இந்தியாவின் தொழில்நுட்ப அமைப்பை, தரவு மையங்களும் உலகளாவிய திறன் மையங்களும் (GCC) இயக்குகின்றன. -சிந்து கங்காதரன்

 உலகளாவிய நிறுவனங்கள் பொறியியல் தலைமையானது, தரவு உத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி மேம்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இந்தியக் குழுக்களை நம்பியுள்ளன.


இன்று உலகளாவிய தொழில்நுட்ப உரையாடல்களை வடிவமைக்கும் ஒரு மாற்றம் இருந்தால், அது உள்கட்டமைப்பு புதுமைகளை இயக்குகிறது என்பதை அங்கீகரிப்பதுதான் நிதர்சனம். இதில் செயற்கை நுண்ணறிவு (AI) லட்சியங்கள், மின்னணு தளங்கள் மற்றும் மேகக்கணினி தத்தெடுப்பு அனைத்தும் வலுவான மின்னணு அடித்தளங்களை சார்ந்துள்ளது. எனவே, தரவு மையங்கள் பின்னணி செயல்படுத்துபவர்களிடமிருந்து இராஜதந்திரரீதியில் சொத்துக்களுக்கு நகர்ந்துள்ளன. அதேநேரத்தில், இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்கள் (GCC), உலகளாவிய பொறியியல், தயாரிப்பு மேம்பாடு மற்றும் மேம்பட்ட மின்னணு கண்டுபிடிப்புகளில் தங்கள் பங்கை தொடர்ந்து வலுப்படுத்துகின்றன. இந்த இரண்டு போக்குகளும் சேர்ந்து அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை வடிவமைக்கின்றன. அதிகரித்துவரும் இந்த வேலை இந்தியாவில் இருந்து நடக்கிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பிலிருந்து எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. பெரிய மாதிரிகளுக்கு பயிற்சி அளித்தல், நிறுவன செயற்கை நுண்ணறிவு (AI) பணிச்சுமைகளை இயக்குதல், நிகழ்நேர பகுப்பாய்வுகளை இயக்குதல், அனைத்திற்கும் நிலையான கணினி சக்தி, பாதுகாப்பான சூழல்கள் மற்றும் நம்பகமான இணைப்பு தேவை. இன்று, உள்கட்டமைப்பு தேர்வுகள் இப்போது நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை எவ்வளவு விரைவாக பரிசோதிக்கலாம், பயன்படுத்தலாம் மற்றும் அளவிடலாம் என்பதை நேரடியாக பாதிக்கின்றன.


புதிய மெக்குவாரி ஈக்விட்டி ரிசர்ச் அறிக்கையின்படி, இந்தியாவின் தரவு மைய திறன் மிகப்பெரிய விரிவாக்கத்திற்கு தயாராக உள்ளது. இது கட்டுமானத்தில் உள்ள திறனை அடிப்படையாகக் கொண்டு 2027-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிடப்பட்ட திட்டங்கள் விரைவாகக் கண்காணிக்கப்பட்டால் 2030-ம் ஆண்டில் இது ஐந்து மடங்கு வளரக்கூடும். பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் தேசிய தலைநகர் பகுதி (NCR) முழுவதும் முதலீட்டு நடவடிக்கைகள் நிறுவன தேவை மற்றும் ஹைப்பர்-ஸ்கேலர் விரிவாக்கம் இரண்டையும் பிரதிபலிக்கின்றன. பல உலகளாவிய திறன் மையங்கள் (GCC) இந்தியாவில் இருந்து மேம்பட்ட பொறியியல், செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடு, சைபர் பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் மின்னணு தள உரிமையை வலுப்படுத்துகின்றன. இது இயற்கையாகவே உயர் செயல்திறன் கொண்ட உள்நாட்டு உள்கட்டமைப்பிற்கான தேவையை அதிகரிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) பணிச்சுமைகள் தாங்களாகவே உருவாகி வருகின்றன. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative AI), மின்னணு இரட்டையர்கள் (digital twins), தானியங்கித் தளங்கள் (automation platforms) மற்றும் நிகழ்நேர பகுப்பாய்வுகளுக்கு கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPU) தொகுப்புகள், மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் குறைந்த தாமத இணைப்பு போன்ற சிறப்பு உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. இந்த தேவைகள் இந்தியா முழுவதும் புதிய தரவு மைய வசதிகளின் வடிவமைப்பை வடிவமைக்கின்றன.


மக்கள்தொகை அளவிலான மின்னணு தளங்களுடன் இந்தியாவின் அனுபவம் பொறியியல் சிந்தனையை தொடர்ந்து பாதிக்கிறது. ஆதார், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) மற்றும் பிற மின்னணு பொது உள்கட்டமைப்பு ஆகியவை பெரிய அளவிலான மின்னணு அமைப்புகள் எவ்வளவு நம்பகமானவை செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளன. அந்த வெளிப்பாடு அளவு, மீள்தன்மை மற்றும் செயல்திறனைக் கையாள்வதில் பொறியியல் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. தரவு மையங்கள் நிறுவனங்களுக்கான கணக்கீட்டு முதுகெலும்பாக செயல்படுகின்றன. இந்த நம்பிக்கையை உண்மையான நிறுவன செயற்கை நுண்ணறிவு (AI) வரிசைப்படுத்தல்களாக மாற்ற அவை உதவுகின்றன. மேம்பட்ட தொழில்நுட்ப திட்டங்கள் எங்கு அமைந்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது, ​​நிறுவனங்கள் உள்கட்டமைப்பு தயார்நிலை, திறமை கிடைக்கும் தன்மை மற்றும் புதுமை சுற்றுச்சூழல் அமைப்புகளை ஒன்றாக மதிப்பிடுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவின் விரிவடைந்து வரும் தரவு மைய சுற்றுச்சூழல் அமைப்பு இந்த ஒட்டுமொத்த மதிப்பு முன்மொழிவை வலுப்படுத்துகிறது.

புதுமை செல்வாக்கு


இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) சுற்றுச்சூழல் அமைப்பு அளவு மற்றும் இராஜதந்திர முக்கியத்துவம் ஆகிய இரண்டிலும் தொடர்ந்து அளவிடப்படுகிறது. நாடு இப்போது இரண்டு மில்லியன் நிபுணர்களைப் பணியமர்த்தும் 1,700-க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது. நாஸ்காம் மதிப்பீடுகளின்படி, சுற்றுச்சூழல் அமைப்பு ஆண்டுதோறும் $50 பில்லியனுக்கும் அதிகமாக பங்களிக்கிறது. உலகளாவிய திறன் மையங்களுக்குள் (GCC) வேலையின் தன்மையும் மாறி வருகிறது. புதிய உலகளாவிய திறன் மையங்கள் (GCC) முதலீடுகளின் வளர்ந்துவரும் பங்கு, பாரம்பரிய தகவல் தொழில்நுடபம் (IT) அல்லது வணிக செயல்முறை ஆதரவைவிட செயற்கை நுண்ணறிவு (AI) பொறியியல், மேகக் கணினி தளங்கள், இணையப் பாதுகாப்பு, தயாரிப்பு மேம்பாடு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


உலகளாவிய நிறுவனங்கள் பொறியியல் தலைமை, நிறுவன தரவு உத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி மேம்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றிற்காக தங்கள் இந்திய குழுக்களை அதிகளவில் நம்பியுள்ளன. ஆட்டோமொடிவ் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இணைக்கப்பட்ட இயக்கம் தளங்களை உருவாக்குகின்றன. அவர்கள் இங்கே உட்பொதிக்கப்பட்ட மென்பொருள் மற்றும் மின்னணு இரட்டை திறன்களையும் உருவாக்குகிறார்கள். நிதி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான ஆபத்து மாடலிங், மோசடி கண்டறிதல் மற்றும் நிகழ்நேர பகுப்பாய்வு திட்டங்களை இங்கு மேம்படுத்துகின்றன. சுகாதார மற்றும் வாழ்க்கை அறிவியல் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக் கொண்ட குழுக்கள் மூலம் தரவு சார்ந்த ஆராய்ச்சி, மருத்துவ பகுப்பாய்வு மற்றும் நோயாளிக்கான நுண்ணறிவு தளங்களை விரிவுபடுத்துகின்றன. நிறுவன மென்பொருள் மற்றும் மேகக் கணினி நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பு பொறியியல் திறனை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றன.


திறமையின் வலிமை இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI), மேகக் கணினி பொறியியல், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு அறிவியலில் அதிகரித்து வரும் நிபுணத்துவத்துடன், உலகளவில் மின்னணு மற்றும் STEM திறமையின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. பெரிய அளவிலான மின்னணுத் தளங்களுக்கான வெளிப்பாடு, வலுவான கல்வி கூட்டமைப்புகள் மற்றும் ஒரு வலுவான புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு (startup ecosystem) ஆகியவை விரைவான பரிசோதனை சுழற்சிகளுக்கு பங்களிக்கின்றன.


உலகளாவிய திறன் மையங்கள் (GCC) அதிகாரப்பூர்வ உத்தரவுகளை விரிவடையும்போது, ​​உள்கட்டமைப்பு தேவைகள் இயற்கையாகவே அவற்றுடன் வளர்கின்றன. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) பணிச்சுமைகள், சைபர் பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் நிகழ்நேர பகுப்பாய்வு சூழல்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட கணினி உள்கட்டமைப்பு, குறைந்த தாமத இணைப்பு மற்றும் வலுவான தரவு நிர்வாக கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவைகளை ஆதரிப்பதில் தரவு மையங்கள் பெரிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக நிறுவனங்கள் பொறியியல் குழுக்கள் தரவு உள்கட்டமைப்புக்கு அருகில் செயல்பட விரும்பும்போது அவை மிகவும் முக்கியம். எனவே புதிய உலகளாவிய திறன் மையங்கள் (GCC) இடங்களை மதிப்பிடும் நிறுவனங்கள் திறமை கிடைக்கும் தன்மை, ஒழுங்குமுறை தெளிவு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு முதிர்ச்சியுடன் உள்கட்டமைப்பு தயார்நிலையையும் பார்க்கின்றன. இந்தியாவின் வளர்ந்து வரும் தரவு மையங்களின் வலையமைப்பு அதன் ஒட்டுமொத்த ஈடுபாட்டையும் வலுப்படுத்துகிறது. விரிவடையும் தடம் உலகளாவிய நிறுவனங்களுக்கான நாட்டின் மதிப்பு முன்மொழிவை மேம்படுத்துகிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) இறையாண்மையில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு


செயற்கை நுண்ணறிவு இறையாண்மை விரைவாக முக்கிய தொழில்நுட்ப உரையாடல்களின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. அரசுகளும் நிறுவனங்களும் நம்பகமான உள்கட்டமைப்பு, பாதுகாப்பான தரவு அமைப்புகள், பொறுப்புடன் கூடிய செயற்கை நுண்ணறிவு உருவாக்கம், மற்றும் கணினி ஆற்றலுக்கு உறுதியான அணுகல் ஆகியவை குறித்து சிந்தனை செய்து வருகின்றன. இந்த அம்சங்கள் தொழில்நுட்பம் எவ்வாறு, எங்கு உருவாக்கப்படுகிறது என்பதை நாளுக்கு நாள் அதிகம் தீர்மானிக்கின்றன.


இந்தியா பல வலுவான நிலைகளுடன் இந்தக் கட்டத்தில் நுழைகிறது. இது வலுவான மின்னணு திறமைக் குழு, விரிவடையும் கணினி உள்கட்டமைப்பு, வலுவான நிறுவன பங்கேற்பு மற்றும் மக்கள்தொகை அளவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மின்னணு பொது உள்கட்டமைப்பு ஆகியவை நம்பகமான செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாட்டிற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. மொழிகள், தொழில்கள் மற்றும் பயனர் சூழல்களில் செயல்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது இங்கு ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இந்த அனுபவம், உலகம் முழுவதும் பயனுள்ள AI தீர்வுகளை உருவாக்க இந்தியாவை நன்கு நிலைநிறுத்துகிறது. அதே நேரத்தில், இந்த தீர்வுகள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியும்.


பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (AI) இந்தப் பயணத்தின் மையமாக இருக்கும். நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நிர்வாகம் AI எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை வழிநடத்தும். தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையேயான ஒத்துழைப்பு, புதுமை பொறுப்பான முறையில் முன்னேறுவதை உறுதிசெய்ய உதவும். உள்நாட்டு கணினி திறன், பாதுகாப்பான தரவு சூழல்கள் மற்றும் வலுவான ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான அணுகல், இந்தியா தனது திறமை நன்மையை அளவிடக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பாக எவ்வளவு விரைவாக மொழிபெயர்க்க முடியும் என்பதை தீர்மானிக்கும். இந்த போக்கு ஏற்கனவே தொழில்துறை முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகள் வழியாக தெளிவாகப் புலப்படுகிறது.


முன்னோக்கி செல்லும் பாதை


இந்தியாவின் திறமை சுற்றுச்சூழல் அமைப்பு ஒரு தீர்க்கமான நன்மையாக உள்ளது. இந்தியா இரண்டாவது பெரிய AI/ML/Data Analytics திறமைக் குழுவாக உள்ளது. இந்தப் பெரிய திறமைத் தளம், யோசனைகளை சோதனைகளிலிருந்து உண்மையான வணிகப் பயன்பாட்டிற்கு விரைவாக நகர்த்த உதவுகிறது. இது ஆராய்ச்சியை நிறுவன தீர்வுகளாக மாற்றும் வேகத்தை அதிகரிக்கிறது. கல்வி கூட்டமைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முதலீடுகள் மற்றும் மின்னணு பொது உள்கட்டமைப்பு ஆகியவை ஒரு வலுவான கண்டுபிடிப்பு சுழற்சியை உருவாக்குகின்றன.


இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி உள்கட்டமைப்பு, திறமை, நிறுவன நம்பிக்கை மற்றும் கொள்கைகள் சரியான திசையில் நகர்கின்றன. தரவு மையங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மின்னணு தளங்களுக்கான வலுவான கணினி பலத்தை வழங்குகின்றன. உலகளாவிய திறன் மையங்கள் (GCC) பொறியியல் நிபுணத்துவம், தயாரிப்பு உரிமை மற்றும் புதுமை திறன் ஆகியவற்றை பங்களிக்கின்றன. இந்த கலவையானது வளர்ந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பில் இந்தியாவை வலுவாக நிலைநிறுத்துகிறது.


அடுத்த கட்டத்திற்கு உள்கட்டமைப்பில் நிலையான முதலீடு, தொடர்ச்சியான திறமை மேம்பாடு மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. இந்தியாவிற்கு அளவு, திறமை மற்றும் லட்சியம் உள்ளது. தொழில்துறை, அரசாங்கம் மற்றும் கல்வித்துறை இடையேயான தற்போதைய ஒத்துழைப்பு, இந்த ஆற்றல் உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையாக எவ்வளவு தூரம் மாறும் என்பதைத் தீர்மானிக்கும்.


கட்டுரையாளர் நாஸ்காமின் தலைவர் மற்றும் SAP லேப்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார்.

                


Original article :  Data centres, GCCs powering India’s tech stack. -Sindhu Gangadharan

Share:

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் : கட்டமைப்பு ஒப்பந்தத்தில் ஏன் 'உறுதிமொழியை மாற்றியமைக்கும்' (modify commitments) உட்பிரிவு, இந்தியாவுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது? -அனில் சசி

 இருதரப்பு நாடுகளின் ஒப்பந்தம் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது, இந்த பிரிவு இப்போது இந்தியா தனது தரப்பிலிருந்து வரிவிதிப்பு மற்றும் வரி அல்லாத சலுகைகளை மறுசீரமைக்க மிகவும் தேவையான இடத்தை வழங்கக்கூடும்.


இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வ உரையை இறுதி செய்வதற்காக திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள் பேச்சுவார்த்தைகளுக்காக வாஷிங்டன் டி.சி-க்குச் சென்ற இந்திய வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள், இந்த விவாதங்களை மறு திட்டமிடலுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததால் தங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது.


அமெரிக்கா கிட்டத்தட்ட 20 வர்த்தக கூட்டமைப்பாளர்களுடன் கட்டமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், இந்த 20-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைக்குட்பட்டவை என்று வலியுறுத்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் கடுமையாகக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, போதுமான முரண்பாடுகள் உள்ளன. இதில் ஒன்று, இந்தியாவின் ஒப்பந்தம் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது, இரு நாடுகளும் இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை மட்டுமே எட்டியுள்ளன. இரண்டு, மேலும் முக்கியமாக, இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பின் பிரிவு 8 குறிப்பிடுவதாவது, “எந்தவொரு நாடும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிவிதிப்புகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அமெரிக்காவும் இந்தியாவும் மற்ற நாடு அதன் உறுதிப்பாடுகளை மாற்றியமைக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றன.”


ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு பல சட்ட சவால்கள் இருப்பதால், இந்தியத் தரப்பிலிருந்து சேர்க்கப்பட்ட இந்தப் பிரிவு, இந்தியா அதன் வரி மற்றும் வரி அல்லாத சலுகைகளை சரிசெய்ய சில இடங்களை வழங்கக்கூடும். அதே நேரத்தில், முறையாக சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி பணியாற்ற அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து ஈடுபடலாம்.


உறுதிப்பாடு 'மாற்றியமைக்கப்பட்டுள்ளது'


சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (International Emergency Economic Powers Act (IEEPA)) கீழ் பெரும் வரிகளை விதிப்பதன் மூலம் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரங்களை மீறியதாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அமெரிக்காவின் உறுதிப்பாடு இப்போது "மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்று கூற இந்தியா அந்த குறிப்பிட்ட பிரிவை செயல்படுத்த முடியும். சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முந்தைய 18% "சலுகைச்" வரி இப்போது அமெரிக்காவின் அனைத்து வர்த்தக நட்பு நாடுகளுக்கும் ஒரு நிலையான 15% வரிவிதிப்பால் மாற்றப்பட்டுள்ளது.


அமெரிக்கா தற்போது அதன் வர்த்தகக் கொள்கையில் வழக்கத்திற்கு மாறாக நிலையற்ற கட்டத்தை கடந்து வருகிறது என்று முன்னாள் வர்த்தக பேச்சுவார்த்தையாளரும் டெல்லியை தளமாகக் கொண்ட வர்த்தக சிந்தனைக் குழுவான GTRI-ன் நிறுவனருமான அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார். இந்தியா அழுத்தத்தின்கீழ் செயல்படுவதைத் தவிர்த்து, "எச்சரிக்கை மற்றும் இராஜதந்திர தெளிவுடன்" முன்னேறுமாறு அவர் இந்தியாவுக்கு அறிவுறுத்தினார். "அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்தியா வெளியேறத் தூண்ட வேண்டும். பிப்ரவரி 6, 2026 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க-இந்தியா கூட்டு அறிக்கையில், 'எந்தவொரு நாட்டின் ஒப்புக் கொள்ளப்பட்ட வரிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அமெரிக்காவும் இந்தியாவும் மற்ற நாடுகள் தனது உறுதிப்பாடுகளை மாற்றியமைக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றன' என்று கூறுகிறது. அமெரிக்க வரிகள் இப்போது மாற்றப்பட்டுள்ளதால், பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த இந்தியா இந்த பிரிவை செயல்படுத்த வேண்டும்," என்று ஸ்ரீவஸ்தவா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.


முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்தியாமீது கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது என்று அவர் கூறினார். "18% பரஸ்பர வரி விகிதத்திற்கு ஈடாக, இந்தியா பெரிய சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்று அவர் விளக்கினார். இதில் வரிகளைக் குறைத்தல், அமெரிக்க நலன்களுடன் பொருளாதாரக் கொள்கைகளை இணைத்தல், அமெரிக்கப் பொருட்களைப் பாதிக்கும் விதிமுறைகளை தளர்த்துதல் மற்றும் அமெரிக்கப் பொருட்களை அதிக அளவில் வாங்குவதைக் குறிக்கும். இப்போது, ​​வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், எந்த சலுகைகளையும் வழங்காமலும்கூட, மற்ற நாடுகளைப் போலவே, பெரும்பாலான பொருட்களுக்கு இந்தியா 15% வரியை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக, முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஏற்பாடு கனமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தெரிகிறது என்று அவர் கூறினார்.


சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட 15% வரி, அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின்கீழ் இதற்குமுன் ஒருபோதும் பயன்படுத்தப்படாத மிக உயர்ந்த விகிதமாகும். இது 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ் உள்ளது. மேலும், இந்த 15% என்பது தற்காலிகமானது. ஏனெனில், இந்த விதி புதிய வரிகளை சுமார் ஐந்து மாதங்களுக்கு (150 நாட்கள்) மட்டுமே அமலில் வைத்திருக்க அனுமதிக்கிறது. அதன்பிறகு, அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க நாடாளுமன்றங்களில் ஒப்புதலைப் பெற வேண்டும். எனவே, நிச்சயமற்றத் தன்மைகள் நீடிக்கின்றன.


இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு கட்டமைப்பிற்கு ஒப்புக்கொண்டன. ஆனால். இருப்பினும், அவர்கள் அதில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடவில்லை. பேச்சுவார்த்தையாளர்கள் இந்த வாரம் ஒப்பந்தத்திற்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்படுவதால், இது முன்னர் விவாதிக்கப்பட்டிருந்தாலும், புது தில்லி உடனடியாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதன் சந்தைகளைத் திறக்க வேண்டியதில்லை என்று அர்த்தம். இருப்பினும், இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்தில் எதுவும் மாறவில்லை என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறினார்.


சட்ட ஒப்பந்தம் முழுமையாக நிறைவடைந்த பின்னரே இந்தியா சந்தை அணுகலை அனுமதிக்கும் என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஒருதலைபட்ச ஒப்பந்தங்களைச் செயல்படுத்த வெள்ளை மாளிகையின் சட்டப்பூர்வ அதிகாரம், இப்போது நிச்சயமற்றது. இந்த ஒப்பந்தங்கள் எதுவும் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கான முக்கிய அடிப்படை பரஸ்பர வரிவிதிப்புகள் எனப்படுபவை. இந்த பரஸ்பர வரிவிதிப்புகள் இப்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.


பிரிவு 122-ன் கீழ் அமெரிக்க நிர்வாகம் இப்போது விதித்துள்ள நிலையான 15% வரி கூட சட்டரீதியான நீதிமன்றத்தில் சவால் செய்யலாம். இந்த வரிவிதிப்பை நியாயப்படுத்த அமெரிக்கா பணம் செலுத்தும் சமநிலை சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பதை நிர்வாகம் நிரூபிக்க வேண்டும். அத்தகைய ஆதாரம் இல்லாமல், முடிவு சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்படாமல் போகலாம். இனிமேல், புதிய 15% சீரான வரி எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திற்கும் அடிப்படை கட்டமைப்பாக செயல்படும். அதாவது, அமெரிக்காவுடன் வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் எந்தவொரு நாடும் இந்த அடிப்படையிலிருந்து செயல்பட வேண்டும். ஒரு வர்த்தக கூட்டமைப்பு முன்னுரிமை அணுகல் அல்லது சிறப்பு சலுகைகளை விரும்பினால், அதன் பொருட்களின் மீதான வரி அர்த்தமுள்ளதாக இருக்க இந்த 15%-க்கு கீழே அமைக்கப்பட வேண்டும்.


பிரிவு 122-ன் கீழ் தற்போது விதிக்கப்பட்டுள்ள 15% வரிக்குப் பிறகு, மருந்துகள், மின்னணு சாதனங்கள் மற்றும் சில வாகன பாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விலக்குகள் உட்பட, அமெரிக்காவிற்கு இந்தியாவின் சராசரி வரிகள் தற்போது 34%-ஆக (வரிவிதிப்புகள் ஒட்டுமொத்தமாக 50%-ஆக இருந்தபோது) இருந்து சுமார் 9%-ஆக (15% பிரிவு 122 வரிகளுடன்) குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.





சீனா மீது பார்வை


இந்தியாவின் பார்வையில், சீன வர்த்தக ஒப்பந்தம் எங்கு செல்கிறது என்பதைக் கண்காணிப்பது முக்கியம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை சீனாவுக்குச் செல்ல உள்ளார் என்றும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வருகை நெருங்கி வருவதால், இந்தியா தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்த எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்.


ஆகஸ்ட் 2025 முதல் அமெரிக்காவிற்கு 50% கூட்டு வரியை (பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான கூடுதல் வரிகள்) இந்தியா எதிர்கொண்டது. இதன் பொருள் அமெரிக்காவிற்கு அதன் பயனுள்ள வரிகள் சீனாவைவிட சற்று அதிகமாக இருந்தது.


இந்த மாத தொடக்கத்தில் இரு தரப்பினரும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை ஒப்புக்கொண்ட பிறகு, ரஷ்ய எண்ணெய் அபராதம் நீக்கப்பட்டதால், தற்போது இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் விகிதம் 25% ஆகும். இது மேலும் 18%-ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டது. இந்த 18% விகிதம் வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பின் கீழ் தீர்மானிக்கப்பட்ட பரஸ்பர வரியாகும். இப்போது, ​​வரி இன்னும் குறைவாக 15%-ஆக உள்ளது.


இதற்கிடையில், சீனா பரஸ்பர வரிகளையும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் (மெக்ஸிகோ மற்றும் கனடாவுடன்) ஃபெண்டானில் வரிகளையும் எதிர்கொண்டது. இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக 45% வரை சேர்க்கப்பட்டது.


குறைந்தபட்சம் இப்போதைக்கு, இந்த 15% நிலையான வரிவிகிதத்துடன், பெரும்பாலான முக்கிய நாடுகள் வெள்ளிக்கிழமை நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பைவிட சிறந்த சூழ்நிலையில் உள்ளன. இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், கிட்டத்தட்ட அனைத்து ஆசியான் (ASEAN) நாடுகளும் இப்போது குறைந்த விகிதத்தை எதிர்கொள்கின்றன. கஜகஸ்தான், துருக்கி, தென்னாப்பிரிக்கா, லிபியா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகியவை இப்போது குறைந்த விகிதத்தை எதிர்கொள்கின்றன. இந்த புதிய விகிதங்கள் பிப்ரவரி 24 முதல் செயல்படுத்தப்படும். வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் டிரம்ப் சீனாவிற்கு மிகக் குறைந்த வரியை அறிவிப்பாரா என்பதுதான் பார்க்க வேண்டிய விஷயம்.


இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், வடக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி, அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகியவை இப்போது ரஷ்யாவுடன் அதிக வரிவிதிப்பு விகிதத்தில் உள்ளன.


ஐரோப்பிய ஒன்றியமும் ஸ்காண்டிநேவிய நாடுகளும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதிக்கப்பட்ட முந்தைய வேறுபட்ட வரிவிதிப்புகளின் கீழ் இருந்தன. இருப்பினும், உச்சநீதிமன்றம் அந்த வேறுபட்ட வரிவிதிப்புகளை ரத்து செய்துள்ளது.


Original article :  India-US trade deal: Why a ‘modify commitments’ clause in framework agreement offers New Delhi wriggle room. -Anil Sasi

Share:

சோடியம்-அயன் மின்கலன்கள் இந்தியாவிற்கு எவ்வாறு வெறும் தொழில்நுட்ப மாற்றத்தை மட்டுமன்றி அதற்கு மேற்பட்டவற்றையும் குறிப்பிடுகின்றன?. -கண்ணன் கே

 தொலைபேசிகள், நுகர்வோர் உபகரணங்கள், மடிக்கணினிகள், மின்சார வாகனங்கள் மற்றும் பெரிய ஆற்றல் சேமிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதிக விலை, பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் முக்கியமான கனிமங்களையும் சார்ந்துள்ளது. இந்த சிக்கல்கள் காரணமாக, சோடியம்-அயன் மின்கலன்கள் போன்ற மாற்று தொழில்நுட்பங்களில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். எனவே, சோடியம்-அயன் மின்கலன்கள் லித்தியம்-அயன் பேட்டரிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?


புது தில்லியில் (பிப்ரவரி 18–19) நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் (AI Impact Summit) ஒரு பகுதியாக, முக்கியமான கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் போன்ற புதிய காலகட்டத் துறைகளில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான அமெரிக்கா தலைமையிலான முன்முயற்சியான பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தில் (Pax Silica declaration) இந்தியா கையெழுத்திட்டது. இந்த அனைத்து பகுதிகளும் இந்தியாவிற்கு முக்கியமானவை மற்றும் கவலைகளை எழுப்புகின்றன.


முக்கியமான கனிமங்களின் சூழலில், லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான வளர்ந்து வரும் தேவை ஒரு உதாரணத்தை வழங்குகிறது. மின்சார வாகனங்கள் (EV) மற்றும் திறன்பேசிகளில் (smartphones) பயன்படுத்தப்படும் அனைத்து பேட்டரிகளிலும் லித்தியம்-அயன் மின்கலன்கள் கிட்டத்தட்ட 100 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இந்த மின்கலன்கள் லித்தியம், கோபால்ட், கிராஃபைட் மற்றும் நிக்கல் போன்ற முக்கியமான கனிமங்களைச் சார்ந்துள்ளது. இவை புவியியல்ரீதியாக இந்த தாதுக்கள் ஒரு சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் லித்தியத்தின் உள்நாட்டு இருப்பு குறைவாகவே உள்ளது.





மின்கலன்கள் நவீன வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. அவை தொலைபேசிகள், நுகர்வோர் உபகரணங்கள், மடிக்கணினிகள், மின்சார வாகனங்கள் மற்றும் பெரிய ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் போன்ற அன்றாட சாதனங்களுக்கு ஆற்றலை அளிக்கின்றன. தினசரி மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மின்கலன்கள் லித்தியம்-அயன் மின்கலன்கள். சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலைச் சேமிக்கவும் இந்த மின்கலன்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


லித்தியம் vs சோடியம்


நிக்கல்-காட்மியம் (nickel-cadmium) மற்றும் காரீய-அமிலம் (lead-acid) போன்ற பிற வழக்கமான மின்கலன்களுடன் ஒப்பிடுகையில், லித்தியம்-அயன் மின்கலன்கள் நீண்ட ஆயுட்காலம் மற்றும் அதிக ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளன. எனவே, லித்தியத்திற்கான தேவை உலகளவில் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. இது குறிப்பிடத்தக்க இராஜதந்திரரீதியில் புதிய தாக்கங்களைக் கொண்ட ஒரு முக்கியமான வளமாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த மின்கலன்கள் செலவு மிகுந்தவை, பாதுகாப்பு அபாயங்கள், அதன் தன்மை குறைவு, வெப்பநிலை உணர்திறன் மற்றும் முக்கியமான தாதுக்களைச் சார்ந்திருத்தல் தொடர்பான சிக்கல்களையும் எதிர்கொள்கின்றன.


இந்த வரம்புகள் சோடியம்-அயன் மின்கலன்தொழில்நுட்பம் போன்ற மாற்றுத் தொழில்நுட்பங்களில் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. இது நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க வாக்குறுதியை அளிப்பதாகக் கருதப்படுகிறது. இது திறம்பட பயன்படுத்தப்பட்டால், சோடியம்-அயன் மின்கலன் தொழில்நுட்பம் லித்தியம் நிறைந்த நாடுகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, ஏராளமான சோடியம் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், செறிவூட்டப்பட்ட விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும் மின்கலன் சந்தைகளையும் ஜனநாயகப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


சோடியம்-அயன் மின்கலன்களின் வளர்ந்து வரும் நம்பகத்தன்மையும் தெளிவாகத் தெரிகிறது. சமீபத்தில், சீன அரசுக்குச் சொந்தமான வாகன உற்பத்தியாளரான சாங்கன் ஆட்டோமொபைல்ஸ் (Changan Automobiles), சீன மின்கலன் உற்பத்தியாளரான CATL உடன் இணைந்து, லித்தியம்-அயன் மின்சார வாகனங்களை (EV) விட கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைவான சில்லறை விலையுடன் சோடியம்-அயன் (Na-ion) மின்கலன்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும், பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்தினர்.


சோடியம்-அயன் மின்கலன்களின் நன்மைகள்


லித்தியம்-அயன் மின்கலன்கள் ஒரு "ராக்கிங் சேர்" (rocking chair) செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பைக் கொண்டுள்ளன. இதில் லித்தியம் அயனிகள் (Li+) சார்ஜ் செய்யும் போது கேத்தோடில் இருந்து அனோடிற்கு ஒரு எலக்ட்ரோலைட் வழியாக நகரும். மேலும், வெளியேற்றத்தின் போது ​​அயனிகள் கேத்தோடுக்குத் திரும்பும். சோடியம்-அயன் பேட்டரிகளும் அதே கொள்கையில் இயங்குகின்றன. சோடியம் லித்தியத்தைவிட அதிக அணு நிறை கொண்டது. இதன் காரணமாக, சோடியம்-அயன் மின்கலன்கள் லித்தியம்-அயன் பேட்டரிகளைவிட கனமானவை. இருப்பினும், பிற செல் கூறுகளின் எடையைக் குறைக்கலாம். சோடியம்-அயன் மின்கலன்களும் பிற நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுக்கு லித்தியம்-அயன் மின்கலன்களுக்கு மாற்றாக அவற்றை வைக்கின்றன.


சோடியம்-அயன் மின்கலன்கள் கணிசமான நன்மைகளை வழங்குகின்றன. முதலாவதாக, சோடியம்-அயன் பேட்டரிகளுக்கு மாறுவதில் இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் நன்மையை அளிக்கிறது. உலகின் லித்தியத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் சிலி, அர்ஜென்டினா மற்றும் பொலிவியாவின் 'லித்தியம்-முக்கோணத்தில்' (Lithium Triangle) குவிந்துள்ளது. இது பெட்ரோலியப் பொருட்களில் OPEC ஆதிக்கத்திற்கு ஒத்த ஒரு புதிய வள ஆதிக்கத்தை உருவாக்குகிறது. அதேநேரத்தில், உலகின் மின்கலன் செல் உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனா கட்டுப்படுத்துகிறது.


லித்தியம் முக்கோணம் (Lithium Triangle) உலகின் பெரும்பாலான லித்தியத்தை வைத்திருப்பதாலும், சீனா அதன் செயலாக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதாலும், இந்தியா போன்ற நாடுகள் மின்கலன்தொழில்நுட்ப சந்தையில் 'இடைத்தரகர் பொறியில்' (middleman trap) சிக்கிக்கொள்ளக்கூடும். சோடியம் உலகின் 6-வது மிகுதியான தனிமமாகும். மேலும், கடல் உப்பு மற்றும் சோடா சாம்பலில் இருந்து ஒப்பீட்டளவில் எளிதாகப் பிரித்தெடுக்க முடியும். எனவே, சோடியம்-அயன் தொழில்நுட்பத்தில் இராஜதந்திர முதலீடு, உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆதிக்கத்தையும் இறக்குமதி சார்புநிலையையும் குறைக்க இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


செலவு, பாதுகாப்பு அபாயங்கள்


இரண்டாவதாக, சோடியம் ஏராளமாகவும் பிரித்தெடுக்க எளிதாகவும் உள்ளது. இது குறைந்த செலவில் பெரிய அளவிலான உற்பத்தியை சாத்தியமாக்குகிறது. இது மின்கலன் உற்பத்தி செலவுகளை 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது. லித்தியம்-அயன் மின்கலன்களுக்கு ஆனோடுகளில் தாமிரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதேநேரத்தில், சோடியம்-அயன் மின்கலன்கள் மலிவான அலுமினியத் படலத்தைப் பயன்படுத்த உதவுகின்றன. இது உற்பத்தி செலவுகளை மேலும் குறைக்கிறது.


தாமிரத்தைவிட பாதிக்கும் குறைவான விலை மற்றும் குறைந்த எடை கொண்ட அலுமினியத்தைப் பயன்படுத்துவது ஒரு முக்கிய நன்மையை அளிக்கிறது. மூன்றாவதாக, சோடியம்-அயன் மின்கலன்கள் முக்கியமான பாதுகாப்பு நன்மைகளை வழங்குகின்றன. லித்தியம்-அயன் மின்கலன்களைப் போலல்லாமல், போக்குவரத்தின்போது பூஜ்ஜிய வோல்ட் (zero volts (0 V)) வரை முழுமையாக வெளியேற்றப்படலாம். இது தளவாட செலவுகள் மற்றும் தீ விபத்துகள் இரண்டையும் குறைக்கிறது. இதற்கு மாறாக, லித்தியம்-அயன் மின்கலன்கள் பொதுவாக சேதத்தைத் தடுக்க குறைந்தபட்சம் 30 சதவீத மின்னேற்றத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இது போக்குவரத்தின் போது பாதுகாப்பு அபாயங்களை அதிகரிக்கிறது.


நான்காவதாக, குறைந்த வெப்பநிலையிலும் சோடியம்-அயன் மின்கலன்கள் அதிக மீள்தன்மை கொண்டவை. குளிர் காலங்களில் லித்தியம்-அயன் மின்கலன்கள் குறிப்பிடத்தக்க அளவு திறனை இழக்கின்றன. இருப்பினும், குறைந்த வெப்பநிலையிலும் சோடியம்-அயன் மின்கலன்கள் அவற்றின் செயல்திறனைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இது இந்தியாவில் அதிக உயரம் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.


ஐந்தாவது, சோடியம்-அயன் பேட்டரிகளுக்கு மாறுவதற்கு முன்கூட்டியே முதலீடுகள் தேவைப்படும் அதே வேளையில், உற்பத்தி வரிகளில் ஒப்பீட்டளவில் சிறிய மாற்றங்களுடன் லித்தியம்-அயன் பேட்டரிகளின் உற்பத்தி உள்கட்டமைப்புடன் இணக்கமாக மாற்ற முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இது இந்த தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள தேவையான மூலதனச் செலவைக் குறைக்கும். இந்த தொழில்நுட்பங்களைப் ஏற்றுக்கொள்ள தேவையான பெரிய முதலீடுகளையும் இது குறைக்க உதவும்.


முக்கிய தடைகள்


இந்த நன்மைகள் இருந்தபோதிலும், சோடியம்-அயன் மின்கலன்களுக்கு மாறுவது பல முக்கிய தடைகளை எதிர்கொள்கிறது. சோடியம், லித்தியத்தைவிட கனமாகவும் பெரியதாகவும் இருப்பதால், சோடியம்-அயன் மின்கலன்களை பருமனாகவும், கனமாகவும் ஆக்குகிறது. இதனால், ஒவ்வொரு கிராம் எடையும் முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட தூர மற்றும் உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களுக்கு அவற்றைப் பொருத்தமற்றதாக ஆக்குகிறது,


சோடியம் மின்கலன்கள் 'கடின-கார்பனை' (hard carbon) பயன்படுத்துகின்றன. கடின கார்பன் என்பது ஒரு வகை கார்பன் ஆகும். இது மிக அதிக வெப்பநிலையில் கூட கிராஃபைட்டாக மாறாது. இந்த தொழில்நுட்பம் இன்னும் வணிக அளவீட்டின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதன் விளைவாக, உற்பத்தி செலவுகள் அதிகமாக உள்ளன.


மேலும், இன்றைய உலகளாவிய மின்கலன்உள்கட்டமைப்பு லித்தியம்-அயன் மின்கலன் அமைப்புகளுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. சோடியம்-அயன் பேட்டரிகளுக்கு முற்றிலும் புதிய உற்பத்தி தொடர்ச்சி நிலைகள் தேவையில்லை என்றாலும், சோடியம்-அயனிக்கு ஏற்றவாறு லித்தியம்-அயன் மின்கலன் உற்பத்தி தொடர்ச்சி நிலைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு இன்னும் குறிப்பிடத்தக்க மூலதன முதலீடுகள் தேவைப்படும்.


மின்கலன் உற்பத்தியை நோக்கிய இந்தியாவின் முயற்சிகள்


இந்திய அரசு மின்கலன் தொழில்நுட்பத்தை தன்னிறைவை அடைவதற்கான ஒரு முக்கிய பகுதியாக அடையாளம் கண்டுள்ளது. மேலும், இதை அடைய பலதரப்பட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. மின்கலன் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் நோக்கங்களின் முக்கிய மையமானது மேம்பட்ட வேதியியல் செல்லுக்கான (Advanced Chemistry Cell (ACC)) உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டமாகும். இது ₹18,100 கோடி செலவில், இந்தியாவில் லித்தியம்-அயன் மற்றும் சோடியம்-அயன் போன்ற மாற்று வேதியியல் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இது முயல்கிறது. தமிழ்நாட்டில் ஓலா எலக்ட்ரிக் மூலம் ஜிகா-அளவிலான (1.4 GWh) தொடர் வரிசையுடன் இந்தியாவில் முதல் லித்தியம்-அயன் செல் உற்பத்திக்கான வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் முக்கிய பயனாளிகளில் ஒன்றாகும்.


2019-ம் ஆண்டில், இந்தியா சுரங்க அமைச்சகத்தின்கீழ் மூன்று இந்திய பொதுத்துறை நிறுவனங்களான தேசிய அலுமினியம் கார்ப்பரேஷன் (National Aluminium Corporation(NALCO)), இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited(HCL)) மற்றும் கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை லிமிடெட் (Mineral Exploration and Consultancy Limited (MECL)) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Limited (KABIL)-ஐ நிறுவியது. அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு (G2G) ஒத்துழைப்புகள், கூட்டு முயற்சிகள் மற்றும் மூலப்பொருட்களைப் பாதுகாப்பதற்கான நேரடி முதலீடுகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்களுக்கு லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற கனிமங்களின் நம்பகமான விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டது. கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL) நிறுவனம் 2025-ம் ஆண்டில் தேசிய முக்கியமான கனிம திட்டத்தில் (National Critical Mineral Mission (NCMM)) ஒருங்கிணைக்கப்பட்டது.


மேலும், இராஜதந்திர உலகளாவிய கையகப்படுத்துதல்கள் மூலம் இந்தியா தனது மின்கலன் எதிர்காலத்தைப் பாதுகாத்து வருகிறது. தனியார்துறை நிறுவனத்தால் ஃபராடியனை நிறுவனத்தை கையகப்படுத்துவது விவசாயக் கழிவுகளிலிருந்து முக்கியமான மின்கலன் கூறுகளை உற்பத்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்ப உந்துதல், கட்டமைப்பு சேமிப்பிற்கான அரசாங்கத்தின் நம்பகத்தன்மை இடைவெளி நிதியளிப்பால் (Viability Gap Funding (VGF)) ஆதரிக்கப்படுகிறது. இந்த முயற்சிகள் ஒன்றாக, உலகளாவிய லித்தியம் விநியோகச் சங்கிலிகளை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒரு வட்ட ஏரிசக்தி பொருளாதாரத்தை வளர்க்கின்றன மற்றும் அதன் இராஜதந்திர சுயாட்சியை வலுப்படுத்துகிறது.


வள சார்புநிலைக்கு அப்பால் நகர்தல்


சுருக்கமாக, சோடியம்-அயன் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறுவதற்கும், தன்னிறைவு இந்தியா நிலையை (Atmanirbhar status) வெற்றிகரமாக அடைவதற்கும் நன்கு திட்டமிடப்பட்ட உத்தி அவசியம் என்று குறிப்பிடலாம். விவசாயக் கழிவுகளிலிருந்து மின்கலன் கூறுகளை உருவாக்க கடின கார்பன் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பது இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும் செலவுச் சேமிப்பை எளிதாக்குவதன் மூலமும் மாற்றத்தை எளிதாக்கும். கூடுதலாக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் விவசாயப் பகுதிகளில் இந்த நிறுவனங்களை அமைப்பது, வைக்கோல் எரியும் நெருக்கடியைத் தீர்க்கவும், சோடியம்-அயன் விநியோகச் சங்கிலியை உள்ளூர்மயமாக்கவும் உதவும்.


சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) போன்ற மின்கலன் தொழில்நுட்பங்களுக்கான வலுவான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை அமைப்பது மேலும் உதவும். இந்தியாவின் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards (BIS)) நுகர்வோர் நம்பிக்கையை உறுதி செய்வதற்கும் சோடியம் மூலம் இயங்கும் மின்சார வாகனங்களுக்கான வாகன சான்றிதழ் செயல்முறையை எளிதாக்குவதற்கும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிலைகளை நிறுவக்கூடும். சோடியம்-அயன் மின்கலன்கள் கொண்ட மின்சார வாகனங்களுக்கான மானியங்கள், குறைந்தபட்சம் ஆரம்ப கட்டத்திலாவது, நுகர்வோர் தேவையைத் தூண்டக்கூடும்.


சோடியம் பேட்டரிகளை அறிமுகப்படுத்துவதற்கு இரு சக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனப் பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் சரியான படியாக இருக்கலாம். இந்த சந்தைகளில், குறிப்பாக இந்தியாவில், நுகர்வோர் நீண்ட தூரத்தைவிட குறைந்த விலையை விரும்புவதால், இதற்கான பாதை மாறுகிறது. முடிவாக, சோடியம்-அயன் மின்கலன்கள் இந்தியாவிற்கு ஒரு தொழில்நுட்ப மாற்றத்தை விட அதிகமாக பிரதிபலிக்கின்றன. இது இந்தியா வள சார்புநிலையைத் தாண்டி முன்னேற ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தொழில்நுட்பத் தலைமையுடன், இந்தியாவின் நிகர பூஜ்ஜிய 2070 லட்சியங்களுக்கு இது மிக முக்கியமானதாக இருக்கும்.


Original article :  How sodium-ion batteries represent more than just a technological shift for India?. -Kannan K

Share:

காலநிலை நிதி என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 அமெரிக்கா, பல முக்கியமான சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறி, பருவநிலை பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை கைவிட முடிவு செய்துள்ள உலகில், பன்னாட்டுக் கொள்கை (Multilateralism) பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச பருவநிலைக் கொள்கையின் தார்மீக மற்றும் அறநெறி கட்டமைப்பு பலவீனம் அடைந்துள்ளதாக ஆர். ஆர். ரஷ்மி  குறிப்பிடுகிறார். 


முக்கிய அம்சங்கள்:


— உலக நாடுகளின் ஒத்துழைப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பது, உலகின் அமெரிக்கா போன்ற மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள் பன்னாட்டு அமைப்புகளில் இல்லாதது மட்டும் அல்ல என்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகளுக்கு ஒரு நீண்டகால ஆபத்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடுகளுக்கு இடையே பெருகிவரும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள், ஒருமித்த கருத்துடைய சட்டமுறைமையின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுகின்றன. இது பொதுவான சர்வதேச இலக்குகளுக்குப் பதிலாக, இரு நாடுகளுக்கு இடையிலான லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தங்களாக மாறி வருகின்றன.


— இது சர்வதேச அளவிலான காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு இரண்டு மடங்கு சிக்கலை உருவாக்குகிறது. உலகளாவிய காலநிலை இலக்கை நாம் தவறவிடக்கூடும் என்றும், 1.5°C வெப்பநிலை வரம்பைத் தாண்டிவிட வாய்ப்புள்ளதாகவும் அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் கொள்கை மாற்றம், தூய்மையான எரிசக்தி மீதான அரசு மற்றும் தனியார் முதலீடுகளைக் குறைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இது உலகளாவிய காலநிலை மாற்ற இலக்குகளை அடைவதில் உள்ள இடைவெளியை இன்னும் அதிகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 


— இந்தச் சவாலை உணர்ந்து, 30-வது காலநிலை மாநாட்டின் (COP30) தலைமைத்துவம் வருங்கால நடவடிக்கைகளுக்கான சட்டபூர்வமான ஒருமித்த கருத்தைத் தேடுவதோடு மட்டும் நின்றுவிடாமல், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட காலநிலை நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தது. இந்த அணுகுமுறையிலிருந்துதான் உலக அளவிலான செயல்படுத்தல்களை  துரிதப்படுத்தும் (Global Implementation Accelerator) முன்முயற்சி திட்டம் உருவானது. இது உலகளாவிய செயல்முறைகளை மறுசீரமைப்பதன் மூலம் பன்னாட்டுக் கொள்கைகளுக்கு (multilateralism) ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைச் சரிசெய்யும் முயற்சியைக் காட்டுகிறது. பெலெம் (Belém) மாநாட்டில் உருவாக்கப்பட்ட இரு அடுக்கு முறை—இதில் ஒன்று சட்டபூர்வமான அர்ப்பணிப்புகளை வலுப்படுத்துவதிலும், மற்றொன்று அவற்றைச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. 


— தற்போதைய சூழலில், நடைமுறைச் சிக்கல்களில் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து, முக்கியப் பொருளாதார நாடுகள் எடுக்கக்கூடிய நேரடிச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது சிறந்தது என்றும் கூறப்படுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத மாசுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு போன்ற நடவடிக்கைகளைத் தலைமை முன்னிலைப்படுத்தினாலும், காலநிலை நிதி (climate finance), எரிசக்தி மாற்றம் மற்றும் சமமான உலகளாவிய செயல்பாட்டு கட்டமைப்பு போன்ற தீர்க்கப்படாத பிரச்சனைகளால் உலக நாடுகள் இன்னும் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.


— நிதி என்பது தொடர்ந்து பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் 'நிகர பூஜ்ஜிய' (Net Zero) இலக்கை அடைவதற்கான நிதியுதவியில் பெரும் இடைவெளி இருப்பதை நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய காலநிலை நிதியோட்டம் ஆண்டுக்கு சுமார் $1.9 டிரில்லியன் டாலராக உள்ளது. ஆனால், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த ஆண்டுதோறும் $6-9 டிரில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இந்தியாவிற்கு மட்டும் 2070-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் $10-20 டிரில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்கு $250-450 பில்லியன் டாலர் தேவைப்படும் நிலையில், தற்போது சுமார் $135 பில்லியன் டாலர் மட்டுமே கிடைக்கிறது. இதன் பொருள், உள்நாட்டு நுகர்வைப் பாதுகாக்கவும், மக்கள் நலன் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும் கூடுதல் முதலீடுகள் மிக அவசியமாகும். எனவே, தூய்மையான மற்றும் சமமான எரிசக்தி மாற்றத்திற்கான உலகளாவிய நிதி ஆதரவைத் தக்கவைக்க, விருப்பமுள்ள நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியமாகிறது. 


— காலநிலை பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்படும் ஒருதலைபட்சமான வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து, நாடுகளுக்கு இடையிலான பலதரப்பு ஒத்துழைப்பைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். உலகின் சில முக்கிய வல்லரசு நாடுகள், உலகளாவிய கார்பன் தரநிலைகளைத் திணிப்பது போன்ற செயல்களின் மூலம் தங்களின் சுற்றுச்சூழல் இலக்குகளை நிலைநாட்ட வர்த்தகக் கொள்கைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. எனவே, சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட பருவநிலை கட்டமைப்போடு ஒத்துப்போகக்கூடிய உள்நாட்டுக் கொள்கைகள் குறித்த பொதுவான புரிதல் சர்வதேச நாடுகளிடையே ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


உங்களுக்குத் தெரியுமா?


— காலநிலை நிதி (Climate finance) என்பது பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கும் அல்லது அதன் பாதிப்புகளைச் சமாளிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் பெருமளவிலான முதலீடுகளைக் குறிக்கிறது.


— தகவமைப்பு (Adaptation) என்பது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அல்லது குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் ஆகும். உதாரணமாக, உயர்ந்து வரும் கடல் மட்டத்திலிருந்து கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கத் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் ஆகும். 


— காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடையாமல் இருக்க, பசுமை இல்ல வாயுக்களின் (GHG) வெளியேற்றத்தைக் குறைப்பதே 'தணிப்பு' (Mitigation) நடவடிக்கை எனப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், காடுகளின் பரப்பளவை விரிவுபடுத்துவதன் மூலமும் இதனைச் சாதிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


Original article :  What is climate finance? -Roshni Yadav

Share:

அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு: இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026 பற்றி…

 இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு காட்டியது.


புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் கூடியிருந்த பெரும் கூட்டம், டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பற்றி அதிக ஆர்வம் கொண்டிருப்பது தெரியவந்தது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் வழங்கிய புள்ளிவிவரங்களில் இந்தியா அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய பயனர் நிலையாக உள்ளது என்று சொல்லப்பட்டாலும், அந்த வாரம் நடைபெறும் கூட்டங்கள், இந்தியர்கள் இந்த தொழில்நுட்பத்தை எவ்வளவு விரும்புகின்றனர் என்பதன் மிகப்பெரிய சான்றாக இருந்தது. முக்கியமாக, இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு பற்றிய வருடாந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக இருந்தது. 89 நாடுகள், செயற்கை நுண்ணறிவு ஜனநாயகமயமாக்கலைப் பற்றிய அறிவைப் பகிரும் உறுதிமுறைகளை ஒப்பந்தமாக கையெழுத்திட்டுள்ளன. இந்த மாநாடு இந்தியாவுக்கு சில சவால்களையும் காட்டுகிறது: பெரும்பாலான மூலதனம் மற்றும் கட்டமைப்புகள் வெளிநாட்டில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் பயன்படுத்துவது மற்றும் உலக செயற்கை நுண்ணறிவு சூழலில் இந்தியர்களுக்கான பொருளாதார மாற்றங்களில் நிலையை உருவாக்குவது. இந்தியாவின் தரவு மையத் திறன் வேகமாகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மேலும் உத்வேகத்தை அளிக்கிறது. வரைகலைச் செயலாக்க அலகுகளின் (Graphics Processing Unit (GPU)) செலவுகள் செயற்கை நுண்ணறிவை இயக்குவதால் உள்நாட்டு பயன்பாட்டுச் செலவு அதிகமாகும்போது கடினமான கேள்விகள் எழுப்புகிறது. உருவாக்கப்பட வேண்டிய கூடுதல் மின் திறனைக் குறிப்பிடவில்லை. மாதிரிகள் பயன்பாட்டுக்கான மையமாக மாறுவதை அதிகமாக நம்பியிருக்கும் ஒரு தேசிய உத்தி, அவற்றின் பயிற்சி ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்; அனைத்திற்கும் மேலாக, குறைவான தொழிலாளர் செலவால் இந்தியா பெற்ற நன்மை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள்  (Information Technology enabled Services (ITeS)) காலத்தைவிட குறைவாக இருக்கும்.


சர்வதேச ஒத்துழைப்பு முன்னணியில், செயற்கை நுண்ணறிவிற்கான அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியா செயல்படுத்தியது ஏமாற்றமளிக்கிறது. இது பொருளாதார மற்றும் சமூக சீர்குலைவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models (LLM)) சமூகம் முழுவதும் எவ்வாறு பரவுகின்றன என்பதைப் பொறுத்து கருவிகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை கூட்டாக உருவாக்க நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் செயற்கை நுண்ணறிவு மன்றத்தைப் பயன்படுத்த வேண்டும். உலகளாவிய தெற்கின் தலைமைத்துவம் என்பது பெரும் வல்லரசு போட்டிகளின் காலத்தில் சிறிய நாடுகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும். செயற்கை நுண்ணறிவு காலத்தை  தீவிரமாக வரையறுக்கிறது. எந்த செலவிலும் ஒற்றுமையை (consensus) அடைவது சரியான அணுகுமுறை அல்ல. செயற்கை நுண்ணறிவை ஆர்வமாக ஏற்கும் நாடாக இந்தியா, செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்திற்கு நம்பிக்கையுடன் கூடிய, கவனமான முன்முயற்சியை முன்வைக்கும் திறனையும் வாய்ப்பையும் கொண்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் முக்கிய குறிக்கோள் தெளிவாக உள்ளது: செயற்கை நுண்ணறிவு அளிக்க வேண்டுமென்றால், அதன் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்தியா தனது டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும்போது, ​​அணுகல் அல்லது புரிதலில் எந்த இடைவெளியையும் கொண்டிருக்கக் கூடாது. இந்தியாவால் உலகளாவிய வளர்ச்சிக்கு இயற்கையாகவே பங்களிக்க முடியும் என்பதையும், அது விரும்பினால், அதன் சொந்த வளர்ச்சியை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வழிநடத்த முடியும் என்பதையும் இந்த உச்சிமாநாடு காட்டியது.


Original article :  AI for all: On the India AI Impact Summit 2026.

Share:

பசுமை அம்மோனியா வழியிலான இந்தியாவின் ஆற்றல் மாற்றம் -பவன் முலுக்குட்லா, அனுராக் நல்லபனேனி, சினேகா மல்ஹோத்ரா

 நாட்டின் பசுமை அம்மோனியா ஏல மாதிரியானது (ammonia auction model), தூய்மையான எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உலகளாவிய தரநிலைகளை மறுவரையறை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


ஜனவரி 2026-ல், இந்திய எரிசக்தி வாரத்தின் (India Energy Week (IEW)) முதல் அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய எரிசக்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், எரிசக்தித் துறையில் $500 பில்லியன் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். இந்தியா எரிசக்தி பாதுகாப்பிலிருந்து எரிசக்தி சுதந்திரத்திற்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பசுமை ஹைட்ரஜன் போன்ற தூய்மையான ஆற்றலை மலிவு விலையில் வழங்குவது வெற்றிகரமான எரிசக்திக்கு மாறுவது முக்கியமானதாகும். நைட்ரஜனுடன் பசுமை ஹைட்ரஜனைச் சேர்த்து தயாரிக்கப்படும் பசுமை அம்மோனியா, இப்போது உரங்கள் முதல் தூய்மையான ஆற்றல் மற்றும் கடல் எரிபொருள் வரை பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. பசுமை அம்மோனியா ராஜதந்திர நடவடிக்கை மூலம், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் தென்கொரியா போன்ற பிராந்தியங்களில் முன்னேறியுள்ளது.


ஒருங்கிணைந்த கொள்முதல் வழிமுறைகள் உலகளாவிய பசுமை அம்மோனியா சந்தைக்கு அடித்தளத்தை உருவாக்க தொடங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஹைட்ரஜன் இறக்குமதி உத்தியின்கீழ் H2Global-ன் பசுமை அம்மோனியா ஒப்பந்தம், மொத்த எரிபொருளாக தூய்மை அம்மோனியாவை கொள்முதல் செய்வதற்கான தென் கொரியாவின் தூய்மை ஹைட்ரஜன் போர்ட்ஃபோலியோ தரநிலை (Clean Hydrogen Portfolio Standard (CHPS)) ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான ராஜதந்திர தலையீடுகள் (Strategic Interventions for Green Hydrogen Transition (SIGHT)) திட்டத்தின்கீழ் இந்திய சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India (SECI)) சமீபத்தில் முடிவு செய்த ஒப்பந்தம் போன்றவை சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.


பசுமை அம்மோனியா  ஏலம்


இந்த உலகளாவிய கொள்முதல் நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில், இந்திய சூரிய ஆற்றல் கழகத்தின் (Solar Energy Corporation of India (SECI)) மூலம் நடத்தப்பட்ட இந்தியாவின் பசுமை அம்மோனியா ஏலத்தில் அதிகமான நபர்கள் பங்கேற்றனர். 15 ஏலதாரர்கள் பங்கேற்று 7 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். SIGHT திட்டத்தின் கீழ், SECI ஜூன் 2024-ல் இந்தியாவின் 13 உர அறுவடை தொழிற்சாலைகளுக்காக ஆண்டுக்கு அதிகபட்சம் 724,000 டன் பச்சை அமோனியாவிற்கான ஒப்பந்தத்தை வெளியிட்டது. இந்த ஒப்பந்தங்கள் ஆகஸ்ட் 2025-ல் முடிவடைந்தன. வெற்றி பெற்ற ஏலதாரர்களுக்கு 10 ஆண்டு நிலையான விலையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. விலை மற்றும் கொள்முதல் குறித்த இந்த தெளிவு, முதலீட்டிற்குத் தேவையான சந்தை உறுதிப்பாட்டை உற்பத்தியாளர்களுக்கு வழங்கியது. இந்த ஏலங்கள் செலவு-போட்டித்தன்மை கொண்ட பசுமை அம்மோனியா கொள்முதலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தின. இது புதிய உலகளாவிய அளவுகோல்களை அமைத்தது. இது H2Global ஏலத்தின் விலைகளை விட ஏறக்குறைய 40%-50% குறைவானவான அளவாகும்.


ஒப்பந்த செயல்முறை பல முறை நீட்டிக்கப்பட்டு திருத்தப்பட்டன. இது, திட்ட உருவாக்குபவர்களும் வாங்குபவர்களும் எழுப்பிய அபாயங்கள், பணம் பாதுகாப்பு, விலை மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு நியாயமான அமைப்பை உருவாக்கியது.


இந்த ஏலத்தில், ஏழு ஏலதாரர்கள் பசுமை அம்மோனியாவிற்கான  13 விநியோக ஒப்பந்தங்களைப் பெற்றனர். ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 3,70,000 டன்களுக்கு ஆறு ஒப்பந்தங்களை வென்றது. இந்த ஒப்பந்தங்களில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கிலோவிற்கு ₹8.82, ஒரு கிலோவிற்கு ₹7.06 மற்றும் ஒரு கிலோவிற்கு ₹5.3 உற்பத்தி மானியங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஏற்கனவே உள்ள உர உற்பத்தியாளர்களுக்கு 10 ஆண்டு நிலையான விலை விநியோக ஒப்பந்தம் ஆகியவை அடங்கும்.


இந்த ஒப்பந்தங்களில் பசுமை அம்மோனியாவின் விலைகள் ₹49.75 மற்றும் ₹64.74/கிலோ (ஒரு டன்னுக்கு $572 மற்றும் $744) வரை இருக்கும். இந்தியாவில், சாம்பல் அம்மோனியா (grey ammonia) விலை டன்னுக்கு $515 வரை அதிகமாக உள்ளது. நீண்டகால ஒப்பந்தங்களால் ஆதரிக்கப்படும் பசுமை அம்மோனியாவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விலையை காரணியாக்கும்போது, ​​செலவு இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது.


விநியோகம் மற்றும் போக்குவரத்து


குறிப்பாக, இந்திய சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India (SECI)) ஒப்பந்தத்தின் ஒரு தனித்துவமான அம்சம், விநியோக புள்ளிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பது ஆகும். ஏனெனில், பசுமை அம்மோனியாவிற்கு தேவையான உர ஆலைகள் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. இது கப்பல் போக்குவரத்து மூலமாக பசுமை அம்மோனியாவை கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும். ஒப்பந்தங்களின் கீழ் வாங்கப்படும் பசுமை அம்மோனியா அனைத்து அம்மோனியா இறக்குமதிகளிலும் 30% பங்களிலிக்கிறது. இது கணிக்கக்கூடிய விலைகளை வழங்குகிறது மற்றும் உலகளாவிய எரிவாயு சந்தைகள், நாணயம் மற்றும் அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. சாம்பல் அம்மோனியாவின் விலை அதிகமாக உள்ள இடங்களில், பசுமை அம்மோனியாவை வாங்குவது பயன்பாட்டாளர்க்கு உதவியாக இருக்கும். 


வேகத்தை ஊக்குவித்தல்


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செலவுகள், பெரிய அளவிலான தளவாடங்கள், வலுவான ஒப்பந்த வடிவமைப்பு மற்றும் இலக்கு சார்ந்த ஊக்கத்தொகைகள் போன்றவற்றின் காரணமாக, இந்தியாவின் அணுகுமுறை உலகளவில் தூய்மையான அம்மோனியா நிலப்பரப்பை அதிகளவில் வடிவமைத்து வருகிறது. தொழில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை கார்பனை நீக்க நம்பகமான சுத்தமான அம்மோனியா இறக்குமதியை அதிக நாடுகள் இந்தியாவை நாடுவதால், இந்தியாவின் வெற்றிகரமான ஏல மாதிரி வளர்ந்து வரும் உலகளாவிய சந்தை கட்டமைப்புகளை வடிவமைக்கவும், அதிக அளவில் பயன்படுத்தவும் சிறந்த நிலையில் உள்ளது.


இருப்பினும், இந்தியாவின் பசுமை அம்மோனியா ஏலங்களால் உருவாக்கப்பட்ட வேகத்தைத் தக்கவைக்க கொள்கை வகுப்பாளர்கள், திட்ட உருவாக்குநர்கள் மற்றும் நிதியாளர்களிடமிருந்து ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நடவடிக்கை தேவைப்படும். உருவாக்குநர்கள் வலுவான தொழில்நுட்ப மற்றும் நிதிரீதியான விடாமுயற்சியில் கவனம் செலுத்த வேண்டும். கலப்பின புதுப்பிக்கத்தக்க அமைப்புகளை சேமிப்பகத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், நீண்டகால செயல்பாட்டு நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வெளிப்படையான கண்காணிப்பு கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய நடைமுறைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு தரங்களை மேம்படுத்தி சான்றிதழைப் புதுப்பித்து, மின்சாரக் கட்டமைப்புடன் இணைதல் (grid access) வங்கி மற்றும் சலுகைகளுக்கான தெளிவான மற்றும் நிலையான விதிகளை உருவாக்க வேண்டும்.


நீண்டகால, கலப்பான நிதி வசதிகள் (blended finance), நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அபாயம் குறைக்கும் கருவிகளால் (risk-mitigation instruments) திட்டங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், இந்தியாவை ஒரு பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், தூய்மையான அம்மோனிய சந்தைகளில் முன்னணி  நாடாக நிலைநிறுத்த உதவும்.


பவன் முலுகுட்லா, உலக வள நிறுவனத்தில் (World Resources Institute India (WRI)) இந்தியாவின் ஒருங்கிணைந்த போக்குவரத்து, தூய்மை காற்று மற்றும் ஹைட்ரஜன் துறையின் நிர்வாகத் திட்ட இயக்குநராக உள்ளார். அனுராக் நல்லபனேனி WRI இந்தியாவில் ஹைட்ரஜன் துறையின் திட்டத் தலைவராக உள்ளார். சினேகா மல்ஹோத்ரா WRI இந்தியாவில் எரிசக்தி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையின் திட்ட இணை இயக்குநராக உள்ளார்.


Original article :  India’s energy shift through the green ammonia route -Pawan Mulukutla, Anuraag Nallapaneni, Sneha Malhotra

Share:

பழங்குடிப் பெண்களின் வாரிசுரிமைகளை மறுபரிசீலனை செய்தல் -ஷாலினி சபூ

 தற்போது, இந்து வாரிசுரிமைச் சட்டம் (Hindu Succession Act) பழங்குடி சமூகங்களுக்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், பழங்குடி மக்களிடையே பரம்பரை உரிமையை நிர்வகிக்க ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்தப்படலாம்.


பழங்குடி சமூகங்களில் பெண்களின் வாரிசுரிமைகள் குறித்த கேள்வி தீர்க்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான பழங்குடி சமூகங்களின் வழக்கமான சட்டங்கள் பழங்குடி சமூகப் பெண்களுக்கு முழுமையான சொத்துரிமைகளை வழங்க மறுக்கின்றன.  மேலும், மூதாதையர் சொத்தில் மகள்களுக்கு பரம்பரை உரிமைகளை வழங்கும் 1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம், பழங்குடிப் பெண்களை அதன் வரம்பிலிருந்து விலக்கி வைக்கிறது. இருப்பினும், உச்சநீதிமன்றம் சில வழக்குகளில், தங்கள் வழக்கமான நடைமுறைகளைக் கைவிட்டு, இந்து மாத பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஏற்றுக்கொண்ட பழங்குடிப் பெண்களுக்கு பரம்பரை உரிமைகளை வழங்கியது. இந்த சீரற்ற அணுகுமுறை இந்து சட்டங்களின் கீழ் விலக்கு பிரிவுகளை ஏற்றுக்கொள்வதன் காரணமாக சில சூழல்களில் பழங்குடிப் பெண்களை பரம்பரை உரிமைகளிலிருந்து விலக்கியது. அதே நேரத்தில் 'இந்துமயமாக்கல்' (Hinduisation) காரணமாக மற்றவற்றில் உரிமைகளை வழங்கியது. பரம்பரை உரிமை தொடர்பான கேள்விகள் எழும்போதெல்லாம் பழங்குடிப் பெண்களுக்கு நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கியது.


பழைய கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துதல்


அக்டோபர் 8, 2025 அன்று, நீதிமன்றம் இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் முக்கிய வாரிசுரிமை விதிகளை உறுதிசெய்து ஒரு தீர்ப்பை வழங்கியபோது இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தச் சட்டத்தை எந்த சூழ்நிலையிலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காகப் பயன்படுத்த முடியாது என்று கூறியது. இந்தக் கருத்து புதியதல்ல என்றாலும், சட்ட அமைப்பின்கீழ் பழங்குடி சமூகங்களுக்கு சிறப்புப் பாதுகாப்பை வழங்கும் சட்டத்தின் கொள்கையை தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.


நவாங் vs பகதூர் (Nawang v. Bahadur) வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூன் 23, 2015 அன்று சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் ஜூன் 23, 2015 அன்று சொத்துரிமை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து  குடிமை  மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்து பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்ட பழங்குடி மகள்கள், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்கீழ் சொத்து பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. பழங்குடி சமூகங்களுக்கு இந்தச் சட்டத்தை விரிவுபடுத்த நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறி உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. சட்டத்தை மாற்ற முயற்சிப்பதன் மூலம் உயர்நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறிச் சென்றுள்ளதாக நீதிமன்றம் கூறியது. பழங்குடி சமூகங்களின் பரம்பரை சொத்துக்கள்,  ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக தலையிடாவிட்டால், பழங்குடியினரின் வாரிசுரிமை அவர்கள் சமூகத்தின் வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும் என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது.


ராம் சரண் vs சுக்ராம் (Ram Charan v. Sukhram) வழக்கில், மூதாதையர் சொத்தில் இருந்து மகள்களை விலக்குவது அவர்களின் அடிப்படை சமத்துவ உரிமையை மீறுகிறது (fundamental right to equality) என்பதை அங்கீகரித்த சில மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. இது ஆழமான ஆய்வை மட்டுமல்ல, சில கேள்விகளுக்கு சிறிதளவு பதிலளிக்கிறது. பழங்குடியினரை ‘இந்துமயமாக்குவது’ (Hinduising) மட்டுமே, பழங்குடி பெண்களுக்கு வாரிசுரிமையை உறுதி செய்யும் ஒரே வழியா? பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (Scheduled Tribes), அவர்களின் தனிப்பட்ட சமூக மற்றும் கலாசார சிறப்பம்சங்களை புறக்கணித்து, மத அடிப்படையில் மட்டும் வாரிசுரிமை வழங்கப்பட வேண்டுமா? வேறு எந்தச் சட்டத்தையும் விரிவுபடுத்தி, அவர்களுக்கு சமமான வாரிசுரிமை வழங்க முடியாதா? அல்லது, பழங்குடிப் பெண்களின் பரம்பரை உரிமைகளை உத்தரவாதம் செய்யும் நிலையான சட்டரீதியான மற்றும் வழக்கமான சட்டம் இல்லாத நிலையில், பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறோம் என்ற காரணத்தின்கீழ் பழங்குடிப் பெண்கள் தொடர்ந்து பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டுமா?


‘இந்து’ என்ற சொல்லை வரையறுத்தல்


‘இந்து’ என்ற சொல்லை வரையறுப்பது குறித்து, உச்சநீதிமன்றம், 1966-ஆம் ஆண்டு சாஸ்திரி யக்ஞபுருஷத்ஜி vs முல்தாஸ் புருதர்தாஸ் வைஷ்யர் வழக்கில், “உலகின் பிற மதங்களைப் போல, இந்து மதம் ஒரே ஒரு கடவுளை மட்டும் ஏற்றுக்கொள்ளாது; ஒரே ஒரு கடவுளை மட்டும் வழிபடாது; ஒரே ஒரு கொள்கையையோ அல்லது தத்துவத்தையோ மட்டும் பின்பற்றாது; ஒரே மாதிரியான மத சடங்குகளையோ முறைகளையோ மட்டும் கடைப்பிடிக்காது. உண்மையில், இது ஒரு மதம் அல்லது சமயத்தின் குறுகிய பாரம்பரிய அம்சங்களுக்கு உட்படுவது போல தோன்றாது. இதனை பரந்த வகையில் ‘ஒரு வாழ்க்கை முறை’ என்று விவரிக்கலாம்.  ஒருவர் பிறப்பின் மூலம் அல்லது மதமாற்றத்தின் மூலம் இந்துவாக இருக்கலாம். மதமாற்றம் என்பது, குறிப்பிட்ட ஒரு மதத்தை உண்மையான நோக்கத்துடன் பின்பற்ற விரும்பும் மனநிலையுடன் தொடர்புடையது. அதனை தெளிவாக வெளிப்படுத்தும் நடத்தையையும் அதனை பின்பற்றுபவர்கள் கொண்டிருக்க வேண்டும். மதம் மாறிய ஒருவரின், மூதாதையர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே மதம் மாறி, திருமணம் மற்றும் பரம்பரை தொடர்பான பாரம்பரிய விதிகள் உட்பட பழங்குடியினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதை நிறுத்தவிட்டால், அவர் தொடர்ந்து பழங்குடியினராகவே கருதப்படுவார்.


உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு கேள்வியை எழுப்புகிறது. முன்னர் பழங்குடியினரை ‘இந்துமயமாக்கும்’ நடைமுறை, அவர்களின் தனித்துவமான அடையாளத்தை பாதுகாக்கும் அரசியலமைப்பு உறுதியை மறுப்பதாக இல்லையா? இந்த தீர்ப்பு, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 2(2)-ன் அரசியலமைப்பு சட்டத்தின் தன்மையை உறுதிப்படுத்துகிறது. இந்தப் பிரிவு, பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை (Scheduled Tribes) இந்து வாரிசு சட்டத்தின் வரம்பில் இருந்து விலக்குகிறது. முன்னதாக, இந்த விதி பட்டியலிடப்பட்ட பழங்குடியின பெண்களுக்கும், அந்த வகைப்பாட்டில் இல்லாத பெண்களுக்கும் இடையில் தவறான பாகுபாட்டை  உருவாக்குகிறது என்ற காரணத்தால் சவால் செய்யப்பட்டது.


முன்னதாக, நீதிமன்றங்கள், பட்டியல் பழங்குடியினரைச் சேர்க்க, பிரிவு 2(1)-ன் வரம்பை விரிவுபடுத்தின, அவர்கள் இந்தப் பிரிவின்கீழ் வெளிப்படையாக விலக்கப்படவில்லை என்பதால், சட்டத்தின் பிரிவு 2(1)-ன் கீழ் ‘இந்து’ என்ற வரையறைக்குள் அவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியது. இது, பிரிவு 2(2)-க்கு எதிராகவும் உள்ளது. பிரிவு 2(1)-ல் எதுவும் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அறிவிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சட்டத்தின் எந்த விதிகளும் பொருந்தாது என்று கூறுகிறது. ஆனால், பழங்குடி பெண்கள் தங்கள் பழங்குடி அடையாளத்தை கைவிட்டு இந்துக்களாக மாற அழுத்தம் கொடுப்பதற்காக இந்த சட்டம்  பயன்படுத்தப்பட்டது.


ஒரு வாய்ப்பு


பழங்குடி மக்களின் மத விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல் இந்தச் சட்டத்தை நீட்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இப்போது கூறியுள்ளதால், பழங்குடி மக்களிடையே பரம்பரை உரிமைகளை நிர்வகிக்கும் ஒரு சிறப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சிறந்ததாக இருக்கும். மிசோரமைப் போலவே குறிப்பிடத்தக்க பழங்குடி மக்கள்தொகைக் கொண்ட பிற மாநிலங்களிலும் வாரிசுரிமைக்கான வழக்கமான சட்டங்களாக்குவது, பழங்குடி அடையாளத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு தீர்வை வழங்கக்கூடும்.


Original article :  Rethinking tribal women’s inheritance rights -Shalini Saboo

Share: