இந்தத் தீர்ப்பு, இல்லறத்தை சார்புநிலையாக அல்லாமல், மாறாக திருமணத்திலிருந்து எழும் சட்டப்பூர்வ உரிமைகளை வடிவமைக்கும் உழைப்பாகக் கருதுகிறது. இந்த உரிமைகளில் பிரிந்த பிறகு பராமரிப்பு (maintenance) மற்றும் நிதி ஆதரவு (financial support) ஆகியவை அடங்கும்.
"ஒரு இல்லத்தரசி 'சும்மா உட்காருவதில்லை'; சம்பாதிக்கும் வாழ்க்கைத் துணை திறம்பட செயல்பட உதவும் வகையில் அவர் உழைப்பை வழங்குகிறார்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வருமானம் ஈட்டாத வாழ்க்கைத் துணை பராமரிப்பு கோரும் ஒருவர் பொருளாதாரரீதியாக செயலற்றவர் என்ற பொதுவான நம்பிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த மாதம் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, நீதிமன்றங்கள் இல்லத்தரசிகளை எவ்வாறு மதிப்பிடுகின்றன என்ற விதத்தை மாற்றினார். அது வருமானத்தை ஈட்டவில்லை அல்லது நிதிப் பதிவுகளில் அவர் இடம்பெறவில்லை என்பதற்காக மட்டுமே அதை நிராகரிக்க முடியாது என்று கூறினார். இந்தத் தீர்ப்பு, இல்லறத்தை சார்புநிலையாக அல்ல, மாறாக திருமணத்திலிருந்து எழும் சட்டப்பூர்வ உரிமைகளை வடிவமைக்கும் உழைப்பாகக் கருதுகிறது. இந்த உரிமைகளில் பிரிந்த பிறகு பராமரிப்பு மற்றும் நிதி ஆதரவு ஆகியவை அடங்கும்.
கணவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, வேலையை விட்டுவிட்டு, தம்பதியரின் குழந்தையைப் பராமரித்து வந்த ஒரு மனைவியின் பராமரிப்பு தொடர்பான வழக்கில் இந்த கருத்துகணிப்புகள் எழுந்தன. இதில், கல்வித் தகுதிகள் அல்லது சம்பாதிக்கும் அவருடைய திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பராமரிப்பு மறுக்க முடியுமா என்ற கேள்வியை இந்த தீர்ப்பு எழுப்பியது.
பல இந்திய வீடுகளில், திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் வேலை செய்யவில்லை என்பது இன்னும் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில சந்தர்ப்பங்களில், அவர் தன் வேலையை விட்டுவிட வற்புறுத்தப்படுகிறார் அல்லது கட்டாயப்படுத்தப்படுகிறார் என்பது நிதர்சனமான நிலைமையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் எதிர்பார்க்கப்படுவது, வீட்டை நிர்வகிப்பதற்கு தன் நேரத்தை ஒதுக்குவார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
பெண்கள் படித்தவர்களாகவும், தொழில்ரீதியாக திறமையானவர்களாகவும் இருந்தாலும்கூட இந்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது என்று நீதிமன்றம் மேலும் கூறியது. இருப்பினும், திருமணங்கள் முறிந்து போகும்போது, வழக்குகளின்போது நிலைமை பெரும்பாலும் மாறுகிறது. "அதே கணவர் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, மனைவி நன்கு தகுதி பெற்றவர் என்று வாதிடுகிறார். மேலும், பராமரிப்பு தேவைப்படும்போது வேண்டுமென்றே வேலையில்லாமல் இருக்கத் தேர்வு செய்கிறார் என்பது அடிக்கடி காணப்படுகிறது." அத்தகைய நிலைப்பாட்டை ஊக்குவிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
தீர்ப்பானது, வீட்டு மேலாண்மையை வெறும் சமூக அடையாளமாகக் கருதாமல், சட்டபூர்வமாக பொருத்தமுள்ள பணியாக மாற்றி அமைக்கிறது.
நீதிமன்றத்தின் முன் வழக்கு என்ன?
குவைத்தில் பணிபுரியும் துளையிடும் பொறியாளரான (drilling engineer) கணவர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், மனைவி தத்தெடுக்கப்பட்ட மைனர் மகனைப் பராமரித்துக்கொண்டு இந்தியாவில் தங்கியிருந்தார். அவர்கள் பிரிந்த பிறகு, மனைவி, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005-ன் (Protection of Women from Domestic Violence Act) கீழ் இடைக்கால பராமரிப்பு கோரினர். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1973-ன் (Code of Criminal Procedure) பிரிவு 125-ன் கீழ், மனைவிகள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாவிட்டால் பராமரிப்பு கோர அனுமதிக்கிறது
ஒரு நீதிபதியும் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றமும், அவரை "திறமையான" மற்றும் வேலை செய்யத் தகுதியுள்ள பெண் என்று குறிப்பிட்டு, மேலும் வங்கி பரிவர்த்தனைகளைக் குறிப்பிட்டு, சுதந்திரமாக வழிகளை பரிந்துரைக்க நிவாரணம் வழங்க மறுத்தது. இருப்பினும், குடும்ப நீதிமன்றம் அவருக்கு வேறுபட்ட பார்வையை முன்வைத்து மாதத்திற்கு ரூ.50,000 பராமரிப்பு நிதியை வழங்கியது. ஒரு பெண்ணின் கல்வித் தகுதி மற்றும் சம்பாதிக்கும் திறனைப் பயன்படுத்தி, பராமரிப்புக்கான அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியுமா என்பதை முடிவுசெய்ய உயர் நீதிமன்றம் அழைக்கப்பட்டது.
'பயனற்ற' வாழ்க்கைத் துணை (The ‘idle’ spouse)
பராமரிப்பு மோதல்களில் பெரும்பாலும் தோன்றும் முத்திரையை நிவர்த்தி செய்யும் நீதிபதி சர்மா, சட்டக் கணக்கீடுகளில் பொதுவாக புறக்கணிக்கப்படும் செயல்பாடுகளை அவர் பட்டியலிடுகிறார். அவை வீடுகளை நிர்வகித்தல், குழந்தைகளை வளர்ப்பது, குடும்ப உறுப்பினர்களைப் பராமரித்தல் மற்றும் சம்பாதிக்கும் வாழ்க்கைத் துணையின் தொழில் மற்றும் இடமாற்றங்களைச் சுற்றி ஒருவரின் வாழ்க்கையை மறுசீரமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். "இந்தப் பொறுப்புகள் வங்கி அறிக்கைகளில் காட்டப்படுவதில்லை அல்லது வரி விதிக்கக்கூடிய வருமானத்தை உருவாக்குவதில்லை. இருப்பினும், பல குடும்பங்கள் சார்ந்து செயல்படும் கண்ணுக்குத் தெரியாத அடித்தளத்தை அவை உருவாக்குகின்றன."
தீர்ப்பின் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதிகளில், நீதிமன்றம் திருமண பொருளாதாரத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை மறுவரையறை செய்கிறது. "ஒரு வாழ்க்கைத் துணை சந்தையில் வருமானம் ஈட்டும் இடத்திலும், மற்றவர் வீட்டின் நிதி நிலைத்தன்மையை நிர்வகிப்பது இருவரிடமிருந்தும் வருகிறது என்பதை இது விளக்குகிறது. அவர்களின் பங்களிப்புகள் வடிவத்தில் வேறுபட்டவையாக இருப்பினும், அவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த வழியில் வீட்டு வேலைகளை வெளிப்படுத்துவதன் மூலம், நீதிமன்றம் வீட்டு வேலைகளை தார்மீக பாராட்டுக்கு மட்டுமே தகுதியான ஒன்றாகக் காணப்படுவதை மாற்றுகிறது.
'சம்பாதிக்கும் திறன்' vs 'உண்மையான வருவாய்'
திருமண வழக்குகளில், நீதிமன்றங்கள் பெரும்பாலும் படித்த வாழ்க்கைத் துணை தன்னைத்தானே ஆதரிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளன. "சம்பாதிக்கும் திறன் மற்றும் உண்மையான வருவாய் ஆகியவை தனித்தனி கருத்துக்கள். இதில், வெறும் சம்பாதிக்கும் திறன் மட்டுமே பராமரிப்பு மறுக்க ஒரு காரணமாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் கடுமையான வேறுபாட்டைக் காட்டியது.
தொழில்களில் நீண்டகால இடைவெளிகளுக்குப் பிறகு பணியிடத்தில் மீண்டும் நுழைவதில் உள்ள சிரமங்களை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. திருமணம் அல்லது பராமரிப்புப் பொறுப்புகள் காரணமாக வேலையைவிட்டு வெளியேறும் ஒரு துணை பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிலையில் மீண்டும் பணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்டது.
விரைவான தொழில்நுட்ப மாற்றம், வளர்ந்து வரும் திறன் தேவைகள் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வேலைச் சந்தைகள், திரும்பி வரும் இல்லத்தரசிகளை ஒரு "தனித்துவமான பாதக" நிலையில் வைக்கின்றன என்று நீதிமன்றம் கவனித்தது. அவர்களின் திறன்கள் காலாவதியாகலாம். அவர்களின் தொழில்முறை வலைப்பின்னல்கள் பலவீனமடையக்கூடும். வயதும் ஒரு தடையாக மாறக்கூடும்.
நிதி சார்புநிலையை நீதிமன்றம் மகிமைப்படுத்தவில்லை. வேலையைவிட்டு வெளியேறுவதற்கான தன்னார்வ முடிவுகள் நடைமுறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அது குறிப்பிடுகிறது. ஆனால், நீதிமன்றங்கள் அனுமானங்களைவிட யதார்த்தத்தை மதிப்பிட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.
திருமணம் "பொருளாதார யதார்த்தங்களை இடைநிறுத்துவதில்லை" என்று நீதிமன்றம் மேலும் கூறியது. அதே நேரத்தில், திருமணத்திற்குள் எடுக்கப்படும் பாத்திரங்களிலிருந்து எழும் பொருளாதார விளைவுகளையும் நீதிமன்றங்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
அங்கீகாரமாக பராமரிப்பு
இதுபோன்ற வழக்குகளில் பராமரிப்பு கோரிக்கைகள் முதன்மையாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 125 (தற்போது பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 144-ஆல் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் (Protection of Women from Domestic Violence (PWDV) Act) சட்டத்தின் விதிகளின்கீழ் எழுகின்றன.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 125, வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாத வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு நிதி நெருக்கடியைத் தடுக்க ஒரு சுருக்கமான தீர்வை வழங்குகிறது. மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் (PWDV) சட்டத்தின்கீழ், நீதிமன்றங்கள் நடவடிக்கைகளின் போது பண நிவாரணம் மற்றும் இடைக்கால பராமரிப்பு வழங்க முடியும்.
பராமரிப்பு என்பது வறுமைக்கு எதிரான பாதுகாப்பாக மட்டும் பார்க்க முடியாது. ஆனால், வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையேயான நியாயத்திற்கான ஒரு வழிமுறையாகவும் பார்க்க முடியாது என்று நீதிபதி சர்மா தெளிவுபடுத்தினார். சுதந்திரமான வருமானம் இல்லாத ஒரு வாழ்க்கைத் துணைவர் பொருளாதார பாதிப்புக்குள் வராமல் இருப்பதை, மற்றவர் தொடர்ந்து நிதி நிலைத்தன்மையை அனுபவிக்கிறார் என்பதை இது உறுதி செய்கிறது. "பராமரிப்பு என்பது இரு தரப்பினரும் நியாயமான அளவில் ஒப்பிடக்கூடிய நிலைகளில் வைப்பதாகும். இதனால் ஒவ்வொருவரும் ஒரு கண்ணியமான வாழ்க்கையைத் தக்கவைக்க முடியும்" என்று அது கூறியது.
நீதிமன்றம் இந்த யோசனையை திருமணத்தின் கூட்டுறவு மாதிரியில் நிலைநிறுத்தியது. "ஒரு திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட உறவு மட்டுமல்ல, ஒவ்வொரு மனைவியும் வெவ்வேறு வழிகளில் பங்களிக்கும் ஒரு கூட்டுறவையும் கூட பிரதிபலிக்கிறது". எனவே, பராமரிப்பு என்பது ஒவ்வொரு மனைவியின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் ஒரு வழியாகிறது. இந்தப் பங்களிப்பு செலுத்தப்படாவிட்டாலும்கூட இது உண்மை.
மற்ற வழக்குகளிலும் இதேபோன்ற அணுகுமுறை
நீதிபதி சர்மாவின் கருத்துகணிப்புகள் ஒரு பரந்த நீதித்துறையின் போக்கை பிரதிபலிக்கின்றன. கன்னையன் நாயுடு vs கம்சாலா அம்மாள் (Kannaian Naidu vs Kamsala Ammal) வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சொத்து உரிமைகளை தீர்மானிக்கும் போது வீட்டு பராமரிப்பு ஒரு மறைமுக நிதிப் பங்களிப்பாக அங்கீகரித்தது. கணவர் வெளிநாட்டில் பணிபுரியும் போது வீட்டை நிர்வகிக்கும் ஒரு மனைவி, சேமிப்பு மூலம் குடும்ப சொத்துக்களை வாங்க முடியும் என்று நீதிமன்றம் கூறியது.
விடுமுறை இல்லாமல் செய்யப்படும் 24 மணிநேர பொறுப்பாக வீட்டு பராமரிப்பு என்று விவரித்த நீதிமன்றம், ஒரு துணைவரிடமிருந்து மட்டுமே பண வருவாய் வந்தாலும்கூட, சொத்து வாங்குவதை ஒரு "கூட்டு முயற்சி" (joint effort) என்று பார்க்க முடியும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது.
இதேபோல், சுரஞ்சன் சாஹா vs ரம்பா சாஹா (Suranjan Saha vs Rumpa Saha) வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம், ஒரு இல்லத்தரசி தான் வேலையில்லாமல் இருப்பதை நிரூபிக்க வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத ஒருவரிடமிருந்து அத்தகைய ஆதாரத்தைக் கேட்பது "சாத்தியமற்றதைக் கோருவது" போன்றது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த தீர்ப்புகள் முழுவதும், ஒரு இல்லத்தரசியின் அடையாளம் தெளிவான சட்ட விளைவுகளை உருவாக்குகிறது. ஒரு வாழ்க்கைத் துணையானவர், படித்தவர் என்பதற்காக மட்டுமே பராமரிப்பு மறுக்கப்பட முடியாது, ஊதியம் பெறாத வீட்டு வேலை குடும்பத்திற்கு நிதிப் பங்களிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வருமானப் பதிவுகள் இல்லாதது மறைப்பாகக் கருதப்படுவதில்லை. மேலும், திருமணப் பணிகளால் ஏற்படும் பொருளாதார பாதகத்தை நீதிமன்றங்கள் மதிப்பிடுகின்றன.
இந்திய உச்சநீதிமன்றம் இதேபோல் பராமரிப்பு ஏற்பாடுகளை சமூகநீதிக்கான நடவடிக்கைகள் என்று விவரித்துள்ளது. திருமணம் முழுவதும் ஒரு மனைவி ஊதியம் பெறாத வீட்டு வேலை செய்யும்போது நிதி பாதிப்பு ஏற்படலாம் என்பதை அது அங்கீகரித்துள்ளது.
Original article : Marriage as partnership: How a High Court verdict reframes ‘homemaker’ as a legally relevant role? -Amaal Sheikh