முக்கிய அம்சங்கள் :
ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் தரையிறங்கிய கார்னி, 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 10 ஆண்டுக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங், கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பான சிறிய மற்றும் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் (uranium supply deal) கையெழுத்திடுவார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மும்பையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த கார்னி, பல தொழில் தலைவர்களைச் சந்தித்த பிறகு தலைநகருக்கு வந்தார். புது தில்லியில், மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.
ஜூன் 2025-ல் கனடாவின் கனனாஸ்கிஸிலும், நவம்பர் 2025-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலும் நடைபெற்ற அவர்களின் முந்தைய சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா-கனடா இராஜதந்திர கூட்டமைப்பின் பல்வேறு பகுதிகளில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை இருநாட்டு தலைவர்களும் மதிப்பாய்வு செய்வார்கள்.
இதில் வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, முக்கியமான கனிமங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் நடந்துவரும் ஒத்துழைப்பையும் அவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். மேலும், இருநாட்டு பிரதமர்களும் அன்றைய தினம் பிற்பகல் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் (CEOs Forum) கலந்து கொள்வார்கள்.
கார்னியின் இந்தியா வருகையானது ஒரு முக்கியமான தருணமாக, இந்தியாவும் கனடாவும் இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதத் தலைவரைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்தின் பங்கைக் குற்றம் சாட்டி கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முயற்சி நடைபெறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை "அபத்தமானது" மற்றும் "அரசியல்ரீதியாக நோக்கம் கொண்டது" என்று இந்தியா நிராகரித்தது.
உங்களுக்குத் தெரியுமா?
கனடாவின் பரந்த இயற்கை வளங்கள் மற்றும் இந்தியாவின் அதிகரித்துவரும் எரிசக்தி தேவையுடன், எரிசக்தி ஒத்துழைப்பு இருநாட்டு தரப்புகளின் முக்கிய துறையாக உள்ளது. இந்தக் கூட்டாண்மை வழக்கமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை உள்ளடக்கியது. எண்ணெய், எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas (LNG)), திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (Liquefied Petroleum Gas(LPG)), கச்சா எண்ணெய் மற்றும் முக்கியமான கனிமங்களின் நம்பகமான விநியோகராக கனடா தன்னை முன்வைக்கிறது.
கல்வித் துறை இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை பெரிதும் வலுப்படுத்தியுள்ளது. இந்திய மாணவர்கள் கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் மிகப்பெரிய குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். டிசம்பர் 31, 2024 நிலவரப்படி 3.92 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கனடாவில் படித்து வருகின்றனர்.
கனடாவில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான இந்திய-கனடியர்கள் உள்ளனர். இங்கு சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு இந்தியர்களையும் கொண்டுள்ளது. இது கனடாவை உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோரில் ஒன்றாக ஆக்குகிறது. இந்தோ-கனடியர்கள் பரந்த அளவிலான துறைகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், அவர்களின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
கனடா முக்கிய மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு முக்கியமான இராஜதந்திர ரீதியில் நட்பு நாடாகும். இது G7 குழுவின் உறுப்பினராக உள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இது அமர்ந்துள்ளது. இது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து கண்கள் உளவுத்துறை பகிர்வு குழுவின் ஒரு பகுதியாகும். இந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கும் நெருக்கமான இராஜதந்திரரீதியில் நட்பு நாடாக உள்ளது.
Original article :What is the status of the India-Canada bilateral relations? -Roshni Yadav