பயிர்க்கடன் தள்ளுபடி என்பது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே. - அ. நாராயணமூர்த்தி

 துயரத்திலுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், புதிய தமிழக அரசு மற்றும் இதர மாநில அரசுகள் நியாயமான விலை, போதிய கொள்முதல் மற்றும் பாதுகாப்பான சந்தை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.


ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசு 56 லட்சம் வேளாண் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ரூ.36,585 கோடிக்கான பிரம்மாண்ட பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்ததைத் தொடர்ந்து, மே மாதத்தில் தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான அரசு, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான நிபந்தனையுடன்கூடிய பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது.


தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதையும், தமிழ்நாட்டின் அதிகக் கடன்பட்ட வேளாண் தொழிலாளர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, சிறு மற்றும் குறு வேளாண் தொழிலாளர்களுக்கு ஓரளவிற்கு நிம்மதியை அளிக்கும்.


இருப்பினும், ஒருமுறை வழங்கப்படும் இத்தகைய கடன் தள்ளுபடி, வேளாண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆழமான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?


இத்திட்டம் சுமார் 14.22 லட்சம் வேளாண் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ரூ.2,044.46 கோடியை ஒதுக்குகிறது. ஆனால், இதற்கான தகுதி வரம்புகள், மே மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு மற்றும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட குறுகிய காலப் பயிர்க் கடன்களுக்குப் பொருந்தும்.


அனைத்து வேளாண் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்தமாகக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒரு புதிய 'தகுதிக்கேற்ப வழங்கப்படும் நிவாரண' (Graded Relief) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின்கீழ், தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையானது, நிலுவையில் உள்ள கடன் அளவு மற்றும் வேளாண் தொழிலாளர்களின் நில உடைமை வகை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ₹50,000 வரை கடன் வைத்துள்ள விளிம்புநிலை மற்றும் குறு வேளாண் தொழிலாளர்கள் முழுத் தள்ளுபடியைப் பெறுவார்கள். அதே கடன் பிரிவில் உள்ள சிறு வேளாண் தொழிலாளர்கள் 50% மட்டுமே நிவாரணம் பெறுவார்கள்.


இந்தக் கொள்கையானது ஒரு முற்போக்கான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இதன்படி கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க வழங்கப்படும் நிவாரணத் தொகை குறையும். உதாரணத்திற்கு, ₹50,001 முதல் ₹60,000 வரை உள்ள கடன்களுக்கு நிலையான தள்ளுபடியாக ₹40,000 வழங்கப்படும், மேலும் கடன் சுமை அதிகரிக்க அதிகரிக்க இந்தச் சலுகை படிப்படியாகக் குறையும். இதன் விளைவாக, பெரிய நில உரிமையாளர்களும் மற்றும் ₹1,00,000-க்கு மேல் கடன் பெற்றுள்ள மற்ற வேளாண் தொழிலாளர்களும் வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடியாகப் பெறுவார்கள். ஒருமுறை செய்யப்படும் கடன் தள்ளுபடிகள் அவர்களின் துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது என்றாலும், தகுதிக்கேற்ப வழங்கப்படும் நிவாரண அளவுகோலை (Graded relief scale) புதுமையாகப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.


கடன் தள்ளுபடி குறித்த வரலாறு


இந்தியாவில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு (Farm loan waivers) ஒரு நீண்ட வரலாறு உண்டு. வறட்சி, பருவமழை பொய்த்தல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றைக் காரணம் காட்டி, பல்வேறு மாநில அரசுகள் 1987-ஆம் ஆண்டு முதல் சிறிய அளவிலான நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளன. இருப்பினும், நாடு முழுவதும் வேளாண் தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்ததைக் கண்டும், கடன் சுமை குறித்து 2006-ஆம் ஆண்டு வெளிவந்த ராதாகிருஷ்ணா குழுவின் அறிக்கையின் (Radhakrishna Committee Report on Indebtedness) ஆய்வு முடிவுகளைக் கருத்தில் கொண்டும், ஒன்றிய அரசு 2008-ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் ஒரு பிரம்மாண்டமான         'பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டத்தை' (Agricultural Debt Waiver and Debt Relief Scheme (ADWDRS)) அறிமுகப்படுத்தியது.


இந்தத் திட்டம் சுமார் 3.7 கோடி சிறு, குறு வேளாண் தொழிலாளர்களையும் மற்றும் 60 லட்சம் இதர வேளாண் தொழிலாளர்களையும் உள்ளடக்கி,     ஏறக்குறைய ₹60,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. ஆனாலும், இந்திய தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) தனது தணிக்கை அறிக்கையில் இந்தத் திட்டத்தில் நடந்த கடுமையான நிறுவன முறைகேடுகளைப் பின்னாளில் சுட்டிக்காட்டினார்.


அதன் பிறகு, பல மாநிலங்கள் வழக்கமாகவே பயிர்க்கடன் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் வேளாண் தொழிலாளர்களின் தற்கொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே கொள்கை வகுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், உண்மையான தரவுகளைப் பார்க்கும்போது, 2008-ஆம் ஆண்டின் அவ்வளவு பெரிய பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பிறகும்கூட, வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை தொடர்ந்து கொண்டுள்ளது என்பதுதான் வேதனைக்குரிய ஒன்றாகும்.


பயிர்க்கடன் தள்ளுபடிக்கு முந்தைய காலகட்டமான 1995-2008-ஆம் ஆண்டுகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 41 வேளாண் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், இந்தத் துயரமான எண்ணிக்கை பயரிக்கடன் தள்ளுபடிக்கு பிந்தைய காலகட்டமான 2009-2011-ஆம் ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 43-ஆக உயர்ந்தது.


அடிப்படைப் பிரச்சனை


வேளாண் தொழிலாளர்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதற்கு முதன்மையான காரணம், பயிர் சாகுபடி மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் உண்மையான லாபம் மிக மிகக் குறைவாக இருப்பதுதான். வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் குறித்த நிலைமை மதிப்பீட்டு ஆய்வின்படி (Situation Assessment Survey, 2021), தமிழ்நாட்டில் ஒரு வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பத்திற்குப் பயிர் சாகுபடி மூலம் கிடைக்கும் சராசரி மாத நிகர வருமானம் வெறும் ₹2,641 மட்டுமே. இது ஒரு நாளைக்குச் சுமார் ₹88 என்ற மிகக் குறைந்த வருமானமே ஆகும். இந்தத் தொகையை வைத்துக் கொண்டு வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பத்தால் தங்களின் அடிப்படை வீட்டுச் செலவுகளைக் கூடச் சமாளிக்க முடியுமா?


வேளாண் தொழிலாளர்களின் இந்த வருமானக் குறைவிற்கு முக்கியக் காரணம், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சாகுபடிச் செலவுகளும், அதற்கு நேர்மாறாக அவர்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த, லாபமில்லாத கொள்முதல் விலையும்தான். உதாரணமாக, சாகுபடிச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices (CACP)) 1974-75-ஆம் ஆண்டு முதல் 2021-22-ஆம் ஆண்டு வரை வெளியிட்ட தரவுகளின் பகுப்பாய்வு ஒரு அதிர்ச்சியான உண்மைகளைக் காட்டுகிறது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உள்ள நெல் சாகுபடி செய்த வேளாண் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவை ஒப்பிடும்போது, வெறும் 15 ஆண்டுகளில் மட்டும்தான் லாபம் ஈட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.


இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், 2000-01-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில், நெல் சாகுபடியானது வெறும் மூன்று ஆண்டுகளில் மட்டுமே லாபகரமாக இருந்துள்ளது. இத்தகைய மோசமான சூழ்நிலையில், அரசாங்கம் வழங்கும் ஒருமுறை கடன் தள்ளுபடி என்பது தற்காலிகத் தீர்வாக மட்டுமே செயல்படுகிறது. இதே நஷ்டம் தரும் சூழ்நிலையில், வேளாண் தொழிலாளர்கள் அடுத்த பயிர் சாகுபடி பருவத்தில்  (Cropping season) மீண்டும் கடன் வாங்கும்போது, அவர்கள் மறுபடியும் கடன் பிரச்சனையில் மீண்டும் சிக்கிக்கொள்ள நேரிடும் என்கின்றனர். 


மேலும், நிதி உள்ளடக்கம் குறித்த ரங்கராஜன் குழு அறிக்கை (2008), (Rangarajan Committee Report on Financial Inclusion (2008)) இந்தியாவின் 66 சதவீதத்திற்கும் அதிகமான சிறு மற்றும் குறு வேளாண் தொழிலாளர்கள் வங்கிகள் போன்ற முறையான அரசு நிறுவனக் கடன்களைப் பெறுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் அவர்கள் கந்துவட்டிக்குக் கடன் தரும் வெளி நபர்களையே (Informal money lenders) நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடித் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்களை மட்டுமே குறிவைப்பதால், வெளிநபர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிப் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஏழைச் சிறு வேளாண் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை; இதுவே இந்த நிவாரணத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகக் கருதப்படுகிறது.


அடுத்தகட்ட நடவடிக்கை


மகாராஷ்டிராவின் பிரம்மாண்டமான கடன் தள்ளுபடியோ அல்லது தமிழ்நாடு அரசு அறிவித்த தகுதி அடிப்படையிலான கடன் தள்ளுபடியோ, போதிய வாழ்வாதாரம் இல்லாத ஏழை வேளாண் தொழிலாளர்களைப் பொருளாதாரக் கடன் சிக்கல்களில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்காது. அவர்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்ய, சந்தைகளை மையமாகக் கொண்ட பல தீவிரமான கொள்கைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

முதலாவதாக, தற்போது வேளாண் தொழிலாளர்களுக்குப் பயிர்களை உற்பத்தி செய்வதைவிட, விளைவித்தப் பொருட்களைச் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில்தான் கடுமையான சவால்கள் உள்ளன. எனவே, அரசு நிறுவனங்கள் முக்கியப் பயிர்களைக் கொள்முதல் செய்வதை வேகப்படுத்தவும் முறைப்படுத்தவும் வேண்டும். மற்ற மாநிலங்களைப் பின்பற்றி, கடுமையான விலை வீழ்ச்சியின் போது வேளாண் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு ஒரு வலுவான சந்தை தலையீட்டுத் திட்டத்தை (Market Intervention Scheme (MIS)) தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.


இரண்டாவதாக, எம். எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (National Commission on Farmers (NCF)) 2006-ஆம் ஆண்டில் பரிந்துரைத்தபடி, வேளாண்மைக்கான ஒட்டுமொத்த உற்பத்திச் செலவைவிட 50 சதவீதம் கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) மாநில அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு ஆதரவாக ஒரு பிரத்யேக மாநில விலை நிலைநிறுத்தல் நிதியையும் (State Price Stabilization Fund) உருவாக்க வேண்டும்.


மூன்றாவதாக, நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாததால், அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, திறந்தவெளிகளிலேயே முளைத்து விடுகின்றன. இதனால் அறுவடைக்கு பிந்தைய பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, உள்ளூர் உற்பத்தி அளவைக் கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான சேமிப்பு கிடங்கு வசதிகளை உருவாக்க வேண்டும்.


இறுதியாக, ஒரே ஒருமுறை செய்யப்படும் பயிர்க்கடன் தள்ளுபடியால் மட்டும் ஊரகப்பகுதிகளில் நீடிக்கும் தொடர் கடன் சுமையை ஒழித்துவிட முடியாது.           பயிர் சாகுபடிக்கான நியாயமான விலை, போதிய கொள்முதல் வசதி, பாதுகாப்பான சந்தைகள் மற்றும் உறுதியான பாசன வசதி ஆகியவை கிடைக்காத வரை, கடன் சுமை வேளாண் தொழிலாளர்களைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கும்.


எனவே, மாநில அரசு வேளாண் சந்தைகளை மறுசீரமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


அ. நாராயணமூர்த்தி, பொருளாதார நிபுணர் மற்றும் புது டெல்லியில் உள்ள வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) முன்னாள் முழுநேர அதிகாரப்பூர்வ உறுப்பினர் ஆவார்.     


Original article : Farm loan waivers are just a band aid solution -A Narayanamoorthy

Share:

இந்தியா தனது டிஜிட்டல் சூழலமைப்பை எவ்வாறு பாதுகாக்க முடியும்? -நிஷாந்த் சஹ்தேவ்

 ஒரு கற்பனையான தொழில்நுட்ப யுகத்தில் (Mythos), வெறும் கணினி பாதுகாப்பு அடுக்கு (Firewall) கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டும் போதாது. கணினி அமைப்புகள் அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, உடனுக்குடன் தங்களின் பாதுகாப்புத் திறனைத் தானாகவே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.


மே மாதம் 1940-ஆம் ஆண்டில், பெல்ஜியத்தின் (Belgium) எபென்-எமேல் (Eben-Emael) கோட்டைதான் மனித வரலாற்றிலேயே கட்டப்பட்ட மிக வலிமையான பாதுகாப்பு உள்கட்டமைப்பு என்று ராணுவ வல்லுநர்கள் நம்பினர். கான்கிரீட் மற்றும் எஃகு கொண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கோட்டை, எந்தவொரு தாக்குதலையும் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது வெறும் 15 நிமிடங்களில் வீழ்த்தப்பட்டது. அது ஒரு பெரிய ராணுவத்தால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, 'வெடிபொருளின் ஆற்றலை ஒரே புள்ளியில் குவிக்கும் தொழில்நுட்பம்' (Shaped charge) எனப்படும் ஒரு புதிய ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்திய பாராசூட் படை வீரர்களின் (Paratroopers) ஒரு சிறிய குழுவால்தான் வீழ்த்தப்பட்டது. கோட்டையைப் பாதுகாத்த வீரர்கள் நீண்ட நாட்கள் நீடிக்கும் ஒரு பாரம்பரியப் போருக்குத் தயாராக இருந்தனர். ஆனால், புதிய கண்டுபிடிப்பு மற்றும் துல்லியமான உளவுத் தகவல்களின் உதவியோடு மின்னல் வேகத்தில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலால் முற்றிலும் நிலைகுலைந்து போயினர்.


கடந்த மாதம், இணையப் பாதுகாப்பு உலகம் இதேபோன்ற ஒரு முக்கிய திருப்புமுனையைச் சந்தித்தது. வலுவான பாதுகாப்பிற்குப் பெயர்பெற்ற          ‘OpenBSD’ என்ற இயங்குதளத்தின் (OS) குறியீட்டில் (Code) கடந்த 27 ஆண்டுகளாக ஒரு சிறிய குறைபாடு யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தது. ஏறக்குறைய, முப்பது ஆண்டுகாலமாக, சிறந்த தணிக்கையாளர்கள், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கணினி ஊடுருவல் நிபுணர் குழுக்கள் (Red teams) மற்றும் தானியங்கி ஸ்கேனிங் கருவிகள் என அனைத்தும் இந்தக் குறியீட்டைப் பரிசோதித்து, இது மிகவும் பாதுகாப்பானது என்றே கருதின. ஆனால், 'Mythos' (அதிநவீன இணையவழித் தாக்குதல் முறை) வந்த பிறகு நிலைமை மாறியது.


‘Anthropic’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'Mythos' என்பது ஒரு சாதாரண உரையாடும் மென்பொருள் (Chatbot) அல்ல. அது இணையவழித் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தும் ஒரு கணினித் திறன் முகவர் (Cyber-offense reasoning agent) ஆகும். இது மென்பொருளில் உள்ள ஒரு பிழையை (Bug) சாதாரணமாகக் கண்டறியாமல், அந்தப் பலவீனத்தின் பின்னணியைப் புரிந்து கொண்டு, சில நொடிகளுக்குள் 32 படிகளைக் கொண்ட இணையவழித் தாக்குதலைத் தானாகவே வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. மேலும், ஏற்கனவே அறியப்பட்ட இணையவழித் தாக்குதல்களை அதன் முதல் முயற்சியிலேயே 83.1% துல்லியமாகச் செய்து காட்டியுள்ளது. இதனை நான் "ஆச்சரியங்களின் முடிவு" (End of Surprise) என்று அழைக்கிறேன். ஏனெனில், மனித திறனுக்கும் அப்பாற்பட்ட வேகத்திலும் அளவிலும், இதுவரை கண்டறியப்படாத புதிய மென்பொருள் பலவீனங்களை (Zero-days) கணினிகளே கண்டறியத் தொடங்கும்போது, நாம் வழக்கமாகச் செய்யும் காலமுறைப் பாதுகாப்புத் தணிக்கைகளை மட்டுமே ஒரு பாதுகாப்பு அரணாக இனி நம்பியிருக்க முடியாது, அப்படி நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.


Zero-days: மென்பொருளை உருவாக்கியவர்களுக்கே தெரியாத, அதுவரை உலகிற்கு வெளிவராத புதிய பாதுகாப்புப் பலவீனங்கள்.


‘Mythos’ மென்பொருள் ஏற்படுத்திய தாக்கம் உலக அரசியல் சூழலையே மாற்றியமைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான கட்டுப்பாடுகளைக் குறைத்து, நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்கும் கொள்கையை பல மாதங்களாக ஆதரித்து வந்த டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், இப்போது தனது நிலையை அதிரடியாக மாற்றியுள்ளது. அதாவது, இந்தத் செயற்கை நுண்ணறிவுத் திறனை ஒரு நாட்டின் தேசிய சொத்தாக மாற்றி அரசாங்கத்தின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு "தேசியமயமாக்கல்" கொள்கையை நோக்கி தீவிரமாக நகரத் தொடங்கியுள்ளது.



மேம்பட்ட அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப (AI) மாதிரிகளைக் கட்டுப்படுத்தும் இறுதி அதிகார அமைப்புகளாக அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency (NSA)) ஆகிய இரு அமைப்புகளும் செயல்படும் ஒரு புதிய கட்டமைப்பு உருவாகி வருவதை அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்த அணுகுமுறையின்கீழ், எந்தவொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்பு, ராணுவத்தின் தலைமையிலான பாதுகாப்புச் சோதனைகளை அது கடந்து வருவது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம், அணுசக்தி செறிவூட்டல் தொழில்நுட்பத்தைப் (Nuclear enrichment technology) போலவே, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் தேசியப் பாதுகாப்போடு தொடர்புடைய, பொதுச் சமூகம் மற்றும் ராணுவம் ஆகிய இரண்டிற்கும் பயன்படும் ஒரு இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பமாக (Dual-use technology) அமெரிக்கா கருதுகிறது. இது "Fortress America" (அமெரிக்காவை ஒரு பலத்த கோட்டையாக மாற்றுவது) என்ற பாதுகாப்பு உத்தியின் டிஜிட்டல் வடிவமாகும். 'Mythos-class' போன்ற மிக அதீதத் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகள் இருக்கும் உலகில், ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரியின் ரகசியம் கசிவது என்பது வெறும் வணிகரீதியான இழப்பு மட்டுமல்ல, அது நாட்டின் பாதுகாப்பிற்கே ஏற்படும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடும் என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளைப் போல அதே தற்காப்பு மற்றும் கட்டுப்பாட்டு அணுகுமுறையைக் கையாள்வது ராஜதந்திரரீதியில் ஒரு பெரிய தவறாக முடிந்துவிடும். இந்தியாவின் உண்மையான பலமே அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில்தான் (Digital Public Infrastructure (DPI)) உள்ளது.  நாட்டின் பொருளாதாரத்திற்குத் துணையாக இருக்கும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகக் (Unified Payments Interface (UPI)) கட்டமைப்பு முதல் டிஜிட்டல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆதார் (Aadhaar) அமைப்பு வரை இதில் அடங்கும். நமது பலமே வெளிப்படைத்தன்மையிலும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும்தான் உள்ளது. உலகின் பிற பகுதிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் அதிநவீன தொழில்நுட்பங்களால் நமது பாதுகாப்பு அமைப்புகள் எளிதில் தாக்கப்படக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கும்போது, நாம் மேற்கத்திய நாடுகளின் "பாதுகாப்புச் சான்றிதழ்களுக்காக" மட்டும் காத்துக்கொண்டிருந்தால், அது நாமே நமக்கு  ஒரு போலிப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு, எதிரிகளின் திடீர் மின்னல் வேகத் தாக்குதலுக்கு (Blitzkrieg-style attack) பலியாவதற்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


இந்திய நிறுவனங்களின் மதிப்புச் சரிவு


இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் என்பது வெறும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இது நம் நாட்டின் ஒட்டுமொத்த வணிகம் சார்ந்த ஒரு பெரிய பிரச்சனையாகும். நம் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான TCS, Infosys, மற்றும் Wipro ஆகிய நிறுவனங்கள், கடந்த முப்பது ஆண்டுகளாக "வேலை நேரத்திற்கான கட்டணம்" (Billable hour) என்ற வணிக மாதிரியின் மூலம்தான் தங்களின் உலகளாவிய நிறுவனக் கட்டமைப்புகளைக் கட்டியெழுப்பியுள்ளன. இப்போதும், கணினிக் கட்டமைப்புகளை மனிதர்களே நேரடியாக ஆய்வு செய்யவும், பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யவும், மற்றும் பழைய கணினிக் குறியீடுகளைப் பராமரிக்கவும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


ஆனால், 'Mythos' என்ற புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வருகையானது, இந்த பாரம்பரிய வணிக மாதிரிக்கு ஒரு "மதிப்புச் சரிவை" ஏற்படுத்தும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு செயற்கை நுண்ணறிவால் (AI) ஒரு மாத காலம் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஆய்வை, வெறும் ஐந்து வினாடிகளில் மிகக் குறைந்த செலவில் செய்து முடிக்க முடியும் என்றால், மனிதர்களால் செய்யப்படும் பாதுகாப்பு ஆய்வு என்பது ஒரு சேவையாக இருக்காது. மாறாக, அது ஒட்டுமொத்த வேலை வேகத்தையும் முடக்கும் ஒரு தடையாகவே மாறிவிடும்.


இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இனிமேலும் வெறும் "சேவை வழங்குநர்களாக" மட்டும் இல்லாமல், உடனடியாக தாக்குதல்களைத் தாங்கித் தற்காக்கும் அமைப்புகளை உருவாக்கும் “மீள்திறன் கட்டமைப்பாளர்களாக" (Resilience architects) மாற வேண்டும். ஒரு பிழையை (Bug) சரிசெய்ய எவ்வளவு நேரமாகிறது என்பதற்குக் கட்டணம் வசூலிக்கும் முறையிலிருந்து மாறி, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு கணினி அமைப்பின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கும் நம்பகத்தன்மைக்கும் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு மாற வேண்டும்.

இயற்பியலாளரின் பார்வை


ஒரு இயற்பியலாளராக, இந்த நெருக்கடியை நான் 'அறிவுசார் பிறழ்வு' (Epistemic Drift) என்ற கோட்பாட்டின் மூலம் பார்க்கிறேன். அதாவது, நமது டிஜிட்டல் அமைப்புகள் மனிதர்களால் அவற்றின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலானதாக மாறும் ஒரு காலகட்டமாகும். மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத தொழில்நுட்ப அமைப்புகளை இப்போது நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.


ஒரு செயற்கை நுண்ணறிவால் (AI) 27 ஆண்டுகள் பழமையான மென்பொருள் குறைபாட்டைக் கண்டறிய முடிகிறது என்னும் போது, நமது மென்பொருட்களின் அடித்தளத்தையே நம்மால் நம்ப முடியாமல் போகிறது. இதனால், இந்த டிஜிட்டல் யுகத்தைத் தாங்கி நிற்கும் 'நம்பிக்கை' பலவீனமடையத் தொடங்குகிறது.


இயற்பியலில், 'Entropy' என்பது இயற்கையாகவே சீர்குலைவை நோக்கிச் செல்லும் ஒரு போக்கைக் குறிக்கும். இந்த டிஜிட்டல் உலகில், 'Mythos' செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது ஒரு சீர்குலைவை உண்டாக்கும் இயந்திரம் (Entropy engine) போலச் செயல்படுகிறது. நம்மால் ஒரு பாதுகாப்பை உருவாக்குவதற்கு முன்பாகவே, அது பலவீனங்களைக் கண்டறிந்து அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டுமானால், "பாதுகாப்பு" என்பதை வெறும் ஒரு கதவைப் பூட்டுவது போன்ற எளிய விஷயமாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, உடலின் "நோய் எதிர்ப்பு மண்டலம்" போல, பாதிப்புகள் வந்தாலும் தானாகவே மீண்டுவரும் திறனைக் கொண்ட தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்க வேண்டும். 


நான் அடிக்கடி “இறையாண்மை நிலைத்தன்மை” (sovereign resilience) பற்றி பேசியிருக்கிறேன், ஆனால் Mythos-ஐத் தொடர்ந்து, இது ஒரு கொள்கைப் பரிந்துரையிலிருந்து அரசுக்கான உயிரியல் அவசியமாக உருவாக வேண்டும். இது நமது தேசிய கட்டமைப்பில் ஒரு அடிப்படை மாற்றத்தைத் தேவைப்படுத்துகிறது.



முதலாவதாக, கணினித் திறன் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின்              'Project Glasswing' போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த திட்டங்களில் இந்தியா ஒரு இரண்டாம்தரப் பங்களிப்பு நாடாகவே நீடிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக,      'BharatGen' போன்ற நமது சொந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி, நமக்கான இறையாண்மைமிக்க 'பாதுகாப்பு மொழி மாதிரிகளை (Defensive LLMs) உருவாக்க வேண்டும். இவை பொதுமக்களுக்கான உரையாடும் மென்பொருள்களாக (Chatbots) அல்ல; மாறாக 'இந்தியா ஸ்டேக்' (India Stack) தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட, நமது உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளாகும். இவை நமது அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைத் தொடர்ச்சியாகத் தேடிக் கண்டறியவும், வரவிருக்கும் இணையவழித் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாக்க உதவும். இந்தியாவின் தொழில்நுட்ப பலவீனங்களை மற்ற நாடுகள் கண்டறிவதற்கு முன்பாக, நாமே முதலில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.


இரண்டாவதாக, நாம் 'தானியங்கி தன்-சீரமைப்பு' (Autonomous Self-Healing) முறையை நோக்கி நகர வேண்டும். தானியங்கி முறையில் இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் இன்றைய உலகில், ஒரு கணினி நிர்வாகி (Human administrator) உள்ளே நுழைந்து சர்வரைச் சரிசெய்வார் என்று காத்திருப்பது காலாவதியான முறையாகும். நமது மின்சாரக் கட்டமைப்புகள், தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் நிதி அமைப்புகள் போன்றவை ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதைத் தானாகவே கண்டறிந்து, உடனுக்குடன் தங்களைச் சரிசெய்து கொள்ளும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும். இது வெறும் வலுவான கணினிப் பாதுகாப்பு (Firewall) அமைப்புகளை உருவாக்குவது பற்றியது மட்டுமல்ல; ஒருவேளை தாக்குதலுக்கு உள்ளானாலும்கூட, தொடர்ந்து தங்கு தடையின்றி இயங்கக்கூடிய திறனுள்ள அமைப்புகளை உருவாக்குவது பற்றியதாகும்.


இறுதியாக, நமக்கு 'தாக்குதலுக்குப் பிந்தைய தணிக்கை ஒழுங்குமுறை கட்டமைப்பு' (Post-Audit Regulatory Framework) தேவைப்படுகிறது. வங்கிகளின் அபாயங்களை ஆராய்ந்து வரும் சி.எஸ். செட்டி குழு உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள், தாக்குதல்களைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 'Mythos' (அதிநவீன இணையவழித் தாக்குதல் முறை) போன்ற ஆபத்துகள் நிறைந்த இந்தக் காலத்தில், தாக்குதல்கள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, இப்போது மிக முக்கியமான அளவுகோல் என்னவென்றால், 'மீளெழுச்சிப் பெறுவதற்கான நேரம்' தான். அதாவது, ஒரு வங்கி தனது தொழில்நுட்ப அமைப்பிற்குள் நடந்த ஊடுருவலை எவ்வளவு விரைவாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியைத் தனிமைப்படுத்தி, மீண்டும் ஒரு பாதுகாப்பான நிலைக்குத் திரும்புகிறது என்பதுதான். 2026-ஆம் ஆண்டில், நாம் செய்ய வேண்டிய தணிக்கை முறை இதுவே ஆகும்.


ஒரு புதிய சூழல்


தாக்குதலின் வேகத்தை தொழில்நுட்பம் அதிகரிக்கும் போதெல்லாம், நாம் உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் வேகத்தையும் அதிகரிப்பதுதான் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. போர் பீரங்கிகளின் வருகை அகழிகளை (Trenches) பயனற்றதாக்கியது. போர் விமானங்களின் வருகை பிரம்மாண்ட போர்க்கப்பல்களை வெறும் இலக்குகளாக மாற்றியது. அதுபோலவே, இப்போது தன்னியக்க செயற்கை நுண்ணறிவின் (Autonomous AI) வருகையானது, நாம் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் நிலையான கணினிப் பாதுகாப்பு அமைப்புகளைப் பயனற்றதாக மாற்றிவிட்டது.


‘Mythos’ தொழில்நுட்பம் என்பது வெறும் மென்பொருள் மேம்பாடு அல்ல. அது ஒட்டுமொத்த டிஜிட்டல் சூழலையும் மாற்றியமைக்கும் ஒரு புரட்சியாகும். நாம் எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சியடைவதற்குக் காரணமான ஒரு காலகட்டம் இதோடு முடிவுக்கு வருகிறது. இதில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்றால், நாம் இன்னும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, மிக வேகமாகச் செயல்படும் மற்றும் தனக்குத்தானே தவறுகளைத் திருத்திக் கொள்ளும் ஒரு சுறுசுறுப்பான நாடாக இந்தியா மாற வேண்டும்.


தன்னியக்க நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (Autonomous intelligence) காலத்தில், இயந்திரங்களைவிட வேகமாக நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனே நமக்கான ஒரே உண்மையான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும். பழைய பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே தகர்க்கப்பட்டுவிட்டன. இனி இந்தியா வேகமாக முன்னேறிச் செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.


நிஷாந்த் சஹ்தேவ், சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயற்பியலாளர் ஆவார். மேலும் இவர் செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய அமைப்புகள் குறித்து எழுதும் ஒரு கட்டுரையாளர் ஆவார்.


Original article : How India can protect its digital ecosystem? -Nishant Sahdev

Share:

2025-26 நிதியாண்டில் சாதனை அளவிலான வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் (remittances) இந்தியாவின் நிதிநிலைக்குத் துணையாக அமைந்தன. ஆனால், அவை நீண்டகாலத் தீர்வு அல்ல - சித்தார்த் உபாசனி

 வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியத் தொழிலாளர்கள் 2025-26 நிதியாண்டில் சாதனை அளவாக 110.47 பில்லியன் டாலர் தொகையை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். மூலதன வரவு குறைவாக இருந்த சூழலில் இது இந்திய ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க உதவியது. இருப்பினும், நீண்டகால அடிப்படையில் அந்நிய நேரடி முதலீடு (foreign direct investment (FDI)) மற்றும் அந்நியத் தொகுப்பு முதலீடு (foreign portfolio investment (FPI)) ஆகியவை மேம்பட வேண்டும். அத்துடன் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையையும் திறம்படக் கையாள வேண்டியது அவசியம்.


நிதிச் சந்தைகளிலிருந்து மூலதனம் வெளியேறிய போதிலும் மற்றும் நிகர நேரடி அந்நிய முதலீட்டு (FDI) வரவு மந்தமாக இருந்த போதிலும், ஜனவரி முதல் மார்ச் 2026 காலாண்டில் இந்தியா 7.22 பில்லியன் டாலர் அளவிலான 'செலுத்துச் சமநிலை' (Balance of Payments (BoP)) உபரியைப் பதிவு செய்தது. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழலால் இந்தப் பணப் பரிமாற்றங்கள் பாதிக்கப்படலாம் என்று கருதப்பட்ட ஒரு காரணியாக, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்கள் (remittances) இதற்கு முக்கிய உதவியாக அமைந்தது.


2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் 31.07 பில்லியன் டாலர்களை நாட்டிற்கு அனுப்பினர். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். மேலும், இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 34% வளர்ச்சியைக் குறிக்கிறது. இருப்பினும், ஆண்டு முழுமைக்குமான புள்ளிவிவரம் இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.





ஒரு புதிய சாதனை


2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் சாதனை அளவாக 110.47 பில்லியன் டாலர்களை நாட்டிற்கு அனுப்பினர். இது 2024-25-ல் இருந்த 87.55 பில்லியன் டாலர் தொகையைவிட 26% அதிகமாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிச் சூழல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிக பணத்தை அனுப்பியிருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


ஓர் ஆண்டில் தொழிலாளர்களின் பணப் பரிமாற்றங்கள் 100 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லைக் கடப்பது இதுவே முதல் முறையாகும். பொதுவாகக் குறிப்பிடப்படும் பணப் பரிமாற்றத் தொகையானது, கடந்த நான்கு ஆண்டுகளாகவே 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், இந்தத் தொகையானது பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுவது போல தொழிலாளர்களின் பணப் பரிமாற்றங்களை மட்டும் குறிப்பதில்லை. மாறாக, அது 'தனியார் பரிமாற்றங்கள்' (private transfers) எனப்படும் பரந்த வகையைச் சார்ந்ததாகும்.




தனியார் பணப் பரிமாற்றங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பணப் பரிமாற்றங்கள் (remittances) இருந்தபோதிலும், இப்பிரிவில் பிற வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகையிலிருந்து பணம் எடுப்பது மற்றும் அந்த வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெறுவது, தனிப்பட்ட பரிசுகள் மற்றும் நன்கொடைகள் (இந்தியாவில் உள்ள மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுபவை உட்பட), மற்றும் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவையும் அடங்கும்.


2025-26 ஆம் ஆண்டில் தனியார் பணப் பரிமாற்றங்கள் 15% அதிகரித்து 151.71 பில்லியன் டாலராக உயர்ந்தன. அதேவேளையில், வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட பணத்தைக் கழித்த பிறகான நிகரப் பரிமாற்றங்கள் (net transfers) 16% அதிகரித்து 144.07 பில்லியன் டாலராக இருந்தன.


இருதரப்பு நன்மைகள்


போர்ச் சூழல் ஒருபுறம் இருக்க, 2025-26 ஆம் ஆண்டில் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததும், வழக்கத்தை விட அதிக டாலர்களை (அல்லது பிற நாணயங்களை) தாயகத்திற்கு அனுப்ப மக்களை ஊக்குவித்திருக்கும். ஏனெனில், அந்நியச் செலாவணியின் ஒவ்வொரு அலகுக்கும் இந்தியாவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக ரூபாய் கிடைக்கும் நிலை உருவானது.


"நல்லவேளையாக, பணப் பரிமாற்றங்கள் (remittances) எந்த வகையிலும் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. மார்ச் மாதத்திற்குப் பிறகும் அவை பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை," என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


அந்நிய நேரடி முதலீடு (FDI) அல்லது அந்நியத் தொகுப்பு முதலீடு (FPI) போன்ற பிற வகையான அந்நிய முதலீட்டு வரவுகள் கவலைக்குரிய வகையில் குறைந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் இத்தகைய வலுவான பணப் பரிமாற்றங்களுக்கு நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்தப் பணப் பரிமாற்றங்கள் இல்லாவிட்டால், ரூபாயின் மதிப்பு இன்னும் அதிகமாக வீழ்ச்சியடைந்திருக்கக்கூடும்.

பணப் பரிமாற்ற முறைகளில் ஏற்படும் மாற்றங்கள்


மேற்கு ஆசியப் பகுதியில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிவதால், அப்பகுதியில் நிலவும் போர்ச் சூழல் இந்தியாவின் வெளிநாட்டுச் சமநிலைக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியது. இருப்பினும், பணப் பரிமாற்றங்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய ஆய்வின்படி, வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றிலிருந்து வரும் பண வரவு, 2016-17-ல் மொத்த வரவில் 47%-ஆக இருந்த நிலையில், 2023-24-ல் 38% ஆகக் குறைந்துள்ளது.


இதன் விளைவாக, போரினால் ஏற்படும் பாதிப்பு முன்பு இருந்ததைவிடக் குறைவாகவே இருக்கலாம் என்றாலும், மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கும்போது அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளும் குறைவாகவே இருக்கும். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களில் வளைகுடா பிராந்தியத்தின் பங்கு குறைந்துள்ள அதேவேளையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த நாடுகள் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு தற்போதைய மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைச் சமாளித்து வருகின்றன.


ஒரு நீண்டகாலத் தீர்வு


இருப்பினும், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நியத் தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றின் பரிமாற்றம் அதிகரிக்கப்பட வேண்டும். அதேசமயம், வர்த்தகப் பற்றாக்குறையையும் நிர்வகிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் இன்னும் பல நடவடிக்கைகளை அறிவிக்கவிருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதன் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டவை என்பதை அது நன்கு அறியும்.


"தங்கத்தைப் பொறுத்தவரை, நாம் எடுக்கும் எந்த நடவடிக்கையும் போதுமானதாக இருப்பதில்லை," என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. "பாரம்பரியம், திருமணம் மற்றும் முதலீடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்கத்தை விரும்புகிறார்கள். பிரதமரைப்போல நாமும் நடத்தையில் மாற்றத்தை ஊக்குவிப்பதை மட்டுமே அளிக்க முடியும்."


2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளில் நிகர அடிப்படையில் மொத்தம் 9 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே இருந்த அந்நிய நேரடி முதலீட்டு (FDI) பரிமாற்றம் மற்றொரு சவாலான விஷயமாகும். ஏனெனில், 2010-ம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதமாகப் பார்க்கையில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது.


"ஒரேயொரு நடவடிக்கை அந்நிய நேரடி முதலீட்டுப் பிரச்சினையைத் தீர்க்குமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை," என்று மேற்கூறிய அரசாங்க வட்டாரம் கூறியது. "ஆம், நடவடிக்கைகள் தேவை. நாங்கள் அவற்றை நிதானமாக எடுப்போம்."


தற்போதைக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பத்திர முதலீடுகள் மீதான வரிகளை நீக்குவது முதல், வெளிநாடு வாழ் இந்தியர்களின் (வங்கி) அந்நியச் செலாவணி வைப்புத்தொகைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வெளிநாட்டுக் கடன்களுக்கான மாற்றுத் திட்டம் (swap scheme for Foreign Currency Non-Resident (Bank) deposits and PSUs’ foreign loans) வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், ரூபாயின் எதிர்காலக் கண்ணோட்டத்தை கணிசமாக மாற்றியுள்ளன. 2026-27-ல் செலுத்து இருப்பு ஏறக்குறைய நடுநிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிப்பதற்காக, முடிந்தவரை அதிக வெளிநாட்டு முதலீடுகளைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் வேளையில், ரூபாய் வலுவடைவதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 94-96 என்ற அளவில் நிலைத்திருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் பொதுவாகக் கருதுகின்றனர்.


"இருப்பினும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit) பெருமளவில் எண்ணெய் சார்ந்தே உள்ளது. மேலும், எண்ணெய் விலைகளும் உயர்ந்தே காணப்படுகின்றன. அமெரிக்க டாலர்-இந்திய ரூபாய் (பரிமாற்ற விகிதம்) சரிவை இறக்குமதியாளர்கள் பயன்படுத்தி, மலிவாக அதிக அமெரிக்க டாலரை வாங்கக்கூடும் என்று கருதப்படும். மேலும், இந்தியாவின் ஒப்பீட்டளவில் குறைந்த உண்மையான வருவாய் காரணமாக, தற்போதைய சூழலில் அதிக வருவாயை நாடும் முதலீட்டாளர்கள் வலுவாக ஈர்க்கப்பட வாய்ப்பில்லை," என்று பார்க்லேஸ் வங்கியின் அந்நியச் செலாவணி வியூக நிபுணர்களான மிதுல் கோடேச்சா மற்றும் ஆட்ரி ஓங் ஆகியோர் செவ்வாயன்று வெளியிட்ட குறிப்பில் தெரிவித்தனர்.


Original article : Record remittances cushioned India’s finances in FY26, but this is no long-term fix -Siddharth Upasani

Share:

உர மானியம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கருவுறுதல் விகிதம் - பிரியா குமாரி சுக்லா

 இந்தியாவில் உரப் பயன்பாடு குறித்து தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?


தற்போதைய நிகழ்வு என்ன? 


விநியோகப் பற்றாக்குறை மற்றும் உலகளவில் உரங்களின் விலை உயர்வு காரணமாக, உர மானியச் சுமை சுமார் ரூ. 3.4 லட்சம் கோடியாக உயரக்கூடும் என்று உயர்மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்ட ரூ. 1.7 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 100 சதவீத அதிகரிப்பாகும்.


முக்கிய அம்சங்கள் :


"கோவிட் காலத்திற்குப் பிறகு உரத்தின் விலை சுமார் ரூ.2,900-லிருந்து தற்போது ரூ.4,500-ஆக உயர்ந்திருந்தாலும், இன்னும் ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.300 என்ற மானிய விலையிலேயே உரத்தை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மானியச் செலவு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டைவிட 100% அதிகமாக இருக்கலாம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.


"மற்றொரு மூத்த அரசு அதிகாரி இச்சூழ்நிலையை மிகவும் சிக்கலானது என்று விவரித்தவுடன், மேலும் ஈரான் போர்ச்சூழல் காரணமாக சீனா உள்ளிட்ட உலகளாவிய விநியோகர்கள் தங்கள் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் (விற்பனையைத் தாமதப்படுத்துகின்றனர்). இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் உரங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய அரசு ஆராய்ந்து வருகிறது என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.



விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட உரங்கள் தொழில்முறைப் பயன்பாட்டாளர்களுக்குத் திருப்பி விடப்படுவது குறித்தும் அரசு கவலை கொண்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் வேளாண்மை, உரங்கள் மற்றும் நிதி ஆகிய தொடர்புடைய அமைச்சகங்களின் உயர்மட்ட அளவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரி கூறினார்.


மே 27 அன்று, அரசுக்குச் சொந்தமான 'நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்' ((National Fertilizers Ltd)) நிறுவனம் 17 லட்சம் மெட்ரிக் டன் (LMT) யூரியாவை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டரை வெளியிட்டது. அதற்கு முன்னதாக, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், 'இந்தியன் பொட்டாஷ் லிமிடெட்' (Indian Potash Ltd(IPL)) நிறுவனம் 25 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை இறக்குமதி செய்வதற்கான டெண்டரை வெளியிட்டிருந்தது.


வட்டாரங்களின் தகவலின்படி, உரங்களின் விலை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது.


2026-27-ஆம் ஆண்டில் உர மானியத்திற்காக ரூ. 1.71 லட்சம் கோடி செலவிட வேண்டியிருக்கும் என்று அரசு மதிப்பிட்டிருந்தது. 'தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர்' (Controller General of Account(CGA)) அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, யூரியா மற்றும் சத்து அடிப்படையிலான உரங்களுக்காக ஏப்ரல் மாதத்தில் மட்டும் மத்திய அரசு ரூ.22,033 கோடியை மானியமாகச் செலவிட்டுள்ளது. இந்தத் தொகை, முழு ஆண்டிற்கான மொத்த மானிய மதிப்பீட்டில் சுமார் 13% ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா? 


மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) எனும் முக்கிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதால், உரங்களின் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, இந்தியா சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து வாங்கிய யூரியாவின் விலை (சரக்குக் கட்டணம் உட்பட) ஒரு டன்னுக்கு 935 முதல் 959 டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு இருந்த 410 முதல் 420 டாலர் விலையைவிட இருமடங்கிற்கும் அதிகமாகும்.

எரிபொருள் மற்றும் தங்கம் வாங்குவதற்கான அந்நியச் செலாவணி மற்றும் உரம் ஆகிய மூன்றும் '3 Fs' (எரிபொருள், அந்நியச் செலாவணி, உரம்) என்று கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் குறிப்பிடப்பட்டன. இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்படுபவை என்பதால் ரூபாய்க்குப் பதிலாக அந்நியச் செலாவணியிலேயே பணம் செலுத்த வேண்டியிருந்தது. எனவே, தற்போது நிலவும் மோதலால் ரூபாய் மதிப்பின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இம்மூன்று விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருந்தது.


இந்தியா உலகின் மிகப்பெரிய உர இறக்குமதியாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதேவேளையில் சீனா, ரஷ்யா மற்றும் மொராக்கோ ஆகியவை மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக உள்ளன. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மார்ச் மாத மத்தியில் சீனா உர ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. மேற்கு ஆசியப் போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவின் யூரியா இறக்குமதியில் ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளின் பங்கு சுமார் 40 சதவீதமாக இருந்தது.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் தற்போதைய பிரதமர் - ஒப்பீடு மற்றும் வேறுபாடுகள்


தற்போதைய நிகழ்வு என்ன? 


பாஜக தலைமையிலான அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்ததையும், ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற தனிப்பட்ட மைல்கல்லை நரேந்திர மோடி எட்டியதையும் கொண்டாடும் வகையில், என்டிஏ (NDA) கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமையன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கூடவுள்ளனர்.


முக்கிய அம்சங்கள் :


புதன்கிழமையன்று, பிரதமர் மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் இருந்தவர் என்ற நிலையை எட்டுகிறார். இது, 1952 மே 13 அன்று பதவியேற்று 1964 மே 27 அன்று தனது மறைவு வரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றிய நேருவின் 4,398 நாட்கள் என்ற கால அளவைவிட ஒரு நாள் அதிகமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் பொதுத் தேர்தலான 1952-ல் நேரு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்குத் தெரியுமா?


ஜூன் 10 அன்று, இந்தியாவில் தொடர்ந்து நீண்டகாலம் பதவி வகித்த "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்" என்ற வரிசையில் மோடி நேருவை முந்துகிறார். மோடி பதவியில் 4,399 நாட்களை நிறைவு செய்தார். நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலம் 4,398 நாட்களாகக் கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீடு, நேரு முதல் பொதுத் தேர்தலில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1952-ம் ஆண்டிலிருந்து, அவர் பதவியில் இருந்தபோதே மறைந்த 1964 மே மாதம் வரையிலான காலத்தை அடிப்படையாகக் கொண்டது. பொதுத் தேர்தல் மூலம் அல்லாமல், இடைக்கால அரசியலமைப்பு ஏற்பாட்டின்கீழ் "நியமிக்கப்பட்ட" 1947 முதல் 1952 வரையிலான அவரது பதவிக்காலத்தை ஆளும் தரப்பு இதில் கணக்கில் கொள்வதில்லை.


இருவருமே நாட்டிற்கு தொலைநோக்கு பார்வையால் மாற்றங்களைக் கொண்டுவந்த மக்கள் தலைவர்களாக இருந்தபோதிலும், முற்றிலும் மாறுபட்ட சூழல்களில் செயல்பட்டவர்கள் என்பதால், இந்தியாவின் முதல் பிரதமரையும் 14-வது பிரதமரையும் ஒப்பிடுவது நியாயமானதாக இருக்காது.


வெவ்வேறு காலகட்டங்களில் நேரு மற்றும் மோடி ஆகிய இருவரையும் இந்தியா ஏற்றுக்கொண்டது, நாட்டின் பயணத்தையே பிரதிபலிக்கிறது. உயர்குடிப் பின்னணியைக் கொண்டவராகவும், ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவராகவும் இருந்த நேரு, தனது சலுகைகளைத் துறந்து சுதந்திரப் போராட்டக் களத்தில் இணைந்ததே அவரது ஈர்ப்புக்குக் காரணமாக அமைந்தது. மறுபுறம், மிகச் சாதாரண நிலையில் வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்ததே மோடியின் ஈர்ப்புக்குக் காரணமாக உள்ளது. 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும், மக்கள் தொகையில் பெரும்பகுதியினரின் நம்பிக்கையை அவர் தக்கவைத்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


இந்தியாவில் நவீன, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நிறுவனங்களுக்கான அடித்தளத்தை நேரு அமைத்தார். நாடு பிரிவினையாலும், 1.4 கோடி அகதிகளின் இடப்பெயர்வாலும் நிலைகுலைந்திருந்த சூழலில், சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதை உறுதிசெய்ய அவர் முயன்றார். அதேவேளையில், குடியரசுக்கு வழிகாட்டும் வகையிலான தாராளவாத அரசியலமைப்பை உருவாக்குவதிலும் அவர் உதவினார். இராமர் கோயில் கட்டுதல், 370-வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நோக்கிச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 'முத்தலாக்' முறைக்குத் தடை விதித்தல் போன்ற தனது கட்சியின் முக்கிய செயல்திட்டங்களை நிறைவேற்றிய மோடி, இப்போது தனது கட்சியும் அதன் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பும் உறுதியுடன் கொண்டுள்ள "1,000 ஆண்டுகால நாகரிகத் திட்டத்தை" (civilisational project) முன்னெடுப்பைச் செயல்படுத்த தயாராகி வருகிறார்.


140 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தை மோடி வழிநடத்துகிறார். இவர்களில் பெரும்பாலோர் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்த இளம் தலைமுறையினர் அரசியல்ரீதியாகத் தங்கள் கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர். உதாரணமாக, இதற்குத் தமிழ்நாட்டில் நடிகர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்வை குறிப்பிடலாம். இது 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (Cockroach Janta Party) போன்ற முன்னெப்போதும் இல்லாத ஒரு டிஜிட்டல் நிகழ்வுப் போக்குக்கு வழிவகுத்துள்ளது. இதன் நேரடி (ஆஃப்லைன்) தாக்கம் குறைவாக இருக்கலாம். ஆனால் 'இளம் இந்தியா' என்ன சொல்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.


மிகச் சிலரே வரலாற்றுச் சூழல்களால் அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டு, தங்கள் தேசத்தின் தலைவிதியை வடிவமைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அத்தகைய தலைவர்களில் மோடியும் ஒருவர். நேரு அத்தகைய மற்றொருவர். அவரைப் பாராட்டினாலும் சரி அல்லது விமர்சித்தாலும் சரி, நரேந்திர மோடியின் பயணம் இன்னும் முடியவில்லை. அவரால் இன்னும் பல ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும். அவரைப் பொறுத்தவரை, வரலாறு என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல்முறையாகவே உள்ளது.



மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) என்றால் என்ன?


தற்போதைய நிகழ்வு என்ன?


இந்தியா முதல் ஸ்வீடன் மற்றும் ஜப்பான் வரை, பல்வேறு பொருளாதார மற்றும் சமூகச் சூழல்கள் நிலவினாலும், மக்கள் குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கான காரணங்கள் சமூகப் பிளவு, மாறிவரும் வாழ்க்கை நெற்முறைகள், வருமானம் மற்றும் திறன்பேசிகளின் பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும்.


முக்கிய அம்சங்கள் :


சில அரசுகள், தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும்போது 30,000 ரூபாய் நிதியுதவி வழங்குகின்றன. முதல் முறையாகப் பெற்றோராகும் தம்பதியினருக்கு அரசு நிதியுதவியுடன் கூடிய கூடுதல் செயற்கை கருத்தரிப்பு (In Vitro Fertilization(IVF)) முயற்சிகளின் எண்ணிக்கையைச் சில நாடுகள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்களுக்காக சுமார் 3,00,000 பொது வீட்டுவசதி அலகுகளை (public housing units) ஒதுக்கும் திட்டங்களும் உள்ளன.


குழந்தைப் பேற்றை ஊக்குவிப்பதற்காகச் சமீப காலங்களில் உலகெங்கிலும் உள்ள அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பல கொள்கைகளில் இவை சில மட்டுமே. கடந்த மாதம், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வோருக்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்த முதல் இந்திய மாநிலங்களில் ஒன்றாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது. மக்கள்தொகை குறைவு என்ற பொதுவான கவலைக்குத் தீர்வு காண ஸ்வீடன் மற்றும் ஜப்பான் நாடுகளும் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்துள்ளன.


சில விதங்களில், இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரக் குறியீடுகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் காரணமாக, காலப்போக்கில் பல சமூகங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவதைக் காண முடிகிறது. ஆனால், இந்த மாற்றத்தின் வேகமும் பரவலும் எதிர்பாராதவையாக உள்ளன.


மக்கள்தொகை வளர்ச்சியில் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்று 'மொத்தக் கருவுறுதல் விகிதம்' (Total Fertility Rate(TFR)) ஆகும். ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு 2.1 என்ற மாற்று விகிதம் (replacement rate) சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, மக்கள்தொகையில் உள்ள தாய் மற்றும் தந்தைக்குப் பதிலாக, சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.


2023-ம் ஆண்டின் நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகளில், மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2.1-க்கும் குறைவாகவே இருந்தது.



1960-களின் தொடக்கத்தில் 5.3 ஆக இருந்த உலகளாவிய சராசரி மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR), 2024-ல் 2.2 ஆக உள்ளது. இது மக்கள்தொகை மாற்று விகிதத்தை (replacement rate) விடச் சற்று அதிகம். இதே காலகட்டத்தில், இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 5.9-லிருந்து 2-ஆகக் குறைந்துள்ளது, இது மாற்று விகிதத்தை (replacement rate) விடச் சற்று குறைவு. எனவே, ஆந்திரப் பிரதேசத்தில் விடுக்கப்பட்டதைப் போன்ற கருத்துகள், சில தலைமுறைகளுக்கு முந்தைய நிலையிலிருந்து ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன. அக்காலத்தில், விரைவான மக்கள்தொகை வளர்ச்சி நாட்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அதைச் சமாளிக்கக் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் (family planning policies) அறிமுகப்படுத்தப்பட்டன.


உங்களுக்குத் தெரியுமா?


ஜெர்மனியின் ரோஸ்டாக் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தின் (Max Planck Institute for Demographic Research (MPIDR)) விஞ்ஞானியும் மேரி கியூரி ஆராய்ச்சி ஆய்வாளருமான மொராத்வாஜ் தாக்கட், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் குறிப்பிட்டதாவது, "சுமார் ஒரு பத்தாண்டிற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கணிப்புகளைவிட இந்த வீழ்ச்சி மிக வேகமாக நிகழ்ந்துள்ளது. 2030 மற்றும் 2035-க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2.1-க்குக் கீழே குறையும் என்று அந்தக் கணிப்புகள் எதிர்பார்த்தன. ஆனால், இந்தியா 2020-லேயே இந்த நிலையை எட்டிவிட்டது," என்று தெரிவித்தார்.


மக்கள்தொகை மாற்றக் கோட்பாட்டின்படி (demographic transition theory), சமூகங்கள் காலப்போக்கில் குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி நிலையிலிருந்து அதிக செழிப்பு நிலையை நோக்கி நகரும்போது, ​​பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் குறைகின்றன. இதன் விளைவாக மக்கள்தொகையில் ஒட்டுமொத்த மாற்றம் குறைவாகவே உள்ளது. இருப்பினும், சில பத்தாண்டுகளிலேயே கருவுறுதல் விகிதங்களில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றம், இந்தப்போக்கைத் தீர்மானிக்கக்கூடிய கூடுதல் காரணிகளை ஆராய ஆராய்ச்சியாளர்களைத் தூண்டியுள்ளது.


வருமானம் என்பது பெரும்பாலும் முதலில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளில் ஒன்றாகும். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகையியல் பிரிவு (Stockholm University Demography Unit) மற்றும் சமூகவியல் துறையின் (Department of Sociology) இணைப் பேராசிரியரான மார்ட்டின் கோல்க், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், கடந்தகாலத்தில் பல நாடுகளில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறினார்.


பெண்களின் கல்வித் தகுதி அதிகரிப்பு, பணியிடங்களில் அவர்களின் பங்கேற்பு மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சஹாரா-கீழ் ஆப்பிரிக்கப் பகுதிகளில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) இன்னும் 4 முதல் 5 வரை அதிகமாக உள்ள நிலையில், அங்கு பதின்ம வயதினரிடையே காணப்படும் அதிக அளவிலான கர்ப்பங்களுக்குக் கருத்தடை முறைகளை குறைவாகப் பயன்படுத்துதல், குறைந்த கல்வி நிலை மற்றும் இளம் வயதுத் திருமணங்கள் ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன.


Original article : Fertiliser Subsidy, Prime Minister Narendra Modi and Fertility Rate -Priya Kumari Shukla

Share:

குர்ரம் பர்வேஸுக்கு பிணை : சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) கடுமையான நிபந்தனைகள் இருந்தபோதிலும் டெல்லி உயர்நீதிமன்றம் ஏன் சலுகை வழங்கியது? -அமால் ஷேக்

 விசாரணையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லாமல், நீண்டகாலம் சிறையில் இருந்த கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


தேசிய புலனாய்வு முகமையால் (National Investigation Agency (NIA)) விசாரிக்கப்பட்ட பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸுக்கு ஜூன் 10 புதன்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவிந்தர் துதேஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) கீழ் ஜாமீன் பெறுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பர்வேஸ் நீண்டகாலம் காவலில் இருந்த காரணத்தால், விசாரணையின் மந்தமான போக்கும் மற்றும் அவரது உடல் குறைபாடு ஆகியவை அவரை விடுவிப்பதை நியாயப்படுத்துவதாக நீதிமன்றம் கூறியது.


"இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் மேல்முறையீட்டாளரின் (மனுதாரரின்) உரிமை சமநிலைப்படுத்தப்பட வேண்டும். மேலும் அது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) பிரிவு 43D(5)-ன்கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறக்கூடும்," என்று நீதிமன்றம் கூறியது. இந்த ஜாமீன் உத்தரவு, 2021 நவம்பரில் பர்வேஸ் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது.


இருப்பினும், 2020-ம் ஆண்டின் மற்றொரு தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கு காரணமாக பர்வேஸ் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார். அந்த வழக்கில், அவர் ஏற்கனவே காவலில் இருந்தபோதே 2023-ல் முறையாகக் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிற்கான அவரது ஜாமீன் மனு இன்னும் விசாரணை நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.


குர்ரம் பர்வேஸ் மீதான வழக்கு


தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தய்பா (Lashkar-e-Taiba (LeT)), ஒரு ஒருங்கிணைப்பாளர் (handler) மூலம் இந்தியா முழுவதும் செயல்பாட்டாளர்கள் மற்றும் வெளிப்படையாகச் செயல்படும் உதவியாளர்களின் (over-ground workers) ஒரு வலையமைப்பை நிறுவியதாகக் குற்றம் சாட்டி, நவம்பர் 2021-ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலிருந்து (FIR) இந்த தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கு உருவானது. அந்த முதல் தகவல் அறிக்கையில் பர்வேஸின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், விசாரணையின்போது அவர் கைது செய்யப்பட்டார்.


பர்வேஸ், ஜம்மு & காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை (human rights violation) விசாரிப்பதிலும், கட்டாயக் கடத்தல்கள் (enforced disappearances), சட்டவிரோத தடுப்புக்காவல் (illegal detentions), சித்திரவதை (torture) மற்றும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் (extrajudicial executions) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதிலும், இதில் ஈடுபட்டுள்ள குடிமைச் சமூக அமைப்புகளின் ஒன்றியமான ஜம்மு & காஷ்மீர் குடிமைச் சமூகக் கூட்டமைப்பின் (Jammu Kashmir Coalition of Civil Society (JKCCS)) திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.


தேசிய புலனாய்வு முகமையின் (NIA) கூற்றுப்படி, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய சதித்திட்டத்தில் பர்வேஸ் ஒரு அங்கமாக இருந்தார். கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (Line of Control(LoC)) அருகிலுள்ள இராணுவ நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவர் சேகரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பர்வேஸ் இதை மறுத்து, அந்தத் தகவல்கள் "முதன்மையாக, அரசின் வரம்புமீறல் மற்றும்/அல்லது தீவிரவாதம் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்கள் குறித்த உண்மை கண்டறிதல், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தலைச் சுற்றியே உள்ளன" என்று கூறினார்.


2007 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையத் சலாஹுதீனை அவர் சந்தித்தது குறித்துக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அந்தச் சந்திப்புகள் அந்த அமைப்போடு அவருக்கு இருந்த தொடர்பை வெளிப்படுத்துவதாக வாதிடப்பட்டது. இந்தச் சந்திப்புகள், நீண்ட காலமாக "பொதுப் பதிவில் உள்ள ஒரு விஷயமாக" இருந்துவரும் ஜெனீவா உடன்படிக்கையை (Geneva Convention) கடைப்பிடிக்குமாறு அமைப்புகளை வலியுறுத்துவதற்காகவும், மனிதாபிமான மற்றும் உரிமை சார்ந்த பணிகளுக்காகவும், செல்லுபடியாகும் விசாக்களுடன் மேற்கொள்ளப்பட்டன என்று பர்வேஸ் வாதிட்டார்.


உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?


விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் சிறைவாசம் அனுபவித்த காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கருதியது. பர்வேஸ் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் காவலில் இருந்த நிலையில், வழக்கு நடவடிக்கைகள் இன்னும் வாதங்கள் நடைபெறும் நிலையிலேயே உள்ளன.


பர்வேஸ் நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இருப்பினும், இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவடைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதில், ஜாமீன் வழங்குவதே பொதுவான விதி என்றும், ஜாமீன் மறுப்பது ஒரு விதிவிலக்கு என்றும் நீதிமன்றம் கூறியது. இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் மேல்முறையீட்டாளரின் உரிமைகள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43D(5)-இன் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டையும் மீறக்கூடும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


வழக்கின் ஆதாரங்களைப் பொறுத்தவரை, பர்வேஸுக்கு எதிரான கட்டாரியா, 2019-ல் அரசுத் தரப்பு சாட்சியாக (approver) மாறினார். இருப்பினும், வழக்கு விசாரணையின்போது அவரது வாக்குமூலம் இன்னும் முழுமையாகச் சோதிக்கப்பட வேண்டியவருமான, அவருடன் குற்றம் சாட்டப்பட்ட முனீர் அகமது கட்டாரியாவின் வாக்குமூலத்தை பெருமளவில் சார்ந்திருந்தது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


சிறையில் உள்ள வசதிகள் “போதுமானதாக இல்லை” அல்லது “உதவிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இல்லை” என்று வாதிட்ட நீதிமன்றம், கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு காலை இழந்திருந்த பர்வேஸின் மாற்றுத்திறனுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் அடிப்படையில் அவருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று கருதியது.


சட்டக் கட்டமைப்பு


இந்த வழக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43D(5)-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது வழக்குக் குறிப்பேடு அல்லது குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த பிறகு, "அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேலோட்டமாக உண்மை" (prima facie - அதாவது முதல் பார்வையில்) என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கண்டறிந்தால், நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறுகிறது.


நடைமுறையில், இது சாதாரண குற்றவியல் வழக்குகளை விட ஜாமீன் வழங்குவதற்கான தகுதியை மிகவும் கடுமையானதாக்குகிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, விசாரணைக்காகக் காத்திருக்கும்போது ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை காலவரையின்றி சிறையில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை நீதிமன்றங்கள் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன.



இந்திய ஒன்றியம் vs கே.ஏ. நஜீப் (Union of India vs K.A. Najeeb) வழக்கில், நீண்டகால சிறைவாசம் மற்றும் விசாரணையில் ஏற்படும் தாமதம் ஆகியவை சட்டப்பிரிவின் 21-வது பிரிவின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் பட்சத்தில், ஜாமீன் வழங்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் தக்கவைத்துக் கொள்கின்றன என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அது, “வழக்கு நடவடிக்கைகள் தொடங்கும் போது, ​​ஜாமீன் வழங்குவதற்கு எதிரான சட்டமன்றக் கொள்கையை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நியாயமான காலத்திற்குள் விசாரணை முடிவடைவதற்கான வாய்ப்பு இல்லாதபோதும், ஏற்கனவே அனுபவித்த சிறைவாசக் காலம் நிர்ணயிக்கப்பட்ட தண்டனையின் கணிசமான பகுதியைத் தாண்டியிருக்கும்போதும் இந்தக் கட்டுப்பாடுகள் நீங்கிவிடும்” என்று குறிப்பிட்டது.


அதே வேளையில், குல்ஃபிஷா ஃபாத்திமா மற்றும் சையத் இஃப்திகார் அண்ட்ராபி ஆகியோரின் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்புகள் மற்றும் இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வுக்கு (larger bench) பரிந்துரைக்கும் முடிவு ஆகியவை, இத்துறையில் சட்டம் இன்னும் பரிணாம வளர்ச்சியடைந்து வருவதையும், அது இன்னும் முழுமையாகத் தீர்மானிக்கப்படாத நிலையில் இருப்பதையும் உணர்த்துகின்றன.


Original article : Khurram Parvez gets bail: Why Delhi HC granted relief despite stringent UAPA conditions. -Amaal Sheikh

Share:

இந்தியாவின் புதிய ‘நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பு’ ஏன் முக்கியமானது? - குஷ்பூ குமாரி

 நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பை (Land Port Management System (LPMS)) அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என்ன, அது திறன்மிகு எல்லை மேலாண்மை அமைப்புக்கு எவ்வாறு உதவியாக அமையும்? எல்லைப் பகுதிகளின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட முக்கியத் திட்டங்கள் யாவை?


தற்போதைய செய்தி 


இந்தியாவின் தரை எல்லைகள் முழுவதும் சரக்குக் கையாளுதலையும் பயணிகள் போக்குவரத்தையும் டிஜிட்டல் மயமாக்கி நெறிப்படுத்தும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 ஜூன் 9 அன்று புது டெல்லியில் 'வினிமே' (VINIMAY) எனும் நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பைத் தொடங்கி வைத்தார். நிலத்துறைமுக ஆணையத்தின் இந்த முயற்சி, ‘அறிவார்ந்த எல்லைத் திட்டம்’ (Smart Borders) என்ற தொலைநோக்குப் பார்வையை முழுமையாக நனவாக்க உதவும் என்று அவர் கூறினார்.


நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பின் தொடக்கமானது, 2047-ஆம் ஆண்டிற்குள் வர்த்தக வசதி, இணைப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்த இந்தியா ஆகியவற்றை வலுப்படுத்துவதில் நாட்டின் ராஜதந்திரக் கவனத்தை வெளிக்காட்டும் வகையில், ஒரு நவீன, தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட திறன்மிகு எல்லை மேலாண்மை அமைப்பை நோக்கிய ஒரு படியாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. வினிமய் எனப்படும் நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பு, ஒரு அதிநவீன டிஜிட்டல் தளமாகும். இது தரைவழித் துறைமுகங்களின் செயல்பாடுகளை ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாக ஒன்றிணைக்கிறது. இந்த அமைப்பு, தளவாடங்கள் மற்றும் ஒழுங்குமுறைத் தகவல்களைப் பாதுகாப்பாகவும் நிகழ்நேரத்திலும் பரிமாறிக்கொள்ள வழிவகுத்து, விமான நிலையங்கள் மற்றும் கடல் துறைமுகங்களில் செயல்படும் டிஜிட்டல் அமைப்புகளுக்கு இணையாக தரைவழித் துறைமுகங்களைக் கொண்டுவருகிறது.


2. நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்புபு, தேசிய அளவிலான இணைய தளங்களுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, சரக்கு மற்றும் பயணிகள்  செயலாக்கத்திற்கான முழுமையான டிஜிட்டல் பணிப்பாய்வுகளை (Digital Workflows) வழங்குகிறது. இது அரசு அமைப்புகள் முதல் தனியார் இயக்குநர்கள் வரை பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எளிதாக்குவதன் மூலம், தாமதங்களைக் குறைத்து செயல்பாட்டு திறனை (Operational Efficiency) மேம்படுத்துகிறது.


3. இந்த அமைப்பு, ஆவணப் பணிகளைக் கணிசமாகக் குறைத்து, வணிகம் செய்வதை எளிதாக்கி, இந்தியாவின் சர்வதேச தரை வழி எல்லைகள் முழுவதும் சரக்குகள் மற்றும் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஒற்றை மின்னணுச் சாளரம் மற்றும் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார அடிப்படையிலான செயல்பாடுகள்,  நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும்.



4. நில எல்லைத் துறைமுகங்களின் நிர்வாகம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எல்லை மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான 'இந்திய நில எல்லைத் துறைமுக ஆணையத்தின்' (Land Ports Authority of India (LPAI)) கட்டுப்பாட்டில் இருக்கும். நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்புபு,  2012-ஆம் ஆண்டில் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.


5. நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளபடி, சரக்குகள் மற்றும் பயணிகளின் தடையற்ற மற்றும் திறமையான போக்குவரத்தை எளிதாக்குவதற்காக, இந்தியாவின் எல்லைகளில் தரைவழித் துறைமுகங்களைக் கட்டுவதும், அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும், காத்திருப்பு நேரத்தையும் வர்த்தகப் பரிவர்த்தனைச் செலவுகளையும் குறைப்பதும், பிராந்திய வர்த்தகத்தையும் மக்களுக்கிடையேயான தொடர்பையும் ஊக்குவிப்பதும், சிறந்த சர்வதேச நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதே இதன் முக்கிய நோக்கங்களாகும்.


6. தற்போது, ​​நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பு (Land Port Management System (LPMS)) இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் 15 தரை ​​நிலவழித்துறைமுகங்களை இயக்குகிறது. இவை: அட்டாரி (பஞ்சாப்) மற்றும் டேரா பாபா நானக் (பஞ்சாப்) இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும்; ரூபைடியா (உத்தரப் பிரதேசம்), ரக்ஸௌல் (பீகார்) மற்றும் ஜோக்பானி (பீகார்) இந்திய-நேபாள எல்லையிலும்; டாரங்கா (அசாம்) இந்திய-பூட்டான் எல்லையிலும்; பெட்ராபோல் (மேற்கு வங்காளம்), டாகி (மேகாலயா), சுதார்கந்தி, கோலக்கஞ்ச் மற்றும் மன்கச்சார் (அசாம்), அகர்தலா, ஸ்ரீமந்தபூர் மற்றும் சப்ரூம் (திரிபுரா) இந்திய-வங்கதேச எல்லையிலும் மற்றும் மோரே (மணிப்பூர்) இந்திய-மியான்மர் எல்லையிலும் அமைந்துள்ளன.


திறன்மிகு எல்லை மேலாண்மை (Smart Border Management Initiative) முயற்சி


1. அரசு விரைவில் திறன்மிகு எல்லை மேலாண்மை முயற்சியைத் தொடங்கவுள்ளதாகவும், இது ​​நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்புடன் இணைந்து, மேலும் பாதுகாப்பான மற்றும் நவீன எல்லை மேலாண்மை அமைப்பை உருவாக்கும் என்றும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், வலுவான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை நிறுவுவதை உறுதி செய்யவும் உதவும்.


2. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்படி, இந்தியா 15,106.7 கி.மீ நீளமான   எல்லையைக் கொண்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதியை வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனும், ஆப்கானிஸ்தானுடனான ஒரு சிறிய பகுதியுடனும் பகிர்ந்து கொள்கிறது. இது எல்லை நிர்வாகத்தை அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான பணியாக ஆக்குகிறது.




வரிசை எண்.


நாடு

நீளம் (கிமீ)

எல்லைப் பகுதி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்

(i)

வங்கதேசம்

4096.70

மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகும்.

(ii)

பாகிஸ்தான்

3323

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகும்.

(iii)

சீனா

3488

அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கின் யூனியன் பிரதேசம் ஆகும்.

(iv)

நேபாளம்

1751

உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகும்.

(v) 

பூட்டான்

699

சிக்கிம், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகும்.

(vi

மியான்மர்

1643

அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகும்.

(vii)

ஆப்கானிஸ்தான்

106

லடாக் யூனியன் பிரதேசம் ஆகும்.



3. எல்லை மேலாண்மைத் துறை (Department of Border Management (DoBM)): 2004-ஆம் ஆண்டில், சர்வதேச தரை மற்றும் கடலோர எல்லைகளின் மேலாண்மை, எல்லைக் காவல் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், எல்லைகளில் சாலைகள், வேலிகள் மற்றும் மின்விளக்குகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் பிரத்தியேகமாகக் கவனம் செலுத்துவதற்காக, உள்துறை அமைச்சகத்தின் கீழ் எல்லை மேலாண்மைத் துறை (DoBM) உருவாக்கப்பட்டது.


4. எல்லைப் பாதுகாப்புத் துறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை, எல்லைப் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துதல் மற்றும் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றன. எல்லை மேலாண்மை பிரிவு-I-னது, சர்வதேச தரை எல்லைகளை வலுப்படுத்துதல், அவற்றின் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களைக் கையாள்கிறது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவின் சர்வதேச எல்லைகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒரு ஒன்றிய திட்டமான, எல்லை மேலாண்மை பிரிவு-I-னது எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை (Border Infrastructure and Management (BIM)) திட்டத்தை எல்லைப் பாதுகாப்புத் துறை செயல்படுத்துகிறது.


5. எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Border Area Development Programme (BADP)), கடலோரப் பாதுகாப்புத் திட்டம் (Coastal Security Scheme (CSS)), துடிப்பான கிராமத் திட்டம் (Vibrant Village Programme-I and VVP-II) மற்றும் நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பு (Land Port Management System (LPMS)) ஆகியவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு எல்லை மேலாண்மை பிரிவு-II இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



6. எல்லை மேலாண்மைக்கான ஒரு விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய ஒன்றிய நிதியுதவித் திட்டமே எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கம், இதன் வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் சிறப்பு மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் நலனைப் பூர்த்தி செய்வதும், சுகாதாரம், கல்வி, சாலை, குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பான அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை வழங்குவதும் ஆகும்.


7. கடலோர மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு நிதியுதவி வழங்கும் வகையில், கடலோரப் பாதுகாப்புத் திட்டகளாகச் (CSS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.


8. துடிப்பான கிராமங்கள் முன்முயற்சி: துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் முதல் கட்டம் 2023-ஆம் ஆண்டிலும், இரண்டாம் கட்டம் இந்த ஆண்டிலும் தொடங்கப்பட்டது. இது ஒரு ஒன்றிய அரசுத் திட்டமாகும். செழிப்பான மற்றும் பாதுகாப்பான எல்லைகளை உறுதி செய்வதற்கும், எல்லை தாண்டிய குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், எல்லைப் பகுதி மக்களை தேசத்துடன் ஒன்றிணைப்பதற்கும், மேலும் அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படைகளின் முக்கியப் பகுதிகளாக உருவாக்குவதற்கும், சிறந்த வாழ்க்கை நிலைமைகளையும், போதுமான வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குவதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.

எல்லை மேலாண்மைக்குப் பொறுப்பான படையில் செய்யப்பட்ட முக்கிய மாற்றத்தைப் பார்ப்போம்.


2026-ஆம் ஆண்டு மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) சட்டம், 


1. இராணுவத்துடன் சேர்ந்து, சர்வதேச எல்லையின் பாதுகாப்பானது மத்திய ஆயுதக் காவல் படை (Central Armed Police Force (CAPF)) மற்றும் துணை இராணுவப் படைகள் (Paramilitary Forces (PMF)) போன்ற பல பாதுகாப்பு முகமைகளால் கையாளப்படுகிறது. இந்த ஆண்டு, அரசாங்கம் மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) சட்டம், 2026-ஐ இயற்றியுள்ளது.


2. இந்தச் சட்டம் (Act), முன்பு தனித்தனியாக இருந்த விதிமுறைகளை நீக்கி, ஒரே மாதிரியான ஒருங்கிணைந்த கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது.  இதன்மூலம், எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)), மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force (CRPF)), மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force (CISF)), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (Indo-Tibetan Border Police (ITBP)) மற்றும் சஷஸ்திர சீமா பல் (Sashastra Seema Bal (SSB)) ஆகிய ஐந்தும் ஒன்றிய அரசின் மேற்பார்வை மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.


3. சட்டத்தின்படி, காவல்துறைத் தலைவர் (Inspector General (IG)) நிலையில் உள்ள பதவிகளில் 50% அயற்பணி மூலமாகவும், கூடுதல் காவல்துறைத் தலைவர் நிலையில் உள்ள பதவிகளில் குறைந்தபட்சம் 67% அயற்பணி மூலமாகவும் நிரப்பப்பட வேண்டும். சிறப்பு காவல்துறைத் தலைவர் மற்றும் காவல்துறைத் தலைவர் பதவிகள் முழுமையாக அயற்பணி மூலமாகவே நிரப்பப்படும்.


4. ஒன்றிய ஆயுதக் காவல் படைகளில் (Central Armed Police Forces (CAPFs)) இந்தியா ஆட்சிப் பணி  அதிகாரிகளின் அயற்பணியை படிப்படியாகக் குறைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு ரத்து செய்கிறது. மே 23, 2025 அன்று, உச்ச நீதிமன்றம், ஒன்றிய ஆயுதக் காவல் படைகளில் துணை காவல்துறைத் தலைவர் மற்றும் காவல்துறைத் தலைவர் பதவிகளுக்கு இந்தியா ஆட்சிப் பணி  அதிகாரிகளின் அயற்பணியை இரண்டு வருட காலத்திற்குள் படிப்படியாகக் குறைக்குமாறு உத்தரவிட்டது.


Original article : Why India’s new Land Port Management System matters. -Khushboo Kumari

Share: