தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட உதாரணங்களைப் பின்பற்ற வேண்டும்

 புதுப்பிக்கப்பட்டது : - வாக்கெடுப்பு தரவு விடுபட்டுள்ள சிக்கலைச் சரி செய்வது எளிது. தேர்தல் ஆணையம் (Election Commission (EC))  முந்தைய நடைமுறைக்கு திரும்ப வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். தேர்தல் நாளில் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அடுத்த நாளாவது செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். இந்த சந்திப்புகள் அனைத்து சந்தேகத்தையும் தீர்த்துவிடும்.


வாக்குப்பதிவு சதவீத புள்ளி விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையில் இருந்து மாறுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தேர்தல்களில், தேர்தல் ஆணையம் வழக்கமாக ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் இரவு 7 மணிக்குள் தற்காலிக வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடும். இறுதி எண்ணிக்கை சில நாட்களுக்குள் உறுதிப்படுத்தப்படும். ஆனால், அண்மையில் நடந்த மக்களவை தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை மாற்றியது.


நடந்து முடிந்த மக்களவை  தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களுக்குப் பிறகு இரவு 9 மணியளவில் தேர்தல் ஆணையம்  செய்திக்குறிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 19 அன்று, முதல் கட்ட வாக்குப்பதிவின் முடிவில், மாலை 7 மணி அளவில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தோராயமான வாக்குப்பதிவு சதவீதத்தை காட்டுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் இரவு 8.49 மணிக்கு மற்றொரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. மாலை 7 மணி நிலவரப்படி 60.96% வாக்குகள் பதிவாகியிருந்தன, ஆனால் மாநில வாரியாக வெளியிடவில்லை. 


இறுதி வாக்காளர் எண்ணிக்கை விவரம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. முதல் கட்டம் முடிந்து 10 நாட்கள் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்து மூன்று நாட்கள் வரை அவை கிடைக்கவில்லை. ஏப்ரல் 30 அன்று, இந்த செய்தித்தாள், தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி வாக்காளர் வாக்கு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்று தெரிவித்தது. அறிக்கையைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இறுதிப் புள்ளி விவரங்களை வெளியிட்டது. முதல் கட்ட தேர்தலில் 66.14% மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் 60% மற்றும் 60.96% ஆரம்ப அறிக்கைகளை விட ஆறு சதவீத புள்ளிகள் அதிகம்.


இந்த தாமதங்கள் தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்குகிறது. இவை வாக்குப்பதிவு செயல்பாட்டில் வாக்காளர்களின் நம்பிக்கையை குறைக்கிறது.  இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மரியாதைக்குரிய அரசியலமைப்பு அதிகாரமாகும். தேர்தல் ஆணையம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தி வருகிறது. இருப்பினும், தரவு வெளியீட்டின் நேரத்தை மதிப்பிடும்போது விமர்சகர்கள் இந்த நற்பெயரை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும், தேர்தல் ஆணையம் அதன் நடவடிக்கைகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். அது நிறுவப்பட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


வாக்கெடுப்பு தரவு காணாமல் போன சிக்கலை சரி செய்வது எளிது. தேர்தல் ஆணையம் அதன் பழைய முறைக்குத் திரும்பி, தேர்தல் நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளோ, எந்தவொரு சந்தேகத்தையும் தெளிவுபடுத்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம். தேர்தல் ஆணையம் வாக்காளர் அளவு மற்றும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பற்றிய தெளிவான தரவுகளையும் வழங்க வேண்டும். இந்தத் தரவை எவ்வாறு சேகரித்து சரிபார்க்கிறது என்பதை தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு முறை (electronic voting system (EVM)) பாதுகாப்பானது என்பதை எப்படி உறுதி செய்வது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கியுள்ளது.




Original article:

Share:

இம்பாலில் குழப்பம், மாநில அரசு பின்வாங்குகிறது -HT தலையங்கம்

 மணிப்பூரில் இனக்கலவரம் நடைபெற்று ஒரு வருடம் ஆகிறது. மாநிலத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை, மேலும் மாநிலம் முழுவதும் இராணுவ கட்டுபட்டில்தான் உள்ளது.


இனக்கலவரம் வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதம் மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் மெய்ட்டி இனக் குழுக்களை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது, இது பல்வேறு குழுக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மோதல்கள் முக்கியமாக இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தேயி இன மக்களுக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 225 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர், அரசின் ஆயுதக் கிடங்குகளை கலவரக்காரர்கள் சூறையாடினர் குடியிருப்புகளும் அழிக்கப்பட்டது இதனால் மக்கள் பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.


ஆண்டு முழுவதும், போரட்டக்காரர்கள், அரசு மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர், கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. காவல்துறை மற்றும் இராணுவத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படவில்லை. சமீபத்தில், பாதுகாப்புப் படையினர் கூட தாக்குதல்களை எதிர்கொண்டனர், கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.


மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, பிளவுபடுத்தும் கருத்துக்களால் பதற்றத்தை அதிகப்படுத்துவதாக முதல்வர் என் பிரேன் சிங் விமர்சிக்கப்பட்டார். மெய்தேய் சமூகத்தினரின் குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர் அந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், நிர்வாகத்தை மறுசீரமைப்பதில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

மாநிலத்திற்கு அடுத்து என்ன நடக்கும்? இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் ஆகலாம். மெய்தேயி தீவிரவாதிகளால் வழிநடத்தப்படும் அரம்பாய் தெங்கோல் என்ற குழு கிட்டத்தட்ட ஒரு குட்டி அரசாங்கம் போல சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. ஜனவரி மாதம், இம்பாலில் உள்ள காங்லா கோட்டையில் மெய்தேய் எம்.எல்.ஏக்கள் அங்கு வரவழைக்கப்பட்டு குழுவால் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர். மாநில அரசியலில் இந்தக் குழு எந்தளவுக்கு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது சிவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியையும், மணிப்பூரில் அதிகரித்து வரும் இராணுவ கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. கடந்த காலங்களில் போராளிக் குழுக்கள் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து அவர்களை கொலை செய்த காலத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது, மேலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்  (Armed Forces (Special) Powers Act) கீழ் மாநில அரசு செயல்படுகிறது.


அரசானது வலுவாக செயல்படாததால், இராணுவமயமாக்கல் அதிகரிக்கும். மியான்மரில் உள்ள பிரச்சினைகளும் குழப்பத்தை அதிகரிக்கின்றன. மேலும் அகதிகள் ஆயுதங்களுடன் உள்ளே வருகிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது தேசிய அடையாளத்தை விட இனக் குழுக்களின் மீது அதிக அக்கறை உள்ளது.


இனம் மற்றும் அச்சத்திற்கு அப்பாற்பட்ட அரசியலைப் பற்றி சிந்திக்க மணிப்பூர் மாநிலத்திற்க்கு ஒரு புதிய வழி தேவைப்படுகிறது. இதில் ஒன்றிய அரசு விரைவாக செயல்பட வேண்டும். இல்லையெனில், கலவரம் மற்றும் வன்முறை அதிகரிக்கும், இவற்றை கட்டுபடுத்துவது கடினமாக இருக்கும்.




Original article:

Share:

லத்தீன் அமெரிக்காவில் வரலாறு காணாத டெங்கு அதிகரிப்புக்கு என்ன காரணம்? -அலிந்த் சௌஹான்

 சில நாடுகளில் உச்சபட்ச காலத்திற்கு முன்பே டெங்குவின் அதிகரிப்பு காணப்பட்டாலும், மற்ற நாடுகளில் முதல் முறையாக கடுமையான தாக்கங்களைப் பதிவு செய்யப்படுகின்றன. 


லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் டெங்குகளின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 2024-ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இடையில், இந்த நாடுகளில் 5.9 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 2023 இல் 4.4 மில்லியனுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. சில நாடுகளில் உச்சபட்ச காலத்திற்கு முன்பே டெங்குவின் எழுச்சியைக் கண்டாலும், மற்ற நாடுகள் முதல் முறையாக கடுமையான தாக்கங்களைப் பதிவு செய்கின்றன.


இந்த நோயின் தாக்கத்திற்குப் பின்னால் இருக்கும் வெளிப்படையான காரணம் உயர்ந்து வரும் உலக வெப்பநிலை. இது கொசுக்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அவை கடித்தால் மக்களிடையே டெங்கு நோய் பரவுகின்றது. டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கக்கூடிய வலுவான தடுப்பூசியை உலகம் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. இது பெரியளவில் நிலைமையை மோசமாக்குகிறது.


டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் மரணத்திற்கு வழிவகுக்காது, ஆனால் சில சமயங்களில், இது கடுமையான மூட்டு வலி, இரத்தப்போக்கு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம். இது "முடக்கும் காய்ச்சல்" (breakdown fever) என்று அழைக்கப்படுகிறது.


லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது, காலநிலை மாற்றத்தின் பங்கு என்ன மற்றும் டெங்கு தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சிகள் எவ்வளவு தூரம் வந்துள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.


என்ன நடக்கிறது?


டெங்கு காய்ச்சலால் பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் ஜனவரி முதல் ஏப்ரல் 23 வரை 4.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்கள் தொகையில் சுமார் 1.8% ஆகும். மேலும், இந்த நோயால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒரே ஆண்டில் டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு சாதனை படைத்துள்ளது.


இதன் எதிரொலியாக, பிரேசிலில் உள்ள 26 மாநிலங்களும் அவசர நிலையை அறிவித்தன. வழக்கமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு உதவ இராணுவம் பிரேசிலியாவில் கள மருத்துவமனைகளை (field hospitals) அமைத்தது. தி எகனாமிஸ்ட் கருத்துப்படி, கொசு விரட்டிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன, மேலும் எப்போது வரும் என்று எங்களுக்குத் தெரியாது.


பெரு (Peru) மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவிலும் (Puerto Rico) டெங்கு காய்ச்சல் வழக்குகள் அதிகரித்து வருவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோவில் (Puerto Rico) 2023 ஆம் ஆண்டில் 1,293 உடன் ஒப்பிடும்போது, மார்ச் இறுதிக்குள் 549 டெங்கு பாதிப்புகள் இருந்தன. பெருவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 33 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, ஜனவரி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் 135,000 சந்தேகத்திற்குரிய வழக்குகள் மற்றும் 117 இறப்புகள் காணப்பட்டன. அர்ஜென்டினாவிலும் டெங்கு பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.


மத்திய அமெரிக்க நாடுகளும் மெக்சிகோவும் பொதுவாக ஆண்டின் இறுதிக்குள் டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பதை அனுபவிக்கின்றன. இப்போது, அவர்கள் ஏற்கனவே பரவுவதைப் பார்க்கிறார்கள். கூடுதலாக, உருகுவே மற்றும் சிலி போன்ற நாடுகள் இதற்கு முன் தீவிரமாக பாதிக்கப்படவில்லை. இப்போது இந்த நோயால் கடுமையான தாக்கத்தை எதிர்கொள்கின்றன.


மார்ச் மாதம் செய்தியாளர் சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியான பான் அமெரிக்கன் சுகாதார நிறுவன (Pan American Health Organization) இயக்குநர் ஜர்பாஸ் பார்போசா, இந்த ஆண்டு பிரேசிலில் மட்டுமல்ல, பராகுவே, அர்ஜென்டினா மற்றும் பல டெங்கு பாதிப்புகள் இருப்பதாகக் கூறினார். உருகுவே போன்ற பிற நாடுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு நூறு ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு காணப்படவில்லை.


இது ஏன் நடக்கிறது?


அதிகரித்து வரும் வெப்பநிலையால் டெங்குவால் பாதிப்படையும் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் காலநிலை நிலை 2022 அறிக்கையின்படி (Latin America and the Caribbean 2022 report), இப்பகுதி ஒரு பத்தாண்டிற்கு 0.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பமடைந்துள்ளது. இந்த வெப்பநிலையின் அதிகரிப்பு மிகவும் தீவிரமான வானிலை மற்றும் அதிக கொசுக்களுக்கு வழிவகுத்தது.


பெரும்பாலான கொசு இனங்கள் கடுமையான வெப்பநிலையில் செழித்து வளர்கின்றன மற்றும் புவி வெப்பமடைதலுடன் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் உட்பட அவை இனப்பெருக்கம் செய்து உயிர்வாழக்கூடிய பகுதிகள் அதிகரித்துள்ளன. அதிக வெப்பநிலை கொசுக்கள் செயலில் இருக்கும் காலத்தின் நீளத்தை நீட்டித்து, வெக்டார் மூலம் பரவும் நோய்கள் (vector-borne diseases) பரவுவதற்கு நீண்ட காலத்தை அனுமதிக்கிறது.


தி எகனாமிஸ்ட் அறிக்கையின்படி, குளிர்காலத்தில் வெப்பநிலை முன்பு போல் 15 டிகிரி செல்சியஸுக்குக் குறையாததால், இத்தகைய வெப்பநிலையில் இறக்கும் நிலையில் உள்ள கொசுக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இதன் பொருள் வைரஸ்களைச் சுமந்து செல்லும் கொசுக்கள் அதிகமாக உள்ளன. மேலும் வசந்த காலத்தில் வெப்பநிலை உயரும் போது அவை வேகமாகப் பெருகும்.


2023 எல் நினோ (El Niño) தொடங்கிய போது பிரச்சனை மோசமாகியது. இந்த வானிலை அமைப்பு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் உள்ள மேற்பரப்பு நீரை வழக்கத்தை விட வெப்பமாக்கியது. இதனால், அப்பகுதியில் வெப்பம் மேலும் அதிகரித்துள்ளது.


பலத்த மழை மற்றும் புயல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய அதிக இடங்களை உருவாக்குகின்றன. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. வெள்ளம் மற்றும் உயரும் கடல் மட்டங்களும் அவை செழிக்க உதவுகின்றன. மாறாக, வறட்சியால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக, தண்ணீர் தொட்டிகள் திகழ்கின்றன.


விரைவான நகரமயமாக்கலும் ஒரு பிரச்சினையாக உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் குடிசைப்பகுதிகளில், கொசுக்கள் முட்டையிடும் இடத்தில் நிறைய தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல வீடுகளில் தண்ணீரை சேகரிக்கும் தட்டையான கூரைகள் உள்ளன. மேலும், சரியான குழாய்கள் இல்லாத மக்கள் திறந்த கொள்கலன்களில் தண்ணீரை சேமித்து வைக்கின்றனர். சீரற்ற குப்பை சேகரிப்பால், குப்பைகள் குவிந்து, கொசுக்களை ஈர்க்கிறது என்று எகனாமிஸ்ட் அறிக்கை கூறுகிறது.


டெங்கு தடுப்பூசிகள் பற்றி …


லத்தீன் அமெரிக்காவும், கரீபியனும் இந்த டெங்கு நோயால் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. டெங்கு தடுப்பூசியின் தேவையை அவசரமாக்குகின்றன. ஆனால், டெங்குக்கான தடுப்பூசி இன்னும் உருவாக்கப்படவில்லை. பெண் ஏடிஸ் கொசுக்களின் கடி மூலம் டெங்கு பரவுகிறது. மேலும், நான்கு வெவ்வேறு வகையான வைரஸ்கள் உள்ளன. இது விஞ்ஞானிகளுக்கு கடினமாக்குகிறது.


புதுடெல்லியில் உள்ள சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி மைய (International Centre for Genetic Engineering and Biotechnology (ICGEB)) வளாகத்தில் உள்ள பல தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தைச் (Multi Vaccines Development Programme) சேர்ந்த விராந்தர் எஸ் சவுகான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இது, அனைத்து மாற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை தயாரிப்பதே முக்கிய சவாலாக இருக்கும்.


சில தடுப்பூசிகள் அனைத்து மாற்று விதமான நோய்களிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், அவை விலை உயர்ந்தவை அல்லது சில வரம்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஜப்பானிய தடுப்பூசியான Qdenga, ஐரோப்பாவில் ஒரு தடுப்பூசிக்கு 115 டாலராகவும், இந்தோனேசியாவில் 40 டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரேசில் ஒரு பெரிய கொள்முதலுக்கு ஒரு தடுப்பூசிக்கு $19 என்ற குறைந்த விலையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் பிரேசிலின் 220 மில்லியன் மக்களில் 3.3 மில்லியன் மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.


பிப்ரவரியில், Qdengaவை உருவாக்கும் Takeda Pharmaceuticals மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிப்பாளரான Biological E ஆகியவை தடுப்பூசிக்கான அணுகலை விரைவுபடுத்துவதற்கான ஒரு இராஜதந்திர கூட்டாண்மையை உருவாக்கியுள்ளதாக அறிவித்தன. ஆண்டுக்கு 50 மில்லியன் தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்யும் என்று Biological E கூறியது. இந்த ஒப்பந்தம் தடுப்பூசியின் விலையைக் குறைக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் 2030 க்கு முன் Qdenga சந்தைப்படுத்துவதற்கு Biological E ஒழுங்குமுறைக்கான ஒப்புதல் பெற வாய்ப்பில்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற மற்றொரு தடுப்பூசி சனோஃபி பாஸ்டியரால் (Sanofi Pasteur-பிரெஞ்சு பன்னாட்டு மருந்து நிறுவனமான சனோஃபியின் தடுப்பூசிப் பிரிவாகும்) தயாரிக்கப்படுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போட முடியும்.


மிக சமீபத்தில், பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய டெங்குக்கான தடுப்பூசி சோதனையில் வலுவான தற்காப்பு உறுதியானதைக் கண்டறிந்தனர். இது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களால் (National Institutes of Health(NIH)) தயாரிக்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் தடுப்பூசி (single shot vaccine) ஆகும். இது நான்கு டெங்கு வைரஸ் மாற்றுகளின் பலவீனமான வடிவங்களைப் பயன்படுத்துகிறது. பிரேசிலில் உள்ள இன்ஸ்டிடியூட்டோ புட்டான்டன் (Instituto Butantan) இதை உருவாக்கும். ஆனால், இது சில ஆண்டுகளுக்கு பிரேசிலில் பரவலாகக் கிடைக்காது.


மார்ச் ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான Serum Institute of India, National Institutes of Health(NIH) ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் டெங்கு தடுப்பூசி தயாரிப்பிலும் செயல்பட்டு வருகிறது.




Original article:

Share:

அவசரநிலை, முதல் காங்கிரஸ் அல்லாத அரசு மற்றும் பொய்யாக்கப்பட்ட வாக்குறுதி - ஷியாம்லால் யாதவ்

 இந்தியாவின் 969 மில்லியன் வாக்காளர்களில், 18.4 மில்லியனுக்கும் அதிகமானோர் 18 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்தக் கட்டுரை குறிப்பாக இளம் வாசகர்களுக்காக மக்களவைத் தேர்தலைப் பற்றியது.


1977 மக்களவைத் தேர்தல் இந்தியாவுக்கு அதன் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தைக் கொண்டுவந்தது. குஜராத்தில் மாணவர் இயக்கம் (students’ movement in Gujarat) மற்றும் 1971 போருக்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழு புரட்சிக்கான அழைப்பு விடுத்ததால் இந்திரா காந்தியின் புகழ் குறைந்தது. 1975 ஆம் ஆண்டில் தேர்தல் மோசடி காரணமாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரது 1971 தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தபோது, அவர் அவசரநிலையை (Emergency) அறிவித்தார். பின்னர், அவசர நிலை முடிவுக்கு வந்த பிறகு, தேர்தலில் இந்திரா காந்தி கடுமையான தோல்வியைச் சந்தித்தார். இதில், மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.


வளாகங்களில் அமைதியின்மை


டிசம்பர் 1973 இல், அகமதாபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் விடுதி உணவகக் கட்டணத்தை உயர்த்துவதை எதிர்த்தனர். இந்த போராட்டம் குஜராத்திலும் அதற்கு அடுத்துள்ள மற்ற வளாகங்களுக்கும் விரைவாக பரவியது. இது தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்று, பொருளாதார சிக்கல்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக 'நவநிர்மான் அந்தோலன்'  என்ற பரந்த இயக்கத்தை உருவாக்கியது.

மார்ச் 1974 இல், பீகார் மாணவர்கள் 72 வயதான சோசலிசத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உதவியை நாடினர். தங்கள் இயக்கத்தை அவரே வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். முதல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1974 பிப்ரவரியில் குஜராத் முதல்வர் சிமன்பாய் படேலை பதவி விலகுமாறு குஜராத் இளைஞர்கள் எவ்வாறு கட்டாயப்படுத்தினர் என்பதைக் கவனித்தார். இது ஒரு புதிய வகையான அரசியலுக்கான தனது பார்வையுடன் இணைந்து, மாணவர்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை அவர் கண்டார்.


ஜூன் 5, 1974 அன்று, பாட்னாவில் நடந்த ஒரு பேரணியில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது புகழ்பெற்ற "சம்பூர்ண கிராந்தி" (Sampoorna Kranti) அல்லது முழுப் புரட்சிக்கான (Total Revolution) அறைகூவலை விடுத்தார். இது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவுசார், கல்வி மற்றும் ஆன்மீக அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான மாற்றத்தை குறிப்பிட்டது.


இந்திராவின் தகுதி நீக்கம்


1971-ல் ரேபரேலி தொகுதி தேர்தலில் ராஜ் நாராயணனை எதிர்த்து போட்டியிட்ட இந்திரா காந்தி 1,11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் மனமுடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தார். ஜூன் 12, 1975 அன்று, உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா (Jagmohan Lal Sinha), ராஜ் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவித்து, இந்திராவை மக்களவையிலிருந்து நீக்கினார்.


அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை இந்திரா ஏற்கவில்லை. எனவே, இந்திரா காந்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது ஜூன் 24, 1975 அன்று, நீதிபதி வி ஆர் கிருஷ்ண ஐயர் அவரை தகுதி நீக்கத்தை உறுதி செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தீர்ப்புவரும்வரை அவர் பதவியில் இருக்க முடியும் என்று கூறினார்.


அவசர கால மாதங்கள்


ஜூன் 25, 1975 அன்று, ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது (Fakhruddin Ali Ahmed) பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவசரநிலையை அறிவித்தார். போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு (war or external aggression) அல்லது உள்நாட்டு குழப்பங்களால் (internal disturbance) தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக அரசியலமைப்பின் பிரிவு 352(1)-யை மேற்கோள் காட்டினார். பின்னர், 44-வது திருத்தச்சட்டம் 1978 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது, இது "உள்நாட்டு குழப்பம்" (internal disturbance) என்பதற்கு பதிலாக "ஆயுதக் கிளர்ச்சி" (armed rebellion) என்று மாற்றப்பட்டது.


அவசரநிலைப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள், கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act (MISA)) மற்றும் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் (Defence of India Rules) கைது செய்யப்பட்டனர். இதனால், பத்திரிகைகளால் சுதந்திரமாக பேச முடியவில்லை. ஊடகவியலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி, 21 மாத அவசர நிலையின் போது முக்கிய பங்கு வகித்தார். இதில், 20 அம்ச திட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டது. இந்த திட்டத்தில் சஞ்சய் காந்தி ஐந்து அம்ச அறிக்கைகளுடன் தனது சொந்த திட்டத்தை வைத்திருந்தார். இது கருத்தடையை கட்டாயப்படுத்தியது. இதனால், நாடு முழுவதும் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தியது.


டெல்லியில் ஜனதா பிரச்சாரம். ஜனதா கட்சியின் தொடக்கம்


1976 தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. புதிய சட்டம் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களுடன் தற்போதுள்ள மக்களவையின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18, 1977 அன்று திடீரென மக்களவையை கலைக்குமாறு இந்திரா காந்தி திடீரென குடியர்சுத் தலைவரிடம் கூறினார். பின்னர், ஆறாவது மக்களவைத் தேர்தலானது மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.


அந்த நேரத்தில், இந்தியாவில் ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 18 மாநிலக் கட்சிகள் இருந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மொரார்ஜி தேசாயின் காங்கிரஸ் (O), சவுத்ரி சரண் சிங்கின் பாரதிய லோக் தளம் (Bharatiya Lok Dal (BLD)), அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல் கே அத்வானியின் பாரதிய ஜன சங்கம் (Bharatiya Jana Sangh (BJS), precursor of the BJP)) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (Socialist Party) ஆகிய நான்கு தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை (Janata Party) உருவாக்கின.


இந்திய தேர்தல் ஆணையம், ஜனதா கட்சியை அங்கீகரிக்காததால், அதன் கூட்டணி கட்சிகள் பாரதிய லோக் தளத்தின் (Bharatiya Lok Dal (BLD)) சின்னமான 'சக்கரத்திற்குள் ஏர்க்கலப்பை' (Haldhar within Wheel) சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவு செய்தன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ்(ஓ) வின் 'ஒரு பெண்ணால் அரசு இயக்கப்படுகிறது' (Charkha being plied by a Woman) என்ற தலைப்பில் ஜனதா கட்சி போட்டியிட்டது.


அவசர நிலையை ஆதரித்ததால் ஜனதா கட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேரவில்லை. ஆனால், ஜனதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தொகுதி மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது.


வரலாற்று சிறப்புமிக்க தேர்தலும் முடிவுகளும்


1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளைப் பிரித்த பிறகு, புதிய மக்களவையானது 543 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. மார்ச் 16 முதல் 20, 1977 வரை வாக்குப்பதிவு நடைபெற்றதுடன், உடனே வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கியது. இதில், 32.11 கோடி வாக்காளர்களில் 60.53% பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக கேரளாவில் 79.21 சதவீதமும், ஒரிசாவில் 44.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களை சேதப்படுத்திய சில சம்பவங்களும் இதில் பதிவாகியுள்ளன.


பாரதிய லோக் தளம் (BLD) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் ஜனதா கட்சி 298 இடங்களுடன் அதிக இடங்களை வென்றது. மே 11, 1977 அன்று, தேர்தல் ஆணையம் ஜனதாவை ஒரு தேசிய கட்சியாக அங்கீகரித்தது. பாரதிய லோக் தளத்தின் சின்னத்தை ஏற்றுக்கொண்டது. ஜூலை 16, 1969 அன்று துணைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மொரார்ஜி தேசாய் தனது 81 வயதில், மார்ச் 24, 1977 அன்று பிரதமராக பதவியேற்றார்.


காங்கிரஸ் 154 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும், இந்தியப் பொதுவுடமைக் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. ரேபரேலி தொகுதியில் ராஜ் நாராயணிடம் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். வட இந்தியாவில் காங்கிரஸானது இழப்புகளைச் சந்தித்தது. ஆனால், தெற்கில் அதற்கான இடங்களை தக்கவைத்துக்கொண்டது. இதில், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், அத்துடன் மகாராஷ்டிரா மற்றும் அசாமிலும் வென்றது.


சூரத்தில் மொராஜி தேசாய் வெற்றி பெற்றார். அவரது உள்துறை அமைச்சர் சரண் சிங் பாக்பத்தில் வெற்றி பெற்றார். உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் எச் என் பகுகுணா லக்னோவில் வெற்றி பெற்றார். புதுதில்லியில் வாஜ்பாய் வெற்றி பெற்றார். பல்ராம்பூரில் நானாஜி தேஷ்முக் வெற்றி பெற்றார். ஜக்ஜீவன் ராம் பிப்ரவரி 3, 1977 இல் காங்கிரஸில் இருந்து விலகி, நந்தினி சத்பதியுடன் ஜனநாயக காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர், அவர் சசரத்தில் இருந்து பாரதிய லோக் தளத்தின் (BLD) தொகுதியில் வெற்றி பெற்றார்.


நிறைவேற்றப்படாத வாக்குறுதி


ஜனதா ஒரு புதிய யோசனையையும், நம்பிக்கையையும் அளித்தது. ஆனால் அது பல முரண்பாடுகளை எதிர்கொண்டது. ஜூலை 1978 இல், மொரார்ஜி தேசாயின் தலைமைக்கு சுமார் ஒரு வருடம் கழித்து, சரண் சிங் விலகினார். பின்னர், ஜனவரி 1979 இல் நிதியமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் வந்தார். ஆனால் இது நீடிக்கவில்லை. அரசியலானது விரைவாக மாறியது. 1978 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அசாம்கரில் மோஷினா கித்வாயின் வெற்றி காங்கிரஸ் கட்சி திரும்புவதைக் குறிக்கிறது. 1978 நவம்பரில் சிக்மகளூரில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். காங்கிரஸ் சரண்சிங்கை மீண்டும் ராஜினாமா செய்யத் தூண்டி, மதச்சார்பற்ற ஜனதா கட்சியை உருவாக்கியது.


காங்கிரசின் ஆதரவுடன், மொரஜி தேசாய்க்குப் பதிலாக சரண் சிங் ஜூலை 28, 1979 அன்று பிரதமரானார். ஆனால், ஒரு மாதத்திற்குள் காங்கிரஸ் அவரது அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றதால் அவருக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.


இந்திய ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சோதனை தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தேசம் மீண்டும் தேர்தலுக்குச் சென்றது.




Original article:

Share:

விக்சித் பாரத்தில் (Viksit Bharat), 'விக்சித்' (Viksit) என்றால் என்ன? -ராதா கோயங்கா

 மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மாறும் வகையில் சொந்த மாதிரியை நாம் உருவாக்க வேண்டும்.


ஒவ்வொரு தேர்தல் ஆண்டிலும், வளர்ச்சியடைந்த பாரதம் 2047 (Viksit Bharat) ஒரு புதிய திட்டத்தை முன்வைக்கிறது. 100-வது சுதந்திர தினமான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இலக்கு உற்சாகமாகத் தெரிகிறது. ஆனால், இந்த பெரிய கனவு காணும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.


ஒரு கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் ஆரம்பிக்கலாம்: வளர்ச்சி என்றால் என்ன? நம்மில் பலர் அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டை கற்பனை செய்கிறோம். இந்த நாடுகளில் உயர்மட்ட உள்கட்டமைப்பு, மேம்பட்ட நகர்ப்புற வசதிகள் மற்றும் உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகல் உள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் தலைமைத்துவத்திற்கு தக்கவைத்ததன் மூலம் தொழிற்புரட்சியின் போது இந்த வளர்ச்சி பற்றிய சிந்தனை தோன்றியது. தீவிரமான உற்பத்தி பொருட்களை மேலும் அணுகக்கூடியதாக ஆக்கியது, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது.


ஆனால் தொழிற்புரட்சிக்கு முன்பு என்ன நடந்தது? வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் இருந்தனவா? இந்தியாவின் ஹரப்பா நாகரிகம் (Harappan Civilisation) ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாகும். வரலாற்று ரீதியாக, இந்தியா பணக்கார மற்றும் புத்திசாலித்தனமான நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவின் வளர்ச்சி குறித்த நமது தற்போதைய கருத்துக்கு சவால் விடும் வகையில் இந்திய மற்றும் வெளிநாட்டு வரலாற்றின் பின்னணிகளிலும் உள்ளனவா? 


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணிகள் உள்ளன. அதில், ஒரு முக்கியமான காரணி நகர்ப்புற திட்டமிடலாகும். கிமு 3000 ஆம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் போது இந்தியா முதல் திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றை உருவாக்கியது. இந்த  நகரத்தில், கழிவுநீர் கால்வாய் அமைப்பையும், அதை மூடி வைத்திருந்தனர். சுவாரஸ்யமாக, இன்று இந்தியாவின் பல நகரங்களில் இது இல்லை. கடந்த காலத்தில், இந்தியா மிகவும் செல்வந்தர்களாக இருந்தது. முகலாய பேரரசர் அக்பர் ஆட்சி செய்தபோது, இந்தியா உலகளவில் பணக்கார நாடாக கருதப்பட்டது. சூரிய ஒளி மற்றும் காற்று போன்ற இயற்கை கூறுகளின் ஆற்றல் ஓட்டத்தை மையமாகக் கொண்ட பண்டைய அறிவியலான "வாஸ்து" (vaastu)-ஐப் பின்பற்றி இந்தியாவில் வீடுகள் கட்டப்பட்டன. காலையில் சூரிய ஒளியில் இருந்து வரும் ஆற்றலுக்காக படுக்கைகள் கிழக்கு நோக்கி இருந்தன. தீ விபத்தில் இருந்து தப்பிக்க காற்று குறைவாக இருக்கும் இடங்களில் சமையலறைகள் அமைக்கப்பட்டன. பாரம்பரியமான இந்திய வீடுகளில் பெரும்பாலும் முற்றங்கள் இருந்தன. இவை வசதியான காலநிலையை உருவாக்க துல்லியமான கணக்கீடுகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டன. இதனால், வீடுகளில் முற்றங்கள் குடும்ப தொடர்புகளை ஊக்குவித்தன. இந்திய வீடுகள் வழக்கமாக மண்ணால் கட்டப்பட்டன. அவை கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்க வழிவகுக்கும். இந்தியாவில் பாரம்பரிய நகர்ப்புற திட்டமிடல் சிறந்த ஞானத்தைக் காட்டியது. இந்தியாவை செல்வத்தில் மட்டுமல்ல, அறிவிலும் வளமாக்கியது.


வளர்ந்து வரும் நமது மக்கள்தொகைக்கு ஏற்ப உயரமான கண்ணாடி மற்றும் எஃகு கட்டிடங்களைக் கொண்ட மேற்கு நகர்ப்புறங்களைப் போல நமது நகரங்களை மாற்றும்போது நமது பாரம்பரிய ஞானத்தை நாம் பேணுகிறோமா? மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான (slum) தாராவி உள்ளது. இது, மற்ற குடிசைப் பகுதி திட்டங்களுடன் மறுவடிவமைப்புக்கு தயாராக உள்ளது. அருகருகே சிறிய குடிசைகளில் வசிக்கும் குடிசைவாசிகள், உயரமான கட்டிடங்களில் பெரிய இடங்களைப் பெறுவார்கள். அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளும், நிரந்தர வீட்டுப் பாதுகாப்பும் கிடைத்தால், அவர்கள் அதிக இடத்திற்கு செல்ல விரும்புவார்களா? இந்த பகுதியிலிருந்து நகர்வது என்பது அவர்களின் சமூகத்துடனான நெருக்கத்தை இழப்பதையும், இயற்கையை எளிதாக அணுகுவதையும் குறிக்கும். இயற்கையிலிருந்து தனிமைப்படுத்தப்படுவது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற மன மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய நகர்ப்புற திட்டமிடல் முறைகளில் உயரமான கட்டிடங்கள் தேவைப்படாமல் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கையாள ஒரு வழி இருக்கிறதா?


சவுதி அரேபியா சமீபத்தில் பாலைவனத்தில் ஒரு எதிர்கால நகரமான NEOM-க்கான திட்டங்களை வெளிப்படுத்தியது. NEOM ஒரு மேம்பட்ட நகரமாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பூங்காக்கள் உட்பட அனைத்தும் ஒரு கட்டமைப்புக்குள் கட்டப்பட்டுள்ளன. அத்தகைய நகரத்தை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும். சவுதி அரேபியாவில் 34.2 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு ஏற்கனவே சொந்த வீடுகள் உள்ளன. NEOM யாருக்கு சேவை செய்யும்: உள்ளூர் மக்களுக்கா அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கா? உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகல் மற்றும் வளர்ச்சியின் பாரம்பரிய கருத்துக்கள் என்று வரும்போது, அவர்களின் குடிமக்கள் ஏற்கனவே அதைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் NEOM அல்லது ஒரு சுதந்திர சமூகத்தை விரும்புவார்களா? சவுதி அரேபியாவின் உண்மையான வளர்ச்சி என்ன? இந்த கேள்விகள் சவுதி அரசாங்கத்தை அதன் NEOM திட்டங்களை குறைக்க தூண்டியிருக்கலாம். மறுபுறம், பூட்டானின் முன்னேற்றமானது பொருள் வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடவில்லை. ஆனால், மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness(GNH)) மூலம் அளவிடுகிறது. சவூதி அரேபியாவும் பூட்டானும் வளர்ச்சிக்கான வெவ்வேறு அணுகுமுறைகளை எடுத்துக்காட்டுகின்றன.


வளர்ச்சியடைந்த பாரதம் (viksit bharat) பற்றி நாம் பேசும்போது, "விக்சித்" என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வளர்ச்சியடைய விரும்புகிறோம், ஆனால் நாம் அதை ஆழமாக பரிசீலிக்கிறோமா? வளர்ச்சி பற்றி நாம் விவாதிக்கும் போது நமது வரலாற்றையும் ஏனைய நாடுகளையும் ஆராய வேண்டும். மகிழ்ச்சியான, செழிப்பான சமுதாயத்தை உருவாக்குவதும், வளர்ச்சியடைந்த பாரதத்தை (viksit bharat) உலகளாவிய முன்மாதிரியாக மாற்றுவதும் நம் நோக்கமாக உள்ளது.


எழுத்தாளர் ஆர்பிஜி அறக்கட்டளையின் இயக்குநராகவும், பெஹ்லே அக்ஷர், தி ஹெரிடேஜ் திட்டத்தின் நிறுவனராகவும் உள்ளார்




Original article:

Share:

இந்தியாவின் சுகாதார அமைப்பிற்கு நற்செய்தி -வினோத் கே.பால்

 சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அதிக பணம் செலவழித்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் சுகாதாரத்திற்காக குறைவாக  பணம் செலவழிக்கிறார்கள்.


2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையானது (National Health Policy (NHP)) நியாயமான விலையில் நல்ல சுகாதாரத்தை அனைவரும் எளிதாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய சுகாதாரக் கணக்குகள் (National Health Accounts (NHA)) போன்ற சமீபத்திய தரவு, சுகாதாரத்திற்காக அரசாங்கம் அதிக செலவு (government health expenditure (GHE)) செய்து வருகிறது என்பதை எடுத்துக்  காட்டுகிறது. 2014-15 மற்றும் 2021-22 க்கு இடையில், நாட்டின் மொத்த செல்வத்தின் ஒரு பகுதியாக சுகாதார சேவைக்கான அரசாங்கச் செலவு 63% அதிகரித்துள்ளது. இது 2014-15 இல் 1.13% ஆக இருந்தது. 2019-20 இல் 1.35% ஆகவும், பின்னர் 2020-21 இல் 1.60% ஆகவும், இறுதியாக 2021-22 இல் 1.84% ஆகவும் உயர்ந்தது.


ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கான அரசு செலவினம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக, 2014-15 மற்றும் 2019-20 க்கு இடையில், ஒரு நபருக்கு ரூ.1,108 லிருந்து ரூ.2,014 ஆக உயர்ந்தது. 2020-21ல் ஒரு நபருக்கு அரசு செலவினம் ரூ.2,322 ஆகவும், 2021-22ல் ரூ.3,156 ஆகவும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இது 2014-15 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அரசு செலவினம்  மூன்று மடங்கு  உயர்ந்துள்ளது .


சமீப ஆண்டுகளில், அரசு நிதியுதவி பெறும் காப்பீட்டுக்கான செலவினம் அதிகரித்துள்ளது. இது 2013-14ல் ரூ.4,757 கோடியிலிருந்து 2021-22ல் ரூ.20,771 கோடியாக 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PMJAY)) மற்றும் மாநில சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதிலிருந்து உருவாகிறது. சுகாதாரத்துக்கான சமூகப் பாதுகாப்பு செலவினங்களின் பகுதியும் அதிகரித்துள்ளது. இதில் அரசாங்க நிதியுதவி பெற்ற சுகாதார காப்பீடு, அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு திருப்பிச் செலுத்துதல் மற்றும் சமூக சுகாதார காப்பீட்டு திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்த பங்கு 2014-15 ஆம் ஆண்டில் 5.7 சதவீதத்திலிருந்து 2019-20 ஆம் ஆண்டில் மொத்த சுகாதார செலவினங்களில் 9.3 சதவீதமாக அதிகரித்தது.


ஈடுசெய்யும் செலவு (Out-of-Pocket Expenditure (OOPE)) படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2014-15 மற்றும் 2019-20 க்கு இடையில், இந்த செலவினம் மொத்த சுகாதார செலவினங்களில் 62.6% லிருந்து 47.1% ஆக குறைந்துள்ளது. இது 2020-21ல் 44.4% ஆகவும், 2021-22ல் 39.4% ஆகவும் குறைந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கூட, சுகாதாரத் தேவைகள் அதிகமாக இருந்தபோதும், வெளி செலவுகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், (AB-PMJAY) போன்ற திட்டங்கள். குறிப்பாக, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு, கடன் வாங்காமலோ அல்லது பொருட்களை விற்காமலோ மருத்துவ சிகிச்சைகளை  பெற மக்களுக்கு  உதவி புரிந்து வருகிறது.

 

தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (National Sample Survey) 2017-18, உள்நோயாளிகள் பராமரிப்பு மற்றும் பிரசவங்களுக்கு அதிகமான மக்கள் அரசு வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த அதிகரிப்பு இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், மேம்படுத்தப்பட்ட அரசு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சேவைகள் மற்றும் பிரதான் மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டங்களினால்  (Pradhan Mantri National Dialysis Programme) இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. 2016 முதல், இந்த திட்டம் 2.59 கோடி இலவச சிறுநீரக சுத்திகரிப்புகளை செய்துள்ளது. இந்த திட்டங்கள் ஈடுசெய்யும் செலவை  குறைக்க உதவுகிறது. 


மருந்துகள் மற்றும் நோயறிதல் செலவுகள் அதிகம். ஆனால் இப்போது, ​​ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய மையங்களான ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்களில் (Ayushman Arogya Mandirs) இப்போது இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், பல குடும்பங்கள் பணத்தை மிச்சப்படுத்துகின்றனர். துணை மையங்களில் (sub centre AAMs), 105 மருந்துகள் மற்றும் 14 பரிசோதனைகளையும் இலவசமாக பெறலாம். ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்களில் (primary health centre AAMs) 172 மருந்துகள் மற்றும் 63 பரிசோதனைகள் வரை இலவசமாகப் பெறலாம். ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்கள் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து இலவசமாக சிகிச்சையளிக்க உதவுகின்றன. இது மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும் உதவும்.


இன்று, 10,000 க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திராக்களில் (Jan Aushadhi Kendras), 1,900 க்கும் மேற்பட்ட தரமான பொதுவான மருந்தகங்கள் (generic medicines) கிட்டத்தட்ட 300 அறுவை சிகிச்சை பொருட்களை குறைந்த விலையில் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்துவருகின்றனர். 2014 முதல், இந்த திட்டம் நுகர்வோர்களுக்கு ரூ.28,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. மேலும், கரோனரி உறை குழாய்கள் (coronary stents), எலும்பு மூட்டு மாற்று சிகிச்சைகள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துகளின் விலை கட்டுப்பாடு மூலம் மக்களுக்கு ஆண்டுக்கு 27,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்திற்கான அரசு செலவினம் அதிகரித்து வருவதாக பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020-21 நிதியாண்டில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product (G.D.P)) 1.6% ஆகவும், 2021-22 நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடு 2.2% ஆகவும் இருந்தது. இந்த கணக்கெடுப்புகளில், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் போன்ற, சுகாதாரத்தின் முக்கியமான சமூக நிர்ணயம் செய்யும் செலவுகளும் அடங்கும்.


பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 2019 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் தொடங்கியபோது, கிராமப்புற வீடுகளில் 17 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் விநியோகம் இருந்தது. இப்போது, 76 சதவீத வீடுகளில் குழாய் நீர் உள்ளது. ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீரை வழங்குவதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் நான்கு லட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் (world health organisation (WHO)) அறிக்கை கூறுகிறது. மேலும்,  தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission (SBM)) 2014 மற்றும் அக்டோபர் 2019 க்கு இடையில், வயிற்றுப்போக்கு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 300,000 இறப்பைத் தடுத்து, கிராமப்புற திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடக இந்தியாவை (open defecation free (ODF)) மாற்றியுள்ளது. 


பொது சுகாதார செலவினம் அதிகரித்து வருகிறது, மேலும் ஈடுசெய்யும் செலவு (OOPE) சீராக குறைந்து வருகிறது. சுகாதாரப் பராமரிப்பில் அரசாங்க சுகாதார செலவினங்கள் (government health expenditure (GHE)) மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பங்கும் அதிகரித்து வருகிறது. இது மிகவும் மேம்பட்ட சுகாதார அமைப்பை நோக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி அளிக்கப்படுகிறது. 


மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கும் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana), பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் (Pradhan Mantri Ayushman Bharat) உள்கட்டமைப்பு பணி, மற்றும் அவசரகால சிகிச்சை மற்றும் சுகாதார அமைப்பு முன்தயாரிப்புத் தொகுப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துகின்றன. ஆரம்ப சுகாதாரத்திற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15வது நிதி ஆணையம் (Finance Commission) ரூ.70,000 கோடி வழங்குகிறது.


அனைவருக்கும் சுகாதார காப்பீடு (Universal Health Coverage)  என்ற இலக்கை விரைவில் அடைய இந்தியாவின் சுகாதார அமைப்பு உழைத்து கொண்டு இருக்கிறது. சுகாதாரத்துறைக்கான நிதியை அரசு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், ஈடுசெய்யும் செலவு (Out-of-Pocket Expenditure (OOPE)) குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் சரியான பாதையில் நாடு சென்று கொண்டு இருப்பதை காட்டுகிறது.

 

கட்டுரையாளர் நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர். கருத்துக்கள் தனிப்பட்டவை




Original article:

Share:

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான கொள்கை முரண்பாடுகள்

 காசா மீது குண்டு வீசுவதை நிறுத்துமாறு இஸ்ரேலை கூறும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவேண்டும்.


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே  போர் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. ஒரு பெரிய மோதலாக பரவாமல் தடுப்பதே  அமெரிக்கா அதிபர் ஜோ பைடனனின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அவர் இரண்டு விஷயங்களைச் செய்தார்: காசாவிற்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை அவர் முழுமையாக ஆதரித்தார். அக்டோபர் 7 ஆம் தேதி, சுமார் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல் அவிவ் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் பல மாதங்களாக போர் தொடர்ந்ததால், காசாவில் அதிகமான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடனனின் சமாதன முயற்சி தோல்வியடையத் தொடங்கியது. 


​​ஏழு மாதமாக நீடிக்கும் போரின் காரணமாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காஸாவில் 34,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். திரு.பைடனின் எச்சரிக்கையையும் மீறி, 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காஸாவில் உள்ள ரஃபா நகரத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 


கூடுதலாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்களைத் தாக்கியுள்ளனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும், முழு அளவிலான பிராந்திய போர் இன்னும் வெடிக்கவில்லை என்றாலும், நிலைமை மோசமாக உள்ளது. இஸ்ரேல் மீதான தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு பைடனை வலியுறுத்தி, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை  தெரிவித்து வருகின்றனர்.


அமெரிக்கா அதிகாரிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை அடைய கடுமையாக உழைத்து வருகின்றனர். இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு பைடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடியை அமெரிக்கா ஆதரிக்காது என்றும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்தார். இது பிராந்தியங்களுக்கு இடையே ஏறபட்டுள்ள போர் பதற்றத்தைக் குறைக்கும். பைடனின் அணுகுமுறைகள் பல்வேறு குறைபாடுகளை கொண்டு இருந்தது. காசா மீதான போருக்கு இஸ்ரேலின் அணுகுமுறை, போர்கள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய அமெரிக்காவின் கருத்துகளுக்கு எதிரானது.

 

இஸ்ரேல், காஸா மீது குண்டு வீசுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது. நெதன்யாகுவின் பிடிவாதத்தால் பைடன் விரக்தியடைந்தாலும், இஸ்ரேலுக்கு $17 பில்லியன் பாதுகாப்பு உதவி வழங்கும் மசோதாவில் கையெழுத்திட்டார். பைடனின் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் போர்நிறுத்தம் குறித்த பொது அறிக்கைகள் இஸ்ரேலின் நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களையும் நிதிகளையும் தொடர்ந்து வழங்குவதன் மூலம், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெளியுறவுக் கொள்கைக் குறித்த தனது சொந்த கொள்கைகளை பலவீனப்படுத்துகிறார்.


இஸ்ரேலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பைடன் தவறியிருப்பது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் நற்பெயரை சேதப்படுத்துகிறது. இது வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலிலும் அவரது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும். 81 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான தனது கொள்கையில் உள்ள சிக்கல்களை அவர் சரிசெய்ய வேண்டும். கடந்த காலங்களில், மற்ற முந்தைய அமெரிக்க அதிபர்கள்  சமாதானத்தை ஏற்படுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தனர். காஸாவில் நிரந்தர போர் நிறுத்தம் கோரும் தைரியம் அமெரிக்க அதிபர் பைடனுக்கு இருக்க வேண்டும். இந்த இலக்கை ஆதரிப்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துவது போன்ற கொள்கைகளையும் அவர் பரிசீலிக்க வேண்டும்.




Original article:

Share:

இந்தியாவின் உலகளாவிய எழுச்சி மற்றும் பிராந்திய அளவிலான வீழ்ச்சி எனும் முரண்பாடு -ஹேப்பிமோன் ஜேக்கப்

 இந்தியாவின் உலகளாவிய எழுச்சி மற்றும் பிராந்திய அளவிலான வீழ்ச்சி எனும் இந்த முரண்பாடு புது டெல்லியின் உலகளாவிய இலக்குகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 


இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய முரண்பாடு என்னவென்றால், இந்தியா உலகளவில் வலுவடைந்து வருகிறது. ஆனால், அதன் பிராந்தியத்தில் செல்வாக்கை இழந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் உயர்வு, அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி, பிற வல்லரசு நாடுகளுடனான நல்ல உறவுகள் மற்றும் குழப்பமான சர்வதேச சூழல் (chaotic international situation) ஆகியவற்றிலிருந்து வருகிறது. எவ்வாறாயினும், சீனாவுடன் ஒப்பிடும்போது அதன் குறைந்து வரும் சக்தி, தெற்காசியாவில் குறைந்து வரும் மேலாதிக்கம் மற்றும் தெற்காசியாவின் புவிசார் அரசியல் சார்ந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் காரணமாக பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது.


கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. இதன் வலுவான பொருளாதாரம், இராணுவ வலிமை (military capabilities) மற்றும் அதிக அளவிலான இளையோர் மக்கள் தொகையில் (largely young demography) காணப்படுகிறது. இது G-20 போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களில், G-7 கூட்டங்களில் அழைப்பாளராக சேர்த்துக் கொள்வதும், Quad, BRICS மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பலதரப்பு குழுக்களில் செயலில் பங்கேற்பதும், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும், உலகளவில் அதன் சக்திவாய்ந்த நிலைமையையும் மேலும் எடுத்துக்காட்டுகிறது. ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council) இந்தியா இல்லாவிட்டாலும், உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அங்கீகரித்துள்ளது. சீனாவைத் தவிர மேலும் பல நாடுகள் இந்தியாவின் உலகளாவிய முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன. புவியியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உலகளாவிய கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் எழுச்சிக்கு உதவுகிறது.


வெளிப்புற காரணிகள்


உலகளாவிய எழுச்சி இருந்தபோதிலும், தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. பனிப்போரின் போது இப்பகுதியில் இந்தியாவின் செல்வாக்குடன் ஒப்பிடும் போது அல்லது இன்று இப்பகுதியில் சீனாவின் செல்வாக்குடன் ஒப்பிடுகையில், பிராந்தியத்தில் இந்தியாவின் சக்தி மற்றும் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி ஒப்பீட்டளவிலானது, முழுமையானது அல்ல. இதில், பல வெளிப்புற காரணிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் இந்தியாவின் உலகளாவிய நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


நமது பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு குறைவாக இருப்பதற்கு காரணமான சில விஷயங்கள், இந்தியா உலகளவில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்களாகும். உதாரணமாக, அமெரிக்கா இப்பகுதியை விட்டு வெளியேறியபோது, சீனாவானது அதிக அதிகாரத்தைப் பெற்றது. இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது. ஆனால், இதன் காரணமாக, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவை எதிர்ப்பது போன்ற இந்தியாவின் உலகளாவிய நலன்களை ஆதரிக்க விரும்புகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகார சமநிலையில் இந்தியாவின் கவனம் செலுத்துகிறது. இந்த கவனம் இந்தியாவுக்கு அதன் அருகிலுள்ள நாடுகளுடன் அதன் நட்புறவுகளை நிர்வகிப்பதை கடினமாக்கலாம்.


இந்தியாவின் உலகளாவிய உயர்வுக்கு காரணம் அது மிகவும் சக்திவாய்ந்ததாகி வருவதும், மற்ற பெரிய நாடுகளுடன் நல்ல உறவுகளை மேற்கொள்வதும் ஆகும். ஆனால், அதன் சொந்த பிராந்தியத்தில், அது சிறப்பாக செயல்படவில்லை. ஏனென்றால், அருகிலுள்ள சிறிய நாடுகள் மிகவும் சக்திவாய்ந்ததாகி தங்கள் சொந்த தேர்வுகளை செய்கின்றன. பொதுவாக, பெரிய நாடுகள் அதிகாரத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன என்பதில் மட்டும் நாம் கவனம் செலுத்தி, சிறிய நாடுகள் என்ன செய்கின்றன என்பதைப் புறக்கணித்தால், அது இறுதியில் நமக்கு உதவாது.


சீனாவின் எழுச்சியும் இந்தியா செய்ய வேண்டியதும் 


சீனாவின் வளர்ச்சியானது பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு வீழ்ச்சியடைய காரணமாகிறது. ஏறக்குறைய 200 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தபோதிலும், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா இப்போது முன்பை விட பலவீனமாக உள்ளது. ஏனென்றால், சீனாவின் எழுச்சி தெற்காசியாவில் இந்தியாவின் நிலைக்கு சவாலாக உள்ளது. சீனா வலிமையடைந்து வருவதால், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா இனி முதலிடத்தை பிடிக்க முடியாமல் போகலாம்.


தெற்காசியாவில் சீனாவின் நுழைவு, அமெரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேறுதல், இந்தோ-பசிபிக் மீது இந்தியா அதிக கவனம் செலுத்துதல் ஆகியவை பெய்ஜிங்கிற்கு ஆதரவாக அதிகாரத்தை மாற்றியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளைப் போலவே தெற்காசிய நாடுகளும் சமநிலைப்படுத்துதல் (balancing), பேரம் பேசுதல் (bargaining), நட்டத்தை தடுத்தல் (hedging) மற்றும் அலைக்கழித்தல் (bandwagoning) என வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகின்றன. இந்தியாவின் சில சிறிய அண்டை நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனாவை குறைந்தபட்சம் இப்போதைக்கு ஒரு பயனுள்ள விருப்பமாக பார்க்கின்றன. இந்த பிராந்தியத்திற்கான சமநிலை மாற்றத்தின் பெரும்பகுதி அதிகார மாற்றங்களால் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவானது அதன் அண்டை நாடுகளுக்கு போதுமான அளவு சென்றடையவில்லை.


தெற்காசியாவில் புதிய வல்லரசான சீனா, அதிக செல்வாக்கு பெற்று வருவதால் இந்தியா ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. உலகளாவிய அரசியலில் ஒட்டுமொத்தமாக தெற்காசியாவின் முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில் இது நடக்கிறது. இதை இந்தியா சரியாகக் கையாளவில்லை என்றால், பிராந்தியத்தில் முக்கிய சக்தி என்ற நிலையை அது இழக்க நேரிடும்.


எனவே, இந்தியா என்ன செய்ய முடியும்? முதலாவதாக, அது தெற்காசியாவை எவ்வாறு பார்க்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் அதன் அணுகுமுறையை புதுப்பிக்க வேண்டும். பின்னர், இப்பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை சமாளிக்க புத்திசாலித்தனமான திட்டங்களை கொண்டு வர வேண்டும்.


முதலாவதாக, கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தப்பகுதியும், அதன் அண்டை நாடுகளும், புவிசார் அரசியலும் கணிசமாக மாறியுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையை அலட்சியம் செய்வது அதை மேலும் மோசமாக்கும்.


இரண்டாவது, எல்லாவற்றிலும் சீனாவுடன் போட்டி போடுவதற்குப் பதிலாக இந்தியாவானது எது நல்லது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதைச் செய்ய முயற்சிப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல. இந்தியாவின் பலம் மற்றும் பிராந்தியத்தின் மாற்றங்களை ஒப்புக் கொள்ளும் பிராந்தியத்துடன் புதிய தொடர்பை உருவாக்குவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில், நமது பௌத்த பாரம்பரியத்தை எடுத்துரைப்பது ஒரு முதன்மையான வழியாக உள்ளது.


மூன்றாவதாக, இந்தியா நிலத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறது, ஆனால் அது கடலில் நிறைய வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இது வர்த்தகத்தை அதிகரிக்கவும், சிறு குழுக்களில் சேரவும், சிக்கல்களின் அடிப்படையில் புதிய கூட்டணிகளை உருவாக்கவும் முடியும். எனவே, நிலத்தில் உள்ள சவால்களை சமாளிக்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா அதன் நன்மைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர விவாதங்களில் இந்தியாவின் சிறிய தெற்காசிய அண்டை நாடுகளைச் சேர்ப்பது உதவியாக இருக்கும். இந்த நாடுகள் கடல்சார் நாடுகளாக இருந்தாலும், இந்தோ-பசிபிக் திட்டத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கவில்லை. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து, இலங்கை, மாலத்தீவு மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை அவர்களின் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இராஜதந்திரரீதியாக எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.


நான்காவதாக, இன்று, இந்தியா பனிப்போர் காலத்தில் இருந்ததைப் போல அருகிலுள்ள பிற சக்திவாய்ந்த நாடுகளைப் பற்றி கவலைப்படவில்லை. இதன் விளைவாக, பொதுவான பிரச்சினைகளை சமாளிக்க இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்த வெளிப்படைத்தன்மையையும், பிராந்தியத்தில் இந்தியாவின் வீழ்ச்சியுடன் வரும் சவால்களைச் சமாளிக்க மற்ற நாடுகளின் ஆர்வத்தையும் நாம் பயன்படுத்த வேண்டும்.


மென்மையான ஆற்றலைப் பயன்படுத்தவும் 


இறுதியாக, இந்தியா தனது சாதகமான அதிகாரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி பிராந்தியத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்ற பிற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் சாதகமான உறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கவும். நாடுகளுக்கிடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கான முறைசாரா வழிகளை ஊக்குவிப்பது முக்கியம். குறிப்பாக, இந்தியா நேரடியாக மோதுவதில் தலையிட விரும்பவில்லை. மியான்மர் போன்ற பிராந்தியங்கள் இதற்கு உதாரணமாக இருக்கும்.


இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய முக்கியத்துவம் இந்த பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு குறைந்து வருவதுடன் முரண்படுகிறது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: அருகிலுள்ள கட்டுப்பாட்டை பராமரிக்க முடியாத ஒரு நாடு உலக அரங்கில் ஒரு முக்கிய தலைமை வகிக்க முடியுமா?


ஹேப்பிமோன் ஜேக்கப் புது தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியில் கற்பிக்கிறார் மற்றும் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவனர் ஆவார்.




Original article:

Share: