தேர்வு சீர்திருத்த பரிந்துரைகள் குறித்த பார்வை -தலையங்கம்

 தேசிய நுழைவுத் தேர்வுகளில் (national entrance examinations) வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை. அதன் அமலாக்கம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். 


முன்னாள் இஸ்ரோ தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, தேசிய நுழைவுத் தேர்வுகளின் (national entrance exams) வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைகளை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் இந்தியாவின் உயர்கல்வி முறையைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரமாக அமைகிறது. இந்தத் தேர்வுகளில் இடையூறுகள் ஏற்படுவது இந்தியாவில் சாதாரணமாகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 மாநிலங்களில் 41 வினாத்தாள் வெளியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், 1.4 கோடி பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அறிக்கை காட்டுகிறது. 2024-ம் ஆண்டில், NEET மற்றும் UGC-NET ஆகிய இரண்டும் வினாத்தாள் வெளியான சம்பவங்களால் தாமதங்களையும் ரத்துகளையும் எதிர்கொண்டன. பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்விலும் (CUET) சிக்கல்கள் இருந்தன. இதற்கான முடிவுகள் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தாமதமாகி வருகின்றன. கல்வியில் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை காரணமாக, இளம் ஆர்வலர்களுக்கு இது சிரமங்களை உருவாக்கியுள்ளது. சிறந்த உள்கட்டமைப்பு, வலிமையான தேர்வுப் பாதுகாப்பு, தேசிய தேர்வு முகமையிலிருந்து (National Testing Agency (NTA)) சில பொறுப்புகளை மாற்றுவது மற்றும் கடுமையான நெறிமுறைகள் உள்ளிட்ட குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்க படியாகும்.


தனது பரிந்துரைகளில், தேசிய தேர்வு முகமை (NTA) மீதான "அதிக சார்புநிலை" குறைக்கப்பட வேண்டும் என்று குழு கூறியுள்ளது. இதனால், அது நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்துகிறது, ஆட்சேர்ப்பு தேர்வுகளை அல்ல என்று நம்புகிறது. இது 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்டதிலிருந்து, தேசிய தேர்வு முகமை (NTA) 244 தேர்வுகளை நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2019-2021 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு சராசரியாக 67 லட்சத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 122 லட்சமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதானால், முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு ஆளாக்குகிறது. ஏனெனில், NTA மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களை நம்பியுள்ளது. இந்த தேர்வுகளின் பாதுகாப்பை நிர்வகிப்பதில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் தேர்தல் போன்ற அடுக்கு ஒத்துழைப்பையும், வேட்பாளர்களின் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான டிஜியாத்ரா மாதிரியைப் (DigiYatra model) பிரதிபலிக்கும் "டிஜிட்டல்-தேர்வு" (digi-exam) முறையையும் குழு பரிந்துரைத்துள்ளது. தனிநபர் திறனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளை வரிசைப்படுத்தும் "கணினி தகவமைப்பு சோதனைக்கு" இடம்பெயர்வதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செயல்முறையை முழுமையாக ஆய்வு செய்ய குழு பரிந்துரைத்துள்ளது. வலுவான பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவது இதில் அடங்கும். இது சரியான பாதையின் ஒரு முக்கியப் படியாகும். உள்கட்டமைப்புக்கும் செயல்படுத்துதலுக்கும் இடையே உள்ள இடைவெளிகள் அல்லது விருப்பத்திற்கும் வாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளிகள் பெரும்பாலும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்பதை கடந்தகால அனுபவம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, CUET-ன் குறைபாடுகள், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மாற்றத்திற்கு கவனமாக திட்டமிடல் தேவை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதை தவிர்க்க உதவும். பொதுவாக, டிஜிட்டல் மயமாக்குவது அல்லது செயல்முறையை மிகவும் சிக்கலாக்குவது போதாது. அனைத்து மாணவர்களும் ஆதரிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம். கணினிகள் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் குழப்பம் அல்லது மன அழுத்தம் இல்லாமல் அவற்றை வழிநடத்த முடியும்.




Original article:

Share:

வேலைவாய்ப்பை உருவாக்க அரசு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப்போது சவாலாக இருப்பது, வேலைகளின் தரத்தை மேம்படுத்துவதே. - இஷா தயால், போர்னாலி பண்டாரி, அஜய் கே சாஹு

 வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம், பணியின் திறன் மற்றும் பயிற்சி அம்சங்களை இணைப்பதன் மூலம் மேலும் முழுமையானதாக இருக்க முடியும். விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயல்முறைகள் மற்றும் வளங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் எளிமைப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 


இந்தியாவானது வேலைவாய்ப்பில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், அது மெதுவாகவும் தரம் குறைந்ததாகவும் உள்ளது. வேலைவாய்ப்பு-வேலையின்மை கணக்கெடுப்பு மற்றும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (periodic labour force survey (PLFS)) ஆகியவற்றின் படி, 2011-12 மற்றும் 2023-24 க்கு இடையில் பணியாளர்கள் 2.2% வளர்ந்துள்ளனர். அதே காலகட்டத்தில், தொழிலாளர் எண்ணிக்கை (வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள்) சுமார் 2.3% வளர்ச்சியடைந்தது. 78% தொழிலாளர்களுக்கு எழுத்துப்பூர்வ வேலை தொடர்பாக ஒப்பந்தம் இல்லை என்றும், சுமார் 76% பேர் சமூகப் பாதுகாப்புப் நலன்களுக்குத் தகுதி பெறவில்லை என்றும், 72% பேர் ஊதியத்துடன் கூடிய விடுப்புப் பெறவில்லை என்பதை சமீபத்திய தரவு வெளிப்படுத்துகிறது. மேலும், ஒப்பந்த வேலைகள் மிகவும் பொதுவானதாகி வருகிறது. 2018-19 மற்றும் 2022-23-க்கு இடையில் முறையான உற்பத்தியில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 38 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தொழில்துறைகளின் வருடாந்திர கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களின் விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்துடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது.


மேற்கூறியவற்றின் அடிப்படையில், முறையான வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் ஒரு நேர்மறையான படியாகும். இந்த ஆண்டு ஒரு முக்கியமான பட்ஜெட் அறிவிப்பு வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (Employment Linked Incentive (ELI)) ஆகும். இத்திட்டம் இரண்டு ஆண்டுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் (ELI) மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன.


வேலைவாய்ப்பு வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees Provident Fund Organisation (EPFO)) பதிவுசெய்யப்பட்ட முதல் முறையாக பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை (மூன்று தவணைகளில் ரூ. 15,000 வரை) திட்டம் A வழங்குகிறது. இது அனைத்து முறையான துறைகளுக்கும் பொருந்தும். திட்டம் B உற்பத்தித் துறையில் வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது முதல் முறை பணியாளர்களை பணியமர்த்துவதற்கு ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் ஊக்கத்தை வழங்குகிறது. இந்த ஊக்கத்தொகைகள் ஊழியர்களின் முதல் நான்கு ஆண்டுகளில் EPFO ​​பங்களிப்புகளைப் பொறுத்தது. திட்டம் C இரண்டு ஆண்டுகளுக்கு முதலாளிகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை திருப்பிச் செலுத்துகிறது. இது அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் EPF பங்களிப்புக்காகும்.


நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் புதிய மற்றும் நீடித்த தரமான வேலைவாய்ப்பை உருவாக்கும் விரும்பிய நோக்கத்தை அடைய வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் (ELI) உதவ முடியுமா என்பதே கேள்வி. வேலைவாய்ப்பு வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களை குறிவைப்பதே வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (ELI) தனித்துவமான அம்சமாகும். அதாவது தொழிலாளர்களை (மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் சம்பாதிப்பவர்கள்) ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் இதன் வழக்கத்தை நோக்கி நகர்த்துவதாகும். இருப்பினும், திட்டங்கள் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. 


ஒன்று, ஊக்கத்தொகையின் அளவு (size of the incentive) ஆகும். அனைத்து துறைகளிலும் முதல் முறையாக தரமான வேலைகளை உருவாக்க திட்டம் A இல் சம்பள செலவில் மானியம் போதுமானதா? உற்பத்தித் துறையில் குறுகிய கால வேலைவாய்ப்பு உறவுகளின் தன்மையை குறுகிய காலத்திலிருந்து நீண்ட காலத்திற்கு மாற்றுவதற்கு திட்டம் B-யில் உள்ள ஊக்கத்தொகைகளின் அளவு போதுமானதா? 


இரண்டு, வேலைவாய்ப்பு காலத்துடன் இணைக்கப்பட்ட நன்மைகள். வேலைவாய்ப்பு உறவுகளில் குறுகியகாலத் தன்மை தேவை-பக்கத்தில் பரவலாக உள்ளது. ஆனால், பணியாளர்களின் விநியோகப் பக்கமும் பெருகிய முறையில் அடிக்கடி வேலைகளை மாற்றுகிறது. நிறுவனங்கள் தொடர்ச்சியான அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். நிறுவனங்கள் நிரந்தர ஒப்பந்தத்தை வழங்கினாலும், தொழிலாளி நீண்ட காலம் பணிபுரிவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாறாக, ஒரு முக்கிய புகார் என்னவென்றால், புதியவர்கள் சேருகிறார்கள், சில அனுபவங்களைப் பெறுகிறார்கள், மாற்று வாய்ப்புகளுக்கு வெளியேறுகிறார்கள். இது வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், எந்தவொரு ELI நன்மைகளும், ஒரு குறிப்பிட்ட கால வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துடன் இணைக்கப்பட்டால், நிறுவனங்களுக்கு எந்த நன்மையும் அளிக்க வாய்ப்பில்லை. 


மூன்று, அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கான நன்மைகள். வேலையில் பயிற்சி என்பது நிறுவனங்களுக்கு ஒரு செலவு ஆகும். அனுபவம் இல்லாத முதல் முறை ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது, குறிப்பாக சிறப்பு வேலைகளுக்கு நிறுவனங்களை ஈர்க்காது. அந்தக் கண்ணோட்டத்தில், திட்டம் C மிகவும் சாத்தியமானது மற்றும் தற்போதுள்ள பணியாளர்களில் அதிக தரமான வேலைகளை உருவாக்க உதவும். ஆனால் சம்பளத்தின் விகிதத்தில், திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கும்போது EPF நன்மைகள் குறைவானதாகின்றன. 


நான்காவது, தற்போதுள்ள முறைசாரா பணியாளர்கள். தற்போதுள்ள முறைசாரா பணியாளர்களைப் பற்றி மூன்று திட்டங்களும் தெளிவாக இல்லை. ELI நன்மைகளைப் பெற, முறைசாரா தொழிலாளர்கள் EPFO-ல் முதல் முறையாக முறையான ஊழியர்களாக சேர முடியுமா? புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த முறைசாரா தொழிலாளர்களுக்கு இந்தக் கேள்வி முக்கியமானது.


பணியமர்த்தல் பற்றிய முடிவுகள், அதாவது முதல் முறை பணியாளர்களை அல்லது அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்துவது மற்றும் தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில் பணியமர்த்துவது போன்ற முடிவுகள், ஒவ்வொரு நிறுவனத்தாலும் எடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், ELI மூலம் இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது பொருளாதார மற்றும் சமூக நன்மைகளைப் பெறலாம். பெண்கள் நிலையான மற்றும் ஒழுக்கமான பணியாளர்களாகக் காணப்படுகிறார்கள். எனவே, அவர்கள் தக்கவைத்துக் கொள்ள எளிதானவர்கள். அதிக பெண்களை பணியமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க, வேலை விளம்பரங்கள் பாரபட்சமின்றி இருக்க வேண்டும். கூடுதலாக, பெண்களை பணியமர்த்துவதற்கான "செலவு" மானியம், அவர்களின் ஆரம்ப வேலை பயிற்சி உட்பட, உதவலாம். இது பாலின சார்புகளைக் குறைக்கவும், குறிப்பாக உற்பத்தித் துறையில் பெண்களை பாரம்பரியமற்ற பாத்திரங்களில் இருந்து விலக்கி வைத்திருக்கும் சமூக விதிமுறைகளை சவால் செய்யவும் உதவும். இந்த முயற்சிக்கான ஆதரவில், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும்.


ELI பிரச்சனையின் தேவைக்கான பக்கத்தில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதன் மூலம் விநியோகப் பக்கத்துடனும் இணைக்க முடியும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி ஊக்கத்தொகைகள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சத்தில் ஒருங்கிணைந்த கவனம் செலுத்தப்படுகிறது. பயிற்சி மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆதரவளிக்க நாட்டில் பிற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பணியின் திறன் மற்றும் பயிற்சி அம்சங்களை இணைப்பதன் மூலம் ELI திட்டத்தை இன்னும் முழுமையானதாக மாற்ற முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் சொந்த பயிற்சியாளர்கள் / பயிற்சியாளர்கள் முதல் முறையாக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டால், அவர்களின் ஊக்கத்தொகையின் அளவு அதிகரிக்கிறது. 


வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. இந்தியச் சூழலில், தற்போதுள்ள திட்டங்களில் மாற்றங்கள் தொழிலாளர் சந்தையில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க உதவும். இந்தப் பிரச்சினைகளில் பெண்களின் வேலைவாய்ப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் முறைசாரா மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியவை அடங்கும். நிறுவனங்களுக்குத் தெரிந்திருந்தால், விதிகள் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருந்தால், சரியான நேரத்தில் பணம் செலுத்தப்பட்டால், சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகள் இருந்தால், நிறுவனங்கள் அத்தகைய திட்டங்களில் பங்கேற்கும். எனவே, திட்டத்தை வடிவமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் மற்றும் கட்டணங்களை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.




Original article:

Share:

'மோசமான நம்பிக்கை' குற்றச்சாட்டுகளை 'அரசியல்' குற்றமாகக் கருத மறுப்பதற்கு ஒப்படைப்பு ஒப்பந்தம் (extradition treaty) இடமளிக்கிறது - தீப்திமான் திவாரி

 ஒப்பந்தத்தின் பிரிவு 10(3) வது பிரிவின் திருத்தம், குற்றத்திற்கான ஆதாரங்களை வழங்குவதற்காக நாடு கடத்தப்படுவதற்கான தேவையை நீக்கியது.


இந்தியாவும் வங்காளதேசமும் 2013-ம் ஆண்டில் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் (extradition treaty) கையெழுத்திட்டன. இதற்குக் காரணம், பல இந்திய மற்றும் வங்காளதேசம் தப்பியோடியவர்கள் மற்ற நாட்டிலிருந்து மறைந்துகொண்டு  செயல்படுவதுதான். இருப்பினும், இந்த ஒப்பந்தம் தானாக புதுடெல்லி ஷேக் ஹசீனாவை டாக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.


"அரசியல் இயல்பில்" (political nature) குற்றம் இருந்தால் ஒப்படைப்பு மறுக்கப்படலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது. இருப்பினும், "அரசியல்" என்று கருதப்படாத குற்றங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. ஹசீனா மீது குற்றம் சாட்டப்பட்ட கொலை, வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் சித்திரவதை போன்ற சில குற்றங்கள், ஒப்பந்தத்தில் அரசியல் குற்றங்களின் வரையறையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.


ஒப்படைப்பு செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் செய்ய ஒப்பந்தம் 2016-ம் ஆண்டில் திருத்தப்பட்டது.


ஒப்பந்தத்தின் பிரிவு 10(3)-க்கான திருத்தம் மூலம், குற்றத்திற்கான ஆதாரங்களை கோரும் நாடு வழங்க வேண்டிய தேவையை நீக்கியது.


இப்போது, ​​அந்த நாட்டில் உள்ள ஒரு தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் கைது வாரண்ட், நாடு கடத்தலைச் செயல்படுத்த போதுமானது. ஹசீனாவுக்கு எதிராக வங்காளதேசத்தில் இதுபோன்ற பல வாரண்டுகள் உள்ளன.


இருப்பினும், ஒப்படைப்பு கோரிக்கைகளை மறுப்பதற்கான பிற காரணங்களை ஒப்பந்தம் இன்னும் வழங்குகிறது. பிரிவு 8 ஆனது மறுப்பதற்கான பல காரணங்களை பட்டியலிடுகிறது. நீதிக்காக நல்லெண்ணத்துடன் குற்றஞ்சாட்டப்படாத வழக்குகள், அல்லது இராணுவக் குற்றமாக இருந்தால், அது பொதுவான குற்றவியல் குற்றமாகக் கருதப்படுவதில்லை.


எனவே, ஹசீனாவை நாடு கடத்துவதை இந்தியா மறுக்கலாம். ஏனென்றால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நல்ல நம்பிக்கையிலோ அல்லது நீதியின் நலனுக்காகவோ செய்யப்படாமல் இருக்கலாம். எனினும், அவரை நாடு கடத்த மறுப்பது இந்தியாவுக்கும் டாக்காவுக்கும் இடையேயான உறவை மேலும் பதட்டமாக்கும்.


இறுதியில், ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் விவரங்கள் எதுவாக இருந்தாலும், டாக்காவின் ஒப்படைப்பு கோரிக்கையை வழங்குவதற்கான முடிவு அரசியல் முடிவாக இருக்கும்.


வங்காளதேசத்துடன் நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (Research and Analysis Wing (R&AW)) அதிகாரி ஒருவர், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் முன்னதாக, “ஹசீனாவை வங்காளதேசத்துடன் ஒப்படைப்பதில் எங்களுக்கு முக்கியமான நலன்கள் இல்லை. மேலும், இந்த ஒப்பந்தத்தின் சட்ட விவரங்கள் முக்கியமில்லை."


"ஒப்படைப்பு கோரிக்கைகள் நிலுவையில் இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன" என்று பிராந்தியத்தில் பணியாற்றிய முன்னாள் இராஜதந்திரி அதிகாரி ஒருவர் கூறினார். 


தற்செயலாக, வங்காளதேசத்துடன் ஒப்பந்தம், 2015-ம் ஆண்டில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam (ULFA)) தலைவரான அனுப் சேத்தியாவை வெற்றிகரமாக ஒப்படைக்க இந்தியாவை அனுமதித்தது.




Original article:

Share:

நீதித்துறை கட்டுப்பாடு குறித்து . . . -குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்


1. பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நீதிபதி இ.எஸ்.வெங்கடராமியா நூற்றாண்டு நினைவு சொற்பொழிவின் (Justice ES Venkataramiah Centennial Memorial Lecture) இரண்டாவது பதிப்பை நீதிபதி நரசிம்மா வழங்கினார். 


2. தேர்தல் ஆணையத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியதாவது, "நிர்வாகத்திற்கு முற்றிலும் வெளியே" (outside the Executive) இருக்கும் ஒரு அமைப்பால் தேர்தல்கள் நடத்தப்படுவதை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வேண்டுமென்றே உறுதி செய்தனர் என்று நீதிபதி நரசிம்ஹா கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


1. அபினவ் சந்திரசூட் குறிப்பிட்டு, நாம் ஒரு கடினமான கேள்வியைக் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  இதில், நீதிபதிகள் ஓய்வுக்குப் பின் அரசாங்கம் வழங்கும் வேலைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டுமா? ஓய்வு பெற்ற சில வருடங்களாவது இது நடக்க வேண்டும். இத்தகைய பதவிகளை ஏற்றுக்கொள்வது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


2. அமெரிக்காவில் உள்ள கூட்டுறவு நீதிபதிகள் (federal judges) போலல்லாமல், இந்தியாவில் நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பதவியில் இருப்பதில்லை. அவர்கள் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பதவியில் இருப்பார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 62 ஆகவும் உள்ளது.


3. இந்த நீதிபதிகள் குடியரசுத் தலைவரின் "விருப்பப்படி" தங்கள் பதவிகளை வகிப்பதில்லை. மற்றபடி கூறுவதானால், அவர்கள் நியமிக்கப்பட்டவுடன் அரசாங்கத்தால் தன்னிச்சையாக அகற்றப்பட முடியாது. மேலும், "நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறமையின்மையின் அடிப்படையில்" நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அதீத பெரும்பான்மையால் மட்டுமே குற்றஞ்சாட்ட முடியும். 


4. இருப்பினும், நீதிபதிகளின் ஓய்வு நீதித்துறை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், சில நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பின் அரசு வேலைகள் வழங்கப்படுகின்றன. ஓய்வுபெறும் தருவாயில் இருக்கும் நீதிபதி, ஓய்வு பெற்ற பிறகு சாதகமான வேலையைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் விதத்தில் முடிவுகளை எடுக்கக்கூடும் என்ற கவலையை இது எழுப்புகிறது.


5. இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல் எம்.சி.செதல்வாட் குறிப்பிட்டதாவது, இவை அனைத்தும் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான "அரசியலமைப்பு தனியுரிமை குறித்த கேள்வியை" எழுப்புகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, தனக்கு சாதகமாக வழக்குகளை தீர்மானிக்கும் நீதிபதிகளுக்கு வெகுமதி அளிக்க அரசாங்கம் இதுபோன்ற தந்திரங்களைப் பயன்படுத்த முடியாதா? மேலும், ஒரு நீதிபதி மிகவும் சர்ச்சைக்குரிய வழக்குகளை அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, பின்னர் ஓய்வுக்குப் பிந்தைய வேலையை ஏற்றுக்கொண்டால், உண்மையான பிரதிபலன் இல்லாவிட்டாலும், நீதித்துறையின் சுதந்திரம் சமரசம் செய்யப்படுகிறது என்ற பொது கருத்துக்கு இது வழிவகுக்கும் அல்லவா?  என்று குறிப்பிடுகிறது.




Original article:

Share:

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? - குஷ்பு குமாரி

 1. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்காக குவைத் தனது உயரிய கௌரவமான ‘ஆர்டர் ஆப் முபாரக் அல்-கபீர்’ (The Order of Mubarak Al-Kabeer) விருதை வழங்கியது.


2. இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை குவைத் சென்றார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக குவைத்துக்கு சென்ற இந்திய பிரதமர் 1981-ம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட இந்திரா காந்தி  ஆவார்.


3. மோடி அமீரையும், பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவையும் சந்தித்தார். மேலும், அவர்கள் மரியாதைக்குரிய விருந்து அளித்தனர். குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


4. இரு தரப்பும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தின் மூலம் முறையான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தியது. இதில் பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நிபுணர்களை பரிமாறிக்கொள்வது, கூட்டுப் பயிற்சிகள், பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைத்தல் ஆகியவை அடங்கும்.


5. பாதுகாப்புடன் கூடுதலாக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


6. இந்தியாவும் குவைத்தும் "இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மை" (strategic partnership) மூலம் தங்கள் உறவை வலுப்படுத்தியுள்ளன. 2023-24ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 10.47 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள குவைத் இந்தியாவின் சிறந்த வர்த்தக நட்பு நாடுகளில் ஒன்றாகும். இந்திய சமூகம் குவைத்தில் உள்ள மிகப்பெரிய வெளிநாட்டவர் குழுவாக உள்ளது.


7. இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மை மருந்துகள், தகவல் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், இரு நாடுகளும் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராயும். இதை ஆதரிக்க, வழக்கமான ஆலோசனைகள், பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர பிரச்சினைகள் பற்றிய வருகைகள் நடைபெறும்.


8. எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளைக் காண இந்தியாவுக்கு வருமாறு குவைத் முதலீட்டு ஆணையம் (Kuwaiti Investment Authority) மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவுக்கு மோடி அழைப்பு விடுத்தார் என்று வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) தெரிவித்துள்ளது. 


9. இந்தக் கூட்டங்களில், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் ஆகியவற்றை உள்ளடக்கிய செல்வாக்கு மிக்க குழுவின் குவைத் தலைமையின் மூலம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (Gulf Cooperation Council (GCC)) தனது ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்திய தரப்பு மிகுந்த ஆர்வம் காட்டியது. 


10. 2022-23 நிதியாண்டில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் மொத்தம் 184.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது, இந்தியா-ஜிசிசி தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.


உங்களுக்கு தெரியுமா?


1. அரபு வளைகுடா நாடுகளுக்கான ஒத்துழைப்பு கவுன்சில், பெரும்பாலும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council (GCC)) என்று அழைக்கப்படுகிறது. இது வளைகுடா மற்றும் பரந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிக முக்கியமான பிராந்திய அமைப்புகளில் ஒன்றாகும். 


2. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (Gulf Cooperation Council (GCC)) ஆறு உறுப்பு நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், 1981-ம் ஆண்டில் ஒன்றிணைந்து பிராந்திய குழுவை உருவாக்கி, அந்த நேரத்தில் கடுமையான அரசியலின் வெளிச்சத்தில் உறுப்பு நாடுகள் எதிர்கொள்ளும் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களைச் சமாளிக்க கூட்டுணைவு வழிமுறைகளை உருவாக்கின. 


3. பல ஆண்டுகளாக, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) முக்கியமாக கவனம் செலுத்தும் பகுதி உருவாகியுள்ளது. சில நேரங்களில், அவர்கள் தங்களுக்குள் கடுமையான முரண்பாடுகளை உருவாக்கியுள்ளனர். இது 2017-21 ஆம் ஆண்டில் கத்தார் நெருக்கடியின் போது தெளிவாகத் தெரிந்தது. 


4. முதல் இந்தியா-ஜிசிசி கூட்டு முக்கிய அமைச்சர்களின் சபையின் இராஜதந்திர உரையாடலின் கூட்டம் செப்டம்பர் 9 அன்று ரியாத்தில் நடந்தது. இதில், வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.


5. முதல் இந்தியா-ஜிசிசி சந்திப்பு முக்கியமானது. இந்தியாவும் ஜிசிசியும் தங்களது பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, இணைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை விரிவுபடுத்துவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.





Original article:

Share:

அமலாக்க இயக்குனரகத்தின் (ED) பணிநோக்கம் மற்றும் செயல்பாடுகள் யாவை? - குஷ்பு குமாரி

 தற்போதைய நிகழ்வுகள்அமலாக்க இயக்குனரகம் (Enforcement Directorate (ED)) நீதிமன்றத்தில் சில உயர்மட்ட அளவில் பணமோசடி வழக்குகளால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கு தீர்வு காண, இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்யும் போது மிக முக்கிய குற்றமாக "குற்ற சதி"யை (criminal conspiracy) மட்டும் நம்ப வேண்டாம் என ED முடிவு செய்துள்ளது. இதற்கு மாறாக, சதித் திட்டம் தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) குற்றங்களும் இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. 


முக்கிய அம்சங்கள்


1. ஆதாரங்களின்படி, இதற்கான முடிவு தொடர்பான அறிவுறுத்தல்களை அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் முகமை அதிகாரிகளுக்கு "அனுப்பியுள்ளார்".  பணமோசடி தடுப்புச் சட்டம்  (PMLA) அட்டவணை ஊழல் முதல் வரி ஏய்ப்பு மற்றும் வனவிலங்கு சட்டத்தின் மீறல்கள் வரை 150 முதன்மை குற்றங்களை உள்ளடக்கியது. 


2. ஒரு "முன்கணிப்பு குற்றம்" (predicate offence) என்பது அமலாக்கத்துறை வழக்கை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு முகமை நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட முதன்மை முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கையைக் குறிக்கிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், சிபிஐ, மாநில காவல்துறை அல்லது சில சந்தர்ப்பங்களில், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற விசாரணை நிறுவனம் தாக்கல் செய்த தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில் மட்டுமே அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்ய முடியும். 


3. ஆனால், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் பின்னர் அரசியலமைப்புப் பிரிவு 120B-ஐ ஒரே "முன்கணிப்பு குற்றமாக" (predicate offence) பட்டியலிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளன. இது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்  (PMLA) வரம்பிற்குள் வரும் "குற்றவியல் சதி" (criminal conspiracy) தொடர்பான குற்றத்தையும் கொண்டிருக்க வேண்டும். 


4. நவம்பர் 2023-ல், பிரிவு 120B-ன் அடிப்படையில் மட்டுமே PMLA-ஐ செயல்படுத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2020 முதல் நில ஒப்பந்தம் தொடர்பாக கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் செயல் தலைவராக இருந்த பாவனா திப்பருக்கு எதிரான அமலாக்க இயக்குநரக வழக்கில் இந்த தீர்ப்பு வந்தது. 


உங்களுக்கு தெரியுமா : 


1. இந்தியாவின் அமலாக்க இயக்குனரகம் (ED) சில உயர்மட்ட அளவில் பணமோசடி வழக்குகளில் தொடர்ச்சியான பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம்? இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவியல் சதியை மட்டுமே நம்பி வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த குற்றம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) அட்டவணையின் வரம்பிற்குள் வர வேண்டும். 


2. ஒரு "முன்கணிப்பு குற்றம்" (predicate offence) என்பது மற்றொரு முகமை நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட முதன்மை முதல் தகவல் அறிக்கையில் (First Information Report (FIR)) குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தின் தன்மையைக் குறிக்கிறது. இதன் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் தனது வழக்கை உருவாக்குகிறது. 


3. 1990-ம் ஆண்டுகளில் உலகளாவிய பயங்கரவாதம் ஒரு முக்கிய கவலையாக மாறியது. இது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதையும், எல்லைகளைத் தாண்டி சட்டவிரோத பணப் புழக்கத்தையும் தடுப்பதில் சர்வதேச கவனம் செலுத்த வழிவகுத்தது. பணமோசடிக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை வழிநடத்த நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force (FATF)) 1989-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) உறுப்பினராக, இந்த முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருந்தது.


4. ஜூன் 8 மற்றும் 10, 1998-ம் ஆண்டு போன்ற தேதிகளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (United Nations General Assembly) சிறப்புக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரகடனத்திற்கு பதிலளிக்கும் விதமாக பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) இயற்றப்பட்டது. தேசிய பணமோசடி தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துமாறு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. 


5. பணமோசடி தடுப்பு மசோதா, 1998 ஆனது, ஆகஸ்ட் 4, 1998 அன்று அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்மொழியப்பட்ட சட்டம் பணமோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளைத் தடுப்பது, குற்றத்தின் வருமானத்தை பறிமுதல் செய்தல், பணமோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான முகவர் மற்றும் வழிமுறைகளை அமைத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தியது. 




Original article:

Share:

இந்தியாவின் “கடினமான சட்டகத்திற்கு” ஒரு சீராய்வு தேவை -வினோத் பானு

 இந்திய ஆட்சிப் பணி மற்றும் பரந்த அதிகாரத்துவத்திற்குள் தொடர்ச்சியான சவால்கள் உள்ளன. இந்த சவால்கள் நிர்வாக சீர்திருத்தங்களின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன. 


இந்தியா தனது அதிகாரத்துவத்தை நவீனமயமாக்குவதற்கு அவசர சீர்திருத்தங்கள் தேவைப்படும் நிர்வாக சவால்களை எதிர்கொள்கிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், வருமான சமத்துவமின்மை, முக்கிய துறைகளில் குறைவான முதலீடு மற்றும் திறமையற்ற அதிகாரத்துவம் போன்ற பிரச்சனைகளை இன்னும் கையாள்கிறது. இந்திய ஆட்சிப் பணி நீண்டகாலமாக நாட்டை ஆட்சி செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது. எவ்வாறாயினும், இந்திய ஆட்சிப் பணி  மற்றும் பரந்த அதிகாரத்துவத்திற்குள் நிலவும் சிக்கல்கள் இந்தியாவின் பொருளாதார திறனை முழுமையாக உணர நிர்வாக சீர்திருத்தங்கள் அவசரமாக தேவை என்பதைக் காட்டுகின்றன. 


இந்திய ஆட்சிப் பணியின் (Indian Administrative Service (IAS)) பாரம்பரியம் மற்றும் சவால்கள் 


இந்தியாவின் "கடினமான சட்டகம்" என்று அழைக்கப்படும் இந்திய ஆட்சிப் பணி, காலனித்துவ இந்திய குடிமைப் பணியிலிருந்து (Indian Civil Service (ICS)) உருவானது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் நிர்வாகத்தின் முக்கிய பகுதியாக இந்திய ஆட்சிப் பணி மாறியது. நிர்வாகத்தில் அதிகாரிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இருப்பினும், இந்த அமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டது. அரசியல் தலையீடு, நிபுணத்துவமின்மை மற்றும் காலாவதியான நடைமுறைகள் அதன் செயல்திறனை மெதுவாகக் குறைத்துள்ளன. 


இந்திய ஆட்சிப் பணி அரசியல்மயமாக்கப்படுவது முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். அடிக்கடி இடமாற்றங்கள், இடைநீக்கங்கள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவை தகுதியை விட அரசியல் விசுவாசத்தால் பாதிக்கப்படுவது மன உறுதியையும் தொழில்முறையையும் பலவீனப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் அடிக்கடி சுழற்றப்படுவதால், அதிகாரிகள் பெரும்பாலும் கள நிபுணத்துவத்தைப் (domain expertise) பெற போராடுகிறார்கள். சிக்கலான ஆளுகை நிலப்பரப்பில் பயனுள்ள கொள்கை நிபுணர்களாக மாறுவதை இது தடுக்கிறது.

 

ஊழல் மற்றும் திறமையின்மை இந்தியாவின் அதிகாரத்துவத்தின் முக்கிய பிரச்சினைகளாகும். உலக வங்கியின் அரசாங்க செயல்திறன் அளவீட்டின்படி, இந்தியா மிதமான இடத்தில் மட்டுமே உள்ளது. இது கொள்கை அமலாக்கத்தின் மோசமான தரம் மற்றும் வரையறுக்கப்பட்ட நிர்வாக சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது. சீர்திருத்தம் இல்லாமல், இந்த திறமையின்மைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிர்வாக இலக்குகளைத் தடுக்கலாம். 


இந்தியாவில் நிர்வாகத் தலைமையிலான ஆட்சி (Executive-led governance) கலவையான முடிவுகளைக் கொண்டுள்ளது. இது விரைவான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அனுமதித்துள்ளது. ஆனால், கொள்கை அமலாக்கத்தில் இடையூறுகள் மற்றும் பொறுப்பான நிர்வாகம் இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசாங்கம் அதிகார அமைப்பு பெரும்பாலும் அதிகாரத்துவத்தின் நுண்ணறிவு மற்றும் நிபுணத்துவத்தை புறக்கணிக்கிறது. கொள்கைகளை திறம்பட செயல்படுத்தும் திறனைக் குறைக்கிறது.


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அரசாங்கம் இந்த பிரச்சினைகளில் சிலவற்றை தீர்க்க முயற்சிக்கிறது. அவர்கள் அரசியல்மயமாக்கப்பட்ட இடமாற்றங்களை குறைத்துள்ளனர் மற்றும் அதிகாரத்துவ பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இருப்பினும், பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தை மையப்படுத்துவது மூத்த அதிகாரிகளின் சுயாட்சியை பலவீனப்படுத்தலாம். மேலும், இது இந்திய ஆட்சிப் பணியை வலுவிழக்கச் செய்யலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவில் நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை என்பது புதிதல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு, 50க்கும் மேற்பட்ட ஆணையங்கள் மற்றும் குழுக்கள் நாட்டின் நிர்வாக அமைப்பை மறுவடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)) 1966-ல் அமைக்கப்பட்டது. அதுவும் அதன் பின்னர் வந்த ஆணையங்களும் அதிகாரத்துவத்தில் சிறப்பு, பொறுப்பான நிர்வாகம்  மற்றும் தகுதி அடிப்படையிலான பதவி உயர்வுகளின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.


2005-ல் நிறுவப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம், நிர்வாக சீர்திருத்தங்களுக்கான திட்டத்தை வகுத்தது. குடிமை பணிகளில் நுழைவதற்கான வயதைக் குறைக்கவும், செயல்திறன் அடிப்படையிலான பதவி உயர்வுகளை அறிமுகப்படுத்தவும், பக்கவாட்டு நுழைவை (lateral entry) அனுமதிக்கவும் மற்றும் தன்னிச்சையான இடமாற்றங்களுக்கு (arbitrary transfers) எதிராக பாதுகாப்புகளை ஏற்படுத்தவும் அது பரிந்துரைத்தது. ஆனால், இதில் பல பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அதிகாரத்துவ மந்தநிலை மற்றும் அரசியல் எதிர்ப்பு காரணமாக அவை முடங்கியுள்ளன.


சீர்திருத்தம் செய்ய அரசு முனைப்பு 


இந்திய ஆட்சிப் பணியை நிர்வாக மாதிரியின் வரம்புகளை மோடி அரசு அங்கீகரித்துள்ளது. இதை நிவர்த்தி செய்ய, மூத்த அதிகாரத்துவ பதவிகளில் பக்கவாட்டு நுழைவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது தனியார் துறை மற்றும் பிற அரசாங்க சேவைகளில் இருந்து கள வல்லுநர்களை முக்கிய கொள்கை உருவாக்கும் பாத்திரங்களுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய கண்ணோட்டங்களையும் சிறப்பு அறிவையும் அமைப்பில் புகுத்துவதே குறிக்கோள்.

 

2018 முதல், குறிப்பிட்ட பணிகளுக்கு சிறப்பு அறிவு மற்றும் கள நிபுணத்துவம் கொண்ட நபர்களைக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு பக்கவாட்டு ஆட்சேர்ப்பைப் பின்பற்றி வருகிறது. 2023ஆம் ஆண்டளவில், இந்த முயற்சியின் மூலம் 57 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகளில் பலர் தனியார் துறையிலிருந்து வந்தவர்கள், புதிய திறமைகள் மற்றும் முன்னோக்குகளை நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கான தெளிவான முயற்சியைக் காட்டினர். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) சமீபத்தில் பக்கவாட்டு நுழைவுக்கான 45 பதவிகளுக்கு விளம்பரம் செய்தது. இந்தப் பதவிகளில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கான பணிகளும் அடங்கும். இந்த நடவடிக்கை இந்திய ஆட்சிப் பணியின் பாரம்பரியத்தை சீர்குலைத்துள்ளது. இப்போது, ​​ஒன்றிய அரசில் உள்ள இணைச் செயலாளர்களில் 33% மட்டுமே இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்தவர்கள்.

 

இருப்பினும், பக்கவாட்டு நுழைவு முயற்சி எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உட்பட விமர்சகர்கள், மன உறுதிக்கு இது தீங்கு விளைவிக்கும் மற்றும் பதவி உயர்வு ஊக்குவிப்புகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர். இந்த நியமனங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளின் அரசியல் அழுத்தம் காரணமாக பக்கவாட்டு நுழைவு குறித்த பிரதமர் மோடி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை சிலநாட்களுக்கு முன் மாற்றியது. இந்த சீர்திருத்தத்தின் சர்ச்சையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 


அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்க முன்மொழியப்பட்ட அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) இந்தியாவின் நிர்வாக அமைப்பை சீர்திருத்த ஒரு மாதிரியை வழங்குகிறது. DOGE அரசாங்க செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், திறமையின்மையை குறைக்கவும் மற்றும் தேவையற்ற முகமைகளை அகற்றவும் நோக்கமாக உள்ளது. இது எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி போன்ற தலைவர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.


 முன்மொழியப்பட்ட அரசாங்க செயல்திறன் துறையானது (DOGE) வீணான செலவினங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது இந்த அணுகுமுறை இந்திய அதிகாரத்துவம் எதிர்கொள்ளும் சவால்களுடன் தொடர்புடையது. இந்தியாவில்   இது போன்ற ஆலோசனைக் குழு குடிமை சேவையில் திறமையின்மையைக் கண்டறிய உதவும். இது தரவு சார்ந்த முடிவுகளை ஊக்குவிக்கலாம் மற்றும் அதிகாரத்துவ செயல்திறனை மதிப்பிடுவதற்கான அளவீடுகளை உருவாக்கலாம். அமெரிக்காவின்  150வது ஆண்டு நிறைவு விழாவை சார்ந்து இணைக்கப்பட்ட DOGEஇன் காலவரையறை போன்ற காலக்கெடுவுக்கான ஆணையம், சீர்திருத்த முயற்சிகள் கவனம் செலுத்தி செயல்படுவதை உறுதிசெய்யும்.

சீர்திருத்தத்திற்கான சவால்கள் 


இந்தியாவின் அதிகாரத்துவத்தை சீர்திருத்துவது கடினமான பணி. குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்திய ஆட்சிப்பணி நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பக்கவாட்டு நுழைவு, செயல்திறன் அடிப்படையிலான பதவி உயர்வுகள் மற்றும் சிறப்பு பயிற்சி ஆகியவற்றிற்கான முன்மொழிவுகள் பெரும்பாலும் பணிக்குள்ளயே எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. அங்கு  பணிமூப்பு அடிப்படையிலான முன்னேற்றம் (seniority-based progression) மற்றும் பொதுவான அணுகுமுறைகள் ஆழமாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன. அரசியல் தலையீடு சீர்திருத்த முயற்சிகளை மேலும் சிக்கலாக்குகிறது. தன்னிச்சையான இடமாற்றங்களிலிருந்து அதிகாரத்துவத்தைப் பாதுகாக்க முயன்ற ஆட்சிப்பணி தரநிலைகள், செயல்திறன் மற்றும் பொறுப்புடைமை மசோதா (2010) (Accountability Bill) அதிகாரத்துவத்தை தன்னிச்சையான இடமாற்றங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அது சட்டக் குழப்பத்தில் சிக்கியுள்ளது. உதாரணமாக, உச்ச நீதிமன்றம் 2013இல் ஆட்சிப்பணி குழுக்களை நிறுவ உத்தரவிட்டது. இருப்பினும், அமலாக்கம் இல்லாததால் இந்த தலையீடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


இந்திய அதிகாரத்துவத்தின் சவால்களை எதிர்கொள்ள நிர்வாக சீர்திருத்தத்திற்கான பன்முக அணுகுமுறை (multifaceted approach) முக்கியமானது. ஆட்சேர்ப்பு தகுதி மற்றும் கள நிபுணத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பதவி உயர்வுகள் பணிமூப்பு அடிப்படையில் இல்லாமல், செயல்திறன் அடிப்படையில் இருக்க வேண்டும். அரசியல் இடமாற்றங்களிலிருந்து அதிகாரவர்க்கத்தைப் பாதுகாப்பது மற்றும் கொள்கை வகுப்பதில் நிபுணத்துவத்தை ஊக்குவிப்பது பொறுப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்தும். செயல்திறனைக் கண்காணிக்கவும், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் கொள்கைகளில் சிறந்த முடிவுகளை எடுக்கவும் வலுவான தரவு அமைப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார இலக்குகள் மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்கு சீர்திருத்தம் முக்கியமானது.


வினோத் பானு, புது டெல்லியில் உள்ள சட்டமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநராக உள்ளார். 




Original article:

Share:

உள்துறை அமைச்சகம் ஏன் மூன்று வடகிழக்கு மாநிலங்களில் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது? -விஜேதா சிங்

 பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சி நெறிமுறை (protected area regime) என்றால் என்ன? வெளிநாட்டினர் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) ஆணை, 1958 என்ன கூறுகிறது? மணிப்பூர் இனக்கலவரம் இயக்கம் மற்றும் நடமாட்டம் மீதான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்ததா?

 

டிசம்பர் 17 அன்று, ஒன்றிய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சி முறையை மீண்டும் அமல்படுத்தியது. வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் இப்போது அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதிகளை (Protected Area Permits (PAP)) பெற வேண்டும். வெளிநாட்டினர் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) ஆணை (Foreigners (Protected Areas) Order), 1958ன் கீழான தளர்வு உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





1958 ஆணை எதைக் குறிக்கிறது?


1958ஆம் ஆண்டு உத்தரவுப்படி, எந்த ஒரு வெளிநாட்டவரும் எந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியிலும் அனுமதி இல்லாமல் நுழையவோ அல்லது தங்கவோ முடியாது என்று கூறப்பட்டது. இந்த அனுமதி ஒன்றிய அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசு அலுவலகத்தால் வழங்கப்படுகிறது. அனுமதிச்சீட்டில் நுழையும் இடம், வசிக்கும் இடம் மற்றும் தங்கியிருக்கும் காலம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள் எல்லைக்கும் சர்வதேச எல்லைக்கும் இடைப்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றின் முழுப் பகுதிகளும் இதில் அடங்கும். 1963ஆம் ஆண்டில், மற்றொரு ஆணை, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் சிக்கிமின் சில பகுதிகளை "தடைசெய்யப்பட்ட பகுதிகளாக" (‘restricted areas’) அறிவித்தது. 


உத்தரவு முதலில் எப்போது தளர்த்தப்பட்டது? 


டிசம்பர் 30, 2010 அன்று மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய முழு மாநிலங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சிமுறை தளர்த்தப்பட்டது. மேம்பட்ட பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலில் ஒரு வருடத்திற்கு தளர்வு அளிக்கப்பட்டது. பின்னர், அது 2022 வரை 1-2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2022ல், தளர்வு மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது டிசம்பர் 31, 2027 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், டிசம்பர் 17 அன்று, இந்த மாநிலங்களுக்கு தளர்வு திரும்பப் பெறப்பட்டது.

 

அது ஏன் திரும்பப் பெறப்பட்டது? 


தி இந்து நாளிதழுக்கு கிடைத்த சுற்றறிக்கையின் நகலில், “இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகள் காரணமாக அமைச்சகம் இந்த விசயத்தை ஆய்வு செய்ததாகக் கூறியது. பழங்குடியினரான குகி-சோ (Kuki-Zo) மற்றும் மெய்டேய் (Meitei) மக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக மியான்மரின் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர், மே 3, 2023 முதல் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைக்கு "வெளியாட்கள் மற்றும் வெளிநாட்டு கைகள்" காரணம் என்று முதல்வர் என். பிரேன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 


பிப்ரவரி 2021இல் மியான்மரில் நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு, பல ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் (influx) இந்தியாவுக்குள் நுழைந்தனர். 40,000க்கும் மேற்பட்ட அகதிகள் மிசோரமில் தஞ்சம் புகுந்தனர். சுமார், 4,000 அகதிகள் மணிப்பூருக்குள் நுழைந்தனர். குடியேறியவர்கள் குகி-சின்-சோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மிசோரம் மற்றும் மணிப்பூரில் உள்ள சமூகங்களுடன் இன உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தியா மியான்மருடன் 1,643 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லை அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்கள் வழியாக செல்கிறது. சுதந்திர இயக்க ஆட்சிமுறை (Free Movement Regime (FMR)) எல்லையில் இருந்து 16 கி.மீ.க்குள் வாழும் மக்கள் இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திரமாக நடமாட அனுமதித்தது. இருப்பினும், உள்துறை அமைச்சகம் (MHA) ஜனவரி மாதம் சுதந்திர இயக்க ஆட்சி முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

 

பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சி முறையை (protected area regime (PAP)) எவ்வாறு பெறுவது? 


இந்திய தூதரகங்கள், உள்துறை அமைச்சகம், மாவட்ட நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் குடியுரிமை ஆணையர்கள், உள்துறை ஆணையர்கள் அல்லது வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (Foreigners Regional Registration Office (FRRO)) ஆகியவற்றிலிருந்து அனுமதி பெறலாம். 


முன்பு போலவே, ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் மற்றும் மூன்று நாடுகளில் வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவைப்படும். மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து வெளிநாட்டவர்களும் அவர்கள் வருகை தந்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் வருகை தரும் மாநிலம் அல்லது மாவட்டத்தின் வெளிநாட்டினர் பதிவு அதிகாரியிடம் (Foreigners Registration Officer (FRO)) பதிவு செய்ய வேண்டும். இந்த மாநிலங்களுக்குச் செல்லும் மியான்மர் நாட்டவர்கள், மின்-சுற்றுலா நுழைவுச் சீட்டு  அல்லது வேறு ஏதேனும் விசாவை வைத்திருந்தால், பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி (Protected Area Permit) தேவைப்படுவதிலிருந்து முன்பு விலக்கு அளிக்கப்பட்டது. இப்போது, ​​அவர்கள் வந்த 24 மணி நேரத்திற்குள் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (Foreigners Regional Registration Office (FRRO)) பதிவு செய்ய வேண்டும்.




Original article:

Share: