'யுவ சக்தி' நிதிநிலை அறிக்கை (yuva shakti budget) என்றும் அழைக்கப்படும் 2026 நிதிநிலை அறிக்கையானது, கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முயல்வதால், மனித மூலதன மேம்பாடு இந்தியாவின் வளர்ச்சி உத்தியின் ஒரு இயக்கியாக மாறியுள்ளது. நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கல்வி, திறன், வேலைவாய்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் புதிய வாய்ப்புகளுடன் இணைக்கிறது. இது வளர்ச்சியை விரைவுபடுத்துதல் (accelerating growth), திறனை வளர்ப்பது (building capacity) மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்தல் (ensuring inclusion) ஆகியவற்றிற்காக இது மூன்று 'கர்தவ்யாக்களை' (kartavyas) சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கவனம் மாற்றம் திடீரென ஏற்படவில்லை. மேலும், இந்தியாவின் மக்கள்தொகை யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் அளவிலான ஒரு நாட்டிற்கு, வளர்ச்சி விருப்பமானது அல்ல. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்வளத்தில் நுழையும் மில்லியன் கணக்கான இளைஞர்களை உள்வாங்குவதற்கு அவசியம். பகுதியளவு மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பு நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்க முடியாது என்பதால், அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி மற்றும் நிலையான வேலைகளை உருவாக்குவது இதற்கு தேவைப்படுகிறது.

எனவே, முக்கிய கேள்விகள்:
1. நிதிநிலை அறிக்கை பொதுவாக நோக்கத்தை மட்டும் வெளிப்படுத்துவதற்கு அப்பால் சென்றுவிட்டதா?
2. தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் பொதுச் செலவினங்களை அர்த்தமுள்ள வகையில் திருப்பிவிட்டதா?
3. ஆரஞ்சு பொருளாதாரம் மற்றும் பராமரிப்பு பொருளாதாரம் போன்ற வளர்ந்து வரும் துறைகளை பரந்த வளர்ச்சி கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைக்க முயன்றுள்ளதா?

மனித மூலதனம் மற்றும் வேலை உருவாக்கம், திறன் உறிஞ்சுதல் தொடர்பான பிரச்சினைகள்
மனித மூலதனம் வெறும் முழக்கமாக இருந்து யதார்த்தமாக மாற வேண்டுமென்றால், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த வேண்டும். நிதிநிலை அறிக்கை இந்த இடைவெளியை அங்கீகரிக்கிறது. சேவைத் துறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு வேலை சந்தைகளையும் அவை கோரும் திறன்களையும் மறுவடிவமைக்கின்றன என்பதை ஆராய உயர் அதிகாரம் கொண்ட 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் நிறுவனங்கள் வரை' நிலைக்குழுவை உருவாக்க முன்மொழிகிறது.
இந்த அங்கீகாரம் முக்கியமானது. இந்தியாவின் வளர்ச்சி சேவைத் துறையால் வழிநடத்தப்பட்டாலும், வகுப்பறைகள் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பம் வேலையின் தன்மையை வேகமாக மாற்றி வருகிறது. ஒரு குழுவை உருவாக்குவது என்பது திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்தை கல்வியில் ஒருங்கிணைப்பதற்கான ஆரம்ப படியாகும். இருப்பினும், முக்கிய சவால் என்னவென்றால், கற்றல் தொழில்துறை தேவைக்கு ஏற்ப செயல்படும் வகையில் பயிற்சியாளர்களை வலுப்படுத்துவதற்கான பாடத்திட்டங்களை சீரமைப்பதும் மறுவடிவமைப்பு செய்வதும் ஆகும்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அதன் நிகர ஒதுக்கீட்டை 9,885 கோடியாக உயர்த்தியுள்ளது. பிஎம் சேது (PM SETU) திட்டத்தின் கீழ், 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (Industrial Training Institutes (ITI)) மேம்படுத்தவும், தேசிய சிறப்பு மையங்களை நிறுவவும் 6,140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால பயிற்சி இயக்கங்களிலிருந்து நிறுவன சீர்திருத்தத்தை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.
தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITI) இன்னும் தொழிற்கல்வியின் முதுகெலும்பாக உள்ளன. இருப்பினும், அவற்றில் பல காலாவதியான உபகரணங்கள் மற்றும் தொழில்துறையுடன் பலவீனமான தொடர்புகளும் உள்ளன. நவீனமயமாக்கல் அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் பொருத்தத்தை மேம்படுத்த உதவும். மேலும், நிறுவனங்களுக்கான வேலை தொடர்பான ஆதரவு உட்பட, தொழிற்பயிற்சி ஊக்கத்தொகைகளை அதிகரிப்பதன் நோக்கம், தொழில்களில் அதிக பங்கேற்பை ஊக்குவிப்பதாகும்.
இருப்பினும்கூட, கடந்தகால அனுபவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளைஞர்களின் வேலையின்மை அதிகமாக உள்ளது. மேலும் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு முடிவுகள் சீரற்றவை. பல தொழிற்பயிற்சிகளில் குறுகியகால மற்றும் குறைந்த ஊதியம் பெறுகின்றன. திறன் மேம்பாடு நிலையான வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும்போது மட்டுமே உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும். திறன் விநியோகத்தை வலுப்படுத்துவதில் நிதிநிலை அறிக்கை வலியுறுத்தினாலும், பெரியளவில் சவால்கள் உள்ளது. பொருளாதாரமானது நிலையான வேலை உருவாக்கம் மற்றும் புதிதாகப் பெற்ற திறன்களை நிலையான முறையில் உள்வாங்க வேண்டும்.
கூடுதலாக, மனித மூலதனம் இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய மையமாக இருந்தால், பெண்களின் பணியின் சமமான முக்கியத்துவத்தை புறக்கணிக்க முடியாது.
பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு மற்றும் கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி
சமீபத்திய ஆண்டுகளில், பெண் தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 2022-23 காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் (Periodic Labour Force Survey (PLFS)) படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation rate (LFPR)) 41.7 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை ஒரு முக்கியமான கிராமப்புற-நகர்ப்புற பிளவை மறைக்கிறது. கிராமப்புற பெண்களின் பங்களிப்பு 47.6 சதவீதமாகவும், நகர்ப்புற பெண்களின் பங்களிப்பு 28.0 சதவீதமாகவும் உள்ளது.
இந்த கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியின் மற்றொரு பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. பெண் தொழிலாளர் பங்கேற்பில் பெரும்பாலான அதிகரிப்பு கிராமப்புறங்களிலிருந்து வந்துள்ளது. அங்கு பெண்கள் பெரும்பாலும் வேளாண்மை, சுயதொழில் அல்லது ஊதியம் பெறாத குடும்ப வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பங்கேற்பு அதிகரித்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பின் தரம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.
கிராமப்புற பெண்களில் பெரும்பாலோர் குறைந்த ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்புடன் முறைசாரா வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், நகர்ப்புற பெண்கள், உயர்மட்ட கல்வி இருந்தபோதிலும், பாதுகாப்பு, இயக்கம், குழந்தை பராமரிப்பு மற்றும் பொருத்தமான வேலைகள் கிடைப்பது தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
2026-27 நிதிநிலை அறிக்கை மொத்த செலவினத்தில் பாலின நிதிநிலை அறிக்கை தோராயமாக 8.86 சதவீதத்தை உருவாக்குகிறது. இது ₹4.49 லட்சம் கோடி ஆகும். பெண்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் ஊக்குவிக்க வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகைகள், இளம் பருவப் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முன்னோடிகள் மற்றும் STEM நிறுவனங்களில் அவர்களின் மேம்பட்ட பங்களிப்பை ஆதரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் விடுதிகளை நிறுவுதல் ஆகியவற்றை நிதிநிலை அறிக்கை முன்மொழிகிறது.
கட்டமைப்புத் தடைகளை நிவர்த்தி செய்தல்
இந்த முயற்சிகள் முக்கியமான படிகள். பாதுகாப்பு இல்லாமை, மோசமான இயக்கம் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் போன்ற கட்டமைப்பு தடைகளை குறைப்பதை அவை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஒரு வலுவான பொருளாதார காரணம் உள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு 10 சதவீத புள்ளிகள் அதிகரித்தால், காலப்போக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 1–2 சதவீத புள்ளிகள் அதிகரிக்கக்கூடும். அதிகமான பெண்கள் வேலை செய்யும்போது, வீட்டு வருமானம் உயரும். குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக அதிகமாக செலவிட முடிகிறது. இது நீண்டகாலத்திற்கு மனித மூலதனத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
நிதிநிலை அறிக்கை பெண்களின் பங்களிப்பை பராமரிப்புப் பொருளாதாரத்துடன் இணைக்கிறது. போஷன்-2.0 23,100 கோடி ஒதுக்கீட்டில் தொடர்கிறது. அதனுடன் தொடர்புடைய சுகாதார நிபுணர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான விரிவாக்கப்பட்ட பயிற்சியும் உள்ளது. இந்த ஆதரவு முக்கியமானது. பல பெண்கள் வீட்டிலேயே ஊதியம் பெறாத பராமரிப்பு பொறுப்புகளைச் சுமப்பதால், ஊதியம் பெறும் வேலைகளை மேற்கொள்ளவோ அல்லது தொடரவோ முடியாது.
இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் பணவீக்கத்திற்கு ஏற்ப மிதமான அதிகரிப்பை மட்டுமே காட்டுகின்றன. பெண் பங்கேற்பை விரிவுபடுத்துவதற்கு குழந்தை பராமரிப்பு சேவைகள், நகர்ப்புற பாதுகாப்பு மற்றும் பணியிட ஆதரவு அமைப்புகளில் நிலையான முதலீடு தேவைப்படுகிறது. பணியாளர்களில் பெண் பங்கேற்பை அதிகரித்த நாடுகள் குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு உள்கட்டமைப்பில் நிலையான முதலீடுகள் மூலம் அவ்வாறு செய்தன.
பராமரிப்பு பொருளாதாரத்தின் (Care Economy) வளர்ந்து வரும் அங்கீகாரம்
நிதிநிலை அறிக்கை பராமரிப்பு பொருளாதாரத்திற்கும் கவனம் செலுத்துகிறது. இது 1.5 லட்சம் பராமரிப்பாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி, மருத்துவ மையங்களை விரிவுபடுத்துதல் மற்றும் மனநல நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை முன்மொழிகிறது. வேலைவாய்ப்பு உருவாக்குபவர் மற்றும் உற்பத்தித்திறனை செயல்படுத்துபவர் என பராமரிப்பு பொருளாதாரம் (Care Economy) வளர்ந்துவரும் அங்கீகாரத்தைக் குறிக்கிறது.
பராமரிப்புப் பணி இரண்டு பொருளாதார செயல்பாடுகளைச் செய்கிறது. முதலாவதாக, இது குறிப்பாக பெண்களுக்கு, சுகாதாரம், கல்வி, குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகியவற்றில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் துறைகள் உழைப்பு மிகுந்தவை மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்டவை. இரண்டாவதாக, விரிவாக்கப்பட்ட பராமரிப்பு சேவைகள், பெண்கள்மீது விகிதாசாரமாக விழும் ஊதியம் பெறாத வீட்டுப் பொறுப்புகளைக் குறைக்க உதவும். மலிவு விலை பராமரிப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், அரசு மறைமுகமாக பெண்கள் ஊதியம் பெறும் வேலையில் பங்கேற்கும் திறனை அதிகரிக்க முடியும்.
பெண்கள் நலனுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த உயர்வு ஓரளவு வீட்டுவசதி மற்றும் கல்வித் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட ஒதுக்கீடுகள் தொழிலாளர் சந்தை பங்கேற்புடன் ஒத்ததாக இல்லாவிட்டாலும், அத்தகைய முயற்சிகள் சொத்து உரிமையை பூர்த்தி செய்யும் மற்றும் அவை வீடுகளுக்குள் பெண்களின் முடிவெடுக்கும் சக்தியையும் மேம்படுத்த முடியும்.
இருப்பினும், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பில் நிலையான முன்னேற்றத்திற்கு துறைகளுக்கான அறிவிப்புகளைவிட அதிகமாக தேவைப்படுகிறது. இது நெகிழ்வான பணிக் கொள்கைகள், பாதுகாப்பான போக்குவரத்து, அணுகக்கூடிய குழந்தை பராமரிப்பு மற்றும் சம ஊதியத்தை திறம்பட அமல்படுத்துதல் ஆகியவற்றைக் கோருகிறது. நிதிநிலை அறிக்கை இந்த கவலைகளில் சிலவற்றை நிவர்த்தி செய்கிறது. ஆனால், ஒரு முழுமையாக ஒத்திசைவான மற்றும் பாலின-பதிலளிக்கக்கூடிய தொழிலாளர் உத்தி இன்னும் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஒரு பொருளாதார உத்தியாக படைப்பாற்றல்
திறமையான இளைஞர்களை ஏற்கனவே உள்ள வேலைகளுக்கு தயார்படுத்தினால், ஆரஞ்சு பொருளாதாரம் எதிர்கால வேலைகளில் கவனம் செலுத்துகிறது. ஆரஞ்சு பொருளாதாரம் (Orange Economy) என்பது படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தொழில்களைக் குறிக்கிறது. இதில் அனிமேஷன், காட்சி விளைவுகள், கேமிங், காமிக்ஸ் (AVGC), திரைப்படம், இசை, வடிவமைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், ஃபேஷன், விளம்பரம் மற்றும் பிற கலாச்சார சேவைகள் அடங்கும். உடல் மூலதனத்தை பெரிதும் சார்ந்திருக்கும் பாரம்பரிய தொழில்களைப் போலல்லாமல், ஆரஞ்சு பொருளாதாரம் யோசனைகள், திறமை மற்றும் டிஜிட்டல் கருவிகளை நம்பியுள்ளது.
உலக அளவில், படைப்புப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது ஓரளவு அல்ல. உலக வங்கி அறிக்கையின்படி, படைப்புப் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் USD 2.3 டிரில்லியன் உருவாக்குகிறது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதத்திற்கு சமம். இது உலகம் முழுவதும் சுமார் 30 மில்லியன் வேலைகளையும் ஆதரிக்கிறது. உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளின் போது அதன் ஒப்பீட்டு மீள்தன்மை, பல்வகைப்படுத்தல் உத்தி மற்றும் புதுமை சார்ந்த வளர்ச்சியாக அதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியுள்ளது.
2026-27 நிதிநிலை அறிக்கை இந்த திறனை அங்கீகரிக்கிறது. 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்) ஆய்வகங்களை விரிவுபடுத்தும் திட்டம் குறைந்தது இரண்டு முக்கிய நன்மைகளைத் தரக்கூடும். முதலாவதாக, இது டிஜிட்டல் படைப்புத் திறன்களுக்கான அணுகலை விரிவுபடுத்தக்கூடும். இந்த அணுகல் பெருநகரங்களுக்கு அப்பால் விரிவடைந்து சிறிய நகரங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சென்றடையும். இரண்டாவதாக, வளர்ந்துவரும் டிஜிட்டல் வேலைகளுக்கு முன்கூட்டியே வெளிப்படுவதை உறுதிசெய்ய உதவுகிறது மற்றும் இது எதிர்காலத் திறமையை வலுப்படுத்தவும் உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த முயற்சி வேகமாக வளர்ந்து வரும் படைப்பு மற்றும் மின்னணு உள்ளடக்கத் துறைக்கான தயாரிப்பாக முன்வைக்கப்படுகிறது.
மேலும், கலாச்சார மற்றும் படைப்பாற்றல் மிக்க தொழில்கள் என்று பரவலாக வரையறுக்கப்படும் ஆரஞ்சு பொருளாதாரம், உழைப்பு மிகுந்த, திறன் மிகுந்த மற்றும் ஏற்றுமதி சார்ந்ததாகும். ஆரஞ்சு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தொழில்கள் ஒப்பீட்டளவில் குறைந்த உடல் மூலதன தீவிரத்துடன் உலகளவில் அதிக மதிப்புக் கூட்டலை உருவாக்குகின்றன. இந்தத் தொழில்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரின் வலுவான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. இருப்பினும், அபாயங்கள் உள்ளன. படைப்பாற்றல்மிக்க தொழில்களுக்கு உள்கட்டமைப்பு மட்டுமல்ல, வழிகாட்டுதல் வலையமைப்புகள், சந்தை வெளிப்பாடு மற்றும் வலுவான அறிவுசார் சொத்து கட்டமைப்புகளும் தேவை.
மேலும், படைப்பாற்றல் மிக்க பொருளாதாரம் அதிக மதிப்புள்ள வேலைகளை உருவாக்க முடியும் என்றாலும், அது பெரிய பகுதியளவு திறமையான தொழிலாளர்களை உள்வாங்க முடியாமல் போகலாம். ஆரஞ்சு பொருளாதாரம் பல்வகைப்படுத்தல் மற்றும் உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கு முக்கியமானது. இருப்பினும், இது பாரம்பரிய துறைகளை மாற்றாது. அது அவற்றை ஆதரிக்கிறது மற்றும் பூர்த்தி செய்கிறது.
மனித மற்றும் சமூக மூலதனத்துடன் பருப்பொருள் மூலதனத்தை ஒருங்கிணைப்பதை நோக்கி
2026–27 நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான அணுகுமுறையில் மாற்றத்தைக் காட்டுகிறது. பருப்பொருள் சொத்துக்களை மட்டும் உருவாக்குவதிலிருந்து மனித மூலதனத்தை வளர்ப்பதற்கும் கவனம் மாறுகிறது. திறன் மேம்பாடு, பெண்களின் பங்கேற்பு, படைப்பாற்றல் மற்றும் கவனிப்பு ஆகியவை உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால வளர்ச்சியை அதிகளவில் வரையறுக்கின்றன. இந்தியாவின் மக்கள்தொகை யதார்த்தம் இந்த மாற்றத்தை அவசியமாக்குகிறது.
நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் தொழில்துறை வழித்தடங்களை மட்டும் நம்பியிருக்க முடியாது. நிலையான வளர்ச்சிக்கு திறமையான தொழிலாளர்கள், படித்த மற்றும் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்ற பெண்கள், ஆதரவான குடும்பங்கள் மற்றும் மதிப்பு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் கொண்ட புதிய யுகத் துறைகள் இதற்குத் தேவை.
இருப்பினும், சரியான திசையைக் கொண்டிருப்பது போதாது. தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) பயிற்சி நிலையான வேலைகளுக்கு வழிவகுக்கும். ஆரஞ்சு பொருளாதாரம் ஆய்வகங்களை மட்டுமல்ல, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். பெண்களின் வேலையில் வீட்டு கட்டுப்பாடுகளைக் குறைக்கும் அளவில் பராமரிப்புப் பொருளாதாரம் விரிவடைய வேண்டும். நிதிநிலை அறிக்கை மனித மற்றும் சமூக மூலதனத்துடன் உடல் மூலதனத்தை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. கருத்தியல்ரீதியாக, இது ஒரு முக்கியமான படியாகும். தொழிலாளர்கள் திறமையானவர்களாகவும், ஆரோக்கியமாகவும், பங்கேற்கும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கும்போது உள்கட்டமைப்பு அதிக வருமானத்தை அளிக்கிறது.
ஆனால், உள்ளடக்கிய வளர்ச்சி நிலையான நிதி, அரசாங்க மட்டங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஊதியங்கள், வேலைவாய்ப்பு தரம் மற்றும் தொழிலாளர் பங்கேற்பில் அளவிடக்கூடிய முன்னேற்றங்களைப் பொறுத்தது. 2026-27 நிதிநிலை அறிக்கையில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. அது ஒரு திருப்புமுனையாக மாறுமா என்பது வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்களில் செயல்படுத்தல் மற்றும் உண்மையான முன்னேற்றங்களைப் பொறுத்தது.