முக்கியமான கனிமங்களை ஆராய்தல், சுரங்கப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு செய்வதற்கு நிறைய மூலதனம் தேவைப்படுகிறது. அவை முடிவுகளைத் தரத் தொடங்க நீண்டநேரம் எடுக்கும். இதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.
உலகப் பொருளாதாரம் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தை இயக்கும் இரண்டு முக்கிய சக்திகள் உள்ளன. அவை பசுமை ஆற்றல் மாற்றம் (green energy transition) மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) எழுச்சி ஆகும். இந்த இரண்டு சக்திகளும் உலகப் பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் மறுவடிவமைக்கின்றன. இந்த இரண்டு சக்திகளின் மையத்திலும் முக்கியமான கனிமங்கள் உள்ளன. இவற்றில் தாமிரம், லித்தியம், கோபால்ட் மற்றும் அரியவகை மண் கூறுகள் போன்ற கனிமங்கள் அடங்கும். இந்த கனிமங்கள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை நுகர்வோர் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட விண்வெளி அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சுத்திகரிப்பு மற்றும் மேலும் செயலாக்கத்திற்கான முக்கியமான கனிமங்களின் விநியோகத்தின் அடிப்படையில் தற்போது ஒரு சில நாடுகளிடம் உள்ளன. இந்த நாடுகள் எப்போதும் இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போவதில்லை. சர்வதேச எரிசக்தி அமைப்பின் கூற்றுப்படி, 2024-ம் ஆண்டில் பிரித்தல் (separation) மற்றும் சுத்திகரிப்பு நிலைகளில் (refining stages) உலகளாவிய அரியவகை மண் சுரங்க உற்பத்தியில் சீனா தோராயமாக 60 சதவீதத்தையும், உலகளாவிய உற்பத்தியில் 91 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
முக்கியமான கனிமங்களுக்கான உலகளாவிய தேவை வரும் ஆண்டுகளில் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு முக்கியமாக சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அல்லது இயந்திர கற்றல் ஆகியவற்றால் இயக்கப்படும். இதன் விளைவாக, இந்தியா விரைவாக செயல்பட வேண்டும். பல நாடுகளும் அதே வளங்களைப் பெற போட்டியிடுகின்றன. எனவே முக்கியமான கனிமங்களுக்கு வலுவான கொள்கை ஆதரவும், சர்வதேச ஒத்துழைப்பும் தேவை. மேலும், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கான அபாயங்களைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் அவசியம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, விரைவான மற்றும் நியாயமான பொருளாதார வளர்ச்சி முக்கியமானது. அதன் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதையும், அதன் முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் பசுமை எரிசக்தி மாற்றம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பில் முக்கியமான கனிமங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
சீனாவைப் போலவே, முக்கியமான கனிமங்களை சுரங்கப்படுத்துதல் மற்றும் அதை செயலாக்குவதை ஆதரிக்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும். இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய அரியவகை மண் தனிம இருப்புகளைக் கொண்டுள்ளது. இது, தோராயமாக 163.9 மில்லியன் டன் தாமிரம் மற்றும் 44.9 மில்லியன் டன் கோபால்ட் தாது இருப்புக்கள் கொண்டுள்ளது. இந்த செயலற்ற இருப்புக்களை ஒரு உள்நாட்டு மற்றும் ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலியை நிறுவுவதன் மூலம் இராஜதந்திரரீதியாகப் பயன்படுத்தலாம்.
இந்தியா ஏற்கனவே முக்கியமான கனிமங்களின் மதிப்புச் சங்கிலியில் சில திறன்களை நிரூபித்திருந்தாலும், வணிகரீதியாக போட்டித்தன்மை வாய்ந்த பெரிய அளவிலான கீழ்நிலை செயலாக்க திறன்கள் கிட்டத்தட்ட இல்லாதது இன்னும் நிரப்பப்படாத ஒரு முக்கியமான இடைவெளியாகும்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ₹34,000 கோடி ($3.8 பில்லியன்) இலக்கு ஒதுக்கீட்டைக் கொண்ட தேசிய முக்கிய கனிமத் திட்டம்-2025 (National Critical Mineral Mission (NCMM)), வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இருப்பினும், உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகக் குறைவு. இதற்கு நேர்மாறாக, 2024-ம் ஆண்டில் மட்டும் சீனா முக்கியமான கனிமங்களில் $21.44 பில்லியனை முதலீடு செய்தது. சீனாவின் முதலீட்டு அளவை இந்தியா ஈடுகட்ட முடியாவிட்டாலும், தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்காக அதன் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை கவனமாக ஒதுக்க முடியும்.
மதிப்புச் சங்கிலி முழுவதும், முக்கியமான கனிமங்களின் துணைக்குழுவான அரியவகை-மண் வழித்தடங்களை (rare-earth corridors) அமைப்பதற்கான 2026-27 நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பு, இந்தியாவின் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும். மேலும், முக்கியமான கனிமங்களைச் செயலாக்கப் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களின் இறக்குமதியில் அடிப்படை சுங்க வரியிலிருந்து (Basic Customs Duty (BCD)) விலக்கு அளிக்கப்படும் அறிவிப்பு, இந்தியாவின் பசுமை உற்பத்தி இலக்கிற்கு முக்கியமாக இருக்கும் கனிமங்களைச் சுத்திகரித்தல் மற்றும் செயலாக்கத்தில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளும் நிறுவனங்களை ஆதரிக்கும்.
நிதி தலையீடுகள்
முக்கியமான கனிமங்களை ஆராய்தல், சுரங்கப்படுத்துதல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவை பல சவால்களை உள்ளடக்கியது. இந்த நடவடிக்கைகளின் முடிவுகள் தோன்றுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். மேலும் அவற்றுக்கு மிகப் பெரிய முதலீடுகளும் தேவை. கூடுதலாக, அவற்றுக்கு விரிவான விடாமுயற்சி தேவைப்படுகிறது மற்றும் இதனால் பல நிச்சயமற்றத் தன்மைகளையும் எதிர்கொள்ள நேரிடும். சலுகை மற்றும் நீண்டகால கடன்களை வழங்குதல், சுத்திகரிப்பு கட்டுமானத்திற்கான ஆரம்பகால நிதி மற்றும் உற்பத்தி வரி வரவுகள் போன்ற பல வழிகளில் அரசாங்கம் தனியார் துறையை ஆதரிக்க முடியும்.
முக்கியமான கனிம விலைகளும், அவற்றின் தேவையும் நிலையற்றவை என்பதால், முதலீட்டாளர்களை ஈர்க்க, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாத விலையை வழங்கும் வேறுபாடு ஒப்பந்தங்கள் (contracts for difference (CfD)) மற்றும் தேவை உத்தரவாதங்கள் போன்ற வருவாய் உறுதிப்படுத்தலை அரசாங்கம் ஆதரிக்க முடியும். உயர் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தரநிலைகளுடன் இணைக்கக்கூடிய அரசாங்கத்தின் சலுகைகள், புதிய விநியோகத்தைத் திறக்க உதவும். இந்த சலுகைகள் மற்றும் இடர் குறைப்பு கருவிகள் (risk-reduction mechanisms) தனியார் முதலீட்டாளர்களை அதிக நம்பிக்கையுடன் உணர வைக்கும்.
ஆய்வு, சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த புவியியல் பகுப்பாய்வு துளையிடும் செலவுகளை (cost of drilling) கணிசமாகக் குறைக்கும். அதேவேளையில், கனிம இருப்பு கண்டுபிடிப்புகள் அதன் விகிதங்களை மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கும்.
முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியில் புதுமைக்கான பொது நிதி மற்றும் நிதி ஊக்கத்தொகைகள் மூலம் தொழில்நுட்பத்தை இணைந்து மேம்படுத்துவது, மூலப்பொருட்களின் அபாயங்களைத் தடுக்க விரும்பும் மின்னணு, எரிசக்தி மற்றும் வாகனத் துறைகளில் உள்ள ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள், சுரங்க நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை ஈர்க்கும்.
உள்ளூர் சமூகங்கள்
முக்கியமான கனிமச் சுரங்கம் மற்றும் செயலாக்கம் பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களில் சமூக அமைதியின்மையுடன் இணைக்கப்படுகின்றன. ஏனெனில், உள்ளூர் மக்கள் மாசுபட்ட நீர், நிலம் மற்றும் காற்று போன்ற சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என்பதால் இது நிகழ்கிறது. சுரங்கம் அல்லது செயலாக்கத் திட்டங்களில் உள்ளூர் சமூகங்களை இணை முதலீட்டாளர்களாக மாற்ற, இந்தத் திட்டங்களில் நேரடிப் பங்கை வழங்குவதன் மூலம் அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்க முடியும்.
பொதுத்துறை அல்லது அரசாங்கத்திற்குட்பட்ட ஒரு துறை, நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நிதி வசதியை உருவாக்க முடியும். இது உள்ளூரில் முக்கியமான சுரங்கங்களுக்கு கடன் அல்லது பங்கு வடிவில் மூலதனத்தை வழங்குகிறது. காலப்போக்கில், அசல் மற்றும் வட்டி அல்லது ஈவுத்தொகைக்கான செலவுகள் திட்டங்களால் செலுத்தப்படுவதால், அவை உள்ளூர் திட்டங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம். அத்தகைய வசதி உள்ளூர் சமூகக் கொள்முதல் மற்றும் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்யும்.
கனிமங்களை தடையின்றி நகர்த்துதல்
உலகளாவிய புவிசார் அரசியல், நாடுகடந்த தன்மை மற்றும் நிச்சயமற்ற விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தில் இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் சமூகங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு அது உணர்திறன் கொண்ட அதேவேளையில், உலகளவில் முக்கியமான கனிம சொத்துக்களை கையகப்படுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் ஆதரிக்க முடியும். கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Ltd. (KABIL)), பேட்டரி பொருட்களுக்கான விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த கிரிட்டிகல் மினரல்ஸ் அலுவலகம் (ஆஸ்திரேலியா), CAMYEN (அர்ஜென்டினா அரசுக்குச் சொந்தமான நிறுவனம்) மற்றும் ENAMI (சிலி அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனம்) ஆகியவற்றுடன் கூட்டமைப்பு அமைத்துள்ளது. இதன்மூலம், இந்தியா அதன் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க உதவுகிறது.
தாக்கூர் IIT பம்பாய் மற்றும் IIM அகமதாபாத்தின் முன்னாள் மாணவர். ஜெனா, காலநிலை மற்றும் நிலைத்தன்மை முன்முயற்சியின் இயக்குநராகவும், லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் வருகை தரும் மூத்த உறுப்பினராகவும் உள்ளார், திரிபாதி, ஜாம்ஷெட்பூரில் உள்ள XLRI-யில் நிதிப் பேராசிரியராக உள்ளார்.
Original article : Strategy to secure critical minerals. -Prasad Ashok Thakur, Labanya Prakash Jena, Trilochan Tripathy