முக்கிய கனிமங்களைப் பாதுகாப்பதற்கான திட்டம் -பிரசாத் அசோக் தாக்கூர், லபன்யா பிரகாஷ் ஜெனா, திரிலோச்சன் திரிபாதி

 முக்கியமான கனிமங்களை ஆராய்தல், சுரங்கப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு செய்வதற்கு நிறைய மூலதனம் தேவைப்படுகிறது. அவை முடிவுகளைத் தரத் தொடங்க நீண்டநேரம் எடுக்கும். இதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.


உலகப் பொருளாதாரம் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தை இயக்கும் இரண்டு முக்கிய சக்திகள் உள்ளன. அவை பசுமை ஆற்றல் மாற்றம் (green energy transition) மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) எழுச்சி ஆகும். இந்த இரண்டு சக்திகளும் உலகப் பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் மறுவடிவமைக்கின்றன. இந்த இரண்டு சக்திகளின் மையத்திலும் முக்கியமான கனிமங்கள் உள்ளன. இவற்றில் தாமிரம், லித்தியம், கோபால்ட் மற்றும் அரியவகை மண் கூறுகள் போன்ற கனிமங்கள் அடங்கும். இந்த கனிமங்கள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை நுகர்வோர் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட விண்வெளி அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சுத்திகரிப்பு மற்றும் மேலும் செயலாக்கத்திற்கான முக்கியமான கனிமங்களின் விநியோகத்தின் அடிப்படையில் தற்போது ஒரு சில நாடுகளிடம் உள்ளன. இந்த நாடுகள் எப்போதும் இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போவதில்லை. சர்வதேச எரிசக்தி அமைப்பின் கூற்றுப்படி, 2024-ம் ஆண்டில் பிரித்தல் (separation) மற்றும் சுத்திகரிப்பு நிலைகளில் (refining stages) உலகளாவிய அரியவகை மண் சுரங்க உற்பத்தியில் சீனா தோராயமாக 60 சதவீதத்தையும், உலகளாவிய உற்பத்தியில் 91 சதவீதத்தையும் கொண்டுள்ளது.


முக்கியமான கனிமங்களுக்கான உலகளாவிய தேவை வரும் ஆண்டுகளில் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு முக்கியமாக சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அல்லது இயந்திர கற்றல் ஆகியவற்றால் இயக்கப்படும். இதன் விளைவாக, இந்தியா விரைவாக செயல்பட வேண்டும். பல நாடுகளும் அதே வளங்களைப் பெற போட்டியிடுகின்றன. எனவே முக்கியமான கனிமங்களுக்கு வலுவான கொள்கை ஆதரவும், சர்வதேச ஒத்துழைப்பும் தேவை. மேலும், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கான அபாயங்களைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் அவசியம்.


இந்தியாவைப் பொறுத்தவரை, விரைவான மற்றும் நியாயமான பொருளாதார வளர்ச்சி முக்கியமானது. அதன் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதையும், அதன் முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் பசுமை எரிசக்தி மாற்றம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பில் முக்கியமான கனிமங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


சீனாவைப் போலவே, முக்கியமான கனிமங்களை சுரங்கப்படுத்துதல் மற்றும் அதை செயலாக்குவதை ஆதரிக்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும். இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய அரியவகை மண் தனிம இருப்புகளைக் கொண்டுள்ளது. இது, தோராயமாக 163.9 மில்லியன் டன் தாமிரம் மற்றும் 44.9 மில்லியன் டன் கோபால்ட் தாது இருப்புக்கள் கொண்டுள்ளது. இந்த செயலற்ற இருப்புக்களை ஒரு உள்நாட்டு மற்றும் ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலியை நிறுவுவதன் மூலம் இராஜதந்திரரீதியாகப் பயன்படுத்தலாம்.


இந்தியா ஏற்கனவே முக்கியமான கனிமங்களின் மதிப்புச் சங்கிலியில் சில திறன்களை நிரூபித்திருந்தாலும், வணிகரீதியாக போட்டித்தன்மை வாய்ந்த பெரிய அளவிலான கீழ்நிலை செயலாக்க திறன்கள் கிட்டத்தட்ட இல்லாதது இன்னும் நிரப்பப்படாத ஒரு முக்கியமான இடைவெளியாகும்.


கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ₹34,000 கோடி ($3.8 பில்லியன்) இலக்கு ஒதுக்கீட்டைக் கொண்ட தேசிய முக்கிய கனிமத் திட்டம்-2025 (National Critical Mineral Mission (NCMM)), வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இருப்பினும், உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகக் குறைவு. இதற்கு நேர்மாறாக, 2024-ம் ஆண்டில் மட்டும் சீனா முக்கியமான கனிமங்களில் $21.44 பில்லியனை முதலீடு செய்தது. சீனாவின் முதலீட்டு அளவை இந்தியா ஈடுகட்ட முடியாவிட்டாலும், தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்காக அதன் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை கவனமாக ஒதுக்க முடியும்.


மதிப்புச் சங்கிலி முழுவதும், முக்கியமான கனிமங்களின் துணைக்குழுவான அரியவகை-மண் வழித்தடங்களை (rare-earth corridors) அமைப்பதற்கான 2026-27 நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பு, இந்தியாவின் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும். மேலும், முக்கியமான கனிமங்களைச் செயலாக்கப் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களின் இறக்குமதியில் அடிப்படை சுங்க வரியிலிருந்து (Basic Customs Duty (BCD)) விலக்கு அளிக்கப்படும் அறிவிப்பு, இந்தியாவின் பசுமை உற்பத்தி இலக்கிற்கு முக்கியமாக இருக்கும் கனிமங்களைச் சுத்திகரித்தல் மற்றும் செயலாக்கத்தில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளும் நிறுவனங்களை ஆதரிக்கும்.


நிதி தலையீடுகள்


முக்கியமான கனிமங்களை ஆராய்தல், சுரங்கப்படுத்துதல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவை பல சவால்களை உள்ளடக்கியது. இந்த நடவடிக்கைகளின் முடிவுகள் தோன்றுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். மேலும் அவற்றுக்கு மிகப் பெரிய முதலீடுகளும் தேவை. கூடுதலாக, அவற்றுக்கு விரிவான விடாமுயற்சி தேவைப்படுகிறது மற்றும் இதனால் பல நிச்சயமற்றத் தன்மைகளையும் எதிர்கொள்ள நேரிடும். சலுகை மற்றும் நீண்டகால கடன்களை வழங்குதல், சுத்திகரிப்பு கட்டுமானத்திற்கான ஆரம்பகால நிதி மற்றும் உற்பத்தி வரி வரவுகள் போன்ற பல வழிகளில் அரசாங்கம் தனியார் துறையை ஆதரிக்க முடியும்.


முக்கியமான கனிம விலைகளும், அவற்றின் தேவையும் நிலையற்றவை என்பதால், முதலீட்டாளர்களை ஈர்க்க, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாத விலையை வழங்கும் வேறுபாடு ஒப்பந்தங்கள் (contracts for difference (CfD)) மற்றும் தேவை உத்தரவாதங்கள் போன்ற வருவாய் உறுதிப்படுத்தலை அரசாங்கம் ஆதரிக்க முடியும். உயர் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தரநிலைகளுடன் இணைக்கக்கூடிய அரசாங்கத்தின் சலுகைகள், புதிய விநியோகத்தைத் திறக்க உதவும். இந்த சலுகைகள் மற்றும் இடர் குறைப்பு கருவிகள் (risk-reduction mechanisms) தனியார் முதலீட்டாளர்களை அதிக நம்பிக்கையுடன் உணர வைக்கும்.


ஆய்வு, சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த புவியியல் பகுப்பாய்வு துளையிடும் செலவுகளை (cost of drilling) கணிசமாகக் குறைக்கும். அதேவேளையில், கனிம இருப்பு கண்டுபிடிப்புகள் அதன் விகிதங்களை மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கும்.


முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியில் புதுமைக்கான பொது நிதி மற்றும் நிதி ஊக்கத்தொகைகள் மூலம் தொழில்நுட்பத்தை இணைந்து மேம்படுத்துவது, மூலப்பொருட்களின் அபாயங்களைத் தடுக்க விரும்பும் மின்னணு, எரிசக்தி மற்றும் வாகனத் துறைகளில் உள்ள ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள், சுரங்க நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை ஈர்க்கும்.


உள்ளூர் சமூகங்கள்


முக்கியமான கனிமச் சுரங்கம் மற்றும் செயலாக்கம் பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களில் சமூக அமைதியின்மையுடன் இணைக்கப்படுகின்றன. ஏனெனில், உள்ளூர் மக்கள் மாசுபட்ட நீர், நிலம் மற்றும் காற்று போன்ற சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என்பதால் இது நிகழ்கிறது. சுரங்கம் அல்லது செயலாக்கத் திட்டங்களில் உள்ளூர் சமூகங்களை இணை முதலீட்டாளர்களாக மாற்ற, இந்தத் திட்டங்களில் நேரடிப் பங்கை வழங்குவதன் மூலம் அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்க முடியும். 

                     

பொதுத்துறை அல்லது அரசாங்கத்திற்குட்பட்ட ஒரு துறை, நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நிதி வசதியை உருவாக்க முடியும். இது உள்ளூரில் முக்கியமான சுரங்கங்களுக்கு கடன் அல்லது பங்கு வடிவில் மூலதனத்தை வழங்குகிறது. காலப்போக்கில், அசல் மற்றும் வட்டி அல்லது ஈவுத்தொகைக்கான செலவுகள் திட்டங்களால் செலுத்தப்படுவதால், அவை உள்ளூர் திட்டங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம். அத்தகைய வசதி உள்ளூர் சமூகக் கொள்முதல் மற்றும் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்யும்.


கனிமங்களை தடையின்றி நகர்த்துதல்


உலகளாவிய புவிசார் அரசியல், நாடுகடந்த தன்மை மற்றும் நிச்சயமற்ற விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தில் இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் சமூகங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு அது உணர்திறன் கொண்ட அதேவேளையில், உலகளவில் முக்கியமான கனிம சொத்துக்களை கையகப்படுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் ஆதரிக்க முடியும். கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Ltd. (KABIL)), பேட்டரி பொருட்களுக்கான விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த கிரிட்டிகல் மினரல்ஸ் அலுவலகம் (ஆஸ்திரேலியா), CAMYEN (அர்ஜென்டினா அரசுக்குச் சொந்தமான நிறுவனம்) மற்றும் ENAMI (சிலி அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனம்) ஆகியவற்றுடன் கூட்டமைப்பு அமைத்துள்ளது. இதன்மூலம், இந்தியா அதன் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க உதவுகிறது.


தாக்கூர் IIT பம்பாய் மற்றும் IIM அகமதாபாத்தின் முன்னாள் மாணவர். ஜெனா, காலநிலை மற்றும் நிலைத்தன்மை முன்முயற்சியின் இயக்குநராகவும், லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் வருகை தரும் மூத்த உறுப்பினராகவும் உள்ளார், திரிபாதி, ஜாம்ஷெட்பூரில் உள்ள XLRI-யில் நிதிப் பேராசிரியராக உள்ளார்.   


Original article : Strategy to secure critical minerals. -Prasad Ashok Thakur, Labanya Prakash Jena, Trilochan Tripathy

Share:

முறைசாரா துறை (Informal sector) வளர்ச்சி தொடர்ந்து நிலைத்திருக்கிறது -ஆர் கோபாலன், எம்.சி.சிங்கி

புதிய தேசிய கணக்குத் தொடர் (new national accounts series), சமீபத்திய ஆண்டுகளில் முறைசாரா துறை வலுவாக வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


புதிய தேசிய கணக்குத் தொடர், 2022-23-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய தேசிய கணக்குத் தொடரை பிப்ரவரி 27, 2026 அன்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டது. தரவுத் தரம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் தற்போது புதிய தொடரை அறிமுகப்படுத்தியது. இது காலாவதியான முந்தைய அடிப்படை ஆண்டை (base year) மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


பல செயல்பாட்டு நிறுவனங்களில் செயல்பாடுகளைப் பிரிப்பதன் மூலம் தனியார் நிறுவனத் துறை தரவுகளின் தொகுப்பை புதிய தொடர் மேம்படுத்துகிறது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தெரிவிக்கிறது. இது வருடாந்திர கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி இணைக்கப்படாத துறையின் அனைத்தையும் மேம்படுத்துகிறது. இது விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இரட்டை பணவாட்டத்தையும் (double deflation), மீதமுள்ள துறைகளில் ஒற்றை நீட்டிப்பு கணிப்புகளையும் (single extrapolation) பயன்படுத்துகிறது.


இந்தத் தொடரில் சமீபத்திய ஆய்வுகளிலிருந்து எடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விகிதங்கள் மற்றும் வீதங்களும் அடங்கும். ஜிஎஸ்டி/புதிய நிர்வாக தரவு மூலங்களை விரிவாகப் பயன்படுத்துகிறது மற்றும் விநியோகம் மற்றும் பயன்பாட்டு அட்டவணை (Supply and Use Table (SUT)) கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் செலவுக்கான மதிப்பீடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துகிறது.


புதிய தொடர் 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு பணமதிப்பிழப்பு (demonetisation), அகில இந்திய ஜிஎஸ்டி அமலாக்கம் (all India GST rollout) மற்றும் தொற்றுநோய் (pandemic) ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளின் விளைவுகளை சமநிலையாக்குகிறது. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பொருளாதார வளர்ச்சியை பாதித்தன. குறிப்பாக, முறைசாரா மற்றும் குறு சிறு நடுத்தர தொழில்துறைகள் ஆகியவற்றை பாதித்தன. இருப்பினும், புதிய தொடரை அடிப்படையாகக் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பழைய தொடருடன் நியாயமான முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன.


2022-23-ஆம் ஆண்டில் (அடிப்படை ஆண்டு) மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹23,761,232 கோடியாக தற்போதைய விலையில் பழைய தொடரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96.4 சதவீதமாகும். மற்ற முக்கிய பொருளாதார குறிகாட்டிகளுக்கான புதிய தொடரின் பழைய தொடரின் விகிதம் பின்வருமாறு. தனியார் இறுதி நுகர்வு செலவு, 90.3 சதவீதம்; மொத்த மதிப்பு கூட்டல், 96.4 சதவீதம்; மற்றும் மொத்த நிலையான மூலதன உருவாக்கம், 96.4 சதவீதம் ஆகும். 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளில் புதிய தொடருக்கான தற்போதைய விலையில் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முறையே 11 சதவீதம், 9.7 சதவீதம் மற்றும் 8.6 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆச்சரியங்கள் இல்லை


2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான புதிய மொத்த உள்நாட்டு மூலதன உருவாக்கம் (GDCF)/ மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP) விகிதம் முறையே 31.9 சதவீதம், 31.6 சதவீதம் மற்றும் 31.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஜிடிபி தொடர் ஆச்சரியத்தை உருவாக்கவில்லை. இந்தக் கணக்கீடுகளில் புதிய தரவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பேரியல் பொருளாதார குறிகாட்டிகளின் மதிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், மதிப்பீடுகள் உண்மையில் பழைய தொடரில் முந்தைய மதிப்பீடுகளைவிட குறைவாக உள்ளன


புதிய தரவுத் தொகுப்புகள், புதிய விகிதங்கள் மற்றும் வீதங்கள் மற்றும் தர மேம்பாடு ஆகியவை முறைசாரா துறைக்கு முக்கியமானவை. பெருநிறுவன மற்றும் அரசுத் துறைகள் பற்றிய தரவு நியாயமான முறையில் சரியானது. ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் தரவு கிடைப்பதால், உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேவைகள் குறித்த விவசாயம் அல்லாத முறைசாரா துறை தொடர்பான தரவுகள் வழக்கமானவை அடிப்படையில் கிடைக்கின்றன.


பயிர் வெட்டும் கணக்கெடுப்பின் (crop-cutting surveys) அடிப்படையில் விவசாயத் தரவு நியாயமான முறையில் சிறப்பாக உள்ளது. மொத்த மதிப்புக் கூட்டுத்தாக்கத்தில் கிட்டத்தட்ட 40 சதவீத பங்களிப்பை வழங்கும் முறைசாரா துறை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் தொற்றுநோய் போன்ற பொருளாதாரத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களால் ஒப்பீட்டளவில் மோசமாக பாதிக்கப்பட்டதாக பொதுவாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக முறைசாரா துறை தரவுகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகைப்படுத்தப்பட்டது. எனவே, சமீபத்திய தரவுத் தொகுப்புகளைக் கருத்தில் கொண்டு, முக்கியமாக பேரியல் பொருளாதார குறிகாட்டிகளுக்கு அதன் பங்களிப்பை மீண்டும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தேசிய கணக்குகளின் பழைய மற்றும் புதிய தொடரில் முறைசாரா துறையின் முக்கிய அளவீடுகளை அட்டவணை சுருக்கமாகக் கூறுகிறது.


அட்டவணையிலிருந்து மூன்று கருத்துகளைக் குறிப்பிடலாம். முதலில், பெருநிறுவனத் துறை மற்றும் அரசுத் துறை போன்ற பிற துறைகளுடன் ஒப்பிடும்போது முறைசாரா துறை எந்த சரிவையும் கொண்டிருக்கவில்லை. உண்மையில், மொத்த மதிப்பு கூட்டலில் முறைசாரா துறை மற்ற துறைகளைவிட சிறப்பாக வளர்ந்துள்ளது. 2023-24 மற்றும் 2024-25-ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி முறையே 12.9 சதவீதம் மற்றும் 9.7 சதவீதம் ஆகும். இது பொருளாதார அளவிலான வளர்ச்சி 10.7 சதவீதம் மற்றும் 9.6 சதவீதமாக இருந்தது. புதிய தொடரில் மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) முறைசாரா துறையின் பங்கு பழைய தொடரைவிட அதிகமாக உள்ளது.


இரண்டாவதாக, முறைசாரா துறையில் மூலதன உருவாக்கம் பலவீனமாகவே உள்ளது. முறைசாரா துறைக்கு கிட்டத்தட்ட 38 சதவீதமாக இருந்த நிலையில், முறைசாரா துறையின் முதலீடு/மொத்த மதிப்பு கூட்டல் (GVA) விகிதம் 33-34 சதவீதமாக உள்ளது. பழைய மற்றும் புதிய தொடர் இரண்டிலும் இந்த நிலைமை ஒரே மாதிரியாக உள்ளது. நிலையான குறைந்த மூலதன தீவிரம் ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இரண்டு துறைகளுக்கும் இடையிலான இடைவெளி கடுமையான கடன் பாதிப்புகள் அல்லது நெரிசலைக் குறிக்கும் அளவுக்கு பெரியதாக இல்லை.


மூன்றாவதாக, மொத்த சேமிப்பில் முறைசாரா துறையின் பங்கு புதிய தொடரில் கடுமையாகக் குறைந்துள்ளது. இது 2022-23 இல் மட்டுமே குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டது. குறைந்து வரும் லாபம் காரணமாக இந்தத் துறை மன அழுத்தத்தை சந்திப்பது ஒரு சாத்தியமான காரணமாக அமைகிறது.


புதிய தொடர் வெளிப்படுத்துவது குறித்து


புதிய தரவுத் தொடர் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வெளியீடு மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு முறைசாரா துறையின் சரிவு குறித்த பொதுவான அச்சத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. முறைசாரா துறை, குறிப்பாக விவசாயம் அல்லாத பிரிவு, வலுவாக உள்ளது. இருப்பினும் உற்பத்தித்திறன் வளர்ச்சி மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்களுடன் சந்தைப்படுத்தல் கூட்டமைப்புகளும் இதற்குத் தேவை.


இரண்டாவதாக, இந்தத் தன்மை இருந்தபோதிலும், முறைசாரா துறையின் வளர்ச்சி குறித்து கூடுதல் வெளிப்பாடு தேவை. ஏனெனில், புதிய தொடர் குறிப்பிடுவது இணைக்கப்படாத நிறுவனங்களின் காலாண்டு ஆய்வுகளில் காணப்படும் வளர்ச்சிக்கு முரணானது.


மூன்றாவதாக, முறையான மற்றும் முறைசாரா துறைகள் இரண்டிற்கும் முதலீடு/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கிட்டத்தட்ட தேக்கமடைந்து வருவதால், விகிதத்தை அவற்றின் தற்போதைய நிலைகளுக்கு அப்பால் விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தேவை. பயன்படுத்தப்படாத உற்பத்தி திறன் சில குறுகியகால ஆதரவை வழங்கக்கூடும். இருப்பினும், புதுமை காரணமாக தயாரிப்பு சுழற்சிகள் குறைந்து வருகின்றன. இதன் விளைவாக, அதிகப்படியான திறன் இறுதியில் அழிக்கப்படலாம் அல்லது பயனற்றதாக மாறக்கூடும்.


மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட புதுமை மற்றும் மரபுத் தொழில்களுக்கான ஆதரவு பற்றி பேசப்படுகிறது. இருப்பினும், நிதிநிலை அறிக்கை இன்னும் அபாயங்கள் மற்றும் சவால்களை முழுமையாக மதிப்பிடவில்லை.


கோபாலன் முன்னாள் பொருளாதார விவகார செயலாளர், மற்றும் சிங்கி நிதி அமைச்சகத்தின் முன்னாள் மூத்த பொருளாதார ஆலோசகர் ஆவர்.

 

Original article : Informal sector growth holds up. -R Gopalan MC Singhi

Share:

நடப்பு கணக்கு பற்றாக்குறை (current account deficit) என்பது என்ன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

                                   நிலையற்றத் தன்மையின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் எரிசக்தி விலைகளில் கடுமையான உயர்வு ஆகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) ஒரு வாரத்தில் அதன் விலைகளில் 10 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏதேனும் ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் பல ஆண்டுகள் உச்சத்தை எட்டியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இந்த இராஜதந்திர பாதை நீண்டகாலத்திற்கு மூடப்பட்டிருந்தால், கச்சா எண்ணெய் விலைகள் மேலும் உயரக்கூடும். இதுபோன்ற சூழ்நிலை இந்திய ரூபாயை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.




இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதன் தாக்கங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை, விளைவுகள் கடுமையானவையாக இருக்கும். பலவீனமான ரூபாய் மதிப்பு, அதிகரித்துவரும் இறக்குமதி செலவுகள், அதிகரித்துவரும் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணவியல் கொள்கையின் மறுசீரமைப்பு சாத்தியக்கூறுகள் இப்போது பெரிய அளவில் உள்ளன. தொலைதூர புவிசார் அரசியல் மோதலாகத் தொடங்கியது, நாட்டிற்கு நேரடி பொருளாதார சவாலாக வேகமாக வளர்ந்து வருகிறது.



இந்திய நாணய மதிப்பு குறையும் போது, ​​முதல் மற்றும் உடனடி பாதிப்பு இறக்குமதிக்கான செலவு ஆகும். கச்சா எண்ணெய், மின்னணு பாகங்கள், உரங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்களில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதனால், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது, ​​அவற்றின் விலை மேலும் உயரும். பின்னர் சுமை படிப்படியாக வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு மாறுகிறது. இதனால், பணவீக்கம் உயர்கிறது மற்றும் மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்க அச்சுறுத்தல் இப்போது அதிகரித்து வருகிறது.


கச்சா எண்ணெய் விலையில் $1 அதிகரிப்பு இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி செலவை சுமார் $1.5–2 பில்லியன் உயர்த்துகிறது. இது மொத்த இறக்குமதி அளவைப் பொறுத்தது. இந்த அதிகரிப்பு நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (Current Account Deficit (CAD)) நேரடியாக விரிவுபடுத்துகிறது.


பணவீக்க தாக்கம் குறிப்பாக கவலை அளிக்கிறது. எண்ணெய் அதிக விலை கொண்டதாக மாறும்போது, ​​போக்குவரத்து செலவுகள், உற்பத்தி செலவுகள், தளவாட செலவுகளும் அதிகரிக்கும். இந்த அதிக செலவுகள் இறுதியில் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியாக இருப்பதால், இறுதியாக அவை நுகர்வோருக்கான சில்லறை விலைகளை உயர்த்துவதற்கு வழிவகுக்கும்.


மற்றொரு முக்கியமான பிரச்சினை வெளிநாட்டு மூலதனப் போக்கு (foreign capital flows) ஆகும். இந்திய சந்தைகளில் வர்த்தக நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் டாலர் அடிப்படையில் வருமானத்தை அளவிடுவதால், நிதிகள் திருப்பி அனுப்பப்படும்போது ரூபாய் மதிப்பு பலவீனமடைந்து அந்த வருமானத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) விற்பனை, பங்கு விலைகளில் அழுத்தம் மற்றும் சந்தை ஏற்ற இறக்கத்தையும் அதிகரிக்கிறது.


ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தில், நாணய மதிப்பு தேய்மானம் (currency depreciation) என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இது வர்த்தக சமநிலைகள், பெருநிறுவன வருவாய், பணவீக்க எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் உணர்வை பாதிக்கிறது. இதனால், கொள்கை வகுப்பாளர்கள் குறுகிய மற்றும் அதிகரித்துவரும் நிச்சயமற்ற சூழலில் செயல்பட வேண்டும்.


ரூபாய் மதிப்பு பலவீனமடையும்போது இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை நிலைகுலையச் செய்தாலும், அது ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்குகிறது. பல ஏற்றுமதி நிறுவனங்கள் டாலர்களில் தங்கள் வருவாயை ஈட்டும், அதே நேரத்தில், அவர்களின் செலவுகளில் கணிசமான பகுதியை ரூபாயில் செலுத்தும் நிறுவனங்களுக்கு, நாணய மதிப்பு தேய்மானம் ஒரு இயற்கையான பாதுகாப்பு (hedge) போல செயல்படுகிறது. ரூபாய் மதிப்பு பலவீனமாக மாறும்போது, அதன் மூலம் ஈட்டும் ஒவ்வொரு டாலரும் அதிக ரூபாயாக மாறுவதால் இது சாத்தியமாகிறது. ஆனால், நாணய இயக்கங்களில் சில நிலைத்தன்மை இருந்தால் இவை அனைத்தும் செயல்படும்.


இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்பச் சேவை (IT services) நிறுவனங்களானது, மருந்து ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறப்பு இரசாயன உற்பத்தியாளர்கள் முக்கிய பயனாளிகளில் அடங்குவர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிறுவனங்கள், பொதுவாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டாலர்கள் அல்லது யூரோக்களில் கட்டணம் (bill) மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரத்தில், ஊழியர் செலவுகள் மற்றும் பெரும்பாலான இயக்க செலவுகள் பெரும்பாலும் இந்தியாவிற்குள் செலுத்தப்படுகின்றன. எனவே, ஒரு சாதகமான ரூபாய், அளவுகளில் உடனடி மாற்றம் இல்லாமல் லாபத்தை அதிகரிக்கிறது. உலகளாவிய தேவை சீரற்றதாக இருக்கும் சூழலில், நாணய ஆதரவு சரியான நேரத்தில் வருவாய் இருப்பை வழங்க முடியும்.


குறிப்பாக தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை, மாற்று விகிதத்தின் பின்னடைவு ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைவான வாடிக்கையாளர் செலவினங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான முன்னேற்றங்களால் ஏற்படும் இடையூறுகளையும் கையாள்கின்றன. ரூபாய் மதிப்பிலான வருவாயை உயர்த்துவதன் மூலம் பலவீனமான ரூபாய் மதிப்பு, காலாண்டு நிதி முடிவுகளை உறுதிப்படுத்தவும், சமீபத்தில் சரிந்த பங்கு விலைகளுக்கு இது ஆதரவளிக்கவும் உதவும்.


மருந்து ஏற்றுமதியாளர்களும் (Pharmaceutical exporters) சிறந்த வருவாய் மூலம் பயனடையலாம். அமெரிக்கா போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில், லாபம் ஈட்டக்கூடும். உள்நாட்டுச் செலவுகள் நிலையானதாக இருந்தால், நீண்டகால உலகளாவிய ஒப்பந்தங்களைக் கொண்ட சிறப்பு இரசாயன நிறுவனங்கள் லாப வரம்புகள் அதிகரிக்கக்கூடும். பங்குச் சந்தைகளில், இத்தகைய நாணயத்தால் இயக்கப்படும் வருவாய்கள் பெரும்பாலும் துறைசார் சுழற்சியைத் தூண்டுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மற்ற துறைகளிலிருந்து ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு மாற்றலாம்.


அதிகரித்து வரும் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. விலை அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, ​​குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யிலிருந்து, மத்திய வங்கியின் கொள்கை நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கிறது. பணவீக்க எதிர்பார்ப்புகள் நிலையற்றதாக மாறுவதைத் தடுக்க, வட்டி விகிதங்களை நீண்டகாலத்திற்கு அதிகமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் அல்லது கூடுதல் விகிதங்களை உயர்த்துவதைக்கூட பரிசீலிக்கலாம். இத்தகைய நிலைப்பாடு, பெரிய பொருளாதார நிலைத்தன்மைக்கு அவசியமானதாக இருந்தாலும், தவிர்க்க முடியாமல் பொருளாதாரம் முழுவதும் கடன் செலவுகளை உயர்த்துகிறது.


மேலும், வட்டி விகிதங்கள் உயர்ந்தால், கடன் வாங்குவது மிகவும் விலை உயர்ந்ததாக மாறும். அதிக விலை கொண்ட கடனானது பொதுவாக நுகர்வோர் செலவினங்களைக் குறைத்து, இது புதிய முதலீட்டையும் குறைக்கிறது. இதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சியின் வேகம் மேலும் பலவீனமடையக்கூடும். பங்குச் சந்தைகள் வலுவான பணப்புழக்கம் மற்றும் வளர்ச்சிக்கான தெளிவான வாய்ப்புகளைச் சார்ந்துள்ளது. இந்த சந்தைகளும் அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும். இறுக்கமான பண நிலைமைகள் நிறுவன வருவாய் மற்றும் மதிப்பீடுகளில் சுமையை ஏற்படுத்துவதால் அழுத்தத்தை உணரக்கூடும்.


கச்சா எண்ணெய் விலைகள் அதிகமாக இருந்தால் மத்திய வங்கி அதன் பணவீக்க கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். பிப்ரவரியில், ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கத்தை 2026 நிதியாண்டில் 2 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து 2.1 சதவீதமாக திருத்தியது. இப்போதைக்கு, அரசாங்கமோ அல்லது எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களோ சில்லறை எரிபொருள் விலையில் உயர்வு எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், எரிபொருள் விலையில் தற்போதைய கட்டுப்பாடு நீண்டகாலம் நீடிக்காது. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கக்கூடும். பணவியல் கொள்கையில் முடிவுகளை எடுக்கும்போது மத்திய வங்கிக்கு இது மற்றொரு சிரமத்தை சேர்க்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஈரான் மற்றும் ஓமன் இடையேயான குறுகிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), உலகளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து நெருக்கடிப் பாதையாகக் (chokepoint) கருதப்படுகிறது. இது உலகளாவிய திரவ பெட்ரோலிய நுகர்வு மற்றும் உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquefied natural gas (LNG)) வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளுகிறது.


Share:

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் முக்கிய அம்சங்கள் என்ன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— சமீபத்தில், இந்தியாவின் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வை குறைபாடுள்ள மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மக்கள் வீடியோ பொழுதுபோக்குகளை அணுகுவதற்கான உரிமை குறித்து ஏமாற்றத்தை சந்தித்தனர்.


அக்டோபர் 2025-ல், காது கேளாமை மற்றும் பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு OTT உள்ளடக்கத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting’s (MIB)) முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை மாற்றுத்திறனாளி உரிமைகள் சமூகம் வரவேற்றது.


இரண்டு முக்கிய விஷயங்கள் நம்பிக்கை அளித்தன. முதலாவதாக, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள், அனைத்து புதிய OTT உள்ளடக்கமும் குறைந்தது இரண்டு அணுகல் அம்சங்களைக் கொண்டிருக்கும்: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான தலைப்புகள் அல்லது இந்திய சைகை மொழி (Indian Sign Language (ISL)) மற்றும் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கான ஒலிப்பதிவு விளக்கமாகும்.


இரண்டாவதாக, தற்போதுள்ள உள்ளடக்கத்திற்கு, OTT-கள் அணுகல்தன்மை அம்சங்களை 12 மாதங்களுக்குள் 30%-ஆகவும், 18 மாதங்களுக்குள் 60%-ஆகவும், 24 மாதங்களுக்குள் 100%-ஆக பயன்படுத்துவதற்கான  வாய்ப்புகளை வழங்கும்.


வழிகாட்டுதல்களின் அறிவிப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு விசாரணைக்கு ஒரு நாள் முன்பு, இந்த ஏமாற்றம் ஏற்பட்டது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இரண்டு முக்கிய மாற்றங்களுடன் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. முன்மொழியப்பட்ட ஆறு உள்ளடக்கங்களிலிருந்து, அனைத்து புதிய உள்ளடக்கத்தையும் அணுகக்கூடியதாக மாற்ற OTT-கள் 36 மாதங்கள் அவகாசம் அளிக்கும். தற்போதுள்ள உள்ளடக்கத்திற்கு, சிறந்த முயற்சி அடிப்படையில் பயன்படுத்துவதற்கான  வாய்ப்புகளை வழங்க OTT-கள் ஊக்குவிக்கப்பட்டன.


இந்த தளர்வுகளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட விதிகள் சிறிய OTT தளங்களை பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. அவை தானியங்கி கருவிகள் அல்லது பெரிய உலக தளங்களிடம் உள்ள நிதிநிலை அறிக்கை இல்லாததால் ஏற்பட்டது.


— இது உண்மையெனில், பெரிய OTT நிறுவனங்கள் முன்னிலை பெற்றிருக்க முடியும். JioHotstar, Netflix மற்றும் Amazon Prime Video போன்றவை இணைந்து இந்தியாவில் 67 சதவீத OTT சந்தை பங்கைக் கொண்டுள்ளன.


தானியங்கி கருவிகளைப் பொறுத்தவரை, இந்தியா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை நடத்தியது. அங்கு இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சர்வம் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை மாதிரி இடம்பெற்றது. செலவு குறைந்த மொழிப் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு விரைவாக தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், அணுகல் அம்சங்களை காணொளிப் பதிவு உள்ளடக்கத்தில் ஒருங்கிணைப்பது இனி பெரிய சுமையாக இருக்காது.


OTT தளங்களும் அவற்றின் சுய ஒழுங்குமுறை அமைப்புகளும் மாற்றுத்திறனாளிகளை (persons with disabilities (PwDs)) அதிகமாக சேர்க்கலாம். சரியான செயலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அணுகக்கூடிய உள்ளடக்கம் எழுத்தறிவு மற்றும் மொழித் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் மதிப்பைச் சேர்க்கலாம். இந்தியாவில் OTT-களுக்கான மிகப்பெரிய வளர்ச்சி  ஊரகப் பகுதிகளில் உள்ளது. மேலும், வெற்றி பெறும் நிறுவனங்கள் கல்வி நோக்கங்களுக்கும் பயன்படும் பொழுதுபோக்கையும் வழங்குவார்கள்.


உங்களுக்குத் தெரியுமா?


ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் மாற்றுத்திறனாளிகளின் முழு பங்கேற்பு மற்றும் சமத்துவம் குறித்த (Proclamation on the Full Participation and Equality of People with Disabilities in the Asian and Pacific Region) பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக 1995-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், இது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஆல் மாற்றப்பட்டது. இது 2007-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மாநாட்டை (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) இந்தியா அங்கீகரித்ததைத் தொடர்ந்து வந்தது.


 2016-ஆம் ஆண்டு சட்டம் மூன்று முக்கிய வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. முதலாவதாக, இது ஒரு குறுகிய, மருத்துவமயமாக்கப்பட்ட இயலாமை கட்டமைப்பிலிருந்து சமூக-மருத்துவ மாதிரியாக மாறியது.  இது சமூகத் தடைகள் ஒரு குறைபாடு மட்டுமல்ல அது பங்கேற்பை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை அங்கீகரிக்கிறது.


 இரண்டாவதாக, 1995-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ்  7 குறைபாடுகளிலிருந்து தகுதியை 21 குறைபாடுகளின் விரிவான தொகுப்பாக விரிவுபடுத்துவதன் மூலம் சட்டப் பாதுகாப்பின் நோக்கத்தை இது விரிவுபடுத்தியது.


மூன்றாவதாக, இது ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) மாநாட்டுடன் இணக்கமான செயல்படும் உரிமைகள் அடிப்படையிலான சொற்களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியது. நலத்திட்டங்கள் சார்ந்த சொற்களை (welfare-oriented terminology) சமத்துவம், கண்ணியம் மற்றும் முழுப் பங்கேற்புக்கான கட்டாய உத்தரவாதங்களுடன் மாற்றியது.


Original article : What are the key features of the RPwD Act, 2016? -Khushboo Kumari, Roshni Yadav

Share:

கல்வி : வலுவான அடித்தளம், நிலையான விரிவாக்கம் மற்றும் சில குறிப்பிடத்தக்க அறிகுறிகள் -டி. சுரேஷ் குமார்

 பல தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் உலகளாவிய கல்வி மையங்களாக மாறியுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈர்க்கின்றன. நவீன கட்டமைப்புகள் மற்றும் மேம்பட்ட ஆய்வகங்கள், தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய தரத்தில் அவை உள்ளன.


ஒரு வெற்றிகரமான மரபு என்பது ஒருவர் விட்டுச் சென்றப் பாதையை பொறுத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அவரை பின் தொடர்பவர் அதிலிருந்து எதை உருவாக்குகிறார் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு தமிழ்நாட்டின் அறிவுப் பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கும். இன்று, நவீன கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளம் முதன்முதலில் ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னையில் உருவாக்கப்பட்டது. பின்னர், சமத்துவம் மற்றும் அணுகல் கொள்கைகளில் வேரூன்றிய நீதிக் கட்சியின் பகுத்தறிவு மற்றும் எதிர்காலக் கொள்கைகளால் அவை வலுப்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு மாநில அரசாங்கங்கள் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி, அதிகமான மக்களைச் சென்றடைய கல்வியை விரிவுபடுத்தின. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அரசியல் அதிகாரம் பல முறை மாறியிருந்தாலும், கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட தொடர்ச்சி, வளர்ந்துவரும் அறிவுத் துறையில் தமிழ்நாடு ஒரு வலுவான நிலையை அடைய உதவியது.


300-வருடங்களுக்கு முன்பு, ஆசியாவின் முதல் ஆங்கில வழிப் பள்ளி (English-medium school) சென்னையில் நிறுவப்பட்டது. 1715 ஆம் ஆண்டில், ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜில் உள்ள செயிண்ட் மேரி தேவாலயத்தின் மதகுருவான ரெவரெண்ட் வில்லியம் ஸ்டீவன்சன், 12 பெண்கள் உட்பட ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுடன் செயிண்ட் மேரி தேவாலய அறக்கட்டளைப் பள்ளியைத் தொடங்கினார். அடுத்த 100 ஆண்டுகளில், இந்த நிறுவனம் மாநிலத் தலைநகரின் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது. 1954-ஆம் ஆண்டில், இது செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் என மறுபெயரிடப்பட்டது. பின்னர், கிறிஸ்தவ மிஷனரிகள் மாநிலம் முழுவதும் இதேபோன்ற பல பள்ளிகளைத் தொடங்கினர். இது ஆங்கிலோ-சாக்சன் பள்ளிக் கல்வியை முன்கூட்டியே பெறுவதற்கான தளத்தை  உருவாக்கியது.


உயர்கல்வியைப் பொறுத்தவரை, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு முன்பே சென்னையில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியின் வருகை முக்கியத்துவம் பெற்றது. உண்மையில், ஐரோப்பாவிற்கு வெளியே முதல் தொழில்நுட்பப் பள்ளி 1794-ஆம் ஆண்டிலேயே சென்னையில் நிறுவப்பட்டது. மைக்கேல் டாப்பிங், ஒரு ஆதரவற்ற இல்லத்திலிருந்து  8 மாணவர்களுடன் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜில் சர்வே பள்ளியை நிறுவினார். இந்த நிறுவனம் இறுதியில் உலகளவில் புகழ்பெற்ற கிண்டி பொறியியல் கல்லூரியாக (College of Engineering, Guindy (CEG)) உருவாகியது. இது பின்னர் 1978-ல் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு முக்கியப் பகுதியாக மாறியது.


அதேபோல், 1835-ஆம் ஆண்டு அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டி. மோர்டிமர் அவர்களால் நிறுவப்பட்டஒரு தனியார் மருத்துவப் பள்ளியைத் தொடங்கினார். முதலில் மெட்ராஸ் மருத்துவப் பள்ளியாக மாறியது. பின்னர், 1850-ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியாக மாறியது. புகழ்பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக  மாறினார். மேலும், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையையும் அவர்  பெற்றார்.


சர்வே பள்ளி உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸின் ஆளுநராக இருந்த லார்ட் எல்பின்ஸ்டன், மெட்ராஸில் ஒரு மத்திய கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை அமைக்க பரிந்துரை செய்தார். இந்த யோசனை 1840-ஆம் ஆண்டில் மெரினா கடற்கரையில் மாநிலக் கல்லூரியை உருவாக்கியது. இது நோபல் பரிசு வென்ற சி.வி. ராமன் மற்றும் சுப்பிரமணியன் சந்திரசேகர் உள்ளிட்ட புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து, கல்கத்தா மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள், செப்டம்பர் 1857-ல் மெட்ராஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.


பாரம்பரிய படிப்புகளைத் தாண்டி, இந்தியாவின் முதல் வேளாண் பள்ளி தமிழ்நாட்டில் 1868-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கோயம்புத்தூரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமாக பின்னர் மாறியது.


மாணவர் தக்கவைப்பு உத்திகள்


இருப்பினும், நிறுவனங்களை அமைப்பது மட்டுமே போதுமான நடவடிக்கையாக இருக்காது. மாணவர்களை ஈர்க்கவும், தங்கவைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். 105 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சித் தலைவர் சர் பி. தியாகராய செட்டி தலைமையிலான சென்னை மாநகராட்சி, ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் சிரமங்களை எதிர்கொண்டதை உணர்ந்து, ஒரு புதிய திட்டத்தை முன்னோடியாக அறிமுகப்படுத்தியது. 1920-ஆம் ஆண்டு நவம்பர்  மாதத்தில், மெட்ராஸ் மாநகராட்சி  குழு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியின் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 பைசாவுக்கு  குறையாமல் காலை உணவு வழங்கும் திட்டத்தை முன்மொழிந்தது. மாணவர்களுக்கு "சிந்தனைக்கு உணவு" (food for thought) கொடுத்து அவர்களைப் பள்ளியில் தக்கவைத்துக்கொள்வதே இதன் குறிக்கோளாக இருந்தது. பின்னர், இந்தத் திட்டம் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. 1922–23-ல் 811-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 1924–25ல் 1,671-ஆக அதிகரித்தது.


தென் மாநிலங்களின் போட்டிக்கு மத்தியில் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் எவ்வாறு நிறுவப்பட்டது


1956-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​மாநிலம் முழுவதும்  ஊரக பகுதிகளில் பள்ளிகளைத் திறப்பதில் முக்கிய பங்கு வகித்த முதல்வர் கே. காமராஜ் இந்த திட்டத்தை முன்மொழிந்தார். அவர் இலவச மதிய உணவுத் திட்டத்தை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினார். இதன் மூலம் 1,300 உணவு மையங்கள் மூலம் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு 65,000 குழந்தைகள் பயனடைந்தனர். எம்.ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அடுத்தடுத்த ஆட்சிகள் மதிய உணவில் முட்டை மற்றும் சத்தான  தானிய வகைகளைச் சேர்ப்பதன் மூலம் மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்தின. இந்த மாற்றங்கள் மாணவர்களை ஈர்ப்பதற்கும், பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்கும் இந்தத் திட்டத்தை ஒரு வெற்றிகரமான மாதிரியாக மாற்றியது. பின்னர், மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தைப் பின்பற்றி தொடங்கின. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு சரியான நேரத்தில் சத்தான உணவை வழங்க  இயலாத தாய்மார்களின் சுமையைக் குறைக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின்கீழ் செயல்பட்டுவரும் அரசாங்கம், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


அரசியல் மற்றும் கல்விக் கொள்கை


திராவிட இயக்கத்தால் வழிநடத்தப்பட்ட பிராந்திய அடையாள அரசியலும் கல்வித் துறையில் எதிர்பாராத நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1937-ஆம் ஆண்டிலேயே, வட இந்தியாவின் முக்கிய மொழியான இந்துஸ்தானியை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று சி. ராஜகோபாலாச்சாரி கூறினார். அவர் பதவி விலக நீதிக் கட்சி ஒரு போராட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கை இறுதியில் 1940-ல் திரும்பப் பெறப்பட்டது. பின்னர், 1960-களின் நடுப்பகுதியில், இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் மக்கள்  போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த இயக்கத்தின் விளைவாக 1968-ல் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரையின் கீழ் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிப்பதை இந்தக் கொள்கை கட்டாயமாக்கியது. இந்த கொள்கையின் விளைவாக, ஆங்கிலப் புலமை அதிகரித்தது. இது உலகளாவிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளின் முக்கிய சக்தியாக மாறியது. இன்றுவரை, தமிழ்நாட்டின் அரசாங்கங்களும் முக்கிய அரசியல் கட்சிகளும் இருமொழிக் கொள்கையை மாற்றவில்லை. ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கும் உறுதியான முயற்சிகளை, ஒன்றிய-மாநில பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதி விநியோகத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், தமிழ்நாடு அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

1980-களின் நடுப்பகுதியில், தமிழ்நாட்டில் உயர்கல்வியில், குறிப்பாக பொறியியலில் தனியார்மயமாக்கல் தொடங்கியது. எம்.ஜி. ராமச்சந்திரன் அரசாங்கம் அரசியல் ரீதியாக தொடர்புடையவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்தபோது, இது காலப்போக்கில் கல்விக்கான பொதுநிதியைக் குறைக்கக்கூடும் என்றும் ​​பலர் அதை ஒரு ஆபத்தான நடவடிக்கையாகக் கருதினர். இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பொருளாதாரத்தை மாற்றியமைத்தபோது, ​​ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியமானதாக இருந்த அதே தனியார் பொறியியல் கல்லூரிகள்தான் தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான தகுதிவாய்ந்த மனித வளங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்தன. பொறியியல் கல்விக்கான அணுகல் குடும்பங்களுக்கு அதிக செலவில் கிடைத்தாலும், இன்று பல சமூகரீதியாக பின்தங்கிய, நடுத்தர வர்க்க மற்றும்  ஊரக பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்கள் அமெரிக்காவிலோ அல்லது பிற நாடுகளிலோ பணிபுரியும் ஒரு குடும்ப உறுப்பினரைப் பற்றி பெருமை கொள்ளும்  ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


 காலம்காலமாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த குடும்பங்கள்  வளர்ச்சியடைய பல காரணிகள் உதவின. முதலில் நீதிக் கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களின் திராவிட இயக்கத்தை பின்தொடர்ந்தவர்கள் கல்வி குடும்ப தொழில் அல்ல என்றும் அதை முன்னேற்றத்தின் உண்மையான கருவி என்ற நம்பிக்கையால் முன்னோடி ஆக மாறி சமூக வர்த்தக ஒதுக்கீட்டுக் கொள்கைகளை விரிவுபடுத்தினர். பொதுப் பணிக்கான முதல் வகுப்புவாத இடஒதுக்கீடு அரசு ஆணை 100 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வெளியிடப்பட்டது. காலப்போக்கில், மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கொள்கை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்று, தமிழ்நாடு சமூகரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு 69% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. முஸ்லிம்கள் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் இருப்பவர்கள்) மற்றும் அருந்ததியர்களுக்கு (பட்டியல் சாதியினருக்குள்) துணை ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்குப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பின்தங்கிய இளைஞர்களுக்கு உதவுகிறது.


இரண்டாவதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோக்கிய முடிவு புதிய பட்டதாரிகளை கையாளும் வேலைவாய்ப்பு சந்தையை விரிவுபடுத்தியது. இந்த காலகட்டத்திலே தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Industrial Development Corporation (TIDEL)) உருவாக்கப்பட்டது. மூன்றாவதாக, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் (2001-06) அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இ.பாலகுருசாமியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வேலைவாய்ப்புத் திட்டம், தனியார் துறை வேலைவாய்ப்புக்கான அணுகலை விரிவுபடுத்தியது. இந்தத் திட்டம் மாநிலம் முழுவதிலுமிருந்து வேலை தேடுபவர்களை ஒன்றிணைத்து, நகரத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இருந்து மட்டுமே பணிகளை பெறும் சீரற்ற நிறுவன ஆட்சேர்ப்பு நடைமுறையை மாற்றியது.


முக்கியப் போட்டியாளர்களான திமுக மற்றும் அதிமுக இடையேயான போட்டி அரசியல், ஆட்சி மாற்றங்களின் போது சில வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துவதற்கு வழிவகுத்தாலும், கல்வித் துறை இதுபோன்ற இடையூறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு,  சில நேரங்களில் பின்னடைவுகளை மட்டுமே கண்டது. ஒவ்வொரு அரசும் தனது குறியீட்டை பதிப்பதாக செயல்படுவதால், தமிழ்நாடு இன்று பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களை கொண்டுள்ளது. இவை கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், இசை, மீன்பிடி, ஆசிரியர் கல்வி, திறந்த கல்வி மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்த  கல்வியை வழங்குகின்றன.




உயர்கல்வியை வலுப்படுத்துதல்


தற்போது, ​​தமிழ்நாட்டில் 22 மாநில பல்கலைக்கழகங்கள், இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள், 29 தன்னாட்சி அதிகாரம் பெற்ற  பல்கலைக்கழகங்கள் மற்றும்  8 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. பல தன்னாட்சி அதிகாரம் பெற்ற  பல்கலைக்கழகங்கள் உலகளாவிய மையங்களாக உருவாகியுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈர்க்கின்றன. தேசிய நிறுவனங்களுடன் போட்டியிடும் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வகங்கள் உள்ளன.


ஜூலை 01, 1982 அன்று திருச்சி மாவட்டத்திற்கு அருகிலுள்ள பாப்பாக்குறிச்சியில் குழந்தைகளுக்கான சத்தான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில், அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு பெண்ணுக்கு உணவு வழங்கினார்.


2006 முதல் 2011 வரை தலைமையில் கருணாநிதி ஆட்சி தனியார்மயமாக்கல் நடவடிக்கையில் இருந்து விலகியது. மாவட்டங்களில் கூடுதல் அரசு பொறியியல் கல்லூரிகளை நிறுவுவதில் மாநிலம் முதலீடு செய்தது. இதேபோல், 2017 முதல் 2021 வரையிலான காலம் மருத்துவ ஆர்வலர்களுக்கு நல்லகாலம் என்று நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  ஒன்றிய  அரசின் ஆதரவுடன் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினார்.


இந்த தொடர்ச்சியான கொள்கை தலையீடுகள் மொத்த சேர்க்கை விகிதத்தில் (Gross Enrolment Ratio (GER)) தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க முக்கியக் காரணியாக அமைந்தது. மாநிலத்தில் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த இலக்கை இந்தியா 2035-ஆம் ஆண்டுக்குள் அடைய திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தில் 50%-க்கும் அதிகமாக உள்ளது. அரசு தொடர்ந்து பின்தங்கிய மாணவர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கிறது. புதுமைப் பெண் (Pudhumai Penn) மற்றும் தமிழ்ப் புதல்வன் (Tamil Pudhalvan Scheme) திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பிறகு, கல்லூரிகளில் சேர்ந்த பெண்கள் மற்றும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ஸ்டாலின் அரசாங்கம் இப்போது மாதந்தோறும் ரூ. 1,000 செலுத்துகிறது.


சீர்திருத்தத்தில் உள்ள இடைவெளிகள்


இந்த நூற்றாணடின் தொடக்கத்தில், தமிழ்நாடு முன்னேற்பாடான செயல்பாடு அடிப்படையிலான கற்றல் முறையின் (Activity-Based Learning) வெற்றிகரமான மாதிரியை அறிமுகப்படுத்தியது. மேலும், பள்ளி கல்வியின் தரத்திலுள்ள வேறுபாடுகளை குறைக்க மாநிலப் பல்கலைக்கழக வாரியம், தனியார் பள்ளிகள் வாரியம், ஆங்கில-இந்திய வாரியம் மற்றும் ஆரியென்டல் பள்ளி வாரியம் ஆகியவற்றை ஒற்றுமை பள்ளிக் கல்வி முறை (Uniform System of School Education (USSE)) போன்றவைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பு இணைத்தது. இது பொதுவாக சமச்சீர் கல்வி (Samacheer Kalvi) என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த சீர்திருத்தம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. CBSE பள்ளிகளின் எண்ணிக்கை முன்னர் 100-க்கும் குறைவிருந்தது, இன்று 1,750-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும், சில ஆரம்பகால CBSE பள்ளிகள் ICSE மற்றும் IB/Cambridge வாரியங்களுக்கு மாறிவிட்டன. இதனால் ஒற்றுமை பள்ளிக் கல்வி முறையின் நோக்கம் புதிய அடையாளக் குறியிடு மற்றும் உணரப்பட்ட தரத்தின் வேறுபாடுகளால் பலவீனமடைந்துள்ளது. காலப்போக்கில், ஒற்றுமை பள்ளிக் கல்வி முறை (Uniform System of School Education (USSE)) அல்லாத பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதால், இது பணக்கார மற்றும் ஏழை மாணவர்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். அரசுப் பள்ளிகள் மற்றும் ஒற்றுமை பள்ளிக் கல்வி முறை வலுப்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் பதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்குவிக்கப்படவேண்டும். மேலும், கூடுதல் கற்பித்தல் அல்லாத கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தற்போதைய தேர்வு முறை மனப்பாடம் மற்றும் மதிப்பெண்களில் அதிக கவனம் செலுத்துகிறது. மேலும், ஒரு குழந்தையின் உண்மையான திறன்களை அளவிடுவதற்கு முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. கல்வித் திறன்களுடன், ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்த அவர்களின் அறிவுசார் வளர்ச்சியயும் வளர்க்க வேண்டும்.


இதேபோல், உயர்கல்வியில், சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட பல மாநிலப் பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றன. நியமன நடைமுறைகள் தொடர்பாக செயலகத்திற்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே நீடித்த தகராறு காரணமாக, 12 பல்கலைக்கழகங்கள் தற்போது துணைவேந்தர்கள் இல்லாமல் உள்ளன. நடந்து வரும் வழக்குகள் மற்றும் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுகள் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. மாநிலத்தில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில சுயாட்சியைப் பின்தொடர்வது, திறமையான கல்வித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதை விட, அரசியலாக மாறியுள்ளது. நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, பல மாநிலப் பல்கலைக்கழகங்கள் நிரூபிக்கப்பட்ட கல்வித் தொலைநோக்குப் பார்வை கொண்ட அனுபவம் வாய்ந்த அறிஞர்களால் வழிநடத்தப்படுவதற்குப் பதிலாக அரசியல்ரீதியாக இணைக்கப்பட்டவர்களால் வழிநடத்தப்படுகின்றன.


மேலும், படிப்புகள், தேர்வு கட்டமைப்புகள் மற்றும் கட்டண ஆட்சிகளை தீர்மானிப்பதில் பல்கலைக்கழகங்களுக்கு போதுமான அதிகாரம் வழங்ப்படவில்லை. கல்லூரிகளின் கல்வியின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு கொள்கைகள் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், பல அரசாங்கங்கள் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரிகள், தரநிலைகளைக் குறைப்பதன் மூலம் தேர்ச்சி விகிதங்களை உயர்த்த அழுத்தம் கொடுத்துள்ளன. மாணவர்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் பலர் வேலைகளைப் பெறுவதற்கான திறன்கள் இல்லாமல் பட்டம் பெரும் சூழல் உருவாகும். இது சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை உருவாக்குகிறது. பல்கலைக்கழகங்களுக்கு வலுவான, அர்ப்பணிப்புள்ள தலைவர்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை நடத்த உண்மையான சுதந்திரம் தேவை. அரசாங்கத்தின் தலையீடு குறைவாக இருந்தால், உயர்கல்விக்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.


மாநில அரசு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ சரியாக எதிர்த்தாலும், உயர்கல்விக்கான விரிவான கொள்கையை மாநில அரசு இன்னும் உருவாக்கவில்லை. பள்ளிக் கல்விக் கொள்கை தேசிய கட்டமைப்பிலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உயர்கல்வி கொள்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்கலைக்கழகங்களையும் மாணவர்களையும் தெளிவான இலக்கு இல்லாமல் செய்துள்ளது. இந்த இடைவெளியை சரிசெய்வது மிகவும் முக்கியம்.


தமிழ்நாடு, ஒரு வலுவான மற்றும் பெருமைமிக்க கல்வி வரலாற்றைக் கொண்டுள்ளது.  கல்வியில் அதன் தலைமையைப் பராமரிக்கவும் வலுப்படுத்தவும் தொடர்ச்சியான புதுமை, புதுப்பித்தல் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை.


இந்தக் கட்டுரை தி இந்து இதழின் "தமிழ்நாட்டின் முன்னேற்றம்: சமூக சமத்துவத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி" என்ற மின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.


Original article : Education: Strong foundation, steady expansion, and some striking signals -D. Suresh Kumar

Share:

இந்தியா - கனடா இடையிலான யுரேனியம் ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் அணுசக்தித் திட்டம். -வாசுதேவன் முகுந்த்

 இந்தியா தனது அணுசக்தித் தேவைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தையே அதிகளவில் சார்ந்துள்ளது. தற்போது இந்தியாவின் பொதுப் பயன்பாடு தேவையில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கு இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.


இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, மார்ச் மாதம் 2-ஆம் தேதி  கனடாவின் ‘Cameco’ நிறுவனத்துடன் 2.6 பில்லியன் கனடிய டாலர் (CAD) மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2027-ஆம் ஆண்டு முதல் 2035-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 10,000 டன் யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்க அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.



இந்தியாவிடம் என்னென்ன யுரேனியம் 'இருப்பு' உள்ளது?


இந்தியாவில் உள்நாட்டு இருப்பு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியம்  கையிருப்பு என இரண்டும் உள்ளன. நாட்டின் உள்நாட்டு இருப்புகளில் சுமார் 4.2–4.3 லட்சம் டன்கள் தாதுக்கள் உள்ளன. இவை முக்கியமாக ஜார்க்கண்டில் உள்ள ஜடுகுடா (Jaduguda) மற்றும் துராம்திஹ் (Turamdih) சுரங்கங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தும்மலப்பள்ளியிலும் (Tummalapalle) அமைந்துள்ளன. இந்தத் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய யுரேனியம் உலோகத்தின் அளவு 76,000–92,000 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தாது மற்றும் உலோக உற்பத்தி அளவுகளில் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டிற்கு, இந்தியத் தாதுவின் குறைந்த தரம் (0.02–0.45% செறிவு) தான் முக்கியக் காரணமாகும். இதற்கு நேர்மாறாக, கனடா உயர் ரகத் தாதுவைக் கொண்டுள்ளது, இது இந்தியத் தாதுவை விட 10 முதல் 100 மடங்கு வரை அதிகச் செறிவு மிக்கது. மேலும், ‘Cameco’ நிறுவனம் உலகளவில் யுரேனியம் உற்பத்தியில் (அளவின் அடிப்படையில்) முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஒரு முன்னணி நிறுவனமாகக் கூறப்படுகிறது. 


இந்தியா தனது பொதுப் பயன்பாட்டு எரிபொருள் தேவையில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இதற்காக, கனடாவின் ‘Cameco’ நிறுவனத்துடனான ஒப்பந்தம் தவிர, கஜகஸ்தானின் ‘Kazatomprom’ நிறுவனத்துடனும் இந்தியா விநியோக ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யாவுடன் (இவை இரண்டும் குறைந்த மற்றும் நடுத்தர ரகத் தாதுக்களை வழங்குகின்றன) ஏற்கனவே விநியோக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, ஐந்து ஆண்டுகளுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கான ஒரு கையிருப்பு மையத்தையும் அரசு உருவாக்கி வருகிறது.


யுரேனியம் தாதுவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது அதைச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுப்பதைவிட மலிவானது, ஆனால் அந்த இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை சட்டப்பூர்வமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்த முடியாது. அதனால்தான், இந்தியா தனது சொந்த நாட்டிற்குள்ளும் யுரேனியம் தாதுவைச் சுரங்கம் மூலம் வெட்டி எடுத்து வருகிறது. 

இந்த ஒப்பந்தத்தில் 2010-ஆம் ஆண்டு ஒப்பந்தம் சேர்க்கப்பட்டுள்ளதா?


‘Cameco’ நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், இந்தியா-கனடா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்கீழ் (Nuclear Cooperation Agreement (NCA)) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டில், இந்தியா-அமெரிக்கா இடையிலான 123 அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக, அணுசக்தி விநியோகக் குழு (Nuclear Suppliers Group (NSG)) இந்தியாவிற்கு வழங்கிய நிபந்தனையற்ற விலக்கிற்கு (clean waiver) பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2010-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது. 


கஜகஸ்தானுடனான ஒப்பந்தத்தைப் போலன்றி (அது குறைவான தலையீடுகளைக் கொண்டது), கனடாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Nuclear Cooperation Agreement (NCA)), இந்தியா தனது "அணுப் பிளவு பொருட்களின் கணக்குகளை" கனடாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மையைச் சீர்குலைப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.


மறுபுறம், இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Nuclear Cooperation Agreement (NCA)) விமர்சிக்கப்படுகிறது: அதாவது, பொதுப் பயன்பாட்டிற்காக இந்தியா எவ்வளவு அதிகப்படியான யுரேனியத்தை இறக்குமதி செய்கிறதோ, அவ்வளவு அதிகமாகத் தனது உள்நாட்டு யுரேனியத்தை ராணுவத் தேவைகளுக்காகச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதே அந்த விமர்சனமாகக் கூறப்படுகிறது. 


இந்தியா தனது யுரேனியத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது?


இந்தியா தற்போது சுமார் 9 ஜிகாவாட் (Giga Watt (GW)) மொத்தத் திறனுடன் 24 அணு உலைகளை இயக்கி வருகிறது. இதில் 6 முதல் 7 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, இந்தியாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் சுமார் 3 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 700 மெகாவாட் (Mega watt (MW)) அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (pressurised heavy water reactors (PHWRs)), யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் அணுசக்தித் திறனை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அணுசக்தியை விரிவாக்கம் செய்வதற்கான முந்தைய முயற்சிகள், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் உள்ளூர் மக்களின் போராட்டங்கள் காரணமாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளன.


டிராம்பேயில் (Trombay) உள்ள 'துருவா' (Dhruva) போன்ற ஆராய்ச்சி அணு உலைகளில் கணிசமான அளவு யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவத் துறையில் பயன்படும் டெக்னீசியம்-99m (Technetium-99m) மற்றும் அயோடின்-131 (Iodine-131) போன்ற மருத்துவ ஐசோடோப்புகளைத் தயாரிப்பதற்கும், மேம்பட்ட பொருள் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.


சாந்தி சட்டம்  (SHANTI Act) இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவுமா?


2025-26-ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலைத் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறை சிறிய ரக அணு உலைகளை (Small Modular Reactors (SMR)) மேம்படுத்துவதற்காக ₹20,000 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த வகை அணு உலைகளில் பொதுவாக 3-5% செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படும் யுரேனியம், அணு ஆயுதங்கள் (தற்போது சுமார் 170 அணுக்கரு முனைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் அணுசக்தியால் இயங்கும் ஐ.என்.எஸ் அரிஹந்த் (INS Arihant) ரக நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவின் அணுசக்தித் திட்டம் தற்பொழுது எவ்வாறு செயல்பட்டு வருகிறது?


இந்தியா தற்போது தனது மூன்று அடுக்கு அணுசக்தித் திட்டத்தின் முதல் நிலையிலிருந்து (Stage I) இரண்டாம் நிலைக்கு (Stage II) மாறிக்கொண்டிருக்கிறது.


முதல் நிலையில், அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWRs) இயற்கையான யுரேனியம்-235-ஐப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்தச் செயல்பாட்டில் புளுட்டோனியம்-239 (plutonium-239) ஒரு உபபொருளாகக் கிடைக்கிறது. இரண்டாம் நிலையில் (Stage II), வேக உற்பத்தி உலைகள் யுரேனியம்-238 (uranium-238) மற்றும் புளுட்டோனியம்-239 கலந்த ஆக்சைடு எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், யுரேனியம்-233 மற்றும் கூடுதல் புளுட்டோனியம்-239-ஐயும் (plutonium-239) உருவாக்குகின்றன. இந்த உலைகள் நுகரும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உற்பத்தி செய்வதால் இவை 'வேக உற்பத்தி உலைகள்' என்று அழைக்கப்படுகின்றன. கல்பாக்கத்தில் உள்ள மாதிரி வேக உற்பத்தி உலை (Prototype Fast Breeder Reactor (PFBR)) தற்போது செயல்பாட்டிற்கு வருவதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளது.


இறுதியாக, மேம்படுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Advanced Heavy Water Reactors (AHWR)), புளுட்டோனியம்-239 (plutonium-239) மற்றும் தோரியம்-232 (thorium-232) ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தும் என்றும் இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதோடு, உபரி விளைபொருளாக யுரேனியம்-233-ம் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். 


இந்தியாவில் உலகின் தோரியம் (Thorium) இருப்பில் 20-25% உள்ளது என்ற உண்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே, ஹோமி ஜே. பாபா இந்த மூன்றடுக்குத் திட்டத்தை உருவாக்கினார்.


இருப்பினும், இந்தத் திட்டம் பல தாமதங்களையும் மற்றும் அதிகரித்துவரும் செலவுகளையும் எதிர்கொண்டது. 1977-ஆம் ஆண்டிலேயே கல்பாக்கத்தில் வேக உற்பத்தி சோதனை உலை (Fast Breeder Test Reactor) கட்டப்பட்டது. ஆனால், இந்திய அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் போன்ற காரணங்களால், ஒன்றிய அரசு 2000-களின் தொடக்கத்தில் தான் முன்மாதிரி வேக உற்பத்தி உலைக்கு (Prototype Fast Breeder Reactor (PFBR)) ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த முன்மாதிரி வேக உற்பத்தி உலை திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவு வடிவமைக்கப்பட்ட போது இருந்த ₹3,492 கோடியிலிருந்து, 2019-ஆம் ஆண்டில் ₹6,800 கோடிக்கும் மேலாக உயர்ந்து ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்தது. 


மார்ச் மாதம் 2013-ஆம் ஆண்டில், அணுசக்தித் துறை (Department of Atomic Energy (DAE)) மக்களவையில் ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்தது. அதன்படி, வேக உற்பத்தி உலைகள் (FBR) வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கிய 30 முதல் 40 ஆண்டுகளுக்குப் பிறகே, தோரியத்தை (Thorium) பெரிய அளவில் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. தற்போதைய முன்னோடி வேக உற்பத்தி உலையின் (PFBR) கால அட்டவணையின்படி பார்த்தால், இது 2060-களிலோ அல்லது அதற்குப் பிறகோதான் சாத்தியமாகும் என்றும் கூறப்படுகிறது. 


இந்தியாவின் முன்னாள் அணுசக்தி துறை (DAE) தலைவர் அனில் காகோத்கர், ஒரு 'இரட்டிப்பு காலம்' (Doubling time) பற்றி விளக்குகையில் — அதாவது ஒரு அதிவேக உற்பத்தி உலை, மற்றொரு உலையைத் தொடங்குவதற்குத் தேவையான எரிபொருளை உற்பத்தி செய்ய எடுத்துக் கொள்ளும் காலம் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும் என்று கூறினார். இந்தியா 100 ஜிகாவாட் (GW) மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுமெனில், இத்தகைய பல இரட்டிப்புச் சுழற்சிகளைக் கடக்க வேண்டும். இதனால்தான் யுரேனியம் (Uranium) விநியோகத்தைப் பாதுகாப்பான முறையில் உறுதி செய்ய இந்தியா பல்வேறு நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. 


Original article : India-Canada uranium deal and India’s nuclear programme. -Vasudevan Mukunth

Share: