தலைமைக் தணிக்கையாளரின் (CAG) பொறுப்பு மற்றும் செயல்பாடு என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— செப்டம்பர் 19அன்று புது டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது மாநில நிதிச் செயலாளர்கள் மாநாட்டின் முடிவுகளை செயல்படுத்துவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். இதில் நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, தலைமைக் கனக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


— மத்திய நிதியுதவி திட்டங்களை வழங்குவது குறித்து ஆலோசிப்பது குழுவின் பணி அல்ல என்று அந்த அதிகாரி கூறினார். இது பட்ஜெட் பற்றியது. எடுத்துக்காட்டாக, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDGs)) சில தனிப்பட்ட திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இது மிகச் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் அது இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.


— மத்திய நிதியுதவி திட்டத்திற்கான (Centrally Sponsored Schemes (CSS)) ஒதுக்கீடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருவதால், சில திட்டங்களுக்கு ஆண்டு பட்ஜெட் 50,000 கோடிக்கும் அதிகமாக இருப்பதால், தலைமைக் கனக்குத் தணிக்கையாளரின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏப்ரல் 2026 முதல் தொடங்கும் அடுத்த நிதி குழுவின் சுழற்சியில் திட்டங்களைத் தொடர அனுமதிப்பதற்கு முன்பு, அவற்றை மதிப்பிடும் செயல்முறையையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.


— 2025-26 மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு அதன் மொத்த செலவினமான ரூ.50.65 லட்சம் கோடியில் ரூ.5.41 லட்சம் கோடியை மத்திய நிதியுதவி திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)), ஜல் ஜீவன் மிஷன் மற்றும் PM-Kisan உள்ளிட்ட பல திட்டங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் பட்ஜெட்டைக் கொண்டிருந்தன. அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும், 8 பைசா மத்திய நிதியுதவி திட்டத்திற்குச் செல்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— மத்திய நிதியுதவி திட்டங்கள் என்பது மத்திய அரசால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிதியளிக்கப்பட்டு, மாநிலங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும். ஏனெனில், அவை மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பாடங்களைக் (state list) கையாள்கின்றன.


- தேசிய வளர்ச்சி குழுவின் கூற்றுப்படி, மத்திய நிதியுதவி திட்டங்கள் (CSS) என்பது “ஒன்றிய அமைச்சகங்கள்/துறைகளால் நேரடியாக நிதியளிக்கப்பட்டு, மாநிலங்கள் அல்லது அவற்றின் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் நிதியளிப்பு முறை எதுவாக இருந்தாலும், அவை ஒன்றிய அரசின் பொறுப்புப் பகுதியான இணைப்புப் பட்டியலின் கீழ் வராத வரை.”



Original article:

Share:

டெல்லி காற்று மாசுபாடு: அறிவியல் படி, குளிர்காலத்தில் மேக விதைப்பு வெற்றி பெறுவதற்கு ஏன் மிகக் குறைந்த வாய்ப்பு உள்ளது?

 டெல்லியில் மேக விதைப்பு காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடிய லேசான மழை, குளிர்ந்த வெப்பநிலையுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்கு நாம் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். துகள்களை அகற்ற கனமழை தேவைப்படுகிறது. குளிர்ந்த காலநிலையில் லேசான மழைத்துளிகள் பெரும்பாலும் எதிர் விளைவை ஏற்படுத்தும்.


நீண்ட சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், ஒரே நாளில் பிரச்சினைகளை குணப்படுத்துவதாக உறுதியளிக்கும் விரைவான தீர்வுகளை மக்கள் இயல்பாகவே விரும்புகிறார்கள். இருப்பினும், பிரச்சனை அடுத்த நாளே வந்தால் என்ன செய்வது? இங்கு கேள்விக்குள்ளாகும் யோசனை மேக விதைப்பு மூலமான செயற்கை மழை தான்.  காற்று மாசுக்கு தீர்வாக மேக விதைப்பை பயன்படுத்துவது குறித்து, உள்ளூர் அரசுகள் மாறினாலும், பல ஆண்டுகளாக காற்று மாசுபாட்டுக்கு தீர்வாக மேக விதைப்பு இருக்கும் என்ற ஒரே நிலைப்பாட்டில் டெல்லி அரசு உள்ளது. மேலும், நாட்டின் சில சிறந்த அறிவியல் நிறுவனங்கள் இந்த முயற்சியில் முன்னிலை வகிப்பதால், இந்த விவகாரம் அறிவியல்ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.


பயன்படுத்தப்படும் நுட்பம்


மேக விதைப்பைச் சுற்றியுள்ள குழப்பங்களை தெளிவுபடுத்த, அதனை அறிவியல் மற்றும் வானிலை அறிவியல் சார்ந்த கண்ணோட்டத்தில் படிப்படியாக ஆராய்வோம். மேக விதைப்பு என்பது இயற்கை வானிலை தொழில்நுட்பத்தின் ஒரு வடிவமாகும். இதில் வெள்ளி ஐயோடைடு, சோடியம் கிளோரைடு போன்ற பொருட்கள் அல்லது மழையை செயற்கையாக பொழிய வைப்பதற்கு இதே போன்ற வகைகள் ஒரு குறிப்பிட்டவகை மேகங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அடிப்படை இயற்பியல் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது: இந்த இரசாயனங்கள் மேகங்களில் சிறிய நீர்த்துளிகள் (cloud condensation nuclei) அல்லது பனிக்கட்டி படிகங்கள் (ice nuclei) உருவாக உதவுகின்றன. பின்னர், அவை மழையாக மாறும்.


முக்கியமாக, ஈரப்பத / சூடான-மழை மேகங்கள் (hygroscopic / warm-rain clouds) என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை மேகங்களில் செலுத்தப்படும்போது மட்டுமே விதைத்தல் வேலை செய்கிறது. இந்த வகை மேகங்கள் விதைப்பதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அவை ஏராளமான திரவ நீரைக் (abundant liquid water) கொண்டுள்ளன. மேலும், கூடுதல் உட்கருக்கள் (nuclei) அறிமுகப்படுத்தப்படும்போது விரைவாக பலன் அளிக்கின்றன. இதற்கு மாறாக, மற்ற மேகங்களில் விதைப்பு பயனற்றதாக உள்ளது. ஏனெனில், அவற்றின் நுண்ணிய இயற்பியல் அமைப்பு வெளிப்புறக் குழப்பத்தையும் அதன் மூலம் பொழியும் மழையையும் எதிர்க்கிறது.


வரம்பு


பல ஆண்டுகளாக காலநிலைப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, மற்ற மேக வகைகளின் போல இல்லாமல், நீரை உறிஞ்சும் அல்லது வெப்ப மழை மேகங்கள் – விதைப்பிற்கு ஏற்றவையாக உள்ளன – அவை அரிதாக உருவாகின்றன மற்றும் குறிப்பிட்ட வானிலை சூழ்நிலைகளில் மட்டுமே தோன்றுகின்றன. இந்த மேகங்கள் பொதுவாக பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில் தோன்றும், பருவமழை தொடங்கும் போது மற்றும் பருவமழை விடைபெறும் வரை இருக்கும்.


மழைக்காலத்திற்கு முன்னும் பின்னும் இந்த நிகழ்வுகள் பாதி நேரம் (51%) நடப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், குளிர்காலத்தில் 5-10% மட்டுமே குறைகின்றன. நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கும். எனவே, இது காற்று மாசுபாட்டு அச்சுறுத்தலுடன் பருவகாலரீதியாகப் பொருந்தாமல் உள்ளது.


இது வறட்சிக்கான ஒரு தீர்வாகப் புரிந்துகொள்ளத்தக்கது (இந்த ஆசிரியர் இதனுடன் உடன்படவில்லை என்றாலும்) ஏனெனில், காற்று தரக் குறியீடு (Air Quality Index- AQI) குறையும் வரை காத்திருக்காமல், பெரிய கால இடைவெளியில் ஏதேனும் ஒரு நாளில் மழை தேவைப்படுகிறது. எளிமையாகச் சொன்னால், நாம் கத்திக்கு மேல் மிக மெல்லிய வாய்ப்பில் பந்தயம் கட்டுகிறோம். இதற்குக் காரணம், மேக நிலைமைகள் சிறந்ததாக இருந்தால், விதைப்பின் உலகளாவிய வெற்றி விகிதம் ஏறத்தாழ 50%; முக்கியமான குளிர்கால மாதங்களில் அத்தகைய மேகம் உருவாகும் வாய்ப்பு 10%-க்கும் கீழே; மேலும், அது தோராயமாக அல்லாமல், AQI உச்சமடையும் அதே நாட்களில்தான் அந்தக் குறிப்பிட்ட மேகங்கள் நமக்குத் தேவை. அபாயங்கள்—அறிவியல், செயல்பாட்டு, மற்றும் நிதி—குறிப்பிடத்தக்கவை. மீதி வாசகரின் தீர்ப்புக்கு விடப்படுகிறது.


மாசுபாட்டிற்கான தீர்வாகாது


அக்டோபர் 28 அன்று டெல்லியில் நடந்த மேக விதைப்பு சோதனையின் ஆதரவாளர்கள், சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு "மிகவும் மோசமானது" என்பதிலிருந்து "மோசமானது" (Very Poor to Poor) என்று அளவில் உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். இது ஒரு சிறிய வெற்றி மட்டுமே. ஆனால், நாம் தவறாக நினைக்கலாம்: காற்றின் தரக் குறியீடு 400-க்கு மேல் செல்லும்போது நாம் கவலைப்படுகிறோம். காற்றின் தரக் குறியீடு 300-க்குக் கீழே குறையும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். இரண்டு சந்தர்ப்பங்களிலும், இந்திய நகரங்களில் காற்றின் தரக் குறியீட்டை பாதிக்கும் முக்கிய மாசுபடுத்தியான PM2.5 அளவுகள் இன்னும் ஆபத்தான முறையில் பாதுகாப்பான வரம்புகளைவிட அதிகமாக உள்ளன என்பதை மறந்துவிடுகிறோம். மருத்துவ ரீதியாக, நுண்ணியத் துகள்களை சுவாசிக்கும்போது ​​அவை அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது; அதிகரிப்புகள் பாதிப்புகளை மேலும் ஆழமாக்குகின்றன.


PM2.5 தூசி துகள்கள் என்றால் என்ன?


PM2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டர் அளவுக்கும் குறைவான மிக நுணுக்கமான தூசி துகள்கள் ஆகும். இந்த துகள்கள் உடலுக்குள் செல்லும் பொழுது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


அறிவியல் ரீதியாக, தூறல் மழை, உண்மையிலேயே விதைத்தலின் விளைவாக இருந்தால், அது குளிர்ந்த வெப்பநிலையுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக இயற்கைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நுண்துகள்களை திறம்பட சுத்தம் செய்வதற்கு கனமழை தேவை; குளிர்ந்த சூழ்நிலையில் பெய்யும் லேசான தூறல்கள் பெரும்பாலும் எதிர்மாறான விளைவை ஏற்படுத்துகின்றன. இந்த எதிர்மறை விளைவு, இரண்டாம்நிலை தூசிப்படல உருவாதல் (secondary aerosol formation) என்று அழைக்கப்படுகிறது. இது நுண்துகள்களை (fine particles) நுண்-துளிகளுடன் (micro-droplets) இணைந்து, ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, பெருகி, PM அளவுகளில் மீண்டும் உயர்வை ஏற்படுத்த அனுமதிக்கிறது. டெல்லி இந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் கண்டுள்ளது மற்றும் டிசம்பரின் மேற்கத்திய இடையூறுகள் (western disturbances) மேலோட்டமான மழையைக் கொண்டு வரும்போது மீண்டும் நிகழக்கூடும். மேக விதைப்பு மூலம் மழையை கொண்டு வரும் செயல்முறை "வெற்றிகரமானது" என்று கருதப்பட்டாலும், அத்தகைய தலையீடுகள் குறுகியகால நிவாரணத்தை மட்டுமே அளிக்க முடியும். அடிப்படை உண்மை நிலைத்திருக்கிறது. உமிழ்வுகள் தொடர்ந்து உற்பத்தியாகின்றன மற்றும் வானிலை தொடர்புகள் மூலம் விரைவாக மீண்டும் செறிவுகளாகக் (concentrations) குவிகின்றன. ஒரு நாளுக்குள் அமைப்பு மீட்டமைக்கப்படுகிறது. நாம் மீண்டும் ஆரம்ப புள்ளிக்குத் திரும்புவோம்.


அக்டோபர் 28-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மிதமான வெற்றி, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையை நிபுணர் நிறுவனங்கள் முன்பே மதிப்பிட்டு உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் தொழில்நுட்ப கருத்தை கேட்டார்களா அல்லது ஏதேனும் கருத்து வழங்கப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. ஆனால், இரண்டு காரணங்களுக்காக இந்த நீண்டநாட்கள் எதிர்பார்க்கப்பட்ட சோதனை இறுதியாக நடந்ததில் இரண்டு காரணங்களுக்காக நிம்மதியாக இருக்கலாம். முதலாவதாக, இது பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு அறிவியல் ஆர்வத்தை பூர்த்தி செய்தது. இரண்டாவதாக, நிகழ்வுக்குப் பிந்தைய பகுப்பாய்வு, அத்தகைய தலையீடுகளின் அறிவியல் புனிதத்தன்மை குறித்த விவாதத்தை ஒருமுறை தீர்த்து வைக்கும் - 2021-ல் டெல்லியில் அதே ஆர்வத்துடன் முதலில் சோதிக்கப்பட்ட புகை கோபுரங்களின் கதை போல, அது அமைதியான முடிவை எட்டியது.


டெல்லியில் காற்று மாசுபாடு தீர்க்கப்படாத, தொடர்ச்சியான சவாலாகவே உள்ளது. 2025-ஆம் ஆண்டில் குளிர்காலம் தொடங்கும்போது, ​​மீண்டும் அதே அடிப்படைக் கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம்: டெல்லியை உண்மையில் மாசுபடுத்துவது எது? பயிர்க் கழிவுகளை எரிப்பது ஒரு குறுகிய, மழையின் காலச்சார்பு நிகழ்வு; விழா வானவேடிக்கைகள் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். இருப்பினும், ஆழமான, முறையான காரணிகளைக் கவனிக்காமல், இதை பற்றிய  நிலையற்ற விவாதம் தொடர்கிறது. நகரத்தை மையமாகக் கொண்ட மனநிலையிலிருந்து காற்று மண்டல அணுகுமுறைக்கு மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது. இது மாசுக்களின் எல்லை தாண்டிய இயக்கத்திற்கு பொறுப்பான காலநிலை “குடும்பப் பகுதியை” கருத்தில் கொள்கிறது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் ஆதரிக்கப்படும் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின்  இந்தியாவின் தேசிய வள கட்டமைப்பு (National Resource Framework of India (NARFI)) முன்னெடுத்த ஒரு திட்டமாகும். காற்றுக்கு நிர்வாக எல்லைகள் கிடையாது மற்றும் நகரங்களுக்கு மட்டும் தீர்வுகள் செய்யப்படுவதால் பெரிய காற்றுப் பகுதி பாதிக்கப்படக்கூடும். ஏனெனில், நகரம் மட்டும்தான் என்ற தீர்வுகளை செயல்படுத்துவது சிக்கலானது.


தொடர்ச்சியான ஆதாரங்களை இலக்காகக் கொண்டு ஆண்டு முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் தணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தெளிவான தொடக்கப் புள்ளி புதைபடிவ (fossil fuels) எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதை துரிதப்படுத்துவதாகும். அங்கு வளர்ந்து வரும் மின்சார வாகனப் புரட்சி உண்மையான வாக்குறுதியை அளிக்கிறது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின்  (System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR’s)) சமீபத்திய மதிப்பீடுகளின்படி, டெல்லியின் PM2.5 சுமையில் வாகன உமிழ்வு 40%-க்கும் அதிகமாக பங்களிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, வாகன எண்ணிக்கையில் ஏற்படும் விரைவான வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஈடுசெய்கிறது.


சவால்கள் அதிகமாக உள்ளன. ஆனால், சிக்கலான பிரச்சினைகள் புதுமையான தீர்வுகளைக் கோருகின்றன. மேலும், ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் நம்பகத்தன்மை மற்றும் தாக்கத்தைத் தக்கவைக்க கடுமையான அறிவியல் மதிப்பீடு தேவைப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நச்சுக் காற்றை இயல்பாக்குவதை நாம் நிறுத்த வேண்டும். இது வெறும் குளிர்காலப் பிரச்சினை மட்டுமல்ல, டெல்லி பிரச்சினை மட்டுமல்ல, நிச்சயமாக ஒரு ஏழை நபரின் பிரச்சினையும் அல்ல. இது  இந்தியாவில் உள்ள அனைவரின் பிரச்சினையாகும். இது நமது ஆரோக்கியம் மற்றும் நமது உற்பத்தித்திறனை பாதிக்கிறது. நமது நாட்டின் சமூக மரியாதையை  பலவீனப்படுத்துகிறது.


ஆசிரியர் இந்திய அறிவியல் நிறுவன-வளாகத்தின் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மற்றும் SAFAR-ன் நிறுவனர் திட்ட இயக்குநர் ஆவார்.



Original article:

Share:

யானை தந்தங்களை வைத்திருப்பதற்கான அரசு சான்றிதழ் இருந்தும் மோகன்லால் ஏன் சட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார்? -ஷாஜு பிலிப்

 எந்த நிபந்தனைகளின்கீழ் தந்த பொருட்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்? மோகன்லாலிடம் தந்தங்களுக்கான மாநில அரசு வழங்கிய சான்றிதழ்கள் இருந்தும், அவர் ஏன் இன்னும் சட்ட சிக்கலில் இருக்கிறார்? 




சமீபத்தில், கேரள உயர் நீதிமன்றம் நடிகர் மோகன்லாலுக்கு எதிராக தீர்ப்பளித்தது. இதில், இரண்டு ஜோடி தந்தங்களுக்கான உரிமைச் சான்றிதழ்கள் செல்லாது என்றும், மேலும் இதை சட்டத்தால் செல்லுபடியாக முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இருப்பினும், மாநில அரசு விரும்பினால் அவரது உடைமையை முறைப்படுத்த புதிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


எந்த நிபந்தனைகளின் கீழ் தந்த பொருட்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்? மோகன்லாலிடம் தந்தங்களுக்கான மாநில அரசு வழங்கிய சான்றிதழ்கள் இருந்தாலும், அவர் ஏன் இன்னும் சட்ட சிக்கலில் இருக்கிறார்? 


வருமான வரி சோதனையின்போது யானைத் தந்தங்கள் மீட்பு


2011-ம் ஆண்டு, வருமான வரித் துறையானது வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, வனத்துறையினர் நடிகர் மோகன்லாலின் கொச்சி வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, ​​அதிகாரிகள் இரண்டு ஜோடி யானை தந்தங்களைக் கண்டுபிடித்தனர். ஒரு ஜோடி ரோஸ்வுட் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டதாகவும், மற்றொன்று கண்ணாடியின் இருபுறமும் வைக்கப்பட்டதாகவும் இருந்தது.


ஒரு ஜோடி தந்தங்கள் பி.என். கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான இறந்த யானையிலிருந்து சேகரிக்கப்பட்டது. அவருக்கு 1986-ம் ஆண்டில் உரிமை சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாவது ஜோடி நளினி ராதாகிருஷ்ணனுக்கு (Nalini Radhakrishnan) சொந்தமானது, அவர் அவற்றை தனது மாமனார், கொச்சின் மகாராஜாவிடமிருந்து (Maharaja of Cochin) பெற்றிருந்தார்.


மோகன்லாலுக்கு எதிரான வழக்கு


வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்-1972 (Wildlife Protection Act)-ன் பிரிவு 40-ன் படி, அட்டவணை I அல்லது அட்டவணை II-ன் பகுதி II-ல் பட்டியலிடப்பட்டுள்ள சிறைபிடிக்கப்பட்ட விலங்கு அல்லது ஏதேனும் விலங்குப் பொருள், வேட்டைப் பொருள் (trophy) அல்லது பதப்படுத்தப்படாத வேட்டைப்பொருள் (uncured trophy) வைத்திருக்கும் எவரும் அதை தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் அறிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்பு செய்யப்படாவிட்டால், இந்தப் பொருட்களை வைத்திருப்பது அல்லது அலங்கரிப்பது சட்டவிரோதமாகும்.


இது தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் பிரகடனம் செய்யப்பட வேண்டும். ஆனால், மோகன்லால் அதைச் செய்யவில்லை, எனவே, வனத்துறை 2012-ம் ஆண்டில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. பெரும்பாவூர் (Perumbavoor) நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, வழக்குத் தொடுத்தவர்கள் வழக்கை திரும்பப் பெற நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் இதை அனுமதிக்கவில்லை. வழக்கின் குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றமும் அங்கீகரித்தது.


தந்தங்களுக்கு உரிமை கோருதல்


இந்த வனச்சட்ட வழக்கு நிலுவையில் இருந்தபோது, மோகன்லால் 2015-ம் ஆண்டில் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை (Ministry of Environment and Forests) அணுகினார். அமைச்சகமானது, மாநில வனத்துறையைத் தொடர்பு கொள்ளச் சொன்னது. ஏனெனில், தந்தங்கள் (காடுகள்) மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த சிறைபிடிக்கப்பட்ட யானைகளிடமிருந்து வந்தவை.


2015-ம் ஆண்டில், மாநில அரசு, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 40(4)-ன் கீழ், மோகன்லால் தந்தங்களை வைத்திருப்பது சட்டப்பூர்வமானது என்று மாநில அரசு அறிவித்தது. பின்னர் வனத்துறை அவருக்கு தந்தங்களின் உரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்கியது.


இந்த விலக்குரிமை எவ்வாறு வழங்கப்பட்டது?


சட்டத்தின் பிரிவு 40 (4)-ன்படி, குறிப்பிட்ட வழக்குகளில் விலக்கு அளிக்க மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த விலக்கு அளிக்க, விண்ணப்பதாரர் அந்த பொருளை வைத்திருப்பது குறித்து அதிகாரப்பூர்வ சட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். அரசாங்கம் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டவுடன், அந்த நபர் விலங்கு அல்லது வேட்டைப் பொருளை வைத்திருப்பது சட்டப்பூர்வமானதாகிறது.


அதன் பிறகு, 1972 சட்டத்தின் பிரிவு 42-ன் கீழ் அரசாங்கம் விலங்குப் பொருளுக்கான உரிமைச் சான்றிதழ்களை வழங்க முடியும்.


மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் என்ன தவறு நடந்தது?


அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படவில்லை. அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விநியோகம் செய்யப்பட்டதன் மூலமும், பத்திரிகைகளுக்கும் வழங்கப்பட்டதன் மூலமும் போதுமான விளம்பரம் அளிக்கப்பட்டதாக அரசு வாதிட்டது, ஆனால் இது போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது.



Original article:

Share:

வலையமைப்பு ஆய்வு வாகனங்கள் (Network Survey Vehicles) மற்றும் சுங்க கட்டண முன்முயற்சிகள் (Tolling initiatives) ஏன் முக்கியம்? – ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு : 


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)) 23 மாநிலங்களில் வலையமைப்பு ஆய்வு வாகனங்கள் (Network Survey Vehicles(NSV)) பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்கள் 20,933 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை (National Highways (NH)) உள்ளடக்கும். சாலைப் பரப்பளவு மற்றும் நடைபாதை நிலைமைகள் குறித்த தரவைச் சேகரித்து, செயலாக்கி, பகுப்பாய்வு செய்வதே இந்த வாகனங்களின் பணியாகும். இந்தச் சூழலில், வலையமைப்பு ஆய்வு வாகனங்கள் (NSV) என்றால் என்ன? நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் மற்றும் மேலாண்மை தொடர்பான பிற முக்கிய முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. வலையமைப்பு ஆய்வு வாகனங்கள் (NSV) என்பது ஒரு சிறப்பு வேன் அல்லது SUV வகை வாகனமாகும். இதில், பல உணர்விகள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒளிக்கற்றை லேசர் (Laser), புவியிடங்காட்டி (GPS), காணொலி பட செயலாக்க கருவிகள் (video image processing tools), உயர் தெளிவுத்திறன் கொண்ட ஒளிப்படக் கருவிகள் (high-resolution cameras), ஒரு செயலற்ற அளவீட்டு அலகு (Inertial Measurement Unit (IMU)) மற்றும் ஒரு தூர அளவீட்டு காட்டி (Distance Measuring Indicator (DMI)) ஆகியவை அடங்கும்.


2. இந்த வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் (NHs) நிலை குறித்த தகவல்களைச் சேகரிக்கின்றன. சேகரிக்கப்பட்ட தரவு, நடைபாதை பராமரிப்பு, சொத்து மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல் பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது.


3. வலையமைப்பு ஆய்வு வாகனங்களைப் (NSV) பயன்படுத்தும் 2, 4, 6 மற்றும் 8 பாதைகளைக் கொண்ட அனைத்து திட்டங்களுக்கும் தரவு சேகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான வேலை தொடங்குவதற்கு முன்பு இது சேகரிக்கப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தரவு சேகரிக்கப்படும்.


4. நடைபாதை நிலை ஆய்வுகள் (pavement condition surveys) 3D லேசர் அடிப்படையிலான வலையமைப்பு ஆய்வு வாகனங்கள் (NSV) அமைப்பைப் பயன்படுத்தும். இந்த அமைப்பு மனித உதவியின்றி தானாகவே சாலை குறைபாடுகளைக் கண்டறிந்து அறிக்கையிட முடியும். இது உயர் தெளிவுத்திறன் கொண்ட 360 டிகிரி கேமராக்கள் மற்றும் பிற மேம்பட்ட கருவிகளுடன் செயல்படுகிறது.


5. தேசிய நெடுஞ்சாலைகளின் மோசமான நிலைக்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இது முறையாக பராமரிக்கப்படாவிட்டால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது. 2019 முதல், வலையமைப்பு ஆய்வு வாகனங்கள் (NSV) அடிப்படையிலான கணக்கெடுப்புகளை கட்டாயப்படுத்தும் கொள்கை வழிகாட்டுதல்கள் உள்ளன. இவற்றின்படி, புதிய நெடுஞ்சாலைப் பகுதிகளுக்கு நிறைவுச் சான்றிதழ்களை (completion certificates) வழங்குவதற்கு முன்பு, அதிகாரசபையின் பொறியாளரும், ஒரு சுதந்திரமான பொறியாளரும் வலையமைப்பு ஆய்வு வாகனங்கள் (NSV) கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும்.


6. இந்தப் புதிய முயற்சியின் மூலம், பல கணக்கெடுப்புகள் மூலம் தேவையான அனைத்து தரவையும் சேகரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது. இது தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து தரவையும் பயன்படுத்தும். சேகரிக்கப்பட்ட தரவு தேவையான வடிவத்தில் செயலாக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, சாலை சொத்து மேலாண்மை அமைப்பில் (Road Asset Management System (RAMS)) பதிவேற்றப்படும்.


நெடுஞ்சாலை சுங்கச்சாவடி மற்றும் நிர்வாகத்தில் முக்கிய முன்முயற்சிகள் :



1. FASTag :


இது ஒரு மின்னணு சுங்க வசூல் அமைப்பு ஆகும். இது இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (National Payments Corporation of India (NPCI)) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.


FASTag அடையாள ஒட்டி (sticker) ஒரு வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டப்படும். இது 2014-ல் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டது. 2021-ல், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இது கட்டாயமாக்கப்பட்டது.


இந்த அமைப்பு ரேடியோ அதிர்வெண் அடையாள (Radio Frequency Identification (RFID)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது சுங்கச்சாவடிகளில் நிறுவப்பட்ட FASTag அடையாள ஒட்டி (sticker) மற்றும் மின்வருடிகளுக்கு (scanner) இடையேயான தொடர்பை அனுமதிக்கிறது. ஒரு வாகனம் ஒரு சுங்கச்சாவடி வழியாகச் செல்லும்போது, ​​இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு அல்லது முன்செலுத்திய பணப்பையிலிருந்து சுங்கத் தொகை தானாகவே கழிக்கப்படும்.


2. தரவுக்களஞ்சியம் (Datalake) :


சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways (MoRTH)) தரவுக்களஞ்சியம் (Datalake) என்றும் அழைக்கப்படும் RAMS-ஐ உருவாக்கியுள்ளது. இது முழு தேசிய நெடுஞ்சாலை (NH) வலையமைப்பையும் திட்டமிடுதல், வரவு-செலவு திட்டமிடுதல், நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஒற்றைமுக தரவுத்தளமாகும். இந்த அமைப்பு சாலைகளின் முறையான மற்றும் அறிவியல் வாழ்க்கை சுழற்சி பகுப்பாய்வை மேற்கொள்ள உதவுகிறது.





3. செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடி முறை (Satellite-based Tolling System) :


மார்ச் மாதத்தில், மத்திய போக்குவரத்து அமைச்சர் மாநிலங்களவையில், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பை (Global Navigation Satellite System (GNSS)) ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தார். தனியுரிமை தொடர்பான கவலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.


உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் (GNSS)கீழ், சுங்கக் கட்டண வசூல் செயற்கைக்கோள்கள் மற்றும் வாகனங்களில் நிறுவப்பட்ட ஒரு இணைப்பு அலகு (on-board unit (OBU)) மூலம் செயல்படுகிறது. வாகனம் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் சுங்கம் கணக்கிடப்படுகிறது.


FASTag-ல் பயன்படுத்தப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாளத் (Radio Frequency Identification (RFID)) தொழில்நுட்பம் :


1. FASTag ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இது சுங்கச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்வருடிகளுடன் (scanner) இணைகிறது. ஒரு வாகனம் அந்த வழியாகச் செல்லும்போது, ​​இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்தோ அல்லது ப்ரீபெய்ட் பணப்பையிலிருந்தோ கட்டணத் தொகை தானாகவே எடுக்கப்படும்.


2. ரேடியோ அதிர்வெண் அடையாளம் (RFID) என்பது பொருள்கள் அல்லது மக்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கம்பிவடமில்லா அமைப்பாகும் (wireless system). இது இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று  பெயர்க் குறிப்பேடு அட்டைகள் (tags) மற்றும் படிப்பான்கள் (readers) ஆகும். ரேடியோ அலைகள் பெயர்க் குறிப்பேடு அட்டைகளிலிருந்து (tags) தகவல்களை வாசகர்களுக்கு அனுப்ப உதவுகின்றன. படிப்பான்களை கையால் பிடிக்கலாம் அல்லது கம்பங்கள் மற்றும் கட்டிடங்களில் பொருத்தலாம். பெயர்க் குறிப்பேடு அட்டைகள் (tags) மறைகுறியாக்கப்பட்ட தரவு, சீரியல் எண்கள் மற்றும் குறுகிய விவரங்களைச் சேமிக்கலாம். சில உயர்-நினைவக பெயர்க் குறிப்பேடு அட்டைகள் விமானப் போக்குவரத்து போன்ற தொழில்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன.


3. RFID பெயர்க் குறிப்பேடு அட்டைகள் (tags) மூன்று வகைகளைக் கொண்டுள்ளன. அவை,


  1.  செயலற்ற பெயர்க் குறிப்பேடு அட்டைகள் (Passive Tags)

  2.  அரை-செயலற்ற பெயர்க் குறிப்பேடு அட்டைகள் (Semi-passive Tags)

  3.  செயலில் உள்ள பெயர்க் குறிப்பேடு அட்டைகள் (Active Tags)


இவை அனைத்தும் சேர்ந்து, இந்திய நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு, தரம், மற்றும் சுங்கச்சாவடி முறைகளில், தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்கின்றன.



Original article:

Share:

இந்தியா ஏன் யூரியா பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும்? – ஹரிஷ் தாமோதரன்

 அதிக மானிய விலையில் கட்டுப்படுத்தப்படும் உரத்தின் நுகர்வு உள்நாட்டு உற்பத்தியைவிட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு திறமையான தேவை-விநியோக மேலாண்மை (demand-supply management) தேவைப்படுகிறது.


இந்தியாவின் யூரியா நுகர்வு நடப்பு நிதியாண்டில் 40 மில்லியன் டன்களை (மெட்ரிக் டன்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம், நல்ல பருவமழை காரணமாக ஏற்பட்ட அதிக தேவை மற்றும் கடந்த ஒரு பத்தாண்டுகாலமாக நைட்ரஜன் உரத்தின் அதிகபட்ச சில்லறை விலை (maximum retail price (MRP)) மாற்றப்படாதது இந்த அதிகரிப்புக்கு காரணம் ஆகும்.


இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவின் விற்பனை 2024-25 (ஏப்ரல்-மார்ச்) நிதியாண்டில் 38.8 மில்லியன் டன்களை எட்டியது, இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். தற்போதைய நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், விற்பனை வருடந்தோறும் 2.1% அதிகரித்துள்ளது. விவசாயிகள் கோதுமை, கடுகு, உருளைக்கிழங்கு மற்றும் பிற ராபி (குளிர்கால-வசந்த) பயிர்களை அதிக அளவில் பயிரிடுவதால், இந்த வளர்ச்சி தொடரும் அல்லது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


இந்த நிலைமையின் மூலம், மொத்த யூரியா நுகர்வு கிட்டத்தட்ட 40 மில்லியன் டன்களை எட்டக்கூடும்.


இடையறாத வளர்ச்சி (Relentless growth)


1990-91 மற்றும் 2010-11-க்கு இடையில் யூரியா நுகர்வு சுமார் 14 மில்லியன் டன்னிலிருந்து 28.1 மில்லியன் டன்னாக இரட்டிப்பாகியுள்ளது என்பதை அட்டவணை 1 காட்டுகிறது. பின்னர் இது 2013-14-ல் 30.6 மில்லியன் டன்னாக மேலும் உயர்ந்தது. அதன்பிறகு, நுகர்வு நிலையானதாக மாறியதன் அடிப்படையில், 2017-18-ல் 29.9 மில்லியன் டன்னாக சற்று குறைந்தது.


இந்த வீழ்ச்சிக்குக் காரணம், நரேந்திர மோடி அரசாங்கம் மே 2015-ல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து யூரியாவிற்கும் வேப்ப எண்ணெய் பூச்சு (neem oil coating) கட்டாயமாக்கியது.


யூரியாவில் 46% நைட்ரஜன் வெளியீட்டைக் குறைப்பதற்காக வேப்ப எண்ணெய் பூச்சு மேற்கொள்ளப்பட்டது. இது அதன் செயல்திறனை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு தேவையான உரப்பைகள் குறைக்க வழிவகுப்பதுடன், துகள் பலகை, ஒட்டுப் பலகை மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியில் இருந்து பால் கலப்படம் வரை அதிக மானிய விலையில் உரத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு சட்டவிரோதமாக மாற்றுவதைத் தடுக்கவும் இது நோக்கமாகக் கொண்டது.


ஆனால் வேப்பெண்ணெய் பூச்சு, 2018-ல் 50 கிலோ பைகளை 45 கிலோவாக மாற்றியதும், 2021 ஜூன் மாதத்தில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு (Indian Farmers Fertiliser Cooperative (IFFCO)) அறிமுகப்படுத்திய ”நானோ யூரியா” போன்ற நடவடிக்கைகளும், 2017-18 முதல் யூரியா நுகர்வைக் குறைக்கவில்லை. இது 2020-21-ல் 35 மில்லியன் டன்னையும், இந்த நிதியாண்டில் 40 மில்லியன் டன்னையும் எட்டும் நிலையில் உள்ளது.


ஒரு தொழில்துறை வட்டாரம் குறிப்பிட்டதாவது, “இப்படியே சென்றால், 2030-க்குள் இதன் பயன்பாடு 45 மில்லியன் டன்னைத் தாண்டக்கூடும்”. இதற்குக் குறைந்த விலையே முக்கிய காரணம் ஆகும். 2012 நவம்பர் முதல் யூரியாவின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.5,360-ஆகவும், 2015 ஜனவரி முதல் வேப்பெண்ணெய் பூச்சுடன் ரூ.5,628-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இப்போது மற்ற உரங்களின் டன் ஒன்றுக்கான விலையை ஒப்பிடுகையில், யூரியா மிகக் குறைவு. உதாரணமாக, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (single super phosphate (SSP)) ரூ.11,500–12,000, டை-அம்மோனியம் பாஸ்பேட் (Diammonium phosphate (DAP)) ரூ.27,000, மற்றும் பிற கலப்பு உரங்கள் ரூ.37,000 வரை விலை கொண்டுள்ளன.


ஒரு நிபுணர் கூறிப்பிட்டதாவது “யூரியா, அடுத்த குறைந்த விலை உரமான SSP விட பாதி விலையில் கிடைக்கிறது. அதில் 46% நைட்ரஜன் உள்ளது, ஆனால் SSPயில் மொத்தம் 27% மட்டுமே ஊட்டச்சத்து உள்ளது. அரசாங்கம் யூரியாவின் MRP-ஐ இரட்டிப்பாக்கினாலும், இதற்கான தேவை கணிசமாகக் குறையாது.”


பற்றாக்குறையின் தாக்கம்


இதன் பற்றாக்குறை தோன்றத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை. சமீபத்திய காரீப் (பருவமழை) காலத்தில், யூரியாவைப் பெறுவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மாநிலங்களில் இருந்துவரும் அறிக்கைகளின்படி, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச அளவை வாங்குவதற்காக மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருப்பது தெரியவந்துள்ளது.


இப்போது புதிதாக துவங்கியுள்ள ராபி (குளிர்கால-வசந்த) பருவத்திலும் நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை. அக்டோபர் 1 அன்று யூரியா இருப்பு 3.7 மில்லியன் டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே தேதியில் 6.3 மில்லியன் டன்களை விடக் குறைவு.


நுகர்வு அதிகரிப்புக்கான காரணம் உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்புடன் பொருந்தவில்லை. அட்டவணை-1-ல் காட்டப்பட்டுள்ளபடி, உள்நாட்டு உற்பத்தி 2023-24-ல் 31.4 மில்லியன் டன்னாக அதன் அதிகபட்ச அளவை எட்டியது. பின்னர் அது 2024-25-ல் 30.6 மில்லியன் டன்களாகக் குறைந்தது. ஏப்ரல்-செப்டம்பர் 2025-ல், 2024-ல் இதே காலத்துடன் ஒப்பிடும்போது உற்பத்தி 5.6% குறைந்துள்ளது.


2019 மற்றும் 2022-க்கு இடையில் அமைக்கப்பட்ட ஆறு புதிய யூரியா ஆலைகள் இல்லாவிட்டால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். ஒவ்வொரு ஆலையும் ஆண்டுக்கு 1.3 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்டது.  கீழ்க்கண்ட  ஆலைகளில் பின்வருவன அடங்கும். இவை, 


  • இராஜஸ்தானில் கடேபன்-III நிலையங்களில், சம்பல் உரங்கள் மற்றும் இரசாயனங்கள், 


  • தெலுங்கானாவில் ராமகுண்டத்தில், ராமகுண்டம் உரங்கள் மற்றும் இரசாயனங்கள்


  • மேற்கு வங்கத்தில் பனகர் நிலையங்களில், மேடிக்ஸ் உரங்கள் மற்றும் இரசாயனங்கள்


  • உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், பீகாரில் பராவ்னி மற்றும் ஜார்க்கண்டில் சிந்த்ரி ஆகியவை இந்துஸ்தான் உர்வாரக் & இரசாயனங்கள் நடத்தும் அனைத்தும் இதில் அடங்கும். இந்த ஆலைகள் ஒன்றாக, இந்தியாவின் உள்நாட்டு யூரியா உற்பத்தியை 2019-20ல் 24.5 மில்லியன் டன்னிலிருந்து 2023-24ல் 31.4 மில்லியன் டன்னாக அதிகரிக்க உதவியது.


இருப்பினும், பல புதிய ஆலைகள் முழு திறனில் இயங்கவில்லை. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு (IFFCO), தேசிய உரங்கள் மற்றும் கிருஷக் பாரதி கூட்டுறவுக்கு சொந்தமான பழைய ஆலைகள் சிறப்பாக செயல்படுகின்றன.


இரண்டு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இவை ஆந்திராவின் காக்கிநாடாவில் உள்ள நாகார்ஜுனா உரங்கள் & இரசாயனங்கள் மற்றும் உத்தரபிரதேசத்தின் பாங்கியில் உள்ள கான்பூர் உரங்கள் & இராசாயனங்கள் ஆகும். அவற்றின் உற்பத்தி திறன் முறையே 1.2 மில்லியன் டன் மற்றும் 0.7 மில்லியன் டன் ஆகும்.


முன்னோக்கிய பாதை


யூரியாவுக்கு அதிக தேவை தொடர்ந்து இருக்கும். இது மலிவு விலையில் உள்ளது, அதன் விலை இரட்டிப்பாக இருந்தாலும், அது இன்னும் மலிவான உரமாக இருக்கும். நானோ யூரியாவைப் போலல்லாமல் இது பயன்படுத்துவது எளிது. தாவர வளர்ச்சிக்கு நைட்ரஜன் அவசியம் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.


மொத்த பயிர் பரப்பளவு விரிவாக்கம், நீர்ப்பாசன பரப்பளவு மற்றும் விவசாயிகள் சோளம் அல்லது கீரை வகைகள் போன்ற நைட்ரஜனை விரும்பும் பயிர்களை அதிக அளவில் நடவு செய்வதன் மூலம் மட்டுமே இது அதிகரிக்கும்.


சிறந்த நிலையில், யூரியா நுகர்வை சுமார் 45 மில்லியன் டன்களாக கட்டுப்படுத்தலாம். அதிகபட்ச சில்லறை விலையை (Maximum Retail Price(MRP)) சரிசெய்தல், விநியோகத்தை பங்கீடு செய்தல் (உதாரணமாக, ஒரு விவசாயிக்கு 25 மானிய விலை என்ற அடிப்படையில் பைகளுக்கு வரம்பிடுதல்) மற்றும் நைட்ரஜன் வெளியீட்டை மெதுவாக்கும் யூரியாஸ் அல்லது "நைட்ரஜன் ஏற்றம்" (Nitrification) தடுப்பான்களைச் சேர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.


விநியோகப் பக்கத்தில், தற்போதைய நிறுவப்பட்ட திறன்கள் 30–31 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) யூரியாவை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இறக்குமதியை 10 மில்லியன் டன்னுக்குள் வைத்திருக்க, இந்தியா சுமார் 5 மில்லியன் டன் புதிய திறனைச் சேர்க்க வேண்டும். இதன் பொருள், ஒவ்வொன்றும் 1.3 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் நான்கு புதிய ஆலைகளை உருவாக்குவது.


இந்தியாவில் தற்போது ஏழு செயல்பாட்டு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquefied natural gas (LNG)) முனையங்கள் உள்ளன. இவை குஜராத்தில் தஹேஜ், ஹசிரா மற்றும் முந்த்ரா; கேரளாவில் கொச்சி; மகாராஷ்டிராவில் தபோல்; தமிழ்நாட்டில் எண்ணூர்; மற்றும் ஒடிசாவில் தம்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. மேலும் ஆறு முனையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. தற்போதுள்ள முனையங்கள், விரிவான குழாய் வலையமைப்புடன், எரிவாயுவை இறக்குமதி செய்து நாட்டின் வலுவான யூரியா ஆலைகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றன.


இந்த அமைப்பைக் கருத்தில் கொண்டு, துறைமுகங்களுக்கு அருகிலுள்ள மேற்கு மற்றும் தெற்கு சந்தைகளுக்கு யூரியாவை இறக்குமதி செய்வது முக்கியமாக அர்த்தமுள்ளதாக இருக்கும். வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு, எரிவாயுவை இறக்குமதி செய்து உள்நாட்டில் யூரியாவை உற்பத்தி செய்வது மிகவும் சிக்கனமாக இருக்கும்.


இது மொத்தக் கப்பல்களில் நேரடியாக யூரியாவை இறக்குமதி செய்வதிலிருந்து வேறுபட்டது. இத்தகைய இறக்குமதிகள் கூடுதல் செலவுகள் மற்றும் சிக்கலான தளவாடங்களை உள்ளடக்கியது. இந்த செயல்முறையில் துறைமுகத்தில் இறக்குதல், பைகளில் அடைத்தல், மீண்டும் ஏற்றுதல் மற்றும் தொலைதூர நுகர்வு மையங்களுக்கு யூரியாவை கொண்டு செல்வது ஆகியவை அடங்கும்.


வரும் நாட்களில், யூரியாவின் விநியோகம் மற்றும் தேவையை நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இது பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக சிரமங்களை ஏற்படுத்தும்.



Original article:

Share:

அணுசக்தி சோதனைக்கு எதிரான உலகளாவிய ஒருமித்த கருத்து பலவீனமடைந்துவரும் நிலையில், இந்தியா அதன் தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். – அமிதாப் மத்தூ

 1998-ம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு இந்தியா காட்டிய கட்டுப்பாடான அணுகுமுறையானது அதன் அனுபவத்தை வெளிப்படுத்தியது. இன்று, அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், அந்தக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் இந்தியாவின் தயார்நிலை அதன் நம்பிக்கையை வெளிப்படுத்தும்.




அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை பரிசீலிக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்ததது, ஒரு பழைய விவாதத்தை மீண்டும் துவங்குவதைவிட அதிகம். பனிப்போருக்குப் பிந்தைய கட்டுப்பாடு குறித்த ஒருமித்த கருத்து எவ்வளவு பலவீனமாகிவிட்டது என்பதை அவர் உலகிற்கு நினைவூட்டினார். கடந்த முப்பதாண்டுகளாக, நாடுகள் அணு ஆயுத சோதனைக்கு தன்னார்வமாக, உலகளாவிய தடையைப் பின்பற்றி வருகின்றன. இது சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டதால் அல்ல, மாறாக இது அரசியல் வசதிக்கும், மற்றும் தார்மீக ரீதியிலான வலிமைக்கும் அடிப்படையாக செயல்பட்டது. இப்போது, ​​அந்த ஒப்பந்தம் பலவீனமடைந்து வருகிறது.


சோதனை இல்லாமல் அமெரிக்கா தனது அணு ஆயுத கிடங்கின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பது, மற்ற நாடுகளிலும் காணப்படும் நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றன. ரஷ்யா தனது ஆர்க்டிக் சோதனை மையங்களில் (Arctic test sites) செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளது. சீனா லோப் நூர் (Lop Nur) பகுதியில் தனது கட்டமைப்புகளை விரிவாக்குகிறது. மிக சக்திவாய்ந்த நாடுகள் சுயக்கட்டுப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கும்போது, அத்தகைய நம்பிக்கையைச் சார்ந்திருக்கும் உலகளாவிய அமைப்பு உடைந்துபோகத் தொடங்குகிறது.


இந்தியா இந்த உலகளாவிய மாற்றங்களை புறக்கணிக்க முடியாது. 1998-ல் இருந்து, இந்தியாவின் தன்னார்வ அணுசக்தி சோதனைத் தடை அதன் இராஜதந்திர ரீதியில் அனுபவத்தையும், நெறிமுறை நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. அது உலகிற்கு இந்தியாவின் அணுசக்தித் திட்டம் நெறிமுறை அடிப்படையில் செயல்படுவதாக உறுதியளித்தது. இதனால் இந்தியாவுக்கு தூதரக சட்டபூர்வ அங்கீகாரம், தடைநீக்கம், மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற நிபந்தனைகளுக்கும் வழிவகுத்தது. இருப்பினும், மறுஆய்வு இல்லாமல் கட்டுப்பாடு செயலற்றதாக மாறும். இந்தியா இப்போது தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும். இது சோதனையை மீண்டும் தொடங்கும் முதல் நாடாக அல்ல, ஆனால் சரிசெய்யும் கடைசி நாடாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த உதவும்.



25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சோதனைகளுக்குப் பிறகு உலகின் அணுசக்தி நிலைமை பெரிதும் மாறிவிட்டது. ரஷ்யா முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகியுள்ளது. சீனா தனது அணு ஆயுதக் கிடங்கை வேகமாக விரிவுபடுத்தி, புதிய ஏவுகணை கிணறுகளை உருவாக்கி வருகிறது. உண்மையான அணு ஆயுத சோதனைகளை கணினி உருவகப்படுத்துதல்கள் (computer simulations) நிரந்தரமாக மாற்ற முடியுமா என்று அமெரிக்கா கேள்வி எழுப்பி வருகிறது. இந்தியா ஒருபோதும் கையெழுத்திடாத விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம், பெரிய நாடுகள்கூட அதை அங்கீகரிக்காததால் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளது. இன்று, அணு ஆயுத உத்தரவு உண்மையான ஒப்பந்தத்தைவிட தற்காலிக வசதியையே அதிகம் சார்ந்துள்ளது.


இந்தியாவின் நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு என்ற கோட்பாடு, முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியில் உறுதிபடுத்தப்பட்டு, நாட்டிற்கு சிறப்பாக சேவையை செய்துள்ளது. இது இந்தியாவின் பொறுப்புணர்வானது இராணுவத் தயார்நிலையைப் பேணுவதைக் காட்டுகிறது. இது இந்தியாவின் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அனுபவசக்தி என்ற பிம்பத்தையும் வலுப்படுத்துகிறது. இருப்பினும், தடுப்பு நடவடிக்கைகளில் நம்பகத்தன்மை நிரந்தரமானது அல்ல. இது ஆயுதங்களை வைத்திருப்பதை மட்டுமல்ல, அவற்றின் செயல்திறனில் உள்ள நம்பிக்கையையும் நம்பியுள்ளது. இந்தியாவின் ஆயுதங்கள் 1998-ல் உறுதிசெய்யப்பட்ட வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது. அதன்பிறகு தொழில்நுட்பம், பொருட்கள், மற்றும் விநியோக அமைப்புகள் முன்னேற்றமடைந்துள்ளன. கண்டங்களுக்கு இடையேயான வரம்பைக் கொண்ட அக்னி-V இப்போது செயல்பாட்டுக்கு வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்பட்ட ஏவுகணைகளும் (Submarine-launched missiles) அறிமுகப்படுத்தப்படுகின்றன. அடுத்தகட்டமாக, பல சுதந்திரமான இலக்கு வைக்கக்கூடிய மறுநடவடிக்கை வாகனங்கள் (Multiple Independently Targetable Reentry Vehicle (MIRV)) உருவாகும். இதற்கு, வெடிப்புத் திறன் (yield), குறைக்கப்பட்டளவு (miniaturisation), மற்றும் நம்பகத்தன்மை (reliability) ஆகியவற்றில் புதிய நிலையின் உறுதிப்பாடு தேவைப்படும்.


கணினி மாதிரியாக்கம் மற்றும் துணை சோதனைகள் அறிவை விரிவுபடுத்தலாம். ஆனால், உண்மையான தரவுகளை முழுமையாக மாற்ற முடியாது. மிகுந்த அனுபவம் கொண்ட அமெரிக்காவேகூட உருவகப்படுத்துதல்கள் (simulations) போதுமானதாக இருக்கிறதா என நிச்சயமற்ற நிலையில் உள்ளது. குறைவான சரிபார்க்கப்பட்ட சோதனை முடிவுகளைக் கொண்ட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நிச்சயமற்றத் தன்மை அதிகமாக உள்ளது. முக்கிய கேள்வி இந்தியா உடனடியாக சோதனை செய்யவேண்டுமா என்பது அல்ல. மற்ற நாடுகள் சோதனையை மீண்டும் தொடங்கக்கூடிய எதிர்காலத்திற்கு இந்தியா எவ்வாறு தயாராக வேண்டும் என்பதுதான்.


கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்வது என்பது பொறுப்பற்ற முறையில் செயல்படுவதைக் குறிக்காது. சோதனை அவசியமானால், அது எப்போதாவது அவசியமானால், அறிவியல் பூர்வமாகவும், மட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொறுப்பானதாகவும் இருக்கலாம். ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக சரிபார்ப்புக்காக வடிவமைக்கப்பட்ட நிலத்தடி சோதனைகளின் தொடர், புதிய தலைமுறை வடிவமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். இதுபோன்ற சோதனைகள் இந்தியாவின் அணுசக்தி தடுப்பு நவீனமானது மற்றும் நம்பகமானது என்பதை எதிரிகளுக்குத் தெரிவிக்கும். அணுசக்தி இராஜதந்திரத்தில், உண்மையான வலிமையைப் போலவே கருத்தும் முக்கியமானது. இதை நம்புவதற்கு நம்பகத்தன்மை தெரியும்படி இருக்க வேண்டும்.


இருப்பினும், இந்தியா தனது கட்டுப்பாடு பெற்ற தார்மீக மற்றும் இராஜதந்திர மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும். பொறுப்பான அணு சக்தி என்ற அதன் நிலைமை, தொழில்நுட்பத் திறமை மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தும் அறிவும் சார்ந்தது. இதற்கான சவால் என்னவென்றால், கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தயாராக இருப்பதுதான். இந்தியா சோதனை செய்வதற்கான விருப்பத்தைத் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும், ஆனால் அணுசக்தி சோதனைகளை மீண்டும் தொடங்கும் முதல் நாடாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.


கட்டுப்பாடு என்பது செலவு இல்லாதது என்று கருதுவது, வளர்ந்துவரும் அதிகார சமநிலையை தவறாகப் புரிந்துகொள்வதாகும். சீனாவின் ஆயுதக் கிடங்கு அளவு மற்றும் நுட்பத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பாகிஸ்தான் உத்திமுறை மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளில் பன்முகப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா புதிய வகையான போர்முனைகளை உருவாக்கி மீண்டும் சோதனை செய்யத் தயாராக உள்ளது. இந்தியா நீண்டகாலமாக ஒருதலைப்பட்சமான கட்டுப்பாட்டைத் தொடர்ந்தால், அது புதிய உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டு கட்டமைப்பிலிருந்து விலக்கப்படலாம். உண்மையான இராஜதந்திர தன்னாட்சிக்கு கடினத்தன்மை அல்ல, நெகிழ்வுத்தன்மை தேவை.


சோதனை தவிர்க்க முடியாததாக மாறினால், அது இந்தியாவின் நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு மற்றும் முதல் பயன்பாடு இல்லை என்ற நெறிமுறைக் கட்டமைப்பிற்கு இணக்கமாக இருக்க வேண்டும். காட்சிப்படுத்தலுக்காக அல்ல, சரிபார்ப்புக்கான சோதனை, இந்த கொள்கைகளுடன் இணைந்து செயல்பட முடியும். அதன் குறிக்கோள் அறிவு மற்றும் தயார்நிலைக்காக இருக்க வேண்டுமே தவிர ஆக்கிரமிப்பு அல்லது அதிகரிப்புக்காக அல்ல.


இது வெறும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு அப்பால் ஒரு ஆழமான கேள்வி உள்ளது. ஒரு ஜனநாயக நாடு சோதனை இல்லாமல் நம்பகமான தடுப்பு முறையை பராமரிக்க முடியுமா? நம்பகத்தன்மையை மறுபரிசீலனை செய்யப்படாத ஆயுதங்களை நம்பியிருக்குமாறு தலைவர்கள், விஞ்ஞானிகளையும் வீரர்களையும் உண்மையாகக் கேட்க முடியுமா? 1998-ன் தார்மீக தெளிவைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம் இந்த சந்தேகங்களைத் தீர்க்க முடியாது. இந்தியாவுக்கு ஒரு திறந்த மற்றும் தகவலறிந்த தேசிய விவாதம் தேவை. இந்த விவாதம் தொழில்நுட்பம், உளவியல் மற்றும் அரசியல் ஆகியவற்றின் உயிருள்ள கலவையாக தடுப்பு முறையைப் பார்க்க வேண்டும்.


1998-க்குப் பிறகு இந்தியாவின் கட்டுப்பாடு அனுபவத்தைக் காட்டியது. இன்று அந்த கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் துணிவு நம்பிக்கையின் அடையாளம். மற்றவர்கள் சந்தேகிக்கும்போது தைரியத்திலிருந்தும், எச்சரிக்கையின்போது ஞானத்திலிருந்தும் இராஜதந்திர ரீதியில் சுயாட்சிநிலை வந்தது. தயார்நிலை அமைதியை உறுதி செய்யும்போது வழக்கத்தைவிட சிறப்பாக முடிவெடுக்க இந்தியாவுக்கு இப்போது அதே தைரியம் தேவை.


டிரம்பின் அறிவிப்பு ஒருபோதும் நெவாடா பாலைவனத்தில் உண்மையான அணு ஆயுத சோதனைகளுக்கு வழிவகுக்காமல் போகலாம். ஆனால், 1992 முதல் நிலவிவந்த அமைதி இப்போது சிதறத் தொடங்கியுள்ளது. கேள்வி — இந்தியா வெறும் பார்வையாளராக இருப்பதா அல்லது புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதா? மாறிவரும் உலகில், அசையாமல் இருப்பது புத்திசாலித்தனம் அல்ல, அது செயலற்ற தன்மையின் அடையாளம்.



இந்தியாவின் அணுஆயுத சோதனையை நிறுத்துவதற்கான இந்தியாவின் முடிவு தனக்குத்தானே அளித்த வாக்குறுதியாகும், மற்ற நாடுகளுடனான ஒப்பந்தம் அல்ல. தடைக்கான ஒவ்வொரு வாக்குறுதிக்கும் ஒரு வரம்புநிலை உண்டு. சூழ்நிலைகள் மாறும்போது, ​​அத்தகைய வாக்குறுதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். உண்மையான இராஜதந்திர ரீதியில் அனுபவம் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதற்குத் தயாராக இருப்பதாகும். உலகம் வெடிப்புகள் மூலம் ஆயுதங்களைச் சோதிக்கத் திரும்பினால், அதன் அணு ஆயுதத் தடுப்பு நெறிமுறை மற்றும் நம்பகமானது என்பதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும்.


அமிதாப் மத்தூ, பேராசிரியர் மற்றும் இயக்குநர், சர்வதேச ஆய்வு பள்ளி, ஜே.என்.யு; முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர் ஆவர்.



Original article:

Share: