PM-KUSUM 2.0, மாநிலக் கொள்முதல் மீதான அதிக அளவிலான சார்புநிலையைக் குறைக்க வேண்டும். -விவேக் குப்தா

தேவையை அடிப்படையாகக் கொண்ட பயன்பாட்டை நோக்கிய நகர்வு, பிஎம்-குசும் திட்டம் (PM-KUSUM Scheme) தொடர்ந்து வெற்றிகரமாக இருக்குமா அல்லது இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தில் ஒரு வரையறுக்கும் அமைப்பாக மாறுமா என்பதை இறுதியில் தீர்மானிக்கும்.


வேளாண்மையை சூரிய ஆற்றலாக மாற்றும் இந்தியாவின் முயற்சி, நாட்டின் மிகவும் லட்சியமிக்க எரிசக்தி மாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியாவின் பரந்த எரிசக்தி அமைப்புக்குள் நிகழ்ந்து வருகிறது. இந்த முயற்சியின் மையத்தில் பிஎம்-குசும் திட்டம் (PM-KUSUM Scheme) உள்ளது. இது, கடந்த சில ஆண்டுகளாக, பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விவசாயத் துறையில் பெரிய அளவில் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இந்த முன்னேற்றத்தை தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.


இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சூரிய ஆற்றல் பம்புகள் (solar pumps) நிறுவப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் இது நிறுவுவது  கடுமையாக அதிகரித்துள்ளது. உதாரணமாக, தெளிவான கொள்கை இலக்குகள் வலுவான செயலாக்கத்தால் ஆதரிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதை மகாராஷ்டிரா நிரூபித்துள்ளது. ஒரு கட்டத்தில், அந்த மாநிலம் குறுகிய காலத்திற்குள் பல்லாயிரக்கணக்கான நிறுவுவது தொடர்பான நடவடிக்கைகளைச் சேர்த்தது. இருப்பினும், இத்துறை தொடர்ந்து வளர்ந்து மேம்படுவதால், புதிய சவால்கள் புலப்படுகின்றன. தற்போதைய மாதிரி, மாநில அரசுகளால் வழிநடத்தப்படும் கொள்முதலைப் பெரிதும் சார்ந்துள்ளது. இந்த அணுகுமுறை அடுத்தகட்ட விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கப் போதுமானதாக இருக்காது.


ஒப்பந்த நிலைகளால் உற்பத்தி அளவு நிர்ணயிக்கப்படும்போது


PM-KUSUM திட்டத்தின் ஒப்பந்தநிலை சார்ந்த கட்டமைப்பு, சந்தையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இது தேவையின் ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கியுள்ளது. மேலும், மானியங்கள் மூலம் வாங்கும் திறனை மேம்படுத்தியுள்ளது. கூடுதலாக, உற்பத்தியாளர்களுக்குத் திறனில் முதலீடு செய்வதற்கான தெளிவான பார்வையை வழங்கியுள்ளது. இருப்பினும், இது சந்தையை எதிர்பாராத வழிகளிலும் வடிவமைத்துள்ளது.


இன்றைய தேவை நிலையானதாக இல்லை. அது சீராகவும் தொடர்ச்சியாகவும் வளர்வதில்லை. மாறாக, அது பல கட்டங்களாக வருகிறது. ஒப்பந்த நிலைகள் அறிவிக்கப்படும்போது அவர்கள் உற்பத்தியை விரைவாக அதிகரிக்க வேண்டும். ஒதுக்கீடுகள் தீர்ந்தவுடன் அதே வேகத்தில் குறைகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு, இது உற்பத்தித் திட்டமிடல் முதல் பணியாளர் நிலைத்தன்மை வரை அனைத்தையும் பாதிக்கும் ஒரு ஏற்ற இறக்கச் சுழற்சியை உருவாக்குகிறது. மிக முக்கியமாக, இது சந்தையை விவசாயிகளின் நோக்கத்தைவிட நிர்வாக காலக்கெடுவைச் சார்ந்திருக்க வைக்கிறது.



களத்தில் தெரியும் ஒரு மாற்றம்


இருப்பினும், இறுதிப் பயனர்கள் மத்தியில் அதன் நடத்தைதான் மாறிக்கொண்டிருக்கிறது. சூரிய ஆற்றல் பம்புகள் குறிப்பிடத்தக்க அளவில் பரவியுள்ள பகுதிகளில், அவற்றின் பயன்பாடு இனி மானியம் கிடைக்கக் கூடிய தன்மை மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. விவசாயிகள் தங்களின் சொந்த மற்றும் சக விவசாயிகளின் அனுபவத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள். டீசலில் இருந்து சூரிய ஆற்றலுக்கு மாறுவது என்பது வெறும் பணத்தைச் சேமிப்பது பற்றியது மட்டுமல்ல அது நம்பகத்தன்மை பற்றியதுமாகும். சூரிய சக்தி அமைப்புகள், மிகவும் கணிக்கக்கூடிய செயல்திறன் மற்றும் விவசாயிகளுக்குப் பாசனத்தின்மீது சிறந்த கட்டுப்பாட்டை அளிக்கின்றன.


இங்குதான் தற்போதைய மாதிரி அதன் வரம்புகளை வெளிப்படுத்தத் தொடங்குகிறது. சூரிய ஆற்றல் பம்புகளுக்கான அணுகல் முதன்மையாக ஒப்பந்தநிலை சுழற்சிகளுடன் பிணைக்கப்படும்போதும், தேவை எழும்போதும் அதை ஏற்றுக்கொள்ள விரும்பும் பயனர்களின் செயல்படும் திறனை அது கட்டுப்படுத்துகிறது. தேவை இருக்கிறது, ஆனால் அது எப்போதும் நிறுவல்களாக (installations) மாறுவதில்லை.


ஆர்வத்திற்கும் பயன்பாட்டிற்கும் இடையிலான விடுபட்ட இணைப்பு


பல சமயங்களில், இந்த இடைவெளி நோக்கத்தினால் ஏற்படுவதில்லை. உண்மையான சிக்கல் அணுகலில்தான் உள்ளது. மானியங்கள் இருந்தபோதிலும், விவசாயிகளிடமிருந்து தேவைப்படும் முன்பணப் பங்கைச் செலுத்த வேண்டும். குறிப்பாக, சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களுக்கு ஒரு தடையாக இருக்கலாம். அதேநேரத்தில், கட்டமைக்கப்பட்ட நிதி விருப்பங்கள் எல்லா மாநிலங்களிலும் சமமாகக் கிடைப்பதில்லை. அவற்றின் கிடைக்கும் தன்மை சீரற்றதாகவே உள்ளது.


இந்த நிலைமைதான் இத்துறையின் அடுத்த கட்டத்தை வடிவமைக்கும். சூரிய ஆற்றல் பாசனம் என்பது வெறும் அரசாங்கத் திட்டமாக இருப்பதையும் தாண்டிச் செல்ல வேண்டும். அது ஒரு வழக்கமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் விவசாயத் தீர்வாக மாற வேண்டும். இது நடப்பதற்கு, நிதியளிப்பு இந்த அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக மாற வேண்டும். அது கொள்கை ஆதரவைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். முறையான நிதியளிப்பு இல்லாமல், தேவை குறைவாகவே இருக்கும். இது சந்தை சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப வளர்வதற்குப் பதிலாக, கொள்முதல் சுழற்சிகளால் கட்டுப்படுத்தப்படும்.


செயல்படுத்துதலே இன்னும் விளைவுகளை வரையறுக்கிறது


மாநிலங்கள் முழுவதும் செயல்படுத்துதலில் உள்ள சீரற்றத் தன்மை, காலப்போக்கில் மற்றொரு உண்மையும் தெளிவாகியுள்ளது. சில மாநிலங்கள் வலுவான திட்ட வழித்தடங்களையும் விநியோக வழிமுறைகளையும் உருவாக்கியுள்ள நிலையில், மற்றவை ஒப்புதல்களில் ஏற்படும் தாமதங்கள் முதல் இறுதிக்கட்டச் செயலாக்கத்தில் உள்ள சவால்கள்வரை பல தடைகளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றன.


இந்த வேறுபாடுகள் ஒரு முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. கொள்கை வடிவமைப்பு தேசிய அளவில் வடிவமைக்கப்படலாம். இருப்பினும், அவற்றின் முடிவுகள் உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்தே அமைகின்றன. பிஎம்-குசும் (PM-KUSUM) திட்டத்தின் செயல்திறன், இறுதியில் நிதி ஒதுக்கீட்டு இலக்குகளை மட்டும் சார்ந்திருப்பதில்லை, மாறாக இத்திட்டம் கள அளவில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது என்பதையே அது முக்கியமாகச் சார்ந்திருக்கிறது.


பிஎம்-குசும் 2.0 திட்டத்தின் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்தல்


இத்திட்டம் அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்போது, கவனம் விரிவாக்கத்தில் மட்டும் இருக்கக்கூடாது. அந்த விரிவாக்கத்தை நீடித்ததாக மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு, அரசு தலைமையிலான கொள்முதலின் பலங்களைத் தக்கவைத்துக்கொண்டு, அதன் மீதான அதீத சார்பைக் குறைக்கும் ஒரு சமச்சீரான கட்டமைப்பு தேவைப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட ஒப்பந்தநிலைகள், நெகிழ்வான, விவசாயிகள் தலைமையிலான இணைத்துகொள்ளும் வழிகளுடன் இணைந்து செயல்படும் ஒரு கலப்பின மாதிரி உதவக்கூடும். இத்தகைய மாதிரி சந்தையை வலுவானதாகவும் நிலையானதாகவும் மாற்றும். இத்தகைய அணுகுமுறை, இயற்கையாக வளர அனுமதிக்கும். இது சூழல் அமைப்பில் உள்ள நிலையற்ற தன்மையைக் குறைக்கும் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு விரைவாகப் பதிலளிக்க உதவும்.

ஒரு திட்டத்திலிருந்து ஓர் அமைப்புக்கு


பிரதம மந்திரி-குசும் (PM-KUSUM) திட்டத்தின் முதல் கட்டம், சூரிய ஆற்றல் பாசனம் செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது. அடுத்த கட்டம், இது அரசின் தலையீட்டை முழுமையாகச் சார்ந்திருக்காமல் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவின் வேளாண்மை மற்றும் எரிசக்தி மாற்றங்கள், வேளாண் நிலையில் பெருகிய முறையில் ஒன்றோடொன்று இணைகின்றன. சூரிய ஆற்றல் பம்புகள் அந்த இணைப்பின் மையத்தில் அமைந்து, ஆற்றல் தற்சார்பு மற்றும் திறமையான நீர் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் ஒரு பாதையை வழங்குகின்றன.


ஆனால், இந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற வேண்டுமானால், சந்தையானது கொள்முதல் சுழற்சிகளுக்கு அப்பாற்பட்டு பரிணமிக்க வேண்டும். அது வெறும் கோப்புகளுக்கு மட்டும் பதிலளிக்காமல், விவசாயிக்கும் பதிலளிக்கக்கூடியதாக மாற வேண்டும். அரசு தலைமையிலான செயலாக்கத்திலிருந்து தேவை தலைமையிலான தத்தெடுப்பிற்கு மாறும் அந்த மாற்றம், பிரதம மந்திரி குசும் (PM-KUSUM) திட்டம் ஒரு வெற்றிகரமான திட்டமாகத் தொடருமா அல்லது இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தில் ஒரு வரையறுக்கும் அமைப்பாக மாறுமா என்பதை இறுதியில் தீர்மானிக்கும்.


கட்டுரையாளர், ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவர்.


Original Link: PM-KUSUM 2.0 must address the overdependence on State procurement 


Share:

தங்கத்தின் மீது கவனம் : விலைப்போக்குகள், பயன்பாடுகள் மற்றும் விநியோகம் - ரோஷ்னி யாதவ்

உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்தபோதிலும் தங்கத்தின் விலைகள் சரிந்துகொண்டிருக்கின்றன. ஏனெனில், நெருக்கடியான காலங்களில் தங்கம் பொதுவாக ஒரு 'பாதுகாப்பான புகலிடச் சொத்தாகவே' பார்க்கப்படுகிறது. தற்போது தங்கம் ஏன் தனது பொலிவை இழந்து வருகிறது? கச்சா எண்ணெய், அமெரிக்க டாலர் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றின் பங்குடன் சேர்த்து, தங்கத்தின் பண்புகள், பயன்பாடுகள் மற்றும் விநியோகம் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். கூடுதலாக, நாம் "தங்கக் கட்டிகளுக்கு அப்பால்" சென்று, மற்றொரு விலைமதிப்பற்ற தொழில்துறை உலோகம் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.


தற்போதைய நிகழ்வு 


மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் தங்கத்தின் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன. முன்னதாக, 2025 மற்றும் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் வர்த்தக வரி அச்சுறுத்தல்கள் உலகளாவிய சந்தைகளை நிலைகுலையச் செய்து, அமெரிக்க டாலரின் மதிப்பைச் சற்று குறைத்திருந்த காலகட்டத்தில், இந்த மஞ்சள் உலோகத்தின் விலைகள் பல புதிய உச்சங்களை எட்டிப் பெருமளவு உயர்ந்திருந்தன. மேற்கு ஆசியப் போர் உலகச் சந்தைகளைத் தாக்கி வந்தபோதிலும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகள் இரண்டிலும் தங்கத்தின் விலைகள், ஜனவரி மாதத்தில் எட்டிய உச்சத்திலிருந்து சுமார் 27% சரிந்துள்ளன.


இத்தகைய சூழலில், 2025-ம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க விலை உயர்வுக்குப் பிறகு தங்கத்தின் விலைகள் ஏன் சரிந்துள்ளன? என்பதையும், கடந்த காலங்களில், புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும்போதெல்லாம் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதே வழக்கமாக இருந்தது. தற்போது தங்கத்திற்கு ஏன் வலுவான "பாதுகாப்புப் புகலிடத்" (safe-haven) தேவை ஏற்படவில்லை என்பதையும் நாம் ஆராய வேண்டும். இந்த ஆய்வில், தங்கத்தின் பண்புகள், அதன் பயன்பாடுகள் மற்றும் உலகளாவிய பரவல் ஆகியவை குறித்து விரிவாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.


முக்கிய அம்சங்கள் :


1. தற்போது தங்கத்திற்கான 'பாதுகாப்பு புகலிட' (safe-haven) தேவையை குறைத்துவரும் முக்கியக் காரணி, கச்சா எண்ணெயின் மிக உயர்ந்த விலையாகும். கச்சா எண்ணெயின் அதிக விலைகள், உலகம் முழுவதும் பணவீக்கத்தின் அளவு உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்கும் நடவடிக்கையைத் தாமதப்படுத்த வழிவகுக்கிறது. மேற்கு ஆசியப் போர் நீடித்து, இந்த சூழல் மேலும் மோசமடைந்தால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சில மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கையைக் கூடக் கருத்தில் கொள்ளக்கூடும்.


2. இக்காலகட்டத்தில் அமெரிக்க டாலரும் ஒரு 'பாதுகாப்பு புகலிட' சொத்தாக மாறியுள்ளது. பல உலக நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் 'டாலர் குறியீடு' (Dollar Index), மேற்கு ஆசியப் போர் தொடங்கியதிலிருந்து 2%-க்கும் அதிகமாக வலுப்பெற்று, சுமார் 100 என்ற நிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக வரி அச்சுறுத்தல்கள் உச்சத்தில் இருந்தபோது 96 என்ற நிலைக்குச் சரிந்திருந்த டாலர் குறியீடு, தற்போது இந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, தங்கத்தின் விலை உச்சத்தை எட்டிய பிறகு, முதலீட்டாளர்கள் அதில் ஈட்டிய லாபத்தை வெளியே எடுத்து (profit booking), அதற்கு மாற்றாக அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இதுவே தங்கத்தின் விலை சரிவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.


3. அமெரிக்க டாலர் வலுவடையும்போது, ​​தங்கம் மற்றும் வெள்ளி போன்ற டாலர் மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படும் சொத்துக்கள், பிற நாணயங்களைப் பயன்படுத்தும் வாங்குபவர்களுக்கு அதிக விலையுள்ளவையாக மாறுகின்றன. இது அத்தகைய சொத்துக்களுக்கான தேவையை குறைப்பதுடன், அவற்றின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


தங்கமும் அதன் பண்புகளும்


1. தங்கம் அதன் தூய வடிவில், பிரகாசமான, சற்றே செந்நிறம் கலந்த மஞ்சள் நிறமுடைய, அடர்த்தியான, மென்மையான, தகடாக்கக்கூடிய மற்றும் நீளக்கூடிய ஒரு உலோகமாகும். இது மிகக் குறைந்த வினைத்திறன் கொண்ட வேதியியல் தனிமங்களில் ஒன்றாகும் மற்றும் சாதாரண சூழ்நிலைகளில் திடநிலையில் இருக்கும்.


2. தங்கம் பெரும்பாலும் பாறைகள், தாது நரம்புகள் மற்றும் வண்டல் படிவுகளில், கட்டிகள் அல்லது தானியங்கள் போன்ற தனித்த (இயற்கையான) வடிவில் காணப்படுகிறது. தங்கம் அரிமானத்தையும் பெரும்பாலான அமிலங்களையும் எதிர்க்கும் திறன் கொண்டது மற்றும் மற்ற உலோகங்களிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது.


3. தங்கம், சுரங்கத் தொழில் மற்றும் மின்முலாம் பூசுதலில் பயன்படுத்தப்படும் சயனைடின் (cyanide) காரக் கரைசலில் கரைகிறது. இது பாதரசத்திலும் கரைந்து பாதரசக் கலவைகளை உருவாக்குகிறது. இருப்பினும், இந்த செயல்முறை ஒரு வேதிவினை அல்ல.


பரவல் (Distribution)


1. தங்கம் உலகில் ஒப்பீட்டளவில் அரிதான உலோகம் மற்றும் இந்தியாவில் ஒரு பற்றாக்குறையான பொருளாகும். இந்தியாவின் உள்நாட்டுத் தேவையின் பெரும்பகுதி இறக்குமதிகள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.


2. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2022 (பகுதி II: உலோகங்கள் மற்றும் கலப்புலோகங்கள்)-ன் படி, மாநில வாரியாக, தங்கத் தாதுவின் (முதன்மை) அடிப்படையில் மிகப்பெரிய வளங்கள் பீகாரில் (43%) அமைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் (24.92%), கர்நாடகா (20%), மேற்கு வங்கம் (2.47%), ஆந்திரப் பிரதேசம் (3.03%) மற்றும் ஜார்கண்ட் (2%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மீதமுள்ள 5.22% தாது வளங்கள் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.


3. தங்கத் தாது வளங்களைப் பொறுத்தவரை பீகார் இந்தியாவில் முன்னணி மாநிலமாக இருந்தாலும், வள மதிப்பீடுகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன மற்றும் அவை அனுமானிக்கப்பட்ட மற்றும் கள ஆய்வுப் பிரிவுகளின்கீழ் வருகின்றன. உண்மையான உலோக உள்ளடக்கத்தின் அடிப்படையில், கர்நாடக மாநிலமே முதலிடத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் இடம்பெற்றன.


4. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2022 (பகுதி II: உலோகங்கள் மற்றும் கலப்புலோகங்கள்)-ன் படி, உலகின் மதிப்பிடப்பட்ட தங்க இருப்பு சுமார் 52,000 டன் உலோக உள்ளடக்கமாக இருந்தது. இந்த தங்க இருப்புக்கள் முக்கியமாக ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் பெரு ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.


தங்கத்தின் தேவையும் நுகர்வும்


1. தங்க நுகர்வில் ஆபரணத் துறைக்கே மிகப்பெரிய பங்கு உள்ளது. தங்கம் சிறந்த வெப்ப மற்றும் மின்கடத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதால், தொழில்துறை சார்ந்த தேவை, குறிப்பாக மின்சாரத் துறையில் மிக அதிகமாக உள்ளது. மேலும், பல் மருத்துவம் மற்றும் மருத்துவத் துறைகளிலும் கணிசமான அளவு தங்கம் பயன்படுத்தப்படுகிறது.


2. தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகள், தங்கத்தை ஒரு வினையூக்கியாகவும் (catalyst) நானோ தொழில்நுட்பத்திலும் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளன.

3. மக்கள் மத்தியில், முதலீடுகள் மற்றும் வங்கி இருப்புக்களுக்கு தங்கம் ஒரு மதிப்புமிக்க சொத்தாகக் கருதப்படுகிறது.


தங்கத்திற்கு அப்பால் : வெள்ளி – ஒரு விலைமதிப்புள்ள மற்றும் தொழில்துறை உலோகம்


1. மதிப்பு சேமிப்பு மற்றும் முதலீடாக முதன்மையாக வீடுகளாலும் மத்திய வங்கிகளாலும் வாங்கப்படும் தங்கத்தைப் போலல்லாமல், வெள்ளிக்கு உள்ளார்ந்த இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளது. அவை மின்கலங்கள் (பேட்டரிகள்) மற்றும் சூரிய மின் தகடுகள் (சோலார் பேனல்கள்) போன்ற பொருட்களைத் தயாரிப்பதில் வெள்ளியை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகின்றன. இந்தத் துறைகள் தற்போது பிரபலமாக இருப்பது மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானவையாக இருக்கும்.


2. ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் தயாரிக்கவும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான், தங்கத்தைவிட வெள்ளியை வாங்குபவர்களும், அவர்கள் வாங்குவதற்கான காரணங்களும் மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன.


3. வெள்ளி ஒரு மென்மையான மற்றும் பளபளப்பான உலோகம் ஆகும். இது ஒரு உன்னத உலோகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வெண்மை நிறம், எளிதாக வடிவமைக்கும் தன்மை மற்றும் வளிமண்டல ஆக்ஸிஜனேற்றத்தை எதிர்க்கும் திறன் ஆகியவை, பல தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் விரும்பப்படும் ஒரு விலையுயர்ந்த உலோகமாக அதன் மதிப்பை உயர்த்தியுள்ளன.


4. வெள்ளி, பணம் மற்றும் அலங்காரப் பயன்பாடுகளைத் தவிர, வெள்ளி அனைத்து உலோகங்களிலும் மிக உயர்ந்த மின் கடத்துத்திறனைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது அச்சிடப்பட்ட மின்சுற்றுகள், மின்னணு கடத்திகளுக்கான பூச்சு மற்றும் மின் தொடர்புகளுக்கான தங்கம் மற்றும் செம்பு உலோகக் கலவைகள் போன்ற நவீன காலப் பயன்பாடுகளில் அதன் திறனை மேம்படுத்துகிறது.


5. வெள்ளி குளோரைடு மற்றும் வெள்ளி அயோடைடு ஆகியவை ஒளிக்கு உணர்திறன் கொண்டவை. இந்தத் தன்மையின் காரணமாக, இவை புகைப்படத் துறையில் பயன்படும் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி பொதுவாக சூரிய மின்கலங்களில் (பசை வடிவில்) பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி மிகவும் வெண்மையான தனிமம் மற்றும் அனைத்து உலோகங்களிலும் மிக உயர்ந்த மின் மற்றும் வெப்பக் கடத்துத்திறனைக் கொண்டுள்ளது.


6. இந்தியாவில், ராஜஸ்தானில் உள்ள சிறிய மற்றும் தனித்துவமான பராக் (Bharak) படிமத்தைத் தவிர, வேறு எந்த இயற்கை வெள்ளிப் படிமங்களும் இல்லை. இது பொதுவாக ஈயம், துத்தநாகம், தாமிரம் (குறிப்பாக அவற்றின் சல்பைடு தாது) மற்றும் தங்கத் தாதுக்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. மேலும், இது மின்னாற்பகுப்பு அல்லது வேதியியல் முறைகள் மூலம் ஒரு துணைப் பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இது பொதுவாக வெள்ளி கலந்த ஈயத் தாதுவை உருக்குவதன் மூலமே வெள்ளி பொதுவாகப் பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வகைத் தாது 'அர்ஜென்டிஃபெரஸ் கலீனா' (argentiferous galena) என்று அழைக்கப்படுகிறது.


7. இந்திய கனிமங்கள் ஆண்டு புத்தகம் 2022-ன் படி, நாட்டில் வெள்ளி ஒரு துணைப் பொருளாகவும், இணைப் பொருளாகவும் மீட்கப்படுகிறது. கடந்த காலத்தில், கர்நாடகாவில் உள்ள கே.ஜி.எஃப் வளாகம் (KGF Complex) மற்றும் ஹுட்டி தங்கச் சுரங்கங்களில் (Hutti Gold Mines) தங்கம் சுத்திகரிப்பின்போது ஒரு துணைப் பொருளாகவும், ராஜஸ்தானில் உள்ள சந்தேரியா மற்றும் தேபாரி உருக்காலைகளிலும், ஜார்க்கண்டில் உள்ள துண்டூ மற்றும் மௌபந்தர் (காட்சிலா) உருக்காலைகளிலும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் உருக்காலையிலும் ஈயம், துத்தநாகம் மற்றும் செம்பு செறிவுகளை உருக்கி சுத்திகரிக்கும்போது ஒரு உபபொருளாகவும் வெள்ளி மீட்கப்பட்டது.



Original Link: Gold in spotlight: Understanding price trends, its uses, and distribution.


Share:

கண்ணன் கோபிநாத்தின் இந்திய ஆட்சிப் பணி பதவிவிலகல் நிறுத்தம் : விதிகள் என்ன கூறுகின்றன? - ஷியாம்லால் யாதவ்

கோபிநாத் 2019-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சி பணியிலிருந்து விலகினார். ஆனால், அரசாங்கம் அவரது பதவிவிலகலை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு அலுவலர் பணியில் இருக்கும் வரை, அவரால் தேர்தல்களில் போட்டியிடவோ அல்லது ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைய முடியாது.


காஷ்மீர் மக்களுக்கு "கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை" (denial of freedom of expression) எதிர்த்து, 2019-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (Indian Administrative Services (IAS)) விலகிய 2012-ஆம் ஆண்டுத் தொகுதி அதிகாரியான கண்ணன் கோபிநாத், தனது பதவிவிலகலை ஒன்றிய அரசு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தத் தாமதம் காரணமாக, வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் புதன்கிழமையன்று தெரிவித்தார்.


இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் பணிப்பிரிவைக் கட்டுப்படுத்தும் அமைப்பான 'பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு' (Department of Personnel and Training (DoPT)), கோபிநாத்தின் பதவிவிலகல் குறித்த இறுதிப் பரிந்துரை இன்னும் அனுப்பப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், அவரது பதவிவிலகல் விவகாரம் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில்   உள்ளது தெரியவருகிறது. மேலும், பதவிவிலகலை ஏற்றுக்கொள்வதில் இது போன்ற தாமதத்திற்கு முன்னுதாரணம் (precedent) ஏதும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் பதவிவிலகும்போது என்ன நடக்கும்? அத்தகைய பதவிவிலகல்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் பொதுவாக எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்? மேலும், எந்தச் சூழல்களில் அரசாங்கத்தால் பதவிவிலகல்வை நிராகரிக்க முடியும்? இது குறித்து விதிகள் என்ன கூறுகின்றன என்பதை இங்கே  பார்ப்போம்.


இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் தொடர்பான விதிகள் என்ன?


 சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோபிநாதன் ஆகஸ்ட் 2019-ல் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விலகினார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; பாலக்காடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அவர் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.


ஆனால், அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்போடும் தொடர்பு வைத்துக்கொள்ளவோ, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்கவோ அல்லது அத்தகைய செயல்பாடுகளுக்கு உதவவோ கூடாது என்று அரசுப் பணி நடத்தை விதிகள் தடை செய்கின்றன. கோபிநாதனின் பணியில் உள்ள அரசு அலுவலர் என்ற நிலை இன்னும் தெளிவில்லாமல் (limbo) உள்ளது.


2014 நவம்பர் 27 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம், 'அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள்' (The All India Services (Conduct) Rules) உடன் சில உட்பிரிவுகளைச் சேர்த்தது. விதி 3(1): "ஒவ்வொரு அரசு ஊழியரும் அனைத்து நேரங்களிலும் அரசியல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும்; மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கத்தையும் நாட்டின் ஜனநாயகத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்  என்று கூறுகிறது

புதன்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி, தற்போதைய சூழலை "முழுமையான அத்துமீறல்" என்று வர்ணித்து அவர் 'X' தளத்தில் ஒரு பதிவை கோபிநாதன் வெளியிட்டார். பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) பொறுப்பு அமைச்சராகப் பிரதமரே உள்ளார்.


கோபிநாதன், எனது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், நான் பதவி விலகி ஜனநாயகச் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான எனது உரிமையைத் தடுப்பது மிகவும் தவறான செயலாகும். இந்த தவறான செயலை நிறுத்திவிட்டு, மெதுவாக செயல்படும் உங்கள் அரசாங்கத்தை எனது பதவிவிலகலை உடனடியாகச் செயலாக்குமாறு அறிவுறுத்துங்கள் என்று கூறினார்.


இந்திய ஆட்சி பணி  அலுவலர்களுக்கான பதவிவிலகல் செயல்முறை என்ன?


இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS), மற்றும் இந்திய வன சேவை (IFS) ஆகிய மூன்றில், இந்தியா சேவைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிவிலகல், அகில இந்திய சேவைகள், இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள் (Death-cum-Retirement Benefits) விதிகள், 1958-ன் விதி 5(1) மற்றும் 5(1)(A)-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.


ஒரு பணிப்பிரிவு (cadre) என்பது, ஒரு அலுவலருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களின் தொகுப்பு அல்லது யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர் ஓர் அதிகாரி, தனது பதவிவிலகல் கடிதத்தை அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


ஒரு பணிப்பிரிவிலிருந்து மத்தியப் பணிக்கு (Central Deputation) அனுப்பப்பட்டுள்ள அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையின் செயலாளரிடம் தங்கள் பதவிவிலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், அந்த அமைச்சகம் அல்லது துறை, அதிகாரியின் பதவிவிலகலைத் தங்கள் கருத்துகள் அல்லது பரிந்துரைகளுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட மாநிலப் பணிப்பிரிவிற்கு அனுப்பிவைக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (Arunachal Pradesh-Goa-Mizoram and Union Territories (AGMUT)) பணிப்பிரிவைச் சேர்ந்த அலுவலர்களின் விவகாரங்கள், ஒன்றிய  உள்துறை அமைச்சகத்தால் கையாளப்படுகின்றன. கோபிநாதன் AGMUT பணிப்பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.  


இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பயன்கள் விதிகளின் விதி 5, “பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது நீக்கப்பட்ட அல்லது பணியிலிருந்து விலகிய ஒருவருக்கு எவ்வித ஓய்வுக்காலப் பலன்களும் வழங்கப்படக்கூடாது என்று கூறுகிறது. ஒரு பதவிவிலகல் தெளிவானதாகவும், எந்த விதமான நிபந்தனையும்  இல்லதாதாகவும் இருக்கவேண்டும் என்று DoPT வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.



அடுத்து என்ன நடக்கும்?


முதலில், அந்த அலுவலருக்கு எதிராக ஏதேனும் நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது விசாரணைகள் (ஊழல் தொடர்பானவை போன்றவை) உள்ளனவா என்பதை மாநில அரசு சரிபார்க்கும்.  அதுபோன்ற  சூழலில், அந்த பதவிவிலகல் விண்ணப்பம் வழக்கமாக நிராகரிக்கப்படும்.


பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கண்காணிப்பு நிலை குறித்த விவரங்களை, தனது பரிந்துரையுடன் சேர்த்து, மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. மேலும், மாநில அரசு அந்த பதவிவிலகலை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கிறது.


இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பதவிவிலகலைப் பரிசீலிக்கும் அதிகாரம் பணியாளர் மற்றும் பயிற்சி ' (Department of Personnel and Training (DoPT) அமைச்சரிடம் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதமரே பணியாளர் மற்றும் பயிற்சி துறை பதவிவிலகல் பற்றி முடிவு செய்வார்.


 இந்தியா காவல் பணி அலுவலர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பதவிவிலகலை பரிசீலிக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சரிடம் உள்ளது. அதேவேளையில், இந்திய வனப் பணி அலுவலர்களின் பதவிவிலகலைப் பரிசீலிக்கும் அதிகாரம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை (Minister for Environment, Forest and Climate Change) அமைச்சரிடம் உள்ளது.





இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் பதவிவிலகலை அரசு நிலுவையில் வைக்க முடியுமா?


ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சமர்ப்பிக்கும் பதவிவிலகலை அரசு ஏற்றுக்கொள்வதற்கு என்று,  எந்தவிதமான காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், 1988 பிப்ரவரி 15 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, பணிபுரிய விருப்பமில்லாத ஒரு அலுவலரைப் பணியில் தக்கவைத்துக்கொள்வது அரசாங்கத்தின் நலனுக்கு ஏற்றதாக இருக்காது என்று குறிப்பிடுகிறது. எனவே, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர, ஒரு அலுவலரின் பதவிவிலகலை ஏற்றுக்கொள்வதே பொதுவான விதியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.


1988-ல் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, "பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ள ஒரு அரசு ஊழியர் தனது பதவிவிலகலைச் சமர்ப்பிக்கும்போது, ​​அந்த அரசு ஊழியருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கையின் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு, அந்த பதவிவிலகலை ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதைத் தகுதிவாய்ந்த அலுவலர்ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


சில நேர்வுகளில், அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் இருந்த காரணத்தினால், அவர்களின் பதவிவிலகல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நேர்வுகளில், ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (Central Vigilance Commission (CVC)) ஒப்புதல் பெறப்படுகிறது.


சிறப்புப் பயிற்சி, உதவித்தொகைகள் அல்லது கல்விக்கான கல்வி உதவித்தொகைகளைப் பெற்றதன் காரணமாக, குறிகுறிப்பிட்ட ஆண்டுகள்  அரசாங்கத்திற்குப் பணியாற்றுவதாக அந்த அதிகாரி ஏதேனும் பிணைப்பத்திரம் (Bond) எழுதி அளித்துள்ளாரா என்பதையும் அரசாங்கம் பரிசீலிக்கிறது.


எடுத்துக்காட்டாக, அரவிந்த் கெஜ்ரிவால் 2006-ஆம் ஆண்டில் இந்திய வருவாய் பணியிலிருந்து (IRS) விலகினார். எனினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 'இந்தியா ஊழலுக்கு எதிராக' (India Against Corruption) இயக்கத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டபோது, ​​ஒரு திட்டத்திற்காக அனுப்பப்பட்ட சமயத்தில் அரசாங்கத்திற்குப் பணிபுரியும் வகையில் அவர் ஒரு பிணைப்பத்திரம் எழுதி அளித்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய வருவாய் பணி விதிமுறைகளை மீறியதாகக் கூறி வருமானவரித் துறை அவருக்கு ஒரு அறிவிக்கையை அனுப்பியதுடன், ரூ.9 லட்சம் அபராதம் விதித்தது.


பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) சுற்றறிக்கை, "சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டிருந்து, அந்தப்பதவியை நிரப்புவதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யக் கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், அந்த பதவிவிலகலை உடனடியாக ஏற்க்ககூடாது; மாறாக,  அந்தப்பதவியை நிரப்புவதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்ட பின்னரே அந்த பதவிவிலகலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.


கண்ணன் கோபிநாதன் பதவிவிலகல் செய்தபோது என்ன நடந்தது?


கோபிநாதன் ஆகஸ்ட் 2019-ல் தனது பதவிவிலகலைச் சமர்ப்பித்தார். எனினும், செப்டம்பர் 26 அன்று, தாதர் மற்றும் நாகர் ஹவேலி ஒன்றியப் பிரதேசத்தின் மின் மேம்பாட்டுத் துறையில் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டதாக, அவரது 'நிர்வாகப் பணிப் பதிவேடு' (Executive Record Sheet) தெரிவிக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தியா ஆட்சிப் பணி அலுவர்களின் 'குடிமைப் பணி பட்டியல்' (Civil List) விவரங்களிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.


கோபிநாதன் பதவி விலகிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் மீது துறை சார்ந்த விசாரணை நடத்துவதற்கான குறிப்பாணையை (Memorandum) ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. பின்னர், ஊடகங்களுடன் அனுமதியின்றித் தொடர்புகொண்டது போன்ற குற்றச்சாட்டுகளுடன், நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி அவருக்குக் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணம் (Chargesheet) வழங்கப்பட்டது.


மேலும், ஏப்ரல் 2020-ல், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணிக்குத் திரும்புமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தும், அவரது பதவிவிலகல் ஏற்கப்படாத நிலையில், அவர் பணிக்குத் திரும்ப மறுத்த காரணத்தினால், அவர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188, தொற்றுநோய் சட்டம் (Epidemic Diseases Act) மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளின்கீழ், அவர் அரசு உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


கடந்த காலத்தில் எத்தனை இந்தியா ஆட்சிப் பணி அலுவர்கள் பதவிவிலகல் செய்துள்ளனர்?


UPSC குடிமைப் பணித் தேர்வுகளில், முதன்மைத் தேர்வுகளுக்குப் பதிலாக 'குடிமைப் பணித் திறன் தேர்வு' (Civil Services Aptitude Test (CSAT)) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான 2010 முதல், மொத்தம் 31 இந்தியா ஆட்சிப் பணி அலுவர்கள் தங்கள் பணியிலிருந்து பதவிவிலகல் செய்துள்ளனர் என்றும், இந்த மாதம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடமிருந்து (DoPT) 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் பெற்ற தகவல் அறியும் உரிமை சட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.


2010 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் (UPA ஆட்சியின் போது) 11 இந்தியா ஆட்சிப் பணி அதிகாரிகள் பதவிவிலகல் செய்த நிலையில், 2015 மற்றும் மே 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் (NDA ஆட்சியின்போது) 20 அதிகாரிகள் பதவிவிலகல் செய்துள்ளனர் என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தரவுகள் காட்டுகின்றன.


2019-ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச (Arunachal Pradesh-Goa-Mizoram and Union Territories (AGMUT) பிரிவைச் சேர்ந்த மற்றொரு அலுவலரான காஷிஷ் மிட்டல், டெல்லியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பதவிவிலகல் செய்தார். மிட்டல் அதே 2019-ஆம் ஆண்டிலேயே பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


2018-ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் பிரிவைச் சேர்ந்த ஓ.பி. சௌத்ரி பதவிவிலகல் செய்தார். பின்னர், அவர் பாஜக-வில் இணைந்தார்; தற்போது அந்த மாநிலத்தின் நிதியமைச்சராக உள்ளார்.


இவர்களைத் தவிர, 2011-ஆம் ஆண்டில் ஒடிசா பிரிவிலிருந்து விலகித் தனது சொந்தத் தொழிலைத் தொடங்கியவரும், பின்னர் பாஜக-வில் இணைந்தவருமான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போன்றோரும் இப்பட்டியலில் அடங்குவர். CSAT அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் அதிகமானோர் தொழில்நுட்பப் பின்னணி கொண்டவர்களாகவே (technocrats) இருந்து வருகின்றனர். இவர்களில் பலர், தனியார் துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதற்காகவோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காகவோ பதவிவிலகல் செய்திருக்கலாம்.


இந்தியா ஆட்சிப் பணி அலுவர்களால் தங்கள் பதவிவிலகலைத் திரும்பப் பெற முடியுமா?


2019-ஆம் ஆண்டில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதவிவிலகல் செய்த ஒரே இந்தியா ஆட்சிப் பணி அலுவலர் கோபிநாதன் மட்டும் அல்ல. 2010-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான ஷா ஃபைசல் என்பவரும், காஷ்மீரில் "அடிக்கடி நிகழும் படுகொலைகளை" சுட்டிக்காட்டி, அதே ஆண்டின் ஜனவரி மாதத்தில் பதவிவிலகல் செய்திருந்தார்.


எனினும், அரசியலில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஃபைசல் தனது பதவிவிலகலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, 2022-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியா ஆட்சிப்பணிக்குத் திரும்பினார்.


திருத்தப்பட்ட இறப்பு மற்றும் ஓய்வு பெறுதல் (DCRB) தொடர்பான நலன்கள் விதிகளின் விதி 5(1A)(i)-ன் படி, "பொது நலனைக் கருத்தில் கொண்டு", ஒரு அலுவலர் தனது பதவிவிலகலைத் திரும்பப் பெற ஒன்றிய அரசு அனுமதி அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


2011-ஆம் ஆண்டில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின்படி, இத்தகைய சூழல்களில் பதவிவிலகல் நடைமுறைக்கு வரும் தேதிக்கும், மீண்டும் பணியில் சேரும் தேதிக்கும் இடைப்பட்ட கால இடைவெளி அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் ஒரு அதிகாரி பதவிவிலகல் செய்திருந்தால், அவர் தனது பதவிவிலகலைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் திருத்தப்பட்ட DCRB விதிகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஃபைசலின் விஷயத்தில் இந்த இரண்டு  விதிகளும் பொருந்தாது. ஏனெனில், அவரது பதவிவிலகல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.


அவரது விஷயத்தில் பொருந்தும் விதி, ஒரு அலுவலர் தனது பதவிவிலகல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, அதனை எழுத்துப்பூர்வமாகத் திரும்பப் பெற்றால், அந்த பதவிவிலகல் தானாகவே திரும்பப் பெறப்பட்டதாகக் கருதப்படும்.


ஃபைசல் மீண்டும் அரசுப் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், கோபிநாதனின் விவகாரம் முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணித்துள்ளது. தனது பதவிவிலகலை ஏற்றுக்கொள்வதில் அரசு காட்டிய காலதாமதத்தை அவர் "துன்புறுத்தல்" (harassment) என்று கூறியுள்ளார்.


Original Link: Kannan Gopinathan’s stalled resignation from the IAS: What the rules say.

Share:

CMS, COP-15 மற்றும் புலம்பெயரும் வன விலங்கினங்களின் பாதுகாப்பு. -குஷ்பூ குமாரி

பிரேசிலில் புலம்பெயரும் வன விலங்கினங்கள் மீதான மாநாட்டின் 15-வது கூட்டம் (15th Meeting of the Conference of the Parties to the Convention on Migratory Species (COP15)) நடைபெற்று வரும் வேளையில், புலம்பெயரும் வன விலங்கினங்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றி ஆராய்வோம். உலகின் புலம்பெயரும் வன விலங்கினங்களின் நிலை குறித்த 2026 இடைக்கால அறிக்கை (2026 Interim Report) கூறுவது என்ன?


பிரேசில் நாட்டின் காம்போ கிராண்டே (Campo Grande) நகரில், புலம்பெயர் வன விலங்கினங்கள் பாதுகாப்பு உடன்படிக்கையின் (Convention on Conservation of Migratory Species of Wild Animals (CMS)) 15-வது மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, மார்ச் மாதம் 29-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "இயற்கையை இணைத்து உயிரை நிலைநாட்டுதல்" (Connecting Nature to sustain life) என்பதாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. புலம்பெயரும் வன விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை (CMS) என்பது 1979-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்கீழ் (United Nations Environment Programme (UNEP)) கையெழுத்திடப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான உலகளாவிய ஒப்பந்தமாகும். நாடுகளின் எல்லைகளைத் தாண்டிப் பயணம் செய்யும் விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இன்றுவரை, 133 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இவை சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலம் இந்த புலம்பெயரும் விலங்கினங்களைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன.


2. இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) வரையறையின்படி, ஒரு புலம்பெயரும் உயிரினம் (Migratory Species) என்பது ஒரு வனவிலங்கினத்தின் (அல்லது அதன் ஒரு பிரிவு) முழு விலங்கினங்களின் எண்ணிக்கை அல்லது புவியியல்ரீதியாக பிரிக்கப்பட்ட ஒரு பகுதியைக் குறிக்கும். இதில் கணிசமான எண்ணிக்கையிலான விலங்கினங்கள், வழக்கமாகவும் கணிக்கக்கூடிய வகையிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்டு எல்லைகளைக் கடந்து செல்கின்றன.


3. உறுப்பு நாடுகளின் மாநாடு (Conference of the Parties) என்பது இந்த ஒப்பந்தத்தின் (Convention) மிக முக்கியமான முடிவெடுக்கும் அமைப்பாகும். நிதிநிலைத் திட்டத்தை நிர்ணயிக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான முன்னுரிமைகளை முடிவு செய்யவும் இந்த மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின்போது, ஒப்பந்தத்தின் இணைப்புகளில்  புதிய விலங்கினங்களைச் சேர்ப்பதா அல்லது ஏற்கனவே உள்ளவற்றைப் புதுப்பிப்பதா என்பதை உறுப்பினர்கள் தீர்மானிக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு தரப்பு நாடு, அறிவியல் கூட்டமைப்பு மற்றும் இந்த ஒப்பந்தத்தின்கீழ் உள்ள உடன்படிக்கைகள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளையும் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.


4. புலம்பெயரும் விலங்கினங்கள் பாதுகாப்பு உடன்படிக்கையில் இரண்டு இணைப்புகள் உள்ளன. ஒரு புலம்பெயரும் விலங்கினங்கள் இந்த இரண்டு இணைப்புகளிலும் பட்டியலிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


* இணைப்புப் பட்டியல்-I என்பது அழிந்து வரும் நிலையில் உள்ளதாகக் கருதப்படும் புலம்பெயர்ந்த வன விலங்கினங்களுக்கான பட்டியலாகும்.  புலம்பெயரும் வனவிலங்கு பாதுகாப்பு ஒப்பந்த (CMS) விதிகளின்படி, "அழிந்துவரும் நிலை" என்பது ஒரு இனம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் அதன் எண்ணிக்கை, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலின் அளவுகோல்களின்படி 'வனப்பகுதியில் அழிந்துவிட்டவை', 'மிகவும் அபாயகட்டத்திலுள்ளவை' அல்லது 'அழியும் நிலையிலுள்ளவை' என வகைப்படுத்தப்பட்ட இனம் அல்லது குறிப்பிட்ட பிராந்திய அளவில் உள்ள விலங்கினங்களின் தொகையைக் குறிக்கும். இணைப்புப் பட்டியல் I-ல் இடம்பெறுவது, ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி சர்வதேச அளவில் அந்த விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பெரும் துணையாக அமைகிறது.


* இணைப்புப் பட்டியல்-II என்பது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள புலம்பெயரும் இனங்களுக்கானதாகும். இவற்றைப் பாதுகாப்பதற்கும் மேலாண்மை செய்வதற்கும் சர்வதேச ஒப்பந்தங்கள் அவசியமாகும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின்  (IUCN ) சிவப்புப் பட்டியலில் 'காடுகளில் அழிந்துவிட்டவை', 'மிகவும் அழியும் நிலையிலுள்ளவை', 'அழியும் நிலையிலுள்ளவை', 'பாதிக்கப்படக்கூடியவை', அல்லது 'அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ளவை' என வகைப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படத் தகுதியுடையவையாக வரையறுக்கப்பட்டுள்ளன.


இந்தியா மற்றும் புலம்பெயர் வன விலங்கினங்கள் பாதுகாப்பு மாநாடு


இந்தியா முதன்முறையாக 2020-ஆம் ஆண்டில் புலம்பெயர் வன விலங்கினங்களின் பாதுகாப்பு மாநாட்டை (CMS COP) நடத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றது. இந்த 13-வது மாநாட்டின் மையக்கருத்து என்னவென்றால், "புலம்பெயர் இனங்கள் இந்த உலகத்தை ஒன்றிணைக்கின்றன, நாம் அனைவரும் சேர்ந்து அவற்றை வரவேற்போம்!" என்பதாகும்.


4. இணைப்புப் பட்டியல் I-ல் ( Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora / CITES) மொத்தம் 188 இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன: இதில் 28 நிலப்பாலூட்டிகள், 23 நீர்வாழ் பாலூட்டிகள், 103 பறவைகள், 8 ஊர்வன மற்றும் 26 மீன் இனங்கள் ஆகும். இந்த வன விலங்கினங்கள் வாழும் நாடுகள், அவற்றை வேட்டையாடுவதையோ அல்லது பிடிப்பதையோ தடை செய்தல், அவற்றின் வாழ்விடங்களை மீட்டெடுத்தல் மற்றும் இடப்பெயர்வு சார்ந்த சிக்கல்களைக் களைதல் ஆகியவற்றின் மூலம் அந்த வன விலங்கினங்களைக் கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


5. இந்தியாவில், அழிந்துவரும் புலம்பெயர்ந்த இனங்களுக்கான சர்வதேச உடன்படிக்கையின்படி, கானமயில் (Great Indian Bustard), ஆசிய யானை (Asian Elephant), வங்காளப் புல்வெளிக்கோழி (Bengal Florican), சைபீரியக் கொக்கு (Siberian Crane), ஹாக்ஸ்பில் கடல் ஆமை (Hawksbill Sea Turtle), ஆலிவ் ரிட்லி ஆமை (Olive Ridley turtle) மற்றும் தோணி ஆமை (Leatherback Sea Turtle) ஆகிய வன விலங்கினங்கள் அதன் இணைப்புப் பட்டியல்-1-ல் பட்டியலிடப்பட்டுள்ளன.

புலம்பெயரும் வன விலங்கினங்கள் குறித்த இடைக்கால அறிக்கை


6. இந்த மாநாட்டிற்கு முன்னதாக, புலம்பெயர் வன விலங்கினங்கள் பாதுகாப்பு உடன்படிக்கை ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை, புலம்பெயரும் வன விலங்கினங்களின் முக்கியமான வாழ்விடங்களையும், அவை பயணிக்கும் பாதைகளையும் கண்டறிந்து பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள புதிய போக்குகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் (Samarkand) நகரில் நடைபெற்ற 14-வது மாநாட்டில் வெளியிடப்பட்ட, புலம்பெயர் இனங்கள் குறித்த முதலாவது விரிவான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையின் தற்போதைய நிலையை இந்த அறிக்கை புதுப்பிக்கிறது.


7. புலம்பெயரும் வன விலங்கினங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் பாதுகாக்கப்படும் இனங்களில் 49% இனங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், 24% இனங்கள் தற்போது அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.


8. உலகளாவிய புலம்பெயரும் வன விலங்கினங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 1,189 இனங்களில், 582 இடம்பெயரும் வன விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இதில் பல வகையான பறவைகள், வில்தெபீஸ்ட் (Wildebeest) மற்றும் லாமா (Llama) போன்ற குளம்புள்ள விலங்குகள், நன்னீர் மீன்கள் மற்றும் சுறாக்கள், திருக்கை மீன்கள் (Rays) மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் வன விலங்கினங்களும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.


9. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சமீபத்திய பட்டியலின்படி, ஒப்பந்தத்தின்கீழ் உள்ள 26 உயிரினங்கள் அழியும் அபாயக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இதில் 18 வகையான புலம்பெயர் கடற்கரை பறவைகளும் (Migratory Shorebirds) அடங்கும். இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பல புலம்பெயர் கடற்கரை பறவைகளின் எண்ணிக்கை நீண்டகாலமாகத் தொடர்ந்து குறைந்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுறாக்கள் (Sharks) மற்றும் திருக்கை மீன்கள் (Rays) அழியும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. அதேநேரத்தில், தெற்காசியாவில் பிணந்தின்னிக் கழுகுகளின் (Vulture) எண்ணிக்கை மெதுவாக மேம்பட்டு வருவது ஒரு நம்பிக்கையான செய்தியாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


10. இந்த அறிக்கையின்படி, மிக அதிக வீரியம் கொண்ட பறவைக் காய்ச்சல்  (Highly Pathogenic Avian Influenza (H5N1)) எனப்படும் அபாயகரமான வைரஸ், வழக்கத்திற்கு மாறாகப் பல்வேறு வகையான பறவைகள் மற்றும் பாலூட்டிகளிடையே பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது பல நாடுகளிலும் கண்டங்களிலும் உள்ள எண்ணற்ற வன விலங்கினங்களின் இறப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


புலம்பெயரும் வனவிலங்கினங்களின் பாதுகாப்பிற்கான உடன்படிக்கை பட்டியலில் உள்ள வன விலங்கினங்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்டுள்ள சிகப்புப் பட்டியலில் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


புலம்பெயரும் வனவிலங்கு இனங்களைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கையின்கீழ் உள்ள வன விலங்கினங்களில், 'பாதிப்பிற்குள்ளாகக்கூடியவை' (Vu) என்ற நிலையிலிருந்து, 'அழிந்து வரும் நிலையில் உள்ளவை' (EN) மற்றும் 'மிகவும் அழியும் நிலையில் உள்ளவை' (CR) என மறுவகைப்படுத்தப்பட்ட வன விலங்கினங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

(அறிவியல் பெயர்)

பொதுவான பெயர்

CMS

இணைப்புப் பட்டியல் 

IUCN-ல் மாற்றம் 

சிவப்புப் பட்டியல் வகை

( எண்ணிக்கை போக்கு)

தற்போதைய IUCN சிவப்புப் பட்டியல் வகைக்கான காரணங்களின் சுருக்கம் மற்றும் முக்கிய அச்சுறுத்தல்கள்

பறவை: (Anser cygnoid)

அன்னப் பறவை 

I/II


VU (↓) → EN (↓)


பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள்; வாழ்விட இழப்பு, இடையூறுகள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் தொடர்ந்து ஏற்படும் அச்சுறுத்தல்கள்.

பறவை: (Asarcornis scutulata) 

வெள்ளை இறக்கை வாத்து 

II


EN (↓) → CR (↓)



வாழிட இழப்பு, இடையூறுகள் மற்றும் வேட்டை காரணமாக இந்த இனத்தின் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அநேகமாக 80 சதவீதத்திற்கும் (>80%) மேல் இருக்கலாம்; தற்போது இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், ஆங்காங்கே சிதறியும் காணப்படுகின்றன.

பறவை: (Hirundo atrocaerulea)

நீலத் தகைவிலான்

I/II

VU (↓) → EN (↓)

குறைந்த எண்ணிக்கையிலான,  அருகி வரும் உயிரினங்களின் எண்ணிக்கை, வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பறவை: (Otis tarda)

பெரிய கானமயில்

I/II


VU (↓) → EN (↓)



பெரும்பாலான இனங்கள் வாழும் பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது; இதற்கு வாழிடங்கள் மாற்றப்படுவது, உள்கட்டமைப்பு பாதிப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் சட்டவிரோதமாகக் கைப்பற்றுதல் போன்றவை முக்கியக் காரணங்களாகும்.

மீன்: (Anoxypristis cuspidata)

குறுகிய வாள்மீன்

I/II

EN (↓) → CR (↓)

உலகளவில் இந்த இனத்தின் எண்ணிக்கை 80%-க்கும் மேலாகக் குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதீத சுரண்டல்  மற்றும் வாழ்விடச் சீரழிவு  காரணமாக, இவை வாழும் நிலப்பரப்பும் பெருமளவில் சுருங்கிவிட்டது.


ஆதாரம்: உலகின் புலம்பெயர்ந்த வன விலங்கினங்களின் நிலை: இடைக்கால அறிக்கை (2026)


Original Link: CMS, COP15 and Migratory Species Conservation.


Share: