை மேம்படுத்த முடியும்” என்று ஜெகன் ஷா  கூறுகிறார். 

நகர்ப்புற வாழ்வாதாரம்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த இரண்டு தவணைகளாக பிரதான் மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மநிர்பர் நிதி (PM Street Vendor's AtmaNirbhar Nidhi (PM SVANidhi)) போன்ற மைக்ரோ-க்ரெடிட் முயற்சிகள் உட்பட தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (National Urban Livelihood Mission (NULM)) திட்டத்தின் கீழ் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மார்ச் 2024-ல் இடைநிறுத்தப்பட்டது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ((National Urban Livelihood Mission (NULM-2.0)) செயல்படுத்துவதில் அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும் என்று உன்னி பரிந்துரைத்தார். இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மிகவும் பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடங்கள் (shelters for urban homeless (SUH)) போன்ற பிற துணைத் திட்டங்களின் செலவில் பிரதான் மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மநிர்பர் நிதியில் கவனம் செலுத்துவதற்கு எதிராக அவர் எச்சரித்தார். வீடற்ற நபர்களை சிறப்பாக ஆதரிப்பதற்காக நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களை,  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தில்  ஒருங்கிணைக்க உன்னி பரிந்துரைத்தார்.

Share:

விவசாயத்திற்கான 10 அம்ச செயல்திட்டம் -ராம் கௌண்டின்யா

 வேளாண் ஆராய்ச்சியில் முதலீடுகளை அதிகரித்தல், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு உந்துதல் ஆகியவை முக்கியமானவை.

விளைச்சல் தேக்கம், காலநிலை மாற்றம், நீர் மற்றும் மண் போன்ற இயற்கை வளங்கள் குறைந்து வருவது மற்றும் லாபமற்ற விவசாயம் போன்ற கடுமையான சவால்களை வேளாண்துறை எதிர்கொள்கிறது. இத்துறையை மாற்றியமைக்க விவசாயம் ஆண்டுக்கு 6-8% வளர்ச்சியை சீராகக் கொண்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடுகளை ஆதரிக்கும் லட்சிய செயல்திட்டங்கள் தேவைப்படுகிறது. புதிய அரசாங்கம் முதல் 100 நாட்களுக்கு பின்வரும் செயல் திட்டத்தை பரிசீலிக்கலாம்.

பண்ணைக் குழுமம் 

முதலாவதாக, ஜிஎஸ்டி கவுன்சிலைப் போலவே தேசிய வேளாண் மேம்பாட்டு குழுமத்தையும் (National Agricultural Development Council (NADC)) உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தக் குழுமத்தில் மத்திய, மாநில வேளாண் அமைச்சகங்கள், நிதி ஆயோக், அரசியல் கட்சிகள், ஆராய்ச்சியாளர்கள், விவசாய அமைப்புகள், தொழில்துறை, கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பலர் இருப்பார்கள். இந்தக் குழுமம் ஒரு தேசிய விவசாய இராஜதந்திரத்தை செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு பொறிமுறையுடன் உருவாக்க முடியும்.

இரண்டாவதாக, வேளாண் ஆராய்ச்சிக்கான முதலீடுகளை தற்போதைய விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.61% முதல் 1% வரை அதிகரிப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உயர் முன்னுரிமை ஆராய்ச்சித் திட்டங்கள் அடுத்த 3-5 ஆண்டுகளில் பொது மற்றும் தனியார் துறைகளின் தீவிர முதலீட்டுடன் செயல்படுத்தப்பட வேண்டும். விதைகள் மற்றும் நடவுப் பொருட்கள் மூலம் பயிர் மேம்பாடு விவசாயத்தின் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியமாக இருக்கும்.

ஆராய்ச்சி அடிப்படையிலான விதை நிறுவனங்களை தேசிய ஆராய்ச்சி பதிவேடு (national research register) மூலம் அங்கீகரிப்பதற்கும், முன்னுரிமை பகுதிகளில் முதலீடு செய்வதற்கும் அவர்களின் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு கொள்கைக் கட்டமைப்பு முக்கியமானதாக இருக்கும்.

மூன்றாவதாக, விதைகள், பயிர்ப் பாதுகாப்பு இரசாயனங்கள், பயிர் ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் உயிரியல் தயாரிப்புகளில் நவீன, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கவும் உதவும். பருத்தி, எண்ணெய் வித்துக்கள், மக்காச்சோளம், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முக்கியமான பயிர்களில் தெளிவானத் தொழில்நுட்ப வரிசைப்படுத்தல் திட்டம் தேவை.

நான்காவதாக, விவசாயத்தில் தற்போதைய அனைத்து மானியங்களையும் நிலையான நடைமுறைகளுக்கு மறுபயன்பாடு செய்வது முக்கியம். வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களை (agro-ecological zones) அடிப்படையாகக் கொண்ட பயிர் பல்வகைப்படுத்தல், நீர் மற்றும் மண் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் காலநிலை-நெகிழ்திறன் பயிர்வகைகளை பயிரிடுதல் ஆகியவை இதில் அடங்கும். கார்பன் வரவுகள் மற்றும் பசுமை கடன் அமைப்புகள் லாபகரமான ஏற்புக்கு டிஜிட்டல் தளங்கள் மூலம் விவசாயிகளுக்கு அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். விவசாயத்தின் கரிமத் தடயத்தின் எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தணிக்க ஊக்கத்தொகை அவசியம்.

ஐந்தாவதாக, தேவைக்கேற்ப விவசாயத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு முக்கியமான பயிருக்கும் விரிவான தீர்வுகள் தேவை. பல்வேறு ஆதாரங்களில் இருந்து தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யும் குறிப்பிட்டப் பயிர்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கொள்கையைப் பயன்படுத்தும் தொழில்கள் உட்பட பல்வேறு குழுக்களுடன் கலந்துரையாடல் வழிகாட்டுதலை அளிக்கும்.

பண்ணை போட்டித்திறன்

ஆறாவதாக, இந்திய விவசாயிகளின் உலகளாவிய போட்டித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும். போட்டியிடும் நாடுகளில் உள்ளவர்களுக்கு எதிராக நமது செலவு மற்றும் தர அளவுருக்களை வரைபடமாக்குவது தொழில்நுட்பம், வேளாண் நடைமுறைகள், உள்ளீட்டு மேலாண்மை மற்றும் தொழிலாளர் செலவுகள் மூலம் அதிக செலவுகள் மற்றும் குறைந்த தரச் சிக்கல்களைத் தீர்க்க உதவும். ஏற்றுமதிப் பயிர்களுக்கான தொகுப்புகளுக்கு தனியார் நிதியுதவி, மதிப்புச் சங்கிலி மேம்பாடு மற்றும் தரம் மற்றும் தடமறிதலை நிர்வகித்தல் ஆகியவை தேவைப்படும்.

ஏழாவதாக, சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பான்கள் மற்றும் குழாய் ரீல் அமைப்புகளுக்கான (hose reel systems) பட்ஜெட்டை தற்போதைய அளவைவிட குறைந்தது மூன்று மடங்கு அதிகரிப்பது நீர் சேமிப்பை ஊக்குவிக்கும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். நேரடி விதைப்பு நெல் (direct seeded rice) போன்ற நீர் சேமிப்பு முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை வளர்ப்பது நேரடி நன்மைகள் பரிமாற்றம் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

எட்டாவதாக, சந்தைகளை தாராளமயமாக்குவது அவசியம். சந்தையின் செயல்பாட்டை மேற்பார்வையிட ஒரு கண்காணிப்பாளரை நிறுவ வேண்டும்.

ஒன்பதாவதாக, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளிடையே திறன் மேம்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும்.

பத்தாவதாக, விவசாயிகளுக்கு ஆதரவளிக்க டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பொதுப் பொருட்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. விவசாயிகளுக்கான கடன் மற்றும் காப்பீடு உள்ளிட்ட நிதிச் சேவைகள் மற்றும் பல சேவைகளை டிஜிட்டல் முறையில் இயக்க முடியும். விவசாயிகளின் லாபம், பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கு டிஜிட்டல் வேளாண் உற்பத்தி மேலாண்மை முக்கியமாக இருக்கும். வெளியீடு அளவுருக்களை தரப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் முறையில் இயக்கப்பட்ட சிறுசேமிப்பு கிடங்குகளின் பெரிய வலையமைப்பை உருவாக்குவது ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையை உருவாக்க அரசாங்கத்திற்கு உதவும்.

நமது வேளாண்மையின் போட்டித்தன்மை மற்றும் லாபத்தை மேம்படுத்த ஒரு இயக்க அணுகுமுறை தேவைப்படுகிறது.

எழுத்தாளர் இந்திய விதை தொழில் கூட்டமைப்புக்கு ஆலோசகர் ஆவார்.

original link:https://www.thehindubusinessline.com/opinion/a-10-point-agenda-for-agriculture/article68278296.ece


Share:

மோடி 3.0-ல் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் : மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளை மீண்டும் தொடங்க ஒரு வாய்ப்பு -சி.ராஜா மோகன்

 ஜனநாயக மேற்கத்தியத்தில் மோடியின் உரையாசிரியர்கள் பெரிய இந்தியத் தேர்தல் நடைமுறையின் வெற்றிகரமான முடிவையும், இரண்டு முறை பதவிக்காலங்களுக்குப் பிறகு மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் முக்கியத்துவத்தையும் பாராட்டுகிறார்கள். மோடியின் அதிகாரம் குறைக்கப்பட்டதால், இந்தியாவின் ஜனநாயகச் சரிவு குறித்த மேற்குலகில் கவலைகள் குறைந்துள்ளதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தின் போது தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, இத்தாலியின் ஃபசானோவில் நடைபெறும் முன்னணி மேற்கத்திய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான உறவுகளை மேம்படுத்துவது மோடியின் முதல் 10 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய சாதனையாகும். ஜி-7 கூட்டத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மேற்கத்திய தலைவர்களுடன் மீண்டும் இணைக்க பிரதமருக்கு இப்போது மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.

மேற்கத்திய நாடுகளுக்கும் சீன-ரஷ்ய கூட்டணிக்கும் இடையே வளர்ந்து வரும் மோதலையும் ஜி-7 உச்சிமாநாடு எடுத்துக்காட்டும். இது இந்தியாவில் இராஜதந்திரத்திற்கு புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் அளிக்கிறது. அடுத்த மாத தொடக்கத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி கஜகஸ்தான் செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சீனாவுடனான இந்தியாவின் மோதலை நிர்வகித்தல், ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளை விரிவுபடுத்துவது ஆகியவை உக்ரைன் மோதல் மற்றும் பெய்ஜிங்கிற்கும் மேற்கு பசிபிக்கில் உள்ள அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய இராஜதந்திரத்தை சோதிக்கும். ஜி-7 உச்சிமாநாட்டிற்கு வழக்கமான அழைப்பாளராக இருக்கும் இந்தியா, "மேற்குலக கூட்டணியுடன்" (collective West) ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. உலகளவில் இந்தியா அதிக சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஜி-7 நாடுகளால் இயக்கப்படும் உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்புகளில் இந்தியாவை சேர்ப்பது மேற்கத்திய நாடுகளின் நலனுக்கு உகந்தது.

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தொகுத்து வழங்கிய ஜி-7 உச்சிமாநாடு, மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியாவின் இராஜதந்திரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மோடியுடன் வலுவான உறவை வளர்த்துக் கொண்ட ஜியோர்ஜியா மெலோனி, இந்தியாவுடன் வலுவான உறவுகளை வலியுறுத்தி வருகிறார். ஒரு குறுகிய காலத்திற்குள், ஜியோர்ஜியா மெலோனி ஒரு செல்வாக்கு மிக்க ஐரோப்பிய தலைவராக மாறியுள்ளார். இது ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் அவரது கட்சியின் சமீபத்திய வெற்றியால் ஊக்குவிக்கப்பட்டது.

ஜனநாயக மேற்கில் மோடியின் உரையாசிரியர்கள் இந்தியத் தேர்தல்களின் வெற்றிகரமான முடிவையும், மோடியின் மறுதேர்தலின் முக்கியத்துவத்தையும் பாராட்டுகிறார்கள். மோடியின் ஆணைக் குறைக்கப்பட்டதால், இந்தியாவின் ஜனநாயகச் சரிவு குறித்த மேற்குலகில் கவலைகள் குறைந்துள்ளதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இந்திய வாக்காளரின் முடிவு இந்திய ஜனநாயகத்தில் உள்ள சுய திருத்த வழிமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஜனநாயகம் அல்லாத நாடுகளுடனோ அல்லது சர்வாதிகார அரசுகளுடனோ மேற்குலகம் ஈடுபடுவதில்லை என்பதல்ல. பாகிஸ்தான் ராணுவத்துடனும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அமெரிக்காவின் நீண்டகால உறவு இதற்கு சான்று ஆகும். மோடியின் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் இந்தியாவில் மேற்குலகின் இராஜதந்திர மற்றும் பொருளாதார நலன்கள் நீடித்திருக்கும். எவ்வாறாயினும், இந்தியாவில் போட்டியானது அரசியலில் திரும்புவது இந்திய மற்றும் மேற்கத்திய நலன்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறது.

ஃபசானோ உச்சிமாநாட்டில் (Fasano summit) ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் உடனான G7-ன் ஈடுபாட்டில் இத்தாலியின் கவனம் இந்தியா மற்றும் ரோம், அத்துடன் இந்தியா மற்றும் G7-க்கு இடையிலான பிராந்திய ஈடுபாட்டிற்கான அடிப்படையை உருவாக்குகிறது. மத்திய தரைக்கடல் ஐரோப்பாவிற்கும் அரேபியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியாவின் நீட்டிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் இப்போது இந்தியாவின் கொள்கை அதிகாரத்தில் உள்ளன.

G7 உலகளாவிய தெற்குடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை இத்தாலி மறுவடிவமைக்க விரும்புகிறது. இந்தியாவும் இந்த முன்னுரிமையைப் பகிர்ந்து கொள்கிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, கென்யா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, துனிசியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களை மெலோனி அழைத்துள்ளார். வழக்கமான தலைவர்களை மீண்டும் சந்திக்கவும், புதிய தலைவர்களை சந்திக்கவும் மோடிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

G7-ன் உலகளாவிய நிர்வாக செயல்திட்டத்தில் அதிகமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு குறித்த அமர்வில் போப் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் வேகமான பயன்பாடு குறித்த விவாதத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக, போப் ஆண்டவர் 2020-ல் "AI நெறிமுறைகளுக்கான ரோம் அழைப்பு" வெளியிட்டார். செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய ஒழுங்குமுறை பற்றிய விவாதத்தில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது.

இத்தாலியில் ஜி7 செயல் திட்டத்தில் உள்ள முக்கியப் பொருட்கள் குறித்து விவாதிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிலிருந்து இந்தியா இந்த இரண்டு பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தியுள்ளது. ஒரு பெரிய எரிசக்தி நுகர்வோர் மற்றும் கோதுமை உற்பத்தியாளர் என்ற முறையில், இந்தியா இரண்டு களங்களிலும் வாதங்களை வடிவமைக்க முடியும். புலம்பெயர்வு என்பது மேற்கத்திய நாடுகளின் மற்றொரு முக்கியக் கவலையாகும். மேலும், புலம்பெயர்ந்தோரின் முக்கிய ஆதாரமாக இந்தியா பங்களிப்பு செய்யும். சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும், எல்லைகளில் திறமைக்கான வேகத்தை எளிதாக்கவும் இந்தியா வலியுறுத்துகிறது.

ஜி7 மாநாட்டில் உலகளாவிய ஆளுகை குறித்த விவாதம், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாக்கவும், சீனாவின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும் மேற்கத்திய நாடுகளை அணிதிரட்டும் முயற்சிகளால் மறைக்கப்படலாம். ஜி7 உச்சி மாநாட்டை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. எவ்வாறிருப்பினும், ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் மோதலின் விளைவுகளைத் தவிர்ப்பது இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும். ரஷ்யா மற்றும் சீனாவை கையாள்வதில் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பிளவுகள் உள்ளன. ஒவ்வொரு முக்கிய மேற்கத்திய நாட்டிற்குள்ளும் அரசியல் பிளவுகள் தீவிரமடைந்துள்ளன.

பெரும் வல்லரசு நாடுகளின் மோதல் உலகை சீர்குலைக்கும் போது, மோடியும் அவரது ஆலோசகர்களும் முக்கியத் தலைவர்களுடன் ஈடுபடவும், போட்டியிடும் கட்டாயங்களை மதிப்பிடவும், புதிய இயக்கவியலை வழிநடத்துவதில் இராஜதந்திர உத்தியை வகுக்கவும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். 20-ம் நூற்றாண்டின் பனிப்போரைப் போலல்லாமல், வல்லரசு மோதல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொருளாதார, அரசியல் மற்றும் தொழில்நுட்ப புயல்களின் விளைவுகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா இப்போது வலுவாகவும் சிறந்த நிலையிலும் உள்ளது. முக்கிய உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான இராஜதந்திரத்தை உலகம் எதிர்பார்க்கிறது.

எழுத்தாளர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தில் கற்பிக்கிறார். சர்வதேச விவகாரங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கும் பங்களிக்கின்றார்.

original link:https://indianexpress.com/article/opinion/columns/pm-modi-first-trip-abroad-west-relations-reboot-c-raja-mohan-9385420/


Share:

விஞ்ஞானிகள் நினைவுக் குறைபாடுக்கான (அல்சைமர்) புதிய மருந்தை ஆதரிக்கிறார்கள் : அதன் நன்மைகள் மற்றும் அபாயங்கள் - அனன்யா தத்

 இந்தியாவில் தற்போது 5.3 மில்லியன் மக்கள் டிமென்ஷியாவுடன் (dementia) நோயுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அல்சைமர் என்பது டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். இந்தப் பாதிப்பு 2050ஆம் ஆண்டில் 14 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டொனனெமாப் (Donanemab) அல்சைமர் நோய்க்கான புதிய சிகிச்சையாகும். இது எலி லில்லி (Eli Lilly) என்ற மருந்து தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்டது. இந்த சிகிச்சையை ஆதரிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (United States Food and Drug Administration (USFDA)) விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர். இந்த விஞ்ஞானிகளின் ஆதரவு ஒருமனதாக இருந்தது. இது மருத்துவ பயன்பாட்டிற்கு ஒரு படி நெருக்கமாக டொனனெமாப்பைக் கொண்டுவருகிறது.

"மருந்தில் மேல்குறிப்பிட்டுள்ள (labeling) அறிவுறுத்தலின்படி சரியான முறையில் நிர்வகிக்கப்படும் டோனெமாப்பின் சாத்தியமான அபாயங்கள், அல்சைமர் நோய் (Alzheimer's disease (AD)) உள்ளவர்களில் மருத்துவ அறிக்கையில் நிரூபிக்கப்பட்ட நன்மைகளைவிட அபாயங்கள் அதிகமாக உள்ளன" என்று எஃப்.டி.ஏ ஆலோசனைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரே மாதிரியான செயல்பாட்டு பொறிமுறையைக் கொண்ட இரண்டு முன்னோடி மருத்துவ முறைகள் ஏற்கனவே கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒழுங்குமுறை ஆணையம் மார்ச் மாதம் ஒரு ஆலோசனைக் குழுவைக் கூட்டியது. இந்த முடிவு நிறுவனம் உட்பட பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு அறிக்கையில், மறுஆய்வு செயல்பாட்டில் இந்தக் கட்டத்தில் FDA ஒரு ஆலோசனைக் குழுவைக் கூட்டும் என்பதை அறிய எதிர்பாராதது என்று நிறுவனம் கூறியது.

நன்மைகள் மற்றும் அபாயங்கள்

இந்த மருந்து அல்சைமர் நோயின் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே - லேசான அறிவாற்றல் குறைபாடு அல்லது லேசான டிமென்ஷியா உள்ளவர்களுக்கு. மருந்து நோயின் குறிப்பிடத்தக்க குறைவைக் காட்டுகிறது. இதன் பொருள் மருந்தை உட்கொள்ளும் ஒரு நபர் தங்கள் செயல்பாடுகளை நீண்டநேரம் தக்கவைத்துக் கொள்கின்றனர்.

மூளை இரத்தப்போக்கு மற்றும் வலிப்புத் தாக்கங்கள் போன்ற பெரும்பாலான அமிலாய்டு தொடர்பான உருக்காட்சி அசாதாரணங்கள் (amyloid-related imaging abnormalities (ARIA)) தீவிரமற்றவை என்று கண்டறியப்பட்டது. எஃப்.டி.ஏ ஆவணத்தின்படி, சிகிச்சையை நிறுத்திய பிறகு அவை தீர்க்கப்பட்டன அல்லது உறுதிப்படுத்தப்பட்டன. "முக்கிய அபாயங்களை பொருத்தமான முகப்புச் சீட்டு மற்றும் மருத்துவக் கண்காணிப்பு மூலம் குறைக்க முடியும், மேலும் பிந்தைய அங்கீகார ஆய்வுகள் மூலம் மேலும் வகைப்படுத்தப்படலாம். ஒட்டுமொத்தமாக, தீவிரத்தன்மை மற்றும் நோயைக் குணப்படுத்தும் சிகிச்சைகளுக்கான வரையறுக்கப்பட்ட விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளுக்கு மருத்துவரீதியாக அர்த்தமுள்ள சிகிச்சை நன்மையை டோனெமாப் வழங்குகிறது" என்று ஆவணம் கூறியது.

டோனனேமாப் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது?

கடந்த மூன்று ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மற்ற இரண்டு அல்சைமர் மருந்துகளைப் போலவே, டோனனேமாப் ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி. இது அல்சைமர் நோயின் வரையறுக்கும் அம்சங்களில் ஒன்றான மூளையில் உள்ள அமிலாய்டு பீட்டா புரதங்களின் படிவுகளைக் குணப்படுத்துகிறது.

ஆரம்பகால நினைவுக் குறைபாடு நோயாளிகளில் நினைவாற்றல் வீழ்ச்சியை டோனெமாப் 35.1 வாரங்களில் 76% குறைக்கிறது என்று 3ம் கட்ட ஆய்வு காட்டுகிறது. இதன் விளைவாக 1,736 நோயாளிகளுடன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் அவர்களில் 860 பேர் அமிலாய்டு பீட்டா பிளேக் அழிக்கப்படும் வரை ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் மருந்தை உட்கொண்டனர்.

மருந்தின் முக்கியப் பாதகமான விளைவு மூளையில் வீக்கம் அல்லது இரத்தப்போக்கு ஆகும், அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை. டோனனேமாப் கொடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களில் 24% பேருக்கு மூளை வீக்கம் இருப்பதாகவும், 19.7% பேருக்கு மூளை இரத்தப்போக்கு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் சிகிச்சை தொடர்பான மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

திருப்புமுனையின் முக்கியத்துவம்

குருகிராமின் பராஸ் ஹெல்த்தின் நரம்பியல் தலைவரும், டெல்லி எய்ம்ஸில் நரம்பியல் துறையின் முன்னாள் தலைவருமான டாக்டர் எம்.வி.பத்மா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், உலகில் அல்சைமர் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இது போன்ற மருந்துகள் தேவைப்படுகின்றன. அதிக மக்கள்தொகைக் கொண்ட வளரும் நாடுகளில், அல்சைமர் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்."

இந்தியாவில் தற்போது 5.3 மில்லியன் மக்கள் டிமென்ஷியாவுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அல்சைமர் என்பது டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். இந்தப் பாதிப்பு 2050ஆம் ஆண்டில் 14 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், இந்த "பயங்கரமான" விலையுயர்ந்த மருந்துகளை அவை கொண்டு வரும் நன்மைகளுக்கு எதிராக மதிப்பீடு செய்யவேண்டும் என்று டாக்டர் ஸ்ரீவஸ்தவா கூறினார். "சிகிச்சை ஒரு நபருக்கு இன்னும் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் போது, அவர்கள் சிகிச்சையைப் பெறுவதற்கு தங்கள் வீட்டை விற்க வேண்டுமா? இந்த விஷயங்களை முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், "இது மிகவும் தேவையான கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த ஒன்றுக்கு வழிவகுக்கும்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

ஒப்புதல் தாமதம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிகிச்சைத் தொடர்பான தரவுகளை மேலும் புரிந்து கொள்ள அமெரிக்கக் கட்டுப்பாட்டாளர் விரும்புவதாக எலி லில்லிக்குத் தெரிவிக்கப்பட்டது. இது பயன்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட வீரியம் நெறிமுறையின் தாக்கங்களை உள்ளடக்கியது.

சோதனையின்போது, அமிலாய்டு பீட்டா பிளேக்குகளை ஒரு குறிப்பிட்ட அளவிலான குணமடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டது. மூளையில் அமிலாய்ட் பீட்டா புரதத்தின் இந்தப் படிவு அல்சைமர் நோயின் தனிச்சிறப்பாகும். இந்த வரையறுக்கப்பட்ட வீரியம் டோனெமாப்பை பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட மற்ற இரண்டு சிகிச்சைகளிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாகும்.

ஈசாய் மற்றும் பயோஜென் உருவாக்கிய முதல் மருந்தான அடுகானுமாப் (aducanumab)-க்கான ஒப்புதல் செயல்முறையை அமெரிக்க காங்கிரஸ் குழு ஆய்வு செய்த பின்னர் இந்த மருந்தின் கூடுதல் ஆய்வு வந்தது. இந்த செயல்முறையில் "முறைகேடுகள் நிறைந்தது" என்று குழு கண்டறிந்தது. மருந்து தயாரிப்பாளருடன் வழக்கத்திற்கு மாறாக நெருக்கமான ஒத்துழைப்பை அவர்கள் கண்டறிந்தனர், மேலும் மருத்துவப் பரிசோதனை ரத்து செய்யப்பட்ட பின்னரும் அந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. நினைவாற்றல் வீழ்ச்சி மற்றும் செயல்பாட்டுக் குறைபாட்டை மருந்து திறம்பட குறைக்க வாய்ப்பில்லை என்று ஒரு அறிக்கை சுட்டிக்காட்டிய பின்னர் நிறுவனம் அதை ரத்து செய்தது. இதற்கு எதிராக நிபுணர்குழு பரிந்துரை செய்த போதிலும் இது நடந்தது.

இரண்டாவது மருந்து, lecanemab, Biogen மூலம் உருவாக்கப்பட்டது. மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் வரவேற்றனர். ஏனென்றால், லெகனெமாப் நினைவாற்றல் வீழ்ச்சியின் ஒரு குறைவைக் காட்டியது. இது குறைவான பக்க விளைவுகளையும் கொண்டிருந்தது. தற்போது பயனுள்ள சிகிச்சை இல்லாத நோய்க்கு இது சரியான மருந்தாகும்.

Share:

ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுமதி அளித்தது ஏன்? அதனால் என்ன நடக்கும்?

 ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கல்விக்கான சேர்க்கைகான அமர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முடிவு, பல்கலைக்கழகங்கள் ஜூலை/ஆகஸ்ட் மற்றும் மீண்டும் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை மாணவர்களை சேர்க்க அனுமதிக்கிறது. இது இளங்கலை (undergraduate), முதுகலை (postgraduate) மற்றும் முனைவர் பட்டங்களுக்குப் (PhD programmes) பொருந்தும்.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆண்டுக்கு இரண்டு முறை ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை பல்கலைக்கழகங்களுக்கு கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் அடிப்படையில் அவர்களின் சேர்க்கை சுழற்சிகளை தீர்மானிக்க நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இந்த புதிய முறையை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை.

தற்போதுள்ள செயல்முறை, மாற்றம்

மாணவர்கள் இப்போது ஆண்டுக்கு ஒருமுறை, ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கும் ஒரே கல்வி அமர்வில் அனுமதிக்கப்படுகிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முடிவானது, ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி திட்டங்களுக்கு இரண்டு சுழற்சிகளில் மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும்.

வருடத்திற்கு இரண்டு முறை மாணவர்களை அனுமதிக்கும் சில நாடுகளில் உள்ள சேர்க்கை சுழற்சிகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற அனுமதிக்கலாம். மேலும், இந்த வெவ்வேறு சேர்க்கை சுழற்சிகளில் கிடைக்கும் படிப்புகளும் மாறுபடலாம். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இலையுதிர் காலத்திலும் (ஆகஸ்ட்/செப்டம்பரில் தொடங்கும் அமர்வு) மற்றும் வசந்த காலத்திலும் (ஜனவரியில் தொடங்கும் அமர்வு) 'சேர்க்கைகளைக்' கொண்டுள்ளன.

காரணம் மற்றும் பயனாளிகள்

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஏற்கனவே திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் திட்டங்களுக்கான இரு ஆண்டு சேர்க்கை செயல்முறையை முயற்சித்துள்ளது. மேலும் "ஒரு வருடத்தில் இரண்டாவது கல்வி அமர்வுக்கு அனுமதிப்பது கிட்டத்தட்ட 500,000 மாணவர்கள் ஒரு முழு கல்வியாண்டு வரை காத்திருக்காமல் தங்கள் பட்டப்படிப்புகளில் சேர உதவியது" என்று கண்டறிந்துள்ளது. .

இது, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கருத்துப்படி, உடல்நலப் பிரச்சினைகள், வாரியத் தேர்வு முடிவுகள் தாமதம் அல்லது தனிப்பட்ட காரணங்களால் ஜூலை/ஆகஸ்ட் அமர்வில் சேர்க்கையைத் தவறவிட்ட மாணவர்கள் பயனடையலாம். ஆண்டுக்கு இரண்டு முறை சேர்க்கை தொடங்குவதால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு ஒரு வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டியதில்லை.

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை முறையைப் பின்பற்றுகின்றன என்றும், இந்திய நிறுவனங்களில் இந்த முறை "அவர்களின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பரிமாற்றங்களை மேம்படுத்த முடியும்" என்றும் குமார் கூறினார்.

இந்த அமைப்பு ‘மொத்தப் பதிவு விகிதத்தை’ (gross enrollment ratio(GER)) அதிகரிக்கவும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். உயர்கல்விக்கு, GER என்பது உயர்கல்விக்கு தகுதியான வயதினரின் மக்கள்தொகையுடன் சேர்ந்த மாணவர்களின் விகிதமாகும்.

ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கையைத் துவங்கும் முடிவு பல்கலைக்கழகங்களிடம் உள்ளது. அவர்களின் கல்வி மற்றும் நிர்வாகக் குழுக்கள் முடிவு செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இருமுறை சேர்க்கைக்கு எந்தெந்த படிப்புகளைத் துவக்கலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இரண்டு விதமான சேர்க்கை சுழற்சிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை தீர்மானிப்பதில் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் கிடைக்கும் தன்மை முக்கியமானதாக இருக்கும்.

வரும் கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுமதித்துள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங், வரவிருக்கும் அமர்வுக்கான சேர்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று சுட்டிக்காட்டினார்.

‘இது நாங்கள் வழங்கும் ஒரு வழிவகை, இது உடனடியாக நடக்காது என்பது மிகவும் சாத்தியம். பல்கலைக்கழகங்கள் அவற்றின் உள்கட்டமைப்புத் தேவைகள், ஆசிரியத் தேவைகள் ஆகியவற்றில் வேலை செய்ய வேண்டும், பின்னர் அதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டமிட வேண்டும்’ என்று தலைவர் குமார் கூறினார்.

பல்கலைக்கழகம் இந்த செயல்முறைக்கு வாய்ப்பைத் திறந்திருப்பதாகவும், மற்றவர்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்பு சில திட்டங்களுக்கு ஆரம்பத்தில் அதை செயல்படுத்தலாம் என்றும் சிங் கூறினார்.

நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை குறித்த கேள்வியும் உள்ளது. அவை ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டால் அது "மாணவர்களுக்கு பயனளிக்கும்" என்று குமார் கூறினார்.


Share:

அரசியலமைப்பு அறநெறி : வரையறை, தோற்றம் மற்றும் சவால்கள் - மதுகர் ஷியாம்

 அரசியலமைப்பு அறநெறி என்பது ஒரு ஜனநாயக அமைப்பிற்குள் அரசியலமைப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிக்கிறது.

 அண்மையில் பணியில் இருந்த ஒரு முதலமைச்சர் கைது செய்யப்பட்டது அரசியலமைப்பு சாசன ஒழுக்கம் பற்றிய கேள்விகளை எழுப்பியது. பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சரை கைது செய்வது சட்டவிரோதமானது அல்ல என்றாலும், அரசியல் நிறுவனங்கள் நிலைநிறுத்த வேண்டிய தார்மீக நடத்தை குறித்து குடிமை சமூகத்தின் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

அரசியலமைப்பு அறநெறி எதை உள்ளடக்கியது? அது எங்கிருந்து உருவாகிறது? இந்திய அரசியலமைப்பில் இந்தக் கருத்து எவ்வாறு உள்ளார்ந்துள்ளது?

வரையறை மற்றும் தோற்றம்

அரசியலமைப்பு அறநெறி (Constitutional morality) என்பது ஜனநாயக அமைப்பில் அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதாகும். இது வெறும் நேரடியான விளக்கங்களை  அதிகமாக உள்ளடக்கியது. இறையாண்மை, சமூகநீதி மற்றும் சட்டமுடிவுகளில் சமத்துவம் போன்ற மதிப்புகளை நிலைநிறுத்துவது இதில் அடங்கும்.

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜார்ஜ் க்ரோட் (George Grote) தனது பன்னிரெண்டு தொகுதி படைப்பான கிரேக்கத்தின் வரலாறு (A History of Greece) என்று இந்த வார்த்தையை உருவாக்கினார். ஏதெனியன் அரசியலமைப்பை  (Athenian Constitution) சீர்திருத்தி, ஏதெனியன் ஜனநாயகத்தின் நிறுவனராகக் கருதப்படும் ஏதெனிய அரசியல்வாதி கிளீஸ்தீனஸ் (Cleisthenes) பற்றி க்ரோட் பேசினார்.

குடிமக்களிடையே குடிமைப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அரசியலமைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார் மற்றும் தன்னலக்குழுக்கள் மற்றும் சர்வாதிகாரிகள் வற்புறுத்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க முடியும்.

அரசியலமைப்பு அறநெறி என்பது சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடுக்கும் இடையில் சமநிலையைக் கண்டறிவதாகும். இது குடிமக்கள் அரசியலமைப்பு அதிகாரிகளுக்குக் கீழ்செயல்படுவதைக்  குறிக்கிறது. அதே நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிக்கும் சுதந்திரமும் உள்ளது.

மாறுபட்ட பார்வைகள்

நவம்பர் 4, 1948 அன்று, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசியலமைப்பு சபையில் 'வரைவு அரசியலமைப்பு' (‘The Draft Constitution’) என்ற தலைப்பில் உரையாற்றியபோது அரசியலமைப்பு அறநெறி (constitutional morality) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். நிர்வாகக் கட்டமைப்பை அரசியலமைப்பில் இணைப்பதை ஆதரித்த அவர், தனது கருத்துக்களில் க்ரோட்டேயை மேற்கோள் காட்டினார்.

அம்பேத்கர் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த வார்த்தையின் வேறு அர்த்தத்தை நன்கு அறிந்திருந்தார். இந்த முன்னேற்றங்கள் அரசியலமைப்பு தெளிவில்லாமல் இருக்கும்போது அல்லது விருப்பமான அதிகாரத்தை வழங்கும்போது முடிவுகளை எடுப்பதற்கான விதிகள் மற்றும் செயல்முறைகள் என இது அரசியலமைப்பு அறநெறியை வரையறுக்கிறது.

 ஆனால், இப்போது ​​அரசியலமைப்பு அறநெறி முக்கியமாக ஒரு அரசியலமைப்பில் உள்ள கொள்கைகளைக் குறிக்கிறது. இந்த முன்னோக்கு என்பது அரசியலமைப்பில் மறைக்கப்பட்டுள்ள தார்மீக விழுமியங்களைப் பின்பற்றுவதாகும். உதாரணமாக, பாகுபாடு காட்டாத கொள்கை நவீன அரசியலமைப்பு அறநெறியின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பில் அரசியலமைப்பு அறநெறி

அரசியலமைப்பு அறநெறி என்ற சொல் இந்திய அரசியலமைப்பில் வெளிப்படையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இது பல பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளது: 

முகவுரை (Preamble) : இது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் உள்ளிட்ட நமது ஜனநாயகத்தை ஆதரிக்கும் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது.

அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) : இது அரசு அதிகாரத்தின் தன்னிச்சையான பயன்பாட்டிற்கு எதிராக தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. பிரிவு 32-ன் கீழ் இந்த உரிமைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதிக்கிறது.

நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) : காந்திய, சோசலிச மற்றும் தாராளவாத அறிவுசார் தத்துவங்களிலிருந்து பெறப்பட்ட அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தொடர அரசுக்கு வழிகாட்டுதல்களை அவை வழங்குகின்றன.

அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) : குடிமக்களுக்கு அவர்களின் உரிமைகளுடன், தேசத்திற்கான பொறுப்புகளும் உள்ளன.

காசோலைகள் மற்றும் சமநிலைகள் (காசோலைகள் மற்றும் இருப்புக்கள்) : இது சட்டமன்ற மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் நீதித்துறை மதிப்பாய்வு மற்றும் நிர்வாகத்தின் சட்டமன்ற மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கியது.

அரசின் விருப்புரிமை அதிகாரம் மற்றும் பாகுபாடு காட்டாமை கொள்கை ஆகியவை அரசியலமைப்பு அறநெறியுடன் நெருக்கமாகத் தொடர்புடையவை.

உச்சநீதிமன்றத்தின் பார்வை

இந்திய உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் அரசியலமைப்பு அறநெறியை கடைப்பிடித்துள்ளது:

1.  2015-ஆம் ஆண்டு  கிருஷ்ணமூர்த்தி வழக்கில் (Krishnamoorthy case), நல்ல நிர்வாகத்திற்கு அரசியலமைப்பு நெறிமுறைகள் அவசியம் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.

2.  இந்திய யூனியன் எதிர். டெல்லி தேசியத் தலைநகர பிரதேச அரசு வழக்கில் (Union of India vs. Government of the NCT of Delhi), அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உயர் அதிகாரிகள் அரசியலமைப்பு அறநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

3. டெல்லி தேசியத் தலைநகர் பிரதேசம் (National Capital Territory (NCT)) அரசு வழக்கில் (2018), நீதிமன்றம் அரசியலமைப்பு அறநெறியை "இரண்டாவது அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டுடன்" (“second basic structure doctrine”) ஒப்பிட்டு, தன்னிச்சையான அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில் அதன் பங்கை வலியுறுத்தியது.

4. இதேபோல், நவ்தேஜ் சிங் ஜோஹர் & ஓர்ஸில். எதிர்.  இந்திய ஒன்றியம் (Navtej Singh Johar & Ors. vs. Union of India) பிரிவு-377, பால்புதுமையினர் (Lesbian, gay, bisexual, transgender, queer and intersex (LGBTQI)) சமூகத்தின் உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21-வது பிரிவுகளில் தனிப்பட்ட கண்ணியத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

5. அதன் தீர்ப்பில் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி மற்றும் ஏ.என்.ஆர். எதிராக யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் ஆர்.எஸ்., (Justice K S Puttaswamy and Anr. vs. Union of India and Ors) உச்சநீதிமன்றம் ஆதாரின் அரசியலமைப்புத் தன்மையை உறுதி செய்தது ஆனால் சில வரம்புகளுடன் தொடர அனுமதித்தது. அரசாங்கத்தின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் நீதிமன்றங்களின் பங்கை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

6. நீதிபதி கே.எஸ்.புட்டசாமி வழக்கில் (2018) (Justice K S Puttaswamy case (2018)), அரசியலமைப்பை மீறும் எந்தவொரு சட்டம் அல்லது நிர்வாக நடவடிக்கையையும் ரத்து செய்வதன் மூலம் அரசியலமைப்பின் நெறிமுறையை நிலைநிறுத்துவதற்கான தனது கடமையை நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.

அரசியலமைப்பு அறநெறி என்பது தனிநபர் கண்ணியத்தை நிலைநிறுத்துதல், நல்லாட்சியை ஊக்குவித்தல் மற்றும் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்துவதைத் தடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சவால்கள்

அரசியலமைப்பு ஒழுக்கத்தைப் புறக்கணிப்பது ஜனநாயக செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். சில சமீபத்திய கேள்விகள் இங்கே:

அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நெறிமுறைக் கொள்கைகளை நிலைநிறுத்தவும், தங்கள் கடமைகளுக்கு அதிக நெறிமுறையுடன் நடந்துகொள்ளவும் தனிநபர்களுக்கு எந்த அளவிற்கு கற்பிக்க முடியும்?  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல ஆளும் கட்சி காவல்துறை அல்லது விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறதா?

முழுமையான அதிகாரம் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசியலமைப்பு அறநெறி என்ற கருத்தைப் பாதிக்கிறதா? சபரிமலை கோவிலுக்குள் மாதவிடாய் பெண்கள் நுழைவது போன்ற நிகழ்வுகளில், என்ன பாரபட்சமற்ற அல்லது சமநிலையான உத்தியைப் பயன்படுத்த வேண்டும்?

பல்வேறு சூழல்களில் அரசியலமைப்பு அறநெறியைப் புரிந்துகொள்வதற்கு இத்தகைய அடிப்படை கவலைகளுக்கு பதிலளிக்க முயற்சிக்க வேண்டும்.

டாக்டர் மதுகர் ஷியாம், டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் உதவி பேராசிரியர்.

Share:

1977-ம் ஆண்டைப் போலவே 2024-ம் ஆண்டிலும் ஒரு பூகம்பம் -சி.ராம்மனோகர் ரெட்டி

 1977 ஆம் ஆண்டைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் 'இனியும் வேண்டாம்' என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கிராமப்புற, ஒதுக்கப்பட்ட மற்றும் வேலையில்லாதவர்கள் முடிவு செய்தனர்.

21 மாத கால தேசிய அவசரநிலைக்குப் பிறகு, 1977-ல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபோது, தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி செய்ததைப் போல, 2024-ல் இந்தியாவின் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளின் வலிமையைக் காட்டினார்கள்.

1977-ம் ஆண்டைப் போல, வலிமையானவர்களை பூமிக்குக் கொண்டு வந்தது நகர்ப்புற வாக்காளர்களோ, படித்தவர்களோ, நடுத்தர வர்க்கமோ அல்ல. கிராமப்புறத்தினர், விளிம்புநிலை மக்கள், வேலையற்றவர்கள்தான் பத்தாண்டுகளாக மாற்று முறையாக, "இனியும் வேண்டாம்" என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவு செய்தனர்.

CSDS-லோக்னிட்டி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

உண்மை, முடிவில் பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி (BJP) ஒடிசா போன்ற புதிய பகுதிகளில் வெற்றி பெற்றது. குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற பழைய இடங்களில் அவை ஒன்றிணைந்தன. தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அவர்கள் தங்கள் வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளனர். இது ஒரு பாடமாகப் பார்க்கப்படுகிறது. இந்த முடிவு மோடியின் வெல்ல முடியாத கட்டுக்கதையை உடைத்துவிட்டது.  இந்திரா காந்தி வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் தோற்கடிக்கப்பட்டார். தென்னகத்தில் காங்கிரஸ் தனித்து இயங்கியது. அந்த நேரத்தில் காங்கிரஸின் தோல்விதான் பெரியளவில் இருந்தது. 

1977ல் இருந்த இந்திரா காந்தியைப் போலல்லாமல், நரேந்திர மோடி பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்கத் தொடங்கினார் என்று வாட்ஸ்அப் பல்கலைக் கழகம் (WhatsApp University) இப்படி ஒப்பிட்டுப் பார்த்து தூற்றுவார்கள். 

உண்மையில் என்ன நடந்தது என்பதை உணர்வோம்.

அப்போதைய நிராகரிப்பில் இருந்து இப்போதைய சேதப்படுத்தல் வரை

1977-ம் ஆண்டு வாக்காளர், அரசியலமைப்பு ரீதியாக திணிக்கப்பட்ட சர்வாதிகாரத்தை நிராகரித்தார் என்றால், அவர் 2024-ல் நரேந்திர மோடியின் அரசியலமைப்பிற்கு முரணாக திணிக்கப்பட்ட சர்வாதிகாரத்தை சேதப்படுத்தினார். 1977-ல், இந்திய வாக்காளர்கள் இந்திராகாந்தியின் 20 அம்ச பொருளாதாரத் திட்டத்தை செயல்படுத்த மறுத்திருந்தால், அவர்கள் இப்போது "மோடியின் உத்தரவாதங்களை" செயல்படுத்த மறுத்துவிட்டனர். 1977-ல், “ரயில்கள் சரியான நேரத்தில் இயங்குகின்றன” என்ற முழக்கத்தை அவர்கள் ஏற்க மறுத்தால், 2024-ல், வந்தே பாரத்களை மக்கள் நெரிசல் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பொது இரயில்கள் என்று தவறாக ஏற்க மறுத்துவிட்டனர்.

2024 தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து வாக்காளர்களால் வெளியேற்ற முடியாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. தனக்கு எதிராக அனைத்தும் சுமையேற்றப்பட்ட ஒரு போர்க்களத்தில் அது தனது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. 1977-ல் இந்திரா காந்தியை விட மிகவும் சக்திவாய்ந்த ஒரு போர் இயந்திரத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.

நெருக்கடி நிலையின் போது, அரசியலில் எதிரிகள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் முடக்கப்பட்டன. அரிதான விதிவிலக்குகளுடன் நீதிமன்றங்கள் சரணடைந்தன. அதிகார வர்க்கம் அச்சத்தில் நடுங்கியது. வணிகங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தன. காற்றில்  பயத்தின் மணம் வீசியது. நடுத்தர வர்க்கம் எதேச்சதிகாரத்தை அது திணித்த ஒழுக்கத்திற்காக நேசித்தது.

சமீப ஆண்டுகளில் இந்தியாவைச் சூழ்ந்துள்ள எதேச்சதிகாரச் சூழலையும், நடுத்தர வர்க்கத்தினரிடையே அதற்கு கிடைத்துள்ள ஆதரவையும் இது துல்லியமாக விவரிக்கிறது. இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்திற்கும் நரேந்திர மோடியின் எதேச்சதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாடுகளைப் பற்றி ஒருவர் விவாதிக்கலாம். இந்த வேறுபாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய மற்றும் மிகவும் அச்சுறுத்தும் சக்தியை சுட்டிக்காட்டுகின்றன. நெருக்கடி நிலை காலத்தில், பயத்தின் காரணமாக கீழ்ப்படிதல் பிறந்தது. சமீப காலங்களில், மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் அரசியலமைப்பு அமைப்புகள், நீதிமன்றங்கள், ஊடகங்கள், காவல்துறை மற்றும் அதிகாரத்துவம் அவர்கள் பெற்ற அரசியல் வழிகாட்டுதல்களைத் தழுவிக் கொண்டன. மோடி அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் இயக்கத்தின் உத்தரவுகளுக்கு அணிவகுத்துச் செல்வதில் தாங்கள் சரியானதைச் செய்வதாக அவர்கள் நம்பினர்.

தேர்தல் களம்

1977-ம் ஆண்டில், நெருக்கடி நிலை அதிகாரப்பூர்வமாக அமலில் இருந்தபோது தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆயினும்கூட, தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நாட்டில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது பத்திரிகைகள் தங்கள் குரலை எழுப்பத்தொடங்கின. ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மக்களவைத் தேர்தல்களை நடத்தியபோது இந்திய தேர்தல் ஆணையம் ஓரளவு சுதந்திரத்தைக் காட்டியது. 1977 தேர்தலை முற்றிலும் 'நியாயமானது' (fair) என்று நீங்கள் அழைக்க முடியாது. ஆனால், எதிர்க்கட்சிகளும் வாக்காளர்களும் அதை ஒரு மோதல் போட்டியாக மாற்ற முடியும் என்று அறிந்திருந்தனர்.

2024-ல் அப்படி இல்லை. தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பலவீனமான அரசியல்வாதிகள் மிரட்டப்பட்டனர் மற்றும் கட்சி மாறிடுமாறு அச்சுறுத்தப்பட்டன. மேலும், பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகள் தற்செயலாக தொடக்கத்திலேயே முடக்கப்பட்டன. ஊடகங்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பாஜகவை மேலும் கட்டமைத்து, "இம்முறை 400ஐ தாண்டியது" (Abki Baar 400 Paar) முழக்கத்தை பரப்பின. ஊடகங்கள் எதையாவது கேள்வி கேட்டால், அது எதிர்க்கட்சிகளுடையது. தங்கள் ஆன்மாக்களை விற்ற அறிவிப்பாளர்கள், வாழ்நாள் முழுவதும் முடிசூட்டப்பட வேண்டிய வெல்ல முடியாத பேரரசரின் பிம்பத்தை உருவாக்க முயன்றனர். முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து பாஜகவால் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்தது.

"இம்முறை 400ஐத் தாண்டி" (Abki Baar 400 Paar)

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாக்காளர்களைப் போலவே இந்த ஆண்டும் வாக்காளர்கள் இந்தத் தேர்தல் முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சதிகாரம் மற்றும் வெறுப்பால் பிளவுபட்ட சமூகம் ஆகியவற்றுக்கு இடையே அவர்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தேசப் புகழின் தரிசனங்களால் அவர்கள் திசைதிருப்பப்படுவார்களா என்பதையும் அவர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவர்கள் தீர்க்கமாக செயல்பட ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்தனர். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, பாஜக-வுக்கு அதிக பெரும்பான்மையை மட்டும் மறுப்பதற்காக அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இந்த மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் அரசியல் தோல்வியின் அளவை அங்கீகரிப்பதும், கௌரவிப்பதும் முக்கியம். "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது முறை" (கூட்டணியில் இருந்தாலும், பாஜக பெரும்பான்மையுடன் இல்லாவிட்டாலும்) அல்லது "மோடி 3.0" (இது கூட்டணி ஆதரவை நம்பியுள்ளது) போன்ற உறுதிமொழிகளால் நாம் சளைத்திருக்கக் கூடாது. ஒரு அரசியல் கட்சி சமீபத்தில் தனது பலத்தில் நம்பிக்கையுடனும், நீண்டகால மரபு என்று பெருமையடித்தும் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது. பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால், ஒரு மதிப்புமிக்க பாடம் கற்றுக்கொண்டது.

அனைத்து அரசியலமைப்பு அமைப்புகளும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நேர்மையாக இருந்திருந்தால், எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவதில் இருந்து நிறைவேற்று அதிகாரம் அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், உண்மையான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் முடிவு 1977 இல் இருந்ததைப் போலவே முழுமையானதாக இருந்திருக்கும்.

வாக்காளரின் வெற்றி

இந்திய வாக்காளர்கள் அடுத்த சுற்று தேர்தல்களில் வேலையை முடிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற, அவர்கள் முதலில் தாங்கள் வெற்றியடைந்ததின் மகத்தான பெருமையைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அதனால்தான் நரேந்திர மோடியும், பாஜகவும் எந்த அளவுக்கு குறைந்திருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினராக குறைக்கப்பட்டாலும் நரேந்திர மோடியும், பாஜகவும் விடுவதாக இல்லை. அவர்கள் பதவியில் நீடிக்கின்றனர், அவர்களிடம் பண பலம் உள்ளது, அதிகாரத்தின் அனைத்து சக்தியையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். மேலும், அவர்களுடன் பெருநிறுவன கூட்டணி உள்ளது. அவர்கள் தங்கள் செயல்பாட்டு முறையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஜனநாயகத்தை மதிக்காதது அவர்களது இரண்டாவது இயல்பு என்பதை நாம் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கண்டிருக்கிறோம். ஆனால், தோல்வியை சந்தித்த பின்னர், அவர்கள் இப்போது பலவீனமாக நிற்கிறார்கள். 1977-க்குப் பிறகு மிகவும் பின்விளைவான தேர்தல்களுக்குப் பிறகு ஒருவர் பலம்பெற வேண்டும். 2024-ல் நாம் "400 தொகுதி" உடன் முடிந்திருந்தால், வெளிப்பட்டிருக்கும் எதேச்சதிகாரத்தை திரும்பப் பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு இருந்திருக்கும். நாடாளுமன்றத்திலும், தெருக்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கு வாக்காளர்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கும் உள்ளது என்பதை அரசியலமைப்பு அமைப்புகளுக்கு அவர்கள் கோட்டிட்டுக் காட்டினர். இந்திய வாக்காளர்களிடம் இதைவிட அதிகமாக நாம் கேட்டிருக்க முடியாது.

சி. ராம்மனோகர் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்.

originallink:https://www.thehindu.com/opinion/lead/an-earthquake-in-2024-as-it-was-in-1977/article68282385.ece


Share:

வலது திருப்பம் : ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து . . .

 ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகள் எதிர்பாராத வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே, அவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸ் குடியரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்சின் தேசிய சட்டமன்றத்தைக் கலைத்தார். மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சி, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரி தேசியப் பேரணிக் கட்சியிடம் வியக்கத்தக்க வகையில் தோல்வியை சந்தித்ததாக முடிவுகள் காட்டுகின்றன. இந்த முடிவு அவரை ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட வழிவகுத்தது. ஜூன் 30 மற்றும் ஜூலை 7ல் புதிய தேர்தல் தேதிகளை அறிவித்தார். இந்தத் தேர்தல் மூலம் தனது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்கும் என்று மக்ரோன் நம்புகிறார். இருப்பினும், இது அவருக்கு மற்றொரு இழப்பை ஏற்படுத்தக்கூடும், இது அவரது ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும், இது 2027 வரை நீடிக்கும்.

இந்த எண்ணிக்கை தற்காலிகமானது 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பலவற்றில் இன்னும் வக்குகள் எண்ணப்பட்டு வருகிறது என்றாலும், இது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 720 இடங்களில் மத்தியவாதக் கட்சி கூட்டணிகளுக்கு பெரும்பான்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் வலது மற்றும் தீவிர தேசியவாத கட்சிகளுக்கு ஒரு ஊக்கத்தை அளித்துள்ளன. இது ஆளும் கட்சிகளுக்கு ஒரு பின்னடைவை அளித்துள்ளது, அதேவேளையில் இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் தீவிர வலதுசாரி "இத்தாலியின் சகோதரர்கள்" கட்சிக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதைத்தவிர, பசுமைக் கட்சிகளுக்கும் ஒரு பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் வாக்கு எண்ணிக்கையை விட, மீன்டும் ஆட்சியைப் பிடிக்க ஒரு கூட்டணியை உருவாக்கி வருகின்ற நிலையில், அதிதீவிர வலதுசாரி கட்சிகளுக்கான ஆதரவு அதிகரிப்புக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகள்தான் ஆய்வு செய்யப்பட வேண்டும். குடியேற்றம், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை மற்றும் இழப்புகள் சுற்றுச்சூழல் சீர்திருத்த  பின்னடைவு ஆகியவை இதில் அடங்கும்.

ஐரோப்பிய மக்கள் கட்சியின் பிரச்சார உரையில் – அது நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய தனிக்கட்சியாக உள்ளது – இந்த தேர்தல்களில் "ஐரோப்பிய மதிப்புகள்" பணயத்தில் இருப்பதாக அவர் எச்சரித்தார். "நமது அமைதியான மற்றும் ஐக்கியப்பட்ட ஐரோப்பா முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஜனரஞ்சகவாதிகளால், தேசியவாதிகளால், வாய்வீச்சாளர்களால் —அதிவலதில் இருந்து வந்தாலும் சரி அல்லது அதிஇடதில் இருந்தாக வந்தாலும் சரி— சவால் செய்யப்பட்டு வருகிறது," என்றார். ஐரோப்பாவிற்குள் இருந்து வரும் சவால்கள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகைப் பொறுத்தவரை, ஐரோப்பிய வாக்குகள் கொள்கை திசையின் அடிப்படையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படியிருந்தும், புதுடில்லி இன்னும் நெருக்கமாக கவனிக்க வேண்டியது அவசியம். குடியேற்றம் குறித்த கவலைகள் பரவலாக உள்ளன, மேலும் இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக வேலைகளை எளிதாக்குவதற்காக இயக்கம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து சிறந்த விதிமுறைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் அதே வேளையில், இந்தியர்களின் சட்டவிரோதமாக குடியேறியவர்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக நாடாக இருந்து வருகிறது, மேலும் ஐரோப்பாவில் இப்போது நிலைப்பாட்டில் எந்தவொரு பாதுகாப்புவாத மாற்றமும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தடம்புரளச் செய்யும். உக்ரைன் மற்றும் இஸ்ரேல் உட்பட மோதல்கள் மீது ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குள் பிளவுகள் புதுடெல்லியை நேரடியாக பாதிக்காது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவுபடல் மற்றும் ஒற்றுமையின்மையின் ஒரு பெரிய போக்கு சர்வதேச ஒழுங்கைப் பாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சிமாநாடு இப்போது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது இந்த அனைத்து பிரச்சினைகளிலும் இந்தியா நெருக்கமான ஈடுபாட்டை நாடும்.

ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இத்தாலியின் அபுலியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தனது ஐரோப்பிய நண்பர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்க உள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, எதிர்பாராத முடிவை ஏற்படுத்திய இந்தியத் தேர்தலையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.

originallink: https://www.thehindu.com/opinion/editorial/right-turn-on-the-european-parliament-elections/article68280799.ece



Share: