புதிய தேசிய கணக்குத் தொடர் (new national accounts series), சமீபத்திய ஆண்டுகளில் முறைசாரா துறை வலுவாக வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
புதிய தேசிய கணக்குத் தொடர், 2022-23-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய தேசிய கணக்குத் தொடரை பிப்ரவரி 27, 2026 அன்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டது. தரவுத் தரம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் தற்போது புதிய தொடரை அறிமுகப்படுத்தியது. இது காலாவதியான முந்தைய அடிப்படை ஆண்டை (base year) மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல செயல்பாட்டு நிறுவனங்களில் செயல்பாடுகளைப் பிரிப்பதன் மூலம் தனியார் நிறுவனத் துறை தரவுகளின் தொகுப்பை புதிய தொடர் மேம்படுத்துகிறது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தெரிவிக்கிறது. இது வருடாந்திர கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி இணைக்கப்படாத துறையின் அனைத்தையும் மேம்படுத்துகிறது. இது விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இரட்டை பணவாட்டத்தையும் (double deflation), மீதமுள்ள துறைகளில் ஒற்றை நீட்டிப்பு கணிப்புகளையும் (single extrapolation) பயன்படுத்துகிறது.
இந்தத் தொடரில் சமீபத்திய ஆய்வுகளிலிருந்து எடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விகிதங்கள் மற்றும் வீதங்களும் அடங்கும். ஜிஎஸ்டி/புதிய நிர்வாக தரவு மூலங்களை விரிவாகப் பயன்படுத்துகிறது மற்றும் விநியோகம் மற்றும் பயன்பாட்டு அட்டவணை (Supply and Use Table (SUT)) கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் செலவுக்கான மதிப்பீடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துகிறது.
புதிய தொடர் 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு பணமதிப்பிழப்பு (demonetisation), அகில இந்திய ஜிஎஸ்டி அமலாக்கம் (all India GST rollout) மற்றும் தொற்றுநோய் (pandemic) ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளின் விளைவுகளை சமநிலையாக்குகிறது. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பொருளாதார வளர்ச்சியை பாதித்தன. குறிப்பாக, முறைசாரா மற்றும் குறு சிறு நடுத்தர தொழில்துறைகள் ஆகியவற்றை பாதித்தன. இருப்பினும், புதிய தொடரை அடிப்படையாகக் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பழைய தொடருடன் நியாயமான முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன.
2022-23-ஆம் ஆண்டில் (அடிப்படை ஆண்டு) மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹23,761,232 கோடியாக தற்போதைய விலையில் பழைய தொடரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96.4 சதவீதமாகும். மற்ற முக்கிய பொருளாதார குறிகாட்டிகளுக்கான புதிய தொடரின் பழைய தொடரின் விகிதம் பின்வருமாறு. தனியார் இறுதி நுகர்வு செலவு, 90.3 சதவீதம்; மொத்த மதிப்பு கூட்டல், 96.4 சதவீதம்; மற்றும் மொத்த நிலையான மூலதன உருவாக்கம், 96.4 சதவீதம் ஆகும். 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளில் புதிய தொடருக்கான தற்போதைய விலையில் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முறையே 11 சதவீதம், 9.7 சதவீதம் மற்றும் 8.6 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆச்சரியங்கள் இல்லை
2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான புதிய மொத்த உள்நாட்டு மூலதன உருவாக்கம் (GDCF)/ மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP) விகிதம் முறையே 31.9 சதவீதம், 31.6 சதவீதம் மற்றும் 31.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஜிடிபி தொடர் ஆச்சரியத்தை உருவாக்கவில்லை. இந்தக் கணக்கீடுகளில் புதிய தரவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பேரியல் பொருளாதார குறிகாட்டிகளின் மதிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், மதிப்பீடுகள் உண்மையில் பழைய தொடரில் முந்தைய மதிப்பீடுகளைவிட குறைவாக உள்ளன
புதிய தரவுத் தொகுப்புகள், புதிய விகிதங்கள் மற்றும் வீதங்கள் மற்றும் தர மேம்பாடு ஆகியவை முறைசாரா துறைக்கு முக்கியமானவை. பெருநிறுவன மற்றும் அரசுத் துறைகள் பற்றிய தரவு நியாயமான முறையில் சரியானது. ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் தரவு கிடைப்பதால், உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேவைகள் குறித்த விவசாயம் அல்லாத முறைசாரா துறை தொடர்பான தரவுகள் வழக்கமானவை அடிப்படையில் கிடைக்கின்றன.
பயிர் வெட்டும் கணக்கெடுப்பின் (crop-cutting surveys) அடிப்படையில் விவசாயத் தரவு நியாயமான முறையில் சிறப்பாக உள்ளது. மொத்த மதிப்புக் கூட்டுத்தாக்கத்தில் கிட்டத்தட்ட 40 சதவீத பங்களிப்பை வழங்கும் முறைசாரா துறை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் தொற்றுநோய் போன்ற பொருளாதாரத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களால் ஒப்பீட்டளவில் மோசமாக பாதிக்கப்பட்டதாக பொதுவாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக முறைசாரா துறை தரவுகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகைப்படுத்தப்பட்டது. எனவே, சமீபத்திய தரவுத் தொகுப்புகளைக் கருத்தில் கொண்டு, முக்கியமாக பேரியல் பொருளாதார குறிகாட்டிகளுக்கு அதன் பங்களிப்பை மீண்டும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தேசிய கணக்குகளின் பழைய மற்றும் புதிய தொடரில் முறைசாரா துறையின் முக்கிய அளவீடுகளை அட்டவணை சுருக்கமாகக் கூறுகிறது.
அட்டவணையிலிருந்து மூன்று கருத்துகளைக் குறிப்பிடலாம். முதலில், பெருநிறுவனத் துறை மற்றும் அரசுத் துறை போன்ற பிற துறைகளுடன் ஒப்பிடும்போது முறைசாரா துறை எந்த சரிவையும் கொண்டிருக்கவில்லை. உண்மையில், மொத்த மதிப்பு கூட்டலில் முறைசாரா துறை மற்ற துறைகளைவிட சிறப்பாக வளர்ந்துள்ளது. 2023-24 மற்றும் 2024-25-ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி முறையே 12.9 சதவீதம் மற்றும் 9.7 சதவீதம் ஆகும். இது பொருளாதார அளவிலான வளர்ச்சி 10.7 சதவீதம் மற்றும் 9.6 சதவீதமாக இருந்தது. புதிய தொடரில் மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) முறைசாரா துறையின் பங்கு பழைய தொடரைவிட அதிகமாக உள்ளது.
இரண்டாவதாக, முறைசாரா துறையில் மூலதன உருவாக்கம் பலவீனமாகவே உள்ளது. முறைசாரா துறைக்கு கிட்டத்தட்ட 38 சதவீதமாக இருந்த நிலையில், முறைசாரா துறையின் முதலீடு/மொத்த மதிப்பு கூட்டல் (GVA) விகிதம் 33-34 சதவீதமாக உள்ளது. பழைய மற்றும் புதிய தொடர் இரண்டிலும் இந்த நிலைமை ஒரே மாதிரியாக உள்ளது. நிலையான குறைந்த மூலதன தீவிரம் ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இரண்டு துறைகளுக்கும் இடையிலான இடைவெளி கடுமையான கடன் பாதிப்புகள் அல்லது நெரிசலைக் குறிக்கும் அளவுக்கு பெரியதாக இல்லை.
மூன்றாவதாக, மொத்த சேமிப்பில் முறைசாரா துறையின் பங்கு புதிய தொடரில் கடுமையாகக் குறைந்துள்ளது. இது 2022-23 இல் மட்டுமே குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டது. குறைந்து வரும் லாபம் காரணமாக இந்தத் துறை மன அழுத்தத்தை சந்திப்பது ஒரு சாத்தியமான காரணமாக அமைகிறது.
புதிய தொடர் வெளிப்படுத்துவது குறித்து
புதிய தரவுத் தொடர் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வெளியீடு மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு முறைசாரா துறையின் சரிவு குறித்த பொதுவான அச்சத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. முறைசாரா துறை, குறிப்பாக விவசாயம் அல்லாத பிரிவு, வலுவாக உள்ளது. இருப்பினும் உற்பத்தித்திறன் வளர்ச்சி மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்களுடன் சந்தைப்படுத்தல் கூட்டமைப்புகளும் இதற்குத் தேவை.
இரண்டாவதாக, இந்தத் தன்மை இருந்தபோதிலும், முறைசாரா துறையின் வளர்ச்சி குறித்து கூடுதல் வெளிப்பாடு தேவை. ஏனெனில், புதிய தொடர் குறிப்பிடுவது இணைக்கப்படாத நிறுவனங்களின் காலாண்டு ஆய்வுகளில் காணப்படும் வளர்ச்சிக்கு முரணானது.
மூன்றாவதாக, முறையான மற்றும் முறைசாரா துறைகள் இரண்டிற்கும் முதலீடு/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கிட்டத்தட்ட தேக்கமடைந்து வருவதால், விகிதத்தை அவற்றின் தற்போதைய நிலைகளுக்கு அப்பால் விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தேவை. பயன்படுத்தப்படாத உற்பத்தி திறன் சில குறுகியகால ஆதரவை வழங்கக்கூடும். இருப்பினும், புதுமை காரணமாக தயாரிப்பு சுழற்சிகள் குறைந்து வருகின்றன. இதன் விளைவாக, அதிகப்படியான திறன் இறுதியில் அழிக்கப்படலாம் அல்லது பயனற்றதாக மாறக்கூடும்.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட புதுமை மற்றும் மரபுத் தொழில்களுக்கான ஆதரவு பற்றி பேசப்படுகிறது. இருப்பினும், நிதிநிலை அறிக்கை இன்னும் அபாயங்கள் மற்றும் சவால்களை முழுமையாக மதிப்பிடவில்லை.
கோபாலன் முன்னாள் பொருளாதார விவகார செயலாளர், மற்றும் சிங்கி நிதி அமைச்சகத்தின் முன்னாள் மூத்த பொருளாதார ஆலோசகர் ஆவர்.
Original article : Informal sector growth holds up. -R Gopalan MC Singhi