14 வயதுடைய சிறுமிகளுக்கான நாடு முழுவதும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசித் திட்டம் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இம்முயற்சிக்குக் காரணமாக அமைந்தவை யாவை? இது 'அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டத்தின்' (Universal Immunization Programme) கீழ் சேர்க்கப்பட்டுள்ளதா?
தற்போதைய செய்தி
ராஜஸ்தானின் அஜ்மீருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதுடைய சிறுமிகளுக்கான நாடு முழுவதும் 'மனித பாப்பிலோமா வைரஸ்' (Human Papillomavirus (HPV)) தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28 அன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் வகைகளில், கருப்பை வாய்ப் புற்றுநோயானது இரண்டாவது அதிகம் பரவும் தன்மை கொண்ட புற்று நோயாகும்.
முக்கிய அம்சங்கள்:
1. மனித பாப்பிலோமா வைரஸ் என்பது பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான நோய்த்தொற்றாகும். இந்த வைரஸின் குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே புற்றுநோயாக மாறுகின்றன. பாலியல் செயல்பாடு தொடங்காத இளம்வயதில், குறிப்பாக பெண்கள் பருவமடையும் (puberty) காலத்தில் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தினால், அது நீண்ட காலத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.
2. பொதுவாக உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் இயல்பாகவே வெளியேற்றிவிடும் என்றாலும், மிக குறைந்த சதவீதத்தினரிடம் மட்டும் இந்த வைரஸ் நீண்ட காலத்திற்குத் தங்கி, சில இயல்பான செல்களை அசாதாரண செல்களாகவும், பின்னர் புற்றுநோயாகவும் மாற்றக்கூடும் என்று 'நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்' (Centers for Disease Control and Prevention (CDC)) தெரிவிக்கின்றன.
3. தகுதிபெற்ற சிறுமிகள், கோவிட்-19 பெருந்தொற்றின் போது மக்கள் 'Co-Win' தளத்தைப் பயன்படுத்தியது போலவே, 'U-win' எனும் தடுப்பூசி மேலாண்மைத் தளத்தைப் பயன்படுத்தி அரசு சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த 90 நாட்கள் கால அவகாசம் முடிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையாது. நாட்டின் வழக்கமான நோய்த்தடுப்புத் திட்டத்திற்கு இணையாக, சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் இத்திட்டம் தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் 14 வயதை எட்டும் சிறுமிகள், இம்முறையின் கீழ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.15 கோடி சிறுமிகள் 14 வயதை எட்டுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
4. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய குறைந்தது 14 வகையான மனித பாப்பிலோமா வைரஸ்கள் உள்ளன. இவற்றில், மனித பாப்பிலோமா வைரஸ் வகைகள் 16 மற்றும் 18 ஆகியவை கட்டிகள் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ள வகைகளாகக் கருதப்படுகின்றன. உலகளவில் ஏற்படும் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கு இந்த இரண்டு வகைகளே காரணமாக அமைகின்றன. இந்த தடுப்பூசிகள், அதிகமாக காணப்படும் மனித பாப்பிலோமா வைரஸின் இரண்டு, நான்கு அல்லது ஒன்பது வகைகள் உடலில் நுழைவதைத் தடுக்கின்றன.
5. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில், 14 வயதுப் பெண் குழந்தைகளுக்கு அரசு Quadrivalent Gardasil தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகிறது. 'Gavi' தடுப்பூசி கூட்டமைப்பு உடனான ஒப்பந்தத்தின் மூலம் இம்முயற்சி சாத்தியமாகியுள்ளது. 15 வயதுக்குட்பட்ட 90% பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம், 2030-ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization (WHO)) உலகளாவிய உத்தியுடனும் இம்முயற்சி ஒத்துப்போகிறது.
6. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் நான்கு-வகை மனித பாப்பிலோமா வைரஸ் (quadrivalent human papillomavirus (qHPV)) தடுப்பூசியான, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா'வின் Cerevac தடுப்பூசிக்கு அரசு மாறக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஒப்புதலைப் பெறவில்லை. மேலும், இதன் ஒற்றை டோஸின் செயல்திறனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research (ICMR)) இன்னும் ஆய்வு செய்து வருகிறது. இது மனித பாப்பிலோமா வைரஸ் வகைகள் 16, 18, 6 மற்றும் 11 ஆகியவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குகிறது.
7. மனித பாப்பிலோமா வைரஸ் 99 சதவீத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இது பிறப்புறுப்பு மருக்கள், ஆண்குறி, ஆசனவாய் மற்றும் வாய் மண்டல தொண்டை சார்ந்த (oropharyngeal) புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. எனவே, பல புற்றுநோயியல் நிபுணர்கள் மனித பாப்பிலோமா வைரஸ்க்கு எதிராக பாலின-நடுநிலை தடுப்பூசிக்கு (gender-neutral vaccination) அழைப்பு விடுக்கின்றனர்.

8. 2026-ஆம் ஆண்டின் தொடக்க நிலவரப்படி, அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை (herd immunity) ஊக்குவிக்கவும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும், சிறுவர் மற்றும் சிறுமியர் இருவரையும் உள்ளடக்கிய தேசிய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசித் திட்டங்களை 50-க்கும் மேற்பட்ட நாடுகள் செயல்படுத்தி வருகின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஜெர்மனி ஆகியவை இதில் அடங்கும்.
9. பெங்களூருவின் நாராயணா ஹெல்த் சிட்டியின் மகளிர் மருத்துவ புற்றுநோயியல் துறையின் மருத்துவத் தலைவர் டாக்டர் ரோஹித் ரகுநாத் ரனாடே, “மனித பாப்பிலோமா வைரஸ் பற்றிய மிகவும் தவறான கருத்து என்னவென்றால், உங்களுக்கு கருப்பை வாய் இல்லையென்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பது. அறிவியல்ரீதியாக, இது உண்மையான கருத்து அல்ல என்று கூறியுள்ளார். 2023 செப்டம்பரில் வெளியான The Lancet Global Health ஆய்வு ஒன்று, 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் குறைந்தபட்சம் மூன்று நபர்களில் ஒருவருக்கு வகையான பாலியல் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறிந்தது.
10. இங்கிலாந்தில், தேசிய சுகாதாரச் சேவை (National Health Service (NHS)) 2019-ஆம் ஆண்டில், 12 முதல் 13 வயதுடைய சிறுவர்களையும் சேர்க்கும் வகையில் தனது மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தியது. இதற்கான அடிப்படைக் கூற்று தெளிவாக இருந்தது: மனித பாப்பிலோமா வைரஸ் தொடர்பான நோய்களை நாம் முற்றிலுமாக ஒழிக்க விரும்பினால், அதற்கான தீர்வில் ஆண் மக்களையும் சேர்க்காமல் இருக்க முடியாது. இந்த முறையை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா, 2035-ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக திறம்பட ஒழிக்கும் உலகின் முதல் நாடாக மாறுவதற்கு தற்போது பயணித்து வருகிறது. Rohit இதுபற்றி, ஆண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தாமல் இந்த சாதனையை அடைய முடியாது என்று கூறினார்
மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியின் முக்கியத்துவம்
1. பல ஆண்டுகளாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது நாட்டில் பெண்களின் உயிரைப் பறிக்கும் மிகவும் கொடிய நோயாகும். அதே சமயம் தடுப்பதற்கான வாய்ப்புள்ள நோய்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும், இத்தடுப்பூசியின் விலை, அதை பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தவறான தகவல்களால் உருவான தவறான நம்பிக்கைகள் காரணமாக குறைவாக இருந்தது.
2. உலகளவில் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது. நாட்டிற்குள், இது பெண்களிடையே ஏற்படும் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகத் தொடர்ந்து இருந்து வருகிறது; இது ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பெண்களைப் பாதிக்கிறது. 75,000 பெண்களின் உயிரைப் பறிக்கிறது.
3. மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நிலை பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது என்று முந்தைய சான்றுகள் சுட்டிக்காட்டியிருந்தாலும், பின்னர் நடந்த ஆய்வுகள் இது புற்றுநோய் ஏற்படும் அளவையும் குறைக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளன.
4. ஸ்வீடன் நாட்டில் இத்தடுப்பூசியின் நடைமுறை விளைவுகளை மதிப்பிடும் ஒரு முக்கிய ஆய்வு, 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின்படி, 17 வயதிற்குள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 88% குறைவாக இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
5. முக்கியமாக, பெண்களுக்கு பொதுவான தடுப்பூசி வழங்குவது ஆண்களுக்கும் வைரஸ் பரவலைக் குறைத்து, அவர்களையும் பிற புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (Universal Immunization Programme (UIP))
1. இந்தியாவின் பொது சுகாதார உத்தியில் பல ஆண்டுகளாக நோய்த்தடுப்பு முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் நோய்த்தடுப்பு திட்டம் உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களில் ஒன்றாகும். 1978-ஆம் ஆண்டில், விரிவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு (Expanded Programme on Immunization) திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், அது நகர்ப்புறங்களை தாண்டி விரிவடைந்த பிறகு 1985-ல் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டமாக (Universal Immunization Programme) மறுபெயரிடப்பட்டது.
2. டிசம்பர் 12, 2025 அன்று மக்களவையில் முக்கிய கேள்விக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare (MoHFW)) அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தில் (UIP), 12 தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களுக்கு (vaccine-preventable diseases (VPDs)) 11 தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இது மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டத்தின் (UIP) ஒரு பகுதியாக இல்லை.
3. அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டத்தின்கீழ், தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது:
தேசிய அளவில் டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டனஸ், போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, குழந்தைப் பருவ காசநோயின் கடுமையான வடிவம், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் பி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை B மற்றும் நிமோகோகல் நிமோனியாவால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட 11 நோய்களுக்கு எதிராக; மற்றும்
துணை-தேசிய அளவில் (சில பகுதிகளில் மட்டும்) – ஜப்பானிய என்செபலிடிஸ் (Japanese Encephalitis) எனும் ஒரு நோய்க்கு எதிராக (JE தடுப்பூசி, பரவலாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது).
4. இந்திரதனுஷ் திட்டம்: அமைச்சகத்தின் கூற்றுப்படி, இது 2014ஆம் ஆண்டு உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் (UIP) கீழ் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு கண்ணோட்ட தடுப்பூசி பிரசாரமாகும். குறைந்த தடுப்பூசி பரவல் உள்ள பகுதிகளில் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தவறவிடப்பட்ட (left-out) மற்றும் இடைநிறுத்தப்பட்ட (dropped-out) குழந்தைகள் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. UIP-யில் பயன்படுத்தப்படும் 11 வகையான தடுப்பூசிகள் இத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன.